Showing posts with label INTERVIEW. Show all posts
Showing posts with label INTERVIEW. Show all posts

Thursday, July 05, 2012

ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் பம்முவது ஏன்? ஓ பக்கங்கள் ஞானி பேட்டி @ சூர்யக்கதிர்

http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_11835443974.jpg1. ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசையெல்லாம் உங்களுக்கு கிடையாதா?


இதில் நான் கலாம் கட்சி. எல்லா கட்சிகளும் சேர்ந்து வந்து என்னைப்
போட்டியின்றித் தேர்ந்தெடுத்தால் குடியரசுத் தலைவராவதில் எனக்கு ஒன்றும்
ஆட்சேபணையில்லை.



2. அப்பாவிகளிடம் நில அபகரிப்பு செய்ததன் விளைவே தி.மு.க. மாஜியினர்
ஜெயிலுக்கு போயுள்ளனர். ஆனால், குற்றம் செய்த அமைச்சர்களை கண்டிக்காமல்
அவர்களுக்கு ஆதரவாக அப்பாவி தி.மு.க. தொண்டர்களை சிறை நிரப்பும்
போராட்டம் என்ற பெயரில் சிறைக்கு அனுப்ப ஆசைப்படுகிறாரே கருணாநிதி?



ஜெயிலுக்குப் போயிருப்பவர்களின் நிதி ஆதாரத்தில்தானே கட்சி ஒவ்வொரு
மாவட்டத்திலும் நடக்கிறது ? அவர்களைக் காப்பாற்றினால்தானே கட்சியைக்
காப்பாற்றமுடியும் ? அப்பாவி தொண்டர்களால் கட்சிக்கு பணம் கொடுத்து
உதவமுடியாது அல்லவா. எனவே அவர்களால் முடிந்தது உடல் உழைப்பு. அதனால்
சிறைக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள்.



3. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி தான் காரணம் என்று குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்
பி.ஏ. சங்மா குற்றம் சாட்டியுள்ளாரே?



தனி நபர் யாரையும் பொறுப்பாக்க முடியாது. மொத்த அரசாங்கமும் ஆளும்
கட்சியும் அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளுமே பொறுப்பு.



4. பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க கிராமம் கிராமமாக மக்களை
திரட்டுவேன் என்கிறாரே வைகோ?



செய்ய முடிந்தால் நல்லதுதான்.ஆனால் கிராமம் கிராமமாக மக்கள் திரண்டு
வந்து அமைதியாகப் போராடியும் அணு உலை விஷயத்தில் அரசுகள் காட்டும்
பிடிவாதத்தைப் பார்க்கும்போது, அணை விஷயத்திலும் அதேதானே நடக்கும் என்ற
கவலை எழுகிறது.



5. வெள்ளாட்டின் தலையை காட்டி ஓநாய் கறி விற்பதில் பிரணாப் கெட்டிக்காரர்
என்கிறாரே நாஞ்சில் சம்பத்?


பிரணாப் மட்டுமல்ல, எல்லா அரசியல்வாதிகளும் அந்தக் கலையில் தேர்ந்தவர்கள்தான்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW3cOnnmWSo-6pSGMqmaUQsuvP3dv6x7J3_dXh0Sn7qP9b0OIZ5QueU7ci7M-v-9xtEHiM_N5aUUuR5WNh_LViXjgemKMZN78LEJ4hpDmTg7daGlION4DO9zXqjJDUqyqLiTm_-nR7BLY/s1600/0.jpg


6. கலகம் – கழகம் என்ன வித்தியாசம் சார் ?


கழகத்துக்குள் கலகம் நடந்தால் இன்னொரு கழகம் பிறக்கும் என்பது வரலாறு.
கழகம் மக்களுக்கு எதிராகக் கலகம் செய்தால் ஆட்சியை இழக்கும் என்பதும்
வரலாறு.



7. மத்தியில் கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று
கருணாநிதி கூறியிருக்கிறாரே?


அவர் சொல்வது முழுக்க முழுக்க சரிதான். இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது?
இந்தக் கூட்டணிகள் எல்லாம் என்ன கொள்கைக் கூட்டணிகளா, இல்லையே? சந்தர்ப்ப
சூழ்நிலைக்கேற்ப அவரவர் சுயநலம் சார்ந்து அணி மாறுவதுதானே வழக்கம் ?
இதற்கெல்லாம் கோபப்படலாம், வருத்தப்படலாம். ஆச்சரியப்படமுடியாது.



8. குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஓராண்டில் தமது வீட்டில் 171
சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி இருக்கிறாராமே?


பொதுவாக நம் நாட்டு அரசியல் நிர்வாக முறையில் எம்.எல்.ஏ தொடங்கி
ஜனாதிபதி வரை எல்லா பதவிகளிலும் இருப்பவர்கள் வீட்டில் அவர்கள் குடும்பம்
மட்டுமே இருப்பதில்லை. நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு பெரும்படையே
அங்கே பொதுச் செலவில் வாழ்க்கை நடத்துகிறது. சென்னையில் எம்.எல்.ஏ
ஹாஸ்டலுக்குப் போய் பாருங்கள்.

எம்.எல்.ஏவை சந்திக்கமுடியாதே தவிர, அவர்
ஊரிலிருந்து வந்து தங்கியிருக்கும் சுற்றம் நட்பு எல்லாரையும்
சந்தித்துவிடலாம். இதற்கு மற்றபடி நேர்மையான அறிஞரான அன்சாரியும் விதிவிலக்கல்ல என்று
தெரிகிறது. அப்துல் கலாம் போல திருமணமே ஆகாதவர்கள் மட்டும்தான் எந்தப்
பதவியிலும் இருக்கலாம் என்று விதி போட முடியாது. அப்படிப் போட்டால் கூட,
அவரைக் கவனித்துக் கொள்கிறேன் என்று ஒரு கூட்டம் வந்து சேரும்.



9. குடியரசு தேர்தலில் பிரணாப் முகர்ஜியின் வெற்றி உறுதி ஆகி விட்ட நிலையில்
சங்மா போட்டியிடுவது அவசியமா ?


போட்டியின்றி பிரணாப் ஜெயிக்கக்கூடாது என்று அரசியல்ரீதியாக எதிர் அணி
நினைக்கும்போது அது சரிதான். ஜனநாயகத்தில் போட்டி இருந்தால் அது ஒன்றும்
தவறல்ல.


10. சங்மா போட்டியிடுவதால், பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாயப்பு நன்றாக
உள்ளது என்கிறாரே கருணாநிதி?



யார் போட்டியிட்டாலும் பிரணாபின் வாய்ப்பு மாறாது. கலாமே நின்றிருந்தால்
கூட பிரணாபுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.


http://www.vikatan.com/news/images/muthu_toon(2).jpg


11. தமிழகத்தில் தற்கொலைகள் அதிகம் என வந்துள்ள செய்தி குறித்து ?


டாஸ்மாக்கில் தினம் குடித்து ஸ்லோவாக தற்கொலை செய்வோரின் என்ணிக்கையையும்
சேர்த்தா, சேர்க்காமலா?



12. மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் திடீர் தீவிபத்து
ஏற்பட்டது சதி செயல் என கூறப் படுவது குறித்து?


இந்தியாவில் அரசு அலுவலகங்களிலும் தனியார் கம்பெனிகளின் ஆலைகளிலும்
தீவிபத்து நடந்தால் அது விபத்து என்று நம்புவதற்கான வாய்ப்பு பொதுவாகக்
குறைவுதான். சென்னையில் மூர்மார்க்கெட் எரிந்ததே, அந்த இடம்/நிலம்
ரயில்வேக்கு தேவைப்பட்டது என்பதாலும், அதை தர மார்க்கெட் வியாபாரிகள்
மறுத்துவந்ததினாலும்தான் என்று அப்போதே பேசப்பட்டது.



13. தேசத்திற்காக விளையாட வேண்டிய பயஸ் – பூபதி தனி நபர் வெறுப்பை காட்டுவது
முறைதானா சார்?


டென்னிஸ் தனி நபர் விளையாட்டு. ஐபிஎல் கிரிக்கெட்டுக்குப் பிறகு தேசம்,
மாநிலம் என்பதற்கெல்லாம் அர்த்தம் கிடையாது.



14. தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிப் பொருளாளர்
மு.க.ஸ்டாலின் தனது தந்தையைப் போலவே கருப்புக் கண்ணாடியுடன் வந்தது
அனைவரையும் சற்றே சிந்திக்க வைத்து யோசிக்க வைத்ததாமே?


ஸ்டாலின் அவர் அப்பா போல தோற்றம் காட்டினால் பிரச்சினை இல்லை. அவரைப்
போலவே அரசியல் செய்யாமல் இருந்தால் போதும்.



15. ஜனாதிபதி தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கும் என்று விஜயகாந்த்
கூறியிருப்பதன் உள் அர்த்தம் என்ன?


2014ல் எந்த அணியுடன் போவது என்று இன்னும் முடிவு செய்யமுடியாமல்
இருப்பதால் இருவரையும் விரோதிக்க விரும்பாமல் இருக்கலாம்.


http://www.vikatan.com/av/2012/07/ndqyqy/images/p7b.jpg


16. தி.மு.க. தலைமை செயற்குழுக் கூட்டத்தை அழகிரி புறக்கணித்துவிட்டாரே?

செயற்குழுவில் என்ன நடந்தால் என்ன? கடைசியில் தனக்கு சாதகமாக முடிவுகளை மாற்றவும் வளைக்கவும் வேறு அழுத்தங்கள் தரமுடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கலாமே.



17. அடிக்கடி நீங்கள் ஸ்டாலினை புகழ்கிறீர்கள்.. ஸ்டாலினை பிடித்த அளவிற்கு
உங்களுக்கு அழகிரியை பிடிக்காமல் போனது ஏன்?


ஸ்டாலினை நான் புகழ்வதில்லை. அழகிரியுடன் ஒப்பிடும்போது, அவர்
படிப்படியாக அரசியலில் வேலை செய்து மேலே வந்தவர் என்பதை நான் அவருக்கு
சாதகமன அம்சமாகப் பார்க்கிறேன் அவ்வளவுதான்.



18. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன்,
சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கை ரத்து செய்வதாக பிரணாப் உறுதியளித்த
பிறகு ஆதரியுங்களேன் என தி.மு.க.வுக்கு சீமான் அட்வைஸ் செய்திருக்கிறாரே?


நல்ல அட்வைஸ்தான். பிரணாப் ஆதரவு கேட்டு வந்து சந்திக்கும்போது இதை
கலைஞர் கருணாநிதி வலியுறுத்தலாம். பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக இந்த
உத்தரவைப் போட்டால், தமிழக மக்களுக்கு பிரனாப் மீது பெரு மதிப்பு
ஏற்படும்.


நன்றி - சூரிய கதிர் 1.7.2012


நன்றி - ஞானி இணைய தளம்


http://www.vikatan.com/news/images/p8(3).jpg

Monday, June 11, 2012

ஸ்டாலின் ,அழகிரி யை விட கனிமொழியே கரெக்ட் - இளங்கோவனின் அதிரடி பேட்டி

ஸ்டாலின் அல்ல... அழகிரி அல்ல... கனிமொழியே கரெக்ட்!

இளங்கோவனின் அதிரடி


''பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு எதிரா போராட வந்த இடத்துல, 'மத்திய அரசின் கூட்டணியில இருந்து விலகுவோம்’னு முழங்குறாரு. அடுத்த அரை மணி நேரத்துல, 'கூட்டணியில் இருந்து நான் விலகுவேன்னு சொல்லவே இல்லை’ன்றாரு. அவர் வரவர ரொம்பச் சரியில்லைங்க... ஏன் இப்படில்லாம் பண்றாரு?'' - பேட்டி எடுக்கச் சென்ற என்னை கருணாநிதி குறித்த விசாரணை யுடன் வரவேற்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.



 ''சமாளிக்காதீங்க... ஆயிரம் சொன்னாலும் பெட்ரோல் விலையேற்றத்துக்கு மத்திய அரசின் கொள்கைகள்தானே காரணம், இது நியாயமா?''



''இல்லவே இல்லை... அது பொருளாதாரத் தெளிவின்மை இல்லாதவர்கள் சொல்ற கருத்து. பெட்ரோலை இறக்குமதி செஞ்சு, இந்தியாவில் விற்கும் சில தனியார் கம்பெனிகள்தான் அதன் விலையையும் நிர்ணயம் செய்கின்றன. இவ்வளவு ஏன், 'மத்தியில் இருப்பது ஆள்வதற்கு லாயக்கற்ற கட்சி’னு குறை சொல்றாங்களே ஜெயலலிதா, அவங்க பெட்ரோல் விலையில் மாநில அரசின் 27 சதவிகித வரியைக் குறைக்க வேண்டியதுதானே? 10 சதவிகிதம் குறைச்சாலே, பழைய விலைக்கு பெட்ரோல் கொடுக்க முடியுமே. மற்ற மாநிலங்களில் அப்படி வரி குறைச்சு இருக்காங்களே... அதை ஜெயலலிதாவும் செஞ்சிருக்கலாமே. மத்திய அரசைக் குறை சொல்றதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா இதுவும் பேசுவார்... இன்னமும் பேசுவார்!''



''நேர்மையாகச் சொல்லுங்கள்... மத்திய காங்கிரஸ் அரசின் கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் எந்தக் குறையும் இல்லையா?''


''மத்திய அரசின் செயல்பாடு இப்போது அதிக அளவிலான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்குங்கிறதை ஒப்புக்கிறேன். குறிப்பா, பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவு. அதை மத்திய அரசும் உணர்ந்து இருக்கு.


 மாநில அரசைப் பத்தி நீங்க கேட்கிறதுக்கு முன்னாடியே சொல்றேன். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பத்திரிகைகளுக்குப் பக்கம் பக்கமாக விளம்பரங்களைக் கொடுத்தது மட்டுமே ஜெயலலிதா அரசின் கடந்த ஒரு வருட ஆட்சியின் அசுர சாதனை. இன்னொரு சாதனை, டாஸ்மாக் விற்பனையை அதிகரிச்சு இருக்கிறார். மக்களுக்கு செஞ்ச நல்லதைவிட, அவர்களின் சுமையை மேலும் அதிகரிச்சு இருக்கிறது ஜெயலலிதாவோட அரசு.''


''ஜாக்கிரதையா உங்கள் நண்பர் விஜயகாந்தைப் பற்றிக் கருத்து சொல்லாமல் தவிர்க்கிறீர்களே?''


''விஜயகாந்த் வளர வேண்டிய ஒரு நல்ல அரசியல்வாதி. தமிழகத்தில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறார். தன்னோட சக்தியை அவர் நல்ல பாதைக்குக் கொண்டுபோய் பயன்படுத்தணும். விஜயகாந்திடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். அவர் நல்லா வருவார்னு நம்பிக்கை எனக்கு இருக்கு!''


''மதுரை ஆதீன சர்ச்சைகளைக் கவனிக்கிறீங்களா?''


''பொதுவாவே, இந்தச் சாமியார்கள் மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. சாமியார்கள் பெரும்பாலும் மக்களை ஏமாத்துறவங்களாதான் இருக்காங்க. அவங்களை நம்பி ஏமாந்துபோகாமல் மக்கள்தான் உஷாரா இருக்கணும்!''


'' 'தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிப்போம்’னு பா.ஜ.க. சொல்லி இருக்கிறதே?''


''பா.ஜ.க. மட்டுமா... ராமதாஸ், திருமாவளவன் எல்லாம்கூடத்தான் சொல்றாங்க. ஒவ்வொரு கட்சிக்கும் அது ஒரு கனவு. தூக்கத்தில் இருந்து முழிக்கிறப்ப, 'தமிழகத் தில் ஆட்சியைப் பிடிப்போம்’னு சொல்றதை ஒரு வழக்கமா வெச்சிருக்காங்க. ஆனா, ஒரு விஷயத்தை எல்லோரும் தெளிவாப் புரிஞ்சுக்கணும்.


 தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் இந்த மூணு கட்சிகளும்தான் பெரிய கட்சிகள். இதுல ஒண்ணுதான் தமிழகத்தை ஆள முடியும். வேற யாரும் தலை கீழா நின்னாலும் கதைக்கு ஆகாது!''



''தி.மு.க-வில் கருணாநிதிக்குப் பிறகு அழகிரியா... ஸ்டாலினா? உங்கள் சாய்ஸ் யார்?''



''அவங்க ரெண்டு பேருமே அதுக் குச் சரியான ஆள் கிடையாது. கனிமொழிதான் அந்தப் பதவிக்குத் தகுதியானவங்க. தலைமைப் பொறுப்பை ஏற்கிற எல்லாத் தகுதிகளும் கனிமொழிகிட்ட இருக்கு. பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் தரணும்னு முழங்கும் கலைஞர், அவர் காலத்துலயே கனிமொழியை தி.மு.க-வின் தலைவர் ஆக்கணும். அப்போதுதான் தி.மு.க-வின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்!''



''சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றனவே..?''



'' 'என் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்’ என்று பிரதமர் பகிரங்கமாகவே அறிவிச்சுட்டாரே.   ஊழல் புகார் சுமத்திய அண்ணா ஹஜாரே அதை நிரூபிக்க வேண்டியதுதானே? சிதம்பரமோ, பிரதமரோ யார் தப்பு செய்திருந்தாலும் ஆதாரத்தோடு அதை நிரூபிக்கட்டும். அதன் பிறகும் நடவடிக்கை இல்லையென்றால், அவர்கள் சொல்லும் எதையும் கேட்டுக்கொள்ள நான் தயார்!''



''சமீபத்தில் என்ன படம் பார்த்தீங்க?''



'' 'பெரியார்’ படத்துக்குப் பிறகு நான் தியேட்டர் போய்ப் பார்த்த படம் 'கர்ணன்’. அந்தக் காலத்துல டூரிங் டாக்கீஸில் சிவாஜி படம் பார்த்த ஞாபகங்கள் எல்லாம் வந்து போச்சு. அந்தப் படத்தைப் போல நல்ல கதையம்சத்துடன் வெளியான பழைய படங்கள் எல்லாத்தையும் தூசு தட்டி புதுப் பொலிவோடு கொண்டு வந்தால் நல்லா இருக்கும்!''


Thursday, June 07, 2012

'துப்பாக்கி’! - ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி @ விகடன்

http://mimg.sulekha.com/tamil/thuppaki/stills/thuppaki-05.jpg 

''விஜய்க்கு இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் கிடையாது. ஏன்னா, படமே செம பஞ்ச்!'' - ஆம்,  ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடிகளின் அடுத்த வெடி... 'துப்பாக்கி’!




1. ''விஜய் ஒரு போலீஸ் அதிகாரி, என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்னு ஏகப்பட்ட செய்திகள் அலையடிக் குதே... எது உண்மை?''



''என்னங்க இது... க்ரோர்பதி ஷோ மாதிரி ஸ்ரெய்ட்டா பதில் கேட்கிறீங்க. இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர்... டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை.


 ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும் பேசிப்போம். 


ஏதேதோ காரணங்களால், ரெண்டு பேருமே பிஸியா இருந்தோம். இப்ப திடீர்னு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாம 'துப்பாக்கி’ யதேச்சையா முடிவாச்சு. சும்மா அவுட் லைன் மட்டும்தான் சொன்னேன். ஷூட்டிங் போறதுக்கு நாலு நாள் முன்னாடிதான் ஃபுல் ஸ்க்ரிப்ட் சொன்னேன். ஆகஸ்ட் 15-ல் துப்பாக்கி வெடிக்கும்!''





 
2. ''இந்தி 'கஜினி, 'துப்பாக்கி’னு கிட்டத்தட்ட மும்பைவாசியாவே ஆகிட்டீங்களே?''



''இந்தி 'கஜினி’ சமயமே மும்பையோட சந்துபொந்து எல்லாம் அத்துப்படி. வழக்கமா, 'மும்பையில் எடுத்தோம்’னு சொல்ற நிறையத் தமிழ்ப் படங்கள் அங்கே நாலஞ்சு நாள் ஷூட் பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும் தமிழ்நாட்ல ஷூட் பண்ணித்தான் மேட்ச் பண்ணுவாங்க. வட இந்தியக் குடும்பம் வேணும்னு சொன்னா, சௌகார்பேட்டையில இருந்து 20 பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க. 'துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருந்தேன்.




 காஸ்ட்யூம், வேலைக்காரர், டிரைவர், செட் பிராப்பர்ட்டினு எல்லாமே மும்பைதான். தாஜ் ஹோட்டல் பின்னணியில் நடுக் கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15 நாள் ஷூட் பண்ணோம். கடல்ல இருந்து பார்க்க, மும்பை ரொம்பப் புதுசா இருந்தது. மும்பைக்காரங்களே பார்க்காத மும்பையை இந்தப் படத்தில் பார்க்கலாம்.''



3. ''அஜீத், விஜய்னு ரெண்டு பேரையும் வெச்சுப் படம் பண்ணி இருக்கீங்க. ஒரு டைரக்டரா ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்குறீங்க?''



''இப்பக்கூட என்னை பாலிவுட்ல பார்த்தா, 'என்னது... நீங்க டைரக்டரா?’னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க. இப்பவே இப்படின்னா,  10 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன். ஆனா, அப்பவே என்னை நம்பி 'தீனா’ வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். 


அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவர் மேல் எனக்கு ரொம்பப் பெரிய மரியாதை இருக்கு. ஆனா, நான் வளர்ந்து இந்திப் படம் வரைக்கும் இயக்கிய பிறகு, இப்போ ஏழாவதாப் பண்ற படம்தான் 'துப்பாக்கி’. விஜய் இப்போ என் நண்பர். அவர் யார்கிட்டயும் சினிமாவைத் தாண்டி எதுவும் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச்டு ஆகிட்டோம். 


 இப்பவும் அஜீத், விஜய்... ரெண்டு பேரையும் சந்திச்சுட்டுத்தான் இருக்கேன். எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டலடிச்சுக்கிறாங்க. ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தரைப்பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசிப்பாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல நட்பு இருக்கு. அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்!''

http://www.actorvijay.net/phpThumb/user_image/Thuppakki%20new%20still.jpg



'4. 'விஜய் சுருட்டு பிடிக்கிற 'துப்பாக்கி’ போஸ்டர்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பு எதிர்ப்புத் தெரிவிச்சு இருந்தாங்களே?''


''என் படங்கள்ல வில்லன்கூட ஸ்மோக் பண்ண மாட்டார். பள்ளிக்கூடப் பெண்கள் காதலிக்க மாட்டாங்க. இதெல்லாம் எனக்கு நானே வெச்சுக்கிட்ட கட்டுப்பாடுகள். ஆனா, 'துப்பாக்கி’யில் அந்த சுருட்டு ஷாட் தவிர்க்கவே முடியலை. ஆனா, பப்ளிசிட்டிக்கு அதை அனுப்பிச்ச பிறகு எனக்கே ரொம்ப உறுத்தலா இருந்தது. அதைத் தூக்கிடலாம்னு நானே யோசிச்சுட்டு இருந்தப்ப, அந்த எதிர்ப்பு வந்தது. நாங்களே அதை நீக்கிட்டோம்.


 யாரோட வற்புறுத்தலுக்கும் பயந்து அதை எடுக்கலை. ஆனா, இதை எல்லாம் அரசியல் ஆக்குறதுல எனக்கு உடன்பாடே கிடையாது. 'ஸ்மோக் பண்ணக் கூடாது’ங்கிற பொறுப்பு இங்கே எல்லாருக்குமே வரணும். ஆனா, இவ்வளவு பேசுறவங்க, போராடுறவங்க சிகரெட் கம்பெனி முன்னே நின்னு, அதை நிரந்தரமா மூடச் சொல்லிப் போரா டலாமே? 'எந்தக் கட்சி தன் ஆட்சி யில் சிகரெட்டைத் தடை பண்ணு தோ, அடுத்த தேர்தல்ல அந்தக் கட்சியோடதான் கூட்டணி’னு சொல்லலாமே?  அப்படி எல்லாம் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஆனா, ஒரு போஸ்டர் ஒட்டினா கோபப்படுறாங்க. இதுதான் இங்கே ஆச்சர்யம்!''



5. ''விஜய் இந்தி 'ரௌடி ரத்தோர்’ படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கார். நீங்க ளும் அடுத்து இந்திப் படம்தான் இயக்கப் போறீங்க... ரெண்டு பேரும் இந்தியிலும் இணைவீங்களா?''


''அந்த அளவுக்கு இன்னும் யோசிக்கலை. இப்ப எங்க ரெண்டு பேர் கவனமும் 'துப்பாக்கி’ மேல் மட்டும்தான். மதன் கார்க்கி எழுதுன ஒரு பாட்டை விஜய் சாரே பாடிஇருக்கார். 'நான் பாடியிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க’னு சொன்னார். இருந்தாலும் சொல்லிட்டேன். 



ஆறு வருஷத்துக்குப் பிறகு பாடியிருக்கார். ஆல்பத்துல அது நிச்சயம் ஹைலைட். 'துப்பாக்கி’ ஷூட்டிங் சமயம்தான், 'சார்... பிரபுதேவா அவர் படத்துல ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டார். போயிட்டு வரவா?’னு கேட்டார். 'தாராளமா! அதே மாதிரி நாளைக்கு என் இந்திப் படத்துக்குக் கூப்பிட்டாலும் வருவீங்கதானே’னு ஜாலியா கேட்டேன். 'ஓ, அப்படி ஒண்ணு இருக்கா. நீங்க கூப்பிட்டாலும் வருவேன்’னு சொல்லியிருக்கார். இதுல மேட்டர் என்னன்னா... என் அடுத்த இந்திப் படம் 'துப்பாக்கி’ ரீ-மேக். அக்ஷய் குமார் நடிக் கிறார். அதனால, விஜய் எனக்குக் கொடுத்த அந்த சாய்ஸைப் பயன்படுத்திக்க ஏகமா வாய்ப்பு இருக்கு!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqS__HpzC3gA3Wy79dhr5bU96Xk09TRpC_KnYpBee4YNb2EyMZSiAIupcuOxatKIyYrZFQVrxHGNdJ81yDwhLNKjO7Eoi1PlMw88fHPpTiD3I0lfIh0S6HuvMTgBGVhygiUnWduWEJQFA/s1600/Kajal-Agarwal-in-Tupakki-Movie-Most-Inside-1.jpg



'6. ' 'ரமணா’வுக்குப் பிறகுதான் விஜயகாந்த் தீவிர அரசியலுக்கு வந்தார். விஜய்கிட்டேயும் அரசியல் ஆர்வம் இருக்கு. அதுக்கேத்த தோட்டா 'துப்பாக்கி’யில் இருக்கா?''


''ஹீரோக்களின் அரசியல் ஆசைக்குப் படம் பண்றது என் வேலை இல்லை. என் கதைக்கு எது தேவையோ, அதை மட்டும்தான் பண்ணுவேன். ஹீரோவுக்கு அந்தப் படம் ஹிட்டாகணும், ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகணும். அவ்வளவுதான். 'ரமணா’வுக்குப் பிறகு விஜயகாந்த் சார் அரசியலுக்கு வந்ததும், அதே 'ரமணா’ தெலுங்கு ரீ-மேக் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி சார் அரசியல்ல நுழைஞ்சதும் நானே எதிர்பார்க்காம நடந்தது!''


 http://www.trendymovies.com/wp-content/gallery/tamanna-latest-photo-gallery/tamanna_latest_photo_gallery-81.jpg?9d7bd4

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதாபோல ஏன் முயற்சிக்கலை?-சந்தானம் பேட்டி @ விகடன்

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Santhanam/Santhanam-0011.jpg 

1''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 

 
 ''ஏங்க... அவர் என்ன கொத்தவால் சாவடி மார்க்கெட்டா... இல்லை நான்என்ன கோயம்பேடு மார்க்கெட்டா? யாராலயும் யார் மார்க்கெட்டும் போகாதுங்க. சினிமா வுல யாரும் யாரையும் தீர்மானிக்க முடியாது. இப்ப நான் ஹிட்டடிச்சா அதுக்கு யாரெல் லாம், எதெல்லாம் காரணமோ... அதுவேதான் நான் சொதப்பினதுக்கு ஒரு வகையில கார ணமா இருக்கும். புல்லரம்பாக்கம் பிரதர், ஆமா... அவருக்கு எங்கே மார்க்கெட் போச்சு? அவர் இப்பவும் ஸ்க்ரீன்ல வந்தா... ஆடியன்ஸ் அலறுவாங்களே!''



2. ''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


'' 'ஓகே... ஓகே’ படத்துல ஊர்  உலகமே கேட்கிற மாதிரி சொல்லிட்டேனே... 'எந்த ஒயின்ஷாப்லயும் உங்க பிராண்ட் சில்லுனு கிடைக்குறதில்லை’னு. அதே பிராண்ட்தான் தோணி!''



3. ''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு. ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட்ஸ் சொல்லுங்களேன்?'

'
''ஹன்சிகா, தமன்னா எல்லாருமே செம க்யூட். அவங்க ஸ்பாட்ல என்ன வார்த்தை சொன்னாலும் நான் அதைரிப்பீட் அடிச் சுட்டே இருப்பேன். இப்படியே கலாய்ச்சுட்டே இருக்கும்போது கோபம் வந்து கண்டபடி திட்டுவாங்க. அதுல இருந்து நாலு வார்த்தை யைப் பிடிச்சு, படத்துல அந்த வார்த்தையை வெச்சு அவங்களையே கலாய்ப்போம். எப்படி நம்ம தொழில் ரகசியம்?


அவங்களுக்கு டயலாக் வருதோ இல்லையோ, ஆனா ஃபேஸ் எக்ஸ்பிரஷன் பயங்கரமா இருக்கும். 'அவர் வீட்ல இல்லை. வெளியே போயிருக்கார்’. இதுதான் டயலாக். ஆனா, 'அங்கே வீடே இல்லை. பல வருஷமா அங்க ஆள் நடமாட்டமே இல்லை’ங்கிற அளவுக்கு அதுக்கு எக்ஸ்பிரஷன் கொடுப்பாங்க. நாம புரிஞ்சு நடிக்கிறதைவிட, அவங்க புரியாம நடிக்கிறதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். அதுதான் எல்லாருக்கும் ப்ளஸ் பாயின்ட்!''



3. ''இன்னமும் சின்னத் திரை நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?'

'
''பெருசு, சிறுசுங்கிறது எல்லாம் ஸ்க்ரீன் அளவுல மட்டும்தான். மத்தபடி ஃப்ரெண்ட்ஷிப் எப்பவும் டபுள் எக்செல் சைஸ்தான். 'லொள்ளு சபா டீம்’ எப்பவும் என்கூடத்தான் இருப்பாங்க. இருக்காங்க! சுவாமிநாதன், மனோகர்னு லொள்ளு சபா டீம்ல பலரும் என்கூட சினிமால நடிச்சுட்டுத்தான் இருக்காங்க. அடிக்கடி சந்திச்சு மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்குவோம். ஜீவா இப்ப 'மாப்பிள்ளை விநாயகர்’ங்கிற படத்துல ஹீரோ. அதுல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணித் தா மச்சான்னு கேட்டான். அதுல நடிக்கிறேன். பாலாஜி அண்ணன், மாறன் அண்ணன்னு எங்க டீம் எல்லாருமே அடிக்கடி சந்திச்சுப்போம். பார்ட்டி, ஃபங்ஷன்னு வெளியே போனா, இவங்களோட போய் மொத்தமா கலாய்ச்சுக் கழுவிக் கழுவி ஊத்திட்டு வந்துருவேன்!''  




4  ''உங்க ப்ளஸ், மைனஸ் என்ன?''   


''ரெண்டுமே என் வாய்தான்!

சில நேரம் டைமிங்காப் பேசி ஸ்கோர் பண்ணிடுவேன். சில நேரம் ஓவராப் பேசி கோட்டை விட்டுருவேன். ஒரு டைரக்டர் நம்மகிட்ட வந்து, 'புதுமுகங்களை வெச்சுப் படம் பண்றோம். நீங்க நடிச்சா பப்ளிசிட்டிக்கு உதவியா இருக்கும்’னு என் கேரக்டர்பத்திச் சொன்னார். 'நல்ல விஷயமா இருக்கே... பண்ணிக் கொடுக்கலாம்’னு சம்மதிச்சேன்.

 சம்பளம் பேச தயாரிப்பாளர் வந்தார். லோ பட்ஜெட் படம், புதுமுகங்கள் எல்லாத்தையும் மனசுல வெச்சுக்கிட்டு என் வழக்கமான சம்பளத்தைவிட ரொம்பக் குறைச்சு சொன் னேன். அவர் அதுக்கே டென்ஷனாகி, 'என்ன சார் இவ்வளவு சம்பளம் கேட்கிறீங்க? சின்னப் படம் சார் இது’னு கொதிக்க ஆரம்பிச்சுட்டார். 'சின்னப் படம்னா எவ்ளோ... அரை மணி நேரம்தான் எடுக்குறீங்களா?’னு கலாய்ச்சுவிட்டுட்டேன். அவர் டென்ஷன் ஆகிக் கிளம்பிட்டார். இப்படித்தான் நம்ம வாய் எல்லாத்துக்கும் கவுன்டர் அடிக்கும்!''




5. ''உண்மையைச் சொல்லுங்க சந்தானம்... உங்களுக்குப் பிடிச்ச தேன்ன்ன் அடை, ஜாங்கிரி, ஜிலேபி... யாரு?'' 


''பேர் மட்டும் சொல்ல மாட்டேன் பரவாயில்லையா?


இப்படி நான் சொல்லிட்டா, இதுதான் நீங்க என்கிட்ட கேட்ட முதல் கேள்வியா இருக்கும். ஆனா, நான் கொடுக்கிற கடை சிப் பதிலா இருக்கும். அதோட என் வீட்டுல என்னை ஃபினிஷ் பண்ணிரு வாங்க!''



6. ''காதல்ல பல்பு வாங்கிய அனுபவம்?''   


''பாலிடெக்னிக் படிக்கும்போது ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதி, சாக் லேட் பின் பண்ணிக் கொடுத்தேன். அவ சாக்லேட்டை மட்டும் பிரிச்சுச் சாப்பிட்டுட்டு லெட்டரைத் திரும்பக் கொடுத்துட்டுப் போய்ட்டா. சரியான தீனிப் பண்டாரமா இருப்பா போலனு நெக்ஸ்ட் டைம் வெறும் லெட்டர் மட்டும் கொடுத்தேன். அதைப் படிச்சுட்டு இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொடுத்துட்டுப் போய்ட்டா.

 ரொம்ப அவமானமாயிருச்சு. முக்கா முக்கா மூணாவது டைமா தைரி யத்தை வரவெச்சு நேரடியாவே போய்சொல் லிட்டேன். என்னைப் பார்த்தா அவளுக்கு ரொம்பக் கேவலாமத் தோணியிருக்கணும் போல. பகபகனு சிரிச்சுட்டுப் போய்ட்டா. அப்படியே அவளை மறந்துட்டு, அடுத்த பொண்ணு மேல கான்சன்ட்ரேஷன் பண்ண ஆரம்பிச்சிட்டேன்!''



7. ''சந்தானம்... சிறு குறிப்பு வரைக?'' 


''சந்தானம் ஜாலியான பையன். எல் லாரையும் கலாய்ப்பேன். ரொம்ப சென்டி மென்ட் பார்ப்பேன். இருந்தாலும் நடுவில் எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போக முடியுமோ, அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போவேன். எவ்வளவு விட்டுக்கொடுத்தாலும் பிரச்னை தீரலை... ஒண்ணுமே பண்ண முடியாத சூழ்நிலைன்னா, வேற வழியே இல்லாம திரும்பவும் விட்டுக்கொடுத்திருவேன்.
நான் ஆறாவது படிச்சுட்டு இருக்கும்போது 'வாழ்க வளமுடன்’கிற அமைப்புல அப்பா என்னைச் சேர்த்துவிட்டுட்டார்.


 அதுல இருந்தே ஆன்மிக ஈடுபாடு அதிகமாயிருச்சு. கோயி லுக்கு ரொம்பப் போக மாட்டேன். ஆனா, சிவனைத் தினம் கும்பிடுவேன். இலவச இணைப்புகள்ல வர்ற ஆன்மிகப் புத்தகங் களை நீங்கள்லாம் புரட்டிக்கூடப் பார்க்க மாட்டீங்க. ஆனா, அதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். ரமண மகரிஷி, புத்தர், வள்ளலார், பாபாஜினு பெரிய கலெக்ஷனே வெச்சிருக்கேன். ஆன்மிகப் புத்தகங்கள்ல படிக்கிறதையே நான் வேற மாதிரி படத்துல பயன்படுத்தியிருக்கேன்.


'ஆன்மாங்கிற பால், உடலுங்கிறது தண்ணீர். ஜீவாத்மாவோடு, இந்த பரமாத்மா எப்போ ஒண்ணுசேருதோ, அப்போ இந்த உடலை தண்ணீரைப் போலப் பிரிச்சு எடுக் கணும்’னு சொல்வாங்க. அதைத்தான் 'ஓகே ஓகே’ படத்துல குவார்ட்டர், தண்ணீர் பாக் கெட், யூஸ் அண்ட் த்ரோ கிளாஸ்வெச்சு, 'இது மீரா... இது நீ... இது நானு’ன்னு சொல் லிக் காமெடி பண்ணினேன்.


ஓவர் ஆலா... சந்தானம் ரொம்ப நல்லவன்ங்க!''



8. ''இயக்குநராகும் எண்ணம் இருக்கி றதா? அப்படி இயக்கினால் யார் உங்கள் ஹீரோ?'' 


''அப்படி ஒரு ஆசை இருக்குங்க. கால் ஷீட் கமிட்மென்ட் எல்லாம் முடிச்சிட்டு அதைப் பத்தி யோசிக்கணும். அப்போ யாருக்கு என் கதை பிடிக்குதோ, யார் கால்ஷீட் கொடுக்குறாங்களோ, அவங்களைவெச்சுப் படம் பண்ணுவேன். வெறுமனே சிரிச்சுட்டு மட்டும் போகாம, படம் முடிஞ்சதும் யோசிக்கிற மாதிரி காமெடி - சென்டிமென்ட் கலந்த ஒரு கதை வெச்சிருக்கேன். நான் படிச்ச ஆன்மிக விஷயங்களை காமெடி கோட்டிங்ல சொல்லுவேன்.

 நாமெல்லாம் வெளிநாட்டை ஆச்சர்யமாப் பார்க்கிறோம். ஆனா, நம்ம நாட்டுலயே எல்லா விஷயங்களும் இருக்குது. அங்கெல்லாம் 'எப்படி இருக்கீங்க?’னு கேட்டா, 'ஐ யம் ஃபைன்’னு சொல்வாங்க. அவங்க உடம்பையும் மனசையும் பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. ஆனா, இங்கேதான் சோகமா இருந்தா 'மனசு சரியில்லை’னு சொல்லுவோம். டல்லா இருந்தா, 'உடம்புசரி இல்லை’னு சொல்லுவோம். இந்த மாதிரி யான தத்துவங்கள்லாம் நம்ம நாட்டுல மட்டும்தான் உண்டு. இப்படி நம்ம நாட்டுப் பெருமைகளை ஹைலைட் பண்ணி கதை சொல்லணும்!''



9. ''அதென்ன... நீங்கள் சொல்வதைக் கேட்கும், உங்களுக்கு செட் ஆகும்இயக்கு நர்களிடம் மட்டும்தான் நடிப்பேன் என்று ஏதேனும் பாலிசி வைத்திருக்கிறீர்களா?'' 


''டைரக்டர்-ஆர்ட்டிஸ்ட்டுங்கிற காம்பி னேஷன், சரக்கும் சோடாவும் மாதிரி. மிக்ஸிங் கரெக்டா இருக்கணும். இல்லாட்டி, வேற மாதிரி ஹேங் ஓவராகிடும். எனக்கு யாரெல்லாம் மிக்ஸிங் சரியா இருக்காங் களோ, அவங்களோட சேர்ந்து நிறைய படம் பண்றேன். அப்புறம் பெரிய இயக்குநர்கள் படங்கள்லயும் நடிச்சிட்டுதான் இருக்கேன். ஷங்கர் சார் படம் 'எந்திரன்’ பண்ணினேன். இப்ப அவர் விக்ரம் சாரை வெச்சுப் பண்ற  படத்துலயும் பண்றேன். கௌதம் மேனன் சாரின் 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடிக்கிறேன். நீங்க சொல்றதுலாம் இவங்க படங்கள்ல செட் ஆகாது


 .
10. ''சமூக விஷயங்களையும் நகைச்சுவையில் கலந்து தந்த என்.எஸ்.கிருஷ்ணன்,  எம்.ஆர்.ராதாபோல நீங்க ஏன் முயற்சிக்கலை?'' 


 ''அதுதான் அவங்க பண்ணிட்டாங்களே நண்பா! நாம ஏதாவது புதுசா பண்ணுவோம்னுதான் வேற மாதிரி ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்!''




11. ''லொள்ளு சபாவுக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?''   


''ரெண்டுமே லொள்ளுதான். என் சினிமா காமெடிகளை சேனல்ல பார்த்து ரசிக்கிறாங்கன்னா, லொள்ளு சபா காமெடிகளை இன்னமும் யூ-டியூப்ல பார்த்து ரசிக்கிறாங்க. மத்தபடி ரெண்டுக்கும் வேற பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனா, சினிமாங்கிறது எவர் க்ரீன். எதிர்கால ஜெனரேஷன் பார்த்து ரசிக்கிறது. 'டேய் என்னடா இது... அந்தக் காலத்துல சந்தானம் இவ்வளவு மொக்க போட்ருக்கான்’னு எதிர்காலத்துல யாரும் சொல்லிடக்கூடாதுங்கிறதால சினிமாவுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்றேன்!''



டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


Tuesday, June 05, 2012

கமல் பேட்டி BY சிவசங்கரி @ விகடன் பொக்கிஷம் -1983


மல்ஹாசனைச் சந்திக்க அவர் இல்லத்துக் குச் சென்றபோது கூடத்தில் பழுப்பு நிற கதர் சட்டை, நாலு முழ வேட்டியில் இருக்கும் பெரியவரிடம் என்னை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.


அவர், கமலின் தந்தை... மென்மையாகச் சிரிக்கிறார்.

''பரமக்குடியில் இருந்து எப்போது வந்தீர் கள்?''

''இரண்டு நாள் முன்பு... நாளை இரவு திரும்புகிறேன்.''

''ரயிலிலா?''

மீண்டும் அதே மென்மையான சிரிப்பு... ''முப்பது வருஷமாக பஸ்தான்...''


''சின்ன வயசு கமலைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?''


''ம்ம்ம்? கமலுக்கு அவன் அம்மாவிடம் ஏக ஆசை. சின்னப் பையனாக இருக்கையில் நினைத் துக்கொண்டு அவளிடம் ஓடி வருவான். வயிற்றைத் தடவிக் கொடுத்து, 'இங்கேதானேம்மா நான் இருந்தேன்; இங்கிருந்துதானே வந்தேன்?’ என்று கேட்டு வாஞ்சையுடன் அந்த வயிற்றில் முத்தம் கொடுப்பான்.''



தொடர்ந்து பேசுவதற்குள் கமல், கங்கை அமரன் சிரித்துக்கொண்டே உள்ளே வருகிறார் கள்.


''அமரனின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? 'கால்வாய்க் கரை’... முதலில் 'கோழி கூவுது’, பிறகு 'கொக்கரக்கோ’... தொடர்வது கால்வாய்க் கரைதானே?''


பலத்த சிரிப்பு கூடத்தில் உள்ள அனைவரையுமே ஆக்கிரமிக்கிறது. இரண்டு நிமிஷங்களில் கங்கை அமரன் விடைபெற்றுக்கொண்டு புறப் பட, கமல் எதிரில் உள்ள திவானில் அமர்கிறார்.


''ஸாரி... உங்களை முதலில் ஐந்து மணிக்கு வரச் சொல்லிவிட்டு, பின் ஆறு என்று மாற்றியதற்கு. நிறைய ரசிகர்கள் 'இலங்கைத் தமிழர் படு கொலையை எதிர்த்து நாமும் ஓர் ஊர்வலம் போகலாம்’ என்ற கோரிக்கை யுடன் கூட்டமாக வந்துவிட்டார்கள்.

'அவசரப்படக் கூடாது. இது இந்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்னை. நாம் தனிப்பட்டரீதியில் எதையாவது செய்யப்போக, அது அங்கு ஏற்கெனவே அவதிக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் இனத்தை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்தி விடக் கூடாது. யோசித்து, ஆக்கபூர்வ மான காரியத்தை அவசியம் செய்ய லாம்’ என்று கூறி அனுப்பினேன்.''


ரசிகர்களைப் பற்றி கமல் குறிப்பிட்ட தால், ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட கேள்வியுடனேயே பேச்சைத் தொடங்கு கிறேன்.



1. ''வெகு சீக்கிரமே நீங்கள் அரசியலில் நுழையப்போகிறீர்கள்... அதன் அஸ்தி வாரம்தான் இந்த விரிவான ரசிகர் மன்ற நடவடிக்கைகள் என்கிறார்களே?'' 


உதட்டைப் பிதுக்குகிறார். கைகளை விரித்து, தோளைக் குலுக்கி 'நான் என்ன சொல்வேன்’ என்கிற பாவனையுடன் ஏறிடுகிறார். ''லயன்ஸ் கிளப் போல முழுக்க முழுக்க சமூக சேவை பிரக்ஞை கொண்ட ஓர் அமைப்பை உண்டாக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவுதான் என் ரசிகர் மன்றம். 1980 வரை ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, சமூக சேவை என்ற விழிப்பு உணர்வு வந்த பிறகு, ஏன் ரசிகர்மன்றத்தைத் தோற்றுவித்து ஆக்கபூர்வமாகச் செயல்படக் கூடாது என்று தோன்றியது.


தயவுசெய்து என் ரசிகர் மன்ற அலுவல கத்துக்குப் போய் நாகராஜனைச் சந்தியுங்கள். முதன்முதலில் பஸ் ஸ்டாப்பில் 'இன்ன எண் பஸ்... இன்ன இடத்துக்குச் செல்லும்’ என்ற விவரம் அடங்கின பலகையை மாட்டி, எங்களுக்குத் தெரிந்த விதத்தில் சமூக சேவையை ஆரம்பித்ததைப் பற்றிக் கூறுவார்!''


2. ''அப்படியென்றால், நீங்கள் பணம் கொடுப்ப தாகவும் அரசியலில் புக இதன் மூலம் படிக்கட்டுகள் கட்டுவதாகவும் கூறுவதில் நிஜம் இல்லையா?'' 


''சத்தியமாக இல்லை. இன்று வரை என் ரசிகர் மன்றத்துக்காக நான் பைசா செலவழித்தது இல்லை. போன் பில்கூட அவர்களேதான் பார்த்துக் கொள்கிறார்கள்.''


3. ''உங்கள் ரசிகர் மன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகள் என்னென்ன?'' 


''இறந்த பிறகு கண் தானம் செய்ய பெயரைப் பதிவுசெய்துகொண்டு இருக்கிறோம். நல்ல புத்தகங்களை வாங்கி நூலகங்களை உருவாக்க இருக்கிறோம். ஆகஸ்ட்-15 போன்ற விசேஷ தினங் களில் நான் உட்பட மன்றத்தைச் சார்ந்த பலரும் இலவசமாக ரத்த தானம் செய்து ஆஸ்பத்திரி களில் ரத்த வெள்ளத்தை உண்டாக்கப் போகிறோம். எங்காவது இறப்பு நடந்தால், அங்கு சென்று கண் தானத்தின் மேன்மையை விளக்கி, இறந்தவரின் கண்களைத் தானமாகப் பெற முயற்சிக்கப்போகிறோம்!''




4. ''கைக் காசைச் செலவழித்து... உங்களுக்காக, உங்கள் வார்த்தையை நிறைவேற்றப் பாடுபடும் ரசிகர்களை நினைக்கையில்..?'' 



''நெகிழ்ந்துபோகிறேன். எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்று தவித்துப்போகிறேன். முடிந்த வரைக்கும் தனித்தனியே அனைவரையும் சந்தித்து என் குறிக்கோள், நன்றி, சந்தோஷத்தைத் தெரிவிக்கப் போகிறேன். இத்தனை ஆயிரம் பேர் உழைப்பும் கமல்ஹாசன் என்ற தனி நபருக்குப் பெருமை சேர்க்கத்தான் என்பதை நினைத்தால் சிலிர்த்துப்போகிறது. 'பதிலுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?’ என்று மனசு பரபரக்கிறது.


என் ரசிகனுக்குத் தேவையான படத்தைக் கொடுத்து, அவனை மகிழ்விப்பது ஒன்றுதான் என்னால் முடிந்த சமாசாரம். 'சகல கலா வல்லவன்’ போன்ற படங்களை நான் அதிகம் இப்போது ஒப்புக்கொள்வதற்குக் காரணம், இந்த விதத்திலாவது என் ரசிகர்களைத் திருப்தி செய்யலாமே என்றுதான். நிஜமாகச் சொல்கிறேன், பணமும் புகழும் அடுத்த காரணங்களே!''


5. ''வரதட்சணைக் கொடுமை, முதியோர் பிரச்னை, வறுமை, வேலை இல்லாமை என்று இன்றைக்குத் தாண்டவமாடும் இன்னும் பல பிரச்னைகள் குறித்து..?'' 


''தனி மனிதனாக என்னால் முடிந்ததை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால், எங்கள் இண்டஸ்ட்ரி மாபெரும் சக்தி வாய்ந்தது. இதைச் சரிவரப் பயன்படுத்தினால், பட்டிதொட்டிகளில் உள்ள பாமர மக்களிடமும் நல்லவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துவது சுலபம்!''


6. ''சரி... அதைச் செய்வதற்கு என்னதடை?'' 


''அதிகமாக வரி கொடுக்கும் தொழிலாக இருப்பினும், அதற்கு உரிய மரியாதை எங்களுக்குக் கிடைக்காதது வருத்தப்பட வேண்டிய விஷயம். செக்யூரிட்டியே இல்லாத தொழில் எங்களுடையது. ஒரு ரசாயனத் தொழிற்சாலை ஆரம்பிக்கப் பண உதவி செய்ய முன் வரும் வங்கிகள், ஒரு படம் எடுக்க எங்களுக்கு உதவுவது இல்லை. ஏன் இந்தப் பாரபட்சம்? கேட்டால், பாதுகாப்பு இல்லை என்பார்கள். அரசாங்கம் மட்டும் எங்கள் தொழிலை மதித்து, படத் தயாரிப்புக்குப் பண உதவி செய்ய முன்வந்தால், நிச்சயமாகச் சொல்கிறேன்.


.. பத்தில் ஆறு படங்களாவது உயர்ந்த குறிக்கோளுடனும் சமூகப் பிரக்ஞையுடனும் அமையும். சந்தேகமே இல்லை!''


7. ''இந்த அளவுக்கு வளர்ந்த பின்னர், யாருடைய இழப்பையாவது வெகுவாக உணர்கிறீர்களா?'' 


''என் அம்மா! எதற்கும் இவன் உதவ மாட்டான் என்கிற முடிவுக்கு அனைவரும் வந்துவிட்ட பின், 'எதிர்காலத்தில் என்ன பண்ணுவான், இவனுக்கு என்று கொஞ்ச மாவது வருமானம் வேண்டாமா?’ - என்ற ஆதங்கத்தில் வாசலில் இருக்கும் கடைகளைக் கட்டக் காரணமாக இருந்தவர். I miss her alot!''


8. ''உங்களையே விமர்சித்துக்கொள்ளும் பக்குவம் உண்டா?'' 


''கொஞ்சம் என் பலம், பலவீனம் எனக்குத் தெரியும். எனக்கு வேண்டும், வேண்டாததைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும் விவேகத்தை மெதுவாக வளர்த்துக்கொண்டு இருக்கிறேன். முன் கோபம், ஆத்திரம் என் மைனஸ் பாயின்ட்ஸ். ஆனால், எப்பேர்ப்பட்ட விரோதிக்கும் அவர் என் பிடிக்குள் வரும்போதுகூடக் கெடுதல் செய்ய முடியாதது என் ப்ளஸ் பாயின்ட்!''


9. ''தொடர்கதை எழுத முனைந்திருப்பதன் மூலம் எழுத்துலகில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறீர்கள். இந்தக் கதையை நீங்கள் எப்படி உருவாக்கினீர்கள் என்பதைச் சொல்லுங்களேன்...'' 


''இது ரொம்ப வருஷங்களுக்கு முன் என்னுள் ஜனித்தது. நண்பன் ஒருவனுக்கு உண்டான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. இதை முதலில் திரு.பாலசந்தரிடம் கூறினேன். அவர், 'நன்றாக இருக்கிறது, ஆனால், மிt வீs ரீஷீக்ஷீஹ். ரொம்ப பயங்கரம்’ என்று சொன்னார். இந்தக் கதை என்னுள் முழுமையாக உள்ளது. நடிகன் கமல்ஹாசனால் வெளிப்படுத்த இயலாத எல்லைகளை எழுத்தாளன் கமல்ஹாசன் தொட்டுக் காட்ட வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது!''


10. ''பாட, ஆட, நடிக்க, எழுதத் தெரிவதன் மூலம் நீங்கள் ஒரு All Rounder என்பதை நிரூபிக்கிறீர்கள். இன்னும் எந்தக் களத்திலாவது தேர்ச்சி பெற ஆசை உண்டா?'' 


''கர்னாடக இசையை முழுமையாக அறிய, திரு.பாலமுரளியிடம் சங்கீதம் கற்கிறேன். மேடையில் நான் கச்சேரி செய்ய வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. இது எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும். விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்னை ரொம்பப் பயமுறுத்துகிறது. இன்னும் சில வருஷங்களில் கம்ப்யூட்டரின் முன் நான் ஒரு ஞானசூன்யமாகி விடுவேனோ என்ற மிரட்சியின் காரணமாக, கம்ப்யூட்டர் பற்றின அறிவைச் சமயம் கிடைக்கும்போது எல்லாம் வளர்த்துக்கொள்கிறேன்!''


11. ''இன்றைய கமல்ஹாசனின் வளர்ச்சியில் உங்கள் மனைவி வாணிக்குப் பங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?'' 


''ரொம்ப... ரொம்ப! முரட்டுத்தனம் நிறைந்த என்னைப் பல விஷயங்களில் ஒருநிலைப் படுத்தியது அவள்தான். என் அம்மாவின் இழப்பை ஓரளவுக்குத் தாங்கிக்கொள்கிறேன் என்றால், அது வாணி தரும் இதத்தால்தான். எல்லாவற்றையும்விட, வாணி எனக்கு ஒரு நல்ல Companion!''


12. ''இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத நினைப்பை என்னிடம் சொல்வது சாத்தி யமா?'' 


''ம்ம்...'' - கமல் சிந்திக்கிறார். தீவிரமான பார்வையுடன் மெதுவாகப் பேசுகிறார். ''விட்டுக்கொடுத்து, விட்டுக்கொடுத்து அதாவது, கலையுலகில் Compromise செய்து செய்து நாளடைவில் எனக்குள் இருக்கும் கலைஞன் கமல்ஹாசன் உருவமற்றுப் போய்விடுவானோ என்ற பயம் எனக்கு உண்டு. 'ராஜபார்வை’ நடிகன் கமல் இன்றைக்கும் அதே வீரியத்துடன் உள்ளே நடமாடிக்கொண்டு இருக்கிறானா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

உண்மையிலேயே கலைஞன் கமல்ஹாசன் இறந்து விடுவானோ என்ற பயம். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறது அல்லவா?''
பேட்டி முடிந்துவிடுகிறது.


கமலின் கடைசி வாக்கியங்கள் ஒருவித வேதனையை உண்டுபண்ண... அப்படியே அமர்ந்து சிந்திக்கிறேன்.


வசதி இருந்தும் எளிமையான வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்று வாழும் தந்தை ஸ்ரீனிவாஸன், அண்ணன் சாருஹாஸன். அன்பையும் சிரிப்பையும் தவிர, வேறு எதையும் தரத் தெரியாத மன்னி. நடிகை என்ற பந்தா இல்லாமல், எந்தக் குடும் பத்திலும் காணப்படும் ஒரு பொறுப்புள்ள பெண் போல காபி கலந்து எடுத்து வரும் சுஹாசினி. சுமுகமாகப் பேசும் சாருஹாஸனின் மூத்த மகள் டாக்டர் நந்தினி. வெட்கத்துடன் 'ஹலோ’ சொல்லி உட்காரும் கடைசிப் பெண் சுபாஷிணி. நாட்டியப் பயிற்சியில் இருந்தாலும் கீழே இறங்கி வந்து நட்புடன் பேசும் வாணி -


இவர்கள் நடுவே வசிக்கும் கமல்...


- ஒரு சமயம், கார் டிரைவர் எங்கோ சென்று விட, சட்டென்று கட்டின லுங்கியுடன் தானே வண்டி ஓட்டிக்கொண்டு என்னை வீட்டில் விட்ட கமல்...


- நல்லது, கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் விவேகத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று வெளிப்படையாகத் தன்னை அலசிக் கொள்ளும் கமல்...
சமூக சேவை செய்வதுதான் முக்கியமே தவிர, கமல்ஹாசனின் பேர் நீடிப்பது அல்ல - என்று தெளிவான சிந்தனையுடன் பேசும் கமல்...


- மனைவி தரும் தோழமையில் பெருமை கொள்ளும் கமல்...


- முக்கியமாக,
மனிதாபிமானத்துடன், தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்து, அதில் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பும் கமல் -


இவ்வளவு விழிப்பு உணர்வு உண்டாகிவிட்ட பிறகு, மனிதன் கமல், நடிகன் கமல் அழிந்து போவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது சாத்தியமா என்ன?


ம்ஹூம்...  இல்லை.


இந்தப் பயம் அநாவசியமானது...


நிச்சயம்...

மனசு தெளிந்துவிட, 'நான் கிளம்புகிறேன்... ஆல் தி பெஸ்ட் கமல்!’ என்று கூறியபடி எழுந்து நிற்கிறேன்!

Saturday, June 02, 2012

லேடீஸை அதிகம் கலாய்ப்பது ஏன்? சந்தானம் பேட்டி @ விகடன்

1.  ''ஓ.கே... தியேட்டர்ல நீங்க வர்றப்ப எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, நாகேஷ், சந்திரபாபு மாதிரி உங்க காமெடி காலாகாலத்துக்கும் நிலைச்சு நிக்குமா?'' 


''அட! என்னங்க குரு... இப்படி கோக்குமாக்கா மாட்டிவிடுறீங்க? வெல்... இதுக்கு நான் என்ன சொல்ல? ஆங்... எனக்கு அப்புறம் வரப்போற காமெடியன்கள் பின்னிப் பெடலெடுத்தா, நம்ம காமெடி மொக்க தட்டிரும். வர்ற பார்ட்டிங்க கொஞ்சம் மொக்கையா இருந்தாங்கன்னா, நம்மளது அப்படியே தூக்கலா நிக்கும்... கிரேட் எஸ்கேப். அதனால, அடுத்த ஜெனரேஷனைப் பொறுத்துதான் நம்ம காமெடி ஜெனரேட்டரோட லைஃப் இருக்கு. அதனால, அதுவரைக்கும் வொர்ரி பண்ணிக்காம, இந்தத் தலை முறையைச் சிரிக்கவெச்சுட்டுப் போயிருவோமே.''




2. ''இப்போதைக்கு காமெடியில் உச்சக்கட்ட கலைஞன் வடிவேலு என்பேன். உங்கள் கருத்து என்ன?'' 


 ''எனக்குத் தெரிஞ்சு வடிவேலு, விவேக் ரெண்டு பேருமே உச்சக்கட்ட கலைஞர்கள்தாங்ணா.''



3.  ''சில சமயம் பெண்களைப் பற்றி சற்று ஓவராக கமென்ட் அடிக்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறீர்களா?'' 


''அக்காவா, தங்கச்சியானு தெரியலை...  கோபத்துல எதுனா சாபம் கீபம் விட்ராதீங்க. அப்புறம் அடுத்த பிறவியில் கழுதையா பொறந்திரப்போறேன். 'சில சமயம்’னு சொல்றதைவிட, 'சில பெண்களை’ கமென்ட் அடிக்கிறேன்னு சொல்லலாம். படத்துல ஹீரோயின், அம்மானு நிறைய கேரக்டர்கள் இருப்பாங்க. அவங்க எல்லாரையும் மரியாதையாத்தான் பேசுவேன். கூட நடிக்கிற சில கேரக்டர்களை மட்டும்தான்  கலாய்ப்பேன்.


 அதை அந்த இடத்துல செஞ்சே ஆகணும். இல்லைன்னா, அது சாமி குத்தம் ஆகி, ஏவி.எம். ஸ்டுடியோ பிள்ளையார் கண்ணைக் குத்திருவாரு. அதையும் இயக்குநர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக்கிறதாலதான் செய்றேனே தவிர, தனிப்பட்ட விருப்பம்லாம் கிடையாது. பெண்களை என் கண்களைப் போல மதிக்கிறவன்ங்க நான்!''



4. ''உங்கள் திரை வாழ்க்கைக்கு உதவியவர்களில் மறக்க முடியாதவர் யார்... ஏன்?'' 


''முதல்ல என் அம்மா. எனக்கு புத்தி தெரியாத வயசுலயே சின்னக் குழந்தையா இருக்கும்போது, டான்ஸ் எல்லாம் ஆடுவேன்னு சொல்வாங்க. ஏதாவது வேணும்னு அடம்பிடிச்சு அழுதிருப்பேன். அதை டான்ஸுனு நினைச்சுட்டாங்கனு நினைக்கிறேன். என்னை ஸ்கூல் ஆண்டு விழா டான்ஸ்ல சேர்த்துக்கணும்னு ரொம்ப கஷ்டப் பட்டு மிஸ்கிட்டல்லாம் சொன்னாங்க.


 அப்ப சூர்யானு ஒரு மிஸ்தான் எனக்கு ஸ்கூல்ல டான்ஸ் ஆட வாய்ப்பு தந்தாங்க. எப்படி ஆடணும்னு சொல்லியும் தந்தாங்க. டிராமா எழுதிக்கொடுத்து நடிக்கவெச்சாங்க. அடுத்து, சின்னத்திரைக்கு அதாவது, விஜய் டி.வி-யில் வாய்ப்பு வாங்கித் தந்த பாலாஜி, ராம்பாலா. என் டி.வி. ஷோக்களைப் பார்த்துட்டு, பெரிய திரைக்கு என்னை அழைச்சுட்டு வந்த சிம்பு. இவங்க எல்லாருமே என் வாழ்க்கையில முக்கியமானவங்க, மறக்க முடியாதவங்க.''



5. ''லொள்ளு சபா ஷூட்டிங் காமெடி ஏதாவது சொல்லுங்களேன்?'' 


''லொள்ளு சபாவுல எடுத்ததைவிட, நீங்க பார்த்ததைவிட, ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த காமெடி அள்ளும். ஒரு தடவை மனோகருக்கு என்னை எதிர்த்துப் பேசுற மாதிரி ஒரு டயலாக். 'உன்னை எப்படி எல்லாம் உயிருக்குயிரா நான் வளர்த்தேன். எல்லாத்தையும் மறந்து என்னைத் தூக்கிப்போட்டுட்டுப் போயிட்டியே... ஏன்?’ இவ்ளோதான் டயலாக். எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும், அரை நாள் ரிகர்சல் பார்த்தும் அந்த டயலாக்கை அவர் பேசவே இல்லை. 'சரஸ்வதி சூலத்தை எடுத்து நாக்குல குத்தி னாக்கூட இவரால பேச முடியாது. 


அவருக்கு அவ்வளவு எல்லாம் வேணாம். டயலாக்கைக் கம்மி பண்ணுங்கப்பா’னு சொல்லிட்டார் டைரக்டர். 'உன்னை எப்படி எல்லாம் வளர்த் தேன், இருந்தாலும் தூக்கிப்போட்டுட்டீயே, ஏன்?’னு வசனத்தைக் குறைச்ச£ங்க. ஹூம்... அதுவும் வரலை. 'என்னை மதிக்காமத் தூக்கிப்போட்டுட்டீயே... ஏன்?’னு அதையும் கம்மி பண்ணினாங்க.


 முன்னாடியை விட ரொம்பத் திணற ஆரம்பிச்சுட்டார் மனுஷன். எல்லாரும் கொலவெறி ஆயிட் டோம். 'சரி விடு, வெறும் 'ஏன்?’னு மட்டும் கேக்கச் சொல்லு’னு சொல்லிட்டு டைரக்டர், 'ஆக்ஷன்’ சொன்னார். நான் திரும்பி நின்ன தும், 'ஏன்?’னு கேக்குறதுக்குப் பதிலா... 'எதுக்கு?’ன்னார் மனோகர். டைரக்டர் சேரைத் தூக்கி அடிச்சுட்டார். அவங்கவங்க கையில எதையெதை வெச்சிருந்தாங்களோ, அதாலயே அவரை அடிக்க வந்துட்டாங்க.


 'யோவ்... காலையில இருந்து ஏன்... ஏன்னு ஆயிரத் தெட்டு வாட்டி சொல்லியாச்சு. கடைசியில 'எதுக்கு?’னு கேக்குறியே... உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாய்யா?’னு நாள் முழுக்கப் பரேடு. இந்த மாதிரி நிறைய இருக்கு. அடுத்தடுத்த எபிசோடுல பார்ப் போம்.''



6. ''உங்கள் குரல் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்டா... மைனஸ் பாயின்ட்டா?'' 


''கண்டிப்பா ப்ளஸ் பாயின்ட்தாங்க. வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்னு அப்போ சொல்வாங்க. ஆனா, இப்போலாம் வாய்ல ஆம்ப்ளிஃபயர் வெச்சு முக்குக்கு முக்கு லவுட் ஸ்பீக்கர் கட்டிக் கதறுனாத்தான், அந்தப் புள்ளைக்குக் குடிக்கத் தண்ணிகூடக் கிடைக்கும். அப்படி இருக்கு இப்போ டிரெண்ட். 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ல 'ஹாய் டியூட்’னு என் ஒரு போன் வாய்ஸுக்கே தியேட்டர்ல கிளாப்ஸ் அள்ளுச்சே தலைவா! 'வாய்ஸுக்கு கிளாப்ஸ் வர்றதை இப்பதான் பாக்குறோம்’னாங்க. அந்த அளவுக்கு என் வாய்ஸ் ரீச் ஆகியிருந்தா, அது ப்ளஸ்தானே சரவணன்?''




7. '' 'நண்பன்’ படத்தின் மூணு ஹீரோவில் ஒருத்தரா உங்களை நடிக்கக் கூப்பிட்டு இருந்தா, யாரோட ரோல் உங்க சாய்ஸ்?'' 


''ஜீவா கேரக்டர்! அந்தப் படத்தை இந்தியில பார்த்தப்பவும் சரி, இப்ப தமிழ்ல பார்த்தப்பவும் சரி, அந்த கேரக்டர்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சென்டிமென்ட் ப்ளஸ் காமெடி ரெண்டுமே கலகல காக்டெய்லா இருக்கும் அந்த கேரக்டர்!''




8.''உங்களுக்குப் பிடித்த தமிழ் காமெடி நடிகர்கள் யார் யார்?'' 


 ''நல்ல காமெடி சென்ஸ் உள்ள காமெடி நடிகர்கள் மத்த லாங்குவேஜைவிட தமிழ்லதான் அதிகம். அதனால, இவங்க யாரையும் ஸ்கிப் பண்ண முடியாது. பட், என்னையும் மதிச்சு நீங்க இந்தக் கேள்வி கேட்டுட்டீங்க... தங்கவேல் சார், கவுண்டமணி சார் காமெடி ரொம்பப் பிடிக்கும். அவங்க டயலாக் டெலிவரி, டைமிங் சென்ஸ் எல்லாம்... மக்கா சான்ஸே இல்ல! அதுலயும் 'கல்யாணப் பரிசு’ படத்துல தங்கவேலு சாரோட ஒவ்வொரு சேட்டையும் எக்ஸ்பிரஷனும்... எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறித் துரத்தினாக்கூட அவர்கிட்ட நெருங்க முடியாது!''




9.''தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார்?''



''பிடிச்ச ஹீரோ... ரஜினி சார். பிடிச்ச ஹீரோயின்... சிம்ரன்.''



10. ''உங்கள் முன்னோடிகள்?'' 


''என் உறவினர்கள்தான். தெருவுல இருக்குற சித்தப்பா, பெரியப்பா, அண்ணன்னு என் முன்னோர்கள்தான் என் முன்னோடிகள். இவங்ககிட்ட இருந்துதான் நிறைய புதுப்புது வா£த்தைகள், கேரக்டர்களைப் பிடிச்சுருக்கேன் நான். 'அப்பாடக்கர்’னு சொன்னது என் மாமா ஒருத்தர்தான். ஒருமுறை ஒரு நாய் அவரைப் பார்த்து குறைச்சப்ப, அந்த நாயைப் பார்த்து அவர் கேட்டதுதான், 'நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா’ங்கிறது. இந்த மாதிரி புதுப்புது விஷயங்கள் எல்லாம் அவங்கள்ட்ட இருந்துதான் எடுப்பேன்.


 'என்னை என்ன அகாதுகானு நினைச்சியா?’னு நான் பேசினதுக்கூட அப்படித்தான். 'எப்பப் பார்த்தாலும் சித்தப்பாவைக் கூப்பிட்டு சபையில அசிங்கப்படுத்துறதையே வேலையா வெச்சிருக்கீங்களே, என்னை என்ன அகாதுகானு நினைச்சிங்களாடா?’னு ஒருவாட்டி மாமா சொன்னதை ஞாபகம் வெச்சு டயலாக் ஆக்கினேன். 'நம்ம தம்பியைப் பேட்டி எடுக்க வர்றாங்க. ரோடெல்லாம் ஒரே குப்பையா இருக்கே’னு மப்பு ஏத்திக்கிட்டு ரோட்டையே கூட்டினார் இன்னொரு சித்தப்பா. இவங்கள்லாம்தான் என் முன்னோர்கள்; முன்னோடிகள்.''


- அடுத்த வாரம் 


''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' 


' ''அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' 


''எனக்கு என்னமோ உங்களை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ பஜனைக் கோயில் தெரு முக்குல அடகுக் கடை வெச்சிருக்கிற பஜன் லால் சேட்டாட்டமே இருக்குது. யாரும் அப்படி உங்களைச் சொல்லி இருக்காங்களா?'' 


டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html

சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html
 



Thursday, May 31, 2012

லொள்ளு சபா - எந்திரன் பார்ட் 2 - ? சந்தானம் பேட்டி @ விகடன்

http://i.ytimg.com/vi/a5HXKnP52rA/0.jpg 


1. 'மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' 


 
''கண்டிப்பா 'எந்திரன்’தான். அந்தப் படம் பார்த்த உடனே இதை வெச்சு எப்படி எல்லாம் லொள்ளு பண்ணலாம்னு சும்மா ஜாலியாப் பேசினோம். ஏகப்பட்ட ஸ்கோப் இருக்கிற கதை. அதனால நிறைய புதுப் புது ஐடியாஸ் கிடைச்சது. அப்படி ஒரு ஷோ பண்ணா, கண்டிப்பா எந்திரன் 2.0தான் எங்க சாய்ஸ்!''



2. ''நேற்று வடிவேலு... இன்று சந்தானம்... நாளை..?'' 


''நேற்று... இன்று... நாளைனு போட்டு 'காமெடியன்கள்’னு மட்டும் போடுங்க. அதுதான் ரொம்ப சரி!


சினிமாவுல வடிவேலு, சந்தானம், அப்படி இப்படினு பேர் மட்டும்தான் மாறும். ஆனா, காமெடியன்கள் வந்துட்டேதான் இருப்பாங்க. நாளைக்கு யார்னு நீங்கதான் முடிவு பண்ணணும். என்கிட்ட கேட்டா, எனக்கு மட்டும் என்ன ஆன்ஸர் பேப்பர் லீக் ஆகியிருக்குமா என்ன?''



3. ''உங்களுக்கு இன்னும் யாரும் பட்டம் எதுவும் கொடுக்கலையே. நீங்களே உங்களுக்கு எதுனா பட்டம் கொடுத்துக்கலாம்னா, என்ன கொடுத்துப்பீங்க?'' 



''வேண்டாங்க... பெருசா சாதிச்ச சார்லி சாப்ளின் பட்டம் வெச்சுக்கிட்டாரா என்ன, லாரல்-ஹார்டி பட்டம் வெச்சுக்கிட்டாங்களா? மிஸ்டர் பீனுக்கு என்ன பட்டம் இருக்கு? சாதிச்ச யாருமே பட்டம் வெச்சுக்கலையே. அதனால, எனக்கும் பட்டம் வெச்சுக்கணும்னு ஆசை இல்லை. அப்போ நீ சாதிச்சுட்டியானு கோக்குமாக்காக் கேள்வி கேட்கக் கூடாது. அப்படிலாம் படத்துலதான் எங்களை நாங்களே டபாய்ச்சுக்குவோம்!''




4. '' 'இம்சை அரசன் 23ம் புலிகேசி’ இரண்டாம் பாகத்தில் நீங்கதான் ஹீரோவாமே... உண்மையா?'' 


''இதுவரைக்கும் எதுவும் உறுதி ஆகலை. பேசிட்டு இருக்கோம். எல்லாம் கூடி வந்தா பார்க்கலாம்!''  




5. ''குவார்ட்டர் இல்லாமல் உங்களால் சிரிக்கவைக்கவே முடியாதா?'' 


''எனக்கும் ஆசைதாங்க. ஆனா, 'குவார்ட்டர்’னு ஒரு டயலாக்கை ஆரம் பிச்சாதான் எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆடியன்ஸ் முகத்துல ஒரு சந்தோஷமும் மலர்ச்சியும் அந்த வார்த்தையைக் கேட்ட தும்தான் வருது. அட... காமெடி சீன் பிடிக்க டிஸ்கஸ் பண்றப்போ, அதைச் சொன்னாதான் கூட உட்கார்ந்திருக்குறவங்க முகத்துல ஒரு உற்சாகம் பொங்குது. அதனால 'புலி வால் பிடிச்ச கதையா, குவார்ட்டரை விட முடியலை. ஞாபகப்படுத்திட்டீங்க. அதனால, ஒரு குவார்ட்டர் காமெடி சொல்றேன்...


என் ஆபீஸ்ல ஒரு குவார்ட்டர் பார்ட்டி இருக்கார். அன்னைக்கு ஒரு பெரிய ட்ரீட். அவரையும் சாயங்காலம் ட்ரீட்டுக்குக் கூப் பிட்டு இருந்தோம். பார்ட்டிக்குப் போறதுக்கு முன்னாடி வார்ம்-அப் பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்கார். பவர்கட்டான நேரத்துல ஒரு கட்டிங்கைத் தேத்தி, ஃபிரிஜ்ல இருந்து தடவித் தடவி வாட்டர் பாக்கெட் எடுத்து மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டு சத்தம் இல்லாம செட்டில் ஆகிட்டார்.


கரன்ட் வந்த பின்னாடி ஒரு நண்பர் வந்தார். அவருக்கு டீ போட்டுக் கொடுக்க ஃப்ரிஜ்ல பால் பாக்கெட் தேடுறோம். காணோம். அப்பத்தான் தெரிஞ்சது... 'வாட்டர் பாக்கெட்’னு நினைச்சு நம்ம தோஸ்த் பால் பாக்கெட்டை வெட்டி கட்டிங்ல மிக்ஸ் பண்ணியிருக்கார்னு. அவரை செம கலாய் கலாய்ச்சிட்டோம். நாங்க பார்ட்டி முடிஞ்சு வர்ற வரை அந்த கட்டிங் பார்ட்டி டாய்லெட்டைவிட்டு வெளியவே வரலை. சீதபேதி, வாந்தி பேதினு ஊர்ல இருக்குற அத்தனை பேதி யும் வந்து ஒரு காட்டு காட்டிருச்சு!''



6. ''தற்போதைய காமெடியன்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்?'' 


''இப்போ உள்ள காமெடியன்களில் எல்லாருமே எனக்கு நண்பேன்டாதான். யாரையும் குறிப்பா சொல்ல முடியாது. ஹாலிவுட் காமெடியன்களில் என் ஆல்டைம் ஃபேவரைட் மிஸ்டர் பீன்தான். சமீபத்தில் அவர் நடிச்ச ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரோட எக்ஸ்பிரஷன்ஸ், பாடி லாங்குவேஜ் எல்லாமே அட்டகாச அட்ராக்ஷனா இருக்கும்!''

http://123tamilgallery.com/images/2010/09/telugu-actor-santanam-02.jpg



7. ''ஸ்கூல் நாடகங்களில் நடிச்ச காமெடி அனுபவம் சொல்லுங்களேன்?'' 


''நைன்த் படிக்கும்போது ஒரு நாடகம் போட்டோம். பூலோகத்துல இருந்து கிளம்பிப் போய் எமலோகத்துல இருக்குறவங்களை மாடர்னா மாத்துறதுதான் கான்செப்ட். எமன் வேஷம் போட்டவன் வேட்டி மாதிரி கட்டி, தலையில கிரீடம்லாம் வெச்சிருந்தான். அவன் உட்காரும்போது நான் சேரை இழுக்கணும். அவன் லேசா தடுமாறணும். அதை நான் ராங் டைமிங்ல பண்ணி சேரை முழுக்க இழுத்துட்டேன். அவன் விழுந்துட்டான்.


 தலைகுப்புற விழுந்த வேகத்துல, அவன் வேட்டி கிரீடத்துல சிக்கி, அவன் போட்டிருந்த ஓட்டை ஜட்டி அப்படியே எக்ஸ்போஸ் ஆகிருச்சு. நான் அவனுக்கு உதவி பண்றதா நினைச்சு, வேட்டியைக் கிரீடத்துல இருந்து பிடிச்சு உருவுறேன். மொத்த வேட்டியும் கையோட வந்திருச்சு. 'ஓட்டை ஜட்டி எமன்’னு எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவன் கிரீடத்தைத் தூக்கிப் போட்டுட்டு ஸ்டேஜ்லயே என்கூட மல்லுக்கட்ட ஆரம்பிச்சிட்டான். 'நான் என்ன பண்றது?’னு சமாளிச்சுப் பார்த்தேன். ஹூம்ம்... கோபம் குறையாமப் பல வருஷம் என்கூடப் பேசாமயே இருந்தான்!''



8. ''காமெடி நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?''   


''காமெடி நடிகர்கள் ஓட்டுப் போடலாம்தானே! அப்போ அவங்களுக்கும் அரசியலுக்கு வரத் தகுதி இருக்குதானே பிரதர்?! மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைச்சா, அவர் காமெடியனா இருந்தா என்ன... வில்லனா இருந்தா என்ன? ஆக்ச்சுவலி சினிமாவில் இருக்கும்போதே காமெடியன்ஸ் மக்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க!''



9. ''இந்தக் கேள்விக்கு மழுப்பாம, மறைக்காம பதில் சொல்லுங்க... நீங்க ஹீரோவா நடிக்கிற படத்துக்கு யாரை ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ணுவீங்க?'' 


''சும்மாவே என்கூட நடிக்கிற எல்லா ஹீரோயின்களும்... 'வாங்க ஹீரோ சார்’னு கூப்பிட்டுக் கலாய்ப்பாங்க. இதுல நீங்க வேறயா? ஆனா, இதுவரை அவங்களே யாரும் 'நீங்க ஹீரோவா பண்ணப்போறீங்களா’னு கேட்டது இல்லை. அதனால, அவங்க யாரும் என் சாய்ஸ் இல்லை. என் ஆசைனு கேட்டா, கேத்ரீனா கைஃப்தான். ஆனா, அவங்க சம்மதமும் அதுல முக்கியம் இல்லையா? கேட்டுச் சொல்லுங்களேன்!''



10. ''விகடன் மேடையில் கராத்தே உடையில் உங்க போட்டோ பார்த்தேன். எத்தனை பெல்ட் வாங்கியிருக்கீங்க? எந்தக் கடையில் வாங்கு னீங்க?'' 


''நீங்க வாங்கின கடைக்குப் பக்கத்துக் கடையில வாங்கினேன்  நம்புங்க பிரதர்... கராத்தேல பிரவுன் பெல்ட் வரை வாங்கியிருக்கேன். இப்பவும் கராத்தே ஸ்டெப்லாம் ஞாபகம் இருக்கு. ரியல் லைஃப்ல ஒருத்தனைத் தூக்கிப் போட்டுலாம் மிதிச்சிருக்கேன். ஆனா, அப்போ கராத்தே கை கொடுக்கலைங்க. நாம பொறுமையா அந்த ஸ்டெப் போட்டுத் தாக்கறதுக்குள்ள நம்மளை அடிச்சுட்டுப் போயிருவாங்க.


 பழக்கதோஷத்துல நாம 'ஹோஸ்’னு குனிஞ்சு மரியாதை பண்ணும்போது, அவனுங்க பொக்குனு குத்திருவானுங்க. தெருச் சண்டை வேற விஷயம். இப்போ ரீசன்ட்டாகூட ஒருத்தன் குடிச்சிட்டு ரோட்டுல ஒரு பொண்ணைப் போட்டு அடிச்சுட்டு இருந்தான். வண்டியை நிறுத்தி சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கலை. நானும் ஃப்ரெண்டும் சேர்ந்து நாலு அப்பு அப்புனோம். அப்புறம்தான் அடங்குனான்.


 அப்பப்போ பசங்ககூட ஜாலியா ரெஸ்லிங் விளையாடுவேன். யார் முதுகு முதல்ல கீழ படுதோ அவங்க அவுட். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பார்ட்டிங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விளையாடினப்ப, விரல்ல லேசா எலும்பு முறிஞ்சிருச்சு. ஆனா, நிச்சயம் கராத்தே கத்துக்கிறது நம்ம தன்னம்பிக்கையைத் தாராளமா வளர்க்கும். உடல் வலுவைக் கூட்டுற விஷயம். அதுக்காகவே அதைக் கத்துக்கலாம்!''



11. ''உங்களுக்குப் பெண் ரசிகைகள் அதிகமா... ஆண் ரசிகர்கள் அதிகமா?''


''இப்போ சென்சஸ் எடுத்துட்டு இருக்காங்களே.... அவங்ககிட்ட சொல்லி அப்படியே இந்தக் கேள்விக்கும் பதில் வாங்கிருவோமா? என்ன பாஸ் இது விளையாடிக்கிட்டு இருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேருமே சமமாத்தான் இருக்காங்க. ஆனா, பசங்க பரவாயில்லை. தியேட்டர்ல விசிலடிச்சோ, கலாய்ச்சோ விட்ருவாங்க. நம்ம நம்பருக்கு ஒரு தடவை கூப்பிட்டு அதை நாம எடுக்கலைன்னா, கோபப்பட்டுவிட்ருவாங்க.


 ஆனா, சில பெண் ரசிகைகள் கால் பண்ணுவாங்க. எடுக்கலைன்னா, 'என்ன சார், கால் அட்டெண்ட் பண்ண மாட்டீங்களா?’னு ஒரு மெசேஜ் வரும். அதுக்கு ரிப்ளை பண்ண மாட்டேன். கொஞ்ச நேரத்துல 'நீ என்ன அவ்ளோ பிஸியா?’னு கோச்சுப்பாங்க. அப்புறம் 'போடா வெண்ணெ’னு ரொம்பக் கோபமா அனுப்புவாங்க. நான் எதுக்கும் ரிப்ளை பண்ண மாட்டேன். எல்லா ரசிகர்கள்கிட்டவும் பேசணும்னு ஆசைதான். ஆனா, எவ்ளோ பேர்கிட்ட பேச முடியும்?''


- அடுத்த வாரம் 


http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/592235_156557197698928_2040420322_n.jpg


''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 


''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு... ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட் சொல்லுங்களேன்? 


டிஸ்கி - 1
- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html





Thursday, May 24, 2012

டபுள் மீனிங்க் காமெடி ஏன்? சந்தானம் பேட்டி @ விகடன்

1.  ''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' 

''அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள்னு அழகான குடும்பம். ஊர் இங்கே தாம்பரம் பக்கத்துல பொழிச்சலூர். அந்த ஊரே என் சொந்தம்தான். எல்லோருமே சொந்தக்காரங்கதான். ஒவ்வொருத்தரையும் தனித் தனியா சொன்னா, எலெக்ஷன் ஓட்டர் லிஸ்ட் மாதிரி ஆகிடும். ரொம்பப் பெரிய குடும்பம். சந்தோஷமா இருக்கோம்!''



2.'' 'அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' 

 நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்களா? அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் எப்படிங்க தொடர்ந்து நடிக்க முடியும்? மக்கள் என்கிட்ட எதிர்பார்க்கிற விஷயம் அதுல இல்லைனு சொன்னாங்க. அதான் அந்த டிராக் வேணாம்னு நினைச்சு, வழக்கமான நம்ம டகால்டி டிராக்குக்கு மாறிட்டேன்!''



3. ''எனக்கு என்னமோ உங்களை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ, பஜனை கோயில் தெரு முக்குல அடகுக் கடை வெச்சிருக்கிற பஜன் லால் சேட்டாட்டமே இருக்குது. யாரும் அப்படி உங்களைச் சொல்லி இருக்காங் களா?'' 


''கலாய்ச்சுட்டாராமாம்!''



4. ''உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சோகம் என்ன?''
''என் நண்பன் ஜிலானியின் மரணம். என்னோட மிக நெருங்கிய நண்பன் அவன். என்னை நிறைய மாத்தினவன். பெரிய பணக்கார வீட்டுப் பையன். அவன்கூட கம்பேர் பண்ணா, நான் ஒண்ணுமே கிடையாது. இருந்தாலும், என்னைக் கூடவே வெச்சு சுத்திட்டு இருப்பான். 'லொள்ளு சபா’ பண்ணிட்டு இருக்கும்போது, என்கிட்ட கார் எல்லாம் கிடையாது.


அப்போ கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துக்கக் கூப்பிடுவாங்க. சிம்பு, 'ஜெயம்’ ரவி மாதிரியான ஹீரோக்கள் செம பாலீஷா, சொகுசான கார்களில் வந்து இறங்குவாங்க. நான் ஆட்டோவுக்கே காசு இல்லாம அல்லாடிட்டு இருப்பேன். அப்போலாம் லான்சர் மாதிரி கெத்து கார்ல என்னை கூட்டிப் போய் இறக்கிவிட்டு இருந்து கூட்டிட்டு வரணும்னு டிரைவர்கிட்ட சொல்லி அனுப்புவான். எப்பவுமே எங்கயுமே என்னைவிட்டுக் கொடுக்கவே மாட்டான். என்னை இந்த அளவுக்கு முன்னேத்திவிட்ட நல்ல நண்பன். பாண்டிச்சேரி போய்ட்டு வரும்போது பைக் விபத்துல இறந்துட்டான். என்னோடஉண்மை யான 'நண்பேன்டா’ அவன். ஐ மிஸ் யூ ஜிலானி!''


5. ''உங்க அம்மா, அப்பா, வீட்டுக்காரம்மா, குழந்தைகளுக்குப் பிடிச்ச காமெடியன் யார்?'' 

''என் அம்மா, அப்பா, சம்சாரம், குழந்தைங்க, தோஸ்துங்க எல்லாருக்கும் பிடிச்ச காமெடியன்... நான்தான். வேற யாரையாச்சும் சொன்னா, சோறு போட மாட்டேன்ல. நான் மொக்கை காமெடி பண்ணினாலும் பயங்கரமா சிரிச்சு, அப்ளாஸ் கொடுத்து என்னை வளர்த்துவிட்டது அவங்கதான். நமக்குப் பிடிச்ச பேட்ஸ்மேன் டொக்கு போட்டாலும் 'வாவ்... வாட் எ ஸ்ட்ரோக்’னு கைதட்டுவோமே... அந்த மாதிரி!

ஸ்கூல் படிக்கிறப்பலாம் நான் வீட்டுக்கு டார்ச்சர் கொடுக்குற பிள்ளை. என் டார்ச்சர் தாங்காம ஒரு தடவை என் அம்மா, 'ஊர்ல நாலஞ்சு புள்ள பெத்தவள்லாம் சந்தோஷமா இருக்கா. ஒரே ஒரு புள்ளையப் பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே’னு அலுத்துக்கிட்டாங்க.


அதைத்தான் காப்பி பண்ணி 'பாஸ்’ படத்துல பேஸ்ட் பண்ணேன். ஷூட்டிங் பரபரப்புல வீட்டுக்குப் போகலைன்னா, அம்மா அந்த டயலாக்கைத்தான் சொல்லிட்டு இருப்பாங்க. என் வீட்டுக்காரம்மாவுக்கு பொண்ணு பாக்குற காமெடி சீன்னா ரொம்பப் பிடிக்கும். என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தப்ப, நான் ஊர்ல இல்லை. பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட 'லொள்ளு சபா எபிசோட்ல பாத்துக்கோங்க’னு வீட்ல சொல்லிட்டாங்க. அன்னைக்கு எபிசோட்ல 'பதினாறு வயதினிலே’ படத்தைக் கலாய்ச்சிருந்தோம்.


அதுல என்னைப் பார்க்க என் சம்சாரம் கிராமத்தையே துணைக்கு வெச்சுக் கிட்டு டி.வி. முன்னாடி காத்துட்டுஇருந்திருக் காங்க. கைல பீடி, சாராய பாட்டில்னு ஒரு நல்ல குடிமகனா நான் மிகச் சிறப்பாகச் சலம்பியிருந்தேன். அதைப் பார்த்துட்டு, 'டி.வி-ல நாலு பேரு பாக்கும்போதே இப்படிக் குடிக்குறானே... இவன்லாம் தனியா இருந்தா எப்படிக் குடிப்பான்’னு பொட்டு பொடிசுல ஆரம்பிச்சு கிழவிங்க வரை திட்டியிருக்காங்க. 'சிகரெட் கிகரெட் குடிச்சாகூடப் பரவாயில்லை.


பீடி குடிக்குறானே!’னு பெருசுங்க பொருமியிருக்காங்க. 'இப்படி ஒரு பரதேசிக்கு வாக்கப்படணுமா?’னு என் மனைவி சீரியஸா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் எல்லாம் சொல்லிப் புரியவெச்சுக் கல்யாணம் பண்ணினேன்.

'மந்திரப் புன்னகை’ படத்துல மாமனார் வீட்டுக்காரங்க கும்பலா வந்து இறங்குனதும், 'வந்துட்டாங்கப்பா... மாயாண்டி குடும்பத்தார்’னு கமென்ட் அடிப்பேனே... அதோட இன்ஸ்பிரேஷன் இந்தச் சம்பவம்தான். என் பசங்களுக்கு 'ஓ.கே. ஓ.கே.’ பட பார்த்தா கேரக்டர்தான் ரொம்பப் பிடிக்கும். ஏதாவது கோபத்துல திட்டுனாக்கூட, 'ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு’னு சொல்லிக் கலாய்க் குறாங்க. எப்படிச் சமாளிக்குறதுனுதான் தெரியலைங்க!''


6. ''நீங்க பேசுற காமெடிகள் எல்லாத்தை யும் போறபோக்குல 'ஜஸ்ட் லைக் தட்’தட்டி விடுறீங்களே... எப்படி?'' 

''டயலாக் பேசுறது ஜஸ்ட் லைக் தட் ஃப்ளோவா இருக்கும் பிரதர். ஆனா, அதை ஹிட் ஆக்குறதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு யோசிப்போம். புதுசா ஒரு வார்த்தை பிடிக் கும்போதே, அது மக்களுக்குப் பிடிக்குமா? எவ்வளவு தூரம் ரீச் ஆகும்னு மூளையைக் கசக்கிட்டே இருப்போம். ஒரு காமெடி சீன் பண்ண குறைஞ்சது மூணு நாள் ஆகும்.


இப்போ நடிச்சுட்டு இருக்குற 'சேட்டை’ படத்துல நான் இன்னொருத்தர்கிட்ட 'பக்கத்து அபார்ட்மென்ட்ல கில்மா நடக்குது’னு சொல்ல ணும். கில்மா பழைய வார்த்தையாச்சேனு யோசிச்சோம். அதையே கொஞ்சம் மாத்தி, 'சிக்காய் முக்காய் நடக்குது’னு சொல்வேன். 'அப்படின்னா’னு இன்னொருத்தர் கேட்க, 'அதாங்க கிலிகிலிகிலிபிலிபிலிபிலி... இப்பவும் புரியலையா? ஸ்கிஸ்கிஸ்குஸ்குஸ்குஸ்ங்க’னு சொல்லும்போதே டைரக்டர் கண்ணன் சிரிச்சிட்டார்.


இந்த ரெண்டு வார்த்தையைப் பிடிக்க எங்களுக்கு ரெண்டு நாளாச்சு. இந்த உலகத்துல எதுவுமே ஜஸ்ட் லைக் தட் கிடைக்காது நண்பா!''


7. ''உங்க காமெடிகளைக் குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை  ரசிக்குறாங்க. ஆனா, நடுநடுவுல திடீர்னு ரெட்டை  அர்த்த வசனம் வெச்சுடுறீங்களே... தேவையா?'' 

''உண்மைதான். தெருக்கூத்தோ, மேடை நாடகமோ, சினிமாவோ... எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தணுமே! 'டபுள் மீனிங் டயலாக்’ ரசிக்கவே ஒரு குரூப் இருக்கே. அவங்க கோட்டாவுக்கு நாங்க ஏதாவது கொடுத்தாகணுமே?

அதான் டபுள் மீனிங் காமெடி. குழந்தைகளுக்கு அதெல்லாம் புரியாது. புரியும்போது ரசிக்க ஆரம்பிச்சிடுறாங்க. என் அக்கா பையன் 'மன்மதன்’ படத்துல நான் பண்ணின காமெடியை முன்னாடி பாத்தப்ப, இரான் சினிமாவை சப்- டைட்டில் இல்லாமப் பார்க்குற மாதிரி உட்கார்ந்துட்டு இருந்தான். இப்போ அதைப் பார்க்குறப்ப விழுந்து விழுந்து சிரிக்கிறான். நம்மளா யாருக்கும் சொல்லிக் கொடுக்குறதில்லை பிரதர்!''


8.''சினிமாவுல ஹீரோ - ஹீரோயின்னுகூடப் பார்க்காம எல்லாரையும் செமையா கலாய்க்கிறீங்க... நிஜ வாழ்க்கைல நீங்க செமத்தியா கலாய் வாங்கியிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணுங்க?'' 

 ''காலேஜ் படிக்கும்போது வி.ஜி.பி-ல ஷோ பண்ண வாய்ப்பு கிடைச்சது. மூணு மணிக்கே மேடை ஏறித் தயாரா இருந்தோம். ஒருத்தன்கூட வரலை. திடீர்னு ரெண்டு பஸ் நிறைய கும்பல் வந்து இறங்குச்சு. 'மச்சான், இவங்களைச் சிரிக்கவெச்சு ஸ்கோர் பண்ணிருவோம். அப்பதான் இன்னொரு நாள் புரொகிராம் கொடுப்பாங்க’னு பேசி வெச்சுக் காமெடி பண்ண ஆரம்பிச்சோம்.


 எதிர்ல இருக்குற அத்தனை பேரையும் அப்படிக் கலாய்க்குறோம். எல்லாம் பொணம் மாதிரியே உட்கார்ந்திருந்தாங்க. ரொம்ப டென்ஷன் ஆகிருச்சு. நான் மேடையை விட்டு இறங்கி, அவங்களோட சேர்ந்து உட்கார்ந்து கைதட்டுறேன். அப்பவும் பய புள்ளைக ஒருத்தன்கிட்டயும் ரெஸ்பான்ஸ் இல்லை. ஒரு கட்டத்துல ரொம்பக் கடுப்பாகி, 'யோவ்! கைதட்டுனா என்ன குறைஞ்சா போயிருவீங்க’னு திட்டுனா, 'ஏண்டி பாபு... ஏனு செஸ்தானு?’ங்கிறானுங்க. எல்லாம் ஆந்திரா கோஷ்டி. வாழ்க்கையில நாங்க வாங்குன பிரமாண்டமான மொக்கைங்க அது!''

- அடுத்த வாரம் 

''மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' 



''நேற்று வடிவேலு... இன்று சந்தானம்... நாளை..?'' 


''உங்களுக்கு இன்னும் யாரும் பட்டம் எதுவும் கொடுக்கலையே. நீங்களே உங்களுக்கு எதுனா பட்டம் கொடுத்துக்கலாம்னா, என்ன கொடுத்துப்பீங்க?


''
- இன்னும் கலாய்க்கலாம்...


டிஸ்கி - சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html

சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html





சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html