Wednesday, December 07, 2022

KOOMAN (2022)- கூமன் மலையாளம் - திரை விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) எ ஜீத்து ஜோசஃப் ஃபிலிம் @ அமேசான் பிரைம்

  எ ஜீத்து  ஜோசப் ஃபிலிம்  என  டைட்டிலில்  அவர்  பெயர்  வந்தாலே   கேரள  திரையரங்குகள்  கைதட்டல்களால்  அதிரும்..2007 ல் ரிலீஸ்  ஆன  டிடெக்டிவ்  என்ற  இவரது  முதல்  படமே  க்ரைம்  த்ரில்லர் தான்.2013ல்  ரிலீஸ்  ஆன  இவரது  மெமரீஸ்  பிரித்விராஜ்க்கு  முக்கியமான  வெற்றிப்படமாக  அமைந்தது 2013ல் ரிலீஸ்  ஆன  மோகன்லாலின்  த்ரிஷ்யம்  மலையாளப்பட  உலகையே  புரட்டிப்போட்டது. இந்தியாவிலேயே  அதிக  மொழிகளில்  ரீமேக்  ஆன  படம்  என்ற  பெருமையையும்  பெற்றது. 2014ல்   கமல்  நடித்த  பாபநாசம்  இதன்  தமிழ்  ரீமேக்  தான். 2021ல்  த்ரிஷ்யம்  பாகம்  2  ரிலீஸ்  ஆகி  முதல்  பாகத்தை  விட  அதிக  பாராட்டுதல்களைப்பெற்றது


கேரளாவில்  நட்ந்த  விசித்திரமான  சில  கொலை  வழக்குகளை  அடிப்படையாகக்கொண்டு  கூமன்   திரைக்கதை  உருவாக்கப்பட்டது.  முதல்  பாதி  ஒரு  கதை  , பின்  பாதி  முற்றிலும்  வேறு  ஒரு  கதை , ஆனால்  இரு  கதைகளையும்  ஒரே  நேர்கோட்டில்  இணைத்தது  ஒரு  சாமார்த்தியமே!

spoiler alert

நாயகன்  சாதாரண  போலீஸ் கான்ஸ்டபிள், ஆனால்  அதிக  புத்திக்கூர்மை  உள்ளவர். எந்த  ஒரு  கேஸில்  அவர்  ஆஜர்  ஆனாலும்  மிக  நுணுக்கமாக  துப்பு  துலக்குபவர் . மேலதிகாரிகளிடம்  ஒரு  பக்கம்  பாராட்டுக்கிடைத்தாலும்  சக  போலீஸ்  கான்ஸ்டபிள்கள்  அவரை  பொறமையாகப்பார்ப்பார்கள் . புதிதாக  வந்த  போலீஸ்  ஆஃபீசர்  நாயகனை  சிலர்  முன்  மட்டம்  தட்டுகிறார்


இதனால்  கடுப்பான  நாயகன்  அவரை  அலைக்கழிக்க  ,மேலிடத்தில்  மாட்டி  விட  ஒரு  திட்டம்  தீட்டுகிறார். மிக  சாமார்த்தியமான  ஒரு  திருடன்  உதவியோடு ஆதாரங்கள்  இல்லாமல்  திருடுவது  எப்படி ?  என  சகல  வித்தைகளும்  கற்றுக்கொண்டு  இரவில்  நைட்  டியூட்டி ஆக  திருடன்  வேலை  பார்க்கிறார்.  பகலில்  போலீஸ்  ட்யூட்டி  பார்க்கிறார்


ஊர்  முழுக்க  அடிக்கடி  திருட்டு  நடப்பதால்  போலீஸ்  ஆஃபீசருக்கு  கெட்ட  பேர் . இதைக்கண்டு  நாயகனுக்கு  அளவில்லாத  ஆனந்தம். இவர்  தன்  திருட்டு  வேலைகளைத்தொடர்கையில்  ஒரு  சிக்கல் ,  ஒரு  வீட்டில்  இவர்  திருடும்போது  அந்த  வீட்டு   ஓனர்  நாயகனைப்பார்த்து  விடுகிறார்


தன்னை  அடையாளம்  கண்டு  கொண்டு  சாட்சி  சொன்னால்  நாம்  மாட்டிக்கொள்வொம்  என  பயந்த  நாயகன்  பக்கத்து  ஊரில்  ஒரு  லாட்ஜில்  ஒரு  நாள்  தங்கி  விட்டு  பின்  சொந்த  ஊருக்கு  வருகிறார். வந்தால்  அதிர்ச்சி .  இவரைத்திருடனாகப்பார்த்த  சாட்சியான  ஆள்:  கொலை  செய்யப்ப்ட்டு  இருக்கிறார்


உடனே  நாயகன்  இந்த  கேசை   துப்பு  துலக்க  களம்  இறங்குகிறார். விசாரணையில்  கடந்த  இரு  வருடங்களாக  தமிழகம், கேரளா  ஆகிய  இரு  மாநிலங்களில்  மாதம்  ஒரு  கொலை  வீதம்  24  கொலைகள்  நடந்தது  தெரிய  வருகிறது . எல்லா  கொலைகளும்  தற்கொலை  போல  ஜோடிக்கப்ப்ட்டு  இருக்கிறது . கொலையாளி  யார் ?  என்ன  காரணத்துக்காக  இந்தக்கொலைகள்?  என்பதை  நாயகன்  எப்படி  துப்பறிகிறார்  என்பதே  பின்  பாதி  திரைக்கதை  


நாயகனாக அஷிஃப் அலி  பிரமாதமாக  நடித்திருக்கிறார். தன்னை  அவமானப்படுத்தியவர்கள்  தானாக  வந்து  சிக்கும்போது  அவர்  முக்த்தில்  காட்டும்  க்ரூரம்  ஒரு   தேர்ந்த  சைக்கோவை    கண்  முன்  நிறுத்துகிறது 


உயர்  அதிகாரியாக  வந்து  ரிட்டயர்ட்  ஆகும்  ஆஃபீசராக  ரஞ்சி  பணிக்கர்  கம்பீரமான  நடிப்பு  அவரது  குரல்  பெரிய  பிளஸ். ஒப்புதல்  வாக்குமூலம்  அளிக்கும்  நாயகனை  பளார்   என  அடிக்கும்  காட்சியில்  அருமையான  நடிப்பு 


சாமார்த்தியமான  திருடனாக  வரும் இடுக்கி  ஜாஃபர்  கேரக்டர்  டிசைன்  அற்புதம்  .  அவரது  கம்பீரமான  குரலில்  வாய்ஸ்  ஓவரில்  சாமார்த்தியமாகத்திருடுவது  எப்படி?  கோர்ஸ்  கலக்கல்  ரகம் , லாக்கப்பில்  அவ்ளோ அடி  வாங்கியும்  நாயகனைக்காட்டிக்கொடுக்காமல்   நாயகனிடம்  தனிமையில்  நான்  திருடன்  தான்  ஆனால்  காட்டிக்கொடுக்கும்  துரோகி  அல்ல  என  சொல்லும்போது  என்ன  மனுசன்யா  இவரு  என  ஆச்சரியபப்ட  வைக்கிறார்


சைக்யாட்ரிஸ்ட் ஆக  வரும்  அனூப்  மேனன்  ஒரே  ஒரு  காட்சியில்  வந்தாலும்  கச்சிதமான  பங்களிப்பு 


லட்சுமியாக  வரும்   ஹன்னா  ரெஜி  கோஷி   நாயகனுக்கு  ஜோடி  போல  படம்  முழுதும்  அங்காங்கே  தலை  காட்டி  க்ளைமாக்சில்  மிரட்டுகிறார்


தமிழகத்தில்  கதை  நகரும்போது  தமிழக  போலீஸ்  ஆஃபீசராக  வரும்  கைதி  புகழ்  ஜார்ஜ்  மரியம்   நிறைவான  நடிப்பு  என்றால்  போலீஸ்  கான்ஸ்டபிளாக  வரும்   ரமேஷ்  திலக்  கனகசிதம் 


சதீஷ்  க்ரூப்  தனது  ஒளிப்பதிவால்  படத்துக்கு  உயிர்  ஊட்டுகிறார். விஷ்ணு  ஷியாம்  பின்னணி  இசையில்  மிரட்டுகிறார்


வி எஸ்  வினாயக்  எடிட்டிங்கில்   153  நிமிடங்கள்  படம்   ஓடுகிறது , அக்டோபர்  மாதம்  திரையரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  வெற்றி  பெற்ற  இந்தப்ப்டம் இப்போது  அமேசான்  பிரைமில்  காண்க்கிடைக்கிறது 


சபாஷ் டைரக்டர் 


1 ஓப்பனிங்  சீனில்  வைர  மோதிரம்  திருட்டுக்கேசில்  நாயகனின் புத்திக்கூர்மையை  விளக்கும்  காட்சி  குட் ஒன்


2 திருடனாக  வரும்  இடுக்கி  ஜாஃபர்  உடல்  மொழி , குரல்  நயம், நடிப்பு என  கலக்கல்   கேரக்டர். 



நச்  டயலாக்ஸ் 


1    சின்னச்சின்ன  விஷயத்துக்கு  எல்லாம்  பழி  வாங்க  நினைக்கக்கூடாது 


2  உயர்  அதிகாரிகளால்  டார்ச்சர்  அனுபவிக்காத  ஆள்  இந்த  உலகத்தில்  உண்டா? 


3  தண்ணிப்பாம்பு  மாதிரி  இருக்கும்  பெண்கள்  வாய்ப்பு  வரும்போது  கோப்ராவா  மாறி  கொடூர  முகம்  காட்டுவார்கள் 


4 திருடனுக்கான  முதல்  தகுதி  எது  தெரியுமா?  எவ்ளோ  இருட்டா  இருந்தாலும்,  எவ்ளோ  மப்புல  இருந்தாலும் , மாறுவேஷத்தில்  இருந்தாலும் ஒரு  போலீஸ்காரனைப்பார்த்தா  உடனே  அடையாளம்  கண்டுக்கனும்


5  சாமார்த்தியமா  திருடுவதில்  உள்ள  த்ரில்  சரக்கு , பெண்  இதில்  எதிலும்  கிடைக்காது 


6  ஒரு  திருடன்  என்னைக்கும்  அவசரப்படக்கூடாது , நிதானம்  ரொம்ப  முக்கியம்


7  வீட்டுக்குள்ளே  திருடப்போகும்போது  ஒரு  வழி இருந்தாலும் ,  எமர்ஜென்சிக்கு  தப்பிக்க  ஒரு  வழி  ஆல்ரெடி  தெரிஞ்சு  வெச்சிருக்கனும் 


8  உய்ர் அதிகாரியா  இருக்கறவங்களுக்கு  திறமை  இல்லை , திறமை  இருப்பவர்களுக்கு  உயர்  பதவி  கிடைக்கறதில்லை , இதுதான்  உலகம் 


9 சிசிடிவியை  விட  சிறந்தது  எது  தெரியுமா?  நாய்  தான் ., சிசிடிவியால  திருடன்  வரும்போது  குலைக்க  முடியுமா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    ஹீரோ  பகலில்  போலீஸ்  ட்யூட்டி  நைட்டில்  திருடன்  ட்யூட்டி  பார்க்கறார். , எப்போ  தூங்குவார்? 


2   திருடனா  போகும்போது  சின்னதா  ஒரு  கர்ச்சீப்  மட்டும்  மாஸ்க்  போல  போட்டுட்டுப்போறார். நெத்தி  , புருவங்கள் , கண்  எல்லாம்  தெளிவா  வெளில  தெரியுது. யாருக்கும்  அடையாளம்  தெரியாதா?


3  திருடப்போகும்  இடத்திலெல்லாம்  செல்  ஃபோன்  டார்ச்  ஆன்  பண்ணி  வாய்ல  பிடிச்சுக்கறார், அந்த  வெளிச்சத்துல  ஆள்  அடையாளம்  காட்டிக்கொடுக்காதா? 


4   ஒருவரை  தூக்கில்  போடும்போது  அவரது  இரு  கைகளும்  கட்டப்பட்டிருக்கும். காரணம்  கயிறு  கழுத்தை  இறுக்கும்போது   கைகள்  கயிறைப்பிடிக்கும், ஆள்  எஸ்கேப்  ஆகிடுவான். ஆனா  க்ளைமாக்ஸ்  ல  வில்லன்  இரு  கைகளூம்  ஃப்ரீயாதான்  இருக்கு ,  ஹீரோ  கயிறால்  கழுத்தில்  சுருக்கு  போட்டு  மேலே  தூக்கும்போது  வில்லன்  ஏன்  தன்  கைகளை  யூஸ்  பண்ணவே  இல்லை?


5  க்ளைமாக்ஸ்  ல  குகைக்குள்ளே  சம்பவங்கள்  நடக்குது . கல்  தூண்  மாதிரி  ஆர்ட்  டைரக்சன்  ல  செட்  போட்டு  இருக்காங்க .  ஃபைட்  சீன்ல  அந்த  தூண்கள்  எல்லாம்  அட்டை  மாதிரி  சரியுது. 


6  திருடன்  ஆற்று  நீரில்  நீந்தி  தப்பிக்கும்போது  போலீஸ்  வேடிக்கை  பார்க்குது .  அவ்ளோ  போலீஸ்  ல  யாருக்குமே  நீச்சல்  தெரியாதா?  போலீஸ்  வேலைக்கு  நீச்சல்  தெரிஞ்சிருக்கனும்னு  புது  சட்டம்  போடனும் போல 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  த்ரில்லர்  ரசிகர்களுக்கு  அல்வா  மாதிரி  படம் க்ளைமாக்ஸ்  ல  மட்டும்  ம்ந்திரவாதி  ,நரபலினு  ஜல்லி  அடிப்பதை  பொறுத்துக்கனும்.  இந்தப்படத்தில்  வரும்  சம்பவங்கள்  எல்லாம்  உண்மை  சம்பவங்கள் 




Kooman
Kooman Poster.jpg
Poster
Directed byJeethu Joseph
Written byK. R. Krishna Kumar
Produced byListin Stephen
Allwin Antony
StarringAsif Ali
CinematographySatheesh Kurup
Edited byVS Vinayak
Music byVishnu Shyam
Production
companies
Magic Frames
Ananya Films
Distributed byMagic Frames
Release date
  • 4 November 2022
Running time
153 minutes
CountryIndia
LanguageMalayalam

Tuesday, December 06, 2022

GOODBYE (2022)(ஹிந்தி) - திரை விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

GOODBYE (2022)(ஹிந்தி) -குட் பை = திரை விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிகஸ்

நான் பார்க்கும் கடைசி சூர்யோதயம் இது என உயிரே ( தில் சே) படத்தில் அமரர் சுஜாதா வசனம் ஒன்று வரும். அது போல எத்தனை பேருக்கு தன் இறப்பின் கடைசி தருணத்தை உணர முடிந்திருக்கிறது ?இந்த உலகத்தை விட்டுப்போகும் முன் எத்தனை பேரால் நிறைந்த மனதுடன் குட் பை சொல்லிப்போக முடிந்திருக்கிறது? நம் பெற்றோரின் இறப்பிற்கு முன் அவர்களுடன் நாம் பேசிய கடைசி தருணங்கள் என்ன? நாம் அவர்களுடன் நேரம் செலவிட்டிருக்கிறோமா? இவற்றை எல்லாம் அலசும் படம் தான் இது .
திருமண கொண்டாட்ட்டங்கள் இடையே முழுக்க முழுக்க ஜாலியான பல படங்கள் வந்திருக்கின்றன. ஹம் ஆப் கே ஹைங் கோன் (1994) என்ற ஹிந்திப்படம் முழுக்க முழுக்க திருமண ஏற்பாடுகள் இடையே நிகழும் ஒரு கதை.ராஜ்கபூர் இயக்கத்தில் சத்யராஜ் - குஷ்பூ நடித்த கல்யாண கலாட்டா (1998) முழுக்க முழுக்க ஒரு திருமண மண்டபத்தில் நிகழும் க்ரைம் த்ரில்லர் கதை
ஆனால் ஒரு இழவு வீடு அல்லது ஒரு இறப்பு நடந்த வீட்டில் முழுக்க முழுக்க அவர்கள் ஈமக்க்ரியை , சட்ங்கு சம்பிரதாயங்கள் பற்றியே பல சுவராஸ்யமான சம்பவங்களுடன் படம் வந்திருக்கிறதா? என்றால் இல்லை என தான் சொல்ல வேண்டும்
நாயகி தன் ஆஃபீசில் நிகழ்த்திய ஒரு சாதனைக்கான பார்ட்டி கொண்டாட்டத்தில் நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார். அவரது செல் ஃபோன் பேட்டரி டவுன் , சார்ஜ் போடச்சொல்லி அங்கே இருக்கும் பணியாளிடம் தந்து விட்டு தன் நடனத்தை தொடர்கிறார். பின் ஃபோனை மறந்து வீட்டுக்கு வந்து விடுகிறார். மறு நாள் காலை அவரது ஃபோன் கிடைக்கிறது. அவரது அப்பா நைட் பூரா கால் பண்ணி இருக்கார். அம்மா இறந்துட்டாங்க என்ற தகவலை சொல்ல
பதறிப்போன நாயகி அப்பா வீட்டுக்கு அம்மாவைப்பார்க்கப்போகிறாள். அவரது சகோதரர்கள் வருகிறார்கள் . உறவினர்களும் வருகிறார்கள் . ஒவ்வொருவரும் இறந்து போன அம்மாவுடனான தன் அழகிய தருணங்களை நினைத்துப்பார்க்கின்றனர் பிறகு காசியில் கங்கை நதியில் அஸ்தியை கரைக்க செல்கின்றனர். அங்கே நிகழும் சம்பவங்கள் தான் மீதிக்கதை
நாயகனாக அப்பாவாக அமிதாப் பச்சன். என்னதான் சூப்பர் ஸ்டாராக ஆக்சன் அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் இது போன்ற கேரக்டர் ரோலில் அவரைப்பார்க்க மனசுக்கு இதமாக இருக்கிறது . மனைவியுடனான காதல் தருனங்கள் , பட்டம் விட்டு தூது விட்ட்து போன்ற டீன் ஏஜ் சம்பவங்களை நினைத்துப்பார்க்கும் இடங்கள் கவிதை . அந்தக்காட்சிகளை கார்ட்டூன் வடிவில் காட்சிப்படுத்தியதும் அழகு
அம்மாவாக காயத்ரி ரோலில் நீனா குப்தா. மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் பிணமாக வாழ்ந்திருந்தார். அது போல படம் முழுக்க பிணமாக வந்தாலும் ஆங்காங்கே ஃபிளாஸ்பேக் காட்சிகளில் உயிருடன் வந்து திரைக்கதைக்கு உயிர் ஊட்டுகிறார். இவரது ஆக்கிரமிப்புதான் முழுப்படத்திலும் , நிறைவான நடிப்பு
மகளாக ராஷ்மிகா மந்தனா, ஏற்கனவே சுல்தான் ,புஷ்பா ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் . அழகிய முகம் , கண்ணிய உடை , கச்சிதமான நடிப்பு அப்பாவுடனான வாக்குவாத காட்சிகளில் , பண்டிட் உடன் நடத்தும்ம் விவாதங்களில் ஜொலிக்கிறார்
இவர்கள் நீங்கலாக ஃபாரீனிலிருந்து வரும் மகன்கள் , வளர்ப்பு மகன் , மருமகள் என அனைத்து கேரக்டர்களுமே தங்களுக்குக்கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
இறப்பு வீட்டுக்கு வரும் உறவினர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் அவர்களது எண்ணம் என்னவாக இருக்கும் என்பதை காமெடி கலந்து சொல்லப்பட்டிருக்கிறது . பின் பாதியில் திரைக்கதை காசிக்கு பயணிக்கும்போது இறந்தவருக்கு செய்யும் ஈமச்சடங்குகள் பற்றிய விவாதங்கள் , பாரம்பரியமாக நம் முன்னோர்கள் சொன்னதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது
சாவு வீட்டில் எல்லாரும் சோகமாக இருக்க நான்கு பெண்கள் இறந்து போன அம்மாவின் பெயரில் ஒரு வாட்சப் க்ரூப் ஆரம்பித்து அங்கேயே ஒரு செல்ஃபி எடுத்து அதை வாட்சப் டிபி ஆக வைப்பது ரசிக்க வைக்கிறது
மூத்த மகன் தான் மொட்டை அடிக்கனும் என பண்டிட் சொல்லும்போது மகன் பதறுவதும் , மொட்டை அடிக்க மறுப்பதும் யதார்த்தம் என்றால் க்ளைமாக்சில் அவன் மொட்டை அடித்து அதற்கான காரணத்தை சொல்லும்போது உருக்கம்
ஸ்டுப்பிட் என செல்லப்பெயர் வைக்கப்பட்ட நாய் கூட நன்றாக நடித்திருக்கிரது /
ஆஷிஷ் வித்யார்த்தி கெஸ்ட் ரோலில் வருகிறார்
ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவரான விகாஸ் பால் தான் இயக்கி இருகிறார். எல்லோருக்கும் ஒரு இழப்பு இருக்கும் என்பதால் நடுத்தர வயதுள்ள எல்லோராலும் இந்தக்கதையை எளிதில் கனெக்ட் பண்ணிக்கொள்ள முடியும்
சுதாகர் ரெட்டியின் ஒளிப்பதிவு காசியின் அழகை கண் முன் நிறுத்துகிறது
அமித் த்ரிவேதியின் இசையில் சோக மெலோடி சாங்க்ஸ் அதிகம் . பிஜிஎம் கச்சிதம்
ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் ரெண்டரை மணி நேரத்தில் ஒரு ஃபீல் குட் மூவியைப்பார்த்த திருப்தி
சபாஷ் டைரக்டர்
1 ஃபாரீனில் இருந்து இழவுக்கு வ்ந்த மகன் அன்று இரவே பெட்ரூமில் மனைவியுடன் கூடலில் இருக்க ஆயத்தம் ஆவதை பெட்ரூம் கதவைத்தட்டி கண்டிக்கும் அப்பா. அருமையான சீன், காந்தியடிகள் தன் சுய சரிதத்தில் தன் அம்மா இறந்த அன்று இரவு மனைவியுடன் கூடலில் இருந்தேன் என குறிப்பிட்டிருப்பார் , அந்த வரி இன்ஸ்பிரேசனாக இருக்கலாம்
2 வீட்டின் மொட்டை மாடியில் காக்கா வருவதைப்பார்த்து அதை விரட்டப்போகும் நாயகி பின் அது நம் முன்னோரின் ஆத்மாவாக இருக்கலாம் என அறிவுறுத்தப்பட்ட பின் அதை ரசிப்பது குட்
3 காசியில் ஈமச்சடங்குகள் செய்யும் பண்டிட்டாக வருபவரின் கேரக்டர் டிசைன் அருமை , அவரது நடிப்பும் கன கச்சிதம்
ரசித்த வசனங்கள்
1 இந்த வயசுல ஒருகுழந்தையை ஏன் தத்து எடுக்கனும்னு தோணுச்சு?
தத்து எடுக்கறதுனா எந்த வித கடின உழைப்பும் தேவை இல்லையே? அதான்
2 நேத்துத்தான் அம்மா இறந்தாங்க , காலைலதான் எரிச்சுட்டு வந்தோம், பெட்ரூம்ல என்னடா மனைவி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கே?
அது அது வந்து அம்மாவோட கடைசி ஆசை அவங்க பாட்டி ஆகறது , அவங்க ஆசையைத்தான் நிறைவேத்திட்டு இருக்கோம்
3 சாஸ்திரங்கள் , சம்பிரதாயங்கள் எல்லாம் காலம் காலமா மக்கள் ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க . உனக்கு அது புரியலை , தெரியலை என்பது உலகத்தின் தவறு அல்ல
4 இறந்தவர்களின் அஸ்தியை நாம் ஏன் கங்கை நதியில் கலக்கிறோம் தெரியுமா? புண்ணியம் கிடைக்கும் ,. அதனால் தான்
அதெல்லாம் ஒண்ணும் இல்லை . சாம்பலை நதியில் கரைத்தால் விவசாயத்துக்கு நல்லது
5 பழங்கதைகள்னு நாம கிண்டல் பண்றமே அந்தக்கதைகளுக்கு நம்மை விட அதிக வயசு , டினோசரை விட அதிக வயது ,ஏன்? இந்த உலகத்தின் வயதை விட அதிகம். ந்ம்ம முன்னோர்கள் நமக்குச்சொன்னதை நாம் நம் சந்ததியினருக்கு சொல்லிச்செல்வோம்
6 ரெண்டு நாட்கள் எங்காவது வெளில போவதாக இருந்தால் நான் என்னென்ன செய்யனும்?னு லிஸ்ட் போட்டுக்குடுப்பியே? இப்படி திடீர்னு என்னை விட்டுட்டு மொத்தமா போய்ட்டியே? இனி நான் என்ன செய்யனும்னு யார் எனக்கு சொல்வாங்க ?
7 மூத்த மகன் தான் முடி துறக்கனும், அது ஒரு வகை தியாகம்., முடியை இழப்பதால் ஈகோ போகும்
8 90 வயசு வரை அவளுக்கு அயுள் உண்டுனு சொன்னீங்களே? அதுக்கு முன்னேயே போய்ட்டாளே?
ஒவ்வொரு பெற்றோரும் அவங்க குழந்தைங்க 100 வயசு வரை வாழனும்னு தான் ஆசைப்படுவாங்க
9 இறப்பு என்பது திடீர்னுதான் வரும், சுற்றிலும் பலர் அமர்ந்து ஒருவர் இறப்புக்காக காத்திருக்கும்போதா வரும் ?
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - அக்டோபர் 7ம் தெதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது நெட் ஃபிளிக்சில் வெளியாகி உள்ளது 40 வயது கடந்த ஆண்களுக்கும், அனைத்துப்பெண்களுக்கும் இந்தப்படம் பிடிக்கும் .ரேட்டிங் 3 / 5
 




Goodbye
Goodbye 2022 film poster.jpg
Theatrical release poster
Directed byVikas Bahl
Written byVikas Bahl
Produced by
Starring
CinematographySudhakar Reddy Yakkanti
Edited byA. Sreekar Prasad
Music byAmit Trivedi
Production
companies
Distributed byZee Studios
Release date
  • 7 October 2022
Running time
142 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget₹30 crore
Box officeest. ₹9.66 crore[2]

Monday, December 05, 2022

QALA- கலா - (2022) (ஹிந்தி ) - திரை விமர்சனம் (சைக்காலஜிக்கல் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

 

ஸ்பாய்லர்  அலெர்ட்


அம்மாவுக்கும் , மகளுக்கும்  இடையே  உள்ள  உறவுப்பிணக்குகள் , ஊடல்கள் , கோப,தாபங்கள் , கண்டிப்பு  பற்றிய  ஒரு  கதை. கதை  நடக்கும்  கால  கட்டம் 1930 - 1950 . சங்கீத  குடும்பத்தில்  பிறந்த  ஒரு  பெண்  எப்படிப்பட்ட  பிரச்சனைகளை  சந்தித்து  மேலே  வருகிறாள்  என்பதை  சைக்கலாஜிக்கல்  டிராமாவாக   மிக  நேர்த்தியாக  படைத்திருக்கிறார்கள் ,  படத்தின்  இயக்குநர்  ஒரு  பெண்  என்பதும் , நாயகி   மிகப்பிரபலமான , அற்புதமான  நடிகை  என  பெயர்  வாங்கியவர்  என்பதும்  ஹை  லைட்ஸ் 


சினிமா  உலகில்  புகழ்  பெற்ற   பாடகி  இந்த  நிலைக்கு  வர  என்ன  என்ன  சிரமங்கள் எல்லாம்  பட்டார்? என்னென்ன  தவறுகள்  எல்லாம்  செய்தார்?  புகழின்  உச்சிக்கு  சென்ற  பின்  குற்ற  உணர்வின்  காரணமாக  மன  நிலை  பாதிக்கப்பட்டு  எப்படி  வீழ்ச்சி  அடைந்தார்  என்பதும்  சொல்லப்படுகிறது 


நாயகியின்  அம்மா    பிரசவத்தில்  இரட்டைக்குழந்தை  பெற்றெடுக்கிறாள், ஆனால்  அவளிடம்  ஒரு  பெண்  குழந்தை  மட்டுமே  ஒப்ப்டைக்கப்படுகிறது.  இன்னொரு  குழந்தை  ஆண்  குழந்தை , ஆனால்  இறந்தே  பிறந்தது  என  சொல்லப்படுகிறது 


நாயகி  சிறு  வயதில்  இருந்தே  மிகவும்  கண்டிப்பாக  வளர்க்கப்படுகிறாள் . கர்நாட  சங்கீத  பாடகியாக  அவளுக்குக்கடுமையான  பயிற்சிகள்  தரப்படுகிறது என்னதான்  நாயகி  முனைப்பாக  சங்கீதம்  பயின்றாலும் அம்மாவுக்கு  பெரிய  அளவில்  திருப்தி  இல்லை 


 ஒரு  கச்சேரியில்  ஒரு   அனாதைப்பையன்  மிகப்பிரமாதமாகப்பாடுவதைக்கண்ட  நாயகியின்  அம்மா  அவனை தத்து  எடுத்து  வளர்க்க  முடிவு  எடுக்கிறாள் . நாயகியிடம்  நீ  திருமணம் செய்து  கொண்டு  உன்  கணவன்  வீட்டுக்குப்போய்  விடு . நான்  இவனை  வளர்த்து  சினிமாவில்  பாட  வைத்து  பெரிய  ஆள்  ஆக்கிக்கொள்கிறேன். பெண்களுக்கு  சினிமா  உலகம்  ஒத்து  வராது  என்கிறாள் 


ஆனால்  நாயகிக்கு  தான்  பாடகி  ஆக  விருப்பம், புகழுக்கு  ஏங்குகிராள். அம்மாவை  மீறி  அவள்  எப்படி  தன்  இலக்கை  அடைந்தாள்? அதற்கு  விலையாக  என்னென்ன  இழக்க  நேரிட்டது  என்பதுதான்  கதை 

நாயகியாக  த்ருப்தி  டிம்ரி பிரமாதமான  நடிப்பு,  ஏற்கனவே  இவர் 2017ல்  போஸ்டர்  பாய்ஸ் , 2018ல் லைலா  மஜ்னு  ஆகிய  படங்களில்  நடித்திருந்தாலும்  BULBBUL   படத்தில்  தான்  இவர்  நடிப்பு  பரவலாக  பேசப்பட்டது . மிக  அற்புதமான  நடிப்பு . மனோவியல்  ரீதியாக  பாதிக்கப்பட்டவராக , புகழுக்கு  ஏங்குபவராக , அம்மாவுக்குப்பயந்தவராக , சக  போட்டியாள்ர்  மீது  பொறாமை  கொள்பவராக  இவரது  நடிப்பு  சபாஷ்  போட  வைக்கிறது. இவரது  கேரக்டர்  டிசைன்  அற்புதமாக  வடிவமைக்கப்பட்டு  இருப்பதும்  பெரிய  பலம் . 28 வயதில்  இவர்  அடைந்திருக்கும்  உயரம்  வாவ் 


நாயகியின்  அம்மாவாக    ஸ்வஸ்திகா  முகர்ஜி. 22  வருடங்களாக  சினிமா  உலக  அனுபவம்  பேசுகிறது.  தில்  பேச்சாரா,  ஹிந்திப்படம்   பாதாள்  லோக்   அமேசான்  பிரைம்  வெப்  சீரிஸ்  இரண்டும்  இவரது   முக்கிய  அடையாளங்கள் . மக்ளைக்கண்டிக்கும்போதும்  சரி  , வளர்ப்பு  மகன்  மேல்  கொண்ட  பாசத்திலும்  சரி  பர்ட்ஃபெக்ட்  ஆன  நடிப்பு ,இவருக்கு 41  வயது  என்பதை  நம்ப  முடியவில்லை 

வ்ளர்ப்பு  மகனாக  பாபில்  கான்  கச்சிதமான  நடிப்பு . அப்பா  இர்ஃபான்  கான்  பெயரைக்காப்பாற்றி  விடுவார் . ஒரு  சாயலில்  ஏ  ஆர்  ரஹ்மான்  போல  இருக்கிறார் 


இயக்குநர்  அன்விதாதத்   மூன்று  விசயங்களை  நம்  கண்  முன்  நிறுத்துகிறார். அம்மாவுக்கும்  மகளுக்கும்  இடைப்பட்ட  உறவு , கண்டிப்பு , எதிர்பார்ப்பு,  பின்  மகள்  மேல்  நம்பிக்கை  இல்லாமல்  ஒரு  வளர்ப்பு  மகனை  தத்தெடுத்து  அவனை  பிரபல  பாடகன்  ஆக்க  முயல்வது , இதில்  பொறாமைப்பட்ட  நாயகி அவனுக்கு  பாலில்  மெர்குரி  கலந்து  கொடுத்து  அவன்  குரலை  சிதைப்பது  இதனால்  தன்  வாழ்வின்  எதிர்காலமே  போனதே  என்ற  மன  உளைச்சலில்  அவன்   தற்கொலை  செய்து  கொள்வது, பின்  நாயகி  புகழ்  பெற்ற  பாடகி  ஆவது , அதற்குப்பின்  குற்ற  உணர்வில்  மன  நோயாளி  ஆவது  என  ஒரு  சைக்காலஜிக்கல்  டிராமாவாக  அமைத்திருக்கிறார்


பாடல்கள்  , இசை  பின்னணி  இசை  மூன்றும்   முக்கிய  அம்சங்கள் . ஒளிப்பதிவு  ஓவியம்  போல்  இருக்கிறது , சித்தார்த்  திவான்  தான்  ஒளிப்பதிவு. நம்ம  ஊர்    மது  அம்பாட்  சாயலில்  நேர்த்தியான   ஒளிப்பதிவு. பாடல்களுக்கான  இசையை  அமித் த்ரிவேதியும் , பின்னணி இசையை சாகர்  தேசாயும்  செய்திருக்கிறார்கள் மான்ஸ்  மிட்டல்  தான்  எடிட்டிங் . கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  கட்  செய்திருக்கிறார். நான்  லீனியர்  கட்  படத்தின்  சுவராஸ்யத்தை  மேலும்  கூட்டுகிறது 


 நெட்  ஃபிளிக்சில்  ரிலீஸ் 


ரசித்த  வசனங்கள் 


1 கலை , கல்வி  இரண்டும்  ஆண்களுக்கானது   மட்டும்  இல்லை , பெண்களுக்கும் தான், ஆனால்  பெண்கள்  வெற்றி  பெற  கூடுதலாக  உழைக்க  வேண்டி  இருக்கும் 


2   எல்லா  விஷயத்தையும்  உள்ளேயே  வெச்சிருந்தா , மனசுக்குள்ளே  புதைச்சு  வெச்சிருந்தா பின்னொரு  நாளில்  பெரிய  பிரச்சனை  ஆகி விடும் 


3   சீக்கிரமா  பாட்டு  எழுதிக்கொடுத்தாதான்  திறமை  சாலி  என  அர்த்தம்  இல்லை 


4  வெறும்  செகரெட்டரினு  சொன்னாப்போதாதா?  லேடி செகரெட்டரினு   சொல்லனுமா? 


5    ஜெகனுக்கு  வாய்ப்புக்குடுத்தா  அவன்  உங்க  இடத்தை  அபகரிச்சுக்குவான்


நான்  ஒருவர்  இடத்தை  அபகரித்தேன்,  என்  இடத்தை  ஒருவர்  அபகரிப்பார்,  அவர்  இடத்தை  இன்னொருவ்ர்  அபகரிப்பார் , ஆனால்  சங்கீதம்  மட்டும் அ தே  இடத்தில்  இருக்கும்


6  உன்னை அவர் குயில்னு  சரியாதான்  சொன்னாரு, குயில்  எப்பவும்  அதுவா கூடு  கட்டாது ,  மற்றவங்க  கூட்டைத்தான்  அபகரிக்கும் 


7  நீ  க்‌ஷ்டப்[பட்டு  வாங்காத  ஒரு பெருமையை  உன்னுடையதுனு  சொந்தம்  கொண்டாடிக்க  முடியாது 


8  தன்  மகள்  எப்படிப்பட்டவளாக  இருந்தாலும்  ஒரு  அம்மா  அவளை  ஏத்துக்கனும்,  அன்  கண்டிஷனல்  லவ் 


9  காலம்  ஒரு  நாள்  மாறும்,  பாவம், காலத்தால  வேற  என்ன பண்ண  முடியும் சொல்லு 

சபாஷ்  டைரக்டர்


1   நமக்கு  காய்ச்சல்  வந்தா  வாய்ல  தெர்மா  மீட்டர்  வெச்சு  டெம்ப்ரேச்சர்  பார்ப்பாங்க, அதுல  பாதரசம்  இருக்கு , அது  பாடகர்  வாய்சை  பாதிக்கும்  அதனால  அவங்களுகு  கை  இடுக்கில் தான்  வெச்சுப்பார்க்கனும்., இந்த  காட்சி  படமாக்கப்பட்ட  விதம்  அதன்  மூலம்  வரும்  ட்விஸ்ட்  அபாரம் 


2   எதேச்சையாக  அம்மா  சொன்ன  பாதரச  தகவலை  வைத்து  நாயகி  பாலில்  பாதர்சம்  கலந்து கொடுத்து  ஜெகனின்  குரலை  காலி  ஆக்கும்  வில்லி  அவதாரம்  எதிர்பாராதது 


3   சினி  ஃபீல்டில்   ஒரு  பெண்  முன்னேற  எந்த  மாதிரி  முட்டுக்கட்டை  எல்லாம்  வரும்  என்பதை  விளக்கும்  காட்சி    ஸ்க்ரிப்டாக  கொடூரமாக  எழுதப்பட்டிருந்தாலும்  காட்சிப்படுத்திய  விதம்  கண்ணியம், ஒரு  பெண்  இயக்குநர்  என்பதால்  தான்  இது  சாத்தியம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைகக்தையில்  சில  நெருடல்கள் 


1    ஒரு  பெண்  தன்  மகனின்  அல்லது  மகளீன்  முன்னேற்றத்துக்காக எந்த  தியாகமும்  செய்யத்தயராக  இருப்பார் என்பது  ஓக்கே, ஆனால்  சொந்த  மகளை  விட்டுட்டு  வளர்ப்பு  மகனை  முன்னிலைப்படுத்த  அவர்  செய்ய  முன்  வரும்  தியாகம்  அதிர்ச்சி  அளிப்பதாகவும்  நம்பகத்தன்மை  குறைவாகவும்  இருக்கிறது 


2   அம்மாவைக்கண்டு  பயந்து  நடுங்கும்  மகள்  அம்மா  செய்யும்  அதே  சாகசத்தை  செய்து    சினிமா  பட  உலகில்  காலடி  எடுத்து  வைப்பது  அதை  அம்மா  வேடிக்கை  பார்ப்பது  எப்படி ?


3  வலர்ப்பு  மகன்  தான்  ஆரம்பத்தில்  இறந்ததாக  சொல்லபப்ட்ட  முதல் குழந்தை  என  ட்விஸ்ட்  வரும்  என  எதிர்பார்த்தது  நடைபெறவில்லை , அது  ஏமாற்றம்


4   சின்மயி - வைரமுத்து  மீ  டூ  பிரச்சனை  தான்  பூடகமாக  கதைக்கரு  ஆக்கி  இருக்கிறார்கள், அதை  பூசி  மெழுக   சித்தரிக்கப்பட்டவை  தான்  வளர்ப்பு  மகன்  எக்ஸ்டா  ஃபிட்டிங். அதனால்  திரைக்கதையில்  போதிய    பலம்  கிடைக்கவில்லை 


 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -    ஏ செண்ட்டர்  ரசிகர்களுக்கான  சைக்காலஜிக்கல்  டிராமா.  ஸ்லோவாதான்  போகும்  ரேட்டிங்  3 / 5 

Qala
Qala.jpeg
Official poster
Directed byAnvita Dutt
Written byAnvita Dutt
Produced byKarnesh Ssharma
Starring
CinematographySiddharth Diwan
Edited byManas Mittal
Music byGuest Composition and Background Score:
Sagar Desai
Songs:
Amit Trivedi
Production
company
Distributed byNetflix
Release date
  • 1 December 2022
Running time
119 minutes
CountryIndia
LanguageHindi


Saturday, December 03, 2022

நித்தம் ஒரு வானம் (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 

 நித்தம் ஒரு வானம் (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

அசோக் செல்வன் படங்களில் எனக்குப்பிடித்தவை தெகிடி, ஓ மை கடவுளே, வேழம், மன்மத லீலை , இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச்சேர்ந்தவர்.


ஸ்பாய்லர் அலெர்ட்

ஹீரோ ஒரு இண்ட்ராவர்ட், யார் கிட்டேயும் சகஜமா பழக மாட்டார். ரொம்ப சுத்த பத்தம் பார்க்கற ஆள் . .இந்த மாதிரி கேரக்டரை யார் லவ் பண்ணுவா? அதனால அரேஞ்சுடு மேரேஜ் தான், வீட்ல பார்த்த பெண் கூட நிச்சயதார்த்தம் ஆகிடுது
அந்தப்பொண்ணு ஆல்ரெடி ஒரு பையனை லவ் பண்ணுனவ. திடீர்னு மனசு மாறி காதலன் கூடப்போய்டறா. இதனால ஹீரோ அப்செட் ஆகறார். அவருக்கு பொண்ணு மிஸ் ஆனது கூட வருத்தம் இல்லை , இன்னொருத்தனுக்கு மிசஸ் ஆனதிலும் கஷ்டம் இல்லை, ஆனா இனி ஆளாளுக்கு துக்கம் விசாரிப்பாங்களே?னு ஒரு கடுப்பு
இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர ஒரு மனநல மருத்துவரை சந்திக்கிறார். அந்த டாக்டர் ஒரு ரைட்டர். அவர் எழுதுன 2 சிறுகதைகளை ஹீரோ கிட்டே கொடுத்துப்படிக்கச்சொல்றார்
முக்கியமான இடத்தில் தொடரும் போடற மாதிரி அந்த 2 கதைகளிலும் முடிவு இல்லை , செம காண்ட் ஆன ஹீரோ டாக்டருக்கு ஃபோன் பண்ணி விபரம் கேட்க அந்த 2 கதைகளும் கற்பனைக்கதைகள் அல்ல, நிஜ வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களின் தொகுப்பு என 2 வெவ்வேற அட்ரஸ் கொடுத்து அங்கே போய் அவங்களைப்பார்த்து அவங்களுக்கு என்ன நடந்தது?னு தெரிஞ்சுக்கச்சொல்றார்
அவர்களை ச்ந்திக்க ஹீரோ மேற்கொள்ளும் பயணங்களும், அதில் அவருக்குக்கிடைத்த அனுபவங்களும் தான் திரைக்கதை . அந்த பயணத்தில் எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக இன்னொரு பெண்ணும் துணைக்கு வர்றார்
இறுதியில் என்ன ஆச்சு? என்பதை திரையில் காண்க
ஹீரோவா அசோக் செல்வன். இவருக்கு அமைவதெல்லாமே பணக்காரர் அல்லது செல்வச்செழிப்பு மிக்க சீமான் கேரக்டர்கள் தான். பி சி செண்ட்டர்களில் க்ளிக் ஆக அவ்வப்போது ஏழையாகவும் நடிக்கனும். இதில் மாறுபட்ட மூன்று வெவ்வேறு கேரக்டர்களில் வருகிறார்போலீஸ் ஆஃபீசராக வரும்போது விஜயின் டயலாக் டெலிவரி நினைவு வருது . பேஸ்கட் பால் பிளேயரின் லவ்வராக வரும் கேரகடரில் இயல்பாக நடித்திருக்கிறார். மெயின் கேரக்டரான இண்ட்ராவர்ட் கேரக்டர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத கேரக்டர்., எந்த அளவுக்கு அது ரீச் ஆகும் என சொல்ல முடியாது
நாயகிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர் அபர்ணா பாலமுரளி வச்தியான இடம், நல்ல அப்பா எல்லாம் இருந்தும் அரேஞ்சுடு மேரேஜ் நோ , ஒன்லி லவ் மேரேஜ் ஆனா இதுவரை நோ லவ் என விசித்திரமான கேரக்டராக இருந்தாலும் ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகன் இது போன்ற பல லூஸ் தனமான ஹீரோயின்களை சந்தித்திருக்கிறான் என்பதால் பிரச்சனை இல்லை
பேஸ்கட் பால் பிளேயராக வரும் ஷிவதா அடக்கமான அழகு , அமைதியான நடிப்பு
ஹீரோ கூட பயணத்தில் இணைபவராக ரிது வ்ர்மா .. துடுக்குத்தனமான நடிப்பு
அபர்ணா பால முரளியின் அப்பாவாக அழகம்பெருமாள் அருமையான நடிப்பு
கார் டிரைவராக காளி , கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலப்பு. ஜீவா கேமியோ ரோல் . சிவாத்மிகா கச்சிதமான நடிப்பு
பாடல்கள் பிரமாதம் என சொல்ல முடியாவிட்டாலும் ஓகே ரகம்,. பிஜிஎம் குட்
ஒளிப்பதிவு பிரமாதம். 3 விதமான லொக்கேஷன்கள்.

சபாஷ் டைரக்டர் ( ரா கார்த்திக் )
1 2007ல் ரிலீஸ் ஆன ஜப் வி மெட் ஹிந்திப்படத்தின் சாயல் இருந்தாலும் திரைக்கதை அமைத்த விதம் பிரமாதம். இந்தக்கதைக்கருவுக்கு இந்த திரைக்கதை கச்சிதம்

2 ஹீரோ படிக்கும் சிறுகதையில் வரும் கதாநாயகனாக நாயகன் தன்னை அந்த பாத்திரமாகப்பொருத்திக்கொள்வார் என்ற கற்பனை அருமை . இதனால் 2 பிளஸ் , 1 நாயகனுக்கு வெரைட்டி ரோல் செய்யும் வாய்ப்பு 2 சம்பளம் மிச்சம்
3 முதலில் நிச்சயம் ஆகும் பெண் , பயணத்தில் உடன் வரும் பெண் , கதையில் நாயகிகள் நிஜத்தில் தலா 2 , கற்பனையில் தலா 2 என மொத்தம் 6 பெண் கேரக்டர்கள் , இது போதாது என ஆஃபீசில் ஒன்சைடாக லவ் பண்ணும் பெண் ஒன்று ஆக மொத்தம் 7 ஜோடி. கண்ணுக்குக்குளிர்ச்சியான நாயகிகள்
ரசித்த வசனங்கள்
1 எல்லாத்துலயும் என்னைக்கண்ட்ரோல் ப்ண்ணினா எனக்குப்பிடிக்காது, கையைக்காலைக்கட்டிட்டு தாலி கட்றேன்னு சொல்ற மாதிரி இருக்கு , அதான் விலகிட்டேன்
யாருக்காக மாறுகிறோம்?கறதுல தான் எல்லாம் இருக்கு
2 எல்லாமே முடிஞ்சிடுச்சுனு அவ சொல்லிட்டா, ஆனா பிரச்சனையே அதுக்குப்பிறகுதான் ஆரம்பிச்சுது
3 வாழ்க்கைல இனி யார் முகத்துல எல்லாம் விழிக்கக்கூடாதுனு நாம நினைக்கறமோ அவங்க முகத்துல மீண்டும் விழிக்க வேண்டிய தருணம் வந்தா என்ன செய்ய?
4 நமக்கே தெரியும், நம்மை சுத்தி இருப்பதெல்லாம் ஃபேக் ஆன லைஃப், ஆனா அந்த ஃபேக்கான லைஃபை நாம ரசிக்கும்படி மாத்திக்கனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஓப்பனிங் சீன்ல நிச்சயதார்த்தம் ஆன ஹீரோவை வேண்டாம்னு சொல்லிட்டு முன்னாள் காதலனை கைப்பிடிக்க முடிவு எடுக்கிறாரே? அந்த காதலன் கஞ்சா கேஸ்ல உள்ளே போனவன் மாதிரி ஆள் தாடியும் தொப்பையும் சகிக்கலை..இவரை விட்டுட்டு அவரை பிடிக்க ஹெவியா உன்னை எதும்மா கவர்ந்துச்சு?னு கேட்கனும்
2 ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச் படி அவர் ரொம்ப ஹைஜீனிக்கானவர். ரோட்டோர கடைகளில் சாப்பிட மாட்டார். ரொம்ப சுத்த பத்தம் பார்ப்பவர் . அப்படிப்பட்டவர் தனக்கு அமையும் மனைவி இன்னொருவரின் காதலி என தெரிந்தும் ஓக்கே சொல்வது எப்படி ? ஆக்சுவலா அவர்தானே பெண்ணை ரிஜக்ட் பண்ணி இருக்கனும் ?
3 பெற்றோருக்குத்தெரியாத காதலில் காதலியை யாராவது வீட்டு வாசலில் டிராப் பண்ணுவாங்களா? வழக்கமா தெரு முக்குல டிராப் பண்ணிட்டு தானே போவாங்க ? இதில் முதல் கதையில் ஹீரோ தன் காதலியை வீட்டு முன் பைக்ல டிராப் பண்ணி மாட்டிக்கறார்
4 டி வி சீரியல்ல கால் ஷீட் பிரச்சனை வந்தா டக்னு கட்டம் கட்டி இனி இவருக்குப்பதில் இவர்னு ஈசியா மாத்திடலாம், ஆனா ஹீரோ ஒரு கதை படிக்கும்போது அவர் கற்பனைல நமக்குக்காட்டப்படும் நபர் வேற , நிஜத்தில் அவர் சந்திக்கப்போகும் முகம் வேற என்பது லாஜிக் படி சரி தான் என்றாலும் நம்மால அதுல கனெக்ட் ஆக முடியல , இதுக்கு தீர்வா நாயகிகள் ம்ட்டும் மாறாம காட்டி இருக்கலாம்,
5 கதையாகப்படிக்கும்போது இரு கதைகளிலும் முடிவு என்ன ஆகி இருக்குமோ? என வ்ரும் ஒரு ஆர்வம் காட்சியாக காட்டப்படும்போது ஏனோ முழுமை பெறவில்லை . அல்லது நமக்கு பூரண திருப்தி வரவில்லை
4 ரிது வர்மா உட்பட ஆடியன்சுக்கும் கடைசி வரை தெரியாத சஸ்பென்ஸ் “ எதுக்காகடா அவளை விட்டுட்டுப்போனே?
5 இரண்டு சிறுகதைகளிலும் ஒரு சோக முடிவு அமைவது கொஞ்சம் நாடகத்தன்மையாக இருக்கிரது. நாயகனின் மன மாற்றத்துக்காக அவை வடிவமைக்கப்பட்டது போல தோணுது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த ஒரு ஃபீல் குட் மூவி . ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கான படம் , ஆனந்த விகடன் மார்க் 42 . ரேட்டிங் 3 /. 5

MY NAME IS VENDETTA (2022) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


 நாயகன்  தன்  மனைவி , மகளோடு  அமைதியான  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறான். மகளுக்கு  ஒரு  பாய்  ஃபிரண்ட்  உண்டு பாய்  ஃபிரண்ட் மற்றும்  வகுப்புத்தோழர்களோடு  பிக்னிக்  போக  அம்மாவிடம்  நீங்கதான்  அனுமதி  வாங்கித்தரனும்  என    மகள்  அப்பாவிடம்  வேண்டுகிறாள்.நாயகனும்  உறுதி  அளிக்கிறான்


 ஒரு  மாஃபியா  கேங்  அதன்  தலைவன் , தலைவனின்  மகன் ,  அடியாட்களின்  தலைவன்  இவர்கள்  மூவரும்   நாயகனை  குடும்பத்தைக்கொல்ல  திட்டம்  போடுகிறார்கள் . ஒரு  முறை  நாயகன்  வீட்டில்  இல்லாத  போது  நாயகனின்  சொந்தக்காரர்  வீட்டுக்கு  வருகிறார். அவர்  தான்  நாயகன்  என  தவறாகப்புரிந்து  கொண்டு  அந்த  மாஃபியா  அடியாட்கள்  நாயகனின்  மனைவி, சொந்தக்காரர்  இருவரையும்  கொலை  செய்து  விடுகிறார்கள் 


நாயகன்  தன்  மகளை  அழைத்துக்கொண்டு  ஒரு  மறைவிடத்துக்குப்போகிறார்.  இங்கே  என்ன  நடக்குது  ? இவங்க  எல்லாம்  யார்? எதற்காக  நம்மைத்துரத்துகிறார்கள்? என  மகள்  கேட்கிறாள் 


அதற்கு  நாயகன்  என்ன  பதில்  சொன்னான்?  நாயகனுக்கும், வில்லனுக்கும்  நடந்த  சேசிங்கில்  யார்  ஜெயித்தார்கள்  என்பதை  படம் பார்த்து  தெரிந்து  கொள்க 


இது  ஆக்சன்  பிரியர்களுக்கான  படம் .  மொத்தம்  90  நிமிடங்கள்  ஓடும்  படத்தில் 60  நிமிடங்கள்  சேசிங்  சேசிங்  ஆக்சன்   அதகளம் தான்


க்ளைமாக்சுக்கு  கொஞ்சம்  முன்பு  வில்லனின்    மகன்  தன்  கட்டுக்களை  அவிழ்த்து  விடுமாறு  நாயகனின்  மகளிடம்  சாமார்த்தியமாகப்பேச வேண்டுவது  குருதிப்புனல்  படத்தில்  நாசர்  கேரக்டரின்  நயவஞ்சகத்தைப்பிரதிபலிக்கிறது 


க்ளைமாக்சில்  வில்லனின்  மகன்  இருப்பிடத்துக்கு  நாயகனின்  மகள்  வந்ததும்  ஆச்சரியத்துடன்  இங்கே  எப்படி  வந்தே? என  கேட்கும்போது  நீங்க  தானே  உதவி  தேவைப்படும்போது  வா  என  உங்க  விசிட்டிங்  கார்டைக்கொடுத்தீங்க  என  அசர  வைப்பது  கலக்கலான   காட்சி 


 நாயகன்  தன்  மகளுக்கு  குறுகிய  கால  சண்டைப்பயிற்சி  கற்றுக்கொடுக்கும்போது  கத்தியை  எப்படி  உபயோகித்தால்  எதிராளிக்கு  பாதிப்பு  ஏற்படும்  என  சொல்லித்தரும்  காட்சி  பிரமாதம்  என்றால்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்க்கு  அந்த  சீன்   முகாந்திரம்  அமைத்துக்கொடுத்தது  வியப்பு


ஆரம்பக்காட்சியில்  அப்போதுதான்  கார்  ஓட்ட  அப்பாவிடம்  கற்றுக்கொள்ளும்  ஒரு  பள்ளி    மாணவியான  மகள்  க்ளைமாக்சில்  காரை  எதிரிகளின்  துரத்தலில்  இருந்து  தப்பிக்க  ரிவர்ஸ்  கியர்  எல்லாம்  போட்டு  பிரமாதமாக  ஓட்டுவது  எப்படி  என்ற  கேள்விகள்  எழாமல்  இல்லை . அவற்றை  எல்லாம்  படத்தின்  வேகம்  மறக்கடித்து  விடுகிறது 


இசை  காதுகளைப்பழுதாக்காமல்  தேவைப்ப்ட்ட   இடங்களில்  மட்டும்  தன்னை  முன்னிறுத்திக்கொள்கிறது . படத்தில்  இரவு  நேரக்காட்சிகள்  அதிகம்  என்பதால்  ஒளிப்பதிவாளர்  ஓவர்  டைம்  போட்டு  ஒர்க்  பண்ணி  இருக்கிறார்



ரசித்த  வசனங்கள்


1  கருணை  காட்டுவதுதான்  பழி  வாங்கும்  உணர்வில்  மிகப்பெரிய  பலவீனம் 


2  வயசானவங்க  அதிக  நேரம்  தூங்க  மாட்டாங்க , தூங்க  முடியாது , அது  நமக்கு  ஒரு  பிளஸ்  பாயிண்ட் 


3  கொலையாளி  எப்போதாவது  யாராலாவது  நிச்சயம்  கொல்லப்படுவான், இது  விதி 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1 மகளுக்கு  பாய்  ஃபிரண்ட்  இருக்கான்னு  அப்பாவுக்குத்தெரிந்தும்  ஆபத்தான  நேரத்தில்  மகளிடம்  ஃபோனைக்குடுத்து  தனியாக  விட்டுச்செல்வது  எந்த  நம்பிக்கையில்?  மகள்  ஃபோன்  போட்டு  பாய்  ஃபிரண்டை  வர  வைப்பாள்,  எதிரிகளுக்கு  லொக்கேஷன்  தெரிந்து  விடும்  என்பது  தெரியாதா?


2  உள்ளத்தை  அள்ளித்தா  வில்  40,000  ரூபா  வாடகைக்கு  வேனில்  கடத்தும் சாதா  ஆள்  கூட  அடியாட்கள்  உடன்  ப்ந்தாவாக  இருக்கிறார். ஆனால்  இந்தப்பட  வில்லன்  மகன்  ஒரு  மிகப்பெரிய  மாஃபியா  கேங்  லீடர்., க்ளைமாக்சில்  ப்ங்களாவில்  தனியா  இருக்கார் .  ஒரு  வேலைக்காரி  கூட  இல்லை .  ரொம்ப  ஏழை  மாஃபியாவா? 


3  அம்மா  இறந்தபோது  கதறி  அழும்  நாயகனின்  மகள்  தன்  பாய்  ஃபிரண்ட்  தனக்காக  உயிரை  விட்டதைப்பார்த்து  கல்லுளி  மங்கி  போல்  பார்த்துக்கொண்டே  இருக்கிறதே? ஒரு  சொட்டுக்கண்ணீர்  விட்டா  என்ன?  தட்  மொமெண்ட்    வடிவேலு  வெர்சன்  இரக்கமே  இல்லையா  உங்களுக்கு ? 


ஸ்லோவாக  ஆரம்பித்து  விறுவிறுப்பாகப்போய்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டோடு  முடிகிறது . ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம் .,ம் நெட்ஃபிளிக்சில் 30/11/2022  முதல்  காணக்கிடைக்கிறது , ரேட்டிங்  2.25 / 5