Showing posts with label அப்சரஸ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label அப்சரஸ் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, May 30, 2014

அப்சரஸ் - சினிமா விமர்சனம் 32+ , 34 + , 36 +


  அலைகள் ஓய்வதில்லை நாயகி ராதா  தன்  அலை ஓய்ந்தாலும்  தன் வாரிசு கள் அலை ஓயக்கூடாதுன்னு  முடிவு பண்ணி   கார்த்திகாவை  மலையாளத்தில்  முதல் முதலாக அறிமுகப்படுத்திய படம் தான் மகர மஞ்சு . இதை அப்படியே தமிழ் ல வெளியிட்டா    மகர ராசி மஞ்சு வா?ன்னு  தமிழன் நாக்கு மேல பல்லைப்போட்டு கேட்டுடுவான், அதனால கொஞ்சம்  கிளுகிளுப்பை சேர்த்து அப்சரஸ் அப்டிங்கற  டைட்டில்ல தமிழ் ல டப் பண்ணி இருக்காங்க .

ஓப்பன் பண்ணினதும்  நமக்கு  2 அதிர்ச்சி காத்திருக்கு . இது  ஓவியர்  ரவிவர்மாவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பு. கிட்டத்தட்ட உண்மைக்கதை . அடுத்து படத்தோட  ஹீரோ  மணிரத்னத்தின்  பிராண்ட் ஒளிப்பதிவாளர்  சந்தோஷ் சிவன்  தான் ஹீரோ ,  மது அம்பாட் தான் படத்துக்கு  கேமரா மேன்


படத்தோட  கதை  என்ன ? ஓவியர் ரவி வர்மா உலகத்தில் வரைய 1008    இயற்கை காட்சிகள்  இருந்தாலும் ,  கோடிக்கணக்கில் ஆம்பளைங்க  இருந்தாலும்  அதை  எல்லாம் கண்டுக்காம  பொண்ணுங்களா தேடிப்பிடிச்சு வரையறாரு. எதுக்குன்னா  ஓவியம்  வரையும்  போது   முகத்தை  இப்படி வை , முந்தானையை அப்டி  சொருகு அப்டினு கரெக்சன் பண்றேன்கற பேர்ல   பிகரை கரெக்ட் பண்ணிடலாம் பாருங்க . இந்த மாதிரி  உயர்ந்த லட்சியத்தோட   அண்ணன்  ஓவியம் வரையறாரு. 




 இவர்  ஓவியம் வரைய மாடலா எந்தப்பொண்ணு வருதோ அந்தப்பொண்ணு  கூட குடும்பம் நடத்தி அந்தப்பொண்ணை  குடும்பப்பொண்ணா ஆக்கிடும் நல்லவர் . ஆனா  மேரேஜ் மட்டும் பண்ணிக்க மாட்டார் . ஏன்னா மேரேஜ் பண்ணீனா சம்சாரத்துக்கு சமைச்சுப்போடனும் , சம்பாதிச்சுத்தரனும், ஆஃபீஸ் ல டிராப் பண்ணனும் . இத்தனை பிக்கல்  பிடுங்கல்  இருப்பதால்  அண்ணன்  வந்தமா  ஓவியம் வரைஞ்சமா ,  ஒரு டைம்  குடும்பம், நடத்துனமா  போனமா , அடுத்த  பிராஜெக்ட்  ரெடி பண்ணமா? அப்டினு   இருக்காரு . 

இந்த  மாதிரி அவர்  3 பொண்ணூங்களை கரெக்ட் பண்ணினது  எப்படி? என்பதே  கதை .  இது என்ன  ஒரு மாதிரி  கதையா இருக்கேனு யாரும்   சொல்லிடக்கூடாதுன்னு   ஒரு வரலாற்றுக்கதையை   ஹீரோயினுக்கு  சொல்வது  போல்   சொல்லி சமாளிச்சு இருக்காங்க . 


ஹீரோவா சந்தோஷ் சிவன் .  மனுசன்  ரொம்ப சந்தோசமா  நடிச்சிருப்பார் போல . இவருக்கு   3 பேர்  கூடவும்  குஜாலா  இருக்கவே நேரம்  போதல . எங்கே போய்  நடிக்க ?  அப்டியே நடிச்சாலும்   யார் பார்க்கப்போறாங்க ? 




 நாயகிகள்  3 பேர் . அடர்த்தியான   புருவ அழகி  நித்யா மேனன் . இவர்  தான் ஓப்பனிங்க் பவுலிங்க் விமன் .  முன் பின் அறிமுகமே இல்லாத   ஓவியர்   சேலையை அட்ஜஸ் பண்ணி அப்புறம் என்ன என்னமோ செய்யும்போது  கூட தடுக்காம ஜஸ்ட் வெட்கம் மட்டும் படும் நல்ல கேரக்டர்  ரோல் . சிறப்பா  செஞ்சிருக்கார் . கேரளா  ஜரிகைகாட்டன் சேலையில்  இவர்   தேவதை மாதிரி  இருக்கிறார் 


 அடுத்தது   பவுர்ணமி அன்னைக்குப்பார்த்தாலும் சரி , அமாவாசை அன்னைக்குப்[பார்த்தாலும் சரி  பரி பூரண அழகு கொட்டும் உதட்டழகி  பூரணா . இவருக்கு காட்சிகள்  கொஞ்சமே . தமிழன்  புரிஞ்சுக்குவான் என நினைக்கிறேன் 

 கடைசியா   க்ளைமாக்ஸ் கோல்  போடுவது  வில் போன்ற  இயற்கையா? செயற்கையா? என கணிக்க முடியாத  அபூர்வ  புருவ அழகி கார்த்திகா . இவர் வரும்  காட்சிகள்  எல்லாம்  ஒளிப்பதிவாளர்   கேமராவை  க்ளோசப்பில் இடையில் ஸ்டேண்ட்  போட்டு  நிறுத்தி  விடுகிறார் . 





 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. மது அம்பாட்டின்    ஒளிப்பதிவு  தான்   படத்துக்குப்பெரிய  தூண் . பிரமாதப்படுத்தி  இருக்கிறார். அந்தக்கால கட்டத்தை   கண் முன் கொணரும்  இயற்கை அழகுடன் பெண்கள் , ஆறு , கட்டிடங்கள் , ஓடைகள்  என கேமராவுக்கு  தீனி  போடும் வாய்ப்பு 


2  போஸ்டர்  டிசைனில்  3 நாயகிகளைப்போட்டு  தமிழனைக்குழப்பாம்ல்   கார்த்திகாவை மட்டுமே டார்கெட்டாக  வைத்தது 


3   திரைக்கதைக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்   அசால்ட்டா  , ரொம்ப லைட்டா  கதை  சொன்னது 


4  ரசிகர்களின்  பொறுமையை   ரொம்ப  சோதிக்காம   ஒண்ணே   முக்கால் மணீ நேரத்தில் படத்தை  முடித்தது  


5  இது  ஏதோ கலைப்படம் , உலகப்ப்டம்னு எல்லாரையும்  நம்ப  வெச்சு கால்ஷீட் வாங்கிய சாமார்த்தியம் . இது  கிட்டத்தட்ட  ஒரு கில்ம்பாப்படம்  தான்

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  அந்நியன்   விக்ரம்  மாதிரி கார்த்திகா  2 வேறு  பர்சனாலிட்டில   கேள்வி கேட்டு பதில் சொல்லும்  காட்சியில்  உப்பு சப்பு  உரைப்பு 1 %  கூட இல்லை . சம்பளம் தர்லையா? 


2 உலகத்தில்  வேறு ஆண்களே  இல்லாத மாதிரி எல்லாப்பொண்ணுங்களும் ரவி வர்மா  மேல வந்து வந்து  விழுவது ஏனோ ?  ( ஸ்டொமக் பர்னிங்க்  தான் ) 


3  சீதை , சரஸ் வதி  போன்ற   சாமி ஓவியங்கள்   விதவை , தாசி  , வேசி இவங்களை மாடலாக  போட்டு  வரையப்பட்டவை தான்  என்பது  போன்ற வசனங்கள் இந்துக்கள் மனதைப்புண் படுத்துமே , எப்படி சென்சார்  ல விட்டாங்க  ? 


4 அந்த  லேடிக்கு  விதிக்கப்ட்ட சாபப்படி    ஹீரோ வை மின்னல் வெளிச்சத்தில்  நிர்வாணமா பார்த்தா   தேவலோகத்துக்கு  ட்ரான்ஸ்ஃபர்  கிடைக்கும் . இது  பாப்பாவுக்கு தெரிஞ்சும் ஆல்ரெடி பல டைம் இருட்டுல  பார்த்த  ஹீரோவை மின்னல் வெளிச்சத்தில்  ஏன் அந்த பர்ட்டிகுலர்  ப்ளேஸ் ல பாக்கனும் ? அது  என்ன  லிங்கா  படமா?  


 

 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஒருவரோட  மரணம் நிச்சயிக்கப்பட்டதுன்னா அது எப்படி  நடக்கும் ? என்பதும் ஆல்ரெடி நிச்சயிக்கப்பட்டிருக்கும் 


உனக்கு வரையத்தெரியும்  , எனக்கு  வியாபாரம் தெரியும் , நாம ரெண்டு  பேரும் சேர்ந்தா   சம்பாதிக்கலாம்


3 இந்தியக்கலாசாரம் மாறாத  எத்தனையோ  பெண்களைப்பார்த்த ஒரே ஆள் நீங்க  தான் 






படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1. புருவ அழகி கார்த்திகா வின் மகர மஞ்சு ( அப்சரஸ்) ,தாராபுரம் பெண் இயக்குநர் ன் பூவரசம்பீப்பி # இன்றைய டார்கெட் @ திருச்சி ி

2. ரவிவர்மன் உண்மைக்கதை னு டைட்டில் போடறாங்க.அய்யய்யோ .அப்போ இது சைவப்படமா? மாட்டிக்கிட்டமா? # மகரமஞ்சு (அப்சரஸ்)

3. ஹீரோயின் நித்யா மேணன் மல்லிகைப்பூச்செடில இருந்து 36 உதிரி மல்லிகையை 10 நிமிஷமா பறிச்சுட்டே இருக்கு.இது ஆர்ட் பிலிமா? ஏதாவது குறியீடு ?

4. ஓவியர் ரவிவர்மர் ஓவியம் வரையறதைத்தவிர மத்த எல்லா வேலையும் செய்யறாரு # மகரமஞ்சு

5. ஹீரோயின் மழைல நனைஞ்சுக்கிட்டே ஹீரோ வீட்டுக்கு வருது.அது கைல ஒரு டர்க்கி டவல் கொடுத்தா போதாதா? ஹீரோவே துவட்டி விட்டுட்டு இருக்காரு 


6. கார்த்திகா இன்ட்ரோ.புருவத்தை புல்லா ஷேவிங் பண்ணி ஐ டெக்ஸ் மையால வரஞ்சி வெச்சிருச்சோ?

7. நடு நிசி 12 மணிக்கு பேய் மாதிரி ஹீரோ வீட்டுக்கு வரும் நாயகி " உங்களுக்குப்பிடிக்கலைனு சொன்னா நான் திரும்பிப்போய்டறேன்"குது

8. படம் போட்டு ஒரு மணி நேரம் ஆகுது.இப்போ தியேட்டர்க்குள்ளே ஒரு காதல் ஜோடி.ஏன் லேட்? னு கேட்கலாமா ?

9. ஒளிப்பதிவு மது அம்பாட்.ஆனா ஒரு பய கேமரா வை கவனிக்கலை

10 முதல் மரியாதை ல ராதா வை ரசிச்ச அதே கண்ணால ராதா மகள்கள் கார்த்திகா ,துளசியை யும் எந்த சங்கோஜமும் இல்லாம ரசிப்பவன் தான் தமிழன்






சி பி கமெண்ட் -மகர மஞ்சு ( அப்சரஸ் ) - மலையாளம் = 3 நாயகிகள் நடிச்ச கிட்டத்தட்ட ஒரு கில்மாப்படம் - ரேட்டிங்க் =2.25 / 5 ( 0.75 * 3 = 2.25)


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =40 ( இதுக்கு நோ விமர்சனம்)





குமுதம் ரேட்டிங்க் = ok


திருச்சி ஊர்வசி




திருச்சி ஊர்வசி
Embedded image permalink
a




டிஸ்கி -

பூவரசம்பீப்பி - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/05/blog-post_6603.html