Tuesday, February 20, 2024

சைரன் (2024) = தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர் )


2022  ல்  ஷூட்டிங்  நடத்தி 2023  டிசம்பரில்  ரிலீஸ்  ஆவதாக  இருந்த  இந்தப்படம்  போஸ்ட்  புரொடக்சன் ஒர்க்  டிலே  ஆனதால் 16/2/2024  அன்று  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது .பொன்னியின்  செல்வன்  பாகம்  1  பாகம்  2  ஹிட்  ராசி  தொடர  தனி  கதாநாயகன்  ஆக  ஜெயம்  ரவி  நடித்த ஒரு வெற்றிப்படம்  நீண்ட  இடைவெளிக்குப்பின்  அவருக்கு  அமைந்ததில்  மகிழ்ச்சி 



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  ஆம்புலன்ஸ்  டிரைவர். நாயகி  ஹாஸ்பிடலில்  நர்ஸ். செவித்திறன்  அற்ற  பேசும்  திறன்  அற்ற  மாற்றுத்திறனாளி . இருவரும்  காதலித்துத்திருமணம்  செய்து  ஒரு  பெண்  குழந்தை  உண்டு . நாயகனின்  நண்பன்  ஒரு  பிற்படுத்தப்பட்ட  இனத்தைச்சேர்ந்தவன். அவன்  ஒரு  போலீஸ்  இன்ஸ்பெக்டரின் தங்கையைக்காதலிக்க  அவர்  ஆள்  வைத்து போட்டுத்தள்ள  முயற்சிக்கிறார். நாயகன்  நண்பனைக்காப்பாற்ற  வர  அவர்  மீது  காண்டான  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  மேலும்  சில  அரசியல்வாதிகள்  துணையுடன் நாயகனின்  மனைவியைக்கொலை  செய்து  விடுகிறார்கள் . நாயகன்  தான்  தன்  மனைவியைக்கொலை  செய்ததாக  ஃப்ரேம்  செய்து  ஜெயிலில்  தள்ளுகிறார்கள் . நாயகனுக்கு  ஆயுள்  தண்டனை  கிடைக்கிறது


14  வருடங்கள்  ஜெயிலில்  இருந்த  நாயகன்  இப்போது  தனது  அப்பா  உடல்  நிலை  சரி  இல்லாமல்  இருப்பதால்  அவரைப்பார்ப்பதற்காகவும், தன்  மகளைக்காணவும்  14  நாட்கள்  பரோலில்  வருகிறான். அவன்  வெளியே  வந்த  சில  நாட்களில்  நகரில்  அடுத்தடுத்து  சில  கொலைகள்  நடக்கின்றன. அந்தக்கொலைகள்  எல்லாம்  2005 ல்  ஏற்கனவே  நடந்த  கொலை  பேட்டர்னில்  நடக்கின்றன. அதனால்  குழம்பும்  போலீஸ்  நாயகன்  மீது  சந்தேகப்படுகிறது


இதற்குப்பின்  போலீசுக்கும், நாயகனுக்கும்  நடக்கும்  யுத்தம்  தான்  திரைக்கதை 


 நாயகன்  ஆக  ஜெயம்  ரவி   செந்தூரப்பூவே  விஜயகாந்த்  கேரக்டர்  மாதிரி  அடித்தொண்டையில்  பேசுவது  அருமை ,.இளமையான  கெட்டப்பை  விட  வயதான  கெட்டப்பில்  மனம்  கவர்கிறார்


போலீஸ்  ஆஃபிசர்  ஆக  கீர்த்தி  சுரேஷ். அவரிடம்  சிடு  சிடு  முகம்  இருந்தாலும்  வைஜெயந்தி  ஐபிஎஸ்  விஜயசாந்தி   மாதிரி  போலீஸ்  கம்பீரம்  இல்லை . ஆனால்  முடிந்தவரை  சமாளித்து  இருக்கிறார்


நாயகனின்  காதல்  மனைவியாக அனுபமா  பரமேஸ்வரன்  நாயகனுக்கு  சித்தி  மகள்  மாதிரி  இருக்கிறார். ஜோடிப்பொருத்தம்  ஒட்டவில்லை. ஆனால்   அழகான  முகம்,அவருக்கு  காட்சிகள்  அதிகம்  வைத்திருக்கலாம்


மெயின்  வில்லன்  ஆக சமுத்திரக்கனி, சைடு  வில்லன்களாக  அஜய் , அழகம்  பெருமாள்   வருகிறார்கள் . வில்லன்  கேரக்டர்கள்  இன்னும்  வலுவாக  அமைத்திருக்கலாம்


 காமெடியன்  ஆக  வரும்  யோகி  பாபு  க்டைசி  வரை  காமெடி  எதுவும்  செய்யவில்லை நாயகனின்  மகளாக  வரும்  யுவினா  பார்த்தவி  நடிப்பு  குட் 


நான்கு  பாடல்களுக்கு  இசை  அமைத்து  இருக்கிறார்  ஜி வி  பிரகாஷ் . அவற்றில்  இரண்டு  பாடலகள்  ஹிட் . பின்னணி  இசை  சாம்  சி எஸ் . காது  வலிக்கும்  அளவு  படம்  பூரா  ரெஸ்ட்  கொடுக்காமல்  டொம்  டொம்  என அதகளம்  பண்ணி  இருக்கிறார்


ரூபனின்  எடிட்டிங்கில்  படம் இரண்டரை  மணி  நேரம்  ஓடுகிறது.  எஸ்  கே  செல்வகுமார்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கச்சிதமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளன.


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஆண்டனி  பாக்யராஜ். இவர்  விஸ்வாசம்  படத்தின்  உதவி  திரைக்கதை  ஆசிரியர்   என்பதால்  அதே  அப்பா  மகள்  செண்ட்டிமெண்ட்  சீனை  காட்சிப்படுத்தி  இருக்கிறார். மேலும்  பாரதிராஜாவின்  ரசிகர்  என்பதால்  மெயின்  கதையை  ஒரு  கைதியின்  டைரியில்  இருந்து  எடுத்து  பட்டி  டிங்கரிங்  செய்து  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்

1  நீண்ட  இடைவெளிக்குப்பின்  ஜெயம்  ரவிக்கு  ஒரு  மீடியம்  ஹிட்  படம்  கொடுத்தது


2  ஏகப்பட்ட  படங்களில்  அடித்துத்துவைத்துக்காயப்போட்ட  ரிவஞ்ச்  ஆக்சன்  த்ரில்லர்  ஸ்டோரிதான்  என்றாலும்  போர்  அடிக்காமல்  திரைக்கதை  அமைத்ததில்  வெற்றி 


  ரசித்த  வசனங்கள் 


1   அவர்  அப்பாயிண்ட்மெண்ட்  இல்லாம  யார்ட்டயும்  பேச  மாட்டாரே? 


 நான்  பேசனும்னு  சொல்லலையே? விசாரிக்கனும்னு  தான்  சொன்னேன்


2  காத்திருப்பும், நிதானமும்  ரொம்ப  முக்கியம் 


3  அந்த  நர்சுக்கு  கல்யாணம்  ஆக்கிடுச்சா?


 டேய்  லூசு . அவங்களுக்குக்கல்யாணம்  ஆனதாலதானே  இவ  பிறந்தா , இவளுக்கு  இன்னும்  மேரேஜ்  ஆகல


 சரி . பண்ணிடுவோம்


4  வில்லன்  =  நான்  குத்திட்டுப்போறேன், நீ  தூக்கிட்டுப்போ 


 நாயகன் = நான்  தூக்கிட்டுப்போறேன், நீ  முடிஞ்சா  குத்திப்பாரு 


5  உயிரைக்காப்பாத்தறதுதான்  டாக்டர்கள்  வேலை , வேலை  போயிடுமேங்கறதுக்காக  உயிர்  போக  விடக்கூடாது 


6  கோபத்துல  கொலைகாரன்  எடுக்கும்  கத்தியை  விட போலீஸ்  எடுக்கும்  லத்தில  தான்  ஆபத்து  அதிகம்


7  போலீஸ்னா  தப்பை  தட்டிக்கேட்கலாம்,ஆனா  இங்கே  போலீஸ்  தட்டிக்கேட்கும்  விஷயமே  தப்பா  இருக்கே? 


8  உன்  பாட்டனுக்குப்பாட்டன்  காலத்துல  இருந்தே  ஜாதி  இருக்கு , இப்ப  வந்து  அதை  மாத்தனும்னு  நினைக்காத


  உண்மைதான், என்  பேரனுக்குப்பேரன்  காலத்துல  கூட  அதை  மாத்த  முடியாதுன்னா    எப்படி ?


சாதி இல்லன்னு ஒருத்தன் சொன்னா அவன் எந்த சாதினு தேடறத விடுங்க”


10  தினமும்  எமனைத்தோளில்  போட்டு  வேலை  செய்யற  எங்களை பயமுறுத்தலாம்னு  நினைச்சா  எப்படி ?


11   தீ  தொட்டா  சுடுமா?னு  தெரியாது  , ஆனா  சாம்பல்  சுடும் 


12 நான் ஜெயில்ல இருக்குறது தான் என் பொண்ணுக்கு சந்தோஷம்னா அவளுக்காக நான் அதையும் பண்ணுவேன்”

13   அடிக்கிறவனை  விட்டுட்டு  அவனை  எதுவும்  சொல்லாம  திருப்பி  அடிக்கிறவனை  மட்டும்  கேள்வி  கேட்பது  சரியா? 


14  நான்  நல்லவன்னு  தெரிஞ்சு  நான்  ஜெயிலுக்குள்  இருப்பதை  நினைத்து  என்  மகள்  துடிப்பதை  விட  நான்  கெட்டவன்னு  நினைச்சு  நான்   ஜெயிலுக்குள்  இருப்பதை  நினைத்து  என்  மகள் சந்தோஷப்படுவது  நல்லதுதான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  காமெடியன்  யோகிபாபு  போலீஸா  வர்றார். ரெண்டு கிலோ  தொப்பையோட  வர்றது  கூட  தேவலை  நாலு  கிலோ  புசு  புசு  தலையோட  வர்றாரே? போலீஸ்  கட்டிங்க்னா  என்னன்னே  தெரியாதா?


2 நாயகன்  ஒரு  பேச்சுக்கு  சாப்பிட  வா  என  கூப்பிட்டதும்  காமெடியன்  பூட்ஸ்  காலோட  கிச்சன்  ரூம்க்கு  வர்றாரே?


3  ஆம்புலன்ஸ்  வண்டியில்  சைரன்  வைத்திருப்பதே  மக்கள்  அதற்கு  வழி  விடத்தான், ஆனால்  நாயகன்  வழி  விடுங்க , உள்ளே  குழந்தை  இருக்குனு  சவுண்ட்  குடுத்துட்டே  ஆம்புலன்ஸ்  ஓட்றாரே?  எந்த  ஆம்புலன்ஸ்  டிரைவர்  அப்படி  சவுண்ட்  குடுத்துட்டே  வண்டி  ஓட்றார்?


4  ஆம்புலன்ஸ்  வேனில்  பேஷண்ட்  கூடவே  ரிலேடிவுஸூம்   நர்சும் இருப்பாங்க . நாயகனே  ஆம்புலன்ஸூம்  ஓட்டி  , பேஷண்ட்டையும்  தூக்கிட்டு  வர்றார். டபுள்  ட்யூட்டி 

5  நாயக்ன்  வில்லன்களில்  ஒருவனைக்கொலை  செய்ய  பாலீதீன்  கவரை  யூஸ்  பண்ணி  அதை  அங்கேயே  அனாமத்தா  விட்டுட்டுப்போறான், அதில்  இருக்கும்  கை  ரேகையை  ட்ரேஸ்  பண்ணி  இருந்தாலே  கொலைகாரன்  இவன் தான்  என்பது  தெரிந்து இருக்கும், இடைவேளையோடு  படத்தை  முடிச்சிருக்கலாம், 7  ரீல் மிச்சம்  ஆகி  இருக்கும் 


6  பொதுவாக   சாட்சி யை  முகத்தை  மறைத்து  அடையாள  அணிவகுப்புக்கு  அழைத்துச்சென்று  குற்றவாளி  யார்? என்பதை  அடையாளம்  காட்டச்சொல்வார்கள் . ஆனால்  20  போலீஸ்காரர்களை  நிற்க  வைத்து  நாயகி  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  சாட்சியிடம்  இந்த  போலீஸ்காரங்களில்  யார்  குற்றவாளி  என  கேட்கிறார். சாட்சியின்  முகம்  ஓப்பனாகத்தெரியும்போது  அவன்  எப்படி  பயம்  இல்லாமல்  அடையாளம்  காட்டுவான் ? 


7   காமெடியன்  ஆன  யோகிபாபு  சாதா  கான்ஸ்டபிள். ஒரு இடத்தில்  ஹையர்  ஆஃபீசர்  ஆன    நாயகியிடம்  தனியாகப்பேசனும்  என்னும்போது  கூட  இருந்த  இன்ஸ்பெக்டர்  நகரவில்லை. மேனர்ஸ்  தெரியாதவன்  என  முணுமுணுக்கிறார். ஒரு  சாதா  காப்  ஒரு  இன்ஸ்பெக்டரை  அவன்  இவன்  என்று  சொன்னால்  சும்மா  விடுவார்களா? 


8  நாயகன்  காமெடியனிடம்  அந்த  மேடம்  டேபிளில்  இருக்கும்  போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட்  எனக்கு  வேண்டும்  என்கிறான். உடனே  காமெடியனும்  அந்த  ஃபைலை  எடுத்துத்தருகிறான், அது  எவ்ளோ  பெரிய  ரிஸ்க்? போஸ்ட்மார்ட்டம்  ரிப்போர்ட்டை  செல்  ஃபோனில்  ஃபோட்டோ  எடுத்துத்தருவதுதானே  ஈசி , ? பாதுகாப்பு ? 


9  நாயகன்  லவ்  ஃபெய்லியர்  கிடையாது , சோம்பேறியும்  இல்லை , கஞ்சா  கேசும்  இல்லை . ஏன்  மேரேஜ்  அன்னைக்குக்கூட  தாடியோட  இருக்கார்? ஏதாவது  மறைக்க  வேண்டிய  வெட்டுத்தழும்பு  இருக்கா? 


10  நாயகனின்  நண்பனை  வில்லன்  க்ரூப்  10  பேர்  துரத்துகிறார்கள் . ஒரு  குடோனில்  ஒளிந்து  இருக்கும்போது  அவர்கள்  அவனை  கார்னர்  பண்ணி  தேடுகிறார்கள் . அப்போது  செல்  ஃபோனை  சைலண்ட்  மோடில்  போட  மாட்டாரா?  ரிங்க் டோன்  வந்து  காட்டிக்கொடுக்கிறது . இதுவரை  ஒரு  லட்சம்  படங்களில்  இப்படி  சீன்  வைத்தாயிற்று. புதுசா  யோசிங்களேன்பா 


11  நாயகன்  மேல்  போலீஸ்க்கு  சந்தேகம்  வந்த  பின்பும்  மீண்டும்  மீண்டும்  ஏன்  காமெடியன்  யோகிபாபு வையே நாயகனுக்கு  பாதுகாவலாய்  அமார்த்த  வேண்டும்? ஆள்  மாற்றலாமே?


12   தகரத்தை  தரையில்  தேய்த்தால் அந்த  கர்ண  கடூர  சத்தத்தில்  காதில் ரத்தம் வந்து  இறப்பது  எல்லாம்  ஓவர்  காதில்  பூ  சுற்றல்


13  நாயகி  கீர்த்தி சுரேஷ்  மீது  லாக்கப்  டெத் விசாரணை  நடப்பது  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது , மேலும்  அது  விஷூவலாகக்காட்டப்படாமல்  வெறும்  வசனமாகவே  கடந்து  போவதால்  பாதிப்பு  அதிகம்  ஏற்படுத்தவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு  கைதியின்  டைரி , விஸ்வாசம்  இந்த  இரண்டு  படங்களையும்  பார்க்காதவர்கள் , ஜெயம்  ரவி  ரசிகர்கள்  படம்  பார்க்கலாம் . போர்  அடிக்காமல்  போகிறது . ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க்  42 ,  குமுதம்  ரேட்டிங்  ஓக்கே . அட்ரா  சக்க  ரேட்டிங்   2.5 / 5 


Siren
Theatrical release poster
Directed byAntony Bhagyaraj
Written byAntony Bhagyaraj
Produced bySujatha Vijayakumar
Starring
CinematographySelvakumar S. K.
Edited byRuben
Music by
Production
company
Home Movie Makers
Distributed byRed Giant Movies
Release date
  • 16 February 2024
CountryIndia
LanguageTamil

Monday, February 19, 2024

ஆயிரம் பொற்காசுகள் (2023) தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)

   


 2017ம் ஆண்டு  தொடங்கப்பட்ட  இப்படம் 2018 ல்  ஷூட்டிங்  நடத்தி  2019ஆம்  ஆண்டு படம்  எடுத்து  முடிக்கப்பட்டது , ஆனால்  ரிலீஸ்  ஆனது  என்னவோ 2023 ஆம் ஆண்டு  டிசம்பர்  15  அன்று  தான் . பத்திரிக்கைகள்  அனைத்தும்  இதற்கு  பாசிட்டிவ்  விமர்சனங்களையே  வைத்தன. 


 100  கோடி  ரூபாய் சம்பளம்  கொடுத்து  ஆக்சன்  ஹீரோ  கால்ஷீட்  வாங்கி  கஷ்டப்பட்டு பழைய  ஆக்சன்  படத்தை  ரீமேக்கி  நட்டம்  ஆக்கும்  மசாலாக்குப்பைப்படங்களுக்கு  நடுவே  ஆரோக்யமாக  சொந்தமாக  யோசித்து  அதிகம்  புகழ்  பெறாத  நடிகர்களை  வைத்து  படம்  எடுத்து  நல்ல  திரைக்கதையை  நம்பும்  இயக்குநர்கள்  இதே  போல்  வெற்றி  பெற  வேண்டும், அந்த  வெற்றி  தான்  ஆரோக்யமான  சினிமா  உருவாக  வழி  கொடுக்கும்  ஹீரோக்கள்  சம்பளம்  எகிறுவதும்  குறையும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  வெட்டாஃபிஸ். தன்  தாய்  மாமா  வீட்டில் இருக்கிறான். அந்த  ஊரில்  எல்லோரும்  அவரவர்  வீட்டில் கழிப்பறை  கட்டி  இருக்க  வேண்டும். அதற்கு  சன்மானமாக  ரூ  12,000  கிடைக்கும்  என   கிராமத்தில்  சொல்லப்பட்டு  ஊரில்  எல்லோரும்  கட்டி  விட்டார்கள் . நாயகனின்  தாய்  மாமா  மட்டும்  கட்டவில்லை 


 ஒரு  ஆளை  வைத்து  கழிப்பறை  கட்ட  குழி  தோண்டும்போது  ஒரு  பானையில்  தங்கக்காசுகள் புதையல்  ஆகக்கிடைக்கிறது . அந்தப்புதையலை  மூன்று  பேரும்  மூன்றாகப்பிரித்துக்கொள்ளலாம்  என  முடிவு  செய்தால்  பின்  ஒவ்வொருவருக்கும்  விஷயம்  தெரிந்து  பார்ட்னர்கள்  எண்ணிக்கை  கூடிக்கொண்டே  போகிறது . ஒரு  கட்டத்தில்  போலீஸ்  , ஊர்  மக்கள்  எல்லோருமே  பார்ட்னர்கள்  ஆக  க்ளைமாக்ஸ் ல  என்ன  திருப்பம்  என்பது  பார்த்துத்தெரிந்து  கொள்ளவும் 


நமக்குப்பழக்கமான  சிம்ப்பிளான  ஒன்  லைன்  ஸ்டோரிதான். ஆனால்  அதை  கலகலப்பான  திரைக்கதை  ஆக்கி   நமக்கு  பிரசண்ட்  செய்த  விதத்தில்  மனம்  கவர்கிறார்  இயக்குநர்  ரவி  முருகையா 


  நாயகன்  ஆக  விதார்த் . இவருக்கு  அமையும்  படங்கள்  எல்லாமே  வித்தியாசனமான  கதை  அம்சம்  உள்ள  படங்கள்  தான், ஆனால்  இது வரை  ஒரு  மெகா   ஹிட்  அமைய வில்லை . 6  வருடங்களுக்கு  முன்  எடுக்கப்பட்ட  படம்  என்பதால் இளமையாகத்தெரிகிறார்


 சரவணன்  நடிப்பும்  அருமை .நாயகி  ஆக  அருந்ததி  நாயர். அதிக  வேலை  இல்லை , வந்த  வரை  சிறப்பு .அரிச்சந்திரன்  ஆக  வரும் ஜார்ஜ்  மரியன்  நடிப்பும்  அட்டகாசம், கைதி  படத்துக்குப்பின் இவர்  கவனிக்கத்தக்க  நடிகராக  மாறி  வருகிறார்


படத்தில்  வரும்  அனைத்து  சின்னச்சின்ன  கதாப்பாத்திரங்களும்  உயிர்ப்புடன்  உலா  வருகின்றன.


பானு  முருகனின்   ஒளிப்பதிவில்  கிராமத்து  யதார்த்தமான  மனிதர்களை  இயல்பாகப்படம்  பிடித்திருக்கிறார். இயோகன்  இசையில்  மூன்று பாடல்கள் , ஒரு  பாட்டு  செம  ஹிட் இரண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்கள் . முதல்  20 நிமிடங்களில்  கதைக்கு  வந்து  விடுகிறாகள் .  கடைசி  15  நிமிடங்கள்  காமெடி  கலாட்டா  தான்

கலகலப்பான  திரைக்கதைக்கு  வசனம்  எழுதி  உயிர்  கொடுத்திருப்பவர்  ரவி  முருகையா  

சபாஷ்  டைரக்டர்

1   நாயகி  டெய்லி  காலைல  லெட்டர்  எழுதி  வெச்சுட்டு  ஓடிப்போவதும்  அன்று  மாலையே  ரிட்டர்ன்  வந்து  ப்ரோகிராம்  கேன்சல்  என  வைத்த  லெட்டரை  எடுத்து  விடுவது  நல்ல  காமெடி 


2  நாயகன் விதார்த் , சரவணன்  ஆகிய  மாமா , மாப்ளை  இருவருக்கும்  இடையேயான  கெமிஸ்ட்ரி  நன்கு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


3  நாயகனின்  பக்கத்து  வீட்டுக்காரராக  வருபவரின்  நடிப்பு  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்  என்றாலும்  ரசிக்க  முடிகிறது .


4   தலையில்  அடிபட்டவர்  நான்  உன்னை  எங்கேயோ  பார்த்திருக்கிறேனே  என  எல்லோரிடமும்  சொல்ல  ஒவ்வொரு  சிச்சுவேஷனிலும்  காமெடி  ஒர்க்  அவுட்  ஆன  விதம் 


5   போலீஸ்  ஸ்டேஷனுக்கு  ஒருவர்  அடிக்கடி  ஃபோன்  பண்ணி  ஒரு  கொலை  நடந்திருக்கு , கண்டு பிடிச்சதும்  நானே  அப்டேட்  தர்றேன்  என  அடிக்கடி  இன்ஃபார்ம்  பண்ணி  கட்  பண்ணுவது  செம  காமெடி 


6  கடைசி  20  நிமிடங்கள்  ஊரே  ஒன்று  திரண்டு  ஓடுவது   அங்கங்கே  ரெஸ்ட்  எடுப்பது  என  காமெடி  களை  கட்டுகிறது 


செம  ஹிட்  சாங்க்


1  துட்டுக்கு  கோவைக்கா , ஹார்ட்டுக்கு   கொய்யாக்கா , அவ்வைக்கு  நெல்லிக்கா 


  ரசித்த  வசனங்கள் 


1   சிகரெட்  பழக்கம் எல்லாம்  உனக்கு  உண்டா?  எங்க  அம்மா, அப்பா  அதெல்லாம்  எனக்கு  பழக்கலை 


 எனக்கு  மட்டும்   பாலில்   பான்பராக்  போட்டா  வளர்த்தாங்க ?


2   வெஸ்ட்  இண்டீஸ்  தோத்துடுச்சாமே?


 நான்  சவுத்  இண்டியன்  பற்றிப்பேசிட்டு  இருக்கேன், உன்  கடைக்கு  ஒரு  புது  ஆள்  வர்றானாமே?


3  நான்  கோபக்காரன்னு  எனக்கு  மட்டும்  தான்  தெரியும் 


4  தொழில்  பண்ற  இடத்துல  என்னய்யா  நொய் நொய்னு  சத்தம்  பண்ணீக்கிட்டு 


 இவரு  பெரிய  அம்பானி , என்னய்யா  பண்றே? அங்கே?


 கவுதாரி   பிடிக்க  உக்காந்திருக்கேன், ஒரு  ஜோடி  பிடிச்சா  80  ரூபா  கிடைக்கும்ங்க 


 இவனா  புதையலைத்திருடி  இருப்பான் ? 


5  அன்னைக்கு ஸ்டேஷன்ல  கேட்டப்போ  இவனைத்தெரியாது , பழக்கம்  இல்லைனு  சொன்னே?


ம்   தெரியும், ஆனா  பழக்கம்  இல்லை 


என்னது ?


 ஆங்க்.. பழக்கம்  உண்டு  ஆனா  தெரியாது 


6  எனக்கு  ஒரு  ஷேர்  குடுங்க 


 இன்ஸ்பெக்டர் தான்  கேட்கறார்  இல்லை ? ஒரு  பழைய  ச்சேர்  கொடுத்து  அனுப்புங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஆயிரம்  பவுன்  தங்கக்காசுகள்  எவ்ளோ  வெய்ட்  இருக்கும் ? அதை  அஸ்தி  என  பொய்  சொல்லும்போது  தூக்கிப்பார்க்கும்  ஆள்  இவ்ளோ  வெய்ட்டா  இருக்கே?   என டவுட்  படவே  இல்லையே? 


2  நாயகியின்  அம்மா  மளிகைக்கடை  வைத்திருக்கிறார். மிக்சர்  பொட்டலம்  போடனும்  வா  என  மகளை  பட்டப்பகலில்  கடையை  சாத்தச்சொல்லி  அழைத்து  செல்கிறார். பகலில்  கடையை  சாத்தினால்  வியாபாரம்  பாதிக்காதா?   கடையை  மூடி  பின்  நைட்  டைம்  தானே  பேக்கிங்  பண்ணுவாங்க ?


3  நாயகன்  படித்தவர்,  மயக்கமாக  இருப்பவருக்கும், பிணத்துக்கும்  வித்தியாசம்  தெரியாதா?  மூச்சு  வருதா?  என  செக்  பண்ண  மாட்டாரா? 


4  ஒரு  காட்சியில்  நாயகனும், சரவணனும்  டீக்க்டையில்  டீ ஆர்டர்  பண்ண  டீக்கடைக்காரர்  இந்த  டீயை  அவங்க  கிட்டேக்கொடு  என்கிறார். அந்த  ரெண்டு  டம்ளரிலும்  பால் தான்  இருக்கு 


5  பொற்கொல்லனிடம்  ஒரு  காசை  மட்டும்  காட்டி  வேல்யூ  பார்க்கும்போது  அவன்  புதையல்  கிடைத்திருக்கலாம்  என  யூகமாக  அடித்து  விட  அவனுக்கும்  ஒரு பங்கு  தர  முடிவெடுப்பது  நம்பும்படி  இல்லையே? பொதுவாக  திருட்டு  நகை  அல்லது  பொற்காசு  இதை  உள்ளூரிலா  விற்பார்கள் ? வெளியூரில்  ஆள்  பிடித்து  அவர்கள்  மூலமாகத்தானே  விற்பார்கள் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காமெடிப்பிரியர்கள்  , கிராமத்துக்காமெடியை  விரும்புபவர்கள்  பார்க்கலாம். தரமான  நகைச்சுவைப்படம் . ரேட்டிங்  3 / 5 

Sunday, February 18, 2024

குண்ட்டூர் காரம் -தெலுங்கு /(தமிழ்) -சினிமா விமர்சனம் ( கமர்ஷியல் ஆக்சன் ஓவர்லோடட் மசாலா)@ நெட் ஃபிளிக்ஸ்


   200  கோடி  ரூபாய்  செலவு  செய்து  எடுக்கப்பட்டு  171  கோடி  மட்டுமே  வசூல்  ஆன  டப்பா  படம்  இது . பொதுவாக  தெலுங்கு  ரசிகர்கள்  டப்பாப்படங்களை , குப்பைப்படங்களை  ஓட  வைத்து  விடுவார்கள் . இதில்  ஏனோ  மிஸ்  ஆகி  விட்டது. 


  நான்  சின்னப்பையனாக  இருந்தபோது  ஒக்கடு (2003) பட  நாயகனான  மகேஷ்  பாபு , காதல்  தேசம் (1996) பட  அப்பாஸ்  இருவ்ரும்  பெரியப்பா  பையன், சித்தப்பா  பையன்  என்றே  நினைத்தேன். இருவருக்கும்  மைதா  மாவு  மாதிரி  முக  கலர் , இடியே  விழுந்தாலும்  உணர்ச்சி  காட்டாத  அல்லது  காட்டத்தெரியாத  முக  பவனை.. என்ன? ஒருவர்  எப்படியோ  சூப்பர் ஸ்டார்  ஆகி விட்டார்


திரைக்கதை  எழுதுபவர்கள்  அவசியம்  காண  வேண்டிய  படம்  இது , மக்களை  மடையர்கள்  என  நினைத்துக்கண்டபடி  செண்ட்டிமெண்ட்  சீன்களை  புகுத்தினால்  ஓடி  விடும்  என  நினைத்தவர்களுக்கு  மரண  அடி  கொடுத்திருக்கிறார்கள் , மிக்க மகிழ்ச்சி 


ஒரு  நல்ல  தரமான  படத்தை  அடையாளம்  காட்டுவது எந்த  அளவு  முக்கியமோ  அதே  அளவு  ஒரு  குப்பைப்படத்தையும்   அடையாளம்  காட்ட  வேண்டியது  அவசியம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பாட்டுக்கு  சிவனே  அல்லது  பார்வதியேனு  அவர்    உண்டு  அவர் மிளகாய்  மண்டி  உண்டுனு இருக்கார். அப்போ  வில்லன்  ஆன  அவர்  தாத்தா  அவரை  ஆஃபீசுக்கு  வர  வைக்கிறார். வில்லன் ஒரு  அரசியல்வாதி . அவரோட  மகள்  அதாவது  நாயகனின்  அம்மா  சட்ட  அமைச்சர்


ஒரு  ஃபிளாஸ்பேக். நாயகனின்  அம்மா  லவ்  மேரேஜ். ஜாதிக்கட்சித்தலைவரா  இருந்த  தன்  அப்பா  சொல் பேச்சு  கேட்காம  வேற  ஜாதிப்பையனை  லவ்  பண்ணி கல்யாணம்  பண்ணி  குழந்தையும் பெத்துக்கறார்.அப்போ  அதை  தடுக்க  முடியாத  வில்லன்  10 வருசம்  கழிச்சு  தன்  மகளைக்கடத்தி  வந்து  வேறு  ஒரு    மாப்பிள்ளைக்குக்கல்யாணம்  கட்டி  வைத்து  விடுகிறார்.. 25  வருடங்கள்  கழித்துத்தான்  அவருக்கு  நினைவு  வருது. நாயகன்  இருந்தால்  பிரச்சனை. அவனைப்போட்டுத்தள்ளிட்டா  படமே  எடுக்க  முடியாது . அதனால்  அவனை  அழைத்து  வந்து  மிரட்டி  நான்  இவங்க  மகன்  இல்லை  என  எழுதி  வாங்கிக்கலாம்னு  முட்டாள்  தனமா ஐடியா  பண்றார்


நாயகன்  தாத்தா  வீட்டுக்கு  வந்து  தாத்தா  வீட்டில்  எடுபுடியா  இருக்கும்  ஒரு  ஆளின்  மகளை  லவ்  பண்ணீட்டு  இருக்காரு . இதுக்குப்பின்   என்ன  என்ன  மடத்தனமான  திருப்பங்கள்  நிகழ்ந்தன  என்பதுதான்  பின்  பாதி  காதில்  பூச்சுற்றும்  கதை  


லியோ படத்தில்  ஹீரோவை  ஆளாளுக்கு  வந்து  மிரட்டுவங்க . நீதானே? லியோ ஒத்துக்கோ ஒத்துக்கோ. அந்த  கான்செப்ட்டையே  சமூக  வலைத்தளங்களில்  ஆளாளுக்கு  எள்ளி  நகையாடினார்கள் . இதில்  அடுத்தடுத்து  நாயகனை  வீட்டு க்கு  வர  வைத்து  வில்லன்  இந்த  பத்திரத்தில்  கையெழுத்துப்போடு  என  கேட்டுக்கொண்டே  இருக்கிறார்


நாயகன்  ஆக  மகேஷ்  பாபு .. 500  பேர்  வந்தாலும்  அசராமல்  அடிக்கிறார். நாயகியிடம்  ஜொள்  விடுகிறார். இதை  விட  ஒரு  ஆக்சன்  ஹீரோ  என்ன  செய்யனும் ?


நாயகி  ஆக  ஸ்ரீ லீலா  அழகு  பொம்மை  ஆக  வருகிறார்.பணக்கார  வீட்டில்  இருந்தாலும்  பாவம்  அரை  குறை  டிரஸ்  உடன்  அலைகிறார். ஒரு  டப்பாங்குத்துப்பாட்டுக்கு  செம குத்தாட்டம்  போட்டிருக்கிறார். சி  செண்ட்டர்  ரசிகர்கள்  எல்லாம்  விசில்  அடித்து  ரசிப்பார்கள் 


அம்மா  ஆக  ரம்யா  கிருஷ்ணன்.  ஓவர்  மேக்கப் , ஆனால்  முகத்தில்  நீலாம்பரியின்  கம்பீரம்  அப்படியே  இருக்கிறது . தாத்தா  ஆக  பிரகாஷ்  ராஜ். வயதான  கெட்டப்பில்  பரிதாபம்  ஆக  இருக்கிறார்


  தாத்தா  தான்  வில்லன் , பேரன்  தான்  நாயகன்  என்று  ஆன பின்  திரைக்கதை  படுத்து  விடுகிறது 


மீனாட்சி சவுத்ரி , ஜெகபதி பாபு , ஜெயராம்  என  வீணடிக்கபப்ட்ட  நல்ல  கலைஞர்கள்  உண்டு 


எஸ்  தமன்  இசையில்  ஆறு  பாடல்கள்  . அதில்  இரண்டு  செம  ஹிட் . பின்னணி  இசை  ஓக்கே  ரகம். க்ளைமாக்ஸ்  குத்துப்பாட்டுக்கு  நடனம்  அமைத்தவர்  கலக்கி  இருக்கிறார்


மனோஜ்  பரமஹம்சா , வினோத்  இருவரும் ஒளிப்பதிவு . காட்சிகளை  பிரம்மாண்டமாகப்படம்  ஆக்கி  இருக்கிறார்கள் . 


நவீன்  நூலி  தான்  எடிட்டிங் . 159  நிமிடங்கள்  படம் ஓடுகிறது 


த்ரிவிக்ரம்  சீனிவாஸ்  தான் இயக்குநர். ஆந்திராவில்  அதிக  சம்பளம்  வாங்கும்  ஸ்க்ரிப்ட்  ரைட்டர்  கம்  டைரக்டர். யானைக்கு  அடி  சறுக்கி  விட்டது 


சபாஷ்  டைரக்டர்


1  கொஞ்சம்  கூட  நம்பகத்தன்மையே  இல்லாத  ஒரு  கதையை  நம்பி  200 கோடி  செலவு  பண்ண  தயாரிப்பாளரை  ஒத்துக்கொள்ள வைத்த்து 


2  க்ளைமாக்ஸ்  குத்தாட்ட;ப்பாட்டை  படம்  எடுத்த  விதம் 



 ரசித்த  வசனங்கள் 


1   ஒரு  அம்மா  தன்  பிள்ளையை  விட்டுப்போகனும்னா  செத்துத்தான்  போகனும் 


2   மரத்து  மேல  கல்லெறிஞ்சா பழம்  கிடைக்கும், சேற்றின் மேல்  கல்  எறிஞ்சா  நம் மீதுதான்  சேறு  விழும்


3   சும்மாவே  உன்  கண்ணைப்பார்க்க முடியலை, இதுல  ஐ லைனர்  வேற  போட்டுகிட்டா  யப்பா 


4   எல்லாப்பொண்ணுங்க  கிட்டேயும்  இப்படித்தான்  பேசுவியா?


  ரொம்ப  அழகான  பெண்ணுங்க  கிட்டே  மட்டும் 


5  சாப்பாடு  வேண்டாம்னு  சொன்னா  நாள்  முழுக்க  பசியோடு  இருக்கனும், அம்மா  வேண்டாம்னு  சொன்னா  வாழ்க்கை  பூரா  கண்ணீரோடுதான்  இருக்கனும்


6   எனக்குப்பதவி  தராம  உங்க  மகளுக்குப்பதவி  தர  அவ  என்ன  பெருசா  கிழிச்சுட்டா? ரெண்டு  கல்யானம்  பண்ணுனது  எல்லாம்  ஒரு  சாதனையா? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  கோடி  ரூபா  சம்பளம்  பேசி  ஹீரோ  வை  அடிக்க  ஆள் வைக்கும்  வில்லன் ரெண்டு  கண்ணும்  தெரியாத  ஆளையா  செலக்ட்  பண்ணுவான்? அய்யோ  பாவம் 


2  ஒரு  முக்கியமான  வில்லனைப்பார்க்க  ஹீரோ ஸ்பாட்டுக்கு  வரும்போது  அங்கே  ஒரு  மொட்டையன்  பஜ்ஜி சுட்டுட்டு  இருக்கான், அவனிடம்  விசாரித்தால்  ஒரு  ஆளைக்காட்ட  அவன்  கூட  ஃபைட்  போடுகிறார். அப்றம்  தான்  அந்த  பஜ்ஜி  சுட்ட  மொட்டையன்  தான் நிஜ  பாஸ்  என  ட்விஸ்ட் வருது , இது குருதிப்புனல்  ட்விஸ்ட் 


3    நாயகனை  அரெஸ்ட்  பண்ண  வரும்  போலீஸ்  ஆஃபீசர்  அவரைக்கண்டு  பயந்து  ஓடுவ்து  எல்லாம்  டூ மச்  மசாலா , ஹீரோயிசம்


4  மத்திய  அமைச்சராக  இருக்கும் ஒரு  நபர்  25  வருடஙகளாக  அப்பாவுக்கு  பயந்து  கொண்டா  இருப்பார்?  ஒரு  நாள்  கூட  அவரை  ஏமாற்றி  புருசனை , மகனை  பார்க்க  வர  முடியாதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்த  மாதிரி  குப்பைப்படங்களைப்பார்க்கவும்  ஒரு ரசிகர்  பட்டாளம்  இருக்கிறது . ரேட்டிங்  1/ 5 



Guntur Kaaram
Theatrical release poster
Directed byTrivikram Srinivas
Written byTrivikram Srinivas
Produced byS. Radha Krishna
Starring
Cinematography
Edited byNaveen Nooli
Music byThaman S
Production
company
Release date
  • 12 January 2024
Running time
159 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget200 crore[2][3]
Box officeest. ₹171.5 crore[4]

Saturday, February 17, 2024

VIDHI (2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


 சுஜாதா - ஜெய்சங்கர்  வக்கீல்களாகக்கலக்கிய  விதி (1984)  தமிழ்ப்படத்துக்கும் , இந்த  தெலுங்குப்படத்துக்கும்  எந்த  ஒரு  சம்பந்தமும் இல்லை . இரண்டும்  வேறு  வேறு  கதைக்களம். அது  கோர்ட்  ரூம்  டிராமா . இது க்ரைம்  த்ரில்லர் . மேஜிக்  கில்லர்  பென் என்ற  கான்செப்டில் 105  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும்  இப்பட்த்தை  குயிக்  வாட்ச்  ஆகவே  பார்த்து  விடலாம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் , நாயகி  ஆகிய  இருவருமே  சின்ன  வயதில்  இருந்தே  ஃபிரண்ட்ஸ், இருவருக்குள்ளும்  பரஸ்பரம்  காதல்  இருந்தும்  இருவருமே  வெளிப்படுத்திக்கொள்ளவில்லை . நாயகனுக்கு  அம்மா  மட்டும்  உண்டு . அவர்கள் வீடு  கடனில்  இருக்கிறது . குறிப்பிட்ட  நாளுக்குள்  வீட்டை  மீட்கா  விட்டால்  வீடு  கை மாறி விடும்  அபாயம் இருக்கிறது 


 நாயகிக்கு  திடீர்  என  கிட்னி யில் பிராப்ளம். கிட்னி  ட்ரான்ஸ்ப்ளேண்ட்டேஷனுக்கு  ரூ  6  லட்சம்  தேவைப்படுகிறது .. இந்த  இக்கட்டான  சூழலில்  நாயகன்  கை  வசம்  ஒரு  மேஜிக்    கில்லர்  பேனா  கிடைக்கிறது . அதன்  சக்தி பற்றி  நாயகனுக்கு  முதலில்  தெரியாது 

நாயகனின்  நண்பர்கள்  இருவர்  அவனிடம்  அந்தப்பேனாவை  வாங்கி  ஏதோ  எழுதி  விடுகிறார்கள் . அடுத்த  நாளே  விபத்தில் இறந்து  விடுகிறார்கள் . முதலில்  அது  பற்றீய  ப்ரிதல்  இல்லாத  நாயகன்  அதை  செக் செய்து பார்க்க  நினைக்கிறான்


 நாயகியின்  ஆஃபீஸ்  மேனேஜர்  ஒரு  ஜொள்ளு  பார்ட்டி . அவன்  நாயகியை   தொல்லை  கொடுத்துக்கொண்டு  இருப்பதாக  நாயகி  புகார்  செய்ய  நாயகன்  அந்த  மேனேஜரிட்ம்  மேஜிக்  கில்லர்  பேனாவைக்கொடுத்து  ஆட்டோகிராஃப்  கேட்கிறான்


மெனேஜ்ருக்கு  என்ன  ஆனது ?  நாயகன்  வீட்டை  கபளீகரம்  செய்த  வில்லன்  க்ரூப்பையும்  இதே  பாணியில்  பழி  வாங்கினானா? மேஜிக்  பென்  விபரம்  தெரிந்த  இன்னொரு நண்பனுக்கு  என்ன  கதி  ஆனது ? நாயகனின்  அம்மா,  நாயகி இருவருக்கும்  நடக்கும்  விபரீதங்கள்  என்ன? என்பதல்லாம்  மீதி திரைக்கதை   


நாயகன்  ஆக  ரோஹித்  நந்தா  அப்பாவி  ஆக  , சைக்கோ  ஆக  , வில்லன்  ஆக , காதலன்  ஆக  மாறுபட்ட  பல  பரிமாணங்களில்  நடிக்க  நல்ல  வாய்ப்பு . நாயகி ஆக  ஆனந்தி. சிரித்த  முகத்துடன்  அழகிய  கண்களூடன்  மனதைக்கவர்கிறார்.


நாயகனின்  நண்பன்  நடிப்பும்  குட் / வில்லன்களாக  வருபவர்கள்  அக்மார்க்   தெலுங்கு  மசாலாப்பட  வில்லன்கள்  போல  ..... மனதில்  பதியவில்லை


ஸ்ரீ  காந்த்  ரங்கநாதன் , ஸ்ரீநாத்  ரங்கநாதன்  ஆகி இருவரும்  தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்கள் . கதைக்கரு  ஏதோ  கொரியன்  மூவியில்  இருந்து  உருவி  இருக்கலா,ம். 


எடிட்டிங்  படு  ஷார்ப். ஒன்றே  முக்கால் மணி  நேரம் தான்  டைம்  டியூரேசன் . பின்னணி  இசை  பரவாயில்லை  ரகம், ஒளிப்பதிவு  சுமார்  ரகம் . க்ளைமாக்ஸ்  தான்  சொதப்பல் 



சபாஷ்  டைரக்டர்


1 மேஜிக்  கில்லர்  பென்  ஐடியாவும், அதை  வைத்து  நகரும்  சஸ்பென்ஸ்  காட்சிகளும் குட் 


2  நாயகன், நாயகி , நண்பன்  ஆகிய  மூவரை  வைத்து பெரும்பாலான  ஷூட்டிங்கை  முடித்த  விதம் 



  ரசித்த  வசனங்கள் 


1 வேலை  செய்யற  இடத்துல  பிரச்சனை  இல்லாம  இருக்குமா? பிரச்சனைகளை  சரி  செய்யப்பார்க்கனுமே  தவிர  வேலையை  விட்டுப்போயிடலாமா?னு  பார்க்கக்கூடாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லன்  ஆக  வரும்  மேனேஜர்  தன்  ரூம்  கதவின்  மேல்  இடுக்கில்  காசை  வைத்து  யார்  கதவைத்திறந்தாலும்  அது  கீழே  விழுவது  போலவும்,  பெண்கள்  அதைக்குனிந்து  எடுக்கும்போது  லோ  கட்  சீன்  பார்ப்பது  போலவும்  காட்சி . ரெகுலராக  இது  நடந்தால்  ஆஃபீஸ்  பெண்களுக்கு  சந்தேகம்  வராதா? 


2   நாயகனுக்கு  சொந்தமாக  ஒரு  வீடும் , நிலமும்  இருக்கு . அதை  அடமானமாக  வைத்து  கடன்  கொடுத்த  நபர்  இறந்து  விடுகிறார். நாயகிக்கு  ஆபரேஷன்  செலவுக்கு 6  லட்சம்  ரூபாய்  தேவைப்படும்போது வீட்டுப்பத்திரத்தை பேங்கில்  அடமானமாக  வைத்துக்கடன்  வாங்கி  இருக்கலாமே?  சோர்சே  இல்லைங்கறார்? 


3   நாயகன் வில்லனைக்கொலை  செய்த  பின்  ரத்தக்கறை  படிந்த  சட்டையுடன்  அப்படியே    நடந்தே   தன்  வீட்டுக்கு  வருகிறான். வழியில்  யாரும்  அவனை  கவனிக்க  வில்லையா? 


4  நாயகன்  எப்போதும்  தன் கழுத்தில்  அவ்ளோ  பெரிய  டேப்ரிக்காரருடன்  சுற்றிக்கொண்டிருப்பது  ஏனோ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   க்ரைம்  மிஸ்ட்ரி  த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம்.  ரேட்டிங்  2.25 / 5 

Friday, February 16, 2024

BHAKSHAK (2024) - ஹிந்தி - வேட்டை மிருகம் - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


பக்சக்  என்ற  ஹிந்தி  சொல்லுக்கு  உணவு  உண்பவர்  என்று  அர்த்தம். ஆனால்  தமிழ்  டப்பிங்கில்  வேட்டை  மிருகம்  என  மொழி  பெயர்த்து  இருக்கிறார்கள் . இது  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகாமல்  நேரடியாக  ஓடிடி  ரிலீசுக்காக  எடுக்கப்பட்ட  படம்  என்பதால்  நெட்  ஃபிளிக்சில் 9/2/2024  அன்று  ரிலீஸ்  ஆனது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  சொந்தமாக  ஒரு  சேனல்  நடத்தி  வருகிறார். திருமணம்  ஆகி 6  ஆண்டுகள்  ஆகியும்  ஒரு  நல்ல  பொசிசனுக்கு  வந்த  பின் தான்  குழந்தை  என  எண்ணி  வாழ்பவர். கணவன் ஒரு  அர்சாங்க  ஊழியர். மாமியார் , கணவன்  உடன்  வாழ்ந்து  வருகிறார். இவர்  நடத்தி  வரும்  டி வி  சேனலுக்கு  அதிக  பார்வையாளர்கள்  இல்லை . இன்னும்  ஹிட்  ஆகவில்லை , அதற்காக  கடுமையாக  உழைத்துக்கொண்டிருக்கிறார்


 போலீஸ்க்கு  இன்ஃபார்மர்  இருப்பது  போல  மீடியாக்களுக்கு  தகவல்  தர  ஆட்கள்  உண்டு . எதாவது  பரபரப்பான  நியூசுக்கான்  தகவலை   தந்து  விட்டு  அதற்கான சன்மானம்  பெற்றுக்கொள்வார்கள் . அப்படி  ஒரு  நபர்  நாயகிக்கு  ஒரு  பரபரப்பான  தகவலை  தருகிறான்

ஒரு  அனாதை  விடுதியில்  சட்டத்துக்கு  விரோதமான  செயல்கள்  நடப்பதாக  தகவல் . அங்கே  இருக்கும்  பெண்கள் , சிறுமிகள்  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாக்கப்படுகிறார்கள் . அந்த  விடுதியை  நடத்துபவன்  ஒரு  அரசியல் செல்வாக்கு  உள்ள  ஆள் . அதனால்  போலீஸ் அவன்  மேல்  கை  வைக்கத்தயஙுகிறது 


 நாயகி  அந்த  விடுதியில்  வேலை  பார்த்த  ஒரு  சமையல்காரப்பெண்ணைக்கண்டுபிடிக்கிறாள் .  அவளிடம்  ஸ்டேட்மெண்ட்  வாங்குகிறாள் .  அந்த  விடுதியில்  நடக்கும்  அக்கிரமங்களை  வெளிச்சம்  போட்டுக்காட்டுகிறாள் 


 இதனால்  வில்லன்  கடுப்பாகிறான். நாயகிக்கு  டார்ச்சர்  கொடுக்கிறான். இதனால்  நாயகி  குடும்பத்தில் பிரச்சனை . இந்தப்பிரச்சனைகளை  எல்லாம்  கடந்து  நாயகி   தன்  லட்சியத்தை  அடைந்தாளா? அந்த  விடுதியின்    ரகசியங்கள்  வெளிவந்ததா?  வில்லனுக்கு  தண்டனை கிடைத்ததா? என்பது  மீதிக்கதை 


 நாயகி  ஆக  பூமி பெட்னாகர். தமனா  மாதிரி  நல்ல  கலர். இளமையான  தோற்றம், ஆனால்  நடிப்பில்  இன்னும்  கவனம் செலுத்த  வேண்டும்.  கொடுத்த  வசனத்தை  ஒப்பிப்பது  போல  சில  இடங்களில்  தெரிகிறது . கணவனுடன்  வாக்குவாதம்  செய்யும்  காட்சியில்  ஓவர்  ஆக்டிங். அவரது  கேரக்டர்  டிசைனிலும்  சில  தவறுகள் 


விடுதியில்  சமையல்காரப்பெண்ணாக  வரும் பெண்  அட்டகாசமாக  நடித்திருக்கிறார். முகத்துல  பயம் . ஆர்வம்  எல்லாம்  கச்சிதமாக  வெளிப்படுத்துகிறார். நாயகியை விடக்குறைவான  நேரம்  தான்  வருகிறார். ஆனால் நாயகியை  விட  நிறைவான  நடிப்பைத்த்ந்திருக்கிறார். தானிஷா  மேத்தா  என  நினைக்கிறேன்


 அதே  போல்  விடுதியின் இன்சார்ஜ்  ஆக வரும்  பெண்ணும் பிரமாதப்படுத்தி இருக்கிறார். வில்லி  ரோலில்  பெயர்  வாங்குவது  சாதாரண  விஷயம்  அல்ல 


போலீஸ்  ஆஃபீசர்  ஆக  வரும்  சாய்  தமனாகர்  கச்சிதமான  போலீஸ்  கம்பீரத்தைக்காட்டி  இருந்தாலும்  க்ளைமாக்சில்  ஓவர்  ஆக்டிங்  செய்திருக்கிறர்,


நாயகியின்  உதவியாளர்  ஆக  வரும்  சஞ்சய்  மிஸ்ரா  அடக்கி  வாசித்து  இருக்கிறார். அனுபவம்  பேசுகிறது /


வில்லன்  ஆக  வரும்  ஆதித்யாஸ்ரீவஸ்தவா  கச்சிதமான  கம்பீரம்  காட்டி  இருக்கிறார். போறவன்  எல்லாம்  கிளம்புங்க , போலீஸ்  வரும்போது  நான்  இங்கே  தான்  இருப்பேன்  என  கெத்து  காட்டுவது  செம 


பாடலகளுக்கான  இசையை அனுராக்  சைக்கியா ,அனுஜ் கார்க்  இருவரும், பின்னணி  இசையை  வேறு  இருவரும் ( க்ளிண்ட்டன்  செர்ஜோ,பையாங்க்கா  கோம்ஸ் )  கவனித்து  இருக்கிறார்கள் , முன்று  பாடல்களில்  இரண்டு  சுமார்  ரகம். பிஜிஎம்  கச்சிதம் 


குமார்  சவுரப்பின்  ஒளிப்பதிவு  இருட்டான  காட்சிகளில்  பளிச் .சமையல்  காரப்பெண்ணுக்கான  க்ளோசப்  காட்சிகள்  அருமை 

ஜூபின்  ஷேக்கின்  எடிட்டிங்கில்  படம்   135  நிமிடங்கள்  ஓடுகின்றன.  ரொம்ப  ச்லோவாக  திரைக்கதை  நகர்வதால்  இரண்டே  கால் மணி  நேரப்படம் இர்ண்டே  முக்கால் மணி  நேரப்படமாகத்தெரிகிறது 


ஜ்யோத்சனா  நாத்  என்பவருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  புல்கிட் 

சபாஷ்  டைரக்டர்

1 எடுத்துக்கொண்ட  சப்ஜெக்ட்  ஏ  ஆக  இருந்தாலும்  காட்சிகளில்  கண்ணியம்  காட்டிய  விதம் 


2  நாயகியைத்தவிர  அனைத்து  கேரக்டர்களிடமும்  இயல்பான  நடிப்பை  வெளிப்படுத்த  வைத்த  விதம் 


3  டாக்குமெண்ட்ரிஸ்டைலில்  படம்  ஸ்லோவாக  நகர்ந்தாலும்  பொறுமையாகப்பார்க்க  வைக்கும்  விதத்தில்  காட்சிகளை  நகர்த்தியது 


  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு  மாற்றத்தைக்கொண்டு வர  அரசாங்கத்துக்கு  மட்டும்  அஞ்சு  வருசம்  டைம்  கொடுக்கறீங்க , ஆனா  என்னை  மாதிரி  சாமான்யன்  கிட்டே  மூணு  வருசத்துலயே  எல்லாம்  எதிர்பார்த்தா  எப்படி / கொஞ்சம்  டைம்  கொடுங்க 


2 அரசாங்கத்தை  எதிர்க்கக்கூடாது , ஆபத்து  வரக்கூடாதுனா  எதுக்கு  பத்திரிக்கை  நடத்தனும் ? பானிபூரிக்கடை  வைக்கலாமே? 


3 இந்த  உலகமே கொத்து  பரோட்டா  மாதிரி  தான்  ஆகி  இருக்கு 


4  சிறார் வன்கொடுமைகள்  எல்லாம்  சோசியல்  வெல்ஃபேர்  டிபார்ட்மெண்ட்  கீழே  தான்  வருது . அவங்களுக்குத்தெரியாமயா  இவை  எல்லாம்  நடந்திருக்கும் ? 


5  இந்த  உலகத்துல  ஒவ்வொருத்தனும்  செய்யற  வேலை  அவன்  பார்வைல  சரியாத்தான்  இருக்கும், அதை  நீங்க  எப்படி  தப்பு?னு  சொல்வீங்க ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அவ்ளோ  கெடுபுடியாக  இருக்கும்  அனாதை  விடுதியில்  இருந்து  அந்த  சமையல்  காரப்பெண்  தப்பித்து  வெளியேறும்  காட்சியில்  நம்பகத்தன்மையே  இல்லை 


2  நாயகி  லேட்டாக  நைட்  11  மணிக்கு  வரும்போது  புருசன்  பசியுடன்  இருக்கிறான். தப்பு  நாயகி  மேல்  ஆனால்    புருசன்  மீது  எரிந்து  விழுகிறார். பசிச்சா   சமையல்  பண்ணி  சாப்பிட  என்ன  கேடு? என்கிறார். லேட்டாகும்  எனில்  இவர்  தானே  புருசனுக்கு  ஃபோன்  பண்ணி  லேட்  ஆகும், எனக்காக  வெயிட்  பண்ண  வேண்டாம். சாப்பிடு என  சொல்லி  இருக்க  வேண்டும் ? 


3   நாயகி  மீது  கோபப்பட்டு  இனிமே  என்  காரை  எடுக்காதே  என  எரிந்து  விழும்  புருசன்   திடீட்  என  மனைவியிடம்  அக்கறையாகப்பேசுவது  ஏன் ?


4  வெல்ஃபேர்  டிபார்ட்மெண்ட்டில்  முக்கியமான  ஆஃபீசசரையே  கொலை  செய்யும்  வில்லன்  நாயகி  மீது  எந்த  தாக்குதலும்  நடத்தாதது  ஏன் ?

5   வில்லன்  இடத்துக்கே  வந்து  நாயகியின்  உதவியாளர்  டபுள்  கேம்  ஆடுவது  நம்பும்படி  இல்லை 


6  போலீஸ்  வரப்போறாங்க  என  தெரிந்த  பின்னும்  வில்லன்  எஸ்  ஆகாமல்  அங்கேயே  இருப்பதும், அபலைப்பெண்களை  எந்த  இடத்துக்கும் ,மாற்றாமல்  வைத்திருந்து  வாண்டடாக  மாட்டிக்கொள்வது  ஏன்  என்றும்  தெரியவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  உண்மை  சம்பவம்  என  சொல்கிறார்கள் . அது  உண்மையாக  இருந்தால்  ஓக்கே .  சுமாரான  க்ரைம்  த்ரில்லர் . ரேட்டிங்  2.25  / 5 

டிஸ்கி -  இந்தக்கதை  பீகாரில்  நடந்த  ஒரு  உண்மை  சம்பவம். நாயகியிடம்  கதை  சொன்ன  போது  பிறகு  பார்க்கலாம்  என்று  கூறியவர்  ஆறு  மாதங்கள்  கழித்து  இயக்குநரை  அழைத்து  அந்தக்கேரக்டர் , கதை  என்னை  டிஸ்டர்ப்  பண்ணிட்டே  இருக்கு , வேற  எதிலும்  கான்செண்ட்ரேட்  செய்ய  முடியலை , நாம  உடனே  இந்தப்படம்  பண்ணுவோம்  என்றாராம். வில்லன்  ஆக  நடித்தவருக்கும்  அவரது  கேரக்டர்  டிசைன்  மிகவும்  பிடித்ததாகவும் ஆர்வத்தோடு  காத்திருப்பதாகவும்  தெரிவித்தாராம்


Bhakshak
Official release poster
Directed byPulkit
Written byJyotsana Nath
Pulkit
Produced by
StarringBhumi Pednekar
Sanjay Mishra
Sai Tamhankar
Aditya Srivastava
CinematographyKumar Sourabh
Edited byZubin Sheikh
Music bySongs:
Anurag Saikia
Anuj Garg
Background Score:
Clinton Cerejo
Bianca Gomes
Production
company
Distributed byNetflix
Release date
  • 9 February 2024
Running time
135 minutes[1]
CountryIndia
LanguageHindi

Thursday, February 15, 2024

தினந்தோறும் (1998) - தமிழ்- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ யூ ட்யூப்

   


சாய் வித்  சித்ரா  நிகழ்ச்சியில்  இயக்குநர்  நாகராஜின்  பேட்டி கண்டேன். பிரமாதமாக  அமைந்து  இருந்தது . மடை  திறந்த  வெள்ளம்  போல  வார்த்தைகள்  வந்து  விழுந்தன . எந்த  வித  அலங்காரங்களோ, மேல்  பூச்சோ  இல்லாமல்  மிக  யதார்த்தமாக  அவர்  மனதில்  பட்டதை  அப்படியே  சொன்னது  எல்லோர்  கவனத்தையும்  ஈர்த்திருக்கும். கவுதம்  வாசுதேவ்  மேனனின்  மின்னலே  , காக்க  காக்க  ஆகிய  படங்களுக்கு  இவர்  தான்  வசனம்  என்பது   ஆச்சரியமான  தகவலாக  இருந்தது. காக்க  காக்க  படம்  நடிகர்  விஜய்க்காக  உருவாக்கப்பட்ட  கதை  என்பதும்  க்ளைமாக்சில்  நாயகன்  தோற்பது  போல்  கதை  அமைந்தது  எஸ்  ஏ  சி  க்கு[பிடிக்கவில்லை, அதனால்  நடிக்க  ஒத்துக்கொள்ளவில்லை  என்பதும்  புதுத்தகவல் 

இந்தப்படத்தில்  முரளியை  புக்  பண்ணப்போனப்போ  அவர்  இரு வருடங்கள்  பிசி  அதுக்குப்பின்  தான்  கதையே  கேட்க  முடியும்  என்றாராம், பின்  கதை  கேட்டு  பிடித்து  இருந்ததால்   உடனே கால்ஷீட்   கொடுத்தாராம்


நாயகனின்  நண்பனாக  இயக்குநரே  நடித்த  சம்பவம்  பற்றியும் சொன்னார் . அந்த  ரோலில்  முதலில் நடிகர்  கரண்  தான்  நடிக்க இருந்தாராம். ஏனோ  அவர்  விலகிக்கொள்ள இவர்  நடித்தாராம். லொட  லொட  என  பேசும்  டைப்பான  இவர்  எழுதிய  கதையில்  நாயகனின்  கேரக்டர்  டிசைன்  பேசவே  கூச்சப்படும்  கேரக்டராக  டிசைன்  செய்த  விதம்  ஆச்சரியம்  தான் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  வெட்டாஃபிஸ். நண்பர்களுடன்  ஊர்  சுற்றுவதுதான் வேலை . வேறு  வேலை  வெட்டி  ஏதும்  இல்லை . கடந்த  எட்டு  வருடங்களாக  பூமா  என்ற  பெண்ணைக்காதலிக்கிறார். ஆனால்  அவளிடம் சொல்லவில்லை .ஒரு  கட்டத்தில்  நாயகி  நாயகனின்  காதலை  தெரிந்து  கொள்கிறாள் . அவளும்  காதலிக்கிறாள் . ஒரு  கட்டத்தில்  வீட்டுக்கு  விஷயம்  தெரிய  வந்ததும்  இரு  வீட்டார்  தரப்பிலும்  எதிர்ப்பு  வருகிறது . இத்ற்குப்பின்  நிகழும் சம்பவங்கள்  தான்  மீதிக்கதை 


 ஒன்  லைன்  ஆகக்கேட்கும்போது  வெகு  சாதாரணமான  , பத்தோடு  பதினொன்று  மாதிரி  கதையாக  தெரிந்தாலும்  திரைக்கதை  , நடிப்பு  மூலம்  இதை  கமர்ஷியல்  ஹிட்  ஆக்கி  விட்டார்  இயக்குநர் 


 நாயகன்  ஆக  முரளி .   அவருக்கு   என்றே  உருவாக்கப்பட்ட  ரெடிமேடு  ரோல். காதலை  சொல்ல  தயங்குபவர்  ஆக  இதயம் , காலமெல்லாம்  காதல்  வாழ்க  உட்பட  50  படங்களில்  நடித்திருப்பார். நடிப்பு  கச்சிதம் 


 நாயகி  ஆக  சுவலட்சுமி . தமிழ்  சினிமா  நடிகைகளில்  பானுமதி , ரேவதி , சுஹாசினி  , நதிய  போன்ற  வெகு  சில  நடிகைகள்  மட்டும்  தான்  கிளாமர்  காட்டாமல்  கண்ணியமான  உடை  அணிந்து  திரையில்  தோன்றினர். அந்த  பட்டியலில்  சுவல்ட்சுமியும்  இடம்  பிடிக்கிறார். நல்ல  , பெரிய  கண்கள்  அவரது  பிளஸ்  பாயிண்ட். என்  ஃபேவரைட்  ஃபிலிம்  அவர்  நடித்ததில்  கோகுலத்தில்  சீதை தான் 


மணிவண்ணன்  அரசியல்வாதியாக  கலகலப்பு  ஊட்டுகிறார். இயக்குநர்  நாகராஜ்  நான்கு  நண்பர்களில்  ஒருவராக  வந்து  படம்  முழுக்க  பொரிந்து  தள்ளுகிறார்.


 நாயகனின்  தங்கை  ஆக  தீபா  வெங்கட் .க்ளைமாக்சில்   தீபா  வெங்கட் - நாகராஜ்  லவ்  போர்சனுக்கு  தியேட்டரில்  அபார  வரவேற்பு . நாகராஜ்  வசன  உச்சரிப்பில்  ஆச்சரியப்படுத்துகிறார். பேசும்போது  அவர்  புருவங்கள்  தானாக  உயர்வது  அவர்  மேனரிசம்  போல 


நாயகனின்  அக்காவாக ரேணுகா  பிரமாதமாக  நடித்திருந்தார் .இவர்  நாயகிஆகவே  நடிக்கலாம்  போல  அழகு 

நாயக்னின்  தந்தை  ஆக  கிட்டியும், நாயகியின்  தந்தை  ஆக  ம்லேசியா  வாசுதெவனும்  சிறப்பான  பங்களிப்பை  அளித்திருக்கிறார்கள் . நாயகனின்  அம்மாவாக  வடிவுக்கரசியு ம்  , நாயகியின்  அம்மாவாக  சத்தியப்பிரியாவும்  சும்மா  வந்து  போகிறார்கள் , அதிக  வாய்ப்பில்லை 

வில்லன்  ஆக  மகாநதி  சங்கர்  கச்சிதம் .


ஓவியன்  என்பவரின்  இசையில்  ஏழு  பாடல்கள் , அவற்றில்  நான்கு  பாடல்கள்  ஓக்கே  ரகம் . அப்துல்  ரகுமான்  ஒளிப்பதிவு  கண்ணுக்குக்குளுமை . கே பழனிவேலின்  எடிட்டிங்கில்  படம்  ரெண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிறது 


கதை , திரைக்கதை  ,வசனம்  , இயக்கம்  நாகராஜ் 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகனின் நண்பன்  எழுதிக்கொடுத்த  மொக்கைக்கவிதையை  நாயகன்  நாயகியிடம்  தர  அவள்  அதைப்படித்துப்பார்த்து  ஆற்றில்  பறக்க  விடுவது  கண்டு  நாயகன்  பதறும்  காட்சியும், அதற்கான  விளக்கத்தை  நாயகி  கூறுவதும்  அழகு 


2  ரேணுகாவின்  கேரக்டர்  டிசைனும்  அவர்  காதலுக்கு  உதவும்  பாங்கும்  அருமை 

3    தீபா  வெங்கட்  -  நாகராஜ் காதல்  காட்சிகள்  கலகலப்பு 

4  படம்  முழுக்க  நாகராஜின்  டயலாக்  மாடுலேஷன் , டாமினேசன்  குட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1 பூக்கள்  மலருதே  தினந்தோறும்,  வாசம்  வீசுதே தினந்தோறும்,  ( ஹீரோ  ஓப்பனிங்  சாங் )


2 என்  வானம்  நீ தானா?  அதில்  நிலவும்  நீ தானா? (  ஹீரோ  ட்ரீம்  சாங்) 


3 தேவதையை  அசத்திப்புட்டான்  நம்ம  நண்பன்  தான்  ( ஃபிரண்ட்ஸ்  சாங்)


4  ஓ , கண்ணுக்குள்  சுகம்  பாய்ந்ததென்ன? பெண்ணுக்குள்  சுகம்  காண்பது  என்ன? 


  ரசித்த  வசனங்கள் 


1  நீ ஸ்டேட்  கவர்மெண்ட்டா  இருந்தாலும் , செண்ட்ரல் கவர்மெண்ட்டா  இருந்தாலும் ,  மேரேஜ்  ஆகிட்டா  சம்சாரம்  தான்  உன்  அரசாங்கம் 


2  நீ  இப்படியே  ரவுடித்தனம்  பண்ணிட்டு  இருந்தா  ஜெயில்ல  கழி  தான்  திங்கனும்


 இப்போ மட்டும்  வீட்ல  கட்லெட்டா  போடறீங்க?


3  அயோக்கியத்தனம், சந்தர்ப்பவாதம்  இதைத்தான்  அரசியல்ல  ராஜ  தந்திரம்னு  சொல்லிக்கறோம்


4  பொண்டாட்டி  சொல்றதுக்கு  எல்லாம்  ரைட்டுனு  சொல்லிட்டா  ஃபைட்  எதுக்கு  வருது ? 


5  நிறைய பேருக்கு  நிறைய  விஷயம்  தனிமைல  உக்காந்து  யோசிக்கும்போதுதான்  கிடைச்சிருக்கு


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கிராமத்தில்  காதலிக்க  ஏகப்பட்ட  இடங்கள்  இருக்க  நாயகன்  , நாயகியின்  காலை  கோயில்  பிரகாரத்தில்  தடவுவது கண்ணியமான  காதலையே  கொச்சைப்படுத்துகிறது.  அப்போது  அதைக்கண்டிப்பவரை  நாயகி  அட்டாக்  பண்ணுவதும்  செயற்கை 


2   நாயகனுக்கு  நாயகி  மேல்  காதலை  விட  காமமே  அதிகமோ  என  சந்தேகம்  கொள்ள  வைக்கும்  காட்சிகள்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை 


3   மகாநதி சங்கர்  என்ன  தான்  வில்லன்  கேரக்டர்  என்றாலும்   நாயகி , நாயகியின்  அம்மா,  12  வயசு  சிறுமிகள்  இருவர்  என  கண்ணில்  படுவோரை  எல்லாம்  இது  நல்லாருக்கே? இதுவும்  நல்லாருக்கே  என  சிலாகிப்பது  ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நைண்ட்டீஸ்  கிட்ஸ்க்கு  மட்டும் பிடிக்கும். முர்ளி  - சுவலட்சுமி  ரசிகர்கள்  பார்க்கலாம், இயக்குநர்  நாகராஜ்  பேட்டியைப்பார்த்தவர்கள்  தாராளமாகப்படம்  பார்க்கலாம் . ரேட்டிங்  2. 25 / 5 


டிஸ்கி  -  தனது முதல்  படமான  மின்னலே  டைட்டிலில்  வசனம் - நாகராஜ் என க்ரெடிட்  கொடுத்த  கவுதம்  காக்க  காக்க  படத்தில்  வசனம் - நாகராஜ்  என  போடுவதில்  சில  சிக்கல்கள்  உண்டு , அதனால்  கூடுதல்  வசனம் - நாகராஜ்  என  போடவா? எனக்கேட்ட  போது  நாகராஜ்  பெருந்தன்மையாக  அதை  மறுத்து  விட்டாராம், எனவே  டைட்டிலில்  நாகராஜ்  பெயர்  இடம் பெறவில்லை, அதற்கான  சம்பளம்  மட்டும்  கிடைத்தது . இதே  போல் பல  படங்களுக்கு  கோஸ்ட்  ரைட்டர்  ஆக  செயல்பட்டதாக  சொல்கிறார்


தினந்தோறும்
இயக்கம்நாகராஜ்
தயாரிப்புஆர். லாவன்யா
கதைநாகராஜ்
இசைஓவியன்
நடிப்புமுரளி
சுவலட்சுமி
ஒளிப்பதிவுஅப்துல் ரகுமான்
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்மதர் மூவி மேக்கர்ஸ்
வெளியீடு13 பெப்ரவரி 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்