Showing posts with label அங்கதம். Show all posts
Showing posts with label அங்கதம். Show all posts

Saturday, March 05, 2011

கூட்டு களவாணிகள் ரெண்டு பட்டதால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்

http://www.thenaali.com/cpanel/Editor/images/articles/Specials/athiradi%20saravedi/thamizharuvi-manian.jpg
டாக்டர் கலைஞர் சிறந்த ராஜ தந்திரி தான். ஆனால் இலங்கைத்தமிழர்களின் சாபமும்,மீனவர்களின் கண்ணீரும்  அவரை துரத்துகிறது.இப்போ இல்லாட்டி எப்போ என காங்கிரஸ் நினைக்கிறது.பாலைவன ஒட்டகத்துக்கு கூடாரத்தை கொடுத்த கதை ஆகி விடக்கூடாது என தி மு க நினைக்கிறது.

இந்த சமயத்தில் தமிழருவி மணியன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெளியிடுவது பொறுத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.இது விகடனில் வந்தது.



கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்

karunaanithi தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.


காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!


ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது – உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!


ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய ‘இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? 

‘மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் ‘பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.


‘தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?


‘சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்?

சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் ‘நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் ‘பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!


அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்க​வில்லையே; ‘என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை.

‘அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?


‘சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே… உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்… ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?


‘முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை’ என்றும் ‘காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி – 1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே… அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).


நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். ‘சமத்துவம் இன்மையே… உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர்.


‘சுயநலமே… உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! ‘பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே?

‘தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் ‘சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!


கலைஞரே… கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். 

அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்​மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள்.

இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!


‘எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் – தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! 

அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது. ‘வாண்டையார், வடபாதி மங்​கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்;

சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், ‘தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் ‘நானும் ஒரு கம்யூ​னிஸ்ட்’ என்று ‘நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேர​புரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! 

நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்​களுக்கே இடமிருக்காது கலைஞரே!


ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய – திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். 

இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? ‘இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!


ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா?

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? ‘உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா… அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?


ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?

நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் ‘திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!


இப்படிக்கு,
ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,
தமிழருவி மணியன்

Friday, March 04, 2011

பதிவை படிச்சிட்டு சிரிக்காம இருந்தா ரூ 10,000 பரிசு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinv5qTd8sZl9I1dbWTJWRjk0HO7rDlWYmDa99qj7gnk-FZnt_z8wJXeNX2QSMoWDA5nyz1K_t-XxXLQF-Jmwbnn2IMZAsA0JvyzjsI2sbjfAtnzJwOgTqVk_wLoAYC-enNHhNJJ_JkGO6u/s1600/mynaa-heroine-amala-paul-hot+%25282%2529.jpg 
1. ஆஸ்திரேலியா கண்டத்துல தனது சுற்றுப்பயணத்தை முடிச்சுட்டு தலைவர் இன்று தாய் நாடு திரும்பறாராம்.

அப்போ தமிழ்நாட்டுக்கு கண்டம் ஸ்டார்ட் ஆகிடுச்சு...அப்படின்னு சொல்லு.

------------------------------------------------

2. அத்தான்.. சாம்பார்ல ஏகப்பட்ட ஸ்பூன் இருக்கே?ஏன்?

சமையல் குறிப்புல  உப்பு ஒரு ஸ்பூன், கடலை எண்ணய் 3 ஸ்பூன்,மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போடவும்  அப்படின்னு போட்டிருந்தது.. மொத்தம் 5 ஸ்பூன் தானே இருக்கும்..நீ எப்படி ஏகப்பட்ட ஸ்பூன் என சொல்லலாம்..?

(ஆஹா .. இவன் தாண்டா உண்மையான புருஷன்)

-------------------------------------------------------

3.  அம்மா... தாயே...

யாரய்யா.. அது காலங்காத்தால பிச்சை எடுக்க வந்திருக்கறது... அடடே.. நீங்களா? வாங்க வாங்க .. உங்களுக்கு கண்டிப்பா 2 சீட் உண்டு.

---------------------------------------

4. அபிலாஷா நடிச்ச முதல் பாவம்  சீன் படம் ரிலீஸ் ஆகி பல வருஷங்கள் ஆச்சு.

ஆமா.. அதுக்கென்ன இப்போ..?

அவரோட ரெண்டாவது பாவம், மூணாவது பாவம் எல்லாம் எப்போ ரிலீஸ் ஆகும்?

( பய புள்ளே.. ராம்சாமிட்ட கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என் கிட்டே கேட்டுட்டு..)

------------------------------------

5. பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் பண்றப்ப மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக பாலை ரோட்டில் கொட்டியது தவறு-ன்னு தலைவர் சொல்றாரே..?

சரி... அதுக்காக அமலா பால்-ஐ ரோட்ல தள்ளி விட்டு  போராட்டம் பண்ண முடியுமா?

(#அப்பாடா .. நடிகை ஸ்டில் போட்டுடலாம். ஹி ஹி )

------------------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpOS-NEUi9ilZjXSC5aNkMXEtfUTbLpl_Z5VDo_4cSeMoUpbjYOM9yPCfz8VFn0sBzYfRDPH2IilbCtwC7hOUVA8o31t44eg5a-uGhnwS2EeskUYUOZIQDWnFep75rc0ysMI6K666A1xY/s640/actress_amala_paul+_hot_photos_gallery_01.jpg
6. தலைவருக்கு தேர்தல் பயம் வந்துடுச்சுன்னு எப்படி சொல்றே..?

நெஞ்சுக்கு பீதின்னு நாவல் எழுதறாராம் . ( நெஞ்சுக்கு நீதி பார்ட் 8 )

-----------------------------------------------------------

7. தலைவரே.. லேடீஸ் மேட்டர்ல நீங்க வீக்னு எல்லாரும் பேசிக்கறாங்களே..?

யாருய்யா.. அப்படி ஒரு புரளியை கிளப்புனது..? நான் அந்த மேட்டர்ல ஸ்ட்ராங்க் தான். டவுட்னா 17 வருஷமா நான் வெச்சுட்டு இருக்கற மகளிர் அணித்தலைவி  மல்லிகாவைக்கேட்டுப்பாரு...


(பெரிய அபூர்வமான குறிஞ்சி மலரு....)

---------------------------------------

8.உன் மனைவியை நீ அடிச்சதே இல்லையா?

ஆமா.. அவ ஒரு அடி தாங்கா  பத்தினிங்க...( படி தாண்டா பத்தினிக்கு தங்கை)

-----------------------------------------------------

9. உங்க சம்சாரம் உங்களை பளார்னு கன்னத்துல அறையறா..பார்த்துட்டுசும்மா இருக்கீங்களே..?

சும்மா இல்லாம..? எதுக்கு அடிச்சே?ன்னு எதிர்த்துப்பேசி இன்னொரு கன்னத்துலயும் அடி வாங்க சொல்றீங்களா?

----------------------------------

10.டாக்டர் பட்டம் வழங்குனதுக்கான நன்றி உரை விழாவுல தலைவர் சொதப்பீட்டாராமே..?

ஆமா.. எனக்கு டாக்டர் பட்டம் வழங்கிய யுனிவர்சிட்டிக்கு நன்றி.. கூடவே என் கூட உதவிக்கு நர்ஸ் அனுப்பி வைத்த க்ளினிக்கிற்கு நன்றி அப்படின்னு பேசி மானத்தை வாங்கிட்டாரே..

-------------------------------------

டிஸ்கி 1 - .அமலாபால் ,அபிலாஷா இருவர் பற்றிய ஜோக்ஸ்-ம் போட்டு அபிலாஷா ஸ்டில் மட்டும் ஏன் போடலை?ன்னு கண்டனம் தெரிவிப்பவர்களுக்கு நான் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்.. கிடைக்கலை.. அபிலாஷா ஸ்டில்லை வெச்சிருக்கறவங்க( @அண்டர்லைன் ஸ்டில்லை) என் மெயில்க்கு அனுப்பினா உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஸ்கி 2 - இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. உங்களுக்கே தெரியும்.. லேடீஸ்க்கு கோயில்.. என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கு தியேட்டர்... மீண்டும் மதியம் 3 மணிக்கு சந்திப்போம்...சிங்கம்புலி,பவானி,தப்பு (அஜால் குஜால் படம்),ஒரு இங்கிலீஷ் (INFESATION)படம் மொத்தம் 4 படம் ரிலீஸ் ஆகுது

டிஸ்கி 3  - டைட்டிலில் ஏதோ பரிசு போட்டிருக்கே.. நான் வேணும்னே சிரிக்கலைன்னு பிரதாப் போத்தன் மாதிரி இன்னும் முகத்தை உம்முன்னு வெச்சிருக்கறவங்களுக்கு...ஊழல் அற்ற ஆட்சி தருவோம்னு ஒவ்வொரு முறையும் வாக்கு குடுத்துட்டு இன்னும் ஊழலைத்தவிர வேற எதுவும் பண்ணாம இருக்காங்களே... அவங்க கிட்டே கேட்டுட்டு அப்புறமா என் கிட்டே வாங்க.. ( ஈரோடு பஸ் ஏறி ரொம்ப கிட்டே வந்து பய முறுத்தக்கூடாது)

Tuesday, March 01, 2011

= ஹோம்லி நடிகை அமலாபாலா? தாப்ஸியா? பட்டிமன்றம்


1. தலைவருக்கு  சிறந்த  நகைச்சுவைப்  பேச்சாளர்  விருது  எப்படி  கிடைச்சுது?

குடும்ப  அரசியல்  நடத்துவதில்  எனக்கு  உடன்பாடு  இல்லை-னு சொல்லிட்டு  அவர்  குடும்பத்துல  இருக்கும்  142  பேருக்கு  சீட் குடுத்துட்டாராம்.

-----------------------------------------


2. மோஹனா...    லவ்  யூ.

இந்தாங்க   சதீஷ் டோக்கன்வெயிட்டிங்  லிஸ்ட்ல  இருங்ககூப்பிடறேன்.

-----------------------------------------


3. உடல்  மண்ணுக்கு  உயிர்  தமிழுக்குனு  தலைவர்  வீரமுழக்கம்  இடறாரே?

சும்மா  உதார்உடல்  அவர்  சின்ன  வீடு  மோஹனாவுக்குஉயிர்  மகளிர் அணித்  தலைவி  மல்லிகாவுக்கு.

---------------------------------------


4. நான்  சந்திக்கப்போகும்  கடைசி  தேர்தல்  இது-னு  தலைவர் தழுதழுக்கறாரே?

அதாவது  2011-ல்  சந்திக்கும்  கடைசித்  தேர்தல்னு  அர்த்தம்.

--------------------------------------


5. கட்சி  ஆட்கள்  எல்லாரும்  பேண்ட்  சர்ட்தான்  அணியனும்-னு  ஆர்டர்  வந்திருக்கேஏன்?

எங்க  கட்சில  கோஷ்டி-வேஷ்டி  என்ற  பேச்சுக்கே  இடம்  இல்லைனு ரைமிங்கா  பேசத்தான்.

--------------------------------

6. கிடா  மாதிரி  தெனாவெட்டா  திரிஞ்ச  உங்க  பையன்  இப்போ பலிகிடா  மாதிரி  பம்பிட்டு  போறானே?

மேரேஜ்  ஆகிடுச்சுல்ல?

--------------------------------


7. எதிரியை  எதிர்  கொள்வது  எப்படி  தளபதி?

எதிர்ல  யார்  வந்தாலும்  உடனே  கொல்வது  மன்னா!

--------------------------


8. மேடம்...  ஹோட்டல்ல  தங்கி  இருந்த  நீங்க  சொந்தமா  வீடு  வாங்கி  இப்போ  வீட்ல  இருக்கீங்களே?

ஹோம்லி  நடிகை-னு  பெயர்  எடுக்க  ஆசை.

------------------------------------


9. கதை  மதுரைல  நடக்குது...

அதுக்காக  ஹீரோ  மீனாட்சி  அம்மா...  மீனாட்சி  அம்மானு  அடிக்கடி  கூப்பிடறது  நல்லாலை. (புரியாதவங்க நடு நிசி நாய்கள் டிரெயிலர் பார்க்கவும்)

-------------------------------


10. வில்லன்  ஹீரோயினை  ரேப்  பண்ண  போறப்ப  ஹீரோ  காப்பாத்தறாரு...

ரொம்ப  பழைய  சீன்லேட்டஸ்ட்  டிரண்ட்டுக்கு  வாங்க. ஹீரோ  ஹீரோயின்  கூட  டூயட்  பாட  கிளம்பறப்ப  வில்லன்  தடுக்கறான்.

-------------------------------
 டிஸ்கி- 1: இந்த பட்டி மன்றத்துக்கு நீங்கதான் ஓனர்.. தீர்ப்ப்பு நீங்களே சொல்லிக்கலாம்

டிஸ்கி 2 - அமலா பால் சிவப்பு கலர் டிரஸ் போட்டது தற்செயலானது.. கம்யூனிஸ்ட் ஆளுங்க உடனே இதான் சாக்குன்னு நம்ம கட்சி போலன்னு பிரச்சாரத்துக்கு கூப்பிட்டுடாதீங்க..

Tuesday, August 10, 2010

ஊர் வம்பு (நாட்டு நடப்பு நையாண்டி)

1)இந்த வாரத்தின் சிறந்த ஜொள்ளின் செல்வர் விருது நடிகர் விவேக்கிற்கு.
எந்திரன் பட விழாவில் ,’’ ஐஸ்வர்யாராய்க்கு வெளிநாடு போகும்போதெல்லாம் பிரச்சனைதான்.பாஸ்போர்ட் விண்ணப்பத்தில்  வயது 30+ என பூர்த்தி செய்திருக்கிறார்,ஆனால் நேரில் பார்க்கும்போது 20+ மாதிரிதான் தெரிகிறார் என அனைவரின் முன்பும் பிரமாதமாக வழிந்தமைக்காக.

2) இந்த வாரத்தின் சிறந்த மாமியார் விருது இயக்குநர் பிரதாப் போத்தனுக்கு.
கலைஞர் டி வி யின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கு பெறும் கலைஞர்களின் குறும்படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும்,இயக்குநர் ஷங்கர்,ஹாய் மதன் உட்பட யார் பாராட்டினாலும் ,”எனக்கு படம் பிடிக்கலை,இயக்கம் ரொம்ப மோசம் என எல்லாத்தையும் நொட்டு (குறை)
சொல்வதற்காக.

3) இந்த வாரத்தின் சிறந்த மல்டி பல்டிமங்காத்தா விருது எஸ் வி சேகருக்கு.நான் இப்போது அ தி மு க வில் இல்லை,இருந்தாலும் அம்மா விரும்பினால் அவரை சந்திப்பேன்,அவர் ஓக்கே என்றால் மீண்டும் அ தி மு க வில்இணைவேன் என ஜெமினி சர்க்கஸ் கலைஞர் போல் பல்டி அடித்தமைக்காக.

4)இந்த வாரத்தின் சிறந்தஅடைக்கல்ராஜ் விருது கேப்டன் டி விக்கு.டிராபிக் ராமசாமியை தனது டி ஆர் பி ரேட்டிங்கிற்காக உபயோகிக்க ஒரு கருவியாய் உபயோகிக்க முடிவு எடுத்தமைக்காக.

5) இந்த வாரத்தின் சிறந்த கொலம்பஸ் கோகிலா விருது ஸ்ருதி கமலுக்கு.
ஏ ஆர் முருகதாசின் ஏழாம் அறிவு படத்திற்கும் டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ நடித்த தி இன்செப்ஷன் (THE INCEPTION) படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அறிவித்தமைக்காக.(படத்தோட டைரக்டரே கம்முனு இருக்காரு)

6) இந்த வாரத்தின் சிறந்த விரிவுரையாளர் விருது கலைஞருக்கு.உமாசங்கர் ஐ ஏ எஸ் பழி வாங்கப்படுகிறாரா எனக்கேட்டதற்கு பத்திரிக்கையாளர்களிடம் அ தி மு க ஆட்சியில் பழி வாங்கப்படவில்லையா என விளக்கியதற்கு.

7) இந்த வாரத்தின் சிறந்த மெம்மரி பிளஸ் மொமெண்ட்டோ +அரிச்சந்திரன் விருது சன் டிவியில் ஸ்டேண்ட் அப் காமெடி பண்ணும் மதுரை முத்துக்கு.
பத்திரிக்கைகளில் வெளிவந்த ஜோக்குகளை யும்,பேராசிரியர் கு ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய சிரிக்கலாம் வாங்க புத்தகத்தில் இருந்து உருவி எடுத்த சரக்குகளை யும் பிரமாதமாக மனப்பாடம் செய்து ஒப்பித்து தானே உருவாக்கியதாக சொன்னதற்காக.

8) இந்த வாரத்தின் சிறந்த செய்தி வாசிப்பு விருது கலைஞர் டி விக்கு.
கபினி அணை மழை வெள்ளத்தால் நிரம்பியபோது வேறு வழி இல்லாமல் அணையை திறந்து விட்டனர்.உடனே கலைஞர் டி வி செய்தியில் முதல்வர் கலைஞர் கேட்டுக்கொண்டத்ற்கு இணங்க திறந்து விட்ட்தாக வாய் கூசாமல் வாசித்ததற்காக.

ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வெளிவந்து 6 வருடங்களுக்கு முன் சூப்பர் ஹிட் ஆன தஞ்சை தாமு எழுதிய ஜோக்


இவ்வளவு வசதி இருந்தும் சோபா,மெத்தைல படுக்காம தலைவர் ஏன் பாய்ல படுக்கறார்?


காலைல எந்திரிச்சதும் அவருக்கு எதையாவது சுருட்டனும்.