Showing posts with label LOVE. Show all posts
Showing posts with label LOVE. Show all posts

Sunday, July 29, 2012

ஒரே ஒரு மாலை -சுஜாதா. - சிறுகதை ( ஹனிமூன் ட்ரிப் )



இந்தக் கதை எழுதுகிற எனக்கு, இதைப் படிக்கிற உங்களைவிட அதிகமாக ஆத்மாவையும் இந்துமதியையும் தெரியும். அவர்களைப் பற்றி என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்று பாகுபடுத்தும் உரிமை என்னிடம் இருக்கிறது. இந்த ‘கேஸி’ல் கொஞ்சம் சங்கடமான நிலைமையாக இருக்கிறது.



பாருங்கள், இருவரும் புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள். புதிதாக என்றால், மிகப் புதிதாக. கையில் கட்டிய கயிறும், சங்கிலியில் தெரியும் மஞ்சளும், ஒருவரைப் பற்றி ஒருவர் அதிகம் தெரியாத ஆர்வமும், பயமும், ஒருவரை ஒருவர் தொடும்போது ஏற்படும் பிரத்யேகத் துடிப்பும் கலையாத சமயம். இந்தச் சமயத்தில் நடப்பது முழுவதும் சொல்வது கடினமான காரியம். மேலும், சில வேளை அநாகரிகமான காரியம்… அவர்கள் நடந்துகொண்ட புது நிலையை வர்ணிக்கப் புதிதாய்க் கல்யாணம் ஆன ஒருவனால்தான் முழுவதும் இயலும். என் கல்யாணம் முடிந்துவிட்டது. அந்த நாட்கள் என் ஞாபகத்தில் ஆறு வருஷம் பின்னால் இருக்கின்றன.



ஆனால், என் சங்கடம் இதில் இல்லை. இந்தக் கதையில் என் பொறுப்பு ஒன்று இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அது அதை எப்படிச் சொல்வது, எங்கே சொல்வது அல்லது, சொல்லாமல் விட்டுவிடலாமா என்பதுதான் என் குழப்பம். அதைப் பற்றி நான் இன்னும் தீர்மானிக்கவில்லை.



ஆத்மா, ஹல்வாராவில் விமானப் படையில் வேலை பார்க்கும் ஒரு பறக்காத ‘பைலட் ஆபீஸர்’. பதினைந்தே நாள் லீவு எடுத்துக்கொண்டு புயலாகச் சென்னைக்கு வந்து ரயில் மாறி, திருச்சி வந்து, சத்திரத்தில் மாடியில் இறங்கி, அவசரமாக க்ஷவரம் செய்துகொண்டு, சட்டை மாற்றி, சூட் அணிந்துகொண்டு, பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ‘லோக்கல்’ சின்னப்பன் நாயனத்துடன் ஒரு பழைய எம்.டி.ஒய். காரில் ‘டாப்’பை விலக்கி, ஊர்வலம் போய் உட்கார்ந்து, மந்திரங்களின் மத்தியில் புகைக் கண்ணீரில் அருகே இருப்பவளைப் பார்க்கச் சந்தர்ப்பமில்லாமல் மணம் செய்துகொண்டவன்.



இந்துமதி பி.யூஸியைப் பாதியில் நிறுத்திவிட்டு, ஒரு நாள் திடீரென்று தனக்கு வந்த முக்கியத்துவத்தில், புடவை சாகரத்தில், எவர்சில்வர் மத்தியில், வைர ஜொலிப்பில், வரிவரியாக ஜரிகைப் பட்டுப் புடவையின் ஜாதிக்கட்டின் அசௌகரியத்தில், மாலையின் உறுத்தலில், மையின் கரிப்பில் அம்மா அவ்வப்போது தந்த ‘ஆர்டர்’களில், மாமாவின் கேலியில் மணம் செய்துகொண்டவள்.



ஆத்மாவை நிமிர்ந்து ஒரு தடவை பார்த்ததில்லை. பார்த்தது போன மாத போட்டோ ஒன்று; மார்பு வரை எடுத்த, எதிரே பார்க்கும் போட்டோ. அப்போது கல்யாணம் நிச்சயமாகுமா என்பது சரிவரத் தெரியாததால் அம்மா அதை அதிகம் பார்க்க அனுமதிக்கவில்லை. பார்த்து என்ன நினைப்பது என்று தெரியாத தவிப்பு. அழகான முகமா என்று அலசுவதற்கு உரிமையில்லாத சமயம். நினைவில் தேக்கிக்கொள்ள முடியாத தவிப்பு. கல்யாணம் முடிந்துவிட்டது. முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தூரத்து உறவினர் படுக்கைகளைச் சுருட்டிக்கொண்டு தேங்காய்களைக் கவர்ந்துகொண்டு விலகிவிட்டனர். ஆத்மா அவளை உடன் அழைத்துச் செல்வதற்கு ஆறு நாட்கள் இருந்தன. பந்தங்கள் பிரிந்தன.



முறையாக அவர்கள் அரைஇருட்டில் சந்தித்தாகிவிட்டது. இந்துமதிக்கு ஓர் ஆணின் தொடுகை எப்படிப்பட்டது என்று தெரிந்துவிட்டது. அந்த எழுபத்திரண்டு மணி நேரங் களில் விதம்விதமான அனுப வங்கள் இருவருக்கும். ஆத்மா வின் கல்யாணத்துக்கு வர முடியாத பெரியப்பாவைச் சேவித்துவிட்டு வந்தார்கள். கோயில்களுக்குப் போய் வந்தார்கள். அவனுடன் நடக்கும்போதே, அந்த வெயில் படாத பாதங்களையும், செருப்பையும், ஜரிகைக் கரையின் அறுப்பையும், நிழலையும் பார்த்துக்கொண்டே உடன் நடக்கும்போதே இந்துமதிக்குச் சந்தோஷம் திகட்டியது.

 எனினும், அவன் ஒவ்வொரு தடவையும் அவளைத் தொடும்போது அவளுக்குப் புல்லரிப்பைவிட பயம்தான் தெரிந்தது. இதை ஆத்மா உணர்ந்தான். ஸ்பரிசத்தில் உள்ளுக்குள் அவள் உடம்பின் தசைகள் மிக மெலிதாக இறுகுவதை அவன் கவனித்தான். பெண் புதியவள், மிகப் புதியவள் என்று எண்ணிக்கொண்டான். மேலும் மேலும் அவனுள் ஓர் அச்சம் இருந்தது. அடிக்கடி அவளை தொடுவதில் தயக்கம் இருந்தது.





முக்கியமாகப் பெண்ணுக்கு செக்ஸில் பயம் ஏற்படுத்தக் கூடாது. மிக ஜாக்கிரதையாக அணுக வேண்டும். பசித்த புலி இரை தேடுவதை ஞாபகப்படுத்தக் கூடாது. மேலும், எனக்கே எவ்வளவு தெரியும்? நான் படித்த புத்தகங்கள் வழங்கும் உபதேசம் சரியா, தப்பா?



‘நம் கல்யாண அமைப்பு குரூரமானது. திடீரென்று ஓர் ஆணிடம் ஒரு பெண்ணைக் கொடுத்து, இவள் உன்னுடையவள் என்று வசதி செய்து கொடுப்பது கொடுமை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் ஆத்மா.



இருந்தும்…

கவிதையிலோ, உரைநடையிலோ வார்த்தைகளால் சொல்லவே முடியாத மிக அபாரமான தருணங்கள் அவர்களின் புதிய உறவில் இருந்தன. (இந்தத் தருணங்கள் எல்லாக் கல்யாணங்களிலும் இருக்கின்றன யோசித்துப் பாருங்கள் ‘நீடித்து இருக்கின்றன’ என்பதற்கு நான் ‘கேரண்டி’ இல்லை. முதலில்? நிச்சயம்.) அந்தத் தருணங்கள் இவர்களுக்கு ஒரு சிவாஜிகணேசன் படத்தின் இருட்டில் இருந்தன. சூப்பர் மார்க்கெட் செல்லும்போது முன் பஸ்ஸின் பின்புறத்தில் ‘இரண்டு அல்லது மூன்று போதுமே’ என்ற விளம்பரம் துரத்தித் துரத்தி அடித்தபோது, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டபோது இருந்தன.



”பெட் ரூமில் அரசாங்கம் புகுந்துவிட்டது” என்பான் ஆத்மா.



அப்புறம் மாடியில் இவர்கள் தனிப் படுக்கை சம்பிரதாயத்தில்… எவ்வளவு பாடு இந்துமதிக்கு! ஆத்மா முதலில் போய்விடுவான். இவள், எல்லோரும் தூங்கிய பிறகு, வாசல் விளக்கை அணைத்துவிட்டு அந்தப் பாழாய்ப்போகிற மெட்டி சப்தமிடாமல், திண்ணையில் தூங்குகிறவர்களின் கனமான மௌனத்தைத் தாண்டி, மரப்படியேறி… எவ்வளவு சஸ்பென்ஸ்!



அதன்பின், அதன்பின், அதன்பின்!


தருணங்கள்! அபாரமான தருணங்கள்!



நான் சொல்ல வந்தது ஒரே ஒரு மாலை நேரத்தைப் பற்றி. இரண்டு பேரும் மெதுவாக வீட்டின் சந்தடியிலிருந்து விடுபட்டு நடக் கிறார்கள். தெற்கு வாசல் தாண்டி, பஸ் ஸ்டாண்ட் தாண்டி, அம்மா மண்டபம் வந்து தனியான இடம் தேடுகிறார்கள்.



நதிக் கரை, காவிரி நதி, ஆடி மாத ஆரம்பம். மேட்டூர் அணை நிரம்பி வழிந்த பழுப்புத் தண்ணீர். இங்கிருந்து அந்தக் கரை வரை நிரம்பி, அவர்கள் புதிய உறவு போல் உற்சாகமாக நழுவிக் கொண்டிருந்த நதி. இந்துமதி போல் அந்த நதி. சிறிய சிறிய பையன்கள் குதித்துக் குதித்து, எதிர்த்து எதிர்த்து நீந்திக் கரைக்கு மறுபடி வருகிறார்கள். இந்துமதிக்கு அதைப் பார்க்க ஆசை. ஆத்மாவுக்கு மாந்தோப்பின் கரையில் தனியிடம் தேட ஆசை. அவளை அணைத்து அழைத்துச் சென்று தனியாக உட்காருகிறான். ”உன்னிடம் நிறையப் பேச வேண்டியது இருக்கிறது. நாம் இரண்டு பேரும் முழுவதும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும். கல்யாணம் என்கிறது ஒரு ‘லைஃப் டைம்’ சமாசாரம்…”




(அவன் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். அவர்கள் சம்பாஷணையைப் பின்னால் தொடர உத்தேசம். அதற்குள் நான் முன்பு சொன்ன என் பொறுப்பு குறுக்கிடுகிறது. சொல்வதற்கு இதுதான் சமயம் என்று எனக்குப் படுகிறது. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.) அவர்கள் சுமார் அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அதன் பிறகு இந்துமதி ஆத்மாவைக் கேட்டாள்…



”உங்களுக்கு நீந்தத் தெரியுமா?”



”ஓ! நன்றாக நீந்துவேன். உனக்கு?”



”எனக்கும் கொஞ்சம் தெரியும். அப்பா கேரளத்தில் இருந்தபோது கற்றுக்கொண்டேன். சுமாராகத் தெரியும்.”



”கிரேட்! ஹொவ்  எபவுட் நௌ?”


”இப்பவா? ம்ஹூம்! இந்த நதியில் எல்லாம் எனக்கு நீந்திப் பழக்கமில்லை.”



”பயமா?”


”ஆம்.”


”நான் இருக்கிறேன். ஹரித்வாரில் கங்கையில் நீந்தியிருக்கிறேன். ஹல்வாரா போனதும் உன்னை அழைத்துப் போகிறேன். அந்த நதியின் வேகத்தைவிடவா! சீறும் கங்கை! வா. நீந்தலாம்.”



”நான் மாட்டேன். நீங்களும் வேண்டாம்.”



”கம்ஆன் டியர்!” ஆத்மாவுக்குத் தன் மனைவியை நனைந்த உடைகளில் பார்க்க வேண்டும் என்கிற இச்சை பிடிவாதமாக மாறியது.



”இங்கே ஒருத்தரும் இல்லை.”



”சே…சே! என்ன கஷ்டமாகப் போய்விட்டது. எதற்குப் பேச்சை எடுத்தோம் என்று ஆகிவிட்டது.”


”வர மாட்டாய்?”


”ம்ஹூம், நீங்களும் போகக் கூடாது.”



‘அப்படியா?” என்று தன் டெரிலினைக் கழற்றினான் ஆத்மா. பனியனைக் கழற்றினான். சிறிய டிராயரில் வந்து கரைக்குச் சென்று குதித்தான். தண்ணீர் ஒரு துளி தெறிக்கவில்லை. அம்பு போலப் பாய்ச்சல். மிக அழகாக நீந்தினான். ஆற்றை எதிர்க்காமல் ஒரு பக்கம் வாங்கி, இருபத்தைந்து அடி தள்ளிக் கரை சேர்ந்து, தலையைச் சிலிர்த்துக்கொண்டான். மிகப் புனிதமாக, அழகாக இருந்தான். அவன் முடிகளிலிருந்து தங்கமாகச் சொட்டின தண்ணீர்த் துளிகள். இந்துமதிக்கு அவன் உடம்பின் தசைகளையும், (சூரியன் உபயம்) அவன் சிரித்துக்கொண்டே நடந்து வருவதையும் பார்க்க மிகப் பெருமையாக இருந்தது. ஆனால், முதல் தடவையாகத் தெரிந்த அவன் பிடிவாதம் அவளைப் பயப்படுத்தியது.




”போதும், சளி பிடித்துக்கொள்ளும்” என்றாள்.



”நீ வர மாட்டாய்?”



”நான் வர மாட்டேன். போதுமே நீந்தினது.”



”இன்னும் ஒரு தடவை, அவ்வளவுதான்.”



குதித்தான். மறுபடி அழகான குதிப்பு. நீந்தினான். மறுபடி அழகான நீச்சல். கரையிலிருந்து முப்பதடி போயிருப்பான். ஆழமான, இதமான சற்றுக் குளிர்ந்த தண்ணீர். அப்போதுதான் அவனுக்கு ‘க்ராம்ப்ஸ்’ ஏற்பட்டது. காலின் தசைகள் பிடித்துக்கொண்டன. காலை அசைக்க முடியவில்லை.



‘க்ராம்ப்ஸ்’ வருவது அவனுக்கு முதல் தடவை. நண்பர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ”வந்தால் கலவரப்படாதே. மித!” கலவரப்படாமல் இருக்க முடியவில்லை. ஆற்றின் வேகம் அவனைத் தள்ளிக்கொண்டு சென்றது. காலை அசைக்க முடியவில்லை. மேலும் மேலும் கைகளை அடித்துக்கொள்ள முயன்றான். ஒரு தடவை முழுகித் தண்ணீர் ஏகப்பட்டது உள்ளே இறங்கியது. நதி அவனைக் கடத்திக்கொண்டிருந்தது. இந்துமதியைக் கூப்பிட முயன்றான். பயம் அவனை நிரப்பியது.



தூர தூரமாகத் தன் கணவன் செல்வதையும் சீராக அவன் நீந்தாமல் பதற்றமாக அடித்துக்கொள்வதையும் பார்த்த இந்துமதி, திகைக்காமல், யோசிக்காமல் ஒரே பாய்ச்சலாகப் பட்டுப் புடவையுடனும் நகைகளுடனும் குதித்தாள்.



இரண்டு நாள் கழித்து அவர்கள் இருவரும் கொள்ளிடம் சேரும் கல்லணையில் கண்டெடுக்கப்பட்டனர்.



குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும். அவர்கள் அரை மணிக்கு முன் பேசிக்கொண்ட பேச்சைத் தொடர்வோம்…




ஆத்மா, ”கல்யாணம் என்பது லைஃப் டைம் சமாசாரம். நாம் ஒருவரையருவர் மெதுவாகத் தெரிந்துகொள்வோம். நிறைய ‘டயம்’ இருக்கிறது. ஒருவிதத்திலே அது ஒரு ‘காம்பிள்’. நம் சுதந்திரம் கொஞ்சம் பறிபோகிறது. இனி மேல் நமக்கு ஒரு பொறுப்பு. அதுவும் எனக்கு ஒரு பொறுப்பு. உன்னைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், பாஷை தெரியாத காட்டில், ஒரு வீட்டில் அடைக்கப் போகிறேன். அங்கே நாம் இரண்டு பேரும்தான். சந்தோஷமாக இருக்க முயல வேண்டும். சந்தோஷமாக இருக்க வேண்டும். ‘கன்னா பின்னா’ என்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது. இரண்டு வருஷம் ‘இடைவெளி’. என்ன?”




இந்துமதி சிரித்தாள். தலைகுனிந்து கன்னங்கள் நிறம் மாறின.



”அப்புறம் சில புத்தகங்கள் தருகிறேன். படிக்கணும். இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அப்புறம் என்கிட்டே என்ன பிடிக்கிறது… என்ன பிடிக்கவில்லை என்று சொல்லு.”



மௌனம்.


”ம்… சொல்லு…”



”உங்களை எனக்கு நாலு நாளாகத்தானே தெரியும்!”



”நாலு நாளிலே என்ன என்ன பிடிக்கவில்லை சொல்லேன். என்னிடம் நீ ஃப்ரீயாக இருக்க வேண்டும்.”


”…”

”டாமிட்! சொல்லேன். ஏதாவது இருக்குமே!”



”டாமிட்… டாமிட் என்று நீங்கள் அடிக்கடி சொல்கிறது பிடிக்கலை” என்றாள் தயக்கமாக.



”வெரிகுட். அப்புறம்?”



”ம். யோசிக்கிறேன்.”



”யோசி.”



”தலையை இப்படிப் படியாமல் வாரிக்கொள்வது…”



”ஓ மை காட்!” என்று தலையைக் கோதிக்கொண்டான்.



”என்கிட்ட என்ன பிடிக்கலை உங்களுக்கு?”



”ஒன்றே ஒன்றுதான் பிடிக்கவில்லை.”



”என்ன?” என்றான் ஆவலுடன்.



”என்ன…. நீ இரண்டு மூன்று தடவை ‘அத்தான்’ என்று கூப்பிட்டது. அத்தான் என்பது என் அகராதியில் ஆபாச வார்த்தை. சினிமா எக்ஸ்ட்ராக்களை ஞாபகப்படுத்தும் வார்த்தை.”



”எப்படி உங்களைக் கூப்பிடுவது என்று எனக்குத் தெரியவில்லையே!”



”ஆத்மா என்று.”



”முடியாது… செத்தாலும் முடியாது.”



”சொல்லு, ஆ…”



”ஆ…”



”த்…”

”த்…”

”மா…”

”மா…”

”ஆத்மா!”

சிரித்தாள். ”ஹூம்” என்று தலையாட்டினாள். அவன், அவளை மார்பில் தொட்டான். பனி போல் உறைந்தாள்.



”நான் தொட்டால் பயமாக இருக்கிறதா?”



”இல்லை, வெட்கமாக!”



”உன்னைத் தொடுவதற்கு எனக்கு லைசென்ஸ் இருக்கிறதே?”



”இப்படி லைசென்ஸ் என்று சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை. என்னை உங்களுக்குப் பிடிக்கிறதா?”



”இது என்ன கேள்வி?”



”என்னை உங்களுக்குப் பிடிக்கிறதா?”



”பாதாதிகேசம் ஒவ்வொரு சதுர மில்லி மீட்டரும் பிடிக்கிறது.”



”நான் உங்களுக்குத் தகுதியானவளா?”



”எல்லா விதத்திலும்.”



”அதிகம் படிக்கவில்லையே?”



”ஸோ வாட்?”



”எனக்கு முன்னால் எத்தனை பெண்களைப் பார்த்தீர்கள்?”



”36,621.”


”வேடிக்கை வேண்டாம். நிஜமாகச் சொல்லுங்கள்.”



”நான் பார்த்து ஆமோதித்த ஒரே, முதல் பெண் நீ.”



”என்னைப் பார்த்தபோது, முதலில் பார்த்தபோது என்ன தோன்றியது உங்களுக்கு?”



”உன்னைப் பார்க்கவேயில்லையே! நீதான் குனிந்த தலை நிமிரவில்லையே!”



”பின் எதற்காகக் கல்யாணம் செய்துகொண்டீர்களாம்?”



”இதற்காக” என்று சொல்லிவிட்டு, அவன் அவளைத் தொட்டதை அவள் விரும்பவில்லை. கோபித்துக்கொண்டாள். பொய்க் கோபம்.



”உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?”



”டேக் ஹோம் பே 621. அதில் 300 ரூபாய் உனக்கு வீட்டுச் செலவுக்குக் கொடுத்துவிடுவேன். போதுமா?”



”நான் 300 ரூபாய் நோட்டுக்களைச் சேர்த்தாற்போல் பார்த்ததில்லை இதுவரை.”



”பார்க்கப் போகிறாயே…”



”உங்களுக்கு ஆக்ட்டர்ஸ் யாரார் பிடிக்கும்?”



”சிவாஜி கணேசன், பால்நியூமன்.”



”அப்புறம்?”



”கே.ஆர்.விஜயா.”



இந்துமதிக்கு கே.ஆர்.விஜயாவின் மேல் பொறாமை ஏற்பட்டது.



”உனக்கு என்ன புத்தகம் பிடிக்கும்?”



”எனிட் பிளைட்டன்.”



”பதினைந்து வயதுப் பெண்கள் படிக்கிற புத்தகம் அது.”



”எனக்கு என்ன வயசு?”



”பதினைந்தா?”



”என்னப் பார்த்தால் என்ன வயது மதிப்பிடுவீர்கள்?”



”நான்கு.”



கோபித்துக்கொண்டாள். ”நான் சத்தியமாக உங்களுடன் பேசவே போகிறதில்லை.”



ஆத்மா சிரித்தான். அதில் உண்மையான சந்தோஷம் நிலவியது. அதன் பின் அவர்களிடையே பிரமாதமான, பூராவும் ஒருவரை ஒருவர் உணர்ந்த, பேச்சுக்கு அவசியமில்லாத கொஞ்ச நேரம் அற்புத மௌனம் நிலவியது. அவர்களும் அந்தச் சூரியனும் அந்த இடத்து மூன்று பெரிய உண்மைகளாக… அதன் பிறகு இந்துமதி ஆத்மாவைக் கேட்டாள்…



”உங்களுக்கு நீந்தத் தெரியுமா?”

Saturday, July 28, 2012

மாலைப்பொழுதின் மயக்கத்திலே - சினிமா விமர்சனம்


http://masscinema.in/wp-content/gallery/maalai-pozhudhin-mayakathilaey-movie-wallpapers/maalai-pozhudhin-mayakathilaey-wallpapers-10.jpgஒரு காபி ஷாப்ல யே  மொத்தப்படத்தையும் எடுத்து முடிச்சுடலாம்னு துணிச்சலா ட்ரை பண்ணுனதுக்காகவே  இயக்குநரை பாராட்டலாம்.. ஆனா இன்னும் பெட்டரா பணி இருக்கலாம்னு தோணுது.. 

ஹீரோ ஒரு  சினிமா டைரக்டர்.. காபி ஷாப் போறார்.. அங்கே ஒரு ஐஸ்க்ரீம் பியூட்டியை சந்திக்கிறார்.. கண்டதும் காதல்.. அவர் கிட்டே மொக்கை போடறார்.. 


இன்னொரு செட்.. மேரேஜ் ஆன தம்பதி ( மேரேஜ் ஆனாத்தான் அது தம்பதி?)ஒரு பையன்.. அந்த மேரீடு லேடி பெண்ணியம் பேசி புருஷனை மதிக்காத கேர்க்டர்.. மனஸ்தாபம் 2 பேருக்கும், டைவர்ஸ் பண்ணிக்கப்போறாங்க.. அது சம்பந்தமா பேசி முடிவெடுக்க அங்கே வர்றாங்க.. 

அங்கே ஒரு ரைட்டர் .. லேப் டாப் மட்டும் வெச்சுக்கிட்டு எதும் டைப் பண்ணாம சும்மா ஃபிலிம் காட்டிட்டு இருக்கார். 

 அந்த காபி ஷாப்ல 2 சர்வர்கள், ஒரு ஓனர்.. இவங்களுக்குள்ளே நடக்கற உரையாடல் தான் டோட்டல் ஃபிலிமும்.. 


ஹீரோவாக வரும் ஆரி ஆல்ரெடி ரெட்டைச்சுழியில் நடித்தவர் தான்.. தாடி வைத்த முகம் .. சுமார் தான்.. அங்கங்கே நடிப்பு வருது..  ஜஸ்ட் பாஸ்.. 



http://moviegalleri.net/wp-content/gallery/maalai-pozhuthin-mayakathile-actress-shubha/maalai_pozhuthin_mayakathile_movie_actress_shubha_phutela_stills_4ede6c1.jpg


ஹீரோயின் புதுமுகம் ஜியோ.. 75 மார்க் ஃபிகர்.. மொசைக் தரையில்  மெழுகை ஊற்றி அதில் பாதரசத்தை வழிய விட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஷைனிங்கான ஃபேஸ்.. ஐஸ்க்ரீம் செர்ரி போல் அழகிய உதடுகள்.. என்ன அவர்  பேசும் தமிழ் தான் கலைஞரின் ஈழப்பாசம் போல் ஒட்டாமல் உறுத்துது.. ஆனா பொண்ணுங்களை எந்த தமிழன் உச்சரிப்பை பார்த்து ரசிக்கிறான்?ஃபிகர் நல்லாருந்தா சரி.. 


2 வது ஹீரோ பாலாஜி.. இவரது டிரஸ்சிங்க் சென்ஸ், அடக்கமான நடிப்பு எல்லாம் கன கச்சிதம்.. 

 இவரது மனைவியாக வரும்  தேஜஸ்வனி  ஹீரோயினை விட எந்த விதத்திலும் அழகில் சளைத்தவர் அல்ல.. அவர் ஐஸ்க்ரீம்னா இவர் முலாம்பழம் ஜூஸ் மாதிரி..  இவர் கோபப்படுவது, எடுத்தெறிந்து பேசுவது, கண்ணீரை அடக்கிக்கொள்வது என நடிப்புக்கான ஸ்கோப் அதிகம்.. குட் ஆக்டிங்க்.. இவர் போட்டு வரும் மயில் டிசைன்  ஸ்டெட் அழகு.. புடவை கட்டி இருக்கும் அழகே அழகு.. 


மேனேஜர், சர்வர்கள் 2 பேர் நகைச்சுவைக்கு கட்டியம் கூறுகிறார்கள்.. ஆனா என்ன ஒரு மைனஸ்னா இது சாமான்ய ரசிகனுக்கு மொக்கை படமாகத்தான் காட்டும்.. ரொம்ப ஸ்லோ


படத்தோட வசனகர்த்தா காலண்டர் தத்ஸ் நிறையா சுட்டுட்டார்.. அது போக மணிமேகலைப்பிரசுரத்தின்  “தம்பதிகள் இனிமையாக வாழ 200 யோசனைகள்” புக்கில் இருந்து பல கோட்ஸ் அள்ளி விட்டிருக்காங்க. 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXUZvQWm6P3ZgkdsiHptTd6xvR_geEhnR7k-nE7wYvOJd9FnRMNxlpjo7LaPcYXubxWtz-v-f17R_IumCaSSNINycxFUNfX3H3_o_zUTaR3ViLReEC6RpO6c8n2T5OmB-MMedePRJ8xy8/s400/Maalai_Pozhudhin_mayakathilaey_25.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. நள தமயந்தி படத்தில் இருந்து கொஞ்சம், பாக்தாத் கஃபே என்ற 1987-ல் ரிலீஸ் ஆன இத்தாலிப்படத்தில் இருந்து கொஞ்சம் சுட்டதே தெரியாமல் படம் எடுத்தது.. 


2. ஹீரோயின்ஸ் செலக்‌ஷன், பக்கா..  ரெண்டு பேரும் கண்ணுக்குள்ளே  நிக்கறாங்க.. ( சேர் குடுத்து உக்கார வைக்கனும்)


3. வசனங்கள் பல இடங்களில் மொக்கை என்றாலும் ஆங்காங்கே ஷார்ப்.. 


4. மாமூல் மசலாத்தனங்கள், பஞ்ச் டயலாக்,ஃபைட் எல்லாம் இல்லாமல் டீசண்ட்டாக படம் கொடுக்க முயற்சித்தது.. 



http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/movies/kw/2011/sep/maalai-pozhuthin-mayakathile/maalai-pozhuthin-mayakathile_059.jpg




இயக்குநருக்கு திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. படத்துல ஏன் தேவை இல்லாம  பாடல் காட்சிகள் வந்துட்டே இருக்கு? அதுவும் அந்த ஓப்பனிங்க் சாங்க் தாராளமா கட் பண்ணிடலாம்.. கண் வலிக்குது.. லைட்டிங்க் ஓவர்


2. ஹீரோயினுக்கு பிறந்த நாள் கொண்டாடும் சீன் ரொம்ப நீளம். ஆர்ட் ஃபிலிம் மாதிரி இருக்கு.. அதை டிரிம் பண்ணனும்



3. ஹோட்டல், காபி ஷாப், டாஸ்மாக் இங்கே எல்லாம் கஸ்டமர்ஸ் டெயிலி வித விதமா வருவாங்க.. ஒவ்வொருவரும் ஒரு மூடுல வருவாங்க.. ஒரு நாள்ல ஒரு கஸ்டமர் சொல்ற அல்ப காரணத்துக்காக பல ஆண்டுகள் வேலை செய்யற ஆளை டிஸ்மிஸ் பண்ணுவாங்களா? இத்தனைக்கும் ஒரு சின்ன மேட்டர்.. கஸ்டமர் க்ரீன் டீ கேட்கறாங்க, ஆனா சர்வர் லெமன் டீ கொண்டு போய்ட்டார். இதெல்லாம் ஒரு பிரச்சனையா?( ஆனா உண்மையில் அந்த லேடி ;லெமன் டீ தான் கேட்டு இருப்பாங்க.. மாத்தி சொல்வாங்க )



4. ஹீரோயின் அக்கா  ஃபாரீன் லேடி.. செல் ஃபோன் பேசிட்டே கார் டிரைவ் பண்ற மாதிரி சீன் எதுக்கு? அப்படியே வெச்சாலும் புகை பிடிக்கும் காட்சி வரும்போது வார்னிங்க் வாசகம் வர்ற மாதிரி ஸ்க்ரீன்ல வார்னிங்க் ஸ்லோகன் போடலாமே?

5. ஹீரோயினின் அக்காவை லவ் பண்றவர் முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆள் முன்னால அது பற்றி டிஸ்கஸ் பண்ணுவாரா? அவரை தனியா கூட்டிட்டு போய்த்தானே டிஸ்கஸ் பண்ணுவாங்க ?



http://static.ibnlive.in.com/pix/slideshow/02-2012/first-look-tamil/maalaipoluthinmayakathilae9.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  உன் கிட்டே திறமை இருக்கா? இல்லையா? என யாருக்கும் அக்கறை இருக்காது


2. கடைசி வரை நம்ம கூட யாரும் வர மாட்டாங்க, கல்வி மட்டும் தான் கூட வரும். 



3. புரிஞ்சுடுச்சு சார்.. உங்களை புரிஞ்சுக்கவே முடியாதுங்கறது புரிஞ்சிடுச்சு.. 


4. ஃபாரீன் ஹோட்டல் மாதிரி நீங்க ஏன் நியூ ஐட்டம்ஸ் ட்ரை பண்ணக்கூடாது?


 ஃபாரீன் ரைட்டர்ஸ் மாதிரி நீங்க ஏன் புது கதை எழுதக்கூடாது?


5. டேய்.. சாம்பல் சாப்பிடனும் போல இருக்கு

 தம் அடிச்சுட்டு இருக்கேன்,.. வந்தா சிகரெட் சாம்பல் தர்றேன்


 அடேய்.. புளிப்பா ஏதாவது சாப்பிடனும் போல இருக்கு


ஹோட்டலுக்கு வா, காபி சாப்பிடலாம்



நான் அம்மா ஆகப்போறேன்

அதுக்கு ஏன் என்னை இழுக்கறே?

 உனக்கு பையன் பிடிக்குமா? பொண்ணு பிடிக்குமா? 

 எனக்கு எப்பவும் பொண்ணுதான்  பிடிக்கும்..


6. நேத்து கூட ப்ரியா ஃபோன் பண்ணுனா.. அவ கர்ப்பத்துக்கு நான் தான் காரணமாம்.. அப்புறம் அவங்கம்மா ஃபோன் பண்ணாங்க.. அவங்களும் கர்ப்பமாம்.. அதுக்கும் நான் தான் காரணமாம்./ நான் தான் உங்க எல்லாருக்கும் இளிச்சவாயனா? 


7. ஏண்டா இப்படி பிரெக்ம்னென்சி வரை மாட்னே?


ஹி ஹி 


 கேப் போடலை?

 போட்டேனே? அப்படியும் மிஸ் ஆகிடுச்சு

 ஒவ்வொரு டைமும் போடனும்



8.  மழை, இளையராஜா இசை, ஐஸ்க்ரீம், எதிர்ல அழகான பொண்ணு இதை விட லைஃப்ல ஒருத்தனுக்கு என்ன வேணும்?


9. ஏசியை இன்க்ரீஸ் பண்ணிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு.. அவனுக்கு எதுவும் வேலை செய்யாது


10. என் தமிழ் கொஞ்சம் அப்டி இப்டித்தான் இருக்கும்.. 

 அப்போ நீங்க இங்க்லீஷ்ல பேசலாமே?


யார் கிட்டே? ( உங்களுக்குத்தான் தெரியாதே?)

 ஒரிஜினல்

http://4.bp.blogspot.com/-14Wd5B8mQZQ/TkKSUmmZiNI/AAAAAAAAIJ4/9qVTgkWn17c/s1600/9115_honeymooners-bagdad-cafe2.jpg


11.  அவங்க சண்டை போட்டா பிராப்ளம் இல்லை, சண்டை போடலைன்னாத்தான் பிராப்ளம்.. 



12.  உனக்கு கோபமே வராதா? 

கோபம் வந்தா மட்டும் இந்த உலகத்துல எல்லாம் மாறிடப்போகுதா?



13. ஒரு தடவைக்கு பல தடவை ஒரு ஆள் ஃபோன்ல தாங்க்ஸ் சொல்லிட்டு இருந்தா அது கண்டிப்பா பர்த் டே விஷ்ஷாத்தான் இருக்கும்

பர்த்டேவா இல்லைன்னாலும் பர்த்டேன்னு ஒத்துக்க வெச்சுடுவீங்க போல 


14.  உங்களுக்கு விருப்பம் இருந்தா வெளில போய் உட்கார்.. விருப்பம் இல்லைனாலும் வெளில போய் உட்கார். சொன்னது புரிஞ்சுதா?


15. அந்த லவ் ஜோடியை பாரு, எவ்ளவ் சந்தோஷமா இருக்காங்க?



 மேரேஜ் ஆன பின் எந்த ஜன்னல் வழியா அதெல்லாம் போகப்போகுதோ? 


16. உங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.. நல்ல வேலை.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. மாலை வந்து பில் செட்டில் பண்ணிக்குங்க.


17.  லாஸ்ட் சான்ஸ்.. 30 நிமிஷம்.. அவளை எப்படியாவது கவர்ந்துடனும்.. என்ன பண்ண்லாம்?


18. சில விஷயங்கள் புரியாம இருந்தாலே நல்லது


19. எவ்ளவ் ஃபாஸ்ட்டா லவ்க்கு அப்ளை பண்றாங்களோ அதை விட ஸ்பீடா  டைவர்ஸ்க்கு அப்ளை  பண்றாங்க . 


20. எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கறவங்க எல்லாரும் சார்லி சாப்ளின் கிடையாது.. சீரியஸா எப்பவும் இருக்கறவங்க சயிண்ட்டிஸ்ட்டும் கிடையாது



http://www.movieposter.com/posters/archive/main/57/MPW-28513


21. வாழ்க்கைல லவ் ஒரு தேவை தான்.. 

வாழ்க்கையே ஒரு தேவை தான்



22. சயின்ஸ்ல எல்லாத்துக்கும் ஃபார்முலா இருக்கு, ஆனா ஒருத்தரை ஏன் பிடிச்சிருக்குங்கறதுக்கு ஃபார்முலாவே கிடையாது



23.  ஹாய், என்ன பண்றீங்க?

சும்மாதான் இருக்கேன்.. 

 பார்ட் டைம்? ஃபுல் டைம்?

 ஹி ஹி ஃபுல்டைமும் சும்மாதான் இருக்கேன்


24.  என் கடைக்கு வர்ற ஒவ்வொரு கஸ்டமரையும் எனக்கு பிடிக்கும்.. அவங்க உலகத்துல இருந்து என் உலகத்துக்கு வந்துடற மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்க்.. 


25. ஒரு நொடி சந்தோஷத்துக்காக லைஃப் பூரா  ஃபைட் போடனுமா?


26. மேரேஜ்க்கு முன்னால இவ நம்ம கூட பேச மாட்டாளா?ன்னு இருக்கும், மேரேஜ்க்குப்பிறகு ஹும், பேசபேசத்தான் பிரச்னையே வருது


27. என்னோட  வாழ அவளுக்குப்பிடிக்கலை, ஆனா அவ இல்லாம நான் இல்லை.. 


28. நீங்க உங்க வாழ்க்கைல எப்பவாவது தப்பு பண்ணி இருக்கீங்களா?

 ம், மேரேஜ்  பண்ணி இருக்கேன்.. 


29. எதுக்காக ஓடறோம்? யாருக்காக ஓடறோம்? ஒண்ணும் புரிய்லை



30. நீங்க பண்ற எல்லா தப்புக்கும் தண்டனை உங்களூக்கு நீங்களே குடுத்ததுண்டா? இல்லை, மன்னிச்சுடறீங்க? ஆனா அடுத்தவங்க தப்பு பண்ணா மட்டும் மன்னிக்கறது இல்லை? 1000 முறை தப்பு பண்ணுனா 1000 தடவையும் மன்னிங்க.. 

 ஒரிஜினல் பாக்தாத் கஃபே

http://insidescoopsf.sfgate.com/files/2011/04/bagdad-600x400.jpg


31.  பிரிஞ்சு வாழ்றது வாழ்க்கை இல்லை 


32. நான் இல்லாம அவளால சந்தோசமா இருக்க முடியும்னா அவ இல்லாமலும் நான் சந்தோஷமா இருக்க முடியும்.. 


33. டியர்.. ஃபோனை வை. 

 நீ வை 

 ம்ஹும், நீ தான் முதல்ல வைக்கனும்// 

 நான் வைக்க மாட்டேன்

 நானும் வைக மாட்டேன்.. 

 டேய் 2 பேரும் இதே மொக்கையை 2 மணீ நேரமா போட்டுட்டு இருக்கீங்க.. 



34. ஆண்களை அழ வெச்சுப்பார்க்கறது பொண்ணுங்களுக்கு பிடிக்கும்


35. நமக்கு ஒரு பொண்ணு பிடிச்சிருந்தா அந்த நிமிஷம் தான் உலகின் சந்தோசமான நிமிஷம் . அதை விட சந்தோஷம் எதுவும் இல்லை


\36.  எனக்கு அவங்களை பிடிக்கும்.. அதை அவங்களுக்கு சொல்லனுமா என்ன? அவங்களுக்கா தெரியாதா?


37.  விட்டுட்டு போக 1000 காரணங்கள் இருக்கலாம்.. சேர்ந்து வாழ ஒரு காரணம் கூடவா இல்லை?



38. பொண்ணுங்களை சைட் அடிச்சாத்தான் அவன் பையன். அபடி அடிக்காதேன்னு சொன்னா எப்படி? வேணும்னா திட்டுங்க..


39. சின்னச்சின்ன பார்வைல பெரிய பெரிய  கதை பேசி காதல் வருது.. சின்ன சின்ன வார்த்தைகளால அது சிதையவும் செய்யுது


40. உனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சேன், உனக்குப்பிடிக்காததை பண்ணக்கூடாதுன்னு இப்போதான் தெரியுது.. 


41.  படிப்பை விட்டுட்டு உன்னைப்பற்றியே யோசிச்சுட்டு இருப்போனோன்னு பயமா இருக்கு 


http://moviegalleri.net/wp-content/gallery/maalai-pozhuthin-mayakathile-stills/maalai_pozhuthin_mayakathile_movie_stills_4491.jpg

 
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41


குமுதம் ரேங்க் - ஓக்கே 


 டைம்ஸ் ஆஃப் இண்டியா  -  3 / 5


 டெக்கான் கிரானிக்கல் -  7 /10


 உல்டா ஆஃப்  ஹாலிவுட் தகவல் உதவி  - வவ்வால்



http://moviegalleri.net/wp-content/gallery/maalai-pozhuthin-mayakathile-stills/maalai_pozhuthin_mayakathile_movie_stills_1929.jpg
a


டிஸ்கி 1 -

பொல்லாங்கு - நடுநிசி நாய்கள் 2 - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/07/2_28.html

 


டிஸ்கி - 2 அதுல்குல்கர்னி இன் G A - சுழல் - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_6087.html

 


 


-

Saturday, June 16, 2012

இனிமையான தாம்பத்யத்தின் தாத்பர்யம் என்ன?

தமிழ் நாடுல பவரே இல்லை பல்ப்பு மட்டும் எதுக்கு .. நீ தொடசும் செஞ்சு மாடிக என் ராசாத்தி அப்படியே ஜெய அம்மாக்கும் ஒண்டு அனுப்பி விடு என் செல்லம்

1.உனக்காக எதுவுமே செய்யாதவருக்காக நீ என்ன செய்தாய் என்பதை வைத்துத்தான் உன் குணம் தீர்மானிக்கப்படுகிறது


---------------------

2. உலகில் உள்ள அனைத்துப்பெண்களுக்கும் உற்ற தோழன் தலையணை மட்டுமே,அவர்கள் கண்ணீரை ஏற்றுக்கொள்வதால்

------------------------

3. ஒரு பையனைப்பழி வாங்க சிறந்த வழி சூப்பர் ஃபிகர்ஸ் ஃபோன் நெம்பர் 10 குடுத்துட்டு அவனை நெட் ஒர்க் கவ்ரேஜ் இல்லாத ஏரியாவில் அடைத்து விடுவதே

-----------------------

4. ஒரு பெண்ணைப்பழி வாங்க சிறந்த வழி ஆடை ,அணிகலன்கள்,நகைகள் எல்லாம் வாங்கிக்கொடுத்து அவளை கண்ணாடி இல்லாத அறையில் அடைத்து வைப்பதே

--------------------------------

5. காயப்பட்ட இதயத்தை நேசிக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் அட்லீஸ்ட் நேசித்த இதயத்தையாவது காயப்படுத்தாமல் இருக்கலாம்

----------------------




6. நினைத்தவுடன் கவிதை எழுத வந்தால் நீ பிறவிக்கவிஞன், மனம் கனத்தவுடன் கவிதை எழுத வந்தால் நீ மக்களின் கலைஞன்

------------------------

7. ஹலோ!ஏன் சரியா பேச மாட்டேங்கறே?

பக்கத்துல ஃபாதர்!

அடிப்பாவி, நீ ஹிந்துன்னு தானே சொன்னே? ஏன் சர்ச்சுக்கு போனே? # கலாட்டா கடலை

----------------------

8. வெற்றி என்பது அழகிய காதலி போல, எந்த நேரத்திலும் அது நம்மை விட்டு விலகி விடலாம்.

------------------------

9. எடுப்பார், கொடுப்பார் இன்றி இருவருமே பெறுபவராக இருப்பதுதான் இனிமையான தாம்பத்யத்தின் தாத்பர்யம்

-------------------------

10. நம்பி காத்திருந்தால் ஆசைப்பட்டது மட்டும் கிடைக்கும், நம்பிக்கையுடன் கஷ்டப்பட்டால் ( உழைத்தால் ) நினைத்தது எல்லாமே கிடைக்கும்

-----------------------------





11. கீ போர்டின் ஷார்ட் கட்ஸ் அறிந்தவன் மவுஸ் யூஸ் பண்ணுபவனை விட 10 மடங்கு அதிக வேகத்துடன் கணிணியில் வேலை செய்வான்

----------------------

12. அணுகுண்டு வெடிக்கும்போது எந்த சத்தமும் வராது ( கேட்காது) கண்ணைக்கூசும் அளவு வெளிச்சம் மட்டுமே வரும்

------------------------

13. 12 தேனீக்கள் வாழ்நாள் முழுதும் உழைத்தால் தான் ஒரு டீ ஸ்பூன் அளவு தேன் கிடைக்கும்

-------------------------

14.  ஐ லவ் யூ சொன்னேன், அவள் கண்கள் முதலில் சிவந்தன, என் கன்னம் அதன்பின் சிவந்தது # GUESS 1. பளார்?  2  ஃபிகரு லிப்ஸ்டிக் போட்டிருக்காடோய்!

----------------------

15. காதல் என்பது மிக மதிப்பு மிக்கது, ரொம்ப சீப்பான ஆள் கிட்டே அதை பிச்சையா கேட்காதீங்க!!!

----------------------



16.  மனைவி கூட செம ஃபைட், கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சுட்டு வந்துட்டேன்.

மனைவியையா?

  ம்ஹூம், சைக்கிளை

----------------------------

17. காதலி கிஸ் தரும்போது வரும் சந்தோஷத்தை விட நண்பன் அவனோட கேர்ள் ஃபிரண்ட் நெம்பர் தரும்போது வரும் சந்தோஷம் அதிகம் # மச்சி, ஃபிகர் நெம்பர் குடு

-----------------------------

18. மகிழ்ச்சி என்பது புரியாத புதிர்க்கணக்கு, நீ மற்றவர்களுடன் அதைப்பகிர்ந்து கொண்டால்  அது பன் மடங்காகப்பெருகிவிடும்

------------------

19. எந்த பிரச்சனையையும் சந்திக்காம ஒருத்தன் ஜெயிச்சா அது சாதா வெற்றி, பல பிரச்சனைகளையும் சந்திச்சு ஒருத்தன் ஜெயிச்சா அது  சரித்திர வெற்றி

------------------------

20. வாழ்க்கை என்பது மோசமான டீச்சர் போல, முதல்ல நமக்கு பரீட்சை வெச்சுடுது, அதுக்குப்பிறகுதான் பாடமே கத்து தருது

-----------------------


சுமோ என்கிற சுண்டுமோதிரம் பெயர் இணைக்கப்பட்டது.

Tuesday, May 22, 2012

OH ,MY FRIEND (ஸ்ரீதர்) - சினிமா விமர்சனம்


http://telugu.way2movies.com/wp-content/uploads/2011/11/Oh-My-Friend-Movie-Review-Oh-My-Friend-Review.jpg
விக்ரமன் டைரக்‌ஷன்ல வந்த பிரியமான தோழி -40%  + பிரசாந்த்-ஷாலினி நடிச்ச பிரியாத வரம் வேண்டும் - 45%  சொந்த சரக்கு 15 % எல்லாத்தையும் கலக்குனா ஓ மை ஃபிரண்ட் தெலுங்கு படத்தோட கதை ரெடி.. 


ஹீரோவும் , ஹீரோயினும் ஒண்ணாங்கிளாஸ்ல இருந்தே க்ளாஸ் மேட்ஸ்.. ஸ்கூல், காலேஜ் தாண்டி அவங்க நட்பு வளருது.. 2 பேரும் ரொம்ப அந்நியோன்யமா இருக்காங்க , ஆர்யா - த்ரிஷா மாதிரி.. பார்க்கறவங்க, அவங்க கிட்டே பழகறவங்க எல்லாம் அவங்களை சிம்பு - நயன் மாதிரி லவ்வர்ஸ்சாவே நினைக்கறாங்க. ஆனா அவங்க லவ்வர்ஸ் இல்லை.. க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் அவ்ளவ் தான்.. ஹீரோ ஒரு ஃபிகரையும், ஹீரோயின் வேற ஒரு ஆளையும் லவ் பண்றாங்க . 4 பேரும் பிக்னிக் போறாங்க .. அங்கே அவங்க 2 பேர் அந்நியோன்யமா பழகறதை பார்த்து அவங்கவங்க லவ்வர்க்கு பொறுக்கலை.. லவ்வா? நட்பா? ஏதாவது ஒண்ணு தான் டிசைடு பண்ணுனு சொல்றாங்க.. அவங்க என்ன முடிவு எடுத்தாங்க என்பதே கதை..

>

சித்தார்த் தான் ஹீரோ .. அந்தக்கால கார்த்திக் மாதிரி அதாவது இதயத்தாமரை, கோபுர வாசலிலே கார்த்திக் போல ஆள் சோ ஸ்மார்ட்.. செம துறு துறுப்பு.. பெண்களின் மனம் கவரும் பர்சனாலிட்டி, பாடி லேங்குவேஜ் .. ( ஆண்கள் அதிகம் அவரை விரும்பதில்லை, ஏன்னு தெரியலை )சட் சட் என மாறும் முக பாவங்கள் அவரது பிளஸ்.. சரளமான நடனத்திறமை இன்னொரு பிளஸ்....காதலில் சொதப்புவது எப்படிக்கு முன்னால ரிலீஸ் ஆன படமா இருந்தாலும் தமிழ்ல இப்போ தான் ரிலீஸ் என்பதால் அவருக்கு இந்தப்படம் உதவியா இருக்கும்.. 



http://moviegalleri.net/wp-content/gallery/oh-my-friend-movie-stills_1/oh_my_friend_movie_stills_0333.jpg


 ஸ்ருதி கமல் தான் ஹீரோயின்.. அதாவது  ஹீரோவோட பள்ளித்தோழி... நடிப்பு எப்பவும் போல்.. இவர் கிட்டே உள்ள மைனஸ்  தன் அப்பா கமல் போலவே “ இதோ இதோ பாரு.. நான் நல்லா நடிக்கறேன் “ அப்டினு கை தட்டி கூப்பிட்டு சொல்ற மாதிரி இருப்பதே..  படத்துல நல்ல டிரஸ்சிங்க்... ஏகப்பட்ட டிசைன்ல ஸ்டெட், பிரேஸ்லெட்,  சுடி.. கலக்கல்,.. 


ஸ்ருதியோட லவ்வரா வர்றவர் நவ்தீப்.. சுமாரான நடிப்பு. டைரக்டருக்கு என்ன பிரச்சனைன்னா அவரை லைட்டா வில்லன் மாதிரி காட்டி ஆகனும்.. ஆனா கேரக்டர் வைஸ் வில்லன் கிடையாது.. அங்கே தான் சிக்கல்.. 


ஹீரோவுக்கு ஜோடி சின்ன குஷ்பூ, பெரிய பல்பு ஹன்சிகா. ஆள்  சும்மா தக தகன்னு ரோஸ் மில்க்கால் அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனச்சிலை மாதிரி இருக்கார்.. ஆறிலிருந்து அறுபது வரை தியேட்டர்ல கைல கர்ச்சீபோட  வாயை ஆன்னு பார்க்க வைக்கறார்..  இவர் அழுகையில் ஜொலிக்க வேண்டிய காட்சிகளில் எல்லாம் மழையில் இவரை நனைய விட்டது இயக்குநரின் சாமார்த்தியம். எப்படின்னா அவர் கண்கள்ல கண்ணீர் வர்லைன்னு எவனும் சொல்லிட முடியாது..  மழைல நனைய விட்டா எவனும் பாப்பா முகத்தை கவனிக்க மாட்டான்.. உணர்ச்சிகரமான சீன்ல பாப்பா சரியா நடிக்கலைன்னு நாக்கு மேல பல்லை போட்டு யாரும் பேசிட முடியாது.. வெல்டன் டைரக்டர்.




http://datastore01.rediff.com/h450-w670/thumb/69586A645B6D2A2E3131/h6illz01e036hyac.D.0.Oh-My-Friend-Movie-Stills.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. ஹீரோ ஹீரோயினை ஏய் கில்லர் எனவும், ஹீரோயின் ஹீரோவை டுபாக்கூர் எனவும் அழைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வது, நட்பு பாராட்டுவது, ஊடல், அன்பு அனைத்தும் அழகு.. இப்படி ஒரு ஃஃபிரண்ட் நமக்கு இல்லியே என ஏங்க வைக்கும் காட்சி அமைப்புகள்




2. ஸ்ருதி, சித்தார்த்குக்கான ஆடை வடிவமைப்பு கலக்கல்..  எத்தனை வித விதமான மாடர்ன் டிரஸ்?




3.  க்ளைமாக்ஸில் சித்தார்த் பேசும் வசனமான “ நாங்க லைஃப்ல எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டோம் கறதுக்காக பெட்ரூமையும் ஷேர் பண்ணிக்கச்சொல்றீங்களே, இது என்ன நியாயம்? என்று கேட்பது கிளாசிக்.. 




4. நட்புன்னா என்னன்னா அப்டின்னு ஆரம்பிச்சு 2 பக்கத்துக்கு வசனம் எல்லாம் சொல்லாம காட்சி அமைப்பின் மூலமே அதன் பெருமையை சொன்னது.. 




5.  ஒரு பாடல் காட்சியில் மெதுவாக நகரும் ஃபாரீன் பஸ்ஸில் இருவரும் அமர்ந்து கால்களால் உந்தி அந்த பஸ்ஸை நகர வைப்பது போல் காட்டுவது கொள்ளை அழகு.. ( பாடல் - சிறுவர் சிறுமி போல் எத்தனை நாட்கள் நானும், அவரும் சுற்றித்திரிந்தோம்)






6. ஸ்ருதியின் லவ்வர் காரில் டிரைவிங்க் சீட்டில் அமரும்போது சித்தார்த் முன் சீட்டில் அமர வர நவ்தீப் நீங்க பின்னால என சைகை காட்ட சித்தார்த் எதுவும் பேசாமல்  ஒரு பார்வை பார்ப்பாரே ஸ்ருதியை ஆஹா.. 




7. ஹன்சிகாவுக்கான காமிரா கோணங்கள் அனைத்தும்  டாப் ஆங்கிளில் டாப்பை குறி வைத்து எடுக்கப்பட்டது டாப் ஹி ஹி







https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ4ywktyAgAXfGcIrGhpzmpIAYh5zz1dAU7S_exqtl69JJ6a8fKMX6Kfd-DhT5r1RF_cRB63MeNJdP4nbK4eqwuGVYgg1Ba4rBbB4LLG6CefpESp-pm_37C4JCz2oPjkhIakxUMgXcvI3V/s1600/Shruti+Hassan+At+Oh+My+Friend+Movie+Press+Meet+Exclusive+Images+%25283%2529.jpg


 இயக்குநருக்கு சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்




1. வழக்கமா கூட்டத்துல அல்லது பஸ்ல ஒரு பொண்ணு பையனை இடிச்சா அவன் எஞ்சாய் பண்ணுவான்.. கத்தி ரகளை பண்ணுவனா?ஸ்ருதி ஒரு பையனை இடிச்சுடறாங்க.. அவன் என்னமோ குலமே அழிஞ்ச மாதிரி கத்தறான்.. அவன் கூட சித்தார்த் ஃபைட் வேற.. வெரி பேடு.. 




2. ஒரு சீன்ல ஸ்ருதி லேப்டாப்ல ஒர்க்கிங்க்.. சார்ஜ் ஏறிட்டு இருக்கு.. சித்தார்த் என்னமோ பேச ஸ்ருதி கண்டுக்கலை, உடனே அவர் சார்ஜ் ஒயரை பிடுங்கிட்டு “ இப்போ நெட்டை கட் பண்ணிட்டேன், என்ன பண்ணுவே?”ங்கறார்.. லேப் டாப்ல நெட் கனெக்டிவிட்டி பென் டிரைவ் இருக்கு 




3. ஓப்பங்க் ஷாட்ல சித்தார்த் தன் ஸ்கூல் மேட்டான ஹன்சிகாவை ரொம்ப வருஷம் கழிச்சு மீட் பண்றார்.. 10 நிமிஷம் பேசிட்டு திரும்பறார்.. ஆனா ஃபோன் நெம்பரோ, அட்ரஸோ, என்ன ஏதுன்னு ஒரு விபரமோ கேட்டுக்கலை.. அதுக்குப்பின் நாய் மாதிரி லோ லோ என அலையறார்.. இது தேவையா? இந்தக்காலத்துல முன்னே பின்னே அறிமுகம் ஆகாத ஃபிகர் 10 நிமிஷம் தொடர்ந்து பார்த்தாலே ஃபோன் நெம்பர் வாங்கிடறாங்க .. 10 வருஷம் ஒண்ணா படிச்ச தோழி கிட்டே நெம்பர் வாங்கக்கூடாதா? 




4. அப்புறம் ஸ்ருதி, சித்தார்த் 2 பேரும் ஹன்சிகாவை என்னமோ தீவிரவாதியை ஃபாலோ பண்ற மாதிரி ஏன் ஃபாலோ பண்ணி அட்ரஸ் கண்டுபிடிக்கறாங்க? நேருக்கு நேர் உன் அட்ரஸ் எங்கே?ன்னு கேட்கலாமே?




5. சித்தார்த்,ஸ்ருதி, ஹன்சிகா 3 பேரும் ஸ்கூட்டில ட்ரிபிள்ஸ் போறாங்க, அப்போ டிராஃபிக் கான்ஸ்டபிள் வழில பார்த்து டக்னு ஸ்ருதியை “ நீ ஆட்டோல போ”ன்னு சொல்லிடறார்.. இது கேனத்தனமா இருக்கு.. வேற ரூட்ல வணடியை திருப்பலாம், கொஞ்ச தூரம் அவரை நடக்க சொல்லி எல்லை தாண்டுனதும் மறுபடி ட்ரிபிள்ஸ் போலாம்.. இதுல இன்னொரு கிளு கிளு அட்வாண்டேஜும் இருக்கு.. எப்படின்னா சித்தார்த் பின்னால முதல்ல ஹன்சிகாவும், அதுக்குப்பின் ஸ்ருதியும் சிட்டிங்க்.. அப்போ நெருக்கம் அதிகமாகும்.. ஸ்ருதி இறங்கிட்டா 2 பேர்தானே இடம் இருக்கும், நெருக்கம் குறைஞ்சிடும், ஹி ஹி 




6. ஒரு முக்கியமான வேலையா கொச்சின் போக வேண்டிய சூழல்ல ஸ்ருதி சித்தார்த்துக்கு ஃபோன் பண்றார்.. ஆனா அவர் அட்டெண்ட் பண்ணலை.. அப்புறம் நினைவு வந்து கேட்கறப்போ 2 பேருக்கும் ஃபைட் வருது.. ஏன்? சிம்ப்பிள் மேட்டர்.. ஐ ஆம் கோயிங்க் டூ கொச்சின்னு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாமே? 


7. என்னதான் அந்நியோன்யமான ஃபிரண்ட்ஸா இருந்தாலும் அப்படியா கட்டிப்பிடிச்சுக்குவாங்க... காட்சி அமைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. 





http://www.movietitbits.com/images/gallery/hansika/hansika_big/Hansika%20Hot.jpg




 மனம் கவர்ந்த வசனங்கள்


1. மாறிட்டேன்னு நினைச்சேன்.. நல்ல வேளை.. நீ மாறலை .. 


நம்ம கிட்டே இருக்கற பெஸ்ட் கேரக்டரை நாம மாத்திக்கவே கூடாது.. 


2. மிஸ்டர்... இங்கே நோ வாக், நோ ஸ்மோக்கிங்க்.. 




 இதையும் உங்க டீச்சர் தான் சொன்னாங்களா? 


 நோ நோ காமன் சென்ஸ் ஹி ஹி .. இது கூட தெரியலையா?




3. ஒரு நல்ல இசை அமைப்பாளன்னு என்னை நிரூபிக்க எனக்கு வாய்ப்பு தேவை இல்லை.. தானா உணரனும் எல்லாரும் ( அதெப்பிடி? )




4.  இவளை தெரியுதா?


 ம் ம் அட்டு ஃபிகரா இருந்தாலும் அழகு ஃபிகர் மாதிரி சீன் போடறாளே.. தெரியாம இருக்குமா?




5. மிஸ்.. என்னை ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றீங்க?




 யானை உள்ளே போற அளவுக்கு உங்க வாயை திறந்து வெச்சிருந்தா?




6.  பிங்க்கி பிங்க்கி பாங்க்கி...... போட்டுப்பார்த்துத்தான் எதையும் செலட் பண்ணுவேன்


 ஓக்கே மிஸ். இப்போ 9 விரல் காட்டி 9 புக்ல 1 ஐ செலட் பண்ணிட்டீங்க.. சப்போஸ் 12 புக்ல இருந்து 1 செலட் பண்ண வேண்டி வந்தா மீதி 2க்கு எதை காட்டுவீங்க ? ( டபுள் மீனிங்க்  )


7. டியர், கண்ணாடியை பார்த்து எனக்கு நானே நன்றி சொல்லிக்க முடியாது.. அதே மாதிரிதான் உனக்கும்.. நெக்ஸ்ட்


8.  நெக்ஸ்ட் என்ன? 




 வாட்?




 ஜாப் கிடைச்சிருச்சு.. அடுத்து என்ன? ஹி ஹி 


 இதென்ன கேள்வி? வேலைக்கு போவேன்.. 






9. சின்ன வயசுல இருந்தே அவளுக்கு எது வேணும்னாலும் அவ அம்மா தான் டிசைட் பண்ணுவாங்க , இப்போ அவங்க இல்லை.. அதனால டெசிஷன் அத்தாரிட்டி யார்ங்கறதுல கன்ஃப்யூஷன்..


10. எல்லார் மாதிரியும் நீயும் ஃபிரண்ட்ஷிப்பை காதலுக்கு யூஸ் பண்ணிக்கப்போறியா?


ஸோ வாட்?அதுல என்ன தப்பு?


11.  ஒரு சின்ன பிராளம். 

 சொல்லு என்ன?


 அது பர்சனல். 

 ஓஹோ.. ஷேர் பண்ற அளவுக்கு நமக்குள்ள ஃபிரண்ட்ஷிப் வளரலையா?


யா. இனி டெயிலி வந்து என்னை படுத்தி எடுக்காதே.. 



12.  அவனுக்கு புது ஃபிரண்ட் வந்ததும் பழைய ஃபிரண்டை மறந்துட்டான் .. இதுதான் மனித சுபாவம்.. சராசரி நாம்




13.  லைஃப்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டைம் பிரியாரிட்டி கொடுக்க வேண்டி வரும். 




14. உன் பிராப்ளம் என்ன? நீத்துவா? 


 இல்லை.. நீ தான்... 




15. யார் எங்கே இருந்தாலும் ஹேப்பியா இருக்கறது தான் முக்கியம்.. ஆனா இன்னைக்கு நாம எல்லாருமே ஒண்ணா ஹேப்பியா இருக்கோம்








Oh My Friend (2011) DvdRip


16. லைஃப் யாரை எப்போ எங்கே சேர்க்கும்னு சொல்லிட முடியாது.. நேத்து ஃபிரண்ட்டா இருந்தவன் இன்னைக்கு எதிரி, இன்னைக்கு ஃபிரண்டா இருக்கறவன்  நாளை எதிரி.. 




17. கேரியர்க்காக லவ்வையே விட்டுக்கொடுக்கறவங்க இருக்காங்க.. ஆனா ஃபிரண்ட்சிப்க்காக உன் கேரியரையே விட்டுக்கொடுக்கறே.. யூ கிரேட்.. 



18. என் பையனோட வெற்றியை என்னால அனுபவிக்க முடியல.. ஏன்னா அவனை நான் என்கரெஜே பண்ணுனது இல்லை


19. கட்டிக்கப்போறவனை விட நீ ஃபிரண்ட்ஷிப்க்கு  முக்கியத்துவம் தர்றே.. 




20. அவளுக்கு ஒரு சின்ன பிராப்ளம்னா  என்னால தாங்கிக்கவே முடியலை.. 




 ஹூம், என் பிராப்ளமும் அதுதான்... லவ்வர் நானே சும்மா இருக்கேன்.. ஃபிரண்ட் நீ ஓவரா அட்டாச்மெண்ட் காட்டறே.. 






21. ஒண்ணு சொல்றேன். நல்லா மைண்ட்ல வெச்சுக்கோ.. ஆஃப்டர் மேரேஜ் யூ ஆர் மை பிராப்பர்டி




22.  புருஷனும், பொண்ட்டாட்டியும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் ஆக முடியுதோ இல்லையோ  பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் புருஷனும், பொண்ட்டாட்டியுமா தாராலமா ஆகலாம்.. 




23. உங்க எதிரே இப்போ ஒரே ஆப்ஷன் தான் இருக்கு.. அது ஃபிரண்ட்ஸா இருந்த நீங்க 2 பேரும் மேரேஜ் பண்ணிக்கறதுதான்




24. வாழ்க்கைல சாய்ஸ் தேடிட்டே இருந்த நான்  அவர் லைஃப்லயும் சாய்ஸ் ஆவேன்னு நினைச்சுக்கூடப்பார்க்கலை




25. டேய் மெரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு.. பேச்சிலர் பார்ட்டி எப்போ?


 ம்க்கும், என் மேரேஜே பிரேக் ஆகிடுச்சு




26. எந்த நட்புக்குள்ளேயும் ஒரு லவ் இருக்கும். எந்த லவ்வுக்குள்ளேயும்  ஒரு நட்பு இருக்கும்.. 




27. எந்த 2 உறவுகள் சேர்ந்து இருக்கறப்ப அண்டர்ஸ்டேண்டிங்கா இருக்காங்களோ அவங்க லைஃப் ஃபுல்லா சேர்ந்து இருக்கறதுல தடையே இல்லை 




28.  அட்ஜஸ்மெண்ட் பண்ணிட்டு வாழ்ந்துடலாம், ஆனா சேக்ரிஃபைஸ் பண்ணிட்டு வாழ முடியாது.. 




29.  உங்க 2 பேருக்கும் நாங்க ஃஃபிரீடம் கொடுத்தது பெரிய விஷயம் இல்லை.. அதை மிஸ் யூஸ் பண்ணாம 2 பேரும் கவுரம் காத்தீங்களே அதான் பெரிய விஷயம். 


30.ஒரு பொண்ணும், ஒரு பையனும் வயசுக்கு வந்த பின் ஃபிரண்ட்ஷிப்க்கு நோ சொல்லிடனுமா?




31.  ஒரு பையனும், பொண்ணும் தூய்மையான நட்போட பழகுனா இந்த உலகம் ஏன் தப்பா பேசுது?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeYJXvm0ttg83z4nVgcsUtG_RO5V_cxYnwA7FBfZvQOXtsxPaYT2SuNB6oo2oA-7_fF8PooeFxQNh6yci6uXfTwoCBvT_4-ZmIkdpwy6zKtzRgDdz3Bj3izdwCgVbFU8npaaIqn-uQCUVo/s640/Shruti+Hassan+Hot+Saree+Pictures.jpg




எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41 ( இது தெலுங்குப்படம் என்பதால் விக்டனில் நோ விமர்சனம் ஜஸ்ட் டூ நோ ஸ்டாண்டர்ட்)




 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 




 சி.பி கமெண்ட் - கண்ணியமான நெறியாள்கை என்பதால் காதலர்கள், பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் பார்க்கலாம்.. இது யூத் ஃபிலிம்.. 




 ஈரோடு ஸ்ரீநிவசாவில் பார்த்தேன்.. 







http://www.bollygeek.com/wp-content/uploads/hot-hansika-motwani.png

Monday, May 21, 2012

கண்டதும் காணாததும் - சினிமா விமர்சனம்



http://i.imgur.com/eEV91.jpgஷேர் ஆட்டோல முன் பின் அறிமுகம் இல்லாத ஹீரோவும் ஹீரோயினும் போறப்ப ஒரு பொறம்போக்கு வேணும்னே ஹீரோயின் மேல இடிக்கறான்.. ஒரு தடவை இடிச்சிருந்தா ஹீரோ சும்மா உட்டிருப்பாரு.. 2 டைம் இடிக்கறான்.. அவனுக்கு ராசியான நெம்பர் 2 போல..உடனே ஹீரோ ஸ்டாப்ல இறங்குனதும் பப்ளிக் டாய்லட்ல அந்த நாயை போட்டு குமுறு குமுறுன்னு குமுறுறாரு.. ஐ மீன் ,அவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடறாரு.. உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மேல நல்ல  அபிப்ராயம் வந்துடுது..

 ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நூல் அளவு தான் வித்தியாசம்.. வில்லன் டைரக்டா ரேப் பண்ணுவான்.. ஹீரோ  லவ் பண்ணி டூயட் பாடி கரெக்ட் பண்ணி அவ சம்மதத்தோட அதை செய்வான்.. இது புரியாம பல பேக்குங்க ஊர்ல இருக்கு

 ஹீரோவும், ஹீரோயினும்  அடிக்கடி சந்திக்கறாங்க , ஊரை சுத்தறாங்க.. எல்லா ஹோட்டல்லயும் சாப்பிடறாங்க.. ஒரு நாள் ஹீரோ வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிடறாங்க.. ஹீரோ மட்டும் தனியா இருக்காரு.. நானா இருந்தா பிட் படம் பார்த்திருப்பேன்,.. அந்த தத்தி இன்னும் 1998 ல இருந்து வெளில வர்லை. சரோஜா தேவி புக் படிக்குது..

 ஹீரோயின்க்கு பிறந்த நாள்.. அவ தன் காதலை சொல்ல ஹீரோ வீட்டுக்கு வர்றா.. அவளை பார்த்ததும் அந்த தத்தி ஹீரோ அந்த கில்மா புக்கை ஒளிச்சு வைக்கறான்.. நானா இருந்தா கற்றதும் பெற்றதும் உனக்கும் இந்தான்னு குடுத்திருப்பேன்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு..






http://i.indiglamour.com/photogallery/telugu/freshface/2011/Nov13/Swasika/normal/Swasika_20175.jpg

 அப்புறம் திடீர்னு லூஸ் மாதிரி ஹீரோயினை ஹீரோ டைட்டா கட்டிப்பிடிக்கறாரு.. கிட்டத்தட அட்டெம்ப்ட் ரேப் மாதிரி.. ஹீரோயின் மிரண்டு போய் ஓடிடுது..  ஜெயேந்திரர்ட்ட இருந்து தப்பிச்சு ஓடுன எழுத்தாளர் அனுராதா ரமணன் மாதிரி..( பல வருடங்களுக்கு முன் நடந்த உண்மைச்சம்பவம்)

இப்போ 2 பேருக்கும் சண்டை.. பிடிக்கலைன்னா ஃபோன் நெம்பர் மாத்திட்டு போய்ட்டே இருக்கனும்.. அந்த கேனை ஹீரோயின் என்ன பண்றா .. உன்னை எனக்குப்பிடிக்கலை, நீ செஞ்சது தப்பு அப்டினு அடிக்கடி மீட் பண்ணி சொல்றா..

 ஹீரோயினுக்கு வேற பக்கம் நிச்சயம் ஆகிடுது.. மேரேஜ் அன்னைக்கு முந்தின நாள் ஹீரோவோட ஃபிரண்ட் ஹீரோயினை கன்வின்ஸ் பண்ணி “ கடைசியா ஒரு தடவை நீ வந்து பேசு”ன்னு சொல்றான்.. நானா இருந்தா “ டேய் கேனை... எனக்கு மேரேஜ், நான் எப்படி அங்கே வர முடியும், அவனை வேணா மண்டபத்துக்கு கூட்டிட்டு வா”ன்னு சொல்லி இருப்பேன்..

 ஆனா அந்த கேனை ஹீரோயின்  மண்டபத்துல இருந்து எஸ் ஆகி முன்னாள் காதலன் வீட்டுக்கு போறா.. அதுக்குள்ள அந்த அவசரத்துல பிறந்த அவசரக்குடுக்கை ஹீரோ தற்கொலை பண்ணிக்கறார்..இவ ஹேரே போச்சுன்னு நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை மேரேஜ் பண்ணிக்கறா.. இவ்ளவ் தான் கதை ( ஆனா ஹீரோயினுக்கு ஹீரோ செத்தது தெரியாதுன்னு கேவலமான ட்விஸ்ட் வேற )


ஹீரோ ஆள் ஜம்முன்னு தான் இருக்கார்.. ஆனா கேரக்டர் தான் வீக்.  சாதாரண விஷயத்துக்கு எல்லாம் தற்கொலை பண்ணிக்கற அளவு வீக் மைண்ட்??? டூயட் காட்சிகளில், காதல் கலாய்ப்புக்காட்சிகளில் பாஸ் மார்க் ..


ஹீரோயின் ஆள் கும்முன்னுதான் இருக்கு. 60 மார்க் தேறும். அலங்கார வளைவுகள் பிளஸ் பாயிண்ட்ஸ்.


ஆர் சுந்தர் ராஜன் , புரோட்டா சூரி 2 பேர் இருந்தும் காமெடி வறட்சி. வடிவேல் மாதிரி காரணத்தை சொல்லிட்டு அடிடா எல்லாம் செம கடி.. வடிவேல் மாதிரி பண்ண த்தான் அவர் இருக்காரே?




http://mmimages.mmnews.in/gallery/2012/Apr/3628_L_galvpf.gif


மனம் கவர்ந்த வசனங்கள்


1. எந்த சோப் போட்டு குளிச்சாலும் நீ வெளுக்கப்போறதில்லை, ஏன் ரிஸ்க் எடுக்கறே?


2. இப்போ நான் சொன்ன தத்துவம் அரிஸ்டாட்டில் சொன்னது..


 அதானே. சொந்தமா நீங்க எப்போதான் சொல்லி இருக்கீங்க?



3. BAG  ல பாருங்க....

 ஒண்ணும் தெரியலையே?


 யோவ்.. என்னை சுத்தி சுத்தி வந்து பார்த்தா என்ன தெரியும்? என் ஹேண்ட் பேக்ல பாருய்யா  ( அடங்கோ ,... அடேய் அடேய் அவ்ளவ் அப்பாவியாடா நீ ?)


4. உன் கவிதையை நான் படிக்கறதை விட நீயே படிச்சுக்காட்டினா  ரொம்ப நல்லாருக்கும். ( தக்காளி.. நீ கை நாட்டா?).


5. நமக்கு செய்யப்படும் அதீத வசதிகள் நம்ம குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது


6. சிம்மே இல்லாத ஃபோனை வெச்சு சீன் போட்டாலும் பரவாயில்லை, பேட்டரியே இல்லாத ஃபோனை வெச்சு சீன் போடறியே?


7. என்னது? நீ குடிக்க மாட்டியா? இதுக்கு நம்பற மாதிரி ஒரு காரணம் சொல்லு


அப்பா என் மேல வெச்சிருக்கற நம்பிக்கை தான் நான் குடிக்காததுக்கு காரணம்..


8. பிசிராந்தையார் பிசிராந்தையார்னு

 2 பேரா?



ம்ஹூம், ஒருத்தர்தான்.....



9.  டீல நாட்டுச்சர்க்கரை போட்டுக்குடிச்சா நல்லாருக்கும், உடம்புக்கும் நல்லது..


10. அவ யார் கூப்பிட்டாலும் போவா .

 யோவ்!!!!!


நல்லது கெட்டது நடந்தா வீட்டுக்கு யார் கூப்பிட்டாலும் போவான்னேன்.


11. சொல்லாம போயிட்டானேன்னு ஃபீல் பண்ணக்கூடாது/..அதான்..

 ஆமா, இவர் மேல் லோகத்துக்கு போறப்பக்கூட எல்லாரையும் கூப்பிட்டு சொல்லிட்டுத்தான் போவாரு..


http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_78226435185.jpg
பாரதியார் சொன்னாரே நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை வேணும்னு
 அதை ஃபாலோ பண்றாங்களாம்
12. சாராயம் குடிச்சு செத்தவன் சமாதில சாராயம் வெச்சு படைக்கறாங்க, ஃபிகரால உயிரை விட்டவன் சமாதில அந்த ஃபிகரையா வெச்சு படைக்கறாங்க



13.  நான் ஏன் இப்போ பிராந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்னா .உன் மனசுல இருக்கற காதல்ங்கற மனப்பிராந்தியை அகற்றத்தான்


14. இந்த விஷயம் முகத்துக்கு முன்னால நின்னு மன்னிப்பு கேட்கற விஷயம் இல்லை.. முதுகுக்கு பின்னால நின்னு கூனிக்குறுகி மன்னிப்பு கேட்கற விஷயம்


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. சாதாரண கதையை வைத்துக்கொண்டு அதை 13 ரீல் இழுத்த தைரியம்.. தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்த நுணுக்கம்


2. ஹீரோ  ஹீரோயின் செலக்‌ஷன்.. காதல் காட்சிகளில் கண்ணியம்..




http://www.tamilnow.com/movies/gallery/kandathum-kanathathum/kandathum-kanathathum-6426.jpg


இயக்குநரிடம் காரசாரமாய் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. காதலையே இன்னும் வெளீல சொல்லாத ஒரு பயந்தாங்கொள்ளி காதலன் கில்மா புக்கை படிச்சுட்டு காதலியை மிஸ் யூஸ் பண்ண ட்ரை பண்ணுவானா?


2. காதலி அதாவது ஹீரோயின் முத முதலா ஹீரோ வீட்டுக்கு உள்ளே வர்றா.. நித்தியானந்தா ஆசிரம பெட்ரூமுக்குள்ள வர்ற மாதிரி பெப்பெரெப்பேன்னு வருவாளா?  அப்பா அம்மா வீட்ல இல்லைங்கற மேட்டர் அவளுக்கு தெரியாது.. அப்போ அவ என்ன பண்ணுவா? காலிங்க் பெல் அடிச்சுட்டோ, கதவை தட்டிட்டோ வருவா.. ஆனா ஹால், தாண்டி அவ பாட்டுக்கு உள்ளே வந்துடறாளே?


3. காதலியை பார்த்ததும் கில்மா புக்கை காதலன் ஏன் மறைக்கறான்? அவ தன்னை தப்பா நினைச்சுடக்கூடாதுன்னுதானே? அப்படி நினைக்கறவன் கட்டிப்பிடிச்சு ரேப் பண்ண மட்டும் ட்ரை பண்ணுவானா?

4. சரி, ஆனது ஆகிடுச்சு... பயங்கர கோபத்துல ஹீரோயின் வெளில கிளம்பறா.. போறவ தலைவிரி கோலமா, டிரஸ் எல்லாம் கலைஞ்ச போஸ்ல தெருவே வேடிக்கை பார்க்க அப்படியா போவா?வில்லன்கள் 10 பேரு துரத்தி வர்றாங்களா? காதலன் தானே? அதுவும் அவ முறைச்சதும் அவன் பம்மிக்கிட்டு தேமேன்னு சும்மா தான் நிக்கறான்.. நின்னு நிதானமா தன்னை சரி பண்ணிட்டுத்தானே வருவா?


5. கோவிச்சுக்கிட்டு போனவ  வேற ஊருக்கு போலாம், அல்லது அவனை டோட்டலா அவாய்டு பண்ணி இருக்கலாம், அதை விட்டுட்டு  அடிக்கடி அவனை மீட் பண்ணி உன்னை பார்க்கவே பிடிக்கலை, சாரின்னு அடிக்கடி சொல்லிட்டு இருக்காளே?


http://moviegalleri.net/wp-content/gallery/kandathum-kanathathum-movie-stills/kandathum_kanathathum_movie_stills_1895.jpg


6. இடைவேளைக்குப்பிறகு எப்படி கதையை நகர்த்தறதுன்னு தெரியாம திரு திருன்னு விழிக்கறீங்க.. ஹீரோ சோகப்பாட்டு, சரக்கு அடித்தல்னு செம போரா கதை நகருது..

7. இந்தக்காலத்துல எத்தனையோ தப்பு பண்ணிட்டு குற்ற உணர்ச்சியே இல்லாம வாழும் பலர் மத்தில ஜஸ்ட் கில்மா புக்கை படிச்சதாலும், அதனால உணர்ச்சி வசப்பட்டு காதலியை கட்டிப்பிடிசதாலும் ஒருத்தன் குற்ற உணர்ச்சில தற்கொலை செய்வது எல்லாம் ஓவர்


8. என் ஐடியா என்னான்னா ஹீரோயின் அவ வீட்ல தனியா இருக்கறப்ப பாத்ரூம்;ல குளிக்கறப்ப ஹீரோ எண்ட்டர் ஆகறார்,.. கட்டிப்பிடிக்கறார்னு சீன் வெச்சிருந்தா மேலே சொன்ன அத்தனை லாஜிக் மீறலும் பணால் ஆகி இருக்கும், எங்களுக்கும் ஒரு சீனாவது மிச்சம் ஆகி இருக்கும்..

9. க்ளைமாக்ஸ் மகா சொதப்பல்.. ஹீரோவை ஹீரோயின் ஏத்துக்கிட்டு மேரேஜ் பண்ணி இருக்கனும்.. அதை விட்டுட்டு அவனை தியாகி ஆக்கி ஹீரோயினை துரோகி ஆக்கியது ஓவரோ ஓவர்


10. ஹீரோவோட  ஃபிரண்ட் தலை எல்லாம் களைஞ்சு 2 கிலோ முடியோட கேவலமா இருக்கார்.. அவரை முன்னே பின்னே பழக்கம் இல்லாத  ஹீரோயின் அவரை நம்பி மிட் நைட்ல எப்படி ஆட்டோல கழுத்துல கைல 30 பவுன் நகையோட போவார்? அது கூட தேவலை.. அதே ஃபிரண்ட் அம்போன்னு ஹீரோயினை நீங்க தனியா மண்டபத்துக்கு போய்க்குங்கன்னு அனுப்பறார்.. ஆட்டோ டிரைவர் பாட்டுக்கு கடத்திட்டு போய்ட்டா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXbq8XlxN9RYhyphenhyphenoo-ktbjJgZYGVrXduwL6AUmw3rFYQezGyiIvtslZ1mxUSBTAo_ae9YmOazzLCNwAtQjI5cJHYPfR0cSH7zEG79j5Rm2iZsc0gtsDHWGHHPFswa1qLdMY7vFjls_rn30/s1600/Kandathum+Kanathathum+Movie+Stills+Photos+Kandathum+Kanathathum+New+Pictures.jpg


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 37


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - அய்யய்யோ!!!!


 ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்


டிஸ்கி -

பெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3

Saturday, April 07, 2012

அகதா கிறிஸ்டி - க்ரைம் ஸ்டோரி சிருஷ்டி - பட்டது திருஷ்டி

http://static.cinemarx.ro/poze/postere/filme/2004/Agatha-Christie-A-Life-in-Pictur...-117245-460.jpg

ஒரு நாவல் உண்மையாக நடக்கிறது

அதிர்ச்சியூட்டும் உண்மைக் கதை


துப்பறியும் நாவல்களை நிறைய எழுதி உலகப் புகழ் பெற்ற அகதா கிறிஸ்டி  வயது 81 -ல் அவருக்கு ஒரு பேரிடி; பெரிய ஷாக். ஆள் ஒரேயடியாக அசந்து உட்கார்ந்துவிட்டார்.
 அப்படி என்ன அதிர்ச்சி?
பத்து வருடங்களுக்கு முன் அகதா ஒரு மர்ம நாவல் எழுதினார். நாவலின் தலைப்பு: 'தி பேல் ஹார்ஸ்’.
அந்த நாவலில் கிறிஸ்டி வுட்நிட் என்று ஓர் இளைஞன் வருகிறான். வில்லன். அதற்கு முன்னால் பிரிட்டனில் யாருமே உபயோகித்து அறியாத 'தாலியம்என்னும் விஷத்தைக் கொடுத்து சில தொழிற்சாலைப் பணியாளர்களைக் கொல்லத் திட்டம் போடுகிறான். கொல்லவும் செய்கிறான்.
கிறிஸ்டி வுட்நிட் செய்த அதே காரியத்தை கிரகாம் யங் என்கிற இளைஞன் இப்போது நிஜமாகவே செய்துவிட்டான். அவனைப் போலவே சில தொழிலாளர்களைக் கொன்றான்; அவனைப் போலவே இவனும் 'தாலியம்விஷம்.
தான் கற்பனை செய்த விஷமே நிஜத்தில் இரண்டு உயிர்களைக் குடித்துவிட்டது என்பதைக் கேட்டால், யாருக்குத்தான் அதிர்ச்சியாக இராது?

http://www.wearysloth.com/Gallery/ActorsW/43180.gif

கிரகாம் யங்குக்கு இப்போது 24 வயது. சென்ற ஆண்டில் புகைப்படக் கருவிகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான் அவன். ஸ்டோர் கீப்பருக்கு உதவியாள் வேலை.
அவன் வேலையில் சேர்ந்த 11-வது வாரம் ராபர்ட் ஈகிள் என்கிற 60 வயது சக தொழிலாளி இறந்துபோனார்.
எப்படி, எதனால் இறந்தார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால், அந்த ஃபேக்டரியில் வேறு சில தொழிலாளர்களை வேறுவிதமான நோய் பீடித்தது. சிலர் தலையில் உள்ள ரோமங்கள் எல்லாம் உதிர்ந்தன; சிலருக்குத் தற்காலிகமாகக் கை கால் பிடிப்பும் வாதமும் ஏற்பட்டன; வேறு சிலர் வாந்தி எடுத்தார்கள்.
முதலில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.
ஆனால், சில வாரங்களுக்குப் பின், சென்ற நவம்பர் மாதத்தில் இன்னொரு தொழிலாளியும் புதிராக இறந்துபோகவே தொழிற்சாலை மிரண்டது.
அந்தக் கூட்டத்தில் எல்லாரும் அவரவர் கருத்தைத் தெரிவித்துப் பேசினதுபோல யங்கும் பேச வேண்டி வந்தது. யங் எழுந்து பேசினான். எப்படி? ஒரு சாதாரண ஃபேக்டரி தொழிலாளிக்குக் கனவில்கூடத் தெரிந்திருக்க முடியாத வைத்திய பரிபாஷைகளும், ரசாயனங்கள், விஷங்களைப் பற்றிய விவரங்களும் அவன் வாயில் இருந்து சரமாரியாக வந்தன.

யங்கின் 'வைத்திய ஞானப் பேச்சைக் கேட்டுத் தொழிலாளர்கள் எல்லாரும் ஆச்சர்யம் அடைந்தார்கள். ஆனால், ஒரே ஒரு மனிதர் மட்டும் சந்தேகம் அடைந்தார். காதும் காதும் வைத்தாற்போல போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டார்.
போலீஸ் ரகசியமான விசாரணையைத் தொடங்கியது. வெகு சீக்கிரத்திலேயே கிரகாம் யங்கின் ரகசிய அறையை அது கண்டுபிடித்துவிட்டது.


http://www.providings.com/Images/2007/DEC/Providings.com_44_20071225111849.jpg
அந்த அறையில், ஒரு மாதத்துக்கு ஒரு பெரிய மருந்துக் கடைக்குப் போதுமான அளவு 'தாலியம்பாட்டில்களிலும் டின்களிலும் இருந்தது. பாட்டில்கள் எல்லாம் மிக அழகாக வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. அவற்றுக்குக் கீழே இருந்த ரகசிய டிராயரில் யங் எழுதிவந்த டைரி ஒன்று கிடைத்தது.
'தாலியம் விஷத்தை மனிதர்கள் மீது பிரயோகித்தால் என்ன விளைவு ஏற்படும்?’ என்பதை யார் யார் மீதெல்லாம் எப்படி எப்படி, எப்போது பரிசோதித்துப் பார்த்தான் என்கிற விவரங்களை எல்லாம் யங் அந்த டைரியில் குறித்திருந்தான்.
அந்த டைரியில் தன் நண்பர்களை எல்லாம் அவர்களுடைய பெயர்களின் முதல் எழுத்தைக்கொண்டு யங் குறிப்பிட்டு இருந்தான்.
தன்னுடைய 14 வயதில் விஷத்தைக் கொடுத்து மூன்று பேரை மேலுலகுக்கு அனுப்பப் பார்த்து இருக்கிறான் யங். அந்த மூன்று பேரும் வேறு யாரும் இல்லை... அவனுடைய தந்தை, சகோதரி மற்றும் பள்ளியில் உடன் படித்த ஒரு மாணவன்.
சிறு வயதில் இது நிகழ்ந்ததனால் யங்குக்கு 14 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து, மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். வெளியில் வந்த பின் அவன் நடத்திய கூத்துதான், போட்டோ தொழிற்சாலையில் அடுத்தடுத்துச் செய்த கொலைகள்.
யங்குக்கு இப்போது கிடைத்திருப்பது, ஆயுள் தண்டனை!இந்தப்பகுதி விகடன் பொக்கிஷம் பழைய அபூர்வ  கலெக்‌ஷன்