Friday, June 26, 2026

MAA BEHEN (2026)-ஹிந்தி/தமிழ் - சினிமா விமர்சனம் (பிளாக் காமெடி க்ரைம் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்

 

திரை அரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட் பிளிக்சில் வெளியாகி இருக்கும் படம்.4/6/2026 முதல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.


               மாதுரி தீக்சித்,திரிப்தி டிம்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப்படம் ஒரு டார்க் ஹியூமர் க்ரைம் திரில்லர் மூவி.படத்தின் டைட்டிலுக்கு அம்மாவும் சகோதரியும் என்று அர்த்தம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு விதவை.ஒரு காலனியில் இருக்கும் வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார்.இவர் ஒரு டாஸ்மாக் பாரில் பணி செய்கிறார்.இவருக்கு இரண்டு மகள்கள்.மூத்த பெண்ணுக்குத்திருமணம் ஆகி விட்டது.இளைய பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.


நாயகி வேலை செய்யும் பாரில் கேஷ் கவுண்ட்டரில் இருந்து ஒரு தொகையை வீட்டுக்கு எடுத்து வந்து விடுகிறார்.


நாயகி வீட்டுக்கு எதிர் வீட்டில்  வசிக்கும் வில்லன் அந்த விஷயத்தைத்தெரிந்து கொண்டு நாயகியை மிரட்டுகிறான்.


வில்லனுக்கு மனைவி,மகள் உண்டு.மகளுக்கு இன்னமும் இரண்டு நாட்களில் திருமணம் நடக்க இருக்கிறது.

நாயகி வில்லனுக்கு மெசேஜ் அனுப்புகிறாள்.அதை நம்பி வில்லன் நாயகி வீட்டுக்கு வருகிறான்.ஒரு அசம்பாவிதம் நடக்கிறது.

உடனே நாயகி தன் இரு மகள்களுக்கும் போன் பண்ணி தன் வீட்டுக்கு வந்து தன்னைக்காப்பாற்றும்படி கூறுகிறாள்.மகள்களும் அங்கே வர இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட் டாக்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகி ஆக தேசாப் படத்தின் மெகா ஹிட் பாட்டு ஏக் தோ தீன் புகழ் மாதுரி திக்சித் அழகாக நடித்திருக்கிறார்.59 வயது ஆனவர் மாதிரியே தெரியவில்லை.திரிஷாவின் அம்மா போல இன்னமும் இளமையாக இருக்கிறார்.நன்றாக நடித்தும் இருக்கிறார்.


நாயகியின் முதல் மகளாக  திரிப்தி டிம்ரி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.இளைய மகளாக தர்னா துர்கா துடுக்குத்தனமாக நடித்திருக்கிறார்.


இவர்கள் இருவரும் எலியும் ,பூனையுமாக அடித்துக்கொள்வது ஜாலியாக இருக்கிறது.

வில்லன் ஆக ரவி கிஷன் நடித்திருக்கிறார். பெரிய அளவில் கவரவில்லை.

வில்லனின் மனைவியாக கீதாஞ்சலி குல்கர்னி பிரமாதமாக நடித்திருக்கிறார்.

நாயகியின் முதல் மகளின் முன்னாள் காதலன் ஆக இப்போது இன்ஸ்பெக்டர் ஆக வரும் அருணோதயா சிங்க் சிரிக்க வைக்கிறார்.

நாயகியின் முதல் மகளின் கணவனாக வரும் ஜதின் சர்மா குறைவான நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பு.

நாயகியின் இளைய மகளின் அப்பாவாக அதாவது நாயகியின் இரண்டாவது கணவராக பாரேஷ் ரவால் பரிதாபத்தை வர வைக்கும் நடிப்பு.

மற்ற சின்ன சின்னக்கதாபாத்திரங்களின் நடிப்பும் ஓக்கே ரகம்.

பாடல்களுக்கான இசையை இருவரும் ,பின்னணி இசையை வேறு இருவரும்  இசைத்திருக்கிறார்கள்.5 பாடல்களில் 2 தேவலாம் ரகம்.பின்னணி இசை கச்சிதம்.


ஒளிப்பதிவாளர்கள் இருவரும் தங்களுக்குக்கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார்கள்.


நாயகி,மகள்களின் க்ளோசப் ஷாட்ஸ் அழகு.

தீபிகா கல்ரா வின் எடிட்டிங் கில் படம் 127 நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதியில் கடைசி 20 நிமிடங்கள் மிக மெதுவாக நகர்கிறது.

பூஜா டோலனி திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் சுரேஷ் திரிவேணி




சபாஷ்  டைரக்டர்

1 தனிமையில் வாழும் விதவையை சமூகம் எப்படிப்பேசும் என்பதை ஒரு ரிப்போர்ட்டர் பாணியில் அவ்வப்போது வர்ணிக்கும் ஐடியா குட்.

2 நாயகியை வில்லி மாதிரி முதல் பாதியில் சித்தரித்து பின் பாதியில் அவர் படும் கஷ்டங்களை விவரிக்கும் விதமும் அருமை.

3 நாயகியின் முதல் மகளது திருமண வாழ்க்கையில் வேலைக்காரியாக நடத்தப்பட்டதைக்கணவனிடம் சுட்டிக்காட்டிப் பொங்கும் காட்சியில் உனக்கும் ,உன் சகோதரர்கள் மூவருக்கும் இதுவரை 2 லட்சம் சப்பாத்திகள் சுட்டுப்போட்டிருக்கேன் எனப்பொங்குவதும் பிரமாதம்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 டார்லிங்க்ஸ்(2022) ,ஹசீன் தில்ருபா(2021) ஆகிய படஙகளின் திரைக்கதையை நினைவுபடுத்துகிறது


2 வில்லன் கொலையானதாக முதலில் காண்பித்து பின் அவன் உயிருடந்தான் இருக்கிறான் என ட்விஸ்ட் வைத்த பின் படத்தில் விறுவிறுப்பு இல்லை.


3 போலீஸ் ஆபீசர் இப்படி ஒரு மஞ்சள் மாக்கானாக இருப்பது சிரிப்பு


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த காமெடி க்ரைம் ட்ராமா,பெண்களுக்குப்பிடிக்கும்.படத்தில் வரும் ஆண் கேரக்டர்கள் எல்லாமே. வில்லத்தனம்  செய்வதால் ஆண்களுக்குப்பிடிக்காது.ரேட்டிங். 2.5/5




Thursday, June 25, 2026

PEDDI (2026)-தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்போர்ட்ஸ் ஆக்சன் ட்ராமா)

        

    பெத்தி என்பது நாயகனின் பெயர்.பலரும் பட டைட்டிலை பெட்டி என்று தவறாக உச்சரிக்கிறார்கள்.டைட்டிலில்  Bedhi என வந்திருக்க வேண்டும்.ஏ ஆர் ரஹ்மான் இசையால் இந்தப்படம் அகில இந்திய அளவில் கவனம்  பெறுகிறது.அந்நியன் படத்தில் விக்ரம் 3 வித கெட்டப்களில் வந்த மாதிரி இதில் ராம் சரண்  3 விதமான உடல் அமைப்புடன் வருவது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு.அவரது உழைப்பு  வின் (WIN)ஆனதா?வீண் ஆனதா? பார்ப்போம்      

2021ம் ஆண்டில் உப்பேண்ணா என்ற ஹிட் படத்தைக்கொடுத்த புஜ்ஜி     பாபு சனாவின் அடுத்த படம் தான் இது.தன்      முதல் படத்துக்காக  நேஷனல் பிலிம் அவார்ட்,சிமா அவார்ட்,சாக்சி எக்சலன்ஸ் அவார்ட் வென்றவர்.


ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை நடக்கும் கால கட்டம் 2016.கதைக்களம் ஆந்திரா வில் விஜயநகரம் என்னும் (கற்பனை)கிராமம்.


140 கோடி மக்கள்  தொகை கொண்ட இந்தியா ஒலிம்பிக்கில் 2 தங்கப்பதக்கங்கள் மட்டுமே  வாங்கியதால் கடுப்பான விளையாட்டுத்துறை அமைச்சர்  ஒரு மீட்டிங் போட்டு திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்கிறார்.


அமைச்சர் அறிவுறுத்தலின்படி விளையாட்டு வீரனைத்தேடிப்போகும்போது நாயகனைப்பற்றி ஆச்சரியமான உண்மைகள் தெரிகிறது.


மல்யுத்தம்,ஓட்டம்,கிரிக்கெட் ஆகிய மூன்றிலுமே சாம்பியன் ஆக இருக்கிறார் நாயகன்.ஆனால் அவர் குடி இருக்கும் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை.ரயில் நிற்பதில்லை.ரயில்வே டிராக் ஊரில் இருந்தும் பயன் இல்லை.அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.தனக்கும் ,தன் சொந்த ஊருக்கும் ஒரு அடையாளத்தை உருவாக்க நாயகன் நினைக்கிறார்.அதற்காக அவர்   தேர்ந்தெடுத்த  ஊடகம் தான் விளையாட்டுத்துறை.

மூன்று துறைகளில் ஜாம்பவானாக இருக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.இதற்குப்பின் நாயகன் என்ன செய்தார் ?என்பது மீதித்திரைக்கதை.


நாயகன் ஆக ராம் சரண் அற்புதமான அர்ப்பணிப்பு,உழைப்பு கலந்த பங்ககிப்பு அருமை.குறிப்பாக குஸ்தி சண்டைக்காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.ரன்னிங் மேன் ஆக ஒரு வித உடல் அமைப்பு,குஸ்தி பயில்வான் ஆக வேறு வித உடல் அமைப்பு,கிரிக்கெட் வீரர் ஆக புது வித உடல் அமைப்பு என அவர் காட்டி இருக்கும் வித்தியாசம் அபாரம்.


நாயகி ஆக ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்.இவரது கேரக்டர் டிசைன் சரி இல்லை.நடிக்க வாய்ப்பும் இல்லை.கவர்ச்சிக்காக மட்டுமே ஊறுகாய் போல பயன்படுத்தி இருக்கிறார்கள்.


சார்பேட்டா பரம்பரை படத்தில் பசுபதி ஏற்று நடித்த ரோல் சிவராஜ் குமார் ரோல்.குஸ்தி வாத்தியாராக கலக்கி விட்டார்.

பொமன் இராணி,திவ்யேந்து சர்மா,ஜகபதிபாபு,ஜான் விஜய்,அஜய் கோஸ்,ஹரீஸ் பெரோடி,உபேந்திரா ,ஸ்ருதிஹாசன் என மற்ற அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார்கள்.

ஏ ஆர் ரஹ்மானின் இசையில் நான்கு பாடல்களும் அருமை.குறிப்பாக சிக்கிரி சிக்கிரி மெகா ஹிட்.தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி கமர்ஷியல் மசாலா பாணியில் இசை அமைத்து இருக்கிறார்.பின்னணி இசையும் நன்று.


ஒளிப்பதிவு ஆர் ரத்தினவேலு.குஸ்தி சண்டைக்காட்சியில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள்.

நவீன நூலியின் எடிட்டிங் கில் படம் 189 நிமிடங்கள் ஓடுகிறது.ரொம்பவே நீளம்.ஷார்ப் ஆக 150 நிமிடங்களில் முடித்திருக்கலாம்.

ஐந்து நபர்களின் உதவியுடன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்  புச்சி பாபு சனா



சபாஷ்  டைரக்டர்

1 ஆக்சன் சீக்வன்ஸ் அனைத்தும் அதகளம்

2 நாயகனின் அர்ப்பணிப்பும் ,உழைப்பும் அபாரம்.கமல்,விக்ரம்,சூர்யா இவர்களைத்தாண்டிய உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

3 ஜெகபதி பாபுவின் கேரக்டர் டிசைன் நடிப்பு. அற்புதம்.இதுவரை அவர் இப்படி ஒரு கேரக்டர் அவருக்குக்கிடைத்ததே இல்லை.

4. ஏ ஆர் ரஹ்மானின் இசை யில் பாடல்கள் ஹிட்


  ரசித்த  வசனங்கள் 

1 உங்க ஊருக்குத்தான் இப்போ ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சே?எதுக்கு இவ்ளோ தூரம் நடந்தே கூட்டிட்டு வந்தே?


அப்போதான் சார் நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் என உங்களுக்குத்தெரியும்


2  ஏரியாக்காரங்களுக்குப்"பெட்டி" கோயிலில் இருக்கும் கடவுள் இல்லை,கிரவுண்டில் இருக்கும் கடவுள்

3  ஆட்டம் தாம் ல என் திமிரு

4. ஆட்டத்தில் ஜெயிப்பது எனக்கு முக்கியம் இல்லை.ஆட்டத்தில் உயிர் இருக்கனும்

45  அவனுக்கு நல்லா ஆடத்தெரிஞ்சு இருக்கலாம்,ஆனா ஆட்டுவிப்பது நாம் தான்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கதை,திரைக்கதை இரண்டுமே ஒரு சரியான பாதையில் பயணிக்காமல் தறிகெட்டு ஓடுகிறது

2 நாயகியின் கேரக்டர் டிசைன் மகா மட்டம்.படம் முழுக்க அவருடன் எப்போதும் 10 தோழிகள் வருகிறார்கள்.அனைவரும் தாவணி அணிந்து கண்ணியமாய்த்தோன்றும்போது நாயகி மட்டும் தாவணி அணியாமல் வருகிறார்.நாயகன் நாயகிக்கு தாலி கட்டவில்லை,நாயகி தனக்குத்தானே தாலி கட்டிக்கொள்கிறார்,ஆனால் தாவணி கட்டவில்லை

3. நாயகனின் கேரக்டர்  டிசைனும் சரி இல்லை.நாயகியிடம் காதலை சொல்லும்போது " சில பேர் காதலை பூக்கள் கொடுத்து சொல்வார்கள்,சில பேர் காதலை பரிசு தந்து சொல்வார்கள்.ஆனால் நான் முத்தம் கொடுத்து காதலை சொல்கிறேன் என்கிறார் முன் பின் அறிமுகமே இல்லாத ஒருவர் முத்தம் தந்தால் போலீசில் தான் புகார் தருவார்கள் பெண்கள்.

4 படத்தின் ரன்னிங் டைம் 189 நிமிடஙகள்.ரொம்பவே நீளம்.எமோஷனல் கனெக்ட்டே இல்லை.எப்பத்தான் படத்தை முடிப்பாங்க என சலிக்க வைக்கும் திரைக்கதை அமைப்பு 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சொல்ல வந்த கதைக்கரு ,மெசேஜ் எல்லாம் அருமை,ஆனால் சொன்ன விதம் சரியில்லை.திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துகிறது.ராம்சரண் ,ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.ரேட்டிங் 2/5


Peddi
Theatrical release poster
Directed byBuchi Babu Sana
Screenplay byVara Prasad Toleti
Krushna Hari
Nagendra Kasi
Venkat Prasad Gandhi
Sri Raman CH
Story byBuchi Babu Sana
Produced byVenkata Satish Kilaru
Ishan Saksena
Naveen Yerneni
Yalamanchili Ravi Shankar
Sukumar
Partha Dey
Starring
CinematographyR. Rathnavelu
Edited byNaveen Nooli
Music byA. R. Rahman
Production
companies
Mythri Movie Makers
Sukumar Writings
Vriddhi Cinemas
IVY Entertainment
Distributed bysee below
Release date
  • 4 June 2026
Running time
189 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget350 crore[2][3]

Wednesday, June 24, 2026

FACES (2026)-மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் (சைக்கலாஜிக்கல் டிராமா)@சன் நெக்ஸ்ட்

  


6/3/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி யில் தமிழ் டப்பிங்க் உடன் 29/5/2026 முதல் காணக்கிடைக்கிறது.இது ஒரு லோ பட்ஜெட் படம்.ஸ்லோவாகப்போகும் மெலோ டிராமா            


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ,நாயகன் இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறி லிவ் இன் டுகெதர் ரிலேஷன்ஸ் சிப்பில் வாழ்பவர்கள்.


வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து நாயகிக்குக்காயம் ஏற்படுகிறது.ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்படுகிறார்.தலையில் அடிபட்டதால். கடந்த சில நாட்களாக நடந்த சம்பவம் எதுவும் நாயகிக்கு நினைவில் இல்லை.


Face blindness Disorder என்னும் பிரச்சனையும் நாயகிக்கு ஏற்படுகிறது.அதாவது நாயகி முன் எந்த ஆண் வந்தாலும் அவர் கண்ணுக்குத்தன் காதலன் ஆகவே தெரிகிறார்.

பாட்ஷா படத்தில் நீ நடந்தால் நடை அழகு பாடல் காட்சியில் சர்வர் ,பஸ் கண்டக்டர் ,போலீஸ் என யாரைப்பார்த்தாலும் நக்மாவுக்கு ரஜினி முகம் போலவே தெரிவது போல படம் முழுக்கவே நாயகிக்கு யாரைப்பார்த்தாலும் நாயகன் போலவே தெரிகிறது.

நாயகன் என்ன ஆனார்?என்பது தெரியவில்லை.நாயகியைப்பார்க்க வரவும் இல்லை.அவரைப்பற்றிய தகவலும் இல்லை.

நாயகன் என்ன ஆனார் என்று கேட்டு நாயகனின் அண்ணன் நாயகியிடம் வந்து கேட்கிறார்.

நாயகனை நாயகி தான் ஏதோ தகறாரில் கொலை செய்திருப்பாரோ?, என்று சந்தேகம்.

இதற்குப்பின் கதையில் நிகழும் திருப்பஙகள் தான் மீதித்திரைக்கதை.

நாயகி நித்யாவாக மொத்தப்படத்தையும் தாங்கி நிற்பவர் டாக்டர் ஹென்னா ரெஜி கோஷி.களையான முகம்.நல்ல நடிப்பு. சோனியா அகர்வால் சாயல் இவருக்கு.

நாயகனாக காலேஷ் ராமானந்த் சுமாரான நடிப்பு.

படத்தில் நடித்த மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்.

ஒளிப்பதிவு ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பரவாயில்லை ரகம்.

இருவர் உதவியுடன் திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் இ கே நீலேஷ்



சபாஷ்  டைரக்டர்

1  யாரைப்பார்த்தாலும் காதலன் முகமாகத்தெரிகிறது என்ற கான்செப்ட் புதியது.

2 நாயகியின் நடிப்பு படத்தின் ஜீவன்.

3 நாயகன் மைக்கேல் போலவே நாயகனின் அண்ணன் மார்ட்டின் உருவ ஒற்றுமை கொண்டவர்கள் என்ற ட்விஸ்ட்.

4 நாயகியை ஒருதலையாகக்காதலிக்கும் சஞ்சீவ் அல்லது நாயகியின் தோழி காவ்யா இருவரில் ஒருவர் வில்லன் ஆகவோ வில்லி ஆகவோ  மாறுவார்கள் என எதிர்பார்க்க வைத்தது

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனின் முகத்தையே படம் முழுக்கப்பார்க்க போர் அடிக்கிறது.யாரைப்பார்த்தாலும் நாயகனைப்போலவே தெரிகிறது என்ற கான்செப்ட் ஓக்கே முதல் 10 நிமிடம் சுவராஸ்யம்.அதற்குப்பின் கடுப்பு.


2 யூகிக்கக்கூடிய திரைக்கதை 

3 ஒரே மாதிரி காட்சிகள் ரிப்பீட் ஆவது

4 கடந்த காலம் ,நிகழ் காலம் என மாறி மாறி நான் லீனியர் கட் -டில்  கதை சொன்ன விதம் எடுபடவில்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாயகியின் நடிப்புக்காக மட்டுமே பார்க்க முடிகிற ஸ்லோ பேஸ் திரில்லர் டிராமா.ரேட்டிங் 2/5

Tuesday, June 23, 2026

OBSESSIONS(2026)-ஆங்கிலம்- சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர்)

 



வெறும் ஒரு மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 101 மில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்த மெகா ஹிட் படம் இது.திரை அரங்குகளில் வெளியாகும் முன்பே  5/9/2025 ல் டோரெண்ட்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பலரது பாராட்டுக்களைப்பெற்ற படம் இது.


15/5/2026 முதல் அமெரிக்கத்திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இந்தியாவில் ,தமிழகத்தில் 29/5/2026 முதல் வெளியாகி இருக்கிறது     


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்,நாயகி,வில்லி ,நண்பன் நால்வரும் ஒரு மியூசிக் ஸ்டோரில் ஒன்றாகப்பணி புரிபவர்கள்.

நாயகிக்கு நாயகன் மீது சொல்லாத காதல்.நாயகனுக்கு  வில்லி மீது வெளிப்படுத்தாத காதல்.


நாயகன் இதயம் பட முரளி மாதிரி ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவன்.காதலை சொன்னால் இருக்கற பிரண்ட்சிப்க்கும் கேடு நிகழ்ந்து  விடுமோ என பயப்படுகிறான்.

நாயகன் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒன் விஷ் வில்லோ என்ற மேஜிக் பாக்ஸ் ஒன்று வாங்குகிறான்.நம்ம ஊர் சந்தைகளில் தாயத்து விற்பார்களே..வசியம் செய்ய உகந்த தாயத்து என விளம்பரப்படுத்துவார்களே அது மாதிரி இந்த ஒன் விஷ் வில்லோ  என்ற பாக்சும் அசாதரணமானது.அதை ஓப்பன் பண்ணி நம் உள்ளக்கிடக்கையை வெளியிட்டால் அது அப்படியே நிறைவேறும்.


நாயகன் அந்த ஒன் விஷ் வில்லோ என்னும் பாக்சை விலைக்கு  வாங்குகிறான்.வில்லியின் மீதான காதலை சொல்லி இந்தக்காதல் நிறைவேற வேண்டும் எனப்பிரார்த்திக்கிறான்.


என்ன ஆச்சரியம்?,அது நாள் வரை தோழி ஆகப்பழகிக்கொண்டிருந்த வில்லி நாயகனிடம் நெருக்கமாகக்காதலி ஆகப்பழகுகிறாள்.

ஒரு சந்தர்ப்பத்தில் நாயகி நாயகன் மீதான காதலை வெளிப்படுத்துகிறாள்.

இதற்குப்பின் நடக்கும் ஏடாகூடமான திகில் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகன் ஆக மைக்கேல் ஜான்சன் அருமையாக நடித்திருக்கிறார்.கூச்ச சுபாவம் ,தயக்கம் எல்லாவற்றையும் முகத்தில் காட்டுகிறார்.


வில்லி ஆக இண்டே கவ்ரெட்டே மிரட்டல் ஆன நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆரம்பத்தில் தென்றல் மாதிரி வருபவர் பின் ஆக்ரோஷப்புயல் ஆக மாறுவது பயங்கரம்

நாயகி ஆக ,நண்பன் ஆக நடித்தவர்கள் நடிப்பும் சிறப்பு.

ராக்பர்வெல் இசை கச்சிதம்.டெய்லர் கிளமன்ஸ் ஒளிப்பதிவு கண்களில் ஒத்திக்கொள்ளும் தரம்.

கர்ரி பார்க்கர் எடிட்டிங்கில் படம் 109 நிமிடங்கள் ஓடுகிறது.


கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் எடிட்டர் ஆன கர்ரி பார்க்கர்


சபாஷ்  டைரக்டர்


1. வில்லியின் கேரக்டர் டிசைன் ,அவரது மிரட்டல் நடிப்பு அட்டகாசம்.

2 நாயகி நாயகனிடம் தன் காதலை வெளிப்படுத்தியதும் வில்லி உடனடியாக  நாயகியைக்கொலை செய்வது எதிர்பாராத திருப்பம்

3 நாயகன் வில்லியிடமிருந்து தப்பிக்கப்போடும் திட்டங்கள் கச்சிதம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 ஒன் விஷ் வில்லோ பாக்சை விலைக்கு வாங்கும் நாயகனின் நண்பன் ஒரு மில்லியன் டாலர் பணம் கேட்க அது உடனே கிடைக்கிறது.இப்படிப்பட்ட அபூர்வ சக்தி படைத்த பாக்சைக்குறைந்த விலைக்குக்கடையில் ஏன் விற்கிறார்கள்? சுருக்கமாகச்சொன்னால் இந்த மந்திரத்தகடு உங்கள் வீட்டில் இருந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என விளம்பரப்படுத்தி விற்கும்  தகடுகளை கடைக்காரர் ஏன் தன்னிடமே வைத்து செல்வத்தைப்பெருக்கக்கூடாது ?

2 வில்லி நாயகியைக்கொலை செய்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது.நாயகனின் நண்பனைக்கொல்லவே தேவை இல்லை.

3 படு பயங்கரமான பாடி ஹாரர் விஷயங்களைக்குறைத்திருக்கலாம்.



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம். ரேட்டிங். 3/5



Obsession
At night, a man in a car looks at a small box. In the background, a woman stands in front of the door of a house. At the center of the poster are the film's title, credits and tagline reading, "Be careful who you wish for...".
Theatrical release poster
Directed byCurry Barker
Written byCurry Barker
Produced by
  • James Harris
  • Haley Nicole Johnson
  • Christian Mercuri
  • Roman Viaris
Starring
CinematographyTaylor Clemons
Edited byCurry Barker
Music byRock Burwell
Production
companies
Distributed by
Release dates
  • September 5, 2025 (TIFF)
  • May 15, 2026 (United States)
Running time
109 minutes[1]
CountryUnited States
LanguageEnglish
Budget$750,000–$1 million[2][3][4]
Box office$100.6 million[5][6]

Saturday, June 20, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ஜூன் 19 ரிலீஸ் தமிழ் ,தமிழ் டப்பிங்,ரீ ரிலீஸ் படங்களின் முன்னோட்டப்பார்வை

  இந்த வாரம் வெள்ளிக்கிழமை   ஜூன் 19 வெள்ளிக்கிழமை அன்று மொத்தம் 10 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

5 புதிய தமிழ்ப்படங்கள் ,2 மலையாளப்படங்கள் தமிழ் டப்பிங் கில் ,ஒரு தெலுங்குப்படம் தமிழ் டப்பிங் கில் 2 ரீ ரிலீஸ் படங்கள் ( விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 2 விஜய் படங்கள்)



1. நூறு சாமி - லிவிங்க்ஸ்டன் க்ளைமாக்சில் நாக்கைக்கட் பண்ணிக்கொள்ளும் "சொல்லாமலே" (1998) தான் இயக்குநர் சசியின் முதல் படம்.மெகா ஹிட்.அந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் "சீனு" (1999).ஸ்ரீகாந்த் - பூமிகா நடித்த ரோஜாக்கூட்டம் (2002) நல்ல காதல் படம்.ஜீவா நடித்த டிஷ்யூம் (2006) ஒரு மசாலாப்படம் .ஒரு நாயகியின் ஆட்டோகிராப் கதையாய் வந்த பூ (2008) கமர்ஷியல் ஹிட் ஆகவில்லை என்றாலும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்றது.பரத் சிக்ஸ் பேக் ,எய்ட் பேக் வைத்து நடித்த க்ரைம் ஆக்சன் திரில்லர் 555 (2013) ஹிட்.விஜய் ஆண்ட்டனி நடித்த பிச்சைக்காரன் (2016) மெகா ஹிட் .ஜி வி பிரகாஷ், சித்தார்த் நடித்த சிவப்பு மஞ்சள். பச்சை(2019)  மீடியம் ஹிட்.

7 வருட இடை வெளிக்குப்பின் இயக்குநர் சசி யின் இயக்கத்தில் விஜய் ஆண்ட்டனி நடிப்பில் வெளி வரும் படம் தான்  நூறு சாமி.

படத்தின் ட்ரெய்லரைப்பார்க்கும்போது கிராமியப்படம் போல் தோன்றுகிறது

சுவாசிகா,லிஜோ மோல் ஜோஸ், காவ்யா அனில்,அஜய் திஷான்,கருணாஷ் ஆகியோர் நடிப்பில் வெளி வருகிறது


ரசித்த வசனங்கள்

1 நாம் சாதியைக்காப்பாத்தறதே பொண்ணுங்களை வெச்சுத்தான்,அவங்களை அடக்கி வெச்சுத்தான்

2. இந்த உலகத்துல உயிராப்பிறந்த எல்லாருக்கும் அடிப்படைத்தேவை என்ன தெரியுமா? சாப்பாடு,தூக்கம்,பொண்ணு


3 என்னை ஏன் பிடிச்சிருக்கு?

பிடிக்கலைன்னு சொன்னாதான் ஏன்னு கேட்கனும்

4 இருபது வயசுல ஒரு. நாள் என்பது ஒரு நாள் தான்,ஆனா நாற்பது வயசுல ஒரு நாள் என்பது ஒரு வருசம்


நூறு சாமி வந்தாலும் அம்மா போல் வருமா என்ற பாடல் இப்போதே ஹிட் ஆகி விட்டது.பிச்சைக்காரன் படத்தில் அம்மா செண்ட்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனதால் இதிலும் அது தொடரும் போல் தெரிகிறது.

கிராமியக்காதல் கதையில் சாதிப்பிரச்சனை தான் மையக்கரு  போல் தோன்றுகிறது.

பாலாஜி ஸ்ரீ குமார் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.




2. மக்கள் தலைவா for sale


இயக்குநர் ரவிமரியா வில்லனாக,காமெடியனாகப்பல படங்களில் நடித்திருந்தாலும் கதையின் நாயகனாக இதில் நடித்திருக்கிறார்.ராதாரவி,அக்சரா விஜய்,பழ கருப்பையா ,நாஞ்சில் சம்பத் இயக்குநர் பேரரசு போன்றோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படம் பொலிடிக்கல் சட்டயர் காமெடிப்படம்.

ஒன்றுமே தெரியாத ஒரு சாதா நபர்  எதிர்பாராத விதமாக முதல்வர் ஆனால் என்ன நிகழும்?என்பது தான் திரைக்கதை.

இயக்குனர் ராம் தேவ் இயக்கி இருக்கிறார்.

ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்


1. அரசியல் பிஸ்னெஸ் ஆகி பல வருசம் ஆகுது

2  நீ லைட்னா நான் கரண்ட் .நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா விட்டில் பூச்சியா இருக்கும் மக்கள்  தொப் தொப்னு நம்ம கிட்டே வந்து விழுவாங்க

3 நெம்பர்ல பேரு வெச்சிருக்கும் நடிகை உதட்டை நான் கடிச்சுட்டதா கிசு கிசு எழுதுறாங்க

4 கட்சி பேரைப்பாருங்க..உள்ளே வெளியே.அவன் மங்காத்தா ஆடறதுக்குள்ளே  நாம எதுனா செய்யனும்.




,3.  டார்க் ஜெயண்ட் 

இது ஒரு சூப்பர் நேச்சுரல் சைக்காலஜிக்கல் பேமிலி டிராமா வகையைச்சேர்ந்தது.இதில் கே பாக்யராஜ்,லிவிங்க்ஸ்டன் ,சோனியா அகர்வால்,ஜோவிதா லிவிங்க்ஸ்டன், அமுரவாணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


அதிர்ஷ்ட வாய்ப்புக்காக  குழந்தையை நரபலி கொடுக்கத்தயாராகும் ஒரு அப்பாவின் கதை இது.

ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்

1 நம்ம ரெண்டாவது குழந்தையை சாமிக்கு நேர்ந்து விட்டா நாம எல்லோரும் நல்லாருக்கலாமாம்.

2  ஒரு மோசமான சக்தியை மிக மோசமான முறைல தூண்டி விட்டுட்டாங்க.

3. அப்பாவுக்கு என்ன ஆச்சு ?

அப்பனைக்குத்திக்கொன்னதே உங்க அம்மா தான்.




4. பதினெண் கீழ்க்கணக்கு 

இதில்  புதுமுகங்கள் நடிக்க  அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.படத்தின் டீசரைப்பார்க்கும்போது வித்தியாசமான க்ரைம் திரில்லர் போல் தெரிகிறது


ரசித்த வசனம்

கொலை தான் முடிவுன்னா இந்த உலகத்தில் யாரும் வாழவே முடியாது



5. மனு 

இது ஒரு ரூரல் ரொமாண்டிக் ஆக்சன் திரில்லர்.துர்கா பிரசாத் என்பவர் தான் எடிட்டராகவும் ,இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.ஜூன் 18 ரிலீஸ்.

புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.இது ஒரு லோ பட்ஜெட் படம்


கிராமத்தில் ஒரு காதல் ஜோடியை வாழ விடாமல் ஒந்தங்கள் நெருக்குகின்றன.எப்படி அதை மீறி ஜெயிக்கிறார்கள் என்பது கதை.






6.   பாலன் (மலையாளம் /தமிழ் )


மஞ்சுமேல் பாய்ஸ் என்ற 100 கோடி வசூல் படத்தை இயக்கிய  இயக்குநர் சிதம்பரம் இயக்கி இருக்கும் சைக்கலாஜிக்கல் எமோஷனல் டிராமா இது.
ஜீத்து மாதவன் தான் கதை ,திரைக்கதை எழுதி இருக்கிறார்.

ஒரு டீன் ஏஜ் பையன் தான் மிஸ் செய்த அம்மாவைத்தேடிப்பயணிக்கும் கதை இது





7. சின்ன சின்ன ஆசை ( மலையாளம் /தமிழ்)



ரொமாண்டிக் டிராமா

வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் ரோஜா புகழ்  மதுபாலா,கருப்பு புகழ் இந்திரன்ஸ் ,அபர்ணா பாலமுரளி,தம்பி ராமய்யா ஆகியோர் நடிக்க உருவாகி இருக்கும் படம் இது.

வாரணாசியில் சந்திக்கும் இருவரின் உணர்ச்சிகரமான கதை இது.

இந்திரன்ஸ் ,மதுபாலா இருவரும் ஜோடி.கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார்.





8. எங்கள் தங்கம் ( தெலுங்கு/தமிழ்)

மா இண்ட்டி பங்காரம் என்ற தெலுங்குப்படத்தின் தமிழ் டப்பிங் வெர்சன் இது
சமந்தா நாயகியாக நடித்திருக்கும்  பேமிலி ஆக்சன் டிராமா இது

நாயகி ஒரு குடுன்பத்துக்கு மரும்ச்களாகப்போகிறார்.அவருக்கு. கட்டா குஸ்தி நாயகி போல் ஒரு பிளாஸ்பேக் இருக்கிறது.புகுந்த வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை.



1 ஒரு மருமகளுக்கு சிறந்த தகுதிகள் இருக்கனும்,சமைக்கத்தெரியனும்,பாட்டுப்பாடத்தெரியனும்..

ஆனா எதுவுமே எனக்குத்தெரியாதே?

2 ஹீரோவா இருந்தாலும்  ,ஹவுஸ் ஒயிபா இருந்தாலும் டயலாக்ல பவர் இருந்தா எவனா இருந்தாலும் பயந்துதான் ஆகனும்.

3 நாம யாருன்னு நமக்கு மட்டும் தான் தெரியும்,ஆனா உலகத்துக்கு எது தேவையோ அந்த முகத்தை மட்டும் தான் காட்டனும்

4 ஒவ்வொருத்தரையும் அடி வெளுக்கப்போறேன் பாருங்க

என்னது?

அன்பாலதான்

படத்தின் ட்ரெய்லரைப்பார்க்கும்போது இன்னொரு பிளாஸ்ட் படம் போல் தோன்றுகிறது.சமந்தா சேலை கட்டிக்கொண்டு ஆக்சன்  அதகளம் செய்திருக்கிறார்

இயக்குனர்  ஒரு பெண் தான்.நந்தினி ரெட்டி.
இசை சந்தோஷ் நாராயணன்.


9. ஜில்லா 

10. மெர்சல்

Friday, June 12, 2026

இரு துருவங்கள் அஷ்டாவதானி டி ராஜேந்தர் vs திரைக்கதை மன்னர் கே பாக்யராஜ்

 



தமிழ் சினிமாவில்  எப்போதும்  இரு துருவங்களின் ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும் . எம் ஜி ஆர் -சிவாஜி , ரஜினி-கமல் , விஜயகாந்த் -சத்யராஜ் , கார்த்திக்- பிரபு ,அஜித் -விஜய் , சிம்பு - தனுஷ்   என்று  பட்டியல்  நீண்டு கொண்டே  இருக்கும் . ஆனால் எய்ட்டீஸ்  கிட்ஸ் க்குத்தெரிந்த  இன்னொரு  முக்கிய ஜோடியைப்பற்றித்தான்  இந்தக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம் . அதுதான்  டி ராஜேந்தர் - கே  பாக்யராஜ் . இருவரும்  கிட்டத்தட் ட  ஒரே  காலக்கட்டத்தில்தான் உதயமானார்கள் .ஆனால்  இருவரது பட வசூல்  ரஜினி - கமல் படங்களுக்கு இணையாக  இருந்தன .சில  படங்கள்  ரஜினி  பட வசூலை மீறின .,

அஷ்டாவதானி ,தன்மான சிங்கம் ,சகலகலா வல்லவர்  என்ற  பட்டங்களைப்பெற்ற டி ராஜேந்தர் கதை , திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்க் ,டைரக்சன் , தயாரிப்பு   என  எட்டு துறைகளைக்கையாண்டதால் அஷ்டாவதானி  என்ற   பட்டம்  பெற்றார் . இவர் ஆஞ்சனேய  பக்தர் . இவருக்கு  ஒரு சென்ட்டிமென்ட்  உண்டு . தனது பட டைட்டில்கள் 9 எழுத்துக்களில்  வருமாறு  அமைப்பார் .

தமிழ்  சினிமாவில்  தனி மனித ஒழுக்கம்  கடைபிடிக்கும்  , கடை பிடித்தவர்கள் மூன்றே  பேர் தான் . 1  சிவக்குமார்  2 நம்பியார்  3 டி ராஜேந்தர். இந்த  மூவர்  பட்டியலில்  மற்ற  இருவருக்கும்  இல்லாத தனிச்சிறப்பு டி ராஜேந்தர்க்கு  உண்டு . தனது படங்களில்  நாயகியைத்தொட்டுக்கூட  நடிக்க மாட் டார். அது  டூயட்   சீனாக இருந்தாலும்  சரி , கன்னத்தில்   பளார்   என அறையும்  சீனாக இருந்தாலும்  சரி  நடிகையைத்தொட  மாட்டார். இது  போல  நாயகியைத்தொடாமல்   நடிக்கும்  நடிகர்  இந்திய அளவில்  ஏன் ? உலக அளவில் வேறு யாரும் இல்லை.

 இவரது  படங்களில்  பெரும்பாலும்  அண்ணன் - தங்கை சென்ட்டிமென்ட்  சீன்   இருக்கும்  . பாடல்  காட் சிகளில்  பிரம்மாண்டமான செட்  போடுவார் . ஷங்கர் , ராஜமவுலிக்கெல்லாம் இந்த விஷயத்தில் இவர் முன்னோடி  .இவர் எம் ஏ தமிழ் பட்டதாரி என்பதால் இவர்  படங்களில் அடுக்கு மொழி வசனம் விளையாடும்.

காதல் தோல்வி ,காதலை சொல்லத்தயக்கம் இந்த இரண்டு உணர்வுகளும் இவரது படங்களில் அதிகமாகக்கையாளப்பட்டிருக்கும்
.

இவரது முதல் படம் இவருக்கு டைட்டிலில் அங்கீகாரத்தைத்தரவில்லை.தயாரிப்பாளர் இ எம் இப்ராஹிம் தனது பெயரை இயக்குநர் எனப்போட்டுக்கொண்டார்.அக்ரீமெண்ட் அப்படி.டி ஆர் க்கு வேறு வழி இல்லை.வாய்ப்புக்கிடைத்தால் போதும் என்று இருந்த கால கட்டம்.
திரைக்கதை,இயக்கம்,தயாரிப்பு. இப்ராஹிம் எனவும். கதை,வசனம்,பாடல்கள் டி ராஜேந்தர் எனவும் டைட்டிலில் வந்தாலும் அனைத்தும் டி ஆர் தான்.




1 ஒரு தலை ராகம் 1980- நாயகன் நாயகியை விரும்புகிறான்.நாயகிக்கு நாயகனைப்பிடித்திருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாத குடும்ப சூழல். க்ளைமாக்சில் நாயகி காதலிக்க முடிவெடுத்து நாயகனைப்பார்க்க வரும்போது நாயகன் இறந்திருப்பார்.சோகமான க்ளைமாக்ஸ் தான் என்றாலும் ரசிகர்களைக்கவர்ந்தது.

நாயகன்,நாயகி ஆக சங்கர் -ரூபா நடிக்க நாயகியின் தோழி ஆக உஷா நடித்தார்.இவரைத்தான் டி ஆர் நிஜ வாழ்வில் காதலித்துத்திருமணம் செய்து கொண்டார். ( இந்தப்படத்தில் நடித்த ரவீந்ததன் தான் உஷாவை முதலில் காதலித்தார்.ஆனால் பின்னாளில் கை விட்டு விட்டார்)

இந்தப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக்காரணம் பாடல்கள்,இசை தான்.

அனைத்துப்பாடல்களும் மெகா ஹிட்.காலேஜ் மாணவர்களின் தேசிய கீதம் ஆனது.
இந்தப்படத்தில் பெண் குரலில் ஒலிக்கும் பாடல்களே இல்லை.அனைத்தும் ஆண் குரல் பாடல்களே.

டி எம் சவுந்தர் ராஜன் பாடிய இரு பாடல்கள் செண்ட்டிமெண்ட்டாக  அவரது மார்க்கெட்டையே முடித்து விட்டதாக அவரே குறிப்பிட்டார்.அந்தப்பாடல்கள்

1 நான் ஒரு ராசி இல்லா ராஜா
2 என் கதை முடியும் நேரம் இது

இவை போக 

3 கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
4 இது குழந்தை பாடும் தாலாட்டு
5 மன்மதன் ரட்சிக்கனும்
6 கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
7 வாசமில்லா மலரிது வசந்தத்தைத்தேடுது


இந்தப்படம் ரிலீஸ் ஆன போது ஒரு வருடம் ஓடியது.சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது..தெலுங்கில் பஞ்சதார சிலகா (1999) என ரீ மேக் செய்யப்பட்டது

++++++++±++
ஈரோடு மாவட்டம் கோபி  அருகே வெள்ளாங்கோவில் என்ற கிராமத்தில் பிறந்தவர் கே பாக்யராஜ்.இவரது அம்மா அரசு மருத்துவமனை நர்ஸ்.இவரது பள்ளித்தோழர் ஆர் சுந்தர் ராஜனின் உதவுயுடன் சென்னை வந்தவர் பாரதி ராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார்.

இந்திய அளவில் திரைக்கதை அமைப்பதில் மன்னர் என்று பெயர் பெற்றவர்.ஜனரஞ்சகப்பட இயக்குநர் என்ற பட்டம் பெற்றவர்.முந்தானை முடிச்சு படத்தின் அதிரி புதிரி வெற்றியால் எம் ஜி ஆரால். கலை வாரிசு என அறிவிக்கப்பட்டவர்.இவரது படங்களில் கணவன் ,மனைவி உறவு மிக சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும்.

இவர் படங்களில் காமெடி அதிகம் இருக்கும்.இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் பெண்களும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.பாரதிராஜாவுடன் 5 படங்கள் பணியாற்றிய பின் தனியே இயக்கிய முதல் படமே மெகா ஹிட்




 
1. சுவரில்லாத சித்திரங்கள் 1979  

30/11/1979 அன்று வெளியானது.கங்கை அமரனின் இசையில் காதல் வைபோகமே காணும் நன்னாளிலே செம ஹிட் பாட்டு.

கவுண்டமணியின் காமெடி டிராக் உண்டு.சரோஜா குப்பை கொட்றியா கொட்டு கொட்டு என்ற வசனம் அப்போது மிகப்பிரபலம் ஆனது.

சாதாரண கிராமத்துக்காதல் கதை தான்.வறுமையில் இருக்கும் நாயகனின் எளிமையான காதல் கதை இது.

ஹீரோ என்றால் எல்லோரையும் அடித்து வீழ்த்துவார் என்னும் பிம்பத்தை உடைத்து அப்பாவித்தனமான முகத்துடன்  காமெடி வசனங்களை வைத்து மக்கள் மனம் கவர முடியும் என்று நிரூபித்தார்.

சுதாகர் ,சுமதி,காந்திமதி,கல்லாப்பட்டி சிங்காரம் ,கவுண்டமணி  மற்றும் பலர் நடித்த இந்தப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் 100 நாட்கள் ஓடின



இரு படங்களையும் ஒப்பிடும்போது ஒரு தலைராகம் பிரம்மாண்ட வெற்றி.சுவர் இல்லாத சித்திரஙகள் வெற்றிப்படம்



தொடரும்