Wednesday, November 29, 2023

TANTIRAM (2023) = தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( மிஸ்ட்ரி ட்ராமா) @ அமேசான் பிரைம்


முழு  டைட்டில்  என்ன?னு  பார்த்தா  தந்திரம் - சேப்ட்ட்ர் 1 - சிவகாசியின்  கதை.. சிவகாசியில்  உள்ள பட்டாசு  தொழிற்சாலை  அதிபரின்  உண்மைக்கதை  மாதிரி  காட்றாங்க. ஆனா பயங்கர  டஹால்டியா  இருக்கு , டி வி சீரியல்  ரசித்துப்பார்ப்பவர்களுக்கு  பிடிக்கும்  தரத்தில்  இருக்கும்  மட்டமான  கதைக்கரு .

  ஏன்  டி வி  சீரியலை  மட்டமா  சொல்றேன்னா  நடைமுறை  வாழ்க்கையில்  நாம்  கண்டிராத  பழி  வாங்கல்கள் , கள்ளக்காதல், மாமியார்  மருமகள்  அட்ராசிட்டிஸ்  தான்  கேவலமாக ( பெரும்பாலான  95%  டி வி  சீரியல்களில் )   கையாளப்படுகிறதுனு பலர்  சொல்லக்கேள்வி

ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகனின்  அப்பா  பெரிய  பட்டாசு தொழிற்சாலை  நடத்தும்  முதலாளி. நாயகன்  10  வயது சிறுவனா  இருந்தபோது  நாயகனின்  அம்மா  வேறு  ஒரு  நபருடன்  ஓடிப்போய்  விட்டதாக  சொல்லப்படுகிறது . இதனால்  நாயகனுக்கு  சின்ன  வயதில்  இருந்தே  பெண்கள்  என்றால்  வெறுப்பு 


  நாயகன்  வாலிப  வயதை  அடைந்ததும்  அப்பா  அவனுக்கு  திருமணம் செய்து  வைக்கிறார். ஆரம்பத்தில்  மனைவியிடம்  இருந்து  விலகி  இருந்தவன்  ஒரு  கட்டத்தில்  ராசி  ஆகி  விடுகிறான். நல்லபடியாகக்குடும்பம்  நடத்தி  வருகிறான்


இப்போதுதான்  கதையில் கேவலமான  ஒரு  ட்விஸ்ட். சாத்தான்  நாயகனிடம்  உன்   மனைவியின்  ரத்தம்  ஒரு  சொட்டு  கொண்டு  வா, உன்னை  கோடீஸ்வரன்  ஆக்குகிறேன்  என்கிறது . நாயகனும்  அதை  கொண்டு  வருகிறான். சாத்தான்  அதை  ரோஸ்மில்க்  மாதிரி  டேஸ்ட்  பண்ணி  விட்டு  சொன்ன  வார்த்தையைக்காப்பாற்றுகிறது


நாயகன்  பெரிய  பணக்காரன்  ஆகிறான். இப்போது  அவனுக்குப்பேராசை , மேலும்  பணம்  சம்பாதிக்க  நினைக்கிறான். சாத்தானை  அழைக்கிறான், அவன்  அழைத்ததும்  ஆஃபீஸ்  பாய்  மாதிரி  ஓடி  வரும்  சாத்தான்  இந்த  முறை  உன்  மனைவியை  என்னிடம்  முழுசாக ஒப்படைக்க  வேண்டும்  என்கிறது 


 மறுத்து  விட்ட  நாயகன்  தன்  வேலையைக்கவனிக்க  ஆரம்பிக்கிறான், இதற்குப்பின்  தொழிலில்  பயங்கர  நட்டம். அப்பாவிடம்  போய்  ஆலோசனை  கேட்கிறான். அப்பா  நாயகனின்  மனைவியை  சாத்தானுக்கு  தாரை  வார்க்கச்சொல்கிறார். ஊரார்  கேட்டால்  யாருடனோ  ஓடிப்போய்  விட்டதாக  கதை  கட்டு  என்கிறார்.


 அப்போதுதான்  நாயகனுக்கு ஒரு  உண்மை  தெரிய  வருகிறது . அம்மா  ஓடிப்போகவில்லை , அப்பாதான்  சாத்தானுக்கு  டொனேஷன்  கொடுத்து  விட்டார்


இதற்குப்பின்  கதையில்  நடக்கும்  கேவலமான  ட்விஸ்ட்  தான்  க்ளைமாக்ஸ் . இந்த  லட்சணத்தில்  இதன் இரண்டாம்  பாகம்  வேற  வருதாம் 


நாயகன்  ஆக  ஸ்ரீகாந்த்  குர்ரம்  என்பவர்  நடித்திருக்கிறார். தாடி  , தொப்பையோடு  கேவலமாக  இருக்கிறார்


நாயகி  ஆக  பிரியங்கா  சர்மா  கச்சிதமாக  நடித்திருக்கிறார்


அஜய்  அரசடா  என்பவர்தான்  இசை .  பின்னணி  இசை  தேவலை 

சிறுகுடி  வம்சி  சீனிவாஸ்  தான்  ஒளிப்பதிவு . ஓக்கே  ரகம் 


இந்த  மட்டமான  திரைக்கதையை எழுதியவர்கள்  இருவர்  சபாஷ்  எம் எச் வினீத் (  நான்  பாராட்டி  சபாஷ்  போடலை ., பேரே  அதான் போல ), பொண்ணுரு 


இயக்கி  இருப்பவர்  முத்தையா  மெஹர்  தீபக் 


சபாஷ்  டைரக்டர்


1  தயாரிப்பாளரிடம்  இது   செமயான  பேய்க்கதை  என  பொய்  சொல்லி படம்  எடுக்க  சம்மதிக்க  வைத்தது 


2  ஓப்பனிங்  பில்டப்பாக  புராணக்கதையான  அகல்யா - இந்திரன் , முனிவர்  கதையை  எல்லாம்  அள்ளி  விட்டு  நல்ல  எதிர்பார்ப்பை  கொண்டு  வந்தது 


3  கதை , திரைக்கதை  கேவலமாக  இருந்தாலும்  காட்சிகளில்  அடல்ட்  கண்ட்டெண்ட்  இல்லாமல்  பார்த்துக்கொண்டது 

  ரசித்த  வசனங்கள் 


1  அவசரமான  சமயங்களில்  தப்பு  செஞ்சுட்டு  அதை  சரி  செய்யனும்னு  நினைப்பது  ரொம்ப  தப்பு , ஏன்னா  சில  சமயங்களில்  அந்தத்தப்பே  நம்ம  வாழ்வை நாசமாக்கிடும் 


2  நாம்  சில  சமயங்களில்  எடுக்கும்  சின்னச்சின்ன  முடிவுகள்  நம்  தலையெழுத்தையே  சில  சமயம்  மாற்றி  விடும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன்  பெரிய  தொழில்  அதிபர்  மகன்,  பெரிய  பங்களாவில்  குடி  இருப்பவர்  , முதல்  இரவு  அன்று  மனைவியை  விட்டு விட்டு  தனியே  போய்  படுப்பது  என்றால்  கட்டிலில்  படுக்க  மாட்டாரா? பாய்  எடுத்துட்டுப்போறாரே?  ஏழையா ?


2 சாத்தான்  நாயகனிடம்  நாயகியின்  ரத்தம்  ஒரு  சொட்டு  வேண்டும்  எனக்கேட்கிறது/ நாயகன் ஒரு  குடுவையில்  ஒரு  சொட்டு  ரத்தத்தை  எடுத்துட்டு  வர்றான்.ஒரு  இங்க்  ஸ்பில்லர்ல  எடுத்துட்டு  வ்ந்திருக்கலாம்


3 பட்டாசு  ஸ்டாக்  வைக்க   புது  குடோன்  கட்டும்  நாயகன்  அது  ம்ழைல  நனையுதா?  தன்ணீர்  உள்ளே  வருதா?  என  செக்  செய்யாமல்  பட்டாசுகளை  ஸ்டாக்  வைப்பாரா?

4  பட்டாசு  ஆலை  அதிபர்கள்  யாராவது  இப்படத்தைப்பார்த்தால்  நட்ட  ஈடு  கேட்டு  வழக்கு  போட  வாய்ப்பு  இருக்கிறது , அப்பா, மகன்  இருவரும்  அவரவர்  மனைவியை  சாத்தானுக்குக்கூட்டிக்கொடுத்துதான்  இந்த  வசதியான  வாழ்வு  பெற்றார்கள்  என  யாரையோ  அட்டாக்  செய்யும்  கதை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   போஸ்டர்  டிசைன்  நல்லாருக்கு , டைட்டில் ஒக்கே  என  நினைத்து  யாரும்  ஏமாந்து  விட  வேண்டாம், மட்டமான  படம் , மோசமான  மேக்கிங் , ரேட்டிங்  மைனஸ்  1 / 5 


Tantiram: Chapter 1: Tales of Shivakasi
Tales of Shivakasi[2]
Directed byMuthyala Meher Deepak
Written byShabaz MS, Wineeth Ponnuru
Produced bySrikanth Kandragula[3]
Starring
  • Srikanth Gurram
  • Priyanka Sharma
  • Avinash Yelandur
CinematographySirugudi Vamsi Srinivas
Edited bySirugudi Vamsi Srinivas
Music byAjay Arasada
Production
company
Cinema Bandi
Release date
  • 13 October 2023
[1]
CountryIndia
LanguageTelugu

Tuesday, November 28, 2023

PULIMADA (2023) - புலி மடா - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

     


புலியின்  குகை  என்பதுதான்  டைட்டில்   . பெண்ணின் பிரத்யேக  மணம்  என்பது  கிளை   டைட்டில் .ஜோஜூ  ஜார்ஜ் +ஐஸ்வர்யா  ராஜேஷ்  காம்போ  வில்  2023  அக்டோபர்  26  அன்று  திரையில்  வெளியான  இப்படம்  கலவையான  விமர்சனங்களைப்பெற்றது. 2023  நவம்பர் 24 முதல்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  யில்  வெளியாகி  உள்ளது 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்   நல்ல  வசதி  படைத்த  நபர் . ஒரு  ஃபாரஸ்ட்  ஏரியாவில்  சொந்த  வீடு  இருக்கு , இவருக்கு  ஒரு  அம்மா  இருந்தாங்க , ஆனால்  சின்ன  வயதில்  இறந்து  விட்டார். அம்மா  மனநிலை  சரி  இல்லாதவர். அதனால்  நாயகனுக்கும்  மனம்  சார்ந்த  சில  பிரச்சனைகள்  இருந்தன. இதனால்  இவர்  போலீஸ்  வேலையில்  இருந்தும்  யாரும்  பெண்  தர  வில்லை . அமைந்த  சில  வரன்களும்  கடைசி  நேரத்தில்  தட்டிக்கழிந்தன.

 மனநல  மருத்துவரை  அணுகி  தான்  திருமணம்  செய்து  கொள்வதில்  ஏதும் பிரச்ச்னை  வருமா? எனக்கேட்டு  க்ளியர்  செய்து  கொள்கிறான் எப்படியோ  ஒரு இடத்தில்  பெண்  அமைந்து  விடிந்தால்  நாயகனுக்குத்திருமணம் 


 சொந்தக்காரர்கள் , நண்பர்கள்  எல்லோரும்  கூடி  விட்டார்கள் . இப்போது  ஒரு  அதிர்ச்சியான  செய்தி , மணமகள்  அவள்  காதலனுடன்  ஓடி  விட்டாள் . இதைக்கேட்டு  செம  கடுப்பாகிறான்  நாயகன்.


 இன்று  எனக்கு  முதல்  இரவு  நட்ந்தே  ஆகவேண்டும்  என  கொக்கரிக்கிறான். பெண்ணைத்தேடி  பைக்கில்  அலைகிறான்


 அதே  சமயம் புலி  ஒன்று  ஊருக்குள்  புகுந்து  விடுவதால்  போலீஸ்  ஜீப்  ரோந்து  வந்து  மக்களை எச்சரித்துக்கொண்டு  இருக்கிறது


நாயகி  பணி  செய்யும்  இடத்தில்  தன்னிடம்  வாலாட்டிய  நபரைக்கொலை  செய்து  ஜெயிலுக்கு  சென்றவள், இப்போது  பரோலில்  வந்திருக்கிறாள் . இந்த  விஷயங்கள்  எல்லாம்  நாயகனுக்குத்தெரியாது . நாயகி வ்ந்த  கார்  ரிப்பேர்  என்பதால்  லிஃப்ட்  கேட்கிறாள். நாயகன்  நாயகியை  தன்  வீட்டுக்கு  அழைத்து  வருகிறான், இதற்குப்பின்   நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஜோஜூ  ஜார்ஜ்  தெனாவெட்டான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். அச்சு  அசல்  குடிகாரன்  மாதிரியே  அவர்  கண்கள்  சிவக்கின்றன . குடிகாரன்  போதை  நடை  கைவரப்பெற்றிருக்கிறது 


 நாயகி  ஆக  ஐஸ்வர்யா  ராஜேஷ் . கிளாமர்  பாதி , குணச்சித்திர  நடிப்பு  மீதி   என  கலந்து  செய்த  கலவை  இவர்.  இவரது  சிரிப்பு  இவருக்கு  பிளஸ்  பாயிண்ட்


நண்பன்  ஆக செம்பன்  வினோத்  கச்சிதமான  நடிப்பு எந்த  கேரக்டர்  தந்தாலும்  அதில்  தன்  முத்திரையைப்பதிக்கும்  ஜாபர்  இடுக்கி  இதிலும்  கலக்கி  இருக்கிறார்


வேணுவின்  ஒளிப்பதிவு  அழகு . கானகத்தின்  இயற்கை  எழிலை  கண்  முன்  காட்டுகிறது 


இஷான்  தேவ்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம் . அனில்  ஜான்சன்  பின்னணி  இசையில்  த்ரில்லர்  படங்களுக்கே  உரித்தான  விறுவிறுப்பான  பிஜிஎம்  தெறிக்கிறது 


திரைக்கதை  எழுதி , எடிட்  செய்து  இயக்கி  இருப்பவர்  ஏகே  சாஜன்,  110  நிமிடங்கள்  மட்டுமே  ஓடக்கூடிய  அளவு  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார். அதனால்  குயிக்  வாட்ச்  ஆகவே  இதைப்பார்க்கலாம் 



சபாஷ்  டைரக்டர்  ( ஏகே  சாஜன்)


1   நாயகிக்கு  என்ன  நடக்கப்போகிறது  என்ற  பதைபதைப்பை  ஆடியன்ஸ்  மனதில்  விதைக்கும்  உத்தி  அருமை . 


2   ஃபாரஸ்ட்  ஏரியாவின்  அழகை  எல்லாம்  காமரா  படம்  பிடித்த  விதம் 


3  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் , பாசிட்டிவ்  எண்டிங் 


4  எப்போதோ  வ்ந்த  பஞ்ச  தாந்திரம்  படத்தின்  ட்விஸ்ட்டை  இதில்  புகுத்திய  சாமார்த்தியம் 


  ரசித்த  வசனங்கள் 


1    இருட்டை  ரசிக்க  இருட்டில்  இருந்தால் தான்  முடியும் 


2  என்ன  நட்ந்தாலும்  நம்  வாழ்க்கையில்  நாம்  முன்னேறிப்போய்க்கொண்டே  இருக்க  வேண்டும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியை  மாடர்ன்  கேர்ள்  எனக்காட்ட  வேறு  உத்திகளே  இல்லையா?  எல்லா  இயக்குநர்களும்  ஏன்  நாயகி  சரக்கு  அடிபப்து , தம்  அடிப்பது , கஞ்சா  அடிப்பது  எல்லாம்  காட்டி  இவர் தான்  அந்த  பாரதி  கண்ட  புதுமைப்பெண்  என  பிரசங்கம்  பண்ண  வேண்டும் ?


2   நாயகன்  தனிமையில்  இருக்கும்போது  நிராயுதபாணியான  அவரை  புலி  ஏன்  விட்டு  விட்டு  திரும்பி  செல்கிறது ? 


3  நாயகியை  திருமணம்  செய்ய  ஆசைப்படும்  நாயகன்  நாயகி  ஃபோன்  செய்த  ஃபோன்  நெம்பரை  வைத்து ட்ரேஸ்  பண்ணி  இருக்கலாமே? போலீசாக  இருந்தும்  அந்த  முயற்சியை  ஏன்  எடுக்கவில்லை ? 


4  நாயகன், நாயகி  இருவருமே  ஒன்றாக  சரக்கு  அடிக்கிறார்கள் , முன்  பின்  அறிமுகம்  இல்லாத  இடம்,  புது  நபர் . சரக்கு  அடித்தால்  அபாயம்  என்பதை  நாயகி  ஏன்  உணரவில்லை ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -யூ / ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சராசரி  ஆன  த்ரில்லர்  படம்  தான் , பார்க்கலாம் ., ரேட்டிங்  2.5 / 5 


Pulimada
Theatrical release poster
Directed byA. K. Sajan
Written byA. K. Sajan
Produced by
  • Rajesh Damodaran
  • Sijo Vadakkan
Starring
CinematographyVenu
Edited byA. K. Sajan
Music by
Production
companies
  • Appu Pathu Pappu Production House
  • Ink Lab Cinemas
  • Land Cinemas
Distributed byAnn Mega Media Release
Release date
  • 26 October 2023[1]
Running time
110 minutes[2]
CountryIndia
LanguageMalayalam

Monday, November 27, 2023

KAALKOOT (2023) -ஹிந்தி / தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் டிராமா ) @ ஜியோ சினிமாஸ்


எட்டு  எபிசோடுக்ள்  கொண்டது  இந்த  வெப்  சீரிஸ் . ஒவொரு  எபிசோடும் 25 நிமிடங்கள்  டூ 30  நிமிடங்கள் , கடைசி  5  நிமிடங்கள்  டைட்டில்  ஓடுவதால்  ஸ்கிப்  செய்து  விடலாம், ஆக  மொத்தம்  மூன்றரை  மணி  நேரம்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம்.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . சப்  இன்ஸ்பெக்டர்  ஆக  பணியாற்றும்  இவரது  ஸ்டேஷனுக்கு  ஒரு  கேஸ்  வருகிறது . சாலையில்  செல்லும்  ஸ்கூட்டர்  ஒன்றில்  பயணிக்கும்  ஒரு  ஆள்  ஒரு  இளம்பெண்  முகத்தில்  ஆசிட்  ஊற்றி  விடுகிறான், அவன் யார்? எதற்காக  அப்படி  செய்தான் ? என்ன  முன்  பகை ??  என்பதை  அலசி  ஆராய்வதுதான்  இந்த  வெப்  சீரிசின்  மையக்கரு. 


மெயின்  கதை  மொத்தமாகவே  ஒரு  மணி  நேரம்  தான்  இருக்கும், மீதி  எல்லாம்  கிளைக்கதைகள் . நாயகன்  - நாயகி  இருவருக்குமான  காதல் , கல்யாண  ஏற்பாடுகள் , நாயகனின்  ஸ்டேஷனில் பணி  ஆற்றும்  போலீஸ்  ஆஃபீசர்கள்  நடந்து  கொள்ளும்  விதம், நாயகனின்  அக்கா வின்  காதல்  கல்யாணம்   என  சுவராஸ்யமான  சம்பவங்கள்   சுவை  கூட்டுகின்றன 


 நாயகன்  ஆக விஜய்  வர்மா  சிறப்பாக  நடித்திருக்கிறார். ஹீரோ  பில்டப்  எல்லாம்  இல்லாமல்  யதார்த்த,மான  போலீஸ்  ஆக  அவரது  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்பட்டிருப்பது  சிறப்பு 


நாயகனின்  அம்மாவாக  சீமா  பிஸ்வாஸ் கச்சிதமாக  வந்தாலும்  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்கோ  என  எண்ண  வைக்கிறார். 


நாயகி  ஆக  ஸ்வேதா  த்ரிப்பாதி  அமர்க்களமான  நடிப்பு 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  சுமித்  சக்சேனா


ஒளிப்பதிவு , இசை , பின்னணி  இசை , எடிட்டிங்  போன்ற  டெக்னிக்கள்  அம்சங்கள்  கச்சிதம் 

சபாஷ்  டைரக்டர் (சுமித்  சக்சேனா) 


1 நாயகன்  போலீஸ் ஆக  இருந்தாலும்  அவரது  சுபாவம்  கொஞ்சம்  பயந்த  மாதிரி  என  வடிவமைத்த  விதம்  குட் 

2   நாயகன் - நாயகி  ரொமாண்டிக்  போர்சன் , அவர்களுக்கு   இடையேயான  கான்வெர்சேஷன்  கவிதை 


3  ஆசிட்  வீசப்பட்ட  பெண் , அவளது  பாய்  ஃபிரண்ட்  இருவருக்குமிடையேயான  நல்ல  நட்பு  சொன்ன  விதம்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1   வேலை  செய்வதில்  ஹீரோவா  இருங்க , வேலையை  விடுவதில்  ஹீரோவா  இருக்க  ட்ரை  பண்ணாதீங்க 


2 போலீசோட  உண்மையான  திறமையே  எஃப் ஐ ஆர்  போடாமயே வேலையை  முடிக்கறதுதான் 


3  குப்பைத்தொட்டிக்குப்பக்கத்துல  இருக்கும்  காக்கா  நாய்க்காக  வெய்ட்  பண்ணும், ஏன்  தெரியுமா? நாய்  குப்பைத்தொட்டியை  ஓப்பன்  பண்ணியதும்  காக்கா  கூட்டம்  கூடிடும். இப்போ  நீ  அந்த  காக்கா  வேலையை  செய்யனும்


4  தப்பான  விஷயங்கள்  செய்யும்  பெண்களுக்கு  தப்பான  சம்பவங்கள்  தான்  நடக்கும் 


5  நான்  நெர்வசா  இருக்கும்போது  சிரிக்க  ஆரம்பிச்சிடுவேன்


6  நீ  ரொம்ப  ரொம்ப  நல்ல  பையன், ஆனா  நல்ல  பையன்  என்பதற்காகவே எந்தப்பொண்ணும்  கல்யாணத்துக்கு  உடனே  ஓக்கே  சொல்லிட  மாட்டா


7  ஒரு  ஆள்  பலவீனமா  இருக்கும்போதுதான்  அவனை  எல்லோரும்  தங்களுக்கு  சாதகமா  பயன்படுத்திக்குவாங்க 


8  உன்னால  ஒரு  சொட்டு  ரத்தம்  கூட  சிந்த  முடியலைன்னா  இளமையா  இருந்து  என்ன  பயன் ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நல்லாதான்  போய்க்கிட்டிருந்தது, கடைசி  எபிசோடில்  நாயகன்  மீது  வில்லன் 3  அடி நீள  இரும்புக்கம்பியை  நெஞ்சில்  செருகி விடுகிறான். உடனே   ஹாஸ்பிடல்  போகாமல்  பைக்கில்  சேஸ்  செய்வது  தன்  நெஞ்சில்  செருகப்பட்ட கம்பியை  உருவி  தாக்குவது எல்லாம்  ரஜினி , விஜய்  படங்களில்  கூட  பார்க்காத  ஓவர்  ஹீரோயிசம் 


2   ஆசிட்  ஊற்றுபவன்/ அடிப்பவன்  ஒரு  பயிற்சிக்காக  ப்ளூ  கலர்   வாட்டரை  பயன்படுத்தி  ரிகர்சல்  பார்த்தான்  என்பதை  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை . வெறும்  தண்ணீர்  வேற  ஆசிட்  வேற . அதுல  பயிற்சி  எடுத்து  இதை  எப்;படி  செய்ய  முடியும் ? 


3  நாயகனின்  அப்பா  நாயகனின்  அம்மாவுக்காக  எழுதிய  கவிதையை  க்ளைமாக்சில்  படித்துக்காட்டுவது  தவிர்த்திருக்கலாம், ஒரு  மகன்  ஒரு  அம்மாவுக்கு  அது  போல  ஒரு  கவிதையை  எப்படி  படித்துக்காட்ட  முடியும் ? 


4   வில்லன்  ஆசிட்  வீசிய  வழக்குக்காக  தேடப்படுபவன், அதிகபட்சம்  10  ஆண்டுகள்  தண்டனை  கிடைக்கும்  வ்ழக்குதான். ஆனால்  அவன்  க்ளைமாக்சில்  தீவிரவாதி  ரேஞ்சுக்கு  ஆட்களுடன்  வந்து  எல்லா  போலீசாரையும்  சுட்டுக்கொல்வது  ஓவரோ ஓவர் , க்ரைம்  ரேட்  கூடிக்கிட்டே  போகுது 


5  நாயகன் , ஒரே  ஒரு போலீஸ்  உடன்  வில்லன்  இடத்திற்கே  போய்  அடி  வாங்கி  வருவது  ஏன்?  10  பேர்  கொண்ட  படையுடன்  போய்  இருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  ட்ராமா  ரசிகர்கள்  பார்க்கலாம். கவுதம்  மேனன் ரொமாண்டிக்  ப்ரியர்களும்  பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 


Kaalkoot
Official poster
Genre
Written byArunabh Kumar
Sumit Saxena
Directed bySumit Saxena
Starring
Country of originIndia
Original languageHindi
No. of seasons1
No. of episodes8
Production
Producers
Production companies
Original release
NetworkJioCinema
Release27 July 2023

Thursday, November 23, 2023

மாம்பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ? எப்போது சாப்பிட வேண்டும்?


 முக்கனிகளில்  ஒன்று  மாம்பழம்  என்பது  எல்லோருக்கும்  தெரியும், இது  கோடை  காலம்  ஆன  ஏப்ரல், மே , ஜூன்  ஆகிய  மூன்று  மாதங்களில்  கிடைக்கிறது . பொதுவாக  இயற்கை  நமக்கு  அளிக்கும்  சீசனல் பழங்களை  அந்தந்த  காலத்தில்  நாம்  தாராளமாக  சாப்பிடலாம். ஆனால்  பல  பெரியவர்கள்  மாம்பழம்  சூடு  அதிகம்  சாப்பிடக்கூடாது என  சொல்லக்கேள்விப்பட்டிருப்பீர்கள்  , இது  உண்மை  தான்.மாம்பழமம்  அதிகம்  சாப்பிட்டால் சூட்டைக்கிளப்பி விடும், வயிறு  உபாதைகள் , வயிற்றால்  போவது  போன்ற  சங்கடங்கள் வரும் . குறிப்பாக  குழந்தைகள் 10  வயது  வரை ஒரு  நாளில்  ஒரு  முழு  மாம்பழம்  சாப்பிடக்கூடாது . ஒரு  துண்டுஅல்லது  2  துண்டுகள்  மட்டும்  சாப்பிடலாம்

அதே  போல  மாங்காய் , மாங்காய்  ஊறுகாய்  எல்லாவற்றிற்கும் இந்த  விதி  பொருந்தும். பெரியவர்கள்  அதாவது  18  வயது  முதல்  50  வயது  வரை  உள்ளவர்கள்  தினசரி  ஒரு  மாம்பழம்  அல்லது  இரு  மாம்பழங்கள்  சாப்பிடலாம். காலை , மதியம் , இரவு  மூன்று  வேளைகளில்  எப்போது  சாப்பிடலாம்  என்றால்  மதியம்  உணவுக்கு  முன்  சாபிடுவது  நல்லது. இரவில்  சாப்பிட்டால்  ஜீரணக்கோளாறு  ஏற்படலாம் . காலை  சாப்பிடுவது  உகந்தது  அல்ல . மதியம் 2  மணிக்கு  லஞ்ச் சாப்பிடுகிறீர்கள்  எனில்  1 மணி  அல்லது   ஒன்றரை  மணிக்கு  மாம்பழம்  சாப்பிடலாம். 


 இந்தப்பழம்  என  இல்லை  வேறு  எந்தப்பழ்ம்  சாப்பிடுவதாக  இருந்தாலும்  உணவு  சாப்பிடுவதற்கு  முன்  தான் பழம்  சாப்பிட  வேண்டும் , ஏன்  எனில்  பழம்  எளிதில்  ஜீரணம்  ஆகும்,  உணவு  செரிமானத்துக்கு  நேரம்  எடுத்துக்கொள்ளும். உணவு  சாப்பிட்ட  பின்  பழம்  சாப்பிட்டால்  முதலில் சாப்பிட்ட  உணவு  செரிக்கும்  முன் பழம்  செரிமானம்  ஆகி  விடும், இது  இரைப்பையில்  குழப்பத்தை  ஏற்படுத்தும். எனவே  எப்போதும்  பழத்தை  முதலில்  சாப்பிட்டு  பின் உணவு  சாப்பிட  வேண்டும் 


 பழமாகத்தான்  சாப்பிட  வேண்டும் . பழ ஜூஸ்  கடையில்  சாப்பிட்டால்  அது  கெடுதல் , அதில்  கூடுதலாக  சர்க்கரை  இன்னும்  சில  வேதிப்பொருட்கள் சுவைக்காக  சேர்ப்பார்கள்  அது  கெடுதல் . மாமபழம்  தோலோடு  சாப்பிட்  வேண்டும், நார்ச்சத்து கிடைக்கும் , அப்போதுதான்  அதன்  முழுப்பயன்கள்  நமக்குக்கிடைக்கும் . சர்க்கரை  நோயாளிகள்  முக்கனிகள்  மூன்றையும்  தவிர்க்க  வேண்டும் . சுக்ரோஸ்  என்னும்  சர்க்கரைச்சத்து  அதிகம்  இருப்பதால்  இது  ரத்தத்தில்   சர்க்கரை  அளவை  ஏற்றி  விடும், ரொம்ப  ஆசையாக  இருந்தால்  ஒரு  துண்டு  மட்டும்  சர்க்கரை  நோயாளிகள் சாப்பிடலாம்

Wednesday, November 22, 2023

கருங்காப்பியம் (2023) தமிழ் -- சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர்) # சிம்ப்ளி சவுத் & அமேசான் பிரைம்

   


 ஹோட்டலில்  பசியோடு  உள்ளே  போகிறவன்  ஃபுல்  மீல்ஸ்  சாப்பிடத்தான்  ஆசைப்படுவான் . அது  இல்லை , தீர்ந்து  விட்டது  என்றால்  தான்  வேறு  வழி  இல்லாமல்  வெரைட்டி  ரைஸ்  ஆன  லெமன்  ரைஸ் , புளி  சாதம் , தயிர்  சாதம்  ஏதாவது  இரண்டு  வகை  சாப்பிடுவான், ஆனால்  முழு  சாப்பாடு  சாப்பிட்ட  திருப்தியை  இந்த  பட்டை  சாதம்  தராது . 


  அது  போல  தமிழர்களைப்பொறுத்தவரை  இந்த  குறுங்கதைகளின்  தொகுப்பு  என்பதெல்லாம்  சினிமாவில்  பெரிதாக  எடுபடுவதில்லை . ஐந்து  வெவ்வேறு  சிறுகதைகளின்  தொகுப்புதான்  இப்படம் , இதில்  நான்கு  சிறுகதைகள்  தலா  20  டூ 25  நிமிட்ங்களும் , கடைசி  சிறுகதை  மட்டும்  40  நிமிடங்களும்  ஆகின்றன .  ஐந்து  கதைகளுக்கும்  ஒரு  லிங்க்  இருக்கு என  சிரமப்பட்டு  கண்டுபிடித்து  அடுத்த  பாகம்  வரும்  என  பயமுறுத்துகிறார்கள் . முதல்  பாகம்  ஹிட்  ஆனாத்தானே  அடுத்த  பாகம்  வரும் ?   


       ஸ்பாய்லர்  அலெர்ட்


கொரோனா  லாக் டவுன்  டைமில்  நாயகி  100  வருடங்கள்  பழமை  வாய்ந்த  ஒரு  லைப்ரரி போய்  அங்கே  அமர்ந்து  ஒரு  புத்தகத்தை  வாசிக்கிறார். அதில்  ஐந்து  கதைகள்  இருக்கின்றன 

 1  கரிநாக்குக்காரி - நாயகி  மீரா  லாக்  டவுன்  டைமில்  திடீர்  என  ஹவுஸ்  ஓனரால்    வீடு காலி  பண்ண சொல்லி  நிர்ப்பந்திக்கப்படுகிறாள். வேறு  வழி  இல்லாமல்  வீட்டைக்காலி   பண்ணி  வெளியே  படிக்கட்டில்  அமர்ந்து  அழுது  கொண்டிருக்கிறாள் , அப்போது  அங்கே  வரும் நாயகன்  டோண்ட்  ஒர்ரி , என்  ஃபிலாட்ல  வந்து  தங்கிக்குங்க  என  அழைக்கிறான், நாயகியும்  அவன்  ஃபிளாட்டில்  தங்குகிறாள் 


நாயகன்  ஃபிளாட்டில்  இல்லாத  போதுதான்  நாயகிக்கு  ஒரு  உண்மை  தெரிய  வருகிறது . நாயகன்  ஒரு  சைக்கோ கில்லர் . அந்த  ஃபிளாட்டில்  இரு  பெண்களின்  டெட்  பாடிகள்  இருக்கின்றன. இதற்குப்பின்  நாயகி  எப்படி  தப்பித்தாள்  என்பது  மீதிக்கதை 


 டைட்டிலுக்கான  அர்த்தம்  நாயகி  ஹவுஸ்  ஓனரை  நாசமாகப்போவாய்  என  கோபத்தில்  சாபம்  இட்டதும் , அயர்ன்  செய்யும்  நபரை  கோபமாக  நீ  எரிந்து  போவாய்  என  சொன்னதும்  பலித்ததாக  ஒரு  இடத்தில்  சொல்கிறாள் 


நாயகன்  தன்  நண்பனுக்கு  ஃபோன்  பண்ணி  ஒரு  கிளி  புதுசாக  சிக்கி  இருக்கிற்து  என  ஃபோட்டோ  அனுப்புகிறான்,  அப்போதுதான்  அந்த  நண்பன்  ஃபேஸ் புக்கில்  செக்  பண்ணி  மீரா  பற்றிய  ஒரு  உண்மையை  சொல்கிறான். அந்த  மீரா  செத்தே  ஐந்து  வருடங்கள்  ஆகின்றன 


 இந்த  ட்விஸ்ட்டுக்குப்பின்  சைக்கோ  கில்லர்  ஆன  நாயகனுக்கு  என்ன  நிகழ்ந்தது  ? என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


 நாயகன்  ஆக கலையரசன்  கச்சிதம்  ஆன  நடிப்பு . நாயகி  ஆக  ரைசா  வில்சன்  கொஞ்சம்  ஓவர்  ஆக்டிங்  தான்  அதை  அவரது  கிளாமர்  சரி  செய்து  விடுகிறது 

2   கதறக்கதறக்காதல் = நாயகி  வீட்டில்  தனியாக  இருக்கிறாள் , ஒரு  யூ  ட்யூப்  ரிவ்யூவர்  கதவைத்தட்டுகிறான். அவனை  உள்ளே  வர  வைக்கிறாள்  நாயகி . பிறகு  லைக்ஸ்க்காக  அவள்  செல்ஃபி  வீடியோவில்  சமையல்  குறிப்பு  கூறி லைவ்  வீடியோ  அப்டேட்டும்போது  ஒரு  வெள்ளை உருவம்  கடப்பதைக்காண்கிறாள் 


 அப்போதுதான்  ஒரு  ட்விஸ்ட்  வெளிப்படுகிறது . வீட்டுக்கு  வந்த  பால் காரன் ,  தபால் காரன் , என  கிட்டத்தட்ட  ஆறு  பேரை  நாயகி  அடைத்து  வைத்திருக்கிறாள் . நாயகி  ஒரு  பேய் 

நாயகி  ஆக  ஜனனி  அய்யர்  அதிக  வாய்ப்பில்லை , யோகிபாபு , கருணாகரன்  இருவருக்கும்  சின்ன  ரோல் , ஓக்கே  ரகம் 


3  கும்மிருட்டு - நாயகன்  ஒரு  பெண்ணை  அழைத்துக்கொண்டு  ஒரு  இசை  அமைப்பாளர்  வீட்டுக்கு  செல்கிறான். அங்கே  பாடல் பதிவு  நடைபெற  இருக்கிறது . ஆனால்  அதற்கு  முன்பாக  அமானுஷ்ய  சம்பவங்கள்  நடக்கின்றன . பல  அமானுஷ்ய  உருவங்கள்  இங்கெயும் , அங்கேயும்  அலைகின்றன. ஒரு  பெண்  கையில்  விளக்குடன்  அழுது  கொண்டு  இருக்கிறாள் 


ஒரு  கட்டத்தில்  நாயகனுக்கு  ஒரு  உண்மை  தெரிய  வருகிறது , அதற்கு  முந்தின  தினம்  குடி  போதையில்  கார்  ஓட்டி  இசை  அமைப்பாளர்  மற்றும்  பலரது  உயிரைக்காவு  வாங்கியதே  நாயகன்  தான் , இதற்குப்பின்  நடந்தது தான்  க்ளைமாக்ஸ் 


 இதில்   இசை  அமைப்பாளர்  ஆக  லொள்ளு சபா   மனோகர்  நன்றாக  மொக்கை  போடுகிறார் . பாடகிஆக   வி ஜே  பார்வதி  

காத்து  வாக்குல  ரெண்டு  பாட்டில்   நாயகன்  அவன்  நண்பன்  இருவரும்  ஃபோனில்  பேசிக்கொள்கிறார்கள் . லாக்  டவுன்  என்பதால்  சரக்கே  கிடைக்க  மாட்டெங்குது  என  நாயகன்  சொல்ல  நண்பன்  சாக்கு  இருக்கும்  பாருக்கு  அழைத்து  செல்கிறான் , அங்கே  யாரும்  இ;ல்லை .  சரக்கு  அடிக்க  முயலும்போது  சில  ஏலியன்ஸ்  அங்கே  இருப்பதை  கவனிக்கிறார்கள் 

அந்த  ஏலியன்சின்  தலைவி  ஒரு  பெண். அவர்களுக்கு  சரக்கு  தான்  ஆகாரம், அதனால்  தான்  பாரில்  இருக்கிறார்கள் . இவர்களுக்கு  இடையே  நிகழும்  காமெடி  உரையாடலகள்  தான்  கதை



5   சூனியக்காரி -  நாயகி  தெய்வ  வாக்கு  படத்தில்  வரும்  ரேவதி  மாதிரி  தெய்வீகப்பெண் , குறி  சொல்பவர் , அவர்  சொல்வது  அப்படியே  பலிக்கும், அவள்  கணவர்  மிலிட்ரி  மேன் , ஒரு  மகள்  இருக்கிறாள் ,  நாயகியின்  கணவனின்  தம்பி  நாயகியை  பார்த்துக்கொள்கிறான்


 அந்த  ஊரில்  ஒரு  பண்ணையார்  இருக்கிறார். அவர்  நாயகியை  அடைய  முயற்சிக்கிறார்/ அந்த  ஊரில்  மர்மமான  முறையில்  குழ்ந்தைகள்  இறகின்றன. சில  பெரியவர்கள் தலை  வெட்டப்பட்டு இறக்கிறார்கள் 


 இந்த  மர்ம  மரணங்களுக்கு  காரணம்  என்ன? என்பதை  யாராலும்  கண்டுபிடிக்க  முடியவில்லை 

  நாயகியின்  கணவன்  மிலிட்ரியில்  இறந்து   விட்டதாக  தகவலும், டெட் பாடியும்  ஊருக்கு வருகிறது


நாயகியின்  கணவன்  தன்  சொத்துக்களை  எல்லாம்  நாயகியின்  பெயருக்கே    உயில்  எழுதி  வைத்திருப்பது  தெரிய  வருகிறது


இதற்குப்பின்  தான்  ஒரு  திருப்பம், நாயகியின்  கொழுந்தனார்  தான் இத்தனை  மரணங்களுக்கும்  காரணம் .  நாயகி  ஒரு  சூனியக்காரி  என  ஊரில்  ப்ழி  சுமத்தி  ஊரார் கையால்  நாயகியை  கொல்ல  வைக்கிறான்  கொழுந்தனார் . பண்ணையாரும்  கொலை  செய்யப்படுகிறார். 


இறந்து  போன  நாயகி  பேயாக  வந்து  கொழுந்தனார்  க்தையை  முடிக்கிறாள் 


 நாயகி  ஆக  காஜல்  அகர்வால் , ஓவர்  மேக்கப் , ஓவர்  ஆக்டிங் . பண்னையார்  ஆக  ஜான்  விஜய்  வழக்கம்  போல்  வில்லத்தனம்  கொண்ட  கதா  பாத்திரம்


சபாஷ்  டைரக்டர்


1  ஐந்து  கதைகளுமே  மொக்கை  என்பதை  உணர்ந்து  ஐந்து  கதைகளிலும்  ஒரு  அழகான  பெண்ணை  உலவ விட்ட  ஐடியா 


2  தயாரிப்பாளருக்கு  பெரிதாக  செலவு  வைக்காமல்  நான்கு  கதைகளையிம்  நான்கு  வெவ்வேறு  ரூமிலும், ஐந்தாவது  கதையை  ஒரு  கிராமத்திலும்  சிக்கனமாக  ஷூட்டிங்  நடத்திய  சாமார்த்தியம் 


  ரசித்த  வசனங்கள் 


இந்த  மாதிரி  ஹாரர்  படங்களில்  வ்சனமாடா  முக்கியம், திகில்  சீன்  , ஜெர்க் கொடுக்கும்  சீன்  இருந்தா  பாரு  என  இயக்குநர்  முடிவு  செய்து  இருப்பதால்  பெரிய  அளவில்  டயலாக்ஸ்  இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   லாக்  டவுன்  டைமில்  வீட்டைக்காலி  செய்யச்சொல்லி  ஓனர்  ஏன்  வற்புறுத்துகிறார்  என்பது  சரியாக  சொல்லப்படவில்லை . வந்தவரை  வாடகை  மிச்சம்  தானே?


2  திடீர்  என  வீட்டைகாலி  செய்யும் மீரா  கையில்  ஒரு  சின்ன  சூட்கேஸ் , தோளில்  ஒரு  பேக்  அவ்ளோ  தான்  பொருட்களே! ஒரு  லாரி  நிறைய   வேன்  நிறைய  பொருட்கள் இருக்காதா?


3   100  வருடங்கள்  பழமையான  புக்கில்  வரும்  கதையில்  கொரோனா = லாக்  டவுன்  எல்லாம்  இடம்  பெற்று  இருப்பது  எப்படி ? 


4  அண்ணியை  ஈசியாக  கொலை  செய்து  சொத்துக்களை  அடையாமல்  கிறுக்கு  வில்லன்  ஊரில்  ஏகப்ப்ட்ட  கொலைகள்  செய்து  ரிஸ்க்  எடுப்பது  ஏன் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -இந்தப்படத்தில்  கண்ட்டெண்ட்டுக்கே  பஞ்சம், அடல்ட்  கண்ட்டெண்ட்  மட்டும் தான்  குறைச்சலா?  யூ  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஒரு  டப்பாப்படம் . யாம்  பெற்ற  துன்பம்  பெறக்கூடாது  இவ்வையகம், ரெட்டிங் 1/ 5 



Karungaapiyam
Theatrical release poster
Directed byDeekay
Written byDeekay
Produced byPadarthi Padmaja
Starring
CinematographyVignesh Vasu
Edited byVijay velukutty
Music byPrasad SN
Production
company
Pave Entertainments
Distributed byBlockbuster Production
Release date
  • 19 May 2023
CountryIndia
LanguageTamil

Tuesday, November 21, 2023

1001 NUNAKAL (2022) மலையாளம் /தமிழ் - 1001 பொய்கள் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ சோனி லைவ்

     


                  இந்தப்படம்  27 வது  இண்ட்டர்நேஷனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவல்  ஆஃப்  கேரளா  வில்  திரையிடத்தேர்வான  படம் . பல  விருதுகளைக்குவித்த  படம் . 2023  ஆகஸ்ட் டில்  சோனி  லைவ்ல  தமிழில்  திரையிடப்பட்டது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  தம்பதியின்  10 வது  வருட  திருமண  விழா . வீட்டில்  நடக்கும்  அந்த  விழா + விருந்துக்கு  நண்பர்களான  5  தம்பதிகள்  வருகிறார்கள் . ஜாலியாகப்பேசிட்டு  இருக்கும்போது  ஒருவன்  ‘ இப்போ  நாம்  ஒரு  கேம்  விளையாடலாம், இதுவரை  பரஸ்பரம்  ஒருவருக்கொருவர்  தெரியாமல்  மறைத்து  வைத்த  பொய்யை  இப்போது  ஓப்பன்  செய்ய  வேண்டும். தில்  இருப்பவர்கள்  இதில்  கலந்து  கொள்ளலாம்  என்கிறான்


 விளைய்ட்டாக  ஆரம்பித்த  இந்த   செயல்  வினை  ஆகிறது . தம்பதிகளுக்கும்  சண்டை , சச்சரவு  வருகிறது 


இது  போதாது  என  வெட்டிங்  அனிவர்சரிக்கு பரிசாக  கணவன்  தந்த  5  லட்ச  ரூபாய்  மதிப்புள்ள  கடிகாரத்தைக்காணவில்லை 


இது  ஒரு  டிராக்கில்  போகிறது 


 அந்த  வீட்டில்  பணிப்பெண்ணாக  வேலை  பார்க்கும்  பெண்ணின்  கணவன் ஆஃபீசில்  தந்த  பணத்தை  பேங்க்கில்  கட்டாமல்  ரோலிங்  பண்ணி  விட  அவன்  பண  சிக்கலில்  இருக்கிறான் . உடனடியாக  பணத்தை  ரெடி  பண்ணிக்கட்ட  வேண்டிய  நெருக்கடிக்கு  ஆளாகிறான்


இந்த  இரண்டு  டிராக்குகளையும் இந்த  திரைக்கதை  எவ்வாறு  இணைக்கிறது  என்பது  மீதி  கதை 


ஐந்து  தம்பதிகளுமே  சிறப்பாக  நடித்திருந்தார்கள் . பணிப்பெண்ணாக   வருபவர்  அனைவரையும்  ஓவர்  டேக்  செய்யும்  அளவு  தன்  பங்களிப்பை தந்திருந்தார் 


ஒரே  ஒரு  பங்களா . 12  கேரக்டர்கள் .  லோ  ப்ட்ஜெட்டில்  எடுத்திருக்கிறார்கள் . பெரிய  பெரிய  ஹீரோக்களுக்கு  100  கோடி  சம்பளம்  தந்து  நட்டம்  செய்யும்  படம்  தருவதை  விட  திரைக்கதைக்கு  முக்கியத்துவம்  தந்து  இது  போல  லோ பட்ஜெட் படம்  எடுத்தால் ஆரோக்கியமான  சினிமா வுக்கு  அது  நல்லது 


106   நிமிடங்கள்  மட்டுமே  ஓடக்கூடிய  சின்னப்படமாக  கட்  செய்திருக்கிறார்   எடிட்டர் . ஒரு  குயிக்  வாட்ச்  ஆகவே  இதைப்பார்த்து  விடலாம்


ஒளிப்பதிவு லோ  பட்ஜெட்  என்ற  மைனசையும்  மீறி  தரமாக  இருக்கிறது . திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  தமர் 


சபாஷ்  டைரக்டர்


1   நாரதர்  போல  கலகத்தை  விளைவிக்கும்  அந்த   வக்கீல்  கேரக்டர்  டிசைன் 


2  ஒவ்வொரு  தம்பதியும் புதுப்புது  பொய்யை  சொல்லும்போது  அவர்  துணை  காட்டும்  ரீ  ஆக்சன்ஸ்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  சில  பஸ்  கரெக்டான  இடத்துக்கு  கரெக்ட்  டைம்க்குப்போயிடும், சில  பஸ்  பிரேக்  டவுன்  ஆகிடும், சில  பஸ்  ஆக்சிடெண்ட்  ஆகிடும் ,  அப்படி  ஆக்சிடெண்ட்  ஆன  பஸ்  பயணியை  வேற  பஸ்க்கு  மாற்றி  விடுவதுதான்  டைவர்ஸ்


2  உண்மையான  டேலண்ட்டை  ஒரு  சிலரால்  தான்  அடையாளம்  காண  முடியும் 


3  டைவர்ஸ்  ஆன  தம்பதிகள்  எல்லாம்  கிரிமினல்ஸ்  இல்லை , ஆனா  சேர்ந்து  வாழ்ந்தாலும்  ஒருவரை  ஒருவர்  ஏமாற்றி  , பொய்  சொல்லும்  தம்பதியினர் தான்  கிரிமினல்ஸ் 


4  பொதுவாக  நம்  பொய்கள்  எல்லாம்  வெளில  வராம  இருக்கும்  வரை  நாம்  நல்லவர்கள் தான் 


5  ரெண்டு  கைகளும்  சேர்ந்தாதான்  சத்தம்  வரும், யாராவது  ஒருவர்  அமைதியா  இருந்தா  ஆர்க்யூமெண்ட்  வராது 


6   பல  நேரங்களில்  அது  உண்மையா? பொய்யா? என்பதை  முடிவு  செய்வதே   அதைக்கேட்கறவங்க  தான் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  சமையல்  செய்யும்  பணிப்பெண்  அதிகபட்சம்  ரூ 6000  சம்பளம்  வாங்குபவராக  இருப்பார். அவரை  அவரது  கணவர்  எப்படியாவது  20,000  ரூபாய்  அட்வான்ஸ்  ஆக  வாங்கி  வா  என  சொல்வது  அபத்தம்,  யார்  அது  போல  மூன்று  மாத  சம்பளத்தை  முன்  கூட்டியே  தரப்போகிறார்கள் ?


2     நான்  லைட்டை  ஆஃப்  பண்றேன், வாட்சை  எடுத்தவங்க  அதைக்கொண்டு  வந்து  டேபிளில்  வைத்து  விடுங்கள்  என  சொல்கிறார்கள் , ஆனால்  வெளிச்சம்  காட்டிக்கொடுக்கும்  விதத்தில்  தான்  இருக்கிறது . எப்படி  திருடன்  கொண்டு  வந்து  வைப்பான் ? 


3  பொதுவாகவே  ஆண்களுக்கு  அவரவர் சம்சாரம்  குணம்  பற்றித்தெரியும், சின்னப்பொய்யை  சொன்னாலே  மாட்டிக்கொள்வார்கள் ,  இந்த  மாதிரி  கேமில்  ஒரு  பிரம்மாண்டமான  பழைய  பொய்யை  என்ன  தைரியத்தில்  சொல்கிறார்கள் ? 

-அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆண்களை  விட  பெண்களுக்கு  இந்தப்படம்  அதிகம்  பிடிக்கும்,  பொறுமை  வேண்டும்,  சுடுதண்ணீரைக்காலில்  ஊற்றியது  போல  பறக்கும்  ஆண்கள்  தவிர்க்கவும்  . ரேட்டிங்  2.75 / 5


1001 Nunakal
Promotional release poster
Directed byThamar K. V.
Written by
  • Thamar K. V.
  • Hashim Sulaiman
Produced bySalim Ahamed
Starring
  • Vishnu Agasthya
  • Remya Suresh
  • Zhinz Shan
  • Vidhya Vijaykumar
CinematographyJithin Stanislaus
Edited byNishadh Yusuf
Music by
Production
company
Allens Media
Distributed bySonyLIV
Release dates
  • 11 December 2022 (IFFK)[1]
  • 18 August 2023 (SonyLIV)[2]
Running time
106 minutes[3]
CountryIndia
LanguageMalayalam