Saturday, November 19, 2011

1911 - அட்டர் ஃபிளாப் ஆன ஜாக்கிசானின் 100வது படம் - சினிமா விமர்சனம்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/26/1911_filmposter.jpg/215px-1911_filmposter.jpg 

ஜாக்கிசான் ரசிகர்களுகு அதிர்ச்சி ஊட்டும் ஒரு மேட்டரை முதல்லியே சொல்லிடறேன் , பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது 100 வது படம்  செம டப்பா.. த புரொடக்டர் படம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து த ஆர்மர் ஆஃப் காட், ஸ்பானிஸ் கனெக்‌ஷன்,போலீஸ் ஸ்டோரி படங்களின் மூலம் ஆக்‌ஷனின் உச்சத்தை, பொழுது பொக்கின் பிரம்மாண்டத்தை காண்பித்த அகில உலக ஆக்‌ஷன் ஹீரோவின் 100 வது படம் ரொம்ப சாதாரணமாக அமைந்தது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியே..

படத்தோட கதை என்ன? 100 வருடங்களுக்கு முன் சீனாவில் மன்னர் ஆட்சி நடந்த காலம்.. நம்ம ஊர் ஜெ மாதிரி யார் பேச்சையும் மதிக்காத ,ஒரு ராணி சீனாவை ஆள்கிறார்.. கஜானா காலி.. ஆட்சி செய்ய முடியல.. இங்கே எப்படி பஸ் கட்டணம், பால் விலை எல்லாம் உயர்த்தி தன் கையாலாகாத்தனத்தை புரட்டாசித்தலைவி நிரூபிச்சாங்களோ அந்த மாதிரி அந்த ஊர் ராணி ரயில்வே டிபார்ட்மெண்ட்டை அடகு வெச்சு காலம் தள்ள வேண்டிய சூழ்நிலை.. எல்லா ஊர்லயும் பொம்பளைங்க ஆட்சி இப்படித்தான் போல..

சுன்யாட்சன் என்பவர் சிப்பாய் கலகத்தை ஆரம்பிக்கிறார்.. ராணிக்கு பண உதவி செய்ய வேண்டாம் என இங்கிலாந்திடம் கேட்டுக்கொள்கிறார். அவர் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படுது.. சீனாவில் நடத்தும் புரட்சிக்கு ஜாக்கிசான் தான் தலைமை.. ஆனா அவர் தமிழ்நாட்ல எப்படி கேப்டன் செயல்படாம சும்மா இருக்காரோ அந்த மாதிரி சும்மாதான் இருக்கார்.. 

http://s11.allstarpics.net/images/orig/f/e/fe7qis8csv48c8vq.jpg
ஜாக்கிசான் படம்னா மக்கள் என்ன விரும்புவாங்க? ஏதோ காமெடி இருகும் , அதிரடி சாகசம் இருக்கும்னு தானே ஆவலா இருப்பாங்க.. சரி போர் சம்பந்தப்பட்ட படம்னா ஓரளவு ஃபைட் சீனாவது காட்டனும்.. சும்மா தொண தொண னு பேசிட்டே இருக்காங்க.. செம கடுப்பு..

சுன்யாட்சன் குடியரசுத்தலைவரா தேர்ந்தெக்கப்படறார்.. சீனா முழுவதும் கைப்பற்றப்பட்ட பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் தான் சீனாவின் குடியரசுத்தலைவர் ஆகனும்னு சுன்யாட்சன் பதவி விலகறார்.. எல்லாரும் கை தட்டி அந்த முடிவை வரவேற்கறாங்க.. தியேட்டர்ல நம்மாளுங்க செம காண்ட்ல கிளம்பறாங்க.. 

நாட்டுக்கு ஒரு நல்லவன்ல சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எப்படி ஏமாற்ற,ம் அடைஞ்சாங்களோ. அந்த மாதிரி ஜாக்கிசானின் ரசிகர்கள் இதுல ஏமாற்றம் அடைஞ்சு கிளம்பறாங்க.. 

படத்துல ஜாக்கிசான் வர்ற நேரத்தை விட சுன்யாட்சனா வர்றவர் நடிப்புதான் நல்லா இருக்கு.. அவருக்கு தான் அதிக காட்சிகள் வேற.. 

http://mimg.sulekha.com/english/1911/stills/1911-film-049.jpg

ரசிக்க வைத்த வசனங்கள்

1. நாங்க எங்கே வாழந்தாலும் சீனா தான் தாய்நாடு.. தாய் நாட்டுக்கு முன்னால தாத்தா சொத்து  முக்கியம் இல்ல. இந்த சொத்தை வித்து வந்த பணத்தை புரட்சிக்கு நான் தர்றேன்.. 

2. ரயில் துறையை அடமானம் வெச்சா  நம்ம மானமே போயிடும்னு மக்கள் பேசிக்கறாங்க.. 

ஆள்றது நான்.. அவங்க என்ன சொல்றது? நான் என்ன கேட்கறது? ( இந்த ராணியோட டி என் ஏ வை தூண்டி விட்டு ஜெ வுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி வெச்சிருப்பாங்களோ? )

3. நீங்க கொடுக்கப்போற பணத்தை வெச்சு கோயிலா கட்டப்போறாங்க?ஆயுதங்களை வாங்கி எங்களை அழிப்பாங்க...

. 4. நம்ம 2 பேருக்கும் வயசு 40.. ஆனா 50 வயசுல தான் எல்லா குழப்பங்களும் வரும்னு சொல்றாங்க.. 

5, என்னை கொன்னு போட்டுட்டு இந்த சுவர்ல இருக்கற ஃபோட்டோ மாதிரி மாட்டி வைக்க ஆசைப்படறீங்களா?

6. உங்க ஆட்சி மாறப்போகுது.. 

அதானே, நாடு 2 பட்டாலும் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே.. 

7. உயிரோட இருக்கனும்னு ஆசைப்பட்டா அந்த காலை வெட்டியே ஆகனும்.. கொஞ்சம் பொறுத்துக்குங்க.. 

ஆ ஆ ஆ

ஏய்... அறுக்கறதை நிறுத்து,.. அவர் இறந்துட்டாரு.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGwYnd-Fv9DaLA2eAI99Z-MK2idrQBWR-4MuRPE8kUzSyPqLut6VyV5fxZMSs-rj2G2gENmqCMb3HhnUf4a1cSY0PN8Y2BWpysL9y-9MpdDLarn4QPlGNAEXKaXH5N3g29PDZV52syEh0y/s1600/li-bing-bing4.jpg

8. அடிக்கடி சொல்வீங்களே.. ஒரு தடவை தோத்தா இன்னொரு தடவை ஜெயிச்சே ஆகனும்னு ஒரு தத்துவம்.. இப்போ அதை சொலுங்க.. 

9.  உன் கை...?

போராட்டத்துக்கு காணிக்கையா கொடுத்துட்டேன் ( ஆனா ஒரே ஒரு விரல் மட்டும் தான் கட் ஆகி இருக்கு... வசனகர்த்தா மிஸ்டேக் போல)

10.  புரட்சியால மட்டும் தான் மக்களோட வாழ்க்கைத்தரம் உயரும்.. 

11. பணத்தை கொண்டு வர்லை.. நம்பிக்கையை கொண்டு வந்திருக்கேன்.

12. என்ன சார்  .. கோபத்துல ஒவ்வொரு ஜாடியா உடைச்சிட்டு இருக்கீங்க/ இந்தாங்க சார்.. உடைங்க.. 

சார்,, இந்தாங்க .. இதை உடைங்க.

போதும்  போர் அடிக்குது.. நீங்களே உடைங்க.. 

.  13.  ஹீரோயின் ஜாக்கியிடம் - நம்ம குழந்தையை நான் சுமந்துட்டு இருக்கேன்.. ( ஆடியன்ஸ் - இது எப்போ நடந்தது சொல்லவே இல்ல? ஏப்பா ஆபரேட்டர்.. இந்தப்படத்தை நிறுத்திட்டு அந்தப்படத்தை போடு . சீனாவது பார்க்கலாம்.. ) # சீனா படத்தில் சீனா?

14. இப்போ புரட்சி ஜெயிச்சாச்சு. மன்னர் குடும்பத்தை என்ன செய்யப்போறீங்க? கொல்லப்போறீங்களா?

புரட்சி ஜெயிச்சா மன்னர் குடும்பத்தை கொல்லனும்னு அவசியம் இல்ல.. அவங்களும் இந்த நாட்டோட குடி மக்கள் தான்.. 


http://asiapacificarts.usc.edu/files/images/20111013174981911.png?AspxAutoDetectCookieSupport=1

ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்‌ஷன் 2ம் குறிப்பிட்டு சொல்லும் அளவு இருக்கு.. போர்க்காலத்தை அப்படியே கண் முன் வந்து நிறுத்துது.. சைனாவில் வேண்டுமானால் இது ஹிட் ஆகலாம்..

STARRING:  Jackie Chan, Li Bing Bing, Zhao Wen Xuan, Joan Chen, Jaycee Chan

DIRECTOR:  Jackie Chan, Zhang Li

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்.

சி.பி கமெண்ட் - ஜாக்கிசான் ரசிகர்கள் கூட பார்க்க முடியாது

டிஸ்கி -

வித்தகன் - வின்னர் ?- சினிமா விமர்சனம்

 

வித்தகன் - எள்ளல் நிறைந்த ஆர் பார்த்திபன் வசனங்கள் - காமெடி கலாட்டா

 

http://i1.sinaimg.cn/ent/m/c/2009-08-30/U1584P28T3D2675876F326DT20090830033439.jpg

Friday, November 18, 2011

வித்தகன் - வின்னர் - சினிமா விமர்சனம்

http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/10/Viththagan-Tamil-Movie-2011-Poster-488x400.jpg 

அசிஸ்டெண்ட் கமிஷனராக பகலில் வேலை பார்க்கும் குண்டக்க மண்டக்க ஆர். பார்த்திபன் இரவில் ராபின் ஹூட்டாக மாறி ரவுடிகளை போட்டுத்தள்ளுகிறார்.. அப்போ அவர் எப்போ தூங்குவார்? எப்போ ரெஸ்ட் எடுப்பார்னு எல்லாம் யாரும் கேக்காதீங்க.. ஏன்னா நானும் கேட்கலை.. புரொடியூசரும் கேட்டிருக்க மாட்டார்னு நம்பறேன்... இது பார்த்திபனோட 50 வது படம்கறதால கொஞ்சம் விளையாண்டு பார்க்கலாம்னு ஆசைப்பட்டிருக்கார்.. 

படத்தோட விமர்சனத்துக்குள்ள போறதுக்கு முன்னால பார்த்திபனுக்கும் கமலுக்கும் உள்ள ஒரு சைக்காலஜிக்கல் ஒற்றுமையை பார்க்கலாம்..  குணா படத்தில் இருந்து கமலுக்கு ஒரு எண்ணம்.. ஸ்க்ரீன்ல தான் வர்ற ஒவ்வொரு சீனும் தான் மட்டுமே கவனிக்கப்பட வேண்டும்.. தன் நடிப்பு பிரத்யேக கவனத்தை பெற வேண்டும்னு நினைப்பாரு.. லேசா செயற்கை தட்டி நடிப்பாரு.. அதே போல பார்த்திபன்க்கும் ஒரு ஆசை.. தான் தான் செம பிரில்லியண்ட்.. மத்தவங்க எல்லாம் கேனை. அவன் இண்ட்டர் நேஷனல் கிரிமினல் ஆக இருந்தாலும் சரி மாக்கான் தான்னு நினைக்கறார்..

அவரோட எண்ணம் ரொம்ப தப்பு.. வில்லன் கேப்டன் பிரபாகரன்ல வர்ற மன்சூர் அலிகான் மாதிரி பலசாலியா, காக்கிசட்டை சத்யராஜ் மாதிரி புத்திசாலியா, ஏழாம் அறிவு வில்லன் போல் பிரமிக்க வைக்கும் அளவு காட்டிட்டு, அதுக்குப்பிறகு ஹீரோ வில்லனை வெல்வது போல் காட்னாத்தான் செம இண்ட்ரஸ்ட்டா இருக்கும்..

சரி படத்தோட கதைக்கு போலாம்.. ஹீரோவோட அப்பா ஒரு போலீஸ்காரர்.. அவர் ரவுடிகளை, சமூக விரோதிகளை ஒடுக்கறதால அதுல ஒருத்தன் அவரோட மகளை கொலை பண்ணிடறான்.. அதாவது ஹீரோவோட தங்கை.யை மர்டர்டு..வெறுத்துப்போன ஹீரோவோட அப்பா  வேலையை ரிசைன் பண்ணிட்டு வேற ஊர் போயிடறார்.. 

http://www.123stills.com/wp-content/uploads/2010/01/No-Buzz-About-Poorna%E2%80%99s-Viththagan.jpg

அப்பாவுக்கு தெரியாமயே ஹீரோ போலீஸ் வேலைக்கு படிச்சு அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆகி சமூக விரோதிகளை போட்டுத்தள்ளறார்.. தன் தங்கையை கொலை செஞ்ச வில்லன் இப்போ தாய்லாந்து நாட்டுல ... படம் லோ பட்ஜெட் என்பதால் ஹீரோ தாய்லாந்து போக முடியல.. தன்னோட சாணக்கியத்தனத்தால வில்லனை இங்கே வரவழைக்கறார்.. 

சாதாரண எக்ஸிக்கியூட்டிவ் முடிக்க வேண்டிய வேலையை கம்பெனி பாஸே செஞ்சா எப்படி இருக்கும்? அப்டி இருக்கு அந்த வில்லன் தமிழ் நாடு வர்றது..

சரி.. ஹீரோ ஆடும் ஆடுபுலி ஆட்டத்துல ஹீரோயினுக்கு என்ன வேலை? அவரை எப்படி கதைக்குள்ள கொண்டு வர்றது? ரொம்ப ஈசி.. ஹீரோ செய்யற ஒரு கொலையை அவர் நேர்ல பார்த்துடறார்.. என்ன ஏது? எதுக்காக அவர் கொலை செஞ்சார்ங்கற ஃபிளாஸ்பேக் எல்லாம் அவர் தெரிஞ்சுக்காததுக்கு முன்னேயே அவர் ஒரு போலீஸ் ஆஃபீசர்னு தெரிஞ்சதும் லவ்வ ஆரம்பிச்சடரார்.. ( நல்ல லவ்வுய்யா)

இடைவேளை ட்விஸ்ட் வேணுமே , அதுக்காக ஹீரோ போலீஸ்ல மாட்டிக்கறார்.. இடைவேளைக்குப்பிறகுதான் டர்னிங்க் பாயிண்ட்.. தண்டனை முடிஞ்சு ஹீரோ வெளீல வந்து தாதா முன்னேற்றக்கழகம்னு எதும் ஆரம்பிக்காமயே தாதா ஆகிடறார்.. 

இப்போ ஊர்ல 3 தாதா.. ஒண்ணு ஹீரோ தாதா..  2 வில்லன் தாதா.. 3 சைடு வில்லன் தாதா.. 2வது வில்லன் தாதா ஹீரோ கிட்டே கெஞ்சறாரு.. நீங்க 3வது வில்லனை போட்டுடுங்க...அப்போ நான் முதல் இடத்துக்குப்போயிடுவேன்.... நீங்க 2வது இடத்துக்கு வந்துடலாம்னு.. 

ஹீரோ தன்னோட அதி புத்திசாலித்தனத்தால என்ன செய்யறார்.. எப்படி ஜெயிக்கறார்? பழி வாங்கறார்ங்கறதுதான் மிச்ச மீதி திரைக்கதை..

பார்த்திபன் சும்மா சொல்லக்கூடாது மிடுக்கான அசிஸ்டெண்ட் கமிஷனர் ரோல்லயும் சரி.. தெனாவெட்டான தாதா ரோல்லயும் சரி. அசால்ட்டான நடிப்பு.. படம் முழுக்க அவரது எள்ளல்கள், நக்கல்கள், நையாண்டிகள் கொட்டிக்கிடக்கு.. ரசிக்கலாம்.. சில இடங்களில் மட்டும் ஓவர்..

பூரணி  சும்மா ரிலாக்‌சேஷனுக்கு , அதாவது ஆடியன்ஸூக்கு.. 2 டூயட் உண்டு.. ஆனால் மேற்படி ரசிகர்கள் எதிர்பார்க்கும் மேற்படிகள் இல்லை.. 

மெயின் வில்லன் நடிப்பு ஓக்கே.. டெபுடி கமிஷனராக, அரசியல்வாதியாக வருபவர் நடிப்பும் அருமை.. 

எடிட்டிங்க் செம ஷார்ப்.. ஒளிப்பதிவு கண்ணுக்கு உறுத்தல் இல்லாமல் இருக்கு,.. இசை ஓக்கே 2 பாடல்கள் ஆல்ரெடி ஹிட்.. 

http://pirapalam.com/wp-content/uploads/2011/11/18-vithagan300.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயின் அருகே ஹீரோ ஜீப்பில் போகும்போது ஹீரோயின் கண்களுக்கு வில்லனாகத்தெரியும் ஹீரோவின் 2 கண்கள் மட்டும் தனியாகப்போய் ஹீரோயின் ஜாக்கெட் விளிம்பில் எட்டிப்பார்க்கும் சீன் என்னதான்  ஜிம் கேரியின் மாஸ்க் பட உருவல் என்றாலும் ரசிக்கும்படி இருக்கிறது..

2.   டி வியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போலீஸ் ஆஃபீசர் பார்த்திபன் ஹீரோயின் கண்களுக்கு மட்டும் அவரை எச்சரிப்பது போன்ற ஹீரோயின் கற்பனை செம காமெடி.. 

3. ஒரு பாடல் காட்சியில் பூரணாவின் சேலையில் இருக்கும் பூ டிசைன் அப்படியே பூவாக மலர்வது செம உத்தி.. கலக்கல் சீன் அது. 

4. இடைவேளைக்குப்பிறகு தாதா ஆகும் ஹீரோவின் ஆஃபீஸ்க்கு ஹீரோயின் வரும்போது அவரது ஆஃபீஸ் இண்ட்டீரியர் டெக்கரேஷன் செம.. ஆர் பார்த்திபன் ஆர்ட் டைரக்‌ஷனில் தனி கவனம் செலுத்துபவர் என்பதற்கான சான்று.. 

5. வசனகர்த்தா பார்த்திபனின் அபார உழைப்பு படத்தின் வெற்றிக்கு பக்க பலம் சேர்க்கிறது..  அவரது நக்கல் நையாண்டி வசனங்கள் மட்டும் 42 ஜோக்ஸ் தேறும்.. 

6. போர் அடிக்காமல் பர பர என காட்சிகளை நகர்த்திச்செல்லும் வேகம் அழகு..

7. ஒரு பாடல் காட்சியில் அதிகாலை செய்தித்தாள் போலே நீ வந்தாய் என்ற அழகு வரிகளுக்கு உயிர் ஊட்டும்படி ஒரு புறா கதவை திறந்து உள்ளேவருவது சோ க்யூட்.. 

8. வில்லன் கூட வரும் எடுபுடி கிழவன் செம காமெடி நடிப்பு டயலாக் டெலிவரி.. செம



http://suriyantv.com/wp-content/uploads/2011/10/vithakan-vizha.jpg
இயக்குநர் ஆர் பார்த்திபனிடம் சில கேள்விகள், பல சந்தேகங்கள். சில ஆலோசனைகள்

1.  மகன் அப்பாவை டேய் என கூப்பிடுவது கவுண்டமணியின் காமெடிக்கு ஓக்கே.. வில்லனின் மகனுக்குமா? அது கூட தேவலை.. கொலை நடந்த அன்று நீ எங்கே போனே? என அப்பா கேட்கறப்ப ஒரு மகன் அப்படியா தன் தந்தையிடம்  நான் ஃபிகர்ட்ட ஜல்ஸா செய்ய போனேன்னு சொல்வான்?

2. ஒரு கொலை நடக்குது. அதை செஞ்ச ஹீரோ கொலை ஆன டெட் பாடி சர்ட் பாக்கெட்ல இருந்து செல் ஃபோனை எடுத்து எஸ் எம் எஸ் அனுப்பறார் வில்லனுக்கு.. அதை பார்த்து அங்கே வர்ற வில்லன் கொலை செஞ்சதா மாட்றதா சீன்.. மெசேஜ் பார்த்து அவன் கால் பண்ணீ கன்ஃபர்ம் பண்ண மாட்டானா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட வெச்சு கொலை நடந்த ஒரு மணி நேரம் கழிச்சே வில்லன் வந்தான் கற உண்மை தெரியாம போகாதா? அந்த செல் ஃபோன்ல ஹீரோவோட கை ரேகை இருக்கே?

3.  ஹீரோயின் பூரணா முகம் உடம்புக்கு செமயா பவுடர் போடறாங்க பாராட்டறேன்.. ஆனா முதுக்குக்கு நோ மேக்கப்... இதனால டூயட் சீன்ல அவர் நேரா நிக்கறப்ப கலரா தெரியறார்.. திரும்பறப்ப கறுப்பா தெரியறார்.. ( அவர் முதுகை எல்லாம் உன்னை யார் நோட் பண்ண சொன்னது?ன்னு கேக்காதீங்க.. அதை நான் பார்க்கலை.. பக்கத்து சீட் ஆள் சொன்னார்.. )

4. எல்லா படத்துலயும் வில்லன்க ஏதாவது கெட்ட தகவலை சொல்ற தன் ஆளுங்களையே டபக் டபக்னு சுட்டுட்டே இருக்காங்களே.. ஆள் பற்றாக்குறை வராதா? இந்தப்படத்துல 4 பேர் அவுட்.. பாவம்..

5. டூயட் சீன்ல கூட ரிவால்வர் வெச்சுக்கிட்டே ஹீரோ அலையறாரே.. அது ஏன்? வித்தகன் வித் த கன்  என்பதாலா?

6. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை போட்டுத்தள்ளும் வில்லன் அதே ஸ்பாட்க்கு ஹீரோவை ஏன் வரச்சொல்லனும்? கொஞ்சம் தள்ளி வர சொல்லக்கூடாதா? ஹீரோயின் செயின் , ரத்தம் எல்லாம் அங்கே இருக்கே.. அதை  ஹீரோ பார்த்துட்டா ஹீரோயினை பிணையக்கைதியா வெச்சு நாம பண்ற டிராமா ஹீரோவுக்கு தெரிஞ்சுடுமேன்னு கூட  யோசிக்காத மாங்கா மடையனா?

7. பார்த்திபன் சார்.. 1 சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே.. போலீஸ் யூனிஃபார்ம் கெட்டப் செம.. ஆனா தாதா கெட்டப் நல்லாவே இல்ல.. ஏதோ நோய் வந்து இளைச்ச ஆள் மாதிரி இருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD5cSwtAZhEj-_dzqrGsvu3aV6BoAQiQAXuokex0WIeUVBkt1j7WXth3tUGzIcAEoJPvP_D216lbEWdqUfibE-4qayZPcdd75uTbZAI_N4Ej3lZyNjOd7Mg_bDDX8u80QT2TWf5NFf9MPY/s1600/poorna-hot-navel-stills-01.jpg

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42


எதிர்பார்க்கப்படும் குமுதம் மார்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - ஆர் பார்த்திபனின் ரசிகர்கள், அவரது நக்கல் நையாண்டியை ரசிப்பவர்கள் பார்க்கலாம்.. ஃபேமிலியோட பார்க்கர மாதிரி டீசண்ட்டாதான் இருக்கு..

ஈரோடு ஆனூர் -ல் பார்த்தேன்

டிஸ்கி - வழக்கமாக போடும் ரசித்த வசனங்கள் போடாததற்கு காரணம்

. ஆல்ரெடி பதிவு நீளம்.. வசனங்கள் மட்டும் 45 டயலாக்ஸ் சேர்ந்துடுச்சு.. அதை தனி பதிவா போட்டுக்கலாம்-னு ஐடியா

கழகத்தை காட்டி கொடுத்தவன் ( ஜோக்ஸ்))

1.மேனேஜர் சார், எதுக்காக என்னை டிஸ்மிஸ் பண்றீங்க?

சாரி மிஸ்.. இந்த ஆஃபீஸ்ல பொண்ணுங்களுக்கு 21 வயசு வரை தான் அனுமதி # யூத்துங்கோ

-----------------------------------

2. உங்க ஆபீஸ் பிகர்களுக்கு 60 வயசு இருக்குமா?

ஆமா, 3 ஃபிகருங்க வயசையும் கூட்டுனா 60 வரும் சார்

---------------------------------

3. குழந்தைகள் தினம் என்பதை சாக்காக வைத்து என் கன்னத்தை கிள்ள நினைக்கும் ஆஃபீஸ் ஃபிகர்களை எச்சரிக்கிறேன்

--------------------------------

4. அத்தான், எங்க வீட்டுக்கு வந்தா மட்டும் டிஃபன் மட்டும் தான் சாப்பிடறீங்க, ஏன்?

அப்பத்தானே எப்பவும் என்னை தண்டச்சோறுன்னு சொல்ல முடியாது

-----------------------------------
5.நூலகம் ஹாஸ்பிடலா மாறுதே , இதுல நடிகர் விஜய்க்கும் பங்கு இருக்கு..

எப்டி?

ஆஸ்”பத்ரி” ஆகுதே?

--------------------------------------
6. . பாதயாத்திரை , ரதயாத்திரை என்ன வித்தியாசம்?


உடம்பு குறையனும்னு வாக்கிங்க் போனா அது பாதயாத்திரை, அலைச்சலா இருக்குனு ஓய்வெடுக்கனும்னா அது ரதயாத்திரை

---------------------------------

7. மேடம், ஏன் ஓவர் ஆக்டிங்க் பண்றீங்க?

சாதா ஆக்டிங்க்னா 5 லட்சம் சம்பளம் தர்ற புரொடியூசர் ஓவர்ஆக்டிங்க்னா சம்பளம் சேர்த்துதருவார்னு நப்பாசை

---------------------------------------

8. ஆண் குழந்தைகளைப்பற்றி ஏன் நீங்க கவிதையே எழுதறது இல்ல? தற்பெருமை பிடிக்காத தமிழன் சார் நான்


----------------------------------

9. மாமியார் வீட்ல மட்டும் ஏன் மாப்ளைங்க மாப்ள முறுக்கோட இருக்காங்க? 

ஸ்வீட் குடுத்துப்பாருங்க, ஸ்வீட்டோட இருப்போம்,

----------------------------

10. .எதிர் பால் ஈர்ப்பு வருவதும் , பின்  எதிர்ப்பால் ஈர்ப்பு கூடுவதும் காதல் புத்தகத்தின் தவிர்க்க முடியாத பக்கங்கள்

------------------------------------

11 . அன்பில்லாத உள்ளத்திற்கு அழகு மட்டும் இருந்தும் என்ன பயன்?

------------------------------

12. ஜட்ஜ் - இப்போ உங்க 2 பேர் கிட்டேயும் சில கேள்விகள் தனித்தனியா கேட்கப்போறேன்,

ஆ ராசா & கனிமொழி - எப்படியும் 2 பேரும் ஒரே பதில்தான் சொல்வோம்

-----------------------------

13. .அசைவம் உண்பவர்கள் எண்ணிக்கை உலகில் அதிகம் என்பதற்காக அசைவம் சாப்பிடுவது சரி என்று ஆகி விடாது

-----------------------------

14. . சார்.. நான் சென்னைக்கு புதுசு, அறிவாலயத்துக்கு எப்படி போகனும்? 

சாரி சார், நான் வழி சொன்னா கழகத்தை காட்டிக்கொடுத்தவன்னு பழி சொல்லிடுவாங்க

---------------------------------


15.ஜோசியரே!  கறுப்புப்  பணம்  எப்போ  மீட்கப்படும்...?


என்னைக் கேட்டா? பிரைம்  மினிஸ்டரை  கேளுய்யா!


விளையாடறீக்களா? அவரைக் கேட்டா உங்களை  கேட்கச் சொன்னாரே?

----------------------------------------------


16. எக்ஸாம்  ஹால்ல  ஒரே  குழப்பமான  மன  நிலைல  இருந்தேன்.


ஏன்?

பக்கத்து  சீட்ல  பக்கா ஃபிகர்..  சைட்  அடிக்கவா? காபி  அடிக்கவா?னு  டவுட்.


---------------------------------------------
17. லைப்ரரியன்  தானே  நீங்க? எதுக்கு  வெள்ளை  பேண்ட்,  வெள்ளை  சட்டை, வெள்ளை  கோட் போடறீங்க?


சொல்ல  முடியாது....  லைப்ரரிய  ஹாஸ்பிடலா  மாத்திட்டா  நான்  Dr. ஆகிடுவேனே!

-----------------------------------------


18. .ஐஸ்வர்யாராய்  எதுக்காக  தமிழ்நாடு  வர்றார்?


கூடங்குளம்  அணு உலையால  எந்த  பாதிப்பும்  இல்லைனு  சொல்லி  மக்களை  சமாதானப்  படுத்த.

-----------------------------------------


19. மேரேஜ்  ஆன ஆண்கள்  எல்லாம் இந்த  ஆட்சில  சந்தோஷமா  இருக்காங்களே, ஏன்?


போன  ஆட்சில  நடந்த  திருமணங்கள்  செல்லாது...  அப்டினு  அற்விப்பு  வரப்  போகுதாம்.


---------------------------------------


20. .என்  கணவர்மேல  நம்பிக்கை வெச்சது  தப்பா  போச்சு.

ஏன்?

நான்  ஊர்ல  இல்லாதப்ப  என்க்கு  தெரியாதுனு  நம்பி  கை வெச்சுட்டார்  என்  தங்கச்சி  மேல.


------------------------------------

டிஸ்கி - அன்லிமிட்டட் ஸ்கீமில் நெட் கனெக்‌ஷன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என் பிளாக் ஓப்பன் ஆவதாகவும் ப்ரீ பெயிடு சிஸ்டம் வைத்திருப்பவர்களுக்கு இமேஜ், படங்கள் காரணமாக டவுன்லோடிங்க் தாமதம் ஆவதாகவும் பலர் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டதால் மாற்று வழிகளை யோசிக்கும் வரை இமேஜ் போடாமல் பதிவு போடுகிறேன்

Thursday, November 17, 2011

பஸ், பால், மின் கட்டண உயர்வு - ஜெ அறிவிப்பு # காமெடி கடுப்பு கும்மி

  தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி வழங்காததால் தமிழகத்தின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அவலத்தினால் தமிழகம் பெரும் கடன் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்பதில் இருந்து மின் பற்றாக்குறை மாநிலமாக உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கே சேரும் என்றும் பரபரப்பாக பேசினார். இதனை சமாளிக்க பஸ், பால், மின் கட்டண விலையை உயர்த்திட முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார். 

இதன் படி கட்டண உயர்வு விவரம் வருமாறு: பஸ் கட்டணம் சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் படி சென்னையில் 2 முதல் 3 ரூபாய் வரையும், மாநிலத்தில் நகர்ப்புற பஸ்களில் கி.மீட்டருக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவும், வெளியூர் பஸ்களில் கி.மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ்சில் மற்றும் சொகுசு ‌பஸ்களில் கி.மீட்டருக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 52 பைசாவில் இருந்து 70 பைசாவா உயர்த்தி வசூலிக்கப்படும். நகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிக பட்சம் 13 லிருந்து 16 ஆகவும் இருக்கும். ஆவின் பால் லிட்டருக்கு 17. 75 லிருந்து 24 ஆக ( 6. 25 ) உயர்த்தப்படுகிறது. விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையும் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை ரூ. 18லிருந்து 20 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 26லிருந்து 28 ஆக உயர்கிறது.



1.ஜெ வின் சின்னம் இரட்டை இலை. அவர் ஆட்சியில் பொருட்கள் எல்லாம் இரட்டை விலை

---------------------------------------

2. மகாஜனங்களே, இன்று ஒரு நாள் மட்டும் விலை ஏற்றத்திற்கு எதிராக ட்வீட் போடுங்க, நம் குரல்கள் கோட்டையை எட்டட்டும் .opp

----------------------------------

3. பஸ் டிக்கெட் விலை ஏற்றத்தால் சசிகலாவின் கணவர் கணவர் மட்டும் அல்ல , நாம் அனைவருமே நடராஜன்கள் ஆகி விட வேண்டும் போல் இருக்கே?

-------------------------------------

4. கலைஞர் - விலையேற்றம் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.. மானம் உள்ள தமிழன் இது பற்றி பேசுவான் # அய்யோ தலைவரே,,அப்போ......

-----------------------------

5. எம் ஜி ஆர்-ன் ஆவி - ஹூம் சினிமால நல்லா ஆடுனாங்க, அரசியல்லயும் செம ஆட்டம் போடறாங்க.அண்ணா என்னை மன்னியுங்கள்

------------------------------------------

6. விலை ஏத்தனும்னு நினைச்சா டாஸ்மாக், சிகரெட், கஞ்சா, மட்டன், சிக்கன் இப்படி ஏத்துங்க மேடம்

------------------------------------

7. மேடம், எதுக்காக இப்படி தமிழர்களை பழி வாங்கறீங்க?

2006-ல என்னை பழி வாங்குனாங்களே? மறக்க முடியுமா? பழிக்குப்பழி

-------------------------------------------

8. டம் டம் மேடம், எதுக்காக எல்லா விலையையும் இப்படி உயர்த்துனீங்க?

தமிழர்கள் சிக்கனமா இருக்கனும்னு உணர்த்த

-----------------------------------------

9. நடிகைஅமலா பால் தனது சம்பளத்தை 32% உயர்த்தினார், மேலும் ஜெ வுக்கு நன்றி சொன்னார் @ இமேஜினேசன்

------------------------------------------

10. ஜெ திருப்பதி மாதிரி இறங்கி வர மாட்டாங்க.. விலையை ஏற்றி விட்டு மக்கள் வயிற்றில் அடிப்பாங்க

------------------------------------

11. அதிகார மமதையில் ஆடாதே..நம்பி வந்த  நடுத்தர மக்களை கை விடாதே

------------------------------

12. ஷாக் அடிக்குது சோனா......நீ துள்ளற வீணா.. ஹார்ட் துடிக்குது தானா.. நீ கோர்ட் பக்கம் போனா

-----------------------------

13. மேடம், சகுனமே சரி இல்லை.. பால் விலையை ஏத்தி நம்ம ஆட்சிக்கு பால் ஊத்திட்டீங்கனு நினைக்கறேன்

----------------------------------

14. எழவு வாசம் இலைவசம், இலவசம் விலை ஏற்றம்

-----------------------------------

15. டாக்டர் பட்டம் கொடுத்தாங்கங்கறதுக்காக இப்படி தமிழக மக்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுக்கனுமா? மேடம்?

---------------------------------------

16. வேலாயுதம் படத்துல விஜய் பால்காரரா நடிச்சப்பவே நினைச்சேன்யா.. இப்படி பால் விலை கன்னா பின்னான்னு ஏறும்னு

---------------------------------------

17. அன்பில்லாத அம்மா! இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியல.. இங்கே இருக்கும் தமிழனையாவது சாகடிக்காமல் காப்பாற்றவும்

-----------------------------------

18. அதிமுக - அடங்காமல் திமிருடன் முரண்டு பிடிக்கும் கழகம்????

--------------------------------

19. அமாவாசைன்னா  பைத்தியம் முத்தும், அம்மா உங்க ஆசைகளால எங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கே?

---------------------------------

20. ஆட்டமா? விலை ஏற்றமா? ஏத்தமா? உனக்கு இது ஏத்ததா? வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் இருக்குது, செக்‌ஷன் 365

----------------------------------

21.உடன் பிறப்பே!பிசாத்துப்பணம் 1 3/4 லட்சம் கோடிக்காக கழக ஆட்சியை இறக்கி வைத்தாய்.அரக்கியை ஆட்சி பீடத்தில் ஏற்றிவைத்தாய்!அனுபவி தமிழா அனுபவி

-----------------------------------------

22. போஸ்ட் கார்டு விலை50 பைசா தானே? அதை ஏன் ஒரு ரூபாய் ஆக்கிட்டீங்க?

பால் விலை ஏறுன மாதிரி தபால் விலையும் ஏறிடுச்சோ என்னவோ?

-------------------------------------------------

23. வணக்கம் ஜெயா செய்திகள்.. எந்தெந்த பொருள்கள் எல்லாம் விலை ஏறவில்லை என்பது பற்றி ஒரு பார்வை.....

----------------------------------------

24. கார்த்திகை 1 அன்னைக்கு விளக்கேத்தி வைப்பீங்கன்னு பார்த்தா இப்படி விலையை ஏத்தி வைச்சுட்டீங்களே?

--------------------------------------

25.அண்ணே.. டீ இன்னும் வர்லை.. 

டேய். நாயே பாலே இன்னும் வர்ல.. இனி வராது போல.. ஓ சி பேப்பரை படிக்காம எந்திரிச்சிப்போ நாயே

-----------------------------------------------
26. .சசிகலா- அக்கா அக்கா புரட்சி அக்கா. நம்ம ஆட்சி நல்ல ஆட்சி இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுக்கா, அதை சொன்னா வெக்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு

-----------------------------------------------

27. இன்னைக்கு செத்தா நாளைக்கு மட்டும் இல்ல.. எந்த நாளும் இனி பால் கிடைக்காது போல.

-----------------------------------------

பவர் ஸ்டார் ஜோக்ஸ்


1.டீச்சர் - யார் கிட்டே கேள்வி கேட்டேனோ அவங்க மட்டும் பதில் சொன்னா போதும்

, மக்கு ஸ்டூடண்ட் - டீச்சர், இது ஸ்கூலா? சட்டசபையா?

----------------------------------------

2. கெஞ்சல் என்பது ஆண் பால், கொஞ்சல்  என்பது பொது பால், மிஞ்சல் மட்டுமே பெண்பால், எல்லோரையும் ஈர்த்திருப்போம் அன்பால் # டெடிகேட்டட் டூ அமலா பால்

-------------------------------------

3. இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன் - நடிகை ஸ்ரேயா # மேடம், நாங்க தான் அதுக்கு வெக்கப்படனும் , நீங்க ஏன்?

------------------------------------

4. மாப்ளை சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றாருன்னு சொல்றீங்களே? பெங்களூரா? சென்னையா?

ஹி ஹி திருப்பூர்ல பனியன் கம்பெனில சூப்பர்வைசர்

----------------------------------

5. நீங்க பார்ட் டைம் ஜாப்பா (JOB) கதைஎழுதறீங்களே, ஃபுல் டைம் ஜாப் என்ன?

எழுதுன கதையை ஒவ்வொரு  பத்திரிக்கை ஆஃபீஸ்க்கா அனுப்புவேன்

-----------------------------------



6. நான் சன் டி வி பிக்சர்சில் நடிக்கும் நாள் வரப்போகிறது - பவர் ஸ்டார் சீனிவாசன் #ஹா ஹா நான் சொல்லலை? சன் டி வி க்க்கு நேரம் சரி இல்லைன்னு?

------------------------------------

7. தமிழ்நாட்டிலேயே பாரம்பரிய முறையில் சமைக்கப்பட்டு தயார் ஆகும் கம்மங்கூழ் நாமக்கல்லில் நடை பாதை கடைகளில் கிடைக்கிறது செம டேஸ்ட்பா

--------------------------------

8. ஜோசியரே, நான் தொட்டது எதுவும் துலங்கறது இல்ல.எனக்கு நல்ல நேரம் எப்போ பிறக்கும்.

எங்கே உங்க கையை குடுங்க.ஆ  ( ஆள்அவுட் பை ஹார்ட் அட்டாக்)

-------------------------

9. கூடங்குளம் அணு எதிர்ப்பாளர்கள் மீது 66 வழக்குகள் : தேசிய பாதுகாப்பு சட்டம் தயாராகிறது # மீண்டும் ஒரு எமர்ஜென்சியா? வெளங்கிடும்யா நாடு

----------------------------

10.மழலை நம் முதுகில் ஏறி உப்பு மூட்டை விளையாடுகையில் நமது மன பாரங்கள் இறங்குகின்றன

------------------------------



11. காணிக்கையை ஏற்றுக்கொள்ளாத, அதை விரும்பாத கடவுள் - நம்மைப்பெற்ற அம்மா மட்டுமே

------------------------------

12. கண்ணகியிடம் இல்லாத ஏதோ ஒன்று மாதவிகளிடம் இருப்பதாக கோவலன்கள் நினைக்கிறார்கள், ஆனால்  கண்ணகிகள் அதற்குப்பழி வாங்க படி தாண்டுவது இல்லை

-------------------------------

13. சாம்பார், ரசம் இவற்றை ருசிக்காமல் வாசம் நுகர்ந்தே உப்பு , உரைப்பு சரியாக இருக்கிறது என்பவர்களே சமையல் கலையில் கை தேர்ந்தவர்கள்

--------------------------

14. பலரின் ஏக்கத்துக்கு கன்னி ஒரு காரணம் , சிலரின் தூக்கமின்மைக்கு கணினி ஒரு காரணம் # ரீ மிக்ஸ் ட்வீட்

--------------------------

15. நான் அப்படிதான், சமைக்கும்போது ருசி பார்க்க மாட்டேன்.


..H/O THIS LADY - அடப்பாவி, அப்போ நீயே டேஸ்ட் பார்க்காததை நாங்க ஏன் சாப்பிடனும்?

----------------------------



16.  நீங்க சமையல்ல எக்ஸ்பர்ட்டா?

ஹூம்.. அப்படி இல்லைன்னா என் மனைவி என்னை டைவர்ஸ் பண்றேன்னு மிரட்றாளே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

-------------------------------

17. அப்பா! அம்மா உன்னை கூப்பிடுது வாப்பா.

வேலையா இருக்கேன்னு சொல்லு..

மனைவி - அந்த வேலையை கிடப்புல போடு.. இதைக்கொண்டு போய் குப்பைல போடு

-----------------------------------

18. பல் வலி , தொண்டை வலியால உன் மனைவி அவஸ்தைப்படறாளே, DR ட்ட காட்டலை?

H/O மாலா - யார் கிட்டயும் அவ  பல்லை காட்றது எனக்குப்பிடிக்காது

-------------------------------------

19. மழலைகளின் பெருமை பாடாதவர்கள் மானிடராய்பிறந்து என்ன பயன்?

--------------------------------

20. அத்தான், உங்க பேருக்குப்பின்னால இனிஷியல் போடுங்க, முன்னால வேணாம்.

ஏன்?

எல்லாரும் N ராசா  என கூப்பிடும்போது எனக்கு என் ராசா-னு கேக்குது

-----------------------------------




டிஸ்கி -1   டைட்டிலுக்கான விளக்கம். பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவைகளால் நிராகரிக்கப்பட்ட ட்வீட்ஸ் மற்றும் ஜோக்ஸ் இவை எல்லாம். அதனால் டைட்டிலாக கேவலமான ஜோக்ஸ் என போடலாம்னு இருந்தேன்..கேவலம் வேறு , பவர் ஸ்டார் வேறு இல்லை என பலர் கருதுவதால் அவர் பெயரையே போஸ்ட்டுக்கும் வெச்சுட்டேன்,...


டிஸ்கி 2 - சில வருடங்களுக்கு முன்பு நான் எட்டாங்கிளாஸ் படிச்சப்ப என் கிளாஸ்ல 65 பேர், நான் எடுத்த ரேங்க் - 3 .. இப்போ சவால் சிறுகதைப்போட்டில கலந்துக்கிட கதைகள் 67. இதுலயும் நான் 3வது ப்ளேஸ்.. ஆண்டவா!! நான் முன்னேற சான்ஸ் நஹி?