Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts

Wednesday, December 11, 2013

தேமுதிகவில் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கமா? - பண்ருட்டி ராமச்சந்திரன் பிரத்யேகப் பேட்டி

தேமுதிகவில் குடும்ப உறுப்பி னர்கள் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் உள்ளதா என்பதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் மனம் திறந்து பதிலளித்தார். நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக தலைமை எடுக்கும் முடிவைப் பொறுத்தே அந்தக் கட்சியின் எதிர்காலம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


தேமுதிக அவைத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:


தமிழக அரசியலில் முதன்முறை யாக வயதை காரணமாகக் கூறி, ஓய்வெடுப்பதாக கூறியுள்ளீர்கள். உண்மையான காரணம் என்ன?


77 வயதான நிலையில் உடல்நிலை சரியில்லாததால், மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். மரணம் அல்லது தேர்தல் தோல்விதான் ஒரு அரசியல்வாதியை ஓய்வு பெறச்செய்யும் என்பார்கள். ஆனால் இந்த இரண்டு காரணங்கள் இல்லாமல், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடியும் என்பதைக் காட்டியுள்ளேன். இது நான் சுயமாக சிந்தித்து, யாருடைய நிர்பந்தமும் இன்றி எடுத்த முடிவு. எனது முடிவுக்கு வேறு யாரும் அல்லது எந்தக் காரணமும் இல்லை.


கட்சிப் பதவி மற்றும் எம்.எல்.ஏ. என்ற சுமைகளைத் தொடர்ந்து தாங்க முடியவில்லை. தொகுதி மக்களுக்கும் சேவையாற்ற முடியவில்லை. சிந்தனைத் திறன் இருந்தாலும், வயது காரணத்தால் செயல்பட முடியவில்லை. அதனால்தான் இந்த முடிவு எடுத்தேன். இனி சுதந்திரமாக, ஜாலியாக இருக்கப் போகிறேன்.


வேறு கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை. அதனால்தான் அரசியலில் இருந்து ஓய்வு என்று அறிவித்துள்ளேன். தேவைப்படுவோருக்கு என் ஆலோசனைகளை வழங்குவேன்.


உங்கள் முடிவு குறித்து முன்கூட்டியே கட்சித் தலைவர் விஜயகாந்த் அல்லது கட்சி யினரிடம் தெரிவித்தீர்களா? ராஜி னாமாவுக்குப் பிறகு உங்களை கட்சித் தலைமை தொடர்பு கொண்டதா?


விஜயகாந்திடம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை. அவரிடம் பேசினால் என்னை ஓய்வு பெற விடமாட்டார். எனது ராஜினாமா அறிவிப்புக்குப் பிறகு இதுவரை (செவ்வாய்க்கிழமை மாலை) விஜயகாந்தோ, அவரது தரப்பிலோ யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. இது அவருக்கு அதிர்ச்சியளிக்கும் முடிவுதான். கடைசியாக அவரை கடந்த 5-ம் தேதி மதுரையில் சந்திந்தபோது கூட இதுபற்றி நான் பேசவில்லை.


உங்களது திடீர் முடிவில் அதிமுக உள்பட வேறு எந்தக் கட்சி அல்லது நபர்களின் பின்னணி உள்ளதா?


எனது முடிவு, அதிமுகவுக்கே ‘ஷாக்’ தரும் முடிவுதான். அவர்களுக்கோ, வேறு யாருக்குமோ இதில் தொடர்பில்லை. எனது மகன் அதிமுகவில் சேரப் போகிறார் என்ற தகவலும் கற்பனை. அவர் அமெரிக்காவில் பிசினஸ் செய்கிறார்.



தேமுதிகவில் இருந்த கால கட்டத்தில் கட்சி நடவடிக்கைகள் திருப்தி அளித்ததா? தொடர்ந்து அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறக் என்ன காரணம்?



கட்சி நடவடிக்கைகளில் நான் ஈடுபடவில்லை, தலையிடுவதும் இல்லை. கருத்துகள் தான் கூறி வந்தேன். என் கருத்துகளை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் தலைமையின் விருப்பம். இறுதியில் கட்சித் தலைவர் விஜயகாந்த்தான் முடிவெடுப்பார்.


ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகு சற்று பின்னடைவுதான். என்னால் அதை கடைசி வரை சரிசெய்ய முடியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுவதற்கு என்னால் காரணம் சொல்ல முடியாது.


விஜயகாந்துடன் உங்களுக்கு என்ன கருத்து வேறுபாடு?


தனிப்பட்ட முறையில் ஒன்றும் இல்லை. அவருடன் நல்ல உறவு உண்டு. ஆனால், அரசியல் நிலைப்பாட்டில் அவருக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.


தேமுதிகவில் குடும்ப உறுப்பி னர்கள் தலையீடு, ஆதிக்கம் இருக்கிறதா?


இந்தியாவில் ஒரு சில கட்சிகளைத் தவிர எல்லாக் கட்சிகளிலும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் தலையீடு இருக்கும். அப்படித்தான் இங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசுவதை நாம் எப்படி தடுக்க முடியும். அவர்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பேசுவதை எப்படிக் குற்றம் காணமுடியும். காங்கிரசில்கூட சோனியா காந்தி குடும்பத்தினர் தலையீடு இல்லாமலா இருக்கிறது.



மூத்த அரசியல்வாதியான உங்களது வழிகாட்டுதலின்றி, எதிர்காலத்தின் கட்சியின் நடவடிக்கைகள் சட்டசபையிலும், வெளியிலும் சிறப்பாக இருக்குமா?



நல்லபடியாக நடந்து கொள் வார்கள் என்று நம்புகிறேன். கட்சியை விஜயகாந்த் ஆரம்பித்த பின்னர்தான் அதில் நான் சேர்ந்தேன். எனவே, விஜயகாந்தால் சுயமாக கட்சியை நடத்த முடியும் என நம்புகிறேன்.



தேமுதிக துவங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா?


திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக துவங்கப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுவது தேமுதிக போன்ற அரசியல் கட்சிகளின் கடமை. அதை அவர்கள் செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் ஏற்படும் அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதைப் பொறுத்துதான் தேமுதிகவின் எதிர்காலம் அமையும்.



ஏற்காடு தொகுதியில் தேமுதிக போட்டியிடாததற்கு என்ன காரணம்?


ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கு தேர்தலில் போட்டி இருக்க வேண்டும். திமுக அங்கு போட்டியிட்டதால், தேமுதிக போட்டியிட வேண்டாம் என விஜயகாந்த் முடிவெடுத்தார். டெல்லியில் போட்டி வேண்டாம் என்றேன். ஆனால், அவர் போட்டியிடுவதாக அறிவித்தார்.


இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

thanx - the tamil hindu 


  • மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று சொல்லுவதுபோல் செயல் பட்டுள்ளார். வாழ்த்துக்கள். ஆனால் இனி அவர் குடுக்கும் பேட்டி, அடுத்தவர்களை பற்றிய வாரல், பிற கட்சில் சேராமல் இருப்பது இது போன்றவை தான் இவரது இன்றைய முடிவுக்கு அங்கீகாரம் தரும், இல்லையேல் இவறும் பெட்டி வாங்க போட்ட நாடகம் தான்.
    about 5 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
    •  A.SESHAGIRI 
      வழக்கம் போல் ஒரு கட்சியை விட்டு விலகும் பொழுது மற்ற அரசியல்வாதிகள் போல் தரம்கெட்டு கட்சியை விமர்சிக்காமல்,நாணயத்துடன் கருத்து கூறி இருக்கிறார்.
      about 5 hours ago ·   (22) ·   (0) ·  reply (0)
      கார்த்திக்  Up Voted A.SESHAGIRI 's comment
      •  O2 
        இறுதியில் கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள்தான் முடிவெடுப்பார் என்று பேட்டி அளித்துள்ளதற்கும் தான் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் எண்ணத்துடன் இந்த ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளதில் திரு. ராமச்சந்திரன் அவர்கள் இன்னும் மனம் திறக்கவில்லை என்றே தெரிகிறது.
        about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
        •  tediyur 
          பண்ருட்டியார் கூறியது முற்றிலும் உண்மை . இந்தியாவில் கம்யூனிஸ்ட் ,அ தி மு க ,பி ஜே பி ,ஜே டி யு தவிர அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சியே . தங்கள் குடும்ப உறுப்பினர்கள் முன்னேற்றத்திற்கே கட்சி நடத்துகிறார்கள் .
          about 4 hours ago ·   (1) ·   (2) ·  reply (1)
          •  Athaur 
            குடும்ப உறுப்பினர்கள் பலன் அடைவது என்று எடுத்துக்கொண்டால் மேலே சொல்லப்பட்ட கட்சிகளில் பல லிஸ்டில் வராது.
            about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
          •  Rajaram 
            திரு பண்ருட்டி அவர்களின் பேட்டி மிகவும் கண்ணியமாக உள்ளது. நன்றி.
            about 4 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
            [email protected]  Up Voted Rajaram 's comment
            •  Devabalan 
              இது ஆச்சிரியம் தரகூடிய செய்தி அல்ல தேதிமுக ஒரு தனி நபரின் செல்வாக்கை அடிபடையாக கொண்டு செயல் பட துவங்கப்பட்ட கட்சி என்பதை நினைவில் கொண்டால்


            Sunday, April 28, 2013

            விஜயகாந்த் - திருமாவளவன் - திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

            சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
             

            மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பா.ம.க.வினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்.

            இந்த வன்முறைக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.

            மேலும், மரக்காணம் வன்முறை தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

            இதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை விடுத்ததோடு, வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
            இதனிடையே, நேற்று திடீரென கட்சியின் செயற்குழுவை கூட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தது.

            இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை இன்று பகல் 12 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினார்கள்.

            இந்த சந்திப்பின்போது பண்ருட்டி ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன் பொருளாளர் முகம்மது யூசுப், மற்றும் வன்னிஅரசு
            ஆகியோர் உடன் இருந்தனர்.

            இந்த சந்திப்பில், மரக்காணம் கலவரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் ஒரு அமைதி சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தி்ற்காக எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்தை சந்தி்த்ததாக  கூறினார்.

            படப் பிரச்னை தொடர்பாக ஏற்கனவே ராமதாசுக்கும், விஜயகாந்த்தும் மோதல் ஏற்பட்டது. இதனால் பா.ம.க.வுக்கு எதிராக விஜயகாந்த் செயல்பட்டு வந்தார். இதுவரை அக்கட்சியுடன் மோதல் போக்கைத்தான் விஜயகாந்த் கடைபிடித்து வருகிறார்.

            மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக அடிபட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் அண்மையில், எதிர்பாராத விதமாக கருணாநிதி- விஜயகாந்த் சந்திப்பு நடந்தது. கருணாநிதியும், விஜயகாந்துக்கும், தே.மு.தி.க.வுக்கும் ஆதரவாகவே பேசி வருகிறார்.


            ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொல் திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்கதான் முடியும். இதனால் தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

            எது எப்படியோ,  மரக்காணம் கலவரம் தொடர்பாக இருவரும் சந்தித்துக் கொண்டதாக கூறப்பட்டாலும் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.


            நன்றி - விகடன்

            Thursday, November 22, 2012

            வானத்தைப் போல' விஜய்காந்த்க்குப்பதில் ஜனகராஜ் நடிச்சிருந்தா....இன்னும் ஹிட் ஆகி இருக்கும் - விக்ரமன் பேட்டி

            சினிமா மாறி விட்டது! நானும் மாறி விட்டேன்!! - விக்ரமன்



            அடர்ந்த தாடி... அன்பான உபசரிப்பு... இரண்டு பக்கமும் பாக்கெட் வைத்த சட்டை... விக்ரமனின் அடையாளம் அப்போதும் இப்போதும் இதுதான். பெரிய தயாரிப்பாளர்கள் தொடங்கி கடலை மிட்டாய் விற்பவர் வரை லாபம் பார்க்க வைத்த இயக்குநர். "இளமை நாள்கள்', "நினைத்தது யாரோ' படங்களின் மூலம் மீண்டும் சினிமாவில் பரபரப்பான நிமிடங்களுக்குள் வந்திருக்கிறார். ""மக்களில் ஒருவனாக சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். அதனால்தான் எப்போதுமே மக்களுக்கு பிடித்த சினிமாவை எடுத்து வந்திருக்கிறேன். ""ஏன் சார் இனிமே படமே பண்ண மாட்டீங்களா?'' என என்னை துரத்தி துரத்தி வந்த ஒரு கூட்டத்துக்கு மியூசிக்கல் கார்டு மாதிரி ஒரு படம் கொடுக்க போகிறேன் அதுதான் "நினைத்தது யாரோ'. குடும்பம், காதல், சென்டிமெண்ட் இதுதான் எப்போதுமே என் பாணி. ஆனால் இதில் அதை மாற்றியிருக்கிறேன். காதல் மட்டுமே பிரதானம். ஆனால் காதல் கதை இல்லை. காதலைப் பற்றிய கதை.








            '' ஒரு சில படங்களை தவிர உங்களின் எல்லாப் படங்களுமே ஹிட். "புது வசந்தம்', "பூவே உனக்காக', "வானத்தைப் போல' காலமெல்லாம் தமிழ் சினிமாவில் மீண்டும் வராதா?







            என்னிடம் கேட்க வேண்டிய கேள்விதான். இதற்கான பதில் என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு படமும் செய்யும் போது இது ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்ற படபடப்பு இருக்கும். ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் நிம்மதி. இல்லையென்றால் நம் குறி தவறி விட்டது என்று எடுத்துக் கொள்வேன். உண்மையில் எந்த சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியும். பட ரிலீசுக்கு முன்பு படத்தை போட்டு காட்டி என்னிடம் கருத்து கேட்டுப் பாருங்கள்.






             பளிச்சென ஒடுமா, ஒடாதா என்று சொல்லிடுவேன். அந்தளவுக்கு சினிமாவின் பல்ஸ் தெரியும். என்னை நம்பியவர்களுக்கு உட்சபட்ச உழைப்பை தந்து லாபம் கொடுக்க வேண்டும். அது மட்டுமேதான் என்னுடைய குறைந்தப் பட்ச சினிமா லட்சியமாக இருக்கிறது. அந்த லட்சியத்தின் பின்னாடிதான் இந்த 21 வருடங்களும் ஓடி வந்திருக்கிறேன்.



             திரும்பிப் பார்த்தால் எனக்கே ஆச்சரியம். எத்தனை சவால் நிறைந்த பயணம். வித்தியாசமான முயற்சி இது என சொல்லி ஒருபோதும் என் சினிமாவை வியாபாரம் செய்யவில்லை. எனக்கு தெரிந்ததை, நான் வாழ்ந்த, நான் பார்த்த வாழ்க்கையில் கொஞ்சம் சினிமாத்தனம் கலந்தேன். அதுதான் என் வெற்றி. சினிமா முற்றிலும் மாறிவிட்டது. 10 தியேட்டர்களில் நூறு நாள்கள் ஓடிய சினிமா, இன்று நூறு தியேட்டர்களில் 10 நாள்கள் ஓடுகிறது. இந்த சினிமாவின் பின் ஓட கொஞ்சம் நிதானம் வேண்டும். சில சமரசங்கள் வேண்டும். அது எனக்கும் வேண்டும். 







            நீங்களே இப்படி சொல்லி விட்டால் எப்படி. அப்ப இனி குடும்ப சென்டிமெண்ட் கதைகளுக்கு தமிழ் சினிமாவில் இடம் இல்லையா?







            இப்போது இயக்கி வருகிற "இளமை நாள்கள்', "நினைத்தது யாரோ' இரு படங்களுமே என் பாணி சினிமா இல்லை. முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடுகிற படங்களாக இருக்கும். ஏனென்றால் இளைஞர்கள்தான் இப்போது தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள். குடும்பத்தோடு வந்து படம் பார்த்த காலம் இப்போது இல்லை. தூங்கி எழுந்தது முதல் படுக்கைக்கு செல்லும் வரை நிறைய பிரச்னைகள். அது இப்போதும் இருக்கிறது. ஆனால் மனதை ஆசுவாசப்படுத்த சினிமா தவிர்த்து இப்போது நிறைய சாதனங்கள் வந்து விட்டது.






            அதற்கேற்ப சினிமாவும் மாறி ஆக வேண்டிய கட்டாயம். எனக்கு பிடித்துதான் எல்லாப் படங்களிலும் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் கொடுக்க நினைத்த சினிமாவை இன்னும் எடுக்கவே இல்லை. இந்த குற்ற உணர்வுதான் என்னை அடுத்தடுத்த பயணத்துக்கு உந்தி தள்ளுகிறது. புதிது புதிதான சேனல்களின் வருகைதான் சினிமாவின் அழிவுக்கு காரணம். சீரியல்கள் சினிமாவுக்கான நேரத்தை மக்களிடமிருந்து எடுத்து கொண்டன. சீரியல் ஓடாத வீடுகளே இல்லை. சினிமாவில் காட்டப்படாத விஷயங்கள் கூட சீரியல்களில் வந்து விட்டது. நான் சினிமாவுக்கு வரும்போது எனக்கு முன்பு இருந்த காலம் வராதா என்று நினைத்தேன். இப்போது உங்களுக்கு அதே போல்தான் தோன்றுகிறது. அதற்காக முப்பது வருஷத்துக்கு முன்பு வர வேண்டிய படங்களை இப்போது எடுத்துக் கொண்டிருக்க முடியாது. சினிமா நாளுக்கு நாள் மாறும். என் பாணி படங்களை நானே எடுக்க நினைத்தாலும் இப்போது அது முடியாது.







             ஆனால் உங்கள் அக்மார்க் சினிமாவிலிருந்து நீங்கள் விலகி எடுத்த "சென்னை காதல்' படத்தில் நிறையவே தடுமாற்றம் இருந்ததே?






            அது இயல்புதான். இப்போது வேறொரு இடத்துக்கு வந்து விட்டேன். இனி தடுமாற்றங்களை பார்க்க முடியாது.







             நட்பு, காதல், குடும்பம், பாசம் என ஒவ்வொரு படத்திலும் ஒரு ஃபீல் இருக்கும். இது தானாகவே அமைந்ததா? இல்லை அதற்காக கதை தேடுவீர்களா?






            வித்தியாசமாக இருக்க வேண்டும் என நான் யோசிப்பதே இல்லை. நிறைய விஷயங்கள் தோன்றும். அதைப் பற்றி பேசிக் கொண்டே இருப்போம். அட இது நல்லா இருக்கேன்னு தோன்றினால் அதுதான் அடுத்த படத்துக்கான கதை. அதே மாதிரி படங்கள் முன்பே வந்திருந்தாலும் கவலைப்பட மாட்டேன். என் யோசனை, என் கதையமைப்பு இரண்டையும் அதில் மாற்றிக் காட்டுவேன். சரியாக வராது என தோன்றினால் அதை தொட்டுப் பார்க்கவே மாட்டேன். என் சில படங்கள் ஒரே மாதிரியாகவும் இருந்திருக்கலாம். 






            ஆனால் அதை கொடுக்கிற விதத்தில் வித்தியாசம் காட்டியிருப்பேன். சத்யம் தியேட்டர் ரசிகர்களுக்கும் படம் பிடிக்க வேண்டும். அதே சமயம் எங்கேயோ டூரிங் டாக்கீஸீல் இருக்கிற ரசிகனுக்கும் என் படம் பிடிக்க வேண்டும். அது மட்டுமேதான் என் நோக்கம். இத்தனை வருஷம் கழித்தும் "பூவே உனக்காக' பற்றி பேசுகிறார்கள். 'சூர்ய வம்சம்' பற்றி பேசுகிறார்கள். அதை கேட்கும் போது ஆசையாக இருக்கும். சின்னதாக சிலிர்ப்பு வரும். அப்படித்தான் என் ஒவ்வொரு படமும் இருக்க வேண்டும் என்று ஆசை.







            உங்களால் முன் வரிசைக்கு வந்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் புதுமுகங்களை வைத்து அடுத்தடுத்த படங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டும்?


             



            அப்படியில்லை. அப்படி நினைக்கவும் கூடாது. நான் எல்லோரையும் மரியாதையாக நடத்தியிருக்கிறேன். இருக்கிற இடம் பார்த்து ஒருவரிடமும் பழகும் பழக்கம் என்னிடம் இல்லை. எப்படி சினிமாவுக்கு வந்தேனோ அப்படியே இருக்கிறேன். யாரிடமும் எதையும் கேட்டது இல்லை. இப்போது கூட தயாரிப்பாளர்களுக்கு பஞ்சம் இல்லை. ""அவரை நடிக்க வைக்கலாம்.'' ""இந்த நடிகரை நடிக்க வைக்கலாம்'' என்று சொல்லிக் கொண்டு என்னிடம் வருபவர்களை நான் மதிப்பதில்லை. விஜய், அஜித், சூர்யா எல்லோருமே நட்பாகத்தான் இருக்கிறார்கள். சூர்யாவுக்கு மட்டும் அதீத அன்பு இருக்கிறது. அது போதும் எனக்கு. 







            கடந்து வந்த இந்த சினிமா பயணம் எப்படியிருக்கிறது. கனவுப் படமென்று உங்களுக்கும் எதாவது ஒன்று இருக்குமே?






            சாதிக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. சினிமாவுக்கு வந்த முதல் நாள் வெறி இன்னும் அடங்கவில்லை. வியாபாரத்துக்காக சில சமரசங்களோடு வாழ வேண்டி வந்தது. எத்தனை கதை, எத்தனை இயக்குநர்கள் வந்து போனாலும், "உதிரிப்பூக்கள்' படத்தை பார்த்து இன்றைக்கும் எத்தனை பரவசம் அடைகிறோம். அங்கேதான் மகேந்திரன் என்ற இயக்குநர் நிற்கிறார். 






            எத்தனை மதிப்பு மிக்க படைப்பு அது. அந்த இடம்தான் எனக்கும் வேண்டும். "வானத்தைப் போல' அப்படி வந்திருக்க வேண்டிய படம்தான். ஆனால் நினைத்தை செய்ய முடியவில்லை. விஜயகாந்த் இடத்தில் ஜனகராஜ் இருந்திருக்க வேண்டும். விஜயகாந்தும் இருந்திருக்க வேண்டும். எல்லாமே மாறிவிட்டது. தமிழர்களின் வரலாற்றை முழுமைப்படுத்தும் ஒரு கதை இருக்கிறது. அதுதான் என் பயணத்தின் கடைசி எல்லை. அதற்கு நிறைய அனுபவம் வேண்டும். நிறைய காசும் வேண்டும். இரண்டும் வந்து விட்டால் இறங்கி ஒரு கை பார்த்து விடுவேன். ஒண்ணு மட்டும் நிச்சயம். அந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும்.



            நன்றி - சினிமா எக்ஸ் பிரஸ்

            Saturday, August 11, 2012

            ஜெவை நக்கல் அடித்த கேப்டன் - தஞ்சை விழாவில் பேச்சு

            http://www.hindu.com/2006/09/13/images/2006091317580601.jpg

            தஞ்சை: முதலமைச்சர் ஜெயலலிதா செல்போன் மாதிரி... அவங்க, எப்பவுமே
            தொடர்பு எல்லைக்கு அப்பால்லதான் இருப்பாங்க” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிண்டலாக கூறினார்.







            தஞ்சையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:



            “ நான் கோபக்காரன்னு சொல்றாங்க, சட்டசபையில் என் கட்சியை பத்தி தப்பா பேசினதை எதிர்த்து கேட்டா கோபக்காரன் னு சொல்றதா? இதே நான் அன்னைக்கு அமைதியா இருந்திருந்தா மத்த கட்சிக்காரங்கள்லாம் என்னை தப்பா பேசியிருப்பாங்க, நாய் மனுசனைக் கடிச்சா நியூஸ் இல்ல, மனுசன் நாயை கடிச்சா அது நியூஸ், அதுமாதிரிதான் இதுவும்.



            நான் சின்ன வயசுல பார்த்த தஞ்சாவூர் இப்ப இல்லை, எங்கப் பார்த்தாலும் வயலும் வாய்க்காலுமா இருக்கும்.அப்படிப்பட்ட தஞ்சாவூர் இன்னைக்கு காய்ஞ்சுபோய் கிடக்கு. காரணம் இந்த அரசு. 12 மணி நேரம் மின்சாரம்னு சொன்னாங்க, மின்சாரம் வருது, ஆனா ஃபுல்லா லோ வோல்டேஜ், மோட்டார்களெல்லாம் ‘டப்’ ‘டுப்’னு வெடிக்குது.



            ஜூன் ல தண்ணி வந்துடும், ஜூலையில் தண்ணி வந்துடும்னு சொன்னாங்க, ஜூன் போய்,ஜூலைப் போய் ஆகஸ்டும் வந்துடுச்சு, ஆனால் இன்னும் தண்ணி வந்தபாடில்லை. எல்லாத்துக்கும் இவங்களோட (முதல்வர்) வீண் கவுரவம், இவங்க மட்டும் கவுரம் பார்க்காமல் கேரள, கர்நாடக முதல்வர்களை சந்திச்சு பேசியிருந்தாங்கன்னா இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது.
            https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5a6HI2NI-K-UkMIzSzH-N8Ohxfy9PVhdTtGa8a0a4ZPmKe0GwPAC-6q4_seAGJAN5bCSJKKi_4IUrmdzADew9Fxdo8NqzhPL_DftYWiKJUFi-ZQfDuAVbD9r1m03xAVK-RVWT8sbNkH_d/s640/9-11-11a.jpg




            மாடு ‘மே’ னு கத்தும், சேவல் ‘கொக்கரக்கோ’ னு கத்தும், ஆனால் அந்த அம்மா பக்கத்துல இருக்குற காக்கா கூட்டங்கள்லாம் ‘கா கா’ னு கத்துறதுக்கு பதிலா மாத்தி ‘அம்மா’ ‘அம்மா’ னு கத்துறாங்க.



            என் மக்களை நீங்க நல்லபடியாக வாழவைங்க, நானும் உங்ககூட சேர்ந்துகிட்ட ‘ஜால்ரா’ அடிக்கிறேன்.என்கிட்ட ஒரு அதிமுககாரன் ஒருத்தன் சொன்னான், “அம்மா கொடநாடுபோயிருக்காங்க” னு,அதுக்கு நான் கேட்டேன், “அவங்க போயஸ் கார்டன்ல இருந்தா என்ன,கொடநாட்டுல இருந்தா என்ன? இப்ப உன்னால போய் பார்க்கமுடியுமா?”னு கேட்டேன், செல்ஃபோன் மாதிரி அவங்க, எப்பவுமே தொடர்பு எல்லைக்கு அப்பால்லதான் இருப்பாங்க.


            ஓராண்டு சாதனைன்னு சொல்றாங்களே, என்ன சாதனை,எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம், பேங்க்ல லோன் கேட்டு போறவங்ககிட்ட ‘அ.தி.மு.க உறுப்பினர் அட்டை வைச்சிருக்கியா னு கேட்குறான்’.இப்படியெல்லாம் கேட்க உங்களுக்கு வெட்கமாயில்லை.175 குவாரிகள்ல முறைகேடுகள் நடந்திருக்கு. ஆனால் அது சம்பந்தப்பட்ட அமைச்சர் போய் அதையெல்லாம் இன்னும் பார்க்கலை.ஏன் இன்னும் விசாரிச்சு வெள்ளை அறிக்கை வெளியிடலை.




            இவங்களுக்கும் அந்த கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கு, அதனாலதான் கண்டுக்காமல் இருக்காங்க.இவங்க மக்கள் மேல அக்கறைப்படுறதேயில்லை,நாங்க ஏதாவது நல்லது செஞ்சோம்னா “விஜயகாந்த் மேல கேஸ் போடு”ன்னு சொல்றது, காலரா பத்தி ஸ்டாலின் பேசுனார்னா, அவர் மேல வழக்கு, கலைஞர் மேல வழக்கு, முரசொலி பத்திரிக்கை மேல வழக்கு,அப்படி பார்க்கும்போது ஜெயலலிதாவுக்கு இந்த வாரம் ‘வழக்கு வாரம்’.



            நான் எந்த வழக்குகளுக்கும் பயப்படமாட்டேன்,நான் பழைய சோறு,வெங்காயம் சாப்பிட்டு வளர்ந்தவன்,வாழ்க்கை முழுக்க எதிர்ப்புகளை பார்த்தவன்,இந்த பயமுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயந்திடமாட்டேன்.




            நான் 2005 ல் "லஞ்சம்,ஊழலை ஒழிப்பேன்" னு சொன்னேன், அப்ப “இதெல்லாம் ஒரு கொள்கையா? “ னு சொன்னாங்க, ஆனால் இன்னைக்கு நாடே ஊழலை எதிர்த்து பத்தி எறிஞ்சுக்கிட்டுருக்கு.
            http://www.envazhi.com/wp-content/uploads/2012/02/vijayakanth_jayalalitha_59.jpg



            நான் அந்த அம்மாவோட கூட்டணி வைச்சிருந்தப்பகூட நான் அவங்களை பார்த்ததும்,இந்த அமைச்சர்கள் மாதிரி குனிஞ்சு தரையை கூட்டலை, நீங்க சொல்லுங்க மக்களே, உங்களுக்கு ஒரு கி.மீ தூரம் வரைக்கும்கூட நான் உருண்டுக்கிட்டே வர்றேன், ஆனால் அவங்ககிட்ட நான் பம்ம மாட்டேன்.



            ஒரு குருவும்,நாலைந்து சீடர்களும் இருந்தாங்க,அப்போ அந்த குரு,அந்த சீடர்கள்கிட்ட ஆளுக்கொரு மாம்பழத்தை கொடுத்து,“இதை யாரும் பார்க்காத இடத்துல வைச்சு சாப்பிடுங்க”னு சொன்னாராம்.எல்லாரும் ஒரு ஒரு இடத்துல ஒளிஞ்சு நின்னு சாப்பிட்டாங்களாம். ஆனால் ஒரே ஒரு சீடன் மட்டும் அந்த பழத்தை சாப்பிட போகாமலே நின்னுக்கிட்டுருந்திருக்கான், அதைப் பார்த்த குரு, “ஏன் நீ அந்த வீட்டுக்குளே போய் ஒளிஞ்சு நின்னு சாபிட வேண்டியதுதானே, அங்க யாரும் பார்க்காமாட்டாங்க” னு சொன்னாராம்.





            அதுக்கு அந்த சீடனோ, “அங்க யாரும் பார்க்கமாட்டாங்கன்னு சொல்றீங்களே? ஆனால் மேல இருந்துஒருத்தன் நம்மளையெல்லாம் பார்த்துக்கிட்டுருக்கானே, என்ன பண்றது?”னு கேட்டானாம்..அதுமாதிரிதான் இந்த அதிகாரிகளும் காவல்துறையினரும்யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு நடந்துகிட்டுருக்காங்க, உங்க திமிரையெல்லாம் எங்ககிட்ட காட்டாதீங்க, தேமுதிக தொண்டர்களை உங்களால பிரிக்க முடியாது, ஏன்னா எங்க பேஸ்மெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கு”என்றார் விஜயகாந்த்


            http://1.bp.blogspot.com/-yVusvZPxk1k/T9tBNAxUMAI/AAAAAAAABmk/2Kfwnn61kas/s1600/vijayakanth_20110307.jpg
            நன்றி - விகடன்

            Thursday, April 07, 2011

            கேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீரோ VS ஜீரோ

            https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8b2VJCrdTlj6Ch-kjjAFn8KcWaEfX3-kE7cuE5MYispYxoisWTXfaX4PMalPqPNLUvBSbisuDZO8E5uosWydjdmJb6ty78GzAPi9pd51pFYRJ7D9WiFFmcCv83Uxq6-PrU8YhxU2n9-3z/s320/vijayakanth_god.jpg 

            1. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: புதுக்கோட்டை மாவட்ட மக்கள், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இருந்தும் இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை, ஐந்தாண்டு கால கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. கந்தர்வக்கோட்டை அருகே, விவசாயிகளின் விளைநிலங்களை பாழாக்கி வரும் எரிசாராய தொழிற்சாலை மூடப்படும்.

            என்னங்க இது? ஓப்பனிங்கலயே சொதப்பறீங்க?வந்ததுமே மூடு விழாவா?ஏதாவது பாஸிட்டிவ்வா சொல்லுங்க... நாங்க ஆட்சிக்கு வந்தா தீய சக்தி கருணாநிதியை உள்ளே உட்கார வைப்போம்னு.. அதானே உங்க வழக்கமான ஸ்டைலு..?


            -----------------------------------------

            2. பத்திரிகைச் செய்தி: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தி, நகரில் உள்ள அரசு அலுவலகங்களின் சுவர்களில், 2,000 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

            ஓஹோ.. ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தான் அப்படின்னு சூசகமா சொல்றீங்களா?அதெல்லாம் முடியாது.. விலைவாசி எல்லாம் ஏறிக்கிடக்கு.. அட்லீஸ்ட் ரூ 10,000 ஆவது வேணும்..,அதனால 10000 சுவரொட்டிகள் ஒட்ட சொல்லுங்க.. 


            -------------------------------------------------
            http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/anjali.jpg
            3. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: இன்றைய சூழ்நிலையில் தனித்து போட்டியிட்டு எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. புதிய நீதிக்கட்சி இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது. எங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்த கட்சி அறிவிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.

            ஏ சி சண்முகமா? ஓ சி சண்முகமா?ஏய்யா இப்படி ஈரோட்டு பேரை கெடுக்கறீங்க..?ஜாதிக்கட்சிகளை ஒழிக்கனும், ஜாதிக்கட்சித்தலைவர்களை ஓட ஓட விரட்டனும்.. அப்பத்தான்யா நாடு உருப்படும்..


            --------------------------------------------
            https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ1rqaJe6TSlJdhg-Mma3-BEiU_Xa3zky8wgwz-wgg3vCilePeHrCs8T5AxA4z_ns9Ax0QUmCU31mJTgmFjq1npme0Aemf2oJmBr1PwLCCa16h_dSSeE_7AezX1qtclHWRTIJifoxxRk0/s400/DN_13-11-08_E1_01-04%2520CNI.jpg
            4. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
            என் நண்பர் விஜயகாந்த், போயஸ் கார்டனுக்கு செல்லும் போது, கேப்டனாக இருந்தார். வெளியே வரும் போது, சிப்பாயாக வந்தார். தேர்தல் முடிவுக்கு பின், சிப்பந்தியாக மாறி விடுவார். இந்த தேர்தலில், வைகோ நல்ல முடிவு எடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த முடிவு தான் விஜயகாந்துக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் கிடைக்கும்.


            ஏய்யா என்ன ஒரு ஏத்தம்.. வை கோ எடுத்தது நல்ல முடிவா? அவருக்கு வேற வழி இல்லை.. அதனால அப்படி விட்டேத்தியா பதில் சொன்னாரு.. நீங்க வேணா பாருங்க.. கேப்டன் கூட காங்கிரஸ் கூட்டணி வைக்கும் காலம் வரும்..அதே போல் கேப்டன் சி எம் ஆகாம விட மாட்டார்.. ஏன்னா தமிழனோட தலை எழுத்தே சினிமாக்காரங்க பின்னால போய் வலியனா மகுடத்தை எடுத்து தர்றதுதான்....

            ----------------------------------------
            5. பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு: வாக்காளர்கள் மனசாட்சிப்படி, ஓட்டளிக்க வேண்டும். ஓட்டு, விற்பனைக்கு அல்ல. தமிழகத்தை மோசமான நிலைக்கு தள்ளியது தி.மு.க., அரசு. இந்த அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது

             ஏய்யா.. என்ன அநியாயம்..? இந்த அரசியல்வாதிகள் மட்டும் மனசாட்சியை
            அடகு வைப்பாங்களாம்.. ஊழல் பண்ணுவாங்களாம்.. நாங்க மட்டும் பணம் வாங்காம ஓட்டு போடனுமாம்.. எங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சீங்களா?

            --------------------------------

            6. பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி பேச்சு: காங்கிரசின் ஊழல் ஆட்சியால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஊழலில் காங்கிரஸ் புதிய சாதனை படைத்திருக்கிறது.

            ஓஹோ .. இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. ? பி ஜே பிக்கும் ஒரு சான்ஸ் வேணுமா? ஊழல் பண்ண..?

            --------------------------------------
             https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdUih_nGQbVWx8Bt1gB26l5rZfztIcHM34JWesn2mNRR87xtEr52zw6TGxMpy9TOpYY6FU-I9F4DzocjcDU6DBsby-UoPh8rtBB7x20yhuFx-TCPGkEaNt6JDO7B0s95vEGPY-d3t5TrY/s1600/thuglak_cartoon1.jpg
            7. தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு:தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் கடுமையான விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அமல்படுத்தி வருகிறது. அதற்கு காரணம், முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள் தான்.

            பொதுவா போலீஸை விட திருடன் தான் புத்திசாலியா இருப்பான்.. நீங்க என்ன தான் புதுசு புதுசா விதி முறை கொண்டு வந்தாலும் அதை எப்படி மீறலாம்னு தான் ஐடியா பண்ணுவாங்க..

            -----------------------------------------------
              http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/Tamil-Actress-Anjali-Stills.jpg
            8. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: பா.ம.க., ராமதாஸ் ஆறு மாதங்களுக்கு முன் தி.மு.க., ஆட்சிக்கு, "ஜீரோ' மார்க் போட்டார். இப்போது, அக்கட்சி தான், "ஹீரோ' என்று பேசுகிறார். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களுக்கு என்ன செய்வர்?

            நீங்க கூடத்தான் 6 வாரங்களுக்கு முன்னாடி தி முக , அதி முக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படின்னீங்க..இப்போ அம்மா கூட கூட்டணி வைக்கலையா?நீங்க 2 பேரும் சேர்ந்து மட்டும் என்னத்த கிழிக்கப்போறீங்க?

            ----------------------------------
            9. தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா பேட்டி: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, கடந்த 25ம் தேதி வரை, 45 ஆயிரத்து 984 புகார்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. ஆனால், தேர்தல் கமிஷன், 49 ஆயிரம் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்களை மட்டுமல்லாமல், தேர்தல் கமிஷனே முன் வந்து பல புகார்களை பதிவு செய்து நேர்மையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


            வந்த புகாரே 50,000னா வராத புகாரும், வர முடியாத அளவு தடுக்கப்பட்ட புகாரும் எவ்வளவு இருக்கும்.?பேசாம தமிழ்நாட்டை பூம்புகார் மாதிரி புகார் நாடு என மாற்றிடலாம்....

            Saturday, April 02, 2011

            கலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப்டன் வேட்பாளரை அடித்த விவகாரம்- காமெடி கும்மி

            டந்த 29-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க. மற்றும்
            http://www.southdreamz.com/wp-content/uploads/2008/03/arasangam-new-stills-6.jpg
            கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக விஜயகாந்த்தின் கிறுகிறு பிரசாரம்!  ( சரக்கு ஜாஸ்தியோ? )
            மாலை 3 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, பேச்சைக் கேட்கக் கூட்டம் திரண்டிருக்க... வேனில் விஜயகாந்த்தோடு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி​யின் அ.தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், பென்னாகரம் தொகுதியின் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன், தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்! ( அதுல அடி வாங்கப்போறது யாரோ? என்ற சஸ்பென்ஸோடா? )


            பேசத் தொடங்கிய விஜயகாந்த், ''ஊழலும், குடும்ப ஆதிக்கமும் நிறைந்த கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். அதுக்குத்தான் மக்களாகிய உங்கள் விருப்பப்படி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வெச்சுக்கிட்டேன். நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் போடும் ஓட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வைக்கப்போகும் வேட்டு. ( நாங்க எங்கேய்யா விரும்புனோம்? நீங்களா சொல்லிக்கறீங்க.. )

            ஊழலில் கொட்டமடிக்கும் தி.மு.க-வோடு சில சாதித் தலைவர்களும் கைகோத்திருக்காங்க. 'தமிழ் வாழ்க’ன்னு வெளியில சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், தமிழும், தமிழ் இனமும் அழியக் காரணமா இருப்பதே இந்தக் கருணாநிதிதான். ( ஓஹோ.. அது தெரிஞ்சும் ஏன் நீங்க நடிகர் சங்கத்தலைவரா இருந்தப்ப்ப அவருக்கு பாராட்டு விழா நடத்துனீங்க?)

            ஆனா, அவர்கூட போய் திருமாவளவன் இருப்பதை நினைச்சாத்தான் எனக்கு வேடிக்கையா இருக்குது. அதே மாதிரி 'மரம் வெட்டி’ன்னு ஒரு சாதித் தலைவர் இருக்கார். என் பெயரைத் தன் வாயால் உச்சரிக்க மாட்டேன்னு அவர் சொல்லிட்டதால், நானும் அவர் பெயரை சொல்ல விரும்பலை.(ஓஹோ.. தானிக்கு தீனி சரியாப்போச்சாக்கும்.. படுவாக்களா? பிச்சுப்புடுவேன் பிச்சு.. பேரை சொல்ல என்ன வெட்கம்?)

            அந்த மரம் வெட்டித் தலைவரும், ஊழல்வாதியான கருணாநிதியுடன் ஆதாயத்துக்காகக் கூட்டுப் போட்டிருக்கார். 'சாதியே வேண்டாம்’கிற வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா, இங்கே பல தலைவர்கள் சாதியைக் கையில் எடுத்துத்தான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. தன் சொந்த சாதி சனங்களுக்கு அவங்களால் என்ன நன்மைன்னு யோசிங்க... மக்களின் நலனைப்பத்திக் கவலைப்படாம, சுயலாபத்துக்காகத்தானே கருணாநிதி​யைத் தூக்கிப் பிடிக்கிறாங்க...'' என்று விளாசினார். ( இந்த டகால்டி எல்லாம் இங்கே வேணாம்.. கல்யாண மண்டபத்தை இடிச்ச கோபத்துல தானே நீங்க தி மு க  எதிர்ப்பு நிலையை எடுத்தீங்க? அது சுய நலம் தானே..?)


            பேச்சை முடிக்கும் தறுவாயில், வேனுக்குள் அமர்ந்திருந்த தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் எழுந்து நின்று, விஜயகாந்த் அருகில் நின்று கூட்டத்தைப் பார்த்து கும்பிட்டார், உடனே விஜயகாந்த், ''அதனால் மக்களே, இதையெல்லாம் மனசுல வெச்சு, உங்க வேட்பாளர் பாண்டியனுக்கு மறக்காம ஓட்டுப் போடுங்க!'' என்று கேட்டுக்கொண்டார். பெயரை மாற்றிச் சொன்னதும் வேட்பாளர் பாஸ்கர், விஜயகாந்த் காதைக் கடிக்கவே, ''மன்னிக்கனும்... ஏதோ ஞாபகத்துல பாண்டியன்னு சொல்லிட்டேன். பாஸ்கருக்கு ஓட்டுப் போடுங்க!'' என்று திருத்திக் கூறி, பிரசாரத்தை நிறைவு செய்தார். ( மப்புல உளறிட்டு சமாளிப்பு வேற. சொன்னா கோபம் வந்துடுது...வேட்பாளர் பேரே ஞாபகம் இல்லைன்னா வாக்குறுதி எப்படி ஞாபகம் இருக்கும்?)


            விஜயகாந்த் பேசியபோது, நடுநடுவே கையில் இருந்த இரண்டு மைக்குகளும் கோளாறாகி சவுண்ட் கட் ஆனது. மைக்கையும், கூடியிருந்த மக்களையும் மாறி மாறிப் பார்த்தபடியே ''இது வேற ஒண்ணு...'' என்றவர், மைக்குகளை அசைத்துச் சரிசெய்ய முயல... அப்போது மைக்குகளின் பாகங்கள் கழன்று, வேனுக்குள் விழுந்தன. அதைப் பார்த்து மைக்செட் அமைப்பின் லட்சணத்தை மேலும் கிண்டல் செய்யும் தோரணையில் மக்களைப் பார்த்தவர்... தன் ஸ்டைலில் நாக்கை மடித்துக் கடித்தபடியே வண்டிக்குள் இருந்த மைக்செட் அமைப்பாளரிடம் மைக்குகளைக் கொடுத்துவிட்டு, அவர் தலையில் தட்டினார். ( ஓஹோ அதுகு பேரு தட்றதா? மப்புல சப்பு சப்புன்னு அடிச்சுப்போட்டு.. )


            ஆனால், சில மணி நேரத்தில் நடந்ததுதான் ஹைலைட்... ஒரு டி.வி-யில், ''தர்மபுரி பரப்புரையின்போது பொது இடத்தில் விஜயகாந்த், வேட்பாளரை அடித்து உதைத்தார்... மக்கள் கடும் அதிர்ச்சி... இன்றிரவு 10 மணி செய்தியில் காணத் தவறாதீர்கள்'' என்று ஃப்ளாஷ் நியூஸ்  ஓடியது. பின்னர் இரவு 10 மணிச் செய்தியில் ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.(பின்னே சும்மாவா? வெறும் கைலயே நாங்க முழம் போடறவங்க..அவல் கிடச்சா விட்ருவமா?)


            உயரமான இடத்தில் இருந்து படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் விஜயகாந்த் கை, வேனுக்கு  உள்ளே இருந்த ஒருவரின் தலையில் படுவதை மட்டும் சவுண்ட் எஃபெக்ட் சேர்த்து, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள். அதைத் தொடர்ந்து அந்தக் காட்சி, 'மக்கள் தொலைக்காட்சி’, 'கலைஞர் செய்தி’, 'சன் செய்தி’ சேனல்களிலும் ஒளிபரப்பாகவே... தமிழகம் முழுக்கப் பரபரப்பு! ( எடிட்டிங்க் வேலைல சன் டி வி , கலைஞர் டி வி களுக்கு மாஸ்டர் பட்டமே தரலாம்..)


            நடந்த சம்பவம் பற்றி தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் நாம் கேட்டோம். ''மைக் தொல்லை செய்தபோது, சரிசெய்யும்படி மைக் அமைப்பாளரிடம் கேப்டன் கொடுத்தார். அப்போது கீழே இருந்த அவரது தலையில் இயல்பாக கேப்டன் கைபட்டது. அப்போது நானும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாள​ரான பழனியப்​பனும் வேனுக்குள்​தான் உட்கார்ந்து இருந்தோம். ஆனா, 'என்னைத்தான் கேப்டன் அடிச்​சார்’னு தப்பான ஒரு செய்தியை ஆளும் கட்சி தரப்பு சேனல்களும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இதுக்கு சட்டரீதியாகப் பாடம் புகட்டுவோம்!'' என்றார் கொதிப்பாக. ( தக்காளி.. அடி வாங்கிட்டு சமாளிக்குது பாரு.. )


            விஜயகாந்த் கை ஓங்கியதை ஒரு குறிப்பிட்ட டி.வி. இவ்வளவு பெரிதாக்க என்ன காரணம் என்று தே.மு.தி.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''விஜயகாந்த், தன் பேச்சுக்கிடையில் ராமதாஸை மரம் வெட்டித் தலைவர் என்றுதான் குறிப்பிடுகிறார். மேலும் சாதி அரசியலை ஒரு பிடி பிடித்தார். அந்தக் கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். (இவரு மட்டன் சிக்கனைத்தான் ஒரு பிடி பிடிப்பாரு... ?)

            இதுவரைக்கும் ராமதாஸைத் திட்டி எந்தத் தலைவரும் இவ்வளவு காரசாரமாகப் பேசியது இல்லை. முதல் தடவையாக அவரைப்பற்றி கடுமையாக கேப்டன் பேசுகிறார் என்றதும், அதைத் திசைதிருப்ப இப்படிச் செயல்படுகிறார்கள். எங்கள் கேப்டன் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸை முதலில் பதில் தரச் சொல்லுங்கள்!'' என்றார்கள்.( தலைவரா? எங்கே எங்கே? )


            தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் வைக்கும் விமர்சனங்களை இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்தது இல்லை என்பதுதான் உண்மை! ( சொந்தப்பிரச்சனைக்கு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க.. கஜேந்திரா பட பெட்டி தூக்கிட்டு போன விவகாரத்துல 2 பேருக்கும் பிரச்சனை.. என்னமோ மக்கள் பிரச்சனைல மக்களுக்காக போராடுனது மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?

            Thursday, March 31, 2011

            கறுப்பு எம் ஜி ஆர் + சிவப்ப்பு ஜெயலலிதா VS விகடன் பேட்டி - காமெடி கும்மி கலாட்டா

            .தி.மு.க. கூட்டணியின் அனல், புனல் இரண்டுமே இப்போது விஜயகாந்த்தான்!

            அப்பாவின் 'முரசொலி’ அவரைத் திட்டித் தீர்க்கிறது. 'விஜயகாந்த் மானஸ்தன்!’ என்று தூபம் போட்டார் அண்ணன் அழகிரி. '30, 40 சீட்டுக்காகக் கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் என்ற முன்னாள் கதாநாயகன் என்ன ஆனார்?’ என்று கேட்டார் தம்பி ஸ்டாலின். தி.மு.க-வின் வெற்றிக் கணக்கை, விஜயகாந்த்தின் கூட்டணிக் கணக்கு முறியடித்து வருகிறதோ என்ற கோபத்தின் வெளிப்பாடுகளாகவே இவர்களின் வாக்குமூலங்களைக் கருத வேண்டி இருக்கிறது.

            இதுவரை 'சிங்கிள் சிங்கமாக’ வலம் வந்த விஜயகாந்த், இப்போது கூட்டணிக் காட்டுக்குள். வெளுத்து வாங்கும் வெயிலில் பிரசாரம் போகும் அவரது வேனில் ஓர் இடம் கிடைத்த இடைவேளையில், பல விஷயங்களைப் பேச முடிந்தது.


            1. ''முதல் கேள்வியை நானே கேட்கிறேன் சார்! 'தெய்வத்துடனும் மக்களுடனும் தான் கூட்டணின்னு சொன்ன நீங்க, ஏன் ஒரு அணியில் சேர்ந்தீங்க?’ன்னுதானே கேட்கப்போறீங்க?''- உஷாராக எடுத்துக் கொடுக்கிறார்.
            ''அதுதானே முதல் கேள்வியாக இருக்க முடியும்...'' 


            ''இன்றைக்கு என்னோட ஒரே இலக்கு, முதலமைச்சர் நாற்காலியில் கருணாநிதி நீடிக்கக் கூடாது. தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் தொடரக் கூடாது. அதுக்கு எது சரியான முடிவோ, அதைத்தான் நான் எடுத்திருக்கேன். என்னை தனியா நிறுத்தி, ரத்தம் குடிக்கச் சில நரிகள் தயாராக இருந்தன. அதற்கு நான் தடைபோட்டு விட்டேன். அந்த ஆத்திரத்தில்தான் என் மீது அவதூறு பரப்புறாங்க!
            இப்போதும் சொல்றேன்... மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி வைத்து இருக்கேன். சேலத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில், 'கூட்டணி சேரலாமா, வேண்டாமா’ என்று கேட்டேன். 'கூட்டணி சேருங்கள்! அப்போதுதான் நம் எண்ணம் நிறைவேறும்’னு எல்லா மக்களும் ஒரே மாதிரி சொன்னாங்க. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது அண்ணாவின் மந்திரம். அதைத்தான் நான் செயல்படுத்தி இருக்கேன்!''


            கேப்டன் சார்.. யார் உங்களுக்கு 41 சீட் தர்றாங்களோ அவங்க தான் உங்களுக்கு தெய்வமா? அப்போ அய்யா 50 சீட் குடுத்தா என்ன பண்ணுவீங்க? தி முக , அதிமுக ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு சொன்னீங்களே அது என்னாச்சு? 

            2. ''அ.தி.மு.க-வுடன் நீங்கள் கூட்டணி அமைத்தது சந்தர்ப்பவாதம் என்று சொல்லப்படுகிறதே?'' 

            '' 'கருணாநிதி ஒரு தீய சக்தி’ என்று சொல்லி, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்த கட்சி தான் அ.தி.மு.க. 'கருணாநிதி பல தீய சக்திகளின் ஒட்டுமொத்த உருவம்’ என்று சொல்லி வருபவன் நான். ஒரே கொள்கைகொண்ட இரண்டு கட்சிகள் கூட்டணிவைப்பது எப்படி சந்தர்ப்பவாதம் ஆகும்? இதுதான் சரியான வாதம்!

            கருணாநிதி அமைச்சிருக்கிறது கொள்கைக் கூட்டணியா? காங்கிரஸ் கட்சியை 1967-ம் வருஷம் வீட்டுக்கு அனுப்பினார் அண்ணா. நாட்டை நாசமாக்கினதே காங்கிரஸ் கட்சிதான்னு சொன்னார் அண்ணா. இன்றைக்குத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, காங்கிரஸ் கட்சி கேட்பதையெல்லாம் தூக்கிக் கொடுக்கிறார் கருணாநிதி.


            தி.மு.க-வின் காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கை அடமானம் வைக்கப்பட்டதற்குக் காரணம், ஆ.ராசா திஹார் ஜெயிலில் இருக்கிறதுதானே?
            டாக்டர் ராமதாஸ் கட்சி ஆரம்பிச்சதில் இருந்து கருணாநிதியைத்தான் ஆதரிச்சுக்கிட்டு இருக்காரா? இந்தக் கூட்டணிக்குள் எத்தனை தடவை வந்தார்... எத்தனை தடவை வெளியே போனாருங்கிற கணக்காவது கருணாநிதிகிட்டயும் ராமதாஸிடமும் உண்டா? 'கருணாநிதி ஆட்சிக்கு எத்தனை மார்க் போடுவீங்க?’ன்னு ராமதாஸிடம் ஒரு நிருபர் கேட்டப்போ, 'முட்டை மார்க் போடுவேன்’னு சொன்னவர் அவர். முட்டை மார்க் போட்ட ராமதாஸும் கருணாநிதியும் மேடையில் சிரிக்கிறது சந்தர்ப்பவாதம் இல்லையா?''

            மிஸ்டர் கேப்டன்.. சந்தர்ப்பவாதத்தைப்பற்றி நீங்க பேசாதீங்க.. 30 அல்லது 40 சீட்டுக்காக கட்சியை அடமானம் வைக்க மாட்டேன்னு ஒரு மானஸ்தன் சொன்னதா ஞாபகம்.. 


            '3. 'நீங்கள் மானஸ்தர் என்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் போக மாட்டீர்கள் என்றும் அழகிரி சத்தியம் செய்து வந்தாரே?'' 


            '' 'நீண்ட கால நண்பர்’னு வேற சொல்லியிருக்கார்! சின்ன வயசுல நானும் அவரும் என்ன கோலிக்குண்டு விளையாடினோமா? கபடி ஆடினோமா? சும்மா, மைக் கிடைச்சதும் அடிச்சுவிட்டிருக்கார் அழகிரி.

            அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க. கூட்டணி போடக் கூடாது. போட்டால், தி.மு.க. அதோட காலிங்கிறது னால, அவங்க என்னென்னவோ முயற்சி பண்ணிப் பார்த்தாங்க. நான் எதுக்கும் அசரலை. விலை பேசினாங்க. நான் மசியலை. உளவுத் துறையைவெச்சு பொய்களை, வதந்திகளைக் கிளப்பினாங்க. நான் எதைப்பத்தியும் கவலையே படலை. அர்ஜுனனுக்குத் தெரிந்தது கிளியின் கழுத்து மட்டுமேங்கிற மாதிரி, எனக்குத் தெரிந்தது எல்லாமே கருணாநிதி மட்டும்தான். கோடிகளைவிட, இந்த மோசடிப் பேர்வழிகள்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க.
            கோடிகளை வாங்கினால், நான் மட்டும்தான் சுபிட்சமா இருந்திருக்க முடியும். ஆனா, நான் அந்தப் பாவத்தைச் செய்யலை. மே 13-க்குப் பிறகு, நாடே நல்லா இருக்கப்போகுது!''


             ஏன்? நீங்க சினி ஃபீல்டை விட்டு விலகப்போறீங்களா? 


            4. '' 'அ.தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசியது உண்டா?’ என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறாரே?'' 


            '' 'அடுத்த வீட்ல என்ன நடக்குதுன்னு நான் பார்க்க மாட்டேன்’னு அவரோட அப்பா சொல்லி இருக்கார். அதை ஸ்டாலினும் கடைப்பிடிக்கட்டும். சேர்ந்து பிரசாரம் பண்றோமா, தனியா பண்றோமாங்கிறது முக்கியம் இல்லை. ஜெயிக்கிறோம்... அதுதான் எங்க லட்சியம்!''

            எலக்‌ஷனுக்கு முன்னாலயே 2 பேரும் சேரலைன்னா எலக்‌ஷன் ல ஜெயிச்ச பிறகு அந்தம்மா உங்களை கிட்டே விடும்னு நினைக்கறீங்க?

            5. ''தி.மு.க-வினர் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். தங்களால் பயன் அடைந்தவர்கள் வாக்கு அளித்தாலே போதும் என்கிறார்களே?'' 

            ''பயனடைந்தவர்கள் பத்துப் பேர்னா... எதுவும் கிடைக்காதவங்க தொண்ணூறு சதவிகி தம் பேராச்சே! அவங்க உதயசூரியனுக்கு எப்படிக் குத்துவாங்க?
            இலவச டி.வி. எதுக்குக் கொடுத்தார் கருணாநிதி? டி.வி-க்களின் எண்ணிக்கை அதிக மானால், தன் குடும்பத்துக்கு கேபிள் பணம் கொட்டும். அதுக்காகத்தான். அரசாங்கப் பணத்தைப் பொதுமக்களுக்குக் கொடுத்து, அதைத் தன் குடும்பத்துக்குத் திருப்புற டெக்னிக் அது. 'விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடியவர் கருணாநிதி’ன்னு நீதிபதி சர்க்காரியா சும்மாவா சொன்னார்?


            இலவச அரிசி கொடுக்குறோம்னு வாங்கிட்டு... கடத்திக்கிட்டு இருக்காங்க. யார் கடத்துறாங்கன்னும் மக்களுக்கே தெரியும்!
            கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமா கோடிக்கணக்கான பணம் குறிப்பிட்ட ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குப் போகுது. அதோட முதலாளி, பல வருஷமா கருணாநிதிக்குக் கூட்டாளி. அரசாங்கப் பணத்தை எப்படித் திருப்பிவிட்டிருக்கார்னு பாருங்க.


            இப்படி உள்நோக்கம் இல்லாம, எந்தத் திட்டத்தையும் கருணாநிதி கொண்டுவரலை. கொண்டுவரவும் மாட்டார். 'மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்... தம் மக்கள் நலன் ஒன்றையே மனதில்கொள் வார்’ங்கிற பாட்டு கருணாநிதிக்கு மட்டும் தான் பொருந்தும்.


            'அரிசிக் கடத்தலைத் தடுப்பேன்... மணல் கொள்ளையைத் தடுப்பேன்... கந்து வட்டிக் கொடுமையை ஒழிப்பேன்’னு நாங்க சொல்ல வேண்டியதை... ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி திருவாரூர்லயும் தஞ்சாவூர்லயும் சொல்றார். இதை எல்லாம் தடுக்க வேண்டிய அஞ்சு வருஷமும் அவர் என்ன செஞ்சாராம்?

            இந்த அஞ்சு வருஷமா இந்த மூணும் அமோகமா நடந்துச்சுங்கிறதை ஒரு முதல்அமைச்சரே ஏற்றுக்கொள்கிறாரா? இதை ஒழிக்க அவர் போட்ட திட்டங்கள் என்ன? அதிகாரிகளுடன் எத்தனை தடவை ஆலோ சனை செய்தார்? திருவண்ணாமலையில் ஒரு லாரியே எரிஞ்சுபோச்சு. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அதை ரேஷன் அரிசின்னார். கூட்டணி சேர்ந்த பிறகு, அவங்க அதைப்பத்திப் பேசவே இல்லை. கருணாநிதியும் ராமதாஸும் சேர்ந்தால், உண்மை செத்துடுமா?


            'பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை எங்கள் கட்சிப் பெண்களே அடித்து நொறுக்குவாங்க’ என்றார் ராமதாஸ். மதுவிலக்கு வேண்டும் என்று ராமதாஸ் சொன்னார். செய்தாரா கருணாநிதி?
            இப்படி இந்த அஞ்சு வருஷத்துல எந்த நல்லதும் நடக்கலை. எந்த முகத்தை வெச்சுக் கிட்டு, ஓட்டு கேட்டு வர்றாங்கன்னே புரியலை!''

            என்ன இப்படி சொல்லீட்டீங்க..?நீங்க அரசியலுக்கு வந்ததே அவங்களால தானே.. அது நல்லது இல்லையா? எத்தனையோ நடிகைகளுக்கு கலைமாமணி விருது கிடைச்சது அது நல்லது இல்லையா?கலைஞர் டி வி யே என்னுது இல்லைன்னு கலைஞர் சொல்லீட்டார்.. அது பொது சொத்து ஆகப்போகுது.. அது நல்லது இல்லையா?அவ்வளவு ஏங்க? தப்ஸி, தமனா,அஞ்சலி போன்ற சூப்பர் ஃபிகர்கள் களம் இறங்குனதும் அய்யாவோட ஆட்சில தானே..?


            6. ''இதுவரைக்கும் நீங்க போய்ப் பார்த்த இடங்களில் மக்கள் மனோபாவம் எப்படி இருக்கிறது?'' 

            ''ஆளும் கட்சிக்கு எதிரான கோபத்தைத்தான் நான் பார்க்கிறேன். மாற்றம் வரணும்னு நினைக்கிறது எல்லார் முகத்துலயும் தெரியுது. இப்படியே விட்டா, தி.மு.க. குடும்பச் சொத்து ஆனது மாதிரி... தமிழ்நாடும் ஒரு குடும்பத்தின் சொத்தா மாறிடும்னு மக்கள் நினைக்கிறாங்க.

            முன்பெல்லாம் படிச்சவங்களுக்குத்தான் நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும். ஆனா, இப்ப பாமரர்களுக்கும் தெரிஞ்சிருக்கு. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் கிராமத்துப் பாட்டாளிக்கும் நல்லாவே தெரியுது. அதில் அடிச்ச பணத்தைத்தான் நமக்குத் தரப்போறாங்கன்னு மக்களே சொல்றாங்க.
            ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகம்,

            அவர் இதுவரைக்கும் போட்டுவெச்சு இருந்த கொள்கைவாதி முகமூடியைக் கிழித்துவிட்டது. 2009 மே மாசத்துக்குப் பிறகு, உண்மையான தமிழர்கள் யாரும் அவரை ஆதரிக்கத் தயாரா இல்லை.

            ஸ்பெக்ட்ரம் மோசடி வெளிச்சத் துக்கு வந்த பிறகு, அவர் இதுவரைக்கும் போட்டு வைத்திருந்த நேர்மையாளன் என்ற முகமூடியும் கிழிந்துவிட்டது. 2010 நவம்பர் மாசத்துக்குப் பிறகு நேர்மையான தமிழர்கள் யாரும் அவரை ஆதரிக்கத் தயாரா இல்லை.

            எகிப்துல முபாரக் ஓடின மாதிரி, இங்கேயும் நடக்கப்போகுது பாருங்க!'
            ''மக்கள், மௌனப் புரட்சிக்குத் தயாரா ஆயிட்டாங் கன்றது இந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே தெரியலையா!''

            கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறி விடும் என்று நினைத்துத்தான் பலர் மனப்பால், மனபிராந்தி, மன விஸ்கி எல்லாம் குடிக்கறாங்க.. இந்த கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் தப்ஸி வந்தாக்கூடத்தான் வரும்.. அதுக்காக தப்ஸி தான் அடுத்த சி எம்னு சொல்லிட முடியுமா? போங்க தம்பி போங்க.. போய் புள்ள குட்டிகளை நல்லா படிக்க வைங்க.. அவங்களாவது நல்ல புத்தியோட வளரட்டும்..  


            டிஸ்கி -1.  இந்த பதிவில் கறுப்பு , வெள்ளை, சிவப்பு என கலர் மாறி மாறி வருவது எதேச்சையானது.. நான் அதிமுகவுக்கு ஆதரவு என யாரும் முத்திரை குத்த வேண்டாம்..  


            டிஸ்கி 2  - டைட்டிலில் ஜெயலலிதா இருக்கார் ஆனால் பதிவில் அவர் இல்லையே என கேட்பவர்களுக்கு  நல்லாட்சி நடக்குது என சிலர் சொல்றாங்க.. ஆனால் அதில் பாதிதானே அதாவது வெறும் ஆட்சி மட்டும் தானே நடக்குது. அதை குறிப்பால் உணர்த்தவே அப்படி டைட்டில்.... ஹி ஹி ( எதையாவது எதுகை மோனையா டைட்டில் வைக்க வேண்டியது.. அப்புறம் அதுக்கு நியாயம் கற்பிக்க யோசிக்க வேண்டியது..)