Monday, September 06, 2010

எந்திரன் பஞ்ச் டயலாக்ஸ்

ரஜினி நடித்த படங்களிலேயே திரைக்கதை மேஜிக் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆன படம் பாட்ஷா.இடைவேளை வரை பில்டப்பும்,டெம்ப்போவும் குறையாமல் படம் செம ஸ்பீடாக போகும்.அதில் ஒற்றை விரலை உயர்த்தி ரஜினி சொன்ன “நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்ற பாலகுமாரனின் பன்ச் டயலாக் சூப்பராக க்ளிக் ஆனது.பஞ்ச் டயலாக்குகளுக்கு மவுசு கூடியது இதற்குப்பிறகுதான்.ஆளாளுக்கு அதேபோல் பேச ஆரம்பித்தாலும் ரஜினி பேசுவது போல் கெத்து யாருக்கும் வரவில்லை.

ரஜினியின் அடுத்த பட பஞ்ச் டயலாக் என்னவாக இருக்கும் என்று மீடியாக்கள் எழுத ஆரம்பித்தன,குமுதம் வார இதழ் தனது புலனாய்வு இதழான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பாபா படத்துக்கான பஞ்ச் டயலாக் போட்டி அறிவித்தது.
பரிசு தலா ரூ 250.இதற்கு வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது,

மொத்தம் 12000 பேர் போட்டியில் கலந்து கொண்டார்கள்.ராஜபாளையம்  பேச்சியப்பன்  என்பவர் அதிக பட்சமாக 127 பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பி 4 செலக்ட் ஆனது.(இவர் ஒரு ஜோக் எழுத்தாளர்,சன் டிவியில் அசத்தபோவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்பவர்.)

மொத்தம் 20 டயலாக்குகள் தேர்வாகி அவை படத்தில் பயன்படுத்திக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.ரசிகர்களின் ஆர்வத்தைப்பார்த்த ரஜினி படக்குழுவின் ஒப்புதலோடு ஒரு பஞ்ச் டயலாக்கிற்கு ரூ 10,000 பரிசு என அறிவித்தார்.உண்மையில் இது ஒரு பிரம்மாண்டமான தொகையே.ஏனெனில் ஆனானப்பட்ட ராஜேஷ்குமாருக்கே ஒரு நாவலுக்கு ரூ 5000 தான் தருகிறார்கள்.100 பக்கங்கள் எழுதி ரூ 5000 சம்பாதிக்க ஆசைப்படுவதை விட ரஜினி படத்துக்கு 2 லைன் எழுதி ரூ 10,000 சம்பாதிக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.ஆனால் பாபா திரைக்கதை தொய்வு காரணமாகவும்,ரஜினி ஆக்‌ஷன் செய்யாமல் வெறும் சித்து வேலை,ஆன்மீகம்,மந்திரம் என இறங்கியதில் அவரது ரசிகர்களுக்கே உடன்பாடு இல்லை.இதே போல் கே .பாக்யராஜ்க்கும் என் ரத்தத்தின் ரத்தமே படத்தில் ஏற்பட்டது.
இப்போது எந்திரன் படம் வரப்போகிறது.ரோபோ என படத்துக்கு  முதலில் பெயர் வைத்தார்கள்,பின் தமிழில் பெயர் சூட்ட குமுதம் இதழ் மூலம் இயக்குநர் ஷங்கர் போட்டி வைத்தார்.அதில் என் இனிய இயந்திரா,எந்திரன்,இயந்திரன் என 3 டைட்டில்கள் இறுதி சுற்று வரை வந்தது.ஃபைனலாக இயக்குநர் எந்திரன் டைட்டிலை தேர்ந்தெடுத்தார்.இந்தப்படத்தில் ரஜினி பேசும் பன்ச் டயலாக்ஸ் என்னவென ரசிகர்கள் 12,500 பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பினாலும் ஷங்கர் பாபா செண்ட்டிமெண்ட் காரணமாக அவற்றை நிராகரித்தார்.எழுத்தாளர் சுஜாதா எழுதிய 4 டயாக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டது.அவை ரகசியம் காரணமாக வெளியிடப்படவில்லை.

எனக்கு எஸ் எம் எஸ் சில் வந்தவை இவை.

ரஜினி சாஃப்ட்வேர் எஞ்சினியராக எந்திரனில் வந்தால் ...

1.நான் ஆஃபீசுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் சாஃப்ட்வேருடன் தான் வருவேன்.

2.கண்ணா,வைரஸ்தான் கூட்டமா வரும்,ஆண்ட்டி வைரஸ் சிங்கிளாத்தான் வரும்.

3. C க்கு அப்புறம் C ++ ,எனக்கு அப்புறம் நோ ++ .

4.நான் பார்க்கறதுக்குத்தான் ஹார்டுவேர் மாதிரி,ஆனா மனசு சாஃப்ட்வேர் மாதிரி.

5. J   TO THE A TO THE V TO THE  A  - JAVA

Sunday, September 05, 2010

அசால்ட் ஆறுமுகம் வழங்கும் அசமஞ்சம் விருதுகள்

1. இந்த வாரத்தின் சிறந்த விருந்தோம்பல் விடிவெள்ளி விருது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு,தனது மகள் திருமணத்துக்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என அறிவித்தமைக்காக.(எதையும் தாங்கும் இதயமும்,உதையும் தாங்கும் உடலும் தமிழனுக்கு இருக்கும் வரை இதெல்லாம்  ஜூஜூபி மேட்டர்.)

2. இந்த வாரத்தின் சிறந்த டூ லேட் டொட்டோடொய்ங்க் விருது அழகிரிக்கு,ஆண்டிப்பட்டி முகாமில் 8700 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் அபேஸ் செய்ததாக ஜெ குற்றச்சாட்டு கூறியதற்கு ஒரு மாதம் கழித்து 9000 பாட்டில்கள் வாங்கியதாக பில் சமர்ப்பித்ததற்கு. (தப்பு செஞ்சாலும் டைமிங்க்கா பண்ணக்கூடாதா?)

3. இந்த வாரத்தின் சிறந்த யாருமே வராத டீ கடையில் யாருக்காகவோ டீ ஆற்றும் டீலா நோ டீலா டெரரிஸ்ட் விருது டாக்டர் ராம்தாஸ்க்கு,மாற்று அணிக்கு தலைமை தாங்க தயாராக இருப்பதாக தி ஹிந்து இதழுக்கு பேட்டி அளித்தமைக்காக. (நீங்க ரெடி,நாங்க ரெடி இல்லையே)

4. இந்த வாரத்தின் சிறந்த பற்றாக்குறை பத்மனாபன் விருது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா லீடருக்கு ,மாதம் ரூ 2 லட்சம் சம்பளம் வாங்கியும் பற்றவில்லை என டெக்கான் க்ரானிக்கல் நாளிதழில் புலம்பியமைக்காக.(நயன்தாரா லீவ் போட்டாக்கூட தமனாவைப்பார்த்து கிடச்சதை வெச்சு திருப்திப்பட்டுக்கறதில்லையா நம்ம தமிழன் அது மாதிரி அட்ஜஸ் பண்ணிக்குங்களேன்?)

5. இந்த வாரத்தின் சிறந்த கட்டிங் மாஸ்டர் கனகராஜ் விருது தயாநிதி அழகிரிக்கு,மது விலக்கு பிரச்சாரம் நடக்கும் இந்த தருணத்தில் ’வ ’எனும் புதுப்படத்தில் கட்டிங்க்கிற்காக பெரிய அளவில் விளம்பரம் செய்ததற்காக.(சும்மா சொல்லக்கூடாது,செம ரசனையான அட்வர்ட்டைஸ்மெண்ட் அது)

6. இந்த வாரத்தின் சிறந்த மைனஸ் பாயிண்ட் மைனாரிட்டி மைனா விருது 
ஜெவுக்கு ,தமிழகத்தில் கட்சி எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறது என கருத்துக்கேட்டதுக்கு.(எல்லாமே வீக் தான்)

7. இந்த வாரத்தின் சிறந்த அழிச்சியாட்டியம் அவ்வை சண்முகி விருது ராணிக்கு,ஆண் போல் வேடமிட்டு 5 மாதம் பணி புரிந்து அங்கே இருந்து ரூ லட்சங்கள் அபேஸ் செய்ததற்கு.(அப்போ 10 மசம் ஒர்க் பண்ணி இருந்தா ரூ 10 லட்சம் அபேஸா?)

8. இந்த வாரத்தின் சிறந்த மர்மக்கதை மன்னன் மாடசாமி விருது ராணுவ அமைச்சர் ஏ கே அந்தோணிக்கு, கொலை செய்யப்பட்ட ராணுவ கேப்டனும்,ராணுவத்தின் மிகப்பெரிய விருதான சவுர்யசக்ரா விருது பெற்றவருமான சுமித் சோலியின் மரணத்தை தற்கொலை என்று அறிக்கை விட்டதற்கும்,பிரேத பரிசோதனை அறிக்கையை  அவரது குடும்பத்தில் ஒப்படைக்காமல் சால்ஜாப்பு சொன்னதற்கும். (எல்லா அரசியல்வாதிகளுக்கும் பிடிச்ச ஜாப் சால்ஜாப்?)

9. இந்த வாரத்தின் சிறந்த  போலி டாக்டர் பொன்னம்பலம் விருது மும்பை ஆனந்த் போசலேவுக்கு,தவறான ஊசி போட்டு ஒரு ஆட்டோ ரிக்‌ஷா டிரைவரின் கையை செயலிழக்கச்செய்தமைக்காக. (அப்போ போலி டாக்டர் ஜோக்ஸ் எழுத்றதுல தப்பே இல்ல?)


10. இந்த வாரத்தின் சிறந்த கூட்டுக்குடும்பத்தின் குடிகேடன் விருது இயக்குநர் சாமிக்கு,உயிர்,சிந்துசமவெளி போன்ற உறவுகளின் உன்னதத்தை கொச்சைப்படுத்திப்படம் எடுத்ததற்காக.(யாராவது அவரை கேரளா கூட்டீட்டு போங்கப்பா,பிட்டுப்படம் எடுத்து காலம் தள்ளிக்கட்டும்.

பலே பாண்டியா - சினிமா விமர்சனம்



படத்தோட க்ளைமாக்ஸ்ல டைரக்டர் வித்யாசமான ,ரசனையான ,க்ரியேட்டிவ்வான ஒரு மேட்டர் பண்ணி இருக்கார்.பஞ்ச தந்திரம் படத்துல சிம்ரன் குழந்தைக்கு ஃப்ளாஷ்பேக் சொல்வது போல் இந்த உத்தியும் மிக ரசனையானது.மிகச்சிறப்பாக கலைநேர்த்தியுடன் செய்த டைரக்டருக்கு நம் பாராட்டுக்கள்.ஆனால் அதற்கு முன்பெல்லாம் என்னதான் செய்தார்?

காதல்,பணி,வாழ்க்கை என அனைத்திலும் தோல்வியையே சந்திக்கும் இளைஞன் தற்கொலை செய்ய முடிவெடுக்கும்போது அந்த  முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.ஒரு லோக்கல் கிட்னாப் பார்ட்டியிடம் (மும்பை எக்ஸ்பிரஸ் கமல் & டீம் மாதிரி) தன்னை கொல்ல சொல்கிறான்.உயிரே படத்தில் வரும் மனீஷா கொய்ராலா மாதிரி அவனை ஒரு மனித வெடி குண்டாக்கத்திட்டமிடுகிறான்.அதற்குப்பிறகு  ஏகப்பட்ட திருப்பங்கள்.சாகலாம் என முடிவெடுத்தவனை ஒரு பெண் காதலிக்கறாள்.அவள் அப்பா தான் வில்லன்.இதற்கு மேல் கதையை யூகிக்க சொல்லியா தர வேண்டும்?



 வெண்ணிலா கபாடிக்குழு ஹீரோ - கோவா நாயகி பிரியா இவர்கள் தான் ஜோடி.ஹீரோ சுமரான பர்ஃபார்மன்ஸ்தான்,ஹீரோயின் எபொவ் ஆவரேஜ்.

ஹீரோயின் ஹேர்ஸ்டைல் கலைந்தபடி வந்தாலும் பார்க்க கொள்ளை அழகு.இதுவே ஒரு பையன் அப்படி வந்தால் பரட்டைத்தலை என பட்டம் கட்டுவோம்.(பெண்கள் எது செய்தாலும் அழகுதான்.இது எதிர்பால் ஈர்ப்பாலா?வயசுகோளாறா?)

தாத்தா மண்ணே வணக்கம் என அறிமுகமாகும் விவேக் பெரிதாக சிரிக்கவைக்கவில்லை.அதற்கு அவரது மார்க்கட் டவுன் ஆனதும் ,கேரக்டரைசேஷன் சரி இல்லாததும்தான்.
திருப்பதினு நீங்க பேர் வைக்கலாம்,லண்டன்னு நாங்க பேர் வைக்கக்கூடாதா? என அவர் கேட்பது காமடிதான் என்றாலும்  1965 இல் எம் ஆர் ராதாவே கீமாயணம் நாடகத்தில் பண்ணி விட்டாரே?


முதல் காட்சியில் ஹீரோ ஆட்டோவில் சேறு அப்பிக்கொண்டு இறங்குகிறார்.அப்போது அவர் சட்டையில் கை அளவு சேறு.அடுத்த ஷாட்டில் சட்டை பூரா சேறு.கண்ட்டின்யூட்டி விட்டுபோச்சே,அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ் யுவர் அட்டன்ஷன் ப்ளீஸ்.அந்த சீனில் ஆட்டோ ட்ரைவர் நல்லா சீன் போடறாங்கப்பா என பன்ச் பேசுவது நல்ல காமடி.


ஹீரோ தன் காதலிக்கு தரப்போகும் லவ் லெட்டரை மடிச்சு வீசும் கட் ஷாட் இதுவரை எந்தப்படத்திலும் வராதது,வெல்டன் டைரக்டர் சார்,லவ்வுக்கு ரூட் விடும்போது அடி ஆத்தாடி பாட்டு ஒலிப்பதும்,அதே ஃபிகர் ஃபிரண்டுக்கு செட் ஆனதும் போனால் போகட்டும் போடா பாட்டு பேக் டிராப்பில் வருவது காமெடி டச்.

காமெடி கிட்னப் குரூப்புடன் ஹீரோ பயணிக்கையில் அடிக்கடி டிரைவர் ஸ்டியரிங்கை விட்டு பின்னால் திரும்பி பாஸ் இடம் பேசுவதும், அருகில் உள்ள ஆள் பதறி ஸ்டியரிங்கை பிடித்து ஓட்டுவதும் செம காமெடி.



படத்தில் தோன்றும் பளிச் வசனங்கள் -

1.நாங்க 2 பேரும் ரகசியமா பேசப்போறோம், காதை மூடிக்க.

2.பிணம் போனாத்தான் அழனும்,பணம் போனாக்கவலைப்படக்கூடாது.

3.நாளை நாள் நல்லாருக்கும்னு நம்பிக்கை ஊட்டுவதே ஜோசியர்தான்.அவரே ஏமாத்துனா ஜனங்க என்ன செய்வாங்க?

4. உன் கடைசி ஆசை என்ன?      சாகறதுதான்.

5.வாழனும் வாழனும்னு  நிறைய ஆசைப்படறவங்க தினம் தினம் செத்து செத்து பிழைக்கறாங்க.

6. நீ ஒரு டீ குடிக்கப்போன நேரத்துல அவனுக்கு பாலே ஊத்திட்டாங்க.

சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வர்லை படல் காட்சியில் பீர் பாட்டில்களோடு நடனக்குழு செய்வது ஓவர் அலம்பல்.அவர்கள் குடிகாரர்கள் எனக்காட்ட ஒரு ஷாட் போதாதா? பாடல் முடியும் வரை பீர் பாட்டிலோடு அலைய வேணுமா?

கண்ணோடு எனும் பாடல் காட்சியில் கொரியோகிராஃபி பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா சூட்கேஸ் டன் பாடுவாரே அந்தப்பாட்டின் உல்டா.அதே போல் ஹேப்பி ஹேப்பீ பாடலின் ஃபினிஷிங்க் டச்சாக சாணியில் கால் வைப்பது இளமைக்குறும்பு.
 படத்தின் இயக்குநருக்கு ஒரு கேள்வி.வில்லன் ஹீரோவுக்கு ரூ 25 லட்சம் ஏ டி எம் கார்டு குடுத்து அப்பப்ப் எடுத்துக்கொள்ள சொல்கிறார்.பின் ஒரு சமயத்தில் அந்த வில்லன் கொலை செய்யப்பட்ட பிறகு ஹீரோவைக்கைது செய்யும் போலீஸ் ஆதாரம் இல்லை எனக்கூறி விடுதலை செய்கிறது.கொலை செய்யப்பட்ட பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் பணம் பெற்றவரது பெயர் இருக்குமே,அந்த விஷயத்தில் கோட்டை விட்டது ஏன்?


விவேக் ஆடும் சாவுக்கு குத்தாட்டம் ஏற்கனவே யுனிவர்சிட்டியில் வந்துடுச்சே?
கரகாட்டக்காரன் மியூசிக்கைபோட்டு ஸ்கூட்டி பெப்பில் ஹீரோ போவதும், நடந்து செல்பவன் கூட அதை கடந்து செல்வதும் புளித்துப்போன காமெடி.

படத்தில் ஆங்காங்கே மொக்கைக்காமெடியும்,கடி ஜோக்குகளும் வருகின்றன.
1.அன்னாசி -அண்ணாச்சி வார்த்தை ஜாலக்காமெடி, பாண்டி பழக்கடை-போண்டி பழக்கடை ஜோக்
2.தற்கொலைக்கு முயலும் ஹீரோ லாரி வரும் வெளிச்சத்தை பார்த்து முன்னால் வந்து நிற்பதும் பின் அது 2 பைக் என உணர்ந்து அசடு வழிவதும் (சின்னத்தம்பி கவுண்டமணியின் மாலைக்கண் காமெடியின். உல்டா)
3.வில்லன் ஹீரோவைப்பார்த்து 10 ஆம் தேதி இந்த கார்டும் எக்ஸ்பயர்டு,நீயும் எக்ஸ்பயர்டு என நக்கல் அடிப்பது.(ஒரு பக்கா லோக்கல் கிட்னாப்பருக்கு அந்த அளவு சென்ஸ் ஆஃப் ஹியூமரும்,நாலெட்ஜும் இருக்குமா என்ன?)
4.இஞ்சின் ஆயில்ல வடை சுட்டியா?உடம்பு இந்த குலுங்கு குலுங்குதே?
5.அவ வைஷ்ணவி இல்லை,வயஸ் ஆனவ என விவேக் புலம்புவது.
6.கிரிக்கெட் பேட்டால போட்டுத்தள்ளுனதால இவன் இனி கிரிக்கெட் சுந்தரம் என அழைக்கப்படுவான் என்பது
7.இந்தப்பக்கம் மசூதி ஏதாவது இருக்குங்களா?
என் வீட்டுக்குப்பக்கத்துல ஒரு மசூதி இருக்கு
வெரிகுட்,உங்க வீடு இருக்கு?
அதைத்தான் தண்ணி அடிச்ச மப்பில கண்டுபிடிக்கவே முடியல.


காரில் கடத்தப்பட்ட ஹீரோயினை ஹீரோ சவுண்ட்டை ஃபாலோ பண்ணியே 8 கி மீ ஓடுவது சாத்தியமே இல்லை.(குருதிப்புனல் கமலே பண்ணிட்டாரே)
ஒரு சீனில் (சாதா சீன்)ஹீரோயின் ஒயிட் &ஒயிட்டில் தலையில் ரோஸ் வைத்து வரும் சீன் கொள்ளை அழகு. (சீன் படமான த்ரீ வே லவ் படத்தில் ஒரு நீக்ரோ  ஃபிகர் வருமே)

செல்ஃபோனை கண்டுபிடிச்சவன் வேணா ஜப்பான்காரனா இருக்கலாம்,ஆனா மிஸ்டு காலை கண்டுபிடிச்சவன் தமிழன் தான் என விவேக் கூறுவது எஸ் எம் எஸ் ஜோக்தான்,ஆனால் அதற்கு தியேட்டரில் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.

அதேபோல் க்ளைமாக்சில் வில்லன் ஃபைட்டின் முடிவில் மோட்டார் போட்டிலிருந்து மல்லாக்க விழுவது செம ரிஸ்கி ஷாட்.

படத்தின் திரைக்கதையில் டைரக்டர் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும்.ஆனால் வந்தவரை இந்தப்படம் பி ,சி செண்ட்டர்களில் தலா 15 நாட்கள், ஏ செண்ட்டர்களில் 20 நாட்கள் மட்டுமே ஓடும்.முதலுக்கு மோசமில்லாத படம்.

Friday, September 03, 2010

சினிமா சிரிமா -உயர் தர சைவ சிரிப்பகம்

Hot Aishwarya Rai in black photoshoot
சினிமா சம்பந்தப்பட்ட ஜோக்ஸ்.இவை ஆனந்த விகடனிலும்,குமுதத்திலும் 2009 தீபாவளி மலரில் வெளிவந்தவை.அரசியல்வாதிகளையும் ,சினிமாகாரர்களையும் கிண்டல் செய்யும்போது நம் மக்கள் மிக மகிழ்ச்சி கொள்வதில் ஒரு உளவியல் ரீதியான காரணம் உள்ளது.நம்மால் அடைய முடியாத ஒரு உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே அது.
    1.  நிருபர் - மேடம்,நீங்க ஓவர் ஆக்டிங்க் பண்றதா எல்லாரும் சொல்றாங்களே?

      நடிகை - எனக்கு நடிப்பே வராதுனு சிலர் சொன்னாங்க,அதுக்கு இது எவ்வளவோ தேவலை.

    2. டைரக்டர் சார்,உங்க எல்லாப்படத்துலயும் க்ளைமாக்ஸ்ல ஹீரோ,ஹீரோயின்,வில்லன் எல்லாரும் செத்துடறாங்களே,ஏன்?
     
    சம்பளம்னு கேட்டு எவனும் என் வீட்டு வாசலை மிதிக்கக்கூடாதுனுதான்.
    3.படம் ஓடிட்டு இருக்கறப்ப கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு ஆள் அடிக்கடி வந்து ஹீரோயினை டச் பண்ணிட்டு போறாரே,எதுக்கு?

    அது வேற யாருமில்லை,படத்தோட டைரக்டர்தான்,டைரக்‌ஷன் டச் இல்லைனு யாரும் விமர்சனம் எழுதிடக்கூடாதே,அதுக்குதான்.

    4. படம் பூரா வில்லன் பபிள்கம் மென்னுக்கிட்டே இருக்காரு,ஒரு வசனம் கூட பேசலையே?

    அட நீங்க வேற,அவர் பேசுன எல்லா வசனத்தையும் சென்சார்ல கட் பண்ணிட்டாங்க.

    5. டைரக்டர் சென்சார் ஆஃபீசர்கிட்ட ஏன் தகராறு பண்றாரு?அவர் படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் குடுத்துட்டாங்களா?

    ம்ஹூம், யு சர்ட்டிஃபிகேட் குடுத்துட்டாங்களாம், ஏ சர்ட்டிஃபிகேட் குடுத்தாலாவது கூட்டம் வரும்,தயவு செஞ்சு ஏ சர்ட்டிஃபிகேட் தாங்கனு கெஞ்சறார்.

    6.இந்தப்படத்துல ஏகப்பட்ட டர்னிங்க் பாய்ண்ட்ஸ் இருக்குனு சொன்னீங்க,அப்படி ஒண்ணும் இல்லையே?

    என்ன இப்படி சொல்லீட்டீங்க,படம் பூரா ஊட்டில நடக்குது,ஹீரோ 4 தடவை ஊட்டி டூ மேட்டுப்பாளையம் போறாரு,எத்தனை டர்னிங்க் பாய்ண்ட்ஸ் வந்தது,நீங்க கவனிக்கலை?

    7.இந்தப்படம் செம சஸ்பென்ஸ் படம்னு எப்படி சொல்றீங்க?

    படத்தோட கதை என்னனு 4 தடவை பார்த்தாக்கூட எவனுக்கும் தெரியாது.

    8.சாரி,நான் ஒண்ணும் அப்படிப்பட்ட ஆள் கிடையாதுனு ஹீரோயின் டைரக்டர்கிட்ட கோபமா சொல்லிட்டு போறாங்களே,அப்படி என்ன நடந்தது?

    படம் பூரா சேலை கட்டிட்டு  கவுரவமான குடும்பப்பொண்ணா நடிக்கனும்னு டைரக்டர் சொல்லிட்டாராம்.

    9.சினிமால இருந்து அரசியலுக்கு வந்துட்டதால பாதிப்பேரு தமிழ் நாட்டுல சந்தோஷமா இருக்காங்களாம்.

    அரசியலை விட்டும் வந்துட்டீங்கன்னா மீதிப்பேரும் சந்தோஷமா ஆகிடுவாங்க.

    10.அம்மா,தாயே,சாப்பிட்டு 3 நாள் ஆகுதுனு ஹீரோ அடிக்கடி பேசறாரே, ஏன்?

    பஞ்ச் டயலாக் வெக்கச்சொன்னதுக்கு டைரக்டர் பஞ்ச டயலாக் வெச்சுட்டராம்.

    Thursday, September 02, 2010

    சிந்துசமவெளி - நாகரீகமா?அநாகரீகமா? 18+

    22 வருடங்களுக்கு முன் ஈரோடு  ரவி தியேட்டரில் (18. 6.1989) மழு என்ற மலையாளப்படம் ரிலீஸ் ஆச்சு.தமிழில் மாமனாரின் இன்ப வெறி என இவர்களாகவே மொழி பெயர்த்திருந்தார்கள்.கிட்டத்தட்ட அதே மாதிரியான கதை அமைப்பில் நாளை ரிலீஸ் ஆகும் இந்தப்படமும் சேரும்.

    இந்தப்படத்தில் 2 வெவ்வேறு துருவங்கள் இணைகின்றன.மிக கவுரவமான எழுத்துக்களுக்கும்,நுண்ணிய மனித உணர்வுகளின் நுட்பமான தருணங்களை நாவலில் வடிப்பவருமான எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதி இருக்கிறார்.இவர் எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்த லிஸ்ட்டில் விரைவில் வர இருப்பவர்.இவரது எழுதும் வேகம் அளப்பரியது.22 வருட பத்திரிக்கைத்துறை அனுபவத்தில் இவரைப்போல் சலிக்காமல் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுபவரை நான் கண்டதில்லை.

    இயக்குநர் சாமி உயிர் படம் மூலம் அண்ணி -கொழுந்தன் உறவில் ஏற்படும் ஒரு சிக்கலான தருணம் பற்றி படம்  எடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர்.படத்தில் காட்சி ரீதியாக ஆபாசம் இல்லை என்றாலும் கருத்து ரீதியாக கூட்டுக்குடும்பங்களிடையே பெரிய ஒரு சுணக்கத்தை ஏற்படுத்த வல்ல பாம் (படம்)அது.2வது படம் மிருகம் ஷீட்டிங்க் டைமில் நாயகி பத்மப்ரியாவை பளார் என அறைந்து ஒரு வருட காலம் டைரக்ட் பண்ண தடை பெற்றவர்.


    இப்படி 2 வேறு வேறு துருவங்கள் இணையும் இந்தப்படம் என்ன மாதிரி கதை?

    ரஷ்ய மொழியில் வெளி வந்த 3 காதல் கதைகள் என்ற நூல் தொகுப்பில் முதல் காதல் என்ற குறு நாவலே ஜெயமோகன் கை வண்ணத்தில் படம் ஆகி இருக்கிறது.
    இளம் காதல் ஜோடி திருமணத்திற்குப்பின் திடீர் என ஒரு கட்டத்தில் நாயகன் ஹரீஸ் காணாமல் போகிறார்.அவர் என்ன ஆனார்?உயிருடன் உள்ளாரா ,இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில் நாயகி அனகா மாமனார் (ராணுவ மேஜர் ரிட்டயர்டு) உடன் தொடர்பு ஏற்படுகிறது.திடீர் என காணாமல் போனதாகக்கருதபட்ட நாயகன் வருகிறான்.இப்போது நாயகியின் நிலை என்ன?யாருடன் ஜோடி சேர்கிறாள்?மாமனாருக்கு கிடைத்த தண்டனை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

    ஹீரோயின் கேரளத்துப்பார்ட்டி போல.நல்ல கவிதை பேசும் கண்கள்,நடிக்க பல சீன்களில் வாய்ப்பு.இந்தப்படத்துக்கு நல்ல விளம்பரம் ,தியேட்டர்களில் வைக்கப்பட்ட ரிச்சான ஸ்டில்கள் பி சி செண்ட்டர் ரசிகர்களை கவர்வதாக இருந்தன.ஒளிப்பதிவு தரமாக இருந்தது.மாமனாரின் அறிமுகக்காட்சியில் கமாண்டோ படத்தில் அர்னால்டு ஸ்வார்செனேகர் விறகு வெட்டி எடுத்துப்போவது போல் (பைசெப்ஸ் காண்பிக்கும் ஆண்மை தெறிக்கும்)சீனை சுட்டு ஏற்கனவே விஜய்காந்த் உளவுத்துறையில் சீன் வைத்திருந்தாலும் சாமி அது பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் அந்த சீனை சுட்டிருக்கிறார்.
    தமிழ் சினிமா நல்ல ஆரோக்கியமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.நாடோடிகள்,சுப்ரமணியபுரம்,அங்காடித்தெரு
    ,களவாணி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் சூப்பர் ஹிட் ஆகி புதுப்புது டைரக்டர்களை,புது கதையம்சமான படங்களை கோடம்பாக்கம் வரவேற்கத்தயாராகி வரும் இந்த நேரத்தில் சாமி மதிரி பெண்ணியத்தை கொச்சைப்படுத்துகிற ஒரு படைப்பாளியின் படைப்பு மக்களிடையே வரவேற்பு பெறாமல் போவதே நல்ல படைப்புகளை விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
      இயக்குநர் சாமி மீது தனிப்பட்ட பகையோ,கருத்து வேற்றுமையோ எனக்கு கிடையாது.நான் இன்னும் படமே பார்க்கவில்லை.ட்ரைலர் மட்டுமே பார்த்தேன்.மேலும் சில தகவல்கள் சினிமாத்துறையில் உள்ள உதவி இயக்குநர்கள் தந்து  உதவினார்கள்.சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் போராடும் பெண்ணிய அமைப்புகள் இந்தப்படம் பற்றி என்ன கருத்து கூறுவார்கள் என்பது நாளை தெரிந்து விடும்.