Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, July 02, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 13

1 . உங்கள் முதல் பதிவு எப்போ போட்டிங்கனு ஞாபகம் இருக்கா ? அந்த பதிவுக்கு எத்தனை பேர் கமெண்ட்ஸ் போட்டாங்க ? அதுல மறக்கமுடியாத கமெண்ட்ஸ் எது ?(உங்க ப்ளாக் ஓபன் பண்ணி பார்காமசொல்லணும் )


ஜூலை 17, 2010 .. ஏன்னா அதுதான் என் முத போஸ்ட்.. என்ன தர்ம சங்கடமான சூழ்நிலைன்னா முத போஸ்டே என் நண்பர் பாடல் எழுதிய படம்.. ஆனா படம் டப்பா.. டைட்டில்ல விருந்தாளி - அபாயம் போகாதே -ன்னு வெச்சாச்சு.. ராங்க் செண்ட்டிமெண்ட்.. நிறைய பேரு அவ்ளவ் தான் அட்ரா சக்க ஊத்திக்கும்னாங்க.. எனக்கும் ஒரு ஒரத்துல பயம் இருந்தது.. ஆனாலும் அப்படி ஏதும் நடக்கலை.. பாடல் ஆசிரியர் திரு முருகன் மந்திரம்.. அவருக்கு மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருந்திருக்கும். கமென்ட்ஸ் போட்டது நல்ல நேரம் சதீஷ்னு நினைக்கறேன்.. யாருமே கமெண்ட் போடாததால நான் தான் அவருக்கு ஃபோன் பண்ணி கமெண்ட் போடச்சொன்னேன் ஹி ஹி 


2 .உங்கள் தந்தையை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தீர்கள் அந்த பதிவை படித்து உங்களை யாராவது பாராட்டிய அனுபவம் இருந்தால் சொல்லுங்க ?


எல்லாருக்கும்  அப்பா இருக்கு, அப்பா பற்றிய நினைவுகள் இருக்கு.. ஆனா நான் என் அப்பா பற்றி எழுதுனதும் ஏகப்பட்ட பாராட்டு,.,. காரணம் நான் சீரியஸா எதுவும் எழுதுனதே இல்லை.. பெரும்பாலும் காமெடி தான் மொக்கை தான்.. அதனால அவங்களுக்கு வித்தியாசமா தெரிஞ்சிருக்கலாம்.. மும்பை பிரகாஷ், லண்டன், இலங்கை போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் அதற்கு பாராட்டு தெரிவிச்சாங்க.. மனசுக்கு மகிழ்ச்சி.. அப்பாவுக்கு மரியாதை.. எழுத்துக்கு ஒரு நிறைவு..


3 . உங்களிடம் கணினியும் ,இணய இணைப்பும் இல்லை என்று சொல்லி இருந்தீர்கள் உங்கள் அலுவலக கணினியில்தான் பதிவுகள் ,டவிட்கள், போடுகிறீர்கள், இது உங்கள் மேலதிகாரிக்கு தெரியுமா ? உங்கள் சக ஊழியர்கள் உங்கள்பதிவை படிப்பார்களா? உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய உங்கள் முதலாளிக்கு நன்றி சொல்லி இருகிறீர்களா ?



பழைய ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு தெரியும்.. புது ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு  தெரியாது.. அடிக்கடி நான் மொபைல்ல பிஸியா இருக்கறதை பார்த்து அவங்க ஏதோ லவ் மேட்டர்னு அவங்களுக்குள்ளேயே  சிரிச்சுக்குவாங்க .. நன்றி- மனசுக்குள்ளேயே சொல்லிக்குவேன்..


4 .இந்த பதிவை போட்டு இருக்க கூடாதுன்னு நினைச்ச பதிவு எது ?


நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும்.. ஈரோடு பதிவர் சந்திப்பு பாகம் 4 ரெண்டில் சொன்ன கருத்துக்களில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. என் மனசுல பட்டதை பகிர்ந்தேன்.. அது தேவை அற்ற மனக்கசப்புகளை கொண்டு வந்தது.. இனி ஜாக்கிரதையா இருப்பேன்./. சொல்வதெல்லாம் உண்மையா இருக்கனும் அதே சமயம் எதை சொல்லனுமோ அதை மட்டும் தான் சொல்லனும்



5 .மறைக்காமல் சொல்லுங்க உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம்தானே ??


என் தளம் பெண்களுக்கானதல்ல... பெரும்பாலான விஷயங்கள் ஆண்களை குறி வைத்தே எழுதப்படுகின்றது .. ஆனா  பெண்களும் படிக்கும் தரத்தில் தான் இருக்கும்.. பதிவு போட்டதும் ஏதாவது கண்டனம் வந்தா சர்ச்சைக்குரிய லைனை திருத்திடுவேன்


6 . சகபதிவர்கள் பதிவை படிப்பதுண்டா , அவைகளில் பிடித்த பதிவர் &பதிவு ஒன்றை சொல்லவும் 


தினமும் 5 பதிவாவது படிப்பேன்.. கும்மாச்சி, தமிழச்சி,டாக்டர் ராஜ் மோகன், மங்கை,மெட்ராஸ் பவன் சிவக்குமார்



7 . உங்களை கலாய்ப்பவ்ர்களை திட்டிதீர்ப்பிர்களா? இல்லை ரசிப்பீர்களா ?


ரசிப்பேன்.. வரம்பு மீறாதவரை 


8 .தயவு செய்து ஜிகிடி ,பிகிடிக்கு அர்த்தம் சொல்லவும் ?


ஜிகிடி பிகிடிக்கெல்லாம் அர்த்தம்   கிடையாதுன்னு ஆயிரம் தடவை சொல்லீட்டேனே?


9 .முகநூல் , ட்விட்டர்,ப்ளாக்  எது ரொம்ப பிடிக்கும் ?


பிளாக் தான் முதல்ல  எண்ட்டர் ஆனேன்.. மார்க்கெட்டிங்க்காக ட்விட்டர், ஃபேஸ் புக் வந்தேன்.. ஆனா ட்விட்டர் தான் செம ஜாலி



10 . உங்கள் முகநூல் ,ட்விட்டர் கமெண்ட்ஸ் களுக்கு நீங்கள் பதில் சொல்வது அரிது இது ஏன் ? வேலைபளுவா ? இல்லை நிராகரித்தலா ?


 எனக்கு கிடைக்கற டைம் ரொம்ப கம்மி.. பதிவு டைப் பண்ணனும், சினிமா பார்க்கனும், வசனத்தை மறக்காம நினைவு வெச்சுக்கனும். இந்த பிசில ரிப்ளை தர டைம் இல்லை சாரி


11 . இன்னும் நிறைய  கேள்விகள் இருக்கிறது கேட்க அனுமதி உண்டா ?


கேளுங்க , கேளூங்க  கேட்டுக்கிட்டே இருங்க.  அப்புறம் நான் எப்படித்தான் பதிவை தேத்துவது?--

மேலே கண்ட கேள்விகள் அனைத்தும் Sasimohan Kumar உடையது



12. சினி பிரியன்னு ஒரு ப்ளாக் வச்சிருக்கீங்களே.  நமிதா வந்து ரிப்பன் வெட்டுனதுக்கு அப்புறம்தான் அதுல எழுத ஆரம்பிப்பீங்களாமே? நெசமா? - மெட்ராஸ் பவன் சிவக்குமார்


சினிமா சம்பந்தப்பட்ட மேட்டர்களை மட்டும் ஒரு தளத்துல தனியா தொடங்கலாம்னு ஆசைப்பட்டு அதை ரெஜிஸ்டர் பண்ணி வெச்சேன்.. அட்ரா சக்க விரைவில் இலக்கிய தளமாக மாறும்..  



13. காதலை  உங்களோட கண்ணோட்டத்துல நீங்க அதை எப்படி பார்க்குறீங்க?? (காதல் பற்றி உங்க கருத்து என்ன???)  - திரு எனும் சேலம் மேங்கோ சிட்டி பாய்


உண்மையான காதல் இன்னைக்கும் இருக்கு , ஆனா அளவில் குறைவா இருக்கு.. இன்னைக்கு கள்ளகாதல் தான் அதிகம் தென்படுது./.  உண்மைக்காதலுக்காக உயிரையே கொடுப்போம்னு எல்லாம் யாரும் வசனம் பேசரது இல்லை. பிராக்டிகல் லைஃப் வாழறாங்க.. கல்யாணம் ஆன பின்பு காதல் குறையக்கூடாது  .. உண்மைக்காதல்  என்பது உடலாலும், மனதாலும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருத்தல்




டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :)
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html

டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html

Tuesday, June 26, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 12


Photo: I love my Indian Tradition ♥

share it if u like it :)
1. அட்ரா சக்க என பேர் வைக்கறதுக்குப்பதிலா  கொங்கா மக்கா என ஏன் வைக்கலை? - குட்டி சாகசன் 




முதல்ல கொங்கா மக்கா-ன்னுதான் வெச்சிருந்தேன்,நிறைய பேரு ஏன் அட்ரா சக்க அப்டினு வைக்கலாமே?ன்னு கேட்டாங்க.. அதனால மாத்திட்டேன்.. கோக்கு மாக்கா கேள்வி கேட்டே குழப்புங்கய்யா.. 




2. தினமும் 3 பதிவுகள் போடறீங்களே, உங்களுக்கு சலிக்கவே இல்லையா? -குட்டி சாகசன் 




இந்த கேள்வில ஏதோ உள்குத்து இருக்கு.. படிக்கறவங்களுக்கு சலிப்புன்னு அர்த்தம் வருது.. நல்லா கவனிங்க.. நான் தினமும் காலைல 5 டூ 6  ஜோக்ஸ் & ட்வீட்ஸ் போஸ்ட் போடறேன். மாலையில் ஒரு சினிமா விமர்சனம் போஸ்ட். நடுவே ஏதாவது அரசியல் போஸ்ட்,.. அதனால 3 வெவ்வேற பிரிவில் போடுவதால் படிக்கறவங்களுக்கு போர் அடிக்காதுனு நினைக்கறேன். எனக்கு பதிவு போடுவதில் இதுவரை சலிப்பு வந்ததில்லை. வந்தால் ஏன் போடறேன்?




 3. நீங்ககேட்க வேண்டிய மன்னிப்பு, தெரிவிக்க வேண்டிய வருத்தங்கள் ஏதாவது இன்னும் மிச்சம் மீதி பாக்கி இருக்கா? - சே செந்தில்குமார்




வாரா வாரம் சண்டே அன்னைக்கு சர்ச் போய் பாவ மன்னிப்பு கேட்கறாங்க, கோயில்க்கு வெள்ளிக்கிழமை போய் செஞ்ச தப்பெல்லாம் மன்னிச்சுடு சாமின்னு சொல்றாங்க.. சாமி இருக்கா? இல்லையா?ன்னு முழுசா தெரியாமயே அவங்க கிட்டே மன்னிப்பு கேட்கறப்போ தினமும் நாம பார்த்து பழகின மனிதர்களிடம் மன்னிப்பு கேட்பதால் என்ன தவறு?


 ஜாலியா கலாய்க்கறப்போ சில சமயம் சிலர்  மனம் புண் படும்படி ஆகிடுது.. அவங்க மனசு ஆறுதலுக்கு நம்ம மன்னிப்பு பயன் பட்டால் எத்தனை முறை வேணாலும் கேட்கலாம்.




 4. உங்கள் திரைப்பட விமர்சனக்களில் உங்கள் மனதில் தோன்றுவதை எழுதி வாசிப்பவர்களை ஏன் நெளிய வைக்க வேண்டும்- J.P Josephine Baba,


நிறைய பேர் கேட்டாச்சு.. சாண்டில்யன் நாவல்களில் பக்கம் பக்கமா நாயகியின் வர்ணனை இருக்கும். அதை ரசிக்கறீங்க.. ஒவ்வொரு படத்திலும் ஹீரோயினை 4 லைன்ஸ் வர்ணிச்சா தப்பா?நெளிய வைக்காதே. பெண்களும் ரசிக்கும் வண்ணமே என் வர்ணிப்புகளும் ,கலாய்ப்புகளும் இருக்கும். லிமிட் தாண்ட மாட்டேனே? அப்படி இருந்தா சுட்டிக்காட்டுங்கள்.. வரிகள் அகற்றப்படும் 







5. பதிவு எழுத்து பற்றி உங்கள் திட்டங்கள் என்ன? - J.P Josephine Baba,

 1. சினிமா விமர்சனங்களில் பல முறை ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் கணிப்பு தவறி விடுகிறது. இதுவரை 6 படங்களுக்கு மட்டுமே துல்லியமாக மார்க்கை முன் கூட்டியே கணிக்க முடிந்தது,... அதை மாற்ற வேண்டும்.. சமீபத்தைய என் சறுக்கல் சகுனி விமர்சனம்.. பல குறைகள் இருந்தாலும் படம் கம்ர்சியலாக சக்சஸ் தான் என எழுதி இருந்தேன், ஆனால் 90 % விமர்சகர்கள், பொதுமக்கள் பார்வையில் அது கடி ஆகி விட்டது.. இதை , இந்த ராங்க் ஜட்ஜ்மெண்ட்டை தவிர்க்க ஆசை


2.நகரங்களில் உள்ள டாப் டென் ஹோட்டல்கள் பற்றி ஒரு பதிவு போட்டேன். நல்ல வரவேற்பு பெற்றது, அது போல் மக்களுக்கு பயன் உள்ள வகையில் பதிவு போடனும்.. உதாரணமா ஒரு சினிமா விமர்சனம் அந்த கால கட்டத்தில் மட்டுமே படிக்கப்படும், ரசிக்கப்படும்.. ஆனா  எந்த காலத்தில் படிச்சாலும் யூஸ் ஆகற மாதிரி போஸ்ட்ஸ் போடனும்.. உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன








6 . பதிவு எழுதுவதின் நோக்கம் என்ன என்று தெரியலாமா? பதிவு எழுதுவதால் தாங்ககள் அனுபவிக்கும் மன மகிழ்ச்சி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?- J.P Josephine Baba,


பத்திரிக்கைகளில் ரிஜக்‌ஷன் பண்றது இப்போ அதிகம் ஆகிடுச்சு.. அதனால நம்ம படைப்பை வெளிக்கொணர பிளாக் அதிகம் பயன் படுது.  ஒரு மேகஜின்க்கு படைப்பை அனுப்பிட்டு வருமா? வராதா?  பிரசுரம் ஆகுமா? ஆகாதா? என காத்திட்டு இருக்கறதுக்கு ஆன் த ஸ்பாட் நாமளே எடிட்டரா இருந்து போஸ்ட் போடறது  ஒரு கிக்... மன மகிழ்ச்சி என்னன்னு பார்த்தா வெளிநாட்டில் இருந்தெல்லாம் பல வாசகர்கள் ஃபோன் பண்ணி பாராட்டுவதுதான்.. பத்திரிக்கைகளில் வரும் படைப்புகளுக்கு சன்மானம் கிடைக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட வாசகர்கள் பாராட்டு அதிக சந்தோஷம் தருது










7. பதிவு எழுதுவதால் தாங்கள் அனுபவிக்கும் பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?- J.P Josephine Baba,



1.பத்திரிக்கைகள் இல்லாத அல்லது போய்ச்சேராத இலங்கை போன்ற தேசங்களில் கூட வாசகர்கள்  நமக்கு கிடைக்கறாங்க


2. அலெக்சா ரேங்க் நல்ல நிலைல இருந்தா பிற்காலத்தில் விளம்பரம் மூலம் வருமானம் வர வாய்ப்பு உண்டு


3. சினிமா விமர்சனம் போட்டதும் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஃபோன் பண்ணி தங்கள் கருத்துகளை தெரிவிக்கறாங்க.. நாம நேரில் பார்க்க முடியாத வி ஐ பி கள் அவங்களே தேடி வந்து பேசறது சந்தோஷம்,., சமீபத்தில் இயக்குநர்  மு களஞ்சியம், வெங்காயம் சங்ககிரி ராஜ்குமார் பேசினார்கள், மகிழ்ச்சி!







8. 80 வயது தாத்தா சி.பி செந்தில் எழுத போகும் ஒரு பதிவை இப்போது எழுதி பதிவிட இயலுமா?-
J.P Josephine Baba,



அது எப்படி முடியும்?இனிமே கிடைக்கப்போகும் அனுபவங்கள் என்ன? என எப்படி இப்போவே தெரியும்? வேணா ஒண்ணு செய்யலாம்.. 80 வயதில் எப்படி இருப்பேன் என கற்பனையா ஒரு பதிவு வேணா எழுதலாம்.. 


9.பயண தொடர்கள் எழுத வாய்ப்பு உண்டா?-J.P Josephine Baba,


எழுத  எனக்கும் ஆசை தான்.. ஆனால் அதற்குத்தடையாக இருப்பது என் உடல் நிலை தான்.. எனக்கு பஸ் பயணம் எப்போதும் ஒத்துக்கொள்வதில்லை.. வாமிட் வந்துடும்.. எங்கே போனாலும் ரயில் பயணமே.. முன்னே மாதிரி இல்லை.. 40 நாட்கள் முன்னாலயே  ரிசர்வ் செஞ்சாதான் சீட் கிடைக்குது.. தட்கால் -ல கிடைப்பது ரொம்ப சிரமமா இருக்கு.. ஆனாலும் இதை எல்லாம் மீறி பயணம் செஞ்சு கட்டுரை எழுத ஆசை தான்.. 








10. அடுத்தவர்கள் உங்களை விமர்சிப்பதை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? -J.P Josephine Baba,

 விமர்சனங்கள் என்னைப்பற்றி , என் எழுத்தைப்பற்றி இருந்தால் கவலையே படமாட்டேன்.. ஏன்னா நானே பலரை கலாய்ச்சு இருக்கேன்,.. நண்பர்கள் ஆனாலும் சரி எதிரிகள் ஆனாலும் சரி.. என்னை யார் கலாய்ச்சலும்  அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு அந்தப்பதிவில் கமெண்ட்டும் போடுவேன்..

 ஆனா என்னை விட்டுட்டு சம்பந்தம் இல்லாம என் குடும்பத்தை பற்றி யாராவது எழுதுனா அது என் மனதை புண் படுத்துவதாக இருக்கும்.. அந்த பதிவில் கமெண்ட் போடுவதில்லை./.. பதிலுக்கு பதில் லாவணி பாடுவதில் தேவையற்ற மனக்குழப்பங்கள், கோபம் வந்து நிம்மதியை குலைக்கும் என்பதால் எதிர் பதிவுகளை தவிர்த்து விடுவேன்  





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 




டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html

Tuesday, June 19, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 11

  1. பெண்களை பிகர் என்று அழைப்பது இழிவான வார்த்தைகள் என்று சில புலவர்களால்  குற்றம் சாட்டப்படுவது பற்றி...

வாங்க டாக்டர் ரியாஸ்..  அதுக்கு பதில் சொல்லி எனக்கு சலிச்சுடுச்சு. அதாவது பெண் என்றால் ஒரு மதிப்பும், மரியாதையும் மனசுல எழுவது  எல்லாருக்கும் பொதுவானது. அதனால ஒரு கிளுகிளுப்பை ஏத்திக்க , சும்மா ஜாலிக்கு ஃபிகர், ஜிகிடி, சில்ஃபான்சி  அப்டி கூப்பிடறது வழக்கம் தான். இது ஆல்ரெடி சின்னி ஜெயந்த், சந்தானம்  எல்லாரும் காமெடி டிராக்ல யூஸ் செஞ்ச வார்த்தைகள் தான்.. அப்புறம் டாக்டர். ரியாஸ். கடைசி வரை உங்க ஹாஸ்பிடல் ஃபிகர்ங்களை கண்ல காட்டவே இல்லையே? . 







2. உங்கள் பதிவுகளில் கிரந்தம் தவிர்க்கலாமே? உதாரணமாக இடீசல் இரீமா சென் ரசினி அசித் ஆலிவுட் ஆசுகார் இது போன்ற தூய தமிழ் சொற்களை நீங்கள் எழுதாதது ஏன் ?


தூய தமிழ் எனக்கு செட் ஆகாது.. நான் பேச்சு வழக்குத்தமிழுக்கு ரசிகன். தமிழ்ப்பிரியன் என காட்டிக்கொள்ள தமிழை கொலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நான் பேசறது , எழுதறது எல்லாம் சாதாரண மக்களுக்கு போய்ச்சேர்ந்தா போதும்.  ட்விட்டர் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை கீச்சு. இது என்னமோ மாதிரி இருக்கு. அதே போல் சிலர் துவிட்டர் என அழைக்கனும்கறாங்க. ரவுடி என்பதை சிலர் இரவுடி என்கிறார்கள். என்னது இரவு டி யா? என கிண்டல் பண்ணிடுவாங்க. .. அதனால் கிரந்தம். ம்ஹூம்.

அதெல்லாம் சரி.. இந்த கேள்வியை நீங்களா கேட்டீங்களா? இல்லை டி பி கேடி அண்ணனுக்கு ஆப்போசிட்டா ஒரு கேள்வி வேணும்னு வேணும்னே கேட்டீங்களா?



‎"சிகரெட்டை பற்ற வைத்தவரை தேசியவாதியாக கொண்டாடும் இந்த நாட்டில்,சுதந்திர தீயை பற்றவைப்பவர் என்றும் தீவிரவாதி தான்"

 3. இரண்டு வார்த்தையில் இரு நச் நடு நிசி கீச்சு சொல்லுங்களேன் 



1. மந்தரா -96 = 69...



2.  ஆர்யா ( 6 யா) + 9 தாரா = 69





4. இடுப்பை கிள்ளுவதால் இன்பம் என்ற சித்தாந்தம் பண்டை இலக்கியங்களில் உள்ளதா? 


உங்களுக்கு லொள்ஸ் ஜாஸ்தி.. இலக்கியம்னாலே எனக்கு அதிகம் தெரியாது.. இதுல பண்டைய இலக்கியம் வேறயா? அவங்கவங்க நிகழ்கால லவ்வர் அல்லது மனைவியை கிள்ளுனா இன்பம் தான். 



5. உண்மையா சொல்லுங்க இதுவரை எத்தனை லவ் லெட்டர்ஸ் எழுதி இருப்பீங்க..அதுல எத்தனை போஸ்ட் பண்ணீங்க எத்தனை அந்நியன் படத்தின் அம்பியை போல பொட்டிக்குள்ள பூட்டி வச்சு இருக்கீங்க ? ஒருவேளை அப்படி இருந்தால் அதை எப்போ உங்க ப்ளாகில் வெளியிடபோறீங்க  



நான் பிளஸ்டூ படிச்சப்போ  நிறைய பேருக்கு அவங்க காதலிக்காக லவ் லெட்டர்ஸ் எழுதி ஹெல்ப் பண்ணி இருக்கேன்.. அது ஆல்ரெடி கண்மணிக்கு ஒரு கடிதம்கற டைட்டில்ல இதயம் பேசுகிறது இதழில் தொடராக 7 வாரங்கள் வந்தது. விரைவில் பிளாக்கில் போடறேன் 






 6. சினிமா பற்றிய ஒரு கேள்வி..மம்முட்டி உதயநிதி  ஸ்டாலின் இருவரும் போட்டி நடனம் ஆடினால் யாருக்கு அதிகம் மார்க்ஸ் தருவீங்க 


மம்முட்டியை விட  உதய நிதி ஓரளவு சமாளிக்கிறார் . அதனால என் ஓட்டு உதய நிதிக்கே. . இதுல 2 சுய நலம் இருக்கு.. அவர் படத்துல காமெடி டிராக் எழுத வாய்ப்பு கேட்டிருக்கேன். இன்னொன்னு கலைஞர் அய்யா குடும்பத்தை எதிர்த்துக்கிட்டு சினி ஃபீல்டுல குப்பை கொட்ட முடியாது ரொம்ப சிரமம்.. 





 7. சிராக்கோ படத்துக்கு விமர்சனம் எழுதுவீங்களா? ஆவலுடன் ரசிகர்கள் 



இப்படி யாராவது உசுப்பேத்தி விட்டுடுங்க. நானும் மெனக்கெட்டு விமர்சனம் போடறேன். ஜாலியா படிச்சுட்டு நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வர்றப்போ  சி பி மோசமான ஆளு. கில்மா படத்துக்கு விமர்சனம் எல்லாம்  எழுதறான். அவன் கூட ஆரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது.. எந்த பெண்ணும் டி எம் ல கடலை போடக்கூடாதுன்னு மறைமுக மிரட்டல் உத்தரவு போடுங்க.. போங்கய்யா யோவ்.. நானும் உங்களை மாதிரி கமுக்கமா இருக்க முடிவு பண்ணிட்டேன்.. நோ கில்மா பட விமர்சனம் .


மேலே உள்ள 7 கேள்விகளையும் கேட்டு எனக்கு ஏழரையை கூட்டியவர் மதுரை பல் டாக்டர் ரியாஸ்.. 






8. உங்களது  வேலை நாளும், விடுமுறை நாளும் எப்படி கழியும்? விவரிக்கவும்.-

 திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம் 


திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 டூ 7.30 ஆஃபீஸ் டைம்.. சனிக்கிழமை ஆஃப் டே.  இதுல வாரா வாரம் வெள்ளி, சனி மட்டும் 4 படம் பார்த்து டைப் பண்ணி வெச்சுக்குவேன்.. சனி ஞாயிறு புது போஸ்ட் எதுவும் பெரும்பாலும் போட மாட்டேன். திங்கள் டூ வியாழன் 4 விமர்சனங்களையும் டெயிலி ஒண்ணா போடுவேன்.

ஞாயிறு ஃபுல் ரெஸ்ட்.. பாப்பாவைக்கூட்டிட்டு பார்க் , ஸ்விம்மிங்க் பூல், ஆறு அப்டி ரவுண்டிங்க்.. டி வி பார்ப்பேன்... அப்புறம் ஜனநாயகக்கடமை ஆற்றுவேன்.. ஐ மீன் சாப்பாடு, தூக்கம்.


9.உங்களுக்கு பிடிச்ச ஹீரோ மற்றும்ஹீரோயின் யார்? ஓப்பன் பதில் தேவை

- -திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம்


வழக்கமா எல்லா சட்டை பட்டனையும் போட்டிருப்பேன். இந்தக்கேள்விக்காக ஒரு பட்டனை கழட்டி விட்டுட்டேன். பிடிச்ச ஹீரோ - ரஜினி , கமல். பிடிச்ச ஹீரோயின்ஸ் அந்த டைம்க்கு யார்க்கு மார்க்கட்டு  நல்லாருக்கோ அதாவது  அந்தந்த காலகட்டத்துல யார் ஃபேமசோ அவங்க ரசிகன். லேட்டஸ்ட்டா அஞ்சலி..




10.விளையாட்டுக்காக இல்லை, நிஜமாவே நீங்க சி எம் ஆனா என்ன செய்வீங்க.. சீரியஸ் பதில் தேவை.. --திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம் 


அரசியலுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்.. மக்கள் செல்வாக்கு உள்ள ரஜினி உட்பட பர் அதுல இறங்க யோசிக்கறாங்க.. அதனால அப்படி ஒரு கற்பனையே வேணாம்.. ஆனாலும் உங்க கேள்வியை நானே கொஞ்சம் மாத்தி போட்டு கேட்டு பதில் சொல்றேன்..



அதாவது அதி முக , திமுக போன்ற தீய சக்திகள் எதிர்காலத்தில் செல்வாக்கு இழந்து ஒரு புது ஆள் சி எம் ஆனா அவர் ஆக்கபூர்வமா என்ன செய்யனும்?


1. குஜராத் சி எம்மை நேர்ல சந்திச்சு மது விலக்கு கொண்டு வந்தும் எப்படி நிர்வாகம் பண்ண முடியுது?ன்னு கேட்டு அதன்படி தமிழ் நாட்டிலும் மதுவிலக்கு கொண்டு வந்து ஆக்க பூர்வமான பணிகள் செய்யனும்..

2. இலவச திட்டங்களை முற்றிலும் ஒழிக்கனும்....ஓ சி அப்டின்னாலே ஒரு இளக்காரம் வந்துடும்..

3. விவசாயிகளுக்கான திட்டங்கள் நிறைய கொண்டு வரனும்.. நாட்டிலேயே அதிக சம்பாத்தியம் விவசாயிக்கு என்ற நிலை வந்தால் விளை நிலங்கள் விலை போவது தடுக்கப்படும்.. விவசாயத்துக்கு ஆள் இல்லாம தடுமாறும் அவல நிலை வராது..

4. தனியார்  பள்ளி ஆசிரியை ரூ 1800 சம்பளம் வாங்கி செய்யும் அதே வேலையை அரசு பள்ளி ஆசிரியர் ரூ 30000 சம்பளம் வாங்கி செய்யறார்,... அஎஅசு பணீ, தனியார் பணி இவற்றுக்கான சம்பள விகிதம் பல மடங்கு வித்தியாசம் இருப்பதை மாற்றனும்..


5. தமிழில் டைட்டில் இருந்தால் வரி விலக்கு என்ற கேனத்தனமான திட்டத்தை ரத்து செய்யனும்.. ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கறதை கட்டுப்படுத்தி அதில கடும் வரி விதிக்கப்படனும்


6. தீவிரவாதம் தலை தூக்காம பார்த்துக்கனும்.. எம் எல் ஏ , க்களுக்கான பவரை குறைக்கனும்.. அவங்களை கண்காணிக்கனும்


7. சி எம்மாக வருபவர் குடும்பஸ்தராக இருக்கக்கூடாது... வாஜ்பாய் போல் பிரம்மச்சாரியாக ,காமராஜர் போல் எளிமையானவராக ,நடு நிலைமை வகிப்பவராக இருக்கனும்..

தயவு செய்து .... டாலர் மட்டும் பிச்சை போடவும்.....
மன்னிக்கவும் ......இந்திய பணம் வாங்க இயலாது......

நமசிவாயம் தில்லை அருள்...


11. சில பதிவுகளில் ஓடி போவது, கள்ளகாதல் பதிவுகள் எழுதி வருகின்றீர்கள். இதன் தாக்கம் என்ன ? உலகில் எவ்வளவோ நல்ல விடயங்கள் உள்ள போது தங்கள் ஆக்கபூர்வமான சிந்தனையை ஏன் இந்த மாதிரி செய்திகளில் செலுத்துகின்றீர்கள்?

அ) கள்ள காதலர்கள் சங்கத்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்வீர்கள்? -
J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)


உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு.. கேள்வியின் முதல் வார்த்தை என்ன? சில பதிவுகளில்..... அவ்ளவ் தான் மேட்டர் ஓவர்... பல பதிவுகளில் நல்ல விஷயங்கள் சொல்லி வர்றேனே?பொதுவா மக்கள் மத்தியில் 1000 நல்ல விஷயம் சொன்னா அது அவங்க கண்ணுக்குத்தெரியாது.. ஒரு கெட்ட விஷயம் சொன்னா உடனே பளிச்னு தெரியும்.. நான் எல்லா விஷயங்களையும் கலந்து கட்டித்தரும் காக்டெயில் பிளாக்கரா ஆக ஆசை ..அவ்ளவ் தான்

கள்ள காதலர்கள் சங்கத்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தால் ஃபோனை கட் பண்ணிடுவேன் ஹி ஹி 


12. கில்மா என்ற சொல் வரலாறு தெரிந்த கொள்ள இயலுமா? கில்மா சொல்லும் உங்களுக்கும் ஏன் இந்த நட்பு? -J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)
செக்ஸ், பால் உறவு, உடல் உறவு போன்ற வார்த்தைகள் சில சமயம் யூஸ் பண்ண வேண்டி வருது.. அப்போ கூச்சமா இருக்கும்.. ஏன்னா  என் அக்கா பசங்க என் பிளாக்கை படிக்கறாங்க.. அதனால பூடகமா இருக்கட்டும்னு கில்மாவை யூஸ் பண்றேன். கூல் மா ..... டோண்ட் திங்க் தட் கில்மா .


13. உங்கள் பதிவுகளில் அச்சம் நாணம் மடம் அற்ற பெண்கள் படங்களாக போடுவதின் பின்னனி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?-J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)

 போச்சுடா.. ஒரு முடிவோட தான் இருக்கீங்கனு நினைக்கிறேன்.. நான் போடும் சினிமா விமர்சனங்களில் , சில சினிமா பேட்டிகளில் அபூர்வமான கிளாமர் ஃபோட்டோக்களை போடுவது ஒரு ரிலாக்ஸேஷனுக்கு... எழுத்தில் ஏதாவது குறை இருந்தாலோ, அல்லது போர் அடிக்கற மாதிரி இருந்தாலோ அந்த ஸ்டில்ஸ் சரி பண்ணிடும்னு ஒரு நப்பாசை.. இப்போ கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு வர்றேன்.. 


சென்னையில் 1006 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் ஜெயலலிதா.
நேத்து நைட் மட்டும் 2012 பேர் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடி இருப்பாங்க @ 2012 வது வருசம்



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


http://www.bestactress.info/wp-content/uploads/2011/07/kajal-agarwal-hot-saree-singam-movie.jpg


Friday, June 15, 2012

முரட்டுக்காளை - சினிமா விமர்சனம்

http://lh6.ggpht.com/_OMHy_G6FX48/TJGVMqRSEKI/AAAAAAAAEzs/uW2a8cVHlLY/Murattukkaalai-Poster-2.jpgகாளையன் எனும் ஆண்மைத்தனம் மிளிரும் கேரக்டரில் நடித்த ரஜினியின் முரட்டுக்காளை ரீமேக்கிற்கு மிராசுதார் ஃஆஃப் த மிக்சர் பார்ட்டி , பிஞ்சு மூஞ்சி மிஸ்டர் சுந்தர் சி யை தேர்வு செய்ததற்காக சக ஊர்க்காரர் என்ற உரிமையில் இயக்குநர் செல்வபாரதிக்கு என் வன்மையான கண்டனங்களை பதிவு செய்து விமர்சனத்தை தொடங்குறேன்..

ஹீரோவுக்கு  4 தம்பி,, வில்லனுக்கு ஒரு தங்கச்சி.. ஹீரோ ரேக்ளா ரேஸ்ல ஜெயிச்சதைப்பார்த்ததும் ஹீரோயினுக்கு லவ் வந்துடுது.. ( ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் ஏரியாவில் சீனின்னு என் ஃபிரண்டு பைக் ரேஸ்ல முதல்ல வந்தான், ஆனா அவன் லவ்வர் டாட்டா, பிர்லா, அம்பானி காட்டிட்டு போய்ட்டா).. ஹீரோ கிட்டே இருக்கற நிலத்துக்கு ஆசைப்பட்டு வில்லன் பேக்கரி உனக்கு, என் தங்கச்சி உனக்குன்னு டீல் பேச ஐ மீன் நிச்சயதார்த்தம் பேச விழா நடக்குது.. 

அந்த நிச்சயதார்த்தத்துல ஹீரோவுக்கு தன் தம்பிகளை தன் கிட்டே இருந்து பிரிச்சுடுவா-னு தெரிஞ்சு கேன்சல் பண்றாரு.. இடைவேளை.. 

இப்போ இன்னொரு ஹீரோயின் ..அந்த ஊர்ல 1117 வீடுகள் இருந்தாலும் எதேச்சையா ஹீரோ வீட்ல வந்து தங்கி அவன் மனசுல இடம் பிடிச்சுடறா.. வில்லனுக்கு ஹீரோயின் மேல ஆசை.. மீதி என்ன நடக்குதுங்கறதை படு பயங்கர சஸ்பென்ஸோட படம் எடுத்திருக்காங்க.. 

சுந்தர் சி படம் பூரா சிரிச்ச முகத்தோட, ஆக்‌ஷன், ஃபைட் சீன்ல கூட திருநீறு, குங்குமம் கலையாம பொத்தி வெச்ச மல்லிகை மொட்டாட்டம் வந்துட்டுப்போறாரு.. கோபம் வர்ற மாதிரி சீன்ல உருமறார்.. பார்க்க காமெடியா இருக்கு..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIPKyzTsb3uamdoAFYDbydJJbKcQsWzGs8DlIz8MP0fPfV_vmOF9pmdupRgPRzxR1LhunOz5KRQlT6tM0G5PgGLsIbd0eJ2lwL8EboFL9_f5y0fLYv4nEEOIiTR20S2IX_JGV1Y4i1nBo/s1600/Sindhu+Tolani+in+saree+still.jpg


முதல் ஹீரோயின் சிந்து துலானி.. முடிஞ்ச வரை காட்டு காட்டுன்னு காட்டிட்டு போறார்.. ஹூம்.. ஆல்ரெடி மன்மதன்ல பார்த்ததுதானே?

2 வது ஹீரோயின்  சினேகா.. பிரசன்னாவை நினைச்சா பாவமா இருக்கு.. அவரோட கடைசி படம் ஐ மீன் மேரேஜ்க்கு முன்னே ஷூட் பண்ண  கடைசி படம் இப்படியா அமையனும்? செம சீன்.. 

வில்லனா சுமன்.. எடுபடலை.. சிவாஜில சிங்கம் மாதிரி இருந்தவரை இப்படி நரி மாதிரி ஆக்கிட்டாங்க பாவம்

 விவேக்  திருநங்கை கேரக்டர்ல காமெடி பண்றதா  நினைச்சுக்கிட்டு கேவலமா ஆபாசமா  வசனம் பேசிட்டு சி செண்ட்டர் ரசிகர்கள் கூட  ரசிக்க முடியாத வல்கர் கமெண்ட்ஸ் எல்லாம் அடிச்சு முடிஞ்சவரை தன் பேரை கெடுத்துட்டு போறார்.. சக போட்டியாளர் டாப் கீர்ல மணிக்கு 120 கிமீ வேகத்துல காமெடி டிராக்ல போய்ட்டிருக்கறப்போ இவர் ரிவர்ஸ்ல 140 கிமீ வேகத்துல போனா விளங்குமா?


http://mimg.sulekha.com/sneha/images/stills/sneha-stills-0580.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. விவேக்கின் நண்பரான செல் முருகன் காமெடி தான் படத்தில் ரசிக்கக்கூடிய முக்கிய அம்சம்.. 16 வயதினிலே பட மயில்  ஸ்ரீதேவியை கரெக்ட் பண்ண ட்ரை பண்ண டாக்டரின் மகனாக வந்தவர் விவேக்கை பெண் என நினைத்து செய்யும் கூத்துகள் கல கல காமெடி..


2. சினேகா வை அதிக பட்ச கிளாமர் காட்ட வைத்ததற்கு ஒரு சபாஷ்


3. பல காட்சிகளில் கவர்ச்சியை, கிளாமரை அள்ளித்தெளித்தும் இந்தப்படத்துக்கு யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியது.








இயக்குநரிடம் சில கேள்விகள்

1. பாடல் காட்சிகளில் சுந்தர் சி ஏன் கேப்டனை இமிடேட் பண்றார்? நானே ராஜா நானே மந்திரி பட பாடல் ஸ்டெப்போல் ட்ரை பண்றாரு,, முடியல 


2. சிந்து துலானி ஸ்கிப்பிங்க் ஆடற மாதிரி சீன்ல கேமரா ஆங்கிளை டாப்ல வெச்சு கலக்காம பூமில படுத்துக்கிட்டே லோ ஷாட்ட்டா வைப்பாங்க.. ஜி கே டெவலப் ப்ளீஸ்.. ஒரு வேளை பூமிகா ரசிகரா?


3. விவேக் பாத்ரூமில் குளிக்கும்போது அன்பே என் அன்பே உன் விழி பார்க்க பாடல் வரிகளை ஓட விட்டு அவர் பண்ணும் சேஷ்டைகள் ஆபாசம்


4. கெண்டைக்கால் அளவு ஓடும் தண்ணீரில் மீன் பிடிக்கும் சினேகா எதுக்கு பாவாடையை தொடை வரை தூக்கி கட்டனும்?


5. மழை பெஞ்சுட்டு இருக்கு, ராத்திரி மணி 9.. அந்த நேரங்கெட்ட நேரத்துல சினேகா லூஸ் மாதிரி வில்லன் வீட்டுக்கு போய் “ உன் அண்ணனை கட்ட எனக்கு இஷ்டம் இல்லை”ன்னு சொல்லுறதுக்குப்போய் வில்லன் கிட்டே மாட்டிக்கறதா சீன் இருக்கு.. அந்த டயலாக்கை காலைல, அல்லது மத்தியானம் போய் சொல்லக்கூடாதா? 

6. தனியா வந்த சிட்டை ரேப் பண்ணாம கெக்கே பிக்கேக்கேன்னு கோட்டை விட்டுட்டு கையாலாகாத வில்லன் வேடிக்கைபார்க்கறான்


7. கிராமத்துல ஒவ்வொரு கொலையையும் மாட்டின் ஒரு கொம்பை வெச்சு வில்லன் அண்ட் கோ செஞ்சுட்டு பழியை மாட்டு மேல போட்டுடறாங்க.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல ஒரே ஒரு கொம்பால தான் ஒவ்வொரு கொலையிலும் குத்தப்பட்டிருக்குன்னு போலீஸ் கண்டு பிடிக்க மாட்டாங்களா? மாட்டுக்கு 2 கொம்புன்னு தெரியாதா?


http://cinema.dinakaran.com/cinema/CineGallery/Kollywood/Movie/Murattu-kalai/01.jpg


8. ஒரு சீன்ல விவேக் என் இதயம்.. மயங்கவே....” பாட்டுக்கு மூவ்மெண்ட் தர்றாரு.. ஆனா லிப் மூவ்மெண்ட் வேற பாட்டுக்கு.. ( ஐ திங்க் ஷூட்டிங்க் டைம்ல வேற பாட்டு போட்டுட்டு அப்புறம் பாட்டை மாத்தி இருக்கலாம்.. )


9. படம் முழுக்க மொழு மொழு கன்னத்தோட வர்ற ஹீரோ ஒரு பாடல் காட்சியில், 2 சீனில் மட்டும் சம்பந்தமே இல்லாம தேவதாஸ் கெட்டப்ல தாடியோட சோகமா வர்றாரே? சம்பள பாக்கியா?

10. அண்ணன், அண்ணி குஜாலா ரொமான்ஸ் பண்றப்போ அண்ணியோட லோ கட் சீனை தம்பிகள் ரசிக்கற மாதிரி ஷாட் எதுக்கு?


11.க்ளைமாக்ஸ்ல எதுக்கு இன்ஸ்பெக்டரா வர்ற தியாகு வில்லனோட திட்டத்தை வாலண்ட்ரியா ஹீரோ கிட்டே சொல்லி மாட்டிக்கறாரு?


12. மலையூர் மம்பட்டியான்ல வர்ற மாதிரி ஹீரோ ஏதோ ஒரு காட்டுக்குள்ளே போய் தலை மறைவா இருக்காரு.. கொலை கேஸ்ல போலீஸ் தேடுதுன்னு.. ஆனா கரெக்ட்டா சிந்து துலானி அந்த இடத்தை எப்படி கண்டு பிடிக்கறாரு?


13. படம் போட்டதுல இருந்து ஹீரோ அவர் வீட்லயே தான் இருக்காரு.. அப்போ எல்லாம் விட்டுட்டு ஹீரோ தலைமறைவான 14 வது ரீல்ல வில்லன் பெரிய இவரு மாதிரி பழி வாங்க அலையறாரே? ஏன்?


http://actresspadam.com/wp-content/uploads/2012/06/South-Tamil-Movie-Murattu-Kaalai-2012-Online-Picture-Moments.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்



1. வேட்டியை இறக்குங்கடா..  ஆளாளுக்கு மனசுக்குள்ள ஆம்பளை ரம்பான்னு நினப்பு..


2. இது ஹைபிரிட் ஆரஞ்ச்..

 அப்படின்னா?


 கொட்டை எடுத்தது, அப்படியே சாப்பிடலாம்


3. என்னடி? உங்க வீட்டு கிரைண்டர் இப்படி ஆடுது?


4. பாம்பு கடிச்ச மாதிரி டிராமா போட;லாம்.. முள்ளை எங்கே குத்த? காலை காட்டுடி

 கால் வேணாம்டி.. இடுப்புல குத்து.. அதான் ரொமான்ஸ் ஏரியா..


5. பாம்பு ஏன் இடுப்புல கொத்துச்சு..? சினிமால எல்லாம் ஆம்லெட் போடற ஏரியா. முட்டை இருக்கும்னு பார்க்க வந்து ஏமாந்து போயிருக்கும்.. பொட்டுன்னு போட்டுடுச்சு


6. இப்படி எல்லாம் கிளாமரா டிரஸ் பண்ணீட்டு வந்து நல்ல பாம்பை ஏன் கெட்ட பாம்பு ஆக்கறீங்க?


7.  பாம்பு உங்களை எங்கே கடிச்சுது?

 இதோ இங்கே.. மார்க் இருக்கு பாருங்க..

 ஆமா.. பெரிய மார்க்.. 100க்கு எவ்ளவ்?



8./ என் இடுப்புல வாயை வெச்சு உறிஞ்சுனாருங்க..


 வாயையா?


 பின்னே? ஸ்ட்ரா வெச்சா உறிஞ்சுவாங்க?


9. அடிப்பாவி.. தென் காசி டூ மதுரை என் பேரை டேமேஜ் பண்ணிட்டியே.. எவனைப்பார்த்தாலும் இடுப்புல வாயை வெச்சு உறிஞ்சுனியா?ன்னு கேட்கறான்


10.  என்னடா பசங்களா அடிச்சுக்கறீங்க?


 என் ஆளை இவன் கரெக்ட் பண்னப்பார்க்கிறான்


இந்த சின்ன வயசுல என்ன பேச்சு இது? யார்டா உங்க 2 பேர் ஆள்?

 நீ தான்.. ஹி ஹி


http://2.bp.blogspot.com/-CV8j74hnrHA/TeTpe0ff0yI/AAAAAAAAAu0/NJE4IvMq7zs/s640/Sneha+in+Amala+Oil+Add+%25281%2529.jpg


11. அவ பேரென்னா?

 பூவன்னா


என்னது?

 புவனாங்கறதை நீட்டி முழக்கி சொன்னேன்..



12. ஆஹா.. புவனா.. சின்னதா , அழகா இருக்கு

 என்னது?

 பேரைசொன்னேன்


13. அண்ணே.. நீங்க பெரிய ஆள்.. மோகினிப்பிசாசே பார்த்து பயப்படற அள்வு என்னத்தை காட்டுனீங்க?



14.  ஏண்டப்பா ஒரே வண்டில 3 பேர் ஏறி வர்றீங்களே.. வண்டி தாங்குமா?



15. டூ வீலர் வெச்சிருக்கற உங்களுக்கே இவ்ளவ் தெனாவெட்டுன்னா அஞ்சு வீல் வெச்சிருக்கற எனக்கு எவ்ளவ் தெனாவெட்டு இருக்கும்./.



4 வீல் தானே?

 ஸ்டெப்னியை சேர்த்து சொன்னேன்



16. டெயிலி வெய்யில்ல உங்க மேனி பட்டும் எப்படி இவ்ளவ் வெள்ளையா இருக்கீங்க?

 ம் டெயிலி ஷேவ் பண்ணுவேன்


என்னது?



17. முயல்னா காதை பிடிச்சு தூக்கனும்.. கோழின்னா கழுத்தை பிடிச்சு தூக்கனும்..

 டேய்.. யானையை எதை பிடிச்சுத்தூக்குவே?


18/ ஆம்பளை கிட்டே பேசனும்னா அரை செகண்ட்ல பேசிடுவேன்./ பொம்பளை கிட்டே பேச ஒரு நாள் ஆகும்.. பழக்கம் இல்லை பாருங்க ஹி ஹி


19.. என்னடா.. அவ 2 காலும் சமீரா ரெட்டி மாதிரி இருக்கு.. ஆனா முடி மட்டும் ஜி கே ரெட்டி மாதிரி இருக்கு?


20. ம்க்கும்..இவன் தவ்வி தவ்வி போறதுக்குள்ளே அங்கே ஃபர்ஸ்ட் நைட்டே முடிஞ்சுடும்



http://lh3.ggpht.com/_UtKy-iLm-ck/St4UjqKqBUI/AAAAAAAABjk/oRpKH1upCes/actress-sindhu-tolani-stills-more-14.jpg




எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்



சி.பி கமெண்ட் -  சுந்தர் சி டைரக்‌ஷனை தொடர்வதே நல்லது.. என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக உணர்த்தும் படம்.. டி வி ல போட்டா இடைவேளை வரை பார்க்கலாம்..ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtH1bSnzj_MHLSTbGR-KgRqRqgmiRt2X3N77EoNzDJuIVFBqhdHv4fqW-L6w9IEsK-DtY9bARTUn8J9iwfU9nFKYslu4pJLuRtq2a0aSBfdYwxpUVc72Op5eOPwGE8lq9eMgS4LEEL_i4/s320/Sneha+pins+hope+on+Murattu+Kaalai.jpga


டிஸ்கி -

மறுபடியும் ஒரு காதல் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/06/blog-post_5873.html
 

Monday, June 11, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 10

1. கடவுள் உங்க முன் தோன்றி, உன்னை டைரக்டர் ஆக்குறேன். ஆனால், நீ பிளாக், ட்விட்டர் எழுதுறதை விட்டுடனும்ன்னு சொன்னால் என்ன செய்வீங்க?

என்னோட லட்சியமே டைரக்டர் ஆவதுதான்.. ஆனா அதுக்கான முறையான முயற்சிகளையோ, பயிற்சிகளையோ நான் எடுக்கலை.குடும்ப சூழலின் காரணமா என்னால ஈரோட்டை விட்டு சென்னை போக முடியாத சூழல்.. அப்படி இருக்கும்போது  நீங்க சொன்ன மாதிரி ஒரு சம்பவம் நடந்தா பிளாக்கை விட்டுடத்தயார்..


இந்தகேள்வில ஏதாவது உள்குத்து இருக்கா? என்னை துரத்தும் பிளானா? எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொன்னேன்..





2. இவ்வளவு பதிவுகள், ஜோக்ஸ் போடுறதால எப்படியும் அதை பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டியிருக்கும். அதனால், நீங்க உங்க சுற்றுப்புறத்தை கவனிக்க தவறும். அப்படி தவறியதால் இழந்தவைகள் எதாவது உண்டா?

சுற்றுப்புறத்தை, நாட்டு நடப்பை கவனிப்பதால் தான், அவற்றை உள் வாங்குவதால் தான் ஜோக்ஸ், கமென்ட்ஸ், ட்வீட்ஸ், பதிவுகள்  போட முடியுது.. திண்னைல உக்காந்து வெட்டி அரட்டை அடிக்கலை, டாஸ்மாக் போய் சரக்கு அடிச்சு ரோட்டோரம் கிடக்கலை.. இழந்தைவைகள் என ஏதும் இல்லை.. குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்கிட்டு தான் இருக்கேன்.. இல்லைன்னா குடும்பம் நம்மை ஒதுக்கிடுமே?



3. வெள்ளிக்கிழமை 11 மணிக்கு நீங்க தியேட்டர்ல இருப்பீங்கன்னு உலகம் அறிந்த ரகசியம். உங்க நெருங்கிய உறவுகள், முக்கியமான வேலை இருக்கு கண்டிப்பா வரனும்ன்னு கூப்பிட்டால் சினிமா அல்லது உறவு இதுல எதுக்கு முன்னுரிமை கொடுப்பீங்க.?


சினிமாங்கறது ஜஸ்ட் எண்ட்டர்டெயிண்ட்மெண்ட்.. உறவுகள் என்றென்றும் எண்ட்டயர்லி அட்டாச்மெண்ட்.. உறவுக்குத்தான் முக்கியத்துவம். ஆனாலும் என்னை நன்கு புரிந்த உறவுகள் என் சுபாவம் உணர்ந்து வெள்ளிக்கிழமைகளில் நெருக்கடி கொடுப்பதில்லை


4. என்னதான் நாம விரும்பி ஒரு செயலை செய்தாலும் சில சமயங்களில் அலுப்பு தட்டும். இல்லைன்னா அடுத்தவங்க விமர்சனத்தால மனசு பாதிச்சு அந்த செயலை ஒத்தி போடுவோம். அதுப்போல பிளாக்கரா ஏன் ஆனோம்ன்னு நீங்க மனசு தளர்ந்து இனி பதிவெழுதக் கூடாதுன்னு நினைச்ச தருணம் இருக்கா?

ஆனானப்பட்ட காந்தியே எதிர்மறை விமர்சனங்களை சந்திச்சவர் தான்.. அதனால என்னைப்பற்றிய தாக்குதல்களை நான் பெரிதா எடுப்பதில்லை.. பதிவுலகில் ஜாக்கி சேகருக்கு அடுத்த படியா தாக்கப்பட்ட தனி மனிதன் நான் தான்.. அவரைத்தாக்கி எழுதப்பட்ட பதிவுகள் இதுவரை 34.. என்னை தாக்கி எழுதப்பட்டவைகள் 28.. என்னை அதிகம் புரிந்து கொள்ளாத, என்னுடன் பழகாத நண்பர்கள் தாக்கும்போது எனக்கு பாதிப்பு இருக்காது


ஆனா  என் கூடவே பழகி, என்னைப்பற்றி நன்கு புரிந்த நண்பர்கள் தாக்கும்போது வருத்தம் இருக்கும்.. ஆனாலும் நண்பர்களை எதிர் தாக்குதல் செய்வதில்லை.. இது என் அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்


5. நம்ம செய்யுற தொழிலை வச்சுதான் நமக்கு மதிப்பு. டீச்சர், போலீஸ்ன்னா பயம், டாக்டர் இன்ஜினியர்ன்னா மரியாதை. அதுப்போல 18+ பட விமர்சனம் போடுறதால உங்களுக்குன்னு ஒரு மாதிரியான இமேஜ் இருக்கு(நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். சாரி சிபி சார்). நம்மளை ஏன் இப்படி எல்லோரும் வில்லனா பார்க்குறாங்கன்னு நீங்க நினைச்சு வருத்தப்பட்டதுண்டா? - ராஜி, வேலூர் ( மேலே உள்ள 5 கேள்விகளும்)

நல்ல கேள்வி. கில்மாப்படம் பார்க்காத ஆண்கள் யாருமே கிடையாது.. பெண்களும் சிலர் பார்க்கறாங்க.. ஆனாலும் அந்தப்பட விமர்சனங்கள் போட்டா எல்லாரும் கிண்டலாவும், கேலியாவும் தான் பார்க்கறாங்க. கில்மாப்பட விமர்சகர்னு நக்கல் பண்றாங்க.. நான் இதுவரை செய்த சினிமா விமர்சனங்கள்  147, அதுல கில்மாப்பட விமர்சனங்கள் 13 தான். ஆனா என்னமோ என் தொழிலே கில்மாப்பட விமர்சனம் தான் அப்டிங்கற மாதிரி பேசிக்கறாங்க.


 நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில் உணவு உலகம் ஆஃபீசர்  வேண்டுகோளின் படி 2012 ஜனவரி 1 இல் இருந்து நான் கில்மாப்படம் விமர்சனம் பண்றது இல்லை, ஆனால் படம் பார்த்துடுவேன்.. சில பெண் வாசகிகளும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தாங்க. உங்க தளத்தில் கமெண்ட் போட தயக்கமா, சங்கடமா இருக்கு. அதனால அந்த மாதிரி படங்களுக்கு விமர்சனம் பண்ண வேணாம் .. உங்க இமேஜை உடங்க  அப்டின்னாங்க..


-----------------------------




மயிலன்
அண்ணே பதிவுலகுல நாலாவது எடமா? அப்புடி ஒரு நெனப்பா? டூ மச்... சொல்லிபுட்டேன்... ஹி ஹி :) என்ன மாதிரி பெரிய ஆளுங்க இருக்கும்போதே இவ்வளவு தெனாவட்டா?.. ஹ்ம்ம்ம்...

சரி என்னோட கேள்விகள்...

1.தமிழ்மண ரேங்குக்கு மாசாமாசம் எவ்வளவு இலஞ்சம் தர்றீங்க...ஹி ஹி...:) ?

தம்பி, இப்போ  நான் தமிழ் மணத்துலயே இல்லை.. காப்பி பேஸ்ட் போஸ்ட் போடவேணாம்னு அவங்க எச்சரிக்கைகள் கொடுத்தும் என்னால சில சமயங்கள்ல போட வேண்டிய சூழல் வந்தது.. அதனால அவங்க என் தளத்தை நீக்கிட்டாங்க.. தமிழ் மண ரேங்க்ல முதல் இடம் வந்தப்போ நான் லஞ்சம் ஏதும் தர்லை.. லஞ்சம் கொடுத்தா முதல் இடம் வரலாம்னா பலர் அதைத்தர தயாராவே இருந்தாங்க. ஆனா தமிழ் மணம் ஹிட்ஸை அடிப்படையா வெச்சுத்தான் எடுக்கறாங்க, துட்ஸை அல்ல



2.வேற யாரோட பதிவையாவது படிக்கும்போது.. "ச்ச...இது நமக்கு தோணாம போயிருச்சே..?" அப்புடின்னு தோனிருக்கா?

யா யா.. ஏராளம்.. சேட்டைக்காரன், கும்மாச்சி, குசும்பன் என நகைச்சுவை கலந்து எழுதுபவர்கள் பல பதிவுகள் அப்படி நினைக்க வெச்சிருக்கு. ராவடி ராம்சாமி எழுதுன பூமியை நோக்கி என்ற வித்தியாசமான தொடர் வந்தப்போ அப்படி நினைச்சேன். அதே போல் ட்விட்டர்ல வேதாளம் எழுதுன ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படிச்சும் அப்படி ஒரு எண்ணம் வந்தது. ஐ ஆம் கார்க்கியின் லேட்டஸ்ட் யூ டியூப் மிக்சிங்க் காமெடி ரிலீட்டட் சென்னை மெகா ட்வீட்டப் நையாண்டி பார்த்தப்பவும் நினைச்சேன்



3.பதிவுலக அரசியல்ல உங்களோட நிலைப்பாடு என்ன? சும்மா எல்லாரும் நண்பர்கள்ன்னு கதை விடாதீங்க...

பதிவுலகை கலங்கடிக்கும் பாலிடிக்ஸ் அப்டினு ஒரு பதிவு போட்டேன்.. சும்மா குமுறு குமுறுன்னு குமுறிட்டாங்க. நான் சொன்ன அதே கருத்தை அண்னன் உண்மைத்தமிழன்  அடுத்த நாள் ஆமோதிச்சு பதிவுல சொன்னப்போ எல்லாரும் கமுக்கமா இருந்தாங்க. இதில் இருந்து கிடைக்கும் நீதி பின்புலம் இல்லாம பலம் இல்லாம நாம எந்த காண்ட்ரவர்சியான கருத்தையும் சொல்லக்கூடாது.


4.நீங்க உங்களோட தளத்துல கவர்ச்சி புகைப்படங்கள் போடறத பார்த்து வீட்டுல அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?

எனக்கு பிளாக் இருக்கறதே  வீட்டுக்குத்தெரியாது..  எங்க வீட்டுல நெட் கனெக்‌ஷனே இல்லை. ஆல் ஒர்க் இன் ஆஃபீஸ் ஒன்லி.. ஹி ஹி இந்த கேல்வில பொத்தாம்பொதுவா அண்ணி  அடிக்கறது இல்லையா?ன்னு கேட்டிருக்கலாம். அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?இந்த அளவு வன்முறை தேவையா? :)



5.முக்கியமான அஞ்சாவது கேள்வி...


எனக்கு என் இன்னும் ஹன்சிகா போஸ்டர் அனுப்பல? ஹி ஹி...

நாட்டுல எல்லாருக்கும் 1000 பிரச்சனை.. உங்க பிரச்சனை இதுதானா? அனுப்பித்தொலைக்கிறேன் ; -)



 ராஜபேட்டை ராஜா


பதிவுகள் முலம் நீங்கள் மாதம் மாதம் சம்பாதிப்பது எவ்வளவு ? ( என்னை போல நல்ல , பாசமான , உண்மையான நண்பர்களே .. என டயலாக் விடக்கூடாது )

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.. எல்லாம் ஜஸ்ட் பொழுது போக்குத்தான்.


நமக்கு பிடித்தது என நினைத்து பகிர்ந்த ஒரு செய்தியால் உங்களுக்கு பிரச்னை வந்த நிகழ்வு நடந்துள்ளதா ?


 ஜாலியா கலாய்ச்சுப்போட்ட சில பதிவுகள் பலர் மனதை காயப்படுத்தி இருக்கு. அவற்றை எல்லாம் ஒரு பாடமா எடுத்துக்கறேன். இனி வரும் காலங்களில் கவனமா இருந்துக்க வேண்டியதுதான்



கேள்வி : சொந்தமாக பல பதிவு எழுதினாலும் Copy & Paste பண்ணும சில பதிவுகளை வைத்து உங்களை குறை சொல்பவர்களை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?

ட்விட்டர்ல ஒரு நல்ல ட்வீட் யாராவது போட்டா அதை மற்றவங்க  RETWEET பண்றாங்க . சுருக்கமா அதை RT னு சொல்வோம். அந்த மாதிரி எனக்குப்பிடிச்ச சில படைப்புகளை என் பிளாக்ல  RT பண்றேன்.. ஆனா பலர் நான் ஆனந்த விகடன்ல இருந்து மட்டும் தான் காப்பி பேஸ்ட் பண்றதா தப்பா நினைச்சு எதிர் பதிவு போடறாங்க. அவங்களுக்கு நான் சொல்ல விரும்புவது நான் சண்டே இந்தியன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ர்ட்டர், நக்கீரன்,கல்கி என எல்லா இதழ்களில் இருந்தும் பதிவுகள் போடறேன்.


 துக்ளக் இதழ் மட்டும் தான் இன்னும் என் கைக்கு சிக்கலை.. ஆன் லைன் சந்தாதாரர்கள் யாராவது உதவி செஞ்சா குருமூர்த்தியின் பொருளாதாரக்கட்டுரைகள், துக்ளக் சத்யாவின்  காமெடி கட்டுரைகள் போட ஆசை.



கேள்வி :எப்போவாது ஏன்டா இந்த பதிவுலகிற்கு வந்தோம் என நினைத்ததுண்டா ?


சந்தடி சாக்குல டேய் டா போட்டு பார்க்கறீங்களா? நான் அப்படி நினைச்சதே இல்லை. ஆனா பலர் “ ஏண்டா இவன் பதிவுலகிற்கு வந்தான் என எரிச்சலோட மெயில் சேட்டிங்க்ல நண்பர்களுடன் அளவளாவுவதை கவனிச்சிருக்கேன்


கேள்வி : பதிவுலகில் உங்கள் வாரிசு யார் ? 

 என் பொண்ணு அபிராமி ஸ்ரீதான்





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




Thursday, May 31, 2012

கொஞ்சும் மைனாக்களே - சினிமா விமர்சனம்


http://www.filmglitz.com/tamil/wp-content/uploads/2012/05/Konjum-Mainakkale.jpg

எங்கேயும் எப்போதும் படத்துல வர்ற மாதிரி ஓப்பனிங்க் ஷாட்லயே புத்தம்புது தம்பதிகள் போற வேன் ஆக்சிடெண்ட் ஆகிடுது.. மாப்பிள்ளை அவுட், பொண்ணு எஸ்கேப்( இயற்கை கொடுத்த வரம் என்னான்னா பொதுவா விபத்தில் அதிக பலி ஆவது அவசர புத்தி ஆண்களே!)இப்போ அந்த பொண்ணு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரினி.. இந்த பாப்பா இப்படியே இருக்கட்டும்.. வாங்க இன்னொரு டிராக்ல இன்னொரு கதை

ஹீரோவுக்கு வீட்ல பார்த்து பண்ணி வெச்ச அரேஞ்ஜ்டு மேரேஜ்..முதல் இரவுல பாப்பா பம்முது, பயப்படுது.. மாப்ளை சரி போனா போகுது, கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா அடிச்சுட்டுப்போகப்போதுன்னு விட்டுடறாரு.. ஆனா இது ஒரு தொடர்கதை ஆகுது..

பாப்பா டிரஸ் மாத்தறப்பக்கூட  கணவனை பார்க்க விடறதில்லை.. ஏதோ பயங்கரமான கற்புக்கரசி ஃபேமிலி போல.. காலம் பூரா கற்போட இருக்கனும்னு ஆசைப்படுது..


நம்மாளுங்க காசு கொடுத்து பிளாக்ல டிக்கெட் வாங்கி பிட்டுப்படம் பார்க்கறவங்க , சொந்த தியேட்டர் இருந்தும் சீன் பார்க்க முடியலைன்னா எப்படி? தம்பதிகளுக்குள் சண்டை.. பாப்பாவை அம்மா வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிடறான்.

ஓப்பனிங்க்ல ஒரு பாப்பா அம்போன்னு இருக்கே அந்த பாப்பாவுக்கும் இவருக்கும் சிவசம்போ .. ஐ மின்  ஒரு நட்பு உருவாகுது... 2 பேரும் எப்போ வெளீல போனாலும் வருண பகவான் அருள் பாலிக்கறாரு.. அடிக்கடி மழை வந்து அவங்க நெருக்கம் ஆக உதவியா இருக்கு..

http://www.cinejosh.com/gallereys/spicy/normal/konjum_mainakkale_tamil_movie_spicy_stills_1004120909/konjum_mainakkale_tamil_movie_spicy_stills_1004120909_025.jpg

அப்படி ஒரு நெருக்கமான கடத்துல பாப்பா கண்ணை மூடி, உதட்டை கடிச்சு ( அவர் உதட்டை அவரே கடிச்சு) விரக தாபத்தை வெளீப்படுத்தி கில்மாக்கு ரெடி ஆகறாரு .. இப்போ தான் ஹீரோ தன் ஹீரோயிசத்தை காட்றாரு.. நான் உத்தமன், ஏதும் செய்ய மாட்டேன்னு விலகி வந்துடறாரு.. புராணத்துல வர்ற ராமன் கூட அப்படி உட்டுட்டு வர மாட்டான்.. இவர் வந்துடறாரு..

இவங்க 2 பேர் லவ் பிக்கப் ஆச்சா? அல்லது பழைய ஃபிரஷான சம்சாரம் கூடவே சேர்ந்தாரா? அப்படிங்கறது  தான் மிச்ச சொச கதை ஹி ஹி ..

ஹீரோ பேரு உதய்.. ஆள் ஓக்கே .. ரொம்ப ஓவர் ஆக்டிங்க் எல்லாம் பண்ணாம டைரக்டர் என்ன சொன்னாரோ அதை மட்டும் செய்யறார்.. லோ பட்ஜெட் படங்களில் தொடர்ந்து சான்ஸ் உண்டு..

ஹீரோயின்ஸ் 2 பேரு.. அக்‌ஷதா, மோகனப்பிரியா.. இதுல யார் அக்‌ஷதா யார் மோகனப்பிரியா என்ர வரலாற்று உண்மைகள் சரியாத்தெரியலை.. கூகுள் சர்ச்லயோ,ராகுள் மிர்ச்லயோ தேடுனா ஈசியா கிடைக்கும்.. ஆனா பாருங்க ஃபிகருங்க அந்த அளவு ஒர்த் இல்லை.. 2 மே  50 மார்க் ஃபிகருங்க தான்.. சோ லீவ் தட் மேட்டர்..

ஹீரோவுக்கு மனைவியா வர்றவர் பாதி நேரம் அழுதுட்டே இருக்காரு..  ஃபேமிலி கேர்ள் முகம் ஓரளவு சூட் ஆகுது.. 30% தள்ளுபடி மாதிரி கிளாமர்  @ டூயட் சீன்ஸ்..

காதலியா வர்றவர் குண்டு முகம்.. தமிழனை கவர்றது கஷ்டம்.. உதா - சுவலக்‌ஷ்மி  .வசனம் பேசும்போது மறந்துடக்கூடாதேன்னு அவசர அவசரமா பேசறாரு..  நடிப்பு ஓக்கே ..


http://mimg.sulekha.com/tamil/konjum-mainakkale/stills/konjum-mainakkale-photos-082.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தில்  அதிக பட்சம் 6 கேரக்டர்களை மட்டும் வெச்சு திரைக்கதை எழுதுனது.

2. மொக்கையா இருந்தாலும் ஓரளவுக்கு ரிலாக்ஸா வர்ற எம் எஸ் பாஸ்கர் காமெடி டிராக்கை கஷ்டப்பட்டு படத்துல சேர்த்தது..

3. ஹீரோவுக்கு சூர்யா மாதிரி முக சாயல் இருப்பதை உணர்ந்து அதை பூஸ்ட் பண்ற மாதிரி கேமரா ஆங்கிள்ஸ் யூஸ் பண்னது

4.  மினிமம் 50,000 ரூபா சம்பளம் குடுத்தாலும் மேக்சிமம் கிளாமரை 2 ஹீரோயின்களிடம் இருந்து கறந்தது



http://www.abimani.com/wp-content/gallery/konjum-mainakkale-tamil-movie-hot-stills/konjum-mainakkale-tamil-movie-hot-stills-11.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1.  படத்தோட டைட்டில்க்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை, பேசாம டைட்டிலை மை டியர் மைனா அல்லது கொஞ்ச மறந்த மைனாக்கள் அப்படி வெச்சிருக்கலாம்

2. தனக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகியாச்சு என்ற மேட்டரை ஹீரோ ஏன் அந்த பாப்பா கிட்டே சொல்லலை? அவன் ஒண்ணும் சீட்டிங்க் பேர்வழி கிடையாது, சான்ஸ் கிடைச்சும் பாயாசம் சாப்பிடாம எந்திரிச்சு வந்தவன். அப்பேர்ப்பட்ட நல்லவன் தன்னை பற்றி சுய அறிமுகம் ஏன் செஞ்சுக்கலை?

3. ஹீரோ மேரேஜ் ஆன ஆள்னு தெரிஞ்சதும் என்னமோ வாழ்க்கையே போன மாதிரி ஹீரோயின் ஏன் பதறனும்? ஹீரோயினும் ஆல்ரெடி மேரேஜ் ஆகி ,மேட்டர் நடக்காம  விதவை ஆனவர்.. ஹீரோவும் மேரேஜ் ஆகியும் மேட்டர் நடக்காம மனைவியை பிரிஞ்சவர்.. ஆனா என்னமோ பிளான் பண்ணி ஏமாத்துன மாதிரி ஏன் குதிக்கனும்?

4. ஹீரோ ஒரு சராசரி மனிதர் தான்.. ஆசாபாசங்களை அடக்கி வாழும் துறவி அல்ல,அதை பல காட்சிகள்ல காட்டிடறீங்க.. ஆனா தனிமை, பாழடைஞ்ச பங்களா, இரவு,  வெளீயே மழை , பாப்பாவும் ஓக்கே சொன்ன பின் ஏன் ஹீரோ பம்பறாரு.. அம்புட்டு நல்லவரா காட்ட வேண்டிய அவசியம் என்ன? ( எங்க கவலை எங்களுக்கு, படம் தான் டப்பா சீனாவது டாப்பா 1 பார்க்கலாம்னு ஆதங்கம் தான் ஹி ஹி )


http://gallery.tamilkey.com/wp-content/themes/transcript_new/timthumb.php?src=http%3A%2F%2Fgallery.tamilkey.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F04%2FKonjum-Mainakkale-Movie-2012-Hot-Stills-1.jpg&q=90&w=340&h=254&zc=1


மனம் கவர்ந்த வசனங்கள்

1. நான் உனக்கு பொண்ணு  பார்க்கறேன், உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?

உங்க சம்சாரம் சுந்தரி மாதிரி சூப்பர் ஃபிகரா , செம கட்டையா வேணும் சார் ஹி ஹி


2. டேய்.. நாயே.. இதே ஃபோட்டோவை நான் காட்டினப்போ பிடிக்கலைன்னு சொல்லிட்டு இப்போ என் சம்சாரம் காட்டினதும் செம , சூப்பர்னு சொல்றியே  ?

3.  ஏம்மா.... நீ யாரு? சம்பந்தம் இல்லாம ஆஜர் ஆகறே?

 நானும் இவர் பொண்டாட்டி தான்.. ஆனா பொண்டாட்டி மாதிரி ஹி ஹி

 ஓஹோ கீப்பா? நகரு நக்ரு.. செல்லாது செல்லாது..


4. சார், உங்க தலை ஏன் அயர்ன் பண்ணுன மாங்கொட்டை மாதிரி இருக்கு?

5.  அது பேசாது ஒன்லி ஆக்‌ஷன் தான்..

 என்ன, புருஷனை அது இதுங்கறீங்க?

ம் ம் , நைட் டியூட்டி மட்டும் பார்த்தா பரவாயில்லை, பகல் டியூட்டியும் பார்க்குதே?

 எது? இந்த மூஞ்சி? ம் ம்


6.  என் புருஷன், என் உரிமை, நான் டா போட்டுக்கூப்பிடக்கூடாதா?

அந்நிய ஆம்பலைங்க முன்னால அது தப்பு , அடக்கி வாசி

7. நான் நிரந்தரமானவன் இல்லை, சும்மா வந்துட்டு போய்ட்டு, இருக்கிறவன்..

ஓஹோ டெம்ப்ரவரி ஹஸ்பெண்ட்?

8. என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?

ம் யாருக்குத்தான் உங்களை பிடிக்காது?

9. மண்ணுக்குள்ள போற வரை பொண்டாட்டியை மாத்தாம இருக்கறவன் தான் உண்மையான ஆம்பளை

10. உனக்கு லைஃப்ல எல்லாமே கிடைச்ச மாதிரி கிடைச்சு கிடைக்காத மாதிரி இருக்கா?

11. நான் உன்னை தப்பா நினைச்சது தப்புன்னு நினைச்சேன், ஆனா எல்லாமே சரியாத்தான் நினைச்சிருக்கேன்


http://www.cinemamasti.com/wp-content/uploads/Konjum-Mainakkale-Hot-Photos-4.jpg a


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் -- டி வி  ல போட்டா பாருங்க  அவ்ளவ் தான்

 ஈரோடு சங்கீதா தியேட்டர்ல படம் பார்த்தேன்

Monday, May 14, 2012

DAMMU - ஜூனியர் என் டி ஆர்,த்ரிஷா,கார்த்திகா - தெலுங்கு சினிமா விமர்சனம்


http://www.teluguwave.in/wp-content/uploads/2012/04/Dammu-Latest-New-Wallpapers-1.jpgஎத்தனை ஜென்மம் எடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் திருந்தவே மாட்டாங்க என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.. 1990 களில் நம்ம தமிழ் நாட்ல துவைச்சு காயப்போட்டு சலிச்சுப்போன மசாலா குப்பை தான்.. ஹீரோயிஸம் ஓவரோ ஓவர்.. ஆனா இந்தப்படம் தெலுங்குல ஹிட் ஆகிடும்னு தோணுது.. 

 ரஜினி நடிச்ச உழைப்பாளி, வேலைக்காரன், தர்மதுரை எல்லாத்தையும் ஒரு குடுவைல போட்டு அங்கங்கே சில சீன்கள் சுட்டு 2 ஹீரோயின்களையும் உள்ளே நுழைச்சுட்டா கதை ரெடி.. 

ஊர்ல எங்கே அக்கிரமம் நடந்தாலும் அங்கே சம்மனே இல்லாம ஆஜர் ஆகி நீதியையும், நேர்மையையும், நியாயத்தையும் நிலை நாட்டி வெட்டாஃபீசரா இருக்கறவர் தான் ஹீரோ.. ஹைதராபாத் தான் கதைக்களம்.. அங்கே வாழும் மக்கள் நிம்மதியா வாழனும்னு நினைக்கறார்.. 35 வயசான ஹீரோ 41 வயசான த்ரிஷாவை கார்ல இருந்து இறங்கறப்ப பார்க்கறார்.. பார்த்ததும் லவ்வு.. 

பார்ட் டைம் ஜாப்பா அந்த பாப்பா பின்னால சுத்திட்டு அப்பப்ப எவனாவது இளிச்சவாயன் வில்லன் சிக்குனா ஃபைட் போட்டுக்கிட்டு பொழுதை ஓட்டிக்கிட்டு இருக்காரு..




http://www.cineindya.com/wp-content/uploads/2012/04/Telugu-Movie-Dammu-online-picture-Moments.jpg

 ஒரு நாள் வீரதுர்க்கம் ஊர் ராஜா கோட்டா சீனிவாசராவ் அவரை சந்திச்சு அந்த ஊர்க்கு தத்துப்பிள்ளையா சின்ன ராஜாவா வாங்கன்னு கூட்டிட்டு போறார்.. அங்கே தான் மெயின் வில்லன் நாசர்.. 2 குடும்பத்துக்கும் பகை.. நாசர் செம காமெடி பார்ட்டி.. அவங்க ஃபேமிலியைத்தவிர வேற எந்த ஃபேமிலில ஆண் குழந்தை பிறந்தாலும்  அதை விட மாட்டார், கொன்னுடுவார்.. 

 அந்த வில்லன்களை எப்படி ஜெயிக்கறார்ங்கறதுதான் மிச்ச மீதி கேவலமான கதை. இதுல செம காமெடி மேட்டர் என்னான்னா ஹீரோதான் நிஜமான வாரிசுங்கற உண்மையை சஸ்பென்ஸ்னு நினச்சுக்கிட்டு டைரக்டர் க்ளைமாக்ஸ்ல சொல்றார்.. ஆனா ஆடியன்ஸ்க்கு 2 வது ரீல்லயே தெரிஞ்சுடுது.. ஹய்யோ அய்யோ.. 

ஹீரோ ஜூனியர் என் டி ஆர் ஆள் ஷோக்காத்தான் இருக்கார்..  ஃபைட் சீன்ஸ்ல நல்ல சுறுசுறுப்பு.. டூயட் சீன்ஸ்ல கிளுகிளுப்பு... டபுள் மீனிங்க் டயலாக்ஸ் எல்லாம் அள்ளி விடறார்.. அப்பப்ப ரஜினி மாதிரி கேமராவைப்பார்த்து அரசியல் பன்ச் எல்லாம் அள்ளி விடறார்.. ஆந்திராவுல இந்தப்படத்தை அந்த ஆடியன்ஸ் உடன் பார்க்கனும்.. மஜாவா இருக்கும்.. இங்கே ஒரு பய கண்டுக்கலை.. 

 41 வயசு த்ரிஷா தான் முத ஜோடி.. இன்னும் பாப்பா செமயாத்தான் இருக்கு.. போரே அடிக்கலை.. ஆல்ரெடி  சி டி ல அவர் கிளாமரை முழுசா பார்த்தவங்க கூட  படத்துல  காட்ட்ற கிளாமருக்கு ஆன்னு வாயை ஓப்பன் பண்ணிட்டு ரசிக்கத்தான் செய்யறாங்க ..2 டூயட்.. 12 லைன்ஸ் வசனம்  சம்பளம் 40 லட்சம் அடேங்கப்பா

 23 வயசு  கார்த்திகா 2 வது ஹீரோயின்.. ஆள் வாட்டசாட்டமா ஜை ஜாண்டிக்கா இருக்கு ஆனா பெண்மையின் மென்மை இல்லை.. அவரது புருவம் எல்லாரும்  பெரிய பிளஸ்னு சொல்றாங்க.. ஆனா எனக்கென்ன தோணுதுன்னா  அந்த புருவம் தான் அவரோட மைனஸ்னு தோணுது.. கோபக்கார பெண்ணா காட்டுது..

காமெடி ஆக்டர் பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் எல்லாருக்கும் வாய்ப்பு ரொம்ப கம்மி தான்




http://www.tupaki.com//twdata/2012/0312/news/Dammu-Movie-Working-Stills---Photos-191.jpg

  இயக்குநர் அவரே எழுதி அவர் மட்டுமே ரசித்த வசனங்கள் + சில கேவலமான பன்ச் டயலாக்ஸ்


1. ஆண்டவன் எனக்கு ஒரு உயிரை கொடுத்திருக்கான்.. 10 உயிரை காப்பாற்ற தம்மு குடுத்திருக்கான் ( ஆண்டவன் என்ன பொட்டிக்கடைக்காரரா? தம் எல்லாம் தர? )


2. அரசியலுக்கு நானா வர மாட்டேன்.. ஆனா மக்கள் நான் தான் வரனும்னு நினச்சா அடங்க மாட்டேன் ( நீ என்ன அடங்கா மாரியா? )


3.  ஏய்.. சிரிக்காதடி... அப்புறம் ஓக்கேனு அர்த்தம் ஆகிடும்.. மனசுக்குள்ளேயே வெச்சுக்கோ.. அப்போதான் அவன் உன்னையே சுத்தி சுத்தி வருவான்.. ( சனீஸ்வர பகவானைக்கூடத்தான் சுத்தி சுத்தி வர்றோம்)


4. நீ கூடத்தான் பொறம்போக்கு.. நான் ஏதாவது சொன்னேனா?

ஐ லைக் யுவர் நேர்மை.. ஆனா இந்த மேட்டர் உன்னோட இருக்கட்டும் , யார் கிட்டேயும் சொல்லிடாத.


5. குடுகுடுப்பைக்காரர் பிரமாதமா வாசிக்கறார் இல்ல?

 ஃபினிஷிங்க் டச் கொடுப்பார்.. பாரு அப்போ தெரியும்.. உனக்குஏழரை எப்போ ஸ்டார்ட்னு..


6.  நாளான்னைக்கு ( நாளை மறு நாள் ) உன் பிறந்த நாள்..

 என்னது?


 ஏன் இப்படி ஜெர்க் ஆகறே..? உனக்கே தெரியாம நீ பொறந்துட்டியா?


7. காமெடி சீன்ல காஸ்ட்லி செலவு வைக்கறவன்  நீ , ஜாக்கிரதையா இருக்கனும்..


8. பணம் இருந்தா எது வேணாலும் வாங்கிடலாம்னு நினைக்காத.. கவுரவத்தை வாங்க முடியாது # கவுரம் சி டி 20 ரூபா தான் மாமு


9.  என்னை வெட்கப்படக்கத்துக்கோன்னு எங்கம்மா சொன்னாங்க.. நான் நல்லா வெட்கப்படறேனா?


10. இந்த ரிங்க் எதுக்கு என் விரல்ல போடறே?

 ரிசர்வேஷன்.. ஹி ஹி

 ஓஹோ அப்போ பாதி மேரேஜ் முடிஞ்ச மாதிரி.. பாதி சொந்தம் ஆகுது..?



http://4.bp.blogspot.com/-LwLacOsae4g/T3Ca1e_k6EI/AAAAAAAAA6I/IpMDkOI7iTo/s640/Trisha-Actress-hot-Stills-1.jpg


11. நீங்க போங்க.. நாங்க 2 பேரும் சேர்ந்தே பண்ணிக்கறோம் பூஜையை..

12.  புக்கிங்க் முடிஞ்சுது.. பாதி கோ ஆபரேஷனை உங்க கிட்டே எதிர் பார்க்கிறேன் மாமோய். ஹி ஹி


13. மாமா. என்னை யூஸ் பண்ணிக்குங்க.. ஹி ஹி

14. சரித்திரத்தை உருவாக்கறவன் சொல்லிட்டு வர மாட்டான்.. ( ஏன் அவன் மேனர்ஸே இல்லதவனா?)


15. அரிசியை ஒரு ரூபாய்க்கு தர்றீங்க.. ஆனா பருப்பு விலை ரூ 60 ஆகுது. மக்களை ஏமாத்தற வேலை தானே?



16. சின்ன வயசுல இருந்தே நான் எதை கத்துக்கிட்டாலும் ஸ்பீடா கத்துக்குவேன்.

17. சாவை என் கண்ல காட்டாதே.. அதன் பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்/..


18. என்னது? உனக்கு பலம் ஜாஸ்தியா? பன்னி பெருத்தா யானை ஆகுமா?


19. சவு்ண்டை குறை.   நான் 2 வது அடி அடிச்சா உன் தொண்டைல இருந்து சத்தம் வர 5 வருஷம் ஆகும்..


20. அத்தான்.. என் கிட்டே அழகு எப்பவும் எடுப்பா இருக்கும், பார்க்கறீங்களா? ( என்னமோ  வாசல்ல போட்ட கோலம் பார்க்கறீங்களா?ன்னு கூப்பிடற மாதிரி, என்னாதிது? ராஸ்கல்ஸ்..


21. மாமா.. உங்களைத்தான் பண்ணனும் மேரேஜ்.. ஹி ஹி

22. அல்ங்கா நல்லூர் காளை மாதிரி மாமன்.. கொம்பு சீவி வெச்சிருக்காங்க  பண்ணுனா உன்னைத்தான் பண்ணனும் மாமா மேரேஜ்

23.. டேய் டேய்.. உனக்கு அட்டர் டைம்ல 4 ஃபிகரா? ஜெனரேட்டர் சூடு தாங்காதுடா..

24.  என்னை கொலை செய்யனும்னு நீ 25 வருஷம் முன்னால முடிவு செஞ்சே.. உன்னால முடியலை.. ஆனா நான் உன்னைக்கொல்லனும்னு ஜஸ்ட் ஒரு மணி நேரம் முன்னால தான் நினைச்சேன்.. இப்போ பார்த்தியா?

25. மனுஷன் கிட்டே இருக்கற உண்மையான  உணர்ச்சி பயம் தான்.. கத்தி எடுக்கறவன் பயப்படக்கூடாது, பயப்படறவன்  கத்தி எடுக்கக்கூடாது..

26. யுத்தம்கறது  ஜெயிப்பா? தோப்பா?ன்னு இருக்கனும்.. சாகறமா? சாகடிக்கறமா?ன்னு இருக்கக்கூடாது


http://www.teluguone.com/tmdbuserfiles/karthika-nair-hot-stills.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. கதைக்கு சம்பந்தமே இல்லாம 2 ஹீரோயின்ஸ் எதுக்குன்னு யாரும் கேள்வி  கேட்க முடியாதபடி 2 ஜிகிடிகளையும் கதையில் இணைச்சது..


2.  ஆர்ப்பாட்டமான சண்டைக்காட்சிகள்.. ஒரு சாம்பிள் 46 மாடிக்கட்டிட மொட்டை மாடில இருந்து ஹீரோ டொம்முன்னு கீழே ஒரு கார் மேலே விழறார்.. கார் அப்பளம் போல் நொறுங்குது.. ஆனா அண்ணனுக்கு எதும் ஆகலை ஹி ஹி

3. த்ரிஷா பேஸ்கட் பால் விளையாடும்பொது காமிரா டாப் ஆங்கிள்ல வெச்சு ஹி ஹி ஹி

4. சொல்றேனேன்னு யாரும் தப்பா நினைக்க வேண்டாம்.. ஹீரோவுக்கு அக்காவா வர்ற 3 பேரும் செம கட்டைங்க

5. இருக்கற 2 ஜோடிங்க பத்தாதுன்னு க்ளைமாக்ஸ் குத்தாட்டப்பாட்டுல 4 ஜோடி குடுத்து ஹீரோவை ஆட விட்டது ஆஹா..




http://i.ytimg.com/vi/CdBz4atrHG0/0.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் சொதப்பல்கள்


1. ஓப்பனிங்க் ஷாட்ல அந்த கேவலமான ஃபைட் சீன் முடிஞ்சதும் அந்த கோடீஸ்வரர் தன் உயிரை காப்பாத்துனதுக்கு  பரிசா ரூ 25 லட்சம் மதிப்புள்ள செக் லீஃப் தர்றார்.. அதை வாங்காமயே பெரிய இவரு மாதிரி கூலிங்க் கிளாஸ் போட்டுட்டு ரிட்டர்ன் ஆகற ஹீரோ அப்புறம் அந்த பணத்தை பேங்க்ல இருந்து எடுத்துடறாரு.. எப்படி?


2. ஹீரோ ஷூ கால்லயே அரண்மனைக்குள் எல்லா ரூமுக்கும் போறாரு, ஓக்கே , ஆனா பூஜை ரூமுக்கு கூட அப்படியே போறாரே? சாமி கும்பிடும்போதும் ஷூ போட்ட படியே கும்பிடறாரே? ( குஷ்பூ ரசிகரோ)


3. ஹீரோவுக்கு முதல் 3 ரீல் வரை மீசை சாதாவா இருக்கு.. திடீர்னு ஒரு சீன்ல இந்தப்பக்கமா நின்னு பேசறப்ப சாதாவா இருந்த மீசை அப்படி அந்த பக்கமா திரும்பறதுக்குள்ள முறுக்கு மீசை ஆகுதே எப்படி?


4. ஜமீன் பரம்பரைன்னு கூட்டிட்டு வந்த ஹீரோ ஏன் ஒவ்வொரு டைமும் கைக்காசை செலவு பண்றார்? என் கிட்டே ஏது பனம்னு கேட்க வேண்டியதுதானே? அவரா போகலையே? ராஜா தானே கூட்டிட்டு வந்தது?

5.  ராஜா கிட்டே த்ரிஷாவோட அப்பா உங்க மருமகளை உங்க கிட்டே விட்டுட்டு போறேன்னு சொல்ரப்போ ஆக்சுவலா பாப்பா அடக்க ஒடுக்கமா சேலைல தானே இருக்கன்னும்? ஜமீன்ல இருக்கற 11 லேடீஸும் பட்டுப்புடவைல இருக்கறப்ப த்ரிஷா மாடும் லோ கட், லோ ஹிப்  சுடில வருதே? ( இந்தியாவுலயே சுடிதார்ல கூட லோ ஹிப்ல வந்தது இவருதான்)

6. பாடல் காட்சிகளில் 2 ஹீரோயின்சை அரைகுறையா  ஒரே டைம்ல ஆட விட்டா என்னய்யா அர்த்தம்? நாங்க எதை சாரி யாரை பார்க்க? ஹி ஹி

7.  ஒரு சீன்ல வில்லனோட எதிரி ஹாஸ்பிடல்ல அட்மிட்டட். அவர் முகத்துல ஆக்சிஜன் டியூப்.. அவனை கொலை பண்ண ஜஸ்ட் அதை இழுத்தா போதும்.. எதுக்கு அவ்ளவ் பெரிய கத்தி எல்லாம் எடுத்து அந்த டியூப்பை  வெட்டனும்?


8. கலெக்டரா வர்றவர் குமாஸ்தா மாதிரி இருக்கார்.. நோ கம்பீரம்..


9. ஆம்பளை குழந்தைதான் பிறந்திருக்குன்னு சும்மா டயலாக்ல அந்த லேடி சொன்னா போதாதா> குழந்தையை தூக்கி காட்டனுமா? ஹய்யோ அய்யோ .. நல்ல வேளை அந்த லேடி குழந்தையை தூக்கி காட்டுச்சு ஹி ஹி

10. க்ளை மாக்ஸ்ல 120 கிமீ ஸ்பீடுல  5 ஜீப் ஒரு ஆளை கயிற்றுல கட்டி இழுத்துட்டுப்போக நம்ம ஹீரோ கிட்டத்தட்ட 24 கிமீ ஓடியே சேஸ் பண்றார்.. அந்த கயிற்றில் கட்டி இழுக்கப்படும் நபர் சட்னி ஆகி இருக்கனும்.. ஆனா ஆள் அப்படியே இருக்கார்

11. தென்னை மரத்தை ஆனானப்பட்ட தொழில் முறை தொழிலாளி வெட்னாலே  50 வெட்டு வெட்டனும்.. ஆனா ஹீரோ ஒரே சீவுல தென்னை மரத்தையே சீவுவது ஓவர்..

12. ஃபைட் சீன்ல ஹீரோ 2 கையையும்  பின்னால கட்டிக்கிட்டே ஃபைட் போடறது செம காமெடி.. படு கேவலமா இருக்கு .. ஏன் டூயட்ல அப்படி செய்யறது?






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxqirxqXVI6mTjTxJ5LJuPgz0vNXSPG7MTRp8ua4xNH6NHDl4DNKSSVBCGINdcAWsF5vMA5CVU8vcQiUYh5MPeH26OaL46eKKlw0mL5-dW-HE0HuixabzbIJEpJRdmEtFe0apGA77pRFoq/s640/hot-trisha-cleavage-stills-1.jpg
 டப்ப்பிங்க் படத்துக்கு ஆனந்த விகடன் நோ விமர்சனம்..

 இருந்தாலும்  ஒரு ஒப்பீட்டுக்காக மார்க் - 36

 குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - சும்மா ஃபிரண்ட்சோட போய் ஹீரோவை கலாய்க்க நினைக்கறவங்க மட்டும் போலாம். மற்ற படி படம் படு டப்பா

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்