Friday, November 26, 2010

கொலைக்கேசில் மாட்டிய ஆளுங்கட்சித்தலைவர்


1. “மன்னா!  மற்போர்  புரியலாமா,  விற்போர்  புரியலாமா  என்று  எதிரிநாட்டு மன்னன்  அறைகூவல்  விடுக்கிறான்!”

“தளபதி!  சொற்போர்  புரியலாம்  என்று  கூறு.  அப்போதுதான்  நமக்கு  எந்தச்  சேதாரமும்  இருக்காது!”



2. “நம்ம  தலைவர்,  கொலை  கேஸ்ல  கோர்ட்  விசாரணையின்போது  ஏதோ கோக்குமாக்கா  குறுக்குக்  கேள்வி  கேட்டாராமே?”

“ஆமா,  சின்னப்  பசங்க  கொலை  செஞ்சா,  சிறுவர்  சீர்திருத்த்ப்  பள்ளியில  போடறீங்க.  ஆனா,  பெரியவங்க  கொலை  செஞ்சா  மட்டும்  ஏன்  முதியோர்  சீர்திருத்தப்  பள்ளியில  சேர்க்காம,  ஜெயில்ல  போடறீங்கனு  கேட்டாரு!”



3. “சொத்துக்  குவிப்பு  வழக்குல  உங்களை  கோர்ட்  ரிலீஸ்  பண்ணிடுச்சே...  இதைப்  பத்தி  என்ன  நினைக்கறீங்க  த்லைவரே?”

“இந்த  மாதிரி  சாட்சி  கிடைக்காம  கேஸ்  தடுமாறும்னு  தெரிஞ்சிருந்தா,  இன்னும்  அதிகமா  சொத்து  சேர்த்திருக்கலாமேன்னுதான்!”



4. “மந்திரியாரே,  எதிரி  மன்னன்  தகவலை  புறா  மூலம்  அனுப்பாமல்,  மைனா  மூலம்  அனுப்பியுள்ளானே,  ஏன்?”

“புரியவில்லையா  மன்னா! உங்களுடையது  மைனாரிடி  அரசு  என்று  சுட்டிக்காட்டுகிறான்!”



5. “ம்ன்னர்  சேடிப்  பெண்ணைப்  பார்த்து  ‘உன்னை  எல்லாம்  வைக்க  வேண்டிய  இடத்தில்  வைக்க  வேண்டும்’  என்கிறாரே...  அவளிடம்  அப்படி என்ன  தவறு  கண்டார்?”

“நீ  வேற!  மன்னர்  சேடிப்  பெண்ணின்  அழகில்  மயங்கி,  அந்தப்புரத்தில் வைக்கத்  திட்டம்  போடுகிறார்!”



6. “அமைச்சரே!  அண்டை  நாட்டு  அரசர்கள்  என்  மீது  என்ன  அபிப்ராயம்  வைத்திருக்கிறார்கள்?”

“மன்னா!  உங்களிடம்  பொது  வாழ்வில்  நேர்மையும்  இல்லை...  போர்  வாழ்வில்  கூர்மையும்  இல்லை  என்றுதான்  அபிப்ராயப்படுகிறார்கள்!”



7. “என்னதான்  கெட்ட  செய்தியாக  இருக்கட்டும்...  தூது  வந்த  புறாவின்  முதுகில்  நீங்கள்  அப்படி  ஓங்கி  அடித்திருக்கக்  கூடாது  மன்னா!”

“அதனால்  என்ன  அமைச்சரே!”

புற  முதுகிட்டவர்  என்ற  அவப்  பெயரோடு  புறா  முதுகில்  இட்டவர்  என்ற  அவப்  பெயரும்  சேர்ந்துகொண்டதே!”



8. “தலைவர்  கார்ல  போறப்ப  குழியில  விழுந்து,  படுகாயம்  அடைஞ்சுட்டாரு!”

“அதுக்காக  பள்ள  நிவாரண  நிதி  வசூல்  பண்ணக்கிளம்பிடறதா?”



9. “தலைவரோட  தமிழ்ப்  பற்றுக்கு  ஒரு  அளவே  இல்லாமப்போச்சு!”

“எப்படிச்  சொல்றே?”

“உதட்டில்  வரும்  உமிழ்  நீர் கூட  தமிழ்  நீராக  வர  ஆசைப்படுகிறேன்னு ஏகத்துக்கும்  உதார்  விடறாரே!”

Thursday, November 25, 2010

நல்ல சினிமா vs நொள்ள சினிமா

http://tamildigitalcinema.com/wp-content/gallery/manmathan_ambu/manmathan-ambu-1.jpg
எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும் என பார்ப்பதற்கு முன் எப்படிப்பட்ட் சினிமா வந்து கொண்டு இருக்கு என்பதை பார்ப்போம்.

1.மதுரை தான் கதைக்களன் - ஹீரோ,வில்லன் அனைவருக்கும் வேலையே யாரையாவது வெட்டுவதுதான்,எப்போதும் கையில் அரிவாளோடு அலையனும்.படம் ஃபுல்லா ரத்தம் தெறிக்கோனும்.இடை இடையே ஒரு பாட்டு,ஒரு குத்துப்பாட்டு,ஒரு ரீ மிக்ஸ் பாட்டு.

2.காதல் கோட்டை ஹிட் ஆனாலும் ஆனது,அந்த படம் வந்த சமயத்தில் காதல் என்ற வார்த்தையை வைத்து 47 படங்கள் வெளியானது.நம்ம ஆட்களிடம் உள்ள கெட்ட பழக்கமே “போல செய்தல்”.  அதாவது ஒரு படம் ஹிட் ஆனால் அதே போல் தொடர்ந்து படம் தருவது.அகத்தியனே மறுபடி அதே ஃபார்முலாவில் காதல் கவிதை த்ந்தாரே?

3.சமீப காலமாக க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது தொடர்கிறது.ராவணன்,காதல் சொல்ல வந்தேன்,பாணா காத்தாடி.. என நீள்கிறது பட்டியல்.எதற்கு இந்த போலியான அனுதாப ஒட்டு வரவழைக்கும் போக்கு?கதை அனுமதித்தால் மட்டுமே ஹீரோ சாக வேண்டும்.வலுக்கட்டாயமா சாகடிக்ககூடாது.

4.ஹீரோ ஒரு ஊரில் இருப்பார்,ஏதோ வேலையாகவோ அல்லது வேலை வெட்டி இல்லாமலோ வேற ஒரு ஊருக்கு போவார்,அங்கே ஒரு ரவுடி அல்லது தாதாவின் கொட்டத்தை அடக்குவார்.இந்த ஃபார்முலாவில் விஜய்,விஷால் உட்பட பலரும் பல படங்களில் நடித்து விட்டார்கள்.


எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும்?

1.இலக்கியத்துல இருந்து கதை எடுக்கனும்.ஏராளமான நாவல்கள் இருக்கு.அதற்கு திரைக்கதை எழுதி படம் எடுக்கனும்.எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ,அவர்களிடம் இருந்து கதை வாங்கனும்.அவர்களுடன் அமர்ந்து திரைக்கதை உருவ்வாக்கனும்.

2.நிறைய இயக்குநர்கள் கதை ,திரைக்கதை உட்பட அனைத்து பொறுப்புகளையும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.அதெல்லாம் டி ஆர் கே பாக்கியராஜ் காலத்தோடு சரி.இனிமே ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒரு ஆள் தனியா செயல்படனும்.திரைக்கதை அமைக்க பெரிய டீம் வேணும்,அவஙக் பேரை டைட்டில்ல போடனும் (அப்போதான் அவங்க ஒழுங்கா ஒர்க் பண்ணூவாங்க)

3.விகடன் வார இதழில் கரையெல்லாம் செண்பகப்பூ எனும் தொடர் சூப்பர்ஹிட் ஆனது,அது சுஜாதாவின் சம்மதத்தின் பேரில் பிரதாப்போத்தன் ஹீரோவாக நடிக்க அதே டைட்டிலில் படமாக்கப்பட்டு தோல்வி அடைந்தது,காரணம் ஹீரோ செலெக்‌ஷன்.கணெஷ் மாதிரி ஒரு புத்திசாலி கேரக்டர் பிரதாப் மாதிரி ஒரு லூஸ் தனமான (மீண்டும் ஒரு காதல் கதை)ஆள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.எனவே ஹீரோ செலக்‌ஷனில் கவனம் வேண்டும்.இவர் கால்ஷீட் கிடைச்சுடுச்சு படம் பண்ணிடலாம்னு இருக்கக்கூடாது.

4.மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.இதற்குக்காரணம் படத்துக்கு விளம்பரம் இல்லாமையும் ,புதுமுக நடிகர்களை போட்டதும்தான்.இந்த மாதிரி ரிஸ்க் உள்ள கதைக்கு ஃபேமஸ் ஹீரோவே சரி.படம் தயாரிக்க ஆகும் செலவில் 40% விளம்பரத்துக்கும் செலவு செய்ய வேண்டும்.

5.அதே போல் காயத்ரி,ப்ரியா, 2ம் ரஜினி படங்கள் சுஜாதா கதை .இதில் 2 படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை.அதற்குக்காரணம் ஒரிஜினல் கதையில் கை வைத்தது.நாவல் ஆசிரியர் என்ன எழுதி இருக்காரோ அதை அப்படியே படம் எடுக்க முடியாதுதான்,அதற்காக 75% மாத்தினா இப்படித்தான் ஆகும்.

6..சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா,ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ,ருக்மணியோ,டைரக்டரோ ஏற்படுத்தமுடியவில்லை.அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது.அந்தப்படத்தின் இயக்குநர் அந்த நாவலைப்படித்தே பார்த்திருக்க மாட்டார்,மேலோட்டமாக கதை கேட்டிருப்பார்.நாவலை படித்தால்தான் அந்த உணர்வுகளைஉள் வாங்க முடியும்.எனவே நாவலைப்படம் எடுக்கு இயக்குநர்கள் முதலில் முழுசாக நாவலைப்படிக்க வேண்டும்.

7..தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை  (அழகி)ஹிட்.மண் சார்ந்த பதிவாக அப்படி எடுக்கனும்.

8. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.அது போல் ஈடுபாட்டுடன் மொத்த டீமே உழைக்கனும்.

9.ஜேயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட்.சம்பந்தப்பட்டா கதாசிரியரே ஆல் இன் ஆல் வேலை பார்த்தார்.

10.எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறை கதை அதே பெயரில் படமாகி ஹிட்.ஆர் சி சக்தி மிக திறமையாக படம் பிடித்தார்.

11.

பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இதில் சறுக்கியது ஏன்?ஹீரோயின் மார்பில் மாமனின் பெயரை பச்சை குத்தியதைப்போல வரும் சீன் ஏற்க இயலாததாக இருந்தது.நாவலில் ஏற்படுத்தாத நெகடிவ் பாதிப்பை சினிமா ஏற்படுத்தியது.

12.அப்புறம் ரெண்டரை மணி நேரம் எடுத்தே ஆகனும்னு ரசிகர்களை கொன்னெடுக்க தேவை இல்லை.சினேகா பிரசன்னா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு,பிரசாந்த் நடித்த ஷாக்,போன்ற படங்கள் ஒன்றரை மணீ நேர படங்களே,வித்தியாசமாக கொடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்பார்கள்

டிஸ்கி 1 - முதல்வன் படத்தில் வருவதுபோல் ஒரு நாள் டைம் குடுத்து ஒரு படத்தை டைரக்ட் பண்ணி ஹிட் பண்ணு பாக்கலாம் என யாராவது அழைத்தால் சாரி என்னால் முடியாது.அந்த அளவு நாலெட்ஜூம் இல்லை,அனுபவமும் இல்லை.எனக்கு விமர்சனம் மட்டுமே தெரியும்.

டிஸ்கி 2 - சில அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அடிக்கடி ஃபோன் பண்ணி என்னை மிரட்டுகிறார்கள்.அவர்கள் காலை 10 டூ 11 மணீக்கும்,இரவு 8 டூ 9 மணீக்கும் கூப்பிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.ஏன் எனில் காலை ஆஃபீஸ் மேனேஜர் அந்த டைமில் என்னை திட்டுவார்.மாலை அம்மா,அல்லது அக்கா திட்டுவார்.ஒரே சமயத்தில் 2 இடங்களில் திட்டு வாங்க முடியறது இல்லை

டிஸ்கி 3 - என்னை டீசண்ட்டாக திட்டுபவர்கள் 9842713441 என்ற எண்ணிலும்,இண்டீசண்ட்டாக திட்டுபவர்கள் 0424 2213095 என்ற எண்ணிலும் திட்டவும்.ஏன் எனில் லேண்ட் லைன் ஃபோனை அட்டெண்ட் பண்ணி திட்டு வாங்கவே ரூ 750 சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கிறேன்.

டிஸ்கி 4 - சாரி டூ சே,மறந்துடுச்சு,அந்தப்பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறேன்,டபுள் மீனிங்கில் புரிந்து கொண்டு யாரும் சண்டைக்கு வர வேண்டாம்.

டிஸ்கி 5 - சிலர் மிஸ்டு கால் விடுகிறார்கள்.யாரோ என்னவோ என கூப்பிட்டால் கண்டபடி திட்டுகிறார்கள்.அவர்கள் சொந்தக்காசிலோ,கடன் வாங்கி டாப் அப் பண்ணியோ திட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, November 24, 2010

ஆக்சிடெண்ட்டில் மாட்டிக்கிட்ட தலைவர்



1. கண்டதும்  காதலில்  விழுந்தேன்; அவளோட  அப்பா  இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும்,  ‘பொத்’ தென  காலில்  விழுந்தேன்!



2. “தலைவரே,  ஆள்  இல்லாத  ரயில்வே  கிராஸிங்ல  அடிக்கடி  ஆக்சிடென்ட் நடக்குதே...  இது  பத்தி  என்ன  நினைக்கறீங்க?”

“அதான்  எனக்கும்  புரியல.  ஆளே  இல்ல;  எப்படி  ஆக்சிடென்ட்  நடக்குது?”



3. “தலைவலின்னு  ஒரு  நாள்  லீவ்  எடுத்தே...  ஓ.கே!  கால்  வலிக்கு  ஏன் ரெண்டு  நாள்  லீவ்  கேக்கறே?”

“தலை  ஒண்ணுதான்  இருக்கு;  ஆனா  கால்  ரெண்டு  இருக்கே...”

“சரி  சரி... பல்  வலி  வராம  பார்த்துக்கோ!”



4. “இந்த  ஒற்றன்  வேலைக்குப்  புதுசா...?”

“எப்படி  மன்னா  கண்டுபிடித்தீர்...?”

“ ‘போர்  அபாயம்...  ஓடுங்கள்’  என்று  குரல்  தராமல்,  ‘கிளம்புங்கள் போர்க்களத்திற்கு’ என்று  உளறுகிறானே...”



5. “போர்களத்தில்  முள்  குத்தியதால்  மன்னர்  துடிக்கிறார்!”

“யாரிடமாவது  குண்டூசி  வாங்கி  முள்ளை  எடுப்பதுதானே?”

“வேண்டாம்.  போர்க்களத்தில்  பின்வாங்கினோம்  என்ற  அவப்பெயர்  வந்துவிடும்!”



6. “மாறுவேடத்தில்  மன்னர்  நகர்வலம்  வந்தது  வேஸ்ட்  ஆகிவிட்டதா?”

“ஆமாம!  ‘மன்னர்  மாறுவேடத்தில்  வருகிறார்...  பராக்...  பராக்...!’  என்று  ஒரு  சேவகன்  கத்தித்  தொலைத்துவிட்டான்!”



7. “அமைச்சரே!  நாட்டு  மக்கள்  என்னைப்  பற்றி  என்ன  பேசிக்கொள்கிறார்கள்?”

“போர்க்களத்தில்  மண்ணையும்,  அந்தப்புரத்தில்  பெண்ணையும்  அசராமல்  கவ்வும்  அசகாய  சூரர்  என்று  பேசிக்கொள்கிறார்கள்,  மன்னா!”



8. “மன்னா!  உடனடியாக  உங்கள்  எடையைக்  குறையுங்கள்!”

“ஏன்?”

“180-ம்  கிலோத்துங்க  சோழன்  என்று  அழைக்கிறார்கள்!”



9. “அரண்மனைக்குள்  இருப்பதற்கு  நேர்  எதிராக  மன்னர்  வெளியில்  இருக்கும்போது  நடந்துகொள்வார்.”

“எப்படி?”

“அரண்மனையில்  ‘யாரங்கே’ என்று  அதிகாரமாக  கேட்பார்.  நகர்வலம்  போக  வெளியே  வந்தால்  ‘அங்கே  யாரு’ என்று  பம்முவார்!”



10. “புறமுதுகிட்டு  ஓடிவரும்போது  மன்னர்  தனியாக  ஓடி  வராமல்  வீரர்களுடன்  சேர்ந்தே  ஓடி  வருகிறாரே?”

“ஒன்றுபட்டால்  உண்டு  வாழ்வு  என்பதைக்  கடைபிடிக்கறாராம்!”

Monday, November 22, 2010

பிரபல பதிவர்களின் பர்சனல் சேட்டிங்க்ஸை அம்பலமாக்கிய இணைய தளம்

















மெயிலில் மெசேஜ் அனுப்புவது,மின் அரட்டையில் ஈடுபடுவது எல்லாம் சேஃப் ,பர்சனல் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒரு இணைய தளம் பிரபல பதிவர்களின் லவ் சேட்டிங்க்கை அம்பலப்படுத்தி உள்ளது.

1. உண்மைத்தமிழன் -

ஃபிகரு - சார்,என் கிட்டே ஒரு லாங்க் சைஸ் 2 குயர் நோட்டு குடுத்து விட்டு இருக்கீங்களே..எதுக்கு?அதை ரெக்கார்டு நோட்டா யூஸ் பண்ணிக்கவா?

உண்மைத்தமிழன் - அடிப்பாவி ,அது என் லவ் லெட்டர்.

ஃபிகரு - லவ் லெட்டர்னா 2 பக்கம் தானே எழுதுவாங்க?


உண்மைத்தமிழன் - நான்  ரெண்டரை மணி நேரம் ஓடற சினிமா  விமர்சனத்தையே 20 பக்கம் எழுதற ஆளு,25 வருஷம் ஒண்ணா வாழப்போற பொண்ணுக்கு அட்லீஸ்ட் 400 பக்கங்களாவது லெட்டர் எழுத வேணாம்?

2.கேபிள் சங்கர்

ஃபிகரு - சங்கர்,வழக்கமா எல்லா காதலர்களும் பீச்லயோ,கோயில்லயோதானே மீட் பண்ணுவாங்க?நீங்க மட்டும் ஏன் ஏதாவது ஹோட்டல்ல மீட் பண்ணலாம்னு சொல்றீங்க?

கேபிள் சங்கர்  - ஏன்னா எனக்கும் சாப்பாட்டுக்கடைக்கும் ராசி அதிகம்.நான் ஒண்ணு மட்டும் முதல்லியே சொல்லிடறேன்,உங்கப்பா மட்டும் நம்ம காதலை எதிர்த்தா அவரை கொத்துபுரோட்டா பண்ணிடுவேன்.

ஃபிகரு - உங்களுக்கு எப்போ ஃபோன் பண்ணுனாலும் ஒரு லேடி ஃபோனை எடுத்து “சார் ஸ்டோரி டிஸ்கஷன்ல இருக்காரு”அப்படினு சொல்றாங்களே..அவங்க உங்க பி ஏ வா?

கேபிள் சங்கர்  - சுத்தம் ,அது என் செல் ஃபோன் ரிங்க் டோன்,சும்மா என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணீட்டு இருந்தா எனக்கு பிடிக்காது.

ஃபிகரு - சரி,சினிமா விமர்சனம் பண்றதுல நீங்க தான் நெம்பர் ஒன் அப்படினு சொல்றாங்களே?என் அழகை பற்றி விமர்சனம் பண்ணுங்க பாக்கலாம்?

கேபிள் சங்கர்  - என் எண்டர் கவிதைகள் படி.எல்லாமே எண்ட்டர்டெயின்மெண்ட் கவிதைகளாவும் இருக்கும்,அழகை வர்ணிக்கறமாதிரியும் இருக்கும்.உன் முகத்தை க்ளோசப்ல பார்க்கறப்ப பயமா இருக்கு.ஜூம் பண்ணி லாங்க் ஷாட்ல பார்த்தா பாஸ் மார்க் போடலாம்.


3.மங்குனி அமைச்சர்

ங்கொய்யால,உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப்போடு,பிடிக்கலைன்னா இண்ட்லில ஓட்டுப்போடு..மொத்தத்துல எனக்கு ஓட்டு விழுந்தா சரி..அட ச்சே பதிவு ஞாபகத்துலயே பேசிட்டேன். டியர் உனக்கு என்னை பிடிச்சிருந்தா என் வலது கன்னத்துல முத்தம் குடு,பிடிக்கலைன்னா இடது கன்னத்துல முத்தம் குடு.மொத்தத்துல எனக்கு முத்தம் கிடைச்சா சரி.வாரா வாரம் டாப் 20 ல நான் வந்தே ஆகனும்.பாக்கறவனுங்க எல்லாம் நொந்தே போகனும்.


4.பன்னிக்குட்டி ராமசாமி

என்னம்மா முறைக்கிறே?பெரிய பருப்பா நீ?நான் ஒரு பதிவு போட்டா 200 கமெண்ட்ஸ் 20 நிமிஷத்துல விழும்.நீ என்னடான்னா என் அழகைப்பற்றி ஒரு கமெண்ட் கூட அடிக்க மாட்டேங்கறே..எனக்கு மினி கட்டிங்க்னா பிடிக்கும்கறது உண்மைதான்,அதுக்காக இப்படி மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டுட்டு அலையக்கூடாது.இது ஆவறதில்லை.ஆனா இந்த மடம்  ஆகாட்டி சந்தை மடம்.. நான் சவுதி அரேபியா... அதனால அரேபியன் குதிரை மாதிரி நமீதா மாதிரி பொண்ணு தான் வேணும்.நீ என்னமோ பென்சில்ல கோடு போட்ட பல்பம் மாதிரி இவ்வளவு ஒல்லியா இருக்கறே?


5. சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - ஸாரி டியர்,என்னால நைட் 7 மணிக்கு எல்லாம் பீச்க்கு வர முடியாது.ஆஃபீஸ் டைம் ல ஆஃபீஸ்க்கே வந்துடு.அங்கேயே எல்லாம் பண்ணிக்கலாம்.நான் பதிவு போடறது,கமெண்ட்ஸ் போடறது எல்லாமே ஆஃபீஸ் டைம் தான்.அவ்வளவு ஏன் நான் குளிக்கறது,சாப்பிடறது  எல்லாமே ஆஃபீஸ்டைம்லதான்.இதுல என்ன காமெடின்னா என்னை நம்பி எனக்கு டேமேஜர் அட ச்சே மேனேஜர்  போஸ்ட்டிங்க் குடுத்திருக்காரே எங்க முதலாளி  அவர நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.


6. பட்டாபட்டி - இங்கே பாரம்மா,நான் ஒரு ஃபாரீன் பதிவர்,இப்படி நீ தாவணியோட வந்தா என்னால லாவணி பாட முடியாது.நீ பீச்சுக்கு மிடியோட வா,நான் அண்டர் டிராயரோட வந்துடறேன்,ஜாலியா லவ் பண்ணலாம்..கேள்வி.நெட்ல எனக்கு 34வது ரேங்க்,அதுக்காக 34 வயசுப்பொண்ணை எல்லாம் லவ் பண்ண முடியாது.உன் தங்கச்சி இருந்தா கூட்டிட்டு வா..த்ரீ வே லவ் படத்துல வர்ற மாதிரி 3 பேரும் லவ் பண்ணுவோம்.

7.நல்ல நேரம் சதீஷ்

உன் ஜாதகப்படி உனக்கு இப்போதைக்கு மேரேஜ் ஆகற யோகம் இல்லை.அப்போ தைரியமா உன்னை லவ் பண்ணலாம்.இந்தா இந்த ராசிக்கல் மோதிரத்தை போட்டுக்கொ,நல்ல நேரம் நம்ம ரெண்டு பேருக்கும் எப்பவுமே நைட் 8 டூ 9 தான். சித்தோடு வாய்க்காமேட்டுக்கு தனியா வந்துடு.உன் பேரே மோஹனா அப்படினு கும்முனு இருக்கு,எனக்கு டைட்டில் ரொம்ப முக்கியம்.

8.கோகுலத்தில் சூரியன் வெங்கட்

இங்கே பாரம்மா ,நீ சொல்றதை எல்லாம் அப்படியே என்னால் ஏத்துக்கவே முடியாது.என் சொந்த பிளாக்லயே கமெண்ட்ஸ்சுக்கு மாடரேஷன் வெச்சு இருக்கேன்.அவனவன் பிளாக்ல கமெண்ட்ஸ் வராதான்னு ஏங்கறான்.ஆனா எனக்கு கமெண்ட்ஸ்ல கூட டீசண்ட்சி முக்கியம்.இந்த மாதிரி எல்லாம் முழங்கை தெரியறமாதிரி ஜாக்கெட் போடாதே,ஃபுல் ஹேண்ட் ஜாக்கெட் வாங்கித்தர்றேன்,அதை போட்டுக்கோ,எல்லாம் கவர் ஆகிடும்,எனக்கு டீசண்ட்தான் முக்கியம்.எட்டாம் நெம்பர் பஸ்ல  வழக்கம் போல மீட் பண்ணுவோம்.எல்லாருக்கும் அஷ்டமத்துல சனி.ஆனா எனக்கு மட்டும் ஏறுமுகம்.எட்டு எனக்கு ராசியான நெம்பர்,தமிழ்மணத்துல தொடர்ந்து 2 வாரமா 8வது இடம்,இந்த பதிவுல கூட எனக்கு 8வது இடம்,அவ்வளவு ஏன்? நீ கூட எனக்கு 8வது ஆள் தான்.

9. ம தி சுதா

டியர், வாங்க சினிமாவுக்கு போகலாம்

இரம்மா,சுடு சோறு சாப்பிட்டுட்டு வந்துடறேன்.

யோவ்,பதிவுலகுலதான் சுடுசோறுக்கு சீட் போட்டுடறீங்க..இங்கேயுமா?

10.இம்சை அரசன் பாபு

டியர் பாபு,எதுக்கு என் ஆள் காட்டி விரலை ஆராயறீங்க?வழக்கமா லவ்வர்ஸ்னா கண்ணை,உதட்டை,கன்னத்தை பார்ப்பாங்க..நீங்க டிஃப்ரெண்ட்டா இருக்கீங்களே...

இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.முதல்ல என் பதிவுக்கு ஓட்டு போட்டுட்டு வா,மத்ததை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.ஓட்டு போட்டிருந்தா விரல்ல மை இருக்குமே..என்னை யாராலயும் ஏமாத்த முடியாது..நானே ஏமாந்தாதான் உண்டு.

டிஸ்கி 1- மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையே.இந்த மின் அரட்டையை வெளியிட்ட அந்த கேவலமான இணைய தளம் அட்ராசக்க தான்.எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்.பிரபல பதிவர்கள் அனைவரும் என நண்பர்கள் என்பதால் அவர்கள் யாரும் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.அவர்களது ரசிகர்கள்,நண்பர்கள் யாராவது மனம் புண்பட்டால் அதற்கு சாரி.இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளி வரும் ,ஊத்திக்கிச்சுன்னா கமுக்கமா இருந்துக்குவேன்.(வேற என்ன பண்ண முடியும்?)

டிஸ்கி 2 - எனது சேட்டிங்க் ஏன் வரவில்லை?என கேட்பவர்களுக்கு

1.சொந்த செலவில் யாராவது சூன்யம் வெச்சுக்குவாங்களா?

2. டைட்டிலை நன்கு கவனிக்கவும்.இது பிரபல பதிவர்களுக்கு மட்டும்,ஓட்டு பெறுவதில்,கமெண்ட்ஸ் பெறுவதில்,ஹிட்ஸ் கிடைப்பதில்,பதிவின் தரத்தில் இப்படி ஏதோ ஒரு வகையில் அவர்கள் என்னை விட முன்னணியில் உள்ளதால் நான் இதில் இடம் பெறவில்லை.

3.மேலும் நான் ஃபிகர்களுடன் கடலை போடுவதில்லை...எனக்கு வயசு இன்னும் அந்த அளவு ஆகலை.(ஜஸ்ட் 18)

Sunday, November 21, 2010

நகரம் - டப்பா படத்தை விமர்சனம் பண்ணுனா தப்பா?

 
கவுண்டமணி - வாப்பா சுந்தர் சி, சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டே போல?

சுந்தர் சி - ஏண்ணே ,படம் சரி இல்லையா?என் சொந்தப்படம்னே...

கவுண்டமணி - நாங்க எல்லாம் பார்த்து நொந்த படம்னு சொல்லு..

சுந்தர் சி - படத்துல பாட்டு,ஃபைட்டு,காமெடி,லவ்,ஆக்‌ஷன் அப்படினு எல்லா ஐட்டமும் இருக்கேண்ணே?

கவுண்டமணி - எந்தத்தமிழ்ப்படத்துல இதெல்லாம் இல்லாம இருக்கு.எல்லாருமே இதே மிக்சிங்க் தான் பண்றாங்க.அதெல்லாம் இருக்கட்டும்.நீ ஏன் தலை சீவறதே இல்லை?புறாக்கூட்டுத்த்லையன் மாதிரி சுத்திட்டு இருக்கே?எந்த கேரக்டர் குடுத்தாலும் தாடியோட சுத்தறே?

சுந்தர் சி - அண்ணே,அதெல்லாம் ஒரு ஸ்டைலுண்ணே...

கவுண்டமணி - ஸ்டைலா...மரியாதை கெட்டுப்போயிடும் பார்த்துக்கோ..அது இருக்கட்டும்,டூயட் சீன் எடுக்கறப்போ பக்கத்துலயே குஷ்பூ பொண்ணும் இருந்துச்சாக்கும்?



சுந்தர் சி - எப்படிண்ணே கரெக்ட்டா சொன்னீங்க?

கவுண்டமணி - பின்னே, டூயட் சீன்ல கூட மூஞ்சியை உம்முன்னே வெச்சுக்கிட்டிருந்தியே...ரவுடி கேரக்டர்னா எப்பவும் உர்ருன்னே வெச்சிருக்கனும்னு உனக்கு எவன் சொல்லிக்குடுத்தான்?

சுந்தர் சி - அண்ணே,படத்தோட கதையைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கண்ணே...


கவுண்டமணி - நாஸ்தி

சுந்தர் சி - என்னண்ணே இப்படி சொல்லுறீங்க?

கவுண்டமணி - நீதானே ஒரு வார்த்தை சொல்லச்சொன்னே...

அட

சுந்தர் சி - திருந்தி வாழனும்னு நினைக்கற ஒரு ரவுடியை போலீஸ் விடறதில்லை ,ஏமாத்தி மறுபடி அதே வேலையை செய்ய வைக்குது,அதுல ஆதாயமும் அடையுது..ஹீரோயினோட அம்மாவை வெச்சுக்கிட்டிருந்த வில்லன் இப்போ ஹீரோயினையும் வெச்சுக்கனும்னு நினைக்கறான்..ஹீரோயின் அம்மாவுக்கு ஆப்பரேஷன்..பணம் வேணும்...ஹீரோயின் கிட்டே காசில்லை... இங்கே தான் வில்லன் கொக்கி போடறான்.ஹீரோயின் ஓக்கே சொன்னா பணம் கட்டப்படும்.ஹீரோ வர்றாரு...




கவுண்டமணி - போதும் நிறுத்து...இந்த  மாதிரி 487 கதை வந்துடுச்சு.தமிழை விடு ,எத்தனை மலையாளப்படத்துல இந்த மாதிரி கேவலமான ட்விஸ்ட் வந்திருக்கும்?


சுந்தர் சி - சரிண்ணே,வடிவேலு காமெடி படத்துல ஹை லைட் ஆச்சே,செம காமெடியா இருக்கே அதை பத்தி சொல்லுங்க...


சி.பி. - அண்ணே ஒரு நிமிஷம்...


கவுண்டமணி - டேய், யார்டா நீ .,2 பெரிய மனுஷங்க பேசறப்ப குறுக்கே பேசறது?முதல்ல உன் கூலிங்க் கிளாசை கழட்டு,மனசுக்குள்ள பெரிய அஜித்குமார்னு நினைப்பா..?


சி.பி. - அதைக்கழட்டுனா இன்னும் கேவலமா இருக்கும்னே ,பரவால்லியா?


கவுண்டமணி - ஓ இது வேறயா?சரி,இருந்துட்டு போகட்டும் வந்த மேட்டரை சொல்லிட்டு ஓடிப்போயிடு

சி.பி. - அண்ணே,படத்துல ரசிக்கற மாதிரி காமெடி டயலாக்ஸ் நிறைய இருக்கு,எனக்கு ஞாபகம் இருக்கறவரை சொல்றேன்..

கவுண்டமணி - ஆமா ,இவரு பெரிய வல்லாரை  லேகியம் வரதராஜன் அப்படியே நினைவாற்றலை கசக்கிப்பிழிஞ்சு வசனத்தை ஒப்பிக்குது நாயி,எட்டாங்கிளாஸ்ல எட்டு தடவ ஃபெயில் ஆகிட்டு பேச்சைப்பாரு,இந்த அக்கறையை படிக்கறப்ப காட்டி இருந்தா 10ங்கிளாஸ் முடிச்சிருப்பே இல்ல?சரி சரி சொல்லித்தொலை..
 
படத்தின் ஹைலைட்ஸ் காமெடி வசனங்கள்


1.தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு.


உன் ஏரியா எதுன்னு சொல்லீட்டு போ.


ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா வம்பு வளர்க்கறது?


2. மணி என்ன இப்போ?    ஏன் உனக்கு மணீ பார்க்கத்தெரியாதா?


இப்போ மணி 3 ,லஞ்ச் டைம்,நாங்க அன்னத்துல கை வைக்கற டைம், யார் கன்னத்துலயும்  கை வைக்க மாட்டோம்


3.  எனக்கு முக்கிய வேலை இருக்குன்னு தெரிஞ்சு வம்புக்கு இழுக்கறியே?


சரி ,வேலையை முடி ,நான் வெயிட் பண்றேன்..


4. மாமியிடம் வடிவேல் - இரு இரு உன்னை வெச்சுக்கறேன்...


மாமி -ஏற்கனவே 2 பேரை வெச்சுத்தான் இருக்கேன்.


5. நாங்க எல்லாம் ஜெயில்ல இருந்து வி ஆர் எஸ் வாங்கிட்டு வந்தவங்க தெரியுமில்ல?


ஆமா,பெரிய ஜெயிலர் இவரு..கைதிக்கு லொள்ளப்பாரு.

6. இந்தாங்க புளீயோதரை சாப்பாடு.

என்னது? ஒரு புலிக்கே புளீயோதரை சாப்பாடா?

7.லவ்வுக்காக கண்ட கண்ட நாய் வாய்ல எல்லாம் வாய் வைக்க வேண்டியதா இருக்கு.

ஆமா,நாய் காட்டிக்குடுக்கலைன்னாலும் என் வாய் காட்டிக்குடுத்துடும் போல?

8. அங்கே என்ன பண்றே?ஆண்ட்டியை கரெக்ட் பண்ணச்சொன்னா டி வி ஆன்ட்டனாவை கரெக்ட் பண்ணீட்டு இருக்கே.?


9.நான் எல்லாம் அழ ஆரம்பிச்சா மாசக்கணக்குல அழ ஆரம்பிப்போம்,அத்தனை அழுகையை மனசுக்குள்ள அடக்கி வெச்சிருக்கோம்.


10. என் கிட்டே யாரும் சீரியஸா பேசாதீங்க,எனக்கு சிரிப்பு வந்துடும்.


11.என் ஃபேஸ்கட்டைப்பார்த்து யாரும் சிரிச்சு என்னை நோஸ்கட் பண்ணீடாதீங்க.


12.  ஏதோ அக்ரஹாரத்துல மாட்டுனதால வெறும் அடியோட விட்டாங்க..வேற எங்காவது சிக்கி இருந்தா குஸ்கா போட்டிருப்பாங்க.


13. இந்த ஒத்தை தம்பியை காப்பாத்த இந்த ஏரியாவுல இருக்கற மொத்தத்தம்பிகளும் வரனும் போல இருக்கே?


14. வீட்டுக்கு வாடகை தான் தர்றது இல்லை.ஹவுஸ் ஓனர் பொண்ணுக்கு....


யோவ்....


பர்த்டே ஃபங்க்‌ஷன்,வந்து கொட்டீட்டு போன்னு சொல்ல வந்தேன்


15. சில லேடீஸ்க்கு ஆணோட ஃபேஸ்கட்டை விட இப்படி ஃபேர் பாடியோட இருந்தாதான் பிடிக்குது..
அட

கவுண்டமணி - முடிச்சிட்டே இல்ல,நீ ஓடிப்போயிடு.சுந்தர் நம்ம மேட்டருக்கு வருவோம்.உனக்கு ஆக்‌ஷன் ஹீரோ ஆகனும்னு ஆசை இருக்க வேண்டியதுதான்,அதுக்காக...

சுந்தர் சி - ஏண்ணே,ஃபைட் சீன்ல எல்லாம் பட்டையை கிளப்பி இருப்பேனே?

கவுண்டமணி - சொதப்பி இருக்கே,நிறைய ஆடியன்ஸை  தியேட்டரை விட்டு கிளப்பி இருக்கே..ஒரு ஃபைட் சீன்ல பட்டத்துக்கு விடற நூல் கண்டு மீறி மீறிப்போனா 20 கிராம் வெயிட் இருக்கும் ,அதை ஒரு அடியாள் மேல வீசி எரியறே,அவன் 108 கிலோ வெயிட் இருப்பான்,2 கி மீ தள்ளிப்போய் விழறான்...இதெல்லாம் என்ன?




சுந்தர் சி - அண்ணே ,ஃபைட் சீன் ல எல்லாம் லாஜிக் பாக்கக்கூடாது..


கவுண்டமணி - கதைலயும் லாஜிக் பாக்கக்கூடாது,காமெடியிலயும் லாஜிக் கூடாது,டூயட்ல ஏன் திடீர்னு கூடுவாஞ்சேரில இருந்து சிங்கப்பூர் போறீங்கன்னு கேக்கக்கூடாது,,அப்புறம் எதுல தான் லாஜிக் பாக்கறது..?


சுந்தர் சி - சரி விடுங்க,ஹீரோயினுக்கும் எனக்கும் பாடி கெமிஸ்ட்ரி எப்படி?


கவுண்டமணி - சிவா மனசுல சக்தி படத்துல அந்தப்பொண்ணு ஜீவா கூட நல்ல ரொமான்ஸ் பண்ணுச்சு,பாக்க முடிஞ்சுது.இதுல அந்தப்பொண்ணு உனக்கு ஜோடியா நினைக்கவே நாராசமா இருக்கு,நீ அந்தப்பொண்ணுக்கு பெரியப்பா மாதிரி இருக்கே...


சுந்தர் சி - படத்துல ஒரு ஐட்டம் சாங்க் இருந்துதே பார்த்தீங்களா?


கவுண்டமணி - ம்ம் ,ம்ம் ,பார்த்தேன் பார்த்தேன்,ஏய்யா லைட்டிங்க் அடிக்கறப்ப அப்படியா மஞ்சள் லைட் அடிப்பீங்க.தக தகனு அந்தப்பார்ட்டிக்கு இடுப்பு ஜொலிக்கறதைப்பார்த்து அவனவன் தியேட்டர்ல ஜொள்ளு விடறான்.

சுந்தர் சி - தலை நகரம் படத்துக்குப்பிறகு வடிவேல் காமெடி இந்தப்படத்துல ஒரு மைல்கல்னு எல்லாரும் பேசிக்கறாங்கண்ணே..


கவுண்டமணி - ம் ம் பார்ப்போம் பார்ப்போம்,வெறும் வடிவேல் காமெடியை மட்டும் வெச்சுக்கிட்டு நீ இன்னும் எத்தனை நாள் குப்பை கொட்டப்போறேன்னு?நகரம்னு டைட்டில் வெச்சதுக்குப்பேசாம நரகம்னு வெச்சு இருக்கலாம் கிரகம்டா சாமி.