Showing posts with label cine critics. Show all posts
Showing posts with label cine critics. Show all posts

Friday, March 04, 2011

சிங்கம் புலி - லேடி சபலிஸ்ட் கதை - சினிமா விமர்சனம் 18 பிளஸ்


http://www.tamilcinemanews.in/wp-content/uploads/2010/12/singam_puli_posters_wallpapers_01_thumb.jpg 
படத்தோட முதல்  2 ரீல் ஓடுனதுமே பயந்துட்டேன்.. வாலி படக்கதைதானோன்னு..நல்ல வேளை இயக்குநர் சுதாரிச்சு திரைக்கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட் குடுத்து கதையின் போக்கையே மாற்றி டபுள் ஆக்ட் ஆள்மாறாட்டக்கதை லேபிள்ல இருந்து லேடி சபலிஸ்ட் ஆண்ட்டி ஹீரோவின் கதையா மாத்தி படத்தை காப்பாத்தீட்டாரு.

ஒரு ஜீவா கள்வனின் காதலி எஸ் ஜே சூர்யா மாதிரி,கண்ணுல படற பொண்ணுங்களை எல்லாம் பிராக்கட் போட்டு கரெக்ட் பண்ணி ,பூஜையை முடிச்சுட்டு கழட்டி விட்டுடுவாரு..இன்னொரு ஜீவா நேர்மையானவரு.நேர்மையான ஜீவாவோட காதலியை வில்லன் ஜீவா ஏதாவது பண்ணிடுவாரோ?ன்னு ஆடியன்ஸ் கிட்டே ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு  வேற மாதிரி கதையை கொண்டு போயிடறாரு.

முதல் கண்டனம் இயக்குநருக்கு....காதலை,பெண்களை கொச்சைப்படுத்தியதற்கு.... ஹீரோயினை முதன் முதலா பார்க்கற ஹீரோ காதல் வசப்படற கண்றாவியைக்கூட மன்னிச்சிடலாம்,ஆனா 2வது முறை பார்க்கறப்ப பிரா 2 டஜன் கிஃப்ட்டா வாங்கித்தர்றதும்,3வது சந்திப்புலயே அந்தப்பொண்ணு தேடி வந்து ஐ லவ் யூ சொல்றதும் சகிக்கல..

(எந்தகாதலனாவது ரோஜா குடுக்காம பிரா தருவானா?)

அப்புறம் இயக்குநர் செஞ்ச 2வது தப்பு கதையை நல்லவனா வர்ற ஜீவா பார்வைல கொண்டு போகாம வில்லனா வர்ற ஜீவா பார்வைல கொண்டு போறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7H5v2UHyPoMDZQ-HMWZ3NbENZllvUrGQ92ozFyJrvxR2wP1I0SLGq33N8DY0P-YIM9FeBXIoJ5cx4AhPPmFaZOh2Bf-VSFleWcFdjcjdn3iT8IK7BOr24dczNROuDj7ScKz4FgSOjVk8/s1600/tamil+movie+Singam+Puli00-16.jpg
ஆனா சந்தானம் காமெடியும்,பல சுவராஸ்யமான காட்சிகளும் படத்தை காப்பாத்திடுது.படத்தோட ஓப்பனிங்க் சீன்ல தர்மத்தின் தலைவன் ரஜினி (பேராசிரியர் கேரக்டர்) மாதிரி பக்திப்பழமா வர்ற ஜீவா வீட்டை விட்டு வெளில கிளம்புனதுமே தடால்னு ஆப்போசிட் கெட்டப் & கேரக்டரா மாறும் சீன் செம கலகல...

சந்தானம் நிறம் மாறாத பூக்கள் விஜயன் கெட்டப்ல வரும்போது தியேட்டரே அதிர்கிறது கைதட்டலால்...அவர் வரும் காட்சிகளில் எல்லாம் ஜீவா டம்மியாக தெரிவது இயக்குநரின் தவறல்ல... அதே போல் சந்தானம் வசனம் பேசும் காட்சிகளில் எல்லாம் இயக்குநர் சொல்லிக்கொடுத்துப்பேசுவது மாதிரியே இல்லை...எஸ் வி சேகர் இயக்கும் நாடகங்களில் அவர் அதீத ஆளுமை செலுத்துவது போல் (OVER DOMINATION) சந்தானம் செலுத்தும் டாமினேஷன் வளரும் நகைச்சுவை நடிகர்கள்,குறும்பட இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று... 

ஹீரோ- ஹீரோயின் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளில் ஹீரோயினுக்கு காதல் உணர்வு வந்த மாதிரியே தெரியவில்லை.விரக தாபம் வந்த அஞ்சரைக்குள்ள வண்டி அஞ்சனா மாதிரி அவர் செய்யும் மூவ்மெண்ட்ஸ்,முக பாவனைகள் (FACE EXPRESSIONS) டூயட் காட்சிகள்,காதல் காட்சிகள் எப்படி எடுக்கக்கூடாது என்பதற்கான பாடம்.

இடைவேளை வரை தட்டுத்தடுமாறிய இயக்குநர் படத்தின் பின் பாதியில் விறு விறுப்பாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.தான் தப்பிப்பதற்காக உடன் பிறப்பையே ஆள் வைத்து போட்டுத்தள்ள வில்லன் ஜீவா முடிவு எடுத்த பிறகு படம் ஸ்பீடாகிறது.அப்புறம் வழக்கமான ஆள்மாறாட்டம்,குழப்பம் என படம் மாமூல் மசலா பாணியில் போகிறது.

http://tamil.way2movies.com/wp-content/uploads/2010/12/Singam-Puli-Movie-Stills-20.jpg
வசனகர்த்தா பாராட்டு பெறும் இடங்கள்

1.  எப்படி என் தார்மீக சிந்தனை..?

சந்தானம் - டேய்.. தர்பூஸ் மணடையா...நீ எல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சுட்டியா?

2. அப்பா.. அப்போ நான் வீட்ல இருக்கறது உனக்கு பிடிக்கலை?

ஆமா....

அப்போ... நீ வீட்டை விட்டு போயிடு....

ஹூம்.. உன்னைப்பெத்ததுக்கு நான் தூக்குல தாண்டா தொங்கனும்...

எங்கே.. சொல்லீட்டு இருக்கே,. செய்ய மாட்டேங்கறியே...

3, சந்தானம்- பசங்க சூசயிடு பண்ண பத்து ரூபா குடுத்து பாய்சன் வாங்கறது எல்லாம் அந்தக்காலம்..ஒரு ரூபா குடுத்து ரோஜாப்பூ வாங்கி ஒரு ஃபிகர் கைல குடுத்து ஐ லவ் யூ சொன்னான்னு வெச்சுக்கோ.. மேட்டர் ஓவர்.. அவளே அவனை கொன்னெடுத்துடுவா...
 

4.ஜொள்ளு ஜீவா  - எப்படிங்க.. இப்படி..? எதெது எங்கே எங்கே இருக்கனுமோ அதது அங்க அங்கே இருக்கு...நான் தெரியாம தான் கேட்கறேன் ,நீங்க பிரம்மா பெத்த பொண்ணா?

5.  ஜொள்ளு ஜீவா - காதல்ங்கறது  ஒரு தடவை தாண்டா வரும்... இப்பவாவது நம்பறியா? நான் அவளை சின்சியரா லவ் பண்றேன்னு..?

சந்தானம்-லவ் டுடே டயலாக்கை பேசினா யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா?
http://www.movieupdates.in/wp-content/uploads/2010/12/04_singam_puli_posters_wallpapers_jeeva_divya_spandana.jpg
6.  ஜொள்ளு ஜீவா  - எனக்காக இந்த உதவியை செய்டா.. என் காதலை அவ கிட்டே சொல்டா...

சந்தானம்- உனக்காக இல்லைன்னாலும்,ஊர்ல இருக்கற மத்த பொண்ணுங்களோட கற்பை காப்பாத்தவாவது உதவறேன்...

7.  ரிசப்ஷனிஸ்ட் - உங்களுக்கு என்ன வேணும்? அவங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவங்க பிஸியா இருக்காங்க...

சந்தானம்- அப்போ நீங்க ஃபிரீயா மிஸ்....

8. சந்தானம்-  ஒன்றரை டஜன் பிரா குடுங்க... என்ன.. எல்லாம் வெள்ளைல தர்றீங்க.. கலர் கலரா குடுங்க... ஏன்னா அது ஒரு கலர் ஃபுல் ஃபிகரு

9. எதுக்காக எனக்கு பிரா வாங்கித்தந்தீங்க?

நீ தானே மனசை டச் பண்ற மாதிரி வேணும்னே... ( இது ஆனந்த விகடனில் 1998-ல் வந்த அரதப்பழசான ஜோக் - ஆர் ஜே அனுசுபா எழுதியது)


10. டியர்.. உன்னைத்திட்டுனாக்கூட எனக்கு வலிக்குமேன்னு உன்னை ஒண்ணும் சொல்றதில்லை...உன்னை நினைச்சு சாவேனே தவிர மறந்துட்டு வேற ஒரு பொண்ணு கூட வாழ மாட்டேன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtmlUbRQ40Bo5vBEmx4qaJkgyqjFBkLnr_PW6AL57DCUmtQgWchohVhRs7HaC39XSmCoFyOyzbAiS722xYZQc6ibSU893daSFzxlz5_iBbrmhJhnGMLEorvh5V7IZz7IHtt4C8CLGgaZg/s400/Singam-Puli-Movie-Stills-2.jpg
11. ஹூம்.. எங்கப்பன் என்னைப்பற்றி நல்லது சொன்னாலே நம்ப மாட்டான்...

12..லேடி போலீஸ்  - (லாக்கப்பில்) டேய்.. டிரஸ்ஸை கழட்டுடா....

சந்தானம்-  மேடம்.. கை வசம் காண்டம் இல்லை.. ஓக்கேவா?

13. சந்தானம்- இவன் கிட்டே இருந்து ஊர்ப்பெண்களைக்காப்பாற்ற போலீஸ் கிட்டே புகார் பண்ணுனோம்..ஆனா இவன் அந்த லேடி போலீஸையே கரெக்ட் பண்ணீட்டானே..?

14.. ஹீரோயின் - என்னது வந்தது.. நீங்க இல்லையா? அவனா? அப்பவே நினைச்சேன்..

ஹீரோ - ஆமா.. இப்போ சொல்லு.. நனைச்சேன், காயப்போட்டேன்னு...

15. மேடம்.. முருங்கைக்காய் ஃபிரஸ்சா இருக்கு வேணுமா?


ஆஹா கஸ்டமரை என்னமா கவர் பண்றாண்டா....

16.   மேடம்.. வெறும் டீ மட்டும் தானா? டிஃபன் கிடையாதா?

இருந்து ஃபுல் மீல்ஸே சாப்பிட்டுட்டு போங்க...

http://www.tamilulakam.com/news/upload/cinema/Tu_29539.jpg
17. மிஸ்.. இந்த ஃபோன் டச் ஃபோனா?                    ஆமா....

ஃபிரஸ் பீஸா?                                                                     ம்.. பார்த்தா எப்படி தெரியுது?

18.என்னது ?இவங்க லேடி போலீஸா? யூனிஃபார்ம் போட்டுட்டு ஏன் வர்லை?

சந்தானம்-  ம்.. துவைக்கறதுக்காக அவங்க புருஷன் கிட்டேகுடுத்துட்டு வந்திருக்காங்களாம்.. யாருக்கு தெரியும்..? ஹூம்.. விதி வீணை வாசிக்கும்போது,செக்கிங்க் ஷேர் ஆட்டோல வந்துடுச்சு....

19. சந்தானம்-  (பெட்டிக்கடைக்காரரிடம்) டேய்.. சிகரெட்டை எடு...

காசு?

சந்தானம்- - காசு வேணாம்,சிகரெட் மட்டும் குடு  போதும்

20. சந்தானம்- - சரக்கு அடிக்கறதே தப்பு.. இதுல எதுக்கு தண்ணீரை கலக்கனும்?உடம்புக்கு கெடுதல். அப்படியே சாப்பிடலாம்.

21. சந்தானம்- டேய் மாப்ளே.. என் மூஞ்சில ஒருத்தன் நலங்கு வெச்சுட்டான். ஃபோனை வெச்சுட்டு உடனே வாடா...

22. ஹீரோயின் - அவனை அணைச்சிட்டு வாழறதுதான் வாழ்க்கைன்னு இல்லை.வாழ்நாள் முழுதும் நினைச்சுட்டு வாழ்றதுதான் வாழ்க்கை.

23. சந்தானம்- (பெண் வேஷத்தில்) நான் லவ் பண்ற பொண்ணை எங்கே இவன் உஷார் பண்ணீடுவானோன்னு பயந்தா இப்போ என்னையே உஷார் பண்ணீடுவான் போல...

24. தூக்குல தொங்கிடுவேன்,மாத்திரை சாப்பிட்டுடுவேன்ன்னு சொல்லி இன்னும் எத்தனை லவ்வர்ஸை கொல்ல நினைக்கறீங்க?இப்படி மிரட்டி மிரட்டி லவ்வை சாகடிக்கறதே பெற்றோர்களுக்கு பொழப்பா போச்சு.

25.சந்தானம் - என்னது? அவர் ஜெண்டில்மேனா? அப்போ நான் குஞ்சு மோகனா?

உங்களை அவர் கிட்டே சொல்லி தோலை உரிக்க சொல்றேன்..

சந்தானம்-  ஆமா.. நான் என்ன வாழைப்பழமா?


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/09/hansikamotwani-1.jpg

பாடல் காட்சிகளில்  ஃபாரீன் ஃபிகர்களை இளசாக இறக்கி ஆட விட்டதில் இயக்குநரின் ரசனை தெரிகிறது.ஃபிகரு கிடைச்சுட்டா கூசாம பொய் சொல்லுடா பாட்டு ஓப்பனிங்க் அசத்தல்

பூவே பூவே போதை ஏற்று பூவே செம கிக்கான பாட்டு

வர்றாளே வர்றாளே ஜில் ஜில் சிங்காரி பாட்டு செம டப்பாங்குத்து.

ஹீரோவின் தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் சொந்தக்காரப்பெண்னாக வரும் ஃபிகர் செம கலக்கல்.பேசாம அந்த ஃபிகரையே ஹீரோயின் ஆக்கி இருக்கலாம்.அந்த ஃபிகரையும் ஹீரோ கரெக்ட் பண்றார்..(!!)

ஜொள்ளு ஜீவா கேரக்டர் ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணி மேத்தமேட்டிக்ஸ் முடிச்சு கிளம்பறப்ப அந்த ஆண்ட்டியின் மகள் வருவதும் அவள் ஹீரோ ஏற்கனவே கரெக்ட் பண்ணுன ஃபிகர் என ஹீரோவுக்கு தெரிவதும் தியேட்டரில் கை தட்டலைப்பெற்று தந்தாலும் கலாசார சீர்கேட்டுக்கு வித்திடுன் சீன்.

அந்தக்கொடுமை போதாதென்று அந்த சீனில் ஒரு ஆள் மாடு,கன்னுக்குட்டி ரெண்டையும் ஓட்டிட்டுப்பொற மாதிரி காட்சி வைத்து கே பாலச்சந்தர் ரேஞ்சுக்கு டைரக்‌ஷன் டச் வைத்து விட்டதாய் இயக்குநர் மனதில் நினைத்திருந்தால் .....சாரி...

ஜீவாவுக்கு இது வித்தியாசமான 2 வேடம்.நல்லா பண்ணி இருக்கிறார். வக்கீலாக,மீன் விற்பவராக 2 கேரக்டரில் வருபவர் பல இடங்களில் ஒரே மாதிரி சேரி பாஷையில் பேசுவது கேரக்டர் ஸ்டடி இன்னும் பத்தாது என்பதையும்,அர்ப்பணிப்பு உணர்வு இன்னும் தேவை என்பதையும் காட்டுகிறது.

ஏ செண்ட்டரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 15 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

Sunday, February 27, 2011

DRIVE ANGRY - ஹாலிவுட் சினிமா விமர்சனம் - 18 +

http://www.traileraddict.com/content/summit-entertainment/drive_angry.jpg
தமிழனின் காதில் பூ சுற்றும் உரிமையும், திறமையும் நமது தன்மானத்தமிழர் டாக்டர் கலைஞருக்கும், புரட்டுத்தலைவி ஜெவுக்கும் மட்டும் தான் உண்டு என நாம் நம்பி வந்த இந்த கால கட்டத்தில் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் காதில் பூவை மட்டும் அல்ல ,பூக்கூடையையே வைக்கும் கதை ,திரைக்கதையுடன் களம் இறங்கி இருக்கிறார்கள்  அதுவும் ரசிக்கும் விதத்தில்.

பொதுவாக தமிழனுக்கு ஒரு பழக்கம் உண்டு... தமிழில் இந்த மாதிரி நம்ப முடியாத கதை வந்தால் கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வாங்களே என எள்ளி நகையாடுவான்.அதுவே ஹாலிவுட்ல வந்தா மம்மியைக்கண்ட ஓ பன்னீர் செல்வம் மாதிரி பம்மிக்கிட்டே படத்தை ரசிப்பாங்க...

சரி .. படத்தோட கதை என்ன? தன்னோட பெண்ணை கொலை செய்த வில்லன் குரூப்பை பழி வாங்குற அப்பாவோட கதை தான்.. இதுல காதுல பூ மேட்டர் என்ன>ன்னு கேக்கறீங்களா? பொண்ணோட அப்பாவும் இறந்துடறாரு. நரகத்துல எம கிங்கரர்கள் அஜாக்கரதையா இருந்தப்ப தப்பி பூலோகத்துக்கு வந்துடறாரு.(ராம்தாஸ் திடீர்னு கலைஞர் கூட்டணிக்கே வந்த மாதிரி).பழி வாங்கும் படலத்தினை முடிச்சுட்டு பேத்தியை (மழலை) ஹீரோயின் கைல ஒப்படைச்சுட்டு  மறுபடி கார்ல (புஷ்பக விமானம்!!!) பேக் ட்டூ பெவிலியன் கணக்கா போயிடறாரு.


http://www.onlinemovieshut.com/wp-content/uploads/2010/08/Untitled-1.jpg
ஆனா இந்த சாதாரண கதைக்கு திரைக்கதை அமைத்த விதம், காட்சிகளில்,ஒளிப்பதிவில் காட்டி இருக்கும் பிரம்மாண்டம் இதை ஒரு வெற்றிப்படமாக்கி இருக்கு.ஓப்பனிங்க் சீன்ல பார்ல வேலை செய்யற  2 ஃபிகர்கள்ட்ட பேசி தகவல் கறக்கற இடம் செம ஜாலி. அப்போ ஒரு லிப் டூ லிப் சீனும் உண்டு.

அஜால் குஜால் ரசிகர்களை திருப்திப்படுத்தற மாதிரி ஒரு கலக்கலான டாப்லெஸ் சீனும் உண்டு.. எஞ்ஜாய்.

அர்னால்டு ஸ்வார்ஜெனேகர் நடிச்ச த டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே படத்தோட பாதிப்புகள் பல இடத்துல வர்றதை டைரக்டர் தவிர்த்திருக்கலாம்.ஹீரோ நிக்கோலஜ் கேஜ் நல்லா பண்ணி இருக்காரு.. ஜீன் கிளாடு வாண்டம் பண்ண வேண்டிய கேரக்டர்.

http://static.igossip.com/photos_2/january_2011/Drive_Angry_3D_amber_heard.jpg
ஹீரோயின் நல்ல ஃபிகர் தான். அவர் ஓனரிடம் சண்டை போட்டுட்டு உடனே ரிசைன் பண்ணுவது, காதலன், காதலி வரமாட்டாங்கற நம்பிக்கைல வேற ஒரு ஃபிகர் கூட அவ வீட்லயே ஜல்சா பண்ணிட்டு இருக்கறது, அவளைப்பார்த்ததும் சண்டை  போடறது எல்லாமே டிராமா மாதிரி இருந்தாலும் ரசிக்கற மாதிரி இருக்கு. ( ஆமா.. சீன் இருக்குல்ல.. ரசிக்காம..?)

அதுக்குப்பிறகு ஹீரோயின் காதலனை கழட்டி விட்டுட்டு ஹீரோ கூட சேர்ந்து பயணப்படறது முதல் ஆக்‌ஷன் அதகளம்.படம் செம ஸ்பீடு... படம் லாஜிக் ஓட்டைகளையும் , திரைக்கதை சொதப்பல்களையும் மீறி விறுவிறுப்பா போகுதுன்னா டைரக்டரின் சாமார்த்தியமான டைரக்‌ஷன் தான்.

ஹீரோவின் பேத்தி ( 2 மாச அட்டுக்குழந்தை)யை நர பலி கொடுக்க வில்லன் குரூப் முயல்வது.. அதை ஹீரோ தடுப்பது எல்லாம் ராமநாராயனன் படம் மாதிரி இருக்கு.

கடைசில ஹீரோ வில்லனை கொன்னு பழி வாங்குன பிறகு வில்லனோட மண்டை ஓட்டுல ரத்தம் குடிக்கற சீன் ரொம்ப கொடூரம். எப்படி சென்சார்ல விட்டாங்களோ?

நரகத்துல இருந்து கடவுளோட தூதுவனா வர்றவரு (!!!???) ஒவ்வொரு முறை போலீஸ் சூழும்போதும் பதட்டப்படாம ஒரு காய்னை தூக்கி மேலே வீசுவதும், அது கீழே வரும்போது FBI  ID CARD டாக வருவதும் கொள்ளை அழகு. செம ஸ்டைலிஸ்ஸான சீன் அது.( கோலிவுட் உல்டா டைரக்டர்ஸ் நோட் டவுன் ப்ளீஸ்)


http://collider.com/wp-content/uploads/Amber-Heard.jpg

வேகமாக போகும் படத்தில்  வந்த விவேகமான வசனங்கள்

1. ஹீரோ - இது என் பர்ஸ்.. உன் கைக்கு எப்படி வந்தது?


ஹீரோயின் - இது என்ன கேள்வி? திருடுனேன்.

2.   ஹீரோயின் - அவனை உங்களுக்கு முதல்லயே தெரியுமா?

 ஹீரோ - ம் , அவனோட அக்கா எனக்கு ஃபிரண்டு....

ஹீரோயின் - ஓஹோ, அதான் உங்களை முறைச்சு முறைச்சு பார்த்தானா?

3.  வண்டியை நிறுத்து.......

ஸாரி.. எனக்கு வேலை இருக்கு... 

டேய்.. இது போலீஸ் உத்தரவு...... துப்பாக்கிக்காவது மரியாதை குடுங்கடா...

4. அடக்கடவுளே......

ஆமா.. நிஜமாவே நான் கடவுள் தான். இன்றைய ட்ரெண்டுக்குத்தக்கபடி கெட்டப் மாத்திக்கிட்டேன்.

5.  அய்யய்யோ.. நான் பயத்துலயே செத்துடுவேன் போல இருக்கே...

கவலைப்படாதே.. உனக்கு 72 வயசு வரை ஆயுள் கெட்டி... உனக்குப்பக்கத்துல கவலை இல்லாம தெனாவெட்டா நிக்கறானே.. அவனுக்கு இன்னும் 4 நாள் தான் ஆயுள்....

6. மனைவிக்கு நல்ல கணவனா நடந்துக்காதவன் கூட தன்னோட மகளுக்கு ஒரு நல்ல அப்பாவா நடந்துக்கற அதிசயத்தை நாம தினம் பார்த்துட்டுதான் இருக்கோம்.

7. நமக்குப்பிரியமானவங்களுக்கு நடக்கர கொடுமையை நாம நேர்ல பார்த்துடா அந்த காட்சி காலாகாலத்துக்கும் நம்ம மனக்கண்ல வந்துட்டு வந்துட்டு போறதை தடுக்க முடியாது...

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல 3டி எஃப்ஃபக்ட் இல்லாம பார்த்தேன். ஆனா போஸ்டர்ல 3 டி அப்படின்னு போட்டிருக்கு. ஒரு வேளை சென்னைல அப்படி இருக்கலாம்.ஆக்‌ஷன் பட பிரியர்கள், ஒரு சீன் இருந்தாலும் அந்தப்படத்தை மிஸ் பண்ணிடக்கூடாது என்ற லட்சியம் (!!!??) உள்ளவர்கள் பார்க்கலாம்.







ஆரானின் காவல் -ஹாலிவுட் ரேஞ்ச் - சினிமா விமர்சனம்



    Saturday, February 26, 2011

    ஆரானின் காவல் -ஹாலிவுட் ரேஞ்ச் - சினிமா விமர்சனம்


    http://mp3.tubeindia.net/wp-content/plugins/wp-o-matic/cache/ff066_Aaraan-Tamil-Movie-2011-ACD.jpg

    கோடம்பாக்கத்துல அடிக்கடி ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கனும்னு ஒரு குரல் அடிக்கடி கேட்டுட்டே இருக்கும், அல்லது ஒலிச்சுட்டே இருக்கும் (2ம் ஒண்ணுதானோ?)அது இந்தப்படத்தோட டைரக்டருக்கு அப்படியே உள் மனசுல பதிஞ்சுடுச்சு போல.. அப்படியே ஆங்கிலப்படமாட்டமே எடுத்திருக்காரு.....

    அதாவது படமாக்கம், கதை ,திரைக்கதை போன்றவற்றில் அப்படி என அர்த்தம் இல்ல. மொத்தப்படமே 90 நிமிஷம்தான்.( அதுக்கே முடியல)

    அறிமுக நாயகன் அஜய் நம்ம தன்மானச்சிங்கம் டி ராஜேந்தருக்கு தம்பி மாதிரி இருக்காரு. பாக்கவே சகிக்கலை.இதுல கலரிங்க் ஹேர் வேற. கலரிங்க் ஹேரோட அவர் நடந்து வர்றப்ப புதுமைப்பித்தன்  ஆர்.பார்த்திபன் மாதிரியே இருக்காரு.(உவ்வே..)

    தமிழ் சினிமாவில் காமெடிக்காட்சிகள் குறைந்து வருகின்றன  என சமீபகாலமாக குற்றம் சொல்லுபவர்கள் இந்தப்படத்தில் ஹீரோ போடும் ஃபைட் சீன்களையும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களையும் பார்த்தால் போதும். வயிறு குலுங்க சிரிக்கலாம். செம காமெடி நைனா...
    http://www.cinemaexpress.com/Images/article/2010/10/24/ban.jpg
    ஹீரோயின் புது முகமாம்....இதை நாங்க நம்பனுமாம். சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கு போல.... பார்ட்டி பேரு சோனியா பட்.ஃபிகர் பார்க்கற ஆசையே விட்டுப்போயிடும் போல.

    எனக்கு ஹீரோ - ஹீரோயின் ரெண்டு பேரும் சொதப்பலா அமைஞ்சது கூட வருத்தம் இல்ல, படம் டப்பாவா போனது கூட ஓக்கே.. இந்த புரொடியூசரை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.எந்த நம்பிக்கைல பணம் போட்டாரு.?இதையும் நம்பி எப்படி படம் எடுத்தாரு? எப்படி தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு?

    சரி படத்தோட கதை என்ன?ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர்.. ( இவ்வளவு கேவலமான போலீஸ் ஆஃபீசரை நான் என் லைஃப்லயே பார்த்ததில்லை.). அவரை ஒரு பொண்ணு விரட்டி விரட்டி லவ் பண்ணுது.(அந்த பொண்ணே வறட்டி மாதிரிதான் இருக்கு ) ஹீரோ வற டீ மாதிரி இருக்கார். நல்ல ஜோடி பொருத்தம்.

    அந்த ஊர் தாதா அண்ணாச்சி.ஹீரோயின் கிட்டே சொல்றாரு. உன் ஆளை நாங்க போட்டுத்தள்ளாம இருக்கனும்னா நீ அவனை லவ் பண்ற மாதிரி நடிச்சு உன் வலைல விழுந்த பிறகு விலகி வந்துடனும்.அவன் ஆற்றாமையில வெந்துடுவான். அதான் எனக்கு வேணும்.

    http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_47328913212.jpg
    லவ் பண்ணுற மாதிரி நடிக்கற ஹீரோயின் நிஜமாவே லவ் பண்ண ஆரம்பிச்சுடறா..ஒரு கட்டத்துல ( ஏன் சதுரத்துல இல்லையா?) எதிர்பாராத விதமா ஹீரோயினை வில்லன் கொன்னுடறாரு.அப்புறம் ஹீரோ பைத்தியம் மாதிரி வேஷம் போட்டு ( வேஷம் போடாமையே அவரு அப்படித்தான் இருக்காரு.) வில்லனை கொன்னுடறாரு. மொத்தத்துல படம் பார்க்கற ஆடியன்சை கொன்னெடுத்துடறாங்க...

    மழையே மழையே மார்கழி மழையே பாட்டு வரிகள் நல்லாருக்கு. பாடல் படமாக்கப்பட்ட விதம் படு திராபை.அப்ப்புறம் மின்னல் சூரியனா?ன்னு ஒரு பாட்டு படு கேவலம்.அதற்கான சிச்சுவேஷன் காக்கிச்சட்டை பட்டுக்கன்னம் பாட்டுக்கான அதே இடம்.

    படத்துல வர்ற எல்லா நடிகர்களுமே ஏதோ நாடக நடிகர்கள் மாதிரி வந்து வசனத்தை ஒப்பிக்கறாங்க... 

    படு கேவலமான இந்த படத்துலயும் வந்த சில நல்ல வசனங்கள்

    1.  உனக்கு எது நல்லதுன்னு நினைச்சு அதை மட்டும் செய்டா..

    சரி சரி.. நாயர் கடைல டீ சொல்லு 4 பேருக்கும்.நாயருக்கு நல்லது.


    2.கைதி - ஏட்டய்யா.. உங்க முகத்தையும்,லாக்கப் சுவரையும் பார்த்து பார்த்து போர் அடிச்சிடுச்சு.ஏதாவது டி வி இருந்தா போடுங்க...

    யோவ்.. அதெல்லாம் பெரிய தப்பு பண்ற அரசியல் வாதிகளுக்கு... நீ சின்னத்தப்பு தானே பண்ணி இருக்கே..?

    அப்போ ரிலீஸ் பண்ணி விடுங்க.. போய் பெரிய தப்பு பண்ணிட்டு வர்றோம்.

    3. டேய்.. என்னை என்ன பைத்தியம்னு நினைச்சீங்களா?

    ம்ஹூம், எந்தப்பைத்தியம் தன்னை ஒரு பைத்தியம்னு ஒத்துண்டிருக்கு.?

    http://farm6.static.flickr.com/5007/5370031823_10e7d7cac7_o.jpg
    4. ஹீரோ - ஐ லவ் யூ

    ஹீரோயின் - வாட்?

    ஹீரோ - ம் நான் உன்னை காதலிக்கிறேன்..

    ஹீரோயின் - ஓ. தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்றீங்களோ// ( இது காமெடி சீன்.. கை தட்டனும் )

    5. வில்லன் - நான் உயிரோட இருக்கறப்பவே எல்லாவித மரியாதையும் எனக்கு கிடைக்கனும்.

    6. முதன் முதலாக காதலை வெளீப்படுத்திய பிறகு ஹீரோ - ம் எங்கே போலாம்?

    ஹீரோயின் -   ம்.. எங்கே வேணும்னாலும். ( வாழ்க பத்தினி )
    (
    7. ஹீரோயின் - இந்த டிரஸ்நான் எப்படி இருக்கறேன்? ( எந்த டிரஸ் போட்டாலும் நீ தேற மாட்டே)

    ஹீரோ  - சகிக்கல  ( அப்படி இருந்தும் விட மாட்டேங்கறியே..)

    8. ஹீரோவின் அம்மா - பெரிய மனுஷங்களை பகைச்சுக்காதேப்பா.. நாம் போற வழில பள்ளம் இருந்தா ஒண்ணூ தாண்டிப்போகனும், அல்லது சுத்திப்போகனும்.. நீ அந்த பள்ளத்துலதான் இறங்கிப்போவேன்னு சொன்னா எப்படி?

    9/. ஒரு பொண்ணு லவ் பண்ணாமயே வேணா இருப்பா.. ஆனா லவ் பண்றதா நடிக்கறேன்னு எல்லாம் சொல்ல மாட்டா...

    10. வில்லன் - பொண்ணுங்க விஷயத்துல நான் வீக் கிடையாது. அப்படி நான் வீக்கா இருந்தா தலைவன் ஆகி இருக்க முடியாது. ( தமிழ்நாட்ல பெண்கள் விஷயத்துல வீக்கா இருக்கறவங்க தான் பெரிய பெரிய கட்சிப்பதவிகள்ல இருக்காங்க )

    இந்தப்படம் ஏ ,பி , சி ஆகிய 3 செண்ட்ட்ர்லயும் தலா 3 நாட்கள் ஓடுனாலே அதிசயம் தான்.

    ஆனந்த விகடன், குமுதம் மூச்...........ஸ்டில் கூட போட மாட்டாங்க.....



    டிஸ்கி - 2   மார்கழி 16 - அழகிய காதல் சொதப்பல் - சினிமா விமர்சனம்

    Friday, February 25, 2011

    மார்கழி 16 - அழகிய காதல் சொதப்பல் - சினிமா விமர்சனம்

    http://todaynews.yolasite.com/resources/Margazhi%2016.jpg 
    மொக்கைப்படங்களுக்கு விமர்சனம் போடறதால உங்களுக்கு என்ன லாபம்? அதைப்படிக்கிற எங்களுக்கென்ன லாபம்?அல்லது நாட்டுக்குத்தான் என்ன பிரயோஜனம்?னு நிறைய பேரு என்னைக்கேக்கறப்ப எல்லாம்  அவங்களுக்கு சரியான பதிலடி தர முடியாம தவிச்சுக்கிட்டு இருந்தேன்.. இன்னைக்கு எனக்கு ஒரு சான்ஸ்......

    இந்தப்படத்து மூலமா இதுவரை தெரிஞ்சுக்காத சில அரிய வரலாற்று உண்மைகளை தெரிஞ்சுக்கிட்டேன்...படத்தோட விமர்சனத்துக்குப்போறதுக்கு முன்னால அந்த மேட்டரை (சீ... சீ ,,,,அது இல்லை...) உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கறேன்.

    1. ஒரு ஃபிகரைப்பார்த்ததும் இது தேறுமா? தேறாதா?ன்னு எப்படி கண்டுபிடிக்கறது..? அதாவது நமக்கு இது செட் ஆகுமா? ஆகாதா?ன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?

    பொதுவா டீன் ஏஜ் பொண்ணுங்க ரெட்டை ஜடை போட்டிருப்பாங்க.1 ஜடை முன்னால எடுத்தும் ஒரு ஜடை பின்னால எடுத்தும்  போட்டிருப்பாங்க..நம்மைப்பார்த்ததும் அவங்களுக்கு  நம்மைப்பிடிச்சிருந்தா பின்னால இருக்கற ஜடையை எடுத்து முன்னால போட்டுக்குவாங்க..பிடிக்கலைன்னா முன்னால இருக்கற ஜடையை பின்னால தூக்கிப்போட்டுக்குவாங்க....

    இந்த உண்மை தெரியாம இத்தனை நாளா வேஸ்ட் பண்ணீட்டனேன்னு நினைக்கும்போது.... (ம்க்கும்.. தெரிஞ்சிருந்தா மட்டும் என்னத்தை கிழிச்சிருக்கபோறே..?)

    http://www.cinemaexpress.com/Images/article/2010/2/20/margzhli16.jpg
    2. உங்க காதலி உங்களுக்கு ஒரு மோதிரம் பரிசா தர்றா... அது சைஸ் பத்தலை.. என்ன பண்ணனும்? ( மார்வாடிக்கு போய் அடகு வைக்கனும் # அல்பன்).உடனே அந்த மோதிரத்தை ஒரு கயிற்றுல கோர்த்து ( செயின்லயும் கோர்க்கலாம்.. அதுக்கு நமக்கு வக்கு ஏது?) பழனி மலை முருகன் டாலர் மாதிரி கழுத்துல கட்டிக்கனும். (இந்த நாய்ங்களுக்கு டோக்கன் மாட்டிக்கற மாதிரி..)

    3. ஒரு ஃபிகரு ஜன்னல் வழியா உங்களுக்கு டாட்டா காட்டுது. கை மட்டும் தான் தெரியுது. ( வேற எதெல்லாம் தெரியனும்னு எதிர்பார்க்கறே..?)அந்த வீட்டுல 4 ஃபிகருங்க.. எல்லாரும் அக்கா தங்கைங்க.. எப்படி கை காட்டுன காரிகையை கண்டிபிடிப்பது? ( கா- கா - க கவிதை வரும் போல இருக்கே..?)

    பக்கத்து வீட்டு சின்ன பொண்ணு மூலமா மருதாணி வெச்சு விடுங்கன்னு நீங்க சந்தேகப்படற பொண்ணு கிட்டே ஹெல்ப் கேட்க வைக்கனும் .மருதாணி வெச்சு விடும்போது கை சிவந்துடும்.அடுத்த டைம் கை காண்பிக்கும்போது சிவந்த கை காட்டிக்குடுத்துடும்.. அடடா.. என்னே ஒரு கிரியேட்டிவ்..

    ரைட்டு.. படத்தோட கதை என்ன? ஹீரோ தலை சீவாத ,தாடி வெச்சிருக்கற அக்மார்க் கோடம்பாக்க ஹீரோ...ஹீரோயின் பிளஸ் ஒன் படிக்கற டீன் ஏஜ் ஃபிகரு...( யாரப்பா அது எந்திரிச்சுப்போய் பவுடர் அடிச்சுட்டு வந்து உக்கார்றது..?)
    2 பேரும் என்ன பண்றாங்க? சமூக சேவையா பண்ணப்போறாங்க ? காதல் தான். வழக்கம் போல் எதிர்ப்ப்பு.. நைஸா பேசி பொண்ணை கேரளா அனுப்பி வைக்கறாங்க. ஹீரோ  என்ன பண்ணுனாரு? அவங்க ஜோடி சேர்ந்தாங்களா?ன்னு டி வி ல இந்தப்படத்தை போடறப்ப தெரிஞ்சுக்குங்க...


    http://cinema.mywebulagam.co.in/uploads/uploads_4bf12a2da6cce.jpg
    புதுமுக ஹீரோ கற்றது தமிழ் ஜீவா மாதிரி சாயல்ல இருக்கார். பரவால்ல.. நடிப்பு ஓரளவு  வருது.. ( பாரய்யா... ஆம்பளைங்களைக்கூட பாராட்டறானே..?)

    ஹீரோயின் ஈரமான ரோஜாவே மோகினி மாதிரி சாயல்.. நல்ல ஃபிகர் தான்.. உதடு அமைப்புதான் சரி இல்லை... (கொங்கு மணடலத்துல சப்பை வாய்னு சொல்வாங்க)வெட்கப்படும் காட்சிகளில், டூயட் சீனில் நல்லா நடிச்சிருக்கு பாப்பா.. தேறிடும்.

    ஹீரோயினுக்கு 60 மார்க் போடலாம்னா ஹீரோயின் தங்கையாக வரும் ஃபிகருக்கு 65 மார்க் போடலாம்.( காசா? பணமா? அள்ளி இறைக்க வேண்டியதுதானே..?)

    படம் இடைவேளை வரை ஜாலியா போகுது.. இப்போ வர்ற படங்கள் எல்லாமே அப்படித்தான்.2 பேரும் லவ் பண்ணறது பார்க்க போரடிக்காம போகுது..லைவ் ஷோவும், லவ் ஷோவும் எந்தக்காலத்துல போர் அடிச்சிருக்கு?

    க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஆக்சிடெண்ட்ல மாட்டறது,மன நலம் கெடுவது,அதே இடத்துக்கு ஹீரோயின் வர்றது,ஹீரோயினுக்கு பைத்தியம் பிடிக்கறது
    எடுபடலை. பார்க்க ப்ளம் கேக்கு மாதிரி இருக்கற பொண்ணு  பேக்குன்னு சொன்னா எப்படி ஏத்துக்கறது? ( கேக்கு - பேக்கு #சோக சூழல்ல கூட உனக்கு ரைமிங்க் கேட்குது? @கவிஞண்டா..

    http://cinema.mywebulagam.co.in/uploads/uploads_4bf129ff7bb75.jpg
    படத்தில் மனதைக்கவர்ந்த வசனங்கள்

    1. இப்போ ஃபிகருங்க வர்றாங்க.. அறிமுகப்படுத்தி மார்க் போடறோம்.....

    இவ பேரு மோனிகா...10 வார்த்தை பேச வேண்டிய இடத்துல ஒரு வார்த்தை தான் பேசுவா.. ( ஏன்.. ? சோம்பேறியா?)

    இவ பேரு ஜெனி... இவ கிட்டே வாயைக்குடுத்தா சனி ( வாயைக்குடுக்கலைன்னா வெள்ளியா?)

    இவ அகிலா.. இவலை யாருமே கவனிக்கலைன்னாலும் பண்ற அலட்டல்லயே கவனிக்க வெச்சிடுவா...(பாதிப்பேரு அப்படித்தானே பண்றாங்க...)

    2.  ஏண்டி பேப்பர்ல சுக்கு பீர் அப்படின்னு எழுதி வெச்சிருக்கே..?

    என் பேரு சுலக்‌ஷணா..என் ஆள் பேரு பீர் முகமது    ரெண்டையும் சேர்த்து சுருக்கு சுக்கு பீர்... 

    3. ஒரு ஃபிகர் உன்னைப்பார்த்ததும் ஒரு பேப்பரை கீழே போட்டுட்டு போச்சு.. நீ எடுத்தே .. அதில என்ன எழுதி இருந்தது?

    அட போங்கப்பா/...ஓம் சக்தி பரா சக்தி அப்படின்னு 300 தடவை எழுதி இருந்தது.அதே மாதிரி நானும் எழுதி கோயில் உண்டியல்ல போடனுமாம். இல்லைன்னா எனக்கு கெடுதலாம்....

    4. என்ன? காபித்தூள் வாங்கப்போன பையனை இன்னும் காணோம்?

    சரி,... ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க..?மோராவது குடுங்க....

    5. நீ பீருவை (பீர் முகமதுவோட சுருக் பேராம்) லவ் பண்றதா சொன்னே.. இங்கே இவன் கூட என்ன பண்ணிட்டு இருக்கே..?

    இவன் பேரு ஷாரு.. (ஷாருக்கானாம்) இவன் என்னை லவ் பண்றானாம். இவன் மனசு புண்படக்கூடாதுங்கறதுக்காக இவனுக்கு கம்ப்பெனி குடுக்கறேன்.

    ( குத்து விளக்கு.. நீ தான் குத்து விளக்கு குடும்பத்துக்கு ஏத்த குத்து விளக்கு)

    6. கடைல ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃபிரீங்கற மாதிரி இந்த வீட்ல 3 ஃபிகருங்க டா.. ஒண்ணை கரெக்ட் பண்ண்ணுனா  2 ஃபிரீ..

    3 ஃபிரீடா..

    எப்படி?

    அத்தையை விட்டுட்டீங்களேடா..  (அடப்பாவி...மாமியார்...)

     7.   இன்ஸ்பெக்டர் சார்.. என்னை சாதாரன கைதின்னு நினைக்காதீங்க. நான் கஞ்சா கைதி.. ( நாய்  கடத்தறது கஞ்சா அதுல பெருமையை பாரு.)

    8. ஒரு நாள் பார்க்காம விட்டா அந்த காதல் சக்சஸ் ஆகாதுங்கறது முட்டாள்தனம்.5 வருஷம் பார்க்காம இருந்தும் ஒரு ஜோடியோட காதல் சக்சஸ் ஆகி இருக்கு... ( ஒரு வேளை பார்த்திருந்தா போரடிச்சிருக்கும்..)

    9. யோவ்,.. லிமிட்டா குடிக்க வேண்டியதுதானே...

    குடிச்சா அன் லிமிட்டெடாத்தான் குடிக்கனும்...

    விழுந்துட்டா..?


    அதுக்குத்தான் பிடிச்சுக்க நீ இருக்கியே.....குடிகாரனுக்கு என்ன மரியாதை.. கம்மியா குடிச்சு ஸ்டடியா இருந்தா...

    10. காதலைப்பிரிக்கனும்னு நினைச்சா அவங்க சேரனும்னு நினைப்பாங்க.. அதனால ஃபிரீயா விட்டு சரியான நேரத்துல கழுத்தை அறுக்கனும்.

    11. மருத்துவம் எவ்வளவோ முன்னேறுனாலும் நாம இன்னும் கடவுளை நம்பிட்டுத்தானே இருக்கோம்.

    http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-293.jpg
    பாடல்கள் ப்ரியன், ஃபிரான்சிஸ் கிருபா. 3 பாட்டு ஆல்ரெடி செம ஹிட்டு.

    கொஞ்சம் வெயிலாக ,கொஞ்சம் மழையாக சூப்பர் ஹிட் மெலோடி...அதற்கான பிக்சரைசேஷன் அழகு.

    சுட்ட முறுக்கா கம்மர்கட் வாங்கிதரட்டா  கொண்டாட்டமான பாடல் .

    கச்சத்தீவு போகலாம்,காதல் சொல்லி மீட்கலாம் அழகிய கவிதை வரிகளை உள்ளடக்கியது.

    காதலர்கள் ரெகுலராக சந்திக்கும் இடம் ஒரே மரம் உள்ள பின்னணி ஒளிப்பதிவாளரை உள்ளேன் ஐயா சொல்ல வைக்கிறது.

    நல்ல லவ் ஸ்டோரி இயக்குநர் அவசரப்பட்டுட்டார்.....இன்னும் நல்லா பண்ணீ இருக்கலாம்.

    ஏ செண்ட்டரில் 25 நாட்கள்,  பி செண்ட்டரில்  20 நாட்கள் , சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடலாம்.

    இந்தப்படத்துக்கு ஆனந்த விகடன்ல விமர்சனம் போடமாட்டாங்கன்னு நினைக்கறேன். மீறிப்போட்டா  39 மார்க்.

    குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

    தனுஷ் -ன் சீடன் - சினிமா விமர்சனம்


    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVfbRMqgWj9xD4MDhVY1Mpzroyqxfa-ixeM80n9B_RSWyhlenXMLbyhyXAyYu0GzerFfbL3v8sJn1bX51lPuyhpoBWRQ_UytDvnXsFl2T2l0gp7cr7YFNv4vrlUwSLeTV2RcISk0VyNAk/s400/seedan_movie_posters_wallpapers.jpg
    திருடா திருடி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் சுப்ரமண்யம் சிவா,தொடர்ந்து 5 படங்கள் ஹிட் கொடுத்த தனுஷ்,தனது 50 வது படம் என்ற லேபிளுடன் ஆர்வமாக இசை அமைத்த தினா என ஓரளவு எதிர்பார்ப்புடன் சென்றால்.......

    லண்டன் போகப்போகும் வசதியான வீட்டு ஹீரோவுக்கு வீட்டு வேலைக்காரி மேல் லவ்.அதை தனது அம்மாவிடம் சொல்லாமல் காலம் கடத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய வைக்க ஏற்பாடுகள் நடக்கும்போது ,ஹீரோ - ஹீரோயின் இருவரையும் சேர்த்து வைக்கும் மாமா... சாரி மாமாங்கம் மாமாங்கமாய்  தமிழ் சினிமா ஹீரோக்கள் ஏற்று  நடித்த பூந்தோட்ட காவல்காரனாக தனுஷ் அந்த வேலையை கச்சிதமாக முடிக்க...ஸ் ஸ் அப்பாடா என ரசிகர்கள் எஸ்கேப்...


    நான் தெரியாமதான் கேட்கறேன் எந்த ஊர்ல இவ்வளவு அழகா ,சூப்பர் ஃபிகரா வேலைக்காரி இருக்கா? ( சும்மா ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கத்தான் கேட்கறேன்)கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கும் ஹீரோ லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என வேலைக்காரி பின்னால் அலைவது நம்பும்படி இல்லை.அதே போல் ஹீரோயின் கனவில் கண்ட ஆதர்ஷ கணவன் ஹீரோ போலவே இருப்பதால் அவரும் லவ்வுகிறார்.இவர்கள் இருவரும் லவ்வுவதைப்பார்த்து எனக்கு காதல் மீது இருக்கும் மரியாதையே போயிடுச்சு போங்க.

    புதுமுகம் ஜெய் கிருஷ்ணா சுத்த வேஸ்ட்.லவ் பண்ணுவாராம்,கையைப்பிடிப்பாராம். அம்மா கிட்டே மட்டும் சொல்ல மாட்டாராம்.அம்மா தாதாவோ,கொடுமைக்காரியோ இல்லை. லாஜிக் ஓட்டை இல்லை லாஜிக் பள்ளமே விழுதே...அவரது நடிப்பு கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு சரி இல்லாததால் எடுபடவில்லை.

    http://mimg.sulekha.com/tamil/seedan/events/seedan-trailer-launch/seedan-trailer-launch-movie-events-stills-pictures00240.jpg
    ஹீரோயின்  அனன்யா...குழந்தைத்தனமான முகம்.பாடல் காட்சிகளில் பாவனா +ஜோதிகா .காதல் காட்சிகளில் தேவயானி . பார்ட்டி கிட்டே சொந்த சரக்கு லேது. இயக்குநர்கள் செய்யும் தப்பு என்னன்னா ஒரு பாட்டு சீன் எடுக்கும்போது இப்படி நடிங்கன்னு சொல்லிக்காட்டறதில்லை. இந்தாம்மா குஷி பட டி வி டி, ஜெயம் கொண்டான் பட டி வி டி, இது மாதிரியே டான்ஸ் ஆடனும் என்கிறார்கள். ஹீரோயின்ஸ் என்ன பண்றாங்க ?அதை நெட்டுரு போட்டு வந்து அப்படியே நடிச்சுடறாஙக். அதான் எடுபடறதில்லை.


    படத்துல பாராட்டற மாதிரி ரெண்டே அம்சம். 1. டைட்டில் போடறப்ப மெலோடி மியூசிக்கும் அந்த ஓவியம் டிசைன் ஐடியாவும். 2. ஹீரோயின் வெள்ளைப்புடவைல இருக்கறப்ப தனுஷ் மயில் தோகை கொத்தை அவர் மீது வீச அது அப்படியே பரவி தோகை டிசைனாக புடவையில் தங்குவது.கிராஃபிக்ஸ் காட்சிகளில் கூட அழகியல் ரசனையை சிம்ப்பிளாக ஏற்படுத்த முடியும் என நிரூபித்ததற்காக ஒரு சபாஷ் போடலாம்.

    முன் பனிக்காலம் பாடல் காட்சியில் ஒளீப்பதிவாளர் உள்ளேன் ஐயா சொல்கிறார். படத்தில். திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதால் முற்பாதியில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் என கன கச்சிதமாக கணக்கு போட்டு 4 பாடல்கலை போட்டதற்கு ஒரு சபாஷ். ( அப்பாடான்னு ரசிகர்கள் எஸ்கேப்) 


    போலிச்சாமியாராக வரும் விவேக் 4 காட்சிகளில் மட்டும் வந்து ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். இப்படியே போனால் சந்தானம் ரொம்ப சீக்கிரமாக ஓவர் டேக் பண்ணி போயிடுவார் என்பதை விவேக் உணர வேண்டும்.


    http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/seedan-ananya-2.jpg--

    மயில்சாமியின் செல்ஃபோனை லபக்கும் விவேக்  அதை மறைக்க படாத பாடு படும் சீன் மட்டும்தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி.தனுஷ் பாவம் டம்மி கதையில் ஏற்று நடித்த டம்மி கேரக்டர். பாவம் அவர் தான் என்ன பண்ணு வார்?

    தனுஷ் வந்து பெரிதாக அந்த குடும்பத்தில் ஏதோ ட்சாதிக்கபோகிறார் என்று பார்த்தால் கோபாலா கோபாலா பட ஆர் பாண்டியராஜன் மாதிரி சமையல் சித்து வேலை செய்து புஷ் ஆகிறார்.

    படத்தில் சண்டைக்காட்சிகள், பில்டப் சீன்கள் இல்லை.. அவ்வளவு ஏன் நம்பும்படி கதையோ, சுவராஸ்யமான திரைக்கதையோ இல்லை.

    சுஹாசினி ஹீரோவுக்கு அம்மாவாக வருகிறார். ஓவர் மேக்கப்.செயற்கையான சிரிப்பு.( டி வி ரியாலிட்டி ஷோக்களில்  பங்கேற்று  பங்கேற்று அவரது நளினம் காணாமல் போய் செயற்கை வந்து ஒட்டிக்கொண்டது.)
    http://www.filmmy.com/images/seedan7.jpg
    வசனகர்த்தா மனதை   திருடிய இடங்கள்

    1. நாம என்னதான் பக்குவமா சமைச்சாலும் கோயில் பிரசாதம் டேஸ்ட் வர்றதில்லையே.. ஏன்?  ( ஓசி ல சாப்பிட்டதாலயோ?)

    2. அம்மாவுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தையும் எந்த இடத்துலயும் நான் செய்ய மாட்டேன் ( கேப்டன் ஜெ பற்றி பேசற மாதிரியே இருக்குப்பா)

    3. ஏய்.. ஏன் திடீர்னு தாவணி போட்டுக்கிட்டே..?

    ஆம்பளைங்க இருக்கற வீட்ல அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு தாத்தா சொன்னாரு.. ( அடடா.. இந்த தாத்தாக்களால நமக்கு எவ்வளவு இடஞ்சல்?)

    4.   ஏய்....1   4  3   அப்படின்னா என்ன அர்த்தம்னு தெரியுமா?

    ம் ம் .. வேலை வெட்டி இல்லாத ஆம்பளைங்க பொண்ணுங்களைப்பார்த்தா அப்படி சொல்வாங்களாம்.  ( ஹி ஹி எங்க பார்ட் டைம் ஜாப்பே அதானே...)

    5. வெந்த சோற்றைப்பதம் பார்க்கத்தெரியாத வயசுல எங்கம்மா., அப்பாவுக்கு கொள்ளி வெச்சேன்.. ( ந்நோ கமெண்ட்ஸ்.. செண்ட்டிமெண்ட் வசனம்)

    6. இனி  உன் சோகம் எல்லாம் என்னுடையது..  என் சந்தோஷம் எல்லாம் உன்னுடையது... ( ஹீரோ அழகா ஒப்பிச்சாருப்பா.. )

    7.  சாமி.. கும்பிடறேங்க....

    விவேக் - அப்பீட்டாயிக்க நமக....

    8.   குறை இல்லாத மனுஷன் ஏது? ஓட்டை இல்லாத ஜட்டி ஏது?
    9. விவேக்  - டேய்.. ஒரு போலிச்சாமியாரை எவ்வளவுதாண்டா டார்ச்சர் பண்ணூவீங்க..?

    10. இன்னும் கொஞ்ச நேரத்துல பாட்டி உங்களைக்கூப்பிடுவா...

    என்னது.. பாட்டியா..? ச்சீ

    அடச்சே.. ஜோசியம் கேட்க.....

    11. பெரிய வாழ்க்கையைக்கொடுக்கறதுக்கு முன்னே கடவுள் பெரிய கஷ்டத்தை கொடுப்பாரு...

    12. நீ சமையல் காரனா? மருத்துவனா?

    சமையல்ல இருக்கற மகத்துவத்தைக்கண்டு பிடிச்சுட்டா உணவே மருந்துதான்.

    13. எந்த ஒரு பொருளுக்கும் அதனோட ஃஅழகை எடுத்துக்காட்ட ஒரு மாடல்தேவை.

    படம் முடியும்போது ஹீரோயின் பாடும் அந்த சோகப்பாட்டைக்கூட சகித்துக்கொள்ளலாம், படம் நெடுக நாடகத்தனமாக நகரும் காட்சிகளைக்கூட மன்னித்து விடலாம்...ஆனால் படம் முடியும்போது தனுஷ் மனிதர் இல்லை பழநி மலை முருகன் என அவரை அவதார புருஷன் ஆக்கும்போதுதான்....


    இந்தப்படம் ஏ,  பி,  சி.. ஆகிய 3 செண்ட்டர்களிலும் முறையே  15,  10  , 7  நாட்கள் ஓடலாம்.

    எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37

    Friday, February 18, 2011

    ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்


    http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=1460&option=com_joomgallery&Itemid=65
    சி எம் சீட்டுக்காக நாய் மாதிரி அலையும் ஒரு சந்தர்ப்பவாத , பச்சோந்தித்தனமான மன நிலை கொண்ட அரசியல் வாதி.... ( சுருக்கமா நம்ம டாக்டர் ராம்தாஸ் மாதிரி) தான்  படத்துக்கு வில்லன்.(பொதுவா இந்த அரசியல் வாதிகளே நமக்கு வில்லன்க தானே..?). அவரது பொண்ணைக்காதலிக்கும் ஹீரோ...எப்படி எதிர்ப்புகளை மீறி கைப்பிடிக்கிறார்ங்கறது தான் கதை.

    ஈரம்,அய்யனார்,மிருகம் போன்ற வித்தியாசமான சப்ஜெக்ட்டில் நடித்து நல்ல பெயர் வாங்கிய ஆதிக்கு விஜய் மாதிரி ஆக்‌ஷன் கம் மசாலா ஹீரோ ஆகனும்னு ஆசை வந்துடுச்சு போல.. அறிமுக பாடல் காட்சிலயே விஜய் மாதிரி டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் குடுத்து பயப்பட வைக்கிறார்.அதே போல் வில்லனிடம் சவால் விடும் காட்சிகளில் சிவகாசி விஜய்-யை இமிடேட் செய்கிறார்.ம்ஹும், தேற மாட்டார்னு நினைக்கிறேன்.. ஏற்கனவே விஷால்க்கு நேர்ந்த கதிதான் இவருக்கும்.

    ஹீரோயின் பூர்ணா.. ஜூனியர் அசின் -னு முகச்சாயல்ல இவரை கோடம்பாக்கத்துல சொல்றாங்களாம். (அப்படின்னு பூர்ணாவே வதந்தியை கிளப்பறார்னு நினைக்கிறேன்.)முகத்துல ஒரு ஃபிரஸ்னெஸ்ஸெ இல்லை. ஏதோ சம்பளம் வாங்குனமா? டைரக்டர் சொன்னபடி நடிச்சமா?ன்னு ரொம்ப சுமாரான நடிப்புத்தான்.

    படத்துல ஆறுதலான ஒரே அம்சம் வில்லனா வர்ற சுரேஷ்தான் ( பன்னீர் புஷ்பங்கள் புகழ்)சொட்டைத்தலையோட வந்து அவர் நயவஞ்சகமா சிரிக்கறப்ப அப்படியே டாக்டர் ராம்தாஸைப்பார்க்கற மாதிரியே இருக்கு.

    http://www.dinamani.com/Images/article/2010/8/6/cin2.jpg
    வில்லனுக்கு பி ஏ வாக வரும் மயில்சாமி அப்பப்ப சிச்சுவேஷனுக்குத்தக்கபடி கவுண்ட்டர் டயலாக் குடுத்து அப்ளாஸை அள்ளறார்.

    உன்னை நினைக்கையிலே மனசுக்குள் மழைக்காலம் என்ற பாடல் வரிகளை அழகாக எழுதிய கவிஞர் பாடலை படமாக்கிய விதத்தினை பார்த்திருந்தா (PICTURAISATION OF THE SONG)பாட்டு எழுதுறதையே விட்டுடுவார்னு நினைக்கிறேன்.

    அதே போல் இடைவேளைக்குப்பிறகு வரும் மாமூல் ஃபேமிலி சாங்க்கில் அத்தனை பேரும் (கிட்டத்தட்ட 24 பேர்) கூலிங்க் கிளாஸ் அணிந்து வந்து பயமுறுத்துகிறார்கள். அந்த பாடல் காட்சியில் பழம்பெருமை மிக்க ரவிச்சந்திரன்,கே ஆர் விஜயா உட்பட அனைவருக்கும் டான்ஸ் மூவ்மெண்ட் கொடுத்து அவர்களையும் படுத்தி , நம்மையும் படுத்தி எடுக்கிறார் இயக்குநர்.

    மனதைத்தொட்ட வசனங்கள்

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip5yXmTS28HTTvXFc6fyBMstjRMTKdmLRfI92ZwrLF8X0-0-XUr4HfxXaStLbxnvUR-S6Uxhyphenhyphen2EFBJW9Qz4ef37bhM2efDyDlzAvrMNhrTsBeHdaNGJ9JyVLzX3gWVOUQf7EjEdE909Ls/s320/poorna.jpg
    1. அடேங்கப்பா.. வழுக்கு மரமே இப்படி ஏர்றானே.....வாழ்க்கைல எப்படி முன்னேறுவான்?

    அவ்வளவுதானா? நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன்.

    2.  நீங்கதான் என் பையனுக்கு ஒரு பேரு வைக்கனும்.

    ஹரிதாஸ்  , ஹரிதாஸ்

    எனக்கு இந்த பேரு பிடிக்கலை.
    ஓ. இதுக்குத்தான் குழந்தைகளுக்கு பேசறதுக்கு முன்னேயே பேரு வெச்சுடறாங்க போல...

    3. ஏம்மா.. படுத்திருந்த பொண்ணைக்காணோமேன்னுபதட்டப்படாம ஸ்கூல்க்கு கிளம்பறியே.. ஏன்?

    பொண்ணைப்பெத்திருந்தா பயப்படுவேன், பொறுக்கியை அல்ல பெத்திருக்கேன்..? ( ஆஹா என்ன ஒரு மாதர் குல மாணிக்கங்களாடா...)

    4. பாப்பா பாக்க டாப்பாத்தான் இருக்கு, ஆனா ட்ரை பண்ணிப்பார்த்தா படு லோக்கலா இருக்கும் போல...

    5. கணக்கு டீச்சர் - டேய்.. உங்கப்பாவுக்கு நான் ரூ 1000 பணம் கடன் தர்றேன். மாசாமாசம் ரூ 50 திருப்பித்தர்றதா சொல்றாரு. அப்போ எத்தனை  மாசத்துல திருப்பித்தருவாரு?

    மாணவன் - எத்தனை  மாசமானாலும் திருப்பியே தரமாட்டார் மேடம்.. உங்களுக்கு எங்கப்பாவைப்பற்றித்தெரியலை...

    6. ஒரு கெட்டவன் உருவாகறது அவன் சொன்ன முதல் பொய்ல...

    7. எல்லாரும் சாவுக்கு சங்கு ஊதுவாங்க.. இவன் தான் சாகறதுக்கே சங்கு ஊதறான்.

    8. ஒரு பொண்ணு வண்டி ஓட்டறப்ப அவ பின்னால ஒரு பையன் உக்காந்தா அது லிஃப்ட்டுன்னு நினைப்பாங்க. ஆனா ஒரு பையன் பின்னால ஒரு பொண்ணு உக்காந்தா லிஃப்ட்டைத்தவிர மத்த எல்லாத்தையும் நினைப்பாங்க..

    9. ஹீரோயின் - உன் கை டிகாக்‌ஷன் மாதிரி இருக்கு, என் கை பால் மாதிரி இருக்கு...

    ஹீரோ - அப்போ நமக்குப்பிறக்கபோற குழந்தை காஃபி  மாதிரி இருக்கும்னு சொல்லு.

    (இந்த சீன்ல என்ன காமெடின்னா 2 பேர் கையும் மாநிறமா தான் இருக்கும் )

    10. எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்.

    ஏன் அப்படி சொல்றே.. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையே...எந்தப்பொண்ணையும் எதுவும் பண்ணுனது இல்லையே...

    அதான். கல்யாணத்துக்குப்பிறகு மட்டும் என்னைக்கட்டிட்டு என்ன செய்யப்போறே,,?

    (சபாஷ்.. தமிழ்ப்பொண்ணுன்னா இப்படித்தான் கலாச்சாரத்தைக்காப்பாத்தனும்)

    11. ஹீரோ - அப்பா, இவ்வளவு கட்டுப்பாடா வளர்ந்த நீங்க எப்படி எனக்கு இவ்வளவு ஃபிரீடம் குடுத்தீங்க..?

    பிரபு -  நான் எப்படி எல்லாம் வாழனும்னு நினைச்சனோ அந்த மாதிரி...நீ வாழனும்னு ஆசைப்படறேன்.

    12. ஹீரோயின்  - எதுக்காக என்னை அவசரமா வரச்சொன்னே..?

    ஹீரோ - நம்ம லவ் மேட்டர் எங்க வீட்ல எல்லோருக்கும் தெரிஞ்சு போயிடுச்சு.

    ஹீரோயின் - அய்யய்யோ.. என்ன சொன்னாங்க..?

    ஹீரோ - ஓக்கே சொல்லீட்டாங்க.. அதான் கவலையா இருக்கு..

    13. வில்லனின் எடுபுடி  - பால்பாண்டின்னா பால் கறக்கற பாண்டின்னு நினைச்சியா?உனக்குப்பால் ஊத்தற பாண்டிடா... ( பஞ்ச் டயலாக்காம்.. சகிக்கல...)



    http://www.sivajitv.com/newsphotos/poorna4.jpg
    இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

    1. ஹீரோ தனது காதலை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் தனித்தனியே சொல்லி உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன் .என டபாய்ப்பதும் அதைத்தொடர்ந்து வரும்  கல கல சீனும்.

    2.செலவு அதிகம் இல்லாம ஒரு மசாலாப்படத்தை கொடுத்தது.

    3. ஹீரோயினை சுமாரா செலக்ட் பண்ணி கடுப்பை கிளப்பினாலும் ஹீரோயின் அம்மாவா யுவராணியை போட்டு கிளுகிளுப்பு ஏத்துனது..

    இயக்குநரிடம் சில கேள்விகள்

    1. படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஹீரோ கம்பம் ஏறும்போது கீழே விழுந்து சேறு ஆகிடுது ஓக்கே... அப்போ கூட இருந்த 42 பேருக்கும் அதே மாதிரி சேறு எப்படி ஆச்சு? ( பாட்டுக்கு மேட்ச்சுக்கு மேட்சுக்கா?)

    2. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பைக்ல வேகமா வந்து விழறார். வில்லனோட அடியாளுங்க 34 பேர் சுத்தி நிக்கறாங்க. உடனே எந்த ஸ்பேனர், ஸ்க்ரூ ட்ரைவர் இல்லாம தன் பைக்கோட முன்னாடி சக்கரத்தை கழட்டி வீசி அடிக்கறாரு..? அது எப்படி?அந்த ஒரு சக்கரம் பட்டு 12 பேர் விழறாங்க...

    எப்படியோ படம் தப்பிச்சிக்கிச்சு....

    ஏ செண்ட்டர்ல 35 நாட்கள், பி செண்ட்டர்ல 25 நாட்கள், சி செண்ட்டர்ல  15 நாட்கள் ஓடலாம்.

    ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39
    குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே


    டிஸ்கி -

    Sunday, February 13, 2011

    THE MECHANIC - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 +


    காதலர் தினத்தை முன்னிட்டு கோலிவுட்டில்தான் லவ் சப்ஜெக்ட் படம் எதையும் ரிலீஸ் பண்ணலை,, சரி ஹாலிவுட்டிலாவது ஏதாவது அஜால் குஜால் படம் ரிலீஸ் பண்ணுவாங்களா?ன்னு பார்த்தா அங்கேயும் ஜோடி சுத்தம் # விளங்கிடும். ( காதலர் தினத்தன்னைக்கு சீன் படம் பாத்தா சாமி குத்தமா? # டவுட்டு)

    த ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் ஹீரோ நடிச்ச மெக்கானிக் தான் கடைசில சிக்குச்சு.ஈரோடு வி எஸ் பி - ஏ சி டி டி எஸ் ல படம் பார்த்தாலே கொண்டாட்டம்தான்.டைட்டில் கிளாமரா இல்லை.  I THINK BETTER AS " THE PROFESSIONAL KILLER" ( இங்கிலீஷ் படத்துல அங்கங்கே இங்கிலீஷ்ல ஒரு லைன் இருக்கனுமாம் # விமர்சன விதி)

    புரொஃபஷனல் கில்லரா வர்ற ஹீரோ ஏன்? எதுக்கு?ன்னு கேள்வி கேட்காம மேலிடம் சொல்ற ஆட்களை ஸ்கெட்ச் போட்டு போட்டுத்தள்ளிடற ஆளு .ஒரு இக்கட்டான நேரத்துல தன்னோட ஃபிரண்டையே கொலை செய்ய வேண்டிய சூழல்.அதுக்கான காரணம் முக்கியமான ஒரு ஆளை ஹீரோவோட ஃபிரண்ட் கொன்னுடறதா ஹீரோவோட மேலிடம் சொல்லுது.

    ஆனா ஹீரோ தன்னோட ஃபிரண்டை கொலை செய்த பிறகுதான் உண்மை தெரிய வருது, தன்னோட ஃபிரண்ட் கொலை செய்ததா சொல்லப்பட்ட ஆள் உயிரோட தான் இருக்கார். . ஹீரோவோட மேலிடம் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஹீரோவை வஞ்சித்து விட்டது.

    இப்போ கொலை செய்யப்பட்ட ஹீரோவின் நண்பரின் மகன் ஹீரோவிடமே வேலைக்கு சேர்றாரு. அவருக்கு ஹீரோ தான் அப்பாவைக்கொன்னார்ங்கற விஷயம் தெரிய வர்றப்ப எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி ஹீரோவை பழி வாங்க திட்டம் போடறாரு.
    திரைக்கதைல என்ன பாராட்ட வேண்டிய அம்சம்னா  வில்லன் டாக்டர் ராம்தாஸ் மாதிரி கூட இருந்தே குழி பறிக்கப்போறாரா? வை கோ மாதிரி எதிர்த்து நின்னு  பழி எடுக்கப்போறாரா? என்ற விஷயத்தை கடைசி வரை சஸ்பென்ஸாவே கொண்டு போனது தான்.


    இதே கதையை தமிழ்ல எடுத்திருந்தா ஹீரோவுக்கு ஜோடி, 3 டூயட், அம்மா செண்ட்டிமெண்ட்னு போட்டு கொன்னெடுத்திருப்பாங்க.ஆனா ஹாலிவுட்ல கதை ஒரே நேர் கோட்டுல பயணிக்குது. ஹீரோயின் கிடையாது..(அப்போ மேலே உள்ள ஸ்டில்?அது சும்மா பத்து செகண்ட் சொர்க்கம்.( நன்றி - சுஜாதா)

    நம்ம ஊர் பிரேமானந்தா மாதிரி ஒரு கேரக்டர் வருது. போலி மத குரு கேரக்டர். அந்த ஆளை போட்டுத்தள்ளும் சீன் செம விறு விறுப்பு.ஆன்மீகத்துல இருக்கற ஆளுங்க பெண்மீகத்துல -பெண் மோகத்துல கேடிங்க என்பது ஆல் ஓவர் வோர்ல்டுலயும் இருக்கு போல.

    http://www.thebuzzmedia.com/wp-content/uploads/2011/01/Mini-Anden-in-The-Mechanic.jpg
    மேலே உள்ள ஸ்டில்0- தியேட்டர்லதான் நோட்டீஸ் போர்டுல இருந்தது.. தேடி தேடிப்பார்த்தும் படத்துல காணோம்.பொண்ணுங்க வாசனையே படாம படத்தை ஓட்டுன இயக்குநருக்கு என் வன்மையான கண்டனங்கள்.

    படத்தில் தனது தந்தையை கொலை செய்த ஹீரோவிடம் வில்லன் கடைசி நேரத்துல எங்கப்பாவுக்கு ஏதாவது சான்ஸ் கொடுத்தீங்களா? என ஆரம்பித்து கேள்விக்கணைகளாக தொடுக்கும் இடங்களில் செண்ட்டிமெண்ட் டச்

    படம் பார்க்கறவங்க ஹீரோ மர்டர் பண்ற அழகையே ரசிச்சிட்டு இருக்கறதால கூடவே இருக்கற நண்பரின் மகன் ஹீரோவைக்கொல்லப்போறாரா? என்ற பதட்டம் தோணவே இல்லை.இது திரைக்கதையில் ஏற்பட்ட மாபெரும் சறுக்கல்.ஏதோ ஜாலியா ஒரு படம் பார்த்தமா? வந்தமா?ன்னு இருக்கறவங்க இந்தப்படம் பார்க்கலாம்.

    படத்தில் ரசனையான வசனங்களில் நினைவில் நின்றவைகள்


    1.யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்.. ஆனா சுட்டது யார்னு மத்தவங்களுக்கு தெரியாமயே சுடறதுதான் புத்திசாலித்தனம்.


    2. வீல் சேர்ல இருக்கறவனை சுட்டுக்கொல்றவன் எப்படிப்பட்ட கோழையா இருப்பான்,,?

    3. வாழ்க்கைல எப்பவும் மனசு சொல்றதை கேளு.. சரியோ தப்போ அதுதான் பெஸ்ட்டா இருக்கும்.அதை ஃபாலோ பண்ண தயங்கக்கூடாது.

    4.முடியாதுன்னு நீ எப்பவும் சொல்லக்கூடாது.. எதையும் முடிக்கறவன் நீ...

    5. இன்னைக்கு நான் சாத்தானை சந்திக்க விரும்பறேன்.. 

    இந்த ஊசியை போட்டுக்கிட்டா நீங்களே சாத்தானா ஆகிடுவீங்க.. ( விஷ ஊசி)

    வழக்கமான ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் வரும் கார் சேஸிங்க் சீன்கள்,டமால்,டுமீல்,இதிலும் உண்டு. எதுவும் ஓவர் டோஸ் ஆகி விடாமல் சரியான கலவையில் தந்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

    டிஸ்கி -

    அனகாவின் வர்மம் - சீன் படமா? - சினிமா விமர்சனம் 18 +

     


    தம்பிக்கோட்டை - சந்தானம் காமெடி + மசாலா - சினிமா விமர்சனம்

     

    Saturday, February 12, 2011

    தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் - சினிமா விமர்சனம்

    கல்லூரி ஹீரோ அகில், ரேணிகுண்டா ஹீரோயின் தனுஷா, கள்வனின் காதலி இயக்குநர் தமிழ்வாணன் ( எஸ் ஜே சூர்யா - நயன் தாரா) மூவரும் சேர்ந்த கூட்டணியில் உருவாகி இருக்கும் ஒரு கிராமத்துக்காதல் கதை தான் இந்த நந்தி..சப் டைட்டிலா வணங்கி செல்னு எதுக்கு போட்டிருக்காங்கன்னு கடைசி வரை தெரியவே இல்லை..

    படத்துல முக்கியமா  குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டிய கேரக்டர் ஹீரோவின் அப்பாவா வர்றவர்.. செமயான ஆக்டிங்க்.ஒரு கிராமத்து அப்பாவைக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கார்.இவரும் ,காமெடியன் கம் இயக்குநர் சிங்கம்புலியும் செய்யும் அலப்பறைகள்சிரிக்க வைக்கிறது என்றாலும் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

    ஹீரோ அகில் போன படத்தை விட அதிக ஷாட்ஸ் வர்றார். தேறிடுவார்.அவருக்கு காதல் காட்சிகளை விட ஆக்‌ஷன் காட்சிகளில் தான் ரொம்ப இண்ட்ரஸ்ட் போல.

    ஹீரோயின்  தனுஷா ரொம்ப பிஞ்சு முகம்.ரேனிகுண்டால பார்த்ததை விட இதுல கொஞ்சம் அழகு கம்மிதான்.. காரணம் ஒளிப்பதிவாளர் + கேரக்டர்.
    அவர் டூயட் காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்றார். ஜோதிகா ரசிகை போல.
    படத்தோட ஓப்பனிங்க் சாங்கா வரும் சங்கு சக்கர சாமி வந்து சிங்கு சிங்குனு ஆடுச்சாம் செம டப்பாங்குத்துப்பாட்டு. ஆனால் அதற்கான நடன தாரகைகள் (குரூப் டான்சர்ஸ்) ரொம்ப முத்தல் முகங்கள் ( முகம் மட்டுமா?).

    வத்தலான தேகமா இருந்தாலும் சரி, முத்தலான முகமா இருந்தாலும் சரி தமிழன் ரிஜக்ட் பண்ணிடுவான்கறதை தமிழ் இயக்குநர்கள் புரிஞ்சிக்கிட்டா தேவலை.சூப்பரா டான்ஸ் ஸ்டெப் போடற இந்த 35 + களை விட ,தட்டுத்தடுமாறும் 16 + களை  டான்ஸ் ஆடப்போட்டா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்..

    பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து பண்ணி இருக்கலாம்.மயங்கினேன் மயங்கினேன்  பாட்டும்,தண்ணிக்குள்ளே தீப்பிடிச்ச பாட்டும் நல்ல மெலோடீஸ்.


    காதலன் - காதலி வில்லன்னு குண்டுச்சட்டிலதான் குதிரை ஓட்டி இருக்காரு இயக்குநர். இன்னும் சுவராஸ்யமான சம்பவங்கள். திருப்புமுனைகளை திரைக்கதைல சேர்த்திருக்கலாம்.ஏன்னா காதலர்கள் அல்லாதவர்கள் இந்தப்படத்தை பார்க்க பொறுமை தேவை.

    ஹீரோயினோட அப்பா திடீர்னு நல்லவர் ஆகறது நம்பற மாதிரி இல்லை.ஹீரோ அடிக்கடி “ என் பொறுமையை சோதிக்காதே “ன்னு வில்லன் கிட்டே பஞ்ச் டயலாக் பேசறாரு. அது ஆடியன்சுக்கா?வில்லனுக்கா? # டவுட்டு
    வசனகர்த்தா வசன விருந்தை பந்தி பரிமாறியதில் நினைவில் நின்றவை

    1. காலம் மாறிடுச்சு.. மாட்டுக்கு இங்கிலீஷ் மருந்து.. மனுஷனுக்கு கஷாயமா..? ஹூம்...

    2. அப்பா.. வாப்பா.. அம்மா தண்ணி அடிக்கக்கூப்பிடுது.. இந்தா குடம்.

    சிங்கம்புலி - போடா.. நான் தண்ணி அடிக்ககூப்பிட்டா மட்டும் அவ வர மாட்டேங்கறா...அவ மட்டும் கம்பெனி தரமாட்டா.. நான் தரனுமா?

    3.ஹூம்  , விஞ்ஞானம் வளருது.. விவசாயம் வளர மாட்டேங்குது..

    4. டேய்... நியூஸ் பேப்பரை பிரிச்சா.. பொம்பளை ஃபோட்டோ மட்டும் பாருங்கடா...நியூஸைப்படிச்சிடாதீங்க..

    5. இந்த ஊர்ல டீக்கடை வெக்கறதுக்கு பாகிஸ்தான்;ல போய் பஞ்சு மிட்டாய்க்கடை வைக்கலாம் போல...

    6.டேய்.. வராதவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க.. கடைக்கு போய் கலர் வாங்கிட்டு வா..

    சிங்கம்புலி - அவங்களே ஒரு கலரு.. அவங்களுக்கு ஒரு கலரா?

    7. எல்லா உறவுகளும் ஒவ்வொரு கட்டத்துல விலகிடும்.ஆனா எப்பவும் விலகாத உறவு காதல் மட்டும்தான்.

    8. ராத்திரி ஆனா பொண்டாட்டி கிட்டேயும், பகல்ல ஊர்க்காரங்க கிட்டேயும் என்னால பதில் சொல்லவே முடியல்ல... கேள்வி கேட்டே கொன்னெடுக்கறாங்க


    9.உன்னை முதலாளி வேலையை விட்டுத்தூக்குனது ஓக்கே.. உனக்கு வேற வேலை கிடைச்சுடும். ஆனா என்னை ஏன் வேலையை விட்டுத்தூக்குனாரு? எனக்கு எப்படி வேற இளிச்சவாய முதலாளி கிடைப்பாரு?

    10. நம்ம பொண்ணு ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி குடுத்துட்டோம்.அவ ஆசப்பட்ட பையனையும் அவளுக்கே கல்யாணம் பண்ணி வெச்சா என்ன?

    11. நல்ல காரியம் நடக்க இருக்கறது சந்தோஷம் தான். ஆனா கைல காசே இல்லை. எப்படி கல்யாணத்தை நடத்துவேன்?

    சிங்கம்புலி - பணம்தான் பிரச்சனையா?என் பொண்டாட்டி கழுத்துல அநாவசியமா 20 பவுன் செயின் தொங்கிட்டு இருக்கு, அதை அபேஸ் பண்ணிடறேன்..

    பொதுவாகவே கோடம்பாக்க இயக்குநர்கள் படத்தின் திரைக்கதை மீது நம்பிக்கை குறைந்தால் படத்துக்கு ஒரு அனுதாப பார்வை கிடைப்பதற்காக க்ளைமாக்ஸில் தேவையே இல்லாமல் ஹீரோவயோ, ஹீரோயினையோ சாகடித்து விடுகிறார்கள்.

    கதை அனுமதிக்காத போது இந்த மாதிரி ஆண்ட்டி க்ளைமாக்ஸ் வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் உணர இந்தப்படத்தின் தோல்வி ஒரு பாடமாக இருக்கும்.

    ஏ பி சி செண்ட்டர்களில் சராசரியாக 20 நாட்கள் தான் ஓடும்.

    ஆனந்த விகடன்ல இந்தப்படத்தோட விமர்சனம் போடறது டவுட்தான் அப்படி போட்டா மார்க 37.

    குமுதம் ரேங்க்கிங் - சுமார்

    டிஸ்கி- 3வது ஸ்டில்லில் ஹீரோயின் அழகாக தெரிவதற்காக கூட இருக்கும் தோழிகளை மொக்கை ஃபிகர்களாக தேர்ந்தெடுத்த இயக்குநரின் ஐடியாவை பாருங்க..

    diSki 2 - பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

    Friday, February 11, 2011

    பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்



    மொழி,அபியும் நானும் போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் படங்களை எடுத்த ராதா மோகன் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் பயணம்.
    தீவிரவாதியின் விடுதலை கோரி ஒரு விமானம் கடத்தப்படுகிறது.பயணிகளின் தவிப்பு,அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைதான் திரைக்கதை.

    நாகார்ஜூன் தெலுங்கில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் இந்தப்படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் பாடி லேங்குவேஜ்ஜில் அவர் காட்டிய மிடுக்கை கொஞ்சம் கெட்டப்பிலும் காட்டி இருக்கலாம்.நேஷனல் செக்யூரிட்டி கார்டாக வரும் அவர் க்ளோஸ் ஹேர் கட் பண்ணி இருந்தால் கூடுதல் கம்பீரம் சேர்த்திருக்கும்.படத்தில் அவருக்கு ஜோடி ஏதும் இல்லை என்பது டூயட்டை வெறுக்கும் பார்ட்டிகளுக்கு நிம்மதி.


    படத்தின் தயாரிப்பாளர் என்பதற்காக படம் முழுக்க வர வேண்டும் என்ற சில்லித்தனமான எண்ணம் எதுவும் இல்லாமல் கதை எந்த அளவு அனுமதிக்கிறதோ அந்த அளவு மட்டும் பிரகாஷ்ராஜ் வந்து போவது அழகு
    படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களைக்கூட கவனிக்க வைக்கும் அளவு முக்கியத்துவம் கொடுக்கும் வெகு சில இயக்குநர்களில் ராதாமோகனும் ஒருவர். மனித நேயங்களுக்கும் , உறவுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் அவர் இந்த ஆக்‌ஷன் படத்தில் கூட தனது பாணியில் மாறாமல் டைரக்‌ஷன் டச்சை வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.
    பயணிகளாக வருபவர்களில் கவனிக்க வைப்பவர்கள் டீலா நோ டீலா ரிஷி, பாதிரியாராக வந்து குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் எம் எஸ் பாஸ்கர்,ஷைனிங்க் ஸ்டாராக வந்து கலகலப்பு ஊட்டும் பப்லு என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

    இடைவேளை வரை , படம் எதிர்பார்த்த, நமக்கு பழக்கப்பட்ட ஒரே திசையில் பயணிக்கும்பொது, கைதியான தீவிரவாதி விபத்தில் இறந்து விட்டார் என்றதும் திரைக்கதையில் புதிய திருப்பம்.. அதைத்தொடர்ந்து கதையின் போக்கில் ஏற்படும் மாற்றம் நல்ல திரைக்கதை ஆசிரியரின் உத்தியுடன் சொல்லப்படும் ட்விஸ்ட்கள் சபாஷ் சொல்ல வைக்கின்றன.
    டம்மி தீவிரவாதியாக வருபவரின் பயந்தா கொள்ளித்தன நடிப்பு கலக்கல் ரகம். கிட்டத்தட்ட கோல்மால் படம் போன்ற KNOT.படத்தில் பாடல்களே இல்லாதது, தீவிரவாதிக்கு குழந்தையிடம் ஏற்படும் அன்பு அன்று அங்கங்கே அழகியல் அம்சங்கள்.

    வசனகர்த்தா நம் இதயங்களில் பயணம் செய்த இடங்கள்.


    1.டைரக்டர் - சார்.. ஃபைட் சீன் ரெடி பண்ணீட்டேன். நீங்க 50 பேரை அடிக்கற மாதிரி...
    ஹீரோ - இப்போ வர்ற பசங்க எல்லாம் 30 பேர் 40 பேரை சர்வ சாதாரணமா அடிக்கறாங்க..நான் அட்லீஸ்ட் 100 பேரையாவது அடிக்கனும்.ரெடி பண்ணுங்க. டவுட்னா கில் பில் ( KILL BILL) படம் பாருங்க.

    2. ஊர்ல பல பேர் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோட தங்களோட பேரை எழுதறாங்கன்னா அதுக்குக்காரணமே உங்களை மாதிரி நியூமராலஜிஸ்ட்ஸ்தான்.
    3. சிவாஜி, சிரஞ்சீவி, நிரோத் எல்லாமே கூட்டுத்தொகை 5 வருது.. செம ஃபேமஸ்.
    யோவ்,சிவாஜி, சிரஞ்சீவி, ஓக்கே.. எதுக்கு சம்பந்தமே இல்லாம நிரோத் இங்கே வருது..?

    மக்கள் மத்தில பிரபலம் ஆகிடுச்சுல்ல?

    4.என்னது? தீவிரவாதிங்களா? ஏன்னா..நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி ஆளுங்க இருக்காங்களா?

    ம்.. இருப்பாங்க.. ஏன். இப்போ உங்க வீட்ல இல்ல?

    5. இந்தப்படம் ஓடுச்சா?

    படம் பூரா ஹீரோதான் ஓடிட்டே இருந்தாரு..படம் ஓடலை.
    படம்தான் பார்க்க நல்லாலைன்னா கதை என்னன்னு கேக்கறதுக்குக்கூட நல்லாலையே..?

    6. பேசினா தீர்க்க முடியாத பிரச்சனைகள் இந்த லோகத்துல இருக்கோன்னா?

    7.இந்தியாவுக்கே இப்போ நேரம் சரி இல்ல. கடக ராசி,, ஏழரை நாட்டு சனி நடக்குது..

    ஏழு நாடு கூட ஏதோ ஒத்துக்கலாம். இந்த அரை நாடு... எங்கே..?

    8. இந்த கோயில் , சாமி எல்லாம் இல்லைன்னா என்ன ஆகி இருக்கும்?

    மக்கள் எல்லாம் ஒழுங்கா இருந்திருப்பாங்க.இருக்காங்காட்டிதான் என் மதம் உன் மதம்னு அடிச்சுக்கறாங்க.

    9.இந்தியாவுல 40 கோடி பேர் கழிப்பறை இல்லாம கஷ்டப்படறாங்க.. அதைக்கட்ட வழியைப்பாக்காம இங்கே ஒரு கோயிலை இடிச்சு இன்னொரு கோயிலை எப்போ கட்டலாம்னு டைம் பார்த்துட்டு இருக்காங்க..

    10. இன்னும் எத்தனை நாளுக்கு தீவிரவாதிங்க கிட்டே பேசிட்டே இருப்பீங்க?
    11.இவனுங்களுக்கெல்லாம் ( அரசியல்வாதிகள்) எலக்‌ஷன் பற்றி மட்டும்தான் கவலை..பயம் எல்லாம், மக்கள் பற்றி கவலையோ ,அக்கறையோ கிடையாது.

    12. முடிவு எடுக்க டிலே (DELAY) பண்றதும், தப்பான முடிவு எடுக்கரதும் ஒண்ணுதான்.

    13. வியட்நாம் போர் ஒரு முடிவுக்கு வர காரணமா இருந்தது ஒரு ஜர்னலிஸ்ட் எடுத்த புகைப்படம்தான். அதே ஜர்னலிஸ்டாலதான் ஒரு நாட்டின் இளவரசியே அகால மரணம் அடைஞ்சாங்கங்கறதையும் மறந்துடக்கூடாது.( டயானா)
    14 . தீவிரவாதி - நம்மோட முதல் எதிரி கண்ணீர், அடுத்தது செண்ட்டிமெண்ட்.

    15. கம்ப்யூட்டர் படிச்சு அலுங்காம குலுங்காம அமெரிக்கா போயிடறீங்க.. ஏன் காஷ்மீர் போய் பாருங்களேன்.
    16. சார்.. கூல் டவுன்..
    உங்களை மாதிரி ஜோசியம் படிச்சிருந்தா கம்முனு உக்காந்திருப்பேன். காந்தியும், கம்யூனிசமும் ,காரல்மார்க்ஸூம் படிச்சுட்டனே.

    17. என்னை அடிச்சு ஆக்‌ஷன் ஹீரோ ஆகனும்னு பார்க்காதே.. ஏன்னா என்னை என் மனைவி கூட அடிப்பா.. அவ்வளவு ஏன்? என் 4 வயசு பையன் கூட அடிப்பான்.

    18. என் கிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்ல போய் 3 மாசம் இருந்துட்டு வந்துட்டே... ஆனா நான் ஒரு தடவை கூட உன் கிட்டே சாரி கேட்கலையே.. தப்பு சாரி கேட்டிருக்கனும்.

    19. மழலை - அங்கிள் நீங்க யாரு? உங்க பேரு என்ன?

    பேரே கிடையாது எங்களுக்கு.. நாங்க இறைவனால் படைக்கப்படற போராளிகள்.
    கரப்பான் பூச்சிக்கே ரியல் லைஃபில் பயப்படுபவர்தான் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோ என ஒரு வாரு வாரி இருப்பது வெல்டன் ராதா பாரதி என சொல்ல வைக்கிறது.அதே போல் சீரியஸான இந்தக்கதையில் முடிந்த வரை எங்கெல்லாம் காமெடி மசாலாவை தூவ முடியுமோ அங்கெல்லாம் கலகலப்பாய் கொண்டு செல்வது இயக்குநரின் ஸ்பெஷல் டச்.
    ஆனால் அதே சமயம் படம் படு சீரியஸாக செல்லும்போது ஆங்காங்கே வரும் காமெடிகள் படத்தின் வேகத்துக்கும், டெம்ப்போவுக்கும் ஸ்பீடு பிரேக்கர் ஆகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    எல்லா மனிதரும் நல்லவரே என்ற இயக்குநரின் கான்செப்ட் பிரமாதம் தான் என்றாலும் இவரது படங்களில் வரும் அனைவரும் நல்லவர்களாகவே வருவதும் எல்லாருமே எம் ஏ சைக்காலஜி முடித்தவர் போல் தத்துவம் பேசுவதும் களைய வேண்டிய குறைகள்.

    பிருத்வி எனும் பப்லுவை ஆக்‌ஷன் ஸ்டார் ஆக காண்பித்து தமிழ் சினிமா ஹீரோக்களை செம இறக்கு இறக்குனது கலகல.. ( நிஜத்தில் இவரது முதல் படத்துக்கு கால்ஷீட் கேட்டு ஒரு முன்னணி ஹீரோவை அணுகிய போது அவர் நடிக்க மறுத்து விட்டார்.. அந்த கோபத்தைத்தான் இப்படி காட்டி தீர்த்துக்கொள்கிறார்.)

    காமெடியில் கை கொடுத்து ஹீரோ அடிக்கும் நக்கல் பஞ்ச டயலாக்ஸ்.
    1.நீ அடிக்கடி அடிப்பியே ஒரு பாழாப்போன பஞ்ச் டயலாக்.. அதென்ன?

    ரத்தத்துல வேணா பல குரூப் இருக்கலாம்.ஆனா மனுஷங்க எல்லாம் ஒரே குரூப்தான்.

    2, நீங்க பார்க்கத்தான் சைலண்ட்.. ஆனா வயலண்ட்..போய் அட்டாக் பண்ணுங்க.

    3. தாய்க்கு ஒரு ஆபத்துன்னா ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணுவேன்

    ஆனா தாய் நாட்டுக்கு ஒரு ஆபத்துன்னா நானே ஓடிப்போய் காப்பாத்துவேன்..

    மொழி,அபியும் நானும் படங்கள் போல எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப்படம் பிடித்து விடும் என சொல்லி விட முடியாது.ஆனாலும் தமிழில் இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சியே..
     
    ஏ, பி செண்ட்டர்களில் 40 டூ 50 நாட்கள் ஓடலாம். சீ செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடலாம்,
     
    எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42
     
    எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

    diski - தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் - சினிமா விமர்சனம்


    Saturday, February 05, 2011

    தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்

    http://www.sivajitv.com/newsphotos/Dina%20mani%20%20ad%20-6%20.jpg
    வழக்கமான கிராமத்துக்காதல் கதைதானோ என நினைக்க வைக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகள் சலிப்பைத்தந்தாலும் இடைவேளைக்குப்பிறகு திடீர் என கதை ட்ராக் மாறுகிறது.அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒன்றைத்தான் இயக்குநர் பெரிதாக நம்பி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

    4 நண்பர்களின் அறிமுகமும் ,அவர்களது குறும்புத்தனத்தையும் இன்னும் நல்லாவே சொல்லி இருக்கலாம்.களவாணி விமல் தான் ஹீரோ ,ஆனால் அவர் ஏனோ தானோ என்றுதான் நடித்திருக்கிறார்.அதே போல் திரைக்கதை இடைவேளை வரை ஒரு சீரான இலக்கில்லாமல் காட்டாறு போல , டாக்டர் ராம்தாஸின் கடைசி நேர தேர்தல் கூட்டணி முடிவைப்போல தடுமாறுகிறது.

    ட்ரெயிலரில் காட்டப்பட்ட வடிவேல் படத்தில் 10 செகண்ட் மட்டுமே வருகிறார் என்பது ஆடியன்ஸூக்கு முதல் ஏமாற்றம்.அப்புறம் பெஸ்ட் கவுண்ட்டர் டயலாக் மேன் என பெயர் பெற்ற இயக்குநர் கம் காமெடியன் சிங்கம்புலியை சரியாக யூஸ் பண்ணாமல் விட்டது... ( கேட்டால் படத்தில் ஃபுட்டேஜ் பிராப்ளம் .. என சால்ஜாப்பு பதில் ரெடியாக இருக்கும்.)



    http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=1981&option=com_joomgallery&Itemid=77
    அழகு மயில் மாதிரி வரும் அஞ்சலியைக்கூட ஜஸ்ட் லைக் தட் யூஸ் பண்ணி இருக்காங்க. விமல் -அஞ்சலி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை இன்னும் கவிதையாக,டீட்டெயிலாக காட்டி இருக்கலாம்.

    படத்தோட கதை என்ன?மதுரையில் 4 நண்பர்கள்.அந்த ஊர்ப்பெரிய மனுஷனோட பையன் ஜவுளிக்கடைல பெண்கள் டிரஸ் மாத்தறப்ப செல்ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து அந்தப்பெண்களை  மிரட்டறான்.நம்ம ஹீரோ அவனை துவைச்சுக்காயப்போட்டுடறாரு.வில்லனோட அப்பா ஹீரோவை சொந்த விரலாலயே கண்ணை குத்த வைக்கற மாதிரி ஹீரோவோட நண்பர்களை விட்டே அவனை முடிச்சுக்கட்ட முடிவு பண்றாரு..
    இந்த KNOT டை கையில் எடுத்துக்கிட்டு இயக்குநர் நம்மை (ஆடியன்ஸ்) முடிச்சுகட்ட முடிவு பண்றாரு.


    படத்தோட ஓப்பனிங்க் சீன்ல மதுரையோட அழகை ஒரு ரவுண்டு காட்டறாங்க.. அடடா...அதே போல் ஆவணி மாசம் அத்தை பொண்ணு தாவணிபோட்டா கொண்டாட்டம் தான் செமயான கிராமிய கலை நுட்பங்களை உள்வாங்கி வெளிப்படுத்தும் தெம்மாங்கு கலக்கல் ஹிட். ( நமக்கு அத்தை பொண்ணு தாவணி போட்டாலும் சந்தோசம்தான், போடலைன்னாலும் சந்தோஷம்தான்)

    அந்தப்பாட்டில் அஞ்சலியை தன்னோடு ஆடுவதாக ஒருத்தன் கற்பனை பண்றப்ப ( அந்த ஒருத்தன் ஹீரோ அல்ல)  அஞ்சலி பளார் என ஒண்ணு குடுத்து ஏண்டா கனவு சீன்னா எப்படி வேணாலும் கற்பனை பண்ணிக்குவியா? என கேட்டு மலையாள முண்டு சீன் டூ தமிழ் கலாச்சார தாவணி டிரஸ்க்கு மாறுவது இயக்குநரின் நகைச்சுவைத்திறனை வெளிப்படுத்தும் காட்சி.

    ஆனால் மார்ச்சுவரியில் வேலை செய்யும் ஒரு நண்பன்  ஒரு சீமந்த விழாவில் ( கர்ப்பமான பெண்ணுக்கு கட்டுச்சோறு விருந்து ஆக்கிப்போடுதல்)அந்தப்பெண்ணை பிணமாக கற்பனை செய்வது ஓவர் டோஸ் காமெடி..அது சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத சீன்.


    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQaHM9HXgCB6C2Y_j2_aTmKtxD7_xenFxQBH-vecrJgXg8c1M0GSrU-sdLNShoNyeuNs0OuKbhYI_nkxs6gCiMY6MvnHJ8d5p7lt7-MFonZ7Qc97eBB5W50yKm6SbuzEuPdMDuKnnvh2Q/s1600/0+karungali+anjali+hot+stills.jpg
    பூவான பார்வைகள், குறும்பான வார்த்தைகள் எனத்தொடங்கும் பாட்டு செம ஹிட் அடிக்கப்போகும் மெலோடி. ஆனால் அந்தப்பாட்டுக்கான பிக்சரைஷேசனில் (PICTURAISATION) இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். டான்ஸ் மாஸ்டர் கூட சுமாராகத்தான் அந்த பாட்டுக்கு ஒர்க் பண்ணி இருக்கர்.அந்த பாடலில் அஞ்சலி மட்டும் அழகு தேவதையாக வர்றார்.

    வசனகர்த்தா நீங்கா இடம் பிடித்த இடங்கள்

    1.இந்த உலகத்துல எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் நாம எல்லாருமே ஒருநாள் சாகப்போறோம் என்பதுதான். தெரியாத விஷயம் எப்போங்கறதுதான். அது தெரிஞ்சிட்டா எவனும் நிம்மதியா வாழ முடியாது..

    ( சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழ்ற நாள் நரகமாயிடும் வசனத்தின் உல்டா)

    2. பொண்ணா இது ?பன்னு மாதிரி இருக்கு.. வேற பொண்ணு ஃபோட்டோ காட்டுங்க.

    இது?

    வயக்காட்டு சோளக்கொல்லை பொம்மைக்கு சேலை கட்டி விட்டாப்ல ஒல்லியா இருக்கே..?

    அது சரி.. இது ஐஸ்வர்யாராய் ஃபோட்டோ..இதையே குறை சொல்றே..

    3. நானும் உலக அளவுல  எத்தனையோ குடிகாரனுங்களைப்பார்த்திருக்கேன்.ஆனா சரக்கை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சறதை இப்போதான் பாக்கறேன்.

    4. இவங்க எல்லாம் யாருன்னு தெரியுமா?

    பெரிய கலெக்டரா?

    ம்ஹூம்,என் நண்பன்,தோழன்.சிநேகிதன்..

    மூணும் ஒண்ணுதாண்டா மூதேவி..

    5.சரக்கடிக்கப்போறப்ப பாக்கெட்டை காலி ஆக வெச்சிருக்கனும் இல்லைன்னா கண்ட கண்ட நாய்க்கெல்லாம் நாம செலவு பண்ண வேண்டியதா போயிடும்.

    6. கில்மாப்படத்துல சீன் போடறவன் கூட இவ்வளவு பில்டப் தர மாட்டான். நீ ஓவரா சீன் போடறே..

    7.பொண்ணுங்களை லவ் பண்ணாலே இப்படித்தான் புலம்ப விட்டுடுவாளுங்க..

    8.நாங்க ரொம்ப ராசியான ஆளுங்க.. அந்தப்பொண்ணு வயசுக்கு வந்தப்ப நாங்கதான் வந்து வேலை செஞ்சு குடுத்தோம்.. வளைகாப்புக்கும் நாங்கதான், அவ்வளவு ஏன் கருமாதிக்குக்கூட நாங்கதான் வந்தோம்.

    9.அவனுக்கு மனைவியா வரப்போறவ ரொம்ப குடுத்து வெச்சவளா இருக்கனும். ஃபிரண்டையே இவ்வளவு கவனமா பாத்துக்கறவன் கட்டிக்கப்போறவளை எவ்வளவு நல்லா பார்த்துக்குவான்?

    10  அப்பா.. இந்த 15 வருஷத்துல ஊரே மாறிடுச்சுப்பா...

    ஹூம்.. மனுஷங்களும் மாறி இருந்தா பரவால்ல..

    11. கலி யுகத்துல கடவுள் இல்ல. அப்படி இருந்தா இப்படி  நான் கஷ்டப்படறதைப்பார்த்து சும்மா இருப்பானா?

    நாம 140 கோடிப்பெர் இருக்கோம்.எல்லாத்தையும் ஒரே கடவுளால பாக்க முடியாது. எவன் ஒருத்தன் கஷ்டத்துல உதவி செய்யறானோ அவன் தான் கடவுள். ( தியேட்டரில் அப்ளாஸை அள்ளிய இடம்)

    12 . டேய்... டேய்.. அவளை என்னடா பண்றே..?

    புது ஹீரோயின் ரெடி பண்றேண்ணே..

    அவளையே ரெடி பண்ற மாதிரி இருக்கு..

    நண்பர்கள் கொலை வெறியுடன் ஹீரோவைத்தாக்க முயலும் சதி சீன்கள் எல்லாம் எடுபடவில்லை.நட்புக்கு அவமானம்.இந்த இடத்தில் இயக்குநர் சறுக்கி விட்டார். என்னதான் அதற்கான ட்விஸ்ட் இருந்தாலும் .....

    படம் ஏ செண்ட்டரில் ஓடறது கஷ்டம் தான். பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்.

    எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

    எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்





    http://www.icetamil.com/ta/images/stories/janelvn/tamil%20actress%20anjali%20hot.jpga
    டிஸ்கி - நேற்று நெட் பக்கம் வராதவங்களுக்காக


    யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்