Tuesday, November 08, 2022

சக்கரவர்த்தித்திருமகள் (1957) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாட்டின்  இளவரசிக்கு  சுயம்வரம். போட்டிகள்  வைப்பார்கள், அதில்  கலந்து  கொள்ளும்  பல  நாட்டு  இளவர்சர்களில்  யார்  வெற்றி  அடைகிறார்களோ  அவர்களுக்கு  திருமணம்  செய்து  வைக்கப்பட்டு  ராஜ்ஜியமும்  பரிசாக  வழங்கப்படும். இந்த  சம்பவம்  கடந்த  3  வருடங்களாக்  நடைபெறுகிறது , ஆனால்  இதுவரை  யாரும்  வெற்றி  பெறவில்லை 


 நம்ம  கதாநாயக்ன்  இந்த  வருடம்  போட்டியில்  கலந்து  கொள்கிறார். முதல்  சுற்றில்  ஒரு  பாட்டின்  வழியே  கேள்விகள்  கேட்கப்படும்  , ப்தில்  சொல்ல  வேண்டும்.  நாயகன்  போட்டுத்தாக்கிடறார்


  அடுத்த  சுற்று , நடனப்போட்டி, யாரும்  ஜெர்க்  ஆக  வேண்டாம் அதுலயும்  ஜெயிச்சுடறார்.  தளபதி தான்  வில்லன் (  பெரும்பாலான  அரச  கதைகளில்  தளபதிதான்  வில்லன், அது  ஏன்னு  தெரியல) நடனப்போட்டியில்  நாயகனைக்கவிழ்க்க  சதி  செய்தும்  நாயகன்  ஜெயிக்கிறார்


இறுதியாக  தளபதியுடன்  வாட்  போரில்  ஜெயிக்க  வேண்டும் , விஷம்  தடவிய  வாளைக்கொண்டு  நாயகனைக்கொல்ல  சதி  செய்யும்  தளபதியின்  வஞ்சகத்தை  நாயகன்  முறியடிக்கிறார்


இதற்கு  இடையே  இளவரசி  சாதா  உடையில்  நாயகனை  சந்தித்து  பழகுகிறாள். நாயகன்  மனதைப்பறி  கொடுக்கிறார். இது  நாயகனுக்கு  வைக்கப்படும்  ஆசிட்  டெஸ்ட்டா? சும்மானாச்சுக்கும்  விளையாண்டுதா? தெரியல. ஆனா  ஒரு  கட்டத்துல்  சும்மானாச்சுக்கும்  விளையாண்டேன், நாந்தான்  இளவரசினு  சஸ்பென்சை  ஓப்பன்  பண்ணிடுது


எல்லாப்போட்டிகளிலும்  நாயகன்  ஜெயிச்சடறான். இப்போ  ஒரு  ட்விஸ்ட். நாயகியின்  தோழியும்  நாயகன்  மீது  ஆசைப்படுகிறாள் . சதித்திட்டம்  போடுகிறாள் . 


 நாயகி    ஒரு  ஆளுடன்  ஓடிப்போய்  விட்டதாக  டிராமா  போடுகி றாள்  ,  இதை    எல்லாரும்  நம்பறாங்க, ஆனா  சொந்த  அப்பாவே   அதை  எப்படி  நம்பறார்?னு  தெரியல


இக்கட்டான  சூழலில் நாயகியின்  தோழியை  இளவரசியாக  நடிக்க  வைக்க  ஏற்பாடு  நடக்கிறது 


 மண  மேடையில்  ஆள்  மாறாட்டம், ஆல்ரெடி  பார்த்துப்பழகிய  நாயகனுக்கு  அருகில்  அமர்ந்திருப்பது  வேறு  ஆள்  என  தெரியல . முகத்திரை  இருக்குனு சால்ஜாப்  சொன்னாலும்   சேலை  கட்டும்  பெண்ணுக்கொரு  வாசம்  உண்டு  ஃபார்முலாப்படி நாயகனுக்கு  எப்படி  தெரியாம  போச்சுனு  தெரியல 


திருமணம்  நடந்த்டுது.  முதல்  இரவு .  ஆள்  மாறாட்டம்  என்பதை  நாயகன்  அப்போதான்  கண்டு  பிடிக்கிறார் (  நல்ல  வெளை  ஹீரோ  கமலா  இருந்தா  இருட்டுலயே  முதலிரவை  முடிச்ட்டு  விடிஞ்சுதான்  கண்டு  பிடிச்சிருப்பார்) 


இந்தக்குழப்பங்களுக்கு  எல்லாம்  தீர்வு  கதையின்  பின்  பாதியில்  இருக்கு 


 நாயகனாக  எம்  ஜி ஆர். டைட்டிலிலும்  சரி  , திரைக்கதையிலும்  சரி  நாயகனுக்கு  முக்கியத்துவம்  இல்லை ஆனாலும்  சமாளிக்கறாங்க .    எம் ஜி ஆர்  ஃபார்முலாப்படி  இதுல  அம்மா  பாசம்  காட்ட  வழி  இல்லை ,புரட்சி  வசனம்  பேசவும்  வாய்ப்பு  கம்மி . எப்படியோ  ஒப்பேத்திட்டாரு . எம்  ஜி  ஆரின்  சிரித்த  முகம்  அவருக்கு  பெரிய  பிளஸ்  பாயிண்ட் 


இளவர்சியா, நாயகியா  அஞ்சலி  தேவி , நாயகனிடம்  விளையாடுவதும்  பின்  மதி  மயங்குவதும்  அலட்டல்  இல்லாத அனாயச  நடிப்பு .பின்  பாதி  திரைக்கதையில்  அவரை  அழ  விட்டு  விடுகிறார்கள் 


  இலவரசியின்  தோழியா   எஸ்  வரலட்சுமி  பிரமாதமான  நடிப்பு .ப்டையப்பா  படத்தில்  நீலாம்பரி கேரக்டருக்கு  இதுதான்  இம்ப்ர்சிவாக  இருந்திருக்க  வேண்டும்,  பட்டாசான  நடிப்பு .  குணா  படத்தில்  கமலுக்கு  அம்மாவாக  வருபவரா  இவர்  ? என  வியக்க  வைக்கிறார்.  நாயகனிடம்  காதல்  கொள்வது ,  இளவர்சியை  ஏமாற்றுவது ,  மன்னரை  குழப்புவது  என  இவர்  தான்  கதையின்  ஆணிவேர் , அடி பொலி  ஆக்சன் 


 எம்  ஜி  ஆர்  படத்தில்  நாயகிக்கோ  நாயகனுக்கோ  இல்லாத  முக்கியத்துவம்  வில்லிக்கு  இருப்பதை  இப்போதுதான்  முதல்  முறையாகப்பார்க்கிரேன். 


  காமெடி  டிராக்    கே  ஏ  தங்க  வேலு   , டி ஏ  மதுரம்   என் எஸ்  ,கிருஷ்ணன்.  நல்லாருக்கு 


வில்லனாக  வரும்  பி எஸ்  வீரப்பா  நல்ல  ஆகிருதியான  தோற்ற,ம்  ஜிம்  பாடி  ஜம்  சிரிப்பு ,  அவர்  முகத்தில்  வில்லன்  க்ளை  தாண்டவம்  ஆடுகிரது 


மன்னராக  வரும்  சகாதேவன்  ஓக்கே  ரகம் 


14  பாடல்கள்  மொத்தம்.  அதுல  அத்தானும் நான்  தானே   சட்டைப்பொத்தானும்    நான்  தானே? என்ற  பாடல்  ஆல்  செண்ட்டர்  ஹிட் , வரலட்சுமியே   பாடிய  ஏமாற்றம்  தானா  என்  வாழ்விலே   செம  பாட்டு 



சபாஷ்  டைரக்டர்


1  இந்தபடத்தில்  வரும்  போட்டிக்கேள்விகள்  பரபரப்பாகப்பேசப்பட்டன.    ரெண்டே  முக்கால்  மணி  நேரப்படத்தில்   போட்டிக்கேள்விகள்  , சுயம் வரம்  எனவே  ஒரு  மணி  நேரம்  சுவராஸ்யமாய்  நகர்த்திய  விதம் 


2  இளவரசி  நாயகனை  டெஸ்ட்  பண்ன  சாதாப்பெண்  போல  அவரிடம்  போய்  இளவரசியைப்பற்றி  ( தன்னைஒப்பற்றி  தானே)  அவதூறு  பேசுவது  பிரமாதமான  ஐடியா  (  இந்த  கான்செப்ட்டை  ஒட்டி  வாலி  படத்தில்  ஹீரோ  கற்பனையாக  தான்  காதலித்ததாய்  நம்ப  வைக்கும்  கதை  வரும் ) 


3  ஒரு  படத்தின்  பிரம்மாண்ட  வெற்றிக்கு    வில்லனை  பலம்  மிக்கவனாக  டிசைன்  செய்யனும்  அந்த  வகையில்   பிரமாதமான  வில்லன்  / வில்லி  கேரக்டர்  டிசைன்  செய்த  எல்லாப்படங்களும்  பிரம்மாண்ட  வெற்றி  (  கேப்டன்  பிரபாகரன் -  வீரபத்ரன் ,  படையப்பா -  நீலாம்பரி  ,  மன்னன் - விஜயசாந்தி )


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஆள்  மாறாட்டம்  நட்ந்தது  குறித்து  நாயகன்  தன்  மாமனாரிடம்  நியாயம்  கேட்கவே  போக  வில்லை  அது  ஏன் ?


2   ஊரில்  உள்ளவர்கள்  இளவரசி  பற்றிய  வதந்தியை  நம்பலாம், ஆனால்  சொந்த  அப்பா  நம்பலாமா?  தன்  மகள்  அப்படி  ஓடிப்போகிறவள்  இல்லை  , ஏதோ  சதி  என  உணர  மாட்டாரா? 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வில்லிக்கு  முக்கியத்துவம்  கொடுக்கப்பட்ட  படம்  என்பதை  மனதில்  வைத்துக்கொண்டு  எம்  ஜி ஆர்  ரசிகர்களும், மற்ற  ரசிக்ர்கள்  இதை  ஜாலியான  எண்ட்டர்டெயின்மெண்ட்டாகவும்  பார்க்கலாம்  ரேட்டிங்  2. 75 / 5 






சக்கரவர்த்தித் திருமகள்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புஆர். எம். ராமனாதன்
உமா பிக்சர்ஸ்
கதைபி. ஏ. குமார் இளங்கோவன் (உரையாடல்)
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
என். எஸ். கிருஷ்ணன்
கே. ஏ. தங்கவேலு
பி. எஸ். வீரப்பா
ஈ. ஆர். சகாதேவன்
அஞ்சலி
எஸ். வரலட்சுமி
டி. ஏ. மதுரம்
லட்சுமி பிரபா
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுசனவரி 181957
ஓட்டம்.
நீளம்17184 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்.
a


No.SongSingersLyricsLength
1"Kaadhalenum CholayileSeerkazhi GovindarajanKu. Ma. Balasubramaniam03:12
2"Aada Vaanga Annaatthe"Seerkazhi Govindarajan, Jikki & P. Leela04:24
3"Ellai Illadha Inbatthile"Seerkazhi Govindarajan & P. Leela03:26
4"Porakkum Podhu Porandha Gunam"Seerkazhi GovindarajanPattukkottai Kalyanasundaram04:40
5"Kannaalane Vaarunga"JikkiKu. Ma. Balasubramaniam03:07
6"Sollaale Vilakka Mudiyale"S. Varalakshmi & P. LeelaKu. Sa. Krishnamoorthy03:22
7"Endhan Inbam Kollai Konda"M. L. VasanthakumariKu. Ma. Balasubramaniam02:59
8"Emaatram Thaana"S. VaralakshmiK. D. Santhanam03:18
9"Aththaanum Naandhane"S. C. Krishnan & T. V. RathnamThanjai N. Ramaiah Dass02:09
10"Ennam Ellaam Inba Kadhai"P. LeelaKu. Sa. Krishnamoorthy02:58
11"Nalangittu Paarpomadi"S. Varalakshmi & A. P. KomalaK. D. Santhanam03:23
12"Seermevum Gurupaadham"Seerkazhi Govindarajan & N. S. KrishnanClown Sundaram03:23
13"Dhilli Thulukkar Seidha"Seerkazhi GovindarajanSubramania Bharati01:01

Monday, November 07, 2022

THE GREAT INDIAN KITCHEN (2021) -( மலையாளம்) சினிமா விமர்சனம் ( கேரளாவின் தேசிய விருது பெற்ற படம்) # அமேசான் பிரைம்

 


நான்  சின்னப்பையனா  இருந்தப்போ  எங்க  அப்பா  தினமும்  காலைல  அம்மாவுக்கு  சமையல்ல  உதவி  செய்வார். காய்கறி, வெங்காயம், மிளகாய்  நறுக்குவது, தேங்காய்  துருவித்தருவது  போன்ற  சின்னசின்ன  வேலைகள்  செய்வார் . அப்போதெல்லா ம்  நான்  அப்பாவைக்கிண்டல்  செய்திருக்கிறேன். அப்பா, இதெல்லாம்  பெண்கள்  செய்ய  வேண்டிய  வேலை, நீங்க  ஏன்  இதை  செய்யறீங்க? அப்பொதெல்லாம்  சமையல்  வேலை  எவ்வளவு  கடினம்? அதை  விடக்கடினம்  பாத்திரங்களைத்துலக்குவது  நச்சுப்பிடிச்ச  வேலை  எனத்தெரியாது 

தலைவலியும் , திருகு வலியும்  தனக்கு  வந்தாதான்  தெரியும்பாங்க . அது  மாதிரி  நான்  தாலி  கட்டுன  என்  சொந்த்  சம்சாரம்  பிரசவத்துக்காக  அவங்க  அம்மா  வீட்டுக்குப்போனப்பதான் சொந்தமா  சமையல்  செய்ய  ஆரம்பித்து  அதுல  இருக்கற  கஷ்ட  நஷ்டங்களை  உண்ர்ந்தேன் . அப்போதான்  நினைச்சேன். நாம  ஒரு  ஆள்  சாப்பிட  சமைக்கவே  இவ்ளோ  அலுத்தகற,மே  ஒரு  குடும்பமே  சாப்பிட  சமைத்த  அம்மாவுக்கு  எவ்ளோ  சிரமம்  இருந்திருக்கும்,  நான்கு பேர்   சாப்பிட்ட  பாத்திரங்களை  துலக்க  எவ்ளோ  சிரமம்  என்பதை  இப்போ  நினைச்சுப்பார்க்கிறேன் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


நாயகிக்கு  திருமணம்  ஆகுது . வாக்கப்பட்டு  வந்த  இடம்  ரொம்ப  ஆச்சாரமான  குடும்பம். ரொம்ப  சுத்த  பத்தம்  பார்க்கறவங்க . .கணவன் , மாமனார்  இருவருக்கும்  சமைச்சுப்போடுவதுதான்  நாயகிக்கு  முக்கியமான  பணி . அப்புறம்  பாத்திரங்கள்  கழுவுவது ,  துணி  துவைப்பது , வீட்டை  சுத்தம்  செய்தல்   இந்த  வேலை  எல்லாம்  செய்யவே   முதுகு  பெண்டு  கழண்டுடும் 


இத்தனை  வேலை  செஞ்சாலும்  மாமனார்  ஏதாவது  குத்தம்  குறை  சொல்லிட்டே  இருப்பார் .  மிக்சில  அரைச்சா  ருசி  இருக்காது  .  அம்மிக்கல்லில்  அரைக்கனும் .   வாஷிங் மெஷின்ல  துவைக்கக்கூடாது  கல்லில்  அடிச்சுத்துவைச்சாதான்  அழுக்குப்போகும் 


 இதை  எல்லாம்  கூட  நாயகி  பல்லைக்கடிச்சுக்கிட்டு  பொறுத்துக்கறா. ஆனா    மாத  விலக்கான  அந்த  மூன்று  நாட்களில்  தீட்டு  என  ஒரு  அறையில்  அடைத்து  வைக்கப்படுவதை  அவளால்  ஜீரணிக்கவே  முடியலை 


  இப்படி  இருக்கும் தருணத்துல  கணவன்  சபரிமலை  சாமிக்கு  மாலை  போடறான் .  கடுமையான  கட்டுப்பாடுகள்  விதிக்கப்படுது .  தீட்டு  இருக்கும்  நாட்களில்  கணவனைத்தொடக்கூடாது  .  ஆண்கள்  வீட்டை  விட்டு  வெளில  போகும்போது  எதிரில்  வரக்கூடாது  (  அபசகுனமாம் ) 


  கிச்சன்   ரூம்ல  இருக்கும்  சிங்க்  அடைச்சுக்கிச்சு ,  ஒரு  பிளம்ப்பரை  வரச்சொல்லுங்க  என  மனைவி  பல  முறை  சொல்லியும்  கணவன்  காதுலயே  போட்டுக்கலை 


 நாயகி  காலேஜில்  ஒரு   டிகிரி  முடித்தவள் . டான்ஸ்  டீச்சர்  ஆக  ஆசைப்பட்டு  வேலைக்கு  அப்ளை  ப்ண்றேன்   என  கோரிக்கை  வைக்கும்போது  கணவன்  , மாமனார்  இருவருமே  எதிர்க்கிறார்கள் 


 இதுக்குப்பின்  நாயகி  எடுத்த  முடிவு  என்ன?  என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


நாயகியாக  நிமிஷா  சஞ்சயன்  அற்புதமான்  நடிப்பு .  இவர்   பல  படங்களில்  கொஞ்சம்  உம்மணா  முகமாகவே  இருப்பார் . இதில்  புன்னகைக்கும்  முகம் , கோப  முகம்,  ஆத்திர  முகம்  என  பல  முகங்களைக்காட்டி  நடித்திருக்கிறார்.பெண்களுக்கு   இழைக்கப்படும்    அநீதிகளை  பல  படங்களீல்  பர்த்திருக்கிறோம். ஆனால்  இது  எல்லா  வீட்டிலும்  நடப்பதுதான்  நாம்  உணராதது 


  நாயகனாக  சுராஜ்  வெஞ்சாரமூடு  என்ன  ஒரு  உடல்  மொழி  என்ன  ஒரு  நடிப்பு , ஆல்ரெடி  இவர்  நடிப்பை  நாம்   டிரைவிங்  லைசென்ஸ்  ,  ஹெவன்  போன்ற  படங்களில்  ரசித்திருக்கிறோம் . ஆனாலும்  சராசரி  கணவன்  ரோலில்  கனகச்சிதமாய்  பொருந்தி  இருக்கிறார்


  மாமனாராக  வருபவர்  நடிப்பும்  குட் .,  அவர்  பேசும்போதெல்லாம்  நமக்கு    எரிச்சல்  வருவதே  அந்த  கதாப்பாத்திரத்தின்   வெற்றி 


ஒளிப்பதிவு  சவாலான  வேலை . ஏன் எனில்  கதை  முழுவதும்   ஒரே  வீட்டில்  . காட்சி  அமைப்புகள்  பெரும்பாலும்  சமைப்பது  மட்டும்தான், அதை  போர்  அடிக்காமல்  காட்டுவது ச வாலான  வேலை . 


சபாஷ்  டைரக்டர் 


1   ஹோட்டலுக்குச்செல்லும் நாயகன்  நாயகி  இருவரும்  சாப்பிடும்போது  நாயகி “  வீட்டில்  இல்லாத  டேபிள்  மேனரிசம்  வெளில  வரும்போது  இருப்பது  எப்படி ? என  கேஷூவலாகக்கேட்க  அதைக்கேட்டதும்  நாயகன்  முகம்  மாறுவதும்,  மூடு  அவுட்  ஆவதும்  அருமையான  சிச்சுவேஷன் 


2 தலைவலி  , காய்ச்சல்  எனும்போது  வீட்டுத்தோட்டத்தில்  உள்ள   துளசிச்செடி  இலைகளைப்பறிக்கும் நாயகியிடம்  அய்யய்யோ  தீட்டு  என  மாமனார்  பதறும்போது  நாயகி  காட்டும்  முக  பாவனைகள்  கிளாசிக்


3   சாப்பிட்ட  தட்டைக்கூட  கழுவாமல்  கணவன் , மாமனார்  இருவரும்  அப்படியே  வைத்து  விட்டுப்போக  அதை  அருவெறுப்புடன்  பார்க்கும்  நாயகி  பொறுமையாக  அதை  சுத்தம்  செய்வது   பார்வையாளர்கள்  அனைவர்  மனதிலும்  பரிதாபத்தை  ஏற்படுத்துகிறது 


4   கூடலின்  போது  கணவன்  தன்  திருப்தியை  மட்டுமே  பார்க்கிறான்  நம்மைப்பற்றிக்கவலைபப்டவில்லை  என  மனவேதனையைப்பகிர்ந்து   ஃபோர் ப்ளே  எனப்படும்  முன் விளையாட்டுக்களில்  ஈடுபடலாம்  இல்ல? என  கேட்டதும்  கணவன்  ஓ அது  பற்றி  எல்லாம்  உனக்குத்தெரியுமா? என   நக்கலாய்  கேட்பது  டைரக்சன்  டச். புரியாத  புதிர்  ரகுவரன்  - ரேகா   சீன்  நினைவு  வருது 


5   க்ளைமாக்ஸ்  சீன்  தான்  பட்டாசு   படம்  முழுக்க  பொறுமையாய்  இருந்து  விட்டு  பின்  பொங்கும்  சீன்  செம 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   பிளம்ப்பரை  வரசொல்லி  சொல்லியும் கணவன்  கேட்காமல்  இருந்ததும்  அடுத்த  நாள்  காலையில்  சமையல்  செய்யாமல்  ஸ்ட்ரைக்  செய்திருக்கலாமே?  அதை  ரெடி  பண்ணினாத்தான்  சமையல்  என  கண்டிஷன்  போட்டிருக்கலாம்


2  கணவனுக்குத்தெரியாமல்  வேலைக்கு  அப்ளிகேஷன்  போடும்  நாயகி  தன்  அம்மா  வீட்டு  அட்ரசைத்தராமல்  கணவன்  வீட்டு  அட்ரசை  அதில்  பதிவு  செய்வது  ஏன் ?   எப்படியும்  இண்ட்டர்வ்யூ  கார்டு  வீட்டுக்கு  வ்ரும்போது  நாம  மாட்டிக்குவோம்  என  தெரியாதா? 



சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும்  இந்தப்படம்,  ஆனா  ஆண்கள்  பார்க்க  வேண்டிய  படம்,  படத்தில்  திரும்ப  திரும்ப  சமையல்  செய்வது ,  பாத்திரங்கள்  க்ளீன்  செய்வது  என  காட்டும்  காட்சிகள்  அதிகம்  என்பதால்  போர்  அடிக்கக்கூடும்,  ஆனால்  வேணும்னே  தான்  அப்படி  விஷுவலைஸ்  பண்ணி  இருக்காங்க  ரேட்டிங்  3 /. 5 


The Great Indian Kitchen
Movie poster of 2021 malayalam film 'The Great Indian Kitchen'.jpg
Promotional poster
Directed byJeo Baby
Written byJeo Baby
Produced byDijo Augustine
Jomon Jacob
Vishnu Rajan
Sajin S Raj
StarringNimisha Sajayan
Suraj Venjaramoodu
CinematographySalu K. Thomas
Edited byFrancies Louis
Music bySooraj S. Kurup
Mathews Pulickan
Production
companies
Mankind Cinemas
Symmetry Cinemas
Cinema Cooks
Distributed byNeestream
Amazon Prime Video
Release date
  • 15 January 2021
Running time
100 minutes
CountryIndia
LanguageMalayalam

Sunday, November 06, 2022

பாக்தாத் திருடன் (1960) (தமிழ்) - சினிமா விமர்சனம் (கமர்ஷியல் மசாலா)

 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாட்டின்  துணைத்தளபதிதான்  வில்லன். மன்னனையும், ராணியையும்  வஞ்சித்துக்கொலை  பண்ணிடறான். ஒரு  நாட்டின்  ராஜா, ராணியையே  கொலை  செய்யும்  பராக்கிரமம்  கொண்டவன்  இளவரசனான  குட்டிக்குழந்தையைக்கொல்ல  முடியாதா?  இப்படி  எல்லாம்  லாஜிக்  மிஸ்டேக்  பார்த்தா  அரச  கதையே  பார்க்க  முடியாது . அதனால  குழந்தை  அரண்மனையில்  உள்ள  ராஜ  விசுவசிகளால் தப்ப  வைக்கப்படுகிறது. அந்தக்குழந்தை  திருடர்  கூட்டத்துல  வளர்கிறது, ஒரு  அரசியல்வாதியின்  மகன்  தகுதி  இருக்கோ  இல்லையோ  அடுத்த  அரசியல்  வாரிசாக  ஆவது  போல  திருடனின்  வளர்ப்பு  மகன்  திருடனாக  ஆகிறான் 



 பணக்காரர்களிடமிருந்து  கொள்ளை  அடித்து  ஏழைகளுக்குக்கொடுக்கும்    நல்ல  திருட்ன்  அவன்  நாட்டில்  போலி  அரசனுக்கும், போலி  அரசிக்கும்  ஒரு  பெண்  குழந்தை .


நாயகன்  தான்  அந்தத்திருடன். போலி  இளவரசியான  பெண்  நாயகன்  மீது  ஆசைபப்டுகிறாள்.. ஆனால்  அடிமைப்பெண்ணான   நாயகியை  நாயகன்  காதலிக்கிறான்


நாட்டில்  இருக்கும்  நீர்  நிலைகளில்  விஷத்தைக்கலந்து  விட்டால்  பொதுமக்கள்  நல்ல  தண்ணீருக்கு  அரண்மனைக்குத்தான்  வர  வேண்டும்.  அப்போ  குடிநீரை  காசுக்கு  விற்று  சம்பாதிக்கலாம்  என  போலி  மன்னன்  நினைக்கிறான். அந்த  விஷத்தை  முறியடிக்கும்  மருந்து  பற்றிய  ரகசியம்   போலி  இளவரசிக்குத்தெரியும்.


  அவருக்கு மட்டுமே தெரிந்த  அந்த  ரகசியத்தை  அறிய  நாயகன்  அவளைக்காதலிப்பது  போல  நடித்து    மருந்தைப்பெற்று  மக்களைக்காப்பாற்றுகிறான்


திருடர்  கூட்ட்த்தலைவனான  நாயகன்   கொடுங்கோல்  ஆட்சியை  அகற்றும்  வரை  கூட்டத்தில்  யாரும்  காதலிக்கவும்  கூடாது , திருமணம்  செய்யவும்  கூடாது  என்ற  நிபந்தனை  விதித்திருந்தான். ஆனால்  சந்தர்ப்ப  சூழ்நிலை  காரணமாக  அவனே  அந்த  விதியை  மீற  வேண்டிய  கட்டாயம், ஆனால்  கூட்டத்தினர்  அதற்கு  எதிர்ப்பு  தெரிவிக்கின்றனர்


 நாயகன், நாயகி  திரும்ண  நட்ந்ததா?  போலி  இளவரசி  நாயகனைப்பழி  வாங்கினாரா? 2நாட்டின்  இளவரசர்  தான்  அந்தத்திருடன்  என்பது  எப்படி  மக்களூக்குத்தெரிய  வந்தது  இதை  எல்லாம்  யூ  ட்யூப்ல  கண்டு  மகிழுங்கள் 


நாட்டின்  இளவர்சர்  என்பதை  அறீயாத  திருடர்  தலைவனாக  எம்  ஜி யார். அநாயசாமான  நடிப்பு . ரெடிமேடு  பாத்திரம். இந்தக்கால  மாடர்ன்  மங்கையர்  உடுத்தும்  பட்டியாலா  பேண்ட் , ஃபளாசா  பேண்ட்  எல்லாவற்றையும்  அந்தக்காலத்துலயே  அணிந்தவர்  தான்  எம்  ஜி யார்.  எம்  ஜி  ஆர்  பல  இமேஜ்களை  அந்தக்காலத்தில்  மெயிண்ட்டெயின்  பண்ணிட்டு இருந்தார். அதுல  ரொம்ப  முக்கியமானது  அவர்  ஒரு  படத்தில்  ஒன்றுக்கு  மேற்பட்ட  கதாநாயகியோடு  டூயட்  பாட  நேர்ந்தால்  அந்தப்பாட்டு  நாயகியின்  கனவில்  வரும், இவர்  கனவில்  வராது . பாட்டு  முடிஞ்சதும்  நினைவுலகில்  தங்கச்சி  அப்டின்னு  எஸ்கேப்  ஆகிடுவார் 


வாள்  சண்டை  போடும்போது  முகத்தில்  சிரிப்பைத்தாங்கி  நடித்த  ஒரே  தமிழ்  சினிமா  ஹீரோ  எம்  ஜி ஆர்  தான் . அவர்  ஃபைட்  போடுவது  போலவே  இருக்காது . சும்மா  விளையாட்டுக்காட்ற  மாதிரிதான்  இருக்கும், அட்டக்கத்தி  வீரர்  என  எதிரிகள்  அவரை  நக்கல்  அடித்தாலும்  வாள்  சண்டையில்  அவர்து  நிஜ  வீரத்தை  அறிய   சண்டைக்காட்சிகளில்  எம்  ஜி  யாரின்  வீரம் என்ற  தொடர்  ஜி  அசோகனின்  பாக்கெட்  நாவல்  இதழில்  வந்தது அதைப்படித்தால்  தெரியும்

அடிமைப்பெண்  ஜெரீனாவாக  வைஜெயந்திமாலா , என்ன  ஒரு  அழகான  , கண்ணிய்மான  தோற்றம் ? காதல்  காட்சிகளில் , சோகக்காட்சிகளில்  ஜொலிக்கிறார்


 போலி  அரசனாக  டி எஸ்  பாலையா  வில்லத்தனம்  மிக்க  நடிப்பு , போலி  அரசியாக  சந்தியா , அதிக  வாய்ப்பில்லை . இளவரசி  சுபேராக  எம் என்  ராஜம்  என்னைக்கவர  வில்லை . வில்லி  போன்ற  முகம் , இவர்  முகத்தை  எனக்கே  பிடிக்கலை , எம்  ஜி ஆருக்கு  எப்படிப்பிடிக்கும் ? 


துணை  தளபதியாக  அசோகன்  வில்லனாக  வந்தாலும்  அதிக  வாய்ப்பில்லை


 போலி  இளவர்சனாக  வரும்  எம்  என்  நம்பியார்தான்  மெயின்  வில்லன் . படத்தில்  3  வில்லன்கள்  இருந்தாலும்  இவர்  தான்  ஸ்கோர்  செய்கிறார்


ஒன்பது  பாடல்கள், அதுல  சூப்பர்  ஹிட்  பாட்டு  யாருக்கு  டிமிக்கி கொடுக்கப்பார்க்கிறே? எங்கே  ஓடுற  சொல்லு பாட்டு  கலக்கல்  டான்ஸ் , இசை  ஜி  கோவிந்தராஜூலு  நாயுடு ,  அனைத்துப்பாடல்களையும்  எழுதியவர் கவிஞர்  மருதகாசி . வழக்கமாக  எம்  ஜி  யார்  பட்ங்க்ளில்  ஒரு  தத்துவப்பாட்டும், புத்திமதி  சொல்லும்  பாட்டும்  இடம்  பெறும், ஆனால்  ஏனோ  இதில்  மிஸ்சிங் 



சபாஷ்  டைரக்டர்  ( டி ஆர்  சுந்தரம்) 


1  சர்தார்  படத்தில்  வரும்  மினரல்  வாட்டர்  விற்பனை  தீம்  இந்தப்படத்தில்  இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் .  2022ம்  ஆண்டுக்கான  கதைககருவுக்கு  1960லயே  அச்சாரம்  போட்டதுக்கு  ஒரு  சபாஷ்


2  விடுத;லைப்புலி  பிரபாகரன்  ரெஃப்ரன்ஸ்  கூட  இருக்கு .  கூட்டத்தின்  தலைவன்  போட்ட  சட்டம்தான்  கூட்டத்தில்  இருக்கும்  யாரும்  வெற்றி  கிடைக்கும் வரை  காதலோ  கல்யாணமோ  செய்யக்கூடாது , ஆனா  தலைவ்னே  அந்த   விதியை  மிறிவிடுவான்


3  மோகன்லால்  நடித்த  அங்கிள் பன்  படத்தில்  அவர்  போடும்  குண்டான  கெட்டப்  இந்தப்படத்தில்  ஹீரோ  போடும்  மாறுவேடத்தில்  இருந்துதான்  எடுக்கப்பட்டிருக்க  வேண்டும் , அதே  போல்  தாயகம்  ப்ட்த்தில்  வில்லன்  மன்சூர்  அலிகான்  போடும்  கழுகுமூக்கு  கெட்டப்பும்  இதில்  ஹீரோ  போடும்  ஒரு  கெட்டப்தான் 


4  ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  ஓடும்  படத்தில்  ஒரு  இடத்தில்  கூட  தொய்வு  ஏற்படவில்லை 


  ரசித்த  வசனங்கள் 


1 என்னைப்பின்  தொடர்ந்து    வருவது  நீங்கள்  தானே?


 உன்னைப்பின்  தொட்ரும்படி  செய்தது  நீதானே? 


2   வில்லன் -  இந்த  நாட்டில்  எத்தனையோ  சீர்திருத்தம்  செய்தாகி  விட்டது . தற்கொலை  செய்து  கொள்ள  தனி  இடம்  இனி  நிர்மாணிக்க  வேண்டும் 


3   அநீதியைச்செய்வது  மிருகத்தன்ம்  அதைக்கண்டு  ஒதுங்குவது  கோழைத்தனம்  எதிர்த்து  நிற்பதுதான்  மனிதத்தனம்


 4  நான்  யார்  தெரியுமா? இந்நாட்டு  இளவரசி 


 எல்லாரும்  இந்நாட்டு  மன்னரே!


5  காக்கா  கர்ருன்னுச்சாம் ,கருங்குயில்  போடீன்னுச்சாம்


6  ஆவதும்  பெண்ணாலே  அழிவதும்  பெண்ணாலே

  என  சும்மாவா  சொன்னார்கள் ?


  முழுமையாகத்தெந்ரியாமல்  பேசாதே, நல்லவை ஆவதும்  பெண்ணாலே, கெட்டவை  அழிவதும்  பெண்ணாலே


7  வீட்டை  ஆளும்  பெண்கள் நாட்டை  ஆளும்   தகுதி  உளளவர்கள்தானே?


8    அரசகுமாரியை  நான்  திருமணம்  செய்து  கொள்ள  வேண்டுமானால்  ஒன்று  நான்  அரச  பரம்ப்ரையை  சார்ந்தவனாக  இருக்க  வேண்டும், அல்லது  ம்க்கள்  அதரவைப்பெற்ற  தலைவனாக  இருக்க  வேண்டும் 


  உங்களுக்கா  மக்கள்  ஆதரவு  இல்லை ? (  உள்  குத்து  வ்சனம் )


9  நாய்  இல்லாத  ஊரிலே  நரி  ஊளையிட்டு  வந்ததாம்


 ஹா ஹா  


 ஏன்  சிரிக்கிறாய்?


 நாயை பக்க்த்தில்  வைத்துக்கொண்டே  கேட்கிறிர்கள்


10  பாலை  வனத்தில்  பாலைத்தேடுகிறீர்கள்  


11  ஏறிய  நான்  கீழே  இறங்க  மாட்டேன்  (  திருப்பதி  அஜித்  பஞ்ச் = நான்  இறங்கிப்போறவன்  இல்லை  ஏறிப்போறவன்  ரெஃப்ரன்ஸ்)) 


12  உன்னைத்திட்டி  திட்டி  என்  நாக்கு  பாதி  செத்து  விட்டது 


13  ஆட்டைக்கட்ட  வேண்டிய  இடத்தில்  கட்டி  வைத்தால்  புலி  தானே  அங்கே  வரும் 


14  தேடிக்கொண்டிருந்த  சஞ்சீவி  மலை  காலில் தடுக்கியது  போல  நான்  தேடிய  நீங்கள்  என்  கைவசம்  கிடைத்து  விட்டீர்கள் 


15 எட்டாக்கனியக்கிட்டாது  என  விட்டுச்செல்பவள்  நான்  அல்ல  மரத்தை  வெட்டி  வீத்தியாவது  கனிய  அடவேன் 


16  ம்ண்ணில்  கிடந்த  மாணிக்கத்தின்  மேல்  ஒட்டிக்கிடந்த  தூசியைத்துடைப்பது  குற்றம்  ஆகாது .ஆவர்  இந்த  நாட்டின்  இளவரச்ர் , நீ  அடிமைப்பெண் 

பாடல்கள்


1  புல்  புல்  பார்வையிலே  (  ஓப்பனிங்  சாங்)


2  சிரிச்சாப்போதும்  சின்னஞ்சிறு பொண்ணு  திண்டாடச்செய்யும் 


3  கண்ணீரின் வெள்ளம்  இங்கே  ஓடுதய்யா ( அடிமை  விற்கப்படும் இடத்தில்  ஹீரோயின்  சோகப்பாட்டு) 


4  யாருக்கு  டிமிக்கி கொடுக்கப்பார்க்கிறே? எங்கே  ஓடுற  சொல்லு  (  ஹீரோ  மாறுவேடத்தில்  ஹீரோயினை  கலாய்க்கும்  பாடல் ) 


5   வெற்றி  கொள்ளூம்  வாளேந்தி  (  முதல்    டூயட்) 


6  எந்தன்  கதை  இதானா? இருள்  சூழந்த  வாழ்வுதானா? ( நாயகி  சோகப்பாடல் _


6  உண்மை  அன்பின் 


7   பல்லவி  - அழகு  லைலா - சரணம் அறியா  வயசு  அதுவும்  புதுசு அதனால்  தயங்குது  என்  மனசு  




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  விஷம்  கலந்த  தண்ணீரை  சரி  ஆக்கும்  மருந்து  ரகசியத்தை  அறிந்து  கொள்ள  இளவரசியைக்காதலிப்பது  போல்  நடிக்கும்  ஹீரோ  அந்த  ரகசியத்தைப்பெற்றதும்  டக்னு  அந்த   இட்த்தைக்காலி  செய்திருக்கலாமே?  அப்பவே  இது  நடிப்பு  என  ஒப்புதல்  வாக்குமூலம்  ஏன்  தரனும் ? பிறகு  ஒரு    சந்தர்ப்பத்தில்  சொல்லி  இருக்கலாமே?  அவர்  கூக்குரல்  இட்டு  வீரர்க்ளை  அழைப்பார்  என  தெரியாதா? ஏன்  ரிஸ்க்??


2  க்ளைமாக்ஸ்ல  வில்லி  உன்னை  அழித்தே  தீருவேன்  என சவால்  விடும்போது  ஹீரோ  நீ  அழிந்து  விடாதே  என  சொல்லி  விட்டு  செல்ல  முற்படுகிறார். அப்படியே  போய்  இருக்கலாம் ., வில்லி  ஒரு  நிமிடம்  நில்  என்றதும்  எதற்கு  நிற்கிறார்? ஏதோ  ஸ்விட்சை  தட்டி  விட்டதும்  ஹீரோ  பாதாளத்தில்  விழுகிறார்


3  க்ளைமாக்ஸ் ல  வில்லன்  ஒரு  ஆளைப்பிடித்து  அவன்  முகம்  தெரியாத  வாறு  நிற்க  வைத்து  ஹீரோ  குரலை மிமிக்ரி  செய்து  ஏமாற்றும்போது  ஹீரோயின்  முகத்தைக்காட்டு  என  சொல்லி  இருக்கலாமே?  

4  திரைச்சீலைகளைக்கிழித்து அதைக்கோட்டைக்கதவில்  கட்டி  கீழே  இறங்குகிறார்  ஹீரோ  அது  என்ன  ஜக்காடு  பெட்ஷீட்டா?  கிழியாமல்  இருக்க? அவர்  கையால்  கிழிபடும்  திரைச்சீலை  அவரது 75  கிலோ  வெயிட்டைத்தாங்குமா>?



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  எம்  ஜி ஆர்  ரசிகர்கள்  மட்டுமல்ல  ஜனரஞ்சகமான   பொழுது  போக்குப்படம் காண  விரும்பும்  அனைவருமே  பார்க்கலாம், ரேட்டிங்  3 / 5 


  • சில  சுவராஸ்ய  தகவல்கள் (  நன்றி - விக்கிபீடியா)

மேனாள் கோல்டன் ஸ்டூடியோ அதிபர் நாயுடு பாக்தாத் திருடன் படத்துக்கான நிதியைக் கொடுத்தார். எம். ஜி. ஆர். ஒவ்வொரு காட்சிக்கும் புதிதாக 'செட்' போட வேண்டும் என நிபந்தனை விதித்தார். ஒரு காட்சிக்கு 'செட்' போட ₹30, 000 செலவாயிற்று. இந்த ரீதியில் படம் எடுத்து முடிய ₹5 லட்சம் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டது. இதற்கு மேலும் ₹2 லட்சம் செலவிட வேண்டும் என எம். ஜி. ஆர். சொன்னபோது நாயுடுவுக்கு பயம் ஏற்பட்டது. 

எம். ஜி. ஆர். வைஜெயந்திமாலாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம் இதுவாகும். படம் எடிட்டிங் செய்யப்பட்ட போது எம். ஜி. ஆர். உடனிருந்தார். "(வைஜெயந்திமாலாவின்) அசைவுகள் சீராக இருந்ததால் எடிட்டிங் செய்வது சுலபமாக இருந்தது" என எம். ஜி. ஆர். குறிப்பிட்டார் என வைஜெயந்திமாலா தெரிவித்தார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த எஸ். என். லட்சுமி ஒரு சந்தர்ப்பத்தில் 'டூப்' போடாமலேயே புலியுடன் மோத வேண்டி ஏற்பட்டது. "இந்தப் படத்தின் கதாநாயகன் நானா அல்லது இந்த இளம் பெண்ணா?" என எம். ஜி. ஆர். வேடிக்கையாகக் கேட்டாராம்.[



SongSingersLength
"Azhagu Laila"A. P. Komala02:28
"Enthan Kathai Idhana"P. Suseela02:51
"Vetri Kollum Vaalendhi"05:24
"Kanneerin Vellam"03:16
"Pothukulunguthey...Sokkudhe Manam"03:30
"Bul Bul Paarvaiyile"K. Jamuna Rani02:12
"Siricha Pothum"Jikki & group02:44
"Unmai Anbin"T. M. Soundararajan & P. Suseela02:18
"Yaarukku Dimikki"T. M. Soundararajan02:34





a




a
Baghdad Thirudan
Baghdad Thirudan poster.jpg
Theatrical release poster
Directed byT. P. Sundaram
Written byA. S. Muthu (dialogues)
Produced byT. P. Sundaram
Harilal Patoviya
StarringM. G. Ramachandran
Vyjayanthimala
CinematographyM. Krishnaswamy
Edited byG. D. Joshi
Music byG. Govindarajulu Naidu
Production
company
Southern Movies
Release date
  • 6 May 1960
CountryIndia
LanguageTamil
a


Saturday, November 05, 2022

BEYOND THE UNIVERSE (2022) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


இதயத்தைத்திருடாதே  ( கீதாஞ்சலி  தெலுங்கு  டப்பிங்க்) படத்தின்  ஒன் லைன்  ,   தில்  பேச்சாரா  (  ஹிந்தி )  படத்தின்  கேரக்டர்  டிசைன் ,  நெஞ்சில்  ஓர்  ஆலயம்  படத்தின்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  மூன்றையும் நினைவு படுத்தும்  கண்ணியமான  காதல்   கதை  இது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  பியானோ  கலைஞி. பியானோ  ஆர்க்கெஸ்ட்ரா , போட்டிகளில்  கலந்து  கொள்வதில்  ஆர்வம்  உள்ளவள் . ஆனா  சின்ன  வயசுல  இருந்தே  அவளுக்கு  ஒரு  மெடிக்கல்  கம்ப்பெளெயிண்ட்  இருக்கு . சிறுநீரகம்  பாதிக்கபட்டிருக்கு .  வாரம்  3  முறை  டயாலிசிஸ்  செய்ய  வேண்டி  இருக்கு 


 நாயகன்  ஒரு  டாக்டர் .  ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆகும்  பேஷண்ட்ஸ்  குணம்  ஆகி  வீடு  திரும்பறாங்களோ  இல்லையோ  இருக்கும்  நாட்களில்  அவங்க  சந்தோஷமா  இருக்கனும்னு  நினைப்பவர். இதற்காக  ஹாஸ்பிடல்  ரூல்ஸை  மீறத்தயங்காதவர் 


எல்லாக்காதல்  கதைகளிலும்  வருவது  போல  மோதலில்  தான் இவர்கள்  முதல்  சந்திப்பே  நிகழ்கிறது . நாயகி  சாலையோரம்  அமர்ந்திருக்கும்  சோலையாய்  பியானோ  வாசித்துக்கொண்டிருக்கும்போது  அவளது  அழகில்  மயங்கி  நாயகன்  சைக்கிளில்  வந்து  பியானோவை  இடித்து  விடுகிறான்


  பின்  வரும்  சந்திப்புகளில்  நாயகி  ட்ரீட்மெண்ட்க்கு  வரும்  ஹாஸ்பிட்லில்தான்  நாயகன் டாக்டர்,  பழக்கம்  நெருக்கம்  ஆகிறது


நாயகியின்  மருத்துவப்பிரச்சனை அவள்  கற்கும்  பியானோ  ஸ்கூல்  நிர்வாகத்துக்குத்தெரிந்து   அடிக்கடி  சிகிச்சைக்காக  ஸ்கூலுக்கு  வராமல்  ஆப்செண்ட்  ஆகிறாள்  என  காரணம்  சொல்லி நிர்வாகம்  அவளை  சஸ்பெண்ட்  செய்கிறது 


 ஹாஸ்பிடலில்  நாயகன்  ஒரு  பியானோ  ரெடி  பண்ணி  நாயகி  வாசிக்க  உதவுகிறான் . போட்டி  நடக்கும்  நாள்  நாயகிக்கு  உடம்பு  சரி  இல்லாமல்  போக போட்டியில்  கலந்து  கொண்டும்  தொடர  முடியாத  நிலை  நாயகிக்கு 


நாயகனின்  தந்தைதான்  அந்த  ஹாஸ்பிடலின்  எம் டி . நாயகன் நாயகிக்காக  ஹாஸ்பிடல்  ரூல்சை  மிறி அவளை  லவ்  பண்ணுவது  பிடிக்கவில்லை 


 ஹாஸ்பிடல்  நிர்வாகம்  என்கொயரி  வைக்கிறது 


தன்னால்  நாயகனின்  வேலை  பறி போய்விடக்கூடாது  என  நாயகி  பிரேக்கப்  செய்கிறாள் 


இதற்குப்பின்  நாயகன்  நாயகி  காதல்  நிறைவேறியதா? இல்லையா? என்பது  க்ளைமாக்ஸ் 

நாயகியாக க்ளூலியா பே   தேவதை  மாதிரி  அழகு . அந்தக்காலத்து  சரோஜாதேவிகள்  இந்தக்காலத்து  கேரளப்பெண்கள்  கண்  இமைகளில்  மீன்  டிசைனில்  மை  இடுவது  போல  மேக்கப்  போட்டுக்கொள்ளும்  அழகே  அழகு .இந்தியாவிலேயே  கண்  மைக்கு  அதிக  முக்கியத்துவம்  தருவது  கேரளப்பெண்கள்  தான்,  எனவே  ஒரு   அனு சித்தாராவோ . நித்யாமேனனோ  இமை  மை  டெக்ரேஷன்  செய்வது  பெரிய  ஆச்சரியம்  இல்லை , ஆனா  ஹாலிவுட்  ந்டிகை  இந்தியப்பெண்ணைப்போல்  மை  இடுவது  ரசிக்க  வைக்கிறது .  உணர்ச்சி  பொங்கும்  காட்சிகளில்  கலக்கி இருக்கார் . காதல்  காட்சிகளில்  சோகக்காட்சிகளில்  ஸ்கோர்  செய்கிறார்


  நாயகனாக   ஹென்றி.  பிளஸ்  ஒன்  படிக்கும்  மாணவன்  போல்  குணால்  சாயலில்  இருக்கிறார். இளமைத்துள்ளலான  நடிப்பு அப்பாவிடம்  கோபப்படும்  காட்சியிலும் ,  கண்களாலேயே  மகிழ்ச்சியை  வெளிப்படுத்தும்  காட்சிகளிலும்  நன்கு  ந்டித்திருக்கிறார்


 நாயகனின்  அப்பாவாக  வருப்வர்  வில்லன்  போல்  ஆரம்பத்தில்  வந்தாலும்  பின்  அவர்  நடிப்பு  குணச்சித்திரமாக  மாறி  விடுகிறது 


நாயகிக்காக  கிட்னி  டொனேட்  பண்ண  நாயகன்  முன்  வருவது  ஆனால்  மேட்ச்  ஆகாமல்  போவது   என  ஆங்காங்கே  பல  சுவராஸ்ய  முடிச்சுகள் 


 ஒளிப்பதிவு  பிரமாதம் . பிரம்மாண்டமான  செட்கள்  கண்  முன்  பிரமிப்பாக  விரிகிறது .  கதையின்  முக்கிய  அங்கமாக  பியானோ  இசை  வருவதால்  இசையில்  முக்கியத்துவம்  காட்ட  வேண்டிய  நிர்ப்பந்தம் , இசை  குட் 



  ரசித்த  வசனங்கள் 


1   உன்னால்  முடியுமா? முடியாதா? என்பதற்கான  பதிலை  உன்னைத்தவிர  வேறு  யாராலும்  சொல்ல  முடியாது 


2  சூரிய  அஸ்தமனம்  தான்  என்  வாழ்க்கையில்  தினமும்  எனக்குக்கிடைக்கும்  பரிசு (  தில்சே  -  உயிரே  பட  டயலாக்  சுஜாதா  வசனம் -  நான்  பார்க்கும்  கடைசி  சூர்யோதயம் iஇதுதான்  என்ற  வசனம்  நினைவு  வருது ) 


3   பேஷ்ண்ட்டை  குணப்படுத்துவதை  விட  என்  கவனம்  இருக்கும்  காலம்  வரை  அவங்களை  சந்தோஷமா  வெச்சுக்கனும்  என்பதில் தான்  இருக்கு 


4  தன்னோட  மகனை  எவ்ளோ  அக்கறைப்பார்த்துக்கொள்ளும்  அப்பாக்கள்  அவரவர்  மனைவியை  ஏன்  அவ்ளோ  கேர்  எடுத்துப்பார்த்துக்கறதில்லை ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    டயாலிசிஸ்  செய்பவர்கள் கை  மணிக்கட்டுப்பகுதியில் சில  தழும்புகள்  இருக்கும்  , அதைப்பார்த்து  மற்ற  மாணவர்கள்  பயப்படறாங்க  என  காரணம்  சொல்லி  ஸ்கூல்  நிர்வாகம்  நாயகியை  நீக்குகிறது .  அடிக்க்டி  சிலர்  அவரிடம்  கையைக்காட்டி  ஏன்  அப்டி  இருக்கு  ? என  தர்மசங்கடமாக  கேட்கிறார்கள்  இதை  தவிர்க்க  கையை  ஃபுல்லா  கவர்  பண்ற  மாதிரி  ஆடை  அணியலாமே?  (  படம்  ஃபுல்லாவே  அவர்  ஃபுல்லா  கவர்  பண்ணாம  கிளாமராதான்  வர்றார்  அது  வேற  விஷயம் )


2  நாயகி  சாதாரண  குடும்பம் மாதிரிதான்  காட்றாங்க ,  அம்மா, அப்பா இல்லை  தாத்தா  மட்டும் தான்  , வாரம்  3  முறை  டயாலிஸிஸ்  பண்ண  லட்சக்கணக்கில்  செலவாகுமே? ஏது  துட்டு ? 


3  இந்தக்காலத்துல்   ஃபோட்டோ  எடுப்பது  ரொம்ப  ஈசி .  காதலியுடன்  ஜோடியா  எடுத்துக்கிட்ட  ஃபோட்டோ  காத்துல  பறந்து  போய்  கீழே  விழுதுன்னா  வேற  ஃபோட்டோ  எடுக்க  முடியாதா? அவ்ளோ  ரிஸ்க்  எடுத்து  மலைல  இறங்குவாங்களா? 


4  மலைக்கு  ட்ரெக்கிங் போறவங்க  ரெகுலரா  உயரமான  இடத்துல  காற்று  அதிகமா  வீசும்னு  தெரிஞ்சுதான்  இருப்பாங்க .,  ஃபோட்டோவை  கல்  மீது  வைக்கும்  ஹீரோ  அதுக்கு  வெயிட்  குடுக்க  மேலே  ஒரு  சிறு  கல்  கூடவா  வைக்க  மாட்டார்? 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தென்றலே  என்னைத்தொடு  படம்  போல  முழுக்க  முழுக்க  ஜாலியான  லவ் ஸ்டோரியும்  அல்ல ,  தழுவாத  கைகள்  மாதிரி  ரொம்ப  உருக்கமான  படமும்  அல்ல ,   காதல்  நெருக்கம்  பாதி   உருக்கம்  மீதி  என  கலந்து கட்டிய  ப்டம் 


காதல்  ஜோடிகள்  சேர்ந்து விடும்  காதல்  கதைகள்  ஆயிரம்  உண்டு  , ஆனா  சேராத  காதல்  கதைகள்  தான்  காவியம்  ஆகின்றது  . மனதில்  தங்கி  விடுகிறது   ரேட்டிங்  3 / 5 


Friday, November 04, 2022

DIORAMA (2022) - சினிமா விமர்சனம் (மெலோடிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 18+


டியோ ராமா  என்றால்  தொடர்ச்சியான  காட்சிகளின்  தொகுப்பு  என்று  அர்த்தம்  சொல்லுது  கூகுள்.  ஒரு  மினியேச்சர்  மாடலின்  முப்பாரிமாணப்பார்வை  எனவும்  அர்த்தமாம், திரைக்கதையும்   மூன்று  விதமான  பரிமாணங்களில் , மூன்று கண்ணோட்டங்களில்  சொல்லப்படுது 

 கமல்  படங்கள்  எல்லாம்  10  வருடங்கள்  கழித்துக்கொண்டாடப்படும், சிலாகிக்கப்படும் , அன்பே  சிவம்,  குணா  அதற்கு  சிறந்த  உதாரணங்கள் .  அவை  ரிலிஸ்  ஆன  போது  பெரிய  வரவேற்பு  இல்லாமல்  போனாலும்  நமக்குப்பின்னால  வரும்  சந்ததிகள்  அதைக்கொண்டாடித்தீர்ப்பாங்க .  உத்தம  வில்லன்  அப்படி  ஒரு  படம் . அந்தப்படத்தின்  திரைக்கதையில்   நேர்டியான  கதை  ஒரு  பக்கம்  போகும்,  இன்னொரு  பக்கம்   வில்லுப்பாட்டு  வடிவில்  ஒரு  கதை  சொல்லப்படும். அந்த  திரைக்கதை  உத்தி  பிடித்திருந்தால்  இந்தபடத்தின்  திரைக்கதை  உங்களை  கவரக்கூடும்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன், நாயகி   இருவருமே  பணிக்குச்செல்லும்  தம்பதியர். அவர்களுக்கு  3  குழந்தைகள் 12  வயது , 8  வ்யது , 6  வயது   என  ஐந்து  பேரும்  ஒற்றுமையாக  ஒரே  வீட்டில்  வசிக்கிறார்கள் .


 இதில்  நாயகியின்  மனதில்  மட்டும்  ஒரு உறுத்தல் . நம்ம  வாழ்க்கை  இயந்திர கதியா  போய்க்கொண்டு  இருக்கிறதோ? தினமும்  எழுகிறோம்,  குழந்தைகளை  ரெடி  பண்றோம், ஸ்கூலுக்கு  அனுப்பறோம், ஆஃபீஸ்  போறோம், வர்றோம், இது  போர்  அடிக்குது. ஒரு  கவுன்சிலிங்  போலாமா? மனோதத்துவ  மருத்துவரை  சந்திக்கலாமா? என  நினைக்கிறார். இதை  தன்  க்ணவனிடம்  சொல்கிறார். ஆனால்  கணவன்  அதைபொருட்படுத்தவில்லை . எல்லார்  வாழ்க்கையும்  இப்படித்தானே  இருக்கிறது ? என  கேட்கிறார்


இப்படி  இருக்கும்போது  நாயகன்  ஒரு  பார்ட்டிக்குப்போகிறான், நாயகி  வேறு  பார்ட்டிக்குப்போகிறாள் இருவருக்கும்  தனித்தனியே  ஒரு  உறவு  மலருது .இந்த  விஷயம்  பரஸ்பரம்  ஒருவருக்கொருவர்  தெரிய  வர  ஒரு பிரிவு  வருது .  குழந்தைகளை  யார்  கவனிப்பது  என்ற  கேள்வி  வரும்போது  மூன்று  நாட்கள்  அப்பா  ,  நான்கு  நாட்கள்  அம்மா  இப்படி  ஷிஃப்ட்  வெச்சு  பார்த்துக்கறாங்க. 


நம்  இருவர்  பிரிவால் குழந்தைகள்  மனம்  , எதிர்காலம்  பாதிக்கப்படக்கூடாது  என  நாயகி  நினைக்கிறார். ஆனால்  நாயகன்  நாயகி  மீது  மட்டுமே  குற்றம்  சாட்டுகிறார். தன்  தவறை  ஒத்துக்கொள்ளவே  இல்லை 


இவர்கள்  வாழ்க்கை  என்ன  ஆனது  என்பதே  திரைக்கதை 



இந்தக்கதை  ஒரு  பரிமாணம். இன்னொரு  பரிமாணத்தில்  உலகம்  முழுக்க  தம்பதிக்ள்  பிரிவது  65%  நடந்து  கொண்டு  தான்  இருக்கிறது  அதற்கு  என்ன  காரணங்கள்?  என  தர்க்க  ரீதியாக  அலசப்படுகிறது . இது  டாக்குமெண்ட்ரி  ஸ்டைலில்  கொடுக்கப்பட்டிருக்கிற்து 


 இன்னொரு  பரிமாணம்  வில்லுப்பாட்டு  போல  பொம்மலாட்டம்  போல  நடன  நாட்டிய  நாடக  வடிவில்  காட்டப்படுது 


 மூன்று  பரிமாணங்களும்  சொல்ல  வரும்  விஷயம்  ஒன்று  தான்   எல்லா  தம்பதிகளுக்கும்  ஒரு  கட்டத்தில்  தன்  இணை  போர்  அடிக்க  ஆரம்பித்து  விடும், அதை  சாமார்த்தியமாக  சரி  செய்ய   வேண்டும் ., இல்லை  எனில்  ஜோடி  மாறும்  குழப்பம்  வரும் 


நாயகி  ஃப்ரிடாவாக   பியா  ஜெல்டா  அழகான  முகம்  கச்சிதமான  நடிப்பு .  கண்ணீர்  விடும்  காட்சியில்  கச்சிதம் . எந்த  நடிகை  அழும்  காட்சியில்  கூட  அழகாக  இருக்கிறாரோ  அவர் தான்  சிறந்த  நடிகை என  ஒரு  மேடைப்பேச்சில்  ஒரு  அறிஞர்  சொன்னாராம் . இவர்  அதற்கு  சிறந்த  உதாரணம் 


 நாயகனாக  டேவிட்  டென்சிக்.  இவர்  மனைவியிடம்  சிடு  சிடு  என  விழுவதும்  புதுத்தோழியிடம்  சிரித்த  முகமாக  இருப்பதும்  அக்மார்க்  ஆண்  வர்க்கத்தின்  பிரதிபலிப்பு 


‘  குழந்தைகள்  மூவரும்  கொள்ளை  அழகு . அப்பாவிடம்  இருக்கும்போது    எங்களுக்கு  அம்மா  வேண்டும்  என  அழுவதும்  , அம்மாவிடம்  இருக்கும்போது  அப்பா  எப்போ  வருவார்? என  கேட்பதும்  உருக்கம் 


பெரும்பாலான  தம்பதிகள்  பல  கருத்து  வேற்றுமைகளையும்  தாண்டி  ஒற்றுமையாக  இருக்கக்கார்ணம்  குழ்ந்தைக்ள்தான், அதனால்தான்  அந்தக்காலத்தில்  பெரியோர்கள்  திருமணம்  ஆனதும்  குழந்தைப்பிறப்பைத்தள்ளிப்போடக்கூடாது  என்பார்கள் .  அட்லீஸ்ட்  குழந்தைக்காகவாவது  தம்பதிகள்  ஒற்றுமை  காக்கட்டும்  என்பதால்


இது  ஜனரஞ்சகமான  படம்  அல்ல . பிரிந்து  வாழும்  தம்பதிகள்  , பிரிய  நினைக்கும்  தம்பதிகள்  மட்டும்  பார்க்க  வேண்டிய  படம் 


படத்தின்  இயக்குநர்  செய்த  புத்திசாலித்தனமான  ஒரு  விஷயம்   நாயகன்  , நாயகி  இருவரும்  பாதை  மாறிப்போவதை ,  வேறு  துணையுடன்  இருப்பதை  நேரடியான  காட்சியாகக்காட்டாமல் , வசனமாக  சொல்லாமல்  சூசகமாக  உண்ர்த்தியது 


ரசித்த  வசனங்கள்


1  ஆதாமும்  ஏவாளும்னு  படிக்கச்சொன்னா  இவன்  அலெக்சும்    ஏவாளும்னு  ப்டிக்கிறான்

\

  அடடே, இது  கூட  நல்லாருக்கே?  அலெக்ஸ்  ஏவாள்  , மேட்சுக்கு  மேட்ச் 


2  அப்பா  நீங்க  படிக்கும்போது  நான்  எப்பவாவது  தொந்தரவு  பண்ணி  இருக்கேனா? ஆனா  நான்  படிக்கும்போது  மட்டும்  சாப்பிட  வா  அப்டினு  கூப்பிட்டு  தொந்த்ரவு  பண்றீங்களே? இது  ஏன் ? 


3  நாம  வாழ்றதுக்கு  குறுகிய  காலம்  தான்  இருக்கு , ஆனா  அதுக்குள்ள  நம்ம  குறுகிய  எண்ணங்களை   வெளிக்காட்டிடறோம் 


சபாஷ்  டைரக்டர் 


1  ஒரு  மணி  நேரத்தில்  முடிக்க   வேண்டிய  கதையை  முப்பரிமாணம்கற  பேர்ல  ரெண்டு  மணி  நேரம்  இழுத்தது 

2  நாயகி  , நாயகியின்  தோழர் , தோழி , , நாயகனின்  தோழி  நால்வர்  தவிர  அனைத்து  முகங்களும்  அன்  சகிக்கபிளாக  இருந்தாலும்  படத்தைப்பார்க்க  வைத்தது 


3  மழலைகளின்  கொஞ்சல்  நடிப்பு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1 தன்  கணவனின்  தோழி  பக்கத்து  வீட்டு  ஆண்ட்டிதான்  என்பதை  அறிந்து  நாயகி  அடையும் வியப்பைப்பார்த்து  நமக்குதான்  வியப்பு  ஏற்படுகிறது .  வேற  யாரை  கரெக்ட்  பண்ணிடப்போறானுங்க ?   அதுக்கு  ஏன்  அவ்ளோ  ஜெர்க்  கொடுக்கனும் ?


2  பக்கத்து  வீட்டு  ஆண்ட்டி  நாயகனின்  மனைவியை  அதுவரை  பார்த்ததே  இல்லை . அப்போதான்  பார்க்கிறார்  என்பதும்   நம்பும்படி  இல்லை 

Diorama
GenreDramaKomedi
RegissörTuva Novotny
ProducentRené Ezra
Eva Åkergren
ManusTuva Novotny
SkådespelarePia Tjelta
David Dencik
Sverrir Gudnason
Claes Bang
Gustav Lindh
FotografSophie Winqvist
KlippningCarla Luffe
ProduktionsbolagNordisk Film
SVT
Film i Skåne
DistributionNordisk Film
Premiär
Speltid98 minuter
LandSverige Sverige
SpråkSvenska
Norska
Danska
IMDb SFDb