Showing posts with label சிம்பு. Show all posts
Showing posts with label சிம்பு. Show all posts

Saturday, September 20, 2014

சிம்பு - கன்னட நடிகை ஹர்ஷிகா-வெளியான சர்ச்சை வீடியோ

சர்ச்சை வீடியோவில் இருப்பது நான் இல்லை: சிம்பு



சமீபத்தில் வெளியான சர்ச்சை வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் நடிகர் சிம்பு பதிலளித்துள்ளார். 


ஓர் ஓட்டல் அறைக்கு வெளியே நின்று, ஒரு இளைஞரும் யுவதியும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் இருப்பது கன்னட நடிகை ஹர்ஷிகாவும், சிம்புவும் தான் என்று இணையத்தில் பகிரப்பட்டது. அண்மையில் மலேசியாவில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் இருவரும் சந்தித்ததாகவும், அப்போதைய பரிச்சியத்தின் விளைவே ஹோட்டல் லாபியில் இருவரும் முத்தமிடும் வரை வந்துள்ளது என்றும் தகவல்கள் பரவின. இது குறித்து, இதுவரை சிம்புவோ, ஹர்ஷிகாவோ ஊடகங்களில் பேசவில்லை. 


தற்போது, சிம்புவிடம் இதுபற்றி கேட்டபோது, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போலியான ஒரு வீடியோவிற்காக நான் ஏன் பதற வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். 

 thanx - the hindu

விருது வழங்கும் விழாவில் சந்தித்த சிம்பு - ஹர்ஷிகா | படம்: ஹர்ஷிகா ட்விட்டர் பக்கத்திலிருந்து
விருது வழங்கும் விழாவில் சந்தித்த சிம்பு - ஹர்ஷிகா | படம்: ஹர்ஷிகா ட்விட்டர் பக்கத்திலிருந்து 
 

Wednesday, November 27, 2013

முன்னணி கில்மா ஜோடி சிம்பு - நயன்தாரா மீண்டும் இணைந்ததன் பின்னணி என்ன?

இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சிம்புகோலிவுட்டின் இப்போதைய பரபரப்பான இயக்குநர் பாண்டிராஜ்தான். தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இவர், இப்போது மேலும் பரபரப்பாக காரணம் சிம்பு - நயன்தாரா. நீண்ட காலமாக பிரிந்திருந்த சிம்புவும் நயன்தாராவும் தன் படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவிக்க ஒட்டுமொத்த தமிழகமும் அவரைத் திரும்பிப் பார்த்தது. “இதை எப்படி சாதித்தார்” என்று எல்லோருக்கும் வியப்பு. அந்த வியப்பையே முதல் கேள்வியாக்கி அவரைச் சந்தித்தோம். 



சிம்பு, நயன்தாரா உங்கள் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார்கள்?


 
இதைப்பற்றி நிறைய பேசிவிட்டேன். சிம்பு படத்தை நான் இயக்குவதாக ஒப்புக்கொண்ட அடுத்த நாளிலிருந்தே நாயகியை தேடிக் கொண்டிருந்தோம். இந்தப் படம் சிட்டி, ஐ.டி துறை சார்ந்த களம். படக்குழுவினரோடு பேசிக்கொண்டிருந்தபோது இதில் நாயகியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று பேச்சு எழுந்தது. அவரிடம் பேசியபோது முதலில் கொஞ்சம் யோசித்தார். பிறகு கதை, சூழல் பிடித்திருக்கவே சம்மதம் தெரிவித்தார். படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. இதில் சிம்பு, சூரி சேர்ந்து கலக்கியிருக்கும் காமெடி காட்சிகளை எடுத்துள்ளோம். டிசம்பர் மாதத்தில் நயன் தாரா, சிம்பு நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். 
 

சிம்பு, சூரி புதுக்கூட்டணி எப்படி இருக்கிறது? 

 
முழுக்க நகர வாழ்க்கையைப் பேசும் படம். நான் பார்த்த, ரசித்த விஷயங்களை நிறைய சேர்த்திருக்கேன். சிம்பு, சூரி, நான் உட்பட எல்லோருக்குக்குமே வேறொரு இமேஜை இந்தப் படம் கொடுக்கும். கேமராமேன் பாலசுப்ரமணியம் கலர்ஃபுல்லாக எடுத்திருக் கிறார். படப்பிடிப்பின்போது சூரி, ‘‘ இவ்வளவு காஸ்ட்லியான சர்ட், பேண்டா? பொதுவா எனக்கு ஒரு கைலியும், டி-சர்ட்டும் கொடுத்து ஏமாத்திடுவாங்களே. இப்போதான் புரமோஷன் கிடைச்சிருக்கு!’’ என்று சிரித் தார். அந்த அளவுக்கு அவரை மாற்றிக் காட்டியிருக்கிறோம். எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கும் படமாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. 


சாதாரண மனிதர்களை, இயல்பான இடங்களை அழகா படமாக்குறீங்களே? 


 
படம் பார்க்குறவங்க அவங்களோட வாழ்க்கையில், கதை ஒன்றி வருகிற மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப் பேன். இப்படியும் கூட நடக்குமா என்று கேள்வியையோ, சந்தேகத்தையோ எழுப்பக் கூடாது. பார்த்த, கேள்விப்பட்ட படித்த சம்பவங்கள் - இதுதான் என் கதை. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு வார்த்தை விடும்போது அதை நீங்கள் ரசித்தால், உடனே குறிப்பெடுத்துக்கொள்வேன். எங்காவது ஒரு இடத்தில் அது கதையில் ஒட்டிக்கொள்ளும். 
 


ஒரு நல்ல இயக்குநர், தயாரிப்பாளராகவோ நடிகராகவோ பரிணமிக்கும்போது கிரியேட்டி விட்டி பாதிக்கப்படும் என்கிறார்களே? 

 
ஒரு விதத்தில் இது உண்மைதான். இயக்குநரே, தயாரிப்பாளராக இருப்பதில் நல்ல விஷயங்களும் இருக்கிறது. போராட்டம், பணத்தின் மதிப்பு எல்லாவற்றி லும் கூடுதல் கவனம் செலுத்த முடி கிறது. அதேபோல, எடுத்த ஒரு சீன் பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அதிக சிரமத்தைக் கொண்டு படம்பிடிக்கலாம். இதே, தயாரிப்பாளர் வேறொருவராக இருக்கும்போது அதை விளக்கமாக சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்துகொள்ளவாவது ஒரு படத்தில் இயக்குநரே தயாரிப்பாளராக இருந்துவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 



மீண்டும் ‘பசங்க’ மாதிரியான படம் எடுப்பீர்களா? 


 
கண்டிப்பாக எடுப்பேன். கிராமத்து குழந்தைகளை மையமாக வைத்து கதை சொன்னது போல, முழுக்க நகரத்து குழந்தைகளை வைத்து படம் பண்ண ஆசை இருக்கிறது. ஒரு பெரிய ஹீரோ படம், அடுத்து ஒரு பசங்க படம் என்று மாறி மாறி பண்ண வேண்டும் என்பதுதான் என் ஆசை. பார்க்கலாம். 



மோசடி, பிரச்னை என்று உங்களை சுற்றி அவ்வப்போது ஏதாவது சுழல்கிறதே? 


 
சிலருக்கு உழைக்க கஷ்டமா இருக்கு. ஓடும் குதிரையில் பயணிக்க விருப்பப்படுகிறார்கள். இங்கே பிச்சைக் காரர்கள் குறைவு. காஸ்ட்லி பிச்சைக்காரர்கள் அதிகம். அவர்களால் உண்டாகும் இடை யூறுகள் இவை. அதை நான் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. 

 
குடும்பம், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? 


 
சில நாட்களுக்கு முன் சினிமா விழாவில் கலந்துகொண்டு வெளிநாடு சென்று திரும்பிய போது, என் மனைவி வசந்திக்கு ஒரு தங்க நகை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன். ‘இதெல்லாம் எதற்கு, என்னோடும், குழந்தைகளோடும் 3 மணி நேரம் இருங்க. அதுதான் சர்ப்ரைஸ்!’ என்றார். அப்போது எனக்கு எதுவுமே பேசத் தோணல. ‘கொஞ்ச நாட்கள் பொறுத்திரு. எனக்கும் ஒரு என்ட் கார்டு வரும். சினிமாவில் நானும் ஒரு நாள் ஓய்வு பெற்றுவிடுவேன். அப்போது நீயே வேலைக்கு போ என்றாலும், என்னால் போக முடியாது. அப்போது உங்களுடன் செலவழிக்கிறேன்’ என்று சொல்லி ஆறுதல் படுத்தினேன். இப்போது குடும்பத்தை பொறுத்தவரைக்கும் நான் குற்றவாளியாகவே இருக்கிறேன். 



இந்த பயணம் எப்படி இருக்கிறது? 


 
இப்போதும் அடிக்கடி ஊருக்கு போய் வருகிறேன். எனக்குப் பிடித்ததே அதுதான். கையெழுத்து போடத்தெரியாத அப்பா, கைரேகை வைக்கத்தெரியாத அம்மா, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமத்திலிருந்து வந்து அடைந்திருக்கும் இந்த இடத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு தானே ஆகணும். என்னமோ தெரியலை, உதவி இயக்குநராக இருந்தபோது வாங்கிய 3000 சம்பளம் கொடுத்த திருப்தி, இப்போது லட்சங்களைப் பார்க்கும்போது இல்லை. அதேபோல, இப்போ வரைக்கும் ஒரு இயக்குநரா பொழுதுபோக்குக்கான படங்களைத்தான் இயக்கியிருப்பதாக நினைக்கிறேன். இன்னும் மனதுக்குப் பிடித்த படமும் கொடுக்கவில்லை. அதை செய்யும் வரைக்கும் இந்தப் பயணம் தொடரும். 

 a



நன்றி - த தமிழ் ஹிந்து

Thursday, September 05, 2013

சிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன்சிகா சிலிர்ப்பு பேட்டி

 

 

சிம்புவுடன் காதல் பூ பூத்தது எப்படி ?ஹன்சிகாவின் சிலிர்ப்பு அனுபவம்

Hansika shares how she fall in love with Simbu
நயன்தாரா விவகாரத்துக்கு பின், சிம்புவைக் கண்டாலே நடிகைகளுக்கு பயம். "அவருடன் நடித்தால், காதல் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கும். அதனால், தங்கள் மார்க்கெட்டும் பாதிக்கும் என, கோலிவுட்டில் பேச்சு இருந்ததால், பல முன்னணி நடிகைகள், விலகியே நின்றனர். இந்நிலையில், "வாலு, வேட்டை மன்னன் படங்களுக்கு, சிம்புவுடன் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானபோது கூட, நயன்தாராவுடன் அவர் காதல் கொண்டு பிரிந்த விஷயத்தை சொல்லி, பல அபிமானிகள் ஹன்சிகாவை எச்சரித்தனராம். அதனால், சிம்புவுடன் நடிக்கத் துவங்கிய போது, அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கியே நின்றாராம் ஹன்சிகா. 

ஆனால், போகப் போக சிம்புவின் நாகரிகமான நடவடிக்கையும், பேச்சும், ஹன்சிகாவை கவர்ந்ததாம். அதன்பின் தான், மெல்ல மெல்ல புன்முறுவல் பூக்க ஆரம்பித்துள்ளார். இப்படி ஏற்பட்ட நட்பு தான், நாளடைவில் காதலாக மாறியதாம். இதை தன் நட்பு வட்டாரங்களிடம் சொல்லி சிலிர்க்கும் ஹன்சிகா, இத்தனை நாளும் மற்ற ஹீரோக்களை மாதிரி தான், சிம்புவும். அவர் ஒன்றும் ஸ்பெஷல் இல்லை என்று சொல்லி வந்தார். ஆனால், காதலை ஒப்புக் கொண்ட பின், "சிம்பு எனக்கு எப்பவுமே, "ஸ்பெஷல் தான் என்று, வெட்கத்துடன் சொல்கிறார் ஹன்சிகா.


சிம்புவுடன் எப்போது திருமணம்....? ஹன்சிகா எக்ஸ்குளூசிவ் பேட்டி!

After 5 years I will marry simbu says Hansika
கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்களாக இருந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நமது தினமலர் நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...

என் தொடர்பான உண்மை செய்திகளை கொடுக்கும் மீடியாக்களில் தினமலர் ரொம்ப முக்கியமானது. அதனால் தான் நானே போன் செய்தேன். தற்போது பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மும்பையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளேன். தற்போது தமிழில் எனக்கு 4 படங்கள் கைவசம் உள்ளன. ரொம்ப பிஸியாக நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் சிம்புவுடன் காதல் பற்றி‌ய செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் திருமணம் இப்போது கிடையாது. எனக்கும் பல படங்கள் இருக்கிறது, அதேபோல் சிம்புவுக்கும் பல படங்கள் இருக்கிறது. எங்கள் காதல் செய்திகளால் எங்களை நம்பி படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது. அதனால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். திருமணம் தொடர்பாக இன்னும் நாங்கள் நிச்சயம் கூட செய்யவில்லை. எங்கள் படவேலைகள், எங்களுக்கான கமிட்மென்ட்டுகளை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியுள்‌ளோம். இன்னும் 5 வருடங்கள் கழித்து சிம்புவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

மேலும் சிம்புவை உங்களுக்கு எதனால் பிடித்தது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, சிம்புவிடம் இதுதான் பிடித்தது என்று என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சிம்புவின் ஒவ்வொரு செயலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவரது திறமையாக இருக்கலாம், குணமாக இருக்கலாம், பேச்சாக கூட இருக்கலாம் என்று கூறினார்.



 

சிம்பு ஹன்சிகாவை காதலித்தாலும் எதிர்க்க மாட்டேன்! டி.ஆர்.,

If simbu loves hansika i will not  opposition says T.Rajendar
 சிம்பு யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி நான் எதிர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். மன்மதன், வல்லவன், கெட்டவன் என்று வலம் வந்த சிம்பு இப்போது என்னடான்னா இமயமலை, காசி என ஆன்மீக பாதையில் சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது அப்பாவோ இப்போதும் யங் ஸ்டார் மாதிரி இளம் நடிகைகள் உடன் குத்தாட்டம் போட்டு கொண்டு இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ராம.நாராயணனின் இயக்கத்தில் ஆர்யா சூர்யா என்ற படத்தில், கவர்ச்சி நடிகை முமைத்கான் உடன் ‘‘தகடு த‌கடு மந்திரிக்க வாடி...’’ என்ற பாடலுக்கு செம்மையாக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். டி.ஆரின் ஆட்டத்தை பார்த்து மும்மைத்கான் மட்டுமல்ல ஆர்யா சூர்யா பட யூனிட்டே வாயடைத்து போய் இருக்கிறது. அந்தளவுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார் அதுவும் யூத்பூல்லாக.

எப்படி இந்தளவுக்கு உங்களால் ஆட முடிகிறது என்று டி.ஆரிடம் கேட்டால், எனக்கு சிவன் அருள் இருக்கிறது. அவரது அருளால் இந்த தாடி ஆடுகிறான் என்று கூறுகிறார். தனது மகனின் திருமணம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது எனது மகளுக்கு திருமணத்திற்கான நேரம் கூடி வந்துள்ளது. அவளது திருமணம் முடிந்ததும் சிம்புவின் திருமணம் நடக்கும். சிம்பு காதலிப்பதாக கூறுகிறார்கள். அவர் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகா

ஆமா... நாங்க லவ் பண்றோம்...! உறுதி செய்த சிம்பு-ஹன்சிகா

Simbu - Hansika Love confirmed
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் ‘‘வாலு‘‘, ‘‘வேட்டை மன்னன்’’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களாகவே இந்த செய்தி கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதனை இருவரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தவாரம் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தனது மகன் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த செய்தி வெளியான அடுத்த சில நாட்களிலேயே ஹன்சிகா, நான் சிம்புவை காதலிக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான், என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இதேபோல் சிம்புவும் பலமுறை நான் ஹன்சிகாவை காதலிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நாங்கள் காதலிக்கவில்லை... காதலிக்கவில்லை... என்று கூறி வந்தவர்கள், இப்போது நாங்கள் காதலிக்கிறோம் என்று கூறியுள்ளனர். சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆமாம் நான் ஹன்சிகா கூடத்தான் இருக்‌கிறேன். ரொம்ப நல்ல பொண்ணு ஹன்சிகா, நாங்கள் திருமணம் செய்வது பற்றி விரைவில் எங்‌களது பெற்றோர் முடிவு செய்ய உள்ளனர், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

சிம்பு டுவிட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஹன்சிகாவும் டுவிட் செய்துள்ளார். அதாவது, எனது சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய கிசுகிசுக்கள்  வெளிவருகின்றன. இப்போது அதை தெளிவுப்படுத்துகிறேன். ஆமாம், நான் சிம்புவை காதலிக்கிறேன். இதற்கு மேல் எனது சொந்த விஷயங்களை நான் பேச முடியாது என்று கூறியுள்ளார்.

ஆக சிம்பு-ஹன்சிகா காதல் உறுதியாகியுள்ளது...!!


thanx - dinamalar



Sunday, July 21, 2013

சிம்பு லக் கடி பம்பா - ஹன்சிகா மெத்மெத் வா நீ பர பரப்புபேட்டி

சிம்புவுடன் எப்போது திருமணம்....? ஹன்சிகா எக்ஸ்குளூசிவ் பேட்டி!

After 5 years I will marry simbu says Hansika
 கடந்த சில மாதங்களாகவே மீடியாக்களில் கிசுகிசுக்களாக கசிந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நமது தினமலர் நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...

என் தொடர்பான உண்மை செய்திகளை கொடுக்கும் மீடியாக்களில் தினமலர் ரொம்ப முக்கியமானது. அதனால் தான் நானே போன் செய்தேன். தற்போது பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மும்பையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளேன். தற்போது தமிழில் எனக்கு 4 படங்கள் கைவசம் உள்ளன. ரொம்ப பிஸியாக நடித்து வருகிறேன்.
 
 
 
 
 இந்த நேரத்தில் சிம்புவுடன் காதல் பற்றி‌ய செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் திருமணம் இப்போது கிடையாது. எனக்கும் பல படங்கள் இருக்கிறது, அதேபோல் சிம்புவுக்கும் பல படங்கள் இருக்கிறது. எங்கள் காதல் செய்திகளால் எங்களை நம்பி படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது.
 
 
 
 அதனால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். திருமணம் தொடர்பாக இன்னும் நாங்கள் நிச்சயம் கூட செய்யவில்லை. எங்கள் படவேலைகள், எங்களுக்கான கமிட்மென்ட்டுகளை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியுள்‌ளோம். இன்னும் 5 வருடங்கள் கழித்து சிம்புவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.


மேலும் சிம்புவை உங்களுக்கு எதனால் பிடித்தது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, சிம்புவிடம் இதுதான் பிடித்தது என்று என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சிம்புவின் ஒவ்வொரு செயலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவரது திறமையாக இருக்கலாம், குணமாக இருக்கலாம், பேச்சாக கூட இருக்கலாம் என்று கூறினார்.
 
thanx-dinamalar


சிம்பு-ஹன்சிகா -143 ,144 , 420

ஆமா... நாங்க லவ் பண்றோம்...! உறுதி செய்த சிம்பு-ஹன்சிகா

Simbu - Hansika Love confirmed
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் ‘‘வாலு‘‘, ‘‘வேட்டை மன்னன்’’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களாகவே இந்த செய்தி கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதனை இருவரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தவாரம் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தனது மகன் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த செய்தி வெளியான அடுத்த சில நாட்களிலேயே ஹன்சிகா, நான் சிம்புவை காதலிக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான், என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இதேபோல் சிம்புவும் பலமுறை நான் ஹன்சிகாவை காதலிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நாங்கள் காதலிக்கவில்லை... காதலிக்கவில்லை... என்று கூறி வந்தவர்கள், இப்போது நாங்கள் காதலிக்கிறோம் என்று கூறியுள்ளனர். சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆமாம் நான் ஹன்சிகா கூடத்தான் இருக்‌கிறேன். ரொம்ப நல்ல பொண்ணு ஹன்சிகா, நாங்கள் திருமணம் செய்வது பற்றி விரைவில் எங்‌களது பெற்றோர் முடிவு செய்ய உள்ளனர், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

சிம்பு டுவிட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஹன்சிகாவும் டுவிட் செய்துள்ளார். அதாவது, எனது சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய கிசுகிசுக்கள்  வெளிவருகின்றன. இப்போது அதை தெளிவுப்படுத்துகிறேன். ஆமாம், நான் சிம்புவை காதலிக்கிறேன். இதற்கு மேல் எனது சொந்த விஷயங்களை நான் பேச முடியாது என்று கூறியுள்ளார்.

ஆக சிம்பு-ஹன்சிகா காதல் உறுதியாகியுள்ளது...!!
 
நன்றி- தினமலர்

Thursday, November 15, 2012

போடா போடி - சினிமா விமர்சனம்

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-poda-podi-movie-wallpapers-new-look-posters/images/tamil-cinema-poda-podi-movie-wallpapers-new-look-posters06.jpg 

படத்தோட கதை , விமர்சனத்துக்குள்ளே போறதுக்கு முன்னே இந்த கதை எப்படி உருவாச்சுங்கற பின் புலத்தை பார்த்துடுவோம். அது மெயின் கதையை  சுவராஸ்யமாய் புரிந்து கொள்ள ஏதுவா இருக்கும். 


அண்ணி (!!!! ) நயன் தாராவுடன் அண்ணன் சிம்பு நட்புடன் இருந்த கால கட்டத்தில்  நயன் நடிக்கும் பட ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கெல்லாம் போய் அவரது காதலை, பொசசிவ்னெஸ்ஸை வெளிப்படுத்தி வருவார். ஒரு தெலுங்குப்பட ஷூட்டிங்க்கின் போது நயன் ஆந்திர ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிக்கும்போது உடன் இருந்து பார்த்த சிம்பு கடுப்பாகி அந்தப்பட வாய்ப்பை கேன்சல் பண்ணச்சொன்னார்.



 அதுக்கு சாத்தியம் இல்லை என நயன் சொன்னதே பிரிவுக்கான முதல் அச்சாரம். நயனுக்கு பதிலடி கொடுக்க காத்திருந்த சிம்பு அந்த கதையை பேஸ் பண்ணி கெட்டவன் படத்தை தொடங்கினார். சில  காரணங்களால் அது தள்ளிப்போக போடா போடியில் அந்த சொந்தக்கதையை சாமார்த்தியமாக உள் நுழைத்து விட்டார்.


 பிராமண எதிர்ப்பு வசனங்கள் இருந்ததால் இது நம்ம ஆளு படத்தின் முழுப்பொறுப்பும் ஏற்றிருந்த கே பாக்யராஜ் எப்படி பாலகுமாரனை கேடயமாகப்பயன்படுத்தினாரோ ,பல படங்களில் கமல் இயக்குநராகப்பணி ஆற்றியும் டைட்டிலில் அவர் பேர் போடாமல் இருப்பது போலவும் இந்தப்படத்திலும் சிம்பு தான் ஆல் இன் ஆல் என ஒரு பேச்சு இருக்கு.. ஓக்கே லெட் கோ டூ  த ரிவ்யூ..


http://tamil.cinesnacks.net/photos/movies/Poda-Podi/poda-podi-movie-stills-005.jpg


ஹீரோ தமிழ்க்கலாச்சாரத்தை மதிப்பவர். அதே மாதிரி பெண் வேணும்னு நினைக்கறவர். அவர் கண்ல அலட்ரா மாடர்ன் கேர்ள் சாரி அல்ட்ரா மாடர்ன் கேர்ள் ஹீரோயின் கண்ல படறாங்க.. காதலுக்கு பிரபோஸ் பண்றார். பசை உள்ள பார்ட்டின்னு நினைச்சு ஹீரோயின் ஓக்கே சொல்லிடுது.


 ஹீரோயின் டான்ஸ் கிளாஸ் போகுது. அங்கே டெயிலி டான்ஸ் பிராக்டிஸ். அங்கே கண்ட கண்ட நாயோட ( ரைட்டர் நாயோன் மன்னிக்க ;-)) )எல்லாம் அவர் கட்டிப்பிடிச்சு டான்ஸ் ஆடறது ஹீரோவுக்குப்பிடிக்கலை.கதைக்களன்  லண்டன். அதனால் ஹீரோயினுக்கு அது ஜூஜுபி மேட்டர். அவர் கற்புள்ளவர்தான். ஆனா அதை எல்லாம் சாதாரணமா எடுத்துக்கறவர்.ஆனா ஹீரோவால அப்படி டேக் இட் ஈசி பாலிஸின்னு இருக்க முடியல.

 குஷி படத்துல வர்ற மாதிரி அடிக்கடி சண்டை போட்டு பிரிவதுன்னு இருக்காங்க.. அப்போதான் ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு ஐடியா தர்றாரு. ஒரு குழந்தை பொறந்தா எல்லாம் சரி ஆகிடும். குழந்தையை பார்த்துக்கவே நேரம் சரி ஆகிடும். அப்புறம் எங்கே இருந்து டான்ஸ் கிளாஸ் போக?இந்த ஐடியாப்படி மேரேஜ் ஆகாமயே லிவிங்க் டுகெதரா வாழும் இருவரும் கில்மாவை முடிச்சு ( வல்லவன் படத்தில் வருவது போல் ) குழந்தை பெத்துக்கறாங்க. இடை வேளை 


ஹீரோயினுக்கு ஹீரோவோட டிராமா தெரிஞ்சுடுது.ஓஹோ, இந்த கில்மா, குழந்தை எல்லாம் இயற்கையா நடக்கனும், இதைக்கூட பிளான் போட்டு செய்வாங்களா?ன்னு கேட்டு பழைய ஜிகிடி கதவைதொறடின்னு பாப்பா மறுபடி டான்ஸ் கிளாஸ் போகுது.


 அதுக்குப்பின் என்ன நடக்குது என்பது மிச்ச மீதிக்கதை . 


http://2.bp.blogspot.com/-SBDOvt0CSwk/UFVg-EIWCyI/AAAAAAAA0YQ/F1OaCG3KZGM/s640/Poda+Podi+Latest+Stills+%25289%2529.jpg


 விண்ணைத்தாண்டி வருவாயா? கோவில் படங்களுக்குப்பின் சிம்பு ரொம்ப க்யூட்டா, பர்சனாலிட்டியா தோன்றும் 3 வது படம் இது.ஒளிப்பதிவாளரின் கைங்கர்யமோ என்னவோ ஆள் செம பர்சனாலிட்டியா இருக்கார்.பல காட்சிகளில் இளமைக்குறும்பு. இதே போல் ஒழுங்காக அடக்கி வாசித்தால்  இன்னொரு விஜய் ஆக வர வாய்ப்பு உண்டு. 


ஹீரோயின் சரத்குமார் மகள் வர லட்சுமி எனும் வரு. யார் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை, ஒரு மேட்டரை தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லிடறேன். படத்துக்கு பெரிய மைனசே ஹீரோயின் தான். அவர் ஹேர் ஸ்டைலை மாற்றி ,  மேக்கப் விமனை மாற்றி , கெட்டப்பை ,மாற்றி ரொம்ப முயற்சி பண்ணா மட்டுமே பாஸ் மார்க்காவது எடுக்க முடியும்.. மற்ற பிரதேசங்கள் செழிப்பான பூமியாக இருந்தாலும் முகம் வரண்ட லட்சுமியாக இருப்பதால் முடில.. 


இது  நம்ம ஆளு சோபனா , ஹீரோவின் நண்பர் என ஆங்காங்கே கொஞ்சம் தெரிந்த தலைகள். எல்லாருக்கும் வாய்ப்புக்குத்தகுந்தாற்போல் காட்சிகளை சரியாக உபயோகப்படுத்தி இருக்காங்க.. 



http://reviews.in.88db.com/images/femina-latest-trisha/femina-magazine-release-stills-photos-pics-30.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. குஷி படத்தின் பாதிப்பு என்பது திரைக்கதையில் யாரும் குறை சொல்லிடக்கூடாது என்று கதைக்களனை லண்டனுக்கு மாற்றியது .சிம்புவின் சொந்தக்கதையை , சில காட்சிகளை அழகாக பயன்படுத்தியது .



2. ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சுமார் என்றாலும் பல பாடல்கள் ஹிட் ரகம். குறிப்பாக லவ் பண்ணலாமா? வேணாமா? 



3. சிம்புவின் ஸ்டைலிஷ் தோற்றம் , ஷோபனாவின் அண்டர் ப்ளே ஆக்டிங்க், கதையுடன் பயணிக்கும் காமெடி 



4. தன் மனைவியுடன் ஆடும் ஆளை முகத்தில் தன் கோட்டை மாட்டி அவரை நையப்புடைக்கும் காட்சி , க்ளைமாக்ஸ் டான்ஸ் கலக்கல் ரகம்  , அதே போல் ஹீரோ - ஹீரோயினுக்கான வாக்கு வாதங்கள் சுவராஸ்யம்



http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-poda-podi-new-stills-/images/tamil-cinema-poda-podi-new-stills-12.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோ தான் தமிழ்க்கலாச்சாரத்தோட வாழ்ந்ததால் ஹீரோயினின் ஃப்ரீனெஸ் எல்லாம் ஜீரணிக்க முடியலைங்கறார். ஆனா முதன் முதலா ஹீரோயினை பார்க்கும்போதும் சரி, காதலை சொல்லும்போதும் சரி  ஹீரோயின்  படு கிளாமரா தானே டிரஸ் பண்ணி இருந்தாங்க.. அது ஏன் ஹீரோ கண்ணுக்கு உறுத்தலை? 


2. ஹீரோயின் யாரோ ஒரு ஆள் கூட டான்ஸ் பண்ணுவதை தாங்கிக்க முடியாத ஹீரோ பல காட்சிகளில் ஹீரோயின்  படு கிளாமராக லோ கட் , லோ  ஹிப்பில் வரும்போது ஒண்ணும் சொல்லலையே? ஒரு காட்சியிலாவது “ ஏம்மா , இதெல்லாம் புருஷன் நான் பார்க்க , இப்படி கடை பரப்புனா எப்படி?”ன்னு ஒரு டயலாக் வெச்சிருக்க வேண்டாமா?


3. ஹீரோ பூவாவுக்கு என்ன பண்றார்? அவர் பணக்காரன் என ஹீரோயின் நினைச்சு லவ் பண்றார், ஓக்கே. அதுக்குப்பின் பண விஷயத்தில்  அல்லது தொழில் விஷயத்தில் குட்டு உடை பட்டதா? அது பற்றி காட்சியே இல்லையே? 



4. ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் கில்மா நடக்கும் காட்சி வல்லவனில் இருந்து உருவப்பட்டாலும் அதில் இருந்த கிக் இதில் இல்லை.. ஏனோதானோ என படமாக்கப்பட்டிருக்கு.,. 



5. குழந்தை பிறந்த பின் ஹீரோயினின் மனமாற்றம் பற்றி சொல்லவே இல்லை.. எப்போ பாரு டான்ஸ் , டான்ஸ் என உயிரா இருக்கும் அவர் குழந்தையால் டைவர்ட் ஆனாரா? குழந்தைப்பாசம் உள்ளவரா? வேண்டா வெறுப்பா இருந்தாரா? மனசார இருந்தாரா? என டீட்டெயில் சொல்லலை



6. ஹீரோ , ஹீரோயின் இருவரின் அஜாக்கரதையால் , தேவையற்ற சண்டையால் தடார் என ஒரு விபத்து நடந்து குழந்தை இறந்துடுது. படத்தில் எவ்வளவு முக்கியமான சீன். ஜஸ்ட் 18 விநாடியில் அந்த சீன் கடந்துடுது. அந்த பாதிப்பை அழுகை மூலம் காட்டாவிட்டாலும் அட்லீஸ்ட் பின்னணி இசை , ஒளிப்பதிவு மூலமாவது பதிவு செய்திருக்க வேண்டாமா?



7. இடைவேளைக்குப்பின் ஜஸ்ட் 40 நிமிஷம் தான் படம். ரொம்ப சின்னப்படமா இருக்கே? 3 மணி நேரம் இருந்தா பெரிய படம்னு சொல்லும் தமிழன் ரெண்டே கால் மணி நேரத்துக்கு கம்மியா இருந்தாலும் தன் காசு வேஸ்ட்டா போச்சுன்னு நினைப்பான் .


8. ஹீரோயின் ஏதோ கோபத்துல தன் மேரேஜ் மோதிரத்தை கழட்டி லெட் இன் ரூம்ல அங்கே வீசிடற மாதிரியும் பின்  மனம் மாறி கையை விட்டு எடுப்பது போலவும் சீன் உவ்வே.... சும்மா வெளில வீசி பர பரப்பா தேடுற மாதிரி சீன் எடுத்தா போதாதா/



9. க்ளைமாக்ஸ்  கடைசி 3 ரீலை இன்னும் டிஸ்கோ டேன்சர் , பாடும் வானம்பாடி ரேஞ்சுக்கு இழுத்து இருக்கலாம். டான்ஸ் போட்டிக்கான கெத்து கம்மி.. இன்னும் பின்னணி இசை பட்டாசா இருந்திருக்கனும். 

10. டைட்டில் டிசைன் வித்தியாசமா பண்ண நினைச்சிருப்பீங்க போல.. அது ஏ செண்ட்டர்க்கு ஓக்கே, பி சி செண்ட்டருக்கு தனி போஸ்டர் ஒட்டி இருக்கலாமே? தளபதி படத்துக்கு மணி ரத்னம் செஞ்ச மாதிரி


11. அடிக்கடி  தமிழ்க்கலாச்சாரத்துல வளர்ந்த நல்ல பையன்னு சொல்ற ஹீரோ ஒரு டைம் ஹீரோயின் கூட கில்மா பண்றப்போ “  என்னைப்பக்கத்துல வெச்சுக்கிட்டே எந்தப்பொண்ணும் இப்படி சொன்னதே இல்லை.. ” அப்டினு பெருமை பேசறாரே? ரியல் லைஃப்ல அவர் ப்ளே பாயா இருக்கலாம், ஆனா இந்த கேரக்டருக்கு ஏன் அந்த பஞ்ச் டயலாக்? அதே போல் கலாச்சாரம் குறித்து அடிக்கடி பேசுபவர் மேரேஜ்க்கு முன் மேட்டர்க்கு கூப்பிடறார். முடிக்கறார். அது மட்டும் ஓக்கேவா? 



http://lh4.ggpht.com/-krmgv7XVvUw/Tx1Kqa85eqI/AAAAAAABBYs/55ikbUgKJBs/varalaxmi%252520sarathkumar%252520Hot%252520insaree_thumb%25255B2%25255D.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்

1. லவ் பண்ற ,மேரேஜ் பண்ணிக்கிட்ட ,சைட் அடிக்கறபொண்ணு யாராவது அந்நிய ஆண் கூட நின்னு சிரிச்சு பேசுனாஅடிவயிறு பத்தி எரியும்



2. ஆக்சிடெண்ட் ஈஸ் ஏன் ஆக்சிடென்ட்.அது தானா நடக்கும்.நல்லவங்க ,கெட்டவங்க பாகுபாடு இல்லாம எல்லாருக்கும் நடக்கும் 



3.  இந்தக்காலத்துப்பொண்ணுங்க நல்ல பசங்களை எங்கே  லவ் பண்றாங்க?வெட்டி பந்தா பண்றவன், பொறுக்கி , தறுதலை இவனுங்களுக்குத்தான் காலம்



4. சொந்தக்காசுல சீன் போடற சந்தோஷம் இருக்கே.. அடடா.. அது போல் உலகத்துல எதுவும் இல்லை


5. ஹாய்.. பார்ட்டிக்குத்தனியாவா வந்தே?


 ஆமா, ஆனா ரிட்டர்ன் போறப்போ ஜோடியாப்போகலாம்னு ஐடியா



6. காதல் வந்துட்டா உலகத்துல இருக்கற கண்றாவியான , கேவலமான விஷயங்கள் கூட அழகாத்தெரியும்

7. ஷோபனா - என்ன பண்றீங்க?


 சிம்பு - வெயிட் பண்ணிட்டு இருக்கேன்


 அது தெரியுது, புரொஃபஷனலா என்ன பண்றீங்க?ன்னு கேட்டேன்


8. யோவ். இவ்ளவ் விஷயம் இங்கே ஓடிட்டு இருக்கு. ஷகீலா படம் பார்த்துட்டு இருக்கியா? டி வி ல இரு உன் சம்சாரத்து கிட்டே போட்டுக்குடுக்கறேன்


9. சிம்பு - எப்பவாவது பொய் பேசறவளை பார்த்திருக்கேன், ஆனா  எப்பவும் பொய் மட்டுமே பேசுபவளை இப்போதான் பார்க்கறேன்



10. சிம்பு - என் கிட்டேயே விரலை வெச்சு வித்தையா?


11. எப்பவுமே நான் பெட் மேலதான் படுப்பேன், ஆனா இப்போ என் மேல ஒரு பெட் படுத்திருக்கு.. ஐ ஜாலி


12. வரு( 23 வயசு )  - மேரேஜா? நான் சின்னக்குழந்தைங்க . எப்படி உடனே மேரேஜ் பண்ணிக்க முடியும்.. 


13. நான் என்ன சொல்ல வர்றேன்னா நல்ல பொண்ணுங்க இந்த மாதிரி சுத்த மாட்டாங்க..


 அப்போ நான் நல்ல பொண்ணு இல்லையா?



14. அந்தப்பொண்ணு வேணாம்கறதைத்தான் இவ்ளவ் நேரமா இங்க்லீஷ்ல சொல்லிட்டு இருந்தே?


ஆமா


 சரி, காரை ஓரமா நிறுத்து , நான் இப்பவே அவளை பார்க்கனும்


15. இப்போ நீங்க பண்ணுன காமெடிக்கு நாளைக்கு காலைல சிரிக்கறேனே? இப்போ டயர்டா இருக்கு


 http://www.southgossips.net/wp-content/uploads/2012/01/varalakshmi-sarathkumar-unseen-photo-gallery03.jpg


16. தமிழ்நாட்டைத்தவிர மத்த நாட்ல எல்லாம் டெலிவரி டைம்ல பொண்ணோட புருஷனையும் பக்கத்துல இருக்கச்சொல்வாங்க.மனைவியின் வலி தெரிஞ்சுக்கனும



17. பொண்ணுங்க மேரேஜ்க்கு முன்னே லவ் பண்றப்ப பேசி பேசி நம்மை சாகடிப்பாங்க.மேரேஜ்க்குப்பின் பேசாம சாகடிப்பாங்க


18. சந்தேகம் வராதவரை ஓக்கே, ஆனா வந்துட்டா அதை க்ளியர் பண்ணிக்கறதுதான் பெட்டர்


19. லவ்ல நோ லாக், ஆனா மேரேஜ்ல லாக் இருக்கு. லவ் பண்றப்போ “ நான் இந்தப்பொண்ணை லவ் பண்றேன்னு ஊரெல்லாம் சொல்லிட்டு இருக்க த்தேவை இல்லை, ஆனா மேரேஜ் பண்றப்போ ஊரைக்கூட்டி சொல்லனும்


20. எத்தனை டைம் சொல்லி இருக்கேன்? அவ கூட சேராதேன்னு ,ஏம்மா? சாக்லேட் தந்து அவனை ஏமாத்தறியா?


21.  உங்க வாய்ஸ் பிளஸ் பாயிண்ட், ஆனா வாய் மைனஸ்



22. கல்யாணம் ஆகற வரை பொண்ணுங்க ஜலக் முலக் கலக்னு இருப்பாங்க, மேரேஜ் ஆகிட்டா பொலக்னு ஆகிடுவாங்க . ஒரு சைல்டுக்கு மதர் ஆகிட்டா அவங்க அதர் ஆக்டிவிட்டி  டமால் ஆகிடும்


23.  நீங்க ரொம்ப மோசம்

 என்னைப்பக்கத்துல வெச்சுக்கிட்டே எந்தப்பொண்ணும் இப்படி சொன்னதே இல்லை..


24. வீடியோ எடுக்கற டைமா இது?

 ஃபேஸ் புக்ல போடவா எடுத்தேன்? குழந்தைக்கு  பிற்காலத்துல போட்டுக்காட்டி அம்மா உன்னை பெக்கறப்போ எவ்ளவ் கஷ்டப்பட்டாங்கன்னு காட்டிட


25. உங்களுக்கு சொன்னா புரியாதா?


 ஷோபனா - ட்ரை மீ


 வாட்?

 ஐ மீன் எனக்கு புரிய வைக்க ட்ரை .. பண்ணு



26. ஏய்.. எவன் அவன்?

 என் க்ளோஸ் ஃபிரண்ட்

 இப்போ என்ன செஞ்சான் உன்னை?

 ஹக் பண்ணிட்டு போனான்.. இது எல்லாம் லண்டன்ல சாதாரணம்



இங்கே இது தப்பில்லை, ஆனா தமிழ்க்கலாச்சாரத்துல இது தப்பு











சி.பி கமெண்ட் - போடா போடி -குஷி பார்ட் 2 -காதலர்கள் , யூத்ங்க, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ,  மனத்தாங்கலால் பிரிந்து  வாழும்  தம்பதிகள் , சிம்பு ரசிகர்கள் பார்க்கலாம். பொது ரசிகர்கள் ஹீரொயின் வரும் சீன் மட்டும் கண்ணை கூடிக்கொண்டே பார்த்தால் ரசிக்கலாம்.





 விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே



 டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேட்டிங் - 5 / 10



டிஸ்கி -

துப்பாக்கி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க

   http://www.adrasaka.com/2012/11/blog-post_1598.html

Monday, June 11, 2012

வாலு - ஆளை விடு - வாழ விடு - சிம்பு பேட்டி - கிடாவெட்டு

http://www.cinepicks.com/tamil/gallery/vaalu/santhanam-and-simbu-in-vaalu-poster-861.jpgல்யாண சீஸன் நெருங்குவதால், அதற்கு முன்னரே டாப் கியரில் ஆடிவிடும் மூடில் இருக்கிறார் சிம்பு. அடுத்த படத்துக்கு 'வாலு’ என்று பெயர்.



''ஆஹா... திரும்ப சேட்டையை ஆரம்பிச்சுட் டீங்களா?'


சி.பி - அண்ணன்  எப்போ சேட்டையை விட்டாரு? இப்போ ஆரம்பிக்க? ஆல்வேஸ் அண்ணன் சேட்டை மன்னன் தான், ஆனா எடுக்கப்போற படத்தோட டைட்டில் மட்டும் வேட்டை மன்னன்


''இது எல்லாருக்கும் பிடிக்கிற வாலு! இன்னும் பக்கா சென்னைப் பையனா ஒரு படம்கூடப் பண்ணது இல்லை. அப்படி ரொம்பத் துறுதுறுப்பா, செம கலகலப்பா ஒரு ஸ்க்ரிப்ட் கொண்டுவந்தார் விஜய்சந்தர். லவ் ஸ்டோரி. இதில் என் வால்தனம் மட்டும் இல்லை. எல்லோரோட வால்தனமும் இருக்கிற - மிஸ் பண்ணவே முடியாத கதை. ஹன்சிகா, சந்தானம்னு ஹிட் பேக்கேஜ் சேர்த்து, உடனே இறங்கிட்டோம்.


 தீபாவளிக்கு வர்றான் வாலு. படத்தில் காமெடி அள்ளும். சந்தானத்தை நான்தான் சினிமாவில் முதல்ல கொண்டுவந்தேன். இப்ப, எல்லா ஹீரோக்களுக்கும் அவர் செம தோஸ்த் ஆகிட்டார். 'மன்மதன்’ முதல் நாள் ஷூட்டிங்ல அவரோட சில ஆக்ஷன்களைப் பார்த்தேன். 'ஜஸ்ட் லைக் தட் பெரிய ஆள் ஆயிடுவ நண்பா. சீக்கிரமே என் படத்துக்கு உன்கிட்ட கால்ஷீட் கேட்டு நிக்கிற மாதிரி இருக்கும்’னு சொன்னேன். 'என்ன சார்... பயமுறுத்துறீங்க?’னு தயங்கித் தயங்கிச் சிரிச்சார். நான் சொன்ன மாதிரியே ஆச்சு.


 ஆனா, மனுஷன் ஜெம் ஆஃப் தி ஜெம். என் படம்னா நான் சந்தானத்துக்கிட்ட டேட்ஸ் கேட்கிறது இல்லை. அவருக்கு ஏத்த கேரக்டர்னா 'நீதாம்பா’னு சொல்லிடுவேன். 


ஷூட்டிங் அன்னிக்கு ஸ்பாட்ல நிப்பார். அதுதான் சந்தானம்.''


 சி.பி - ஓஹோ நீங்களும் எம் ஜி ஆர் மாதிரிதானா? நீங்க இருக்கறப்ப சக டெக்னீஷியன்கள், நடிகர்கள் உட்கார விட மாட்டீங்களா?

''ஆர்யா... நயன்தாரானு கிசுகிசுக்கிறாங்களே?''




''அட, அவங்க ஒரு காலத்தில் எனக்கு ஃப்ரெண்ட். அதுக்காக இன்னமும் கேட்டுக்கிட்டே இருக்கணுமா? அவங்க நாளைக்கு இன்னொருத்தர்கிட்ட இருப்பாங்க. அப்புறம், கல்யாணம் பண்ணிப்பாங்க. அதுக்கும் நான் பதில் சொல்லிட்டே இருக்கணுமா? நல்ல காமெடிங்க!''



சி.பி - கீதை வாசகம் சிம்பு அண்ணன் ரசிச்சு மனசுக்குள்ள படிக்க நான் டெடிகேட் பண்றேன் - எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையது , எதை நீ தள்ளிட்டு வந்தாய், போறப்ப அள்ளிட்டுப்போக?


http://chennaionline.com/images/gallery/2012/June/20120606035951/Vaalu_Movie_First_Look_Wallpapers_02.jpg



''இப்போதைய ஹீரோக்களில் யாரைப் பிடிச்சிருக்கு?'



''ஜெய்! அவரோட முகம் முதல் சீன்லயே இம்ப்ரெஸ் பண்ணிருது. நல்ல நல்ல படங்களா பண்ணும்போது இன்னும் சூப்பரா வருவார். சாந்தனுவுக்கு டான்ஸ், காமெடி நல்லா வருது. ஆனா, இன்னும் நல்ல நேரம் அமையலை. ஆர்யா 'பாஸ்’ மாதிரி அசால்ட்டா பண்ணா ரொம்ப நல்லா இருக்கு. கார்த்தியோட பட செலெக்ஷன் அட்டகாசம். ஜெயம் ரவியை ரொம்ப இயல்பா எல்லாரும் ஏத்துக்கிறாங்க. ஜீவாவுக்கு ஃபிட் ஆகாத கேரக்டர் எதுவும் இருக்கானு தெரியலை. பெர்ஃபார்ம் பண்றதில் தனுஷ் கவனம் செலுத்துறார்.''
''உங்களுக்கு செல்வராகவன், பாலா மாதிரி டைரக்டர்களுடன் சீரியஸா படம் பண்ணணும்னு ஆசை இல்லையா?''




''ஒரு விஷயம்... தனுஷ்தான் அப்படிப் பண்ணுவார். அவருக்கு நடிப்பில் சீரியஸா ஏதாச்சும் பண்ணிட்டே இருக்கணும்னு ஆசை. நமக்கு அந்த ஆசை இல்லை. நான் பெர்ஃபார்ம் பண்றவன் இல்லை... என்டர்டெய்ன் பண்றவன்


. பயங்கரமா நடிச்சு பேர் வாங்கணும்னு நான் ஆசைப்படக்கூட மாட்டேன். ஆஸ்கர், தேசிய விருது வாங்கணும்னு எனக்குக் கனவுகூடக் கிடையாது. ரஜினி 'தளபதி’யில் பண்ண மாதிரி எப்பவாவது ஒரு ரோல் நடிக்கலாம். அப்படித்தான் வெற்றிமாறன் கதையில் இன்ட்ரஸ்ட் எடுத்து நடிக்கப்போறேன். மத்தபடி, நமக்கு தியேட்டர்ல விசில் பறக்கணும். கைத்தட்டல் கொட்டணும். டிஸ்ட்ரிபியூட்டர் சந்தோஷப்படணும். அவ்வளவுதான்.''



''அது யு டியூப்போ... இல்லை ஃபேஸ்புக்கோ... உங்க அப்பாவைச் சகட்டுமேனிக்குக் கிண்டல் கேலி பண்றாங்களே... அதைப் பத்தி அப்பாட்ட பேசுவீங்களா?''



''ஜெயிச்ச மனுஷங்களை எப்பவும் நிறையக் கிண்டல் அடிப்பாங்க. அப்படித்தான் அப்பாவையும் கமென்ட் பண்றாங்க. அவரோட ரெக்கார்டு இன்னும் முறியடிக்கப் படலை. அவ்வளவு ஏங்க, ரஜினி சாரையே அதுல பயங்கரமா கிண்டல் அடிக்கிறாங் களே. ரஜினி ஜோக்ஸ்னு தினமும் நிறையக் கொட்டுதே? கிண்டலுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டே இருந்தா, அப்புறம் நாம வேற எந்த வேலையையும் பார்க்க முடியாது. டேக் இட் ஈஸி!''


''சினிமாவில் தம்பியோட என்ட்ரி எப்போ?'



''இந்த வருஷக் கடைசி, இல்லைன்னா... அடுத்த வருஷம். நல்லா டான்ஸ் ஆடுறான். கொஞ்சம் வெயிட்டா இருக்கான். ஃபிட்னெஸ் சரிபண்ணிட்டா, டபுள் ஓ.கே. அவனுக்கு ஏத்த முதல் ஸ்க்ரிப்ட்டை அப்பாதான் ரெடி பண்றார். சின்ன வயசுலயே ஸ்டேட் அவார்டு வாங்கினவன். என்னைவிட நல்லா நடிப்பான்.'



''தங்கச்சி இலக்கியாவுக்குக் கல்யாணம் எப்போ?''



''அடுத்த வருஷம். மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. அந்தப் பையனை எனக்குப் பிடிக்கணும். என் தங்கச்சிக்குப் பிடிக்கிற பையனை எனக்கும் பிடிக்கும். என் தங்கச்சிக்கு நான்னா ரொம்ப உசிரு. கல்யாணம் ஆயிட்டா அவளை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அதுக்காக எத்தனை நாள்தான் வீட்லயே வெச்சுட்டு இருக்க முடியும்? 'பாசமலரே, சீக்கிரம் கௌம்பு’னு இப்பவே சொல்லிச் சொல்லிப் பழகிட்டு இருக்கேன். தங்கச்சிக்கு சினிமா ஆர்வம் இல்லை. படிப்புதான் இஷ்டம். எம்.பி.ஏ. முடிச்சிருக்கா. சினிமா கதை சொன்னா, நல்லா ஜட்ஜ் பண்ணுவா. 'லூஸுப் பெண்ணே பாட்டு ஹிட்டாகும்’னு முதல்ல சொன்னது அவதான். 'எவன்டி உன்னைப் பெத்தான்’ ப்ளே பண்ணப்போ, கொஞ்சம் பயமா இருந்தது. 'இல்லண்ணா, பொண்ணுங்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னா.'



''ரொம்ப சமர்த்தா இருக்கிற மாதிரி இருக்கு. சரி... இப்ப இண்டஸ்ட்ரியில் யாருக்கு உங்க ப்ளேபாய் பட்டத்தைக் கொடுக்கலாம்?''



''நிறைய விஷயங்கள் பட்டு உணர்ந்த பிறகு, இப்பதான் மெச்சூரிட்டி வந்திருக்கு. இனிமே ரொம்ப பெர்ஃபெக்ட்டா இருக்கணும். நானே ப்ளேபாய் இமேஜை விட்ட பிறகு, அப்படி யாரு இருந்தா எனக்கென்ன?''


 http://reviews.in.88db.com/images/stories/nayanthara-simbu-vaalu-movie.jpga

thanx - vikatan

Thursday, March 29, 2012

போடா போடி ??- தனுஷ், 9 தாரா ?!! - வேட்டை மன்னன் சிம்பு பேட்டி காமெடி கும்மி


http://www.innisaitamil.com/images/cd_images/1323747983_vettai%20mannan.jpg


அமெரிக்கக் குளுமை இன்னமும் படிந்திருக்கிறது சிம்பு முகத்தில்!  'வேட்டை மன்னன்படத்துக்காக பின்னி மில்லில் பின்னி எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் காதல், லவ் ஆன்தம், தனுஷ், கொலவெறி, ஸ்ருதி, ஸ்டார் கிரிக்கெட், கல்யாணம்... இன்னும் நிறையப் பேசியதில் இருந்து...  


சி.பி -பின்னி மில்லுல பின்னிட்டு இருந்தாரா? எதை? ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியோட ஜடையையா?


1.  '' 'லவ் ஆன்தம்ஆல்பம் ரெடியா?''

சி.பி - லவ் பண்றவங்க எல்லாருமே தாடி வெச்சுட்டு தம் அடிக்கனும்கறதை சிம்பாலிக்கா சொல்றதுதான் லவ் ஆன்”தம்”ம்மா?



''அது ரெண்டு மாச உழைப்பு. 'ஒரு பாட்டோட நிறுத்த வேணாம். முழு ஆல்பமாவே பண்ணிரலாம்னு முடிவு பண்ணி இறங்கிட்டேன். புரொமோஷனுக்காக வெளியான ரெண்டு நிமிஷப் பாட்டுக்கே பாராட்டு அள்ளுச்சு. முழு ஆல்பத்தைச் சிலருக்கு மட்டும் போட்டுக் காமிச்சேன். 'செம சூப்பர்னு மனம் திறந்து பாராட்டினாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல ரிலீஸ். ரொம்பப் படபடப்பா, ஆர்வமா இருக்கு. எல்லாம் சரியா அமைஞ்சா, இந்த ஆல்பம் எனக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கித் தரும்!''


சி.பி - என்னது? சிம்பு அண்ணனுக்கு நல்ல பேரா? குறளரசன் திகைப்பு.. டி ஆர் நகைப்பு.. ஹி ஹி 


http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/10/Hansika_gangster_Vettai-Mannan.jpg
2. ''நீங்க இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க. ஆனா, 'சிம்பு ஷூட்டிங் வராம அமெரிக்கா போய் உட்காந்துட்டாரு. தயாரிப்பாளர்கள் கொதிச்சுப்போய் இருக்காங்கனுல இங்கே செய்தி பரவிக்கிடக்கு?''  

''நான் எது பண்ணாலும் தப்பாப் பேசுறவங்க கௌப்பிவிடுறதுதான் இதுவும். 'வேட்டை மன்னன்தயாரிப்பாளர்கிட்ட 'லவ் ஆல்பம்வேலைகளுக்காக அமெரிக்கா போறேன்னு முன்னாடியே சொல்லிட்டுத்தான் கால்ஷீட் தேதி கொடுத்தேன்

சி.பி - அதானே, அமெரிக்கா எப்போதான் சுத்தி பார்க்கறது?


'போடா போடிபடத்தின் வெளிநாட்டு லொகேஷன் களின் படப்பிடிப்புக்கு உடனே அனுமதி கிடைக்கலை. சரி... சென்னைக்குக் கிளம்பு வோம்னு பார்த்தா, இங்கே ஸ்டிரைக். 'கிடைச்ச நேரத்தை ஆல்பம் வேலைகளுக் குப் பயன்படுத்திக்கலாம்னு இறங்கிட் டேன். எனக்குச் சம்பளம் கொடுக்கும் எந்தத் தயாரிப்பாளரும் என்னைப் பத்தி எந்தப் புகாரும் பண்ணலை. மத்தவங்களைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? இன்னும் எவ்வளவுதான் பேசுறாங்கனு பார்க்கலாம்!''

சி.பி - நல்ல வேளை.. நீங்க கெட்டவர்ங்கறதுக்காகத்தான் உங்க பட டைட்டிலே கெட்டவன்னு வெச்சாங்களா?ன்னு யாரும் கேட்கலை..


http://static.sify.com/cms/image//lf0tKCchiaa.jpg


3. ''என்னதான் சமாதானம் சொன்னாலும் 'போடா போடிஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சே... இது அதீத தாமதம்தானே?''  



'' 'போடா போடிரொம்ப ஸ்டைலான படம். சென்னையில் எடுக்கும் படங்களுக்கு அழகு சேர்க்க வெளிநாட்டில் டூயட் வைப்போம். ஆனா, இந்தப் படம் முழுக்கவே வெளிநாட்டில் நடக்கும் கதை. 'ஹம் ஆஃப் கே ஹைன் கௌன்மாதிரி கலர்ஃபுல்லான படம்.

சி.பி -சுத்தம்.. அப்போ அந்தப்படத்தோட அப்பட்டமான தழுவலாத்தான் இருக்கும்.. கேட்டா ஜ்ஸ்ட் இன்ஸ்பிரேஷன்...பாங்க


 அப்போ எவ்வளவு வேலை இழுக்கும்? படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குறதே பெரிய வேலையா இருக்கு. வெய்ட் பண்ணுங்க... 'விண்ணைத் தாண்டி வருவாயாபடத்தில் என்னைப் பிடிச்ச மாதிரி, இந்தப் படத்திலும் எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!''

சி.பி - விண்ணைத்தாண்டி வருவாயா? ஹிந்தி வர்ஷன்ல ஊத்திக்கிச்சாம்.. இதான் நல்ல சான்ஸ்.. விடாதீங்க.. ஹிந்தி ரீமேக்ல நான் நடிச்சிருந்தா சூப்பர் ஹிட் ஆகி இருக்கும்னு அறிக்கை விடுங்க.. இப்போ அது தான் ஃபேஷன்..  

http://2.bp.blogspot.com/_T1vzYiWcy7U/SMs-ocq_LAI/AAAAAAAAXjA/MdpYpjWIq0o/s1600/Podaa-Podi-Movie-stills-simbu%2B(9).jpg


4. ''முன்னாடி ஸ்டார் கிரிக்கெட்னா முதல் ஆளா நிப்பீங்க... இந்த சீஸன்ல ஆளைப் பார்க்க முடியலையே?''  


''இப்போ ஜெயிச்ச செட்ல பலரை டீமுக்குள் கொண்டுவந்ததே நான்தான். டீம் வொர்க்தான் கிரிக்கெட்டின் அழகு. ஆனா, அதைப் புரிஞ்சுக்காம சிலர் என்னை டாமினேட் பண்ணப் பார்த்தாங்க. எனக்கு எதிரா சில வேலைகள் பார்த்தாங்க. முக்கியமான முடிவுகள்ல வேணும்னே என்னைப் புறக்கணிச்சாங்க. அதான் நான் ஒதுங்கிட்டேன். ஆனா, அடுத்த முறை நிச்சயம் டீம்ல இருப்பேன். கிரிக்கெட்டையும் என் னையும் பிரிக்க முடியா துங்க!''


சி.பி - கிரிக்கெட் என்ன நயன் தாராவா?


5. ''இவ்வளவு நாள் லவ் பண்ணாம இருக்கிறது கஷ்டமா இருக்குமே?''


சி.பி - வாரத்துக்கு வாரம் வித்தியாசம் அதுதான் சிம்பு ஹி ஹி ஆ:ளை அடிக்கடி மாத்து... நம்பி வர்ற ஃபிகரை ஏமாத்து.. இதுதான் அண்ணன் பாலிசி

''இல்லைங்க... அமெரிக்காவுல என் கஸின் வீட்ல ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனுக்குச் சாதம் ஊட்டுறதுல ஆரம்பிச்சு நாப்கின் மாத்துறது வரை நானே எல்லாம் பார்த்துக்கிட்டேன். அவன்கூடவே விளையாடிட்டு இருந்தப்ப, நானே என்னை ஒரு சின்னப் பையன் மாதிரி ஃபீல் பண்ணேன். அப்போதான் சட்டுனு அப்பா ஆகணும்... மகனைப் பார்த்துக்கணும்னு ஆசை வந்துச்சு.


உண்மையைச் சொன்னா, கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு நம்பிக்கையும் இல்லை; ஆசையும் இல்லை. கல்யாண வாழ்க்கை மேல சின்ன பயம்கூட இருக்கு. ஆனா, 'அப்பா ஆசைக்காகத்தான் கல்யா ணம் பண்ணிக்கலாம்னு தோணுது. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். காதல் கல்யாணம்தான் ஆசை. அது ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். ஆனா, ஒரு வருஷத்துக்குள் காதல் வருமான்னு தெரியலை. பார்க்கலாம்!''

http://www.kollytalk.com/wp-content/uploads/2012/03/Varalaxmi-Sarathkumar-Celebrates-Womans-Day-3.jpg
போடா போடி படத்தில் வரலட்சுமி சரத்குமார் ( சரத்குமாரின் மகள்)
6. ''வீட்லயும் பொண்ணு பார்ப்பாங்களே... உங்க கண்டிஷன்கள் என்ன?''


சி.பி - என்ன புது கண்டிஷன்? எல்லாரும் சொல்றதுதான்.. பொண்ணு குடும்பப்பாங்கா இருக்கனும்.. அவங்க வீடே பேங்க்கா இருக்கனும்.. வீட்டுக்கு புருஷன் மிட் நைட்ல லேட்டா வந்தாலும் கண்டுக்கக்கூடாது.. 


''பொண்ணு அழகா இருக்கணும். நல்ல சிவப்பா இருக்கணும். ஏன்னா, எனக்கு அழகான குழந்தை வேணும். நான் சரியாப் படிக்காதவன். அதனால, பொண்ணு நல்லாப் படிச்சிருக்கணும். சினிமாபத்தி கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும். என்னைப் பார்த்து பயப்படக் கூடாது. தைரியமா, தன்னம்பிக்கையோட இருக்கணும். சுருக்கமா சொன்னா, ஒய்ஃப் வந்தா... என் லைஃபே மாறணும். அப்படி ஒரு தேவதையா இருக் கணும்!''




Andrea is not Simbus heroine

7. தனுஷ் மேல் கொலவெறியா?


''தனுஷோட 'கொலவெறிக்குப் போட்டியாதான் 'லவ் ஆன்தம்ஆல்பம் பண்றீங்களா?''

''ஒரு பாட்டு சந்துபொந்தெல்லாம் ஹிட் ஆகுற துக்கு, 'நாக்க முக்க’, ' போடுனு ஏற்கெனவேநிறைய உதாரணங்கள் இருக்கு. 'லூஸுப் பெண்ணேனு காதல் தோல்வி ஃபீலிங் பாட்டு டிரெண்டை ஆரம்பிச்சு வெச்சதே நான்தான். இப்போ நேரம் கிடைச்சதால், 'லவ் ஆன்தம்பண்றேன். இதை தனுஷ§க்குப் போட்டினு சொன்னா, அது தப்பு. அப்படி எல்லாம் சீப்பா நடந்துக்கிற ஆள் நான் இல்லை. சொல்லப்போனா, என் ஆல்பம் பேரைப் பார்த்து காப்பி அடிக்கிறவங்க தான் இங்கே இருக்காங்க!''


சி.பி - அண்ணன் எடுத்த படம் எல்லாம் காப்பி.. இதுல அண்ணனையும் காப்பியா? அவ்வ்வ்  .. லூசுப்பெண்ணே.. பாட்டு செம ஹிட் தான் .. ஆனா பிக்சரைசேஷன் மகா மட்டம்.



8. இப்போ தனுஷ்தான் மன்மதனா?




''வழக்கமா ஹீரோயினுடன் காதல்னு உங்க பேர்தான் அதிகமா கிசுகிசுக்கப்படும். இப்போ அந்த இடத்துல தனுஷ் இருக்காரோ?''  


''அவர் லவ் மேட்டர் பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது.



சி.பி - என்னாது? அவரோட லவ்வர் ஒரு மேட்டரா? என்னா பேச்சு இது ? ராஸ்கல்? ஏதோ சித்தார்த்தை 2 வருஷம் லவ் பண்ணாங்க.. அப்புறம் தனுஷை 1 வருஷம்.. இப்போ மறுபடி சமாதானம் ஆகி சித்தார்த்தை லவ்விங்.. 3 படம் ஹிட் ஆனா மறுபடி தனுஷ்க்கு ஒரு சான்ஸ் தர்றாராம் ஹி ஹி மற்றபடி அம்மணி நெம்ப நெம்ப நல்ல டைப்ப்ங்கோவ்

 
 என்னைப் பத்தி எதுவும் தப்பா நியூஸ் வர்றதில்லைங்கிற வரை எனக்குச் சந்தோஷம். முன்னாடி விகடன்லயே என்னைத்தான் போட்டு பரேடு எடுப்பீங்க. இப்போ 'வலைபாயுதேகமென்ட்டில் மட்டும்தான் நாம அடிபடுறோம். 'என்னடா பையன் எந்தத் தப்பும் பண்ணாம சும்மா இருக்கானேனு வீட்ல பயந்துட்டாங்கபோல. பரபரனு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நானும் சரினு சொல்லிட்டேன். எவ்வளவு நாள்தான் தனியாவே சுத்திட்டு இருக்கறது?''


சி.பி - விகடன் தாத்தா சைக்கிள் கேப்ல வலை பாயுதே பகுதியை விளம்பரம் பண்ணி எடுத்து அள்ளி விடறாங்க..அப்படி எல்லாம் அவர் சொல்லி இருக்கவே மாட்டார்.. இதுதான் இடைச்செருகல் ஹி ஹி 


http://www.tamilkey.com/wp-content/uploads/2011/07/nayanthara-simbu-0424-550.jpg


9. ''அப்போ உங்களைத்தான் எல்லாரும் திட்டிட்டு இருந்தாங்க. இப்போ நயன்தாரா பிரபுதேவாகிட்ட இருந்தும் விலகிட்டாங்களே?''



''யார் பண்ண தப்புக்கோ... நாம திட்டு வாங்குறது நம்ம ராசிங்க. நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு!''

சி.பி - மைன்ட் வாய்ஸ்ல எங்கே இருந்தாலும், யார் கூட இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்னு சொல்ற மாதிரி கேட்குது ஹி ஹி



10. ''நயன்தாராகூட சேர்ந்து நடிப்பீங்களா?''


''நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் 'அவங்கதான் வேணும்னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் கொண்டுவரக் கூடாது!''


சி.பி - ஆர்யா பற்றி எதுவுமே கேட்கலையே? என்ன நிருபர் நீங்க? குமுதம் பாருங்க.. இந்த வாரம்.. ஆர்யா பற்றி அண்ணன் கிட்டே கேட்டு பொளந்து கட்டி இருக்காங்க..  ( 9 தாரா யா யா யா யா யாயா-னு 6 டை, ஆர்யா ( 6 யா) பச்சை குத்தி இருக்காராம் ஹி ஹி 6 யா + 9 தாரா = 69 ஜென்மக்காதல்கள் ஹி ஹி 

http://www.extramirchi.com/gallery/albums/south/actors/Simbu_nayanthara/Simbu_nayanthara__Hogenakkal_fast2.jpg


அண்ணே.. பேப்பர் தலைகீழா இருக்கு ஹி ஹி

Thursday, December 08, 2011

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

http://vannimedia.com/wp-content/uploads/2011/12/Osthi-Movie-Wallpapers-51.jpg

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்  டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய் டேய்
ஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்  டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய் டேய்
ஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி

யாரும் பயந்துடாதீங்க.. படம் போட்டதுல இருந்து முடியறவரை ஹீரோ வர்றப்ப எல்லாம் இதுதான் பின்னணி இசை..சும்மாவே சிம்பு ஓவர் அலட்டல் பேர்வழி.. இதுல இன்ஸ்பெக்டர் ரோல் வேற.. பின்னே கேட்கவா வேணும்?விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்து சிம்புவோட நடிப்பை வியந்தவங்க எல்லாம் இந்தப்படம் பார்த்து வாழ்க்கையை வெறுப்பது உறுதி..

குருவி எனும் குப்பை படத்தை கொடுத்த தரணியைப்பார்த்து உலகம் வியந்தது.. தில் , தூள்,கில்லி என மெகா ஹிட் படங்கள் கொடுத்தவரா இப்படி ஒரு அட்டர்ஃபிளாப்பை கொடுத்தார்?என சந்தேகம், ஆனால் இந்தப்படத்தின் தோல்வி குருவியின் தோல்வியையும் தூக்கி சாப்பிட்டு விடும் போல இருக்கு.. 

படத்தோட கதை என்ன? ஹீரோவுக்கு ஒரு தம்பி.. அவர் நேரடி தம்பி இல்லை.. அம்மாவோட 2வது கணவரோட மகன்.. 2 பேருக்கும் ஆகாது...எல்லாரும் அண்ணனை கரிச்சு கொட்டறாங்க.. தம்பியை புகழ்றாங்க.. ஆனா அண்ணன் இன்ஸ்பெக்டர் ஆகறார், தம்பி வெத்து வேட்டு..

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/richa-14.jpg


ஹீரோ இருக்கற ஊர்ல எலக்‌ஷன்ல நிக்க வில்லன் வேட்பாளர்கள்க்கு பணம் பட்டுவாடா பண்ண ட்ரை பண்றாரு.. அதை எல்லாம் ஹீரோ தடுத்து தன் வீட்டு பீரோல வெச்சுக்கறாரு..ஏன்னா அந்த மாவட்டத்துல பேங்க்கே இல்லையா?னு கேக்கக்கூடாது.. வீட்லயே வெச்சிருந்தாத்தான் கதை நகரும்.. வில்லன் ஹீரோவோட அம்மாவை கொலை செஞ்சுடறாரு.. ஆனா பாருங்க இந்த சஸ்பென்ஸ் சீன் க்ளைமாக்ஸ்ல தான் இயக்குநருக்கே தெரியுது. ஆனா படம் பார்த்த சின்ன பசங்க கூட சொல்லிட்டாங்க அந்த  மேட்டரை..

அம்மாவை கொன்ன வில்லனை ஹீரோ எப்படி பழி வாங்கறாருங்கறதுதான் மிச்ச கதை.. தம்பி வில்லன் கூட சேர்றதும், க்ளைமாக்ஸ்ல திடீர்னு திருந்தி அவர் அண்ணாங்கறதும் இவரு தம்பிங்கறதும்.. எம் ஜி ஆர், சிவாஜி காலத்துலயே எங்கப்பா பார்த்துட்டாருங்கோவ்..

போலீஸ் யூனிஃபார்ம்க்கே புது கம்பீரம் கொடுத்த படங்கள் என இது தாண்டா போலீஸ், வைஜயந்தி ஐ பி எஸ் ..னு ஒரு லிஸ்ட் சொல்ற மாதிரி போலீஸ் பேரையே கெடுக்கற படமா ஒஸ்தியை சொல்லலாம்..

சாமி படத்துல விக்ரம் செஞ்சதை எல்லாம் தூக்கி சாப்பிடனும்கற உத்வேகத்தோட சிம்பு பண்ற அலம்பல்கள் தாங்கலை.. அவர் பல்லை கடிச்ச படி நெல்லைத்தமிழ் பேசும்போது பாவமா இருக்கு.. 


இதுல பிரமாதமா ஒரு ஸ்டைல் பண்றாரு.. அதாவது கூலிங்க் கிளாசை தூக்கி மேலே போடறாரு.. அது கரெக்டா அவரோட சட்டை காலர் பின்னால நச்னு சொருகிக்குது.. படத்துல ஒரு வில்லன் அமைச்சரா வர்றார்.. அவர் ஹீரோ கிட்டே இதுக்கு விளக்கம் கேக்கறார்.. அதுக்கு நம்ம அண்ணன் சிம்பு - எதிரிங்க பின்னால இருந்து குத்த வரும்போது தெரிஞ்சிக்க.. அடேய் அடேய் அண்ணே.. அது என்ன ரிவர்யூ மிரரா? அவ்வ்வ் 


 ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்பாய், மயக்கம் என்ன ஹீரோயின்.. தனுஷ் ஜோடியா நடிச்சவர்ங்கற ஒரே காரணத்துக்காக இதுல சிம்புவுக்கு ஜோடி.. பாப்பா பானை விக்கற பரம ஏழை, ஆனா பாருங்க 24 மணி  நேரமும் அவரோட இடுப்புல 15 பவுன்க்கு ஒரு ஒட்டியாணம் இருக்கு.. உலகத்துலயே பானை பிடித்தவள் பாக்ய சாலிங்கற பழ மொழிக்கு அர்த்தம் சொன்ன ஒரே கேரக்டர் இவர் தான் அடங்கொன்னியா..

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் காதல் வர்ற சீன் செம காமெடி.. பானை விலை என்ன?னு கேக்கறார்.. ரூ 250னு ஹீரோயின் சொல்ல ரூ 500 குடுத்து ஒரு பானை வாங்கிட்டு மீதி சில்லறை அப்புறமா வாங்கிக்கறேன்னு ஹீரோ சொன்னதும் ஹீரோயின் இன்னொரு பானை கொடுத்து சில்லரையை கழிச்சுட்டு எனக்கு நேர்மை தான் முக்கியம்கறார். உடனே சிம்புவுக்கு காதல் வந்துடுது ஹய்யோ அய்யோ..

சந்தானம் இருக்கறதால ஏதோ கொஞ்சமாவது ஜாலியா படம் பார்க்க முடியுது.. இன்னொரு முக்கியமான விஷயம், இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படத்திலும்  ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு குத்தாட்டம் போட்டு காக்கிச்சட்டையை இப்படி கேவலப்படுத்துனதே இல்லை..

ஆனா ஒரே ஒரு விஷயம் பாராட்டலாம். சிம்பு ஸ்டில்களில் பார்க்க அழகாக ஹிந்தி பட ஹீரோ மாதிரி ஜம்முனு இருக்கார்.. ஆனா படத்துல அவர் டயலாக் பேசறது மகா கொடுமை..

http://www.thedipaar.com/pictures/resize_20111126060151.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. மல்லிகா ஷெராவத்தை புக் பண்ணி அவரை ஹீரோ கூட ஆட விடாமல் வில்லன் கூட ஆட வைத்து சிம்புவை கடுப்பேற்றியது.. ( அப்புறம் போனாப்போகுதுன்னு 4 லைன்க்கு சான்ஸ்.. )

2. ஹீரோயினை கொடுத்த சம்பளத்துக்கு சரிக்கட்ட படம் பூரா முதுகு முழுக்க, இடை முக்கால் வாசி தெரியும் படி உடை வடிவமைத்தது..


3. சந்தானத்தை புக் செஞ்சு காமெடி வசனங்கள் சேர்த்து ரசிகர்களை ஓரளவு காப்பாற்றியது..

4. பாடல்கள் ஆல்ரெடி சூப்பர் ஹிட் என்றாலும் படத்தில் பார்க்கும்போது நடன அசைவுகள் பல இடங்களில் வெல்டன் சொல்ல வைத்தது..

5. ஜித்தன் ரமேஷை முடிஞ்சவரை கேவலப்படுத்தியது ( பாவம் சிம்புவுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனையோ?)

http://suriyantv.com/wp-content/uploads/2011/11/osthi-simbu-5.jpg

ஹீரோயின் போட்டிருக்கும் 15 பவுன் ஒட்டியாணம் ஹி ஹி
இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், ஆலோசனைகள்

1.  ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர் எப்படி எல்லா கேசுக்கும் மீடியாக்களிடம் பேட்டி தர்றார்? அட்லீஸ்ட் அவரை ஏ சி யாகவாவது காட்டி இருக்கலாம்.

2.  சிம்புவின் அம்மாவாக வரும் ரேவதி அவ்வளவு தத்தியா? சிம்பு கொண்டு வரும் கட்டுக்கட்டான பணத்தை எல்லாம் ஏது? எப்படி இவ்ளவ் பணம் என்றெல்லாம் கேட்காமல் பீரோவில் வைப்பது எப்படி?

3. ஒரு இன்ஸ்பெக்டரின் அம்மா இறந்ததும் அவர் அப்போதே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பண்ணீ இருக்க மாட்டரா? தலையணையால் தலையை அமுக்கி கொல்லப்பட்ட ரேவதி பிணத்தில் மூக்கில் ரத்தம் வந்திருக்குமே?

4. நாசர், ஜித்தன் ரமேஷ் இருவரும் அவர்கலது சம்பாத்யத்தை அனைத்தையும் பீரோவிலேயே தான் வைப்பாங்களா? அதென்ன போயஸ் தோட்டமா? வில்லன் அந்த பங்களாவை எரிச்சதும் நடுத்தெருவுக்கு வந்துடுவாங்களா?

5. எல்லா பணமும் போனதும் ஜித்தன் ரமேஷ் ஏன் வில்லனிடம் வேலைஆளாக சேர்கிறார்? சிம்புவிடம் போய் சொன்னால் தீர்ந்தது மேட்டர்..

6. க்ளைமாக்ஸில் எந்த வித டர்னிங்க் பாயிண்ட்டும் நடக்காமல் ஜித்தன் ரமேஷ் திடீர் என திருந்துவது எப்படி? படத்தை முடிக்கவா? அதே போல் சிம்பு 15 ரீல் வரை தன் அப்பாவை கரித்துக்கொட்டிட்டு இருந்தவர் திடீர்னு பாசம் பொங்க பேசுவது எப்படி?

7. ஜித்தன் ரமேஷ்  கல்யாணம் நடக்கும் சமயத்தில் சிம்பு தன் ஜோடியுடன் வந்து நான் தான் அண்ணன், எனக்குத்தான் முதல்ல மேரேஜ் நடக்கனும்னு தன் ஜோடியோட வர்றார், ஓக்கே, அவர் மணடபத்தை விட்டு போனதும் ரமேஷ் மேரேஜை நடத்தலாமே? ஏன் எழவு வீடு போல் எல்லாரும் எந்திரிச்சு போறாங்க?

http://www.freedownloadpond.com/wp-content/uploads/2010/10/richa_gangopadhyay_hot_navel_stills_01.jpg

படம் சிம்பு ரசிகர்கள் கூட பார்க்க முடியாது..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்

இந்தப்படம் 15 நாள் ஓடும் எல்லா செண்ட்டர்லயும்..

http://surfingall.files.wordpress.com/2010/12/richa-gangopadhyay-hot-in-black1.jpga


டிஸ்கி - வசனத்துக்கு தனி காமெடி கும்மி பதிவு இருக்கு ஹி ஹி

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

 

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்

 

Wednesday, October 19, 2011

தில்லு துர ஜோக்ஸ்



1.டியர், நான் பக்கத்துலதானே இருக்கேன், எதுக்கு ஃபிளையிங்க் கிஸ் தர்றீங்க? 

நீ ஏர்ஹோஸ்டல் ஆச்சே?அதானே பிடிக்கும்?

------------------------

2.இதயம் என்பது துக்கங்களையும், சோகங்களையும் வைத்திருக்கும் குப்பைக்கூடை அல்ல, அது ரோஜாக்களை, மகிழ்ச்சிகளை வைத்திருக்கும் தங்கப்பெட்டி

-----------------------------

3. குளிப்பதற்கு டெமோ காட்டுகிறார் பூனம் பாண்டே! # அடச்சே, வெறும் டெமோ தானா?

-------------------------

4. டியர், நாம டெய்லி கோயிலுக்குபோனா நம்ம காதல் தெய்வீகக்காதல் ஆகிடுமா? 

தேவை இல்லை, டிவைன் லவ்வர்ஸ்னு ஒரு கில்மா படம்,அதுக்குப்போனாலே போதும்

----------------------------
5. வாழ்க்கையில் கசப்பான உண்மைகளை விட இனிப்பான பொய்களே அவசியமாய் இருக்கின்றன மனதிற்கு

--------------------------

6. சாதாரண மனிதன் புத்தகத்துடன் இருப்பான், சாதனை மனிதன் புத்தகத்தில் இருப்பான்

--------------------------



7. வேலாயுதம் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என யு சான்றிதழ் வழங்கியது சென்சார் # அனைவரும் பார்க்கலாமா?அப்போ அதுல விஜய் இல்லையா?

-------------------------------

8. நீர் நிலைகளின் மேற்பரப்பில் தோன்றும் வாத்துகள் அமைதியாய் இருப்பதாய் தோன்றினாலும் உள்ளே அது கால்களால் நீந்திக்கொண்டே இருக்கும்

----------------------------

9. எல்லோராலும் விரும்பப்படும் நபர் என யாரும் இல்லை.. அனைவராலும் வெறுக்கப்படும் நபர் எனவும் யாரும் இல்லை

-------------------------------

10.இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றம்

-------------------------

three musketeers by Marcin Nawrocki

11. வார்த்தைப்பரிமாறல்கள்தான் காதல் என்றால் இதழ்கள் போதுமே, இதயம் எதற்கு?

------------------------

12. சிநேகங்களின் சோகங்கள் சுலபமாக இறக்கி வைக்கப்படுகின்றன, கேட்கும் நமக்குத்தான் மனதில் பாரம் ஏறுகிறது, கண்ணில் ஈரம் ஊறுகிறது

-------------------------

13. பெண்ணை கோபப்படுத்தாமல் பேசுவது எப்படி? என்ற கலையை இன்னும் எந்த ஆணும் கற்றுக்கொள்ளவில்லை

----------------------------

14. கண்ணீரும், புன்னகையும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது அபூர்வம்,வாழ்வின் மறக்க முடியாத அந்த சந்திப்பு உன்னுடனான ஒரு சந்திப்பில் நிகழும் 

--------------------------------

15. பெற்றோரை எதிர்த்து செய்த காதல் திருமணங்கள் 10% என்றால், பெற்றோர் மனம் நோகக்கூடாது என்பதற்காக பிரிந்த காதல் 50 % 

----------------------------


Piddling

16. வாய்ப்புகள் நம்மைத்தேடி வரும்போது அதன் முக்கியத்துவம் நாம் உணர்வதில்லை, நம் கை விட்டு நழுவிய பின் தான் உணர்கிறோம்

----------------------------

17. க்ரைம்கதை எழுதுபவர்களை யாரும் கொலை செய்த அனுபவம் உண்டா? என கேட்பதில்லை, ஆனால் கவிதை எழுதுபவர்களை காதல் அனுபவம் உண்டா? என கேட்கிறார்கள்

-------------------------
18. காதலிப்பது யாராக இருந்தாலும் கஷ்டப்படுவது நான் தான் - மொபைல் ஃபோன் # SMS

--------------------------------

19. உண்மை, தூய்மை, சுய நலமின்மை இந்த 3ம் அமையப்பெற்ற ஒருவனை இந்த உலகமே எதிர்த்தாலும் எதுவும் செய்ய முடியாது # காலண்டரில் கண்டது

-------------------------


20.பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதான் ஒருவரின் இதயத்தை ஆக்ரமிக்க உதவும் சிறந்த ஆயுதம்

-------------------------------


Art by Erik Johansson