Monday, August 29, 2011

ஃபிகரு ஒற்றை நாடியா? ரெட்டை நாடியா? எது டாப்?


1.ஒற்றை நாடியா இருந்தா பிடிக்குமா?ரெட்டை நாடியா இருந்தா பிடிக்குமா?எனகேட்டாள்  காதலி.நீ என் உயிர் நாடியா இருந்தா பிடிக்கும்னேன்#காணாத காதல்

-----------------------------

2. ஐ லவ் யூ சொல் 

என்றேன்.

ம்ஹூம், அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் 

என்றாள் காதலி.

அப்போ பேச நேரம் இருக்காது

என்றேன்,முகம் சிவந்தாள்

--------------------------

3. நறுமணக்காதல் என்பது என்ன?மல்லிகைச்சரத்தை கூந்தலில் சூடிய காதலி ஸ்கூட்டி ஓட்ட நீ பின்னால் அமர்ந்து செல்லும்போது நீ அனுபவிப்பது#லவ்வாலஜி

---------------------

4. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்றாள் காதலி,கூடா நட்பு கேடா முடியும் என்றேன்,ஓக்கே சொன்னாள் #தாங்க்ஸ் டூ கலைஞர்

--------------------------

5. நான் சேலையில் அழகா? சுடியில் அழகா? என்றாள் காதலி.ரோஜா செடியில் அழகா? கூந்தலில் அழகா? என்றேன்

------------------------


Nayantaras family forces Prabhu Deva


6. பத்திரிகையாளர் வேடத்தில் பூனம் பஜ்வா!#விருந்து,திரைச்சித்ரா மாதிரி மஞ்சள் பத்திரிக்கையா இருக்கப்போகுது, நிறைய பேரு மங்களகரமானதுங்கறாங்க

--------------------------

7, கவர்ச்சிக்கு மாறுகிறார் அனுயா!#என்னமோ வீடு மாறுகிறார்ங்கற ரேஞ்ச்ல நியூஸ் போடறாங்களே?இத்தனை நாளா குணச்சித்திரத்தை கொட்டிமுடிச்சுட்டாங்களா?

-----------------------------------

8. என் கிட்டே உனக்கு பிடிச்ச அம்சம் எது? என்றாள் காதலி.. டோட்டலாகவே நீ அம்சமா இருக்கியே அது தான் என்றேன்#லவ்வாலஜி

--------------------

9. இனி எனக்கு ஒரு SMS கூட அனுப்பாதே என்று கோபமாக SMS  செய்தாள் காதலி. ஓக்கே டன் என்று SMS  ரிப்ளை அனுப்பினேன்#ஊடல்

-----------------------------

10. 25 வயதுக்கு குறைவானவர்கள் "சரக்கு' அடிக்க தடை வரலாம்-செய்தி#நல்ல வேளை,சரக்கு அடிக்கறதுக்கு மட்டும் தடை வருது

A Hamster funny trick...:)
funny_hamster-wallpaper-960x640.jpga

11.மவுன சாமியார் மன்மோகன் சிங் : சத்ருகன் விமர்சனம் # என்னது? சாமியாரா? ச்சே! ச்சே!  “அப்படி” எல்லாம் இருக்காது

------------------------

12. பிரதமருக்கு சம்மன் -ஆ. ராசா வலியுறுத்தல் # கூட்டாளியை காட்டிக்கொடுத்த ஷோக்காளி!!!!

---------------------

13.ஆண்களை எடை போடுவதில் பெண்கள் கில்லடிகள், ஆனால் என்ன பரிதாபம்னா அவங்களும் ஓவரா எடை போட்டுடறாங்க # ஓவர் வெயிட் ஓமனாஸ்

------------------------------

14.  நமக்குப்பிடித்தமானவர்கள் மனதிற்குப்பிடித்தமானவை நமக்கும் பிடித்துப்போவது திண்ணம்

------------------------------

15. 60- ஆம் கல்யாணத்தை ஆர்ப்பாட்டமா கொண்டாடுனா சாதா தலைவன், 60 கல்யாணம் அமுக்கமா பண்ணிக்கிட்டா அவன் தான் சரித்திரத்தலைவன்

---------------



16. கண்களால் கிறங்கடித்தால் அது பெண்கள், உதடுகளால் சரக்கடித்தால் அது ஆண்கள்

--------------------------

17. டியர்,உன்னைப்பார்க்கும்போது எனக்கு குதிரை ஞாபகம் தான் வருது, இன்னா ஹைட் நீ?

சாரி. உன்னைப்பார்க்கறப்ப எனக்கு கழுதை ஞாபகம் தான் வருது

----------------------------------

18. வீட்ல இருந்த லேண்ட் லைன் ஃபோன் கனெக்‌ஷனை ஏன் கட் பண்ணிட்டீங்க தலைவரே?

நில மோசடி வழக்கு பாய்ஞ்சிட்டா?

------------------

19.  மெல்லத்திறந்த கதவு பட பாடலான தேடும் கண் பார்வை  தவிக்க தமிழின் சிறந்த கஜல் பாடல் #  SPB பேட்டி  IN  குமுதம்

---------------------------

20.  யோவ் பி ஏ, லிவ்விங்க் டுகெதர்னா என்னய்யா?

தலைவரே! மகளிர் அணித்தலைவி கூட இருக்கீங்களே? அதுதான்

-----------------------


 
 

21 தலைல அடிச்சுக்கிட்டே ஆடியன்ஸ் படம் பார்க்கறப்ப பல்லை கடிச்சுக்கிட்டே வசனம் பேசுறவரு எங்க கேப்டன் #CaptainBirthday


--------------------------

22. முதல் முறையா பேக் ஷாட் அறிமுகப்படுத்துனவரே எங்க கேப்டன் தான் ( ஃபைட் சீன்ல )

---------------------------


23. வாதாடும் உன் உதடுகளை அடைக்க எனக்கு வாதிடும் சாமார்த்தியம் இல்லாததால்  குறுக்கு வழியை  தேர்ந்தெடுத்தேன் # கிஸ்ஸாலஜி

---------------------------

24. ஃபிகரைப்பார்த்துட்டு இருந்தா லைஃப் போயிடும் , ஃபிகரைப்பார்க்காம விட்டா  ஃபிகர் போயிடும், ஃபிகரா? லைஃபா?

------------------------

25.  வெற்றி ஒரு போதும் உன்னைத்தேடி வராது, நீ தான் அதை தேடி செல்ல வேண்டும்

----------------------------



26  மற்றவர்கள் மனதைத்தொடும்படி உன் பேச்சு இருக்க வேண்டும் எனில் உன் பேச்சு உன் உள்ளத்திலிருந்து வர வேண்டும், உதட்டிலிருந்து அல்ல!

-------------------------

27. அன்னா முன்னேற்றக்கழகம் ஒன்று உருவானால் பல கழகங்கள் வாழ்வில் கலவரங்கள் நிகழ்வது திண்ணம்

-----------------------------


28. இலவசங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்: 100-வது நாளையொட்டி பேரவையில் ஜெயலலிதா # அப்போ கொடுத்த வாக்கு எல்லாம் ஊ ஊ ஊ வா?

--------------


29. டியர், நான் கணக்குல வீக் என்பதால் என்னை ரிஜக்ட் பண்ணிட்டியா? ஏன்?

டேய், லூசு, கணக்கே சரியா வர்லை, நீ எப்படி ஒருஃபிகரை கணக்கு பண்ணப்போறே?

--------------------------

30.  பசங்க கலர் கலரா பேனா எடுத்துட்டு போறதுக்கு காரணம் அவங்க வசம் ஏகப்பட்ட கலருங்க இருக்குன்னு காட்டிக்கறதுக்காக்கூடா இருக்கலாம்

--------------------------

 
 


31. எந்த ஊழலும் நடைபெறவில்லை, எல்லாம் முறைப்படிதான் நடந்துள்ளது - ஆ ராசா # முறைப்படின்னா சமமா பிரிச்சுக்கிட்டீங்களா?

----------------------

32. நான் என்ன சுகர் பேஷண்ட்டா? ஏன் முத்தம் தர மறுக்கிறாய்? பை ஃபிகர் பேஷண்ட் (ஃபிகரால் பேஷண்ட் ஆனோர் சங்கம்)

--------------------------

33. டியர், நீங்க ராணி, தேவி இந்த  2 புக்ஸ் மட்டும் படிக்க வேணாம்.

ஏன்?

அதுல லேடீஸ் பேரு இருக்கே?

-------------------------

34.  பழையவற்றை, வேண்டாதவற்றை எரிப்பது போகிப்பண்டிகை,மெய் ஆசைகளை, தீண்டாதவற்றை எரிப்பது போகப்பண்டிகை

--------------------------

35.  எடியூரப்பா,ஷீலாதீட்சித் -வித்தியாசம்? எடியூரப்பா தன் ஃபேமிலி வெல்த் மட்டும் பார்த்துக்கிட்டாரு, ஷீலாதீட்சித் காமன்வெல்த்தை கவனிச்சாரு

---------------------


 
 

36. தலைவரே!காமன்வெல்த் ஊழல் பற்றி ஏன் கருத்து தெரிவிக்கலை?

காமன் என்பது காமக்கடவுள்,ஆன்மீகத்தில் தலையிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திடும்.

----------------------------

37. அதிமுக ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே கருத்து தெரிவிப்பேன்- விஜயகாந்த் #  அதாவது உள்ளாட்சித்தேர்தல் எல்லாம் முடிஞ்ச பிறகு?

-------------------------

38.  காதலிப்பவர்களுக்கு மட்டுமே காதல் புனிதம், காதலிக்காதவர்களுக்கும் , காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கும் அது பைத்தியகாரத்தனம்

----------------------

39.  கடவுளைக்கண்டவரை கண்டவர் யாரும் இலர், ஆனால் காதலை கண்டவர், உண்டவர் பலர் நம்முடன் இருப்பதால் கடவுளை விட காதல்-ல்  நம்பகத்தன்மை அதிகம்

---------------------

40. வடிவேலு மீதான நிலமோசடி - திடீர் திருப்பம் : சம்பந்தப்பட்ட நபரிடமே நிலத்தை ஒப்படைத்தார்!!  #  ஈரோடு NKKP ராஜா வகையறாக்கள் கவனிக்க

Saturday, August 27, 2011

ஜெ நினைத்தால் தூக்கு தண்டனையை ரத்து செயலாம்.. செய்வாரா ஜெ?

தூக்குக் கயிறை வெட்டும் கத்தி முதல்வர் கையில்!

தழுதழுத்த தமிழருவி மணியன்

டந்த 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 'மூன்று தமிழர்கள் உயிர்க் காப்பு இயக்கத்தின்’ சார்பில் நடந்த பொதுக் கூட்டம்... முன்பு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தையே அசை போடவைத்தது. அலை கடலெனத் திரண்டிருந்த கூட்டத்தின் முன், அடங்காத ஆவேசத்துடன் இயக்கத்தினர் பேசிய பேச்சுக்கு, பெரும் வீச்சு!

 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மணியரசன் எடுத்த எடுப்பிலேயே, ''காந்தி நம் தேசத் தந்தை என்று கூறிக்கொண்டு, அன்பு, அமைதி, சமாதானம் குறித்து வாய் கிழிய முழங்கும் மத்திய அரசே, தூக்குத் தண்டனையை உடனடியாக நீக்கு. 'பழிக்குப் பழி... ரத்த வெறி...’ என்ற போக்குடன் நீ தொடர்ந்து செயல்பட்டால், இந்தியாவின் தேசத் தந்தையாக கோட்சேவைப் பிரகடனம் செய். அசோகச் சக்கரத்தை அப்புறப்படுத்திவிட்டு தூக்குக் கயிறை வை!'' என்று சீற, கூட்டம் முறுக்கேறி நிமிர்ந்தது.


அடுத்துப் பேசிய தமிழருவி மணியன், ''தமிழினத்தின் உண்மை​யான தலைவர் பழ.நெடுமாறன் அவர்களே... தமிழினத்தின் உண்மையான தளபதி வைகோ அவர்களே...'' என்று புன்முறுவலுடன் ஆரம்பிக்க, தி.மு.க. மீதான முதல் அட்டாக்கை கரகோஷத்தோடு ரசித்தது கூட்டம்.

தொடர்ந்த மணியன், ''இன்று இனத்தைக் காட்டிக்கொடுப்பதுதான் காங்​கிரஸின் ஒரே அடையாளமாக இருக்கிறது. அந்தக் கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றும் வரை யாரும் ஓயக் கூடாது. கடந்த தேர்தலில் பி.ஜேபி. போட்ட பிச்சையில் காங்கிரஸ் சார்பில் ஐந்து பேர் சட்டமன்றம் போனார்கள்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஓர் இடத்தில்கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை என்ற சூழலை நீங்கள் உருவாக்கினால், உங்கள் மான உணர்வு உலகுக்கு உணர்த்தப்படும். ப.சிதம்பரம் குறித்து எனக்கு முன்பு சிலர் பேசினார்கள். விதி வசத்தாலும், வினைப் பயனாலும் தமிழனாக வந்து உதித்தவர் சிதம்பரம். உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தமிழன், மூன்று தமிழர்களின் உயிரைப் பறிப்பதற்கு பரிந்துரை செய்தால், 'அவர் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம்தானா?’ என்று சந்தேகமாக இருக்கிறது...'' எனக் கொந்தளித்தவர், ''தமிழக முதல்வர் அவர்களே... இந்த மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறை அறுத்து எறியும் கத்தி உங்களிடம்தான் இருக்கிறது. உங்களால் மட்டுமே இது முடியும்!'' என்ற கோரிக்கையுடன் முடித்தார்.

தண்டனைக்கு உள்ளான தமிழர்களுக்காக, கடந்த காலத்தில் நடத்திய சட்டப் போராட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசிய பழ.நெடுமாறன், ''விரைவில் நமது இயக்கத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர் காக்க வலியுறுத்துவோம்!'' என்றார்.

கடைசியாக மைக் பிடித்த வைகோ, ''சில நாட்களுக்கு முன்பு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்திக்க, வேலூர் சிறைக்குப் போனேன். மூவர் முகத்திலும் நான் எந்தக் கலக்கத்தையும் பார்க்கவில்லை. பதற்றம், பயம் இன்றி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தார்கள். ஏன் தெரியுமா? 'தாய்த் தமிழகம் தங்களைக் கைவிடாது, காப்பாற்றும்’ என்ற நம்பிக்கைதான் காரணம்.

உலகத் தமிழர்கள் அனைவரும் தற்போது முதல் அமைச்சரின் உரிமையை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார்கள். 'முதல்வர் அவர்களே... மூவர் உயிரைக் காத்திடுக... வரலாற்றுச் சாதனை புரிந்திடுக... விதி 162-ஐ கையில் எடுங்கள்’ என்பதே அனைவரின் கோரிக்கை. இனி யாரிடத்தில் போய் நாங்கள் முறையிடுவோம்? 'கருணை மனுக்களை ஜனாதிபதி விரைவில் நிராகரிக்கப்போகிறார்’ என்று நம்பத் தகுந்த தகவல் வந்ததும், உடனடியாக டெல்லிக்கு ஓடினேன்.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, 'மூன்று நிரபராதிகளைத் தூக்கிலிட முயலாதீர்கள்’ என மனு கொடுத்து மன்றாடினேன். ஆனால், அந்தக் கல்லுளிமங்கர் கண்டுகொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கோத்தபய ராஜபக்ஷே விமர்சிக்கிறான். மத்திய அரசே நீ இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டித்தாயா? அவன் யார் எங்கள் சட்டமன்றத் தீர்மானத்தை விமர்சிக்க? அது யாரோ ஒரு சிலரின் குரல் அல்ல... ஏழரைக் கோடி தமிழர்களின் குரல்!'' என்று முழங்கிய வைகோ, இறுதியாக, ''மூவர் உயிர் காக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக இருக்கிறோம். எதிர்மறையாகப் பேச விரும்பவில்லை.

அவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்... அந்தச் சம்பவம் நடந்தது 1991. இது 2011. நினைவில் வைத்துக்கொள். அவர்களுக்கு ஆபத்து என்றால், இன்னும் நிறைய முத்துக்குமரன்கள் வருவார்கள். தீயை தங்கள் மேல் வைத்துக்கொள்ள அல்ல..! தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் இதே போக்குடன் நீ செயல்பட்டுக்கொண்டுஇருந்தால்... இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947... ஆனால், 2047-ல் தமிழ்நாடு உன்னோடு இருக்காது!'’ என்று கர்ஜிக்க... ஆர்ப்பரித்தது கூட்டம்!


''கௌரவத்தைக் கைவிடுங்க!''

மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் குரல் கொடுக்கும், ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோர் எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்துக்கு வரவில்லை. அவர்கள் கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் வந்திருந்தனர். ''அனைத்துக் கட்சி சார்பில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுக்கு வராமல் அப்படி என்ன கௌரவம் பார்க்கிறாங்களோ? இவங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தா, அடுத்த முறை புறக்கணிக்கக் கூடாது!'' என்று தமிழ் உணர்வாளர்கள் பேசிக்கொண்டனர்.


தூக்கு?

அதிர்ச்சி அரசியல்... திகில் விவரங்கள்

''அம்மா, மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் சாவின் மடியில் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள். இத்தனை வருடங்களாக வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும்!'' - கடந்த ஜூ.வி. இதழ் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேரறிவாளன் வைத்திருந்த கண்ணீர்க் கோரிக்கை இது. ஆனால், இந்தக் கண்ணீர் இன்னமும் அரசுத் தரப்பை அசைக்கவில்லை என்பதுதான் துயரம்!

ஆம்; நடக்கக் கூடாது என நினைத்தது, நடந்தேவிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக்கு ஆளாகி வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய கருணை மனுக்களும் சமீபத்தில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து மூவருக்கும் தூக்கு வேளை நெருங்கிவிட்டதாகப் பரபரப்புக் கிளம்ப, தமிழகம் முழுக்க உருக்கமான கோரிக்கைப் போராட்டங்கள் நடந்தன.

இலங்கையின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கண்ணீர்க் கரங்கள் நீண்டன. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிரான சட்ட வடிவத்தை ஜெயலலிதா இயற்றுவார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது.


ஆனால், அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக, சிறைத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதிரவைத்திருக்கிறது தமிழக அரசு. கடந்த 25-ம் தேதி மாலை உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா மூலமாக வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், ''நடவடிக்கை எடுப்பதற்கான கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். நடவடிக்கை எடுத்த பின் உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்பவும்!'' என மிகச் சுருக்கமான முறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


மூவருடைய தூக்குத் தண்டனைக்கும் எதிராக நிச்சயம் தமிழக அரசு குரல் கொடுக்கும் என உறுதியாகப் பலரும் நம்பி இருந்த வேளையில், அதிர்ச்சிகரமான இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது?

இது குறித்துப் பேசும் அரசுத் துறையில் உள்ள உணர்வாளர்கள், ''கருணை மனு நிராகரிக்கப் பட்ட கடிதம், கடந்த 16-ம் தேதியே தமிழக அரசுக்கு வந்துவிட்டது. உடனே அரசுத் துறை செயலாளர்கள் அந்தக் கடிதம் குறித்து ஆலோசனை நடத்தி, முதல்வரிடம் தகவல் சொன்னார்கள். 'கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் இது குறித்து எந்த முடிவு எடுப்பதும் சரியில்லை. அதனால், கூட்டத் தொடர் முடிந்த பிறகு இதுபற்றிப் பேசலாம்!’ என்றார் முதல்வர்.

அதனால், இப்போதைக்கு இந்த விவகாரத்தில் பயப்பட வேண்டியது இல்லை என்கிற நிலை நிலவியது. இதற்கிடையில், கிருஷ்ணசாமி, சரத்குமார், ஜவாஹிருல்லா, தனியரசு உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் பேச முயற்சித்தார்கள். சீமான் மூலமாகவும் முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை வைக்க முடிவானது. 'முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைப்போம்’ என எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்தில் நெடுமாறன் பகிரங்கமாகவே அறிவித்தார். ஆனால், இதற்கிடையில் எங்கிருந்து உத்தரவு வந்ததோ... அரசுத் தரப்பு அதிகாரிகள் 25-ம் தேதி காலையில் இருந்தே பரபரப்பாக இந்த விவகாரம் குறித்துப் பேசத் தொடங்கினார்கள்.

முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஃபைல் முதன்மைச் செயலாளர் சாரங்கியின் டேபிளுக்குக் கொண்டுவரப்பட்டது.

'இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உடனே மத்திய அரசின் கடிதத்தை சிறைத் துறைக்கு அனுப்பிவிடுங்கள்’ எனச் சொல்லிவிட்டாராம் சாரங்கி. 'அரசு உத்தரவு வந்த ஏழு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம்’ என சிறைத் துறை அதிகாரி டோக்ரா ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், அரசுத் தரப்பின் இந்த வேகம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. 26-ம் தேதி காலையில் கடிதம் சிறைத் துறைக்குக் கிடைக்க, அடுத்த ஏழு தினங்களுக்குள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றக் கூடும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படாவிட்டாலும், அந்தக் கடிதத்தைக் கிடப்பில் போட்டு வைக்கலாம் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் சிலர் திட்டமிட்டு மத்திய அரசின் பெயரைச் சொல்லி இந்த விவகாரத்தை விரைவுபடுத்திவிட்டார் கள்.

முதல்வர் நல்லது செய்ய நினைத்தும் அதிகாரிகள் சிலரால் நிலைமை கைமீறிப் போய்விட்டது தமிழக அரசு கைவிரித்துவிட்ட நிலையில், முறைப்படியான சட்டப் போராட்டங்களால் மட்டுமே மூவருக்குமான தூக்குத் தண்டனையைத் தடுக்க முடியும். ஐந்து நாட்களுக்குள் சட்ட ரீதியான தடை உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியாமல் போனால்... மூவருக்கும் எந்த நேரத் திலும் தூக்குக் கயிறு விழும்!'' என்கிறார்கள் ஆதங்கமாக.


அரசுத் தரப்பில் பேசும் அதிகாரிகளோ, ''கொலையானவர் முன்னாள் பிரதமர் என்கிற நிலையில் ஒரு மாநில அரசால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. கொலையாளியை நியாயப்படுத்தும் செயல்பாடாகக் கருதப்பட லாம் என்பதற்காகவே, முறைப்படி கடிதம் சிறைத் துறைக்கு அனுப்பப்பட்டது!'' என்கிறார்கள்.


இதற்கிடையில் சீமான் மூலமாக தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன், முருகன் சாந்தன் மூவரின் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை களம் இறக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட உணர்வாளர்கள் பலரும் ஒன்றுகூடி சட்டப் போராட்டம் நடத்தவும் தீவிர வேலைகள் நடக்கின்றன. 'தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல விவகாரங்களில் நீதிமன்றம் மூலமாக தடை வாங்கிய பல தீர்ப்புகளை முன் உதாரணமாக வைத்து மூவருடைய உயிர்களையும் காப்பாற்ற முடியும்’ என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.


கைவிடப்பட்ட இந்த மூவரின் உயிரை அடுத் தடுத்த சட்டப் போராட்டங்களாவது மீட்டுக் கொடுக்குமா? கண்ணீரோடு காத்திருக்கிறார்கள், கவலைப்பட மட்டுமே தெரிந்த தமிழர்கள்!

thanx -ju vi

Friday, August 26, 2011

யுவன் யுவதி - அள்ளும் ஒளிப்பதிவு + துள்ளும் இளமை - சினிமா விமர்சனம்

http://www.ariviththal.net/events/uploads/4811.jpg

காதல் மட்டும் இல்லைன்னா இந்த உலகமே இல்லைங்கறாங்க.. அது உண்மையோ இல்லையோ தமிழ் சினிமா ஃபீல்டே இல்லைன்னு வேணா தாராளமா சொல்லலாம்.100க்கு 96 படங்கள் லவ் சப்ஜெக்ட்ஸ் தானே வருது.. கதா விலாசம் எஸ் . ராமகிருஷ்ணன் சாரோட கதை வசனம்  என்பதாலும் ஹீரோயின்  ரீமா கல்லிங்கல் ( கேரளா ஃபிகரு) 70 மார்க் வாங்கற அளவு கும்முன்னு இருப்பதாலும் ஒரு எதிர்பார்ப்போட (!!!) போனேன்.. 

ஃபாரீன் போக ஆசைப்படும் உசிலம்பட்டி ஹீரோ, அதே ஃபாரீனுக்கு மேரேஜ்க்காக போற ஹீரோயின் இவங்க 2 பேரும் விசா ஆஃபீஸ்ல மீட் பண்றாங்க.. பல குழப்படிகளுக்கு நடுவே  இவங்க 2 பேருக்கும் நடுவே
( அல்லது ஓரமா) எப்படி காதல் மலருது? அது எப்படி நிறைவேறுது என்பது தான் கதை.. 

படத்தோட முதல் பாதி  ராமகிருஷ்ணன் எழுதுன திரைக்கதைப்படி படம் சர சர  ஸ்பீடோட போகுது.. அதுக்குப்பிறகு  காம்ப்ரமைஸ் எனும் இயக்குநரின் தலையீட்டால் திரைக்கதை நொண்டி அடிக்குது.. கதை வசனம் என ராமகிருஷ்ணன் சார் பேர் இருந்தாலும் இடைவேளை வரை அவர் திரைக்கதை என்பது அவர் நாவல், கட்டுரை படிக்கறவங்களுக்கு ஈசியா புரிஞ்சிடும்.. இடைவேளைக்குப்பிறகு இயக்குநர் கை வசம் திரைக்கதை போனதால டல்லடிக்குது..

 http://manju_v.tripod.com/images/rima-kallingal-15.jpg

ஹீரோ பரத் கேவலமான ஹேர் ஸ்டைல்ல வர்றது சகிக்கல.  மாடர்ன் யூத்தாம். டான்ஸ் காட்சிகள்ல அண்ணன் பரத் இ. த விஜய் மாதிரி ஸ்டைல் காட்ட ஆசைப்படறாரு..  எடுபடலை.. ஹீரோயின் கூட பேசும்போது பரத்தோட பாடி லேங்குவேஜ்ல பயங்கர செயற்கை.. ஓவர் அலட்டல்.. இடைவேளைக்குப்பிறகு கொஞ்சம் மெச்சூரிட்டியா நடிச்சிருக்காரு.. 

ஹீரோயின் ரீமா கல்லிங்கல் நல்ல ஃபேஸ்கட், நல்ல லோ கட்  ஹி ஹி படத்துல வர்ற மொத்த சீன்ல 6 சீன் தவிர எல்லா சீன்லயும் பாப்பா ஸ்லீவ்லெஸ், டைட் பனியன்,துக்ளியூண்டு ஷார்ட்ஸ் போட்டுதான் வர்றார்,, அவரோட தாராளமயமாக்கல் கொள்கைக்கு ஒரு சபாஷ்..  நடிப்புன்னு பார்த்தா பாப்பாவுக்கு பாஸ் மார்க் தான்.. அவரோட ஹேர் ஸ்டைல் ஓக்கே.. 

சந்தானம் காமெடி கொஞ்சம் கம்மி தான்.. காமெடி ஸ்கிரிப்ட் அவர் இல்ல..அதனாலயோ என்னவோ அவர் ஸ்கிரிப்ட்ல இருக்கற டயலாக் மட்டும் பேசிட்டு அவர் வேலை முடிஞ்சதுன்னு போட்டாரு.. 

சம்பத்குமார் ஹீரோவுக்கு அப்பா.. நீட்டான ரோல்.. இடைவேளைக்குப்பிறகு ஏகப்பட்ட கேரக்டர்ஸ்..


http://www.cinespot.net/gallery/d/619006-1/Reema+kallingal+photos+_5__003.JPG
மனதில் நின்ற வசனங்கள்

1. இப்போ நாம் எல்லாம் எங்கே போறோம்?

அது வண்டி ஓட்டற டிரைவருக்கே தெரியாது. அப்பா தான் கடைசி வரை எதையும் சொல்றதே இல்லையே? லெஃப்ட் போ, ரைட் போன்னு உயிரை வாங்குவாரு.. 

2. சந்தானம் - நீ கொடுத்து வெச்சவண்டா. உங்கப்பா உனக்காக என்னவெல்லாம் செய்யறார்.. எங்கப்பன் நான் மூணாங்கிளாஸ் படிக்கறப்ப என் வெள்ளி அர்ணாக்கயிரை  அத்துக்கிட்டு ஓடிட்டான்.. 

3. சந்தானம் - என்னது உசிலம்பட்டிக்காரன்னா கேவலமா? டேய்.. சச்சின் டெண்டுல்கரே கேரளா போனாலும் அவரை யாரும் கொச்சின் டெண்டுல்கரேன்னு கூப்பிட மாட்டாங்க.. சச்சின் டெண்டுல்கரேனு தான் கூப்பிடுவாங்க..

4. உன் ஃபிரண்ட் ஒரு மாதிரின்னு சொன்னே! இது மாதிரின்னு சொல்லவே இல்லை?. 

5. என் ஃபிரண்டுக்கு ஒரு பிராப்ளம்.. 

சத்யன் -என்ன? அவ பிரெக்னெண்ட்டா இருக்காளா? நீங்களா பிரெக்னெண்ட் ஆக வேண்டியது.. அப்புறம் பசங்க மேல பழியை போட வேண்டியது.. 

6. சத்யன் -  இந்த மாதிரி பேடு வோர்ட்ஸ் யூஸ் பண்றதால தான் எனக்கு கேர்ள்ஸே பிடிக்க மாட்டேங்குது, ஒன்லி ஐ லைக் பாய்ஸ்.. ( ஓ அவனா நீ!!) வாங்கடி போலாம்.. 

7.  ஆட்டோ! ஏன் கூப்பிட்ட இடத்துல நிறுத்தலே?

மயில்சாமி - கூப்பிட்ட இடத்துல நிறுத்துனா அவன் டிரைவர், கொஞ்சம் தள்ளி நிறுத்துனா  அவன் ஆட்டோ ஓனர்.. 

8. அவன் ஏன் அங்கே போறான்?

சந்தானம் -அங்கே தான் அக்கவுண்ட் இருக்கோ என்னவோ?

மயில்சாமி - மரியாதை ப்ளீஸ்.. 

சந்தானம் -அந்த லூஸூங்க ஏன்ங்க அங்கே போவுதுங்க?

9. மயில்சாமி -  டேய்.. எதுக்குடா என்னை தண்ணி ஊத்தி ஊத்தி அடிக்கறீங்க?

சந்தானம் -சோடா ஊத்தி ஊத்தி அடிக்க நீ என்ன ஃபாரீனராடா?

10. சந்தானம் - என்னதான் கருவாட்டை மினரல் வாட்டர் ல வாஸ் பண்ணினாலும் குழம்பு வைக்கறப்ப அதனோட வாசம் காட்டிக்குடுத்துடும்டா..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwvxM1C32XaN3uOuM0CK_TRuSd80sp2JCfhvBPjVT65_go2dlezFnQcVroxe49Mt-gr9PTmSDYEh6nPEDr1464dxzhL-tRLdBaA931hcRMvOXis5CIukhOAUZJK2RUPJnWraEiJwgsDd7f/s1600/cute_sexy_reema_kallingal01.jpg

11. அழகான பொண்ணுக்கு திமிர் ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன், அது உண்மைங்களா?

12. நிறைய பேசற பொண்ணுங்க பசங்களை ரொம்ப அலைய விடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்...

13. டியர்.. சிவப்பாவோ , கறுப்பாவோ இல்லாம பிரவுன் கலர்ல இருக்கற உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு..

ம்.. அதுக்கு காரணம் எங்கம்மா கேரளா... அப்பா குஜராத்..

14. உங்க ஃபோன் நெம்பர் ஏதோ சொன்னீங்களே... 984.......?

நான் சொல்லவே இல்லையே?

சரி.. இப்போ சொல்லுங்க..

15. சந்தானம் - டேய்.. வாய்ல பிராந்தி ஊத்திட்டி இருந்தவனை வலுவனா கூடிட்டு வந்து கைக்கு மெஹந்தி போட வெச்சுட்டியே ஏண்டா?

16.  சந்தானம் -மேடம்.. நீங்க அவரை கூட்டிட்டு ஒரு ரவுண்ட் போய்ட்டு வாங்க, அதுக்குள்ள நான் இங்கே ஒரு ரவுண்ட் முடிச்சுடறேன்..

17.  டேய்.. என்னடா தட்டிட்டு இருக்கே? நல்லா பாரு,.,. லேப் டாப் ஆஃப்ல இருக்கு.. 

18.சந்தானம்  -  டேய்.. போற வழில என்னை துபாய்ல இறக்கி விட்டுட்டு போயிடு.. நான் அங்கே ஒட்டகம் மேய்ச்சாவது பொழப்பை ஓட்டிக்கறேன்..

19. எப்பவும் ஒர் சூப்பர் ஃபிகர் பக்கத்துல 2 அட்டு ஃபிகர்ங்க பக்கத்துலயே இருந்து  அவளை குழப்பி விடறதுக்குன்னே இருப்பாளுங்க..- சந்தானம்

20.  சாயங்காலம் அவ என்னை பார்க்க வர்றதா சொல்லி இருக்கா..  சாயங்காலம் எப்போடா வரும்?

 சந்தானம் - மத்தியானத்துக்கு அப்புறம்..

மத்தியானம் எப்போடா வரும்?

சந்தானம்  -டேய்.. இதாண்டா மத்தியானம்..

 http://www.imgoo.in/pics/apr-11/rima-kallingal-hot-pic-745.jpg

21.  அவளைப்பற்றி தெரியாம லவ் பண்றேன்னு சொல்லலாமா?

சந்தானம் -மத்தவங்க மட்டும் அவ பயோ டேட்டா வாங்கிட்டா லவ் பண்றாங்க?

22.  காதலிக்கற மேட்டரை எவண்டா தைரியமா அப்பா கிட்டே சொல்லி இருக்கான்?

23. சந்தானம்  - தொண்டை கட்டி மாமா , எனக்கு ஃபர்ஸ்ட் ந்நைட் எப்போடா நடக்கும்?

24. பொண்ணுங்களுக்கு ஹெல்ப் பண்ணுனா மிஞ்சறது பிரச்சனைகள் தான்..


25. சந்தானம்  - ஊர்ல அவன் அப்பன் எனக்கு வெச்ச ஆப்பே ஓவர்.. இவன் வேற ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சு படுத்தறான்..

26.  சந்தானம் -எனக்கு ஒரு டவுட்டுடா.. இந்த ஃபிகருங்க இப்படி அரையும் குறையுமா பீச்ல நடமாடுதே.. இவளுங்க எல்லாம் தீபாவளீக்காவது முழு டிரஸ் போடுவாளுங்களா?

27.  சந்தானம்   - எனக்கு மேரேஜ் ஆகி என்னடா பிரயோஜனம்? இன்னும் ஃபர்ஸ்ட்நைட் நடக்கலை.. என் சம்சாரம் வேற ஊர்ல தனியா இருப்பா..

ஏன் பயப்படறே.. அதான் துணைக்கு உன் அப்பா கூட இருக்காரில்லை?

சந்தானம் -அடப்பாவி.. அங்கே என்ன சிந்து சமவெளி நாகரீகமா நடக்கப்போகுது..?

28. சந்தானம் - இந்த  பொண்ணுங்க இருக்காளூகளே.. அவளுக பின்னே யாரும் அலையத வரை பிஞ்சு போன பேக்கும், காஞ்சு போன டிரஸ்ஸும் போட்டுட்டு அலைவாளூங்க.. நமக்குப்பின்னே ஒரு பையன் சுத்தறான்னு தெரிஞ்ச பின்னால பாருங்க..

29. சந்தானம் -  டேய்.. அடுத்தவன் சோகத்துல ஏண்டா சோறாக்குறீங்க?

30.  சந்தானம்  - ஃபோன்ல என்ன மேட்டரு?

பசு மாடு மாசமா இருக்காம்..


சந்தானம்   - ம் அவங்கம்மா வீட்டுக்கு அனுப்ப சொல்லு..

http://kerala-zone.com/entertainment/actress/current/rima-kallingal/rima-kallingal-101.jpg

31. மாமா, இன்னைக்கு சண்டே.. டி வி ல புரோக்ராம் பார்க்காம எல்லாரும் போர் அடிக்குதுன்னாங்க. அதான் நான் சொன்னேன், என் மாமா இப்போ பேசுவார்.. கேட்கலாம்னு..

சந்தானம்  - அடிப்பாவி.. ஸ்பீக்கர் ஃபோன் போட்டு கேட்க இதென்னா மீட்டிங்கா? புருஷன் பொண்டாட்டி பர்சனலா பேசறதை கூட ...... ஒட்டுக்கேட்கனுமா?

32.  யோவ்.. உன்னை இங்கே கூட்டிட்டு வந்ததே எனக்கு நீ கார் ஓட்டத்தான். அதனால அடக்கி வாசி..

33. படிச்ச பசங்க தான் அம்மா, அப்பா வேணாம், சொந்த பந்தம் வேணாம்னு போயிடறாங்க,படிக்காத பசங்க தான் அம்மா ,அப்பா கூட கடைசி வரை இருக்காங்க..

34.  சார்.. நீங்க  பேசறது ஒண்ணும் புரியல.. கிணத்துக்குள்ளே இருந்து பேசறது மாதிரி இருக்கு.

அய்யோ, இன்ஸ்பெக்டர்,.ல் நிஜமாவே நான் கிணத்துக்குள்ளே இருந்து தான் பேசறேன்.. காப்பாத்துங்க.

http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/09/Rima-Kallingal4.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  முதல் ஷொட்டு சந்தானத்தை புக் செய்தது, திரைக்கதையின் பின்பாதி லாஜிக் ஓட்டைகளை அவர் சர்வ சாதாரணமாக மறக்க வைக்கிறார்..

2.  ஒரே ஒரு சீன் வந்தாலும் சத்யனின் திருநங்கை காமெடி நடிப்பு கலக்கல்.. 

3. டைட்டில் டிசைன் பக்கா.

4. படத்தின் ஒளிப்பதிவும் , பின்பாதியில் வரும்  சீசெல்ஸ் தீவின் லொக்கேசன் செலக்‌ஷனும் செம..

5. ஓப்பனிங்க் ஷாட்ல சேசிங்க் பரபரப்பு தரும்போதே குளியல் கிளு கிளுப்பு..

அதே போல் ஹீரோயினை முடிஞ்சவரை யூஸ் பண்ணியது..

6. விஜய் ஆன்டனி இசையில் ஓ மை ஏஞ்சல், மயக்க ஊசி, உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன், உன் கண்களைப்பார்த்த பிறகு,  என ரசிக்க வைக்கும் பாடல்கள்..


http://www.nakkheeran.in/AllImages/Gallerys/13188_1.jpg
யக்குநரிடம் சில கேள்விகள்

1.  ஃபாரீன்ல ஹீரோயினுக்கு கல்யாணம் 10ந்தேதின்னா கரெக்ட்டா 10ந் தேதியே ஃபிளைட் ஏறுவாங்களா? யாராவது?  அந்த ஃபிளைட் மிஸ் ஆச்சுன்னா ஃபோன் பண்ணி சொல்ல முடியாதா? மேரேஜ் நின்னுடுமா?

2. செகண்ட் ஆஃப்ல ஹீரோவோட ஃபிரண்ட் போட்ல இருந்து கடல் தண்ணில விழறாரு.. நடுக்கடல்.. எப்படி அவருக்கு நெற்றில காயம் ஆகும்?தரைல விழுந்தாத்தானே காயம் ஆகும்?

3. ஹீரோ, ஹீரோயின் 2 பேருக்குமே அமெரிக்கா போகறதுதான் லட்சியம்.. ஆனா சொல்லி வெச்ச மாதிரி 2 பெருமே சீசெல்ஸ் தீவுக்கு போறாங்களே? அது எப்படி?

4.  ஹீரோயின் நிச்சயிக்கப்பட்ட அமெரிக்கா மாப்ளை கூட ஃபெஸ்புக்ல மெயில்ல கடலை போட்டதாவும் , ஃபோன்ல காதல் வளர்த்ததாவும் சொல்றாங்க..  அப்புறம் பரத்தை லவ் பண்ணுனதும் எப்படி அந்த மாப்ளையை கழட்டி விடறாங்க?

5. ஹீரோவுக்கு அவர் கிராமத்துல அவரோட அப்பா ஒரு ஜட்ஜோட பொண்ணை நிச்சயம் பண்றாரு.. அந்த பொண்ணை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து டராரு.. அந்த பொண்ணு 2 மாசமா அங்கே இருக்கே? ஒரு தடவை கூட மாப்ளை கிட்டே பேசாதா? ஹீரோவுக்கு வேற ஒரு லவ் இருக்கறதும் , தன்னை கட்டிக்க இஷ்டம் இல்லைங்கறதும் தெரிஞ்சுக்காம க்ளைமாக்ஸ்ல தான் தெரிஞ்சுக்கனுமா?

6. ஜட்ஜோட பொண்ணு க்ளைமாக்ஸ்ல எனக்கு பிடிச்ச வாழ்க்கை தான் எனக்கு அமையலை, அவராவது அவருக்கு பிடிச்ச பொண்ணை கட்டி வாழட்டும்ன்னு சொல்றாங்க.. அப்போ அவரு ஹீரோவுக்கு வெட்கப்பட்டுக்கிட்டே காஃபி கொடுக்கிறாரே அது எப்படி?

7. ஹீரோயினின் ஃபாரீன் ஃபிரண்ட் தன்னை ஒருத்தன் 3 வருஷமா லவ்வியதாகவும், பின்னாலயே சுத்தியதாகவும், தனக்கு காதலை வெளீப்படுத்த தைரியம் இல்லாததால் சொல்ல முடியலை, அவன் வேற ஒருத்தனை கட்டிக்கிட்டான்னு சொல்றாங்க..  அது எப்படி? 2 பேரும் வெளீப்படுத்தாம இருந்தா தைரியம் வராது ஓக்கே. ஒன் சைடு ஓப்பண்டு. பாப்பா சொல்ல தயக்கம் ஏன்?

http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/18005277808.jpg

 ஏ செண்ட்டர்ல 30 நாட்கள், பி செண்ட்டர்ல 20 நாட்கள் , சி செண்ட்டர்ல 10 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஃபோட்டோகிராஃபி + லொக்கேஷன்க்காக+ ஹீரோயினை ரசிக்கறதுக்காக யூத்துங்க பார்க்கலாம்

வெங்காயம் பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சி.பி க்கு கொடுத்த பல்புகள்!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெங்காயம் பட விமர்சனத்திற்கு அதன் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதில் அனுப்பி உள்ளார். அவருக்கு என் நன்றிகள்.... பட விமர்சனம் படிக்க 

வெங்காயம் - நித்யானந்தா வகையறாக்களுக்கு ஆப்பு - சினிமா விமர்சனம்


 http://www.vanakkamnet.com/wp-content/uploads/2011/08/rajkumar-140x140.jpg
வணக்கம் நான் சங்ககிரி ராச்குமார்,நல்ல விமர்சனத்திற்க்கு நன்றி.

பல்பு கம்பனி ஓனர் நண்பர் சிபிக்கு என் பதில்கள்

பல்பு:

1க்கு  முடிந்த அளவுக்கு ப்ளாஸ்பேக் காட்சிகளுக்கு கொசுவத்தி சுருளையே பயன்படுத்தி இருக்கேன்.இன்னும் என்னதான் செய்ய

2:கயிறை அருத்து கிட்டு நேத்தே ஓடிட்டான் இன்னிக்கு நல்லா கட்டுங்க”னு சொல்வாங்க கவனிக்கலயா

3:நம்ம ஊரு வீரப்பன் சத்திரத்து போலீஸ் ஸ்டேசன்ல இருக்கற போலீஸ் எல்லாம் காக்க காக்க சூர்யா மாதிரி வெரப்பா மக்கள பயமுறித்தி கிட்டே தான் இருக்காங்களா நண்பா..போய் பாருங்க நண்பா தமாசா இருப்பாங்க

4: மோப்ப நாய இழுத்து கிட்டே ஓடிகிட்டே இருக்கற போலீச பாத்தே பழகிட்டோம் நண்பா நம்ம ஊரு போலிசுங்க பிரச்சன முடிஞ்ச பிறகு தான வருவாங்க நம்ம ஆளு முன்னாடியே வராரே போதாதா

5:மொரட்டு தாடி வச்சுக்கிட்டு பைப் சிகரெட் வச்சு கிட்டு கண்ண அகல விரிச்சு கட்ட கொரல்ல பேசர கர்சியல் வில்லன் மாதிரியே வேனுமா நண்பா நித்யானந்தா அப்படியா இருக்காரு

6:எல்லா அப்பாவும் சிபி அண்ணான மாதிரி சைக்காலஜி படிக்கலயே .அது உண்மை சம்பவம் நண்பா end title ல விளக்கமா போட்டிருக்கோம் பாருங்க

7:10 அடி தூரத்துல இருக்குற எதோ ஒரு ஆஸ்பத்திரியா இல்ல பல கிலோ மீட்டர் தூரம் இருக்கற ஜி.ஹெச்சானு சிபி அண்ணன் முடிவு பண்ண முடியாது அந்த கூத்தாடி மனனிலைல இருந்து பாருங்க ..புரியும்

8 வது பல்பு நீங்க தர வேண்டாம் அண்ணா அது ஏற்கன்வே என் கிட்ட இருக்கு அது நான் பன்னின தப்பு தான்.ஒரு சில பெண்கள் அந்த காட்சில தியேட்டர விட்டு ஓடிட்டாங்க அதனால கட் பண்ணிட்டேன்.வேனும்னா என் தங்கச்சி ய கூட்டிட்டு போய் பாருங்க அப்போ புரியும்.


சி.பி யின் பதில் - பொதுவாக ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பு பற்றிய விமர்சனத்தில் கோபம் அதிகம் வரும். ஆனால் பொறுமையாக பதில் அளித்த நண்பருக்கு நன்றி. துக்ளக் இதழில் முதலில் எல்லாம் பட விமர்சனம் போட்டு இயக்குநருக்கு ஒரு கேள்வி என கேட்பார்கள், அதற்கு சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் பதில் அளிப்பார்கள்.. நாளடைவில் சில இயக்குநர்கள் தங்களை கேள்வி கேட்பதை விரும்பாததால் அந்த பகுதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.. இவர் பதில் கொடுத்திருப்பது நல்லதொரு ஆரம்பம்.. ஆரோக்கியமான விஷயம்!!!

டிஸ்கி - இயக்குநர் என்னை அண்ணா என அழைத்ததை மட்டும் ஆட்சேபித்து தம்பி என அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஹி ஹி

Thursday, August 25, 2011

FINAL DESTINATION - 5 - சஸ்பென்ஸ் திரில்லர் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://mutantville.com/blog/wp-content/uploads/2011/08/final-destination-5-2011.jpgமரணபயம் இல்லாத மனிதர்கள் ரொம்ப கம்மி. இறக்கப்போறது முன் கூட்டியே தெரிஞ்சிட்டா அவனோட மனசு என்ன பாடுபடும்?தன் உயிரைக்காப்பாத்த என்ன வெல்லாம் செய்வான்? என்பதுதான் படத்தோட ஒன் லைன்.. சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவு செம சஸ்பென்ஸோட கதை , திரைக்கதை அமைஞ்சிருக்கறது படத்தோட பிளஸ்..

 ஒரு குரூப் பஸ்ல  ஒரு விழாவுக்கு போறாங்க, ஒரு பாலத்தை கடக்கறப்ப ஹீரோவுக்கு ஒரு உள்ளுணர்வு அல்லது கனவு மாதிரி ,விபத்து ஏற்படற மாதிரியும்  அதுல எல்லாரும் இறப்பது மாதிரியும்.. உடனே அவன் தன்னோட கேர்ள் ஃபிரண்டை கூட்டிட்டு கீழே இறங்கறான், அவன் கூட அவனோட ஃபிரண்ட்சும் இறங்கறாங்க.. என்ன ஆச்சரியம்? அடுத்த நிமிஷமே பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எல்லாரும் ஸ்பாட் அவுட்.. சாவிலிருந்து தற்காலிகமா தப்பிச்ச  அவங்க எப்படி வரிசையா சாகறாங்க என்பதுதான் பட படக்கும் திரைக்கதை..

எது கிராஃபிக்ஸ், எது நிஜம்னு கண்டு பிடிக்காத அளவு அந்த பால விபத்து 2 வெவ்வேறு சூழல்ல படமாக்கப்பட்டது செம..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVYmDyBDeRqX5RGCqSG2AdV_3WgfunEUSpjhJAWu35M1ZZucpTIv4n7Pss4-SH2Or7uNU06oSOc9MW2ppCwMgRoLLvcCoy2cNbvvDxDpmIjqXcJ-2l99yNWF_7SF0EgbPgNZRHtt2YJCLU/s1600/final-destination-5-3d.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஏய்.. செதுக்கி வெச்ச சிலை மாதிரி இருக்காளே!! ஏய், அந்த பர்கரை சாப்பிடாதே.. குண்டாகிடுவே!

2.   உடனே அவ கிட்டே சாரி கேளு.. 

ஏன்? நான் என்ன தப்பு செஞ்சேன்?

நாம தப்பு பண்றமோ இல்லையோ அடிக்கடி லேடீஸ்ட்ட சாரி கேட்கனும்..

3. எந்த விஷயம் போனா திரும்ப வராது? சொல் பார்க்கலாம்?

நேரம்!!!!

4. ஹாய்.. ஸ்வீட்டி.. நான் வெளியூர்ல இருக்கேன், பார்த்துக்கம்மா,, நான் இல்லாதப்ப எவனாவது முழுகி முத்தெடுத்துடப்போறான்.!

5.  என்னது? எனக்கு இவங்க இரங்கல் தீர்மானம் போடறாங்க..? டேய்.. நான் நல்லாத்தான் இருக்கேன்..

சத்தம் போட்டு சொல்லாதே.. பேய்னு நினைச்சுக்கப்போறாங்க..

http://images.wikia.com/finaldestination/images/0/0f/Final-destination-5-movie-photo-01-550x365.jpg

6.  டியர், நான் கூட இருந்தா உன் லட்சியம் செத்துடும்.. எனக்கு உன்னை விட நம்ம காதலை விட உன் லட்சியம் தான் பெரிசு..

7.  ஆஹா. ஃபோட்டோலயே கலக்கறாளே? கடிச்சுத்தின்னுடலாம் போல தோணுதே..

8. போன தடவை நீ என் பிளாட்க்கு  வந்தப்ப என் பர்ஸ் காலி ஆன பின்புதானே என்னை விட்டே?

9.  ஆஹா!!!!!!!! இவளுக்கு என்ன ஒரு நடை, ! இதுக்கே போட்டுத்தரலாம் போல இருக்கே!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih-Ir1ngZ9TwJxhu1TcUZnx6oTUs1tv1mTrZCfvfu79aAImoXZ471DhZbuNs7Dc7IZheMXtlV1gpJBGzI0Wetc20BsWaIEe194NJdT2wlJNhzN9QLNWjJomSkDIUYecpAPuFPI1feahxiD/s400/Final+Destination+5-2.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  ஜிம்னாஸ்டிக் லேடி பாரில் எக்சசைஸ் பண்ணிக்கொண்டே இருக்கையில் இறக்கும் காட்சு பயங்கர கொடூரம், தியேட்டரில் கை தட்டல் ஒலி அடங்கவே 4 நிமிஷம் ஆகுது யப்பா!!!!!!!!!!

2.  மசாஜ் லேடி யங்கா இருப்பானு பம்மிட்டு ஒருத்தன் போறப்ப வயசான லேடி - அதைப்பார்த்ததும் எஸ்கேப் ஆகப்பார்க்குறான், முடியல.. அக்குபஞ்சர் மாதிரி ஏகப்பட்ட ஊசிகளை குத்தி வைக்க அவன் ஸ்லிப் ஆகி கீழே விழுந்து எல்லா ஊசிகளும் ஏறி இறப்பது த்ரில்...

3. லேசர் சிகிச்சைக்கு டாக்டரிடம் வரும் ஃபிகரை ஆபரேஷன் பொசிஷனுக்கு வைத்து விட்டு வெளியே யாரோ அழைப்பதால் டாக்டர் செல்லும்போதே ஏதோ விபரீதம் நடக்கப்போவது தெரிந்து விடுகிறது.. மார்வலஸ் சீன்..

4.  சக நண்பனையே போட்டுத்தள்ளி அவன் ஆயுளை இவன் எடுத்துக்கொள்ள நினைக்கும் லாஜிக் புதுசு.. .. ( நம்ம ஊருக்கு பழசு.. விட்டலாச்சார்யா, அம்புலிமா உபயத்தில்  )

5. இந்த சீன் ரொம்ப போர்.. அப்டின்னு ஒரு சீன் கூட சொல்ல முடியாத அளவு செம விறு விறுப்பு..


http://www.horror-asylum.com/news/pics/meghan-ory-cast-in-final-destination-5.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. முன் பின் அறிமுகம் இல்லா ஒரு பெண்ணை பஸ்ஸில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்றதாக , முயல நினைத்ததாக  வில்லன் ஏன் ஹீரோவிடம் உண்மையை சொல்கிறான்? அவன் உஷார் ஆகி விட மாட்டானா?

2.  தான் இறப்பதை தவிர்க்க வேண்டுமானால் வேறொரு உயிரை கொலை செய்ய வேண்டும் என்ற கான்செப்ட் ஓக்கே, ஆனால் அது நீண்ட ஆயுள் உள்ள உயிரைத்தானே? அல்ப ஆயுசில் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட ஹீரோ உயிரை ஏன் வில்லன் எடுக்க நினைக்கிறான்.. அப்படி எடுத்தா அவனுக்கு மீறி மீறி போனா 10 நாள் ஆயுள் தானே வரும்?

3.  பெரும்பாலும் பஸ் , ரயில் பயணங்களில் தான் மரணம் நிகழ்கிறது. அப்படி இருக்கும்போது ஹீரோ , ஹீரோயின் ஏன் விமானப்பயணம் தேர்ந்தெடுக்கிறார்கள்?

4. ஃபேக்டரியில் தற்செயலாக நடக்கும் நீக்ரோவின் மரணத்துக்கு தான் தான் முழு காரணம் என ஹீரோவின் ஃபிரண்ட் சொல்றானே? அது எப்படி?

5.  காலன் அல்லது எமனின் தூதன் மாதிரி காட்டப்படும் கேரக்டர்  ஒவ்வொரு மரணத்திற்கும் அட்டெண்டென்ஸ் போட வந்துட்டு க்ளை மாக்ஸ் டெத்துக்கு மட்டும் வரவே இல்லையே , எப்படி?

http://moviehitcenter.webs.com/watch-final-destination-5-online-free-5.jpg

படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங்க் கன கச்சிதம்..

ஆங்கிலப்படங்களுக்கு விகடனில் நோ மார்க்..

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி. பி, கமெண்ட் -  கர்ப்பிணிப்பெண்கள், இதய பலஹீனம் உள்ளவர்கள் தவிர அனைவரும் பார்க்கலாம்

ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன்...

http://img.poptower.com/pic-60462/final-destination-5.jpg?d=600