Showing posts with label SIMBU. Show all posts
Showing posts with label SIMBU. Show all posts

Monday, June 11, 2012

வாலு - ஆளை விடு - வாழ விடு - சிம்பு பேட்டி - கிடாவெட்டு

http://www.cinepicks.com/tamil/gallery/vaalu/santhanam-and-simbu-in-vaalu-poster-861.jpgல்யாண சீஸன் நெருங்குவதால், அதற்கு முன்னரே டாப் கியரில் ஆடிவிடும் மூடில் இருக்கிறார் சிம்பு. அடுத்த படத்துக்கு 'வாலு’ என்று பெயர்.



''ஆஹா... திரும்ப சேட்டையை ஆரம்பிச்சுட் டீங்களா?'


சி.பி - அண்ணன்  எப்போ சேட்டையை விட்டாரு? இப்போ ஆரம்பிக்க? ஆல்வேஸ் அண்ணன் சேட்டை மன்னன் தான், ஆனா எடுக்கப்போற படத்தோட டைட்டில் மட்டும் வேட்டை மன்னன்


''இது எல்லாருக்கும் பிடிக்கிற வாலு! இன்னும் பக்கா சென்னைப் பையனா ஒரு படம்கூடப் பண்ணது இல்லை. அப்படி ரொம்பத் துறுதுறுப்பா, செம கலகலப்பா ஒரு ஸ்க்ரிப்ட் கொண்டுவந்தார் விஜய்சந்தர். லவ் ஸ்டோரி. இதில் என் வால்தனம் மட்டும் இல்லை. எல்லோரோட வால்தனமும் இருக்கிற - மிஸ் பண்ணவே முடியாத கதை. ஹன்சிகா, சந்தானம்னு ஹிட் பேக்கேஜ் சேர்த்து, உடனே இறங்கிட்டோம்.


 தீபாவளிக்கு வர்றான் வாலு. படத்தில் காமெடி அள்ளும். சந்தானத்தை நான்தான் சினிமாவில் முதல்ல கொண்டுவந்தேன். இப்ப, எல்லா ஹீரோக்களுக்கும் அவர் செம தோஸ்த் ஆகிட்டார். 'மன்மதன்’ முதல் நாள் ஷூட்டிங்ல அவரோட சில ஆக்ஷன்களைப் பார்த்தேன். 'ஜஸ்ட் லைக் தட் பெரிய ஆள் ஆயிடுவ நண்பா. சீக்கிரமே என் படத்துக்கு உன்கிட்ட கால்ஷீட் கேட்டு நிக்கிற மாதிரி இருக்கும்’னு சொன்னேன். 'என்ன சார்... பயமுறுத்துறீங்க?’னு தயங்கித் தயங்கிச் சிரிச்சார். நான் சொன்ன மாதிரியே ஆச்சு.


 ஆனா, மனுஷன் ஜெம் ஆஃப் தி ஜெம். என் படம்னா நான் சந்தானத்துக்கிட்ட டேட்ஸ் கேட்கிறது இல்லை. அவருக்கு ஏத்த கேரக்டர்னா 'நீதாம்பா’னு சொல்லிடுவேன். 


ஷூட்டிங் அன்னிக்கு ஸ்பாட்ல நிப்பார். அதுதான் சந்தானம்.''


 சி.பி - ஓஹோ நீங்களும் எம் ஜி ஆர் மாதிரிதானா? நீங்க இருக்கறப்ப சக டெக்னீஷியன்கள், நடிகர்கள் உட்கார விட மாட்டீங்களா?

''ஆர்யா... நயன்தாரானு கிசுகிசுக்கிறாங்களே?''




''அட, அவங்க ஒரு காலத்தில் எனக்கு ஃப்ரெண்ட். அதுக்காக இன்னமும் கேட்டுக்கிட்டே இருக்கணுமா? அவங்க நாளைக்கு இன்னொருத்தர்கிட்ட இருப்பாங்க. அப்புறம், கல்யாணம் பண்ணிப்பாங்க. அதுக்கும் நான் பதில் சொல்லிட்டே இருக்கணுமா? நல்ல காமெடிங்க!''



சி.பி - கீதை வாசகம் சிம்பு அண்ணன் ரசிச்சு மனசுக்குள்ள படிக்க நான் டெடிகேட் பண்றேன் - எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையது , எதை நீ தள்ளிட்டு வந்தாய், போறப்ப அள்ளிட்டுப்போக?


http://chennaionline.com/images/gallery/2012/June/20120606035951/Vaalu_Movie_First_Look_Wallpapers_02.jpg



''இப்போதைய ஹீரோக்களில் யாரைப் பிடிச்சிருக்கு?'



''ஜெய்! அவரோட முகம் முதல் சீன்லயே இம்ப்ரெஸ் பண்ணிருது. நல்ல நல்ல படங்களா பண்ணும்போது இன்னும் சூப்பரா வருவார். சாந்தனுவுக்கு டான்ஸ், காமெடி நல்லா வருது. ஆனா, இன்னும் நல்ல நேரம் அமையலை. ஆர்யா 'பாஸ்’ மாதிரி அசால்ட்டா பண்ணா ரொம்ப நல்லா இருக்கு. கார்த்தியோட பட செலெக்ஷன் அட்டகாசம். ஜெயம் ரவியை ரொம்ப இயல்பா எல்லாரும் ஏத்துக்கிறாங்க. ஜீவாவுக்கு ஃபிட் ஆகாத கேரக்டர் எதுவும் இருக்கானு தெரியலை. பெர்ஃபார்ம் பண்றதில் தனுஷ் கவனம் செலுத்துறார்.''
''உங்களுக்கு செல்வராகவன், பாலா மாதிரி டைரக்டர்களுடன் சீரியஸா படம் பண்ணணும்னு ஆசை இல்லையா?''




''ஒரு விஷயம்... தனுஷ்தான் அப்படிப் பண்ணுவார். அவருக்கு நடிப்பில் சீரியஸா ஏதாச்சும் பண்ணிட்டே இருக்கணும்னு ஆசை. நமக்கு அந்த ஆசை இல்லை. நான் பெர்ஃபார்ம் பண்றவன் இல்லை... என்டர்டெய்ன் பண்றவன்


. பயங்கரமா நடிச்சு பேர் வாங்கணும்னு நான் ஆசைப்படக்கூட மாட்டேன். ஆஸ்கர், தேசிய விருது வாங்கணும்னு எனக்குக் கனவுகூடக் கிடையாது. ரஜினி 'தளபதி’யில் பண்ண மாதிரி எப்பவாவது ஒரு ரோல் நடிக்கலாம். அப்படித்தான் வெற்றிமாறன் கதையில் இன்ட்ரஸ்ட் எடுத்து நடிக்கப்போறேன். மத்தபடி, நமக்கு தியேட்டர்ல விசில் பறக்கணும். கைத்தட்டல் கொட்டணும். டிஸ்ட்ரிபியூட்டர் சந்தோஷப்படணும். அவ்வளவுதான்.''



''அது யு டியூப்போ... இல்லை ஃபேஸ்புக்கோ... உங்க அப்பாவைச் சகட்டுமேனிக்குக் கிண்டல் கேலி பண்றாங்களே... அதைப் பத்தி அப்பாட்ட பேசுவீங்களா?''



''ஜெயிச்ச மனுஷங்களை எப்பவும் நிறையக் கிண்டல் அடிப்பாங்க. அப்படித்தான் அப்பாவையும் கமென்ட் பண்றாங்க. அவரோட ரெக்கார்டு இன்னும் முறியடிக்கப் படலை. அவ்வளவு ஏங்க, ரஜினி சாரையே அதுல பயங்கரமா கிண்டல் அடிக்கிறாங் களே. ரஜினி ஜோக்ஸ்னு தினமும் நிறையக் கொட்டுதே? கிண்டலுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டே இருந்தா, அப்புறம் நாம வேற எந்த வேலையையும் பார்க்க முடியாது. டேக் இட் ஈஸி!''


''சினிமாவில் தம்பியோட என்ட்ரி எப்போ?'



''இந்த வருஷக் கடைசி, இல்லைன்னா... அடுத்த வருஷம். நல்லா டான்ஸ் ஆடுறான். கொஞ்சம் வெயிட்டா இருக்கான். ஃபிட்னெஸ் சரிபண்ணிட்டா, டபுள் ஓ.கே. அவனுக்கு ஏத்த முதல் ஸ்க்ரிப்ட்டை அப்பாதான் ரெடி பண்றார். சின்ன வயசுலயே ஸ்டேட் அவார்டு வாங்கினவன். என்னைவிட நல்லா நடிப்பான்.'



''தங்கச்சி இலக்கியாவுக்குக் கல்யாணம் எப்போ?''



''அடுத்த வருஷம். மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. அந்தப் பையனை எனக்குப் பிடிக்கணும். என் தங்கச்சிக்குப் பிடிக்கிற பையனை எனக்கும் பிடிக்கும். என் தங்கச்சிக்கு நான்னா ரொம்ப உசிரு. கல்யாணம் ஆயிட்டா அவளை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அதுக்காக எத்தனை நாள்தான் வீட்லயே வெச்சுட்டு இருக்க முடியும்? 'பாசமலரே, சீக்கிரம் கௌம்பு’னு இப்பவே சொல்லிச் சொல்லிப் பழகிட்டு இருக்கேன். தங்கச்சிக்கு சினிமா ஆர்வம் இல்லை. படிப்புதான் இஷ்டம். எம்.பி.ஏ. முடிச்சிருக்கா. சினிமா கதை சொன்னா, நல்லா ஜட்ஜ் பண்ணுவா. 'லூஸுப் பெண்ணே பாட்டு ஹிட்டாகும்’னு முதல்ல சொன்னது அவதான். 'எவன்டி உன்னைப் பெத்தான்’ ப்ளே பண்ணப்போ, கொஞ்சம் பயமா இருந்தது. 'இல்லண்ணா, பொண்ணுங்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னா.'



''ரொம்ப சமர்த்தா இருக்கிற மாதிரி இருக்கு. சரி... இப்ப இண்டஸ்ட்ரியில் யாருக்கு உங்க ப்ளேபாய் பட்டத்தைக் கொடுக்கலாம்?''



''நிறைய விஷயங்கள் பட்டு உணர்ந்த பிறகு, இப்பதான் மெச்சூரிட்டி வந்திருக்கு. இனிமே ரொம்ப பெர்ஃபெக்ட்டா இருக்கணும். நானே ப்ளேபாய் இமேஜை விட்ட பிறகு, அப்படி யாரு இருந்தா எனக்கென்ன?''


 http://reviews.in.88db.com/images/stories/nayanthara-simbu-vaalu-movie.jpga

thanx - vikatan

Tuesday, February 14, 2012

ஒரு நடிகையின் வாக்கு மூலம் - சோனியா அகர்வாலின் ஷாக் நீலம் -சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9kij9b_LweF5mtBc-FFau0_VPs1SbXh9c8JIxFPYB4gRNLMppjRKXw6BnTaKNkW1WyMPkJz9AvMwoRx-R150A417YwoNDK1p82st9GofmxtahoXOjUTyRIxxwQV3xCF08uX6-UpkQuEs/ 

இந்தப்படம் புக் ஆகும்போதே செல்வராகவன் வயிற்றில் புளியை கரைச்சிருக்கும்.. என்னென்ன சொல்லப்போறாரோ?ன்னு.. ஆனா செகண்ட் இன்னிங்க்ஸ்க்கு இன்னும் சான்ஸ் இருக்கறதா சோனியா நினைச்சாரோ என்னவோ அவர் சொந்தக்கதை எதுவும் சொல்லலை.. படத்தோட டைரக்டர் பூடகமா பாரதிராஜா, குஷ்பூ, சிம்பு, நயன் தாரா, பிரபு தேவா  எல்லார் கதையையும் மிக்ஸ் பண்ணி ஒரு காக்டெயில் கதை ரெடி பண்ணிட்டார். ஆனா திரைக்கதைல வேகம் இல்லை.

சோனியா அகர்வாலோட அப்பா கிராமத்துல  நாடக கலைஞர்.. நலிவடைஞ்ச நாடகக்கலையால அவர் பழசெல்லாம் மறந்துட்டு இருக்கறப்ப ஊர் ஜனங்க அவர் பெண்ணை ஹீரோயினா போட்டு நாடகம் எடுக்க சொல்றாங்க.. அவரும் ரெடி பண்றார்.. திடீர்னு வேற ஒரு ட்ரூப்பை வெச்சு நாடகம் நடத்திடறாரு ஊர்த்தலைவரு.. ஆக்சுவலா இந்த சீன்ல அப்பா கேரக்டர் தானே கோபப்படனும்? ஆனா அம்மா கேரக்டர் கோபம் அடைஞ்சு ஜெ கேப்டன் கிட்டே சட்டசபைல சவால் விட்ட மாதிரி கிராமத்துக்கே சவால் விடறாரு.. என் மகளை நாடறஞ்ச அழகிய நடிகை ஆக்கி காட்றேன்னு.


கட் பண்ணா  சிட்டி..  THE DIRTY PICTURE  படத்துல வர்ற மாதிரி சான்ஸ் கேட்டு ஸ்டூடியோ ஸ்டூடியோவா அலையறாங்க.. அப்போ ஒரு லேடி ஆடம்பரமா வாழ, சான்ஸ் கிடைக்க உன்னை நீ இழக்கனும்கறாங்க.. கேட்கற நமக்கே ஷாக்கா இருக்கற அந்த சீன்ல என்னமோ கைல வெச்சிருக்கற கடலை பர்பியை கேட்டதும் இந்தா என தர்றது மாதிரி அவங்க கில்மாவுக்கு ஓக்கே சொல்றாங்க. ( இந்த சீன்ல டைரக்டர் ஹீரோயின் சோனியாவோட அம்மா கேரக்டர் மெழுகுவர்த்தி மாதிரினு காட்ட நினைச்சிருக்கார் எடுபடலை.. )

தன் கற்பை ஏலம் விட்டும் கூட  சோனியாவோட அம்மாவால மகளுக்கு ஹீரோயின் சான்ஸ் வாங்கித்தர முடியலை.. கடைசில ஒரு டைரக்டர்ட்ட சான்ஸ் கேட்கறாங்க ( படத்துல ராஜ்கபூர் நடிச்ச இந்த கேரக்டர் பாரதிராஜா மாதிரி காட்றாங்க) அவர் சோனியா அகர்வாலை கேட்கறாரு. நடிகை ஆக்குவதே லட்சியம் (!!!!??) என்பதால் அதுக்கும் ஒத்துக்கறாங்க... அட தேவுடா. 

இனிமே சொல்லப்போற கதை சிம்பு, நயன் நினைவில் கொள்ளவும்.. சோனியா அகர்வால் ஹீரோயினா நடிச்ச படம் ஹிட் ஆகுது.. காட்சி மாறுது.. அவரை அறிமுகம் செஞ்ச டைரக்டருக்கே அவரோட அடுத்த பட கால்ஷீட் கொடுக்க முடியாத அலவு பிசி.. இவருக்கு போட்டியா ஒரு நடிகையை களம் இறக்கறார் ( ஹன்சிகா மோத்வானி மாதிரி சாயல் )

சோனியா அகர்வால் ஒரு டைரக்டரை லவ் பண்றாரு..  ( நயன் தாரா சிம்புவை லவ்வின மாதிரி)  அந்த டைரக்டர்  சோனியாவை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டு  திடீர்னு மார்க்கெட்ல வந்த புது நடிகையை  கரெக்ட் பண்றாரு.. புதுசு பிக்கப் ஆனதும் பழசை மறக்கறாரு ( பிரபுதேவா நயனை கழட்டி விட்டுட்டு ஹன்சிகா மோத்வானியை கரெக்ட் பண்ணுன மாதிரி )

இதை எல்லாம் பார்த்து வெறுத்துப்போன ஹீரோயின் ஆசிரமத்துக்கு போய் செட்டில் ஆகிறாரு ( ரஞ்சிதா மாதிரி )

அவ்ளவ் தான் கதை. இப்போ படத்தோட புரொடியூசர் புன்னகைப்பூ கீதா .. அவர்க்கு மனசுக்குள்ள ஆசை, இந்தப்படத்துல நடிக்கனும்னு.. உடனே டி வி  மேனேஜிங்க் டைரக்டர் ரோல்ல வந்து நடிகை சோனியாவை பேட்டி எடுக்கற மாதிரி 2  ரீல் ரெடி பண்ணி அட்டாச் பண்ணிட்டார்.

படத்துல முதல் பாராட்டு சோனியா அகர்வால்க்கு அம்மாவா நடிச்ச நடிகை. ஊர்மிளா உன்னி . செம அக்டிங்க்.. வறுமைல இருக்கறப்ப பம்முவதும், பணம் வந்ததும் காட்ற கித்தாப்பும், ஆடம்பர பாடி லேங்குவேஜும் அசத்தல். 

2 வது பாராட்டு டைரக்டராவே வர்ற ராஜ்கபூர்..  நடிகைகளை வலை வீசி பிடிப்பதையே தொழிலாக கொண்டவர் கேரக்டர் செம பொருத்தம். 

சோனியா அகர்வால் மென் சோக உணர்வுகளை மட்டும் பிரமாதமாக காட்டி நடிக்க தெரிந்த நடிகை, அவ்ளவ் தான்,, மற்றபடி அவரிடம் நவ ரச நடிப்பை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. முகத்தில் முற்றல் தெரியுது. ஓவர் மேக்கப்.. குறைச்சுக்கனும்.. 

http://tamil.oneindia.in/img/2011/11/30-sonia-agarwal5-300.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  பிரச்சனை வரும் என்று தெரிந்தும் தைரியமாக பாரதிராஜா, குஷ்பூ, பிரபு தேவா, நயன் தாரா , சிம்பு, ஹன்சிகா மோத்வானி என சினிமா பிரபலங்களின் பர்சனல் கதைகளை ஆங்காங்கே கோர்த்து விட்டிருப்பது.. ( புரிந்து விடாமல் மக்கள் தடுமாறக்கூடாது என வாரமலர் கிசு கிசு பாணியில் சில க்ளூஸும் தர்றார்.. )

2.  சுமாரான இந்தக்கதைக்கு சோனியா அகர்வாலை புக் பண்ணுனது

3. புன்னகைப்பூ கீதா வரும் காட்சிகளில் எல்லாம் இவர் தான் படத்தோட தயாரிப்பாளர் என டமாரம் அடிக்காத குறையாக அவருக்கு லைம் லைட் அடித்து விட்டது..  ( அவர் போட்டு வரும் நெக்லஸ்  டிசைன் சூப்பர் )

4. பாடல்களில் போவது யாரு? தேவதை பாரு பாட்டும், டோண்ட் டச் மீ பாடும் தேறுகிறது. 


5. இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போல் காட்டியது..உண்மையில் இது தெலுங்கு டப்பிங்க் படம்


http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3666.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ், அவரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல டி வி மீடியா ஒர்க்கர்ஸ் எல்லாரும் ஐ டி கார்டோட மீட்டிங்க்  வர்றாங்க, ஆனா புன்னகை பூ கீதா மட்டும் ஐ டி கார்டு போடலை.. ஏன், அவர் தயாரிப்பாளர் என்பதாலா?

2.  சோனியா அகர்வாலின் ஹேர் டிரஸர் ( சிகை அலங்கார நிபுணர்)க்கு வயசு 45 இருக்கும், கீதாவுக்கு 25 இருக்கும், ஆனா அவரை இவர் வா போ என மரியாதை இல்லாமல் பேசறாரே?

3.  ஜோதிலட்சுமி சோனியா அகர்வால் அம்மா கிட்டே நீங்க கற்பை இழக்கத்தயாரா? என கேட்கும்போது யோசிச்சு சொல்றேன் அப்டினு கூட சொல்லாம உடனே ஓக்கே சொல்றது எப்படி?

4.  ஆல்ரெடி பலரிடம் கற்பு பறி போன ஒரு நடிகையை கரெக்ட் பண்ண ஒரு ஹீரோ எதுக்காக டிரிங்க்ஸ்ல மயக்க மருந்தோ, போதை மருந்தோ கலந்து தர்றார்? அவர் என்ன கன்னிப்பெண்ணா?

5.  கதைப்போக்கு டைரியை படிக்கற மாதிரி வருது.. அதாவது ஒவ்வொரு காட்சிலயும் சோனியா அகர்வால் வரனும், ஆனா அவர் இல்லாம பல காட்சிகள் வருது.. அது எப்படி அவர் டைரில எழுதி இருக்க முடியும்?

6. கோவை சரளா சான்ஸ் கேட்டு வரும் ஒரு புது முகத்தோட அம்மா, ஆனா பல படங்கள் ஹிட் கொடுத்த தயாரிப்பாளரை அவரது வேலையாள் போல் பப்ளிக்காக நடத்துவது எப்படி? ( ஏன்னா சினிமா புரடியூசருங்க எல்லாம் தனியா எப்படி இருந்தாலும் பப்ளிக்ல இமேஜ் மெயிண்ட்டெயின் பண்ணுவாங்களே?)


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEintZ8JdSJmj1fCehYJU8u2RhoRaUVtXx9BiwRaA8bj0fTVSZ8oc9gekmmPJtvjmXORC8k-YAzlaDvoxIfkONytbQau18RbA-HwRttD4OhA-XAk6v8-8hZdTtE9nVZCVSbQ_50TVOqMzg-E/s1600/65684786Sonia-Agarwal-and-Selvaraghavan.jpg

7. க்ளைமாஸ்ல சோனியா அகர்வால் என்னமோ தவணை முறை தற்கொலை திட்ட அமைச்சர் மாதிரி 20 நிமிஷத்துக்கு ஒரு முறை தூக்க மாத்திரை 10 போடறார்.. கொஞ்ச நேரம் ஷூட்டிங்க்ல கலந்துக்கறார்.. மறுபடி 10 மாத்திரை சாப்பிடறார்/.. வாழ்வை வெறுத்தவங்க தனி அறைல ஒரே மூச்சாகத்தானே தற்கொலை செய்வாங்க?

8.  ஹீரோயின் சோனியா அகர்வாலோட பள்ளித்தோழி தன் மேரேஜ் இன்விடேஷனை கொடுக்க வர்றப்ப சோனியா வீட்ல இல்லை, அவங்கம்மா கிட்டே கொடுக்கறாங்க.. போயிடறாங்க.. அவங்கம்மாவுக்கு சோனியா அந்த மேரேஜ்ல கலந்துக்க இஷ்டம் இல்லை.. அதனால சொல்லலை.. அப்போ அவங்க அந்த பத்திரிக்கையை ஒளிச்சோ எரிச்சோ வெச்சிருக்கலாம், ஆனா 20 நாளா டேபிள்லயே இருக்கு.. 

9. அந்த கல்யாண பத்திரிக்கையை பார்த்த  20 நாள் கழிச்சு லேட்டா  பார்த்த சோனியா  தன் அம்மா கிட்டே “ ஏன் மறைச்சே? அவளுக்கு நான் என்னெ என்னெ எல்லாம் செய்ய நினைச்சேன்னு  1 பக்கம் கோப வசனம் பேசறாரே?ஏன்? அவர் செய்ய நினைச்சதை மேரேஜ் முடிஞ்ச பின் செய்யக்கூடாதா?கண்டுக்காம விட்றாரே?

10. சான்ஸ் கேட்கப்போகும் நடிகைகள் எல்லாரும் தயாரிப்பாளர், அல்லது டைரக்டர் கூட படுத்துக்கறாங்க என்று சொல்ல வர்றதைக்கூட ஒரு வகைல ஏத்துக்க்கலாம்.. ஆனா எல்லாருமே எந்த பாதுகாப்பும் இல்லாம மாசம் ஆகறது காமெடி..

11. சோனியா அகர்வாலோட பெயர் கதைப்படி அஞ்சலி. அதைக்கேட்ட ராஜ்கபூர் சினி ஃபீல்ட்ல ஆல்ரெடி ஒரு அஞ்சலி இருக்காங்க, அதனால உன் பேரை மாற்றனும்கறார்.. ஆனா அதே பேர்ல தான் கடைசி வரை இருக்கார்.. ஏன்?

12.. செம பரபரப்பா, விறு விறுப்பா எடுத்து இருக்க வேண்டிய இந்தக்கதையை ஏன் அவ்ளவ் ஸ்லோவா டிராமா மாதிரி கொண்டு போகனும்?

http://4.bp.blogspot.com/-wOc_qUlI9do/TtZncnsm8dI/AAAAAAAAWeg/4PwTTp3jfjs/s1600/Oru+Nadigayin+Vakku+Moolam+Shooting+Spot+Stills+%252838%2529.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39 ( ஆனா விகடன்ல விமர்சனம் போட மாட்டாங்க, சும்மா படத்தோட மதிப்பீட்டுக்காக மார்க்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - யார் யார் எல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்?பாரதிராஜா, குஷ்பூ, பிரபு தேவா, நயன் தாரா , சிம்பு, ஹன்சிகா மோத்வானி மற்றும் கிசு கிசு செய்திகளை ஆர்வமாக படிக்கும் வம்படி வனஜாக்கள்,வரதராஜன்கள் மட்டும் பார்க்கலாம்.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

15 நாட்கள் ஓடும்..

http://www.filmics.com/tamil/images/stories/news/Sep_2011/24.09.11/sonia_agarval.png

Friday, April 29, 2011

வானம் - சிம்பு VS தெம்பு? OR சொம்பு ? - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKhZFuHn4K7DPynruNI78peG9Gu7BQ2uOh-2azlTSPtcQte70_vdwY1y9cDsGf6I3c77RTfLXyPD4D_qMI-NXRXSYAUlC8cW-jPoq6EP8zuvhkOLZ4E79L5jGcDKdcICnUkK7gv54w6g5p/s1600/Simbu_Anushka_vaanam_movie_posters.jpg

எவண்டி  உன்னைப்பெத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் என்ற சூப்பர் ஹிட் பாடல் கை வசம் இருக்கும் தைரியம் + விண்ணைத்தாண்டி வருவாயா படத்தால் சிம்புவுக்கு ஏற்பட்ட புது இமேஜ் & மார்க்கெட் இம்ப்ரூவ்மெண்ட்ஸ் +அனுஷ்காவின் இளமை  இந்த மூன்று மேட்டர்களை கையில் வெச்சுக்கிட்டு  இயக்குநர் க்ரிஸ் அதகளம் பண்ணி இருக்கலாம்.. ஆனா... 

 படத்தோட கதை என்ன?
.ராக் ஸ்டாராக ஆசைப்படும்  இளமை துள்ளும் இளைஞன் ( பரத்),மருமகளின் (சரண்யா)கிட்னியை விற்க வரும் மாமனார்,சொந்தமாக தொழில்(!) செய்ய ஆசைப்பட்டு,  ஹைதராபாத் வருகிற. அயிட்டம் கேர்ள் (அனுஷ்கா),தன் தகுதிக்கு மீறி மிகப்பெரிய பணக்கார பெண்ணை தானும் பணக்காரன் என்று நம்ப வைத்து எப்படியாவது அவளை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசைக்காரன் ( சிம்பு).,ஹைதராபாத்தில் நடந்த ஒரு ஹிந்து ஊர்வலத்தில் தன் நிறைமாத கர்பிணியின் கர்ப்பம் கலைந்து போன சோகத்தில் ஒரு முஸ்லிம் (பிரகாஷ் ராஜ் ) இந்த 5 பேரும் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க நேரிடுகிறது.

 இவர்கள் ஐந்து பேரும் வந்து சேரும் இடமான மருத்துவமனையை, தீவிரவாதிகள் வளைத்து, கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ள,படம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உரிய ஸ்பீடோடு சூடு பிடிக்கிறது.என்ன நடக்கிறது என்பதே கதை.





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfTkbuQCRa2R4fA9Div40Jabo8qd516uMK0TBpKYNFbl0riiKVwceJ0KOnLUnoAeHZ2342LlXncRyEw-WjkEePB-8MrDmrk22E1SX0vQOj1dvSHNDZlE_Ju4ZKmYivMm71e7P_XOYjRQJ9/s1600/Sneha_Ullal_Simbu_Vaanam_Movie_Stills_01.jpg
சிம்புவுக்கு அல்வா மாதிரி கேரக்டர்.அவர் சந்தானத்துடன் அடிக்கும் லூட்டிகள் கல கல காமெடி.சினேகா உல்லாள் தான் ஜோடி ( அவர் தங்கை பேர் மேனகா வெளி ஆள்?)ஆனா ஃபிகர் சுமார் தான்.. நடிக்க வாய்ப்பு இல்லாட்டி கூட  பரவால்ல.. அவர் திறமையை (!!) காட்டக்கூட வாய்ப்பில்லாம போச்சேன்னு தான் இளவட்டங்கள் வருத்தம். 

அனுஷ்கா .. அருந்ததி மாதிரி கலக்கலான கேரக்டரில்,சிங்கம் மாதிரி கிளாமரான கேரக்டரில் பார்த்து விட்டு இந்த மாதிரி டிக்கெட் கேரக்டரில் பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா  இருக்கு.ஆனா அவர் அசால்ட்டா ந்டிச்சிருக்கார். ஆனா தெலுங்கு பதிப்பை விட தமிழ்ல அவருக்கு அழகும் இளமையும் கம்மி தான்.. (இப்படியே கம்ப்பேர் பண்ணிட்டே இரு. )

பரத் கேரக்டர் வந்த வரை ஓக்கே என்றாலும் படத்துக்கு தேவை இல்லாத கேரக்டர் தான்.

படத்தில் மனம் கவரும் நடிப்பு சரண்யா, அவர் மாமனார், பிரகாஷ்ராஜ் இந்த 3 பேரும் தான்.சோனியா அகர்வால் பார்க்க பரிதாபமாக இருக்கார். செல்வராகவன் விட்டுட்டுப்போனதால் அப்படி இருக்காரா? அவர் அப்படி டல்லா இருக்கறதால அவர் விட்டுட்டுப்போய்ட்டாரா? என்பது சர்ச்சைக்குரியவிஷயம்.


சந்தானம் காமெடி பலத்துக்கு பலம்
http://fullytimepass.com/wp-content/uploads/2009/03/sneha-ullal-11.jpg
 படத்தில் களை கட்டும் கலக்கல் வசனங்கள்

1.  என் பைக்கை நான் என் ஒயிஃப் மாதிரி பார்த்துக்கறேன்..

சந்தானம்- அப்புறம் ஏண்டா வாசல்ல நிறுத்தி வெச்சிருக்கறே? வீட்டுக்குள்ளேயே நிறுத்தி வெச்சிருக்க வேண்டியது தானே?

2. இங்கே இருக்கறவங்க எல்லாம் பார்த்தியா ஆல் ஹை க்ளாஸ்....

சந்தானம்-  - பார்த்தா எச்ச க்ளாஸ் மாதிரி இருக்கு?

3.  சந்தானம்- ஏம்ப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு காமெடி பண்றேன்.. சிரிக்க மாட்டியா?

 பணம் இருக்கறவன் சிரிக்க மாட்டான்.

 சந்தானம்-  ஆமாமா..  பணம் இருக்கறவன் சிரிக்க மாட்டான், விசில் அடிக்க மாட்டான்,ஜாலியை அனுபவிக்க மாட்டான்.. போறப்ப பணத்தை எடுத்துட்டா போகப்போறான்?

4.  டேய்.. நான் ஒண்ணு சொல்லட்டா.. அந்தாள் பைக்கை நைஸா வித்துடலாமா?

சந்தானம்-  செத்துடலாமா?ன்னு கேட்டிருக்கலாம். இதுக்கு

5.  லேடி - வாங்க இன்ஸ்பெக்டர் சார்... ரொம்ப நாளா ஆளையே காணோம்?

ரெகுலரா வர இது என்ன போலீஸ் ஸ்டேஷனா?

6. என்னது? சரோஜா ஒரு ஃபுல் நைட்டுக்கு வேணுமா? நீங்க தான் மேட்ச்ல வீக் ஆச்சே? எதுக்கு அவ? 

உன்னை எல்லாம் லாக்கப்ல வெச்சு ஒரு வாரம் கும்முனாத்தான் புத்தி வரும்.

7.  எத்தனை தடவை சொல்றது? உங்க கனவை ,ஆசைகளை என் மேல திணிக்காதீங்க..

8. சந்தானம்- பேசாம அம்பானி பொண்ணையே ரூட் விட்ரலாமா? பணக்காரன் ஆகிடலாம் ஈசியா..

ஆனா அம்பானிக்கு பையன் தான்

9. எப்படியாவது ரூ 40000 பணத்தை ரெடி பண்ணனும். 40 பேர்ட்ட ரூ 1000  கேட்கலாமா?

 சந்தானம்- ஏன்? 40000 பேர்ட்ட ஆளுக்கு ரூ 1 கேளேன்..

10. சரி சரி.. இந்த செல்ஃபோன்ல இருக்கற எல்லா  நெம்பருக்கும் டரை பண்ணு..யாராவது சிக்காமலா போவாங்க? கறந்துடலாம்.

சந்தானம்- கஸ்டமர் கேர் நெம்பர் தவிர எல்லா நெம்பரும் ட்ரை பண்ணீயாச்சு.

11.  சந்தானம்- யோவ்.. நீ நல்ல பார்ட்டியா கல்யாணம் பண்ணாம ஒரு பாட்டியைப்[போய் கல்யாணம் பண்ணீ இருக்க..

 சரி சரி.. கொலீக்ஸ் முன்னால என் மானத்தை கொலாப்ஸ் பண்னாதே..

12. சந்தானம்- உன் லவ் நல்ல ஒர்த்தா?

ரூ 600 கோடிக்கு அதிபதி.

ஆ.......

சந்தானம்- அதுக்கு ஏன் கார் டிக்கி மாதிரி வாயைப்பிளக்கறெ..?க்ளோஸ்

13.  சரி.. ப்ளேன் என்னா>ன்னு சொல்லாம டீ சொல்றே,,?

 இன்னுமா புரில..? அவன் ப்ளேனே இன்னைக்கு நம்ம கிட்டே ஓ சி டீ சாப்பிடறது தான்.

14.  அந்தக்காலத்துல திருடறவன் பசிக்காக திருடுனான். இந்தக்காலத்துல புட்டிக்கும் குட்டிக்கும் திருடறான்.
15.  ஏண்டி.. எல்லாரும்  நம்மையே பார்க்கறாங்க.. 

இவங்க இப்படித்தான். சினிமா நடிகையையும், நம்மை மாதிரி பொண்ணுங்களையும் ஒரே மாதிரி பார்ப்பாங்க.. ( ச்சே ச்சே நீங்க நினைக்கறது தப்பு)

16. திரு நங்கை - ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பாத்ரூம் இருக்கு.. நாங்க எங்கேய்யா போவோம்.?

17. என்னது? நீங்க கன்னித்திருடன்களா? கன்னிப்பொண்ணுங்களை திருடுவீங்களா? 

 அட நீங்க வேற.. இது எங்க முத திருட்டு..

18.  சரி.. நீங்க எப்படி? ஒன்லி திருட்டு தானா? இல்லை கொலை, ரேப் இந்த மாதிரி...?

சந்தானம்- இன்ஸ்பெக்டர் சார்.. என்னது இது சர்வர்  மாதிரி வடை பொங்கல் போதுமா ? ரோஸ்ட் வேணாமாங்கறது மாதிரி கேட்கறீங்க?

19. யோவ்.. நாங்க தான் படிக்காதவளுக.. இந்த தொழிலுக்கு வந்துட்டோம். நீ படிச்சவன் தானே.. அரசாங்க வேலை ல தானே இருக்கே? யூனிஃபார்ம் போட்டுட்டு இப்படி சம்பாதிக்க வெட்கமா இல்லை? ( பளார்)

20. போலீஸ்களை நம்பக்கூடாது.. குழந்தையை காணோம்னு புகார் குடுத்தா பொண்டாட்டியை காணாம போக பண்ணிடுவானுங்க.. ( செம க்ளாப்ஸ்)
21.  மத்த வேலைகள் செய்ய அனுபவம் வேணும். ஆனா இந்த தொழிலுக்கு அனுபவம் கம்மின்னா பணத்தை அள்ளி வீசுவாங்க.. அனுபவமே இல்லைன்னா கேட்கற பணம் கிடைக்கும்.

22. எனக்காக அவ கிட்டே என்னைப்பற்றின உண்மையை சொல்றியா?

சந்தானம்-  ஏன்? நீ சொல்ல மாட்டியா? எத்தனை பொய் சொல்லி இருக்கே?

பொய் சொல்றது ஈஸி.. ஆனா உண்மை சொல்றது ரொம்ப கஷ்டம்.. (க்ளாப்ஸ்)
http://www.telugupedia.com/wiki/images/d/d7/Anushka.jpg
23. நான் போலீஸ்.. என்னையே டெரரிஸ்ட்னு சொல்றியா?

அப்பாவிகளை கொடுமைப்படுத்தற எல்லாரும் டெரரிஸ்ட்தான்.

24. சந்தானம்- டேய் நாயே.. சீ வெளில வா.. இவரு பெரிய பாரதிராஜா.. ஸ்க்ரீனுக்கு பின்னால இருந்து ஒளிஞ்சு பார்க்கறாரு.. 

25.. அடப்போடா.. என்னை போலீஸ் ஸ்டேஷன்ல நிக்க வெச்சுட்டியே..?

சந்தானம்-  நீ குடுத்த காசுக்கு உன்னை எலக்‌ஷன்லயா நிக்க வைக்க முடியும்?

26.  எனக்கு இந்த தொழிலே வேணாம்யா.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காட்ட முடியாத ஒரு வாழ்க்கையை  ஒரு நல்ல சாவு காட்டிடுச்சு... 
http://l.yimg.com/t/movies/movietalkies/20090112/21/snehaullal-7b-1_1231775016.jpg

இயக்குநர்க்கு பொக்கே குடுக்கும் ஷாட்ஸ்

1. பிரகாஷ்ராஜ் தன்னிடம் அடி வாங்கினாலும் ஆபத்து நேரத்தில் தன்னை தீவிரவாதியிடம் இருந்து காப்பாற்றினார் என்றதும் கை எடுத்துக்கும்பிடும் போலீஸ் ஆஃபீசர் கேரக்டர் வடிவமைத்த விதம்

2. யுவன் சங்கர் ராஜாவிடம் செமயான ஹிட்ஸ் சாங்க்ஸ் வாங்கியது.

3.உனக்கும் வேணும் எனக்கும் வேணும் பாடல் காட்சியை படமாக்கிய விதம்.

4. ஹாஸ்பிடல் காட்சியில்  திருடிய பணத்தை சிம்பு  திருப்பிக்குடுக்க வரும்போது அந்த பெரியவர் நடிப்பு.. அந்த காட்சி மார்வலஸ்



http://hotphotos.picswallpapers.com/var/albums/Sneha-Ullal/latest/Sneha-Ullal-latest-photo-003.jpg?m=1279039354
இயக்குநருக்கு சில யோசனைகள் & கேள்விகள்

1. இரண்டு வருஷத்துக்கு ஓட வேண்டிய மெகா சீரியல் ரேஞ்சுக்கு எதுக்கு படத்துல அத்தனை கேரக்டர்.? கசா முசான்னு ஏகப்பட்ட பேர் வர்றதால சாதாரண சினிமா ரசிகன் குழம்ப மாட்டானா?

2. படம் போட்ட முதல் ஒரு மணிநேரம் கதை எந்த திசைல பயணிக்குதுன்னே தெரில.. கதைல சுவராஸ்யம் கூட்ட க்ளைமாக்ஸ்ல பாம் வைக்கப்போற மேட்டரை ஆரம்பத்துலயே காட்டி இருந்தா டெம்ப்போ ஏத்தி இருக்கலாமே?

3. பரத் கேரக்டர் படத்துல எதுக்கு? தயவு தாட்சண்யமே இல்லாம அந்த கேரக்டரையே தூக்கி இருக்கலாம்.

4. அனுஷ்கா கில்மா பாட்டு சீன்ல லாங்க் ஷாட்ல யெல்லோயிஷ் ஷேடும் ,க்ளோஷப் ஷாட்ல ரெட்டிஷ் ஷேடும் எதுக்கு?அதெல்லாம் எம் ஜி ஆர் கால டெக்னிக் ஆச்சே?

5. எவண்டி  உன்னைப்பெத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் என்ற சூப்பர் ஹிட் பாடல்இப்படித்தான் பிக்சரைசேஷன் பண்றதா? ஏதோ க்ளப் சாங்க் மாதிரி இருக்கு.இந்தப்பாட்டை பட்டாசு கிளப்ப எடுத்திருக்கலாம்.

6. சிம்புவோட காதல் ஆழமா காட்டப்படல.. ஒரு டூயட் வெச்சிருக்கலாம். கோடீஸ்வரி பொண்ணு குப்பத்துப்பையனை ஏன் லவ்வறா? குப்பத்துப்ப்பையன் ஏன் அப்படி மல்ட்டி மில்லியனர் மாதிரி இருக்கான்? ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.

7. சிம்பு ஒரு சீன்ல  அப்பா டி ஆர் மாதிரி வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி பாட்டை ரீ மிக்ஸ் பண்ணி அவரை மாதிரியே ஆடி இருக்காரு.. அதைக்கூட மன்னிச்சுடலாம். ஆனா அவர் அப்போ செய்யும் ஆபாச சைகை ஓவர். ( சிங்கார வேலன்ல கமல் புதுச்சேரி கச்சேரி பாட்டுல.. பண்ணூவாரே.. அது போல )

8. சோனியாவின் கர்ப்பம் கலைந்ததும் பிரகாஷ்ராஜின் நடிப்பு இயல்பான நடிப்பின் கடைசிப்படியில் இருந்து ஓவர் ஆக்டிங்கின் முதல் படியை தொட்டது ஏன்?

9. பரத் பாடல் காட்சியில் எதுக்கு லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி எரியுது,.. கண் வலி வந்தது தான் மிச்சம்..

10 ஹீரோ அறிமுகம் மகா சொதப்பல். 10 ரவுடிங்க வந்து அவர் எங்கே என க்கேட்பதும் அவர் உயரமான இடத்தில் இருந்து குதித்து8 ஓடுவதும் அவர்கள் துரத்துவதும் செம போர். ஏற்கனவே ஆர் பாண்டியராஜனின் நெத்தி அடி, ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் படங்கள்ல யும்,. ஜாக்கி சானின் போலீஸ் ஸ்டோரி, ஆர்மர் ஆஃப் காட் ல யும் பார்த்து பார்த்து சலிச்சாச்சு.

பரத் கூட 2 ஃபிகருங்க சுத்துது.. அதுங்க பரட்டைத்தலயோட ஏன் இருக்கு? ஒரு ரப்பர் பேண்டோ,க்ளிப்போ வாங்க கூட வசதி இல்லியா? அய்யோ பாவம்... ஆனா அந்த ஓப்பனிங்க் பாடல்ல  அந்த 2 ஃபிகரும் மழைல நனைஞ்சு ஒரு குலுக்கல் டான்ஸ் போடறாங்களே அடடா..
http://thatstamil.oneindia.in/img/2010/12/30-anushka-2001.jpg

இந்தப்படம் ஏ செண்ட்டர்ல 30 நாட்கள். பி செண்ட்டர்ல 20 நாட்கள், சி செண்ட்டர்ல  10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

 ஈரோடு அபிராமி,ஆனூர்,ஸ்ரீனிவசா,அன்னபூரணி என 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு. நான் அபிராமில பார்த்தேன்

 தியேட்டரில் ... ஒருத்தன்   தனுஷ் ரசிகனா இருக்கும்னு நினைக்கறேன்


எவண்டா  இந்த படத்தை எடுத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான்  செத்தான்  செத்தான்  செத்தான்
என்று பாடி விட்டு செல்கிறான்.. எஹே ஹே ஹேய்

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி

https://lh4.googleusercontent.com/-FWnZ8RSOqsM/TXj1XVoGkqI/AAAAAAAAtNA/1h_Xwms2ijU/s1600/anushka-hot-vaanam-movie-stills%25281%2529.jpg

1.ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி#அடடா.. அதனாலதான் 40 வருஷத்துக்கும் மேலே அங்கேயே இருக்கீங்களா வர மனசில்லாம?

---------------------------

2. பூவா? தலையா? படத்துக்கு பாதி சம்பளம் தான் குடுத்தாங்க-நடிகை ஷெரீன் புகார் #அரை குறையான டிரஸ்ல நடிக்கறதா ஒத்துக்கிட்டு பல்டி அடிச்சீங்களோ?

 --------------------------------
 3. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை-நடிகை கரண்#40 வயசு ஆன பின்னும் அப்படி ஐடியா இல்லையா? இப்போ இல்லாட்டி எப்போ?

-----------------------------

4.பிரான்ஸ் செல்கிறது திருத்தனி டீம்-இயக்குநர் பேரரசு#மொட்டை போட திருப்பதியோ பழநியோ போனா பத்தாதா?

--------------------------

5.ஜெனிலியாவுக்கு ஜூலையில் திருமணம்# உங்க கல்யாண வாழ்க்கையில்” ஜெயம்” கிடைக்க வாழ்த்துக்கள்

----------------------
http://2.bp.blogspot.com/_YcU7A6403D0/TUHOrQ1qX6I/AAAAAAAAASo/SDA7_5aiZfU/s1600/kiran003.jpg
6.ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்

-------------------------------

7.கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்-கருணாநிதி#உங்க குடும்பத்துல யார் யார் இருக்காங்கன்னு எங்களுக்கே தெரியுமே? நீங்க சொல்லனுமா? தலைவரே,.

----------------------

8.தங்கபாலு-வேட்பாளர் தேர்வு, நான் மட்டும் முடிவு செய்வது அல்ல#ஆமா சம்சாரத்தைக்கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாரு,ஆனா கவுத்துடுவாரு

------------------------

9.உதயநிதி தனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்.#ஜெயான்னு வைங்க.அப்பவாவது அய்யா ஜெ த்வேஷத்துல இருந்து மாறட்டும்
 http://mimg.sulekha.com/sherin/stills/sherin-newhot06.jpg
_-----------------------------

10. சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் பாடலை ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர்.#வானம் வந்தா ஏழரை யாருக்குன்னு தெரிஞ்சிடும்?


-----------------------------