Saturday, April 09, 2011

ஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியாதிகளுக்கு சொம்பு

'ஊழலுக்கு எதிரான இந்தியா!'

அதில் நீங்களும் ஒருவரா?
'இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழித்தே தீர வேண்டும்’ என்ற 
http://www.indiareport.com/resources/images/original/anna_hazare1.jpg

உயர்ந்த நோக்கத்துடன் 72 வயதான மனிதர் ஒருவர் சாகும் வரை உண்ணா​விரதப் போராட்டத்தில் இறங்க... ஒட்டுமொத்தத் தேசமும் சிலிர்த்து நிற்கிறது! எகிப்து, லிபியா, வளைகுடா நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி, இந்தியாவிலும் தோன்றிவிட்டதோ என்று எண்ணும் வகையில் நடக்கிறது போராட்டம். அவர் அன்னா ஹசாரே! 

மகாராஷ்டிர மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் என்ற சிற்றூரை மாதிரிக் கிராமமாக மேம்​படுத்தி​யவர். அதற்காக, 1992-ல் பத்ம பூஷண் வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. 'ஊழல் புரிந்த ஆட்சியாளர்களை விசாரிக்கும் லோக்பால் மசோதாவை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் அன்னா!

ஊழல் புரியும் ஆட்சியாளர்கள் மீது விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கக் கோருவதுதான் லோக்பால் மசோதா. முதலில் இது, 1969-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தங்களையே விசாரிக்க எம்.பி-க்கள் ஒப்புக்கொள்​வார்களா? எதிர்ப்பு கிளம்பியதால், அது  நிறைவேறவில்லை. அதன் பின்னர், 1971 முதல் 2008 வரை ஒன்பது தடவைகள் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், இன்று வரை நிறைவேறவே இல்லை!

அதனால், அந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், 'பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர்​​களாக நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அன்னா ஹசாரேவும் பிரதமரிடம் இதை வலியுறுத்தினார். ஆனால், அதை மன்​மோகன் சிங் நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அக்னிவேஷ் உள்ளிட்டோர் சேர்ந்து, 'ஜன் லோக்பால்’ என்ற மாதிரி மசோதா ஒன்றைத் தயாரித்தனர்.

அதில், எப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறி இருந்தனர். இதையும் பிரதமர் நிராகரிக்கவே, அதிர்ச்சி அடைந்த அன்னா ஹசாரேவும் ஆதரவாளர்களும் இப்போது போராட்டத்தில்.

இது குறித்து ஹசாரே, ''லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் சமூக அமைப்புகளில் உள்ளவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி, மூத்த வக்கீல்கள் போன்றவர்களையும் முக்கிய நபர்களாக அரசு கருதவில்லை.

ஆனால், மகாராஷ்டிராவில் பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரை இந்த கமிட்டிக்குத் தலைவராக நியமித்துள்ளனர். அரசு விதிகளுக்கு மாறாக, பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள ஒருவரை இதற்குத் தலைவராக நியமித்து மசோதா தயாரிப்பது சரியாகுமா?

இந்த மசோதா தயாரிப்புக் குழுவில் 50 சதவிகிதம் அதிகாரிகளையும், 50 சதவிகிதம் சமூக நல அமைப்பினரையும், அறிவுஜீவிகளையும் நியமிக்க வேண்டும். 

'உங்களை மதிக்கிறேன், உங்களை நம்புகிறேன்’ என்று பிரதமர் என்னிடம் கூறுகிறார். ஆனால், கடந்த மாத சந்திப்புக்குப் பின்னர் எங்களுடன் கலந்தாலோசனை செய்ய ஏன் பிரதமர் மறுக்கிறார் என்று தெரியவில்லை!


முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே இந்த மசோதாவைத் தயாரித்தால், அதில் ஜனநாயகம் இருக்காது. முழுமையான எங்கள் எல்லா ஷரத்துகளும் அடங்கிய லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை என் உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன்!'' என்கிறார் உறுதியாக.


இந்தப் போராட்டத்துக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உண்ணாவிரத இடத்துக்கே சென்று, ''இந்தியாவில் தற்போது தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட் இரண்டு மட்டுமே துடிப்பாக உள்ளன. ஊழலுக்கு எதிராக இதுபோன்ற துடிப்பான அமைப்பு நிச்சயம் தேவை என்பதால், ஹசாரோ மற்றும் குழுவினர் தயாரித்த மாதிரி லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை நாடாளு​மன்றத்துக்குக் கொண்டுசெல்ல முயற்சிப்​பேன்...'' என்றார்.

http://im.in.com/media/download/wallpapers/2011/Apr/anna_hazare_420x315.jpg
மேலும், முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்திப் பாண்டே உட்பட பல பிரபலங்களும் உண்ணாவிரத இடத்துக்கு வந்து, ஆதரவுப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். பீகார் துணை முதல்வர் எஸ்.கே.மோடியும் ஆதரவு அளித்துள்ளார்.

அன்னா ஹசாரேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் பொதுமக்களும் இந்த மசோதாவை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகிறார்கள். மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்கள். 

அந்த இயக்கத்தைச் சேர்ந்த மாயங்க் காந்தி, ''அன்னா ஹசாரேவுக்குப் பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம் இந்தப் போராட்டம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. பலர் தங்கள் அலுவலகங்களிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோரிக்கை நிறைவேறினால் ஒழிய, இந்தத் தீ அணையாது!'' என்கிறார்.

நல்ல விஷயத்துக்காக நடக்கும் போராட்டம், நாலா திசைகளிலும் பரவி வருவது நம்பிக்கை அளிக்கிறது!


இன்றைய தினமலரில்........
லோக்பால் மசோதாவை தயாரிக்க இருதரப்பு குழு அமைப்பது குறித்து, அரசு கெஜட்டில் வெளியிட இயலாது என்றும், மசோதா தயாரிப்பு குழுவுக்கு அமைச்சர் அல்லாத ஒருவரை தலைவராக இருக்கவும் ஏற்க முடியாது என, மத்திய அரசு தெரிவித்து விட்டது. இதையடுத்து, அன்னா ஹசாரேயின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர் கருத்துக்கு நாடு முழுவதும் அதிக ஆதரவு பெருகுவதால், மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் ளின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார். 

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நான்காவது நாளாக அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம், நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. ஹசாரே தரப்பில் வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கைகள் இரண்டை ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்து விட்டது.
http://lh4.ggpht.com/_xFP6s39OUYY/TZxN0zPsQwI/AAAAAAAAqSI/PqYJgEtdQs8/Anna%20Hazare-gandhiyan-%20begins%20fast_thumb%5B2%5D.jpg?imgmax=800
கபில் சிபல் தகவல்: நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சுவாமி அக்னிவேஷ் வரு வார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்ட பலரும் காத்திருந்தனர். ஆனால், சுவாமி அக்னிவேஷ் வரவில்லை. பின்னர் அவர் கூறும்போது, "ஹசாரே தரப்பினர் வலியுறுத்தும் பிற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளது.

அரசு மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகிய இரண்டு தரப்பும் இணைந்த குழுவை அமைக்க தயாராக உள்ளோம். ஆனால், அந்த குழு அமைப்பது பற்றியோ, அந்த குழுவின் பேச்சுவார்த்தை மற்றும் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அரசு கெஜட்டில் வெளியிட இயலாது. வேண்டுமெனில் அரசின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் இதுபற்றி அனைத்து உறுதிமொழிகளையும் அளிக்கவும் தயார். 

இன்னொரு கோரிக்கையான, இருதரப்பும் அங்கம் வகிக்கும் அரசின் குழுவுக்கு அமைச்சரவையில் இல்லாத வெளிநபர் தலைவராக இருக்கவும் அனுமதிக்க முடியாது. அது இயலாத காரியம் என்பதால், அதையும் ஏற்க முடியாது' என்றார். இந்த தகவல்கள் உண்ணாவிரத மேடையில் அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த குழுவுக்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் தலைவராக இருப்பார் என்றும் அரசு தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது உண்ணாவிரத பந்தல் முன்பாக குழுமியிருந்த அனைவருமே கோபமும், ஆத்திரமும் அடைந்தனர். வரும் 13ம் தேதி ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடப்பது கண்டு அரசுகள் அலறுகிறது. 

இதன் வெளிப்பாடாக, ஆளாளுக்கு ஒரு போராட்டம் நடத்தும் அபாயம் ஏற்படும் என்று காங்., தகவல் தொடர்பாளர் சிங்வி கூறினார். பிரதமர் மன்மோகன் ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்து ஆலோசனை செய்தார். அரசும் நேற்று தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டது.
http://nimg.sulekha.com/others/thumbnailfull/anna-hazare-2011-4-6-10-21-28.jpg
13ம் தேதி சிறைநிரப்பும் போராட்டம்: முக்கிய கோரிக்கைகளை அரசு நிராகரித்து விட்டதையடுத்து, உண்ணாவிரத மேடையிலிருந்த படியே அன்னா ஹசாரே அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, வரும் 13ம் தேதி அன்று ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும், மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். 

ஊழலை எதிர்ப்பதில் அலட்சியம் காட்ட நினைக்கும் அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழு வேண்டுமென்றும், அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக, ஏப்ரல் 12ம் தேதி அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ராமநவமி விடுமுறை என்பதாலும், மக்களுக்கு சிரமம் அளிக்க வேண்டாமென்றும் நிர்வாகிகள் முடிவு செய்ததையடுத்து சிறை நிரப்பும் போராட்டம் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

பின்னர் நிருபர்களிடம் ஹசாரே தரப்பு நிர்வாகிகள் பேசும்போது, "ஹசாரே கூறும் காரணங்களையும், வார்த்தைகளையும் வேண்டுமென்றே திரித்து வெளியிட அரசு முயற்சிக்கிறது. அரசியல் கலப்பு இல்லாத நியாயமான ஒருவர் தான் குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டுமெனஹசாரே வலியுறுத்துகிறார். இதை ஏற்க அரசு மறுக்கிறது' என்றனர்.

பெருகுகிறது ஆதரவு: ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், குடும்பத் தலைவிகள் என, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து, ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் குவியத் துவங்கியுள்ளனர். யோகா குரு ராம்தேவ், பாலிவுட் நட்சத்திரம் அனுபம்கெர் போன்ற பிரபலங்களும் வந்திருந்தனர். அனுபம்கெர் பேசும்போது, "சச்சின், ஷாருக்கான், அமிதாப் பச்சன் போன்ற முக்கியமானவர்களும் வர வேண்டும். ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என்றார்.

Friday, April 08, 2011

மாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினிமா விமர்சனம்

http://www.indianews365.com/wp-content/uploads/2011/03/DhanushMappillaiMoviewallpapers.jpg


படம் போட்டு முதல் 40 நிமிஷம் விவேக் காமெடி களை கட்டுதுன்னா அதுக்கு இயக்குநரோட பங்களிப்பு மட்டும் அல்ல தனுஷின் விட்டுக்குடுத்தலும் ஒரு முக்கியக்காரணம்...சமீப காலத்துல எந்த ஹீரோவும் இப்படி ஓப்பனிங்க்ல டம்மி ஆனதில்லை....விவேக்கோட டாமினேஷன் தூக்கலாவே இருக்கு... 

படத்தோட கதை என்னன்னு ரஜினியோட மாப்பிள்ளை பார்த்தவங்களுக்கு நல்லாவே தெரியும் என்றாலும்... சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்கே... கோடீஸ்வர மாமியார் VS கேடி மாப்ளை ரெண்டு பேரும் விட்டுக்கற சவால்.. சபதம் ,இத்யாதிகள் தான் கதை.. அப்படியே நாடகம் பார்க்கற மாதிரி இருக்கு.

எந்திரன் ரஜினியின் ரோபோ கெட்டப்பில் விவேக்கின் காமெடி செம கலக்கல்.. ஆனால் அவர் தமிழை கடித்துத்துப்புவது கேப்டனின் மேடைப்பேச்சு போல் மகா மட்டம்.

ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியை பற்றி ஒரு பேரா வர்ணிச்சர்லாம்... (எதுக்கு?) ஒரு மொக்கைப்படத்தை 240 லைன் கஷ்டப்பட்டு டைப் பண்றப்ப  ஒரு நல்ல ஃபிகரை 20 லைன் வர்ணிக்கறது தப்பில்லைன்னு ஜொள்ளாயணம் எனும் இதிகாசத்துல இருக்கு...

http://flicksbuzz.com/Assets/Images/Kollywood/Kollywood-News/Hansiha-Motwani-at-Mappillai2011-Stills-Mp3-Songs-Release-Date-wallpaper-Mappillai-Movie-Review-Release-Date.jpg
வகையாக வாட்டர் வாஷ் செய்யப்பட்டு, வார்ணீஷ் அடிக்கப்பட்ட வருஷம் 16 குஷ்பூவைப்போல முகச்சாயலும்,கனகாம்பரப்பூக்களை அரைத்து எடுக்கப்பட்ட சாற்றில் ஊற வைத்து எடுக்கப்பட்ட கொடை ஆரஞ்சுப்பழ சுளைகளைப்போன்ற உதடுகளும்,வெண்ணெயில் தடவி எடுக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற உடல் அமைப்பும்,பருத்திப்பஞ்சும்,பஞ்சு மிட்டாய்யும் சேர்ந்தால் வரும் மென்மையைக்கொண்ட கன்னமும்,இரண்டு அடைப்புக்குறிகளை (மேத்ஸ் ஸ்டூடண்ட்டாக்கும்) ஆப்போசிட் டைரக்‌ஷனில் ஃபிட் பண்ணியது போன்ற இடை அழகும் கொண்டவர்.. ( அந்த கர்ச்சீஃப் எடப்பா..)

இந்த மாதிரி அழகு பொம்மையை பார்த்தமா? ரசிச்சமா?ன்னு போய்ட்டே இருக்கனும்.. அதை விட்டுட்டு பாப்பாவுக்கு நடிப்பு வருதா? என கேனத்தனமாக கேள்வி கேட்பது  தி மு க , அதிமுக போன்ற திராவிடக்கட்சிகளிடம் நேர்மையான ஆட்சியை எதிர்பார்ப்பது போல... 

ஹன்சிகா மினிமம் 5 வருஷம் மார்க்கட் பிடிச்சிடுவார் என “ தாராளமா “ எதிர்பார்க்கலாம்.. ஆனால் அவர் பாடல் காட்சிகளில் லோ ஹிப் காட்டும் சீன்கள் அவ்வளவு பட்டவர்த்தனமாய் தெரிய தேவை இல்லை.. 

ஹீரோயின்கள் காட்டும் கவர்ச்சி என்பது தி மு கவின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் மாதிரி கமுக்கமா இருக்கனும்.. ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் ஜெயாவின் ஊழல் மாதிரி ரொம்ப பட்டவர்த்த்னமாய் எக்ஸ்போஸ் செய்வது அழகியல் ரசனையை மலிவாக்கி விடுகிறது..


சரி.. அடுத்த கட்டத்துக்கு போலாம்.. மணீஷா கொய்ராலா... மாமியாராக ஸ்ரீவித்யா காட்டிய கம்பீரம்,ஆணவம்,மிடுக்கு இவற்றில் 25% கூட இவர் காட்டவில்லை.. கழுத்துக்கு மேலே திறமையை காட்டுங்க என இயக்குநர் சொன்னால் இவர் உல்டாவாக ........ 
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/01/manisha-koirala06.jpg
இவருக்குப்போடப்பட்ட அதீத மேக்கப் இவரது முதுமையை மறைத்து விடும் என ஒப்பனை அலங்கார நிபுணரோ,ஒளிப்பதிவாளரோ நினைத்தால் அது அறிவீனம்,,

தனுஷின் நடிப்பு எப்பவும் போல் கன கச்சிதம்.. கடவுள் பக்தி மிக்கவராக பம்மும்போதும் சரி.. ரவுடியாக வந்து அலப்பறை பண்ணும்போதும் சரி கலக்கலான நடிப்பு... 

காமெடியில் களை கட்டிய வசனங்கள்

1. விவேக் - இவ்வளவு பேர் அடிக்க வருவாங்கன்னு சொல்லவே இல்ல..?

பாஸ்.. சொன்னா நீங்க ஓடிடுவீங்களே..?

2. விவேக் - அடியாளுங்க எல்லாம் ஷகீலா  கை  சைஸ்க்கு இருப்பாங்கன்னு பார்த்தா ஷகீலா சைஸ்க்கே இருக்கானுங்களே..?

3. விவேக் - நான் பஞ்ச் டயலாக் பேசக்கூடாதா? ஏண்டா..?

பாஸ்.. அடி கொடுக்கிறவன் தான் பஞ்ச் டயலாக் பேசனும்.. அடி வாங்கறவன் பேசக்கூடாது...

விவேக் - எனக்கு எதிரிங்க வெளில எங்கேயும் இல்லடா.. கூடவே தான் இருக்காங்க.

4.  பாஸ்.. வாங்க ஓடிடலாம்..

விவேக் - டேய்.. ஓடுனா துரத்தி துரத்தி அடிப்பாங்க..அதனால நின்னு அடி வாங்கிக்கலாம்.. அவனுங்க அடிச்சு களைச்சுப்போன பின்னாடி நைஸா ஓடிடலாம்.. 



http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/03/mappillai-film-hansika-motwani-cute-photos.jpg
5. விவேக் - பெத்த பையன் அடி வாங்கிட்டு வந்து நிக்கறான்.. காப்பாத்தாம பார்த்துட்டு இருக்கியே .. நீ எல்லாம் ஒரு அப்பனா?

அன்னைக்கு ஒரு நாள் நீ 10 வயசுப்பொடியன் கிட்டே அடி வாங்கிட்டு வந்து நின்னப்ப.. உன் கூட வந்து அவனை அடிச்சப்போ அவனோட அப்பா என்னை துவைச்சு எடுத்தானே.. அதை நீ வேடிக்கைதானே பார்த்துட்டு இருந்தே..?

6.  ச்சே... நீ எனக்குப்பிறந்தவந்தானா..?

விவேக் - டாடி.. அதே டவுட் மைல்டா எனக்கும் இருக்கு.. 

7. பாஸ்... அந்த சேட்டு வீட்டு ஃபிகர் செமயா இருக்கே.. கணக்கு பண்ணிடலாமா?

விவேக் - உனக்கு பானி பூரி வேணும்கறதுக்காக பாழடைஞ்ச பூமியை என்  தலைல கட்டப்பார்க்குறியாடா.. அடப்பாவி... 


8. பாஸ். அதோ வர்றாளே.. ரேகா.. அவ எப்படி..?

விவேக்- டென்னிஸ் கோர்ட்டுடா.. பாவம் ரொம்ப வீக்கா இருக்காடா.. 


9. விவேக் -டேய்.. திடீர்னு தென்றல் காத்து ஸ்பீடா அடிக்குது.. மழை வர்ற மாதிரி இருக்கு.. பூக்கள் எல்லாம் அப்பிடிக்கா,இப்படிக்கா பறக்குது.. இந்த சமிக்ஞைகள் எல்லாம் என்னடா சொல்லுது..? ஹீரோயின் இப்போ வரப்போறான்னு சொல்லுதுடா... 

10.  பாஸ்.. அந்த ஃபிகரைப்பார்க்க  நாங்களும் கூட வந்தா உங்களுக்கு போட்டி ஆகிடுவமே..?

விவேக் - அப்படி யாரும் போட்டிக்கு வந்துடக்கூடாதுன்னு தாண்டா உங்களைக்கூட வெச்சிருக்கேன்.. 

11. டேய்.. தண்டச்சோறு.. இந்த ஸ்கூட்டரை சர்வீஸ்க்கு விட்டுட்டு வாடா..

விவேக் - டாடி.. இந்த வண்டியை சர்வீஸ்க்கு விட முடியாது,..சமாதில வேணா விடலாம்.. 

12.  இந்தத்தம்பியை ஒரு நாள் கூட குளிக்காம பார்த்ததே இல்லை..உன்னை..? ஒரு நாள் கூட குளிச்சுப்பார்த்ததே இல்லை.. 

13.விவேக் -   நான் மனித வெடி குண்டா மாறப்போறேன்.

முதல்ல மனுஷனா மாறுங்கடா.. 

14.  அண்ணா.. 

விவேக் - டேய்.. நான் யூத் தான்.. பேர் சொல்லியே கூப்பிடலாம்.. 

15. விவேக் - எனக்கு என்ன வருத்தம்னா நம்மைப்பெத்தவங்கதான் மதிக்கலைன்னா ,மத்ததுங்களும் மதிக்கலையேன்னுதான்...

16.  விவேக் - ஹூம்.. அடிக்கு அடி.. ரத்தத்துக்கு ரத்தம்...

அடுத்த லைன் பித்தத்துக்கு பித்தமா பாஸ்... ?

17.  விவேக் - பணக்காரப்பெண்ணை லவ் பண்ண நான் என்ன பண்ணனும்? என் லைஃப் ஸ்டைலை மாத்தனுமா?

முதல்ல உன் ஹேர் ஸ்டைலை மாத்து... 


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/hansika.jpg

--
18.  இந்தப்பொண்ணு எப்படி இருக்கு..? பேரு ரீட்டா..

விவேக் - இப்படி கும்முன்னு இருக்கே..? அவங்கப்பன் சேட்டா..?

19. விவேக் -  இந்த லவ் லெட்டரை அந்த பொண்ணு கிட்டே போய் குடு... 

இதை நீங்களே கொண்டு போய் கொடுக்க வேண்டியதுதானே..? 

அந்த அளவு தைரியம் இருந்தா அவர் ஏன் உன்னை கெஞ்சிட்டு இருக்காரு..?

20..விவேக் -  அய்யய்யோ.. அது யார்டா.. சரவணன் சைடுல 4 பேர் சரவண பவன் மேனேஜர் சைஸ்க்கு வர்றானுங்களே....

21. விவேக் -  என்னை மாதிரி ஒரு டீசண்ட்டான பையனை ஒரு பொண்ணு சுத்தறதுல என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? என்ன முறைக்கறீங்க..? சரி .. சுமாரான பையனை.... 

22.  இங்கே பாருங்க.. என்னை கம்ப்பெல் பண்ணாதீங்க.. உங்களை எனக்கு பிடிக்கலை.. ஒரு பொண்ணை பார்த்ததுமே பிடிக்கனும்.. பார்க்க பார்க்க பிடிக்கக்கூடாது.. 

23. விவேக் -  இன்னைக்கு வேணும்னா  அவன் அவ மனசை கவர்ந்திருக்கலாம்.. ஆனா நாளைக்கு அவ என்னோட ஆளாத்தாண்டா இருப்பா... 

பாஸ்.. அப்போ நாளான்னைக்கு..? 

விவேக் -  நக்கலு..?


24.  நிறுத்துங்க.. அடிச்சது போதும்.. லெட்டர் குடுத்த எனக்கே இவ்வளவு அடின்னா லெட்டரை குடுக்க சொன்னவர் கைல கிடைச்சா என்ன பண்ணு வீங்களோ..?

25.. பொதுவா பசங்களைப்பார்த்தா நல்லவனுங்க மாதிரிதான் தோணும்.. ஆனா பழகிப்பார்த்தாதான்.. கெட்டவங்கன்னு தெரியும்.. 

26. விவேக் -  தயவு செய்து பாடித்தொலைச்சுடாதே.. பொண்ணு பாடி (BODY)ஆகிடும்.
27.  கடவுள் இருக்கார்.. எங்க காதலை அவர் சேர்த்து வைப்பார்..

விவேக் - ஏண்டா.. கடவுளுக்கு வேற வேலை இல்லையாடா.. அப்படி காப்பாத்தப்போறதா உனக்கு எஸ் எம் எஸ் பண்ணுனாராடா..?

28. என் பேரு சரவணன்.. எனக்கு இன்னொரு பேர் இருக்கு..

 என்னடா பாட்ஷா பில்டப்பாடா.. எத்தனை பேர் வேணும்னாலும் வெச்சுக்கோடா..


http://buzz.faabo.com/wp-content/uploads/hansika-motwani-boobs.jpg
29.  பாஸ்.. அப்புறம்?

விவேக் -ம்.. விடிஞ்சுது..

கிழிஞ்சுது.. 

30.  நீங்க பார்க்க கேவலமானவரா இருந்தாலும் உங்க காதல் கேவலமானதா இல்லை.. 

31.விவேக் -  என்னது? பேபி ஃபார்ம் ஆகிடுச்சா..? என்னடா சைக்ளோன் ஃபார்ம் ஆன மாதிரி சொல்றே?நேத்து நைட் தானேடா அவளை ரேப் பண்னுனே.. அதுக்குள்ள உண்டாளாகிட்டாளாடா?

ஆமா.. அதுவும் ட்வின்ஸ்..

32..விவேக் -  டாடி.. நீ ரொம்ப கெட்டவன்.. நேத்து எதுக்கு மம்மி ரூம்க்கு போனே..?

டேய்.. புக்கை மறந்து வெச்சுட்டு வந்துட்டேன்.. அதை எடுக்கப்போனேன்.. 

விவேக் - நான் அதைக்கேட்கலை டாட்.. மம்மியோட மம்மி வீட்டுக்கு எதுக்குப்போனே..?

33. விவேக் -  வாடா.. கறுப்பு சிவாஜி... 

34. ஹீரோயின் - டியர்.. பேசலாம் கொஞ்ச நேரம்.. 

இது என்ன பட்டி மன்றமா?ஃபர்ஸ்ட் நைட் ரூமா..? ஏம்மா..

35..விவேக் -  என் கைல பேலன்சே இல்லை.. பேலஸா?

36. விவேக் - ஹா ஹா.. நாங்க எல்லாம் பாய்சன் கிடைச்சாலே அதை பாயாசம் மாதிரி குடிக்கற ஆளுங்க.. பாயாசம் கிடைச்சா கேட்கனுமா?

37. மனோபாலா - நான் சாமியார்,, சினிமா படம் பார்க்கறதில்லை... 

பரவால்லை.. இது சீன் படம் தான்.. பார்க்கலாம்.. அதுவும் நீ நடிச்சதுதான்.. 

38. விவேக் -  என் கூட சம்பந்தம் வெச்சுக்க ஒரே சிங்க்கிற்கு மட்டும் தான் தகுதி இருக்கு.. 

யார் அது? ஹர்பஜன் சிங்கா?

விவேக் - ம்ஹூம்.. மன்மோகன் சிங்க்.. 


39. விவேக் - ஓடற பஸ்ல ஒன் ருப்பி காய்ன் விழுந்தாலே நாங்க ஓடிப்போய் எடுப்போம். 1000 ரூபா மிஸ் ஆச்சுன்னா சும்மா இருந்துடுவோமா?


http://lh4.ggpht.com/_3LfhE9l2pEM/S1QndRTyOcI/AAAAAAAAFkU/VBThK2rg440/jirlMDbejig%5B4%5D.jpg
மணீஷா கொய்ராலா பேசும் பஞ்ச் டயலாக்ஸ்

1.  என் முன்னால காலை ஆட்ற மாப்ளையை விட என் பின்னால கையை கட்டி நிக்கற மாப்ளையைத்தான் எனக்கு பிடிக்கும்.. ( அய்யய்யோ..அப்போ குடித்தனம் பண்ணப்போறது உங்க பொண்ணு இல்ல்லையா?)

2. சுகர் பேஷண்ட் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படறதும், வீட்டோட இருக்கற மாப்ளை மரியாதையை எதிர்பார்க்கரதும் ஒண்ணுதான்... 

3. ஆள்றவன் மாப்ளையா வரக்கூடாது.. அடங்கறவன் தான் மாப்ளையா வரனும்.. ( அப்போ சுடுகாட்டுக்குத்தான் நீ போகனும்.. அங்கே தான் அடங்குனவன் அடக்கமானவன் இருப்பான்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4t6ob28a-cR988arox4CD5oJjDJz0b7364LUTbB8XfYGkS9L_DSrJ1XkbWWnlq0NnYPOtDyMos06fAPzc1IM8ZUzxahs7Sxg_dRxisvecRdhPvh4w0JO_VwCMo0q3TYelQvjII5xMmi4/s320/Hansika+cute+in+pink+and+blue.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள்

1. லாஜிக் லாஜிக்னு சொல்வாங்களே.. அதை எல்லாம் நீங்க கண்டுக்கவே மாட்டீங்களா?

2. கோயில் சிலை மாதிரி இருக்கற ஃபிகரு குப்பை அள்ளறவன் மாதிரி இருக்கறவனை  துரத்தி துரத்தி லவ் பண்ணுவாளா?

3.மனைவின்னு நினைச்சு மாமியாரை மாப்பிள்ளை கட்டி அணைத்து தூக்குவது காமெடியா?

4. ஓப்பனிங்க் சாங்க்ல என்னதான் டான்ஸ்னாலும் இந்து தெய்வங்கள் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு அப்படி ஸ்டெப் போட்டு கேவலப்படுத்தலாமா?

5. கிட்டத்தட்ட 50 வயசான மாமியார் இப்படித்தான் சேலை, ஜாக்கெட் போடுவாங்களா? (இதுல ரொம்ப லோ யு நெக் வேற)

6. கல்யாணமான புதுப்பொண்ணு எப்பவும் பிரா மாதிரி மாடல்ல கை இல்லாத ஜாக்கட்தான் போடுவாங்களா?

7.அவ்வளவு பெரிய கோடீஸ்வரி லூஸ்தனமா ஏமாறுவாளா?

விவேக் ஆரம்ப காட்சிகளில் இடது காலில் ஒரு கலரிலும், வலது காலில் இன்னொரு கலரிலும் ஷூ போட்டு வரும் சீன் செம காமெடி.. அதே போல் அவர் ஹீரோயினைப்பார்த்ததும் “ உன் மேல ஆசைதான்” பாட்டு பேக் டிராப்பில் பாடுவதும் செம.. 

ஆடுபுலி ஆட்டம் ஆடிப்பார்ப்போம் பாட்டு ,ஆத்தாடி அட்றாங்கொய்யால, போன்ற இலக்கிய நயம் மிகுந்த பாடல் வரிகள் அய்யகோ... 

படம் ஏ செண்ட்டரில் ஓடாது.. 25 நாட்கள் ஓடலாம். பி  செண்ட்டரில் 30 நாட்கள். சி செண்ட்டரில் 15 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே

ஈரோட்டில் அபிராமி தியேட்டரில் பார்த்தேன். இது போக ஆனூர்,ஸ்ரீனிவசா,அன்னபூரனி தியேட்டரிலும் ஓடுது..

ஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தியது ஜூ வி

ராசா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

வேண்டிய நிறுவனங்களுக்கு ரகசியத் தகவல் தந்தார்கள்!
ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் சம்பந்தப்​பட்ட 'ஏ-ஒன்’ குற்றவாளியான
http://www.maniyosai.com/cms/images/stories/a.raja%20-%20file%20pic.jpg
முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையை எதிர்கொள்ளத் தயாராகி, நீதிமன்றத்தில் ஆஜரானார்! 
கிட்டத்தட்ட 60 நாட்கள் சிறை​வாசத்தில் மனிதர் சற்று இளைத்து, முகம் வாடிக் காணப்பட்டார்.

சரியாக அயர்ன் செய்யப்படாதபேன்ட் சட்டை​யோடு நின்றார். மற்ற குற்றவாளி​களின் உறவினர்கள், நண்பர்கள் எல்​லாம் வந்திருக்க... ஆ.ராசாவின் மனைவி​யோ குழந்தைகளோ , நெருங்கிய உறவினர்​களோகூட நீதிமன்றத்துக்கு வரவில்லை.

''என்னுடைய பாவத்தை நானே சுமக்கிறேன். நீங்கள் யாரும் வர வேண்டாம்!'' என்று  ஆ.ராசாவே கூறிவிட்டாராம். தி.மு.க-வுக்கு நெருக்கமான டெல்லி மூத்த வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசத்திடம் மட்டும் பேசிக்கொண்டு இருந்தார் ஆ.ராசா.


வெறும் 127 பக்கங்கள்தான் குற்றப்​பத்திரிகை. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட 125 சாட்சிகளுக்கும் கிட்டத் ​தட்ட 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 654 தஸ்தாவேஜுகளும் டிரங்க் பெட்டியில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு வந்து இறங்கிய​போது த்ரில் கூடியது.


சி.பி.ஐ. டி.ஐ.ஜி. எஸ்.கே.பல்சானியா மற்றும் விவேக் பிரியதர்சினி ஆகியோரை சந்தித்துக் கை குலுக்கிய ஆ.ராசா, ''நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பது வேறு. ஆனால், உங்களைப் பாராட்டுகிறேன். இவ்வளவு விஷயங்களை, குறுகிய காலத்தில் கொண்டுவந்தது பாராட்டுக்கு உரியது!'' என்றார்.  ஷாகித் பால்வாவும் தன் பங்குக்கு சி.பி.ஐ. அதிகாரிகளிடம் பேசினார். ''எங்களை மட்டும் கைது செய்து உள்ளே அனுப்பிவிட்டு, மற்ற நிறுவனங்களையும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் கௌர​வமாக நடத்துகிறீர்கள். இது அக்கிரமம்!'' என்றார் பால்வா!


இந்த ஊழலில் விழுங்கப்பட்ட பண விவகாரங்களை சி.பி.ஐ. கண்டுபிடித்ததோ... இல்லையோ, இந்த ஊழலின் ஆணி வேரைக் கண்டுபிடித்து, அதைக் குற்றப் பத்திரிகையாக நீதிமன்றத்தில் வைத்துவிட்டது. இந்த முதல் குற்றப் பத்திரிகையில் ஊழல் பற்றி சி.பி.ஐ. தெரிவித்துள்ளவை கொஞ்சம்தான்.

''மே 2007-ம் ஆண்டு தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்றபோது, தன்னோடு சுற்றுச்சூழல் அமைச்​சகத்தில் பிரைவேட் செக்ரெட்டரியாக இருந்த ஆர்.கே.சந்தோலியா, கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்த சித்தார்த்த பெஹுரா இருவரையும் தன் அமைச்சகத்துக்கு அழைத்து வந்து, செயலராக ஆக்கினார். திட்டமிட்டுத் தனக்கு வேண்டியவர்களை அழைத்து வந்து சதித் திட்டம் தீட்டினார்.

அதேபோல, ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுதான், மற்ற குற்றவாளிகளான டிபி ரியாலிட்டி ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, மற்றும் யுனிடெக் சஞ்சய் சந்திரா எல்லோரும் அவருக்குப் பழக்கமானார்கள். இந்தத் தொழில் அதிபர்களின் பல ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு ஆ.ராசா அப்போதே அனுமதி வழங்கி உள்ளார். இவர் அமைச்சரானவுடன் முதல் காரியமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும், யுனிடெக் நிறுவனத்துக்கும், ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமத்தைக் கொடுப்பதில் தீவிரமாக இருந்தார்!

ஸ்வான் டெலிகாம் ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு மனு செய்து இருந்தது. யுனிடெக் நிறுவனம் விதவிதமான பெயர்களில் எட்டு நிறுவனங்களைத் தயாராக வைத்திருந்தது.

1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை ஒன்றின் (என்.டி.பி.99) அடிப்​படையில் டிராய் அடிக்கடி வலியுறுத்திய விஷயம், 'ஏற்கெனவே உள்ள மொபைல் ஆபரேட்டர்களுக்குப் போக, ஸ்பெக்ட்ரம் மீதம் இருந்தால்தான்... புதிய ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கவேண்டும்’ என்பது. ஆனால், ஆ.ராசா இந்த ஸ்பெக்ட்ரம் இருப்பை அறிந்துகொள்ளாமலே புதிய உரிமங்களை அளிக்கத் தொடங்கினார்.

புதிய உரிமங்களைப் பெறும் விண்ணப்பங்களை அளிக்கும் தேதியை அக்டோபர் 1 என்று அறிவித்துவிட்டு, பின்னர் 'செப்டம்பர் 24 வரை அளிக்கப்பட்டவை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று அறிவித்தார். இந்த மாற்றம் குறித்து சட்ட அமைச்சகத்துக்கு 2007 அக்டோபரில் தகவல் கொடுத்தார். சட்ட அமைச்சகம், 'இது அமைச்சரவைக் குழுவில் வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியும், அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பாமல், தன் முடிவில் ராசா குறியாக இருந்தார். அதோடு, 'அப்படி அனுப்புவது தேவை இல்லாதது’ என்று பிரதமருக்கும் கடிதம் எழுதினார்!

02.11.2007-ல், 'ஸ்பெக்ட்ரம் போதுமானதாக இல்லாத நிலையில் ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் இதற்குரிய ஒதுக்கீடுகளை கவனமாகவும் வெளிப்படையாகவும் செய்யவேண்டும்’ என்று பதில் எழுதினார் பிரதமர்.

அந்தக் கடிதத்துக்கு, அன்று இரவே சந்தோலியாவை வைத்துக்கொண்டு பதில் எழுதிய ஆ.ராசா, 'ஒரு சிறு விதிமுறைகூட மீறாமல் தொலைத் தொடர்பு துறை வெளிப்படையாக இந்த உரிமங்களை வழங்குகிறது’ என்று தெரிவித்தார். ஆனால், நடந்தவையோ வேறு!

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை தரும் கொள்கையிலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. 'முன்பு இருந்த அமைச்சர்கள் பின்பற்றியதைத்தான் பின்​தொடர்ந்​தேன்’ என்று கூறினார் ஆ.ராசா. ஆனால், முதலில் விண்ணப்பித்தவர்கள் என்கிற முறையை மாற்றி, 'உரிமக் கட்டணத்தை யார் முதலில் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை’ என்று ஆ.ராசா மாற்றினார். 

கைப்பற்றப்பட்ட ஃபைல்கள் மூலம் இது தெரிய வருகிறது. இதில்தான் சொலிசிட்டர் ஜெனர​லையும் ஆ.ராசா ஏமாற்றியுள்ளார். இதில் ஆ.ராசாவின் கூட்டாளி அதிகாரிகளான ஆர்.கே.சந்தோலியா மற்றும் சித்தார்த்த பெஹுரா ஆகி​யோர் கூட்டுச் சதிகள் புரிந்துள்​ளனர்.


முதலில் விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தவர்களுக்கு முதல் உரிமை என்கிற முறை இருந்​திருந்​தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்​​துக்கு அனுமதிக் கடிதம் கொடுக்கப்​பட்டவுடன் ஏழு நாட்​களுக்குள் விண்ணப்பதாரர்கள் தொலைத் தொடர்புத் துறையின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் 15 நாட்களில் நுழைவுக் கட்டணத் தொகையை வங்கி கியாரன்ட்டிகள் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட்டாக செலுத்த வேண்டும். இப்படி ஒவ்வொன்றும் படிப்படியாக நடந்தால், ஸ்வான், யுனிடெக் நிறுவனங்கள் தகுதி இழந்துவிடும் என்பதால், அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளனர்!  

தங்களுக்கு வேண்டிய இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரகசியத் தகவல்களைக் கொடுத்தனர். அதாவது, 'யார் முதலில் நுழைவுக் கட்டணத்தைக் கொண்டுவருகிறார்களோ, அவர்களுக்குத்தான் அனுமதி’ என்கிற தகவல், அறிவிப்பு வருவதற்கு முன்கூட்டியே இவர்களுக்குத் தரப்பட்டுள்ளது.


இதன்படி இவர்கள் வங்கி கியாரன்ட்டி, டிமாண்ட் டிராஃப்ட் எல்லாம் நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே எடுத்துத் தயாராக இருந்தனர். இந்த அறிவிப்பு, 2008 ஜனவரி 10-ம் தேதி பிற்பகல் 1.47-க்கு பத்திரிகை செய்தி, வெப்சைட் மூலமாக வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் 3.30 மணிக்கு அனுமதிக் கடிதம் விநியோகிக்கப்படும் என்கிற தகவல் வெளியிடப்படுகிறது.

இதன்படி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அவகாசத்தில் மற்ற கம்பெனிகளை எல்லாம் திணறடித்துவிட... ஸ்வான் மற்றும் யுனிடெக்கின் எட்டு நிறுவனங்கள் இந்த வங்கி கியாரன்ட்டிகளைக் கொடுத்தன. அனுமதிக் கடிதங்களையும் முதலில் பெற்றுச் சென்றனர். 

இந்த இரு நிறுவனங்கள் உட்பட 120 நிறுவனங்கள் கடிதங்களைப் பெற்றன. இதில், 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியே தள்ளப்பட்டன. இதனால், முதலில் வருவோர்க்கு முதல் முன்னுரிமை விவகாரத்திலேயே தில்லுமுல்லு நடந்து உள்ளது!'' என்று அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் குற்றப் பத்திரிகையில்!


இப்படி ஆதாரங்களோடு பல விஷயங்களையும் சொல்லி இருக்கும் சி.பி.ஐ., அடுத்து ஏப்ரல் 25-ல் வைக்கப்போகும் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இன்னும் பல அணுகுண்டுகள் வெடிக்கும்!

அமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்திரா கிளு கிளு பேட்டி - காமெடி கும்மி

http://www.bollywoodbreak.com/photos/neetu-chandra-lucky/Neetu-Chandra-5.jpg 

ன்னித் தீவு பொண்ணு நீத்து சந்திரா, ஜிம்மில் அதிர அதிர ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தார். ''ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே பேசலாமா?''- வியர்வையை ஒற்றியபடி வந்து அமர்கிறார் நீத்து. 

கன்னித்தீவுன்னா கன்னிகள் மட்டுமே உள்ள தீவா? இதுவரை யாருமே எண்ட்டர் ஆகாத ஃபிரஸ் தீவா? # டவுட்டு

1, '' 'ஆதி பகவன்’ படத்தில் உங்க கேரக்டர் என்ன?'' 

''அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்.

ஹி ஹி சாரி நோ கமெண்ட்ஸ்.. 

அவர் கதைக்குத் தேவையான மாதிரி என்னைச் செதுக்கிட்டு இருக்கார். 

எங்கே? கேரவுன் வேன்லயா?

இதுக்கு மேல ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன். படம் வந்ததும் பார்த்துட்டுச் சொல்லுங்க!''

ம் ம் பார்த்துட்டு ஜொல்றோம்.. அடச்சே.. சொல்றோம்.. 

2. ''அமீரோட காதல்னு கிசுகிசு கிளம்ப ஆரம்பிச்சிருச்சே... என்ன ஆச்சு?'' 

''நான் இதுக்கு முன்னாடி நடிச்ச மாதவன், விஷால் ரெண்டு பேரும் பக்கா புரொஃபஷனல்ஸ். அவங்ககிட்ட என்னால ஃப்ரெண்ட்லியாப் பழக முடியாது. 

சும்மா நீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வந்தா நாங்களா பொறுப்பு..?
ஆனா, அமீர் அப்படி இல்லை. அவர் என் நண்பர். என் நலம் விரும்பி. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே, பச்சக்னு ஒட்டிப்பேன். 

அப்படியா? வாங்க .. 20 நிமிஷம் பேசிட்டிருக்கலாம்.. ஹி ஹி 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtYR1VeWH7fTg4Agacfo1XGwWhBoKHVlPYQ6mrDaoHJsapaJqLi2aPQ9ODlywC01OixbhiVFXP_QNWKqKq95JT-iUMqL2AbTlku1ose72P6B71U4I6zsf57FewphtqPW2A1ihHwKf01E0/s1600/neetu_chandra_hot_thighs.jpg
அது மத்தவங்க கண்ணுக்குத் தப்பாத் தெரிஞ்சா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?

மத்தவங்க, பெத்தவங்க,ஒன்னுக்கும் வழி அத்தவனுங்க எப்பவும் இப்படித்தாங்க.. அவ்ங்களைப்பத்தி நமக்கென்ன? வாங்க.. நாம பழகலாம்.. 
எனக்குத் தினமும் மதிய சாப்பாடு கொடுத்துவிடுறது அமீர் சாரோட மனைவிதான். அமீர் அளவுக்கு அவங்களும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். விமர்சனத்துக்குப் பயந்தா, சந்தோஷமா வாழ முடியாது!''

படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தான் சக்களத்தி என தெரியாமல்.... 

3. ''லெஸ்பியன் போட்டோ ஷூட்டில் தைரியமா போஸ் கொடுத்திருந்தீங்க?'' 

 (பார்க்கறவங்களுக்குத்தான் தைரியம் வேணூம்.. அவ்ங்களுக்கென்ன?)

''நம்ம மக்கள் அஜந்தா, எல்லோரா ஓவியங்களைப் பார்க்குறாங்க. ஆனா, அதே சமயம் ஒரு நடிகை தன்னுடைய தொழிலை செஞ்சா மட்டும், ஏன் ஏத்துக்க மாட்டேங்குறாங்கன்னு தெரியலை. போட்டோகிராபர் சொன்ன மாதிரி போஸ் கொடுத் தேன். இதில் என்ன தப்புன்னு எனக்குப் புரியலை!''

 அம்புட்டு அப்பாவியா நீங்க..?

4. ''நல்லாத் தமிழ் பேசுறீங்களே?'' 


''நன்றி! (சிரிக்கிறார்). தினமும் சுப்ரமணியன்னு தமிழ் வாத்தியார்கிட்ட டியூஷன் போறேன். எனக்கு இந்தி, இங்கிலீஷ், போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தினு நாலஞ்சு மொழிகள் தெரியும். எங்கே போறேனோ, அந்த மொழியை உடனே கத்துக்க ஆரம்பிச்சிருவேன். தமிழில் நடிக்க வந்த பின்னாடி, தமிழ் கத்துக் கலைன்னா எப்படி? அடுத்த இன்டர்வியூவில் உங்களுக்கு ஆனந்த விகடனை வாசிச்சுக் காண்பிக்கிறேன்!''


எப்படி? ஆ  ன  ந்  த  வி க  ட  ன்.. அப்படின்னா?

5. ''உங்க குடும்பம் பத்திச் சொல்லுங்க?'' 

''நாங்க பீகார் பிசினஸ் குடும்பம். அப்பா, கேன்சரால் பாதிக்கப்பட்டு போன வருஷம்தான் இறந்தார். அந்த சோகத்தில் இருந்து அம்மாவை வெளியே கொண்டுவர ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ, என்கூடவே மும்பையில் தங்கவெச்சிருக்கேன். என் அண்ணா ரொம்பக் கஷ்டப்பட்டு, இப்போதான் ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கான். படம் பேர் 'தேஸ்வா’. வர்ற மே மாதம் ரிலீஸ். படத்தோட புரொடியூஸர் உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர்தான். அவர் ரொம்ப அழகா இருப்பார். அவர் பேர்... நீத்து சந்திரா!''

தேஸ்வா புஸ்வா ஆகாம நல்லா ஓடட்டும்..


6. ''நீத்துன்னா என்ன அர்த்தம்?'' 

'' 'எல்லா நாளும் புதிய நாள்’னு அர்த்தம்!''

எப்போதும் ஃபிரஸ்னு அர்த்தமா?ஹி ஹி 

Thursday, April 07, 2011

DISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://pacejmiller.files.wordpress.com/2009/08/district9poster.jpg?w=321&h=475
போஸ்டர்ல கிங்க் காங்க், த லார்டு ஆஃப் த ரிங்க்ஸ் படத்தை எடுத்த இயக்குநரின் படம் அப்படின்னு சிலாகிச்சு இருந்ததாலயும்,  ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல இந்தப்படம் போட்டிருந்ததாலயும் போனேன்...,(என்னது ?ஓப்பனிங்க்லயே ஒரு தன்னிலை விளக்க மன்னிப்பு..?)

ஏலியன்ஸ் வகையறா படங்கள்  ரிலீஸ் ஆனப்ப ஆரம்பத்துல ஒரு பிரமிப்பை ஏற்படுத்துனது நிஜம் தான் .. அது கேப்டன் கட்சி ஆரம்பிச்சப்ப கிடைச்ச ஓப்பனிங்க் வரவேற்பு மாதிரி... ஆனா இப்ப கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா,அழகி மோனிகா சிலந்தி மோனிகா ஆன கதையா,கதை கந்தல் ஆகிடுச்சு.. வடிவேல் எல்லாம் வந்து கேப்டனை பொளந்து கட்ற மாதிரி... 

சரி.. படத்தோட கதை என்ன?வேற்றுக்கிரக வாசிகள் ஃபாரீன்ல ஒரு ஊர்ல விண்கலம் மூலமா வந்து இறங்கறாங்க.. அங்கேயே டேரா போடறாங்க.. அவங்க வந்து இருக்கறதே பூமியோட ஆயுத பலம், படை பலம் எல்லாத்தை பற்றியும் ஆராய்ந்து நோட் ஸ் எடுக்கத்தான்...
http://cinemaverytasty.com/wp-content/uploads/2009/07/district9_biggun.jpg
ஆனா அந்த ஏரியா மக்களுக்கு பீதி.. இவங்க இங்கே இருக்கக்கூடாது.. அப்புறப்படுத்தனும்னு ஒரே ஆர்ப்பாட்ட்டம்... ஒரு ஆராய்ச்சிக்குழு வருது.. அதுல நம்ம ஹீரோ இருக்காரு.. அவர் ஆராயும்போது வை கோவை அம்மா துரத்தி விட்ட மாதிரி எதிர் பாராத சம்பவம் ஒண்ணு நடக்குது..


அதாவது ஏதோ ஒரு திரவம் அவர் மேலே பட்டுடுது... ஆராய்ச்சிக்குழுவுல இருந்த 27 பேர் மேல படாம ஏன் ஹீரோ மேல மட்டும் அது பட்டுச்சு அப்ப்டி எல்லாம் கேட்கப்படாது... ஊர்ல 1008 பர்சனாலிட்டி பசங்க இருக்கறப்ப தலையே சீவாம, தாடி வெச்சு, பல்லு கூட விளக்காத பர தேசியை ஹீரோயின் லவ் பண்ணுதே அந்த மாதிரி தான் இதுவும்..

அந்த திரவம் பட்டதால அவர் ஆஃப்பாயில் ஆறுமுகம் மாதிரி பாதி மனிதன், பாதி ஏலியன்ஸ் ஆகிறார்... 

http://passionforcinema.com/wp-content/uploads/district-9-warning.jpg

அவர் நிலைமை என்ன ஆச்சு? அவரோட மனைவியை அவர் எப்படி சமாதானப்படுத்துனாரு... இந்த கருமாந்தரத்தை எல்லாம் தில் உள்ளவங்க படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க..

வேற்றுக்கிரகவாசியை வடிவமைத்த ஆர்ட் டைரக்டரை இங்கே கூட்டிட்டு வந்து டி ஆர் படம் பத்து காண்பிக்கனும்.. சீரியசா படம் எடுக்க சொன்னா காமெடி பண்ணீட்டு.. ராஸ்கல்..

அந்த ஏலியன் முகத்தை க்ளோசப்ல பார்த்தா 4 நாள் சாப்பாடு இறங்காது.. ( 5வது நாள் மட்டும் இறங்கிடுமா..?)
http://shadesofcaruso.files.wordpress.com/2010/01/basterdsending.jpg

கேனத்தனமாக திரைக்கதை அமைத்த இயக்குநரிடம் கிறுக்குத்தன்மான சில கேள்விகள்

1.  ரெண்டு வருஷமா டேரா போட்டும் அந்த ஏலியன்சால ஒண்ணுமே கண்டு பிடிக்க முடியலையா?

2. ஏலியன்சில் ஆண், பெண் பேதம் இருப்பதைக்காண்பிக்க தோற்றத்தில் வித்தியாசம் காட்டினால் போதாதா? லேடி ஏலியன்சுக்கு ஜாக்கெட், பெட்டிகோட் போட்டு விட வேண்டுமா? ( பக்கத்து சீட் ஆள் அப்போ கண்டிப்பா சீன் இருக்கும்னு நம்பிக்கையா சொல்றான்.. )

3.ஏலியன்ஸ் தேசத்தின் பாதுகாப்புக்கு கேடு விளைவிப்பதாக சந்தேகப்பட்டால் அப்பவே ராணுவம் போட்டுத்தள்ளலாமே.. மனித உரிமைக்கமிஷன் எதிர்ப்பதாக சீன் வெச்சு இருக்கீங்களே.. அவங்க தான் நம்ம கிரகத்து ஆள் கிடையாதே...

4. ஹீரோவின் மனைவியிடம் ஹீரோவின் மாமனார் “ உன் கணவன் வேற்றுக்கிரக பெண்ணோடு தகாத உறவு வைத்ததால் தான் அப்படி ஏலியன்ஸ் போல் ஆகிட்டான் என கதை கட்டி விடுகிறாரே.. அதற்கு என்ன காரணம்..?அதைக்கூட நம்பிடலாம்.. அந்த முட்டாள் மனைவி  (பெரும்பாலும் மனைவிகள் எல்லாம் முட்டாள்களாகத்தான் இருப்பாங்க என்பது வேற விஷயம்.. ) அதை அப்படியே நம்பிடறாளே.. அது எப்படி?




http://images.allansgraphics.com/picture/2/t/tania_van_de_merwe_district_9-8113.jpg
5.ஆராய்ச்சிக்கூடத்தில் வைத்து ஹீரோவை கேள்வி கேட்கும் விசாரணை அதிகாரிகள்  திடீர் என சேம் சைடு கோல் போடுவது எப்படி?

6. படத்தின் பெரும்பாலான காட்சிகள் டமால் டுமீல் என ஒரே இரைச்சலாவே இருக்கே.. அது எதுக்கு..? ஆக்‌ஷன் படம்னு லேபிள் குத்திக்கவா?

7. வேற்றுக்கிரகவாசிகளிடம் பூமி ஆட்கள் பண்டமாற்றாக உணவு கொடுத்து ஆயுதம் வாங்கற சீனை எல்லாம் கேனயன் கூட நம்ப மாட்டான்.. அவ்வளவு ஏன்? ஒரு காங்கிரஸ்காரன் கூட நம்ப மாட்டான்.. 

8.. ஏலியன்ஸ் வெச்சிருக்கற ஆயுதத்தை மனிதனால் யூஸ் பண்ண முடியாது .. ஓக்கே.. ஆனால் ஏலியன்ஸ் மட்டும் மனிதனின் ஆயுதத்தை யூஸ் பண்ணுதே அது எப்படி?

9. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வெச்ச மாதிரி ஒரு சீன்.. ஏலியன்சை அழிக்க வந்த ராணுவத்தினர் ஏலியன்சிடம் ஒரு பேப்பரை நீட்டி “ இதுல ஒரு சைன்( SIGN) பண்ணுங்க என கேட்பதுதான்.. அது என்ன கூட்டணிக்கட்சி பேச்சு வார்த்தையா? கையெழுத்து கேட்க...?
 http://www.joblo.com/images_arrownews/mr44.jpg
படத்துல ஹீரோயினை எதுக்கு ஒப்பந்தம் பண்ணுனீங்க.. அவர் ஒரு சீன்ல கூட ஹீரோ கூட சந்தோஷமாவே இல்லையே...  அவங்க 2 பேரும் சந்தோஷமா இருந்தாத்தானே ரசிகர்கள் சந்தோஷமா இருப்பாங்க.. ரசிகர்கள் சந்தோஷ்மா இருந்தாத்தானே டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சந்தோஷமா இருப்பாங்க.. அட போங்கப்பா. கோடிக்கணக்குல செலவு தான் பண்ணத்தெரியுது.. போட்ட காசை எப்படி வசூல் பண்றதுங்கற சூட்சுமம் தெரியலையே...

 கேமரா, எடிட்டிங்க்,சவுண்ட் ரெக்கார்டிங்க், இசை எல்லாம் மகா மட்டம்... 

மொத்தத்துல 50 ரூபா தண்டம்..