Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Monday, July 20, 2015

எம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்

ஓவியம் பாரதிராஜா
ஓவியம் பாரதிராஜா
இலங்கை வானொலியில் மயில்வாகனன் சர்வானந்தாவோ, ராஜேஸ்வரி சண்முகமோ ‘பொங்கும் பூம்புனல்’ என்று சொல்லும்போது கடிகாரம் எட்டு மணியைக் காட்டும். அப்படியொரு சர்க்கரைப் பொழுதில்தான் எம்.எஸ். விஸ்வநாதன் என் செவியில் நுழைந்து மனசுக்குள் ரங்கராட்டினம் சுழற்றினார்.
‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை.
நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.
இரவு ஏழரை மணிக்கு திருச்சி வானொலியில் ஒலிப்பரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில்
‘தாய் வரம் தந்த வரம்… தாவரம்’ என்கிற பாடல் கசியும். விவசாயப் பின்னணியைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் விஸ்வநாதன் இவ்வாறாகத்தான் அறிமுகமாகியிருந்தார்.
காதல், ஊடல், திருமணம், தாம்பத்யம், பிறப்பு, வறுமை, உயர்வு, நட்பு... என வாழ்வின் எல்லா சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டிருக்கிறது அவருடைய இசை. தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன அறிவியல் சாதனங்களின் புழக்கமற்ற அப்போது ரேடியோதான் சந்தோஷ வாசல். அந்த வாசல் வழி வழிந்தோடிய விஸ்வநாதனின் விரல் வித்தை தமிழர்களின் 50 ஆண்டு கால மகிழ்ச்சியின் நீளம்.
எம்.எஸ்.வியின் சாதனை என்பது தமிழ்த் திரையிசையின் பாதி வரலாறு. படத்தின் பெயர் தெரியாது; அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், இது ‘எம்ஜிஆர் பாட்டு; இது சிவாஜி பாட்டு’ என்று சொல்லிவிட முடிகிற அளவுக்கு டி.எம்.எஸ்.ஸின் பக்கபலத்தோடு வித்தியாசம் காட்டியது எம்.எஸ்.வியின் இசை நுணுக்கம்.
ஒரு காலத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை வரை பாய்ந்தோடியதைப் போல எல்லோருக்குமான இசையைத் தந்ததுதான் எம்.எஸ்.வி.யின் முதல் சாதனை.
அடுத்தது - அவர் போட்ட மெட்டுக்கள். சுயம்புவாக அவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் வரலாற்றில் ‘கிளாஸிகல்’ ரகத்தில் சேர்ந்துவிடும். மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சுகம் எங்கே’ என்று ஒரு படம் தயாரித்தது. இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமான விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் “இந்தி டியூன் கொடுத்தா பாட்டு போடுவீங்களா?” என்று கேட்டுள்ளார்.
“நாங்க சொந்தமாதான் டியூன் போடுவோம். விருப்பமிருந்தா எங்களை புக் பண்ணுங்க. இல்லேன்னா எங்களை விட்டுடுங்க” என்று கம்பீரமாகச் சொன்னவர் எம்எஸ்வி.
எங்கள் கிராமத்தில் தங்கராசு என்கிற ஒரு சிகைதிருத்துநர் இருந்தார். அவருடைய ‘சார்மினார்’ சலூன்தான் எங்களின் விடுமுறை விருப்பம். எம்.எஸ்.வி.யின் தீவிர ரசிகர். ஒரு பாடலில் அதன் வரிகளை மட்டும் பாட மாட்டார். பாடலின் ஆரம்பத்திலோ இடையிலோ கடைசியிலோ வரும் இசைக் கருவிகளின் ஜாலங்களையெல்லாம் அவர் உருட்டிவிடும்போது, நாங்கள் திக்குமுக்காடிப்போவோம்.
‘ஊட்டி வரை உறவு' படத்தில் பி.சுசீலா பாடியது 'தேடினேன் வந்தது' என்கிற பாடல். அதனை தங்கராசு,
'தேடினேன் வந்தது...
டின்டக்கு டின்டக்கு...
நாடினேன் தந்தது
டின்டக்கு டின்டக்கு'
என்று பாடியதை நினைத்துப்பார்க்கும்போது எம்.எஸ்.வியின் இசை சாம்ராஜ்யம் தங்கராசு வரை விரிந்திருந்தது தெரிகிறது.
‘அவளுக்கென்ன அழகிய முகம்' என்ற ‘சர்வர் சுந்தரம்' படப் பாடலை பாடும்போது பாடல் வரிகளுக்கு இடையே டிரிபிள் பாங்கோஸும், கிளாரிநெட்டும் சேர்ந்திசைக்கும்
‘பாபப்பப்பம் பாபபப பாபப்பப்பம்...
ன்ட்டாகு... ன்ட்டாகு... ன்ட்டாகு’ என்று தங்கராசுக்குள் எம்.எஸ்.வி. புகுந்து புறப்படுவார்.
‘பாகப் பிரிவினை' படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு' பாடலின் இடையே ஒலிக்கும்
‘தந்தானே தானனன்னே... தானன்னே தானனன்னே... தானன்ன தானானே...'
என்கிற ஹம்மிங்கை தங்கராசு மூலம் எங்கள் கிராமத்துக் கீர்த்தனையாக்கியவர் எம்எஸ்வி.
‘சிவந்த மண்' படத்தில் ‘ஒரு ராஜா ராணியிடம்' என்கிற பாடலை தங்கராசு பாடிக்கொண்டே வருவார். இடையில்
‘டண்டரரானே டண்டரரானே... டண்டர டண்டர டண்டர டண்டரரா...' என்று முழங்கிவிட்டு
‘வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து
தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ’ என்று சரணத்துக்குள் பாய்ந்துவிடுவார்.
ராகம், ஆலாபனை, அவரோகணம், தாளக்கட்டு, நோட்ஸ் எதுவுமே தெரியாது தங்கராசு என்கிற எங்கள் ஊர் எம்.எஸ்.வி.க்கு. தமிழகத்தில் எத்தனையோ தங்கராசுக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இந்தச் சாதனையை எந்தத் திரையிசைக் கலைஞனும் இதுவரை நிகழ்த்தவே இல்லை.
சாஸ்திரிய இசை அரங்குகளில் பாடிக்கொண்டிருந்த பாலமுரளி கிருஷ்ணாவை ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே…’ பாடலைப் பாட வைத்து, இன்னொரு உலகில் புகழ்பெற்ற மேதமையைத் தமிழ் திரையிசைக்குள் கொண்டுவந்தார் எம்.எஸ்.வி.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு பாடலில் உண்மையிலேயே ஓர் அபூர்வ ராகத்தைப் பயன்படுத்த நினைத்தார் எம்.எஸ்.வி. அந்த நேரத்தில் பாலமுரளி கிருஷ்ணா ‘மஹதி’ என்கிற பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கியிருந்தார். அந்த ராகத்தையும் வேறு சில ராகங்களையும் குழைத்து ஒரு ராகமாலிகையாக எம்.எஸ்.வி. கம்போஸ் செய்ததுதான் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்’ பாடல்.
பந்துலு, பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்று பல இயக்குநர்கள் தங்களின் பல்லக்கை வெற்றிகரமாக நகர்த்த சக்கரமாக இருந்தவர் எம்.எஸ்.வி. திரைப்படப் பாடல்களை இசையை உரித்துவிட்டுப் பார்த்தால் அதில் உள்ள தமிழ் சட்டென்று நம்மைக் கவர்ந்திருக்காது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்ற கவிஞர்களை நாம் கொண்டாட விஸ்வநாதன் ஒரு மூல காரணம்.
தமிழ்த் திரையிசையில் பல வடிவங்களில் இசையை வாரி வழங்கியவர் எம்.எஸ்.வி.
‘அன்புள்ள மான்விழியே/ஆசையில் ஓர் கடிதம்/ நான் எழுதுவதென்னவென்றால்/ உயிர்க்காதலில் ஓர் கவிதை’ என்று அஞ்சல் அட்டைக்கு இசைச் சிறகு முளைக்க வைப்பார்.
‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி/ புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி’ என்று கல்யாணப் பத்திரிகை வடிவில் அட்சதை தூவும் ஒரு பாடல். இந்தப் பாடலில் வரும் ‘தங்கள் நல்வரவை விரும்பும்/ ரகுராமன் ரகுராமன் ரகுரா…மன்’ என்கிற வரிகளின்போது யாருக்கும் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்ட பல அண்ணன்களை நான் பார்த்திருக்கிறேன்.
‘வாராயோ தோழி வாராயோ’ என்று பல தமிழ் வீடுகளின் வாசலுக்கு மருமகள்களை வலது காலை எடுத்து வைத்து அழைத்து வந்திருக்கிறது எம்.எஸ்.வி-யின் இசை.
‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே’ என்று ‘பாசமலர்’ படத்தில் கண்ணதாசனுடன் இணைந்து எம்.எஸ்.வி தந்த இசை தாலாட்டும் தாலாட்டு பாடியவர்களும் காணாமல் போன இந்நாட்களில் தமிழர்களின் கிலுகிலுப்பையாகும்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி -த இந்து

  • Subramanyam  
    அதாவது, இந்தப் பாடல்கள்தான் என்றில்லை. பல ஆயிரக்கணக்கான பாடல்கள் சாம்ராஜ்ஜியத்துன் அதிபதி அவரும் திரு ராமமூர்த்தி அவர்களும். எதை எடுப்பது, எதை விடுப்பது? வரம் பெற்று பூமிக்கு வந்தவர்.
    Points
    32390
    3 days ago
     (1) ·  (0)
     
    V Up Voted
    • WWatcher  
      கண்கள் பனிக்க வாய்த்த கட்டுரை.அருமையான சொல்லாடல்.அற்புதமான நினைவஞ்சலி .நன்றி.

    Sunday, April 14, 2013

    அஞ்சலியின் மறுபக்கம் - பாகம் 4 ( பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு )

    அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 4

    மிழக போலீஸும் ஆந்திர போலீஸும் ஆளுக்கொரு திக்கில் தேடிக் கொண்டிருந்த நிலை யில், தாமாக வந்து ஆஜராகி இருக்கிறார் நடிகை அஞ்சலி.''என்னை யாரும் கடத்தவில்லை. தாங்கமுடியாத மன அழுத்தம் காரணமாக நானே தான் வீட்டைவிட்டு வெளியேறினேன். மும்பையில் நண்பர்கள் பாதுகாப்பில் இருந்தேன். போலீஸ் எனக்கு பாதுகாப்பு தருவதாக சொன்னதால் நான் இங்கு வந்திருக்கிறேன்.


     என் தரப்பு நியாயத்தை போலீஸ் துணை கமி ஷனர் சுதிர்பாபுவிடம் முழைமையாக சொல்லிவிட்டேன். தேவைப்பட்டால் விரைவில் மீடி யாக்களை சந்தித்து உண்மைகளைச் சொல்வேன்” என்று திடமாக சொல்லிவிட்டுப் போயி ருக்கிறார். அஞ்சலியின் தலை மறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதால் இனி, அவரது திரைமறைவு வாழ்க்கை ஆரம்பமாகும்.



    இனி, அஞ்சலியின் மறு பக்கம்...


    இருபது வயதில் ஒரு இளம் பெண் நடிக்க வந்தால் அவருக்கு துணையாக அப்பாவோ, அம்மாவோ, அண்ணனோ வருவார்கள். அவர்கள் தான் அந்தப் பெண்ணுக்கு மெய்க்காப்பாளர் போல் இருப்பார்கள். அஞ்சலிக்கு துணையாக சித்தி, சித்தப்பா, அண்ணன் என மூன்று பேரும் வந்தார்கள். இதனால் இந்த மூன்று பேரும் எது சொன்னாலும் அதைக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானர் அஞ்சலி. தொடக்கத்தில் இவர்கள் சொல்வதெல்லாம் நல்லதாகவே பட்டது அஞ்சலிக்கு. ஆனால், போகப் போக கசக்க ஆரம்பித்தது.


    தன்னை முன்னுக்கு கொண்டு வந்தார்கள் என்பதற்காக தனக்கு ஒப்பாத விஷயங்களை எல் லாம் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அந்தப் பெண்ணுக்கு. அப்படியும் எத்தனை நாளைக்குத் தான் சகித்துக் கொள்ளமுடியும்? ஒரு கட்டத்தில் எதிர்க்கவும், மறுக்கவும் ஆரம்பித்தார் அஞ்சலி. அவரை பணம் காய்ச்சி மரமாக நினைத்துக் கொண்டிருந்தவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்டிக்கிறோம் என்கிற பேரில் அஞ்சலிக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார்கள்.


     பெற்றதாயைப் பிரிந்த ஏக்கம் அப்போதுதான் முதல் முறையாக அஞ்சலிக்கு வந்தது. எட்டா தூரத்தில் அம்மா இருந்ததால் தன்னுடைய கஷ்டங்களை உட்கார்ந்து சொல்லி அழக் கூட அவருக்கு ஆறுதலாய் ஒரு நிழல் இல்லை. இந்த ஏக்கமே அஞ்சலியை வெளிக்கிளம்ப வைத் தது. தன்மீது பரிவு காட்டிப் பேசிய நண்பர்கள் மற்றும் இயக்குனர்களோடு நிறையவே பொழுதை கழிக்க ஆரம்பித்தார். வீட்டிற்குள் இருந்த நெருக்கடிக்கு அது அவருக்கு ஆறுதல் தரும் மருந்தாக இருந்தது. வீட்டுக்குள்ளோ வேறு மாதிரியாய் பற்றி எரிந்தது. ’கண்டவர்களோடு சுற்றினால் இமேஜ் என்னாகும்?’ என்று தாவினார்கள்.


     ’எனக்கு சரி என பட்டதை நான் செய்கிறேன். நான் இன்னும் சின்னப் பெண் இல்லை உங் களுக்கு தேவை பணம் தானே அதற்கு எந்தக் குறையும் வராது. ஆனால், அதற்காக என்னை குத்திக் குத்தி அழ வைத்து ரசிக்காதீர்கள்” என்று குரலை உயர்த்தினார் அஞ்சலி. இப்படிப் பேசியதற்காக பலமுறை அஞ்சலி, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.



     ’’சித்தப்பா தன்னை முடியைப் பிடித்து இழுத்து அடித்ததாக இப்போது அஞ்சலி சொல்வது உண்மையாக தான் இருக்க முடியும். ஏனென்றால், அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் எங்கள் கண் எதிரி லேயே அஞ்சலியை மிரட்டியதை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்கிறார் ஒரு பிரபல சினிமா இயக்குனர்.



    இத்தனையையும் போதாதென்று வேறுமாதிரியான சங்கடங்களையும் அஞ்சலி சந்திக்க நேர்ந் தது. நடிகர் விக்ரமின் அப்பா சினிமாவில் நடிக்க வந்து தோற்றுப் போனவர். அந்த வெறி யில்தான் அவர் தனது மகனை ஹீரோ ஆக்கினார். நடிகை மந்த்ராவின் அம்மா ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட். தன்னால் ஜெயிக்க முடியாததை மகள் மந்த்ராவை வைத்து ஜெயித்துக் காட்டினார், இன்றைக்கு திரை உலகில் பிரபலமாக இருப்பவர்களில் பலரது பின்னணி இப்படித்தான் இருக் கும். அஞ்சலியின் சித்தி பாரதி தேவியும் இந்த கேரட்க்டர் தான்.


    எப்படியாவது கதாநாயகியாக நடித்துவிட வேண்டும் என்பதற்காக பூமணி படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு இயக்குனர் களஞ்சியத்தைச் சந்தித்தார் பாரதி தேவி. களஞ்சியத்தை மடுமல்ல பல இளம் இயக்குனர்களை சந்தித்து அப்போது சான்ஸ் கேட்டடார். அத்தனை பேரும் இனிக்க இனிக்க பேசினார்கள். ஆனால், யாருமே வாய்ப்பு தரவில்லை. களஞ்சியம் மட்டும் பாரதி தேவிக்கு ஆறுதலாய் பேசினார். களஞ்சியத்தின் நம்பிக்கை வார்த்தைகள் பாரதிதேவிக்கு பிடித் திருந்தது. 


    அதேநேரம், தன்னால் சாதிக்க முடியாததை தன்னுடைய வளர்ப்பு மகள் அஞ்சலியை வைத்து சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வெறியை தனக்குளே வளர்த்துக் கொண்டார் பாரதி தேவி. அந்தவெறிதான் அஞ்சலியை கதாநாயகி அளவுக்கு உயர்த்தியது. தனக்காக வாய்ப்புக் கேட்டு அலைந்த காலங்களில் கனவுத் தொழிற்சாலையின் நெளிவு சுளிவுகளை நன்றாக தெரிந்து வைத்திருந்தார் பாரதி தேவி.


     வளர்ப்பு மகள் அஞ்சலியை ஜெயிக்க வைக்க அது அவருக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.இத்தனையும் செய்தது எதற்காக அஞ்சலிக்காகவா? இல்லை, அஞ்சலியால் வந்து கொட்டும் பணத்துக்காக. சினிமாவில் வந்த வருமானத்தை வைத்து, தானே படம் எடுக்க நினைத்தார் பாரதி தேவி. அதற்காக தனது இயக்குனர் தோழர்களிடம் கலந்து ரையாடல் நடத்தினார். சிக்கலே இங்குதான் ஆரம்பிக்கிறது.



    சித்தி படம் எடுப்பது அஞ்சலிக்கு பிடிக்கவில்லை.அதை வெளிப்படையாகவே சொன்னார். இது சித்திக்கு பிடிக்கவில்லை. இருவரும் இப்படி முரண்பட்டதால் வீட்டுக்குள் பிரளயம் வெடித்தது. ’உன் பணம், என் பணம்” என்கிற அளவுக்கு வார்த்தைகள் தடித்தன. இதற்கு முந்தைய படங் களில் சில லகரங்கள் மட்டுமே அஞ்சலிக்கு சம்பளமாக தரப்பட்டது. அந்தப் பெண் முழுதாய் இருபது லட்சத்தை பார்த்ததே சேட்டை படத்தில் தான். ஆனால், அந்த வருமானத்தையும்  சினிமா தயாரிப்பில் போட துடித்தார் பாரதி தேவி.


    அதை அறிந்து அந்தப் பூவும் புயலானது ’இதுவரை சம்பாதித்ததை எல்லாம் உங்களுக்கே கொடுத்துவிட்டேன் இனியாவது எனக்காக சம்பாதிக்க நினைக்கிறேன்” - அஞ்சலியிடம் இருந்து இப்படி வார்த்தைகள் வந்து விழும் என்று அந்தக் குடும்பத்தில் யாரும் நினைத்திருக்க மாட் டார்கள். இப்படிச் சொல்வதால் தன்னுடைய எதிர்காலத்தையே பாழாக்கும் விதமாக காரியங் கள் நடக்கும் என்று அஞ்சலியும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.



    அதுசரி, சித்தி சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்த அஞ்சலிக்கு, திடீரென இப்படிப் பேச தைரியம் கொடுத்தது யார்?


    சஸ்பென்ஸ்!


    தொடரும்  ( ராஜேஷ் குமார் நாவல் மாதிரி ) 




    சென்னை: "நடிகை அஞ்சலி தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் அவரது தாயாரும், எனது சகோதரியுமான பார்வதி தேவியிடம் ஒப்படைத்துவிட்டேன்" என்று அவரது சித்தி பாரதி தேவி கூறியுள்ளார்.
    "'பலுப்பு' தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்ற நடிகை அஞ்சலி கடந்த 8ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதையடுத்து, அஞ்சலியின் சித்தி பாரதி தேவி சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

    ஆனால் புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால் சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகை அஞ்சலியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் பாரதி தேவி.

    இதனிடையே, யாரும் எதிர்பாராத வகையில் மும்பையில் இருந்து நடிகை அஞ்சலி, நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத்  துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சலி, என்னை யாரும் கடத்தவில்லை, தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்று கூறினார்.

    நடிகை அஞ்சலியின் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில், அஞ்சலி தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் அவரது தாயாரும், எனது சகோதரியுமான பார்வதி தேவியிடம் ஒப்படைத்துவிட்டதாக அவரது சித்தி பாரதி தேவி கூறியுள்ளார்.


    சென்னை காவல் நிலையத்தி்ல் கொடுக்கப்பட்டுள்ள புகார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஆகியவற்றை வாபஸ் பெறுவது குறித்து இரு தரப்பினரும் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

    தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வது போல் ஏற்கனவே ஒப்பந்தம் ஆன தமிழ் படங்களிலும் நடித்துக் கொடுக்கும்படி அஞ்சலியிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் பாரதி தேவி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தெலுங்கு படத் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவிடம் பேசியிருப்பதாகவும் பாரதி தேவி கூறியுள்ளார்.

    --------------------
     நடிகை அஞ்சலி விவகாரத்தி்ல் அரசியல் சதி: களஞ்சியம் சந்தேகம்

    நடிகை அஞ்சலி விவகாரத்தில் அரசியல் சதி இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள இயக்குனர் களஞ்சியம், வரும் 24ஆம் தேதி நடக்கும் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கா விட்டால் நடிகர் சங்கத்தி்ல் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார்.
     
    நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெறும் தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் களஞ்சியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது, அவர் கூறுகையில், நடிகை அஞ்சலி பிரச்னையை பொருத்தமட்டில் குடும்ப பிரச்னை காரணமாக அவர் வீட்டை விட்டு ஓடிச்சென்று தனது சித்தி, சித்தப்பா மீது புகார் தெரிவித்துள்ளார். என் மீது அவர் சுமத்தியுள்ள புகார் வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.

    நான் அஞ்சலியை கொடுமை செய்ததாகவும், சொத்தை அபகரிக்க முயல்வதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் 3 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக நான் போலீசில் புகார் செய்துள்ளேன்.
    அஞ்சலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்து உள்ளேன். நீதிமன்றத்திலும் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.

    லங்கை தமிழர் பிரச்னைக்காக என்னுடைய தமிழர் நலம் பேரியக்க அமைப்பு பாடுபட்டு வருகிறது. அந்த அமைப்பின் மாநில தலைவராக நான் உள்ளேன். இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க. மீதும், காங்கிரஸ் அரசு மீதும் நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். இதனால் அஞ்சலி விவகாரத்தில் அரசியல் சதி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

    அஞ்சலி அபாண்டமாக என் மீது பழி சுமத்தி விட்டார், சேற்றை என் மீது மட்டுமின்றி எனது அமைப்பினர் மீதும் வீசி உள்ளார். தற்போது ‘ஊர் சுற்றும் புராணம்’ படத்தில் நான் கதாநாயகனாகவும், அஞ்சலி கதாநாயகியாகவும் நடித்து வருகிறோம். இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. சம்பவத்துக்கு முந்தைய நாளில்கூட என்னுடன் அஞ்சலி பணி செய்துள்ளார்.

    இந்த படத்துக்கான அடுத்த கால்ஷீட்டை அஞ்சலி வருகிற 24ஆம்  தேதி கொடுத்துள்ளார். அன்றைய தினம் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கத்தில் அவர் மீது புகார் செய்வேன். பிரச்னைக்கு பிறகு அஞ்சலி என்னுடன் பேசவில்லை. 24ஆம் தேதி படப்பிடிப்புக்கு அவர் வந்தால் வழக்கம்போல் நான் அவருடன் நடிப்பேன்.


    நன்றி - விகடன்

     டிஸ்கி - பாகம் 3 -

    அஞ்சலி அதிரடி பேட்டி -தலைமறைவு ஏன்?

     

    http://www.adrasaka.com/2013/04/blog-post_9801.html
     

     

    அஞ்சலி - பார்வதிதேவி -களஞ்சியம் -பால திரிபுர சுந்தரி - வெளி வராத மர்மங்கள்

    http://www.adrasaka.com/2013/04/blog-post_9624.html

     


    Saturday, April 13, 2013

    அஞ்சலி அதிரடி பேட்டி -தலைமறைவு ஏன்?

    தலைமறைவு ஏன்? நடிகை அஞ்சலி பரபரப்பு தகவல் (படங்கள்)

    சென்னை: என்னை யாரும் கடத்தவில்லை, தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.

     
    கடந்த 7ஆம் தேதி தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்ற நடிகை அஞ்சலி, சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.


    இதனிடையே, சித்தப்பா சூரிபாபுடன் ஹைதராபாத்தில் உள்ள  ஓட்டலில் தங்கி இருந்தபோது நடிகை அஞ்சலி திடீரென மாயமானார்.  இது குறித்து அஞ்சலியின் சகோதரர் ரவி சங்கர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் செய்தார்.

    இதனிடையே, சகோதரர் ரவி சங்கருடன் நடிகை அஞ்சலி நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். அப்போது, சித்தி பாரதி தேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், சூரிபாபு செருப்பால் அடித்ததாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில், அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் காணாமல் போய் சில நாட்கள் ஆகிவிட்டதால், உயிருடன் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது. எனவே அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் அவரது சித்தி பாரதிதேவி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
     
    இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உயர் உத்தரவிட்டது.

    இந்த நிலையில், 4 நாட்களாக தலைமறைவாக இருந்த அஞ்சலி நேற்றிரவு ஹைதராபாத் துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு முன்பு ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அஞ்சலி, என்னை யாரும் கடத்தவில்லை என்றும் தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்றும் கூறினார்.

    தமக்கு போலீஸ் பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர் என்று கூறிய அஞ்சலி, படப்பிடிப்பு நெருக்கடியால் வெளியே வந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தமக்கு எதிராக புகார் இருப்பதால் காவல் நிலையத்தில் ஆஜரானதாகவும், வீட்டை விட்டு வெளியேறி மும்பையில் தலைமறைவாக இருந்தேன் என்றும் அஞ்சலி கூறினார்.

    தலைமறைவானது பற்றிய முழு விவரங்களையும் பின்னர் தெரிவிப்பதாகவும் அஞ்சலி கூறினார்.

    அஞ்சலி ஆஜரானது குறித்து ஹைதராபாத் துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு கூறுகையில், இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது காணாமல் போன வழக்கு. அஞ்சலி எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மும்பை சென்றுள்ளார். மும்பையில் இருந்ததாக அவர் கூறுகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.இதனிடையே, நடிகை அஞ்சலி ஆஜராக தெலுங்குபடத் தயாரிப்பாளர் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது.

    தெலுங்கில் "பலுப்பு" என்ற படத்தில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இந்த நிலையில் திடீர் தலைமறைவானதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனாலேயே, நடிகை அஞ்சலி காவல்துறையில் ஆஜராகியுள்ளதாக கூறப்படுகிறது. "பலுப்பு" படத்தின் இறுதிக்கட்ட காட்சியை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது அஞ்சலி இருக்கிறார். இதேபோல் நடிகர் வெங்கடேசுடன் "போல் பச்சன்" படத்திலும் அஞ்சலி நடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
     
     
     
    அஞ்சலியின் மறு பக்கம் - மினி சினி தொடர் : பகுதி 3

    'ஹைதராபாத் ஓட்டலில் தங்கி இருந்த போது சித்தப்பா சூரிபாபு என்னை தலைமுடியை இழுத்து செருப்பால் அடித் தார். அதனால் தான் நான் ஓட்டலைவிட்டு வெளியேறினேன். எனது சகோதரர் உறுதுணையாக இருந்தால் நான் நேரில் வரத் தயார்"  எங்கேயோ பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்கும் அஞ்சலி அலைபேசி வழியாக‌ அள்ளித் தெளித் திருக்கும் இந்த அக்னி வார்த்தைகள் சினிமா உலகத்தை உலுக்கி இருக்கிறது.



    இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தப்பா சூரிபாபு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். சித்திக்கும் இதனால் மன உளைச்சலாம். இதற்கிடையில், இன்னும் இரண்டு வாரத் திற்குள் அஞ்சலியை ஆஜர்படுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுக்கு ஆர்டர் போட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், தன்னைப் பற்றி அஞ்சலி தெரிவித்த அவதூறு கருத்துக்களுக்காக மானநஷ்ட வழக்கு தொடர்ந் திருக்கிறார் இயக்குனர் களஞ்சியம். இத்தனைக்கும் நடுவில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றி 'அஞ்சலி சீசன் டூ" விற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு தயாராகி வருகிறார் அஞ்சலி.


    இனி, அஞ்சலியின் மறுபக்கம்...
    மாடலிங் போட்டோ ஷுட் செய்த ஆல்பத்தை தூக்கிக் கொண்டு சித்தியும் மகளும் பிரபல தயாரிப்பு  நிறுவனங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்கள். அஞ்சலி எப்படியாவது சினிமா பிரபலமாகிவிட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் அஞ்சலியைவிட  பாரதி தேவிக்கு இருந்தது. அதற்காக லட்சங்களை கடனாக வாங்கிச் செலவு செய்தார். முயற்சி வீண் போகவில்லை.போட்டோ, பிரேமலேக ராசா என்ற இரண்டு தெலுங்கு பட வாய்ப்புகள் அஞ்சலி வீட்டுக் கதவை தட்டின.


    ஆனால், பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல இந்த‌ இரண்டுமே பெரும் தோல்வியை சந்தித்தன‌. ஆனாலும், இரண்டு படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு சூப்பர் என்று திரை உலகம் பாராட்டியது. அந்த பாராட்டுப் பத்திரம் தான்  'கற்றது தமிழ்'' படத்தில் நடிக்கும் வாயப்பை அஞ்சலிக்கு தந்தது. 'கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலியின் நடிப்புககு அனைத்து தரப்பிலும் இருந்து பாரட்டுக்கள் குவிந்தன‌. 'நிஜமாத்தான் சொல்றியா?' என்று சோகத்தை அப்பிய‌ முகத்துடன் அஞ்சலி பேசிய வசனம் அனைவரது மனதையும் கரைத்தது. அந்தப் பெண்ணுக்குள் இயல்பாகவே குடிகொண்டிருந்த சோகச் சுமை இந்த வசனத்திற்கு கூடுதல் மார்க் போட்டது.


    ஆனாலும் என்ன செய்ய? வியாபார ரீதியாக 'கற்றது தமிழ்' தோற்றது தமிழாகிப் போனது. ஒரே ஒரு ஆறுதல், அஞ்சலி என்ற நடிகை வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தார். 2008 ஆம் ஆண்டு, இயக்குனர்  சுந்தர்.சிக்கு ஜோடியாக 'ஆயுதம் செய்வோம்' படத்தில் நடித்தார். அதுவும் காகிதம் செய்வோம் என்றாகிப் போனது. ஆனாலும், தோல்விகளை பற்றிக் கவலைப் படாமல் ஓடிக் கொண்டே இருந்தார் அஞ்சலி. வெளிப்படையாக சொல்வதனால், குடும்பத்தில் அவருக்கு இருந்த நெருக்கடிகள் அவரை தூங்கவிடாமல் துரத்தின‌. இனி என்ன செய்ய‌ என்று ஒரு இக்கட்டான சூழலில் இருந்த போது தான்  'அங்காடித்தெரு'.வுக்காக அஞ்சலியை அழைத்தார் இயக்குனர் வசந்தபாலன்.


    அங்காடித்தெரு படத்திற்கு சேர்மக்கனி பாத்திரத்தில் நடிக்க நாயகியை தேடிக் கொண்டிருந்தார் இயக்குனர் வசந்த பாலன். கதையின் நாயகன் புதுமுகம் என்பதால், நாயகி பழகிய முகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார் வசந்தபாலன். அப்போது அவரது நினைவில் உதித்தவர் அஞ்சலி. தொட்டதிற்கெல்லாம் சென்டிமென்ட் பார்க்கும் சினிமா உலகம், இத்தனை சறுக்கலுக்குப் பிறகும் அஞ்சலிக்கு வாய்ப்புத் தந்திருக்கிறது என்றால் அதிசயமான ஆச்சரியம் தான்!


    வசந்தபாலனை அஞ்சலியும் பாரதிதேவியும் சேர்ந்தே சென்று சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே, அங்காடித் தெருவிற்காக செலக்ட் பண்ணி வைத்திருந்த காஸ்ட்யூம்களை அஞ்சலிக்கு கொடுத்து நடித்துக் காட்டச் சொன்னார் வசந்தபாலன. கலக்கினார் அஞ்சலி. பிறகு, கதாநாயகன் மகேஷையும்  அஞ்சலியையும் ஒன்றாக வைத்து சில காட்சிகளை சொல்லிக் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். அதிலும் அஞ்சலி அசத்தினார். கூச்சத்தால் மகேஷ் தயங்கினார். 'சார்.. இப்புடி கூச்சப்பட்ட சினிமாவில் பெரிய ஆளாகுறது எப்படி? இது வெறும் நடிப்புங்கிறத மொதல்ல மனசுல ஏத்திக்குங்க அப்பத்தான் நடிப்பு வரும்" என்று தள்ளி நின்ற மகேஷை தன்னருகே நிற்க வைத்து நடிப்புச் சொல்லிக் கொடுத்த அஞ்சலியை வியப்புடன் பார்த்தார் வசந்த பாலன்.


    'அங்காடித்தெரு' ரியல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். முதல் மூன்று நாட்கள் படத்தின் முக்கிய காட்சியை படமாக் கினார்கள். அக்காட்சிகளில் அஞ்சலியின் நடிப்பை பார்த்து மெச்சிய வசந்தபாலன், 'கதைக்கு இப்பத்தாம்பா உயிர் வந்திருக்கு" என்று பாராட்டினார். மகேஷின் நடிப்பு சுமாராக இருந்த இடங்களை எல்லாம் அஞ்சலியின் நடிப்பு ஈடு செய்தது. மகேஷ் நடிக்க தயங்கிய நெருக்கமான காதல் காட்சிகளில் அவரது கூச்சத்தை போக்கியவர் அஞ்சலிதான். படப்பிடிப்பு இடைவெளியில் மகேஷிடம் பேசி பேசி கூச்சத்தை போக்கிய அஞ்சலி, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.


    படப்பிடிப்புகள் முடிந்தபோது, 'ஓர் இயக்குனரின் கதாநாயகி' என்று வசந்தபாலனிடம் பாராட்டை பெற்றார் அஞ்சலி. படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. தனது அபார நடிப்பால் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் அஞ்சலி. 'கற்றது தமிழ்' படத்துக்கு, ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விஜய் டிவியின் சிறந்த புதுமுக நடிகை விரு தையும், 'அங்காடி தெரு' படத்துக்காக சிறந்த நடிகை விருதையும் வென்றார். ரசிகர்களை தனது நடிப்பாற்றலால் வசீகரித்திருக்கிறார் என்பதற்கு இந்த விருதுகளே சான்று. அதனைத் தொடர்ந்து அஞ்சலி நடித்த படங்களான 'ரெட்டை சுழி', 'மகிழ்ச்சி', 'தூங்கா நகரம்', 'கருங்காலி', 'மகராஜா', 'வத்திக்குசி', ஆகிய படங்கள் தோல்வியை சுமந்தன. இப்போது வெளிவந்திருக்கும் சேட்டையும் செயலிழந்து நிற்கிறது.



    இடையே சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்தார் அஞ்சலி. 'கற்றது தமிழ்', 'அங்காடித்தெரு' போன்று அஞ் சலிக்கு பெரிய அளவில் பாராட்டு குவித்த படம் 'எங்கேயும் எப்போதும்'. இந்தப் படத்தில் தனது எதார்த்தமான நடிப் பால் திரையுலகை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தார். 'எங்கேயும் எப்போதும்' படத்துக்கும் விருது கிடைத்தது. பல படங்களில் நடித்து வந்தாலும், அவ்வப்போது பாரதிதேவி, களஞ்சியத்தை சந்தித்து "அஞ்சலி அடுத்ததாக ஜீவாவுடன் நடிக்கிறார், இந்தக் கதையில் நடிக்க இருக்கிறார், அந்தக் கதை அஞ்சலிக்கு பொருத்தமாக இருக்குமா?" என்று எல்லாம் தனி ரூட்டில் போய் ஆலோசனைகளை கேட்டுக் கொண்டே இருந்தார்.


    தமிழில் பிஸியாக இருந்த‌ சமயத்தில், தெலுங்கிலும் அஞ்சலிக்கு அடித்தது ஒரு லக். மகேஷ்பாபு, வெங்கடேஷ், சமந்தாவுடன் இணைந்து 'சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே சேத்து'  என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜாவுடன் 'பலுப்பு', மீண்டும் 
    வெங்கடேஷுடன் இணைந்து ஹிந்தி ரிமேக் படமான‌ 'போல் பச்சன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. ப‌லுப்பு  படப்பிடிப்பு முடிவுற்றது. போல் பச்சன் படப்பிடிப்பு போய்க்கொண்டு இருக்கிறது. இதற்காக ஹைதராபாத் சென்றபோதுதான் அஞ்சலி தலைமறைவாகி விட்டார்.



    ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள நிருபர் ஒருவ‌ரை தொடர்பு கொண்டு, "பாரதிதேவி என்னுடைய அம்மா அல்ல... சித்தி. இயக்குனர் களஞ்சியத்துடன் சேர்ந்து கொண்டு என்னை சித்தி கொடுமைப்படுத்துகிறார். நான் சினி மாவில் இதுவரை சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். எனக்கென்று எதுவும் இல்லை. இனிமேல் தான் என் தேவைக்கு பணம் சம்பாதிக்க வேண்டும்" என்று அஞ்சலி சொன்னதாக சொல்கிறார்கள். அதன் பிறகுதான் அஞ்சலி தலைப்புச் செய்திகளுக்கு தீனியாய் வந்தார். இயக்குனர் களஞ்சியம், "எனக்கு இதில் எந்த சம்பந்த மும் இல்லை. இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி" என்கிறார்.


    களஞ்சியம், பாரதிதேவி இருவருமே சொல்லும் இன்னொரு அதிர்ச்சி தகவல், "அஞ்சலிக்கு ஒரு நோய் இருக்கு. அதற் காக தினமும் அவர் மாத்திரை சாப்பிட வேண்டும். மாத்திரை சாப்பிடாவிட்டால் சிக்கல் வரும். அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதற்கு மேல் விளக்கம் சொல்லமுடியாமல் இருக்கிறோம்" என்று சொல்கிறார்கள் அவர்கள். ''ஒரு சினிமா நடிகை மீது எத்தகையை வதந்தியை பரப்பினால் அவரது எதிர்கால‌ம் பாதிக்குமோ அப்படியொரு அவதூறை பரப்பி, அந்த அப்பாவிப் பெண்ணின் எதிர்காலத்தை சீரழிக்கப் பார்க்கிறார்கள். அஞ்சலிக்கு அப்படி ஒன்றும் சீரியஸான நோய் எதுவும் இல்லை" என்று பதறுகிறார்கள் அஞ்சலியை நன்கு தெரிந்தவர்கள்.



    அஞ்சலி மற்றும் அவருக்கு எதிரான நம்பத்தகுந்த தரப்பினர்களுடன் பேசியதில் இருந்து கிடைத்த தெளிவான ஒரே விஷயம், 'நட்சத்திரம்'  தமிழ்த் திரைப்படத்தின் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தின் நிஜம்தான் அஞ்சலி!

    அந்த நிஜத்தை மிரட்டும் நிழல் எது?

    பொறுத்திருங்கள்...

    நன்றி - விகடன்


    டிஸ்கி - இதன் முதல் இரு பாகங்கள் படிக்க 

    அஞ்சலி - பார்வதிதேவி -களஞ்சியம் -பால திரிபுர சுந்தரி - வெளி வராத மர்மங்கள்

    http://www.adrasaka.com/2013/04/blog-post_9624.html

    Friday, April 05, 2013

    சேட்டை - சினிமா விமர்சனம்

     

    ஹீரோ ஒரு பத்திரிக்கைல பணி ஆற்றுபவர். அவருக்கு எங்கிருந்தோ ஒரு கோடீஸ்வரக்காதலி வலியனா வந்து மாட்டுது. ( நமக்கு டொக்கு ஃபிகர் கூட மாட்றதில்லை) அந்த உத்தமக்காதலி அடிக்கடி ஹீரோவைத்தள்ளிட்டுப்போய் “ கண்ணா லட்டு தின்ன ஆசையா?ன்னு பூடகமா கேட்குது ( இதை விட ஓப்பனா யாரும் கேட்கவே முடியாது ) ஹீரோ கேரக்டர் கேனக்கிறுக்கு கேரக்டர் போல . அதெல்லாம் முடியாதுங்கறார். இது ஒரு டிராக்ல ஓடுது.

    ஹீரோவை அதே லைன்ல அதாவது பிரஸ் ரிப்போர்ட்டர் ஃபிகர் தானா ஒன் சைடா லவ் பண்ணுது . அவரோட 2 சைடும் நல்லா இருந்தும் ஹீரோ கண்டுக்கலை. அவ்ளவ் உத்தமனா? அடேங்கப்பா . கேரக்டரை மெயிண்ட்டெயின் பண்றாங்களாம். எம் ஜி ஆர் கூட இவ்ளவ் கண்ணியம் காத்ததில்லை , அப்பப்ப ஹீரோயினைத்தடவிட்டு கடைசில தங்கச்சி மறந்துடும்பாரு  .

    மேலே சொன்ன 2 லவ்வும் அப்பப்ப ஊறுகாய் மாதிரி , மெயின் கதை என்னான்னா ஒரு கடத்தல் கும்பல் வைரக்கற்கள் கொண்ட ஒரு பொம்மையைக்கை மாத்துது, அது தவறுதலா ஹீரோயின் கிட்டே மாட்டி ஹீரோ கிட்டே போய் அவரோட 2 நண்பர்கள் கிட்டே போய் ... என்ன தலை சுத்துதா? திரைக்கதையும் அப்டித்தான்... 






    ஆர்யா தான் ஹீரோ. நிஜ வாழ்வில் நயன் தாராவும் த்ரிஷாவும் இவருக்காக அடிச்சுக்கிட்டதா காத்து வாக்கில் ஒரு செய்தி உண்டு . கதைல அதை அப்டியே நாசூக்கா சொல்லி இருக்காங்க.. புக் பண்ணூம்போதே இது ஒரு மொக்கைக்காமெடி ஃபிலிம் , ஆல்ரெடி ஹிந்தில ஹிட் ஆன  படத்தின் ரீ மேக் தான், நீங்க சும்மா வந்துட்டுப்போனா போதும்னு சொல்லி இருப்பாங்க போல , மனுஷர் அதிகமா அலட்டிக்கலை . வந்தவரை ஓக்கே 



    ஹீரோயின் நெம்பர் ஒன் ஹன்சிகா .கொழுக் மொழுக் கன்னம் ( கன்னம் மட்டுமா ... ) ஹீரோவுக்கே படத்துல வேலை இல்லாதப்போ இவருக்கு மட்டும் என்ன கவர்மெண்ட் ஜாப்பா இருக்கப்போகுது , ஒரு டூயட் , 3 கட்டிப்பிடி சீன் அவ்ளவ் தான் .இவர் அப்பப்ப குஷ்பூ மாதிரி மேனரிசம் காட்டுவது , சிரிப்பது  எல்லாம் ஓவர் , ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சுந்தர் சி வந்து டொக் டொக் -னு கதவை தட்டப்போறார் , கபர்தார் 


     ஹீரோயின் நெம்பர் 2 அஞ்சலி , இவர் கழுத்துக்குக்கீழே நமிதாவுக்கு சவால் விடும் அளவு வளர்ச்சி அடைவது கூடத்தேவலை, கழுத்துக்கு மேலே குறிப்பா கன்னங்கள் 2 ம் கேப்டன் கன்னத்துக்கே சவால் விடும்படி பீர் சாப்பிட்டு வீங்கிப்போய் கிடக்கு , பார்க்க சகிக்கலை . அஞ்சலி ரசிகர்கள் மன்னிக்க 


    ஹன்சிகா , அஞ்சலி 2 பேர்ல யார் அதிக திறமையைக்காட்டி இருக்காங்கன்னு பார்த்தா சந்தேகமே இல்லாம ஹன்சிகாதான் . குறிப்பா அவர் பீச் ல குளிச்சுட்டு கும்மாளம் இடும்போது  ஆஹா! பிரமாதமா திறமை காட்டி இருக்கார். இதுக்கு ஏதாவது அவார்டு உண்டா ? தெரில 



     சந்தானம் படத்தின் முதுகெலும்பு . இவரோட பிளஸ் பாயிண்ட்டே அப்பப்ப டைமிங்கா கவுண்ட்டர் டயலாக் அடிப்பதுதான். அவரையும் வயித்தால போற பேஷண்ட் ஆக்கி வடிவேல் ரேஞ்சுக்கு இறக்கி விட்டுட்டா எப்டி? இயக்குநர் அங்கே தான் சந்தானத்தின் கேரக்டரைசேஷன் ல சறுக்கிட்டார்,. அதையும் மீறி சந்தானம் 6 இடத்துல கவுண்ட்டர் டயலாக் அடிச்சு  அது போக 19 மொக்கை ஜோக்ஸ் வழங்கி இருக்கார். 



    பிரேம் ஜி.. சப்போர்ட்டிங்க் காமெடி . சொல்றேனேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க , இவர் வரும் காட்சிகள் மகா எரிச்சல் . அவருக்கு தனி டூயட் வேற , க்ளோசப் ல அவர் வாயை ஏன் அப்டி காட்றாங்கன்னு தெரியல.. அவர் ஆளும் தலையும் .. முடியல (நடிகர்  செந்தில் கேரக்டர் மாதிரி ட்ரை பண்றாரோ? )

     நாசர் தான் வில்லன் . அங்கங்கே கிச்சு கிச்சு 


    இசை தமன் . 2 பாட்டு தேறுது , பின்னணி இசை சுமார் . ஒளிப்பதிவும் சராசரி 





    இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



    1. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இந்தப்படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் வாங்குனது. சென்சாரே அப்டி கொடுத்தாக்கூட இவங்க ஏ தான் வேணும்னு கேட்டு வாங்கி இருக்கனும், அப்டி இருக்கு பல காட்சிகள்



    2. ஹன்சிகா , அஞ்சலி என 2 முன்னணி ஹீரோயின்சை புக் பண்ணி  முடிஞ்சவரை அவங்க திறமையை வெளிக்கொணர பாடுபட்டது 



    3. சி செண்ட்டர் ரசிகர்களை சிரிக்க வைக்கும் மொக்கைக்காமெடி டயலாக்ஸ் 


    4. ஹீரோயின் ஹன்சிகா குட்டைப்பாவாடை அல்லது மிடி மாதிரி ஏதோ ஒரு கர்ச்சீப்பை அணிந்து வரும் காட்சிகளில் எல்லாம் கேமராமேன் கவுரவம் பார்க்காமல் தரையோடு தரையாக படுத்து ஜூம் செய்தது , குறிப்பா அந்த பீச் காட்சி.. 





    இயக்குநரிடம் சில கேள்விகள்



    1. ஹீரோயின் கோடீஸ்வரி. அவர் ம் என சொன்னா 100 கோடி கூட கிடைக்கும், ஆனா லூஸ் வில்லன் அவளைக்கடத்தி வெச்சுட்டு கேவலம்  1 3/4 கோடிக்காக வைரத்தை பேசிட்டு இருக்காரு . 


    2. ஹீரோ ஹீரோயினை தடவறாரு , கிஸ் பண்றாரு மேட்டர் தவிர எல்லாமே பண்றாரு, ஆனா “ எனக்கு இவ செட் ஆக மாட்டா. சரி வராது என டயலாக் பேசி லவ்வையே கேவலப்படுத்தறாரு


    3. ஆர்யா , அஞ்சலி 2 பேரும் வரும்போது சம்பந்தமே இல்லாம ஹன்சிகா முன்னால  “ ஆமா , நான் அவளை கிஸ் பண்ணேன்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்காரே? ஆர்யா, உங்களைக்கேட்டாங்களா முருகேசா? 


    4. எம் ஜி ஆர் , சிவாஜி காலத்துல ஆள் மாறாட்ட,ம் நடந்தது ,  வைரம் ஆள் மாறி டெலிவரின்னு சொன்னா அதுல ஒரு நியாயம் இருந்துச்சு , டெக்னாலஜி வளர்ந்த இந்தக்காலத்துல யார் கிட்டே வைரம் தரனும்னு ஒரு ஃபோட்டோக்கூடவா இருக்காது . கன்ஃபர்மேஷன் ஃபோன்ல பண்ணிக்க மாட்டாங்களா? 



    5. ஆர்யா , ஹன்சிகா கூட கில்மா பண்ண பிள்ளையார் சுழி போடும்போது ( பிள்ளையார் மன்னிக்க ) அஞ்சலி கிட்டே இருந்து ஃபோன். அவர் சக ஊழியை மட்டுமே , அர்ஜெண்ட் மேட்டர் வா அப்டினு சொன்னதும் இவர் ஏன் கிளம்பனும்? 5 நிமிஷம் தானே ஆகும் ,மேட்டரை முடிச்சுட்டு போய் இருக்கலாம். அந்த சீன்ல ஹன்சிகா சீறுவார்னு பார்த்தா கண்டுக்கவே இல்லை 


    6. எதுக்கு அவசரமா வரச்சொன்னேன்னு கேட்டதுக்கு அஞ்சலி கூலா ஜஸ்ட் சரக்கு அடிக்க  அப்டிங்கறார். முடியல 


    7. காதலி தன்னை விட வசதின்னு த்தெரிஞ்சு தானே ஹீரோ லவ்வறாரு . சரி வராதுன்னு சொல்றவர் ஹீரோயின் கொடுத்த காரை மட்டும் ஒனத்தியா வாங்கிக்கிட்டது எப்டி? 


    8. நெம்பர் டூ போறது யதார்த்தம் தான், எல்லாரும் டெயிலி போறதுதான் , அதுக்காக காமெடிங்கற பேர்ல இப்டி இறங்கி வரனுமா? நாளைக்கே சரி வேணாம், அடுத்த வாரமே இந்தப்படத்தை டி வி ல போடறப்போ சாப்டுட்டே யாராவது படம் பார்த்தா குமட்டாதா? 



    9. சந்தானம் கேரக்டர் நாய் நக்ஸ் ( நக்கி ) அப்டினு வெச்சது நாய் நக்ஸ் நக்கீரன் என்ற வலைப்பூ ஓனர் மனசுல வெச்சுத்தான். டைட்டில் கர்டுல அவருக்கு நன்றியே போடலையே? பத்திரிக்கைப்பேட்டில மட்டும் அதை ஒத்துக்கிட்டவர் டைட்டில்ல் ஏன் அங்கீகாரம் தர்லை ?


    10. இந்தப்படத்தின் பின்னணி இசை பல இடங்களில் நாடக் எஃபக்ட் . 


    11. எக்சாம் ஹால் ல ஃபோன் பேசலாமா? 






    மனம் கவர்ந்த வசனங்கள்

    1. மல்லிகா அபார்ட்மென்ட்ல பிராத்தல் நடக்குது சார்.


    நாடு எங்கேய்யா போய்ட்டு இருக்கு? 


    அங்கே தான் போய்ட்டு இருக்கு



    2. வீட்டுக்குள்ளே குப்பைத்தொட்டி வெச்சுப்பார்த்திருக்கேன், ஆனா  ஒரு வீடே குப்பைத்தொட்டி ஆகி இப்போதான் பார்க்கறேன் 



    3. பாதாளச்சாக்கடைக்கு கதவு , ஜன்னல் வெச்சது மாதிரி ஒரு வீடு ./


    4. ட்ரிங்க் ட்ரிங்க் 


     என்ன சத்தம் அது? 


     10 நிமிஷத்துக்கு முன்னே நீ காலிங்க் பெல் அடிச்சியே , அதுதான் , கொஞ்சம் லேட் பிக்கப் , ஹி ஹி 



    5. வெங்கட் எனும் பேரை வெங்க்கின்னு கூப்பிடறதில்லை? அது மாதிரி நாய் நக்ஸ்ங்கற பேரை சுருக்கி நக்கி ஆக்கிட்டேன், எப்டி? 



    6. டியர் , உங்களுக்காக புது சர்ட் வாங்கி வெச்சிருக்கேன் 


     எப்டியும் கழட்டத்தானே போறோம்? எதுக்கு இது? ( சுத்தம் ) 


    7. டேய் , கிசு கிசு எழுதுற எனக்கே கூச்சமா இருக்கு, என்னடா பண்றே அவளை ?


    8.  டேய் , உன் ஆளுக்கு தங்கச்சி இருக்கான்னு கேட்டு சொல்லுடா, கரெக்ட் பண்ணிடலாம் 


     ஒரிஜினல் இருக்கும்போது ஜெராக்ஸ்க்கு ஏன் ஆசைப்படறே? அவளையே எடுத்துக்கோ ( உலகத்துல எந்த உண்மைக்காதலனும் இப்டி உளற மாட்டான் )  


     என்னமோ காபித்தூள் எடுத்துக்கோங்கற மாதிரி அசால்ட்டா சொல்றானே? 



    9. ஹாய் , மரத்தடி மாலாவா? 


     ஆமா, அன்னைக்கு ஷூட் எடுத்தீங்களே? வரவே  இல்லை?

     தொப்புளைக்காட்டி போஸ் குடுனு சொன்னேன்


     ஏண்டா , சமையல் குறிப்புக்கு எதுக்கு தொப்புளைக்காட்டனும்?

     இப்பவெல்லாம் யார்டா புக் படிக்கறாங்க ? சும்மா பார்க்கறதுக்குத்தானே? ( டைம் பாஸ் விகடனை நக்கலிங்க்? )


    10.  ஒண்ணும் இல்லை, இங்க்லீஷ் பேப்பர் கிலோ 8 ரூபாய்க்கு விக்குதுங்கற திமிர்ல பேசறாங்க


    11.  என்ன தமிழ் பேசறா? அவளை எல்லாம் தமிழ் கற்பழிப்பு வழக்குல உள்ளே போடனும் 



    12. மாமி, என்னாதிது? வாழைப்பழத்தை ஆபரேஷன்  பண்ணிட்டு இருக்கேள்? ( டபுள் மீனிங்க் ) 



    13.  தம்பி! என்ன பண்றேள்?

     சாப்டுண்டு இருக்கேன்

     அதான், சாப்பாட்டுக்கு என்ன பண்றேள்னு கேட்டேன்



    14.  பக் வீட் ஆண்ட்டி - அவர் என்ன செஞ்சாலும் சூப்பரா இருக்கும் சேட்டா சேட்டாதான் 


    இப்டியே போனா அங்கிளுக்கு டாட்டாதான் 




    15. ஒட்டுத்துணில தெச்ச தலகாணி மாதிரி  உனக்கு ஒரு உடம்பு .அப்டி இருந்தும் ஜிம் பாடி மாதிரி எதுக்கு பில்டப்?



    16.  மனோ பாலா - பரதம் கறது ஒரு கலை. அவங்க என்னதான் குச்சி வெச்சுக்குத்துனாலும் நீங்க நாட்டியத்துல கவனமா இருக்கனும் ( டபுள் மீனிங்க் )


    17.  உன் கிட்டே 2 முக்கியமான விஷயம் பேசனும் 

     நானும் காலைல இருந்து  2 விஷயமாத்தான் போய்ட்டு இருக்கேன் 



    18.  ஒரு பட்டாம்பூச்சியை ஒரு கரப்பான் பூச்சி  எப்டி கட்டிப்பிடிக்குது பாருங்க 


    19.  டேய் , உனக்குக்கிடைச்சா எனக்கு கிடைச்ச மாதிரி டா


     என்னாது ?

    சந்தோஷம் தான் . காதலின்னு பயந்துட்டியா?


    20. முக்கியமான ஒரு வேலையை பாதிலயே விட்டுட்டு வந்திருக்கேன் ஹி ஹி 



    21. ஒர்க்கிங்க் டைம்ல நான் தண்ணி அடிக்கறதில்லைங்க 


    இப்போ நாம ஒர்க் பண்றோம்னு யார் சொன்னது? ரிலாக்ஸ் மேன் 



    22.  நாசர் அடியாளிடம் - ஏண்டா , கல்யாண வீட்டுக்கா வந்திருக்கோம்? உக்காந்து சாப்டுட்டு இருக்கே? 



    23.  என்னங்க ? போஸ்ட்ல என்ன? 


     முருகர் விபூதி தபால் ல வந்திருக்கு 


     அதை எடுத்துட்டு  ஏன் பாத்ரூம் போறீங்க ?

     குளிச்சுட்டு பூசிக்கத்தான் 


     நீங்க தான் ஆல்ரெடி குளிச்சுட்டீங்க்ளே? 


     சோப் போட மறந்துட்டேன் 


    24.  லவ்ங்கறது கனவு மாதிரி, மேரேஜ்ங்கறது அலாரம் மாதிரி, அலாரம் அடிச்சதும்  கனவை கலைச்சிடனும்


    25. என்னதான் டேஸ்ட்டா இருந்தாலும் பபிள்கம்மை ஒரு கட்டத்துல துப்பித்தான் ஆகனும், அது மாதிரி தான் பழைய லவ்வும் 



    26. மனசுக்குப்பிடிச்சவங்க கிட்டே லவ்வைப்பிரப்போஸ் பண்றதை  விடப்பெரிய வேலை இந்த உலகத்துல எதுவும்  இல்லை # சேட்டை


    27. இதை ஏன் என் கிட்டே முன்னாலயே சொல்லலை?

     நீங்க கேட்கவே இல்லையே?



    28.  அது ஏன் சார் உங்க மண்டையை டேபிள் ஃபேன் மாதிரி ஸ்லோவா திருப்பறீங்க? 



    29/ இவர் யாரு? பார்க்க பயங்கரமா இருக்காரே? 


     மூஞ்சி கழுவின பிறகு பாருங்க. இன்னும் பயங்கரமா இருப்பான் 


    30. நீ நல்ல வழி ல   செலவு பண்ணு , இல்லை நாகர் கோயில் வழில செலவு பண்ணு  அதைப்பத்தி எனக்குக்கவலை இல்லை 


    31. தப்பு பண்றவங்க எல்லாம் நம்ம பேப்பரைப்பார்த்து பயப்படனும்


     அப்போ நாம தான் முதல்ல பயப்படனும் 



    32. மேரேஜ்க்கு முன்னால இதெல்லாம் தப்பு , நம்ம தமிழ்க்கலாச்சாரம் ஒத்துக்காது 


     ஹன்சிகா - இச் .. இப்போ?

     ஐ டோண்ட் நோ தமிழ் யா 



    33.  நான் என்ன பிராண்ட் ஜட்டி போடனும்கறதைக்கூட உங்கப்பா தான் முடிவு பண்ணுவாரா? 



    34. இந்த மாதிரி சோகக்கதைக்கு எல்லாம் நான் மயங்க மாட்டேன்

     சரி வேற ஒரு காமெடிக்கதை இருக்கு, சொல்லவா? 



    35. முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி , உங்க வீட்ல நெம்பர் டூ போய்ட்டேன் சாரி 


     36 ஓடி வந்த வேகத்துக்கு களைப்பாற 2 பேரும் ஜூஸ் குடிக்கறிங்க போல ஓ இதான் முத்தமா? 


    37 . திடீர்னு கண்ணாடில உன் ஃபேஸ்க்குப்பதிலா வேற ஒரு ஃபேஸ் இருந்தா உனக்கு எப்டி இருக்கும் ? 

     அடடே, அழகா இருக்கே அப்டினு 





    எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40 



     குமுதம் ரேங்க் - ஓக்கே 



     ரேட்டிங்க் 2 / 5 


    சி பி கமெண்ட் - ரொம்ப மொக்கை கிடையாது. டைம் பாஸ் ஆகும். எவனாவது இளிச்சவாயன் ஓ சி ல கூட்டிட்டுப்போனா பார்க்கலாம், சொந்தக்காசை செலவு பண்ணிப்போற அளவு படம் ஒர்த் இல்லை .


     

    Sunday, March 24, 2013

    வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்

    ஹீரோ ஷேர் ஆட்டோ டிரைவர் . ரெகுலர் கஸ்டமாரான அதாவது அப்படி இவராப்பார்த்து வலியனாப்போய் ஆக்கிக்கிட்ட ஹீரோயினோட  ஒன் சைடு லவ். இது ஒரு டிராக் . இவரை 3 வெவ்வேற ஆட்கள் வேறு வேறு காரணத்துக்காக துரத்தறாங்க , சும்மா இல்லை , அவரை கொலை செய்ய . அந்த அளவுக்கு அவர் என்ன செஞ்சார்?  என்பதை நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே மெத்தேடில் முடிஞ்ச வரை சுவராஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்


     இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தம்பி  திலீபன் தான் ஹீரோ , ஆள் நல்லா ஜை ஜாண்டிக்கா  ஹைட்டா இருந்தாலும் முக பாவனைகள் , காதல் , ஆக்ரோஷம் சோகம் சுத்தமா வர்லை , ஸ்டண்ட் மாஸ்டர் தயவில் நல்லா ஃபைட் போடறார்.  மற்ற படி தம்பி  நீ இன்னும் கத்துக்கனும் . 


     ஹீரோயின்  நம்ம அஞ்சலி. அங்காடித்தெரு அஞ்சலிக்கும்  , வத்திக்குச்சி அஞ்சலிக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் , இன்னும் 2 வருஷம் போனா நமீதாவைத்தோற்கடிக்கும் 10 வித்தியாசம் ஆகி விட வாய்ப்பு இருக்கு, கபர் தார் (அ தெரு அஞ்சலி =  32 ,  வ கு  அஞ்சலி = 36 ,  இன்னும் 2 வருஷத்துல = 42). என்னதான் இருந்தாலும் அஞ்சலிக்கு கன்னம் 2ம் உப்பி இருக்கே அடடா என்ன அழகு ( கன்னம் மட்டும் தான்யா ) அவர் ஹீரோவை லவ்வினாலும் அதை வெளிக்காட்டாமல் பம்முவது , மிரட்டுவது , குழைவது என பிரமாதப்படுத்துகிறார். லவ்வர் உள்ளவங்க எல்லாம் அஞ்சலி மாதிரி லவ்வர் இல்லையே எனவும், லவ்வர் இல்லாதவங்க அஞ்சலியே லவ்வரா வேணும் என நினைக்க வைப்பது அஞ்சலிக்குக்கிடைத்த வெற்றி ( ஆனா நான் அப்டி ஏதும் நினைக்கலை ) ( ஹீரோயினுக்கு மட்டும் எதுக்கு இத்தனை பெரிய பத்தி? )


     நண்டு ஜெகனுக்கு வில்லத்தனம் மிக்க கதாப்பாத்திரம் . மனதோடு ஒட்டாத கதாப்பாத்திரம் என்றாலும்  அவரளவில் நல்லா நடிச்சிருக்கார்.

     


    இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


    1.  ஹீரோ - ஹீரோயின்க்கு இடையேயான காதல் எபிசோடு செம சுவராஸ்யம் , எங்கேயும் எப்போதும் படத்துக்குப்பின் இதில் தான் லவ் செம டெவலப்மெண்ட்


    2.  அஞ்சலி இங்க்லீஷ்க்கு டியூஷன் போவதும் சக மாணவிகளுடன் அடிக்கும் லூட்டியும் 


    3. ஹீரோ புது முகம் என்பதால் அதை பேலன்ஸ் பண்ண ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கரெக்ட் பண்ணிய அதாவது திரைக்கதையை கரெக்ட் பண்ணிய இயக்குநரின் லாவகம்


    4. ஃபில்டர் வாட்டர் கேன் மாதிரி சரக்கு இருக்கும் வாட்டர் கேன் செம அப்ளாஸ் அள்ளுது தியேட்டரில் 


    5.  வில்லனாக வரும் நண்டு வஞ்சகச்சிரிப்பும் அப்போது வரும் பி ஜி எம்மும் 


    6. ஒரு சீனில் அஞ்சலி கல்யாணக்கோலத்தில் வரும்போது ஜரிகை வைத்த கல்யாணிக்காட்டன் சேலையில் அசத்தலாக வருகிறார். காணக்கண் கோடி வேண்டும்




     இயக்குநரிடம் சில கேள்விகள்


    1. சரண்யா இட்லிப்பாத்திரத்தில் மூடியை எடுக்க அவர் கர்ச்சீப்பை யூஸ் பண்றார். கரித்துணி என்னாச்சு ? ஷூட்டிங்க் ஸ்பாட்டில் அவசரத்துக்கு அதுதான் கிடைச்சுதா? 


    2. ஹீரோ யூஸ் பண்ணும் ஷேர் ஆட்டோ சில சமயம் க்ளோசப்பில் சாதா ஆட்டோவாகவும், லாங்க் ஷாட்டில் மட்டும் ஷேர் ஆட்டோவாகவும் இருக்கு, ஒய் திஸ் குழப்பம் ? 


    3.  ஷட்டரை ஆள் மீது இறக்கி ஏற்றி  இறக்கி கொலை செய்யும் கொடூரக்காட்சி  எதுக்கு? எப்படி சென்சார் ல விட்டாங்க? 



    4. பப்ளிக் ப்ளேஸ் ல 4 பேர் பார்த்துட்டு இருக்கும்போது ஒருத்தன் செல் ஃபோன்ல கொலை திட்டம் பற்ரி பக்காவா பிளான் அவௌட் பண்ணுவது எப்படி? 


    5.என்னதான் அஞ்சலி மனம் கவரும்படி காதல் சல்லாபம் ,  ரொமான்ஸ் பண்ணாலும் அவர் கிட்டே ஒரு ஆம்பளைத்தனம் தெரியுதே , நளினம் குறையுதே, ஏன்?  குரல் காரணமா?


    6. நண்டு ஜெகன் & நண்பன் 2 பேரும் ஷூ போட்டு பீச் மணல் ல ஓடறாங்க, அவங்களைக்கொலை பண்ணத்துரத்தும் ஆள் வெறும் கால் ல லாங்க் ஷாட்ல ஓடறாரு , கிட்டே நெருங்கியதும் அவர் கால் ல செப்பல் இருக்கு . மறுபடியும் லாங்க் ஷாட்ல  காட்டும்போது செப்பல் நோ


    7.  ஹீரோ உயிரோட இருந்தா ஆள் கடத்தலுக்கு இடைஞ்சலா இருப்பான் என்பதால் ஹீரோவைக்கொலை செய்ய பிளான் போடுவது ஓவர். அதே மாதிரி ஹீரோவை வீட்டில் அடைச்சு வைப்பதும் 2 நாள் வெளியிலேயே வர முடியாது என வசனம் பேசியும்  போக்கு காட்டும் வில்லன் அப்போ ஆள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாமே? அப்போ ஏன் ஹீரோவை கொலை பண்ண துடிக்கனும்?


    8.  நோக்கியா பேசிக் மாடல் பேட்டரி 3 நாள் தாங்கும். ஆனா ஹீரோவை ரூமில் அடைச்ச முதல் நாள் இரவே பேட்டரி டவுன் ஆகிடுதே எப்டி?



    9.  பெரிய ரவுடி மாதிரி காட்டப்படும் ஆள் சாதா போலீசைக்கண்டு ஏன் பயந்து நடுங்கனும்?


    10. மார்க்கெட்டிங்க் எக்சிக்யூட்டிவ்வா ஒர்க் பண்ணும் 3 பேரும் என்னமோ கை தேர்ந்த கிரிமினல்ஸ் போல் பிளான் பண்ணுவது எப்படி? முன் பின் பழக்கம் இல்லை, இதுதான் முதல் குற்றம் என வசனம் வேறு





     மனம் கவர்ந்த வசனங்கள்


    1. இன்சூரன்ஸ் ஏஜென்ட் ,சேல்ஸ் ரெப் 2ம் நாய்ப்பொழப்பு


    2. தம் ,தண்ணி அடிக்கற மாதிரி அடுத்தவங்களுக்கு உதவி பண்றதும் ஒரு போதை தான்.அதுல வீழ்ந்துட்டா மீளவே முடியாது


    3. முகம் தெரியாத நபருக்கு நாம செய்யும் உதவி,முகம் தெரியாத நபரிடம் இருந்து நமக்குக்கிடைக்கும் உதவி 2ம் அற்புதமான விஷயம


    4.  வண்டலூர் ஜூவுக்கு போகலாம் வா

    “நான் எதுக்கு உன் கூட வரணும்” 

    நாம லவ்வர்ஸ் இல்லை அதான். 


    “அலோ.. ரோட்டுக்கு நாலு பேர் என்னை லவ் பண்றேன்னு சொல்றாங்க.. அதுக்காக எல்லாரையும் நான் லவ் பண்ண முடியுமா? நீ வேணா என்னை லவ் பண்ணிக்க,  ஆனா நான் பண்ணலை


    5.   அவங்க வீட்ல எல்லாரும் கவர்மெண்ட் ஜாப்டா, எப்படி நீ லவ் பண்ணலாம்?  ஒருத்தர் ஈ பி ஆபீஸ்ல வாட்ச் மேன் , இன்னொருத்தர் வார்டு பாய் ஜி ஹெச்ல 



    6 நீங்க படிச்சவங்க தான், ஆனா படிச்சவங்க கல்ச்சர் தெரியல. 


    7. சண்டைல அடிக்கறது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அடி வாங்குவதும் , தாங்குவதும் 


    8. எப்பவுமே நமக்கு ஏதாவது நடந்தா அது கஷ்டம் , மத்தவங்களுக்கு நடந்தா அது வேடிக்கை

    9.  பிசிக்கலா செஞ்சா தப்பு , அதுவே மெண்ட்டலா யோசிச்சு செஞ்சா அது திறமை


    10. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லயும்  கண்டு பிடிக்க முடியாத  க்ரைம் கேஸ் நிறைய இருக்கும் 


    11. நான் உன்னை லவ் பண்றேன்


     சரி, பண்ணிக்கோ


    வாட்?


     


    ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43 ( இதை படம் பார்த்த  17 3 2013 நைட் ட்விட்டர்ல போட்டுட்டேன் ,ஆன விகடன் மார்க் - 42 )


    ரேட்டிங் -  3 /5


    சி.பி கமெண்ட் - அஞ்சலி ரசிகர்கள் எல்லாரும் பார்க்கலாம், மாமூல் கமர்ஷியல் மசாலாப்படம் , போர் அடிக்காம போகுது .
     
















    Saturday, February 16, 2013

    என்னைப் பத்தி வெளியே வராத பயங்கரமான கிசுகிசு ஒண்ணு - அஞ்சலி பேட்டி

    மொபைல், இமெயில், ஃபேஸ்புக்... எங்கேயும் எப்போதும் நாட் ரீச்சபிளிலேயே இருந்தார் அஞ்சலி. காத்திருந்து காத்திருந்து 'சேட்டை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பிடித்தேன். 'சிங்கம்-2’ படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு சூர்யாவுடன் ஆடியிருக்கிறார்.



    ''ஹலோ, 'சிங்கம்-2’ல நான் ஆடிஇருக்கிறது அயிட்டம் சாங் கிடையாது. நான் சூர்யா சாரோட இன்ட்ரோ சாங்ல ஆடியிருக்கேன். ஹீரோகூட பப்ளியா ஒரு பொண்ணு ஆடினா நல்லா இருக்குமேனு தேடி இருக்காங்க. பை லக்... எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. பாட்டு நல்லா வந்திருக்கு. நிறையக் கதைகள் கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரமே விஜய், அஜித், சூர்யா கூட நடிப்பேன்.''



    ''சினிமால நல்ல கிராஃப் இருக்கு உங்களுக்கு. ஆனா, டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்களிலேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே?''



    '' 'சேட்டை’யில் ஹன்சிகா, 'எம்.ஜி.ஆர்’ல வரூ, தெலுங்கு 'சீதம்மா’வில் சமந்தா, 'பலுபு’வில் ஸ்ருதி... இவங்களோட சேர்ந்து நடிச்சது தானா அமைஞ்சது. யார் என்கூட நடிச்சாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லா ஹீரோயினும் என்கூட நெருக்கமாகிடுவாங்க. ஏன்னா, நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி!''  


    ''ஆர்யா, விஷால் யார் பயங்கரமான ப்ளேபாய்?''  



    ''ஆர்யா, விஷால்... ரெண்டு பேருமே ரொம்ப ஜாலியாப் பழகுவாங்க. ஆர்யா செட்ல இருந்தா, நமக்கு எந்தக் கவலையும் வேண்டாம்.  எல்லா வேலையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். நிறைய ஹெல்ப் பண்ணுவார். அதைவிட நிறையப் பேசிட்டே இருப்பார். விஷால் அமைதியா இருப்பார். ஆனா, பயங்கரமா சேட்டை பண்ணுவார். ரெண்டு பேருக்குமே எனர்ஜி லெவல் ஜாஸ்தி. என்ன, ஆர்யா சேட்டை பண்ணா, வெளியே தெரிஞ்சிடும். விஷால் சேட்டை பண்ணா, யாருக்கும் தெரியாது. விஷால் அவ்ளோ அமைதி... ஆனா, பயங்கர நாட்டி!''


    ''இப்போ லீடிங்கில் இருக்கிற பல ஹீரோயின்கள், 'அஞ்சலி நடிப்புக்கு நான் ரசிகை’னு சொல்லியிருக்காங்க. அஞ்சலி யாருக்கு ரசிகை?''


    ''என் ஆல்டைம் ஃபேவரைட் ஸ்ரீதேவி மேடம்தான். ஆனா, நான் இம்ப்ரெஸ் ஆனது, நடிப்பு கத்துக்கிட்டது எல்லாம் ஜோதிகா மேடம் நடிப்பைப் பார்த்துதான்.''


    ''சினிமாவில் ஹீரோயினாக இருப்பது வரமா... சாபமா?''

    ''நூடுல்ஸ், சுடிதார், வீடு, வீக் எண்ட் சினிமான்னு பிடிச்ச விஷயங்களோடு இருந்த பொண்ணு நான். 'கற்றது தமிழ்’ படத்துக்குப் பிறகு என் உலகமே மாறிடுச்சு. இங்கேயும் சில சிரமங்கள் இருக்குதான். ஆனா, ஹீரோயினா இருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்குப் பிடிச்சிருக்கு. 'கற்றது தமிழ்’ ஆனந்தி, 'அங்காடித் தெரு’ கனி, 'எங்கேயும் எப்போதும்’ மணிமேகலை கேரக்டர்கள் எல்லாம் எனக்கு ஒவ்வொரு வாழ்க்கை. இதெல்லாம் எனக்குக் கொடுத்தது சினிமாதான். என்ன சொல்றது... நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.''


    ''எப்பவும் ஏதாவது ஒரு கிசுகிசு உங்களை விரட்டிக்கிட்டே இருக்கே?''  

    சத்தமாகச் சிரிக்கிறார்... ''உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இதுவரை என்னைப் பத்தி வெளியே வராத பயங்கரமான கிசுகிசு ஒண்ணு இருக்கு... அது எனக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். அதோட கம்பேர் பண்றப்ப, இதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க!''


     நன்றி -ஆனந்த விகடன்,