Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Tuesday, January 05, 2016

விஜயகாந்த் ஏன் கருணாநிதி, வைகோ, பி.ஜே.பிக்கு தேவைப்படுகிறார்? - தி.மு.க. சர்வே சொல்லும் உண்மை!

2005-ல் விஜயகாந்த் 'அரசியல் என்ட்ரி’ கொடுத்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என புதிய கட்சியை ஆரம்பித்தபோது, உலகத் தமிழர்கள் அனைவரிடமும் ஒரு பிரமாண்ட எதிர்பார்ப்பு இருந்தது. 'நீண்ட காத்திருப்புக்கு பிறகு தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றம் வந்துவிட்டது' என்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்தின் ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தார்கள்.
திரையில் பார்த்த அதே சிவந்த கண்களோடும் கோபத்தோடும் விஜயகாந்த் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் வறுத்தெடுத்தார். அவரது தீவிரப் பிரசாரமும் கணிசமான மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையும் சாதகமாக இருக்க... அப்போது நடைபெற்ற தேர்தலில் 8.38% வோட்டுக்களை அவர் குவித்ததோடு தன் கட்சி சார்பாக தனி ஒருவனாக சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெயித்தார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சியினரால் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், தே.மு.தி.க. ஒரு கட்சியாக சுமார் 10% வோட்டுகளைப் பெற்றது. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விஜயகாந்த் உருவெடுத்தார். தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு மாஸ் காட்டி வந்த விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் தனது முழு எதிர்ப்பையும் அப்போது ஆளும்கட்சியாக இருந்த தி.மு.கவின் மீது திருப்பினார். அவரோடு கூட்டணி வைத்துக் கொள்ள பலரும் அப்போது ஆவலாக இருந்தாலும்,  விஜயகாந்த் அ.தி.மு.கவோடு கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலைச் சந்தித்தார். அந்தத் தேர்தலில்  தி.மு.கவை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய விஜயகாந்தின் தே.மு.தி.க., 29 சீட்டுக்களை வென்று பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்தைப் பிடித்தது. ஆனால், ஜெயலலிதாவுடனான விஜயகாந்தின் கூட்டணி நீண்டநாள் நீடிக்கவில்லை. அதனால் தனக்கு கைவந்த கலையான, தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் அவர் பழையபடியே தாக்கி,  அரசியல் அரங்கில் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருந்தார். 
ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தல் விஜயகாந்தின் செல்வாக்குக்கு ஒரு செக் வைத்தது. பி.ஜே.பி., பா.ம.க., போன்ற கட்சிகளோடு கூட்டணி வைத்து விஜயகாந்த் மூன்றாவது அணியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது, எதிர்பார்ப்புகள் எகிறியது. ஆனால், முடிவுகள் விஜயகாந்துக்கு சாதகமாக இல்லை. வெறும் 5% வோட்டுக்களையே அவரது கட்சியால் பெற முடிந்தது. அந்தத் தேர்தலில் தே.மு.தி.க.,  நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, அவரது கட்சியால் ஒரே ஒரு இடத்தைக்கூட ஜெயிக்க முடியவில்லை. அத்தேர்தலில் பி.ஜே.பி.,  விஜயகாந்தின் தே.மு.தி.கவை-விட அதிக வோட்டுக்களை வாங்கி மூன்றாவது இடத்தை பிடித்தது.
  (குறிப்பிட்ட வருடத்தை க்ளிக்கினால், அப்போதைய தேர்தலின் புள்ளிவிவரமும், கட்சிகளின் ஏற்ற இறக்கமும் தெரியவரும்!)


.

வைகோவின் ம.தி.மு.க., திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என நான்கு கட்சிகள் சேர்ந்து அமைத்திருக்கும் மக்கள் நலக் கூட்டியக்கம்,  விஜயகாந்தை சந்தித்து தங்கள் கூட்டணியில் இணையுமாறு அழைத்த வண்ணமிருக்கின்றன.
’விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியே’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த முஸ்தீபுகளைக் கண்டு அரண்டு மிரண்டு, 'விஜயகாந்த் இன்னும் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்' என்று பி.ஜே.பி. தொடந்து சொல்லிவருகிறது. இப்படி இவர்கள் எல்லாரும் சேர்ந்து விஜயகாந்தை, 'சி.எம்.  மேக்கர்’ அளவுக்கு நடத்துகிறார்கள். ஆனால், விஜயகாந்த் கட்சியின் வீரியம் அந்தளவுக்கு இல்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
'ம.தி.மு.க. மிக ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு தேர்தலிலும் அது சரிவையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. வைகோவைப் போலவே விஜயகாந்தும் சரிவைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார். கூட்டணி வைக்கும் கட்சிகளை ஜெயிக்க வைக்கக்கூடிய சக்தியோ... அல்லது கூட்டணி வைக்காத கட்சிகளை தோற்கடிக்கக்கூடிய சக்தியோ விஜயகாந்துக்கு இல்லை. கூட்டணி பேரம் பேசும் வலிமையும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது' என்கிறார் அப்சர்வர் ஆராய்ச்சி மைய இயக்குநர் என்.சத்தியமூர்த்தி.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி,  கூட்டணிக்காக விடுத்திருக்கும் அழைப்பில், விஜயகாந்துக்கான எச்சரிக்கையும் அடங்கியிருக்கிறது எனக் கருதுகிறார்  சத்தியமூர்த்தி. ’நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு,  நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளோடு எங்களோடு கூட்டணி அமைக்க வந்தால் சீக்கிரமாக வாருங்கள். இல்லையென்றால் உங்களுக்காக காத்திருக்க முடியாது' என காங்கிரஸுக்கான செய்தி விஜயகாந்துக்குமான சமிக்ஞையும் மறைந்திருக்கிறது என்கிறார் அவர்.
'2011-ல் விஜயகாந்துக்கு கூட்டணி பேரம் பேசக்கூடிய அளவுக்கு வலிமை இருந்தது. இப்போதோ, அவரது வாக்கு வங்கி கணிசமாக குறைந்துவிட்டது. ஆனால், அவரது பலத்தை எல்லாக் கட்சிகளுமே அதிகமாக மதிப்பிடுகிறார்கள். ஆனால், முந்தைய தேர்தலைவிட இந்த தேர்தலில் விஜயகாந்தின் செல்வாக்கு நிச்சயம் உயர வாய்ப்பில்லை. காரணம், சொந்த கட்சிக்காரர்களை பொது இடத்தில் அடிப்பது, கோபத்தில் கொந்தளிப்பது, உணர்ச்சிவசப்பட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது என விஜயகாந்தின் பொதுவெளி செயல்பாடுகளும் பொதுவான வாக்காளர்கள் மத்தியில் அவர்மீது நம்பகத்தன்மையைக் குறைக்கலாம். ஒருவேளை தனது மனைவி பிரேமலதாவை முன்நிறுத்தி தேர்தலைச் சந்தித்தால், அந்த வியூகம் நல்ல பலன் கொடுக்கலாம்!’’ என்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான ஜி.சி.சேகர்.


இந்நிலையில் தி.மு.க. தேர்தல் பல்ஸ் அறிந்து கொள்ள தமிழகம் முழுக்க ஒரு சர்வே நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதன்படி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் அதற்கு 30-35 சதவிகித வாக்குகள் கிடைக்கலாம் என்று கணித்திருக்கிறார்களாம். இது தி.மு.க. தரப்புக்கு அதீத உற்சாகமளித்திருக்கிறது. 'இந்த சர்வே முடிவுகள் எங்களுக்கு தெம்பளித்திருக்கிறது. விஜயகாந்தோடு கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் நாங்கள் இல்லை. காரணம் இந்த சர்வேயின்படி விஜயகாந்துக்கு 6% வோட்டுக்கள் இருப்பதால்,  அவர் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவருக்குத்தான் நல்லது. அவரும் சேர்ந்துவிட்டால், சந்தேகமே இல்லாமல் அது வெற்றிக் கூட்டணி. ஆனால், அவர் சேராவிட்டாலும் அதை வெற்றிக்கூட்டணியாக மாற்ற நாங்கள் வியூகம் வகுத்துக் கொள்வோம்!’ என்று விறுவிறுக்கிறார்கள் தி.மு.க. தரப்பில்!    



இது தி.மு.கவின் நிலைப்பாடு. மக்கள் நலக் கூட்டணி ஏன் விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க முட்டி மோத வேண்டும்? ’’காரணம் பிஜேபிக்கு முதலமைச்சராக முன்னிறுத்த ஒரு வேட்பாளர் வேண்டும்’’ என்று சொல்லும் அரசியல் பார்வையாளர் என்.சத்தியமூர்த்தி,  ’’அதனால்தான் முதல்வர் வேட்பாளர் குறித்த தன் நிலைப்பாட்டில் இருந்து பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் இப்போது இறங்கி வந்து கருத்து தெரிவித்திருக்கிறார். இன்னொருபுறம் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வைகோவுக்கு விஜயகாந்த் தேவைப்படுகிறார். காரணம் அவருக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே கதவுகளை அடைத்துவிட்டன. எப்படியும்  ஆட்சி அமைக்கும் அளவுக்கு வோட்டுக்கள் வாங்கப் போவதில்லை என்பதால், மக்கள் நல இயக்கம் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதில் அவர்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை!’’ என்று முடிக்கிறார் சத்தியமூர்த்தி.


கட்சி துவங்கிய பின் சந்தித்த முதல் சில தேர்தல்களில்,  வாக்குகளைக் குவித்ததைத் தவிர சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஆக்கப்பூர்வமாக விஜயகாந்த் எந்த சாதனையும் செய்யவில்லை. ஆனாலும் அவருக்குச் சாதகமாக அரசியல் காற்று  இப்போது வீசுகிறது. இந்த சூழ்நிலையில்... கேப்டன் விஜயகாந்த் பிரமாண்ட பனிப் பாறையை நோக்கிச் செல்லும் தன் கப்பலை திசை திருப்பி கரை சேர்ப்பாரா... அல்லது பாறையில் மோதி கவிழவைப்பாரா என்பதை விஜயகாந்தின் வியூகமே தீர்மானிக்கும்! 

- Sandhya Ravishankar (@sandhyaravishan) 

தமிழில் : பி.ஆரோக்கியவேல்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி 

நன்றி - விகடன்

Wednesday, August 05, 2015

1971- எ சமாளிஃபிகேஷன் ஸ்டோரி -மதுவிலக்கு பிரச்சினையில் ராஜாஜியிடம் பேசியது என்ன?- தானைத்தலைவர் விளக்கம்

திமுக தலைவர் கருணாநிதி| கோப்புப் படம்.
திமுக தலைவர் கருணாநிதி| கோப்புப் படம்.
தமிழகத்திலே திமுக ஆட்சியில்தான் முதன்முதலாக மதுவைப் புகுத்தி விட்டார்கள் என்ற வாதம், உண்மைக்குப் புறம்பானது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஏற்கெனவே நான் அறிவித்துள்ளேன்.
இருப்பினும், தமிழகமெங்கும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களின் தொடர்ச்சியாக, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை எதிரொலித்திடும் வகையில், திமுக சார்பில் 10-8-2015 திங்கள்கிழமையன்று மாவட்டத் தலைநகரங்களில்,அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடை முறைப்படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தேன்.
திமுகவைப் பிடிக்காத ஒரு சில குறிப்பிட்ட கட்சியினரும், ஏன் திமுகவை எதிர்க்காத ஒரு சில கட்சியினரும்கூட, இந்த மதுவிலக்குப் பிரச்சினை பற்றி திமுக ஆட்சியிலே இருந்தபோது தானே, மதுவிலக்கை ரத்து செய்தது, எனவே திமுகவால் தான் எல்லாம் கெட்டுவிட்டது என்ற ரீதியில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கான விளக்கத்தை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
திமுகவுக்கு 1971ஆம் ஆண்டு மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது; அதற்கு முன்பும் பின்பும் என்ன நிலைமை என்பதையும் சற்று விரிவாக எடுத் துக் கூற வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.
திமுக ஆட்சியில் மது விலக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்றாலும், இதனை திமுக முழு மனதோடு கொண்டு வரவில்லை என்றும், அப்போதுள்ள தமிழகத்தின் நிதி நிலைமைதான் அதற்குக் காரணம் என்றும் விளக்கியிருக்கிறேன்.
மதுவிலக்கை திமுக ஒத்தி வைக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு அப்போதைய நிதி நிலைமை தமிழக அரசிலே இருந்தது. அந்த முடிவை நாங்கள் எடுக்க முன்வந்த போது ராஜாஜியே, என் இல்லத்திற்கு வருகை தந்து, அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அவரிடம் நான் தமிழக அரசின் நிதி நிலைமைகளை எல்லாம் விளக்கிய பிறகு, அவர் உண்மையைப் புரிந்து கொண்டார். ஆனால் ராஜாஜி, ஏதோ கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவரது வீட்டிலிருந்து கோபாலபுரத்திற்கு நடந்தே வந்ததைப் போலவும், என்னிடம் ஏதோ மன்றாடிக்கேட்டுக் கொண்டதைப் போலவும், அதை நான் கேட்கவில்லை என்பதைப் போலவும் சிலர் இப்போது பேசுகிறார்கள். அப்படிப் பேசுவதற்குப் பெயர்தான் அரசியல் ஆதாயம் தேடுவதாகும்.
என்னுடைய இந்தக் கருத்து அவ்வளவும் உண்மை என்பதற்கு ஓர் உதாரணம் கூற வேண்டுமேயானால், தமிழக அரசியல் வரலாறு என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆர். முத்துக்குமார் எழுதிய நூல் ஒன்றில், பக்கம் 282-283இல் குறிப்பிடும்போது, "தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த போது, பலத்த நிதி நெருக்கடி இருப்பதால் மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்வது அத்தியாவசிய நடவடிக்கை என்ற பேச்சுக்கள் எழுந்தன.
நிதி நெருக்கடியைச் ச மாளிக்க வேண்டுமென்றால் மதுவிலக்கை ஒத்தி வைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றார் முதலமைச்சர் கருணாநிதி. பலத்த யோசனைக்குப் பிறகு மதுவிலக்கு ஒத்திவைப்பு விஷயத்தில் கருணாநிதிக்கு ஆதரவு கொடுக்கத் தயாரானார் எம்.ஜி.ஆர். அதனைக் கோவையில் நடந்த திமுக பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.
மது விலக்கை அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது, நிரந்தரமாக அல்ல என்றார் எம்.ஜி.ஆர். மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையிலும் நிதி நெருக்கடி யைக் கருத்தில் கொண்டு மதுவிலக்குச் சட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் கருணாநிதி.
மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நஷ்ட ஈடாக நிதி உதவி வழங்கும் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. நிதி நெருக்கடியில் உழன்று கொண்டிருந்த தமிழக அரசு தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதைக் காரணம் காட்டி மத்திய அரசிடம் நிதி உதவி கோரியது.
ஆனால் மத்திய அரசோ கை விரித்துவிட் டது. புதிதாக மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி உதவி; ஏற்கனவே அமலில் இருக்கும் மாநிலங் களுக்கு அல்ல என்பது மத்திய அரசு சொன்ன காரணம்"" என்று அந்த எழுத்தாளர் தனது நூலில் கூறியிருக்கிறார்.
மதுவிலக்குக் கொள்கையைப் பொறுத்தவரையில், திமுக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டதைப் போல சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதுவும் உண்மையல்ல.
1937ல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாண அரசு அமைந்ததும், அதுவரை சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இல்லாத மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால், அதுவும் 1939இல் முடிவுக்கு வந்தது. அந்த 1937ஆம் ஆண்டிலேகூட, ராஜாஜி முதலமைச்சராக இருந்த போதேகூட, சென்னை மாகாணத்தில் இருந்த 25 மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களில் மட்டும்தான், அதாவது சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில்தான் மதுவிலக்கு நடைமுறையில் இருந் தது.
மற்ற மாவட்டங்களில் 1937ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலைமைதான் இருந்து வந்தது. 1948ல் ஓமந்தூரார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத் தினார்.
இது தவிர மற்ற காலங்களில் அதாவது 1937க்கு முன்பும் சரி,1939-க்குப் பின்பு 1948ஆம் ஆண்டு வரையிலும் சரி, தமிழகத்திலே மதுவிலக்கு நடைமுறையிலே இல்லை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால், தமிழகத்திலே திமுக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவைப் புகுத்தி விட்டார்கள் என்ற வாதம், எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

நன்றி - த இந்து

Thursday, July 23, 2015

மதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது...கலைஞர் என்ன செய்தார்? ஒரு ஃபிளாஸ்பேக்

திமுக தலைவர் கருணாநிதியுடன் ராஜாஜி | கோப்புப் படம்.
திமுக தலைவர் கருணாநிதியுடன் ராஜாஜி | கோப்புப் படம்.
அது 1971-ம் வருடம். கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த ராஜாஜி, மதுவிலக்கை ரத்து செய்தால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் என கடுமையாக வாதாடினார்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும் என கருணாநிதி கூறியபோது, அவர் மதுவிலக்கு கொள்கையில் அந்தர் பல்டி அடித்திருக்கிறார் என்றே பெரும்பாலானோர் விமர்சனத்தை முன்வைத்தனர்.
1971 ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தமிழக அரசியல் என்ன நடந்தது. மாநிலத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது எப்படி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் நினைவு கூர்ந்துள்ளனர்.
அந்த வருடம்தான் (1971), மாநிலத்தின் பொருளாதார சூழலை காரணம் காட்டி அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்ய முடிவு செய்தார். அப்போது நாடு முழுவதிலும் குஜராத், தமிழகம் என இரு மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்தது.
மதுவிலக்கை ரத்து செய்ய முடிவு செய்த போது கருணாநிதி, "நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால், அது சாத்தியப்படாத சூழலில், தமிழக அரசு இந்த முடிவுக்கு வருகிறது. அதுவும் வருவாய் இழப்பை சரிகட்டுவதற்காகவே. மாநிலத்தின் வருவாய் இழப்பை மத்திய அரசு இழப்பீடு மூலம் சமன் செய்யாதபோது இதைத்தவிர வேறு வழி அரசுக்கு இல்லை" என்ற வாதத்தை முன்வைத்தார்.
கருணாநிதியின் முடிவு திமுக பொதுக்குழுவின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும், திமுக அரசுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. காங்கிரஸ் மற்றும் ராஜகோபாலச்சாரியின் சுவதந்தரா கட்சிகள் கருணாநிதியின் முடிவை வலுவாக எதிர்த்தன. (1937-ல் சேலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியதே ராஜாஜிதான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.)
இந்தச் சூழ்நிலையில்தான், 1971 ஜூலை 20 செவ்வாய்க்கிழமை மாலை கொட்டும் மழையில் கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு ராஜாஜி கருணாநிதி இல்லத்துக்குச் சென்றார். அப்போது, மதுவிலக்கை ரத்து செய்வது எதிர்கால சந்ததியினரை வெகுவாக பாதிக்கும் என கருணாநிதியிடம் மன்றாடியிருக்கிறார்.
இது குறித்து அப்போது செய்தி வெளியிட்ட தி இந்து, "கருணாநிதி - ராஜாஜி சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. ஆனால், என்ன நடந்தது என்பதை இரு தலைவர்களுமே செய்தியாளர்களுக்கு தெரிவிக்கவில்லை" எனக் குறிப்பிட்டது.
மதுவிலக்கு ரத்தானது. அடுத்தடுத்த வாரங்களில் திமுக அதிகமாக விமர்சிக்கப்பட்டது. கட்சியின் நிறுவனர் அண்ணாதுரையின் அசைக்கமுடியாத மதுவிலக்கு கொள்கையை கருணாநிதி நசுக்கிவிட்டார் எனக் கூறப்பட்டது. இதற்க்கு சட்டப் பேரவையில் பதிலளித்த கருணாநிதியோ, "காங்கிரஸ் ஆளும் பல்வேறு மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லை. அப்படியென்றால் காங்கிரஸ்காரர்கள் காந்திய கொள்கையை கைவிட்டுவிட்டார்கள் என்று அர்த்தமா" என வினவினார்.
அதேபோல், காங்கிரஸ் தலைவர் காமராஜர், கருணாநிதியின் முடிவை 'பாசிஸ கொள்கை' என சாடியபோது, காமராஜர் ஏன் மைசூர், ஆந்திராவில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
கறுப்பு தினம்:
ஆகஸ்ட் 30, மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட தினத்தை தமிழ்நாடு மதுவிலக்கு செயலாக்க குழு கறுப்பு தினமாக அறிவித்தது. காங்கிரஸ், சுவதந்தரா கட்சிகள் கள்ளுக்கடைகளை சூறையாட முடிவு செய்தன. இதன் எதிர்வினையாக, 1973 இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கிய எம்.ஜி.ஆருக்கு ராஜாஜியின் "நல்லாசி" கிடைத்தது.
ஆனால், பின்நாளில் முதல்வராக பதவியேற்ற பிறகு எம்.ஜி.ஆர். மது விற்பனையை அனுமதித்தார்.


நன்றி - த இந்து

  • Vikram.L  
    கற்றறிந்த ராஜாஜி -அடிப்படை கல்வி கூட இல்லாத கருணாநிதி அன்று . அதே இடத்தில இன்று டாக்டர் அன்புமணி -டாஸ்மார்க் ஸ்டாலின் . தமிழ்நாடு எப்படி வாழும் ?
    Points
    120
    7 minutes ago
     (0) ·  (0)
     
    • Ghanesun P  
      எது எப்படியோ, மது விலக்கை அமல் படுத்தினால் சரி. பா. ம. க. வும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதைஏ அவர்களது வெற்றியாகக் கொள்ள வேண்டும்.
      Points
      685
      about an hour ago
       (0) ·  (0)
       
      • KKannan  
        இன்று ஆயிரமாயிரம் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டாலும் நடப்பதென்னவோ தினந்தோறும் லட்சக்கணக்கான மதுபாட்டில்கள் மக்களால் காலியாகிக் கொண்டிருக்கின்றன. பின் காலியான மதுபாட்டில்களின் விளைவாக மக்கள் காலியாகப் போவது நிிச்சயம்
        Points
        180
        about 3 hours ago
         (0) ·  (0)
         
        • Venkat Khan Swaminathan  
          No need DMK ADMK only pmk
          Points
          4000
          about 6 hours ago
           (0) ·  (0)
           
          • S.V. Ramaswamy  
            தமிழ் தமிழ் என்று சொல்லியே தமிழனை போதையில் சாலை யோரங்களில் புரளவிட்டு தேர்தலுக்கு தேர்தல் இலவசங்களையும் தந்து மழுங்கடிதால்தான் இங்கே பிழைக்கமுடியும் என்று தி மு க எ டி யம் கே வும் நன்றாக தெரிந்து கொண்டன. இதிலிருந்து தமிழகத்தை இந்த இரண்டு கட்சிகளுமே மீட்காது ,
            Points
            330
            about 7 hours ago
             (0) ·  (0)
             
            • சிவாஜி.என்.ஆர்.  
              கமா குறியை , போட்டுக்கொண்டே ஆட்சி நடத்தியதை, மக்கள் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். இளைஞர்கள், வரலாற்றைப் படிப்பார்கள், தமிழகத்தில் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.
              Points
              165
              about 8 hours ago
               (0) ·  (0)
               
              • PRPugazhendhi Rehman  
                RAJAJI ASKED KALAIGNAR OK, BUT NOW THE WHOLE TAMIL NADU PEOPLE ASKING OUR CM, WILL SHE LISTEN TO OUR PEOPLE'S WORD.

              Sunday, June 21, 2015

              யோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ரகசியம்

              மரணத்துக்கு மிக நெருக்கமாகச் செல்லுதல் பெரும் கொடுமை. அதிலும் என்ன நோய் என்றே தெரியாமல், மரணத்தின் முன் மருத்துவத்தின் சகல முயற்சிகளாலும் நீங்கள் கைவிடப்பட்டு நிற்பது பெரும் பரிதாபம். வாழ்வில் பல முறை அந்தப் பரிதாபகரமான சூழலில் நான் நிறுத்தப்பட்டிருக்கிறேன். இதுதான் கடைசி இரவாக இருக்கும் என்று கிட்டத்தட்ட நிச்சயிக்கப்பட்ட ஓர் இரவு முழுவதும், “இறைவா... இந்த ஓர் இரவை மட்டும் எனக்குக் கொடு. நாளை நிச்சயம் நான் உயிர் பிழைத்துக்கொள்வேன்” என்று மன்றாடியிருக்கிறேன். கடைசி முறை மருத்துவமனையிலிருந்து வெளியேறியபோதுகூட, கை - கால்களின் இயக்கம்கூடச் சரியாக இல்லை. ஒரு மாத கால மருத்துவமனைவாசம், நூற்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகும். ஆனால், வீடு திரும்பியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் மட்டும் அசைக்க முடியாததாக இருந்தது. யோகா தரும் நம்பிக்கை அது. மருத்துவர்களே வியக்கும் வகையில் பல முறை அது உயிரைத் தக்கவைத்திருக்கிறது. உடலியக்கத்தை நீட்டித்துத் தந்திருக்கிறது.
              என் அனுபவம் சாதாரணம். இன்னும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மருந்து பலனிக்காது என்று முற்றிலுமாகக் கைவிடப்பட்டவர்கள், மருத்துவச் சிகிச்சைக்கே வழியில்லாதவர்கள், மன அழுத்தத்தில் உறைந்தவர்கள் என்று எத்தனையோ பேரை யோகா மீட்டெடுத்திருக்கிறது. அடிப்படையில், அது நோயுற்றவர்களுக்கான சிகிச்சை முறையோ, நோய் வராமல் பார்த்துக்கொள்வதற்கான தற்காப்புக் கலையோ அல்ல; நம்முடைய உயிரியக்கத்துக்கும் இயற்கையின் பேரியக்கத்துக்கும் இடையிலான உறவை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதற்கான அறிவியல். அதை உடல் - மனம் இரண்டையும் பேணிப் பாதுகாத்துக்கொள்வதற்கான கருவியாக நாம் பயன்படுத்திக்கொள்கிறோம்.
              ஆண்டுக்கு மருத்துவத்துக்காக ரூ. 4 லட்சம் கோடிக்குக் குறைவில்லாமல் செலவிடப்படும் இந்தியாவில், தன்னுடைய குடிமக்களுக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு யோகா கற்றுத் தர அரசே முன்வருகிறது என்றால், கொண்டாடி வரவேற்க வேண்டிய முயற்சி அது!
              பிரதமர் மோடி 2014 செப்டம்பர் 27 அன்று ஐ.நா. சபையில் உரையாற்றினார். “உலகெங்கும் யோகாவைக் கொண்டுசெல்லும் விதமாக ஆண்டில் ஒரு நாளை யோகா தினமாகக் கொண்டாட வேண்டும்” என்று அன்று அவர் விடுத்த வேண்டுகோளின் தொடர்ச்சியாகவே ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது ஐ.நா. சபை. இந்த ஆண்டு ஜூன் 21 அன்று உத்தேசமாக உலகின் 192 நாடுகள் யோகா தினத்தைக் கொண்டாடும்
              என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் உள்நாட்டிலும் யோகாவை விரிவாக எடுத்துச் செல்லும் முயற்சிகளில் ஒரு அரசாங்கம் இறங்குவது ஆக்கபூர்வமான நடவடிக்கை. ஆனால், அதை தொலைநோக்கின்றி அரசியல் உள்நோக்கங்களுடன் அரசு அணுகுவதுதான் சங்கடம்.
              யோகாவில் தேர்ந்த எந்த ஒரு ஆசிரியரும் தன்னுடைய மாணவர்களிடம் வாங்கிக்கொள்ளும் முக்கியமான உறுதிமொழி ஒன்று உண்டு: “நீங்கள் ஆசிரிய பயிற்சியைக் கற்கும் வரை, உங்களுக்குக் கிடைக்கும் இந்தக் குறைந்தபட்சக் கல்வியைக் கொண்டு யாருக்கும் யோகா கற்றுத்தரக் கூடாது.” இந்த உறுதிமொழிக்குப் பின் நியாயமான காரணங்கள் பல உண்டு. கற்றுக்கொள்வதற்கான பயிற்சிகள் வேறு; கற்பிப்பதற்கான பயிற்சிகள் வேறு. மிக நுட்பமான யோகப் பயிற்சிகள் ஒவ்வொரு நபருக்கும் அவருடைய ஒவ்வொரு அசைவுக்கும்கூட மாறுபட்ட பலன்களைத் தரக் கூடியவை. ஒரு ஆசிரியர் யோகாவைக் கற்பிக்கும்போது, அவர் கற்பிக்கும் ஒவ்வொருவரின் பயிற்சியிலும் அவருடைய நேரடிக் கவனிப்பு அவசியம்.
              யோகா உடற்பயிற்சி கிடையாது. நமக்குள் மலர்ச்சியைக் கொண்டுவரும் ஆன்மப் பயிற்சி. பொத்தாம்பொதுவாக எல்லோருக்குமான பயிற்சியாக ஒரு மேடையிலிருந்து ஆயிரம் பேருக்குச் சொல்லிக்கொடுத்துவிட முடியாது. அதனால்தான், பி.கே.எஸ். ஐயங்காரைப் போன்ற மகத்தான யோகா ஆசிரியர்கள், “யோகா என்பது அந்தரங்கமானது. ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு விதமானது. அதனால்தான் நான் எப்போதும் பெரிய அளவிலான யோகா பயிலரங்குகளைத் தவிர்க்கிறேன்” என்கிறார்கள். ராம்தேவ் போன்றவர்களைத் தவறான முன்னுதாரணங்கள் என்கிறார்கள்.
              பள்ளிக் குழந்தைகளை உடல் சாகசத்தில் ஈடுபடவைத்து, கை கால்களைக் கோணல் மாணலாக வளைக்க வைத்து யோகா என்று சொல்லி அறியாமையில் மார்தட்டிக்கொள்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கலாம். யோகாவைக் கற்றவர்களாகச் சொல்லிக்கொள்பவர்களுக்குத் தெரிய வேண்டாமா?
              இளைய தலைமுறையிடம் யோகாவைக் கொண்டு செல்வதாகக் கூறிக்கொள்ளும் மோடி அரசின் முழுக் கவனமும் இப்போது டெல்லி ராஜபாட்டையில் குவிந்திருக்கிறது. குழந்தைகளிடம் யோகாவை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைவிட, பிரதமர் மோடி தொடக்கிவைக்கும் யோகப் பயிற்சியில் எப்படியாவது 30 ஆயிரம் பேருக்குக் குறையாமல் ஆட்களைக் கூட்டி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இந்நிகழ்ச்சியைப் பதிவுசெய்துவிட வேண்டும் என்பதில்தான் அதிகாரவர்க்கம் குறியாக இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு குவாலியரில் 29,973 பேர் பங்கேற்ற யோகா பயிற்சி கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சி இது. இதே போன்ற கூத்துக்கு நாடு முழுவதும் திட்டமிடப்பட்டிருக்கிறது. யோகாவை ஒரு தேர்ந்த தொழில் கருவியாக்கிப் பண சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கியிருக்கும் ‘பகட்டல் குருக்கள்’அகமகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். யோகாவை உண்மையாக நேசிப்பவர்கள் அமைதியாகப் புன்னகைக்கிறார்கள்!
              யோகாவை உலகம் வரித்துக்கொண்டு நீண்ட காலம் ஆகிறது. மேற்குலகம் மட்டுமில்லாமல், ஈரான், ஜப்பான், கென்யா, குரோஷியா, அர்ஜென்டினா போன்ற வெவ்வேறு இனங்கள், கலாச்சாரங்களின் களநிலங்களிலும் அதன் வேர் இன்று விரவியிருக்கிறது. இந்தியாவிலும் மத - இன வேறுபாடுகளைத் தாண்டி எவ்வளவோ பேர் யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், நம்முடைய சிறுபான்மை மத அமைப்புகள் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருப்பதை அவர்களுடைய சமீபத்திய அறிவிப்புகள் காட்டுகின்றன.
              அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சூரிய நமஸ்காரத்தை முன்வைத்து, யோகா இஸ்லாமுக்கு விரோதமானது என்று அறிவித்திருக்கிறது. இந்திய அரசு முன்னெடுக்கும் மாணவர்களுக்கான யோகா வகுப்புகளைச் சட்ட விரோதம் என்று சொன்ன அது, யோகாவுக்கு எதிராகத் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தது. அந்த அளவுக்குப் போகவில்லை என்றாலும், கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் யோகாவில் மகிழ்ச்சி இல்லை என்பதை கத்தோலிக்க பிஷப் மாநாடு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில் சிறுபான்மையின அமைப்புகளின் அக்கறைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. யோகா பயிற்சி எல்லோர்க்கும் கட்டாயமில்லை என்று அறிவித்திருப்பதுடன் சூரிய நமஸ்காரத்தைப் பயிற்சி வகுப்பிலிருந்து தவிர்ப்பதாகவும் சொல்லியிருக்கிறது அரசு. ஆனால், எதுவும் சிறுபான்மையின அமைப்புகளைத் திருப்திப்படுத்துவதாகத் தெரியவில்லை.
              அரசின் நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குவதும் ஒரு திட்டத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதும் ஆரோக்கிய மானது. ஆனால், எதிர்ப்பின் பெயரால் ஒரு சமூகத்தையே ஒரு நல்ல கலைக்கு எதிராகத் திசை திருப்புவது புத்திசாலித்தனம் அல்ல.
              இந்தியாவில் சிறுபான்மையினரின் சமூக நிலைபற்றிப் பெரிதாக விளக்கத் தேவையில்லை. குறிப்பாக, முஸ்லிம்களைப் பொறுத்த அளவில் சமூகப் பொருளாதார நிலையில், பல இடங்களில் தலித்துகளுக்கும் அவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கும் இது பொருந்தும். இந்நிலையில், யோகா போன்ற ஒரு கருவி வறிய சூழலில் உள்ள கோடிக் கணக்கானோரின் ஆரோக்கியத்தை மேலே கொண்டுவரக்கூடியது. மோடியைப் பிடிக்கவில்லை என்பதற்காக யோகாவையே இஸ்லாமுக்கு எதிரானதாக மாற்ற வேண்டுமா என்ன? சங்கப் பரிவாரங்கள் எப்படி எதையெடுத்தாலும் மத அரசியல் நோக்கங்களினூடே பார்த்துப் பழகியிருக்கின்றனவோ, அப்படித்தான் இருக்கிறது சிறுபான்மையின அமைப்புகளின் இந்த அணுகுமுறையும்!
              கடுமையான உழைப்புக்குப் பேர் போன கருணாநிதி தன்னுடைய உடலைப் பராமரிப்பதில் எப்போதும் கவனமாக இருப்பவர் என்பது யாவர்க்கும் தெரிந்த கதைதான். கருணாநிதி யோகா கற்றவர்.
              பொதுவாக, யோகா செய்பவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யும்போது, “சூரியாய நமஹ” என்று சூரியனுக்கு வடமொழியில் வணக்கம் சொல்வது வழக்கம். ஒரு நாத்திகராகவும் வடமொழிக்கு எதிரானவராகவும் அறியப்பட்ட கருணாநிதிக்கு இது சங்கடமான சூழல். ஒன்று
              “சூரியாய நமஹ” என்று சூரியனை பகவானாக்கி வடமொழியில் வழிபட வேண்டும் அல்லது சூரிய நமஸ்காரத்தையே கைவிட வேண்டும். கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா? சூரிய பகவானின் இடத்தில் திமுகவின் சின்னமான உதய சூரியனைக் கொண்டுவந்தார். அந்த உதயசூரியனைப் பார்த்து, “ஞாயிறு போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்” என்று செந்தமிழில் வாழ்த்தினார். யோகாவைத் தொடர்ந்தார். சூரியனை வணங்குவதில் பிரச்சினை இருக்கலாம்; வாழ்த்துவதில் என்ன சங்கடம்?
              புத்திசாலிகளால் எது ஒன்றிலிருந்தும் எதையும் விடுவித்துத் தனதாக்கிக்கொள்ள முடியும். ஒரு மகத்தான கலையை நாம் நமதாக்கிக்கொள்வோம்!
              - சமஸ், தொடர்புக்கு: [email protected]

              thehindu- thanx

              Monday, December 29, 2014

              அரசு பேருந்துகள் வேலைநிறுத்தம் - தமிழகத்தில் பரவலாக பொதுமக்கள் பாதிப்பு

              • அரசு பேருந்துகள் இயங்காததால் தமிழகம் முழுவதும் பயணிகள் தவிப்பு. | இடம்: நெல்லை - படம்: ஏ.ஷேக்மொய்தீன்
                அரசு பேருந்துகள் இயங்காததால் தமிழகம் முழுவதும் பயணிகள் தவிப்பு. | இடம்: நெல்லை - படம்: ஏ.ஷேக்மொய்தீன்
              • சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம். | படம்: க.ஸ்ரீபரத்
                சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம். | படம்: க.ஸ்ரீபரத்
              • திருவான்மியூரில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம். | படம்: எம்.கருணாகரன்
                திருவான்மியூரில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம். | படம்: எம்.கருணாகரன்
              போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒருநாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமையே வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியதால், தமிழகம் முழுவதும் பரவலாக பஸ் சேவை முடங்கியது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். 



              அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 11 தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
              இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதை ஏற்க மறுத்த தொழிற்சங்கங்கள், 29-ம் தேதி (நாளை) முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன. 



              இந்நிலையில், நேற்று முன்தினம் தொழிலாளர் நலத்துறை ஆணையரகம் திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சென்று கோரிக்கைகளை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று மதியம் 1.30 முதல் பிற்பகல் 3.15 மணி வரை நடந்தது. 



              தொழிலாளர் நல வாரிய சிறப்பு துணை ஆணையர் யாஸ்பின் பேகம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை நிர்வாகம் தரப்பில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆல்பர்ட் தினகரன், சேலம் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், தொழிற்சங்கங்கள் தரப்பில் மு.சண்முகம், நடராஜன் (தொமுச), சவுந்தரராஜன் எம்எல்ஏ (சிஐடியு), ஆறுமுகநயினார் (சிஐடியு), லட்சுமணன் (ஏஐடியுசி), கஜேந்திரன் (ஏஐடியுசி) உட்பட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகி களாக 25 பேர் கலந்துகொண்டனர். 


              போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்த காலத்தை 3 ஆண்டுகளாக மாற்றுவது, ஓய்வூதிய பலன்களை வழங்குவது, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீதான நடவடிக்கை வாபஸ், டிஏ வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடுவது, பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசு தரப்பில் ஏற்கப்பட்டன. ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ள தனி கமிட்டி உடனே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் இழுபறி நீடித்தது. இதனால், பேச்சுவார்த்தையில் இருந்து தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்தன.



              முன்கூட்டியே தொடங்கியது வேலைநிறுத்தம்
              திங்கள்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், திடீரென ஒருநாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலையே தொடங்கியதால் மாநிலம் முழுவதும் அரசு பஸ் சேவை முடங்கியது. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டனர். 



              கடந்த 15 மாதங்களாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. இந்நிலையில், விடுப்பில் சென்றவர்களுக்கு இந்த மாதம் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 5 முதல் 8 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொழிலாளர்கள் மத்தியில் பரவியதும், நேற்று அதிகாலையிலேயே பஸ்களை எடுக்காமல் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். 


              அதிகாலையில் பணிமனைகளில் இருந்து கணிசமான அளவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்கு மற்ற தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. 



              மொத்தமுள்ள 23 ஆயிரம் அரசு பஸ்களில் சுமார் 80 சதவீதம், பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டிருந்தன. சென்னையில் உள்ள 3,565 மாநகர பஸ்களில் 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டும் பேருந்துகளை இயக்கினர். 



              இதனால் பஸ் நிறுத்தங்களில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிப்பட்டனர். நீண்டநேரமாக பஸ்கள் வராததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால்டாக்ஸி மற்றும் மின்சார ரயில்களில் வீடு, அலுவலகங்களுக்கு சென்றனர். வெளியூருக்கு செல்ல வந்தோரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 


              மற்ற மாவட்டங்களில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டாலும், கணிசமான அளவுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் ஓரளவு சிரமமின்றி பயணம் செய்தனர். சென்னையில் தனியார் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் கடும் அவதிப்பட்டனர். 


              பஸ்கள் இயக்கப்படாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். ரூ.100 முதல் ரூ.400 வரை கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் சென்றனர். ஷேர் ஆட்டோக்களாக இயக்கப்பட்டு வந்த டாடாமேஜிக், அபே போன்ற ஆட்டோக்கள் ரூ.500 என வாடகைக்கு பேரம் பேசி ஓட்டிச் சென்றனர். இதனால், ஒட்டுமொத்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



              தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
              இதனிடையே, ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 



              போக்குவரத்துத் துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்று அவர்கள் அறிவித்தனர். 



              முன்னதாக, ''போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளன. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், சட்டச் சிக்கல் இருக்கிறது. 


              மற்ற தொழிற்சங்கங்களுடன் தொமுசவும் இணைந்து பேசுவதால், எந்த பிரச்சினையும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும். அதன்பின்னர், நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் முறையாக பேச்சுவார்த்தை நடத்த முடியும். எனவே, இது தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 30-ம் தேதி நடத்தப்பட உள்ளது'' என்றனர். 

               thanx -the hindu


              போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியதற்கு, தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். 


              இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "2011-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேருந்துகளை தனியார் மயமாக்க முயற்சித்தார். மூன்று ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தை ஐந்து ஆண்டுகளாக மாற்றவும் முயற்சித்தார். ஆனால் கடுமையான எதிர்ப்பின் காரணத்தினால் அவைகளை நிறைவேற்ற முடியவில்லை. 




              போக்குவரத்துகளில் தொழிற் சங்கங்களை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று பணியாளர் சம்மேளனம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கின் தீர்ப்பாக உடனடியாக சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 57 சதவிகிதம் (75,432) வாக்குகளைப் பெற்று தொ.மு.ச. தனியொரு சங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் 2015 அக்டோபர் வரை 5 ஆண்டுகளுக்கென நீதிமன்றத் தீர்ப்பின்படி அரசாணை பிறப்பிக்கப்பட்து. 



              ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அங்கீகரிக்கப்பட்ட சங்கமான தொ.மு.சங்கத்தை அழைத்துப் பேச மறுத்து வந்தது. ஊதிய ஒப்பந்தம் 31.8.2013 உடன் முடிவடைந்து புதிய ஊதிய ஒப்பந்தம் 1.9.2013 முதல் ஏற்படுவதற்கான கோரிக்கைகளை நிர்வாகத்திடம் அளித்து பேச்சுவார்த்தை நடத்த கோரியும் கடந்த 15 மாதங்களாக நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அ.தி.மு.க. சங்கம் உச்ச நீதிமன்றத்தில், அங்கீகாரத்துக்கான தேர்தலில் தங்கள் சங்கம் 12 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருப்பதால் தங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தது. 


              அந்த வழக்குக்கு, நீதிமன்றத்தில், எந்தவிதமான இடைக்காலத் தடையும் விதிக்கப்படவில்லை. தனியொரு சங்கமாக பேச்சுவார்த்தை நடத்த தொ.மு.ச.வை அழைக்க அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட அ.தி.மு.க. அரசு மறுத்து வருவதோடு, தொ.மு.ச. ஏதோ ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதாக பொய்யான செய்திகளை பரப்பி வந்தது. இதனை பேரவை பொதுச்செயலாளர் சண்முகத்திடம் கேட்டு, உண்மைகளை அறிந்துகொண்ட பின் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி எல்லோரும் கூட்டாகக் கோரிக்கைகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்துங்கள், அப்போதாவது இந்த அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்குமா என்பதை பார்க்கலாம் என்று நான் ஆலோசனை கூறினேன். 



              அதன் அடிப்படையில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து அ.தி.மு.க. தொழிற்சங்கத்தையும் பொதுக்கோரிக்கை தயாரிக்க அழைப்பு விடுத்தனர். ஆனால், ஆளும் கட்சி சங்கம் அதனை நிராகரித்தது. அ.தி.மு.க. சங்கத்தை தவிர மற்ற அனைத்து சங்கங்களும் கோரிக்கை அளித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அரசிடம் கோரினர். 



              ஆனால், அரசு மீண்டும் மீண்டும் வழக்கு இருப்பதாக பொய் சொல்லி காலம் கடத்தி வந்தது. இதனால் அனைத்து தொழிலாளர்களும் இணைந்து திருச்சியில் டிசம்பர் 2ஆம் தேதி 30,000 தொழிலாளர்கள் கூடிய மாநாட்டில் எடுத்த முடிவின் அடிப்படையில் வேலை நிறுத்த அறிவிப்பு டிசம்பர் 5 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் கையொப்பமிட்டு நிர்வாகத்திடம் அளித்தது. ஆனால், நிர்வாகம் அலட்சியம் செய்து அ.தி.மு.க. சங்கத்தில் 95,000 பேர் உறுப்பினர்கள் இருப்பதாகவும், அதனால் வேலை நிறுத்தத்தை முறியடிப்போம் என்றும் வீராப்பு பேசினார்கள். 



              தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் குறித்து அவர்களுடைய பிரதிநிதிகளை அழைத்துப் பேசாமல், தமிழக முதல்வர் கடந்த 8.12.2014 அன்று நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ரூ.1000 இடைக்கால நிவாரணமாக 1.1.2015 முதல் வழங்குவதாக மீண்டும் ஒரு பொய்யை சட்டமன்றத்தில் கூறினார். 



              இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல நிர்வாகங்களை முற்றுகையிட்டு 9.12.2014 அன்று போராட்டங்கள் நடத்தினர். வேலை நிறுத்தம் முறையாக சட்டப்படி 19.12.2014 முதல் தொடங்கியிருக்க வேண்டும். வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் அரசு அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர் துறையும் போக்குவரத்துத் துறையும் மெத்தனம் காட்டி கோரிக்கைகளை நிராகரித்துள்ளன. தொழிற்சங்கங்கள் பொறுமையாகவும், பொறுப்புணர்ச்சியோடும் 19.12.2014 முதல் 22.12.2014 வரை பொதுமக்களிடம் வேலை நிறுத்தத்திற்காக ஆதரவு திரட்டியதாகவும், இறுதிவரை அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் தொழிற்சங்கங்கள் 29.12.2014 முதல் வேலை நிறுத்தம் செய்வதென அறிவித்தன என்றும், இதற்கான விளக்கக் கூட்டம் 26.12.2014 அன்று சென்னை பல்லவன் சாலையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற பொழுது தொழிலாளர் நலத் துறையின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள் என்றும், ஆனால், அங்கு பதில் சொல்லக் கூடிய பொறுப்புள்ள பெரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், தொ.மு.ச. கடிதம் கொடுத்தால் பேச்சுவார்த்தை உடனடியாக துவங்கப்படும் என்று கூறியதாகவும் என்னிடம் விவரங்கள் தரப்பட்டன.
              27.12.2014 காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத் துறை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டதன் அடிப்படையில் அனைத்து சங்கங்களும் அங்கு சென்றிருக்கிறார்கள். அங்கு அ.தி.மு.க. சங்கமும் வருகை தந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சங்கமாக தொ.மு.ச. இருப்பதால் தொழிலாளர் துறை முன்னதாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்து அதன் மூலம் அனைத்து சங்கத்தையும் அழைத்து பேச்சுவார்த்தையை 30.12.2014 அன்று துவங்குவது என்ற ஆலோசனையை தொ.மு.ச. பேரவை அரசு முன் வைத்தபோது, முதலில் ஏற்றுக் கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்து தொ.மு.ச. கடிதம் கொடுத்தால்தான் பேச்சுவார்த்தை துவங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர். 




              உடனடியாக தொ.மு.ச. எந்த கௌரவமும் பார்க்காமல் நாங்கள் கடிதம் கொடுக்கிறோம். உடனே இன்றே பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும், அப்படி நீங்கள் துவங்கினால் வேலை நிறுத்தத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறப்பட்டது. ஆனால், நிர்வாகம் நீங்கள் கடிதம் கொடுங்கள் நாங்கள் அதை சட்டப்படி ஆலோசனை செய்து ஜனவரி 30 ஆம் தேதிக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதன் அடிப்படையில் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் ஆத்திரமடைந்து நிர்வாகத்தின் ஏமாற்று தந்திர வேலைகளென உடனடியாக பேச்சுவார்த்தை அமைச்சர் முன்னிலையில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யும் வரை வேலை நிறுத்தம் தொடருமென அறிவித்து விட்டு வெளியே வந்துள்ளார்கள். 



              நாள்தோறும் 2 கோடி ஏழையெளிய மக்கள், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், மருத்துவமனைக்குச் செல்லும் உடல்நலமற்றோர் போன்ற வாக்களித்த மக்கள் அரசுப் போக்குவரத்தின்றி அவதிப்படுவார்களே என்பதை உணர்ந்து, போக்குவரத்துத் துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சரும், முதலவரும் உரிய காலத்தில் இதற்கொரு தீர்வு காண தவறிவிட்டனர். 


              போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை (29-12-2014) முதல் வேலை நிறுத்தம் செய்ய முன் வருகின்ற அளவுக்கு நிலைமையை முற்றவைத்து வளர்த்து விட்டதற்காக செயலற்ற இந்த அ.தி.மு.க. அரசையும், போக்குவரத்துத் துறை அமைச்சரையும் வன்மையாகக் கண்டிப்பதோடு; காலம் கடந்துவிட்ட இன்றைய நிலையிலாவது பிரச்சினையிலே தலையிட்டு, போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஒரு சுமூக முடிவு காண்பதற்கு வழிவகை காண முன் வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.