Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Wednesday, June 26, 2013

மரியான் - இயக்குநர் பரத்பாலா பேட்டி @ கல்கி

அர்ஜுன்

இயக்குனர் பரத் பாலாவும் .ஆர்.ரஹ்மானும் வந்தே மாதரம், ஜன கண மன சேர்ந்து தூள் கிளப்பி இருந்தாலும் பரத் பாலாவுக்கு இதுவே முதல் தமிழ்ப் படம். தனுஷ் பல படங்களில் நடித்து, தேசிய விருது வாங்கி இருந்தாலும் கூட, அவர் படங்களுக்கு .ஆர். ரஹ்மான் இசையமைத்ததில்லை. இப்போது இந்த மூவர் கூட்டணியில் வெளியாகவிருக்கும் படம்மரியான்யூடியூபில் பாட்டுகளும், விளம்பர டீசர்களும் 26 லட்சம் ஹிட்ஸ் தாண்டி எகிறிக் கொண்டிருக்கிறது.




 டைரக்டர் பரத் பாலாவை அவரது ராஜா அண்ணாமலைபுரம் அலுவலகத்தில் சந்தித்தோம். கவிஞர் குட்டி ரேவதி உள்ளிட்ட மரியான் யூனிட் படு பிசியாக தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரத் பாலாவின் அறையில், ஒரு பக்கச்சுவர் முழுக்க துண்டுக் காகிதங்களாக ஒட்டப்பட்டிருக்கின்றன. என்னவென்று கேட்டால், படத்தின் ஸ்கிரிப்ட் என்கிறார் பாலா. கல்கிக்கு அவர் அளித்த ஸ்பெஷல் பேட்டி:


 


திடீர்னு எப்படி தமிழ்ப் படம் பண்ணற ஆசை வந்தது?


இருபது வருஷமாய் விளம்பரப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள்னு நிறைய எடுத்தாலும், அது எல்லாத்துலயும் ஒரு விஷயம் கண்டிப்பா இருக்கும். அதுதான் ஹியூமன் எமோஷன்ஸ். இந்தப் படங்கள் எல்லாமே மொழியைத் தாண்டி மக்களோடு உணர்ச்சிபூர்வமான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திச்சு. ஏற்கெனவே ஹிந்தியில டைரக்ட் பண்ணின என்னோட முதல் படமும் அது மாதிரிதான்



 இப்போ படத்துக்கு எடுத்துக்கிட்டிருக்கிற சப்ஜெக்ட் ரொம்ப ஸ்டிராங்கான ஹியூமன் எமோஷன். நான் உலகம் முழுக்க சுத்தி இருக்கேன் என்றாலும், என் வேர் மைலாப்பூர். அதனால, இந்தக் கதையை தமிழ்ல சொன்னாத் தான் சரியா இருக்கும்னு நினைச்சேன். என் முதல் தமிழ்ப்படம்மரியான்உருவான பின்னணி இதுதான்."
 




மரியான் ஒரு நிஜ கேரக்டராமே?


ஆமாம்! ரெண்டு வருஷங்களுக்கு முன்னால பேப்பர்ல நான் படிச்ச நியூஸ்தான்மரியான்கதைக்கு ஆரம்பப் புள்ளி. கேரளா, மும்பை, பஞ்சாப்ல இருந்து வேலைக்காக ஆஃப்ரிக்காவில் சூடானுக்குப் போன மூணு இளைஞர்கள் அங்கே பட்ட கஷ்டங்கள்தான் கதைக்கு அடித்தளம். அதுல ஒருத்தனோட காதல் அவனுக்கு எத்தனை உடல் ரீதியான, மனோரீதியான பலத்தைக் கொடுக்குது? அதை வெச்சு அவன் எப்படி எல்லா கஷ்டங்களையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கறான்னு படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டபோது, ரொம்ப ஆச்சர்யமாய் இருந்தது.  


அந்த இளைஞர்களைப் பத்தி முழு விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டபோது அதுல ஆழமான ஹியூமன் எமோஷன் இருக்கிறது புரிஞ்சுது. அதை வெச்சு ஒரு பவர்ஃபுல் ஸ்கிரிப்ட் பண்ணலாம்னு தோணிச்சு."

 



தனுஷ் எப்படி?

ரெண்டு வருஷம் முன்னால, தேசிய விருதுக்கான நடுவர் குழுவுல நான் இருந்தப்போ தனுஷ் நடிச்சஆடுகளம்பார்த்து, அவரோட நடிப்புல ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன். இந்த ஸ்கிரிப்ட்ல நடிக்க தனுஷ்தான் பொருத்தமா இருப்பாருன்னு முடிவு பண்ணினேன்


 தனுஷுக்குக் கதையைச் சொன்னதும், அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போய், உடனே சரின்னு சொல்லிட்டார். இதுதான் கதை, தனுஷ் நடிக்கிறாருன்னு ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிசந்திரனிடம் சொன்னதும், உடனே படத்தை புரொடியூஸ் பண்ண .கே. சொல்லிட்டார். படத்துல தனுஷ் மண்டைக்காடு பக்கத்துல இருக்கிற நீரோடிங்கிற கிராமத்து மீனவ இளைஞர். அவர் வேலை செய்ய சூடான் போகும் போது நடக்கிற வாழ்க்கைப் போராட்டம்தான் கதை."




 
பூபடத்தோட சாஃப்ட் பார்வதிக்குக் கூட ரொம்ப பவர்ஃபுல் ரோலாமே?


இந்தப் படத்துக்காக அவங்களுக்கு படத்துல வருகிற ஐந்தாறு சீன்களைக் கொடுத்து நடித்துக் காட்டச் சொன்னேன். முதல் சீனை நடிக்கும்போதே நான் அங்கே பார்வதியைப் பார்க்கலை; பனிமலரைத்தான் பார்த்தேன்."


ரஹ்மானை படத்துக்கு இசையமைக்க வைப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்திருக்காதே?


(சிரிக்கிறார்) நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் நாள்ல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். முன்னாலயே நாங்க சேர்ந்து ஒர்க் பண்ணின வந்தே மாதரம், ஜன கண மன இரண்டுக்கும் அகில இந்திய அளவுல எந்த மாதிரியான வரவேற்பு கிடைச்சுதுன்னு உங்களுக்கே தெரியும். நான் கேட்டேன்



 அவரும் உடனே சம்மதிச்சார். மறுபடியும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ண ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சின்னு அஞ்சு விதமான எமோஷன்ஸ் படத்துல இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி பாட்டுகள் வேணும்னு சொன்னேன். வாலி தொடங்கி தனுஷ், கபிலன், குட்டி ரேவதி, ரஹ்மான்னு எல்லாரும் பாட்டு எழுதி இருக்காங்க. மரியான் தமிழைத்தாண்டி, உலக அளவில் ரசிகர்களை ஈர்க்கிற ஒரு சினிமாவாய் இருக்கும் என்பது நிச்சயம்."




 
படத்தோட கேமராமேன் ஒரு ஃப்ரெஞ்சுக்காரராமே?



ஜானி மை டாக்னு ஒரு படம் பார்த்திட்டு, அதன் கேமராமேன் மார்க்தான் நம்ம படத்துக்கும் கேமரான்னு தீர்மானிச்சு, அவரைத் தேடிப் பிடிச்சுக் கேட்டதும் .கே. சொல்லிட்டார். அவர் இதுக்கு முன்னால இந்தியாவைப் பார்த்ததில்லை. அவர் கோணத்துல இந்தியாவைப் பார்க்கிறபோது, நமக்கே தெரியாத புதுப்பார்வை படத்துல இருக்கும். சீன்கள் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கதை சூடான்ல நடக்குது. ஆனா, அந்த சீன்களை நாங்க எடுத்தது நமீபியாவுல. ‘ஜானி மை டாக்படத்துல நடிச்சிருக்கிற சில ஆஃப்ரிகன் ஆக்ஷன் நடிகர்களை நடிக்க வெச்சிருக்கேன்."


படத்தோட கடைசி சீன்ல ஷூட்டிங்கை ஆரம்பிச்சு, முதல் சீன் வரைக்கும் ரிவர்ஸ்ல படத்தை எடுத்தீங்களாமே. என்ன காரணம்?


முதல் சீன்ல ஆரம்பிச்சு வரிசையா சீன்களை எடுத்திருந்தா படம் எடுத்து முடிக்க ரெண்டு வருஷம் ஆகி இருக்கும். அந்தத் தாமதம் வேணாம்னுதான் மாத்தி ரிவர்ஸ்ல எடுத்தோம்."


ஆழ்கடல் சீனெல்லாம் எடுத்திருக்கீங்க. ஆனா தனுஷுக்கு நீச்சலே தெரியாதாமே?

ஆமாம். மன உறுதியும், உடல் பலமும் கொண்ட மீனவ இளைஞர் மரியான். எல்லோரும் வலை வீசி மீன் பிடிச்சா, இவன் ஆழ்கடலுக்குப் போய், பெரிய மீனை கூரிய ஆயுதத்தால் நேரடியாகக் குத்திப் பிடிப்பான். நீச்சல் தெரியாது போனாலும், தனுஷ் காட்டின தைரியமும், ஈடுபாடும் வாவ்! கிரேட்!"


thanx - kalaki 





Wednesday, January 04, 2012

ஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்- காமெடி கும்மி

http://karunagappally.info/wp-content/uploads/2011/09/3-tamil-movie-stills.jpg 

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் – ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்!


சி.பி -  வதந்தி அல்லன்னு பிராக்கெட்ல போட்டிருக்கறதால நாங்க நம்பறோம், சும்மாவே நாங்க வெறும் வாயை மெல்லற ஆளுங்க, கால் கிலோ அவலே கிடைச்சா? ஹே ஹே ஹேய்


3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது.



சி.பி -  இதுவரை அப்படி வெடிக்கலைன்னாலும் இனி வெடிச்சுடும், எனக்கென்னவோ இது 3 படத்துக்கான சீப்பான பப்ளிசிட்டி மாதிரி தோணுது
தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதாவும் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.


சி.பி - ரஜினி உடல்நிலை இப்போதான் சகஜம் ஆகிட்டு வருது, இப்போ அவர் மனசு வருத்தப்படுவது போல் நியூஸ்.. 
“ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது. உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமா… அல்லது நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணவா” என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சி.பி - தலீவா, சிவாஜி படத்துல வர்ற மாதிரி ஆஃபீஸ் ரூம்க்கு கூட்டிட்டு போய்டுங்க.. 

http://mimg.sulekha.com/tamil/3/stills/3-film-028.jpg

மண்டபத்தில் தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ரஜினி. “எப்பேர்பட்ட மனிதர் அவர்… திருமணத்தின் போது தனுஷ் செய்த அத்தனை சில்லரைத்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகும் தனுஷ் திருந்தவில்லை.


சி.பி - பார்க்கறதுக்குத்தான் நான் சுள்ளான்,   களம் இறங்குனா சுளுக்கெடுத்துடுவேன்னு கேவலமா பஞ்ச் டயலாக் பேசுனாரே, அது இதுக்குத்தானா?

ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்றார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர்.

சி.பி - என்னய்யா குழப்பறீங்க? ஆல்ரெடி பிரிஞ்சு இருந்தா  எப்படி அவரை ஹீரோவா போட்டு படம் எடுப்பாங்க?

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.


சி.பி - ம்க்கும். இவர் பேச்சை செல்வராகவனே கேட்கலை, தனுஷ் மட்டும் கேட்கவா போறார்?
ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்ததும் (கமல் ஆசியுடன்), பின்னர் அவரை விட்டுப் பிரிந்து வந்ததும் நினைவிருக்கலாம்.



சி.பி - கமல் ரசிகர்கள் சார்பாக காதல் இளவரசி பட்டம் வழங்கறாங்களாம். 


http://mytamilchannel.com/index/wp-content/gallery/3/3-movie-stills-1.jpg

சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் ஐஸ்வர்யா. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.


சி.பி - நல்ல வேளை அமலா பால் தப்பிச்சாரு.. ஸ்ருதி போனா போய்ட்டு போகுது ஹி ஹி ஹி 
புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் ட்ரிங்ஸ் பார்ட்டிக்குப் போனாராம் தனுஷ். இதைக் கேள்விப்பட்டு பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டாராம் ரஜினி. தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நாயகிகளின் தண்ணிப் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் தனுஷ்.

சி.பி - மனைவியோட பிறந்த நாளை மய்க்கா நாள் (அடுத்த நாள்)கூட கொண்டாடிக்கலாம், மொதல்ல மச்சினியை கவனிப்போம் பரம்பரை போல.. 

கொலவெறி பாட்டுக்கு கிடைத்த தாறுமாறான ஹிட்டும், மும்பையில் கிடைத்துள்ள புதிய சினேகிதங்களும் அவரை தலைகால் புரியாமல் ஆட வைப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கடுப்புடன் கூறுகின்றனர்.


சி.பி - கண்ணா, நான் ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன், அமரன் படத்துல 2 சூப்பர் ஹிட் பாட்டு வந்துச்சு, வெத்தலை போட்ட ஷோக்குல நான்.  பாட்டு மரண ஹிட் ஆனதும் படம் ரிலீஸ்க்கு முன்னால கார்த்திக் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுனாரு, படம் டப்பா ஆகி  படு குப்பை ஆச்சு.. அதனால  ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது தம்பி.. 


யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தபோது, நயன்தாராவுடன் ஏகத்துக்கும் நெருக்கமாகி, எல்லை மீறிப் போனதும், நயன்தாராவை கிண்டி நட்சத்திர ஓட்டலில் நிரந்தரமாகத் தங்க வைத்திருந்ததும் செய்தியாக ஏற்கெனவே வந்ததுதான். 

 சி.பி - என்னய்யா இது கிண்டி கண்டின்னு புதுசு புதுசா புளியைக்கரைக்கறீங்க? அப்போ பிரபுதேவா வாழ்க்கை என்னாகறது, கேயாஸ் தியரி மாதிரி செயின் ரீ ஆக்‌ஷன் எல்லாம் இனி வரப்போகுதா ? அவ்வ்வ்வ்வ்


அப்போது ரஜினி தன் பாணியில் கண்டிக்க, தனுஷ் வாலைச் சுருட்டிக் கொண்டாராம். இப்போது மீண்டும் ஸ்ருதியுடன் லீலையை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 சி.பி - லீலையை ஆரம்பிச்சாரா? நடத்தி முடிச்சுட்டாரா? நல்லா விசாரிங்க... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd5ppmVKXW-3g_S500ZXMUvLm62AxchSmk945Zi8ztTzGFciLTJb7QLcEVAH0vhdMnzGta5cLGvWHqyozOhjchqNRJ_jpYV4HEB3MHieyrZJh086lnbR51VO5rpOMq9si1vSJO_gkhhEN2/s1600/3+Movie+Latest+Woking+Photos+Stills+Gallery+Pics+%25284%2529.jpg


1.தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!! # கோபப்பட வேண்டியது சித்தார்த் தானே?

-----------------------------
2. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படம் தயாரிப்பு தரப்புக்கு லாபமோ இல்லையோ, இயக்குநருக்கு பர்சனலா நட்டம் தான், தனுஷ் நாமம் போடப்போறார்

----------------------------------

3. கமல் , ரஜினி ஆகிய இரு தரப்பு ரசிகர்களை ஒருங்கிணைக்கவே  நான் ஸ்ருதியுடன் இணைந்தேன், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை -தனுஷ்@இமேஜினேஷன்

---------------------------------

4. தனுஷ் ஸ்ருதியை சரியா முத்தமிடலைன்னா  மறுபடி செய்ய சொல்லுவேன்-இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் # நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

-----------------------------------

5. தனுஷ், ஸ்ருதி- கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு-ஐஸ்வர்யா # மேடம், லூசா நீங்க, பிசிக்கலா ஒர்க் அவுட் ஆகி பயாலஜிக்கல் ரிசல்ட்டே வந்தாச்சு

---------------------------------

http://mytamilchannel.com/index/wp-content/gallery/3/3-movie-stills-16.jpg

6. சிம்பு - என்னை பிளேபாய்னு சொல்லி ஒத்துக்குனவங்க இது வரை 2 பேரு, இப்ப 2 பேரும் நல்லா அனுபவிக்கறாங்க, கடவுள் இருக்காண்டா குமாரு

------------------------------------

7. ரவி-தம்பி தனுஷு நீ பண்றதெல்லாம் ஒரு தினுஷா இருக்கேப்பா?

தனுஷ் - என் அடுத்த டார்கெட் சனுஷா + த்ரிஷா # சொகுசா பல தினுஷா

---------------------------------

8. ஐஸ்வர்யா தனுஷ் - சட்டப்படி நீங்க செஞ்சது தப்பு, நான் லா (LAW) ஸ்டூடண்ட் ,

தனுஷ் - செட்டப்படி நான் செஞ்சது சரிதான், நான் லோ (LOW) ஸ்டூடண்ட்

-----------------------------------

9. ஸ்ருதிகமல்  - அப்பா பேரை ஏழாம் அறிவுல காப்பாத்த முடியலை, ஆனா பாருங்க பர்சனல் லைஃப்ல காப்பாத்திட்டேன்

-----------------------------------

10. தனுஷ்- இப்போ என்னய்யா தப்பு கண்டு பிடிச்சுட்டீங்க? அவங்களும் பாடகி, நானும் பாடகன், பிரதமரே பாராட்டுனாரு, ரொம்ப சலிச்சுக்கறீங்களே?

------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixsj5v_UkeHSwiByRx_Tn5YL53ygqHJC8Biq5w-F160KWC2khbP9Jxx5vp_hXd5no2w7emHcLbycoAp80wMzJXsYXgBOdEQ9ZrqvvL60CSjw3V0E4bZvYk6Grl_12Yc2n6YbgfupYIHweu/s1600/Dhanush+in+3+Latest+Movie+Stills+Photos+Gallery+Shruti+Hassan+Hot+Pics+in+3+Movie+%25287%2529.jpg

Friday, November 25, 2011

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்


http://viswaksena.com/wp-content/uploads/2011/10/mayakkam_enna.jpg 

புது வசந்தம் விக்ரமன் கிட்டே குடுத்துருந்தா 4 நிமிஷ பாட்டிலேயே முடிச்சிருக்கற சாதாரண கதைதான்.. நம்ம செல்வராகவன் தன்னோட திறமையை முடிஞ்சவரை  அந்த சாதா கதையை ஸ்பெஷல் சாதாவா சொல்ல முயற்சி பண்ணி இருக்கார்..

ஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர்.. அவரோட கனவே பெஸ்ட் ஃபோட்டோ கிராஃபர் ஆகனும்கறதுதான்.. ஆனா பாருங்க அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் இல்ல.. திறமை இருந்தும்  அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலை.. அவரோட திறமையை யூஸ் பண்ணி வேறொரு ஆள் ஜெயிக்கறாரு.. அப்புறம் கஷ்டப்பட்டு முட்டி மோதி ஜெயிச்சு பெஸ்ட் ஃபோட்டோகிராஃபர் அவார்டு இண்ட்டர்நேஷனல் லெவல்ல வாங்கிடறாரு.. அவ்ளவ் தான் கதை..

தல நடிச்ச முகவரி கதையை திருப்பி சுட்ட தோசை மாதிரி இருக்கேன்னு யாரும் நினைச்சுடக்கூடாதே.. அதனால சில ஜிம்மிக்ஸ் வேலையை எல்லாம் டைரக்டர் காட்றாரு.. அதாவது ஹீரோவுக்கு ஜோடி யார் தெரியுமா? போடா லூசு.. ஹீரோயின் தானே-னு அல்ப சொல்பமா கேட்றாதீங்க.. ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு ஃபிகரை பொண்ணு பார்க்கறாரு.. டேட்டிங்க் போலாம்னு கூப்பிடறாரு... என்னமோ தெருக்கடைசில இருக்கற பொட்டிக்கடைக்குபோலாம் வான்னு கூப்பிடற மாதிரி.... கூப்பிட்டதும்  ஹீரோயின் பயங்கர அப்பாவி போல கூடவே வந்துடுது.. 

அவன் பாப்பாவை ( அதாங்க ஹீரோயின் ) கட்டிப்பிடிக்கறான்.. அங்கே இங்கே தடவறான் ( எங்கே எங்கே-னு எல்லாம் இண்டீசண்ட்டா கேட்கக்கூடாது).. ஆனா பாப்பா அவன் கையை லைட்டா தட்டி விடறதோட சரி..  ஏன் பளார்னு அறைய வேண்டியது தானே.. ?ன்னு டைரக்டர்க்கு ஃபோன் பண்ணி கேட்டா அவர் சொல்றாரு - தம்பி.. இது அடுத்த தலை முறைக்கான கதை..  அவ்வ்வ்

அந்த ஃபிரண்ட் ஹீரோ கிட்டே அவரோட ஆளை இண்ட்ரடியூஸ் பண்றார்.. கொல்லி மலை சேனைக்கிழங்கு மாதிரி இருக்கற ஹீரோயின் , நோய்ப்பூச்சி தாக்குன கரும்பு சல்லை மாதிரி இருக்கற ஹீரோவைப்பார்த்ததும் என்னமோ காணாததை கண்டது போல் பம்முது..  பாவம் ஆம்பளைங்களையே பார்த்ததில்லை போல.. 


http://tamil.oneindia.in/img/2011/11/15-mayakkam-enna1-300.jpg

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் லவ் ஆகிடுச்சுன்னு அந்த நண்பர்க்கு தெரிஞ்சுடுது.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையா  அவங்க 2 பேரும் கட்டிப்பிடிச்சிட்டிருக்கறதை அந்த நண்பன் பார்த்துடறார்.. இப்போதான் இடைவேளை.. ( சஸ்பென்ஸாம் அடங்கொய்யால)

போய்த்தொலையுது சனியன்னு 2 பேருக்கும் மேரேஜ் பண்ணி வெச்சுடறாரு.. அந்த தியாக நண்பர்.. இனி கதையை எப்படி நகர்த்த? இங்கே தான் டைரக்டர் தன்னோட டேலண்ட்டை காட்றார்.. ஹீரோ மாடில இருந்து கீழே விழுந்து தலைல அடிபட்டு லைட்டா சைக்கோ ஆகிடறார்.. கொஞ்சம் மெண்டல் மாதிரி..


அவர் ஹீரோயினை கொடுமைப்படுத்த , டைரக்டர் நம்மை கொடுமைப்படுத்த உஷ் அப்பா போதும்டா சாமி.. எப்படியோ எல்லாம் சரி ஆகி க்ளைமாக்ஸ் எல்லாம் சுபம் ஹி ஹி ஹி

தனுஷ்க்கு வழக்கம் போல நல்ல வாய்ப்பு.. நடிக்க.. அண்ணன் படம் என்பதால் சிரத்தையோட நடிக்கறார்.. டான்ஸ் காட்சிகளில் மனுஷன் செம கலக்கு கலக்கறார்.. 

ஹீரோயின் ரிச்சா கங்கா பாத்பாய்.. 60 மார்க் தரலாம்.. கொஞ்சம் மீனா கொஞ்சம் சங்கவி.....சாயல்  நடிப்பு பாப்பாவுக்கு சுமாராதான் வருது.. அழுற சீன்ல எல்லாம் பார்க்க சகிக்கல.. ஒரு நல்ல நடிகை என்பவர் அழும் காட்சியில் கூட ரசிகர் மனம் கவர வேண்டும்னு கே பாலச்சந்தர் சார் சொல்லி இருக்கார்..

படத்துக்கு முதுகெலும்பே ஒளிப்பதிவும் இசையும் தான்.. படம் பூரா கேமரா விளையாடுது.. 3 பாட்டு செம ஹிட்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG6Hiy2au6p78vzbFfJTukkghVhjuLXYVzOkfHnoS2S4vM5P2ik3rxjJ18azkJhUfliJmD0aZph1JF2lenzxSUClQzT1_2vL5snAvNIQ_9bYC-8njgTlVJFI50CYPYPRxjLgAbLWsW7Y4/s1600/0.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1. என்னடா பார்க்கறே.. கொஞ்ச நாள் டேட்டிங்க் பண்ணி பார்க்கலாம்னு தோணுச்சு , அதான் கூட்டிட்டு வந்துட்டேன் , தப்பா?

2.  ஹீரோயின் - ஏதாவது திட்டறதுன்னா திட்டு.. டோண்ட் சைலண்ட்..

ஓ..... திருட்டு மூதேவி..... 

3.  என் ஆள் எப்படிடா?

டேய்.. பிரியாணி எங்கே வாங்குனே..?  பழசு போல.. டேஸ்ட்டே இல்லையே? ( டபுள் மீனிங்க்ல அட்டாக் பண்றாராம் ஹய்யோ அய்யோ)

4.  நீ ஒரு முண்டக்கலப்பை

வாட்?

சரி.. இங்கிலீஷ் தெரிஞ்ச முண்டக்கலப்பை ( தூள் படத்துல ஜோதிகா முண்டக்கண்ணி)

5.  டேய்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்டா.. என் ஆள் எப்படிடா?

உன் அளவுக்கு கொஞ்சம் கம்மிதான்..

6. என் லட்சியமே நல்ல ஃபோட்டோகிராஃபர் ஆகறதுதான்.. 


ஓஹோ.. கலயாண மண்டபடத்துலயா?

ஏய்.. நீ என்ன பெரிய இவளாடி? கவர்மெண்ட் கக்கூஸ்லயா ஒர்க் பண்றே? ( ஏ க்ளாஸ் ரசிகர்களூக்காக  எழுதப்பட்ட வசனமாம் ஹி ஹி )

7.  அவங்கம்மாவை எனக்குத்தெரியும்.. ஹி ஹி அவ யார் தெரியுமா??

8.  ஏய்.. ஹிந்திப்படம் ஓடுதே அதுல வர்ற வசனம் என்ன அர்த்தம்? முஜே கோயி ஃபிரண்ட் நஹி ஹை.. (எனக்கு யாரும் ஃபிரண்ட்ஸ் இல்லை)

நீ எக்கேடோ கெட்டுப்போன்னு அர்த்தம்..

9.  என்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? 6 லேங்குவேஜ் ஐ நோ.. யூ நோ?

மத்தது எதுவும் உனக்கு வந்திருக்காது.. 

10.  தப்பான இண்ட்ரஸ்ட்டை  தேர்ந்தெடுத்தா ஃபியூச்சர் ரொம்ப சிரமம்



http://www.tamilnewscinema.com/wp-content/uploads/2011/09/richa.jpg

11. தம்பி.. இந்த ஃபோட்டோ 1 எனக்கு ஒரு காப்பி குடுப்பா.. என் மனைவி அழகா இருந்து நான் பார்த்ததே இல்ல.. ( அவனவன் சம்சாரம் அவனவனுக்கு அழகா தெரியாதுய்யா)

12.  வாழ்க்கைல நாம எஞ்சாய் பண்ற வேலையை செய்யனும்.. இல்லைன்னா செத்துடனும்.. 

13.  டேய்// உங்க ஹனிமூன்க்கு நான் எதுக்குடா?

யாமினிக்கு நீ வந்தா ஓக்கேவாம்.. 

14.  எங்கேடா உன் கேர்ள் ஃபிரண்ட்?

உள்ளே பாத்ரூம்ல குளிச்சிட்டு இருக்கா.. 

கதவு திறந்து இருக்கு?

அவளுக்கு பல்லின்னா பயம்.. 

15.. யாமினி.. உங்க ஆள் வெளீல போய் இருக்காரு....

தெரியும்.. பல்லி வந்தா கூப்பிடறேன்...

16.  ஆமா.. நீங்க பாட்டுக்கு பாத்ரூம் கதவை திறந்து வெச்சுட்டு குளீக்கறீங்களே..?நானா இருக்காங்காட்டி ஆச்சு.. வேற யாராவது இருந்தா?

ம்க்கும்.. நீ பார்ப்பேன்னு நினைச்சேன்..

17.  இப்போ எதுக்கு டி என்னை திரும்பி பார்க்கறே..?

18.  ஆமா.. அவன் உன் கூடவே சுத்தறான்..?

ஆனா நான் அவன் கூட சுத்தலையே? ( விளங்கிடுச்சு)

19.  கிரியேட்டிவிட்டி என்பது கடவுளா  குடுக்கற வரம்.. நக்குனாக்கூட உனக்கு அது கிடைக்காது  ( படத்தில் பார்க்கும்போது விரசம் இல்லை)

20.  உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா? நீ செய்யற வேலையை ரசிச்சு பண்றே.. நான் கூட என் வேலைல தப்பு செஞ்சிருக்கேன்.. ஆனா அப்போ எல்லாம் எந்த வருத்தமும் பட்டதில்லை.. ஆனா உன் வேலைல ஒரு தப்பு நடந்தா நீ வருத்தப்படறே. 


http://www.lohan.in/blog/gallery/2011/04/Actress-Richa-Gangopadhyay-in-Bridal-Makeup-001.jpg

21.  கண்டக்டர்.. இந்த பஸ் கடைசியா எங்கே போகுது?

மைசூர்..

அப்போ மைசூர்க்கு ஒரு டிக்கெட்.. 

22. உன்னை லவ் பண்றதா சொல்லிட்டு என்னை லவ் பண்றா... நாளையே என்னை லவ் பண்றதா சொல்லிட்டு வேற யாரையாவது லவ் பண்ணமாட்டா-னு என்ன நிச்சயம்?

23.  என் நிலைமை எவ்ளவ் கேவலமா போச்சு பார்த்தியா?

ஆமாடா.. மச்சான் ரொம்ப கேவலமாத்தான் போச்சு.. 

24.  என் கேர்ள் ஃபிரண்டை கரெக்ட் பண்ணிட்டு.. இவன் எல்லாம் ஒரு ஃபிரண்ட்..?

25. எங்கப்பனைப்பாரு.. கொஞ்சமாவது வருத்தம் இருக்கா?

26..  நீ ஆம்பளை இல்லையா? அதான்.. வீக்னெஸ்... சீக்கிரம் ஒரு மேரேஜ் பண்ணீக்க. உன் பொண்டாட்டியை நீ தான் தேடிக்கனும்.. அடுத்தவன் பொண்டாட்டியை அல்ல.. 

27.  யோவ்.. எதுக்குய்யா போலீஸ் கம்ப்ளெயிண்ட்டு? என் புருஷன் தான் மெண்டல்தான் ஆனா நல்லவன்.. என்ன கேட்டாரு? ஃபோட்டோவுக்கு போஸ் தானே கேட்டாரு? முடிஞ்சா குடு.. இல்லைன்னா மூடிட்டு போ.. ரொம்ப ஓவரா துள்ளுனே என்னை செக்ஸ் டார்ச்சர் பண்றேன்னு பொய் புகார் குடுத்துடுவேன் 

படம் இடைவேளை வரை ஏதோ கொஞ்சம் எதிர்பார்ப்புடன் நகர்கிறது.. அப்புறம் 2 பேருக்கும் மேரேஜ் ஆன பிறகு திரைக்கதையை எப்படி கொண்டு போறதுன்னு டைரக்டருக்கு மகா குழப்பம்.. 



http://surfingall.files.wordpress.com/2010/12/richa-gangopadhyay-hot-in-red-dress.jpg

இயக்குநருக்கு பாராட்டு தருவிக்கும் இடங்கள்

1. வசனம் தான் படத்துக்கு முதல் பிளஸ்.. ஷார்ப்பான வசனங்கள்.. தேவையான இடங்களீல் நறுக் சுருக். ஆனால்.. எல்லாம் முதல் பாதியில்தான்

2. ஓட ஓட பாட்டுக்கான ஒளீப்பதிவு செம.. சுத்துது சுத்துது பூமி பாட்டுக்கான லீட், நடன அமைப்பு, கேரளா ஃபிகர்களின் ஆடை வடிவமைப்பு அனைத்தும் டாப்.. 

3. யூத்களுக்கான பல மேட்டர்கள் ஆங்காங்கே தெளித்து அப்ளாஸ் அள்ளுகிறது உதவி இயக்குநர் டீம்

4. சிக்கலான திரைக்கதையிலும், சர்ச்சைக்குரிய காட்சிகள் வைக்கும் வாய்ப்பு இருந்தும் கண்ணியமாக காட்சிகளை அமைத்த விதம்

5. ஓட ஓட தூரம் குறையில பாட்டு அருமையான  ஒளிப்பதிவு  உத்தி..  கிராஃபிக்ஸ் கலக்கல் தியேட்டரில் அப்ளாஸ் அடங்கவே 2 நிமிடம் ஆகுது//



http://lh4.ggpht.com/_62XV5GGJjBs/S65hTx56ifI/AAAAAAAAHh0/_qMShB1MJFg/actress.richa-gangopadhyay.richa-gangopadhyay-hot-in-black-010.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் , சில ஆலோசனைகள், சந்தேகங்கள்

1. ஹீரோ ஃபோட்டோகிராஃபியில் செம டேலண்ட்.. அவர் ஒரே ஒரு ஆளிடம் மட்டுமே தன் ஃபோட்டோக்களை காட்டி ஏமாந்துடறார். உலகத்துல வேற ஆட்களே இல்லையா? ஏன் மனசு ஒடிஞ்சு போறார்? அவரோட திறமைகள் ஏன் அனைத்து இண்டர்வியூவிலும் மறுக்கப்படுது?

2. இந்தக்கதைல ஹீரோயின் நண்பனின் டாவு என காட்டி இருக்கவே தேவை இல்லையே? எதுக்கு ? சும்மா ஒரு பரபரப்பை கிளப்பவா?

3.  ஏ கிளாஸ் ஆடியன்சின் இயக்குநர் என  உங்களை எல்லோரும் கொண்டாடுறாங்க.. ஏன் சில இடங்களில் வசனம் ரொம்ப லோ கிளாஸா இருக்கு?

4. ஹீரோவின் ஃபோட்டோவை ஒருவர் மிஸ் யூஸ் பண்ணீ தன் படைப்பு என சொல்லி அவார்டு வாங்கறார்.. டெவலப் பண்ணுன ஸ்டூடியோ சாட்சியை வெச்சு தன்னோட சரக்கு என்பதை அவர் தாராளமா நிரூபிக்கலாமே?

5. இந்த ஃபோட்டோக்கள் எல்லாம் வேஸ்ட்-னு அவர் தூக்கி எரிஞ்சதும் ஹீரோ அவைகளை ஏன் கலெக்ட் பண்ணாம வந்துடறார்..?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEierB34Lc5grJUXvIKG9XR-qn4V-cS3y0h622MpYgGiTnxB22IunZ73-WNkfTHSauh512Aq05wgiHrMKMsH6nciKDyIukqfrp3ypaNWaygLxsQkRpF_hs-cgBwVmPqlBvtI8KJyqqfT0Qmp/s1600/richa_gangopadhyay_mirapakaya_hot_stills_06.JPG


6. அந்த ஃபோட்டோவை மிஸ் யூஸ் பண்ணனும்னு வில்லன் நினைச்சா தம்பி குடுத்துட்டுப்போ, பார்த்து சொல்றேன்னுதானே சொல்வாங்க?

7. ஹீரோயின் டேட்டிங்க் பண்ண வந்த ஆள் கூட உரசல் புரசலா இருக்காரே, அதுதான் நவ நாகரிகமா?அப்படி இருந்துக்கிட்டே ஹீரோவை வேற லவ் பண்றாரு? அவ்வ்வ்வ்

8. ஹீரோ பாத்ரூம் போறாரு.. 6 ஃபிரண்ட்சும் ஹால்ல இருக்காங்க.. ஹீரோயினை கட்டிக்கப்போறவரும் அங்கே இருக்கார்.. அப்புறம் என்ன தைரியத்துல ஹீரோயின் உள்ளே போய் ஹீரோவை கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கறார்?

9. இந்தக்காலத்துல ஃபிரண்ட்ஸ் மேரேஜ் லைஃப் வேற , பேச்சிலர் லைஃப் வேறன்னு வாழ்றாங்க.. ஆனா உங்க படத்துல மட்டும் அந்த ஃபிரண்ட் ஹீரோ கிட்டே ஹீரோயினை தாரை வார்க்காத குறையா கிட்டத்தட்ட கூட்டிக்குடுக்கறாரே? ஏன்?

10. உங்க படங்கள்ல வலுக்கட்டாயமா ஹீரோவை சைக்கோவா காட்றது ஏன்?

11. பருத்தி வீரன் க்ளைமாக்ஸ் பார்த்துட்டு அதே மாதிரி பிளட் ப்ளீடிங்க் டூ ஹீரோயின் காட்னது ஏன்?படத்துக்கு அது அவசியமா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih0zg333eqrIOxx3ZC-su4F77rxy_pYdWhohhP4LSxoEXeq2Ow-BAWIETwTkaMgdxnhqOMw4inJCf-jhXstxgFIAwONDkxWhLmCQR4cmape0UzZStMmtaUT_lIkwaGQR09qbELI6By8kty/s1600/Richa_Gangopadhyay_Hot_12.jpg


சி.பி கமெண்ட் - இடைவேளை வரை டைரக்டர் டச்.. அதுக்குப்பிறகு ம்ச் ப்ச்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

ஈரோடு ஆனூர்- ல் பார்த்தேன்

படம் எல்லா செண்ட்டர்லயும் 10 நாட்கள் கண்டிப்பா ஓடிடும்.. .