Showing posts with label RAJINI. Show all posts
Showing posts with label RAJINI. Show all posts

Thursday, December 06, 2012

Thursday, November 29, 2012

ரஜினி - மணிரத்னம் இணையும் படம் - காமெடி கலாட்டா



http://www.cinesouth.com/images/new/pwed-4.jpg



ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது. இந்த படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.



ரஜினி உடல் நலம் குணமான பிறகு 'கோச்சடையான்' படத்தில் நடிக்க துவங்கினார். இப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கினார். படப்பிடிப்பு முடிந்து 'டப்பிங்' ரீ ரிக்கார்டிங் பணிகள் நடக்கின்றன. விரைவில் ரிலீசாக உள்ளது.



இதையடுத்து புதுப்படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை இயக்குவதற்கு மணிரத்னத்தை அவர் தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



கதை விவாதமும் துவங்கி விட்டதாம். மணிரத்னம் ஏற்கனவே ரஜினியை வைத்து தளபதி படத்தை டைரக்டு செய்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைகின்றனர். கடல் படத்தை முடித்து ரிலீஸ் செய்யும் முயற்சியில் மணிரத்னம் தீவிரமாக உள்ளார்.



இப்பணிகளை முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்க வருகிறார். தயாரிப்பாளர் மற்றும் இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. 


நன்றி - மாலை மலர் 

http://www.rajinilive.com/wp-content/uploads/2008/12/rajini-kamal.jpg

1. மணிரத்னம் - நாம 2 பேரும் ஒரு படம் பண்றோம். 


ரஜினி - புராணத்துல இருந்து கதை உருவாதீங்க.சுகாசினி வசனம் வேணாம் 



2. ரஜினி - தளபதி ,நாயகன் மாதிரி தாதா கதை வேணாம் . 



மணிரத்னம் - தாத்தா கதை ஓக்கே?.ஐஸ்வர்யாராய் குழந்தை கால்ஷீட் ரெடி 



3. ரஜினி - என் பொண்ணை அசிஸ்டெண்ட்டைரக்டரா சேர்த்துக்குங்க 



. மணிரத்னம் - அது எனக்கு ஓக்கே.என் சம்சாரம் ஒத்துக்கனுமே? 


4.  ரஜினி - கடல் ஹிட் ஆகட்டும்.நாம இணைவது பற்றி பேசுவோம். 



மணிரத்னம் - அதே மாதிரி கோச்சடையான் ஹிட் ஆகட்டும்னு சொன்னா ? 




5. மணி - மகாபாரதத்துல இருந்து ஒரு கதை.நீங்க தருமர்.நயன் தாரா தான் பாஞ்சாலி.



 ரஜினி - அப்போ சிம்பு தான் வில்லனா? என்ன கொடுமை மணி இது? 




6. மணிரத்னம் ஹி ஹி RT : ungala madhiri masala padam pakravangaluku maniratnamnu solla kuda thagudhi illa.. 





7. இங்கேயும் சைபர்? கி கி RT : karthik.. These guys are .. Just leave them





8. சுஹாசினி - ஆச்சரியம்! உங்களுக்கு ட்விட்டர்ல கூடரசிகர்கள் இருக்காங்களா? 



 மணி - பேக் ஐடிகள் தானா உருவாகாது.நாமதான் உருவாக்கனும் 







Rajini’s next with Mani Ratnam?
For most Kollywood directors, to have ‘Rajinikanth’ on the CV is to have arrived. No two ways about it. But of late, given his precarious health condition, the Superstar’s acting career has had to take a back seat. His choice of films has been a lot more constrained, with Kochadaiyaan being the only current project.
Now comes the news that there is the possibility of Mr. Robot himself offering his services to a select director. DC has learnt from sources in ace filmmaker Mani Ratnam’s office that the Superstar has initiated talks with Mani on a new project.



Mani Ratnam, who is currently in the process of releasing the audio for his upcoming magnum opus, Kadal, did one film, Thalapathi, with Rajinikanth two decades ago, which was set in a contemporary milieu at the time of its release and was a critical and commercial success.



This new development comes as the most pleasant surprise for fans that have had to accustom themselves to Rajini’s tendency to decline offers, considerably reducing his output over the years.
To add a twist in the tale, only a few days ago, Ulaganayagan Kamal Haasan, whose cult classic, Nayagan, with Mani Ratnam completed 25 years, expressed an inclination to collaborate with the latter once again. 




This could very well turn out to be quite a few interesting months ahead for Mani!



நன்றி - டெக்கான் கிரானிக்கல்


Friday, November 09, 2012

ரஜினியையே மிரள வைத்த சிங்கம் புலியின் காமெடி கலக்கல் ஃபிளாஸ்பேக்

http://3.bp.blogspot.com/-qcJOahhcl_k/T9QjkCvLNII/AAAAAAAABkU/FivvUWhQTfY/s1600/9.jpg 
 
நீ நல்ல திருடன்டா ?

எஸ்.கலீல்ராஜா
சின்ன வயசுல டூரிங் டாக்கீஸ்ல 'மனோகரா’ படம் பார்த்துட்டு இருந்தேன். அதுல வில்லன் ஆக்ரோஷமா 'கேசரி வர்மா’, 'கேசரி வர்மா’னு கத்துனான். 'யோவ், ரவையைப் போட்டுக் கிண்டுனா கேசரி தன்னால வரும்யா’னு சத்தமா கமென்ட் அடிச்சேன். தியேட்டரே கை தட்டிச் சிரிச்சது. பின்னாடி இருந்து பொடனியில படீர்னு அடிவிட்டார் சிவாஜி ரசிகர் ஒருத்தர். அப்படி ஆரம்பிச்சதுதான் நம்ம காமெடி வாழ்க்கை'' - ரசித்துச் சிரித்தபடி தன்னுடைய காமெடி அனுபவங்களைப் பேச ஆரம்பிக்கிறார் சிங்கம்புலி.



''ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு அனுபவம்தான். நாம கொஞ்சம் சேட்டை பார்ட்டி. அதனால, ரகளைக்குப் பஞ்சமே கிடையாது. 'அருணாச்சலம்’ ஷூட்டிங் நடந்தப்போ நான் சுந்தர்.சி-யோட அசிஸ்டென்ட். எல்லாப் படங்கள்லேயும் ரஜினி பணம் சம்பாதிக்கக் கஷ்டப்படுவார். ஆனா, அந்தப் படத்துல செலவழிக்கக் கஷ்டப்படுவார். அப்படி ஒரு கதை. ரகுவரன் அண்ட் கோவைப் பழி வாங்க ரஜினி பார்ல உட்கார்ந்து 'இனிதான் ஆரம்பம்’னு ஒரு லெட்டர் எழுதுவார்.



 அந்த லெட்டரை ஆர்ட் டிபார்ட்மென்ட்ல எழுதிக் கொடுத்தாங்க. ரஜினிக்கு அந்தக் கையெழுத்து பிடிக்கலை. உடனே எல்லாருக்கும் ஒரு பேப்பர் கொடுத்து எழுதச் சொன்னாங்க. நான் எழுதினது ரஜினிக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. 'யார் கையெழுத்து இது?’னு சுந்தர்.சி விசாரிக்க, 'சிங்கம்புலி’னு சொல்லியிருக்காங்க. அவருக்கு பயங்கர ஷாக். 'அப்படி ஒரு பேர்ல எனக்கு ஒரு அசிஸ்டென்ட் இருக்கானா?’னு மிரண்டுட்டார். ஏன்னா, அவருக்கே தெரியாம அவர் அசோசியேட் மூலமா அவருக்கு அசிஸ்டென்ட்டா நான் வொர்க் பண்ணிட்டு இருந்தேன்.

 http://gallery.southdreamz.com/cache/actors/singam-puli-director/jeeva-divya-spandana-singam-puli-still-photos-32_720_southdreamz.jpg


 உடனே ரஜினி 'பேரு சிங்கம்புலியா... நல்லா இருக்கே. படத்துக்கு டைட்டில்கூட வைக்கலாம்’னு உற்சாகமாகிட்டார். ஷூட்டிங் முடிஞ்சதும் ரஜினி கிளம்பும்போது என்னைப் பார்த்து 'இன்னைக்குத்தான் ஆரம்பமா?’னு சிரிச்சார். அன்னைக்கு ராத்திரி முழுக்கத் தூக்கமே வரலை.



ஜூரிச் போய் இருந்தோம் 'ரிஷி’ படத்துக்காக. சரத்குமார், மீனா, பஞ்சு அருணாச்சலம்னு ஒரு பெரிய கேங். ராத்திரி 11 மணி. அறையைவிட்டு வெளியே வந்தேன். தூரத்துல ஒரு பார் தெரிஞ்சது. அங்கே போய் சாப்பிடக் கீழே இறங்கினா, ரிசப்ஷன்ல பயங்கரக் கூட்டம். அங்கே வாழ்ற தமிழர்கள் சரத்தையும் மீனாவையும் பார்க்கக் கிளம்பி வந்துட்டாங்க.



''அவங்க ரெண்டு பேர்கூட எப்படி யாவது போட்டோ எடுக்கணும்னு வந்திருக்கோம். அவங்க ரூம் நம்பர் தெரியலை''னு சொன் னாங்க. 'இப்போ அவங்களைப் பார்க்க முடியாது’னு கலைஞ்சு போகச் சொன்னேன். 'நீங்க எங்கே இந்நேரம் வெளியில போறீங்க?’னு கேட்டாங்க. விஷயத்தைச் சொன்னதும், 'எங்க ஊருக்கு வந்துட்டு நீங்க செலவு பண்ணக் கூடாது’னு சொல்லி, எக்கச்சக்கமா சரக்கு வாங்கிக் கொடுத்துட்டாங்க. போதையில அன்பாகி, 'நோட் பண்ணிக்கோங்க,  மீனா ரூம் நம்பர் 107, சரத்குமார் ரூம் நம்பர் 112,  செகண்ட் ஃப்ளோர் ரைட் சைடு’னு சொல்லிட்டு, என் ரூம்ல போய் செட்டில் ஆகிட்டேன்.



மறு நாள் காலையில நாலு மணிக்கு எந்திருச்சு கீழே வந்தா... சரத், மீனா சிவந்த கண்ணோட, ரொம்ப டயர்டு ஆகி போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. போட்டோ ஷூட்லாம் முடிஞ்சதும் 'எவன் எங்க ரூம் நம்பர்லாம் சொன்னான்னு தெரியலை. திபுதிபுனு வந்துட்டாங்க. நைட்டு ஃபுல்லாத் தூக்கம் இல்லாம போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருந்தோம்’னு ரெண்டு பேரும் புலம்பினாங்க. 'ஆஹா! போதையில போட்டுக்கொடுத்துட்டோமே’னு நான் நைஸா எஸ்கேப் ஆகிட்டேன். இன்னைக்கு வரைக்கும் ரூம் நம்பர் சொன்னது நான்தான்னு சரத்துக்கோ மீனாவுக்கோ தெரியாது!




சுவிட்சர்லாந்து போய்ட்டு வந்தப்ப ஃப்ளைட்ல ஒரு போர்வை கொடுத்தாங்க. அழகா எம்ப்ராய்டரி பண்ணி, பளிச்சுனு இருந்துச்சு. எனக்கு அதை வீட்டுக்குக் கொண்டுவந்துடணும்னு ஆசை. ஏர்போர்ட்ல பிடிச்சுக்கிருவாங்களோனு பயம் வேற. சென்னை வந்து இறங்கினப்ப, பஞ்சு அருணாசலம் சார்கிட்ட... 'சார், குளிர்அடிக்குதா?’னு அவருக்கு அந்தப் போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டேன்.




 அவர் போர்த்திட்டுப் போனதால யாரும் எதுவும் கேட்கலை. 'புலி உன்னை மாதிரி ஒரு புள்ளை பொறக்கணும்டா’னு பயங்கரமா நெகிழ்ந்துட்டார். கார் பார்க்கிங் வந்ததும் நான் பெட்ஷீட்டை எடுத்து மடிச்சு என் பைக்குள்ள வெச்சேன். திரும்பிப் பார்த்தவர், 'நீ ஒரு நல்ல திருடன்டா’னு சொல்லி சிரிச்சுக்கிட்டே போய்ட்டார்!

'நான் கடவுள்’ படத்துல ஒரு செவுட்டு சாமியார் நடிச்சார். ஷூட்டிங் அப்போ யாரோ ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் அவரை மரியாதைக் குறைவாப் பேசிட்டான்போல... கோவிச்சுக்கிட்டு கிளம்பிட்டார். 'அவரைச் சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வா’னு பாலா சொன்னதும் அவரைத் தேடி வந்தேன்.




அப்போ கொசகொசனு தாடி வளர்த்து பிச்சைக்காரன் கெட்டப்ல இருந்தேன். ஒரு பாத்திரக் கடையில போய், 'அந்தச் செவுட்டு சாமி எங்கே இருக்காரு?’னு கேட்டதும் கடைக்காரர் டென்ஷன் ஆகிட்டார். 'ஏன்டா உன் குரூப்பைச் சேர்ந்தவன் எங்க இருக்கான்னு உனக்குத்தான்டா தெரியும். என்கிட்ட வந்து கேக்குற?’னு எகிறினார். இப்படி ஒவ்வொரு இடத்திலேயும் செமையா திட்டு வாங்கி, கடைசியா ஒரு தியேட்டர்ல அவரைக் கண்டுபிடிச்சேன். அவருக்கு டெய்லி செகண்ட் ஷோ பாக்குற பழக்கம்.




தியேட்டர்ல புடிச்சு, 'இந்தப் படத்துல நடிச்சா உங்க ரேஞ்சே வேற. நிறையப் பணம் கிடைக்கும். எல்லாருக்கும் உங்களை அடையாளம் தெரியும்’னு சொன்னதும், 'தம்பி... புகழ், பணம் வேணாம்னுதான் நான் துறவி ஆனேன். இதை நீ புரிஞ்சுக்க... பாலாகிட்டயும் சொல்லு’ன்னார். பதிலைக் கேட்டு ஆடிப்போய்ட்டேன். அப்புறம், 'கூட ரெண்டு பொட்டலம் தர்றேன் சாமி!’னு சொன்னதும் 'சிவன் பாதை... சிவன் போதை!’னு கிளம்பி வந்துட்டார். அப்புறம் அவருக்கு ராஜ மரியாதைதான். 'சாமி தூங்கினாரா?’, 'சாமியார்கிட்ட யாரும் வம்பு இழுத்தாங்களா?’, 'அவர் ரூம்ல ஃபேன் ஓடுதா?’னு யூனிட்டே தவம் கிடந்துச்சு.



பாலா 'பி ஸ்டுடியோஸ்’னு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சிருந்த சமயம். அப்போ நல்ல செவப்பா, பிரெஞ்ச் தாடி வெச்சுக் கிட்டு ஒருத்தர் வந்தார். எங்களை மீட் பண்ணினவர், 'சார்... உங்க கம்பெனியை இன்டர்நேஷனல் லெவல்ல கொண்டுபோயிரலாம். அதுக்கு நிறைய கார்ப்பரேட் பிளான் வெச்சிருக்கேன்.

http://gallery.southdreamz.com/cache/actors/singam-puli-director/jeeva-divya-spandana-singam-puli-still-photos-58_720_southdreamz.jpg



இது தமிழ் சினிமாவுக்கே புதுசு’னு ஏதேதோ சொன்னார். பாலா சீரியஸாகி, 'சிங்கம்புலி வழக்கம்போல இந்த ஆளை எதுவும் காமெடி பண்ணிராதே... நாமளும் வாழ்க்கையில உருப்பட ஒரு சான்ஸ் வருது. விட்றக் கூடாது’னு அவர்கிட்ட இருந்து நம்பர் வாங்கினார். ஒரு நாள் அந்த பிரெஞ்ச் தாடிகூடப் பேசிட்டு இருக்கும்போது பெட்ரோல் பத்தி டாபிக் ஓடுச்சு. 'அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லயே பதினாலு மணி நேரம் ஆகுதுங்கிறாங்க. அதுக்கு எவ்வளவு ஒயிட் பெட்ரோல் செலவுஆகும்?’னு நான் யதார்த்தமா கேட்டேன். அதுக்கு அந்தத் தாடி, 'நாமதாங்க லூஸு மாதிரி பெட்ரோல் செலவு பண்ணிட்டு இருக்கோம். ஃபாரின்காரன்லாம் பயங்கர விவரம்’னு ஒரு பிட்டு போட்டார்.





ஆஹா! புது மேட்டர் ஒண்ணு சொல்லப்போறார்னு ரெண்டு பேரும் நிமிர்ந்து உட்கார்ந்தோம். ''ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகுதுல்ல... ஒரு லெவலுக்குப் போனதும் ஃபளைட்டை அப்டியே நிறுத்திருவாங்க. பூமி சுத்தி அமெரிக்கா வந்ததும் அப்டியே கீழே இறக்கிருவாங்க. ஏற இறங்க மட்டும்தான் பெட்ரோல் செலவாகும்’னு சொன்னாரு பாருங்க. பாலாவுக்கு முகம் பேயறைஞ்ச மாதிரி ஆகிருச்சு. என்னைத் திரும்பிப் பார்த்தவர், 'ஏன் புலி... நாம லூஸா... இல்லை அந்த ஆளு லூஸா?’னு கேட்டார். 'அண்ணே, என்னைக் காமெடி பண்ண வேண்டாம்னு சொன்னீங்க. ஆனா, அவன் நம்மளைவெச்சுக் காமெடி பண்ணிட்டு இருக்கான்!’னு சொன்னேன். பாலா சிரிச் சுட்டார்!




தேனிப் பக்கம் 'பேரழகன்’ படம் ஷூட்டிங். என்னை ட்ராப் பண்றதுக்காக சூர்யா என் வீட்டுக்கு வந்தார். என் அம்மா பயங்கரமா வாய் பேசும். அவர் வீட்டுக்கு வந்ததும், 'நீ எதுவும் வாயை விட்றாதே. எது பேசினாலும் பக்குவமாப் பேசு’னு சொன்னேன். ரொம்ப நேரம் பேசமாலேயே இருந்துச்சு. சூர்யா கிளம்பும்போது, 'பார்த்துப்பா, உங்கப்பா முருகன் வேஷமாப் போட்டு சம்பாதிச்ச காசு. பாத்து செலவு பண்ணு’னு வாயை விட்ருச்சு. அமைதியா என்னைத் திரும்பிப் பார்த்து 'நல்ல அம்மா... நல்ல புள்ளை’னு சொன்னார். அதுக்கப்புறம் எப்போ வீட்டுக்குக் கூப்பிட்டாலும், 'இல்லைஜி... உங்க வீட்டுல அம்மா இருப்பாங்கள்ல... நான் அப்புறம் வர்றேன்!’னு எஸ்கேப் ஆகிருவார்.




அஜித்தோட 'உன்னைத் தேடி’ ஷூட்டிங்குக்காக ஜெர்மன் போயி ருந்தப்ப அவர்கூட ஒரு நாள் ஷாப்பிங் போயிருந்தேன். அவர் கடைக்குள்ள ஷாப்பிங் பண்ணிட்டு இருக்க, நான் ஷாப்பிங் மாலை சுத்திப் பார்த்துட்டு இருந்தேன். அங்கே ஐஸ்வர்யா ராயைவிட அழகான பொண்ணு ஒண்ணு, அதே ஜாடையில யார் மடியிலோ படுத்துட்டு இருந்துச்சு. எனக்கு ஆச்சர்யம் தாங்கலை. நேரா அஜித்கிட்ட போய்,  'ஜி ஐஸ்வர்யா ராய் மாதிரியே ஒரு பொண்ணு இருக்கு. பேசிப் பார்க்கலாம்.



 ஓ.கே-னு சொன்னா சினிமாவுல நடிக்கவைக்கலாம்’னு சொன்னேன். அவர் 'எதுக்குத் தேவை இல்லாத வேலை புலி; கௌம்பலாம்’னு சொன்னார். நான் விடலை. நானும் அவரை நச்சரிச்சுக் கூட்டிட்டுப் போனேன். என்கூட வந்தவர், அந்தப் பொண்ணைப் பார்த்ததும் செம டென்ஷன் ஆகிட்டார். 'யோவ், இது ஐஸ்வர்யா ராய்தான்யா.. அங்கே ராஜீவ் மேனன் நிக்குறார் பாரு. சாங் எடுக்க வந்திருக்காங்க. உனக்குப் பொண்ணைப் பார்த்தா கண்ணு போயிருமே. விட்டா என்கிட்டயே, நான் அஜித் மாதிரி இருக்கேன்னு சொல்லுவபோல’னு செம பரேடு. அப்புறம் அஜித் புண்ணியத்துல ஐஸ்வர்யா ராய்கிட்ட நாலு வார்த்தை ஜொள்ளிட்டுக் கிளம்பினேன்!


http://gallery.southdreamz.com/cache/actors/singam-puli-director/jeeva-divya-spandana-singam-puli-still-photos-94_720_southdreamz.jpg

 நன்றி - விகடன்

Saturday, September 01, 2012

ஜெ முன் ரஜினியின் சர்ச்சைக்குரிய மேடைப்பேச்சு

கலைஞரின் புகழ்!''

ஜெயலலிதா முகத்துக்கு நேரே கருணா நிதியைப் புகழ்ந்து பேசி, பரபரப்பு அரசியலுக்கு விதை போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!


மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் ஜெயா டி.வி-யின் 14-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்தது. விழா அழைப்பிதழில் ஜெயலலிதா பெயரைத்தவிர வேறு பெயர்கள் இல்லை.


 ரஜினி, கமல் மேடையேறுவதைக்கூட கடைசிவரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன்பே ரஜினி, கமல், கே.பாலசந்தர், இளையராஜா, ஏவி.எம்.சரவணன் ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டனர். ஜெயலலி தாவைச் சேர்த்து எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக் கைகள். எம்.எஸ்.வி-க்கும் ராமமூர்த்திக்கும் 'திரை இசை சக்கரவர்த்தி’ விருதை அளித்து பொற்கிழிகள் வழங்கி கார்களையும் பரிசளித்தார் ஜெயலலிதா.


இதில் ரஜினி பேச்சுதான் ஹைலைட்!



''ஜெயா டி.வி-யில் சோ எழுதிய 'எங்கே பிராமணன்’ நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த் தேன். திடீரென்று அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அதை தொடராமல் இருப்பது தெரியவர... அவரிடமே கேட்டேன். 'முதல்வர் ஜெயலலிதாவும் இதையே என்னிடம் கேட்டார். தொடர முடியாத காரணத்தை அவரிடம் சொல்லிவிட்டேன்’ என்றார். இதில் இருந்து தெரிவது என்னவென்றால், முதல்வர் சொல்லியும் கேட்காத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சோ மட்டும்தான்'' என்று ரஜினி சொன்னபோது எதிரே உட்கார்ந்திருந்தார் சோ. ரஜினியைப் பார்த்து கையை நீட்டிவிட்டு, அப்படியே சீரியஸாக தலையில் வைத்துக் கொண்டார் சோ. இதை அங்கே இருந்த திரையில் காட்ட... கூட்டத்தினர் ரசித்துச் சிரித்தனர்.






தொடர்ந்து பேசிய ரஜினி, ''ஒவ்வொரு மனிதனும் இரண்டு முறை இறக்கிறான். பேரும் புகழும் பெற்றவர்கள் அதை இழக்கும்போது அவர்களுக்கு ஒரு முறை மரணம் நேரும். இரண்டாவது, உடலில் இருந்து உயிர் பிரியும்போது ஏற்படும். சாகாவரம் பெற்றவர்கள் இறந்தாலும் அவர்களின் புகழ் மறையாது. தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் மறைந்தாலும் அவர்கள் புகழ் மறையவில்லை. அந்த வகையில் இப்போது அரசியலில் இருக்கும்....'' என்று லேசாக நிறுத்திய ரஜினி...



''என் ஆருயிர் நண்பர் கலைஞர்'' என்று சொல்லி அதிர வைத்தார். மேடையில் இருந்த முதல்வரின் முகம் மாற ஆரம்பித்தது. தொடர்ந்து பேசிய ரஜினி, அடுத்ததாக,




''புரட்சித் தலைவி போன்றவர்களின் புகழ் என் றும் அழியாது'' என்றும் சொல்லி வைத்தார். எப்போதும் ரஜினியின் வாய்ஸ் சர்ச்சைக் குரியதாகவே ஆகும். முன்பு, ஜெயலலிதாவை எதிர்த்து வாய்ஸ் வந்தது. இப்போது, ஜெயலலிதா முன்பே கருணாநிதியை புகழ்ந்து!



  - எம். பரக்கத் அலி

''கருணாநிதிக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது?''


''ஜெயலலிதாவை  மேடையில் வைத்துக் கொண்டு  கருணாநிதியைப் புகழ்ந்தாரே ரஜினி?'' என்று, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான பழ.கருப்பையாவிடம் கேட்டோம். ''அம்மா முன்னிலையில் ரஜினி பேசியதை நானும் கேட்டேன். 'புகழ் பெற்றவர்கள் இருமுறை சாகிறார்கள். ஒன்று உடலை விட்டு உயிர் நீங்கும் போது. இன்னொரு முறை புகழ்நிலையில் இருந்து சரிவுறும் போது.’ இப்படிச் சொல்லிக் கொண்டு வந்தவர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் என்று வரிசைப்படுத்தி, இவர்களுக்குகெல்லாம் ஒருமுறைதான் மரணம் ஏற்பட்டதென்றார்.



அவர்கள் வாழும் போது புகழை இழந்து மனஉளைச்சலுக்கு ஆகாதவர்கள் என்பதால், வாழும்போது சாகாதவர்கள் என்பது அதன் பொருள். இந்த வரிசையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் சேர்த்தார்.



ரஜினிகாந்த்தின் ஆராய்ச்சி சரியானதுதானா? தமிழுக்காகவும் தமிழனத்துக்காகவும் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, மைய ஆட்சியிலும், அங்கம் வகித்துக் கொண்டு, சோனியா காந்தியின் சொந்த நோக்கத்துக்குத் துணைபோய், கசாப்புக்கடைக்காரன் ராஜபக்ஷே ஈழத்தை சுடுகாடாக்கும் வேளையில் தமிழ்நாடு பொங்கி எழுந்து விடாமல் பல நாடகங்களை ஆடி, இன அழிவுக்குக் காரணமான கருணாநிதிக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது?



காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்து தி.மு.க-வை விலக்கிக் கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். போர் நின்றிருக்கும். ஈழத் தமிழினம் காக்கப்பட்டிருக்கும். அந்த ஒன்றைக் கருணாநிதி செய்திருந்தால் அரசியல் ரீதியான திறனாய்வுகள் அப்போதும் இருக்கும் என்றாலும் 'இனம் அழியக் காரணமானவர்’ என்னும் 'வரலாற்று இழிவுக்கு’ உள்ளாகி இருக்க மாட்டார்.



 ரஜினிகாந்த் சொல்லிய வாழும் போதே அடையும் இன்னொரு மரணம் இதுவாக இருக்கலாம். ஒரு கருதுகோளை முன்வைத்து அதைத் திறம்பட வளர்த்து முடிக்க ரஜினிகாந்த் பழக்கப்பட்டிருக்கவில்லை. உண்மையிலேயே ரஜினி நல்லவர். கருணாநிதி 'என் பெயரை ஏன் விட்டு விட்டாய்’ என்று கேட்டு வருத்தப்பட்டு விடுவாரோ என்னும் தாட்சண்யம் ரஜினியை அவ்வாறு சொல்ல வைத்து விட்டது!''



கழுகார் பதில்கள்

மா.சந்திரசேகர், மேட்டு மகாதானபுரம்.


ஜெயலலிதா, மாயாவதி, மம்தா போன்றவர்களைப் பார்க்கும்போது பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணமே அடிபட்டுப் போய்விடுகிறதே? 


  அதிகார போதை அனைவரையுமே மாற்றி விடுகிறது. இதில் ஆண், பெண் பேதம் இல்லை. அரசியலில் இருக்கும் ஆண்கள் எல்லாம் சரி யானவர்களா என்ன?


தேசிய இயக்கத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி யும், திராவிட இயக்கத்தில் மூவலூர் ராமாமிர்தமும், கம்யூனிஸ இயக்கத்தில் ஜானகி அம்மாளும் இருந்த தமிழ்நாட்டு அரசியல்தான் இது. அம்புஜம் அம்மாளின் தியாகம் இங்கு மறக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று. எனவே, அதிகார அரசியலில் ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது!


 போடி எஸ்.சையது முகமது, சென்னை-93.


  '2ஜி உள்ளிட்ட ஊழல்களுக்குப் பிரதமர் அரசியல் ரீதியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்தார்’ என்று பி.ஜே.பி. குற்றம் சாட்டுவதில் உண்மை உள்ளதா? 


  நிச்சயமாக! எந்த முறைகேட்டிலும் பிரதமருக்குப் பங்கு போனது என்று இதுவரை மன்மோகனின் அரசியல் எதிரிகள்கூடச் சொல்லவில்லை. ஆனால், அவரது மௌனம்தான் இங்கே விமர்சிக்கப்படுகிறது. தானே ஒரு காரியத்தைச் செய்வது அல்லது அந்தக் காரியத்தை யாரோ செய்யும்போது கண்டும் காணாமல் இருப்பது என இரண்டுமே தவறுதான். இரண்டாவது தவறைத்தான் இரண்டு முறை பிரதமராக இருக்கும் போதும்  மன்மோகன் அதிகமாகச் செய்திருக்கிறார்.


 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.


  நிலக்கரி ஊழலை அம்பலப்படுத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை, மத்திய மந்திரிகள் விமர்சிப்பது உரிமை மீறல்தானே? 



  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று தலை மைக் கணக்குத் தணிக்கை. அதை, அரசியல் ரீதியாக விமர்சிப்பது, உரிமை மீறல் மட்டுமல்ல, அந்த அதிகார அமைப்பை அரசியல் ரீதியாக அச்சுறுத்துவது ஆகும்.


ஆட்சியில் யார் இருந்தாலும், அரசாங்கப் பணம் முறையாகச் செலவு செய்யப்பட்டு உள்ளதா, விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பதைக் கண்காணிப்பவர்கள் அவர்கள். பாரதிய ஜனதாவின் எத்தனையோ நடை முறைகளை இவர்கள் கேள்வி கேட்டவர்கள்தான். எனவே, அந்த அமைப்பை காங்கிரஸ் அமைச்சர்கள் கொச்சைப்படுத்துவது, அரசியல் அமைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை யின்மையைத்தான் காட்டுகிறது!


 இரா.தோணி, தூத்துக்குடி.


பரவாயில்லையே... ஒழுங்கு நடவடிக்கைக்காக நோட்டீஸ்கூட அனுப்புகிறதே காங்கிரஸ்? 


  விவகாரம் ஜெயந்தி நடராஜன் சம்பந்தப்பட்டது என்பதால் அனுப்பு கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸில் எத்தனையோ ஒழுங்குமீறல்கள் தினமும் நடக்கின்றன. அதையெல்லாம் டெல்லி மேலிடம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. டெல்லியில் செல்வாக்கான ஜெயந்திக்கு ஒரு பிரச்னை என்றதும் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். மற்றபடி, 'ஒரு கண்ணில் வெண்ணெய்... இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்பதுதான் எப்போதும் டெல்லித் தலைமையின் ஃபார்முலா!


பொன்விழி, அன்னூர்.


சுவிஸ் வங்கியில் பணம் போட என்ன தகுதி வேண்டும்? 


  சுயசம்பாத்தியமாக இருக்கக் கூடாது!


 வி.ஜி.சத்தியநாராயணன், நங்கநல்லூர்.


  'நிலக்கரி ஒதுக்கீட்டில் அரசுக்கு எவ்விதமான நஷ்டமும் இல்லை’ என்று ப.சிதம்பரம் கூறிவிட்டாரே? 


  அப்படிச் சொல்லவில்லை என்றும் சிதம்பரம் சொல்லி விட்டாரே. இப்படித்தான் சில நாட்களுக்கு முன், விலைவாசி உயர்வு பற்றி ஒரு கருத்தைச் சொன்னார். அது சர்ச்சை ஆனதும் அப்படிச் சொல்லவில்லை என்றார். பொதுவாக, எந்தச் செய்தியைச் சொன்னாலும் அழுத்தம் திருத்தமாக வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசக்கூடியவர் சிதம்பரம். அவரது வார்த்தைகளை பத்திரிகைக்காரர்கள் மாற்றி எழுதி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.


க.ராமராஜ், கோவில்பட்டி.


முந்தைய பி.ஜே.பி. ஆட்சிக்கும் இன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கும் நாளைய பி.ஜே.பி. ஆட்சிக்கும் இடையே இந்தியாவின் முன்னேற்றம்..? 


நாளை பி.ஜே.பி. ஆட்சி என்பது உங்களது எதிர்பார்ப்பு. அதுபற்றி இப்போது கருத்துச் சொல்ல முடியாது!


முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் ஒரு சில துறைகளில் மட்டும்தான் இருந்தன. ஆனால் இன்று, பெரும்பாலான துறைகளுக்கும் பரவி விட்டது. லட்சம், கோடி என்று பரிணாமம் அடைந் துள்ளது. விலைவாசியும் எகிறிவிட்டது. அதைவிட மிகமுக்கியமான வேறுபாடு, பொதுமக்கள் மீது இன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அலட்சியம், பாரதிய ஜனதா தலைவர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் மக்களைப் பார்த்துப் பயந்தார்கள். அந்தப் பயம், இன்றைய மத்திய மந்திரிகளுக்கு இல்லை!


 அ.ராஜா ரஹ்மான், கம்பம்.


  மறைந்த பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனிடம் தங்களைக் கவர்ந்த அம்சம் எது?
  எதையும் சுவாரஸ்யமாய்ச் சொல்வது. நேரடிப் படைப்பா அல்லது மொழிபெயர்ப்பா என்று தெரியாதது மாதிரி இயல்பாக இருக்கும் அவரது மொழிபெயர்ப்புகள். 'பட்டாம்பூச்சி’ அவரது மொழிபெயர்ப்புகளில் சிறந்த ஒன்று. 'நான் கிருஷ்ணதேவராயர்’ அவரது எழுத்தின் மகுடம். கிருஷ்ணதேவராயரே தனது சொந்தக் கதையைச் சொல்வதாக அது அமைந்திருக்கும். தொழிலுக்காகவோ, சம்பளத்துக்காகவோ இல்லாமல் எழுத்துக்காகவே எழுதியவர்!


 இ.சிகாமணி, அத்தனூர்.


  பயப்படாமல் சொல்லுங்கள்... அழகிரி, ஸ்டாலின் ஆகிய இருவரில் யார் திறமைசாலி? 


  டெஸ்ட் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் இருவரும். ரிசல்ட்டை அவுட் பண்ணக் கூடாது!

hared Junior Vikatan's photo.




நன்றி - ஜூ வி

Thursday, August 23, 2012

ரஜினி, கமல் இணையும் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஏ வி எம் படம்

ஒண்ணா ஒரு படம்!"


ஆசைப்பட்ட ரஜினி... ஆல்ரைட் சொன்ன கமல்

எம்.குணா



'சகலகலா வல்லவன்’, 'ஜெமினி’ என்று அவ்வப்போது கோலிவுட் டிரெண்டைப் புரட்டிப் போடும் ஏவி.எம்மின் இப்போதைய அஸ்திரம்... 3D! ரஜினியின் 'சிவாஜி’க்கு '3D’ டச் வேலை நடக்கிறது பிரசாத் ஸ்டுடியோவில். பிரசாத் லேப்புடன் இணைந்து செயல்படும் ஏவி.எம். இந்த '3D புராஜெக்ட்டுக்கு என ஒதுக்கிஇருக்கும் பட்ஜெட்... 16 கோடி. ஏவி.எம். சரவணனிடம் பேசினால் பல ஆச்சர்யத் தகவல்களைக் கொட்டுகிறார்.



சி.பி - 3 டி படம் பெரிசா ஏதும் சாதிக்கப்போவதில்லை.. இது ஒரு வியாபார தந்திரமே, சிவாஜி ரிலீஸ் பண்றப்பவே ஏன் அப்டி 3டில ரிலீஸ் பண்ணலை? இதுக்கெல்லாம் ஏமாந்து ரசிகர்கள் தங்கள் பணத்தை வேஸ்ட் பண்ணுவாங்கன்னு தோணலை, ஒரு வேளை ரஜினியின் தீவிர ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.

''இது திடீர்னு எடுத்த முடிவு இல்லை. கடந்த ஒரு வருஷமா 400 பேர் கொண்ட டீம் மூணு ஷிப்ஃட்டா வேலை பார்த்துட்டு இருக்காங்க. இது சம்பந்தமா பேசணுமேனு 'உங்களைப் பார்க்கணும். எப்போ வரட்டும்’னு ரஜினி சார்கிட்ட கேட்டேன். எப்பவும்போல, 'நானே வர்றேன்’னு கிளம்பி வந்துட்டார். அப்போ அவருக்கு '3D’-யில் படத்தின் டிரெய்லரையும் 'பூம்பாவாய்’ பாட்டையும் ப்ளே பண்ணிக் காட்டினோம். சின்ன குழந்தை மாதிரி கைதட்டி ரசிச்சுப் பார்த்தார். 


சி.பி - ம்க்கும், அவரு கலைஞரின் இளைஞன் படத்தையே நல்லாருக்குன்னு சொன்னவர் ஆச்சே?

http://www.bolegaindia.com/images/gossips/rajnikanth_kamal_hasan_post_1343022276.jpg



'தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுங்க சார்’னு ஐடியா கொடுத்தார். 'நான் சிவாஜி, கமல் மாதிரி நடிகன் கிடையாது. என்கிட்ட ஸ்பீடு இருக்கிறவரைக்கும் நடிப்பேன். இப்போ இந்த டெக்னாலஜி மூலமா நான் நடிச்ச நிறையப் படங்களைத் திரும்பப் பார்க்கலாம்’னு பேசிட்டே இருந்தார்.'' 



''ஆனா, 'சிவாஜி’ படம் வெளியானபோதே அதனால நஷ்டம்னு செய்திகள் வந்துச்சே?''


சி.பி - நஷ்டம் தியேட்டர்காரங்களுக்குத்தான், ஏ வி எம் நல்ல விலைக்கு வித்துட்டாங்க



''ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கங்க. 'சிவாஜி’ படத்தை நாங்க முழுக்கவே வெள்ளைப் பணத்தில் தான் தயாரிச்சோம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யில் மூணு கட்டமா கடன் வாங்கிப் படத்தைத் தயாரிச்சோம். வரவு - செலவுக் கணக்குகள் எல்லாமே சுத்தமா இருக்கும். பாதி கறுப்பு, பாதி வெள்ளை தர்றதா சொல்லி 'சிவாஜி’ படத்துக்குப் பேரம் பேசினவங்ககூட உண்டு. 'வேண்டாம்’னு மறுத்துட்டோம். 'சிவாஜி’ படத்தை அப்போ வாங்கி வெளியிட்ட எல்லோருமே நஷ்டமாகாமல் சம்பாதிச்சாங்க அதுதான் உண்மை. அப்படி யாராவது நஷ்டம் அடைஞ்சோம்னு சொன்னாங் கன்னா, அவங்க தப்புக் கணக்கு காட்டுறாங்கன்னு அர்த்தம்!''



''ரஜினி, கமல் இருவருமே ஏவி.எம். நிறுவனத்தின் செல்லப் பிள்ளைகள். நீங்க ஏன் ரெண்டு பேரையும் சேர்த்து நடிக்கவெச்சு ஒரு படம் எடுக்கக் கூடாது?''


http://www.bestofvizag.com/images/movies/rajini-bala-kamal.jpg

''இதையேதான் அவங்களும் சொன்னாங்க. ஒரு நாள் ரஜினி சார் என்னைச் சந்திக்க வந்தார். என் அறையில் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். அப்போ திடீர்னு கமல் சாரும் என்னைப் பார்க்க வந்துட்டார். அது ரொம்ப யதேச்சையா அமைஞ்ச சந்திப்பு. 'என் கேரியர்ல தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜினு எத்தனையோ பேர்கிட்ட பழகி இருக்கேன். ஆனா, அவங்ககிட்டலாம்  இல்லாத ஒரு பண்பு உங்க ரெண்டு பேர்கிட்டயும் இருக்கு. உங்ககிட்ட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கொஞ்சம்கூட இல்லை. இது ரொம்ப ஆச்சர்யம்’னு சொன்னேன். 



சி.பி - பொறாமை இல்லைன்னு சொல்ல முடியாது, இல்லாம இருந்தா நல்லதுன்னு வேணா சொல்லலாம், நல்லவனுக்கு நல்லவன் - எனக்குள் ஒருவன் , தளபதி - குணா  ரிலீஸ் காலகட்டத்துல எப்படி எல்லாம் பரஸ்பரம் புகைஞ்சாங்க என்பது நாடறிந்த ரகசியம்



அதுக்கு கமல், 'ஒரு வேளை நானும் ரஜினியும் பாலசந்தர் ஸ்கூல்ல இருந்து வந்ததால இருக்கலாம்’னு சொன்னார். அப்போ ரஜினி, 'நான் சினிமாவுக்கு வந்தப்போ கமல் பெரிய ஹீரோ. 'நினைத்தாலே இனிக்கும்’ ஷூட்டிங்ல அவர்தான் ஸ்டார். சிங்கப்பூர்ல வாரக் கணக்கா ஷூட்டிங் நடந்தப்போ பல சமயம் பஸ்ல போயிட்டு இருப்போம். அப்போலாம் கமல் பக்கத்துல உக்காந்து இருக்குற நான், அவர் தோள்ல சாய்ஞ்சு அப்படியே தூங்கிடுவேன்.


அவரும் என்னைத் தட்டிக் கொடுத்து என் தூக்கம் கலையாமப் பார்த்துக்கிட்டார். நான் அவரை நண்பனா நினைக்கிறதுக்கு முன்னாடியே அவர் என்னை நண்பனா ஏத்துக்கிட்டார்’னு பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார். அப்படியே பல விஷயங்கள் பேசிட்டு இருந்தப்ப திடீர்னு ரஜினி சார், 'கமல்... ஒண்ணா ஒரு படம்... நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசையா இருக்கு’னு சொல்லிட்டு கமலையே பார்த்தார். கமல் கொஞ்சம்கூட யோசிக்கலை. 'தாராளமா நடிக்கலாமே... அப்படி நாம சேர்ந்து நடிக்கிற படத்தை சரவணன் சாரே தயாரிக்கட்டும்’னு சொல்லிட்டார்.



ஒருத்தர் உலக நாயகன்... இன்னொருத்தர் சூப்பர் ஸ்டார். ரெண்டு பேருக்குமே என்னைவிட நிறைய சினிமா தெரியும். ரெண்டு பேருக்கும் சம்பளமும் ரொம்பப் பெருசு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. 'உங்க ரெண்டு பேரையும் நடிக்கவெச்சு வேலை வாங்குற திறமை பாலசந்தர் சார்கிட்ட மட்டும்தான் இருக்கு’னு சொன்னேன். ரெண்டு பேருமே சிரிச்சாங்க. அவங்க ஓ.கே. சொல்லிட்டாங்க. இனி, நாங்க தான் மெனக்கெடணும். பார்ப் போம்'' என்று வழக்கமான அமைதிப் புன்னகையுடன் வழியனுப்புகிறார் சரவணன்.


சி.பி - எதிர்பார்ப்பு எகிறிக்கும். அதுக்கு தகுந்தபடி ஸ்க்ரிப்ட் பக்காவா இருக்கனும்.. இல்லைன்னா ஓவர் எக்ஸ்பெக்டேஷனே படத்துக்கு வில்லனா அமைஞ்சுடும்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெற வாழ்த்துகள் 
http://newzstreet.com/uploads/news-files/rajini_and_kamal_work_together_haihoi_189.jpg


நன்றி - விகடன்

Monday, August 20, 2012

Bicentennial Man (1999) -ஷங்கர்-ன் எந்திரன் -ன் மூலம்- ஒரு பார்வை

http://ecx.images-amazon.com/images/I/51PBTXBTSFL._SL500_AA300_.jpg

ரோபோ, ஒரு பெண்ணை உருகி உருகிக் காதலித்தால்? பஸ்களைக் கவிழ்த்து அட்டகாசம் செய்யாமல் உணர்ச்சிகளால் நிரம்பிய சாந்தமான மனிதனாக வாழ்ந்தால்? அப்படியொரு ரோபோ படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது! க்ரிஸ் கொலம்பஸ் இயக்கியிருந்த அந்தப் படத்தின் பெயர் Bicentennial Man.



தமது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக ‘ஆண்ட்ரு’ என்கிற ரோபோவை வாங்கி வருகிறார் மார்ட்டின். சுட்டியாகவும் அறிவாளியாகவும் இருக்கும் ஆண்ட்ருவை, மார்ட்டினின் மூத்த மகளுக்குப் பிடிப்பதில்லை. குழந்தைகளுக்கே உரிய வெறுப்பின் காரணமாக ரோபோவை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறாள். ஆனால், முயற்சிகள் தோல்வியடைகின்றன. வெறுப்பின் உச்சகட்டமாக வீட்டு மாடியில் இருந்து குதிக்கும்படி ரோபோவுக்கு உத்தரவிடுகிறாள். ஆண்ட்ரு, எஜமானியின் உத்தரவுக்குக் கட்டுப்படுகிறது. ஆண்ட்ருவின் பெரும்பகுதிகள் நொறுங்கிப் போகின்றன.



கோபமடையும் மார்ட்டின், ரோபோவை நமது குடும்ப உறுப்பினரைப் போலவே நடத்த வேண்டும் என மகள்களிடம் கண்டிப்புடன் உத்தரவிடுகிறார். ‘ரிப்பேர்’ செய்யப்பட்டு வீடு திரும்பும் ஆண்ட்ரு அந்த வீட்டின் ஒரு செல்லப்பிராணி ஆகிறது. ஒரு கட்டத்தில் இன்னொரு உறுப்பினராகவே மாறுகிறது. தவிர, மகள்களின் உற்ற தோழனாகவும் மாறிவிடுகிறது.


http://images5.fanpop.com/image/photos/25300000/Bicentennial-Man-robin-williams-25340319-2126-1433.jpg

ஒரு நாள் மார்ட்டினின் இளைய மகள் ‘லிட்டில் மிஸ்’ஸின் கைவினைப்பொருள் ஒன்றை உடைத்துவிடும் ஆண்ட்ரு, அதே போன்ற பொம்மையை, தத்ரூபமாக வடிவமைக்கிறது. ஆண்ட்ரு, சுயமாகச் சிந்திப்பதையும் அதன் க்ரியேட்டிவிட்டியையும் அறிந்துகொண்ட மார்ட்டின் ரோபோ தயாரிப்பாளர்களிடம் கொண்டு செல்கிறார். மற்ற ரோபோக்களும் ஆண்ட்ருவைப் போலத்தானா என்பதை அறிந்து கொள்வதுதான் அவரின் நோக்கம். ஆனால் ஆண்ட்ரு சிந்திப்பதை அறியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ரோபோ சுயமாக சிந்திக்கத் தொடங்கினால் எதிர்காலத்தில் விளைவுகள் விபரீதமாகிவிடும். எனவே, ஆண்ட்ருவை அழித்துவிடுவதுதான் நல்லது என்று வாதிடுகிறார்.





ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மார்ட்டின் அதைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அதோடு நில்லாமல் மனித உணர்ச்சிகளைப் பற்றிய பாடத்தை நடத்துகிறார். ஆண்ட்ரு, உணர்வுகளால் நிறைந்த மனிதனாக மாறுகிறது. மார்ட்டினிடம் இருந்து கற்றுக் கொண்ட மர வேலைகளின் மூலமாக ஆண்ட்ரு சுயமாகச் சம்பாதிக்கிறது. வங்கிக் கணக்கு தேவைப்படும் அளவுக்குக் கொட்டுகிறது வருமானம். இந்நிலையில் தமக்கு உத்தரவிடும் எஜமானர்களிடம் இருந்து விடுதலை தேவை என்பதை விரும்பும் ஆண்ட்ரு, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு மார்ட்டினிடம் அனுமதி கோருகிறது. மார்ட்டின் வேதனையுடன் அனுமதியளிக்கிறார்.



தம்மைப் போலவே வேறு ஏதேனும் ரோபோக்கள் இருக்கின்றனவா என்பதைத் தேடி அலையும் ஆண்ட்ரு, கெலேட்டி என்னும் ஒரு பெண் ரோபோவை கண்டுபிடிக்கிறது. ஆனால் அந்த ரோபோவுக்கு ஆண்ட்ருவைப் போல திறமைகள் இல்லை. கெலேட்டியை டெவலப் செய்வதற்கு அதன் உரிமையாளருக்கு ஆண்ட்ரு நிதியுதவி செய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ட்டினின் இளையமகள் ‘லிட்டில் மிஸ்’ மரணப்படுக் கையில் இருக்கும்போது அவளைக் காண வருகிறது ஆண்ட்ரு.



அவளுக்காக, சிறு வயதில் ஆண்ட்ரு செய்து கொடுத்த பொம்மை அங்கே இருப்பதை மிகுந்த காதலுடன் பார்க்கிறது. அப்போது லிட்டில் மிஸ் கண்ணை மூடுகிறாள். இந்தச் சமயத்தில் ‘லிட்டில் மிஸ்’ஸின் பேத்தி போர்ஷியா ஆண்ட்ருவுக்கு அறிமுகமாகிறாள். அச்சு அசலாக தன் பாட்டியைப் போலவே இருக்கும் அவளிடம் ஆண்ட்ருவுக்குக் காதல் பூக்கிறது. போர்ஷியா மிகுந்த குழப்பமடைகிறாள். ஆனால் அவளின் இதயத்தை தமது காதல் மிகுந்த சொற்களால் வென்றெடுக்கிறது ஆண்ட்ரு. போர்ஷியாவும் ஆண்ட்ருவை காதலிக்கிறாள்.



அவர்களின் காதலை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தம்மை மனிதனாக அறிவிக்கும்படி உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறது ஆண்ட்ரு ரோபோ. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு ஆண்ட்ருவுக்குச் செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டு முழு மனிதனாகிறது. பிறகு ஆண்ட்ரு மூப்படையத் தொடங்குகிறார். தமக்கும் மூப்பும் மரணமும் வரும் என்று மீண்டும் உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறார் ஆண்ட்ரு. மனித வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் சந்தித்துவிட்டு மரணத்தை எதிர்நோக்கும் போது ரோபோவை மனிதனாக ஏற்பதாக உலக அறிவியல் கழகம் அறிவிக்கிறது. இந்த அறிவிப்பைப் பார்த்தபடி ஆண்ட்ரு மரணிக்கிறார்; போர்ஷியாவும் ஆண்ட்ருவுடன் இறந்து போவதாக இந்தக் காதல்காவியம் முடிவடைகிறது.

http://movie2s.com/aimages/BicentennialMan.jpg



ஐசக் அஸிமவ்வின் நாவலைத் தழுவிய இந்தப் படம் ‘ரோபோ என்பது வெறும் இயந்திரம்’ என்ற பொதுவான கருத்தை அடித்து நொறுக்கியது. ஆசை, காதல், கோபம்... என அத்தனை மனித உணர்ச்சிகளையும் தமக்குள் அடக்கி வைத்திருக்கும் இன்னொரு உயிர்தான் ரோபோ என்று சினிமாவின் சாத்தியங்களைப் பயன்படுத்தி க்ளாஸிக்காக வெளிப்படுத்தியது. இந்தப் படத்தின் தழுவல்தான் ரஜினியின் ‘எந்திரன்’ என்ற பேச்சுக்கூடக் கிளம்பியது. அது இருக்கட்டும். இந்தப் படத்தின் கதை உண்மையாக நடப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா? நடந்துவிடக்கூடும். அறிவியலில் எதுவுமே சாத்தியம்தான். சாத்தியமாக்குவதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அவ்வளவுதான்.



ரோபோ டான்ஸர்!


ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சில செய்தி சேனல்களில் சீனாவில் ஃப்யுஜின் என்ற இடத்தில் நடைபெற்ற ரோபோவின் நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். ஸோலோ, க்ரூப் டான்ஸ் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள் ரோபோ டான்ஸர்கள். இதை எப்படி வடிவமைத்திருப்பார்கள்?



முதல் ரோபோ வலது கையை உயர்த்தும்போது மற்ற ரோபோக்களும் வலது கையை உயர்த்தினால்தான் அது க்ரூப் டான்ஸ். இல்லையேல் அது டுமீல் டான்ஸ். முதல் ரோபோ வலது கையை உயர்த்தப் போகிறதா அல்லது தலையை அசைக்கப் போகிறதா என்பதை மற்ற ரோபோக்கள் அறிந்துகொள்ள அவற்றுக்கு இடையே தொடர்பியல் (communication) மிக முக்கியம். இந்தத் துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் ரோபோக்கள் ஃப்ரொபஷனல் டான்ஸர்களாக இன்னும் சில வருடங்கள் ஆகக் கூடும். அதுவரை ஸ்ரேயாவுக்கும், தமன்னாவுக்கும் பதிலாக ரோபோவை ஆட வைத்து விடுவார்களோ என்ற கவலை தேவையில்லை.
http://all-movie-goofs.info/wp-content/uploads/bicentennial-man-movie-still-9.jpg



நன்றி - கல்கி , புலவர் தருமி

Saturday, May 26, 2012

'ஜக்குபாய்’ டூ-'கோச்சடையான் - கே எஸ் ரவிக்குமார் பேட்டி @ vikatan

ன் மகள் ஜனனியின் திருமணத்தை முடித்த பூரிப்பும் கல்யாண வேலை களைப்பும் சரிவிகிதமாகப் பிரதிபலிக்கிறது கே.எஸ்.ரவிகுமார் முகத்தில். ''முறுக்கு சாப்பிடுங்க... பலகாரக் குடத்துக்காக வீட்ல ஸ்பெஷலா செஞ்சது!'' என்று உபசரிக்கிறார்.


http://chennaionline.com/images/gallery/2012/May/20120505100929/KS_Ravikumar_Daughter_Wedding_Reception_48.jpg


 1''ஒரு காலத்தில் ரஜினியைவெச்சு அடுத்தடுத்து படங்கள் இயக்கியவர் நீங்கள். ஆனா, இப்போ 'ஜக்குபாய்’ தொடங்கி 'கோச்சடையான்’ வரை ரஜினிக்காக ரொம்ப வருஷமாக் காத்திருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''



'' 'ஜக்குபாய்’ படத்தின் இரண்டாம் பாதி சரியா இல்லைனு அப்போ ரஜினி சார் நினைச்சதால்தான் அந்தப் படத்தைப் பண்ண முடியலை. 'ராணா’ ஆரம்பிக்கும்போது திடீர்னு அவருக்கு உடல் நலப் பிரச்னை. ரெண்டாவது படமும் இப்படி ஆச்சேனு வருத்தப்பட்டவர், 'கோச்சடையான்’ படத்தை முதல்ல என்னைத்தான் இயக்கச் சொன்னார். ஆனா நான்தான், 'அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எனக்கு அனுபவம் இல்லை. அந்தத் தொழில்நுட்பம் தெரிஞ்ச சௌந்தர்யாவே இயக்கினால் நல்லா இருக்கும்’னு சொல்லி, அந்தப் படத்தை இயக்குறதில் இருந்து விலகினேன். 


'ரஜினியை அடுத்து இவர் இயக்குகிறார், அவர் இயக்குகிறார்’னு ஏதேதோ செய்தி வரும்போது எல்லாம், 'அடுத்த படம் எந்தப் படம், யார் படமா இருந்தாலும், உங்ககிட்ட சொல்லாம எதையுமே கமிட் பண்ண மாட்டேன். நீங்க இல்லாமப் பண்ண மாட்டேன்’னு சொல்லி இருக்கார் ரஜினி!''



'2. 'நீங்க சொல்லுங்க... இப்போ ரஜினி எப்படி இருக்கார்?''



''ரஜினி சார் நல்லா இருக்கார். ரொம்பவே நல்லா இருக்கார். பழைய ஃபார்முக்கு வந்துட்டார். ஆனா, இப்பவே 'ராணா’வுக்கு இழுத்துட்டுப் போய், அவரை டயர்ட் ஆக்க வேணாம்னு நினைச்சோம். 


அதான் 'ராணா’வைத் தள்ளிவெச்சுட்டு 'கோச்சடையான்’ ஆரம்பிச்சோம். அனிமேஷன் படம்கிறதால, லொகேஷன் அலைச்சல், காஸ்ட்யூம், மேக்கப்னு எந்த டென்ஷனும் இல்லை. மாஸ்க் மாட்டிக்கிட்டு ஏ.சி. ஹால்லயே நடிச்சா போதும். மோஷன் கேப்ச்சரிங் டெக்னாலஜியில் இந்தியாவில் உருவாகும் முதல் படம் இது. சாதாரண ஷூட்டிங்கில் நூறு, இருநூறு பேர் வெயில், மலை, காடுனு வேலை பார்த்தால், இந்தப் படத்தில் அதைவிட ஐந்தாறு மடங்கு ஆட்கள் ஏ.சி. ஹால்ல வேலை பார்க்கணும். ரொம்பப் பெரிய பட்ஜெட். ரஜினிங்கிறதால சாத்தியமாச்சு.''


3. ''சமீபத்தில் பார்த்த படங்கள், நம்பிக்கை தர்ற இயக்குநர்கள்?''


'' 'மௌன குரு’, 'மெரினா’, 'ஆரண்ய காண்டம்’னு நிறையப் படங்கள் ஈர்த்தன. முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கை மட்டுமே டார்கெட் வெச்ச 'ஒரு கல் ஒரு கண்ணாடி’யும் பிடிச்சிருந்தது. சற்குணம், பாண்டிராஜ்னு நிறைய இயக்குநர்கள் பளிச்னு செய்தி சொல்றாங்க. மெகா பட்ஜெட் படங்களையும் தாண்டி, சின்னப் படங்களும் நல்ல விஷயங்களோட வந்து ஹிட் ஆறதுதான் ரொம்ப நல்ல விஷயம்.''



4. ''வழக்கமான கமர்ஷியல் படங்கள் தவிர்த்து 'புரியாத புதிர்’ மாதிரியான படங்களை உங்களிடம் இருந்து இனி எதிர்பார்க்க முடியாதா?''



'' 'புரியாத புதிர்’ எனக்கு ரொம்பத் திருப்தி கொடுத்த படம். ஆனா, அப்போ அது சிட்டியில் மட்டும்தான் ஓடுச்சு. தயாரிப்பாளர்களிடம் நல்ல பேர் வாங்கணுமேனு நான் ரூட் மாறிட்டேன். ஆனா, இப்போ கிராமங்களில்கூட கம்ப்யூட்டர் வந்துடுச்சு. சினிமா தொழில்நுட்பம் பேசுறாங்க. பேய்ப் படம் எடுத்தாக்கூட இன்னைக்குப் பிரமாதமாப் போகும். இப்போ அந்த மாதிரிப் படங்கள் எடுக்கலாம். பார்க்கலாம்.''






5. ''ஆட்சி மாற்றத்தால் சினிமாவுக்கு எதுவும் நல்லது நடந்திருக்கா?''


''அறிவிச்ச ஸ்டிரைக்கை நிறுத்தி இருக்காங்களே... அதுவே நல்ல விஷயம்தானே? படத்துக்குத் தமிழ்ல பேர் வெச்சா மட்டும் பத்தாது, அது தரமான படமா இருந்தாத்தான் வரிவிலக்குனு சொல்லியிருக்கிறதும் நல்ல விஷயம். இன்னும் நல்லது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.''



6. ''ஃபெப்சி, தயாரிப்பாளர் சங்கம் மோதல்ல நீங்க எந்தப் பக்கம்?''


''நான் எப்பவும் சினிமா பக்கம்.''



Saturday, March 10, 2012

உதிரிப்பூக்கள் இயக்குநர் மகேந்திரன் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLf1hydgQ1SZN1v7L6gsubtouh8r8mO9Tbcz3Rm6e0Ob6yxvB1WJwlGfCfbD5IC3hVaKwzTn_6H7y8en75QReA_eNlT_k_YulRk-wxxHwEbn4QaLNSrBmz3bMPAYkUYytuwUISk2HS7rk8/s400/Uthiri-Pookal.jpg 

''நான் இன்னும் நல்ல சினிமா எடுக்காத குற்ற உணர்வில் இருக்கிறேன். இது தன்னடக்கம் அல்ல. நிஜமான என் வாக்குமூலம்!'' - சிம்பிளாகச் சிரித்து ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன்

சி.பி - உதிரிப்பூக்கள் மாதிரி ஒரு படம் இனி நீங்களே நினைச்சாலும் எடுக்க முடியாதே சார்.. ஆனந்த விகடன் விமர்சனங்களில் அதுதானே 2வது இடத்தில் இருக்கு ( முதல் இடம் 16 வயதினிலே)


 ''நீங்க சினிமாவுக்கு வந்தது விபத்தா... விருப்பப்பட்டா?''


''விருப்பம் இல்லாம சினிமாவுக்கு வந்தவன் நான். விரும்பாதது கிடைச்சாலும் நேசிக்க வேண்டிய கட்டாயம். பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படலை. சினிமாவை ஒரு தொழிலா மட்டும்தான் பார்த்தேன். அதனாலதான் 30 வருஷம் கழிச்சு 'முள்ளும் மலரும்விமர்சனம் படிக்கும்போது மனசுக்குள்ளே சின்ன ஆசுவாசம் கிடைக்குது. நான் சினிமாவைக் கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட் டாலும், எந்தக்காலத்திலும் நான் அதை வெறுக்கலை... கொடுமை பண்ணலை. பல முறை சினிமாவைவிட்டுப் போக நினைச்ச நான், 36 படங்களுக்குக் கதை - வசனம் எழுதி, 12 படங்களை இயக்கியிருக்கேன். எனக்கும் சினிமாவுக்குமான உறவு நாகரிகமாவே இருக்கு!''  

 சி.பி - அடேங்கப்பா, 36 படங்களில் பணி ஆற்றி இருக்கீங்களா? ஹூம்.. அந்த லிஸ்ட்டை முதல்ல எடுத்து எதெல்லாம் பார்க்காத படம்னு பார்த்து க்ளியர் பண்னனும்.. வீ ஜஸ்ட் மிஸ் இட்

'' 'முள்ளும் மலரும்படத்துக்கு முன்புவரை ரஜினிக்கு வில்லன் முத்திரைதான் அழுத்தமா இருந்துச்சு. அவரை எப்படி ஹீரோவா தேர்ந்தெடுத்தீங்க?''

''நடிகர், ஸ்க்ரிப்ட், இயக்கம்னு எதையும், நான் யார்க்கிட்டேயும் கத்துக்கலை. எது எப்படி இருக்கணும்னு எனக்கு நானே தீர்மானிச்சேன். போகிப் பண்டிகையில வேண்டாத விஷயங்களைக் கொளுத்துற மாதிரி, சினிமாவில் யதார்த்தத்துக்குப் புறம்பான, பிடிக்காத விஷயங்களைத் தூக்கிப்போட்டேன்.

சி.பி - முக்கியமா டூயட், ஃபைட் அவாய்ட் பண்ணீங்க..  

http://www.kollytalk.com/wp-content/uploads/2012/03/Director-Mahendran.jpg



 'ஆடுபுலி ஆட்டம்படத்துக்கு வசனம் எழுதினப்ப, ரஜினி எனக்கு நல்ல நண்பர் ஆனார். விடிய விடிய சினிமாபத்திப் பேசுவோம். சினிமா மேல அவருக்கு  வேட்கையும் தீராக் காதலும் இருந்துச்சு. 'முள்ளும் மலரும்எழுதினப்ப ரஜினிதான் சரியா இருப்பார்னு தோணுச்சு. தயாரிப்பாளர் வேணுகிட்ட சொன்னப்ப, 'ரஜினி கறுப்பா இருக்காரு. வில்லன் கேரக்டர்ல நடிக்கிறார். ஹீரோவா போட்டா எடுபடுமா?’ன்னு தயங்கினார். ஆனா, 'ரஜினிதான் ஹீரோன்னு நான் தீர்மானமா இருந்தேன்.

 சி.பி - கறுப்பு நிறமா இருக்கறவங்க சினிமால ஹீரோ ஆக முடியாதுங்கற கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட்டை உடைச்சு வெற்றிகரமா சூப்பர் ஸ்டார் ஆன முத ஹீரோ ரஜினிதான்னு நினைக்கறேன்.. விஜய்காந்த் எல்லாம் அதுக்குப்பிறகு வந்தவங்க தானே?

 படம் வெளியான மூணு வாரம் மக்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. பிறந்தவுடனே குழந்தை சத்தம் போடாம இருந்தா, எப்படிப் பதைபதைப்பா இருக்குமோ, அப்படித்தான் நானும் ரஜினியும் இருந்தோம். நாலாவது வாரத்துல படம்     பிக்-அப்   ஆச்சு. இப்போ யோசிச்சாலும் காளி கேரக்டருக்கு ரஜினியைத் தவிர வேற யாரையும் யோசிக்க முடியலை!''  


 சி.பி - காளி கேரக்டரை காலி பண்ணிட்டாரே..?

'' 'உங்களுக்குப் பிடிச்ச டைரக்டர் யார்?’னு பாலச்சந்தர் கேட்டப்பவே, ரஜினி உங்க பேரைத்தான் சொன்னார். அதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?''

''நிறையப் பேர் 'ரஜினி உங்களைப் பத்திப் பேசியிருக்கார். அவருக்கு போன் பண்ணி நன்றி சொல்லுங்கன்னு சொன்னாங்க. 'நீங்க ரஜினியை, ரஜினியாப் பார்க்கிறீங்க. நான் என் நண்பனா பார்க்கிறேன்னு சொல்லிட்டேன். என் மனைவி தொடர்ந்து சொன்னதால ரஜினிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதினேன். 'உலக சினிமாக்களைப்பார்த்த பிறகு நான் தமிழ் சினிமாவில் நுனிப்புல் மேய்ந்தவனாக உணர்கிறேன். என்னைப் போய் சொல்லியிருக்கீங்களே!’னு எழுதி இருந்தேன்


 கடிதம் போனதும் ரஜினி உடனே போன் பண்ணினார். 'சார் உங்க லெட்டர் படிச்சேன். எனக்கு போன் பண்ண பலரும் மகேந்திரனைச் சொன்னது தான் நல்ல பதில்னு சொன்னாங்கன்னு ஆரம்பிச்சு பழையவிஷ யங்களைப் பத்திப் பேசிட்டே இருந்தார். அவர் எப்பவும் என் ரஜினிதான்!''


  
''தற்போதைய தமிழ் சினிமாவின் சில அபத்தங்களை எப்படி மாற்றலாம்?''

''படம் பார்த்துட்டு வந்த பிறகும் மனசுக்குள்ள ரம்மியமான காட்சிகள் நினைவுக்கு வரணும். 'தி ஆர்டிஸ்ட்ஹாலிவுட் படம் வசனமே இல்லாமல் அழகா கறுப்பு - வெள்ளையில் எடுத்திருக்காங்க. நாமதான் 'பிளாக் அண்ட் வொயிட்டை ஃப்ளாஷ் பேக் உத்தியா  மட்டுமே பயன்படுத்துறோம். 1958-லேயே எம்.ஜி.ஆர்கிட்ட 'ஏன் படத்துல டூயட் வருதுன்னு கேட்டேன். அது இப்போ 2012 வரை தொடருது. குத்துப் பாட்டு, டூயட் இல்லாத மாற்று சினிமா வேணும். அதுதான் நல்ல சினிமாவும்கூட!''

 சி.பி - பாட்டு இல்லாம படங்கள் வர ஆரம்பிச்சா அது ஒரு நல்ல தொடக்கமா இருக்கும்.. நம்ம ஆளுங்க ஏன் தயங்கறாங்கன்னா ஆடியோ மார்க்கெட் மற்றும் குரூப் டேன்சர்கள் நல வாழ்வு..



''சமீபத்திய சந்தோஷம்..?''

'' 'ரசிகன்நிகழ்ச்சி மூலமா மீண்டும் என் ரசிகர்களுடன் ஏற்பட்ட தொடர்புதான்!  நிகழ்ச்சியின் இயக்குநர் மணிவண்ணன்  பல கேள்விகள் மூலம் என் தவத்தைக் கலைச்சிருக்கார். வியட்நாம், சிங்கப்பூர், மலேசியானு பல நாடுகளில் இருந்து 'அடுத்த படம் எப்போ பண்ணுவீங்க?’னு போன்ல கேட்கிறாங்க. நிகழ்ச்சியில் திரையிட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் புதுசா ரிலீசான படம் மாதிரி  நினைச்சுப் பாராட்டுறது நெகிழ்ச்சியா இருக்கு.  அதேசமயம் இவ்ளோ மரியாதைவெச்சிருக்காங்களேன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு.

 கலைஞர் டி வில நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்குப்பிறகு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தது இந்த ரசிகன் நிகழ்ச்சி தான்.. அந்த பேட்டில ஒரு இடத்துல கூட நீங்க கேமராவை பார்க்காம எதார்த்தமா பேசுனது செம.. உங்க படம் போலவே நீங்களூம் ரொம்ப எதார்த்தம்.. 

இதோ என் கூட்டைவிட்டு வெளியே வர தயாராகிட்டேன். 'மோகமுள்கதைக்கு என் பாணியில்   திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கேன். சீக்கிரமே மகேந்திரன் படைப்புகளை வெள்ளித்திரையில் பார்க்கலாம்!'' - அழகாகச் சிரிக்கிறார் மகேந்திரன்.

சி.பி - மோக முள் பெஸ்ட் சாய்ஸ் அல்ல.. ஏன்னா அது ரொம்ப பழைய கதை.. ஆல்ரெடி நாவலாவும் , படமாவும் மக்கள் பார்த்துட்டாங்க.. இங்கே கதைக்கா பஞ்சம்? புதுக்கதை கையைல எடுங்க. களத்துல குதிங்க.. ஆல் த பெஸ்ட் சார்..