Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான். Show all posts
Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான். Show all posts

Thursday, January 07, 2016

ஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 தகவல்கள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்புப் படங்கள் - இடது: பிடிஐ | வலது: ஜி.நாதன்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்புப் படங்கள் - இடது: பிடிஐ | வலது: ஜி.நாதன்
இந்தியத் திரையுலகம் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (ஜன.6) பிறந்தநாள். ஆஸ்கர் விருதை வென்ற மேடையில் கூட "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் பேசி நம்மை வியப்பில் ஆழ்த்தியவர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு ஆல்பம் வெளிவருகிறது என்றால், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஏ.ஆர்.ரஹ்மானைக் கண்டு வியக்க அவரது இசை மட்டுமல்ல... தனிப்பட்ட சிறப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன.



* பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது எந்த ரசிகர் ஆட்டோகிராப் கேட்டாலும் நின்று போட்டு விட்டுதான் கிளம்புவார். அதற்கு எவ்வளவு நேரமானாலும் பொறுத்திருக்க தயங்கமாட்டார். ஆனால், அவர் மசூதியில் தொழுகை செய்துவிட்டு வரும் போது, யார் கையெழுத்து கேட்டாலும் "இங்கு இறைவன்தான் பெரியவர். அவரை மிஞ்சிய ஆள் நானில்லை. இங்கு வைத்து என்னிடம் கையெழுத்து கேட்காதீர்கள்" என்று கூறிவிட்டு கிளம்பிவிடுவார்.



* தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும்போது, ஒரே நேரத்தில் பல்வேறு பாடல்கள் கொடுக்க வேண்டியது இருக்கும். அந்த சமயத்தில் தனியாக அவருடைய ஸ்டுடியோவில் போய் உட்கார்ந்து கொண்டு நிறைய பாடல் மாதிரிகளைத் தயார் செய்வார். அதனை தனது உதவியாளர்களிடம் கொடுத்துவிடுவார். "3, 5 மாதிரிகளை இந்த இயக்குநருக்கும் 7, 9 மாதிரிகளை இந்த இயக்குநருக்கும் அனுப்பிவிடுங்கள்" என்று சரியாக இயக்குநர் எந்த மாதிரியான பாடல்களை விரும்புவார்கள் என்று தேர்ந்தெடுத்து அனுப்பி ஒப்புதல் வாங்குவது தான் ரஹ்மான் ஸ்டைல்.



* பாடல்கள் இசையமைப்பைத் தாண்டி அவருக்கு நடிப்பதில் ஆர்வமே கிடையாது. அந்த அளவுக்கு பயங்கர கூச்ச சுபாவம் கொண்டவர். 'ஜெய் ஹோ' பாடலை தயார் செய்தவுடன் இந்தியாவே கொண்டாடியது. ஆனால், அதை படமாக்கப்பட்ட கஷ்டம் இயக்குநர் பரத் பாலாவுக்கு மட்டுமே தெரியுமாம். கேமரா முன்னால் நடிப்பதற்கு மிகவும் கூச்சப்பட்டு இருக்கிறார். முழு படப்பிடிப்பும் முடிந்து முழுமையாக தயாரானவுடன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்திருக்கிறார் பரத் பாலா. உடனே அப்பாடலை திரையிட எல்லாம் தயார் செய்துவிட்டு தன் அம்மாவை அழைத்து வந்து, "இந்த மாதிரி ஒரு பாடலை தயார் செய்திருக்கிறேன் அம்மா. நீங்கள் பாருங்கள்" என்று கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார்.



* ரஹ்மான் உடன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் வேகமாக கார் ஓட்டக் கூடியவர் என்று. அவர் கார் ஒட்டும்போது அவருடன் உட்கார்ந்து போக அவருடன் பணிபுரிபவர்கள் பயப்படுவார்கள். அந்தளவுக்கு படுவேகமாக கார் ஓட்டக் கூடியவர். ஆனால், சாலை விதிகளை கச்சிதமாகக் கடைபிடிப்பவர்.




* எவ்வளவு பெரிய மதிப்புடைய கார்கள் வைத்திருந்தாலும், பழைய அம்பாசிடர் காரை மட்டும் மிகவும் ரசித்து ஓட்டுவார் ஏ.ஆர்.ரஹ்மான்.


* ரஹ்மான் மிக அருமையாக மிமிக்ரி செய்வார். அதிலும் வைரமுத்து போல மிமிக்ரி செய்வது அவருக்கு விருப்பமான ஒன்று.



* பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் இசையமைப்பார். வீட்டில் இருந்து இரவு நேர பாடல் ஒலிப்பதிவுக்கு கிளம்பும்போது, குழந்தைகள் தூங்கியவுடன்தான் கிளம்புவார். அந்த அளவுக்கு குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் உடையவர். மேலும், இவருடைய மகன் அமீனுக்கும், இவருக்கும் ஒரே தேதியில் பிறந்த நாள். (ஹேப்பி பேர்த் டே அமீன்!!)



* இயக்குநர் ஷங்கர் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் 'இந்தியன்' படத்துக்கு பணியாற்றி வந்த நேரம். அந்த மெட்டுகள் அனைத்தையும் ஒரு ஹார்டு டிஸ்கில் போட்டுக் கொண்டு ஆஸ்திரேலியா பயணமானார். அப்போது விமான நிலையத்தில் தெரியாமல் ஹார்ட் டிஸ்கை ஸ்கேன் செய்யக் கொடுத்துவிட்டார். விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனிங்கில் ஹார்ட் டிஸ்கை ஸ்கேன் செய்துவிட்டால், அதில் உள்ளவை அனைத்துமே அழிந்துவிடும். வேலை அவசரத்தில் கொடுத்ததால், சுமார் 25 மெட்டுகள் அழிந்துவிட்டன. அப்போது சென்னை திரும்பியவுடன் இயக்குநர் ஷங்கர், பாடல்கள் வேண்டும் என கேட்கவே, ஹார்ட் டிஸ்க்கை போட்டுப் பார்த்தால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெரும் அதிர்ச்சி. ஆனால், அவர் சோகத்தில் எல்லாம் உட்கார்ந்துவிடவில்லை. உடனடியாக எந்த மாதிரி எல்லாம் மெட்டுகள் பண்ணினோம் என்று யோசித்து ஒரே நாளில் 'இந்தியன்' பாடல்களை முடித்து கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.


* உலக அளவில் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும், இவருடைய பாடல் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அனுமதியே கிடையாது.



* எவ்வளவு முக்கியமான வேலைகள் இருந்தாலும் தினமும் ஐந்து முறை தொழுகை செய்வதில் அவர் தவறுவதில்லை. இந்தியாவில் முக்கியமான தர்காக்கள் எந்த சந்துக்குள் இருந்தாலும் சென்று பார்த்து தொழுதுவிட்டு வருவது ரஹ்மான் வழக்கம்.



 tha hindhu

Sunday, April 12, 2015

ஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்கு கடல் டப்பா ஆனதுதான் காரணமா?- மணிரத்னம் ஓப்பன் டாக் பேட்டி

இயக்குநர் மணிரத்னம், படம்: உதயா
இயக்குநர் மணிரத்னம், படம்: உதயா
இந்தியத் திரையுலகின் ஈர்ப்பு சக்தி குறையாத இயக்குநர் மணிரத்னம். ‘கடல்’ படத்தை முடித்துச் சற்றே இளைப்பாறிய மணிரத்னம் மீண்டும் இளமை குறையாமல் ‘ஓ காதல் கண்மணி’ படத்தோடு ரசிகர்களைச் சந்திக்கிறார். இந்தச் சூழலில் அவரைச் சந்தித்தோம்.
‘ஓ காதல் கண்மணி’ படம் ‘அலை பாயுதே’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாமா?
சொல்லலாம். ஆனால் அதே சமயம் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் கதையின் போக்கும், கதாபாத்திரங்களும் வித்தியாசமாக இருக்கும். தற்போது இருக்கும் காலகட்டத்தில் இளைய சமுதாயத்துக்கு மத்தியில் இருக்கும் உறவுகளைப் பற்றி இப்படம் பேசும்.
இந்த படம் முழுக்க மும்பையை பின்னணியாகக் கொண்டது. இப்படத் தில் பாடல்கள் அதிகம். இருப்பினும் கதாபாத்திரங்கள் வாயை அசைத்து பாடும் பாடல்கள் இரண்டுதான். மற்றவை யெல்லாம் படத்தின் பின்னணியோடு இணைந்து வருகிறது. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் உழைப்பு இதில் அதிகம்.
முன்னணி நடிகர்கள் பலரும் உங் களுடன் பணிபுரிய ஆவலுடன் இருக் கும்போது துல்ஹரை ஏன் இப் படத்தின் நாயகனாக தேர்வு செய்தீர்கள்?
‘வாயை மூடி பேசவும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் துல்ஹரை முதலில் பார்த்தேன். மிகவும் இளமைத் துடிப்புடன் இருந்தார். அது எனக்கு பிடித்துப் போனது. இப்படத்தின் கதையை எழுதும் போது அவரை அழைத்து பேசினேன். பேசும்போதே மிகவும் எதார்த்தமான இளைஞராக அவர் எனக்கு தெரிந்தார். அதையும் மீறி அவர் ஒரு அற்புதமான நடிகர். இப்படத்தின் படப்பிடிப்பின்போதே ஒலிப்பதிவும் செய்திருக்கிறோம். துல்ஹர், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் என அனைவருமே படப்பிடிப்பின்போது பேசியதுதான் படத்தில் இருக்கும். துல்ஹர் சென்னையில் இருந்தவர் என்பது இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவியது.
இப்படத்தில் நீங்கள் ஒரு கவிஞராகவும் வெளிப்பட்டிருக்கிறீர்களே?
கவிஞர் ஆக வேண்டும் என்பதற் காக இப்படத்தில் நான் பாடல் எழுதவில்லை. அந்தப் பாடலின்போது வைரமுத்து ஊரில் இல்லை. எங்களுக்கோ உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டது. உடனே நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் அமர்ந்து இப்பாடலை எழுதினோம். அவ்வளவு தான். இதற்கு முன்பே ‘அலைபாயுதே’ படத்தில் ‘என்றென்றும் புன்னகை’ பாடலையும், ‘ராவணன்’ படத்தில் ‘வீரா’ பாடலையும் நாங்கள் இதேபோல் சேர்ந்து எழுதியிருக்கிறோம்.
15 வருடங்களுக்கு பிறகு பி.சி.ஸ்ரீரா முடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எப்படி இருக்கிறது?
15 வருடங்கள் இணைந்து பணி யாற்றாத உணர்வே இப்படத்தின்போது எங்களுக்கு ஏற்படவில்லை. பி.சி.ஸ்ரீராம் என்னுடைய படங்களுக்கு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, ஆலோ சகரும் கூட. அவருடைய எதிர் வினைகளை வைத்து நான் சொன்னது எப்படியிருந்தது என்பதை தெரிந்து கொள்வேன்.
காதல் என் பது தற்போது எப்படி மாறி இருப்பதாக நினைக்கிறீர் கள்?
காதல் அப்படியேதான் இருக்கிறது. ஆட்கள்தான் மாறியிருக்கிறார் கள். அபத்தமான காதல் என்பது பழைய காலத்திலும் இருந்தது, இப்போ தும் இருக்கிறது. அசாதாரணமான காத லும் அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அதில் எந்த வித்தியாசமும் இல்லை. காதலை வெளிப்படுத்தும் தன்மை என்பது இப்போது மாறி இருக் கிறது. பழைய காலங்களில் சமுதாயத் தில் இருந்த சூழ்நிலையால் காதலை வெளியே சொல்ல முடியாது. இப்போது அப்படியில்லை. மனதில் தோன்றியதை வெளியே சொல்ல முடிகிறது.
என்னுடைய காலத்தில் என் அப்பா ஒரு வார்த்தைச் சொன்னால் நான் மறு வார்த்தை பேச மாட்டேன். இப்போது குழந்தைகளை சொந்தமாக யோசிக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறோம். ஆகையால், அவர்களுக்கு தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக தெரி விக்கிறார்கள்.
உங்கள் படங்களுக்கு உரிய வர வேற்பு கிடைக்காதபோது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
வரவேற்பு பெறும்போது ஏற்றுக் கொள்வது போல, வரவேற்பைப் பெறாதபோதும் ஏற்கத்தான் வேண்டும். ரசிகர்களுக்கு பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் படம் பண்ணுகிறோம். ஆனால் அதற்கு நேர்மாறாக படம் தோல்வியடைந்தால் அதை ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்.
படத்தில் தப்பு இருக்கலாம், ஆனால் நான் என்ன நினைத்தேனோ அதை அடைந்திருக்கிறேனா என்பதுதான் முக் கியம். தப்பு செய்வதற்கு பயப்படாமல் தான் படம் பண்ணுகிறோம். தப்பு பண்ணி னாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்.
அனைவருக்குமே இறங்கு முகம் வரும், அதைப் பார்த்து பயப்படாமல் இருக்கவேண்டும். ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால், எதனால் என்று கற்றுக் கொண்டு அதை அடுத்த படத்தில் திருத்திக்கொள்வேன் அவ்வளவுதான்.
காதலை மையமாக வைத்து இன்னும் எத்தனை படங்களை எடுக்கப் போகி றீர்கள்?
உலகத்தில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை. கணவன் - மனைவி, அம்மா - மகன், அப்பா - மகன் என நிறைய பரிணாமங்களில் காதல் இருக்கிறது. ஆகையால், காதலை படமாக பண்ணுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
‘கடல்’ படத்தில் எழுத்தாளர் ஜெய மோகனோடு பணியாற்றினீர்கள். இந்த படத்தில் அவருடன் ஏன் பணியாற்ற வில்லை?
சில படங்களுக்கு எழுத்தாளர்கள் தேவைப்பட மாட்டார்கள். ‘கடல்’ படம் கடற்கரையோர மக்களின் வாழ்க்கை யைச் சார்ந்த படம். அவர்களின் மொழி எனக்கு பழக்கம் இல்லை என்பதால் அவருடன் இணைந்து அப்படத்தை பண்ணினேன். ‘ஓ காதல் கண்மணி’ எனக்குத் தெரிந்த உலகம். அதனால் எனக்கு மற்றவர் உதவி தேவைப்படவில்லை.
தற்போது சமூக வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் படங்களை விமர்சனம் செய்யலாம் என்ற சூழ் நிலை வந்துவிட்டதே..?
வலைதளங்களில் வரும் விமர் சனங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் இன்றைய சமூகம். முன்பு இந்த விமர்சனங்கள் டீக்கடையில் இருந்து வந்தன. ஏன் நானும், பி.சி-யும்கூட ஒரு குட்டிச்சுவரில் அமர்ந்து ‘யாருக்குமே சினிமா எடுக்க தெரியல. நாங்க எடுக்கிறோம்’ என்று பேசியிருக்கிறோம்.
இப்போது அதையே ட்விட்டர் தளத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். முன்பு கருத்து சொல்வதற்கு எந்த வழிமுறையும் கிடையாது. இப்போது அதற்கு ஒரு தளம் கிடைத்திருக்கிறது.
சில இயக்குநர்கள் ஒரு படத்தின் காட் சியை அப்படியே தனது படத்திலும் உப யோகப்படுத்திக் கொள்கிறார்களே. இதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?
மற்றொரு படத்தின் காட்சிகளை அப்படியே தனது படத்தில் உபயோகிப்பது ஒரு மடத்தனம். ஒரு படத்தை பார்த்து, அப்படியே என் படத்தில் வைத்தால் நான் இதுவரை கற்றதே இல்லை என அர்த்தம்.
சினிமா வியாபாரம் இப்போது நிறைய மாறிவிட்டதே?
சினிமா வியாபாரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மாறி வருகிறது. இன்னும் மாறும். கொஞ்சம் கொஞ்சமாக தொழில்முறை மாறும் என தோன்றுகிறது. இன்றைக்கு சினிமா தொழில்நுட்பத்தில் நிறைய மாற் றங்கள் வந்துவிட்டன. அதேபோல தொழில்முறையும் மாறும். நானும், நீங்களும் படம் பார்க்கும் விதம் மாறிக் கொண்டிருக்கிறது. மொபைல் போனில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திரையரங்குக்கு வந்து படம் பார்க்க சிலர் விருப்பப்படுவதில்லை. இப்போது மக்களிடம் படத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்று நாங்கள் கற் றுக் கொள்ள வேண்டும். பெரிய தொழில் முறை மாற்றத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
உங்கள் வீட்டில் இருக்கும் கதா நாயகன் என்ன சொல்கிறார்..?
(சிரித்துக் கொண்டே) ஐயோ வேண்டாம்.. நீங்கள் கேட்பவர் படித்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி - த  இந்து
ந்

Sunday, March 29, 2015

'ஓ காதல் கண்மணி' படத்தின் 'மென்டல் மனதில்' பாடல் மாஸ் ஹிட் ஆனது எப்படி? - ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புப் பேட்டி

அல்லா ரக்கா ரஹ்மான், ஒரே நேரத்தில் அமைதியாகவும், ஆர்வமாகவும், கவலையுடனும் இருக்கிறார்.
ஒரு இசையமைப்பாளராக அவர் சந்தோஷமாக இருக்கிறார். 'ஓ காதல் கண்மணி' படத்தின் 'மென்டல் மனதில்' பாடல் ஹிட் ஆகியுள்ளது. ஒரு மகனாக கவலையுடன் இருக்கிறார். அவரது அம்மாவுக்கு உடல் நலம் குன்றி தற்போது தேறிவருகிறார். ஒரு தயாரிப்பாளராக ஆர்வத்துடன் இருக்கிறார். அவரது முதல் இந்திப் படம் தயாராகிவருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் வீழ்ந்த சில மணி நேரங்களில் அவரது கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. குர்தா, ஜீன்ஸ் என நிறைவாகக் காட்சியளித்த ரஹ்மானிடம் இரானியப் படம், இளையராஜா, அவரது எதிர்காலம் என அனைத்தையும் பேசினோம்.
சமீபத்தில் நீங்கள் எழுதி, இசையமைத்து பாடிய 'மென்டல் மனதில்' பாடலுக்கு அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
அது ஒரு மென்மையான, ஜாலியான பாடல். பாடலாசிரியர் வைரமுத்து அப்போது ஊரில் இல்லை. ஆனால் மணிரத்னத்துக்கு உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே இதற்கு முன்னர் 'அலைபாயுதே' படத்தில் 'என்றென்றும் புன்னகை' பாடலை சேர்ந்து எழுதியுள்ளோம். எனவே மீண்டும் அப்படி ஒரு சூழல் எங்களுக்கு அமைந்தது.
அது எப்படி மணிரத்னம் மட்டும் உங்களிடமிருந்து விசேஷமான இசையை பெறுகிறார்?
அவர் தான் என்னை திரைப்படங்களில் அறிமுகம் செய்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இப்போது மணி, வைரமுத்து, நான் என நாங்கள் மூவரும் தனியாக ஒரு பிராண்ட் (Brand) ஆகிவிட்டோம். நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு வேலை செய்யலாம் என்று நினைத்தால் கூட முடியாது. ஏனென்றால் மக்களின் எதிர்பார்ப்பு அப்படி. அது ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. கடந்த சில வருடங்களில் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு என்ன தேவையோ அதைத் தர நினைக்கிறோம்.
பாடல் உருவாக்கத்தின்போது உங்கள் மூவரிடையே நிறைய கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் ஏற்படும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ காதல் கண்மணியை பொருத்தவரை என்ன நடந்தது என்று கூறுங்கள்.
எனக்கு சில விஷயங்கள் பிடிக்காது. சில நேரங்களில் ஒலிக்காக வார்த்தைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டும். ஒலி மிக முக்கியம். அது வார்த்தைக் குவியலைத் தவிர்க்கும். மக்களின் கவனத்தை சட்டெனக் கவர வேண்டும். அவர்களுக்கு, முன் இருந்தது போல பொறுமை இருப்பதில்லை
'ஒகே கண்மணி' படத்தில், 'நானே வருவேன்' என்ற பாடலில் அந்தரா என்ற அழகான இசைக் கருவியை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். ஆனால் வார்த்தைகள் சிக்கலாக இருந்தன. எனவே ஒரே வார்த்தை (சின்னஞ்சிறு) திரும்ப திரும்ப வருமாறு மாற்றினோம். பாரம்பரிய கலைகளில் இருக்கும் முறைதான் அது. உதாரணத்துக்கு 'தும்ரிஸ்' என்ற பாடல் வகையை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் வரும். ஏனென்றால் இசை சிக்கலாக இருக்கும். எனவே வார்த்தைகள் சிக்கலாக இருக்கக் கூடாது. 'யாத் பியா', 'மோரே சஜ்னி' போன்ற தும்ரி பாடல்களை கேட்டீர்கள் என்றால், ஒரே வரி மீண்டும் மீண்டும் பாடப்படும். கேட்பவர்களுக்கு கவனம் செலுத்த அது எளிமையாக இருக்கும்.
நீங்கள் திரைக்கதை எழுதுகிறீர்கள், இந்தி படம் ஒன்றை தயாரிக்கிறீர்கள். இசை அல்லாத மற்ற துறைகளுக்கு செல்வதன் காரணம் என்ன?
இந்திய சினிமாவில் ஒரு வெறுமை இருப்பதாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக என்னுடைய வளர்ச்சி அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியுமா எனப் பார்க்கிறேன். ஒன்று வெற்றி பெற்றால் அதையே அனைவரும் செய்கின்றனர். ஆனால கலைக்காக ஒரு சிலரே இருக்கின்றனர். என்னால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. மக்களுக்கு என்ன பிடிக்கும், நமது இசையில் தொலைந்து போன சுவை என இரண்டுக்குமான ஒரு சமநிலையை நான் தேடுகிறேன். அனைத்து அம்சங்களிலும் இந்த சமநிலை எட்ட முடியுமா என்று பார்க்க கடந்த 4 வருடங்களாக இதற்காக உழைத்து வருகிறேன்.
நீங்கள் இசையமைத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோது எவ்வளவு ஏமாற்றமா இருக்கும்? சென்ற வருடம் லிங்கா, காவியத் தலைவன் ஆகிய படங்கள் அப்படி அமைந்தன.
நான் நிறைய படங்களுக்கு ஒரே சமயத்தில் இசையமைத்து தவறு செய்துவிட்டேன். சிலருக்கு நான் முடியாது என சொல்லிருக்க வேண்டும். அதிகமான அழுத்தம், உறக்கமில்லாத இரவுகள் என ஒரு அணியாக எங்கள் முதுகு தேய நாங்கள் வேலை செய்தோம். அவற்றுக்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை என உணர்கிறேன். நான் இயற்கையாக விரும்பும் (கலையை) ஒன்றை வாழ்க்கை எனக்கு கொடுத்திருக்கிறது. அதிக வேலைப்பளுவில், அழுத்தங்களோடு வேலை செய்வது நல்லதல்ல.
லிங்கா அதில் ஒன்று என ஒப்புக்கொள்கிறீர்களா?
சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளன்று படத்தை வெளியிடவேண்டிய நிர்பந்தம். அந்தப் படத்தை பொருத்தவரையில் என்ன ஆனது என மக்களுக்குத் தெரியும். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவேண்டும். இசைக் கலைவை. பின்னணி இசைக் கோர்ப்பு என அனைத்தையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் காவியத் தலைவன் வேலையும் நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் ஒரே நேரத்தில் வந்தது. அது அசந்தர்ப்பமான சூழல்.
சில தரப்பு மக்கள், உங்கள் இசை 90-களில் இருந்தது போல இல்லை என கூறுகிறார்கள்
எனக்குப் பெருமையாக உள்ளது. என்னிடம் ஏதோ ஒன்று அவர்களுக்கு பிடித்துள்ளதே (சிரிக்கிறார்)
அத்தகைய கருத்துகளை கேட்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?
ஒரு படைப்பாளியாக நான் புதிதாக எதையாவது செய்ய வேண்டும். எனது அன்றைய இசைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்றைய இசைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். நீங்கள் ரசித்த ஒரு முன்னாள் நடிகையிடம் இன்று சென்று, "எனக்கு உங்களை பிடிக்காமல் போய்விட்டது" எனக் கூறமுடியுமா?
வசந்தபாலனோடு இணைந்து வேலை செய்தீர்கள். இந்த வருடம் விக்ரம் குமாரோடு இணைந்துள்ளீர்கள். உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான இயக்குநர்களோடு எளிதாக வேலை செய்வதை விட்டு, உங்களுக்கு பரிச்சயமில்லாத இயக்குநர்களுடன் வேலை செய்வது ஏன்?
ஒரு கட்டத்துக்கு மேல் சிலரிடம் அதிகமான உரிமை எடுத்துக் கொள்வோம். அது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் கெட்டதும் கூட. மணிரத்னம், அஷுடோஷ், ஷங்கர் போன்றவர்களிடம் அது நல்ல விஷயம். ஏனென்றால் அவர்கள் எனக்கு புதிய சவால்களைத் தருகின்றனர். எப்படியும் இரண்டு வருடங்களுக்கு ஒரு திரைப்படம் தான் இயக்குகின்றனர். புதிய இயக்குநர்கள் புதிய விஷயங்களை கண்டறிய இடம் தருகிறார்கள்.
'முகம்மது' என்ற உங்கள் இரானிய படத்தின் நிலை என்ன் ? அதை நீங்கள் ஒப்புக் கொண்ட காரணம் என்ன?
வேலைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. படத்தொகுப்பு இன்னும் முடியவில்லை. இரானிய படங்களின் ரசிகன் நான். முக்கியமாக மஜித் மஜிதியின் படங்களுக்கு. ஒருநாள் இம்தியாஸ் அலி என்னைக் கூப்பிட்டார். யூடிவி நிறுவனத்திடம், மஜிதி, அவருடைய படத்தில் நான் வேலை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சினிமா வரலாற்றில் குறிப்பிட்டத்தக்க திரைப்படமாக அது இருக்கும்.
ஆனால் அந்தப் படத்துக்கு இசையமைப்பது எளிதாக இருந்திருக்காதே
அவரது எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகமாக இருந்தன. ஒருவகையில் அது நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் வேலை செய்யும் முறையை தெரிந்துகொள்ள விரும்பினேன். அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள், காட்சிகளை எப்படி எழுதுகிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். இரண்டு முறை இரானுக்கு பயணம் செய்துள்ளேன். இரண்டுமே அற்புதமான அனுபவமாக இருந்தன.
உலகம் முழுவதும் ஓய்வின்றி பயணம் மேற்கொள்ளுகிறீர்கள். உங்கள் மூன்று குழந்தைகளுடன் செலவிடம் நேரம் இருக்கிறதா?
நாங்கள் சேர்ந்து பல திரைப்படங்களை பார்ப்போம். குறிப்பாக 3டி அனிமேஷன் திரைப்படங்கள்.
உங்களுக்கும், உங்கள் அம்மாவுக்குமான பாசப் பிணைப்பைப் பற்றி சொல்லுங்கள்? அவரிடமிருந்து நீங்கள் கற்றதென்ன? ஆஸ்கர் மேடையிலேயே அவரைப் பற்றி நீங்கள் பேசினீர்கள்
அதுதான் வாழ்க்கையிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்வது. எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், எதற்காக குடும்பத்தில் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும் என தெரியும். அம்மா கடுமையாக உடல்நலம் குன்றி இருந்து, இப்போது தான் தேறி வருகிறார். அவர் உடல்நலம் தற்போது பரவாயில்லை. ஆனால் முன் இருந்தது போல இல்லை.
சென்னையின் அபிபுல்லா சாலையைச் சேர்ந்த ஒரு சாதாரண மாணவனான நீங்கள் தற்போது சர்வதேச அளவில் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளீர்கள். இதற்காக எப்படி உங்களை மாற்றிக் கொண்டீர்கள்?
வானிலையும், மண்டலமும் மாறும்போது அனைத்தும் மாறும். அங்கு 3 அடுக்கு உடைகள் அணிந்து கொள்வேன். ஸ்டூடியோக்களை பொருத்தவரை இங்கிருப்பது போன்ற வசதிகள் அங்கு எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. இசை குறிப்புகள் அனைத்தும் முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும். ஆனால் அதற்கேற்றார் போல சூழலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பழக்கப்பட எனக்கு 10 வருடங்கள் ஆனது.
நீங்கள் தனியாக இசையமைப்பதற்கு முன்னர் இளையராஜாவின் குழுவில் இசைக் கலைஞராக பணியாற்றியது அனைவருக்கும் தெரியும். இன்னமும் அவருடன் தொடர்பில் இருக்கிறீர்களா?
அவரை கடைசியாக ஓர் இசை விழாவில் சந்தித்தேன். நான் வெளிநாடுகளில் இருக்கும்போது விழாக்கள், திரையிடல்கள் என எங்காவது பல்வேறு இசையமைப்பாளர்களை அடிக்கடி எதேச்சையாக சந்தித்து வருகிறேன். இங்கு சென்னையில் என்னால் அப்படி வெளியில் செல்ல முடிவதில்லை. வேலை அல்லது குடும்பம் அல்லது என் இசைப்பள்ளி என எப்போதுமே ஏதோ ஒன்றில் மூழ்கியிருப்பேன். எனவே வெளியில் செல்ல நேரம் இல்லை. எங்களுக்கிடையே பரஸ்பரம் மரியாதை உள்ளது.
நீங்கள் அதிகம் புத்தகம் வாசிப்பதுண்டா?
(சிறிது நேரம் யோசித்துவிட்டு) கடைசியாக நான் படித்த புத்தகம், ஹண்ட்ரட் ஃபுட் ஜர்னி (Hundred Foot Journey) மற்றும் பீலே (Pele) படங்களின் திரைக்கதை புத்தகம். அவையும் புத்தகங்கள்தானே!
இசையைப் பொருத்தவரை தற்போது தமிழில் பல புதிய இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். நீங்களே புகழ்ந்துள்ள சந்தோஷ் நாராயண், மேலும் அனிருத், ஜி.வி.பிரகாஷ், இந்தியிலும் பலர் உருவாகியுள்ளனர். திறமையானவர்கள் கையில்தான் இசை இப்போது இருக்கிறது என சொல்லமுடியுமா?
இசையில் கண்டறிய நிறைய உள்ளது. வெறும் ஹிட் பாடல்களை மட்டுமே தரவேண்டும் என கேட்கக் கூடாது. காலத்தைக் கடந்த இசையைத் தர ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவருக்கென ஒரு விதியை வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தின் இசையை நாம் ஏன் இன்னும் விரும்புகிறோம்? ஏனென்றால் அவை காலத்தை வென்றவை. ரசிகர்களுக்கு இன்னமும் அவற்றுடன் ஓர் இணைப்பு உள்ளது. நான் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன். அதேதான் இளம் இசையமைப்பாளர்களும் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.
உங்கள் இசைப்பள்ளி தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான எதிர்கால திட்டம் என்ன?
புதிதாக ஒரு கட்டிடம் வேண்டும் என்பது பெரிய பணியாக இருந்தது. தற்போது அது கிடைத்துள்ளது. இசையைப் பற்றி தெரிந்துகொள்ள அது அற்புதமான இடமாக இருக்கிறது. சில நேரங்களில் அங்கிருக்கும் மாணவர்களைக் கண்டால் பொறாமையாக உள்ளது. ஏனென்றால் நான் வளரும்போது அப்படி ஒரு இடம் எனக்குக் கிடைக்கவில்லை. தனிப்பட்ட அடையாளத்தோடு மாணவர்கள் பொழுதுபோக்குத் துறையில் வேலை செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். முக்கியமாக மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
நேரம் கிடைக்கவில்லை என கூறுகிறீர்கள். தினசரி தொழுகை செய்ய நேரம் கிடைக்கிறதா?
அதுதான் எனக்கு உயிர்மூச்சு.
உங்கள் தினசரி வாழ்க்கை சமநிலையில் தானே இருக்கிறது?
நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து செய்து வரவேண்டும். நாளை செய்துகொள்ளலாம் என்பதற்கே இடமில்லை. அதைத்தான் நான் சமீப காலங்களில் உணர்ந்துள்ளேன். நாளை பிரார்த்தனை செய்து கொள்ளலாம், நாளை இசையமைக்கலாம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன். எதாவது செய்யவேண்டுமென்றால், இன்றே செய்ய வேண்டும்.
©தி இந்து, ஆங்கிலம்
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா


நன்றி -த இந்து



  • அவர் ஒரு சினிமா இசையமைப்பாளர் என்பதை தாண்டி அவரிடம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக அவருடைய மெண்டல் பாலன்ஸ். வாழ்க்கையையும் தொழிலையும் அவர் பார்க்கும் விதம். ஏனோ, அவரை பார்க்கும் போது எனக்கு தோனியின் நியாபகம் வரும். இருவருமே mr.கூல். வெற்றியை மூளைக்கும், தோல்வியை மனதுக்கும் எடுத்து செல்லாதவர்கள். தற்பெருமையை கிட்டே வர விடாதவர்கள். முக்கியமாக அதிகம் பேசாதவர்கள். ரஹ்மானின் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.
    about 8 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
       
    • Dilli Babu  
      இசைப்புயலின் இரானிய படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
      Points
      6140
      about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • நடராஜன்-மேட்டூர்அணை.  
        தமிழ் சினிமா வெற்றிடத்தை நிரப்ப 'சீக்கிரம்' வாருங்கள் ரகுமான் சார். தொடர்ந்து தங்களது இசையில் மெய்மறந்து பாடல்கள் கேட்க, பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்றும் உள்ளனர்.
        Points
        1465
        about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Sriramachandran Manickam at State Government 
          உங்கள் பேட்டி மிகவும் மனநிறைவை தந்தது. நன்றி.
          Points
          1575
          about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • சேரமான் Nadunilai  
            பக்குவப்பட்ட மனிதர் !
            Points
            9820
            about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Kmsdgl  
              பெரும் புதையல் தன இருப்பிலிருந்து புயலாய் கிளம்பி உயர்ந்து புவியை தனது இசை பிம்பத்தின் மென் சுழற்சியில் சுழல வைத்து மெய்மறக்க செய்துகொண்டிருந்து சற்றே ஓய்ந்தாலும் மீட்சி பெறலாம் ஆனால் வெளியாகிவிட்ட புயல் மீண்டும் தனது துவக்கமாகிய - தாய் இடப்புதையலை தேடி சென்றடைதல் சாத்தியமா 

            Sunday, September 14, 2014

            ஐ - ஷங்கரின் பாணியில் ஒரு த்ரில்லர் திரைப்படம்- விக்ரம் பேட்டி

            ஐ' படத்தின் கதை எதைப் பற்றியது என்று நடிகர் விக்ரம் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

            விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஷங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தின் இசையினை அர்னால்ட் வெளியிட இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 


            ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தமிழ் திரையுலக பிரபலங்கள் 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்.15ம் தேதி மாலை விழா நடைபெற இருக்கிறது. 


            இப்படம் குறித்து ஷங்கர் பல்வேறு பேட்டிகள் அளித்திருந்தாலும், நடிகர் விக்ரம் இப்படம் குறித்து எதுவுமே பேசாமல் இருந்தார். முதன் முறையாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், "'ஐ' என்றால் அழகு என்று அர்த்தம். விளம்பரம் மற்றும் மாடலிங் உலகம் குறித்து இப்படம் பேசும். ஒரு மாடல் உடைய கடுமையான உழைப்பும், வேதனையும் தான் படம். பிறக்கும் போதே மாடலாக வேண்டும் என்று இல்லாமல், நாயகன் எதிர்பாராத விதமாக எப்படி மாடலாகிறான், அதற்குப் பிறகு என்னவாகிறது என்பது தான் 'ஐ'. 


            இது ழுழுக்க முழுக்க ஷங்கரின் பாணியில் ஒரு த்ரில்லர் திரைப்படம் தான். ஒரு நடிகனாக, நடிப்பதற்கு எனக்கு நிறைய இடங்கள் இருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள். மூன்று முறை இப்படத்திற்காக எனது உடலமைப்பை மாற்றினேன். கதை மிகவும் பலமாக இருந்ததால், என்னுடைய கடுமையான உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். நான் இந்தப் படத்தை ரொம்ப ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன் " என்று விக்ரம் கூறியிருக்கிறார்.

            என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன்: பாடலாசிரியர் கபிலனின் ‘ஐ’ அனுபவங்கள்

            கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் விரும்பும் பாடலாசியர், கபிலன். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் மூன்று பாடல்கள் இவரது கைவண்ணத்தில் வருகிறது. ‘உன் சமையல் அறையில் உப்பா? சர்க்கரையா?’, ‘எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது’, ‘கரிகாலன் காலப் போல’ ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன?’ இப்படி கணக்கிட முடியாத வெற்றிப் பாடல்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் பாடலாசிரியர் கபிலன் ‘தி இந்து’ வுக்காக அளித்த கவித்துவப் பேட்டி.. 


            ‘ஐ’ படத்தின் பாடல்கள் எப்படி வந்திருக்கிறது? 


             
            ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானிடமும், ‘அந்நியன்’ படம் வழியே ஹாரிஸ் ஜெயராஜிடமும் என்னை அறிமுகப்படுத்தியவர், இயக்குநர் ஷங்கர். நான் அடுத்தகட்ட உயரத்துக்குச் செல்ல காரணமாக இருந்தவரும் அவரே. ‘ஐ’ படத்துக்காக 



            ‘‘என்னோடு நீயிருந்தால்
            உயிரோடு நானிருப்பேன்
            உண்மைக் காதல் யாதென்றால்
            உன்னை என்னைச் சொல்வேனே..
            நீயும் நானும் பொய்யென்றால்
            காதலைத்தேடிக் கொல்வேனே
            கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
            தேங்காய்க்குள்ளே நீர்போல
            உன்னை நெஞ்சில் தேக்கி வைப்பேனே...
            வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
            பூனை தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்குமா? 



            இப்படியான வரிகளோடு பயணிக்கும் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலை பெண் பாத்திரத்துக்கான சிறு மாற்று வரிகள் சேர்த்தும் மற்றொரு பாடலாக எழுதி யிருப்பேன். 



            இன்னொரு பாடல் சென்னை பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அந்த அனுபவம் வித்தியாசமாகவே இருந்தது. இந்தப் பாடல், வடசென்னையைச் சேர்ந்த காதலன் ஒருவன் தன் காதலியை வர்ணித்து பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வடசென்னை மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் குறிப்பெடுத்து அவர்கள் மொழியிலேயே பாடலை எழுதினேன். கொடக்கானல் மலை உச்சியில் ஷங்கருடன் அமர்ந்து இப்பாடலை எழுதினேன். பாடல் முழுவதும் தயாரானதும் இயக்குநர் ஷங்கர், ‘‘உங்களை உச்சத்துக்குக் கொண்டு போகப்போகிற பாடல் இது’’ என்றார். அந்த வரிகள்தான்.. 



            ‘‘நான் வண்ணாரப்பேட்டை
            நீ வெண்ணிலா மூட்டை
            ஒரு மாட்டுக்கொம்பு மேல
            பட்டாம்பூச்சிபோல..’’ இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். 


            இயக்குநர் ஷங்கரோடு நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் எப்படி? 

             
            எளிமையான வரிகளைப் பெறுவதில் இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அவருடன் அமர்ந்து பாடலுக்கான பல்லவியைப் பிடிப்பது ஓர் அழகான அனுபவமாக இருக்கும். என்னைக் கேட்டால் பல்லவி என்பது உயிருக்குத் தலை மாதிரி; ரயிலுக்கு இன்ஜின் மாதிரி. அது பிடித்தமாதிரி அமைந்துவிட்டால் அடுத்தடுத்து வரிகளைப் பிடிப்பது எளிது. ‘ஒரு ஊர்ல ஒரு ஆயா வடை சுட்டாங்களா!’ என்று ஒரு குழந்தைக்கு கதை சொல்வதைப்போல எளிமையாகப் பாடலுக்கான சூழலை விளக்குபவர், ஷங்கர். ஒரு பாடலை எப்படி படமாக்கத் திட்டம் என்பதில் தொடங்கி பென்சில் பிடித்து படம் வரைந்து விவரிப்பார். பாடலில் நாயகன், நாயகியின் அணிகலன், ஆடைகளின் வண்ணங்கள் இவற்றையெல்லாம் பகிர்வார். அந்த சூழலே நம்மை அற்புதமான மனநிலைக்குக் கொண்டுபோய்விடும்

            .
            ‘தெகிடி’ படத்தின் பாடலில் ஓர் இடத்தில் காதல் இரண்டெழுத்து என்று எழுதியிருக்கிறீர்களே? 

             
            ‘விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்’ என்று தொடங்கும் பாடல் அது.
            மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு…
            மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
            இனி நீயும், நானும் ஒன்றாய்ச் சேர்ந்தால் காதல் இரண்டெழுத்து…’ 



            இப்படித்தான் அந்தப் பாடல் வரிகள் நகரும். பலர் என்னிடம் அது எப்படி காதல் இரண்டெழுத்து? என நேரடியாகவும், சமூக வலைதளங்களின் வழியாகவும் கேட்கிறார்கள். சங்க இலக்கியத்தில் ‘கா’ என்பதற்கு சோலை என்ற ஒரு பொருள் உள்ளது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் காதலர்கள் சோலையில்தான் சந்திப்பார்கள். அடுத்து ‘த’ என்றால் தந்து பெறுதல். காதலர்கள் அன்பைத் தந்து பெறுபவர்களாச்சே. ‘ல்’ என்பது இல்லறம், இல்வாழ்க்கை, குடும்பம். இந்தப்படப்பாடலின் சூழலில் நாயகன், நாயகி இருவரும் காதலர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் அப்போது குடும்ப வாழ்க்கையைத் தொடங்காமல்தான் இருக்கிறார்கள். அந்த சூழலில் ‘காதல்’ இரண்டெழுத்து என்பது சரிதானே. 


            பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ண தாசன் போன்ற கவிஞர்கள் இருந்த சூழலைப் போல இப்போதும் பாடலாசிரியர்கள் மீது அதே மதிப்பு உள்ளதா? 


             
            இப்போது பாடலாசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். புதிதாக வருபவர்கள் தங்களைச் சரியாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இசை தெரியாதவர்கள் இசையமைப்பாளராக முடியாது. இன்றைக்கு வேறு துறையில் இருப்பவர்கள் பலர் பொழுதுபோக்காகப் பாடல் எழுதுகிறார்கள். அதற்குப் பெரிதாகத் தொகை எதுவும்கூட வாங்குவதில்லை. ஒரு கவிஞனிடம் அந்தப் பாடலைக் கொடுத்தால் அவன் வீட்டில் அடுப்பெரியும். இப்படிப்பட்ட சூழலுக்கு இடையே இன்று நல்ல பாடல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது. 



            அடுத்த உங்களது புதிய படைப்புகள்? 

             
            ‘குறில் நெடில்’, ‘நகர்ப்பறை’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும், ‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது’ என்ற கட்டுரைத் தொகுப்பும். எழுதி முடித்துத் தயாராக உள்ளன. இன்னும் வடிவமைப்பு உட்பட சில பணிகள் மட்டும் மீதமுள்ளது. 


            கவிஞர் வாலியின் பிரிவு தமிழ்த் திரைத்துறை யில் எந்தமாதிரியான வெற்றிடத்தை ஏற்படுத்தி யுள்ளது? 

             
            ஐந்து தலைமுறைக்குப் பாடல் எழுதிய கவிஞர். எம்.ஜி.ஆர் தொடங்கி சிம்பு, சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியவர். நடப்பு நிகழ்வுகளைக் கூர்மையாக வைத்திருந்தவர். கார்கில் யுத்தம், மின்வெட்டு, நிலக்கரி ஊழல் இப்படி எதையும் பாடல் வழியே பேசியவர். இறுதி நாட்கள் வரைக்கும் வாய்ப்புகள் அவரைத் தேடியே போனது. அவரது மறைவின்போது நான் எழுதிய வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன..
            கடவுள் இருந்திருந்தால்
            ஒரு விபூதி சாம்பலாகியிருக்காது. 



            உங்கள் பாடல் வரிகள் படத்தின் தலைப்பாக வரும்போது எப்படி உணர்வீர்கள்? 

             
            மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். சமீபத்தில்கூட ‘உன் சமையல் அறையில்’ என்கிற தலைப்பில் ஒரு படம் வந்தது. என்ன ஒரே ஒரு வருத்தம் மட்டும் உண்டு. ஒரு கவிஞன் எழுதிய பாடல் வரிகளைப் பயன்படுத்தும்போது அந்தக் கவிஞனை அழைத்து அந்தப்படத்தில் பாடல் எழுதச் சொல்லலாமே என்பதுதான் அது. 









            thanx - the hindu

            Thursday, July 03, 2014

            ’ஜோதா அக்பர்’ , ஏ.ஆர்.ரஹ்மான்,நெய்தலில் ஒரு முல்லை’

            11ம் வகுப்பு படிக்கும் பொது ஒரு மாணவன் எழுதிய கவிதை. இப்பொது அவர் வயது 32. அந்த மாணவனின் பெயர் மஷூக் ரஹ்மான். 



            இசையுலகில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியவர்கள் எப்போதுமே, தனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தெரியும் என்று வெளிப்படுத்தி கொள்வதில்லை. ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றி விட்டு, தற்போது ICTஐசிடி அகாடெமி ஆப் தமிழ்நாடு என்னும் நிறுவனத்தின் கல்வி சார்ந்த காலாண்டு பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றுகிறார் மஷூக் ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மானுடன் பழக்கம், அவரது ஆசைகள் என்று அவரிடம் உரையாடியதில் இருந்து சில துளிகள்.. 



            ஏ.ஆர்.ரஹ்மானுடன் உங்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது...


             
            ’அலைபாயுதே ’படம் பார்க்கும் போது என் பெயரும் திரையில் வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வருடத்தில் 1000 கவிதைகளை எழுதினேன். நிறைய பாடல்களை எழுதிய பின் அதிலிருந்து இரண்டு மூன்று கவிதைகளை தேர்வு செய்து இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் முகவரி அறிந்து கொரியர் செய்து வந்தேன். 




            2004ல் இசைப் புயல் அவர்களை யாருடைய பரிந்துரையுமின்றி இறையருளால் சந்தித்தேன். வாய்ப்பு கேட்டு நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு உடனடியாக பதில் அனுப்பியதுமல்லாமல் குறைந்த கால அவகாசத்தில் அவரை நேரில் சந்திக்கவும் அனுமதித்தார். நேரில் சந்தித்தபோது என் கவிதைகளைப் படித்துவிட்டு, நன்றாக உள்ளது, காத்திரு உனக்கான வாய்ப்பு வரும்போது அழைக்கிறேன் என்று கூறினார். 



            உங்களது ஆரம்ப கால முயற்சிகளுக்கு நிறைய தடங்கல்கள் இருந்திருக்குமே?


             
            தமிழில் தட்டச்சு கற்று கொண்டு கவிதைகளை டைப் செய்து வைத்தேன். பல முயற்சிகளின் விளைவாக தமிழ்நாடு இசை நாடகத்துறை அமைச்சகத்தின் அப்போதைய மேலாளர் ஜெயக்குமார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. செய்தித்தாள்களில் ‘இன்றைய நிகழ்ச்சிகள்’ பகுதியைப் பார்த்து இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சொன்னார். அதன்படி பார்த்து, ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் 40 வருடங்களுக்கும் மேலாக நடத்திவந்த ’கவிதை உறவு‘ என்ற பழமை வாய்ந்த இலக்கிய மன்றத்தின் மாதாந்திர போட்டியில் கலந்துகொண்டு பூவை செங்குட்டுவன் அவர்கள் கையால் இரண்டாவது பரிசு பெற்றேன். அம்மன்றத்தில் மேலும் பல முன்னணி எழுத்தாளர்களிடமும் பரிசு பெற்றுள்ளேன். 




            புத்தகம் வெளியிட வேண்டும் என்று சொன்னால், சினிமாவில் நுழைந்திருந்தால் தான் புத்தகம் வெளியிடுவோம் என்றனர் சிலர். புத்தகம் வெளியிட்டால் சினிமாவில் நுழையலாம் என்று மேலும் சிலர் கூறினர். மிகவும் போராடித் தான் திரைத்துறையில் நுழைய முடிந்தது 



            ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து நீங்கள் பணியாற்ற பாடல்களைப் பற்றி....


             
            2007ல் ‘ஒன் லவ்’ என்ற இசைப் புயலின் ஆல்பத்திலும், ’ஜோதா அக்பர்’ படத்தில் ‘க்வாஜா எந்தன் க்வாஜா’ பாடலையும் எழுதினேன். என் நெடுநாளைய கனவு நிறைவேறியது. அதாவது என் முதல் பாடலை இசைப் புயல் ஏ. அர். ரஹ்மனுக்கே எழுத வேண்டும் .அதை அவரே பாடவும் வேண்டும் என்பதுதான் அக்கனவு. இறைவனுக்கு நன்றி. 



            நீங்கள் நிறைய பாடல்கள் எழுதுவது இல்லையே.. என்ன காரணம்?


             
            இசைப்புயல் ஏ. அர். ரஹ்மான் அவர்களிடம் நான் வைத்த கோரிக்கையே, கருத்துள்ள பாடல்கள், ஆன்மீகப் பாடல்கள் மற்றும் நம் நாட்டின் பெருமையைக் கூறும் பாடல்கள் மட்டும் எழுத விருப்பம் என்பதுதான். காலம் என்னைத் தேடிவரும் என்று நம்புகிறேன். புகழனைத்தும் இறைவனுக்கே! 




            இப்போதுள்ள பாடலாசிரியர்கள் பற்றி உங்களது கருத்து என்ன?


             
            வளமான வார்த்தைகள் ஆழமான சிந்தனைகள் புதிய கவிஞர்களிடம் உள்ளது. நாட்டின் பெருமைகளை எடுத்துரைக்கலாம். நல்ல கருத்துகளை சொல்லலாம். பேச்சாளர்கள் பெருகிவிட்டார்கள் ஆனால் தரமான பேச்சு குறைந்திருக்கிறது . கருத்து சரியா தவறா என்று பார்ப்பது இல்லை. பார்வை சிதைப்பதை வெறுக்கிறேன். திரை இசையில் குடியை மையமாக வைத்து பாடல்கள் வருகின்றன. என்னால் அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. நமக்கென்று ஒரு நிலையான இடம் பிடிக்க வேண்டும். அப்போது தான் நல்ல கருத்துக்கள் எளிதில் சென்றடையும். 


            உங்களது அடுத்த திட்டம் என்ன.. தொடர்ந்து திரையுலகமா.. கவிதை தொகுப்பா?

             
            நான் எழுதியுள்ள அடுத்த புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் கைகளால் வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்காக வழிநடத்த யாராவது முன்வந்தால் நான் மிகவும் உதவியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஏ. அர். ரஹ்மானை சந்தித்ததை போல இவரையும் சந்திப்பேன் 


            ’நெய்தலில் ஒரு முல்லை’ என்ற கவிதை நாட்டுப்பாடல். முற்றிலும் நெய்தல் மற்றும் முல்லை இரண்டு நிலங்களின் மரபுகளைக் கொண்டது இந்த கவிதை நாட்டுப்பாடலை எதிர் கால திட்டமாக ஒரு அனிமேஷன் படம் அல்லது அனிமேஷன் குறும்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளேன் அதை செய்ய முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருகிறேன்.

            Sunday, February 16, 2014

            ஷங்கரின் 'ஐ' வெளியீடு - வீடியோ திட்டம்

            ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.
            விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார்.



            படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை கூட ஷங்கர் வெளியிடவில்லை. இப்படத்தினைப் பற்றிய செய்திகள் எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.



            இந்நிலையில், படத்தினை விளம்பரப்படுத்த படம் உருவான வீடியோ பதிவே போதும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர். பேட்டிகள் எல்லாம் கொடுத்துவிட்டு, படம் உருவான விதத்தினை டிவி சேனல்களில் கொடுத்தாலே போதும், மக்கள் ஆச்சர்யப்பட்டு விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.


            ஏனென்றால், விக்ரமின் உழைப்பு, பாடல்களுக்காக செட்கள் போடப்பட்ட விதம், பாடல்களுக்கு விக்ரமிற்கு போடப்பட்ட மேக்கப், சண்டைக் காட்சிகள் உருவான விதம் என எல்லாவற்றையுமே வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.



            இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள். ஆகையால் பேட்டி கொடுத்துவிட்டு, இந்த வீடியோவை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.

            a





            a


            a










            a