Showing posts with label உத்தம புத்திரன் (1958) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( டபுள் ஆக்சன் மசாலா). Show all posts
Showing posts with label உத்தம புத்திரன் (1958) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( டபுள் ஆக்சன் மசாலா). Show all posts

Thursday, October 13, 2022

உத்தம புத்திரன் (1958) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( டபுள் ஆக்சன் மசாலா)


 சிவாஜி  கணேசன்  ஓவர்  ஆக்டிங்  என  குறை  சொல்லும்  பலரும்  பார்க்க  வேண்டிய  இரு  படங்கள்  முதல் மரியாதை , உத்தம  புத்திரன். முன்ன்தில் முழுக்க  முழுக்க  இயல்பான  நடிப்பு . பின்னதில்   ஸ்டைலிஷ்  நடிப்பு , ஆனா  என்னதான்  சொன்னாலும்  எம்  ஜி ஆர்  ரசிகர்களால்  சிவாஜியை  ரசிக்கமுடிவதில்லை . அது  ஏன்னு  தெரியலை. எல்லா  நடிகர்களையும்  அவரவர்  பிளசை  ரசிக்கனும்  என்பதே  என்  கருத்து 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ம்காராணி  நிறை மாசமா  இருக்காங்க , நாம  கூட இருக்கனும்கற  பொறுப்பே  இல்லாம  மன்னன்  வேட்டையாட காட்டுக்குப்போய்டறான். பிரசவத்துல  இரட்டை  ஆண்  குழந்தைகள் 


மகாராணியின்  த்ம்பிதான்  நாட்டின்  தளபதி . அவன்  தான்  வில்லன். அவன்  சதித்திட்டம்  தீட்டி  ஒரு  குழந்தைதான்  பிறந்துதுனு  சொல்லிடறான். இன்னொரு  குழந்தையை   ஒரு  ஆள்ட்ட  கொடுத்து  கொன்னுடுங்கறான். அந்த  வேலையை  அவனே  செஞ்சிருந்தா  படமே  வந்திருக்காது 


வேட்டைக்குப்போய் திரும்பி  வந்த  மகாராஜா  வுக்கு  விஷம் வெச்ச  சாப்பாட்டைக்கொடுத்து  போட்டுத்தள்ளிடறான்   வில்லன். குழந்தையை  வளர்த்து  ஆளாக்கும்  பொறுப்பை  கரெக்டா  வில்லன்  கிட்டேயே  ஒப்படைக்கிறான்  மன்னன், ஆள் ஆவுட்


பசங்க  பெரியவ்ங்க  ஆகறாங்க . இளவரசனா  வளர்பவன்  சரக்கு , பொண்ணுங்க   அப்டினு  உல்லாசமா  வாழ்றான். ஏழையா  இருப்பவன் நல்லவனா  வீரனா  வாழ்றான்


 நாட்டின்  அமைச்சரின்  மகள்   ஏழையைப்பார்க்கறா. ரெண்டு  பேரும்  கண்டதும்  காதல் 


அங்கே  அரண்மனைல இளவர்சனுக்கும்  அதே  அமைச்சர்  மகளை  மேரேஜ்  பண்ணி  வைக்க  திட்டம்  தீட்றாங்க 


வழக்கமா  பெண்  பார்க்க  நாம  பொண்ணோட்  வீட்டுக்கோ  கோயிலுக்கோ  போவோம், ஆனா  மன்ன்ர்  குடும்பம்  ஆச்சே? பெண்ணை  அந்தப்புரத்துக்கே  வரவழைச்சு  பார்க்கறாங்க


 காதலன்  காதலியை  சந்திக்க  1008 வழிகள் , , இடங்கள் இருக்கு . அதை  எல்லாம்  விட்டுட்டு  அந்த  எழை  இளைஞன்  அரணமனைக்கே  வந்துடறான்


 உருவ  ஒற்றுமை  கண்டு  குழப்பம்  வ்ருது / இதுக்குப்பின்   இந்தக்கதையில்  நிகழும்  திருப்பங்கள் தான்  கதை 


 ஒரு  ஜனரஞ்சகமான  கதையை  ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  ஜாலியா  கொண்டு போனதால்  செம  ஹிட் சாங்ஸால்  இது  சூப்பர்  டூப்பர்  ஹிட்  படம்  ஆனது 

ஹீரோவா  டபுள்  ஆக்சனில்  சிவாஜி .   ஓப்பனிங்  சாங்கில்    யாரடி நீ மோகினி   ஹா  என  ஸ்டைல் காட்டும் போது அரங்கம்  அதிரும்  கைதட்டல் ( கிடைச்சிருக்கும்)  உடல்  மொழியில்  இருவருக்கும்  நல்ல  வித்தியாசம்  காட்டி  இருப்பார் . ( இவரது  உடல்மொழியை  சிலாகிக்க  சிறந்த  படம்  ராமன்  எத்தனை  ராமனடி ) 


ஹீரோயினா  பத்மினி , தில்லானா  மோகனாம்பாள் தான்  இவங்க  கெமிஸ்ட்ரி  பிரமாதமா  ஒர்க்  அவுட்  ஆன  படம், இதிலும்  நல்லாதான்  இருக்கு


வில்லனா  நம்பியார் ., இவரது  முக பாவனைகளும்  டயலாக்  டெலிவரியும்  செமயா  இருக்கும் 

அம்மாவா  கண்ணாம்பா. இவர்  நடிப்பைப்பற்றி  எல்லாம்  சொல்லவே  தேவை  இல்லை 


காமெடிக்கு  தங்க  வேலு . குட்  டைமிங் 

 திரைக்கதை  வசனம்  ஸ்ரீதர் /  அடேங்கப்பா. இவரு    அந்தக்காலத்துலயே  பெரிய  ஆள்  போல 



 செம  ஹிட்  பாடல்கள்  லிஸ்ட்


1  ஹா  , யாரடி  நீ  மோஹினி  , கூறடி  என்  கண்மணி  ஆசை  உள்ள  ராணி 

2 முல்லை  மலர்  மேலே  மொய்க்கும்  வண்டு  போலே   (  செம  மெலோடி )

3  அன்பே  அமுதே 

4  காத்திருப்பான்  கமலக்கண்ணன் 

5  புள்ளி  வைக்கிறான்

6  மண்ணுலகெல்லாம்

7  உன்ன்ழகை  கன்னியர்கள்  கண்டதினாலே 


இது  போக  2  பாட்டு  இருக்கு  , அவை சுமார்தான் 

இசை  ஜி  ராமநாதன் . பிஜிஎம்மும்  சரி  பாடல்  இசையும்  சரி 

செம 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1  கமல்  நடிச்ச  மைக்கேல் மதனகாமராஜன்ல  இருந்து  அந்தக்கால  ஆள் மாறாட்ட படங்கள்  வரை  எல்லாப்படத்துலயும்  வில்லன்   குழந்தையை  டைரக்டா  அவனே  கொல்லாம  அதுக்கு  ஏன்  ஆள்  வைக்கனும்? அல்லது  கண்  முன்  கொல்லச்சொல்லனும், இதை  எங்காவது  கொண்டு போய்  புதைனு  எதுக்கு  சொல்றாங்க ?


2   மன்னனிடம்  இரட்டைக்குழந்தைல  ஒண்ணு  தான் தப்பியது  . இன்னொண்ணு இறந்துடுச்சுனு  சொல்லும்போது  அந்த தத்தி  மன்னன்  இறந்த  குழந்தையின்  டெட்  பாடி  எங்கே?னு  கேட்கவே  இல்லை 


3  ஒரு பெரிய  அரசிய  செல்வாக்குள்ள  மந்திரியைக்கொல்ல  ஆள்  வைக்கலாம், தம்மாத்தூண்டு  குழந்தையைக்கொல்ல  ஒரு  ஆளை  நியமிப்பதும்  இந்த  வேலையைச்செய்தா  உனக்கு  லட்சக்கணக்கில்  ப்ணம்  தர்றேன்   என  சொல்வதும்  எதுக்கு ? 


4  மகாராணி  மந்திரி  மகளை  அந்தப்புரத்துக்கு  வரச்சொல்வது  பெண்  பார்க்க  ஒரு  10  நிமிசம்  ஆகுமா? ஆனா ஹீரோ   ஹீரோயின்  எங்கே?னு  கேட்கும்போது  அவர்  என்னமோ  அரண்மனைக்கே  குடியேறிப்போன  மாதிரி  அவரை  நீங்க  இனி  இங்கே  பார்க்க  முடியாது  , அரண்மனை  அந்தப்புரம்  போனா  பார்க்கலாம்  என சொல்வது  செம  காமெடி . அது  எவ்ளோ  பெரிய  ரிஸ்க் ? ஆனா  அசால்ட்டா  போய்ட்டு வந்துடறார்  ஹீரோ 


5 வில்லன்  நம்பியார்  பட்டாபிஷேக விழாவில்  மகாராஜா  14  வருடங்களுக்கு முன்  குழந்தையை  என்னிடம்  ஒப்படைத்தார்  என்கிறார். ஆனா  அந்தக்குழந்தை  பெரியவன்  ஆகி  இப்போ  25  வயசு  ஆளா  காட்றாங்க .


6   கிட்டத்தட்ட  20  வருடங்களாக  ஆட்சி  அதிகாரத்தை  தன் கையில் வைத்திருக்கும்  தளபதி  எப்படி  தன்  கையை  விட்டு  அதிகாரம்  போக  சம்மதிப்பார்?  ஜஸ்ட்  4  வ்ருடங்கள்  ஆட்சி  அதிகாரம்  இருந்தாலே  இப்போ  எல்லாம்  எல்லாத்தையும்  அவங்க  கண்ட்ரோலுக்கு  கொண்டு  வந்துடறாங்க 

7   மன்னர்  ஒரு  தத்தி  போல  குழந்தையை  அம்மா  கிட்டே  ஒப்படைக்காம  தாய்மாமா  கிட்டே  ஏன்  ஒப்படைக்கிறார்?பல  வருடங்கள்  கழித்து  தன்   தம்பியான  தளபதியிடம்  குழந்தையை  நீ  வளர்த்த  விதம்  சரியில்லைனு சொல்லுதே? நி   என்னம்மா  பண்ணிட்டு  இருந்தே? டி வி  சீரியலா  பார்த்துட்டு  இருந்தே?  நல்லா  வளர்த்திருக்கலாமே? அல்லது   அப்பவே  கண்டிச்சு  இருக்கலாமே? 


88 நல்லவனான குடிப்பழக்கம் இல்லாத ஹீரோ ஹீரோயினை வர்ணித்துப்பாடும் பாட;லில் மது குடித்த வண்டு போல் என்ற பாடல் வரி வருது. கெட்டவனான குடிகாரனான மன்னன் பாடுவது போல் இருந்தால்; அது ஓக்கே நல்லவன் தேன் குடித்த வண்டு போல் என்றுதானே வர்ணிக்க வேண்டும் ? ஒரு வேளை அவருக்கு போட்ட பாடலை இவ்ருக்கு மாத்திட்டாங்களா?

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  =--  இந்தக்கால  ரசிகர்களும்  ரசித்துப்ப்பார்க்கும்படிதான்  கலகலப்பா  படம்  போகுது . எல்லாரும்  பார்க்கலாம்  ரேட்டிங்  3 / 5 


உத்தம புத்திரன்
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புஎஸ். கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீதர்
டி. கோவிந்தராஜன்
(வீனஸ் பிக்சர்ஸ்)
திரைக்கதைஸ்ரீதர்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
எம். கே. ராதா
ஓ. ஏ. கே. தேவர்
பத்மினி
ப. கண்ணாம்பா
எம். எஸ். எஸ். பாக்கியம்
ராகினி
ஹெலன்
ஒளிப்பதிவுஅ. வின்சென்ட்
படத்தொகுப்புஎன். எம். சங்கர்
விநியோகம்சிவாஜி புரொடக்சன்சு (சென்னையில் மட்டும்)
வெளியீடுபெப்ரவரி 71958
நீளம்16044 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
முன்னர்உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)