Wednesday, June 29, 2011

எனக்கு அடிமையாய் நடந்துக்கறியே,கஷ்டமா இல்ல?

1.சீட்டுக்காக இனி யாரிடமும் கையேந்த வேண்டாம் - திருமாவளவனுக்கு ராமதாஸ் அறிவுரை.# கவர்ச்சி காட்ட வேணாம்னு ரேவதிக்கு, சில்க்ஸ்மிதா சொல்ற மாதிரி இருக்கே?!

---------------------

2. ஸாரி,டியர்..உங்களோட வாழ எனக்குப் பிடிக்கல.. நான் போய் ஒரு லாயரைப்பார்க்கறேன்..

அடிப்பாவி,லாயர் கூட வாழப்போறியா?

---------------------

3. நிர்வாக முறையில் மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசு துறைகளில் மாற்றம் #அய்யய்யோ இதுவரை ரூ 500க்கு கை ஏந்துனவங்க எல்லாம் ரூ 5000 கேட்பாங்களே?

------------------------
4. உன் அன்பு எனக்கு முழுதாகக்கிடைக்குமா? என்றாள் காதலி . வேணாம்.நீ திணறி விடுவாய், கொஞ்சம் கொஞ்சமாய் செலுத்தும்போதே உன்னால் தாள முடிவதில்லை.

------------------

5. நம் உடன் எப்போதும் இருப்பவர்களுக்கு நம் அருமை தெரியாது. நம்மை விட்டு விலகி இருப்பவர்களே பிரமிப்பாக பார்ப்பார்கள்

----------------------


grande_barriere_de_corail_18-austrialia.jpg

6. பத்திரிகையாளர்களுடன் பிரதமர் சந்திப்பு!#"இங்கே பாருங்க.கேள்விகளை செவிமடுக்கும் அதிகாரம் மட்டுமே எனக்கு வழங்கப்பட்டுள்ளது,பதில்கள் நோ

--------------------
7. ”எப்போ பாரு என் கிட்டே பேசிட்டே இருக்கியே? போர் அடிக்கலை?”  “என்ன பேசறோம்னே தெரியறதில்லை, தெரிஞ்சாத்தானே போரடிக்கும்?##காதல் கடலை

--------------------------

8. தவறு செய்த மனிதனின் மனதில் ஏற்படும் குற்ற உணர்ச்சி தரும் தண்டனையை விட பெரிய தண்டனை வேறு ஏதும் இருப்பதாகத் தெரிவதில்லை

---------------------

9. இனி சினிமாவில் நடிக்க மாட்டேன், இனி எனது மகன் சினிமாவில் ஆர்வம் காட்டுவார்-சிரஞ்சீவி# அடடா, இதைக்கேட்கறப்ப கலைஞர்,ஸ்டாலின் கதை நினைவுவருதே

--------------------

10. கட்சி அமைப்புகளை மாற்றியமைக்க தி.மு.க., முடிவு#மார்க்கெட் அவுட் ஆன நடிகை கல்யாணம் பண்ண முடிவெடுக்கற மாதிரி..??

----------------------


bali_6-5-indonesia.jpg



11. எனக்கு அடிமையாய் நடந்துக்கறியே,கஷ்டமா இல்ல? என்றாள் காதலி. அன்புக்கு அடிமையாய் இருக்கையில் அறிவு ஓய்வு எடுக்க போய் விடும் என்றேன்.


--------------------

12. உன்னிடம் பேசி என்னால் ஜெயிக்க முடியாது என்பதால் நேசித்து அதிலாவது ஜெயிக்கலாம் என்று பார்க்கிறேன்#லவ் ரேஸ் லவ் க்ரேஸ்

-------------------
13. என்னை இனி நடிக்க வேணாம்னு அவர் சொல்லிட்டார்- நயன் தாரா #இனிமே ஓக்கே மேடம், இத்தனை நாளா ஏன் நடிக்கலை?டவுட்டு

------------------------
14. நங்கையிலேயே நகை இருந்தும் இந்த நங்கைகள் ஏன் தான் நகை நகை என அலைகிறார்களோ?#நகைமுகன்

--------------------
15.கனிமொழிக்கு ராகுகேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் #தமிழ்நாட்டையே பிடிச்ச தோஷத்துக்கே தோஷமா?விதி வலியது

------------------

 

































16. ”என் பின்னாலயே வர்றியே?வெட்கமா இல்லை?” “சம்மதம் சொன்னால் உனக்குஇணையாகவே வருவேன்,அப்புறம் உனக்கு வெட்கமா இருக்கும்,பரவால்லியா?#காதல் கடலை

---------------------
17. ”தினமும் எனக்கு ஊட்டி விடும் காதலா, இதில் உனக்கு என்ன இன்பம்?” “ஊட்டி விடும் சாக்கில் உன் உதடுகளின் ஸ்பரிசம்”#லவ்விஸம்,டச்சிஸம்

------------------

18. கனிமொழி ரொம்ப நல்லவர்-முன்னாள் கணவர்# நல்லா யோசிச்சு சொல்லுங்கண்ணே,நல்லவரா? வல்லவரா?

--------------------

19. :என்னுடன் ஜாகிங்க் வருவதை ஏன் தவிர்க்கிறாய்?” எதிர்ப்படுபவர்கள் உன்னை கவனிப்பதை நான் கவனிப்பேன்,அதை நீ கவனிப்பாய்.தேவையற்ற சங்கடங்கள் ஏன்?

------------------

20. அன்பு என்பதன் அர்த்தத்தை உன் கண்களில் கண்டேன்,அழகு என்பதன் மயக்கத்தை உன் உதட்டு சிரிப்பில் உண்டேன்.
---------------------------------




ஆண்கள் ஏன் வில்லங்கமா யோசிக்கறாங்க?





1. வில் அங்கமாய் பெண்கள் நம் கண் முன்னே தோன்றும்போது மனம் வில்லங்கமாய் சிந்திக்கிறதே#ஜிகிடி

--------------------

2. ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கரெக்ட் பண்ண முயற்சிப்பது தவறல்ல,ஆனால் இருவரும் ஒரே தளத்தில் இருப்பவர்களாக இருந்தால் ஆபத்து

------------------

3. மாமா என அழைக்கும் முறைப்பெண்கள் அவர்கள் திருமணத்துக்குப்பின் முறைக்கும் பெண்களாக மாறும் அபாயம் இருப்பதால் அதற்கு முன்பே.......#ஜிகிடி

----------------

4. ஃபிகர்கள் நம்மை மாமா என்று கூப்பிட்டுவிடக்கூடாது என்று தான் முன்யோசனையாக நான் டபுள் எம்ஏ படிக்காமல் சிங்கிள் எம்ஏ வோடு நிறுத்திவிட்டேன்

----------------------

5.  விரைவில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' குறித்து அப்டேட் செய்கிறேன்-சிம்பு #முடிஞ்சா ஹீரோயினா நயன் தாராவையும் அப்டேட் பண்ணப்பாருங்க

------------------



6. சிறையில் ஏழு போர்வைகளை பயன்படுத்தும் ஆ ராசா -செய்தி#நல்லவன்கற போர்வைல நடமாடறவர் அவரு ஜாக்கிரதை..

---------------------

7. தமிழக போலீசில் 20 ஆயிரம் பணியிடம் காலி: #காலி இடம்னு யாராவது வளைச்சுப்போட ட்ரை பண்ணிடப்போறாங்க,நான் ஈரோடு என் கே கே பி ராஜாவை சொல்லலை

--------------------

8. ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதால் ஹீரோயின் படத்திலிருந்து நீக்கம்#அதனால என்ன?அம்மா தான் கர்ப்பவதிகளுக்கு  நிவாரண நிதி வழங்கறாரே?

------------------

9. கல்யாணத்திற்கு பிறகு மனைவியிடம் எப்படி அன்பாய் பழக வேண்டும், என்று கார்த்திக்கு டிப்ஸ் -ஜோதிகா#அப்போ சூர்யா ரஞ்சனிக்கு டிப்ஸ் தருவாரா?

-------------------

10. என் ரசிகர்கள்விரும்பும்வரை நான் குத்துப்பாட்டு  ஐட்டம் டான்சராக இருப்பேன்- மல்லிகா ஷெராவத் #நல்லவேளை,உங்க ஸ்டேட்மெண்ட்ல டான்சர்  இருந்துது

-----------------------




11. கஸ்டம்சிடம் தொடர்ந்து சிக்கும் பாலிவுட் நடிகைகள்!#கஸ்டம்ஸ் ரெய்டுலதானே சிக்குனாங்க.. ஒண்ணும் பாதகம் இல்ல..

----------------

12. புனிதமான இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை-எடியூரப்பா#அப்போ அரசியல் பாவச்செயல்னு ஒத்துக்கறீங்களா?

------------------















180 (நூற்றியெண்பது) - 420 (ஃபோர் ட்வெண்ட்டி) - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY9vg6jUW7XvE3bqN9Sp_EmFs19CegtG8N0wFSEEfFoc7zAf3EWDjlpjZjn1RcKKax04UO3xyemEuVCtQmQrpGHx9FdD1_KawEHQnBakdLKrccu_7yC9s59mELn9Z9tPY60LjPdDuz_jU/s1600/180-Movie-First-look-Poster.jpgகல்யாண மண்டபத்துல பட்டுச்சேலை சரசரக்க,மல்லிகைப்பூ மண மணக்க,இடையில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் மினுமினுக்க ஃபிகரு பண்ற அலம்பல் பார்த்துட்டு செம ஃபிகர்ப்பான்னு தப்பா நினைச்சிருப்போம்..அவங்களுக்கு முன் தகவல் ஏதும் சொல்லாம திடீர் விசிட்டா வீட்டுக்குப்போய் பார்த்தா பாப்பா 35 மார்க் கூட பெறாத அட்டு ஃபிகரா இருக்கும்.. அங்கே  வீடு கூட்டிட்டு இருக்கும்..

அந்த மாதிரி சில படங்கள்ல டிரைலரும்,போஸ்டரும்,விளம்பர யுக்திகளையும் பார்த்துட்டு அட,செம படமா இருக்கும்போல இருக்கே.. அப்டின்னு வாயைப்பிளந்துட்டு படத்துக்குப்போவோம்.. அங்கே போய்ப்பார்த்தா படம் பிலோ ஆவரேஜா இருக்கும்.. (BELOW AVERAGE).

நீரவ்ஷாவின் கலக்கலான ,கண்களில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு, +70 மார்க்  வாங்கும் ஹோம்லி ஃபிகர் 1 ,75  மார்க் வாங்கும் மாடர்ன் ஃபிகர் 1 என 2 ஃபிகர்கள் ஹீரோயின்ஸாக என முக்கிய பிளஸ்கள் இருந்தும் படம் ஊத்திக்கிட்டதுக்கு முக்கியக்காரணம் கதை நஹி.. + ஹீரோவுக்கு கேன்சர்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpyuErGiMiUdNrGasXgWMl2YF5bZAHFE7Lx1OZvLPRUzNkXg1uppDffoudTC5ZYhwl_SneW3DBz03eky7TvWA5bWFvlVNOILNJYTX0lR6q5bLz8Js0bQDnDSRRGaLXzxOrOv2J28fjOdk/s1600/Nitya+Menon+(8).jpg

ஹீரோ சித்தார்த் புது ஊருக்கு வர்றாரு.. அங்கே ஒரு ஃபிகர் லவ்வுது இவரை ஒன் சைடா. (தெலுங்கு டப்பிங்க் படம் என்பதைத்தான் சூசகமா சொல்றேன்) இவரு பம்முறாரு. ஃபிளாஷ்பேக்.. இவருக்கு ஏற்கனவே இன்னொரு ஃபிகரோட லவ் ஆகி மேரேஜூம் ஆச்சு.. ஆனா அண்ணனுக்கு கேன்சர்..  அண்ணனை  மரண பயம் துரத்துது.. அண்ணனை அண்ணி உட்பட அனைவரும் இரக்கமா பார்க்கறாங்க..  அண்ணனுக்கு இது பொறுக்கல.. கண்காணாத தேசம் போறாரு.. 

இப்போ மனைவி சந்தோசமா இருக்கறதை பார்க்க நினைக்கிறார்.. மறுபடி அவர் மனைவியோட இணைஞ்சாரா? கண்ணீர் மழையில் நனைஞ்சாரா? என்பதை தில்லு உள்ளவர்கள் தியேட்டரில் போய் பார்க்க... 

படத்தில் மணிரத்ன வாடை அதிகம் வீசுவதால் வசனத்திற்கு அதிக வேலை இல்லை.. .

. தேடித்தேடிப்பார்த்ததில் தட்டுப்பட்ட நல்ல வசனங்கள்



http://news.moviegallery.co.in/wp-content/uploads/2011/03/180-Movie-Stills.jpg

1. டாக்ஸி டிரைவர் - சார்.. எங்கே போகனும்?

இந்த 2 விரல்ல ஒண்ணைத்தொடு..வலது விரலைத்தொட்டா டி நகர், இடது விரலைத்தொட்டா அண்ணா நகர்..

டாக்ஸி டிரைவர் - அப்போ சாருக்கு 2 செட்டப்பா?



2. ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சு யோசிச்சு பேச முடியாது.. டார்ச்சர் தாங்கல..

3. நான் ரொம்ப பயந்துட்டேன்...

பயப்படாதே.. நான் இன்னும் சாகல..

4. ஏங்க. மாப்ளையோட கேன்சர்.. நம்ம பொண்ணையும் கொன்னுடுமோன்னு பயமா இருக்குங்க.. நம்ம பொண்ணை நம்மளோடயே கூட்டிட்டு போயிடலாமா?

5.  காசில உயிர விடனும்னு முடிவு பண்ணி இருக்கேன்..

(இப்படி எத்தனை பேரால சாவு நடக்கற இடத்தை தீர்மானிக்க முடியும்?)

6. சாகறதைப்பற்றி கவலைப்பட்டுட்டே இருந்தா வாழும் நாட்கள் எப்படி இன்பமாகும்?

7.  தூரத்துல இருந்து அவ சிரிக்கறதை ஒரு தடவை பார்த்துட்டா போதும்.. நான் உயிரை விட்டுடுவேன்.. ..

8.  நான் அவ கூட இருக்கற வரை அவ சோகமாத்தான் இருப்பா,விட்டு விலகி வந்துட்டா அவ நார்மல் ஆகிடுவா..

9. அவளைப்பார்க்கனும்னு செல்ஃபிஷ் போல ஓடி வந்தேன், பார்த்துட்டேன், இப்போத்தான் தோணுது பார்க்காமலேயே இருந்திருக்கலாம்..

10. நான் வந்தா சாவும் என் கூடவே வரும், அதைக்கூட தாங்கிப்பேன்,ஆனா அவ முகம் வாடிடும்,அதை என்னால தாங்கிக்கவே முடியாது..

http://4.bp.blogspot.com/-YYys6LDC5xg/TVoVHkNsf2I/AAAAAAAALPo/w1FnHqh5vwk/s1600/180-Telugu-Movie-Press-Meet-Gallery-4.jpg

 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. படத்தின் ஓப்பனிங்க் சாங்க்கில் ஹீரோ சித்தார்த் சிறுவர்களுடன் சேர்ந்து கும்மி அடிக்கும் பாடல் நடனக்காட்சி படமாக்கப்பட்ட விதம் ஒளிப்பதிவுக்கலைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம்,

2. ஹீரோயின் அடிக்கடி யாருக்கோ வரும் ஃபோனில் மிமிக்ரி பண்ணி பேசுவது..

3. பாடல் காட்சியில் ஹீரோ,ஹீரோயின் விரல்கள் மட்டும் நண்டு ஊறுது ,நரியூறுது விளையாட்டு விளையாடுவது..

4. ஹீரோவுக்கு மரண பயம் ஏற்பட்டதும் காலனின் குறியீடாக  மொட்டைத்தலை பாஸ் காட்டப்படுவது..

5 .அழகான 2 ஹீரோயின்களையும் படத்தில் எந்த அளவு தேவையோ அந்த அளவு உபயோகப்படுத்திக்கொண்டது..

6. ஹீரோ ஹீரோயினை ஸ்டெதஸ்கோப் வைத்துப்பார்க்கும்போது ஹார்ட் பீட்டுக்குப்பதிலாக ரோஜா பட பாடலான புது வெள்ளை மழை பாட்டு ஒலிப்பது.. 



http://moviegalleri.net/wp-content/uploads/2011/04/priya_anand_180_movie_hot_photoshoot_stills.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோ வுக்கு கேன்சர் என்ற அரதப்பழசான ட்விஸ்ட் வைத்தது..இந்த சீனில் சோகம் வருவதற்குப்பதிலாக எரிச்சல்தான் வருது/...

2. டாக்டராக வரும் ஹீரோ அதற்குண்டான பாடி லேங்குவேஜ்ஜில் கவனம் செலுத்தாதது..

3. மவுண்ட் ரோடில் ஆக்சிடெண்ட் ஆகும்போது தலையில் அடிபட்ட ஹீரோயின் கழுத்தில் பேண்டேஜ் உடன் அடுத்த காட்சியில் ஹாஸ்பிடலில் வருவது

4. படம் முழுக்க ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியதில் பாதி கூட திரைக்கதையில் செலுத்தாதது..

5. மரண தேவன் கேரக்டரை அடிக்கடி காண்பித்து கடுப்பேற்றுவது..





http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/180/180-tamil-movie-audio-launch-stills-5.jpg

இந்தப்படம் காதலர்கள், பதிவர் ராமலட்சுமி  மேடம் மாதிரி புகைப்படக்கலைஞர்கள் மட்டும் பார்க்கலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி. பி  கமெண்ட் - அய்யய்யோ போயிடாதீங்க..

எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடும். ஏன்னா அடுத்த வெள்ளிக்கிழமைக்கு 7 நாட்கள் பாக்கி இருக்கே..?

 ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்..

http://telugu.way2movies.com/wp-content/uploads/2011/05/180_movie_trailers.jpg

Tuesday, June 28, 2011

ஈரோடு காலேஜ் பிரின்சிபால் VS மவுண்ட் ரோடு அமலா பால்

1.உங்களுக்கு பிடிச்சது எது?பிடிக்காதது எது?

பிடிச்சது  அமலா பால்,பிடிக்காதது எங்க காலேஜ் பிரின்சிபால்#பால் பாண்டி ஜோக்

---------------------------

2. DR,என்னால எதையும் சாப்பிட முடியல. 

பேச்சிலர்னா ஹோட்டலை மாத்துங்க, சம்சாரின்னா சம்சாரத்தை மாத்திப்பாருங்க

------------------------

3. இந்தக்காலத்துப்பொண்ணுங்க ரொம்ப மோசம்னு எப்படி சொல்றே?

வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களை விட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போற பொண்ணுங்கதான்  அதிகமா இருக்காங்க.. 

------------------------------

4.  என் லவ்வை அவ கிட்டே சொல்லக்கூட நான் இவ்வளவு யோசிச்சதில்லை,ஆனா உன் கிட்டே சொல்லத்தாண்டா பயமா இருக்கு.. 

ஏன்?

காதலியிடம் லவ்வை சொல்ல 4 ரூபா ரோஜாப்பூ வாங்கிகுடுத்தா போதும்,ஆனா நண்பனிடம் அதை சொல்ல 400 ரூபாவுக்கு தண்டச்செலவு செஞ்சு ட்ரீட் வைக்கனும்னு எழுதப்படாத விதி இருக்கே?

--------------------------



5. சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது. 

மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்னு தெரியுமா உங்களுக்கு?

----------------------

6. அவரு பால் மணம் மாறா பாலகன்னு இனிமே சொல்ல முடியாது.. 

ஏன்? 

எப்போ பாரு நடிகையோட ஸ்டில்லை ஸ்மெல் பண்ணிட்டே இருக்கானே? அமலா பால் மணம் மாறா கிராதகன்னு வேணா சொல்லலாம்..


---------------------

7. விளக்கேற்ற ஒரு பெண்ணைத் தேடி களைத்தவர்கள் அவசர உதவிக்குகிடைத்த பெண்ணை வைத்து விளக்கை அணைக்கிறார்கள்#முதிர் கண்ணன்களின் காமம்


----------------------------------

8.  மனசுக்குப்பிடிச்சவங்களை பார்க்காமல்.பேசாமல் இருந்து விடலாம்,ஆனால் மனதில் நினைக்காமல் இருந்து விட முடிவதில்லை#நெஞ்சுக்கு நீதி

--------------------

9. உனக்காக எதையும் விட்டுக்குடுக்க நான் தயார் தான்,ஆனால் உன்னை விட்டுக்குடுக்க தயார் இல்லை.. 

-----------------------

10. பெண்கள் அனைவரும் தேவதைகள் தான்.நீ தேவதைகளின் தேவதை

-------------------

. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் என்ன??


1. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் அவசர முத்தங்களால் கறைகள் காட்டிக்குடுத்துவிடும் அபாயமாகக்கூட இருக்கலாம்#ஜிகிடி

--------------------

2. நீ தலைக்குக்குளித்து வரும் நாட்களில் உன்னைத்தவிர்க்க நினைக்கிறேன்,காரணம் உன் முக வசீகரத்தை கூந்தல் அழகு முந்துவதை விரும்பாததால்#ஃபிரைடே

--------------------

3. காதலிக்க கண்கள் மட்டும் போதும்,ஆனால் அதை கண்ட்டினியூ பண்ண பாக்கெட்ல காசு வேணும்#நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டோய் 

---------------------

4. உன்மேல் உள்ள அன்பை முழுசாக வெளிப்படுத்த எனக்குத்தெரியவில்லை என்றாய்,சோ வாட்?உள்ளே அன்பு இருக்கு என்று தெரிந்தாலே போதாதா?

---------------------

5. உன்னுடன் சந்திக்கும் வாய்ப்பு ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் என்னோடு இருக்கும் பர்ஸ் காலி ஆகி விடும்#வெட்டிச்செலவு வந்தனா 

--------------------




6. ஓட்டுப்போட 18 வயசு ஆகனும்,மேரேஜ் பண்ண 21 வயசு ஆகனும்,நீதி -நாட்டை கட்டுப்படுத்தறதை விட ஒரு நாட்டுக்கட்டையை கண்ட்ரோல் பண்ணறது கஷ்டம்

---------------------

7. கணவன்மார்கள் பைக்கில் போகும் நேரத்தை விட மனைவியை டிராப் பண்ணும் நேரம் அதிகம்,மனைவிமார்கள் பெரும்பாலும் கணவன்களை டிரைவராக யூசிங்க்

---------------------

8. ஆண்கள் பைக் உலா போகையில் அவன் கம்பீரம் கூடுகிறது,பெண்கள் ஸ்கூட்டி உலா போகையில் அவள் நளினம் குறைகிறது

--------------

9./ கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் எனக்குப்பிடிக்காமல் போனதற்குக்காரணம் ,அவள் கண்கள் கட்டப்படுவதால்

----------------
10.  எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன்-ஜெ#அப்போ முதல்ல கரண்ட்கட்டுக்கு ஒரு வழி பண்ணுங்க தாயே

------------------



11. பிரதமர் முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால்,  சிறப்பாக செயல்பட முடியாது-ஜெ#சிஎம்மாக இருக்கறவங்க கூடதோழியின் பேச்சைத்தானே கேட்கறாங்க?

--------------------

12. எல்லா கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்-ஜெ#அய்யய்யோ,அம்மா,குண்டை தூக்கிப்போடறீங்களே?அப்போ திமுகவுல உங்க நண்பர் யாரு?

---------------------------
13. நரேந்திர மோடி பற்றி விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்-ஜெ#இந்நாள் சினிமா நடிகை பேட்டி மதிரியே இருக்கே?

----------------------

14. நம் நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்-ஜெ#என்னம்மா? இது?45 நாட்களுக்குள்ளேயா?

-------------------------

15. ஊழல்அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாடே எதிர்பார்க்கிறது-ஜெ #ஊழல் செய்த முதல் அமைச்சர்கள் மீதும்,2 பேரும் மாட்னீங்க

-------------------



16. அரசு பேருந்தில் 'தீ' 36 பயணிகள் தப்பினர்-செய்தி # தீ ரஜினி நடிச்ச படம் ஆச்சே.. ரஜினியே தப்பிச்சுட்டாரு..பயணிகள் தப்பிக்க மாட்டாங்களா?

------------------------

17. பிரபுதேவா- பியா ஒரேவிமானத்தில் அருகருகே அமர்ந்து மும்பை சென்றனர்# நயன்தாரா எங்கிருந்தாலும் சீதை படப்பிடிப்பை கேன்சல்செய்துவிட்டுஆஜர்ஆகுக

---------------------------

18.  என்னைத்தொந்தரவு செய்வதே உன் வேலை ஆகி விட்டது.இனி என் முன்னால் வருகையில் மாஸ்க் அணிந்து வரவும்.

----------------------

19.  எல்லோரிடமும் குழந்தைத்தனம் ஒளிந்திருக்கும்,ஆனால் அது எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படாது#ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்&டீலிங்க்

-----------------------
20.  உன்னை சமாதானப்படுத்த என்ன பரிசு வேணும்? என கேட்டேன் .செலவே இல்லாத எப்போதும் கிடைக்கும் 4 எழுத்து மந்திரம் என்றாள் #கிஸ்ஸாலஜி

----------------------