Saturday, September 25, 2010

என்னாது இது,சின்னப்பிள்ளத்தனமா..?

பசங்க படத்துக்கு விருது கிடைத்தது சந்தோஷமாக இருந்தது.இந்த சமயத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி ஞாபகம் வருகிறது.சின்னக்குழந்தைகளின் சந்தோஷங்களை துல்லியமாக பதிவு செய்த வகையில் பிரமாதமான படைப்பு அது.க்ளைமாக்சில் ஏந்திரி அஞ்சலி ஏந்திரி என்ற வசனம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பெறத்துடிப்பதும்,கோயில் கோயிலாக அலைவதும் நடக்கும் அதே நேரத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றவர்கள் மழலை இன்பத்தை பெறுகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

லைப்ரரியில் நான் படித்த சில மேட்டர்களை உங்களுடன் பகிர்கிறேன்.



1.குழந்தையின் சிரிப்பில் பூலோகம் அழகு பெறுகிறது.

2.குழந்தைகள் இல்லையென்றால், உலகம் துன்பம் நிறைந்ததாகும்.
 வயோதிகர்கள் இல்லையென்றால், உலகம் மனித இயல்பற்றதாகும்.

3.குழந்தைகளைத் திருத்த நல்ல வழி - அவர்களைப் பாராட்டுவதுதான்.

4.குழந்தையைக் கொஞ்சும்போது தெய்வத்திடம் பேசுவதுபோல இருக்கிறது.

5.குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ள கை நோகிறது.
 அதை கீழே இறக்கினால் மனம் நோகிறது.

6.இயற்கை அளிக்கும் எல்லாவற்றிலும் குழந்தையைப் பார்க்கிலும் சிறந்த இன்பம் வேறில்லை.

7.குழந்தைகளை ஆர்வமுடன் அணையுங்கள்; இதய நோய் குறையும்.

8.குழந்தையைக் கொஞ்ச நேரமின்றிச் சம்பாதிப்பவன் இறைவனின் அருகில் போக முடியாது.

9.நீங்கள் கொடுக்கும் வெகுமதிகளைவிட, உங்களுடன் சேர்ந்து இருப்பதைத்தான் உங்களுடைய குழந்தைகள் விரும்புகின்றன.

10.பல குழந்தைகள் பல கவலைகள். ஒரு குழந்தையும் இல்லாவிட்டால் ஒரு இன்பமும் இல்லை

14 comments:

Chitra said...

குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ள கை நோகிறது.
அதை கீழே இறக்கினால் மனம் நோகிறது.

...This is one of my favorite quotes about children. :-)

சி.பி.செந்தில்குமார் said...

செம ஃபாஸ்ட் வருகைக்கு நன்றி சித்ரா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை ரொம்ப புகழாதீங்க

Anonymous said...

குழந்தைகளை ஆர்வமுடன் அணையுங்கள்; இதய நோய் குறையும்.//
இது புதுசா இருக்கே....

Anonymous said...

க்ளைமாக்சில் ஏந்திரி அஞ்சலி ஏந்திரி என்ற வசனம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.//
ரொம்ப நாள் பேசப்பட்ட சினிமா காட்சின்னா இதுதான்னு நினைக்கிறேன்...திருவிளையாடல் தருமிக்கு பிறகு..சொக்கா சொக்கா

எஸ்.கே said...

குழந்தைகள் இருக்குமிடத்தில் நாம் இருந்தால் மனம் லேசாகிறது, கவலை மறக்கிறது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாழ்க்கைக்கு அர்த்தம் தருபவர்கள் அல்லவா?..

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை ரொம்ப புகழாதீங்க

September 25, 2010 9:09 AM
அது சரி,நம்பிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

குழந்தைகளை ஆர்வமுடன் அணையுங்கள்; இதய நோய் குறையும்.//
இது புதுசா இருக்கே....


அப்போ எது பழசா இருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

க்ளைமாக்சில் ஏந்திரி அஞ்சலி ஏந்திரி என்ற வசனம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.//
ரொம்ப நாள் பேசப்பட்ட சினிமா காட்சின்னா இதுதான்னு நினைக்கிறேன்...திருவிளையாடல் தருமிக்கு பிறகு..சொக்கா சொக்கா


ஆமா,ஆனா ஆனந்த விகடன் அந்த சீன் ஓவர் ஆக்டிங்க்னு குறை சொல்லுச்சு

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

குழந்தைகள் இருக்குமிடத்தில் நாம் இருந்தால் மனம் லேசாகிறது, கவலை மறக்கிறது.

அதே எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Journey and Thought said...

வாழ்க்கைக்கு அர்த்தம் தருபவர்கள் அல்லவா?..

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

karthikkumar said...

.குழந்தையைக் கொஞ்சும்போது தெய்வத்திடம் பேசுவதுபோல இருக்கிறது// NICE

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி கார்த்திக்