Sunday, February 15, 2026
Saturday, February 14, 2026
KIDNAPPED:ELEZABETH SMART( 2026)- ஆங்கிலம்-சினிமா விமர்சனம் (க்ரைம் டிராமா டாக்குமெண்ட் ரி)@நெட் பிளிக்ஸ்,
21/1/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடி யில் ரிலீஸ் ஆன இந்தப்படம் தமிழ் டப்பிங் கில் இல்லை.
ஸ்பாய்லர் அலெர்ட்
5/6/2002 அன்று அமெரிக்காவில் உட்டாஹ் மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில். அம்மா,அப்பா,தங்கை உடன் வசிக்கும் 14 வயது எலிசெபத் ஸ்மார்ட் என்னும் சிறுமி கத்தி முனையில் கடத்தப்படுகிறாள்.
அப்போது 9 வயது தங்கை உடன் இருந்திருக்கிறாள்.கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய மர்மமனிதன் எலிசெபத் தை மட்டும் கடத்திச்சென்று விட்டான்.
போலீசில் புகார் அளிக்கப்படுகிறது.போலீஸ் மொத்தக்குடும்பத்தையும் விசாரிக்கிறது.குடும்பத்தை சேர்ந்த அல்லது குடும்பத்துக்கு அறிமுகம் ஆன நபர் தான் அவளைக்கடத்தி இருக்க வேண்டும் என போலீஸ் நினைக்கிறது.
காரணம் கடத்தல் நடந்தபோது மர்ம மனிதனைப்பார்த்த ஒரே சாட்சி ஆன எலிசெபத்தின் தங்கை அளித்த வாக்குமூலத்தின்படி அந்த மர்மனிதனின் குரல் ஏற்கனவே பரிச்சயப்பட்ட குரல் ஆகவும் ,மென்மையான குரல் ஆகவும் இருந்ததாகச்சொன்னதுதான்.
போலீஸ் கடும் விசாரணையில் அவர்கள் வீட்டில் முன்பு கார்பெண்டர் ஆஜப்பணி புரிந்த ஆள் கைது செய்யப்படுகிறான்.விசாரணையில் அவன் தனக்கு எதுவும் தெரியாது என சொல்லி விடுகிறான்.கடத்தப்பட்ட எலிசபத்தின் தங்கை அந்த கார்ப்பெண்டரைப்பார்த்து இவன் அல்ல என்று கூறி விடுகிறாள்.
ஆனால் போலீஸ் நம்பவில்லை.சிறுமி என்பதாலும் ,தூக்கக்கலக்கத்தில் இருந்ததாலும் அவள் குழம்பி இருக்கலாம் என்று முடிவு எடுக்கின்றனர்.
ஆனால் போலீஸ் விசாரணையில் இருந்த அவன் நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே இறந்து விடுகிறான்.
எலிசபத் கடத்தப்பட்டு 180 நாட்களுக்குப்பின் ஒரு டிடெக்ட்டிவ் சந்தேகத்துக்கு இடமான நிலையில் மூவரை சந்திக்கிறார்.அவர்களில் ஒரு ஆண் ,மற்ற இருவரும் பெண்கள்.பெண்கள் இருவரும் பர்தா அணிந்து முகத்தை மறைத்து இருக்கிறார்கள்.
ஒரு பெண் 30 வயது மதிக்கத்தக்கவராகவும்,இன்னொருத்தி சிறுமி ஆகவும் இருப்பதால் முகத்திரையை அகற்றி முகம் காட்ட சொல்கிறார்.
ஆனால் அந்தப்பெண் மறுக்கிறார்.எங்கள் மத வழக்கப்படி திருமணம் செய்யப்போகும் மணமகன்,அம்மா,அப்பா மூவர் மட்டுமே அந்தப்பெண்ணின் முகத்தைப்பார்க்க முடியும் என்று சமாளித்து விடுகிறார்.
ஆனால் அந்த சிறுமிதான் கடத்தப்பட்ட எலிசபெத்.20 நாட்களுக்க்ய்ப்பின் அதாவது எலிசபத் கடத்தப்பட்டு 200 நாட்களுக்குப்பின் போலீஸ் அவளைக்கண்டு பிடித்து விடுகிறது.
மீண்டு வந்த அவள் மீடியாவுக்குக்கொடுக்கும் பேட்டி தான் மீதிப்படம்
இதில் நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை.சம்பந்தப்பட்டவர்கள் தான் இருக்கிறார்கள்.
வழக்கில் சில சுவராஸ்யத்தகவல்கள்
1 எட்டு வருடங்கள் இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது.2010 ம் ஆண்டு தீர்ப்பு வந்தது
2 சிறுமியைக்கடத்திய நபருக்கு ஜாமீனில் ,பரோலில் வெளியே வர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
3 குற்றவாளிக்கு உதவி புரிந்த அவனது மனைவிக்கு 15 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.2018 ல் ரிலீஸ் ஆகி விட்டார்
4 கோர்ட்டில் கேஸ் நடந்தபோது குத்றவாகி மன நிலை சரியில்லாதவன் போல் நடித்தான்.இதே போல் எட்டு சிறுமிகளை கடத்தி மணம் முடிக்க வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை.நேரடியாக ஆண்டவன் தான் என்னை செய்ய வைத்தார் என்றெல்லாம் வாதாடினான்.ஆனால் ஜட்ஜ் அவனை நம்பவில்லை
5 பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் தைரியமாக மீடியாவில் பேட்டி கொடுத்தார்.சராசரிப்பெண் போல் இனி வாழ விரும்புவதாக சொன்னது ஹை லைட்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரபரப்பு ,விறுவிறுப்பு பொன்ற கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் எதுவும் கிடையாது.டாக்குமெண்ட் ரி பார்த்து பழக்கமானவர்கள் மட்டும் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.5 /5
Friday, February 13, 2026
NARI NARI NADUMA MURARI (2026)-தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி டிராமா)@அமேசான் பிரைம்
14/1/2026 முதல் திரை அரஙகுகளில் வெளியாகி ரூ21 கோடி ரூபாய் வசூலைக்குவித்த இந்த லோ பட்ஜெட் படம் இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் தமிழ் டப்பிங் உடன் காணக்கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த கண்ணியமான காமெடிப்படம் இது.
நாரி நாரி நடுமா முராரி என்ற டைட்டிலுக்கு
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியின் அப்பா பிரபல வக்கீல்.அவருக்கு வரும் பெரும்பாலான கேஸ்கள் டைவர்ஸ் கேஸ்கள் தான்.குறிப்பாக லவ் மேரேஜ் ஆன ஜோடிகளின் டைவர்ஸ் கேஸ். பிரிவுக்குக்காரணமாக காதல் செய்தது தான் என அவர்கள் சொல்ல காதல் மீதும் ,காதல் கல்யாணத்தின் மீதும் நம்பிக்கை அற்றவராக நாயகியின் அப்பா திகழ்கிறார்.
நாயகனின் அப்பா மகனுக்குத்திருமணம் செய்ய வேண்டிய சமயத்தில் 25 வயதுப்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து ஊரார் கேலி செய்யும் அளவுக்கு காமெடிப்பீஸ் ஆனவர்.
நாயகி,நாயகன் இருவரும் காதலிக்கிறார்கள்.நாயகியின் அப்பா ஆரம்பத்தில் சம்மதிக்கா விட்டாலும் மகளின் பிடிவாதத்தால் சம்மதிக்கிறார்.ஆனால் ஒரு கண்டிஷன் போடுகிறார்.
திருமண மண்டபத்தில் உற்றார் ,உறவினர் கூடி செய்யும் திருமணம் ஆக இருக்கக்கூடாது.ரெஜிஸ்டர் ஆபீசில் தான் திருமணம் என்கிறார்.வேறு வழி இல்லாமல் அதற்கு நாயகன் சம்மதிக்க இப்போது ஒரு புது சிக்கல் வருகிறது.
நாயகன் ஏற்கனவே ஒரு பெண்ணைக்காதலித்துத்திருமணம் செய்தவன்.பிரேக்கப் ஆகி விட்டது.இது நாயகிக்குத்தெரியாது.
நாயகன்,நாயகி இருவரும் பணி புரியும் கம்பெனியில் எம் டி ஆக இருப்பவர் தான் நாயகனின் முன்னாள் காதலி.
இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.
எங்கேயும் எப்போதும் (2011) மெகா ஹிட் படத்தின் நாயகன் சர்வானந்த்தான் இந்தப்படத்தின் நாயகன்.அந்தப்படத்தில் சீரியஸ் ஆக வந்தவரை 15 வருடங்கள் கழித்து காமெடி கலந்த நாயகனாகப்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகி ஆக சாக்ஷி வைத்யா இளமைத்துள்ளலுடன் நடித்திருக்கிறார்.பாடல் காட்சிகளில் கண்ணியம் கலையாத ஆடை வடிவமைப்புகள் அருமை.
நாயகனின் முதல் காதலி தியா ஆக சம்யுக்தா திறம்பட நடித்திருக்கிறார்.படத்தின் பின் பாதியில் இவரது குணச்சித்திர நடிப்பு கன கச்சிதம்
நாயகனின் அப்பாவாக நரேஷ் நடித்திருக்கிறார்.ஊரெல்லாம் கேவலமாகப்பேச அவர் டேக் இட் ஈசி பாலிசி ஆக உலா வருவது வெடிச்சிரிப்பு.
ரெஜிஸ்டர் ஆபீசில் பணி புரிபவர் ஆக காமெடி நடிகர் சுனில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு அவர் எழுப்பும் கேள்விகள் சிரிப்பு அலையை உருவாக்குகின்றன.
நாயகியின் அப்பாவாக சம்பத் ராஜ் கனகச்சிதம்.வழக்கமாக கேங்க்ஸ்டர் ரோலிலேயே பார்த்த இவரை காமெடிப்படத்தில் அப்பா ரோலில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது.
நாயகன் சார்பாக வாதாடும் வக்கீல் ரோலில் வெண்ணிலா கிஷோர் செய்யும் காமெடிகள் கதையோடு ஒன்றி வருகின்றன.
ஆட்டோ டிரைவராக வரும் சத்யா வும் ஓப்பனிங சீனிலும் ,க்ளைமாக்ஸ் சீனிலும்
சிரிக்க வைக்கிறார்.
விஷால் சந்திரசேகரின் இசையில் நான்கு பாடல்கள்.அவற்றில் இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.பின்னணி இசையும் கச்சிதம்.
ஞானசேகர் +யுவராஜ் இருவரும் இணை ந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.இரு நாயகிகள்,நாயகன் என அனைவரையும் அழகாகக்காட்டி இருக்கிறார்.
நக்கா வெங்கட் சாமியின் எடிட்டிஙகில் படம் 143 நிமிடஙகள் ஓடுகிறது.
பானு போக வரபு,நந்து சவுரிகனா ஆகிய இருவருடன் இணைந்து கதை ,திரைக்கதை எழுதிய ராம் அப்பாராஜூ தனியாக படத்தை இயக்கி இருக்கிறார்.
சபாஷ் டைரக்டர்
1 ரஜினி நடித்த வீரா, பாலுமகேந்திராவின் ரெட்டை வால் குருவி படங்களை ப்போல முழுக்க முழுக்க காமெடி தெறிக்கும் திரைக்கதை
2 கிரேசி மோகன் பாணி வார்த்தை ஜால வசனங்கள் நகைச்சுவை இழையோட முக்கியக்காரணம்
3 நாயகனும்,அப்பாவும் டாட்டு போடும் செண்ட்டரில் ஒரே டைமில் வெவ்வேறு காரணத்துக்காக வந்து மாட்டிக்கொள்ளும் சீன்
4 முதல் காதலியின் பெயரைப்பச்சை குத்திக்கொண்ட காதலன் அதை அழிக்க முயற்சி செய்து முடியாமல் நாயகியிடம் மாட்டாமல் இருக்க செய்யும் ஐடியா அபாரம்
5 நாயகன் டைவர்ஸ் கேஸ் பற்றி நாயகிக்குத்தெரிய வரும் போது அப்பாவின் டைவர்ஸ் என சமாளிக்க அதனால் அப்பா-சித்தி உறவில் பங்கம் வர ஏற்படும் ரகளையான காமெடி
6 டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் நடக்கும்போது உண்டாகும் கோர்ட் ரூம் காமெடி டிராக்
7 முதல் காதலியுடனான பிரேக்கப்க்கு நியாயமான காரணத்தை க்ளைமாக்சில் உணர்த்திய விதம்
8 இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரு காட்சி கூட போர் அடிக்காமல் கலகலப்பாகப்படத்தை நகர்த்திய சாமார்த்தியம்
ரசித்த வசனங்கள்
1 நாம ஒருத்தரை விரும்பினால் அவஙக குறையோடு சேர்த்து விரும்பனும்
2 பொய்யோடு எந்த உறவையும் ஆரம்பிக்கக்கூடாது.
3 காதல்னா சண்டை போடனும்,பிரியனும்,மீண்டும் சேரனும்,ஆனா அதே பழைய காரணத்துக்காக சண்டை போடக்கூடாது.
4 தப்பு அவனோடது இல்லைன்னாலும் தப்பை ஒத்துக்கறது அவனோட இயல்பு.
5 உனக்குத்தேவையானதைக்கொடுக்கக்கடவுள் கொஞ்சம் டைம் எடுத்துக்குவார்.அப்போதான் உனக்கு அதன் மதிப்புத்தெரியும்
6 என்னது?லவ் லெட்டரோட ஜெராக்ஸ் காபியை அவளுக்குத்தர்றியா?அவ Feel பண்ண மாட்டாளா?
அவ Feel ஆகட்டும்னுதானே லவ் லெட்டரே தர்றேன்?
7 குரு வுக்கும் ,குரு நானக் பிறந்த நாளுக்கும் என்னடா சம்பந்தம்?
8 உன்னைத்தவிர யார் நலனையும் நினைத்துப்பார்க்காத ஈகோயிஸ்ட் நீ
9 எல்லாமே கிராண்டா இருக்கனும்னு என் கிராண்ட் பாதர் அடிக்கடி சொல்வார்
10 அத்தை,சாப்பிட்டுட்டுப்போங்க
நீயே எனக்குத்தாய் மாமன் மாதிரி இருக்கே! நீ எனக்கு மாப்பிள்ளையா?நான் உனக்கு அத்தையா?காலக்கொடுமை
11 சுமாரா இருக்கறவங்க தான் நடிகர் நடிகை டி பி வைப்பாங்க.
உனக்கு எப்படித்தெரியும்?
நானே ரன்வீர் கபூர் டி பி தானே வெச்சிருக்கேன்?
12 பிட் காயின் பத்தித்தெரியுமா?
எனக்குத்தெரிஞ்சதெல்லாம் பிட்டுப்படம் தான்
13 ஸ்டூடண்ட்னா எக்சாம் பேப்பர்ல எழுதறதை விட பாத் ரூம் சுவரில் தான் அதிகம் கிறுக்குவாங்க
14 உங்க கல்யாணத்தை வீட்டில் பெரியவஙக எல்லாரும் ஒத்துக்கிட்டாஙகளா?
எங்க வீட்டில் நான் தான் இருக்கறதுலயே பெரியவன்
15 பயணம் எல்லாம் சிறப்பா இருந்ததா?
4 கிமீ தூரம் தானே?இதெல்லாம் ஒரு பயணமா?
16. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்குங்க
45 வயசு ஆகிடுச்சு.மறுபடி ஒரு தடவை மெச்சூர் ஆகனுமா?
17. லவ் பண்ண டிப் ஸ் குடுங்க
டிப் குடுக்க நான் என்ன டிப்பு சுல்தானா?
18 மாப்பிள்ளை,பொண்ணுக்கு அருந்ததி நட்சத்திரம் காட்டுங்க
எனக்கே தெரியலையே?
இதே தெரியலை.பொண்ணுக்கு வேற எதைக்காட்டப்போறீங்க?
19 ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளேண்ட் பண்ண வேண்டிய வயசுல ஹார்ட் ட்ரான்ஸ்பர் பண்ணி லவ் ?
20 என் பேரு லவ் குசா.லவ்வுக்காக எவ்ளோ தூரம் வேணாப்போவேன்
வேணாம்,ஆட்டோவை நிறுத்துங்க.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1. பல மாதங்களாக க்காதலிக்கும் நாயகிக்கு நாயகன் நெஞ்சில் முன்னாள் காதலி பெயரைப்பச்சை குத்தி இருக்கும் விஷயம் தெரியாமல் இருப்பது எப்படி?
2 நாயகனுக்கு முதல் திருமணம் நடந்த அதே ரிஜிஸ்ட்டர் ஆபீசில் இரண்டாவது திருமணம் என்பது தெரிந்ததும் நாயகன் வேறு ஆபீசில் வைத்துக்கொள்ளலாம் என சமாளிக்காமல் தானாக வலியப்போய் மாட்டுவது நம்ப முடியவில்லை
3 அறுபது வயதாகும் நாயகனின் அப்பாவை காதல் திருமணம் செய்ய 25 வயதுப்பெண் பெற்றோரை மீறி மணக்க எதனால் சம்மதித்தார் என்பது விளக்கமாக சொல்லவில்லை.
4 க்ளைமாக்ஸ் பர பரப்புக்காக நாயகி நடத்தும் நாடகமும்,ரெஜிஸ்ட்டர் ஆபீஸ் வரை வந்து விட்டு திடீர் என நாயகன் நல்லவன் வேசம் போட்டு திருமணத்தை நிறுத்துவதும் நம்ப முடியாத காட்சி
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ.குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இரண்டரை மணி நேரம் கலகலப்பான ,ஜாலியான ரொமாண்டிக் காமெடி டிராமா பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5
| Nari Nari Naduma Murari | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Ram Abbaraju |
| Screenplay by |
|
| Story by |
|
| Produced by |
|
| Starring | |
| Cinematography |
|
| Edited by | Nakka Venkat Swamy |
| Music by | Vishal Chandrashekhar |
Production companies |
|
Release date |
|
Running time | 145 minutes[1] |
| Country | India |
| Language | Telugu |
| Box office | est. ₹21 crore[2] |
Thursday, February 12, 2026
GURRAM PAAPI REDDY (2025)- குர்ராம் பாப்பி ரெட்டி -தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் காமெடி ட்ராமா ) @ஜீ 5
GURRAM PAAPI REDDY (2025)- குர்ராம் பாப்பி ரெட்டி -தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் காமெடி ட்ராமா ) @ஜீ 5
19/12/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது 16/1/2026 முதல் ஜீ 5 ஓடி டி தளத்தில் காணக்கிடைக்கிறது . வன்முறை , ரத்தம் இல்லாத ,குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த காமெடிப்படம் இது . ஆந்திரப்பட உலகின் வடிவேலு எனக்கொண்டாடப்படும் பிரம்மானந்தம் காமெடி , யோகி பாபு காமெடி, மொட்டை ராஜேந்திரன் காமெடி இருப்பது படத்துக்கு கூடுதல் பிளஸ்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி மேல் படிப்புப்படிக்க ஆசைப்படறாங்க . சித்தப்பாவிடம் இருக்கும் கொஞ்சப்பணத்தையும் அந்த ஊரில் புதுசா வந்திருக்கும் ஃபைனான்ஸ் கம்ப்பெனியில் டெப்பாசிட் பண்றாங்க . அந்த ஃபைனான்ஸ்காரன் ஓடிப்போயிடறான் .
அந்த ஃபைனான்ஸ் கம்ப்பெனி மேனேஜர் தான் நாயகன் . அவன் ஒரு அப்பாவி . ஊரை ஏமாத்துன ஓனர் ஓடிட்டான் . மேனேஜர் சிக்கிக்கறான் / இப்போ நாயகி நாயகனிடம் என் பணத்தைக்கொடுக்க வழி பாருன்னு சொல்ல நாயகன் வில்லனான ஓனரிடம் பணம் பறிக்க திட்டம் போடறான் .
வில்லனுக்கு சொந்தமாக ஒரு பெரிய நகைக்கடை இருக்கு . டுபாக்கூர் திருடர்கள் 3 பேரை கூட்டு சேர்த்து அங்கே கொள்ளை அடிக்க முயற்சி செஞ்சு மாட்டி ஜெயிலுக்குப்போறாங்க . நான்கு வருடங்கள் ஜெயில் தண்டனை அனுபவித்து வெளியே வர்றாங்க .
இப்போ நாயகன் ஒரு சுடுகாட்டில் ஒரு பிணத்தைத்தோண்டி எடுத்து அந்த இடத்தில் இன்னொரு பிணத்தை மாற்றி வைத்து ஆள் மாறாட்டம் மாதிரி பிண மாறாட்டம் செய்யறான். ஏன் ? எதற்கு ? என்பதையும் இதனால் ஏற்படும் காமெடி கலாட்டாக்களையும் சொல்லும் கதை தான் இது
நாயகன் ஆக நரேஷ் அகஷ்த்யா காமெடி கலந்த நடிப்பை வழங்கி இருக்கிறார் .நாயகி ஆக ஃபரியா அப்துல்லா சும்மா வந்து போகிறார். அதிக வாய்ப்பில்லை
முட்டாள் தனமாக திருடி மாட்டிக்கொள்ளும் திருடர்களுக்கு அவர்களது முட்டாள்த்தனத்துக்காகவே தண்டனை கொடுக்கும் காமெடி ஜட்ஜ் ஆக பிரம்மானந்தம் கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
பல சின்ன வீடுகள் , பல வாரிசுகள் கொண்டவராக மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்
ஏடாகூடமான ஊசி போடப்பட்டதால் தடுமாறும் மிலிட்ரி கேரக்டரில் நகைக்க வைக்கிறார் ராஜ்குமார் காசி ரெட்டி
கலிங்க வாரிசாக ,டுபாக்கூர் வாரிசாக அந்த மொட்டை கேரக்டர் பரவாயில்லை ரகம் . யோகி பாபு சும்மா கெஸ்ட் ரோல் தான் . ஜான் விஜயின் வில்லத்தனம் எடுபடவில்லை
இசை கிருஷ்ணா சவுரப் . 3 பாடல்கள் சுமார் ரகம் . பின்னணி இசை பரவாயில்லை ரகம் . கார்த்திகா சீனிவாசின் எடிட்டிங்கில் படம் 160 நிமிடங்கள் ஓடுகிறது . அர்ஜூன் ராஜாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்
பூமா பிரஜாவின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் முரளி மனோகர்
சபாஷ் டைரக்டர்
1 முதல் 30 நிமிடங்கள் என்ன , ஏது என கதை புரியாமலேயே சிரிக்க வைத்த விதம்
2 கோர்ட் சீன்களில் ஜட்ஜ் ஆக பிரம்மானந்தம் செய்யும் காமெடிகள்
3 பின் பாதியில் வரும் மொட்டை ராஜெந்திரன் வழங்கும் இயல்பான காமெடி டிராக்
ரசித்த வசனங்கள்
1 இந்த உலகத்தில் இரண்டு விதமான ஆட்கள் இருக்காங்க 1 புத்திசாலிகள் 2 முட்டாள்கள் . முட்டாள்கள் புத்திசாலித்தனமா நடந்தாலோ , புத்திசாலி முட்டாள் தனமா நடந்தாலோ இந்த உலகம் தாங்காது
2 நகைக்கடைல திருட நடு ராத்திரியில் வரனுமா? நல்லா தூங்கிட்டு விடிகாலைல 6 மணிக்கு வரவா?
6 மணிக்கு வந்து பால் பாக்கெட்டா போடப்போறே?
3 நீ போடும் மொக்கைப்பிளான்க்கு எத்தனை இடம் மாத்துவே? சீக்கிரம் பிளானை சொல்லு
4 இந்த வேலைக்கு எதுக்காக எங்களைத்தேர்ந்தெடுத்தீங்க ?
ரொம்ப புத்திசாலியாவும் இருக்கக்கூடாது , சொல்றபேச்சையும் கேட்கனும் , அதுக்கு நீங்க தான் சரியான ஆளுங்க
5 சுடுகாட்டு வெட்டியானுக்கு பிறந்த வீடு , புகுந்த வீடு எல்லாமே அந்தக்குழி தான்
6 இந்த சீரியல் ஆண்ட்டியை எங்கே இருந்துடா பிடிச்சுட்டு வந்தீங்க ? ஓவரா அழறா?
7 நம்பிக்கையைக்காப்பாத்துவது எவ்ளோ சிரமமோ , அதே மாதிரி நம்பிக்கையைக்கெடுப்பது ரொம்ப சுலபம்
8 எல்லாரும் ஒரே நேரத்தில் வராம ஒவ்வொருத்தரா வாங்கடா பார்ப்போம்
ஒவ்வொருத்தரா வந்து உன் கழுத்துல மாலையா போடப்போறோம் ?
9 கேசுவலா இருக்க வேண்டியவன் கேசுவாலிட்டி வார்டுல இருக்கானே?
10 நைட் பிரியாணி சாப்பிடவே வழி இல்லாம இருக்கோம், எங்க தலைக்கு 50 லட்சம் ரூபாய் விலை பேசி இருக்காங்களா?
11 கீப் க்குப்பணம் தருவாங்களா? பிடுங்குவாங்களா?
என்ன பண்ண? பெட்ரோல் போடக்காசு இல்லை
12 சார் , நீங்க இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் என நாங்க எப்படி நம்புவது , ஐ டி கார்டு காட்டுங்க
ஓ , நீ எது வரை படிச்சிருக்கே?
2 வது வரை
அப்போக்காட்டிடலாம், புரியவா போகுது ?
13 நாங்க லஞ்சம் வாங்க மாட்டோம் , ஆபீசர்ஸ். வேணும்னா பெட்ரோல் டேங்க் ஃபில் பண்ணீடுங்க
14 யுவர் ஆனர் , எனக்கும் டி என் ஏ டெஸ்ட் எடுங்க
யுவர் ஆனர் , எனக்கும் டிஎன் ஏ டெஸ் ட் எடுங்க
சைலன்ஸ் , இங்கே என்ன டிஎன் ஏ டெஸ் ட் மேளாவா நடக்குது ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பல ஆண்டுகளூக்கு முன் புதைத்த மன்னர் வம்சப்பிணத்தை டி என் ஏ டெஸ்ட்க்காக தோண்டி எடுக்கும்போது வெறும் எலும்புகள் தான் கிடைக்கும் என்பது கூடவா வில்லன் க்ரூப்க்குத்தெரியாது ?
2 என்ன தான் காமெடிப்படம் என்றாலும் கோர்ட்டில் ஜட்ஜ் , வக்கீல் தவிர ஆளாளுக்கு டயலாக் பேசுவது ஓவர்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மொக்கைக்காமெடி டிராமா பார்ப்பவர்கள் சுந்தர் சி யின் ஆள் மாறாட்டக்காமெடி டைப் படங்களை ரசிப்பவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்க் 2. 5 / 5
| Gurram Paapi Reddy | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Murali Manohar |
| Screenplay by | Murali Manohar |
| Story by | Poorna Prajna |
| Produced by |
|
| Starring |
|
| Cinematography | Arjun Raja |
| Edited by | Karthika Srinivas |
| Music by | Krishna Saurabh Surampalli |
Production companies |
|
Release date |
|
Running time | 160 minutes |
| Country | India |
| Language | Telugu |
Wednesday, February 11, 2026
மெல்லிசை (2026)-தமிழ்-சினிமா விமர்சனம் (பேமிலி மெலோ ட்ராமா)
30/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு தனியார் பள்ளியில் பி டி மாஸ்டர் ஆகப்பணி புரிகிறார்.மனைவி, மகன்,மகள் என்று அழகான ,அளவான குடும்பம் அவருடையது.நாயகன் சின்ன வயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் மிக்கவன்.ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அப்போது பாட முடியவில்லை.இப்போது பாடுகிறான்.
தனியார் டி வி நடத்தும் சூப்பர் சிங்கர் புரோகிராம்களில் அடிக்கடி கலந்து கொள்கிறான்.வெற்றி பெறுகிறான்.பலரது பாராட்டுக்களும் கிடைக்கின்றன. இதனால் பள்ளிக்கு அடிக்கடி லீவ் போடுகிறான்.
பள்ளி ஹெச் எம் க்கு இது பிடிக்கவில்லை.அவனை வேலையை விட்டு நீக்குகிறார்.இந்த மன உளைச்சலில் நாயகனால் டி வி ஷோவில் மனம் லயித்துப்பாட முடியவில்லை.போட்டியில் தோற்கிறான்.
நாயகனின் மகனுக்குப்படித்துக்கொண்டிருக்கும்போதே ஐ டி யில் பணி புரிய வாய்ப்புக்கிடைக்கிறது.ஆனால் நாயகனுக்குத்தன் மகனை சின்ன வயதில் வேலைக்கு அனுப்ப மனம் வரவில்லை.தன்னைப்போல் அவன் கஷ்டப்படக்கூடாது என நினைக்கிறான்.ஆனால் நாயகிக்கு மகனை வேலைக்கு அனுப்ப இஷ்டம்.
நாயகனின் பாடகர் ஆசை நிறைவேறியதா? மகன் வேலைக்குப்போனானா? என்ற வினாக்களுக்கு விடை சொல்வது தான் மீதி திரைக்கதை.
நாயகன் ஆக வெண்ணிலா கபாடிக்குழு,பொல்லாதவன் புகழ் கிஷோர்.வில்லன் ஆக ,குணச்சித்திர நடிகராகபரிமளித்தவருக்கு கதையின் நாயகன் ஆக ஒரு வாய்ப்பு.
மனைவியிடம் செல்லம் கொஞ்சுவது,மகளிடம் பாசம் வைப்பது ,மகனுடனான தருணங்கள் எல்லாவற்றிலும் கலக்கியவர் டி வி ஷோக்களில் பாடுவது போல் வரும் காட்சியில் மட்டும் ஒரு மாற்றுக்குறைவாகவே பிரகாசிக்கிறார்.
பாடகர் ஆக நடிப்பதில் விற்பன்னர் ஆன மைக் மோகன் படங்களை ப்பார்த்து பாவனை களை வெளிப்படுத்தி இருக்கலாம்.
நாயகியாக ,டீச்சர் ஆக வரும் சுபத்ரா ராபர்ட் கண்ணியமான உடை ,கருத்தைக்கவரும் நடிப்பு என மிளிர்கிறார்.ஒரு இடத்தில் கூட ஓவர் ஆக்டிங இல்லை.
மகள் ஆக வரும் தனன்யா,மகன் ஆக வரும் ஜஸ்வந்த் இருவருமே தங்கள் கேரக்டரை உணர்ந்து மெருகு ஏற்றி இருக்கிறார்கள்.
வில்லன் ஆக ஹரீஷ உத்தமன் வருகிறார்.மெயின் கதையுடன் வில்லன் கேரக்டர் பொருந்தவில்லை.
தான் யா,ஜார்ஜ் மரியான் உட்பட படத்தில் வரும் மற்ற கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இசை சங்கர் ரங்கராஜன்.பாடகர் சம்பந்தப்பட்ட கதையில் செம ஹிட் பாட்டு ஒன்றாவது இருக்க வேண்டாமா?சராசரி தரம் தான் பாடல்கள்.பின்னணி இசை ஓக்கே லெவல்.
ஒளிப்பதிவு தேவராஜ் புகழேந்தி.ஒரே வீட்டில் ,ஸ்கூலில் பெரும்பாலான காட்சிகள் இருப்பதால் சவாலான வேலை.
கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் திரவ்.தயாரிப்பாளரும் அவரே!
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் பி டி மாஸ்டர் ஆக ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் ,டீச்சர்ஸ் உடன் மிங்கிள் ஆவது யதார்த்தம்
2 நாயகன் வீட்டில் மனைவி, மகன்,மகளுடன் காட்டும் பாசப்பிணைப்புகள் எமோஷனல் கனெக்ட்டைக்கொடுக்கிறது
3 கருத்தைக்கவரும் மோட்டிவேசனல் டயலாக்ஸ்
4 அடமானத்தில் இருக்கும் வீட்டை மீட்கும் காட்சிகள் யதார்த்தம்
5 நாயகனுக்கி சக பாடகி அனுப்பும் மெசேஜ்களைப்படித்து நாயகி ஊடல் கொள்வது ரசிக்க வைக்கிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அருமையான குடும்பக்கதையில் நாயகன் சோகத்தில் குடித்து விட்டு வரும் அந்த ஒரே ஒரு காட்சி திருஷ்டிப்பரிகாரம்
2 நாயகனின் மகன் ,மகள் இவர்கள் பார்வையில் தான் மொத்தக்கதையும் மாறி மாறி சொல்லப்படுகிறது.அப்படி இருக்கும்போது மகனோ ,மகளோ இல்லாத காட்சி வரக்கூடாது.நாயகன்,நாயகி இருவரும் தனிமையில் பேசும் காட்சிகள் எல்லாம் வருகிறது
3 மொத்தக்கதையும் பாசிட்டிவ் வைப்ரேஷனில் செல்லும் போது க்ளைமாக்ஸில் வரும் சோகம் வலியத்திணிக்கப்பட்டதே
4. கதைக்கு முக்கியமான அந்த ஆட்டோ விபத்துக்காட்சி ஏனோ தானோ எனப்படமாக்கப்பட்டு உள்ளது.ஆடியன்சுக்க்ய்ப்போதிய இம்ப்பேக்ட் கொடுக்கவில்லை
5 நாயகன் பாடகர் ஆக டி வி ஷோக்களில் தோன்றும் காட்சி கள் ரொம்ப சாதாரணமாக இருக்கின்றன.கூஸ்பம்ப் மொமெண்ட்சே இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13+ க்ளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த மோட்டிவேசனல் மெலோ ட்ராமா .ரேட்டிங்க் 3/5
| Mellisai | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Dhirav |
| Written by | Dhirav |
| Produced by | Dhirav |
| Starring |
|
| Cinematography | Devaraj Pugazhendi |
| Edited by | Dhirav |
| Music by | Shankar Rangarajan |
Production company | Hashtag FDFS Productions |
Release date |
|
| Country | India |
| Language | Tamil |
Tuesday, February 10, 2026
DURANDHAR (2025) -துரந்தர் ( உறுதியானவர்) ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஸ்பை ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்
இந்திய நாடாளூமன்றத்தாக்குதல் (2001) , மும்பை தாக்குதல்கள் (2008) , இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக்கடத்தல் ஆகிய உண்மை சம்பவங்களை ஒட்டி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் .சென்சாரில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க இது ஒரு புனைவுக்கதை என சொல்லப்பட்டாலும் ஒரு மேஜர் ஆபீசரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை என சொல்லப்படுகிறது
இந்திய உளவுபப்டை அதிகாரி பாகிஸ்தானில் நிகழ்த்தும் சாகசம் தான் கதை என்பதால் பாகிஸ்தானில் இப்படம் தடை செய்யப்பட்டு உள்ளது
ஸ்பாய்லர் அலெர்ட்
1999ல் இந்திய விமானம் கடத்தப்படுகிறது . பின் நாடாளூமன்றம் தாக்கப்படுகிறது . இதுக்கெல்லாம் காரணம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் என்பதை உணர்ந்த இந்திய அரசு ஒரு இந்திய உளவாளியை பாகிஸ்தான் அனுப்புகிறது . அந்த உளவாளிதான் கதையின் நாயகன் . அவர் 10 வருடங்களாக பாகிஸ்தானில் ஊடுருவி என்ன என்ன சம்பவங்களை எல்லாம் செய்தார் என்பதுதான் இந்தப்படத்தின் கதை
நாயகன் ஆக ரன்வீர் சிங்க் அருமையாக நடித்து இருக்கிறார் . ஆக்சன் காட்சிகள் , ரொமாண்டிக் காட்சிகளில் நன்கு ஸ்கோர் செய்கிறார்
வில்லன் ஆக வரும் அக்சய் கன்னா அசத்தி இருக்கிறார். நாயகனை விட வலிமையாக எழுதப்பட்ட கேரக்டர். தன் மகனை இழந்த செய்தி கேட்டு அழுது கொண்டே வரும் சீன் உடல் மொழி அருமை
எஸ் பி சவுத்ரி என்னும் போலீஸ் ஆபீசர் ஆக வரும் சஞ்சய் தத் ஆரவாரமான நடிப்பு . மாதவனின் நடிப்பு கலக்கல் ரகம் .
நாயகி ஆக சாரா அர்ஜூன் அழகு நடிப்பு இரண்டும் அருமை . தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகள் ஆக வரும் பேபி தான் இப்போது குமரி ஆகி விட்டார்.
சரஸ்வதி சச்தேவின் இசையில் பாடல்கள் அருமை . பின்னணி இசையும் தெறிக்கிறது விகாஷ் நல்வாகாவின் ஒளிப்பதிவு பிரம்மாண்டம்
சிவக்குமார் வி பணிக்கரின் எடிட்டிங்க் பின் பாதியில் இழுவை
கதை , திரைக்கதை , இயக்கம் அனைத்தும் ஆதித்ய தார் இவர் தயாரிப்பாளர்களீல் ஒருவரும் கூட
சபாஷ் டைரக்டர்
1 உண்மையில் நடந்த சம்பவங்களான இந்திய நாடாளூமன்றத்தாக்குதல் (2001) , மும்பை தாக்குதல்கள் (2008) , இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக்கடத்தல் ஆகிய உண்மை சம்பவங்களை , அதன் க்ளிப்பிங்க்சை ஆங்காங்கே புகுத்தியது அருமை
2 படத்தில் ஏகப்பட்ட டீட்டெய்லிங்க் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருக்கு
3 ஹவா ஹவா ஏ ஹவா , தம் ஆரே தம் ஆகிய சூப்பர் ஹிட் சாங்க்சை அதன் பிஜிஎம் மை பிளேஸ் செய்த விதம் கூஸ்பம்ப் மொமெண்ட்
4 நாயகன் - நாயகி இருவருக்கு இடையே மலரும் காதல் காட்சிகள் பாலைவனத்தில் சோலை . ஆக்சன் அதிரடிகளூக்கு நடுவே தென்றல்; போல் தாலாட்டுகிறது
5 அலை பாயுதே மாதவனின் கெட்டப் அருமை . அடையாளமே தெரியவில்லை .
6 படம் ஆரம்பித்து 25 நிமிடங்கள் கழித்துத்தான் ஹீரோ எண்ட்ரி. ஆனாலும் பெரிய ஹீரோயிசம் இல்லாமல் காட்டியது அருமை
7 க்ளைமாக்சில் வரும் சேசிங்க் சீன் , ஆக்சன் சீக்வன்ஸ் இரண்டும் அருமை
8 அதிகம் பேசாத கேரக்டர் ஆக நாயகனை டிசைன் செய்த விதமும் மற்ற கேரக்டர்களின் வலிமையான ஆக்ரமிப்பும் கச்சிதம்
ரசித்த வசனங்கள்
1 நான் ஏழை தான் , ஆனா தோத்துப்போறவன் கிடையாது
2 இந்தியவின் முதல் எதிரிகள் இந்தியர்கள் தான் , பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம் தான்
3 பொண்ணுங்களை மதிக்கறவங்களுக்கு சொர்க்கத்தில் நிச்சயம் ஒரு இடம் இருக்குமாம்
4 நம் தொழிலில் முக்கியத்தேவை பொறுமையும் விழிப்புணர்வும்
5 இங்கே எனக்கு வெலை கிடைக்குமா?
ஜூஸ் வேணா கிடைக்கும்
6 அது வெறும் நாற்காலி இல்லை , சிம்மாசனம் . அந்த சிம்மாசனத்தை அடைய எத்தனை கொலை பண் ணி இருப்பார்னு கணக்கே இல்லை
7 சொர்க்கத்தில் எனக்குன்னு ஒரு இடம் இருக்கும், ஆனா நீங்க அதைப்பறிச்சுடாம இருக்கனும் மிஸ்
8 என் கையால யாருக்காவது சாவு வந்தா அது மிகக்கொடூரமானதா இருக்கும்
9 விஸ்வாசத்தையும் , அரசியலையும் ஒரே தட்டில் வைக்க முடியாது
10 விதியின் அழகிய விளையாட்டு என்ன? தெரியுமா? நேரம் வரும்போதுஅது நம் வாழ்க்கையைப்புரட்டிப்போட்டுடும்
11 நீ உன் பக்கத்து வீட்டை எரிச்சா அந்த நெருப்பு உன் வீட்டை நோக்கியும் வரும்
12 இந்த விளையாட்டை நாம ஜெயிக்கறதுக்காக விளையாடனும், அதுக்கு ஒரே வழி நாம் உயிட்ரோடு இருக்கனும்
13 உன் வீட்டுக்குப்போகும் எண்ணம் இல்லையா?
நான் திரும்பிப்போக இங்கே வர்லை
14 நாம் ஒவ்வொரு முறை சரியா திட்டம் இட்டாலும் எதிரிகள் ஒரே ஒரு முறை நன்கு திட்டம் இட்டாலே ஜெயித்து விடுகிறார்கள்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 படத்தின் நீளம் ரொம்பவே அதிகம், கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடுகிறது . இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்
2 நாயகியின் அப்பா நாயகனிடம் கேட்கும் நியாயமான கேள்விக்கு நாயகன் பதிலே சொல்லவில்லை . அது - 32 வயதான நீ 19 வயதான என் பெண்ணை மயக்கிக்காதலித்துக்கூட்டிட்டு வந்துட்டே இது நியாயமா?
3 குருதிப்புனல் , விஸ்வரூபம் , மீகாமன் ஆகிய படங்களில் வரும் பல காட்சிகள் இதில் வருகிறது
4 படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருப்பதால் அவர்களை அறிமுகப்படுத்தவே அதிக நேரம் ஆகிறது
5 நாயகனை யாரும் சந்தேகப்படவே இல்லை அவருக்கு எந்த தடையும் வரலை எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ வன்முறைக்காட்சிகளுக்காகவும் , ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்காகவும் ஏ சர்ட்டிபிகெட் பெற்ற படம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கர்ப்பிணிப் பெண்கள் , குழந்தைகள் இந்தப்படம் பார்ப்பதைத்தவிர்க்கவும், ஆக்சன் பிரியர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்க் 3 / 5
| Dhurandhar | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Aditya Dhar |
| Written by | Aditya Dhar |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Vikash Nowlakha |
| Edited by | Shivkumar V. Panicker |
| Music by | Shashwat Sachdev |
Production companies | |
| Distributed by | Jio Studios |
Release date |
|
Running time | 214 minutes[1] |
| Country | India |
| Language | Hindi |
| Budget | est. ₹250–475 crore (shared with part 2)[2] |
| Box office | est. ₹1,347.40 crore[3] |



.jpg)
