Showing posts with label அங்கதம். Show all posts
Showing posts with label அங்கதம். Show all posts

Thursday, April 07, 2011

ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி

1.  ''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் அரசியல் கருத்து என்ன?'' 

''எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, ஜெயலலிதாவைவிட மிகச் சரியாக அறிந்துவைத்திருப்பவர்!''

அது கரெக்ட்டுங்க.. ஆனா 41 வேட்பாளரையும் மகாராஜா ஆக்கனும்னு பார்க்கறாரு.. வலிக்குதுங்க.. அவ் அவ்வ்வ்வ்வ் ....



2. '' 'ஒருநாள் முதல்வர்’ வாய்ப்பு உங்களிடம் வந்தால்..?'' 

 ''வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கு அளிக்காதவர்களின் ரேஷன் அட்டைகளையும் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்யும்படி உடனே ஆணை பிறப்பிப்பேன். சட்டம் அதற்கு இடம் தராது என்கிறீர்களா? நான் முதல்வராகும் வாய்ப்பும் வராதே!''

நடக்கும் என்பார் நடக்காது.. நடக்காது என்பார் நடந்து விடும் .

.
3. ''அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?'' 

''பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்துவைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!''

நடப்பது மன்னராட்சியா? மன்னரோட வாரிசு  மக்கள் ஆட்சியா?


'4. 'என்னதான் கருணாநிதி மீது ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும்... சமத்துவபுரம், அருந்ததியர்க்கு உள் இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, திருநங்கையர் நல வாரியம் என்று ஒதுக்கப்பட்டோருக்கு உரிய திட்டங்கள் அவர் ஆட்சியில்தானே நிறைவேறின? இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்பது உண்மைதானே?''


'' 'என்னதான் ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்பு மது அருந்தினாலும், சிகரெட் புகைத்தாலும், வெற்றிலை போட்டுத் துப்பினாலும், இடையிடையே கொஞ்சம் பாடம் நடத்துகிறாரே, அது போதாதா?’ என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.

ஆசு இரியர்தான் ஆசிரியர். குற்றம் களைபவராக இருப்பதுதான் ஆசிரியரின் முதல் லட்சணம். ஊழலின் நிழல் படாத, மக்கள் நலன் சார்ந்த, செப்புக் காசும் கொள்ளை அடிக்காத நேரிய நல்லாட்சியை வழங்குவதுதான் அரசியல்வாதிக்கு உரிய அடிப்படை இலக்கணம்.

இட ஒதுக்கீடு, நல வாரியம் எல்லாம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் ஜால வித்தைகள். வித்தை காட்டுவதில் கலைஞர் வித்தகர். வாக்கு சேகரிக்க எவை எல்லாம் பயன்படுமோ, அவற்றை ஜெயலலிதாவும் செய்வார். அவர் உயர் சாதி மனோபாவம் உள்ளவர் என்பதுதான் உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டு. அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதில் சாதி பார்ப்பதே இல்லை!''

தி மு க , அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... தி மு க கமுக்கமா ,விஞ்ஞானபூர்வமா அடிப்பாங்க.. அதிமுக வுக்கு அந்த வல்லமை பற்றாது.. டாம் டூம்னு அடிச்சு ஈஸியா மாட்டிக்குவாங்க.. 

5. ''டி.வி, கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு... அடுத்து?'' 


''வீட்டுக்கு ஒரு கட்டில்... பக்கத்தில் ஒரு தொட்டில்!''

முதன் முதலாக  முதன் முதலாக  இலவசமாக இலவசமாகத்தான்... 

ஏமாளி...தமிழா...


6. ''வைகோ...?'' 

''நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்புள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி!''

வகை தொகை இல்லாமல் வகையாக ஏமாற்றப்பட்ட புலி... 

7. ''இத்தனை இடர்கள், முரண்பாடுகள், அநீதிகள், ஊழல்கள் இருந்தும் இந்த நாட்டை எது கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறது? மக்கள் ஏன் எழுச்சிகொண்டு போராடவில்லை?'' 

''மதங்களால் பிரிந்து, சாதிகளால் சரிந்து, ஆள்பவரின் ஊழல் முறைகேடுகளால் சிதைந்து, மேலான வாழ்வியல் விழுமியங்களை மெள்ள இழந்து வரும் இந்தியா, இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்படுவதற்கு, நம் முன்னோர்கள் அமைத்துவைத்த ஆன்மிக அடித்தளம்தான் முக்கியக் காரணம்.

உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் இயல்பாக எழுச்சிகொள்வது இல்லை. சமூக லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் சுயநலமற்ற அறிவுஜீவிகளின் நெருப்பு எழுத்துக்களும், கந்தக வார்த்தை களும்தான் சாதாரண மக்களைச் சரித்திரம் படைக்கச் செய்யும்.

மேல்தட்டு வர்க்கம், யார் எப்படிப் போனாலும் தன்னலனைக் காப்பதில் தனிக் கவனம் காட்டும். அடித்தட்டு வர்க்கம் வயிற்றுப் பசியாற வழி தேடுவதிலேயே அன்றாடம் அலைக்கழிப்புக்கு ஆளாகும். ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினரால்தான் எந்த இடத்திலும் புரட்சிக்குப் பூபாளம் வாசிக்கப் படும்.

ஆனால், இந்த மண்ணின் துர்பாக்கியம்... நடுத்தர வர்க்கம் 'மானாடுவதிலும் மயிலாடுவதிலும்’ மயங்கிக்கிடக்கிறது. அறிவுஜீவிகள் என்று பெயர் பெற்றவர்களோ, அதிகார பீடத்தில் யார் அமர்ந்தாலும் சலுகைகளுக்காக அன்றாடம் சாமரம் வீசுவதை வாழ்க்கை நெறியாக வகுத்துக்கொண்டனர். பின், மக்களிடம் எப்படி வரும் போராட்டத்துக்கான எழுச்சி?

செகண்ட்ஷோ சினிமா பார்க்கறது உலகிலேயே தமிழன் தான் அதிகமாம்.. அதனால விழிப்புணர்வு கம்மி.. பாவம் லேட் நைட்ல படுக்கறான்.. 


8.''இன்றுள்ள அரசியல் நாகரிகம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால், நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந் தலைவர் காமராஜரை, 'குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்... இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!''

அரசியல் நாகரீகம் பற்றி பேசுவதே அநாகரீகம் ஆகி விட்டதே இப்போது?


9. ''ரசிகன், தொண்டன் இருவரில் யார் அப்பாவி?'' 

''தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப்படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!''

ஏமாந்த சோனகிரிக்கும்,லைஃப் டைம் அன்வேலிட் சிம்கார்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

 

 
'10. சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?'' 


''கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை’, 'அன்பே வா’, 'ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 'மதராசபட்டினம்’. இந்தியில் 'குஜாரிஷ்’. கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படைப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!''

இந்தப்படத்தை இன்னுமா தமிழ்ல ரீமேக் பண்ணாம இருக்காங்க.. ஜெயம் ரவி, விஜய் எல்லாம் எங்கேப்பா போனீங்க?



11. ''மௌன விரதம், உண்ணாவிரதம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது உண்டா... ஏன்?'' 

''வாரத்தில் ஒரு வேளை உண்ணுவது இல்லை. செவ்வாய் அன்று நாள் முழுவதும் வாய் திறந்து யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வேளை உண்ண மறந்தால், ஆரோக்யம் வளரும். ஒருநாள் முழுவதும் பேச மறுத்தால், ஆன்ம ஞானம் மலரும்!''

இந்த அரசியல்வாதிகள் விடாம பேசிட்டே இருக்காங்களே.. அவங்களை எலக்‌ஷன் முடியற வரை மவுன விரதம் இருக்க வைக்கனும்.. 

12. ''சுயமரியாதை என்றால் என்ன?'' 

''தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வை யில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்... சுயமரியாதை!''

எத்தன குடும்பத்துக்கு..?


13. ''திராவிடக் கட்சிகளின் சாதனைதான் என்ன?'' 

'' 'பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை. போட்டுப் பழகிய பை!’ - ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் சொன்னது. நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டது!''

 தமிழனை ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை வெறுக்க வைத்து அவனை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்தது..

14. ''வரும் காலங்களில் 'நேர்மையான தேர்தல்’ சாத்தியமா?'' 

''தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் சட்டபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டால், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டால், ஆள்பவருக்கு ஏற்றபடி ஆடாமல் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் சமுதாயப் பொறுப்பு உணர்வுடன் செயற்பட்டால் 'நேர்மையான தேர்தல்’ நிச்சயம் சாத்தியம்!''

ஒவ்வொரு தொகுதிக்கும் வெவ்வேறு விதமான ஓட்டு ரேட் என்பதை மாற்றி ஃபிக்சடாக தமிழ்நாடு முழுவதும் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயிப்பதே நேர்மையான தேர்தல்.. 


'15. 'தனது தேர்தல் அறிக்கை மூலம் இப்போதே 'தி.மு.க. தேவலாம்’ என்று சொல்லவைத்துவிட்டதே அ.தி.மு.க?'' 

''ஆளும் கட்சி பதவியில் இருந்து இறங்காமல் பார்த்துக்கொள்ள ஆயிரம் இலவச வாக்குறுதிகள் வழங்குவது நியாயம் என்றால், எதிர்க் கட்சி அந்தப் பதவியில் ஏறி அமர்வதற்கு இன்னும் ஓராயிரம் அள்ளிவிடுவது எப்படி அநியாயமாகும்? நியாயத் தராசை நேராக நிறுத்துங்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் நாற்காலிப் போட்டியில் காட்டும் நாட்டம் தம் மக்கள் வாழ்வுக்காக; தமிழர்தம் வாழ்வுக்காக என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்!''

தமிழக அரசியல் ஒரு நாடக மேடை.. அதில் கலைஞர், ஜெ இருவரும் சிறந்த நடிகர்கள்.. 

Monday, April 04, 2011

தப்ஸி உங்கள் சாய்ஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4O4v5C2UtveG4zh5XYaeojnmVY9Vb270LEPvGUZzHvciymuGLMqXA0trUfyrAay2Iss4XBoKePq4HlkCfm_-EMP4-2Yu_59U8yqjDGMfLg01gOKKH8e6kpCFX7JjQK8u7SzuEBxCVlnk/s1600/tapsi+%2528115%2529.jpg 

1. யார்  கூட  கூட்டணி?-னு  ஒரு  தீர்க்கமான  முடிவுக்கு  நான்  வந்துட்டேன்.

விளையாடாதீங்க  தலைவரே!  நீங்க  டூ  லேட்...  எலெக்‌ஷனே  முடிஞ்சிடுச்சு.

-----------------------------

2. தலைவரே!  உங்க  பள்ளிப்படிப்புல  சிங்கிள்  டிஜிட்  மார்க்தான்  எடுத்தீங்கன்னு  வெளில  சொல்லிடாதீங்க.

ஏன்?

அப்புறம்  கூட்டணி  கட்சில  சிங்கிள்  டிஜிட்லதான்  சீட்  குடுப்பாங்க...

--------------------------

3. ஒரு  கவர்மெண்ட்  ஆஃபீசரான  நீங்க  எப்ப  பாரு  லேடீஸ்  கூட  சுத்திட்டு  இருக்கீங்களாமே?

தப்புதான்...  அதுக்காக  அஃபீஸ்ல  அரசு  ஊழியர்ங்கற  நேம் போர்டை  சரச  ஊழியர்னு  மாத்திடறதா?

-----------------------------

4. என்ன  தலைவரே! 10,000  ஓட்டு  வித்தியாசத்துல  ஜெயிச்சுடுவீங்களா?

10,000  ஓட்டு  மொத்தமா  வர்றதே  சிரமம்தான்.

------------------------------

5. தேர்தல்  பிரச்சாரத்துல  மக்களை  பகிரங்கமா  மிரட்னாராமே தலைவர்?

ஆமா...  என்னை  ஜெயிக்க  வைக்கலைன்னா  மறுபடியும்  சினிமாவுக்கே  நடிக்க  வந்துடுவேன்னாரு.

---------------------------
http://searchandhra.com/english/wp-content/uploads/2010/05/Tapsi-Photo-Gallery-58.jpg
6. புள்ளி  விபரப்புலி-னு  பேரெடுக்க  ஆசைப்பட்டு  தலைவர்  தேர்தல்  கமிஷன்  கிட்டே  மாட்டிக்கிட்டாரா?  எப்படி?

இந்த  தொகுதில  மொத்தம்  75,000 கள்ள  ஒட்டுக்கள்  பதிவாகி  இருக்கு.  அதுல  68,000 என்  கட்சி  ஆளுங்க  போட்டது  7,000  கூட்டணி  கட்சி  ஆளுங்க  போட்டது-னு சொல்லி  மாட்டிக்கிட்டாரு.

-------------------------------

7. C.M.  ஆகியே  தீருவேன்னு  தலைவர்  234  தொகுதிக்கும்  நடந்தே  பிரச்சாரத்துக்கு  போறாரு.

அடடா...  நடக்காத  விஷயத்துக்கு  ஏன்  நடக்கறாரு?

----------------------------

8. பட்டி  மன்றத்தலைப்பால  கட்சிக்கு  பிரச்சனை  வந்துடுச்சாமே?

ஆமா...  மகளிர்  அணித்தலைவியின்  புகழுக்கு  காரணம் அவரது  சதைப்  பிடிப்பா?  உடல்  அழகின்  வடிவமைப்பா?-இதுதான்  டைட்டிலாம்.

---------------------------

9. தலைவர்  பழசை  என்னைக்கும்  மறக்கமாட்டார்-னு  எப்படி  சொல்றீங்க?

இன்னும்  அவரது  டைரிக்குள்ள  ஜெயமாலினி,  அனுராதா,  டிஸ்கோ சாந்தி  ஃபோட்டோஸ்  எல்லாம்  வெச்சிருக்காரே?

--------------------------------

10. தலைவர்  எதுக்காக  நடிகை  தப்ஸியை  பிரச்சாரம்  பண்ண  கூட்டிட்டு  வந்திருக்காரு?

இந்த  தேர்தல்ல  தப்ஸிதான்  கட்சியோட  கதாநாயகியாம்...

Wednesday, March 30, 2011

இலியானா வுக்கும், தி மு க வின் கதாநாயகிக்கும் என்ன வித்தியாசம்?

http://oniondosa.net/photos/Heroines/Ileana/tn_Ileana030.jpg 

1. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடப்படும். நெல், கரும்புக்கு பணவீக்கத்திற்கு தகுந்தபடி, உடனடியாக குறைந்தபட்ச விலை வழங்கப்படும். காவிரியில் இருந்து, 205 டி.எம்.சி., தண்ணீரை ஆண்டுதோறும் உறுதியாக பெற்று, தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்படும்.

முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.....இங்கே அம்மாவும், அய்யாவுமே அடிச்சுக்கிட்டு இருக்காங்க.. இதுல இவரு வேற காமெடி பண்ணிட்டு இருக்காரு...

---------------------------------------

2. தமிழக முதல்வர் கருணாநிதி: சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகவும் பேசிவிட்டு, இப்போது, "முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவேன்' என ஜெயலலிதா கூறுவதை, இஸ்லாமியர் நம்ப மாட்டார்கள்.

ஆமா தலைவரே.. இப்பவெல்லாம் நல்லதுக்கு காலம் இல்ல... உண்மையை சொன்னா எவனும் நம்ப மாட்டான்.. ஆனா இலவசம்னு சொல்லுங்க.. உடனே ஓடி வருவான்.. இந்த நாட்டில் கடைசி இளிச்சவாயத்தமிழன் இருக்கும் வரை நீங்க தான் தலைவரே, தமிழ் இனத்தலைவரு,.. ஒண்ணும் கவலைப்படாதீங்க..

----------------------------------------------------
http://3.bp.blogspot.com/_maPlgJCAIqk/S-lfoD2PaOI/AAAAAAAAASc/R62ghQeimxo/s320/ileana_hot.jpg
3. பத்திரிகை செய்தி: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.

அது ஓக்கே.. இப்போ 2011ல கலைஞரே முதல்வர் ஆனா நாங்க என்ன பரிகார பூஜை யாருக்கு பண்ணனும்?

----------------------------------------------


4. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: இன்று வீட்டிற்கு வீடு ஆடு, மாடு தருவதாக அ.தி.மு.க., வாக்குறுதி கொடுத்துள்ளது. படித்த, படிக்காத பாமர மக்களான நம்மை மாடு மேய்க்கச் சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா. மாணவர்கள் அனைவருக்கும், "லேப்-டாப்' வழங்குவதாக கருணாநிதி கூறியுள்ளார்.


செம்மறி ஆடுகள் போல் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் தமிழனுக்கு ஒரு அடையாளத்திற்கு ஆடு கொடுப்பது சரிதான்.. எலக்‌ஷன் முடிஞ்சு அன்புமணிக்கு சீட் தர்லைன்னா இதே நாக்கு எப்படி பேசும்னு எங்களுக்கு தெரியாதா? என்ன?

-----------------------------------------
Hilarious political cartoon images

5. தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி பேட்டி: தமிழக அரசியல் கட்சிகள், வாக்காளர்களை கவரும் நோக்குடன் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மிக்சி, லேப்-டாப்களை இலவசமாக வழங்கப்போவதாக தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கியுள்ளன. தமிழக அரசியல் கட்சிகளின் கவலையளிக்கும் இந்த போக்கை, மக்கள் கருத்தில் கொண்டிருக்கின்றனர்.


சார். நீங்க என்ன தான் சொலுங்க.. என்னதான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு சாப்பிட்டாலும் , ஓசி சாப்பாடு சாப்பிடறப்ப கிடைக்கற சுகம் இருக்கே... 


------------------------------------------



6. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: ம.தி.மு.க., உண்மையான ஜனநாயக கட்சி. ம.தி.மு.க.,வின் முடிவால், மக்கள் நல்லெண்ணத்தை கட்சி பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில், படித்தவர்களையும் பெருமளவில் கட்சியில் சேர்க்க வேண்டும்.


ம தி மு க எடுத்த முடிவால் மக்கள் நல்லெண்ணத்தை பெற்றுள்ளதுன்னு சொல்லுங்க.. மொட்டையா ம தி மு க முடிவால்னா அண்ணன் கலைஞர் உடனே ம தி மு க முடிந்து விட்டது என தம்பி வை கோவே ஒத்துக்கிட்டாருனு ஒரு அறிக்கை ரெடி பண்ணிடுவாரே... 

----------------------------------------
http://3.bp.blogspot.com/_AybDLz0ru4s/THna7Tk6sPI/AAAAAAAACLA/nK53g26Bg1U/s1600/Ileana-hot-pics-1.jpg
7. மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர், உப்பு சப்பு இல்லாமல் பேசி வருகிறார். என்ன பேசுகிறோம் என்பதையே புரியாமல் பேசுகிறார். அ.தி.மு.க., அணியில் இருந்து எழுப்பப்படும் எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். எந்த ஒரு கட்சியாவது, 119 தொகுதிகளில் போட்டியிட்டு, 118 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? தோற்பதற்காகவே தி.மு.க., கூட்டணி அமைந்துள்ளது.


வரலாறு தெரியாம பேசாதீங்க.. கள்ள ஓட்டு போடறதுல கழகம் தான் முதலிடம், பணத்தை அள்ளி இறைக்கறதுல கழகமே முன்னிலை...நேர்வழில போறவங்க தான் வெற்றியா? தோல்வியா?ன்னு கவலைப்படனும்.. கழகம் கண்ட வழி குறுக்கு வழி.. ஈசியா ஜெயிச்சுடுவாங்க பாருங்க....

------------------------------------

8. வி.சி., நிர்வாகிகள் கூட்டத்தில், தி.மு.க., அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேச்சு: கூட்டணியில் போட்டியிடும் ஒரு கட்சி, கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சிக்கு ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என்றால், அந்த கட்சி போட்டியிடும் தொகுதியில் மற்றொரு கட்சி வேலையை காட்டி விடுவாங்க. கூட்டணிக்கு ஒழுங்காக மனசாட்சியோடு வேலை பார்க்க வேண்டும்.

நீங்க காங்கிரஸை மிரட்டறீங்கன்னு தெரியுது... ஆனா இப்போ காங்கிரஸ்தான் கலைஞரை மிரட்டற சீசன்.. அதனால அமுக்கி வாசி அண்ணாத்தே... 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6kS5NFJGKhLSFVmUBSjt9PYpqgS7wIrguXxm_tJdFlgME7q0g3NfJwIvH7kh7mjkkgosY6TBhx3gql0XjSd-qYhrbAlt7Q3p2ZKvEAdya5vCssaqiW61LzzJZdPEqJ3j9LEVMVcYYmRk/s1600/Ileana_latest_pics_hot.jpg
-----------------------------------------

9. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு:தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறினாலே போதும், நாம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை நிதி நிறுவன அறிக்கை போல் உள்ளது. அம்மா என்றால் சும்மா. நாம் கிராமப்புற இளைஞர்கள் அனைவரையும் படிக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவோ ஆடு மேய்க்க சொல்கிறார். இதனால், அந்த கூட்டணியை முறியடிக்க வேண்டும்.


ஆம்.. அம்மா என்றால் சும்மா.. அய்யா என்றால் அய்யோ.... 


---------------------------------------
Hilarious political cartoon images

டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல இலியானா கழுத்துல நாய்க்கு சங்கிலி மாட்டி இருக்கற மாதிரி ஏதோ மாட்டி இருக்கே  அது அழகுக்கு மட்டும் இல்ல.. ஒரு பாதுகாப்புக்கும் தான்.. பாப்பா போட்டிருக்கற டாப்க்கு அதுதான் ஸ்டேண்ட்.. ஹி ஹி 

டிஸ்கி 2 - ரெண்டாவது ஸ்டில்லுல இலியானா போட்டிருக்கற பாசி மாலை ரொம்ப சின்னதா இருக்கேன்னு யாரும் கவலைப்படவேணாம்.. அதுக்குப்பதிலாத்தான் கோட் பட்டன் மாதிரி 4 பட்டன் பெரிசா டி சர்ட்ல இருக்கே... 

டிஸ்கி 3 - ஸ்டில் 3 - இலியானா அவரோட வாழ்க்கைலயே முதன் முதலா தலை சீவி சிங்காரித்த நாள்  இதுதானாம். ஞாபகார்த்தமா வெச்சுக்குங்க.. இனி மறுபடி எப்போ தலை சீவுவாரோ...

டிஸ்கி 4 - ரெண்டாவது ஸ்டில்லுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான இன்னொரு உண்மை ஜாக்கிங்க் போறது உடம்புக்கு நல்லது.. ஆனா ஜாக்கிங்க் போற ஃபிகரை வேடிக்கை பார்க்கறது மனசுக்கு கெட்டது ஹி ஹி ....

டிஸ்கி 5 -  கடைசி ஸ்டில்லுல இருக்கற இலியானா நிலைமையும் , தி மு க நிலைமையும் ஒண்ணுதான்.. இலியானா போட்டிருக்கற டிரஸ்ல கை வெச்சுக்கவும் மனசில்ல... கையே வேணாம்னு கை இல்லா ரவிக்கை போடவும் பயமா இருக்கு.. அதனால ரெண்டுங்கெட்டானா கை....


டிஸ்கி 6 - டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இலியானாவும் சரி,  தி முக கதாநாயகியும் சரி .. பார்க்க நல்லாருக்கும்..கவர்ச்சியா இருக்கும்..ஆனா........

Wednesday, March 23, 2011

சாந்தி அப்புறம் நித்யா அப்புறம் ரஞ்சிதா.....அப்புறம் ....?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9T3hAgxobOlcg9iF2GdZxxCIXK3lQbSix875fKvObG5IX7crhHpQl15LRqcAiioaTuWRqarf1YaIoLFzxICAE7YfqxrNMbJ-che-Wbogcea3DsHD0KEeq1kH54tNc9IFqghaW1GCub1z/s1600/Shanthi-Tamil-Movie-Hot-gallery-6.jpg 
 தமிழ்நாட்டின் இளைய உள்ளங்கள் ஏங்கித்தவித்த இந்த நூற்றாண்டின் இணை யற்ற படமான ( இணை அற்ற என்றால் ஜோடி இல்லாத என அர்த்தம் வருதே# அவ் அவ்) சாந்தி அப்புறம் நித்யா படம் 25 அன்று ரிலீஸ் ஆகிறது.எனக்கென்னவோ இந்தப்படத்தில் செமத்தியான சீன் இல்லைன்னாலும் படம் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது..( அப்போ எப்படியும் பார்த்திடுவே.. எதுக்கு இந்த விளக்கம்..?)

இந்தப்படத்துக்கு முதல்ல வெச்ச டைட்டில் சாந்தி அப்புறம் நித்யா அப்புறம் ரஞ்சிதா.....என இருந்திருக்கும்னு நான் நினைக்கறேன்.. அப்புறம் சில பிரச்சனைகளால மாத்தி இருப்பாங்க.. ஹி ஹி . ஏன்னா நித்யா(னந்தா) ரஞ்சிதா இல்லாம எங்கேயும் வெளீல போறதில்லையாம்...

அப்புறம் இந்த வாரம் இன்னொரு அதிசயமும் நடக்க இருக்கு. (நடக்காது.. ஓடும்)அதாவது இந்த 25ந்தேதி மட்டும் 4 அஜால் குஜால் படம் ரிலீஸ் ஆகுது.. ஹி ஹி . நாலு படத்தையும் பார்க்கறது கன்ஃபர்ம்.. ஆனா எந்தப்படத்தை முதல்ல பார்க்கறதுன்னு தரம் பிரிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1VwfQsk3HqGMyeItHBRrHnIpV6dVKensXGEuzrechvtf8TOvm6Ky6jkJsp2NER34-odLJ0tHRTQy00TuABRCoGALAHh_jsQTyN84NN0HnKzQStZekzbPPyozid12FxoEmRbwbMPIBIoBG/s1600/Shanthi11-568x1200.jpg
1. arasu1691 அரசியலுக்கு ஹீரோக்கள் வந்தாலே காமெடியா இருக்கும், இதுல காமெடியன்களே வந்தா..ம்ம் கிழிஞ்சுது லம்பாடி லுங்கி #வடிவேலு, விவேக்

----------------------------------------------
2.  bharathbharathi வைகோ- வை வரவேற்க தயாராக இருக்கிறோம்-பிஜேபி கூட்டணி: அய்யாகிட்ட போன தொண்டன், இங்க வந்தா தலைவன் # எப்படி வசதி #tnfisherman


--------------------------------------------
3. navi_n அடுத்தவன் குற்றத்தை வைத்து தன்னைப் பெருமை படுத்திக் கொள்ளும் நிலையிலேயே இரண்டு கட்சிகளும் உள்ளன. #தமிழகத்தின்_தலைஎழுத்து 

---------------------------------------------------

4.  mankuthirai RT @arivaali : தி.மு.க.,வை ஆதரித்து வடிவேலு தேர்தல் பிரசாரம் # கட்ட துரைக்கு கட்டஞ் சரி இல்ல #fb 

------------------------------------------------
5.. bharathbharathi வைகோ- வை வரவேற்க தயாராக இருக்கிறோம்-பிஜேபி கூட்டணி: இங்கே கதவுகளை மூடுவதேயில்லை. #tnfisherman 

---------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDCWXSiWfKafVPVU0BP-F-D9UMz6lO_SP0RlfMIuaWhL3PUljLATIjcNqcbnKBrAd5yicko-cFQDrndAnp3V_tGnIY7B6Uu9NQkVZ1Ot-lnfG6idlHVush3UfKEmeIBPt1QE-rPOLwwYDc/s1600/Archana-10.jpg
6.  iamkarki சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்/வைக்கிரதெல்லாம் பாக்கெட்டுல கை/ பாறாங்கல்லில் கூட எடுத்துடுவேன் நெய் நெய்/ ராசா ராசா. நான் ஸ்பெக்ட்ரம் ராசா 

-------------------------------------------
7.      UVMP ஏங்க யாரவது TR ரை பாத்தா தேர்தல் நடக்குதுன்னு வர சொல்லுங்க, அவர் செய்ய வேண்டிய காமெடி இன்னும் பாக்கி இருக்கு#மிஸ் யு TR

-------------------------------

8. penathal ஏஞ்சலினா ஜோலியின் பாஸ்வேர்ட் வேண்டுமா, இங்கே க்ளிக்கு என்கிறது மெயில். பாஸ்வேர்டை வைத்துக்கொண்டு என்ன செய்ய? தெரியவில்லையே!! 


----------------------------------------
9.   Ganesukumar செய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள். செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்.

-------------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3_YtzGOi6yi0BR8rIi4eTGYS8HVyMm1-bEanZ4MLYcAr5zT5mi9da5R8s9Ul7hR14sJ8G3HBMcdtBDfKlH9iR1tTJgJDqB02TZMygrrCMgVSPtZRw5HQu1r8tpHY3BsM05Sbx-y9OMFro/s1600/malavika_16.jpg

10. vedhalam விஜய் ஹாலிவுட்டுக்கு போக வேண்டும் - சத்யராஜ் # அங்க ஏற்கனவே ஒரு மிஸ்டர் பீன் இருக்காரு

--------------------------------------

11.  RajanLeaks ஜெ வீடு அருகே மரத்தில் ஏறி போராட்டம் #நடிகை வீட்டருகே மரத்திலேறி எட்டிப் பார்த்தனர்னு தினத்தந்தி காரன் நாளைக்கு நியூஸ் போடுவான்! 

---------------------------------------

12. Pattapatti இரவு 10 மணிக்கு மேல், சைகை காட்டிய நடிகர் சரத்குமார் மீது போலீசார் வழக்குபதிவு#ஹி..ஹி சித்திக்கு குட்நைட் சொல்லியிருப்பாருங்க போன்லே.. 

-------------------------------------------

13.   RajanLeaks தமிழர்களே தமிழர்களே என்னைக் கடலில் தூக்கிப் போட்டால் கடல் தண்ணீர் தான் வெளியே வந்து விழும் நான் தப்பித்துக் கொள்வேன் # அதிமுக ஆட்சி! 

----------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSs5SYcGt_YwMxnqwFz3LHb3EtxPmbd9YDs_uFJFF-uhdcXWyCqndfhMd733WFQ7bTb0LuqCaQTQFxmUX6kU5chyphenhyphenj087zvSz7NpxA76CRwHgXf0_leepVcJdX8zgn7hG_DuN2FM3lqNAHC/s1600/Poonam-Bajwa-stills-015.jpg
14. navi_n உற்றுப் பார்த்தவுடன் இழுத்து மூடுவீர்கள் என்றால், வீட்டிலிருந்து கிளம்பும்போதே அதைச் செய்யலாமே. 


-----------------------------------------------
15.         gpradeesh சரத்குமார்,விஜயகாந்த்,அருண்பாண்டியன்,மன்சூர்! என்னங்கடா இது? பல்க்கான பார்ட்டிகளா நிக்குது. சட்டசபைல சண்டைபடமா எடுக்கபோறாய்ங்க?

டிஸ்கி 1 - படம் 1,2 ஆகியவற்றில் இருப்பது  சாந்தி அப்புறம் நித்யா பட நாயகி.இந்தப்படத்துல அவுட்டோர் ஷூட்டிங்கே இல்லையாம்.. எல்லாம் ஒரே வீட்டுக்குள்ளயே எடுத்திருக்காங்க... அடடா.. நிறைய லொக்கேஷன்ஸ் மிஸ் ஆகுதேன்னு வருத்தப்படறவங்க......லத்திகா படம் பார்க்கவும்...


டிஸ்கி 2 -  படம் 3-ல் இடமிருந்து வலமாக 3 வது ஃபிகரை கவனிக்கவும்.. அவர் என்ன பண்றார்னே தெரில.. ஆனா எனக்கு இடமிருந்து வலமா முதல் ஃபிகர் தான் பிடிச்சிருக்கு.. 




டிஸ்கி 3 -  படம் 4-ல் இடம் பெற்றவர் பெயர் அர்ச்சனா.. ஒரே படத்தின் மூலம் 10 ஏக்கரா இடம் பெற்றவர்.. ஹி ஹி 


டிஸ்கி 4 - படம் 5-ல் இடம் பெற்ற மாளவிகாவுக்கு பின்னால நிக்கற ஃபிகர் யார் என தகவல் அளிப்பவர்க்கு தக்க அல்லது தகாத சன்மானம் அளிக்கப்படும்..


டிஸ்கி 5  - கடைசி  படத்தில் இடம் பெற்றுள்ள பூஜா டிரஸ் பண்ணீட்டு இருக்கும்போதே ஆ ஜா ( வந்துடு) என்றாராம் மும்பை டைரக்டர்,, அதான் போட்டது போட்டபடி வந்துட்டார்,. ஹி ஹி . அப்புறம் பூஜா டி எம் கே வாத்தான் இருக்கனும் என்று நினைப்பவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்கள்.

Sunday, March 13, 2011

ஆ...!! அனுஷ்காவா அப்படி. ? .ம்ஹூம் ..இருக்காது. நான் நம்ப மாட்டேன்....

http://ininb.com/wp-content/uploads/2010/05/anushka4.jpg 

1. தமிழக முதல்வர் கருணாநிதி: விவசாயிகள் வாங்கிய, 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பயிர்க் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துபவர்களின் வட்டியை முற்றிலும் ரத்து செய்யும் திட்டத்தை, இந்தியாவிலேயே முதன் முறையாக அறிவித்தோம்.

என்ன தலைவரே... இதெல்லாம் சாதாரண சாதனை.. உலகையே ஆச்சரியப்படுத்தும் அளவு ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் செய்தும், அது எல்லாருக்கும் பப்ளிக்கா தெரிஞ்சும் யாராலும் ஒண்ணும் செய்ய முடியாத அளவு கண்ட்ரோல் பண்ணி வெச்ச சாதனை இருக்கே.. அதை விட்டுட்டு  ஏதேதோ சொல்றீங்க..

---------------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வணிக முத்திரை குறியீடு தென்மண்டல பெண் அதிகாரியை, சி.பி.ஐ., ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

மனசுக்குள்ள புரட்சித்தலைவின்னு நினைப்பு போல... ஒரு உறைக்குள்ள ஒரு வாள் தான் இருக்க முடியும்.. ஒரு நாட்டுக்கு ஒரு புரட்சித்தலைவிதான் இருக்க முடியும்..  ( பாவம் ஒண்ணை வெச்சே தமிழ்நாடு தாங்க முடியாம இருக்கு... இதுல இண்ணொண்ணா?)
----------------------------------------------


3. இந்திய கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: மாணவ, மாணவியர் தேர்வுக்குத் தயாராகி, தேர்வை எழுதுகின்ற மாதமாக இருப்பதால், ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் பெரும் இடையூறாக அமையும்.

என்ன விபரம் இல்லாம பேசறீங்க.. அவங்க ஃபெயில் ஆனா அக்டோபர்ல பார்த்துக்கலாம்.. இவங்களுக்கு அப்படியா? 5 வருஷத்துக்கு ஒரு தடவை தான் வரும்..விட்டா பிடிக்க முடியாது...

-------------------------------------------
4. பிரதமர் மன்மோகன் சிங்: நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதத்திலும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார். கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர புதிதாக, "பொது மன்னிப்பு திட்டங்கள்' கொண்டு வந்தால் பயன் தராது.

ஆமா.. கைல வெண்ணெயை வெச்சுக்கிட்டே நெய்க்கு அலைந்த கதையா ஸ்விஸ் அக்கவுண்ட் டீட்டெயிலை வெச்சு மிரட்டி வரி கட்ட வைக்காம விட்டூட்டீங்க..(ஒரு வேளை அதுலயும் பணம் கை மாறி இருக்குமோ..?)

------------------------------------------

5. கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்: "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தொலைத் தொடர்பு துறையிடம் அளித்திருந்த ஆவணத்தைக் கைப்பற்ற முடியவில்லை. வழக்கு விசாரணைக்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் இந்த ஆவணம், காணாமல் போய் உள்ளது.

அதெப்பிடிங்க காணாம போகும்?..அதென்ன சினிமா கதையா? காணாம போனாக்கூட யாரும் கண்டுக்கமாட்டாங்க.. 5 டூயட், 4 ஃபைட் வெச்சு சமாளீச்சுக்கலாம்னு சொல்ல...


-----------------------------------------------------

6. தொலைத்தொடர்புத் துறைச் செயலர் சந்திரசேகர்: தொலைத்தொடர்பு சேவைகளை துவக்காத புதிய நிறுவனங்களிடம் இருந்து, இதுவரை, 300 கோடி ரூபாய்க்கு மேல், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவுக்குள் சேவைகளை துவக்காத, 119 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இந்த அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


வசூல் பண்ணுனது எல்லாம் அரசாங்க கஜானாவுக்குப்போச்சா..?இல்ல ராசா மாதிரி ஆட்டையைப்போட்டுட்டீங்களா..?

-------------------------------------

7. தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்டம்
தமது ரசிகர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைக்கும் தென் இந்தியாவின் கவர்ச்சி புயல் நமீதாவுக்கு, "தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி" என்று ஒரு புதுபட்டத்தை வழங்கியுள்ளனர் ஜேப்பியார் கல்லூரி மாணவர்கள்.

ச்சீ.. நாட்டி.. கம்மனாட்டீ ( நமீதா ரசிகர்கள் யாரும் பொங்கி எழாதீங்க.. நான் செல்லமா திட்டுனது ஜேப்பியார் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்சை.. தக்காளிங்க.. படிக்கற வேலையைத்தவிர எல்லா வேலையும் செய்யுதுங்க...)

--------------------------------------------------

ranveer singh-anushka sharma kisses lip to lip in public place

8. பாலிவுட்டின் இளம் நாயகன்-நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரன்வீர் சிங்கும்-அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் தாங்கள் காதலர்கள் இ‌ல்லை என்று கூறிவரும் இருவரும் சில தினங்களுக்கு முன்னர் பொது இடத்தில் லிப் டு லிப் கிஸ் கொடுத்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினர்.

குழப்பாதீங்க.. பொது இடத்துல குடுத்தாரா..? உதட்டுல குடுத்தாரா..? (இந்த அனுஷ்கா யாருக்கு எதை குடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்ல.. தங்கத்தலைவி தமிழ்நாட்டின் விடி வெள்ளி அனுஷ்கா தான் எங்க டார்கெட்)

-------------------------------------------------



mandira bedi poses topless
9. பிரபல பேஷன் பத்திரிகை ஒன்றுக்கு டாப்லெஸ் போஸ் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகை மந்திரா பேடி.

இது போன்ற கலாச்சாரத்துகு புறம்பா ஒரு நடிகை நடந்துக்கிட்டது எனக்கு பேரதிர்ச்சியை அளிக்குது.. அந்த ஸ்டில்லை என் மெயிலுக்கு அனுப்புனா அதை பப்ளிஷ் பண்ணி ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவேன்.. ( ஹி ஹி ஒரு பய தூங்க மாட்டான்)

டிஸ்கி - 1 : அனுஷ்காவை இவ்வளவு கவுரவமா எந்த இணைய தளத்துலயும் இதுவரை காட்டுனதில்லை.. எனவே கண்ணியமான இணைய தளம் என்ற விருதை அட்ரா சக்க தனக்குத்தானே அளித்துகொள்கிறது..இது ரொம்ப கேவலமா இருக்கே என நொந்து கொள்பவர்கள் டாக்டர் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தை நான் ஃபாலோ பண்றேன் என்பதை உணரவும்.. ஹி ஹி

டிஸ்கி -2 : அனுஷ்காவின் ஜாக்கெட் கை ஏன் இவ்வளவு குட்டை என சந்தேகம் கொள்பவர்கள் கட்டையா இருக்கறவங்க குட்டையா கை வெச்ச ஜாக்கெட் போடுவாங்க என்ற அரிய உண்மையை ஆடை அலங்கார வடிவமைப்பாளர் மும்பை  அங்கிஸ்கான் (செங்கிஸ்கான் தம்பி??!!) ஸ்டார் டஸ்ட்ல தந்த பேட்டியை பார்க்கவும்..ஹிந்தி தெரியாதவங்க,ஸ்டார் டஸ்ட் இதழ் கிடைக்காதவங்க போனா போகுதுன்னு அனுஷ்காவை இன்னொரு முறை பார்க்கவும்.. ஹி ஹி

டிஸ்கி 3 - தேவையே இல்லாம எதுக்கு டிஸ்கி 2 போட்டீங்கன்னு கேட்கறவங்களுக்கு  இதன் மூலமா நான் 2 மேட்டர் உலகத்துக்கு அறிவிச்சிருக்கேன்.. 1. எனக்கு ஹிந்தி தெரியும்.. 2. நான் ரெகுலரா ஸ்டார் டஸ்ட் இதழ் படிச்சுட்டு வர்றேன் # தம்பட்டத்தமிழேண்டா

Friday, March 11, 2011

ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம்.. ஒரு தரம்.....

http://athikalai.files.wordpress.com/2010/12/kalaiger-paradu.jpg 
1. பா.ம.க., தலைவர் மணி: காங்கிரசுக்காக, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒன்று இரண்டை குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற பேச்சே எழவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 31 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம்.

அதை எப்படி நீங்க சொல முடியும்?அண்ணன் ராம்தாஸ் கூட சொல்ல முடியாது.. அவசரப்படாதீங்க.. கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...

----------------------------------------------
2. தமிழக முதல்வர் கருணாநிதி: காங்கிரஸ், 60 இடங்கள் போதாதென்று, 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

போங்க தலைவரே... உடனே ராஜினாமா பண்ணி கொள்கை வீரர்கள்னு புரூஃப் பண்ணாம இப்படி பெரியம்மா கால்ல விழுந்ததுக்கு போயஸ் அம்மா கிட்டே தோத்தே இருக்கலாம்.

-----------------------------------------------

3. பத்திரிகைச் செய்தி: பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து, 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள, புனே வர்த்தகர் ஹசன் அலியின் வீட்டில், அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் மும்பையிலுள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு ஹசன் அலியை அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

இப்படியே விசாரனை பண்ணீட்டே இருங்க.. ஆனா தண்டனை மட்டும் குடுத்துடாதீங்க... எனக்கென்னவோ பேரம் தான் நடக்குதுன்னு நினைக்கறேன்.

---------------------------------------------
 http://deco-00.slide.com/r/1/3/dl/pKkYxdFD4z81a9OrA6EbCElNZXftEwuJ/watermark
4. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி:இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் உட்காரப் போவதில்லை; அதனால், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆசை தி.மு.க.,விற்குத்தான் உள்ளது. கூட்டணிக்கு காங்கிரஸ் நிபந்தனை விதித்து மிரட்டல் விடுத்தது என சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அண்ணே ஒரு சின்ன கரெக்சன் ,இந்த தேர்தல்ல மட்டும் இல்ல, எந்த தேர்தல்லயும் காங்கிரஸ் தமிழ்நாட்ல ஆட்சி அமைக்க முடியாது.. பல்லக்கு தூக்குவதே உங்க தலை எழுத்து..

------------------------------------------



5. பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என, ஆறு மாதங்களுக்கு முன்பே வலியுறுத்தினேன். தற்போது, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என, பல கட்சியினரும் நினைக்கின்றனர். இது சரியல்ல; நாட்டு நலனுக்கும் நல்லது அல்ல.

நாட்டு நலனுக்கு நல்லதில்லைன்னு பார்த்தா திராவிடக்கட்சிகள் தலை முழுகப்படனும், கவர்னர் ஆட்சி வரனும்.. அதெல்லாம் முடியுமா? நடக்கறதை பேசுங்க..

------------------------------------


6. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பொருளாதார பிரச்னைகளில் இருந்து விடுபட்டு பெண்கள் சொந்த காலில் நின்றால், சமுதாயத்தை பிடித்துள்ள வரதட்சணை நோய், பெண் சிசு கொலை போன்ற கொடுமைகளில் இருந்து மகளிருக்கு விடிவு பிறக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு கட்டாய கல்வியும், கட்டாய வேலை வாய்ப்பும் கிடைக்க அனைவரும் சபதம் ஏற்று செயல்பட வேண்டும்.

இது மகளிர் தின அறிக்கை மாதிரி தெரியலயே.. அய்யா கூட இருந்துக்கிட்டே அம்மா கூட கூட்டணி போட அச்சாரம் மாதிரி தெரியுது..?

------------------------------------------------------
http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg
7.அ.தி.மு.க., மகளிரணி செயலர் கோகுல இந்திரா பேச்சு: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து, ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு கேட்க வருவர். அப்போது அவர்களிடம், "இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரும். அதனால், 99 ஆயிரம் ரூபாய் எங்கள் பணம்; அதை கொடுக்க வேண்டும்' என, கேட்க வேண்டும். வரும் தேர்தலில் ஜெயலலிதாவை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும்.

அம்மா வந்ததும்  அதை அபேஸ் பண்ணி கொட நாட்ல புதைச்சு வெச்சுக்குவார்...நாங்க வேடிக்கை பார்க்கனும்..?

------------------------------------------------

8. பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் பேட்டி: பல முனை மாற்று வரியில் இருந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படாது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, 100 டாலருக்கு மேல் இருந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, பெட்ரோலிய பொருட்களின்விலை உயர்வு தவிர்க்க முடியாதது. உணவுப் பொருட்களின் விலை இம்மாதத்தில் குறையும்.

எங்களுக்குக்கூட காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருவது கவலை அளிப்பதாகத்தான் உள்ளது..
---------------------------------------------------------

9. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஆண்களுக்கு பெண்கள் அடிமை இல்லை. பெண்களுக்கும் ஆண்கள் அடிமை இல்லை. இருவரும் நண்பர்கள் போல் இருக்க வேண்டும். ஆண் - பெண் உறவு, நட்பின் அடிப்படையில் அமையும் போது, வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சவால்களை அவர்கள் ஒரு சேர சமாளிக்கின்றனர். அரசியலிலும், பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமூக ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும்.

எப்படியோ  அம்மாவுக்கு அடிமை ஆகீட்டீங்க..25 சீட் தக்கி முக்கி ஜெயிச்சுட்டா அம்மா மதிப்பாங்க.. இல்லைன்னா போட்டு மிதிப்பாங்க...

--------------------------------------

டிஸ்கி -1 : நடிகை ஃபோட்டோ இல்லாததால் எங்கே சி பி திருந்தீட்டானோ என யாரும் அதிர்ச்சி அடைய வேணாம்.கோதுமை அல்வாவை டெயிலி சாப்பிட்டுட்டே இருந்தா திகட்டும்.. நாம என்ன பண்ணுவோம்.. கொஞ்சம் காரக்கடலை சாப்பிட்டு நாக்குக்கு காரத்தன்மை கொடுத்து அப்புறம் மறு படி ஸ்வீட் சாப்பிடுவோம்.. அது மாதிரி தான்..

டிஸ்கி 2  - சி பி நடிகைகளை கோதுமை அல்வா என கூறிவிட்டான் என போராட்டம் நடத்த நினைப்பவர்களுக்கு,  ... எதுக்கு சிரமப்படறீங்க..இனிமே நான் ஏதாவது தப்பு பண்ணுனா அப்பவே மன்னிப்பு கேட்டுடறதா முடிவு பண்ணிட்டேன்.. யாருக்கும் சிரமம் வைக்ககூடாது.. சோ எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. ஹி ஹி(  நாகேஷ் என்னை மன்னிச்சிடுங்க ஹி ஹி )

Wednesday, March 09, 2011

புரட்சித்தலைவியின் அரசியல் வாழ்வை புரட்டிப்போட்ட கடிதம்,அதி மு க அதிர்ச்சி

http://www.envazhi.com/wp-content/uploads/2010/10/jaya-ajith-vijay.jpeg 
சில நாட்களுக்கு முன் தமிழருவி மணியன் அவர்கள் விகடனில் கலைஞருக்கு ஒரு கடிதம் போட்டு கலக்கினார். இப்போது அவரது அடுத்த தாக்குதல் புரட்சித்தலைவிக்கு...

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்! - தமிழருவி மணியன்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.


உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்!

தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.

 http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/jayalalitha.jpg
எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!


உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.


எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.
 http://new.vikatan.com/news/images/addd.jpg

காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள். 

1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள். நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.


யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை. வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். 

மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.


அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. 
 http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg?w=480&h=654
தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.


முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். 

நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது.

சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’ என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.

 http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpg
ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.


ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள்.

உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக 'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.

 http://img.dinamalar.com/data/uploads/WR_216592.jpeg
சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். 

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்? 

வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!


ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன? 

உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIyq4cteTn4NIN9nUInRVN-CD7_7D3sbiLBlOr08VVxJzRUtX1uKYnJoFiJ2HfPsWnQEdn7GkPFYzfLEIlw5VqVp63MwJL-ihuGu_d5cRs1PfGJ7McdEtAJqS0OXSeiiPPHDnXHzaoHcj6/s1600/Jayalilatha+cartoon.jpg

உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.
உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம்.

ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு.

'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?


அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்;

அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!


திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHX-8Y3fQjW5tABhp-1DdE5HgEXlG4_D7B0zz_MulsTOAwU1ADa5kduYK0MPU_JVTx0Q4fQGK2rE8PQjCcUuozMgioJvDARffzwnVYCIuZlqDXAHRREXcmXg37eVkh-NpRGX6X8OU_kEW3/s1600/tamilmakkalkural_blogspot_meenavar_prachani.jpg
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல் நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை. 'தத்துவஞானிகள் ஆளவேண்டும்.

அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர் வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள் இப்போதேனும் உணர்ந்தீர்களா?


போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம். 

உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!


சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டி நடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். 

அதற்கான சூழல் இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவை சந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். 

டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்க முடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும்.

சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரை ஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.


உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசுபிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!
இப்படிக்கு,
நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்,
தமிழருவி மணியன்

பள்ளியறையில் இருக்கும்போது பள்ளி பாளையம் சிக்கனா?

http://img1.dinamalar.com/cini/ActressWall/164Kangana-Ranaut_2.jpg
1. தலைவர் ஜெயில்ல இருந்தப்பக்கூட சிந்தனைலயே இருக்காரே...

உள்ளே இருந்துக்கிட்டே ஊழல் பண்ண முடியுமா?ன்னு திங்க் பண்றாரு...

-----------------------------

2. டாக்டர்.. நான் இந்த க்ளினிக்கிற்கு ரெகுலர் பேஷண்ட்...

அதுக்கென்ன?

நான் எப்போ வந்து அட்மிட் ஆனாலும் நர்ஸ் நந்தினி தான் என்னை அட்டெண்ட் பண்றாங்க...வேற ஃபிகர் மாத்துங்க.. போர் அடிச்சுடுச்சு...

------------------------------

3. தலைவர் கு . க விளம்பர ஏஜெண்ட் ஆகிட்டார்னு எப்படி சொல்றே..?

2 ஜி க்கு மேல் இப்போது வேண்டாம்.. 4 ஜிக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு அறிக்கை விட்டிருக்காரே..?

--------------------------------------------

4. தலைவரோட பையன் கணக்குல கில்லாடியா இருக்கானே..?

எப்படி சொல்றே..?

ஒண்ணே முக்கால் கோடிக்கு எத்தனை சைபர்?னு கேட்டா டக்னு பதில் சொல்றானே....

---------------------------------------

5. அவன் டாக்டரோட பையன்னு எப்படி சொல்றே..?

மத்த பசங்க எல்லாம் டான் டான் -னு பதில் சொல்றப்ப இவன் மட்டும் டானிக் டானிக்னு பதில் சொல்றானே..?

------------------------------------
http://www.123tamilcinema.com/images/2010/07/kangana231246001480-e1279320202294-680x546.jpg
6. உன் காதலர் கமல் ரசிகர் போலன்னு எப்படி சொல்றே..?

என் கிட்டே பேசறப்ப,  “பூங்கொடி... உன் கிட்டே கற்பு இருக்கனும்னு நான் நினைக்கலை,ஆனா இருந்தா நல்லது”ன்னு சொல்றாரே...?  ( தசாவதாரம் - கடவுள் இல்லைன்னு சொல்லலை,இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்)

-------------------------------

7.  இந்தப்படம் ஓட்டுப்போடற ஒவ்வொரு தமிழனையும் கவரும்..

அப்போ மேல்தட்டு மக்கள்னு சொல்லப்படற ஏ செண்ட்டர்ல ஓடாதா?

-------------------------------

8.  உங்க படத்துக்கு வெங்காயம்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க..?

அப்பவாவது நல்ல ரேட்டுக்கு போகுதா?ன்னு பார்க்கத்தான்..

-----------------------------

9.  மன்னா! சாப்பிடும்போது கூட மேட்சுக்கு மேட்சா?புரியலையே...?


பள்ளிபாளையம் சிக்கன் சாப்பிடறப்ப பள்ளியறை போயிடுவேன்...

---------------------------------

10..  உங்க வீட்ல பேய் குடி இருக்குன்னு தெரிஞ்சும் விரட்டாம விட்டு வெச்சு இருக்கீங்களே.. ஏன்?

மாசாமாசம் வாடகை கொடுத்து  பேயிங்க் கெஸ்ட்டாத்தான் இருக்கு.. (PAYING GUEST)

----------------------------------------

டிஸ்கி 1 - கங்கணா ரன்வத்க்கு ஷாம்பு செலவே டெயிலி ரூ 2000 ஆகும்னு நினைக்கறேன்.கூந்தல் ரொம்ப அடர்த்தி...டாப்பா இருக்கு... ஆனா டோப்பாவா..? தெரில...அப்புறம் அவங்க டிரஸ்ஸுக்கு மேட்சா ரோஸ் கலர் லிப்ஸ்டிக் வைச்சதை ரசிச்சேன்.. ஆனா அவங்க பச்சைக்கலர் டிரஸ் போட்டா என்ன ஆகும்..?

டிஸ்கி 2 - டெயிலர்ட்ட ஜாக்கெட் தைக்க குடுக்கறப்ப யு கழுத்துன்னு சொல்லி குடுத்திருக்காரு... அவன் கேட்டிருக்கான்,, கேப்பிட்டல் யூ வா? ஸ்மால் யு வா?..பாப்பாவுக்கு புரியல.. எனி ஒன் அப்படின்னு சொல்ல இப்போ டெயிலருக்கு புரியல..எதுக்கு வம்புன்னு கேப்பிடல்.. ஸ்மால் எல்லாம் கலந்து ஒரு பிரம்மாண்டமான யு வெட்டிட்டு பின்னிட்டாரு.. ஹி ஹி

டிஸ்கி 3 - நீ தான் சைவம் ஆச்சே.. ( எல்லாருக்கும் சொல்லியாச்சு நான் சைவம் சைவம்)எதுக்கு அசைவம் பற்றி டைட்டில் வைக்கறே?ன்னு...யாராவது கேட்டா...(கண்டிப்பா கேப்பாங்க..)எத்தனையோ அரசியல்வாதிகள் மகா ஊழல் பண்ணீட்டே நல்லாட்சி நடத்தறோம்னு அறிக்கை விடறதில்லையா? அதை நம்பி நாம் ஓட்டு போடறதில்லையா?...

Monday, March 07, 2011

”மப்” பொழுதும் உன் கற்பனைகள்

http://spicy.southdreamz.com/spicydb/hot-actress-anjali-pictures/actress-anjali-saree-stills-05.jpg

1. ஹீரோ ஒரு சரக்கு பார்ட்டி..ஹீரோயின் ஞாபகமாவே எப்பவும் கவிதை எழுதிட்டே இருக்காரு..

ஓ,என்ன டைட்டில்?

மப்பொழுதும் உன் கற்பனைகள் (முப்பொழுதும் உன் கற்பனைகள் பட டைரக்டர் என்னை மன்னிப்பாராக)


---------------------------------------------------------

2.தலைவரு கமல் ரசிகர்னு எப்படி சொல்றே,,?

அவர் எடுக்கப்போற சொந்தப்படத்துக்கு மகளிர் அணித்தலைவி இருக்கின்றாள்னு டைட்டில் வெச்சிருக்காரே...

--------------------------

3. மேடம்.. முகம் பூரா ஜிகினா ஒட்டிக்கிட்டு வர்றீங்களே...ஏன்?

ஷைனிங்க் ஸ்டார்னு பெயர் எடுக்கத்தான்.

-------------------------------------

4 ஆடியன்ஸ் எல்லாரும் ஓடி வந்து அந்த டி வி காம்ப்பியரர் லேடி பின்னால ஒட்டிக்கிட்டு நிக்கறாங்களே..?  ஏன்?

வெல்கம் பேக்  ட்டூ  (WELCOME BACK   TO ) னு சொன்னாங்காட்டி அவர் பேக் பின்னால போய் நின்னுக்கிட்டாங்களாம்.

---------------------------

5.மிஸ்,,நான் குடுத்த லவ் லெட்டரை  ஏன் கிழிச்சுப்போட்டுட்டீங்க..?

உங்க முகத்தைக்கூட சகிச்சுக்கலாம் போல.. உங்க கவிதையை சகிக்க முடியல....

---------------------------------------------
http://www.bevapphasanam.com/wp-content/uploads/2011/02/Anjali-Tamil-Actress-Cute-In-Salwar-Kameez-bevapphasanam.com_.jpg
6. உங்க மனைவியை பாடவா டூயட் பாடலை நிகழ்ச்சில தான் முதன் முதலா சந்திச்சீங்களாமே...?

ஆமா... இப்போ வீட்ல தினமும் அவ பாட்டுத்தான்.. ஹி ஹி .

-----------------------------------

7. உங்க மனைவி கோவிச்சுக்கிட்டு அவங்கம்மா வீட்டுக்கு போயிடாங்களாமே..? ஏன்?

எங்கம்மா வீட்டுக்கு போக முடியாதே.. ஏன்னா,அவங்க என் கூடத் தானே இருக்காங்க..
-----------------------------------------------

8. நான் ஜாலியா,சந்தோஷமா இருக்கரது உங்க கண்ணை உறுத்துதா..?

அப்படியெல்லாம் இல்லையே.. ஏன் கேட்கறே..?

அம்மா வீட்டுக்கு கோவிச்சுக்கிட்டு போன மனைவியை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வான்னு சொன்னீங்களே...

-----------------------------------------

9. ஹீரோயின் கொஞ்சம் அழகு கம்மி தான்.. அதுக்காக வில்லன் அவரை ரேப் பண்ணற மாதிரி சீன்ல கூட  நடிக்க மாட்டேன்னு சொல்றது ஓவர்....



--------------------------------------------------------

10. டாக்டர்.. எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு.

வெரிகுட்... அப்போ காலைல எழுந்ததும் நீங்க உங்க வேலையைபார்க்கலாம்,வாக்கிங்க் போற வேலை இல்லை..

--------------------------------------

டிஸ்கி (v) - 1. நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்கிட்ட இயக்குநர்கள் யாராவது ஷூட்டிங்க் டைம்ல எடுத்த ஃபோட்டோ இருந்தா என் மெயிலுக்கு அனுப்புங்க.

டிஸ்கி 2 - முப்பொழுதும் உன் கற்பனைகள் டைட்டிலுக்கும் அஞ்சலி படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.லேட்டஸ்ட் கனவுக்கன்னி அஞ்சலியா?ன்னு கேட்டு கமெண்ட் போட்டுடாதீங்க..

டிஸ்கி 3. அஞ்சலிக்கு ஒரு பர்சனல் அட்வைஸ்.. நீங்க மேட்ச்சுக்கு மேட்ச் பொட்டு வைக்கிற பழக்கம் ஏற்படுத்திக்குங்க. நான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல...( ரொம்ப முக்கியம்..?)