Thursday, November 03, 2022

வானம்பாடி (1963) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )


 பரங்கிமலை  ஜோதி  தியேட்டர்  புகழ்  பெறும் முன்பே  நடிகை  ஜோதி  லட்சுமி  செம  ஹிட்  ஆனார் . அவர்  அறிமுகம்  ஆன  முதல்  படம்  இது . டி  ஆர்  ராஜகுமாரி  நடித்த  கடைசிப்படம்  இதுவே . கவிஞர்  கண்ணதாசனின்  சொந்தப்படம் .  சேஸ்  பரிச்சய்  எனும்  வங்காள  மொழிப்படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது  .  கமர்ஷியலாக  ஹிட்  அடித்தது . இது  பின்னாளில்  ஹிந்தியிலும்  ரீமேக்  ஆனது . இதில்  இடம்பெற்ற   எட்டு  பாடல்க்ள்  அத்தனையும்  செம  ஹிட்டு . க்மல்ஹாசன்  இதில்  குழந்தை ந்ட்சத்திரமாக  வருகிறார்  என்பது  கூடுதல்  தகவல் 


 ஹீரோ  டூயல்  ரோலில்  நடிப்பது  பெரிய  அதிசயம்  இல்லை . மீசை  வெச்சா  இந்திரன் , மீசை  இல்லைன்னா  சந்திரன்  அப்டினு  ஈசியா  சமாளிக்கலாம், ஆனா  நாயகி  டூயல்  ரோலில்  நடிக்கும்போது  நடிப்பில்  வெரைட்டி  காட்டிதான்  கவர  முடியும்.1973ல்  ஜெ  இரு  வேட்ங்களில்  வந்தாளே  மகராசி  யில்  நடித்தார் ., 1974ல்  ரிலீஸ்  ஆன  வாணி  ராணி  யில்  வாணி  ஸ்ரீ  இரு  வேடங்களில்  நடித்திருந்தார்  (  இது  ஹிந்திப்படமான  சீதா  அவுர்  கீதா  படத்தின்  ரீமேக் ) 1995ல்  ரிலீஸ்  ஆன  ராணி  மகாராணி  படத்தில்  ராதிகா  மாறுபட்ட  இருவித  பரிமாணம்  காட்டி  இருந்தார் . 1992ல் ரிலீஸ்  ஆன  காவியத்தலைவன்ல  பானுப்ரியா  டபுள்  ரோல் ல  அசத்தி  இருந்தார் 1995ல்  ரிலீஸ்  ஆன  நாடோடி  மன்னன்ல  மீனா  டபுள்  ரோல்  நல்லா  பண்ணி  இருந்தார்.1998ல  ஜீன்ஸ்  ல்  ஐஸ்வர்யா ராய்  கலக்கி  இருந்தாங்க ,2001;ல   ஷமீதா  பாண்டவர் பூமில  நல்லா  பண்ணி  இருந்தார்.2012ல்  ரிலீஸ்  ஆன  சாருலதா  எனும்  க்ரைம்  த்ரில்லர்ல  ப்ரியாமணி கலக்கி  இருந்தார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  வயதான  தம்பதி  ரயில்வே  டிராக்ல  தற்கொலை  முய்ற்சியில்  ஈடுபட்டிருந்த  ஒரு  பெண்ணை  தங்கள்  வீட்டுக்குக்கூட்டி  வருகின்றனர். அந்தப்பெண்  அவர்களது  காலம்  சென்ற  மகளின்  சாயலில்  இருப்பதால்  அவளை  வளர்ப்பு  மகளாக  வளர்க்க  முடிவு  எடுக்கின்றனர் 


இறந்து  போன  மகளின்  காத்லன்  3  வருடங்களுக்குப்பின்   ஃபாரீனில்  இருந்து  தாயகம்  திரும்புகிறான்.   அவனுக்கு  தன்  காதலி  இறந்த  விஷயம்  தெரியாது .  காதலியின்  முக  சாயலில்    இருக்கும்  பெண்ணைப்பார்க்கிறான்


 இருவருக்கும்  திருமணம்  நடைபெற  இருக்கும்போது  அவளது  முன்னாள்  கணவன்  என  சொல்லிக்கொண்டு  திருமண  புகைப்பட  ஆல்ப  ஆதாரத்துடன்  ஒருவன்  வருகிறான் 


 கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . க்ளைமாக்சில்  ஒவ்வொரு  முடிச்சாக  அவிழ்கிறது 


சுமதி , ராணி , உமா ,  கவுசல்யா  தேவி    என  நான்கு  விதமான  தோற்றங்களில்  தேவிகா . ஈரோடு  மாவட்ட  கனகா  ரசிகர்  மன்றம்  சார்பாக  இவருக்கு  ஒரு  பூங்கொத்து . பிரமாதமான  நடிப்பு . எனக்குத்தெரிந்து  வேறு  எந்தத்தமிழ்  நடிகையும்  நான்கு  கதாபாத்திரங்களில்  ஒரு தமிழ் படத்தில்  நடித்ததில்லை  . இது  ஆள்  மாறாட்டக்கேசா?  ட்வின்ஸ்  சகோதரிகளா? என்பதை  படம்  பார்த்துத்தெரிந்து  கொள்ளுங்கள் . சொன்னா  சஸ்பென்ஸ்  போயிடும் 


  நாயகனாக  எஸ் எஸ் ஆர்.  எம் ஜி ஆர் , சிவாஜி  ,  ஜெமினி  இவர்களிடம்  இல்லாத  ஒரு  பிளஸ்  பாயிண்ட்  இவருக்கு  உண்டு  அது  கணீர்க்குரலில்  தெளிவான  தமிழ்  உச்சரிப்பு . ஆனா  காதல்  காட்சிகளில்  சுமார்தான். புரட்சிகரமான  வசனங்கள்  பேசும்  ரோல்  எனில்  கலக்கி  விடுவார் 

க்ளைமாக்சில்  வரும்  கோர்ட்  காட்சிகள்  அருமை . 


கே  வி  மகாதேவன்  இசையில்  கண்ணதாசன்  பாடல்  வரிகளில்  எல்லாப்பாடல்களுமே  செம  ஹிட்டு 




செம  ஹிட்டு  பாட்டு  லிஸ்ட் 


1  கங்கைக்கரைத்தோட்டம்  கன்னிப்பெண்கள்  கூட்டம்  கண்ணன்  நடுவினிலே  (  தேவிகா  ஓப்பனிங்  சாங் ) 


2  ஏட்டில்  எழுதி  வைத்தேன்  எழுதியதை  சொல்லி  வைத்தேன் , கேட்டவளைக்காணோமடா  ( எஸ் எஸ்  ஆர்  ஃபிளாஸ்பேக்  சாங் ) 


3   ஆண்  கவியை  வெல்ல  வந்த  பெண்  கவியே  வருக ,  (  ஹீரோ -ஹிரோயின்  போட்டி  ;பாட்டு ) 


4  நில்  கவனி  புறப்படு ( பிக்னிக்  கலாட்டா  பாட்டு ) 


5  கடவுள்  மனிதனாகப்பிறக்க  வேண்டும் அவன்  காதலித்து  வேதனையில்  வாட  வேண்டும்  (  ஹீரோ  சோகப்பாட்டு)


6  யாரடி  வந்தார்? என்னடி  சொன்னார்? ஏனடி  இந்த  உல்லாசம்?  (  கிளப்  டான்ஸ் ) 


7   ஊமைப்பெண்  ஒரு  கனா  க்ண்டாள்  (  சோகப்பாட்டு) 


8 தூக்கணாங்குருவிக்கூடு    ( க்ளைமாக்ஸ்  சாங்) 





  ரசித்த  வசனங்கள் 


1 கடன்  வாங்குனவன்  சம்சாரம்  மாதிரியா  பேசறாங்க ? கடன்  கொடுத்தவன்  சம்சாரம்  மாதிரி  இல்ல  பேசறாங்க ?


  விடுங்க , இந்தக்காலத்துல  கடன்  கொடுத்தவங்க  ரோஷமே  படக்கூடாது 


2  ஒரு மனுசனுக்கு  படிப்பு  அதிகம்  தேவை  இல்லை  அவனுக்கு  மூளை  புத்திசாலித்தனம்  இருந்தாப்போதும்னு  ஒருத்தர்  சொன்னாரு  அதனால  நான்   அஞ்சாங்கிளாசோட  படிப்பை  நிறுத்திட்டேன் 


3 கோழைக்கு  வாழ்வில்லை  , வீரனுக்கு  தோல்வி  இல்லை 


4 சமையல்  ஒரு  கை  தேர்ந்த  கலை , அதில்  கரை  கண்ட  பெண்களை  ஆண்கள்  விடுவதில்லை


5  புத்தகம்  எழுதுனவங்களை  விட  அதுக்கு  முன்னுரை  எழுதறவங்களுக்கு  மூளை  அதிகம்  தேவை


6b திடீர்னு  அரேஞ்ச்  பண்ணாதான்  அது  பிக்னிக், நிதானமா  அரேஞ்ச்  ப்ண்ணினா  அது  கல்யாணம் 


6  ஒருத்தரை  ஒருத்தர்  புரிஞ்சுக்கும்  வரை  தான்  பேச்சு ., அதுக்குப்பின்  பேச்சுக்கு  வேலை  இல்லை 


7   நாணம்  அது  பெண்களின்  உடன்  பிறப்பு 


8   புருசன்  மனைவியை  நிராகரிக்கலாம், ஆனா  மனைவி  புருசனை  நிராகரிச்சதா  நம்ம  நாட்டின்  வரலாற்றில்  இல்லை 


9  நிரூபிக்கப்பட்ட  பொய்கள்  என்றும்  உண்மை  ஆகிடாது

   நிரூபிக்கபடாத  உண்மைகள்  என்றும்  பொய்  ஆகி  டாது 


10  நீங்க  என்னைக்காதலிச்சது  உண்மைன்னா  என்  தன்மை  என்னுன்னு  நான்  விளக்காமலேயே  உங்களுக்குப்புரிஞ்சிருக்கும் 





சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பாடல்  காட்சிகளுக்காகவும்  , க்ளைமாக்ஸ்  சஸ்பெண்ஸ்  ட்விஸ்ட்க்காகவும்  படம்  பார்க்கலாம் 


வானம்பாடி
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புகே. முருகேசன்
கண்ணதாசன் (கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ்)
திரைக்கதைவலம்புரி சோமநாதன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
தேவிகா
ஆர். முத்துராமன்
ஷீலா
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
வெளியீடுமார்ச்சு 9, 1963
நீளம்4455 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
a


நடிகர்கதாபாத்திரம்
எஸ். எஸ். ராஜேந்திரன்சேகர்
தேவிகாஉமா/மீனா/சுமதி/கௌசல்யா தேவி
ஆர். முத்துராமன்மோகன்
ஷீலாசித்ரா
கமல்ஹாசன்ரவி
எஸ். வி. சகஸ்ரநாமம்தணிகாசலம்
டி. ஆர். இராமச்சந்திரன்நித்யானந்தம்
இரா. சு. மனோகர்கோபால்
ஜாவர் சீதாராமன்சிவகரன்
டி. ஆர். ராஜகுமாரிபார்வதி தணிகாசலம்
புஷ்பலதாகல்யாணி நித்யானந்தம்
வி. எஸ். ராகவன்சோமசுந்தரம்
ஒ.ஏ.கே. தேவர்ஜமீன்தார் மார்த்தாண்டம்
எம்.இ. மாதவன்சுந்தரமூர்த்தி
a


எண்.பாடல்பாடகர்கள்பாடலாசிரியர்நீளம் (நி:வி)
1"கங்கை கரை தோட்டம்"பி. சுசீலாகண்ணதாசன்5:46
2"ஊமை பெண் ஒரு"4:03
3"தூக்கனா குருவி கூடு"4:21
4"ஆண் கவியை வெல்ல"டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா5:30
5"கடவுள் மனிதனை"டி. எம். சௌந்தரராஜன்3:20
6"ஏட்டில் எழுதி வைத்தான்"டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி3:24
7"யாரடி வந்தார்"எல். ஆர். ஈஸ்வரி3:49
8"நில் கவனி புறப்படு"ஏ. எல். ராகவன் எல். ஆர். ஈஸ்வரி4:10

Wednesday, November 02, 2022

THANK YOU ( 2022) ( TELUGU) - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @அமேசான் பிரைம்


 நாம  எல்லாருமே  வாழ்க்கைல  முன்னுக்கு  வர  பலர்  உதவி  இருப்பாங்க , அது  நம்ம அம்மா , அப்பாவாக  இருக்கலாம், நண்பர்களாக , காதலியாக  இருக்கலாம்,  ஏன்? முன்  பின்  அறிமுகம்  இல்லாதவங்களாக்கூட  இருக்கலாம், அவங்களுக்கு  நாம  எப்பவாவது  நன்றி  சொல்லி  இருக்கோமா?  அல்லது  நன்றி  சொல்லனும்னு  நமக்கு  தோன்றி  இருக்கா?  தோன்றி இருக்கனும்,  நன்றி  சொல்லனும், இதுதான்  படத்தோட  ஒன்  லைன் 

உதயம் , இதயத்தை  திருடாதே  படங்கள்  மூலம்  நமக்கு அ றிமுகம்  ஆன  நாகார்ஜூனா  - அமலா  தம்பதியின்  வாரிசு  நாக  சைதன்யா ஹீரோவா  நடிச்ச  படம் 


2009 ல்  மாதவன்  ஹீரோவா  நடிச்ச  வித்தியாசமான  த்ரில்லர்  மூவியான  யாவரும்  நலம்  படத்தையும் 2016ல்  சூர்யா  நடித்த  24    எனும்  சயின்ஸ்  ஃபிக்சன்  மூவியை  இயக்கிய  விக்ரம்  குமார்  தான்  இந்தப்படத்தை  இயக்கி  இருக்கார்.  இவருக்கு  தமிழை  விட  தெலுங்குப்பட  உலகம்  தான்  நல்லா  செட்  ஆகி  இருக்கு போல . இதுவரை  6  தெலுங்குப்படம்   இயக்கி  இருக்கார் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஹீரோ  ஒரு  பெரிய  கம்பெனியின்  இயக்குநர். ஒரு  புதுமையான  ஆப்  டெவலப்  பண்ணி  பெரிய  ஆள்  ஆனவர்  ,  அவரது  பிஸ்னெஸ்க்கு  முதலீடு  செய்தது  ஹீரோயின்.  அவ்ளோ  பெரிய  பிராஜக்ட்க்கு  பண  உத்வி  செய்ய  அவரை  நம்பி  யாரும்  தர்லை .  ஹீரோயின்  தான்  தந்தாங்க .  அவரது  பிஸ்னெஸ்   சக்சஸ்  ஆனதும்   ஹீரோ  ஹீரோயின்  கிட்டே  தான்  வாங்குன  பணத்தை  திருப்பித்தந்தது  மட்டுமில்லாம  லவ்  பிரப்போஸ்  பண்றார்.  லிவ்விங்    டுகெதரா  இருவரும்  வாழ்றாங்க 


ஹீரோயினோட  மாமா  ஒரு  தொழில்  அதிபர் ,  ஒரு  கிரிட்டிக்கலான  சூழ்நிலைல   ஹீரோ  கிட்டே  உதவி  கேட்டு  வர்றார். ஆனா  ஹீரோ  அவரை  அவமானப்படுத்தி  அனுப்பிடறார்.  ஹீரோ  கஷ்டப்பட்ட  காலத்தில்  அவர்  உதவி  செய்யலைனு  அவருக்கு  கோபம்.  அந்த  அலட்சியத்தால்  மன  உளைச்சலுக்கு  ஆளான  ஹீரோயினின் மாமா  ஹார்ட்  அட்டாக்கில்  உயிர்  இழக்கிறார்


  இதனால  ஹீரோயினுக்கு  ஹீரோ  மேல  செம  கோபம.  பிரேக்கப்  பண்ணிக்கலாம்  அப்டிங்கறா. ஹீரோயின்  இப்போ  கர்ப்பமா  வேற  இருக்காங்க 

 ஹீரொயின்  பிரிந்து  சென்ற  பின்  ஹீரோ  பழைய  சம்பவங்களை  எல்லாம்  நினைச்சுப்பார்க்கிறார்


 ஸ்கூல்  லைஃப்ல  ஒரு  பெண்ணை  லவ்  ப்ண்றார்.  க்ளாஸ்ல  ஃபர்ஸ்ட்  ரேங்க்  வாங்குய்  அவர்   கடைசி  ரேங்க்  வாங்கும்  பெண்ணைக்காதலிக்கிறார். அந்தெப்ப்ண்ணும்  காதலிக்குது . ஒரு  சந்தர்[ப்பத்தில்  எதிர்கால  நலன்  கருதி  நம்ம  காதல்  வித்ட்ரா  பண்ணிடலாம்,  உன்  ஃபியூச்சரைப்பாருனு  அந்தப்பொண்ணு  சொல்லிடுது .அந்தப்பொண்ணு  மட்டும்  காதலை  ஏத்துக்கிட்டு  மேரேஜ்  பண்ணி  இருந்தா  ஹீரோ  இந்த  அளவு  பெரிய  ஆள்  ஆகி  இருக்க  முடியாது 


 அவரோட  காலேஜ்  லைஃப்ல  ஹீரோ  ஒரு  ஹாக்கி  பிளேயர் .,  போட்டி  டீம்ல  ஒருத்தன்  ஹீரோக்கு  வில்லனா  முளைக்கறான் ,  ரெண்டு பேரும்  எப்போப்பாரு  அடிசுக்கறாங்க , வில்லனோட  தங்கச்சி  இவங்க  ரெண்டு  பேரும்  அடிச்சுக்கக்கூடாதுனு  ஹீரோ  கைல  ராக்கி  கட்டி  விடறா



 இருந்தாலும்  இருவரும்  அடிதடி  சண்டைனுதான்  இருக்காங்க . ஒரு  கட்டத்தில்  ஹீரோ கையை  முறிச்சு  வில்லன்  ஏரியாவை  விட்டே  துரத்தறான்அவன்  மட்டும்  ஹீரோ  கையை  முறிக்காம  விட்டிருந்தா   ஹீரோ  ஹாக்கி  பிளேயர்  ஆகி  இருப்பார் , இவ்ளோ  பெரிய  தொழில்  அதிபர்  ஆகி  இருக்க  மாட்டார் 


 இந்த  இருவரையும்   சந்தித்து  ஹீரோ  நன்றி சொல்றார்


ஹீரோ  திருந்தியதால்  ஹீரோயின்  அவர்  கூட  சேர்ந்தாரா? இல்லையா?  என்பது  க்ளைமாக்ஸ் 


    ஹீரோவா  நாக  சைதன்யா   3  விதமான  கெட்டப்களளில்  வர்றார்.  தனுஷ்  மாதிரி  மீசை  எடுத்தா  ஸ்கூல்  ஸ்டூடண்ட் ,  தாடி  வெச்சா  காலேஜ்  ஸ்டூடண்ட் , கண்ணாடி  போட்டா  தொழில்  அதிபர்  என  3  கெட்டப்களில்  கச்சிதமா  நடிச்சிருக்கார் . ஈகோ  பிடிச்ச  திமிர்  பிடித்த  கேரக்டரில்  குட்  ஆக்டிங் 


 ஹீரோயினா ராசி  கண்ணா .   கண்ணியமான  அழகு  முகம் . கச்சிதமான  உருக்கமான  நடிப்பு 

ஸ்கூல் லவ்வராக  மாளவிகா  நாயர்    அம்சமான  அழகு 

   காலேஜ்  வில்லனாக   சாய்  சுசாந்த்  ரெட்டி  கச்சிதமான  வில்லத்தனம் 

  அவரது  தங்கையாக   அவிகா கோர்  மன,ம்  ஈர்க்கும்  நடிப்பு 


பி சி  ஸ்ரீராம்  ஒளிப்பதிவில்  கண்ணுக்குக்குளுமையான  காட்சிகள்  . லொக்கேஷன்கள்  அழகு   எஸ்  தமன்  இசையில்  பாடல்கள்   பிஜிஎம்  ஓக்கே 


  பின்  பாதி  திரைக்கதையில்  சுவராஸ்யம் குறைவு   யூகிக்க  வைக்கும்  காட்சிகள்  பலவீனம் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எதுவும்  இல்லமல்  எதிர்பார்த்தபடியே  தான்  முடிகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  ப்டத்துல  கதை  இருக்கோ  இல்லையோ  கண்ணுக்குக்குளிர்ச்சியான  லொக்கேஷன்ஸ் ,  ஒளிப்பதிவு  , மூன்று  அழகான  நாயகிகள்  இருக்காங்க . துக்காக  இயக்குநருக்கு  ஒரு  ஷொட்டு 


2  ஆல்ரெடி  ரிலீஸ்  ஆகி மெகா  ஹிட்  ஆன ஆட்டோ கிராஃப் , பிரேமம்  பட  சாயலில்  தான்  திரைக்கதை  அமைத்திருக்கோம்  என்பது  தெரியாமல்  பார்த்துக்கொண்ட  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  வாழ்க்கைல  உன்னைத்தவிர  வேற  யாரும்  உனக்கு  முக்கியம்  இல்லை 


2 ஆயிரம்  நண்பர்க:ள்  கற்றுத்தராத  ஒரு  பாடத்தை  ஒரே  ஒரு  எதிரி  கற்றுத்தருவான் 


3  நாம  வாழ்க்கைல  போராட  நமக்கே  கற்றுத்தருவது  நம்  எதிரிகள்  தான் 


4 நாம  என்ன  மத்தவங்களுக்குத்தர்றமோ  அதுதான்  நமக்குத்திரும்பக்கிடைக்கும். அதுதான்  கர்மா (  கர்ம வினை) 


5  மனிதன்  சுயநலமா  இருப்பதும்  தனக்காகவே  சிந்திப்பதும்  இயல்புதான்,  இப்போ  மாறி  இருக்கான், அதுதான்  முக்கியம் 


6   வாழ்க்கைல  நாம  உயர  பலர்  காரணமா  இருந்திருக்கலாம். அவங்களை  சந்தித்து  ஒரு  நன்றி  சொல்லி  கவுரப்படுத்தினா  நம்ம  வாழ்க்கை  மேலும்  அழகாகும் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பொதுவா  ஆண்கள்  அவங்க  வாழ்க்கைல  யாரையும்  தங்கையா  ஏத்துக்கறதில்லை.  ரத்த சம்பந்தம்  இல்லாத  ஒரு பெண்ணை  தங்கையா  ஏத்துக்கறதும்  தங்கச்சி  தங்கச்சி  நான்  உன்  கட்சி  என்பதெல்லாம்  டி  ராஜேந்தர்  காலத்தோட  முடிஞ்சிடுச்சு . அதனால  நாயகனின்  காலேஜ்  போர்சனில்  வரும்  ரெடிமேடு  உடனடி  தங்கச்சி  ஒட்டவில்லை 


2   ப்டத்தோட  முதல்  40  நிமிசம்  செம  ஸ்பீடாப்போகுது , ஃபிளாஸ்பேக்கில்  வரும்  அந்த  ஸ்கூல்  போர்சன்  15  நிமிசம்  தான் . காலேஜ்  போர்சந்தான்  இழுவையோ இழுவை . இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


3  லிவ்விங்  டுகெதரா  வாழ்ந்து  கர்ப்பம்  ஆன  நாயகி  நாயகனை  சேர்வார்  என்ப்து  எல்லாருக்கும்  தெரிந்த  விஷயம்  தான் . அதை  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டாக  காட்டி  இருப்பது  போர் 




சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முழுப்படமும்  பார்க்க  பொறுமை  வேண்டும் . மெயின்  கதை . ஸ்கூல்  போர்சன்  மட்டும்  பார்க்கறவங்க  முதல்  ஒன்றே  கால்  மணி  நேரம்  மட்டும்  பார்க்கலாம்  ரேட்டிங் 2. 25 / 5 



Thank You
Thank You (2021 film).jpg
Theatrical release poster
Directed byVikram Kumar
Screenplay byVikram Kumar
Story byB. V. S. Ravi
Dialogues by
  • Venkat D. Pati
  • Mithun Chaitanya
Produced byDil Raju
Sirish
Starring
CinematographyP. C. Sreeram
Edited byNaveen Nooli
Music byThaman S
Production
company
Release date
  • 22 July 2022
Running time
129 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹40 crore[2]
Box officeest.₹8.95 crore[3]

Tuesday, November 01, 2022

Indian Predator: Murder in a Courtroom(2022) (ஹிந்தி) - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் ட்ராமா- டாக்குமெண்ட்ரி) @ நெட் ஃபிளிக்ஸ்


2004ம்  வருடம்,  மத்தியப்பிரதேசம்  - நாக்பூர் கஸ்தூரிபா  நகர் -கோர்ட்  வளாகத்தில்  அக்கு  யாதவ்  என்ற  ரவுடி  பல  பாலியல்  வன்  கொடுமை  வழக்குகளில்  கைதானவர்   200 க்கும்  மேற்பட்ட  பொதுமக்களால்  கொடூரமாகத்தாக்கப்பட்டு  கொலை  செய்யப்படுகிறார் . அவரைப்பற்றிய  டாக்குமெண்ட்டரி  படம்  தான்  இது . மொத்தம்  3  எப்பிசோடுகள் . ஒவ்வொன்றும்  சராசரியாக  55  நிமிடங்கள் , ஆக  மொத்தம்     ரெண்டே  முக்கால்  மணி  நேரம்/,நம்ம  ஊரு  ஆட்டோசங்கர்  கதை  மாதிரி 

ஸ்பாய்லர்  அலெர்ட்

அக்கு  யாதவ்     எனப்படும்  பரத்  காளிச்சரண்  உயர்  ஜாதியைச்சேர்ந்தவன். கஸ்தூரிபா  நகர்  காலனியைச்சேர்ந்த  மக்கள்  ஸ்லம்  ஏரியா எனபப்டும்   பிற்படுத்தப்பட்ட  சமூகத்தை  சேர்ந்தவர்கள் .  ஆரம்பத்தில்  சின்ன  சின்ன  ரவுடித்தனம்  பண்ணிட்டு  இருந்தவன்  திடீர்னு  பெண்களை  பாலியல்  வன்கொடுமை  செய்யத்தொடங்கினான்.  பிற்படுத்தப்பட்ட  சமூகம்  என்பதால்  வெளில  சொல்லவும்  முடியாம  தவித்தார்கள் . இதை  தனக்கு  சாதகமா  பய்னபடுத்திகிட்ட  அக்கு  யாதவ்  தொடர்ந்து  பல  பெண்களை  சீரழிக்க  ஆரம்பித்தான் 


ஆஷா  யாதவ்  எனும்  பெண் தான்  முதன் முதலாக  போலீஸ்  கேஸ்  ஃபைல்  பண்ணிய  நபர். ஆனா  போலீஸ்  அந்தப்பெண்  சம்பந்தமான  தகவல்களை  அக்கு யாதவுக்கு போட்டுக்குடுத்து  விட்டது 


ஆஷா  யதவ்  வீட்டுக்குப்போன  அக்கு யாதவ்  கதவைத்தட்டி  ஆஷாவை  வெளியே  இழுத்து  வந்து  நடு  ரோட்டில்  கொலை  செய்தான். இது  போல்  செய்யக்காரணம்  அப்பதான்  மக்களுக்கு  பயம்  வரும், தன்னைப்பார்த்து  கிலி  வரும்  என  நினைத்தான் 


 பொதுவா  தன்னை  யாராவது  எதிர்த்தா  அவங்க  வீட்டு  ஆண்களைக்கொலை  செய்வான்  என்ற  பயத்தை  விட  எதிர்ப்பவர்  வீட்டுப்பெண்களை  பலாத்காரம்  செய்வான்  என்ற  பயத்தை  விதைத்தான்


எதிர்ப்பவர்களைக்கொன்றால்  போஸ்ட்மார்ட்டம்  பண்ற  டாக்டர்களுக்குப்பணம்  தரனும் , போலீஸ்க்கு  பணம்  தரனும்  அதுக்குப்பதிலா  எதிரிகளின்  மனதில்  பயத்தை  விதைத்தால்  போதும்  என  அவன்  நினைத்தான் 


அவன்  10  வயசுப்பெண்ணையும்  ( சிறுமி)  பாலியல்  வன்கொடுமை  செய்திருக்கான்.  அன்றுதான்  திருமணம்  ஆன  மணப்பெண்ணையும்  தன்  கூட்டாளிகளுடன்  சேர்ந்து  பாலியல்  வன்  கொடுமை  செய்திருக்கான் 


ஆஷா  யாதவைத்தொடர்ந்து  தைரியமாக  போலீசில்  புகார்  கொடுத்தவர்  உமா  நாராயணி  எனும்  25  வய்சுப்பெண்  கால்  செ4ண்ட்டர்ல  வேலை  பார்ப்பவர் . அவருக்குப்பக்கத்து  வீடான ரத்னா  என்ற  பெண்ணை  அக்கு  யாதவ்  பயமுறுத்தியதை  போலீசில்  புகார்  கொடுக்கிறார் 


இந்தத்தகவலை  வழக்கம்  போல  போலீஸ்  அக்கு  யாதவ்க்கு  தகவல்  சொல்ல  அவன்  தன்  அடியாட்கள்  40 பேருடன்   உமா  வீட்டுக்கு  வந்து  தகறாரு  பண்றான்.


 உ,மா  வீட்டை  விட்டு  வெளீல  வர்லை, இவன்  மிரட்றான் ,  வெளீல  வர்லைன்னா  என்னென்ன  பண்ணுவேன்னு    பட்டியல்  போட்டு  மிரட்றான். கூட்டாளிகளுடன்  சேர்ந்து  கதவை  உடைக்க  முற்பட்டபோது  உமா  வீட்டில்  உள்ள  பீரோ  உட்பட  பல  பொருட்களை  கதவுக்கு  முட்டுக்கொடுக்கிறார்


  பின்   கிச்சன்  ரூம்  போய் கேஸ்  சிலிண்டரை  ஓப்பன்  செய்து  இனி  யாராவது  உள்ளே  வர  முயற்சித்தால்  எல்லாரையும்  காலி  செஞ்சிடுவேன்  கேஸ்  சிலிண்டர்  வெடிக்கும்  என  மிரட்டுகிறார் 


இதனால்  பயந்து  போன  அக்குயாதவ்  தன்  ஆட்களுடன்  எஸ்  ஆகிறான் .  உமா   தன்  பிரதர்  இன்  லா  ஒரு  லாயர்  என்பதால்  அவர்  உதவியுடன்  டிஜிபி  இடம்  புகார்  தருகிறார்.


  வக்கீல்  விலாஸ்  மீது  அக்கு  யாதவ்க்கு  ஆல்ரெடி  ஒரு  முன்  விரோதம்  உண்டு 


கஸ்தூரிபா  நகர  மக்கள்  கூடி அக்கு  யாதவ்  வீட்டை  எரிக்கறாங்க . இத்னால்  பயந்து  போன  அக்கு  யாதவ்  கோர்ட்டில்  சரண்டர்   ஆகிறான் 


அது  கேள்விப்பட்ட  மக்கள்  கிட்டத்தட்ட  400  பேர்  கோர்ட்  வளாகத்தில்  கூடுது  . அங்கே  அக்கு யாதவ்  மக்களைப்பார்த்து  நான்  ஜாமீனில்  வந்து  கஸ்தூரிபா  நகர  பெண்கள்  அனைவரையும்  வசமா  கவனிப்பேன்  என  பகிரங்க  மிரட்டல்  விடுக்கிறான்


2004  ஆகஸ்ட்  14   கோர்ட்டில்   பெயில்  ஆர்டருக்காக  கேஸ்  ந்டக்குது  அக்கு  யாதவ்  ஆஜர்  ஆகிறான்  என்பதைக்கேள்விப்பட்ட  பெண்கள்  கிட்டத்தட்ட  200  பேர்  மிளகாய்ப்பொடி  , செருப்பு , உலக்கை  கத்தி  என  பல  ஆயுதங்களுடன்  கோர்ட்டில்  காத்திருக்காங்க 


கோர்ட்டுக்கு  வந்த  அக்குயாதவ்  அங்கே  வாசலில்  நின்ற  பெண்களில்  ஒருவரைப்பார்த்து  ஆல்ரெடி  உன்னை  ரேப்  பண்ணி  இருக்கேன் , வெளில  வந்து  மீண்டும்  உன்னை  ரேப்  பண்ணி  கொலை  செய்வேன்  என  மிரட்டுகிறான்


 உடனே  அந்தப்பெண்  உன்னை  சும்மா  விட்டா  என்னைப்போல  பல  பெண்களுக்கு  ஆபத்து  ஒண்ணு  நீ  உயிரோட  இருக்கனும்  இல்லை  நான்  உயிரோட  இருக்கனும்  என  சொல்லி  செருப்பால்  அடிக்கிறார்


கத்தியால்  குத்துகிறார் . இதைப்பார்த்து  மற்ற  பெண்களும்  ஆவேசம்  அடைந்து  அக்கு  யாதவை  தாக்க  ஆரம்பிக்கறாங்க .  அவனின்  ஆண்  உறுப்பை  கட்  பண்றாங்க  . ரத்த  வெள்ளத்தில்  மிதக்கிறான்


இதைப்பார்த்து  என்ன  பண்றதுன்னே  தெரியாம  போலீசும்  கோர்ட்  அதிகாரிகளும்  ஓடறாங்க . ஆனா  மக்களைப்பொறுத்தவரை  அசுரன்  ஒழிந்தான் என  தீபாவளி  கொண்டாடறாங்க 


  பின்  போலீஸ்  22  பெண்களை  கைது  செய்தது  .  கோர்ட்  அழைத்து  வரப்படும்போது  400  பெண்கள்  கூடி நாங்களும் தான்  கொலை  செய்தோம்  எங்களையும்  கைது  செய்ங்க  என  போராடுகிறார்கள் 


 சாட்சி  இல்லாததால்  கொலைக்கு  நிரூபணம்  இல்லை  என  அந்த  22  பெண்களையும்  விடுதலை  செய்கிறார்  ஜட்ஜ் 


இப்போ   நான்  மேலே  சொன்னவை  எல்லாம்  இந்த  வழக்கு  பற்றிய  முக்கியத்தகவல்கள் பட  விமர்சனம்  அல்ல .  கேஸ்  ஃபைலைப்படிச்சு  தெரிஞ்சுக்கிட்டது 


 இனி  படத்தைப்பற்றிப்பர்ப்போம்.  ஆட்டோ சங்கர்  மாதிரி  இந்தப்படம்    ஏன்  உருவாகலைன்னா  அதுல  ஆட்டோ  சங்கர்  சுய  சரிதை  போல்  எழுதிட்டான். பல  விபரங்க்ள்  கிடைத்தது 


 ஆனால்  இதில்  அக்குயாதவ்  தரப்பு  ஸ்டேட்மெண்ட்  கிடைக்கலை  . பாதிக்கப்பட்டவ்ர்கள்  கூறியவை  மட்டுமே  டாக்குமெண்ட்ரி  ஸ்டைலில்  பதிவு  செய்யப்பட்டிருக்கு 


 முதல்  எபிசோடு  முடிந்ததுமே  நமக்கு  போர்  அடிக்க  ஆரம்பிக்கறது .வடிவேலு  சங்கிலி  முருகன்  காமெடி  மாதிரி    திரும்ப  திரும்ப  பேசறே    நீ  என  கேட்கத்தோணுது . சொன்ன  வாக்கு  மூலங்களே  வேறு  வார்த்தைகளில்  ரிபீட்  ஆவது  பின்னடைவு 


ஏற்கனவே  நம்ம  ஆடியன்ஸ்   கவுதம்  மேனன்  வாய்ஸ்  ஓவர்ல  கதை  சொல்லும்போதே  கலாய்த்தவர்கள்  இதிலும்   அப்படிக்கலாய்க்க  வாய்ப்புண்டு


 இதை  சுவராஸ்யமான  திரைக்கதையில்  படம்  ஆக்கி  இருக்கலாம், ஏனோ  போர்  அடிக்கும்  டாக்குமெண்ட்ரி  ஆக்கி  விட்டார்கள் 


    அடிப்படையில்  இது  கொடூரமானவனின்  கதை  என்றாலும்  காட்சி  ரிதியாக  அடல்ட்  கண்ட்டெண்ட்  அலல்து  வன்முறைக்காட்சிகள்  இல்லை  , தைரியமாகப்பார்க்கலாம் 


 ரசித்த  வசனங்கள் 


1   ஜெயிலுக்குப்போனா  ஒண்ணு  திருந்துவான்  அல்லது  மேலும்  கெட்டவன்  ஆவான்

2 ஒரு  பிரச்சனையை  அணுகுனவங்களுக்கு  மட்டும்தான்  அதுல  என்ன  நடந்ததுனு  தெரியும்


3  இங்கே பெண்கள்  மட்டும்தான்  அவமானத்தை  கடைசி  வரை  சுமந்துட்டே  இருக்காங்க 


4    அவன்  கற்பைத்திருடுபவன்  என  அழைக்கப்பட்டான்


5  ரத்த  வாசனை  ஒரு  புலிக்கு  ப்ழக்கம்  ஆகிட்டா  அதுக்கு  அது  அடிக்ட்  ஆகிடும்னு  சொல்வாங்க  அது  போல  இவன்  பெண்  வாசனைக்கு  அடிமை  ஆகிட்டான் 

6  காயம்  பட்ட  இதயத்துக்குத்தான்  அதோட  வலி  தெரியும்


7  சோகம்  என்பது  ஒரு  முடிச்சு  மாதிரி  அதை  அவிழ்க்கவும்  முடியாது , சரி  செய்யவும்  முடியாது . அனுபவிச்சுதான்  ஆகனும் 


இந்தக்கேசில்  பல  மர்மங்களும்  இருக்கின்றன.  இது  இரண்டு  மாஃபியா  கேங்க்  வார்  எனவும்.  ஜாதி  ரீதியான  பழி  வாங்கல்  எனவும்  அரசியல்  ஆதாயத்துக்காக  சிலர்  தூண்டி  செய்த  கொலை  எனவும்  ஊர்  மக்கள்  பேசிக்கொள்கிறார்கள்.


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   அக்கு  யாதவ்   லோயர்  மிடில்  கிளாஸ்  மாதிரிதான்  தெரியறான் .   கார்  , பைக்  கூட  இல்லை  சைக்கிள்  மற்றும்  லூனா தான்  . ஆனா  200  பெண்களை  ரேப்  பண்ணி  இருக்கான்,  போலீசை  கவனிக்கிறான்  எனில்  அவனுக்கு  ஏது  அவ்ளோ  காசு ?   சரசரியா  100  கேஸ் க்கு  தலா  ஒரு  லட்சம்  லஞ்சம்னு  வெச்சுக்கிட்டாக்கூட  ஒரு  கோடி  ரூபா  தேவைப்பட்டிருக்குமே? அவன்  சிங்கிள்  டீக்கே  சிங்கி  அடிக்கிறவன்  மாதிரி  தான்  இருக்கான் 


2 அத்தனை  பெண்கள்  ரேப்  செய்யப்பட்டும்  ஒருவர்  கூடவா  மீடியா  விடம்  போகலை? போலீஸ்கிட்டே  போனாதான்  வேலைக்காகாது , மீடியாவிடம்  போய்  இருக்கலாமே? 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்த  டாக்குமெண்ட்ரி  ப்டம்  நீங்கள்  எதிர்பார்ப்பது  போல  சுவராஸ்யமாய்  இருக்காது . நான்  மேலே  சொன்ன  தகவல்கள்  எல்லாம்  கேஸ்  ஃபைலை  ஸ்டடி  செய்து உருவாக்கியது . திரைக்கதையில்  இதெல்லாம்  இருக்காது   ட்ரையாகத்தான்  இருக்கும் .  ரேட்டிங்  2 / 5 


டிஸ்கி -  நெட்ஃபிளிக்ஸ்  ஓனர்  புத்திசாலி  படத்தோட  டைட்டிலையே  மாத்திட்டார். அதை  இப்போதான்  கவனிச்சேன் 


ndian Predator: The Diary of a Serial Killer
GenreTrue crime docuseries
Written bySudeep Nigam
Directed byDheeraj Jindal
Creative directorMoumita Sen
Music byIshaan Chabbra
Country of originIndia
Original languageHindi
No. of seasons1
No. of episodes3
Production
Executive producerChandni Ahlawat Dabas
ProducerIndia Today
CinematographyPratham Mehta
EditorSourabh Prabhudesai
Running time37 – 44 minutes
Production companyIndia Today
DistributorNetflix
Release
Original networkNetflix
Picture formatHDTV
4K
Audio formatDolby Surround 7.1
Original releaseSeptember 7, 2022

Saturday, October 29, 2022

THE GOOD NURSE (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


இது  உண்மையில் நடந்த  சம்பவம். இதைப்படமாக்கும்போது எந்த  விதமான  எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்  டெக்ரேஷன்ஸ்  எதுவும்  செய்யாமல்  ராவாக தந்திருப்பதால்  இது  பரபரப்பான   சைக்கோ  க்ரைம்  த்ரில்லராக  இல்லாமல்  ஸ்லோவாக  செல்லும்  திரைக்கதை  அமைப்பில்  இருக்கும்,  சீரியல்  கில்லரின்  கதை என்றாலும்  ரத்தம்  தெறிக்கும்  கொடூரக்காட்சிகள்  எதுவும்  இல்லாமல்  குடும்பத்துடன்  பார்க்கத்தக்க  க்ரைம்  த்ரில்லராக  இருப்ப்து  சிறப்பு 


நாயகி  ஒரு  தனியார்  ஹாஸ்பிடலில்  நர்ஸ் . இவர்  ஒரு  சிங்கிள்  மதர்.  2  குழந்தைகள்  உண்டு . இவ்ரது  இதயத்தில்  ஒரு  பிரச்சனை  இருக்கு .  இவரது  ஃபேமிலி  டாக்டர்  கொடுக்கும்  அட்வைஸ்  உடனடியாக   ஹார்ட்    சர்ஜரி  செய்தே  ஆகனும்,  எந்த  நேரத்திலும்  இதயம்  தன்  துடிப்பை  நிறுத்தி  விடலாம் என  எச்சரிக்கிறார். ஆனால்  நாயகி  ஹாஸ்பிடலில்  இன்னும்  பர்மனெண்ட்  ஆகவில்லை ,  அதற்கு  இன்னும்  4  மாதங்கள்  உள்ள்து , அதற்குப்பின்தான்  இன்சூரன்ஸ்  கவர்  ஆகும்  என்பதால்  ஆப்ரேஷன்  செய்து  கொள்வதை  தள்ளிப்போடுகிறார்


இப்போ  அந்த  ஹாஸ்பிடலுக்கு  புதிதாக  ஒரு  நபர்     பணிக்கு  வருகிறார். அவருடன்  நாயகி  நெருக்கமாகபப்ழகுகிறார். ஆதரவில்லாத  தன்  குழந்தைகளுக்கும்  ஆபத்தில்  இருக்கும்  தனக்கும்  இந்த  புதிய  நபரின் நட்பு  ஒரு  நல்ல  வடிகேல் என  அவள்  நினைக்கிறாள் .ஆனால் அவரது  வருகைக்குப்பின்  ஹாஸ்பிடலில்  மரணங்கள்  எண்ணிக்கை  அதிகரிக்கிறது .  அந்தப்புதிய  நபரின்  நடவடிக்கையில்  நாயகிக்கு  சந்தேகம்  வருகிறது  , இதற்குப்பின்  இந்தக்கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  திரைகக்தை 


நாயகியாக ஜெசிகா  பிரமாதமான  நடிப்பு . அவரது  நடிப்புக்கு  கட்டியம்  கூறும் ஒரே  ஒரு  காட்சி  போதும். வீட்டில்  அவரது  குழந்தைகள்  வில்லனுடன்  பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்து  அதிர்ந்து  நீ  ரூமுக்குப்போ  என  அதட்டுவதும்  அதற்கு  வில்லன்  என்ன  ரீ ஆக்சன்  காட்டுவானோ  என  பதைபதைப்பதும்  பிரில்லியண்ட்  ஆக்டிங் 


வில்ல்னாக  எடிரெட்மனி  ஒரே  ஒரு  பார்வை  மூலமே  பயமுறுத்தும்  கேரக்டர். படத்தில்  ஒரு  சீனில்  கூட  இவர்  கொலை  செய்வதை  நேரடியான  காட்சியாக  காட்டி  இருக்க  மாட்டார்கள் . ரத்தம்  கூட   ஒரு  சொட்டு  சிந்துவது  இல்லை  , ஆனாலும்  பயம்  வரனும்., வர  வைத்திருக்கிறார். என்ன  ஒரு  அருமையான  நடிப்பு 


 புரியாத  புதிர்  படத்தில்  ஒரு  காட்சியில்  ரகுவரன்  ஐ நோ  ஐ நோ  என்ற  ஒரே  ஒரு  டயலாக்கை  37  முறை  வெவ்வேறு  பரிமாணத்தில்  சொல்வார் ( அதை  வைத்து  ஒரு  போட்டி  கூட  வைத்தார்கள் )  சிகப்பு  ரோஜாக்கள்  படத்தில்  ஸ்ரீ தேவி  கமலிடம்  என்ன  விஷயம் > என  கேட்கும்போது  சைக்கோத்தனமாக  நத்திங்  நத்திங்  என்பார்  பல  முறை . இந்த   இரண்டு  காட்சிகளுக்கும்  இணையான  ஒரு  காட்சி  இதில்  உண்டு.


 எதற்காக  இத்தனை   கொலைகளை  செய்தாய் ? என  போலீஸ்  விசார்ணை நடத்தும்போது   “ நான்  சொல்ல  மாட்டேன் “ என்ற  வ்ரியையே  திருப்பி  திருப்பி  சொல்லும்  காட்சி  அபாரம் 

நாயகி , வில்லன் , விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபிசர்ஸ்  இருவர் , குழந்தைகள்   இருவர்  என  ஆறு  முக்கியக்கதாபாத்திரங்களை  வைத்து  கண்ணியமான  க்ரைம்  டிராமாவை  உருவாக்கி  இருக்கிறார்கள் 

இசை  ஒளிப்பதிவு  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  குட் 


சபாஷ்  டைரக்டர்


1 க்ரைம் த்ரில்லர் , சைக்கோ  க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  வ்ழக்கமாக  இடம்  பெறும்  கொலை , கொள்ளை , ரத்தம் , பாலியல்  வன்முறை  என  எந்தவித  காட்சிகளும்  காட்டாமலேயே  க்ரைம்  டிராமா  எடுத்த  விதம்


2 வில்லனின்  கேரக்டர்  டிசைன். பொதுவா  வில்லன்  செய்யும்  அல்லது  செய்த  கொடூரத்தை  விஷூவலாக  கட்டித்தான்  அவனது   வில்லத்தனம்  நம்  மனதில்  பதிய  வைக்கப்படும், ஆனால்  இதில்   வில்லனின்  பார்வை , உடல்  மொழி  மூலமாகவே  பயத்தை ஏற்படுத்தியது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1 தொடர்ந்து  9  ஹாஸ்பிடலில்  பணி  புரிந்த  வில்லன்  ஒரு  இட்த்தை  விட்டு  இன்னொரு  இடம்  போகும்போது  இண்ட்டர்வ்யூவில்  இதற்கு  முன்  ப்ணி  புரிந்த  இடத்தில்  க்ளியரன்ஸ்  ச்ர்ட்டிஃபிகேட் கேட்டு  இருக்க  மாட்டாங்களா? அட்லீஸ்ட்  ஃபோன்  ப்ண்ணி  விசாரிக்க  மாட்டாங்களா? ஏன் எனில்  ஒவ்வொரு  ஹாஸ்பிடலில்  ப்ணி  ஆற்றும்போதும்    கொலைகளை  அரங்கேற்றி  இருக்கிறான்


2  வில்லன்  மீது  நாயகி  சந்தேகப்படுவது  தெரிந்தும்  ஒரு  பாதுகாப்புக்காக  நாயகியை  ஏன்  வில்லன்  கொலை  செய்யலை ? ஒரு  முயற்சி  கூட  நடக்கலை ?

3   வில்லனைக்கைது  செய்த  போலீஸ்  அவன்  உண்மையை  சொல்லவில்லை  என்றதும்  உண்மை  கண்டறியும்  சோதனைக்கு  ஏன்  உட்படுத்தலை ?


4  ஹோட்டலில்  வில்லனை  சந்திக்கும்  நாயகி அவனிடம்  வாக்கு  மூலம்  கேட்பது  நமக்கே  செயற்கையா  தோணும்போது  வில்லனுக்கு  டவுட்  வராம  இருக்குமா? சந்தேகம்  வந்து  அவன்  கோபத்துடன்  கிளம்பியதும்  ஒரு  அஞ்சு  நிமிசம்  கேப்  கூட  விடாம  போலீஸ்  அங்கே  ஆஜர்  ஆகி  நாயகியை  சந்திப்பது  மெச்சூரிட்டி இல்லாத  போலீஸ்த்னம். வில்லன்  மறைந்திருந்து  அதை கண்காணிக்க  மாட்டானா? 


5  வில்லனின்  வயதான  அம்மாவை  ஒரு  ஹாஸ்பிடலில்  சரியா  ட்ரீட்மெண்ட்  தராததால்  மர்ணிக்கிறாள். இதனால  மனநிலை  பாதிக்கப்ப்ட்ட  வில்லன்  நர்சாக  ஹஸ்பிடல்களில்  அதே  வயதுள்ள  பெண்களை  கொலை  செய்கிறான்,  அவங்க  எந்த  விதத்திலும்  அவனை  எதிர்க்கலை  என  காரணமும்  சொல்கிறான்,  இதெல்லா   நமக்கே  புரியும் போது  நாயகியும் , போலீசும்  காரணம்  தெரியாமல்  புல்ம்புவது  ஏன் ? 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  2  மணி   நேரம்  ஓடும்  படம் , பொறுமையா  பார்க்கனும்,  ஹாஸ்பிடலில்  ஐ சி  யூ  வில்  நோயாளிகளைக்காப்பாற்ற  போரடும்  காட்சிகள்  கொஞ்சம்  போர்  அடிக்கும் .  கமர்ஷியல்  எலிமெண்ட்ஸ் இல்லாத  க்ரைம்  ஸ்டோரி . ரேட்டிங்  3 / 5 

 The Good Nurse

Director – Tobias Lindholm

Cast – Jessica Chastain, Eddie Redmayne, Noah Emmerich, Nnamdi Asomugha

 இண்டியன் எக்ஸ்பிரஸ்  Rating – 4/5


Good nurse.jpg
Official release poster
Directed byTobias Lindholm
Screenplay byKrysty Wilson-Cairns
Based onThe Good Nurse: A True Story of Medicine, Madness, and Murder
by Charles Graeber
Produced by
Starring
CinematographyJody Lee Lipes
Edited byAdam Nielsen
Music byBiosphere
Production
companies
Distributed byNetflix
Release dates
  • September 11, 2022 (TIFF)
  • October 19, 2022 (United States)
  • October 26, 2022 (Netflix)
Running time
121 minutes[1]
CountryUnited States
LanguageEnglish











   

Friday, October 28, 2022

உழவன் மகன் (1987) (தமிழ்) - சினிமா விமர்சனம் @ ஜெ மூவிஸ்

 


காண்ட்டாரா / காந்தாரா  எனும்  கன்னடப்படத்தை  சிலாகிப்பவர்கள்  எல்லாருமே  ரேக்ளா   பற்றி  குறிப்பிடத்தவறுவதில்லை.35  வருடங்களுக்கு  முன்பே   தமிழ்  சினிமாவில்  பிரம்மாண்டமான  ரேக்ளா  ரேஸ்  இடம்பெற்றிருந்தது  என்பதைப்பதிவு  செய்கிறேன். தமிழ்  சினிமா  வரலாற்றிலேயே  இன்று வரை    பிரம்மாண்டமான  ரேக்ளா  ரேஸ்  இடம்  பெற்ற  படம் இதுதான்


  திரைப்படக்கல்லூரி  மாணவர்கள்  என்றாலே  பயந்தவர்கள்  உண்டு. முன்னணி  ஹீரோக்களில்   ஃபிலிம்  இன்ஸ்டிடியூட்  ஸ்டூடண்ட்சை  நம்பி  படம்  எடுக்க  முன்  வ்ந்தது   விஜயகாந்த்தான். கமல்  கூட  இந்த  விஷயத்தில் கோட்டை  விட்டு  விட்டார். தமிழ்  சினிமா வின்  போக்கையே  திசை  திருப்பிய  பிரம்மாண்டமான  ஊமை  விழிகள் வெற்றியைத்தொடர்ந்து  ஒரு  மசாலாப்ப்டத்தை  எம் ஜி  ஆர்  ஃபார்முலாவில்  தந்த  படம். மனோஜ் கியான்  இசையில்  பாடலக்ள்  எல்லாம்  பட்டாசா  வந்திருக்கும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 கதை  நடப்பது  ஒரு  கிராமத்தில் . ஹீரோ  ஒரு  விவசாயி . அப்பா  சொல்  தட்டாதவர் அதே  கிராமத்தைச்சேர்ந்த  ஒரு  ஏழைப்பெண்ணை  காதலிக்கிறார்.வீணாப்போன  வில்லன்  விட்ட  ஒரு  வெட்டி  சவாலில்  ஹீரோவின்  அப்பா  ஒரு  வார்த்தையை  விட்டுடறார். சண்டையில்  யார்  ஜெயிக்க்றாங்களோ  அவருக்குத்தான்  அந்த  ஊர்ப்பெரிய  மனுசன்  பொண்ணு.


 இந்தப்பந்தய  விவகாரம்  தெரியாம  ஹீரோ  வில்லன்  கூட  ஃபைட்  போட்டு  ஜெயிச்சுடறார். பொண்ணு கட்ற  மேட்டர்  வெளில  வந்ததும்  ஹீரோ  பதறிடறார். 


இந்த  இக்கட்டான  சூழலில்  ஹீரோவின்  அப்பா மர்மமான  முறையில்  கொலை  செய்யப்படுகிறார். தான்  காதலித்த  பெண்ணை  திரும்ணம்  செய்யத்தடையாக  இருந்ததால்  அப்பாவையே  கொலை  செய்தார்  என ஃபிரேம்  செய்யப்பட்டு  ஹீரோ  ஜெயிலுக்குப்போறார்


இனி யார்  உங்களைக்காப்பாத்துவா? என  ஹீரோவிடம்    கேட்கும்போது  அந்த  ஆண்டவன்  தான்  வரனும்  என  ஹீரோ  வானத்தைப்பார்க்க  ஷாட்டை  அங்கே  கட்  பண்ணி  இங்கே  ஓப்பன்  பண்ணினா  இன்னொரு  ஹீரோ  அதே  விஜயகாந்த் , டபுள்  ரோல் 


 அவரு     ஹீரோவின்  தம்பி.இந்த  விஷயம்  நமக்கே  இப்போதான்  தெரியும்கறதை  விட  முக்கியம், ஹீரோவுக்கே  அப்போதான்  தெரியும்., அவர்  எப்படி   ஹீரோவைக்காப்பாத்தறார், வில்லனை  மாட்ட  வைக்கிறார்  என்பதே  பின்  பாதி  திரைக்கதை 


எம்  ஜி ஆர்  மாதிரி  பாடல் காட்சிகளில்  கைகளை  ஆட்டி நடித்தவர்கள்  பலர்.  சத்யராஜ் , எஸ்  எஸ்  சந்திரன், என  பலர்  நடித்தாலும்  விஜயகாந்த்   எம்ஜியார்  போல  நடித்தது  அல்லது  நடிக்க  முய்ற்சித்தது  இந்தப்படத்தில்தான்.  கிராமத்தான், நகரத்தான்  என  2  வேட்ங்களில்  நல்லாப்பண்ணி  இருபபார்.  குறிப்பாக  அப்பாவை  நான்  கொல்லலை, என்னை  நம்புங்க  என  ஊர்  மக்களிடம்  மன்றாடும்  காட்சியில்  புதிய  குணச்சித்திர  விஜய்காந்த்தைப்பார்க்க  முடியும் 


இவருக்கு  ஜோடியாக  ராதிகா. இருவருக்கும்  பாடி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆனதுக்கு  முக்கியக்காரண்ம்  இருவரும்  நிஜ்  வாழ்விலும்  காதலித்ததால்தான் . இருவ்ரும்  ஜோடியாக  27  படங்களில்  நடிச்சிருக்காங்க. சைடு  வாக்கில்  வகிடு  எடுத்த  வரை  நடு  வகிடு  எடுத்து  ஹேர்  ஸ்டைலை  சிறைப்பறவை  முதல்  மாற்றியவர்  ராதிகாதான் .  . 


இன்னொரு  நாயகி  ராதா. சிட்டி  கேர்ள் .  அதிக  வாய்ப்பில்லை 


  அப்பாவாக  நம்பியார் . கச்சிதமான  நடிப்பு ,  ராதாவின்  அப்பாவாக  மலேசியா  வாசுதேவன் / வில்லனாக  ராதா  ரவி 


பாடலக்ள்  எல்லாம்  பட்டி  தொட்டி  எங்கும்  ஹிட் 


 1  பொன்னெல்  ஏரிக்கரையோரம் பொழுது  சாயுற (  ஓப்பனிங்  சாங்) 

2  செம்மறி  ஆடே  செம்மறி  ஆடே   செய்வது  சரியா  சொல்  (  ராதிகா  டூயட்) 

3  வரகுச்சம்பா  கிடைக்கலை  ஓ ஓ (  சோகப்பாட்டு)

4  மாலைக்கருக்கலிலே  மையிருட்டு  வேளையிலே .... உனை  தேடும்  தலைவன் ( டிஎம் எஸ் ) 


5   மத்தாப்பூ ( கலாய் )

6  சொல்லித்தரவா ம்ம்ம்ம்  ( கோக்கு  மாக்கு  தெம்மாங்கு )


சினிமாஸ்கோப்பில்  உருவான  இப்படம்  ஒளிப்பதிவில்  கோலோச்சிய  படம் . கதை  திரைக்கதை  வசனம்  பாடல்கள்  இணை  இசை  என  டைட்டிலில்  ஆபாவாணன்  பெயர்  வரும்போது  கைதட்டல்  தியேட்டரில்  ஒலித்ததை  மறக்க  முடியாது /. ஆர் அர்விந்த்ராஜ்தான்  இயக்கம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    செம்மறி  ஆடே  பாடல்  முழுக்க  செம்மறி  ஆட்டுக்கூட்டம்  இங்கிட்டும்  அங்கிட்டும்  போய்க்கிட்டு  இருக்கும்  பாடலின்  பல்லவியான  செம்மறி  ஆடே  வரி  வரும்போது  ம்ட்டும்  ஹீரோ  ஒரு  வெள்ளாட்டுக்குட்டியை  தோளில்  தூக்கி  வருவார். (  ஒரு  வேளை  செம்மறி  ஆடு வெயிட்  அதிகமா  இருந்திருக்கும்,  அல்லது  வெள்ளாடு  போல  சமர்த்தா  உக்காந்திருக்காம  மக்கர்  பண்ணி  இருக்கலாம்  ) 


2  ஜெயில்ல  ஒரு  கைதியைப்பார்க்கப்போனோம்னா  விசிட்டர்ஸ்  டைம்  ஒரு  அஞ்சு  நிமிசம்தான்  இதுல    ரெண்டு  பேரும்  ஊர்க்கதை  உலகக்கதை  எல்லாம்  அரைமணி  நேரம்  பேசிக்கிட்டு  இருப்பாங்க 


3  ஹீரோ  ராதாவை  முதன்  முதலா  அப்போதான்  பார்ப்பார்  , ஆனா  பாடல்  வரி  உன்னை  தினம்  தேடும்  தலைவன்னு  வரும்,  சிச்சுவேசன்  சொல்லும்போது  மாத்தி  சொல்லிட்டாங்க  போல 


4   செம்மறி  ஆடே  பாடலில்  சரணத்தில்  செவத்த  பொண்ணு  இவத்த  நின்னு  என  வரி  வ்ரும்  நிஜ  வாழ்விலும்  பட்த்தில்  வ்ரும்  கேர்க்டரும்  மாநிறம்  தான் 


5  டூயல்  ரோல்  பட்ங்களில்  இன்னொருவரை  மாறுபட்ட  தோற்றத்தில்  காட்ட  ஹேர்ஸ்டைல்   அல்லது மச்சம்  போதும்  , கண்ணில்  காண்டாக்ட்  லென்ஸ்  போட்டு  காட்டுனா  அந்த  கேரக்டரின்  அம்மாவுக்கும்  அதே  லென்ஸ்  போட்டுக்காட்டனும் 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - இப்போது  பார்த்தாலும்  டைம்   பாஸ்  மூவியாக  இருக்கும்  . பாடல்  காட்சிகளுக்ககவே  ப்டம்  பார்க்கலாம்  ரேட்டிங்  2.75 / 5   ஆனந்த  விகடன்  மார்க் 44 


உழவன் மகன்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்அரவிந்தராஜ்
தயாரிப்புஅ. செ. இப்ராகிம் இராவுத்தர்
கதைஆபாவாணன்
இசைமனோஜ் கியான்
நடிப்புவிசயகாந்து
ராதிகா சரத்குமார்
ராதா
ராதாரவி
ஒளிப்பதிவுஏ. ரமேஷ் குமார்
படத்தொகுப்புஜி. ஜெயசந்திரன்
கலையகம்ராவுத்தர் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 21, 1987
ஓட்டம்154 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்