Showing posts with label SHORT STORY. Show all posts
Showing posts with label SHORT STORY. Show all posts

Saturday, August 04, 2012

உஞ்சவிருத்தி - சுஜாதா - சிறுகதை

சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறா&ன பாச்சாவோ, யாரோ… அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள். தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.



‘‘நீ எப்ப வந்தே?’’ என்று கேட்டான் ரங்கு.



‘‘நேத்திக்குதான்.’’



‘‘கொஞ்ச நாள் இருப்பியா?’’



‘‘ஒரு மாசம் இருக்கலாம்னு ஆன்யுவல் லீவ்ல வந்திருக்கேன்.’’



‘‘நீ ஏர்ஃபோர்ஸ்லதான இருக்கே?’’



‘‘ஏர்போர்ட்ல.’’



‘‘ப்ளேன் எல்லாம் ஓட்டுவியாமே! பாகிஸ்தான் மேல நீதான் பாம் போட்டதா பேசிக்கிறா.’’



‘‘ரங்கா… பாரு, சரியா புரிஞ்சுக்கோ! நான் இருக்கறது ஏர்போர்ட். டெல்லில சப்தர்ஜங்னு பேரு > விமானநிலையம். நீ சொல்றது ஏர்ஃபோர்ஸ். அது ‘பாலம்’கிற இடத்தில் இருக்கு.’’



‘‘ரெண்டும் ஒண்ணுதான.’’




‘‘இல்…லை.’’



‘‘பின்ன… ஏர்ஃபோர்ஸ்ல யார் இருக்கா?’’



‘‘மேலச் சித்திரை வீதில ரங்காச்சாரிடா அது… அவன்கூட பைலட் இல்லை.’’



‘‘ஏர்ஃபோர்ஸ்னா எல்லாரும் பறக்க மாட்டாளோ?’’



‘‘மாட்டா!!’’



‘‘அப்ப நீ ஏர்ஃபோர்ஸ்ல இல்லை?’’



‘‘ஏர்போர்ட்… ஏர்போர்ட்!’’



‘‘பின்ன யாரோ, நீ ப்ளேன் ஓட்டறதா சொன்னாளே..?’’



‘‘அது சின்ன ப்ளேன். டிரெய்னிங் ப்ளேன்.’’



‘‘ஏர்போர்ட்ல பெரிய ப்ளேன்தான இருக்கும்! போட்டுக் குழப்பறாங்கப்பா!’’



நான் அவனுக்கு மேலும் விளக்கும் முயற்சியைக் கைவிட்டேன். ரங்குவின் உலகம் அவன் வீடு, கடை இரண்டை விட்டு வெளியே எதும் கிடையாது. உலகம் முழுக்க அவன் கடைக்கு அரட்டையடிக்க வரும். இவன் இடத்தைவிட்டு நகரமாட்டான். பெருமாளைக்கூட பங்குனி, சித்திரை உற்சவங்களில் கடையைக் கடந்து செல்லும்போதுதான் சேவிப்பான்.





அப்போது ஒரு கிழவனார் கையில் சொம்புடன், ஒரு சிறுவன் குச்சியைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல… ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்…’ என்று ஏறத்தாழ உளறலாகச் சொல்லிக்கொண்டு நட்ட நடுத் தெருவில் வந்துகொண்டிருந்தார். முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான வெண் தாடி. மார்பில் பூணூல். சவுக்கம். பத்தாறு வேஷ்டி.



‘‘ரங்கு, இது யாரு?’’



‘‘இவர் பேரு தேசிகாச்சாரி. ஜி.பி>னு ஐஸ்கூல்ல மேத் டீச்சர் இருக்காரே, அவரோட அப்பா.’’



‘‘ஆமாம். எதுக்கு சொம்பை கைல வெச்சுண்டு பிரபந்தம் சொல்லிண்டுபோறார்?’’



யாரோ அவர் சொம்பில் அரிசி போட்டுவிட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள்.



‘‘உஞ்சவிருத்தி.’’



‘‘புரியலை. ஜி.பி. இவரை வெச்சுக் காப்பாத்தலியா?’’



‘‘அதெல்லாம் இல்லை. பிடிவாதம்.’’



‘‘பணம் காசு இல்லையா? ஜி.பி. நிறையச் சம்பாதிக்கிறாரே!’’



‘‘இவருக்கே நிறைய சொத்து இருக்கு. சித்திரை வீதில ஜி.பி. இருக்கற வீடு இவர்துதான். மகேந்திர மங்கலத் தில் நெலம் எல்லாம் இருக்கு.’’



‘‘உஞ்சவிருத்தின்னா பிச்சை எடுக்கறதில்லையோ?!’’



‘‘ஆமாம். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ன்னு சொல்லலே… அவ்ளவுதான்!’’



‘‘புரியலை ரங்கு.’’



‘‘சில வேளைல பெரியவர்களுடைய பிடிவாதங்கள் புரியாது நமக்கு. இந்த பிராமணனுக்கு வீம்பு. போக்கடாத்தனம்.’’



ஜி.பி. என்னும் பார்த்தசாரதி செயலாக இருப்பவர். கணக்குப் பாடப் புத்தகம், நோட்ஸ் எல்லாம் போடுபவர். லட்சக்கணக்கில் விலை போகும்.

எஸ்.எஸ்.எல்.சி>க்கு ஒரு செக்ஷனுக்கு கிளாஸ் டீச்சர். ஹைஸ்கூலில் சீனியர் டீச்சர் என்று மதிக்கப்பட்ட ஆசிரியர். தேசிய விருது வாங்கியிருக்கிறார். அடுத்த ஹெட்மாஸ்டர் அவர்தான் என்று பேசிக்கொண்டார்கள். அவர் தந்தையார் பிச்சை எடுக்கிறார் என்றால்…



‘‘வேணும்னுட்டே, மகனை அவமானப்படுத்தறதுக்குன்னுட்டே..’’



‘‘கண்ணு வேற தெரியலை.’’



‘‘கண்ணெல்லாம் நன்னாத் தெரியறது. தன்மேல சிம்பதியை வரவழைச்சுக்க, கண் தெரியாத மாதிரி பாடசாலைப் பையனை வெச்சுண்டு குச்சியைப் பிடிச்சுண்டு போறார்.’’




‘‘என்ன ப்ராப்ளம் அவருக்கு?’’



‘‘வரார். கேட்டுப் பாரேன்.’’



இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அவரே கடைக்கு வந்து பெஞ்ச்சில் உட்கார்ந்தார். அவருடன் கொஞ்சம் ஈரம் காயாத வேஷ்டியின் நாற்றமும் வந்தது. எதையோ வாயிலே மென்றுகொண்டிருந்தார். கிட்டப் பார்க்கையில் ஆரோக்கிய மாகத்தான் இருந்தார். நல்ல மூங்கில் கம்பு. அதைப் பையன் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு நின்றுகொண்டிருக்க…




‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதா;ன? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’




‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’



‘‘ஜி.பிகிட்ட சொல்றதுதான?’’




‘‘அவனா? பொண்டாட்டிதாசன்..! தொச்சு, அது என்னடா சாக்லெட்டு?’’




‘‘பட்டை சாக்லெட் தாத்தா.’’



‘‘அது எனக்கு ஒண்ணு இவனுக்கு ஒண்ணு கொடு! ரங்கநாதா..!’’ என்று பெஞ்ச்சில் உட்கார்ந்து, ‘‘தீர்த்தம் இருக்குமா? என்ன வெயில்.. என்ன வெயில்!’’



ரங்கு சாக்லெட் எடுத்துத் தர, மடியிலிருந்து அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.



‘‘நீ யாரு… கோதை பேரன்தா;ன?’’ என்றார் என்னைப் பார்த்து.




‘‘ஆமாம் மாமா!’’



‘‘நீ ஏர்போர்ஸ்ல இருக்கியா?’’



‘‘ஏர்போர்ட்! மாமா, எதுக்காக இந்த வெயில்ல அலையறீங்க? வெயில் தாழ வீதிப் பிரதட்சணம் போகக்கூடாதா?’’



‘‘பாரு, வைஷ்ணவனா பொறந்தா பஞ்ச சம்ஸ்காரங்கள்னு அஞ்சு காரியங்கள் செய்யணும். அதான் ஐயங்கார். ஊர்த்வ புண்ட்ரம், சமாஸ்ரணம், திருவாராதனம், ஆசார்யன்கிட்ட உபதேசம் கேக்கறது, பரன்யாசம் வாங்கிண்டப்றம் உஞ்ச விருத்தி. பிச்சைபோடற அரிசியைத் தான் சாதம் வெச்சு சாப்பிடணும்!’’




‘‘மாமா, அதெல்லாம் வசதியில்லாத வாளுக்கு!’’



‘‘இல்லை. வைஷ்ணவனா பொறந்த எல்லாருக்கும். உனக்கு, எனக்கு… அந்த நாராயண&ன மகாபலிகிட்ட யாசகம் போனான்.’’



‘‘நீங்க இப்படித் தெருவில போறது அந்தக் கடமையை நிறைவேத்தறதுக் காகவா?’’



‘‘ஆமா, வேறென்ன..?’’



‘‘உங்க ஃபேமிலியில அவாளுக்கு சங்கடமா இருக்காதோ?’’



‘‘எதுக்குச் சங்கடப்படணும்? எதுக்குங்கறேன்?’’



‘‘இல்லை மாமா… உங்க சன் பெரிய கணக்கு வாத்தியார். ஹெட்மாஸ்டர் ஆகப் போறார். நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினவர்.’’



‘‘அதனால?’’



‘‘மத்தவாள்ளாம் என்ன நினைச்சுப்பா? தோப்பனாரை சரியா வெச்சுக்காம தெருவில யாசகம் பண்ண அனுப்பிச்சுட்டார் பாரு, இவர் என்ன வாத்தியார்னு தா&ன நினைச்சுப்பா?’’



‘‘நினைக்கத்தான் நினைச்சுப்பா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?’’



ரங்கு சில சமயம் பட்டென்று போட்டு உடைத்துவிடுவான்.



‘‘ஓய்… உமக்கு மாட்டுப் பெண்ணோட சண்டை. ஜி.பி. அவ பேச்சைக் கேட்டுக்கறார். அந்தக் கோபத்தைத்தான் நீங்க இப்படி அவரை அவமானப்படுத்திக் காட்டறீர்னு ஊர் உலகமெல்லாம் பேசிக்கிறது. உஞ்சவிருத்தி குஞ்ச விருத்தியெல்லாம் சால்ஜாப்பு!’’




‘‘சரி, அப்படியே பேசிக்கிறான்னா நீ என்ன செய்யணும்?’’



அவர் ‘நீ’ என்று அழைத்தது ரங்குவை அல்ல. அங்கு இல்லாத தன் மகன் ஜி.பி>யை. ‘‘நீ என்ன செய்திருக்கணும்? ‘அப்பா, நீங்க சொல்றதிலயும் நியாயம் இருக்கு. கொஞ்சம் தழைஞ்சு போங்கபபா. நானும் அவளைத் தூக்கி எறிஞ்சு பேசாம இருக்கச் சொல்றேன்’னு சமாதானமா போகலாம் இல்லையோ..? எப்ப பார்த்தாலும் ‘அவ சொல்றதுதான் ரைட்டு, அப்பா… வாயை மூடுங்கோ’னு அதட்டினா எனக்கு எப்படி இருக்கும்..?’’




‘‘தனியா இருந்து பாருமேன்.’’



‘‘அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன்.’’



‘‘இப்ப வீட்ல சாப்பிடறதில்லையா?’’



‘‘ரெண்டு தளிகை. எனக்கு உண்டான ஒரு மெந்தியக் குழம்பு, அப்பளத்தை நா;ன பண்ணிக்கறேன். ஒரு நெய் கிடையாது, கறமுது கிடையாது, தயிர் கிடையாது. மோர்தான். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கலையே ரங்கா! பேதியாறது. அவா என்னவோ சாப்ட்டுட்டுப் போகட்டும். எனக்கு?’’



‘‘பிள்ளை?’’



‘‘அவனோட பேசியே ஒரு மாசம் ஆச்சு, ஒரே ஆத்துல இருந்துண்டு.’’



‘‘இதெல்லாம் சரி, உஞ்சவிருத்தி எப்டி உடம்புக்கு ஆறது உமக்கு? ரேஷன் அரிசியும் புழுங்கரிசியும் கைக்குத்தலும் கலந்திருக்குமே?’’



‘‘ஏதோ ரங்கநாதன் கிருபையில கல்லையும் ஜீரணிக்கிறது இந்த வயிறு. ஓடிண்டிருக்கு வண்டி.. இன்னும் எத்தனை நாள்… பார்க்கலாம். நான் செத்துப் போ&னன்னா இந்தப் பாடசாலைப் பையன்தான் எனக்குக் கொள்ளி போடணும், கேட்டுக்கோ ரங்கு.’’



‘‘நீர் எங்கே செத்துப் போவீர்? இருக்கறவாளை சாகடிச்சுட்டுத் தான் போவீர். ஆயுசு கெட்டி உமக்கு!’’



அவர் மறுபடி வீதி பிரதட்சிணத் துக்குப் புறப்பட, ‘‘ஸ்ட்ரேஞ்ச்… வெரி ஸ்ட்ரேஞ்ச்’’ என்றேன்.



ஹைஸ்கூல் எப்படி நடக்கிறது என்று… என் கிளாஸ்மேட்தான் கரெஸ்பாண் டெண்டாக இருந்தான், அவனை விசாரிக்கப் போயிருந்தபோது ஜி.பி-யைச் சந்தித்தேன். பொதுவாக மேத்ஸில் மல்ட்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் வந்து தரமே போய்விட்டதாகச் சொன்னார். அவரேதான் ஆரம்பித்தார்…



‘‘அப்பாவைப் பாத்தியோ..?’’



‘‘பாத்தேன் சார்.’’



‘‘என்ன பிடிவாதம் பாத்தியா?’’



‘‘அவர் சொல்றதைப் பார்த்தா அவருக்குச் சோறு தண்ணி கூட சரியா கொடுக்கறதில்லைன்னு…’’



‘‘அப்படியா சொன்னார்? ஒரு நா எங்காத்துக்கு வந்து மாமியை சந்திச்சுக் கேட்டுப்பாரு. என் அப்பாதான்… இல்லேங் கலை. ஆனா, அவர் கார்த்தாலை எழுந்திருக்கற திலிருந்து பண்ற அட்ட காசம்… எனக்கு நாலும் பொண்ணு. நாலும் நன்னாப் படிக்கறதுகள். அதுகளைப் படிக்க விடாம சத்தமா பாராயணம் பண்ணிண்டு, எல்லா ரையும் கண்டார… வல்லாரன்னு திட்டிண்டு, கோமணத்தோட புழக்கடைல அலைஞ்சுண்டு…’’



‘‘தனி வீடு பாத்துக் கொடுத்துர்றதுதா;ன?’’




‘‘போகமாட்டேங்கறாரே! ‘என் வீடு, நான்தான் இருப்பேன்’கறார்!’’



‘‘சரி, நீங்க போய்டறதுதா;ன?’’



‘‘யோசிச்சிண்டிருக்கேன். வாடகை கொடுத்து மாளுமா?’’



‘‘அவர்கிட்ட பணம் இருக்கில்லே?’’



‘‘இருக்கு. என்ன வெச்சிருக்கார்னு காட்டமாட்டார். வக்கீலைக் கூப்ட்டு நாலு தடவை வில்லை மாத்தி மாத்தி எழுதிட் டார். சீரங்கம்னு ஒரு பேத்தி மேல கொஞ்சம் பிரியம். அதுங் கிட்ட எதோ சொல்லிண்டிருக்கார்… ‘உங்க யாருக்குமே நன்னி கிடையாது. தொச்சுக்குத்தான் எல்லாம்னு உங்கம்மா கிட்ட சொல்லிடு…’ ’’



‘‘தொச்சுங்கறது…’’



‘‘பாடசாலைப் பையன். அவரை கார்த் தால கம்பு பிடிச்சு அழைச்சுண்டு போறா&ன அவன். கேக்கறதுக்கு நன்னாவா இருக்கு? எதுக்குக் கிழத்துக்கு நான் சிசுருஷை பண்ண ணும்கறா என் ஆம்டையா! நான்தான் அவளை சமாதானப்படுத்தி வெக்கறேன்… ‘அப்படியெல் லாம் செய்ய மாட்டார். கோபத்தில ஏதோ சொல் றார்’னு. அவ சொல்றது நியாயம்தா;ன?’’




‘‘தான தளிப்பண்றதா…’’




‘‘அதெல்லாம் வெட்டிப்பேச்சு! ஆடிக் கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தளிப்பண்ற உள்ளை மாடு கன்னுபோட்ட எடம் மாதிரி பண்ணிட்டுப் போவார். என் அப்பாவா இருந்தாலும், இந்த மாதிரி ஒரு பிடிவாதம் புடிச்ச கிழவனை நான் பாத்ததில்லை. போய்த் தொலைஞ்சாலும் பரவாயில்லைன்னு சில சமயம் அவ்வளவு வெறுப்பேத்தறார்.’’



‘‘அவருக்கு என்ன வேணுமாம்? எதாவது மனசில குறை வெச்சுண்டு இருக்கலாம் ஒரு இன்சொல், ஒரு பரிவு… அல்லது, ‘தாத்தா எப்டி இருக்கே?’னு பேத்திகள் கேட்டாலே போறுமா இருக்கலாம். உங்க மனைவியும் ‘அப்பா, எப்டி இருக்கீங்க? கண்ணுக்கு மருந்து போடட்டுமா’னு எதாவது கேக்கலாம்.’’



‘‘அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. நீ வேணா சீதாகூட பேசிப்பாரு. நான் சொன்னது பாதிதான். அவ ஆங்கிள்ள பார்த்தா கதை ரொம்பக் கடுமையா இருக்கும். டெல்லிக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு தடவை சாப்பிட வா, எங்காத்துக்கு!’’




போயிருந்தேன். நான்கு பெண்கள் பதினைந்து, பதின்மூன்று, பத்து, எட்டு என்று அலைந்தன. எனக்கு முன்னால் ஸ்டூல் போட்டு தீர்த்தம் எல்லாம் பதவி சாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். எனக்காக மாமி ஜவ்வரிசிப் பாயசம் பண்ணியிருந்தாள். சமையல் எல்லாம் சூப்பராக இருந்தது.



நான் சென்றபோது, கிழவர் வாசல் திண்ணையில் காலை அகட்டி உட்கார்ந்து கொண்டு பனை விசிறியால் கீழே விசிறிக் கொண்டிருந்தார். நெற்றி சுருங்கி விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘‘இருக்கறவனுக்கு ஒரு வேப்பம்பூ சாத்துமது கிடையாது. வரவா போற வாளுக்கெல்லாம் பால்பாயசம். கேக் கறவா கிடையாது இந்தாத்துல’’ என்றார்.




‘‘வாங்களேன் மாமா… உங்காம்தான? வாங்கோ, பாயசம் சாப்டலாம்’’ என்றேன்.



‘‘இந்தாத்திலயா? ஒரு திருஸ்தம் கூட எடுத்துக்கமாட்டேன்.’’



வாத்தியார் ஜி.பி-யின் மனைவி வெளிப்படையாகப் பேசினாள். ‘‘எவ்வளவு தூரம் பொறுத்துக்கறது? ‘பொறுத்துப் போ’னு இவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் பள்ளிக் கூடம் போய்டறார். இருபத்துநாலு மணி நேரமும் இவர் கூட மல்லுக் கட்ட வேண்டியிருக்கு. ரெண்டு பொண் வயசுக்கு வந்துட்டா. அவா முன்னாலயே கோமணத்தை அவுத்துக் கட்டிக்கறேர். ரெங்கராஜுவை கூப்ட்டு திண்ணைல உக்காந்துண்டு சர்வாங்க க்ஷவரம் பண்ணிக்கறேர். சாக்லெட்டு, பப்பர்மிட்டுனு வாங்கி ஒளிச்சு வெச்சுக்கறேர். பாட சாலைப் பையன்களுக்குக் கொடுத்தாலும் கொடுப்பேர்… பேத்திகளுக்குக் கொடுக்க மாட்டேர். அதுகளைப் படிக்க வெக்கறதே அவருக்குப் பிடிக்கலை. என்னைக் கண்டா ஆகவே ஆகலை…’’




‘‘இதுக்கெல்லாம் ஆதாரமா ஒரு சம்பவம் அல்லது காரணம் இருக்கணும் மாமி.’’



‘‘இருக்கு. அதைச் சொல்லிட்டுத் தான் ரசாபாசமாய்டுத்து! எங்காத்தில எனக்கு நிறைய செஞ்சிருந்தா. அதை அவர் அலமாரில வெச்சுப் பூட்டியிருந்தார். மாமியார் போறவரைக்கும் அதை நான் பார்த்தேன். பண்டிகை நாளில் என்னை எடுத்துப் போட்டுக்கச் சொல்வா. மாமியார் தங்கமான மனுஷி. அவர் போனதும், இது எதோ தங்கை பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்துக் கொடுத் துடுத்து போல! பாலிஷ் போட்டு வெள்ளிப் பாத்திரத் தையெல்லாம் கொடுத்திருக் கேர். போனாப் போறது, சொல்லிருக்கலாமில்லையா? ரங்கநாதன் கிருபை இவரும் சம்பாதிக்கிறேர். ஒரே ஒரு தடவை எச்சுமிக்கு தோடு செஞ்சு போடலாம். ‘அப்பா, அம்மா என் நகையெல்லாம் எங்க வெச்சிருக்கா?’னு கேட்டதுக்கு, ‘‘நகையா… உன்னை எதிர்ஜாமீன் இல்லாம இலவசமா கல்யாணம் பண்ணிண்டோம். உங்காத்துல உனக்கு என்ன போட்டா? உங்கப்பன் ஏமாத்திட்டான்’னார்.




எனக்கே தெரியும்… எனக்கு எத்தனை கேஷா கொடுத்தா, வைர மோதரத்துக்கு, பட்டு வேஷ்டிக்குன்னு… எத்தனை நகை போட்டான்னுட்டு. அதை எடுத்துச் சொன்னப்ப எல்லாம் கவரிங்னார். ‘இதை அப்பவே சொல்லியிருக்கறதுதா&ன?’ன்&னன். இவ்வளவுதாம்பா கேட்டேன். அதிலேர்ந்து என் மேலயும் என் பெண்கள் மேலயும் வெறுப்புன்னா வெறுப்பு அப்படிப்பட்ட வெறுப்பு. நின்னா குத்தம்.. உக்காந்தா குத்தம்…

’’

இந்தச் சம்பாஷணை முழுவதும் அவருக்குக் கேட்டிருக்கவேண்டும்.



திண்ணையிலிருந்து சத்தம் போட்டார்… ‘‘எல்லாத்தையும் சொன்னியே, உன் நகை அத்தனையும் சப்ஜாடா நான் திருப்பித் தந்ததைச் சொன்னியா?’’



இவள் ‘‘மொத்தத்தில கால்பாகம் கூடத் திரும்ப வரலைப்பா. ரெட்டை வடம் சங்கிலி என்ன ஆச்சு, பச்சைக்கல் தோடு என்னாச்சு, பேசரி என்னாச்சு, ஒட்டியாணம், நாககொத்து என்ன ஆச்சு, வங்கி என்னாச்சு..?’’ என்றாள்.



‘‘பச்சைப்பொய். உங்களுக்கெல்லாம் என் கெட்ட குணம் மட்டும் தான் தெரியும். நல்ல குணம் எதும் கண்ணுக்கே தெரியாது.’’

இவள் சன்னமாக ‘‘நல்லது எதாவது இருந்தா சொல்லுங்கப்பா’’ எனறாள்.



நான் இந்தச் சண்டை ஓயாது என்று புறப்பட்டு வந்துவிட்டேன். என் சமாதான முயற்சிகள் அத்தோடு முடிந்தன.



அடுத்த வாரம், புறக்கடையில் பாசி வழுக்கி விழுந்துவிட்டார் கிழவர். தொடை எலும்பும் இடுப் பிலும் முறிந்துபோய் ஜி.பி. அவரை புத்தூருக்கு அழைத்துப் போக, அங்கே இன்னமும் சீரியஸாகி, அப்புறம் தில்லைநகரில் அவரை அட்மிட் பண்ணி, மாற்றி மாற்றி வாத்தியாரும் மாமியும் பதினைந்து தினம் அவருக்கு வேளா வேளைக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய்… ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நான் ஊருக்குக் கிளம்பும் முதல் நாள்தான் இறந்து போனார்.



இத்தனைப் பாடுபட்டதுக்கு ஜி.பி>க்கோ மனைவிக்கோ பேத்திகளுக்கோ எந்தவிதப் பயனும் இல்லை. சொத்து முழுவதையும் தொச்சு என்கிற துரைசாமியின் பேரில் எழுதி வைத்துவிட்டு, அவன் மேஜராகும் வரை > பதினெட்டு வயசு வரும் வரையில் வக்கீலை அந்தச் சொத்துக்கு கார்டியனாகப் போட்டு பதினெட்டாம் வயதில் அந்தச் சொத்து அவன் படிப்புக்கும் பராமரிப்புக்கும் போகவேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.



பாடி எடுக்குமுன் துக்கம் விசாரிக்க அவர் வீட்டுக்குப் போய் திண்ணையில் சற்று மௌனமாக உட்கார்ந்திருந்தேன். உள்ளே பேத்தி ஒருத்தி மட்டும் ‘தாத்தாஆஆஆ…’ என்று அழுது கொண்டிருந்தது. உஞ்ச விருத்திக்கு அழைத்துச் சென்ற பாடசாலைப் பையன் ‘‘மாமா, நாளைலருந்து வரவேண்டாமா? வேற எதாவது ஒத்தாசையா இருக் கே&ன!’’ என்றான். ‘‘இந்த ஆமே உன்னுதுரா’’ என்றார் ஜி.பி. விசும் பலுடன். அவனுக்குப் புரியவில்லை. மாமிக்கு ஆத்து ஆத்துப் போயிற்று. ‘‘என்ன பாவம் பண்ணோம்னு இந்தத் தண்டனை கொடுத் துட்டுப் போனார் கிழவனார். எங்கப் பாம்மா போட்ட நகை எங்கேனு கேட்டது ஒரு பெரிய தப்பா? அதுக்கு இத்தனை பெரிய தண்டனையா?’



ரங்கு ஜி.பி-யிடம் ‘‘ஓய்… இது பிதுரார்ஜித சொத்து. அதை எழுதி வெக்க கிழத்துக்கு உரிமையே கிடையாது. கிறுக்குப் புடிச்சாப்ல இப்படியெல்லாம் வில் எழுதினா கோர்ட்டில ஒத்துக்க மாட்டா. சண்டை போட்டு வாங்கிடலாம்.’’





ஜி.பி-தான் ‘‘ரங்கு, நமக்கு எது உண்டு, எது இல்லைன்னு தீர்மானிக்கிறதெல்லாம் ஸ்ரீரங்கநாதன்தான்’’ என்றார்.



அதன்பின் நான் அலகாபாத் போய்விட்டு கல்கத்தா, டெல்லி, அல்மோரா, பதான்கோட், கொலம்போ என்று சுற்றிவிட்டு ஆறு வருஷம் கழித்துதான் ஸ்ரீரங்கம் திரும்ப முடிந்தது. ரங்குவை முதல் காரியமாக விசாரித்தேன்… ‘‘ஜி.பி. வாத்தியார் என்ன ஆனார் ரங்கு?’’



‘‘ஏன் கேக்கறே… ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டேர். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தேர். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டேர். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டேர். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போ



றேன்னு காலை ஓடிச்சுண்டேர். மனசொடிஞ்சு போய்ட்டேர். அப்றம்…’’ என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.

நான் சன்னமாக, ‘‘எதாவது விபரீதமா ரங்கு?’’ என்றேன்.



‘‘அதை ஏன் கேக்கறே… கடைசியா ரங்கநாதன் கண்ணைத் திறந்துட்டார்.



‘‘எப்படி?’’



‘‘மூத்த பொண்ணு எச்சுமி இருக்கு பாரு, தொச்சுவைக் கல்யாணம் பண்ணிண்டு டுத்து. எல்லாம் சரியாப் போய்டுத்து. உஞ்சவிருத்தி தேசிகாச்சாரி சொத்து மறுபடி ஃபேமிலிக்கே வந்துடுத்து!’’



‘‘அந்தப் பையன் அதிகம் படிச்சிருந் தானா?’’


‘‘எட்டாம் கிளாஸ்க்கு மேல படிப்பு ஏறலை…’’



‘‘இந்தப் பொண்ணு?’’


‘‘எம்.சி.ஏ.’’


நான் வியப்புடன் ‘‘எப்படிக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது அந்தப் பொண்ணு… ஃபேமலிக்காக தியாகமா?’’


‘‘அதெல்லாம் இல்லை, காதல்!’’ என்றான் ரங்கு.

நன்றி - அமரர் சுஜாதா , உயிர் மெய் , சிறுகதைகள்

Wednesday, August 01, 2012

சுல்தான், நீ எங்கே இருக்கிறாய்? - சுஜாதா - சிறுகதை

அந்த நாள் என் சந்தோஷ நாள். எனக்கு வேலை கிடைத்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்திருந்தது. அதை மாலதியிடம் காண்பிக்கச் சென்றபோது, அவள் ஊருக்குக் கிளம்பத் தயாராக நான்கு அவசர சாரிகளைப் பெட்டிக்குள் அடைத்துக்கொண்டு இருந்தாள்.



”மாலதி! எனக்கு வேலை கிடைத்துவிட்டது!”



மாலதி மற்றொரு சாரியைக் கசக்கி அடைத்தாள். அவள் முகம் என்னவோ போல் இருந்தது. ”ஏன் மாலதி என்னவோ போல் இருக்கிறாய்?”



மாலதி என்னை வெறித்துப் பார்த்தாள். ”நான் இனி இந்த வீட்டில் ஒரு கணம் தாமதிக்கப்போவதில்லை. சொந்த அப்பாவாக இருந்தால் என்ன, திஸ் இஸ் தி லிமிட்! நான் போகிறேன்!”



”இரு, இரு எங்கே போகிறாய்?”



”எங்கேயாவது!” அவள் கண்களில் நீர் ததும்பியது.



”ஆ, கம் ஆன்! அவசரப்படாதே. என்ன நடந்துவிட்டது? அப்பா ஸ்டார் டஸ்ட்’டை நிறுத்திவிட்டாரா! மாலதி நீ போய்விட்டால் டாக்டர் அவர்களைப் பார்த்துக்கொள்வது யார்? ஒரே ஓர் அப்பா இல்லையா?”



”பார்த்துக்கொள்வதற்கு ஆள் கிடைத்துவிட்டான். மாடிக்குப் போய்ப் பார்! உனக்குப் போட்டியாக மற்றொரு சிநேகிதன் வந்திருக்கிறான். சுல்தான்!



எனக்குத் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் புரியவில்லை. சுல்தான்… இந்தப் பெயரை எங்கோ பார்த்திருக்கிறேனே? சே, அப்படி இருக்காது. எனக்குப் போட்டியாக ஒரு சுல்தானா?





மூன்று தாவலில் மாடி ஏறினேன். கதவு சாத்தி இருந்தது. டாக்டரின் குரல் கேட்டது. ”அப் சுல்தான், அப்! அப்படி சுல்தான், அப்படி அப்!”



புரியவில்லை. கதவைத் தட்டினேன். ”கம் இன். கதவு தாளிடப்படவில்லை. ஆ பையா! எங்கே வந்தாய்..?”



அறையில் டாக்டர் மட்டும் தான் இருந்தார்.

”டாக்டர், முப்பத்தைந்து செகண்டுகளுக்கு முன் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

”ஓ. சுல்தானை நீ இன்னும் சந்திக்கவில்லை அல்லவா?அதோ பார்!”

டாக்டர் குறிப்பிட்ட திக்கில் அறையின் வடமேற்கு மூலையின் மேலே, வெண்டிலேட்டர் என்னும் காற்று ஜன்னலில் தொற்றிக் கொண்டிருந்த சுல்தானை முதல் தடவையாகப் பார்த்தேன்.

சுல்தான் சுமார் மூன்றடி உயரமுள்ள ‘சிம்பன்ஸி’ ரகக் குரங்கு. உடல் முழுவதும் கருகரு என்று கேசம். நீளநீள விரல்கள். முகத் தில் முக்கால் பாகத்தை அடைத் துக்கொண்டு பற்கள்.

மேற்படி பற்கள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டுஇருந்தன. அந்த சினிமாஸ்கோப் சிரிப்பைச் சிரிப்பு என்கிற ரகத்தில்தான் சேர்க்க வேண்டும். பளீர் என்று வெண் பற்கள். ஒவ்வொன்றும் நாற்பது வாட்.

”சுல்தான், கீழே வா!” என்றார் டாக்டர், அது உடனே ரப்பராகத் தாவி, ஒரு கோட் ஸ்டாண்டு, ஒரு சோபாவின் விளிம்பு இவை மூலமாக எங்கள் அருகில் வந்து நின்றது. பக்கத்தில் பார்க்க இன்னும் மொசமொசவென்று அசிங்கமாக இருந்தது. ”டாக்டர், நான் போய்விட்டுச் சாவகாசமாக வருகிறேன். உங்களுக்கு எவ் வளவோ வேலை இருக்கும்.”



”பயப்படாதே. சுல்தான் ஒன்றும் செய்ய மாட்டான். சுல்தான். இது என் ஃப்ரெண்ட்! ஃப்ரெண்ட்! மாமாவுக்கு ஷேக்ஹாண்ட் கொடு.”



சொரசொர என்று ஒரு கரம் என் கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு, ஒரு சலாம் போட்டது. ‘ஹலோ’ என்றேன். சுல்தான் என் பையிலிருந்து பேனாவை எடுத்துக்கொண்டுவிட்டது.



”டாக்டர், என் பேனாவைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள்.”



”எப்படி! ஏறக்குறைய மனுஷாள் மாதிரியே பண்ணுகிறது பார்!”



டாக்டர், என்ன இது, குரங்கை வைத்துக்கொண்டு கூத்து! எங்கே பிடித்தீர்கள் இக் குரங்கை? எதற்காக? ஐயோ, என் பேனாவைக் கடிக்கிறதே! டேய், குடுத்துடுடா.”



”பையா, ஒரே ஒரு வார்னிங். அதை டேய் கீய் என்று மரியாதை இல்லாமல் பேசாதே. சில வேளை கோபம் வந்துவிடும்!” டாக்டர் குரங்கின் தலையை வருடிக்கொண்டே தொடர்ந்தார். ”சர்க்கஸில் வாங்கினேன். நொடித்துப்போன சர்ககஸ் கம்பெனி. இதற்குப் பட்டாணி போடக்கூடக் காசில்லை. பையா, டாக்டர் க்யூலரின் ஆராய்ச்சிகளைப் பற்றிப் படித்திருக்கிறாயா?”



”டாக்டர், நான் கடைசியில் படித்தது ‘நீச்சலடி சுந்தரி’ என்கிற மர்ம நாவல். குமாரி ஜெயபுஷ்பா எழுதியது.”



”டாக்டர் க்யூலர், ‘தி மெண்டாலிட்டி ஆஃப் ஏப்ஸ்’ என்று அருமையான புத்தகம் எழுதி இருக்கிறார்.”



”டாக்டர்! மாலதி ரொம்ப கோபத்தில் இருக்கிறாள். என்ன நடந்தது?”



”நான் அவளிடம் சுல்தானை வாங்கி வந்ததைப் பற்றிச் சொல்லவில்லை. அவள் டிரெஸ் பண்ணிக்கொண்டிருந்தபோது உள்ளே எட்டிப் பார்த்துவிட்டான். கொஞ்சம் குழப்பம். அதிருக்கட்டும், குரங்குகளை வைத்துக்கொண்டு க்யூலர் நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார்.”



”மாலதி ஊருக்குக் கிளம்பிக்கொண்டு இருக்கிறாள்!”



”எங்கேயும் தனியாகப் போக அவளுக்குத் தைரியம் கிடையாது. நாயர் கடை வரை போய்த் திரும்பிவிடுவாள். அவளுக்கு என்னை விட்டுவிட்டு இருக்க முடியாது… க்யூலர் கெஸ்டால்ட்டின் சைக்காலஜியை நிரூபிப்பதற்கு குரங்குகளுக்குச் சில புத்திசாலித்தனமான காரியங்களைக் கற்றுக்கொடுத்தார்… உதாரணத்துக்கு இதோ பார். கம் சுல்தான்…”



எனக்கு கெஸ்ட்டால்டின் மனோதத்துவத்தில் ஈடுபாடு அதிகம் இல்லை என்று சொன்னதைப் பொருட்படுத்தாமல் டாக்டர் அவர்கள் அறையின் மூலையில் இருந்த கூண்டுக்குள் சுல்தானை அழைத்துச் சென்றார். அதைக் கூண்டுக்குள் அடைத்துப் பூட்டினார். சுல்தான் உள்ளே திருதண்டி சந்நியாசி மாதிரி குதித்தது. டாக்டர் அலமாரிக்குச் சென்று ஒரு நீளமான பச்சைநாடன் வாழைப் பழத்தை எடுத்துக் கூண்டின் அருகில் கொண்டுவந்து சுமார் எட்டு அடி தள்ளி வைத்தார். இரண்டு சிறிய மூங்கில் குச்சிகளைக் கூண்டுக்குள் சுல்தானிடம் கொடுத்தார்.

”பையா, வேடிக்கையைப் பார்!”



சுல்தான் முதலில் தன் உடம்பை ஹடயோகியைப் போல நீளமாக இழுத்து வாழைப்பழத்தை எட்டப் பார்த்தது. முடியவில்லை. ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அதனால் வாழைப்பழத்தை எட்டப் பார்த்தது. குச்சி நீளம் போதவில்லை. சுல்தான் மற்றொரு குச்சியை வைத்து முயன்று பார்த்தது. ம்ஹூம். அதுவும் நீளம் போதவில்லை.



இரண்டு குச்சிகளையும் கீழே போட்டுவிட்டுச் சற்று நேரம் கூண்டுக்குள் பின்கை கட்டிக்கொண்டு எலெக்ஷனில் தோற்றவன் போல உலாத்தியது. திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல ஒரு மூங்கிலை எடுத்தது. அதன் நுனியில் கடித்து நீளவாக்கில் கொஞ்சம் பிளாச்சாய்ப் பிளந்துகொண்டது. அந்தப் பிளவில் மற்றொரு குச்சியைச் சொருகிக்கொண்டது. அப்போது நீளம் போதுமானதாக இருந்தது. லாகவமாக வாழைப் பழத்தைக் குச்சியால் தன்பால் நகர்த்தி எடுத்துக்கொண்டுவிட்டது.



”பார்த்தாயா!”



”ரிமார்க்கபிள் டாக்டர். சுல்தான். நீ ஒரு ஜீனியஸ்!”


”ஜீனியஸ் அவனில்லை. கற்றுக் கொடுத்த நான்!”



”இன்னும் என்னவெல்லாம் செய்யும்? மோர்சிங் வாசிக்குமா?”


”பொறு, இதுவரை க்யூலரின் ஆராய்ச்சியின்படிதான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இனிதான் டாக்டர் ராகவானந்தம் வருகிறார்.”



டாக்டர் அலமாரிக்குச் சென்று சிறிய பட்டாணி அளவில் இரண்டு சமாசாரங்களை எடுத்துவந்து எனக்குக் காட்டினார். ”இது என்ன தெரியுமா? மெர்க்குரி செல் பேட்டரி. இது ஒரு சின்ன எலெக்ட்ரானிக் சர்க்யூட். பேட்டரியிலிருந்து சக்தி கொடுத்தால் இதிலிருந்து சின்னச் சின்ன அலைகள், மின் துடிப்புகள் கிடைக்கும். இந்த இரண்டையும் இணைத்துச் சுல்தானின் தலையில் ஆக்ஸிபிட்டல் பாகத்தில் பொருத்தப்போகிறேன். சுல்தானின் மூளைக்குச் சிறிய மின் அதிர்வுகள் கிடைக்கும்போது நடக்கப்போவது என்ன தெரியுமா…? நீ மைக்கல் க்ரைடனின் டெர்மினல் மான் படித்தாயா?”



”டாக்டர், நான் சமீபத்தில் படித்தது நீச்சலடி…”



”நிகழப்போவது மனித சரித்திரத்தில் ஒரு மைல் கல். சுல்தானுக்கு அறிவு கிடைக்கப்போகிறது. சுல்தான் இப்போது இருப்பதைவிடப் பதின்மடங்கு அறிவு பெறப்போகிறான்.”



”டாக்டர், ஏற்கெனவே என் பேனாவைக் கடித்து உண்டு இல்லை என்று பண்ணிவிட்டது. குரங்குக்கு எதற்கு அறிவு கொடுக்க வேண்டும்?”



”இதில் ஒரு சிக்கல்.”



”நல்ல வேளை.”



”தன் தலையில் இந்தக் கருவியைப் பொருத்த விட மாட்டேன் என்கிறான் சுல்தான். என் ஒருத்தனால் சமாளிக்க முடியவில்லை.”



”எனவே…”



”நீ கொஞ்சம் ஒத்தாசை செய்தால் காரியம் நிறைவேறும்.”



”நோ நோ நோ. டாக்டர், எனக்குக் குரங்குகளிடம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. எங்கேயாவது பிடுங்கிவைத்தால்… சே சே! பல் ஒவ்வொன்றும் எவ்வளவு தீர்க்கமாக வளர்ந்திருக்கிறது பாருங்கள்.”



”பையா, உதவி செய்யமாட்டாயா?”



”இல்லை டாக்டர். நான் உங்களுக்கு எவ்வளவோ உதவியிருக்கிறேன். ஆனால், குரங்கு வேலை வேண்டாம். என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் முடியாது!”



”அப்படியா?”



”ஆம். டாக்டர்.”



”முடியாதா?”



”ம்ஹூம். முடியாது.”



”சுல்தான்!” என்றார் டாக்டர். சுல்தான் நிமிர்ந்தது.



”ஷகூலா ஜாகராண்டா!”



”என்ன டாக்டர் அது. குரங்கு பாஷையா… ஹ…ஹ….” என் சிரிப்பு உறைந்தது. சுல்தான் தன் பற்களை ஆர்மோனியக் கட்டைகள் போல் விரித்து என் எதிரில் வந்து நின்றது. ஒரு தடவை எம்பிக் குதித்தது. ஒரு தடவை பாதி உட்கார்ந்து நிமிர்ந்தது. படபட என்று தன் தொடைகளில் தாராசிங் போலத் தட்டிக் கொண்டது.



”டாக்டர், எனக்குப் பயமாக இருக்கிறதே, என்ன செய்யப் போகிறது.”


சுல்தான் லபக் என்று என் தலைமேல் ஏறி டென்னிஸ் ரெஃபரி போல உட்கார்ந்துகொண்டது.


”டாக்டர், திஸ் இஸ் பிளாக் மெயில். என்ன இது! இறங்கச் சொல்லுங்கள்.” நான் தலையை அசைக்காமல் கரகம் ஆடுபவன் போல் இரண்டு கைகளையும் நீட்டி பேலன்ஸ் பண்ண வேண்டியிருந்தது. ”டாக்டர், ப்ளீஸ்!”


அவர் சும்மா இருந்தார்.



”டாக்டர், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். எத்தனை குரங்குகளை வேண்டுமானாலும் பிடித்துக்கொள்கிறேன். இதை இறங்கச் சொல்லுங்கள்!”

”தட்ஸ் த பாய்! சுல்தான், இறங்கு!”

இறங்கிவிட்டது.

”நீ பிடித்துக்கொள்ள வேண்டாம். நான் பிடித்துக்கொள்கிறேன். நீ தலையில் பேண்டேஜ் போல் இந்த சாதனத்தைக் கட்டிவிட வேண்டும். அவ்வளவுதான்.’



”செய்கிறேன் டாக்டர்.” டாக்டர் அவர்கள் சுல்தானைப் பிடித்துக்கொள்ள அந்த இரண்டு சாதனங்களையும் பதித்து பேண்டேஜ் போல என்னைத் தலையில் இறுக்கக் கட்டச் சொன்னார். சுல்தான் தன் பற்களை விரித்து என்னைப் பார்த்த பார்வையில். ‘உன்னை அப்புறம் கவனித்துக்கொள்கிறேன்’ என்றது.



”இது சாதாரணமாகவே புத்திசாலிக் குரங்கு. இதற்கு மூளையில் ‘பல்ஸ்’ கொடுத்தால் இதைச் சமாளிப்பது சற்றுச் சிரமமாக இருக்கலாம். கூண்டுக்குள் அடைத்துவிடலாம்” என்று சுல்தானைக் கூண்டுக்குள் அடைத்துப் பூட்டிவிட்டார்.



”நீயும் குரங்கு வித்தையில் சேர்ந்துகொண்டுவிட்டாயா?” என்று குரல் கேட்டுத் திரும்ப… மாலதி.


”நீ ஊருக்குப் போகவில்லையா? நல்ல வேளை!” என்றேன்.


”டாக்ஸிக்கு அனுப்பியிருக்கிறேன்” என்றாள்.


”மாலதி. கேன்சல் பண்ணு உன் பயணத்தை. சுல்தானைக் கூண்டில் அடைத்தாகிவிட்டது. இதோ பார், இனி இதனால் உனக்கு ஓர் உபத்திரவமும் கிடையாது” என்றார் டாக்டர்.



”கூண்டில் அடைக்க வேண்டியது வேறு இரண்டு ஆசாமிகளை. எத்தனை நாழி டாக்ஸி கொண்டு வர!”



”மாலதி டார்லிங்! இனிமேல் சுல்தானைக் கூண்டுக்குள் வைத்துத்தான் கண்காணிப்பேன்.”



வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டது



”மாலதி, போகாதே!”



”இந்தக் குரங்கு இந்த வீட்டில் இருக்கும்வரை நான் இங்கே இருக்கப் போவதில்லை. காலையில் என்ன செய்தது தெரி யுமா?”

”சொன்னார்! அன்ஃபார்ச்சுனேட்” என்றேன்.


”மாலதி, டாக்டர் க்யூலர் என்ற ஜெர்மானியர்….” என்றார் டாக்டர்.



”பார்த்தாயா, ஆரம்பித்தாகிவிட்டது… டாட்டா!”



மாலதியின் பின்னே நானும் டாக்டரும் தொடர… அவள் வைராக்கியமாக இறங்கிக் கீழே வந்தாள். வாசலில் டாக்ஸி இல்லை. வேறு ஏதோ கார் சத்தம் கேட்டிருக்கிறது.



”மாலதி, இப்போதுகூட லேட் இல்லை. இனி உனக்கு எந்தத் தொந்தரவும் கிடையாது. சுல்தானுக்கு மனிதத் தன்மை கொடுத்துவிட்டேன். நாகரிகம் கொடுத்துவிட்டேன். அவன் இனி பாத்ரூமுக்குள் எல்லாம் எட்டிப் பார்க்க மாட்டான்.”



டாக்டர் அவர்கள் மேலே தொடர்வதற்குள் மாடியில் ‘டணாங்’ என்று சில்லறை இறைபடுவது போல் சத்தம் கேட்டது.



”டாக்டர், அது என்ன சத்தம்!”



”கண்ணாடி உடைந்திருக்கும்” என்றாள் மாலதி.



”இல்லையே. கூண்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுத்தானே வந்தோம்! பையா, வா பார்க்கலாம்.”

”நீங்கள் போய்ப் பாருங்கள். நான் மாலதியுடன் சற்று நே…. டாக்டர்!”

”என்ன?”



”என் அப்பாயின்மென்ட் லெட்டர்! என் வேலை! அதை மாடியில் வைத்துவிட்டேன்! கூண்டுக்கு அருகில் உள்ள மேஜையில்!”



”குரங்கு சாப்பிட்டிருக்கும். ஓடு” என்றாள் மாலதி. எனக்கு திகீர் என்றது. டாக்டருடன் மாடிக்கு நானும் ஓடினேன். அறைக்குள் நுழைந்தபோது…



அறை காலியாக இருந்தது. கூண்டு திறந்திருந்தது. மேஜை மேல் வைத்திருந்த என் அப்பாயின்மென்ட் லெட்டரைக் காணோம். சுல்தானையும் காணோம்!

”டாக்டர்! என் லெட்டர்!”

”பையா! என் குரங்கு!”



”எங்கே அந்த சுல்தான்?”



”சுல்தான்! எங்கே ஒளிந்துகொண்டு இருக்கிறாய்? வந்துவிடு! கண்ணல்லவா? பையா, என் ஆராய்ச்சி வெற்றி… வெற்றி! எப்படித் தப்பித்திருக்கிறது பார். அதற்கு அறிவு வந்துவிட்டது. மேஜை மேல் வைத்திருந்த சாவியைக் குச்சியால் தள்ளி எடுத்துப் பூட்டைத் திறந்திருக்கிறது. குரங்கு… பூட்டைச் சாவி போட்டுத் திறந்திருக்கிறது… வெற்றி!”



”டாக்டர், என் லெட்டரை ஏன் அது எடுக்க வேண்டும்? எங்கே அந்தத சுல்தான்!”



அதற்குப் பதில் போல கீழே வீல் என்று ஐயாயிரம் சைக்கிள் அலறல் கேட்டது. மாலதி! அங்கே விரைந்தோம். ”என்ன மாலதி? என்ன ஆச்சு!”



”குரங்கு…” என்றாள். அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. பயம் தொண்டையை அடைத்தது. அதே சமயம் பின்கட்டிலிருந்த டாக்டர் வீட்டுச் சமையற்காரர் அரை டிராயர் அணிந்துகொண்டு பிரசன்னமானார். ”சார்! டாக்டர் சார்! இனி ஒரு நிமிஷம் இந்தப் பைத்தியக்கார வீட்டில் காரியம் செய்ய மாட்டேன். குரங்கு வளர்க்கலாம். ஆனா, இவ்வளவு செல்லம் கொடுக்கக் கூடாது. நேரா சமையல் அறைக்கு வந்து என் வேஷ்டியையும் துண்டையும் உருவிக்கொண்டுபோய்விட்டது. சே!”



”கையில் ஒரு காகிதம் வைத்திருந்ததா? ரிஜிஸ்டர்டு லெட்டர்?” என்றேன்.

”அது என்ன இழவோ. எனக்குத் தெரியாது. மாலதி அம்மா இந்த நிமிடமே என் கணக்கைத் தீர்த்துவிடுங்கள்.”


”வேஷ்டியையா உருவிற்று? உருவக் கூடாதே!” என்றார் டாக்டர்.



”இன்னும் கொஞ்சம் நாழி இருந்தா டிராயரையும் உருவி இருக்கும்.”



”பையா, விபரீதம். அதன் தலையில் இருக்கும் சாதனத்தை எடுத்துவிடக்கூடும் இல்லையா?”





”மாலதி, நீ சுல்தானைப் பார்த்தாயா?”

”திடுதிடுவென்று நடு ஹாலில் குறுக்கே நொண்டி ப்ளே விளையாடுகிற மாதிரி ஓடியது. அவ்வளவுதான் தெரியும் எனக்கு.”

”எந்தப் பக்கம் போச்சு?”

”வாசல் பக்கம்.”

”போச்சுடா!”

”பையா, வா! சுல்தானைப் பிடித்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் ஆபத்து.”

நானும் டாக்டரும் வெளி

யே வந்தோம். தெரு அமைதியாக இருந்தது. நாங்கள் மேலும் கீழும் பார்த்தோம். எலெக்ட்ரிக் கம்பங்களைப் பார்த்தோம். மரங்களைக் கூர்ந்து பார்த்தோம். சுல்தான் சுல்தான் என்று செல்லமாகக் கூப்பிட்டுப் பார்த்தோம். ம்ஹூம்!

”டாக்டர், அதோ பாருங்கள்…”



சாலை நடுவே குரங்கின் காலடிகள் மாதிரி தெரிந்தது. அருகே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை தெரிந்தது. கடைக்காரரிடம் சென்று, ”ஐயா, இந்தப் பக்கம் ஒரு கறுங்குரங்கு போயிற்றா?” என்று கேட்டேன். அந்த ஆள் என்னை ஒருவிதமாகப் பார்த்தார். அதே சமயம், எதிர் வீட்டிலிருந்து ஒரு நனைந்த ஆசாமி ஓடி வந்தார். ”மாணிக்கம், சட்டுனு ஒரு சோடா உடை! எனக்குப் படபப்பாக இருக்கிறது” என்றார்.



”என்ன ஆச்சு சார்?”



”கொஞ்ச நாளாகவே எனக்கு தத்துபித்து என்று கனா. ஆனா, சொன்னா நம்ப மாட்டே. பகல்ல முழிச்சுட்டு இருக்கிறபோது எனக்குக் கனா வருகிறது! தலையிலே முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு ஆப்பிரிக்க தேசத்துக் குரங்கு பாத் ரூம் வழியா எட்டிப் பார்த்து ஒரு பேப்பரை ஆட்டறாப்பலே! சோடா.”

”சார்! அந்த பேப்பர் என் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் சார். எங்கே அந்தக் குரங்கு?”

”அப்ப குரங்கு நிஜமா?”

”ஆம்!”

”அப்ப வீட்டுக்குள்ளே இருக்கு! குரங்கு உங்களுதா! அறிவுகெட்ட பசங்களா! என்னடா இது அக்கிரமம்? முண்டாசைக் கட்டிவிட்டுக் குரங்கை உள்ளுக்குள்ளேவிட்டு வேடிக்கை பார்க்கறீங்களா? எனக்கு சப்த நாடியும் அடங்கிப் போச்சு!”



”சார், இதை அப்புறம் சாவகாசமாக உங்களுக்குச் சொல்கிறேன். இப்ப அந்தக் குரங்கை முதலில் பிடிக்க வேண்டும். பையா! வா போகலாம்” என்று டாக்டர் கடையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை முறித்துக்கொள்ள இருவரும் அந்த வீட்டில் நுழைந்தோம்.



இக்கட்டாக இருந்த அந்த வீட்டில் ஸ்தம்பித்த ஒண்டுக் குடித்தனக்காரர்களைக் கடந்து, குறிப்பிட்ட பாத் ரூமெல்லாம் தேடி… அறை அறையாகத் தேடி (‘கார்ப் பரேஷன்காரர்களோ?’) பின்கட்டுக்குச் சென்றோம்.



சுல்தான் சாதுவாகச் சப்பணம் கட்டிக்கொண்டு ஒரு வயதான பாட்டிக்கு எதிரே உட்கார்ந்திருந்தது. அந்த மாது கண்களை இடுக்கி அதை உற்றுப் பார்த்து, ”யாரப்பா நீ நம்ம கிஷ்ணசாமி புள்ளையாட்டம் இருக்கே?” என்றுகேட்டுக் கொண்டிருந்தாள்.

`நான் ரகசியமாக, பைய, பின்னால் இருந்து அணுக முயற்சிக்க, சுல்தான் எங்க ளைப் பார்த்துவிட்டது. உடனே உயரமான பின்புறச் சுவரின் மேல் ஏறிக்கொண்டது.



”சுல்தான், நான் சொல்வதைக் கேள். வந்துவிடு!” என்றார் டாக்டர். ”சுல்தான், என் பேப்பரைக் கொடு!” என்றேன் நான். ”ஏன் சார், அந்தக் குரங்கு பேசுமா?” என்றது ஒரு குரல். ”கொசுவலை கொண்டுவரேன். அதைப் போட்டுப் பிடித்துவிடலாம்” என்றது மற்றொரு குரல். நான் ஓட்டுப் பக்கம் ஏறி, மெதுவாக மறுபடி சுல் தானைப் பின்புறம் அணுகி… அணுகி… அணுகிவிட்டேன். பிடித்துவிட்… ம்ஹூம். தப்பித்து அந்தப் பக்கம் குதித்துவிட்டது.



”பையா, சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறது! அந்தப் பக்கம் என்ன இருக்கிறது?”



”சின்ன சந்து, டாக்டர்.”

”சந்தின் முடிவில்?”

”தட்டி போட்டு அடைத்திருக்கிறது.”

”சார், அந்தத் தட்டிக் கதவைத் திறக்கிறீர்களா?” சந்தில் மடக்கி விடலாம். பையா, குரங்கு தெரிகிறதா?”

”தெரிகிறது, பத்தடி தூரத்தில் ராஸ்கல் நின்றுகொண்டிருக்கிறது.”



நானும் டாக்டரும் மெதுவாக நடந்தோம். எங்களுக்குப் பத்தடி முன்னாலேயே சுல்தான் நடந்தது.



”சுல்தான், கண்ணே! நில்லடா!” என்றார் டாக்டர்.



சந்தின் இறுதியில் தட்டி அடைத்திருந்தது. அதன் மேல் முதுகை வைத்துக்கொண்டு நின்றது. நாங்கள் அருகே வருவதைப் பார்த்ததும் தட்டியைப் பிரித்துக்கொண்டு அந்தப் பக்கம் சென்றுவிட்டது.



நான் தட்டியைப் பிரித்து அந்தப் பக்கம் என்ன என்று பார்த்தேன். என் ரத்தம் உறைந்தது.



அந்தப் பக்கம் ஒரு பொதுக்கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. பேசுபவர்கள் எங்களுக்கு முது கைக் காட்டிக்கொண்டு இருக்க… எதிரே திரளான மக்கள் குந்தி உட்கார்ந்துகொண்டு ஆ என்று வாய் பிளந்து பேச்சாளரைக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

சுல்தான் முதலில் ஒரு மூலையில்தான் இருந்தது. யாரும் அதைக் கவனிக்கவில்லை. ஆனால், பக்கத்தில் ஒரு காவலர் இருந்தார். அவர் தொப்பி அருகில் இருந்தது.

”குமுறுகிறோம். கொதிக்கின்றோம். மக்களின் விருப்பத்தினையும் நலத்தினையும் சீரழிக்கும்…” பேச்சாளர்.

சுல்தான் அந்தத் தொப்பியை சைஸ் பார்த்துக்கொண்டு இருந்தது.

”….” ”…..” என்று டாக்டர் சன்னமாகக் கூப்பிட்டார் சந்தினூடே! போலீஸ்காரர் கால் மாற்றிக் கால் போட்டு உட்கார்ந்துகொண்டார். சுல்தான் அவரை நிமிர்ந்து பார்த்தது.

”மத்திய அரசைக் கேட்கின்றோம்!” என்றார் பேச்சாளர். ”உங்களுக்கு விருப்பமிருந்தால் வந்து எங்கள் அரியணையில் உட்கார்ந்து பாருங்கள். அது அரியணையல்ல… முள்!”

சுல்தான் அந்தக் காலி நாற்காலியில் போய் உட்கார்ந்துகொண்டது. மக்கள் பேச்சாளரின் உதடுகளிலேயே கவனமாக இருந்தார்கள்.



”சுல்தான்!” என்று எட்டு பாயின்ட் எழுத்துக்களில் அதட்டிப் பார்த்தார் டாக்டர்.



”வண்ணாரப்பேட்டை அறுபத்து மூன்றாவது வட்டம் கிளை சார்பாகத் தலைவர் அவர்களுக்கு மலர் மாலை” என்று சுல்தானுக்கு ஒரு மாலை போடப்பட்டது.



அப்புறம் அங்கே நிகழ்ந்ததை விவரிப்பது சற்றுச் சிரமமாக இருக்கிறது.



”டேய், குரங்குடா!” என்றது ஒரு குரல். அப்புறம் ஒரு சலசலப்பு!


”எதிர்க்கட்சிக்காரன் வேலைடா!”


”தொப்பி மாட்டிக்கிட்டிருக்குடா!”


டணாங் என்று ஒரு கோலி சோடா பாட்டில் மேடை நோக்கி விரைந்தது. அதைப் பிடித்து சுல்தான் திரும்ப எறிய, ‘அமைதி அமைதி’ என்று ஒலிபெருக்கி அலற, அந்தக் கூட்டம் கலைந்த தேனீக்கூடு போல் ஆகிவிட, தக்காளிப் பழம், முட்டை, ஒற்றைச் செருப்புகள் எல்லாம் பிரயோகமாக…

”டாக்டர், வாருங்கள்! பின்பக்கமாகவே ஓடிவிடலாம்” என்று நாங்கள் ஓட, எங்களுடனேயே சுல்தானும் ஓடி வர, ‘பிப்பீ’ என்று போலீஸ் விசில் சத்தம் கேட்க, என் தோளில் ஒரு முரட்டுக் கை பரவ…

மாஜிஸ்ட்ரேட் கனைத்துக்கொண்டார். ”கைதிகள் டாக்டர் ராகவானந்தம், முதுகுடுமிப் பெருவழுதி. இது அவர் சொந்தப் பெயரில்லை என்று நினைக்கிறேன். இருவரும் இ.பி.கோ.268 பப்ளிக் நியூசன்ஸ், உடன் இ.பி.கோ.289 இவ் விரு பிரிவுகளின்படி குற்றவாளிகளாக நிரூபிக் கப்பட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அப ராதம் செலுத்தத் தவறினால், இரண்டு மாதம் சிறைத் தண்டனை” என்று படித்தார்.



”டாக்டர், என்னிடம் சில்லறையாக இல்லையே?” என்றேன்.



”பையா, கவலைப்படாதே! யுவர் ஆனர்! அபராதத் தொகையைச் செலுத்தத் தயாராக இருக்கிறோம். மாலதி!” என்றார்.



சபையில் தலைமறைவாக இருந்த மாலதி ஓரமாக வந்து, ”அப்பா பேங்கில் மொத்தம் 550 ரூபாய்தான் இருந்தது” என்றாள்.



நான் திடுக்கிட்டேன். டாக்டர் தலையைச் சொறிந்து என்னை நோக்கினார். ”இப்ப என்ன செய்வது?”



”முதுகுடுமி ஜெயிலில் இருக்க வேண்டியதுதான்! க்யூலரின் அருமையான புத்தகம் கொண்டுவந்திருக்கிறேன். படித்தால் பொழுது போய்விடும். இரண்டு மாதம்தானே?” என்றாள் மாலதி.

சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு ரூ 12,500 பரிசு பெற்ற மங்கையர் மலர் சிறுகதை

http://4.bp.blogspot.com/-zvoKVi2n8cQ/TZDA7HGFmmI/AAAAAAAAGxc/spVJWU3tuks/s1600/p86.jpg 


தெளிவு!



கதை: ர.கிருஷ்ணவேணி



ஓவியம்: ஸ்யாம்





வங்கி சற்றே மூச்சுவிடும் மதிய நேரம். கலகலவென்று சாப்பாட்டு நேரம் நடந்து கொண்டிருந்தது. புளியோதரையும், புலாவும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.



இந்தா உஷா, உனக்காக புளி சாதமும், வெங்காய வத்தலும் கொண்டு வந்திருக்கேன்... சாப்பிடு."



அதென்ன உஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல்? இந்தப் பக்கம் கொஞ்சம் திருப்புங்க ராதா!"


உஷா உண்டாயிருக்கா. அதுக்காகக் கொண்டு வந்தேன். உனக்கென்ன வேண்டிக்கெடக்கு?"


நான் குண்டாயிருக்கேன். போதாதா?"



சிரிப்பு அலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. பேச்சு சினிமா, புடவை என்று திரும்பியது.


சாந்தா மேடம், உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு."


பியூனின் குரல் கேட்டு, வாயில் போட்ட தோசையை அவசரமாக விழுங்கி, தண்ணீரைக் குடித்தாள் சாந்தா.



‘யாராக இருக்கும்?’



ஹலோ, நான் திவ்யா பேசறேன்."



திவ்யா? சட்டென புரியவில்லை.



யாரு?"



போன ஞாயிற்றுக்கிழமை, என்னைப் பொண்ணுப் பாக்க வந்தீங்களே. அந்த திவ்யா தான்".



ஓ! ஆமாம். என் ஃப்ரெண்டோட பொண்ணு பேரும் திவ்யாதான். ஆனா, அவ கல்யாணமாகி அமெரிக்கா போயிட்டா. இந்த நேரத்துல கூப்பிட சான்ஸே இல்லை. அதான் யோசிச்சேன். சொல்லும்மா திவ்யா. என்ன விஷயம்?"



உங்களோட கொஞ்சம் பேசணும்."



சொல்லும்மா."



இல்ல, நேர்ல பாத்து பேசணும்."



பொண்ணுப் பாத்து, சம்மதம் சொல்லி, நிச்சயத்துக்கு நாள் குறிக்கும் நிலையில், பொண்ணு வருங்கால மாமியாரிடம் தனியாகப் பேச வேண்டுமென்றால், விஷயம் என்னவாக இருக்கும்? காதல்... திருமணம் செய்ய சம்மதம் இல்லை என்று ஏதாவது சொல்லப் போகிறாளோ?’



மைலாப்பூர் கற்பகாம்பாள் கோயிலுக்கு வாம்மா திவ்யா. நேர்ல பாக்கலாம்" சொல்லி ஃபோனை வைத்தாள் சாந்தா.



அம்மா, புதுப் பூமா. இரண்டு முழம் பத்து ரூபாதாம்மா." பூக்காரியின் குரலுக்கு மதிப்பு கொடுத்து, தேவையான பூவை வாங்கிக்கொண்டாள். திவ்யாவுக்கு என்று தனியாகக் கொஞ்சம் வாங்கினாள்.



மஞ்சள் நிற சுடிதாரில், பளிச்சென்று ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள் திவ்யா. வண்டியை நிறுத்த வேண்டிய இடம் பார்த்து நிறுத்திவிட்டு வந்தாள். பக்கத்திலிருந்த கடையில் அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டாள்.



என்னம்மா திவ்யா பொண்ணு, கோவில் பக்கம் பாத்து ரொம்ப நாளாச்சு?"



ஆமாம் கனகவள்ளியம்மா! வேலைக்குப் போறேன். நேரம் சரியாப் போயிடுது. உங்கப் பொண்ணு நல்லா படிக்குதா?"



படிக்குதும்மா."


நல்லா படிக்க வைங்க. எதுக்காகவும் படிப்ப நிறுத்திடாதீங்க. ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க."



சரி கண்ணு."


தங்கவேலு அண்ணன் எங்க காணோம்?"



இங்கதான் இருந்தாரு. டீ குடிக்க எங்கனா போயிருப்பாரு. உம் பேச்சுதான் அவருக்கு. நீதான ஆபரேஷன் பண்ண, தெரிஞ்சவங்க மூலம் ஏற்பாடு பண்ணி பிழைக்க வச்ச?"



வரும்போது அவரைப் பாக்கறேன். இருக்கச் சொல்லுங்க." பேசியவாறே சாந்தாவைப் பார்த்து அருகே வந்தாள்.




ரொம்ப நேரமாய் காத்துக்கிட்டு இருக்கீங்களா?"



இல்லம்மா. இப்பதான் வந்தேன். இந்தா, பூ வச்சுக்கோ."


உள்ளே போகலாமா?"




சென்றார்கள். அர்ச்சனை முடித்து, பிரசாதம் வாங்கி வெளியில் வந்தார்கள். ஒதுக்குப்புறமாக உட்கார்ந்தார்கள்.



சொல்லு திவ்யா! என்ன விஷயம்?" நேரடியாக வந்தாள் சாந்தா.


எங்கம்மா, உங்ககிட்ட எங்கக் குடும்பத்தைப் பத்தி என்ன சொல்லி இருக்காங்க?"



ஏன் இப்ப என்ன பிரச்னை திவ்யா?"



நீங்க முதல்ல சொல்லுங்க."



உங்கப்பா சின்ன வயசுல இறந்துபோயிட்டாரு! நீ ஒரே பொண்ணு. வேற யாரும் உறவுக்காரங்க இல்லைன்னு சொன்னாங்க."




எங்கப்பா சாகலை. உயிரோடதான் இருக்காரு."



உங்கம்மா வெத்து நெத்தியோட, கழுத்தில தாலி இல்லாம இருக்காங்களே!"




அது, எங்கப்பா செஞ்ச தப்புக்கு, எங்கம்மா தனக்குத் தானே கொடுத்துக்கிட்ட தண்டனை." திவ்யா மேலே பேசிக் கொண்டே போனாள்.



பொறுப்பில்லாத கணவனுக்கு வாழ்க்கைப்பட்டும், பொறுமை காத்தாள் என் அம்மா. காலம் போனால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பினாள். ஆனால், வேறொரு பெண்ணைத் தேடி, அவளை, தான் இருக்குமிடத்துக்கே அழைத்து வந்தபோது தாங்க முடியாதவளாய் தட்டிக் கேட்டவளை எட்டி உதைத்தான் கணவன்.




அவ இங்கதான் இருப்பா. என்ன செய்வ?" திமிராகக் கேட்டான்.



கணவன் கட்டிய தாலியைக் கழற்றி, அவன் கையிலே தந்தாள். என்னைப் பொறுத்தவரை, இன்னிக்கே நீ செத்துட்ட; கட்டிய பெண்டாட்டிக்கும் பிறந்த குழந்தைக்கும் மட்டும் துரோகம் செய்யல. இன்னொருத்தன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு வந்து, அந்தப் புருஷனுக்கும் கெடுதல் செஞ்சுட்ட. இனிமே உன்கூட வாழ நான் தயாரில்லை" என்று தூக்கி எறிந்துவிட்டு, கைகுழந்தையான என்னைத் தூக்கிக்கொண்டு வெளியேறிய என் அம்மாவை, நான்கு பெண்களுடன் இருந்த அவள் பிறந்தகம், அணைத்துக் கொள்ள மறுத்தது.




இப்புடி சடக்குனு வந்துட்டா எப்பிடிம்மா? ஆம்பிளைங்க முன்ன, பின்ன இருந்தாலும், நாமதான் அனுசரிச்சுக்கிட்டு போகணும். உனக்கு நாலு தங்கச்சிங்க இருக்காங்க. நீயும் ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருக்க. எல்லாத்தையும் யோசிச்சுப்பாரு. அவசரப்படாத" என்று அறிவுரைதான் வழங்கியது. பிறந்த வீட்டையும் துறந்து, தனித்து ஜெயித்துக் காட்டுவதாக சபதம் செய்து, தெரிந்தவர்கள் உதவியால் மேலே படித்து, பள்ளி ஆசிரியையாகி, தன்னை வளர்த்து ஆளாக்கின கதையை நீளமாக முடித்தாள் திவ்யா.





எங்கம்மாவைப் பொறுத்தவரைக்கும், எங்கப்பா என்னைக்கோ செத்துட்டாரு. ஆனா, எனக்கு விவரம் புரியற வயசு வந்த பிறகு, ஒருநாள், எங்கம்மா என்னைக் கூப்பிட்டு, எல்லா விவரமும் சொன்னாங்க. தஞ்சாவூர் பக்கம், முனிசிபல் சேர்மனா எங்கப்பா இருக்கிறதா தகவல் சொன்னாங்க.




உனக்கு வசதியாய் வாழணும்னா, அவர் செஞ்சது தப்பில்லைன்னு பட்டா, நீ அவரோட போய் சேர்ந்திருக்கலாம்’னு சொன்னாங்க. எனக்குப் பிடிக்கலை. அதனால நான் போகலை. ஆனா, அம்மா இந்த உண்மையை உங்கக்கிட்ட சொல்லியிருக்கணும். உங்களுக்கு நான் மருமகளாய் வந்தபிறகு, வேற யார் மூலமாவது உங்களுக்குத் தெரிய வந்து, எங்கம்மாவ நீங்க தவறாய் நினைக்கக்கூடாது இல்லையா? அதுக்காகத்தான். உங்களை நேர்ல பாத்து சொல்லணும்னு நெனச்சேன். இப்ப நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சரி."




பேசி முடித்த திவ்யா, கைப்பையிலிருந்த பாட்டிலிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்து தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன.



வா, திவ்யா போகலாம்."



நீங்க என்ன சொல்றீங்க? எனக்குப் புரியலையே."




நிச்சயத்துக்கு நாள் குறிக்கணும். முகூர்த்தப் புடவை எடுக்கணும். நிறைய வேலைகள் இருக்கு. உனக்கு என்ன கலர் பிடிக்கும்?" பேசிக்கொண்டே போன சாந்தாவை புரியாமலே பார்த்தாள் திவ்யா.



எதையும் போட்டுக் குழம்பிக்காம கிளம்பு."



நான் இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் நீங்க...?"



நீ இன்னிக்கு ஃபோன் பண்ணினபோது, இந்தப் பொண்ணு என்ன பேசப் போகுது?" அப்படின்னு யோசன போச்சு. இங்க கோயில் வாசல்ல உன்னைப் பார்த்தேன். உன்னோட வண்டிய, முறையாய் பார்க்கிங்ல நிறுத்தி வந்ததப் பார்த்தேன். அங்க இருந்தவங்ககிட்ட, தன்மையாய் பேசறதப் பார்த்தேன். அவங்களுக்கெல்லாம், உன்னாலான உதவிகள் செய்யறேங்கறதும் புரிஞ்சது. கோயிலுக்கு, அடிக்கடி வர்ர தெய்வ பக்தி உள்ள பொண்ணுங்கறதும் தெரிஞ்சது.




என்கிட்ட பேசும்போது, உனக்கு படபடப்பு இல்லை. உண்மைய சொல்லணும்கற நேர்மை மட்டுமே இருந்தது. உங்கப்பா யாருன்னு உங்கம்மா சொன்னதுக்கப்புறமும், வசதியான வாழ்க்கை வாழணும்னு நீ ஓடலை. எது தப்பு, எது சரின்னு, உனக்குள்ள ஒரு தெளிவு இருக்கு. இந்த விஷயத்த வேற யார் மூலமும், ஏன் என் பிள்ளைக்குக்கூட சொல்லாம, என்னை நேர்ல கூப்பிட்டு, என் கண்ணைப் பாத்து சொல்ற துணிவு இருக்கு. சுருக்கமாய் சொன்னா, உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."



எங்கம்மா...?"





இவ்வளவு தெளிவான பெண்ணா, உன்னை வளர்த்திருக்காங்கன்னா, உங்கம்மாவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்பிடி ஒரு பொண்ணு வேற எங்க தேடினாலும் என் ஹரிக்கு கிடைக்காது. உங்கம்மா செஞ்சது தப்பே இல்லை. இதைப்பத்தி, நானே உங்கம்மாகிட்ட பேசிக்கறேன்."



எனக்கு இப்பத்தான் ரொம்ப பயமாய் இருக்கு."



என்ன திவ்யா நான் இவ்வளவு விளக்கு சொன்னதுக்கப்பறம், பயம்னா என்ன அர்த்தம்?"



நான் சொல்லாத விஷயங்களைக்கூட, நீங்களாய் புரிஞ்சுக்கிட்டீங்க. எதையுமே பட்டுன்னு முடிவெடுக்காம, யோசிக்கிறீங்க. அடுத்தவங்க பக்கம் இருக்கற நியாயத்த புரிஞ்சுக்கிறீங்க. உங்களுக்கு, நல்ல மருமகளாய் நான் இருக்கணும்கற பயம்தான்."



என்ன திவ்யா! இப்படி புகழ்ந்தா எனக்கு ரொம்ப வெட்கமாய் இருக்கு. குளிருது வேற."



பொய்யாக நடுங்கி, புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்ட சாந்தாவைப் பார்த்து கலகலவென சிரித்தாள் திவ்யா. மரியாதையுடன் பார்த்தாள். இத்தனை நல்ல உறவை தனக்குக் கொடுத்த இறைவனுக்கு மனதால் நன்றி கூறினாள்.




கிளம்பலாமா திவ்யா?"



வீட்டுக்குத்தானே போறீங்க?"



ஆமாம்...!"



நான் உங்களை ட்ராப் பண்ணட்டுமா?"



ஓ.கே. தாரளமா. ஆனா அதுக்கு முன்னால ஒரு சின்ன வேலை இருக்கு."





என்ன வேலை?"

எதுத்த ஹோட்டல்ல பாதாம் அல்வா சூப்பரா இருக்கும். ஒரு பிடி பிடிச்சுட்டு போகலாமா?"



ம்... எனக்கும் பாதாம் அல்வா பிடிக்கும்!"



நீ சொல்லாமலே, உனக்கு மஞ்சள் கலர் பிடிக்கும்னும் புரிஞ்சுக்கிட்டேன்."



கோயிலைவிட்டு வெளியே வந்த போது, கடல் காற்று, இதமாக வீசத் தொடங்கியிருந்தது. மாமியாரும், மருமகளும் பழகும் தோழமை உணர்வும் அதில் அழகாய்க் கலந்திருந்திருந்தது.


நன்றி - சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி , புலவர் தருமி , மங்கயர் மலர்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn-xl2jh03RD1KwiamDSMkG1SXBg1rDBPGgQvNbqszY-qAH6hWFjrmLVkx1TXYfc5fC_zkfM73AN6bhLUFC_cuovUXKoIzI4ihT8NCvWDmwHERrX4z5F-xvHRfN3DVgj6T3zkalQsNoUc/
ஈரோடு நகர படங்கள்


1. அபிராமி  70 MM AC  DTS - பில்லா 2

2. தேவி அபிராமி AC  - சகுனி


3. ராயல் - மனங்கொத்தி பறவை


4. வி எஸ் பி AC  DTS - பொல்லாங்கு


5. ஆனூர் AC  DTS - நான் ஈ


6. ஸ்ரீ சண்டிகா - பில்லா 2


7. ஸ்ரீ கிருஷ்ணா  DTS- THE DARK KNIGHT RISES ( BAT MAN 3)


8. அன்ன பூரணி -மாலைப்பொழுதின் மயக்கத்திலே

9. ஸ்ரீ லட்சுமி   DTS- நாடோடி மன்னன்


10. ஸ்டார் - BLOOD MARY


11. பாரதி - கொஞ்சும் இளமை


12. அண்ணா  DTS - சுழல்


13. ஸ்ரீநிவாசா   DTS  மாலைப்பொழுதின் மயக்கத்திலே


14. சங்கீதா DTS- திருடி திருடன்


15. மாணிக்கம்  - பாட்ஷா

Tuesday, July 31, 2012

ஃபிலிமோத்ஸவ் - சுஜாதா - சிறுகதை

மந்திரி வந்திருக்க வேண்டும். எல்லோரும் தேர்தல் உற்சவத்தில் கவனமாக இருந்ததால்

டில்லி அதிகாரி ஒருத்தர் மட்டுமே வந்திருந்தார். வெள்ளைக்கார டைரக்டர்கள் சிலர்

வந்திருந்தார்கள். எதற்கெடுத்தாலும் ‘வெரி நைஸ்’, ‘வெரி நைஸ்’ என்றார்கள்.

மற்றொரு ‘கல்யாணராம’னைத் தேடி தமிழ் சினிமா டைரக்டர்கள், கதாசிரியர்கள்,

பத்திரிக்கையாளர் என்று பல பேர் டேரா போட்டிருந்தார்கள்.





சகட்டுமேனிக்கு சினிமா

பார்த்தார்கள், குடித்தார்கள். விலை போகாத ஹிந்தி நடிகர்கள், குறுந்தாடி வைத்த

புதிய தலைமுறை டைரக்டர்கள், புதுக் கவிஞர்கள், அரசாஙக் அதிகாரிகள், கதம்பமான

கும்பல். சிகரெட் பிடிக்கும் பெண்கள், சத்யஜித்ரேயைத் தொடர அவர் பொலான்ஸ்கியைக்

கட்டிகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்.





பட்டுப்புடவை அணிந்த ஒரு சுந்தரி குத்துவிளக்கு ஏற்றினாள்.

எல்லோரும் சினிமா எத்தகைய சாதனம், மனித சமுதாயத்தை எப்படி மாற்றக்கூடிய வல்லமை

படைத்தது என்பது பற்றி இங்கிலீஷில் பேசினார்கள். ‘சினிமாவும் சமூக மாறுதலும்’

என்று புஸ்தகம் அச்சடித்து ஒல்லியான அதை இருபது ரூபாய்க்கு விற்றார்கள். உதட்டு

நுனியில் ஆங்கிலம் பேசினார்கள். சினிமா விழா!





நம் கதை இவர்களைப் பற்றி அல்ல. ஒரு சாதாரண பங்களூர் குடிமகனைப் பற்றியது. பெயர்

நாராயணன். தொழில் யஷ்வந்த்புரத்து பிஸ்கட் ஃபாக்டரியில் பாக்கிங்க் செக்‌ஷனில்.

ஃபிலிம் விழாவுக்காக தேதி அறிவிக்கப்பட்ட அன்று அதிகாலையில் சென்று வரிசையில்

நின்று தலா 11 ரூபாய்க்கு ஏழு டிக்கட் அடங்கிய புத்தகம் ஒன்றை

அடித்துப்பிடித்து வாங்கி வந்துவிட்டான்.





கூட்டத்தைத் தடுக்க போலீஸ் மெலிதான லட்டியடித்ததில் முட்டியில் வலி.

இருந்தாலும் முழுசாக வெளியே வந்துவிட்டான். டிக்கட் கிட்டிவிட்டது. ஏழு படத்தில

ஒரு படமாவது நன்றாக இருக்காதா..?





நாராயணின் அகராதியில் இந்த ’நன்றாக’ என்பதை விளக்க வேண்டும். நன்றாக என்றால்

சென்சார் செய்யப்படாத.. குறைந்த பட்சம் ஒரு கற்பழிப்புக் காட்சியாவது

இருக்கக்கூடிய படம். நாராயணனின் குறிக்கோள் நவீன சினிமாவின் மைல் கல்களை

தரிசித்துவிட்டு விமர்சனம் செய்வதல்ல. அதற்கெல்லாம் பண்டிதர்கள்

இருக்கிறார்கள். அவனைப் பொறுத்தவரை ஒரு பெண்ணாவது ஏதாவது ஒரு சமயம்

உடையில்லாமல் ஓரிரண்டு ஃப்ரேமாவது வரவேண்டும். அப்போதுதான் கொடுத்த காசு

ஜீரணம்.





நாராயணின் ஆசைகள் நாசூக்கானவை.

அவன் தின வாழ்க்கையும் மன வாழ்க்கையும் மிகவும் வேறுபட்டவை. தின வாழ்க்கையில்

அவன் ஒரு பொறுப்புள்ள மகன். பொறுப்புள்ள அண்ணன். பக்தியுள்ள பிரஜை. பனஸ்வாடி

ஆஞ்ச நேயா, ராஜாஜிநகர் ராமன் எல்லாரையும் தினசரி அல்லது அடிக்கடி

தரிசிக்கின்றவன். எவ்வித ஆஸ்திக சங்கத்துக்கும் பணம் தருவான். எந்தக் கோயில்

எந்த மூலைக் குங்குமமும் அவன் நெற்றியில் இடம் பெறும். நாராயணனுக்குத் திருமணம்

ஆவதற்கு சமீபத்தில் சந்தர்ப்பம் இல்லை. ஐந்து தங்கைகள், அனைவரும் வளர்ந்து

கல்யாணத்திற்குக் காத்திருப்பவர்கள். ஒருத்திக்காவது ஆக வேண்டாமா?




பெண்களைப்

பற்றி இயற்கையாகவே நாராயணன் கூச்சப்படுவான். பஸ் நிலையத்திலோ, ஃபாக்டரியிலோ

அவர்களை நிமிர்ந்து பார்க்க மாட்டான். அவனை பலரும் புத்தன், ஞானி என்று

அழைப்பார்கள்.





அவன் மன வாழ்க்கை வேறு தரத்தது. அதில் அபார அழகு கன்னியர்கள் உலவி அவனையே

எப்போதும் விரும்பினர். இன்றைய தமிழ், இந்தி சினிமாவின் அத்தனை கதாநாயகியரும்

நாராயணனுடன் ஒரு தடவையாவது பக்கத்தில் அமர்ந்து தடவிக்கொடுத்திருக்கிறார்கள்.

எத்தனை அழகு என்று வியந்திருக்கிறார்கள்.





நாராயணனுக்கு கிருஷ்ன ன் என்றொரு சிநேகிதன். அவன் அடிக்கடி நாராயணனிடம் கலர்கலராக

சில போட்டோக்கள் காண்பிப்பான். ஐரோப்பா தேசத்து நங்கைகள் வெட்கத்தை அறைக்கு

வெளியில் கழற்றி வைத்துவிட்டு தத்தம் அந்தரங்களைப் பற்றி சந்தேகத்துக்கு எவ்வித

சந்தர்ப்பமும் தராமல் இதோ பார், இதைப் பார் என்று நாராயணனைப் பார்த்துச்

சிரிக்கும் படங்கள். படங்களை விட அந்தப் புத்தகங்களில் வரும் விளம்பரங்கள்,





சாதனங்கள் நாராயணனை ரொம்ப வருத்தின. இதெல்லாம் நம் நாட்டில் கிடைத்தால் என்னவா!

என் போன்ற தனியனுக்கு இந்த சாதனங்கள் சிறப்பானவை. பயமோ கவலையோ இன்றி எவ்வளவு

திருப்தியும் சந்துஷ்டியும் அளிக்கும்.




என்னதான் அழகாக அச்சிடப் பெற்றிருந்தாலும் சலனமற்ற இரு பரிமாணப் படங்களைவிட

சினிமாச் சலனம் சிறந்ததல்லவா? நங்கைமார் நகர்வதைத் தரிசிக்கலாம். கேட்கலாம்.

கிருஷ்ணப்பா சொன்னான், ”அத்தனையும் சென்சார் செய்யாத படம் வாத்தியாரே! நான்

எதிர்த்தாப்பலே தியேட்டருக்கு வாங்கியிருக்கேன். தினம் தினம் படத்தைவிட்டு

வெளியே வந்ததும் எப்படி இருந்தது சொல்லு. நானும் சொல்றேன்.”

நாராயணன் பார்த்த முதல் படம் ரஷ்யப்படம். சைபீரியாவின் பனிப்படலத்தில் எவ்வளவு

கஷ்டப்பட்டு அவர்கள் வேலை செய்து எண்ணெய் கண்டுபிடித்து.. படம் பூரா

ஆண்கள்,கிழவர்கள். பாதிப்படத்துக்கு மேல் பனிப்படலம். வெளியே வந்தால் போதும்

என்று இரண்டு மணி நேரத்தை இரண்டு யுகமாகக் கழித்துவிட்டு வெளியே வந்தான்.

கிருஷ்ணப்பா எதிர் தியேட்டரில் பார்த்த ஃபிலிமோத்சவப் படத்தில் ஐந்து நிமிடம்

விடாப்பிடியாக ஒரு கற்பழிப்பு காட்டப்பட்டதாம். கானடா தேசத்து படம்.






வர்ணித்தான். ”பார்க்கிறவங்களுக்கே சுந்த் ஆயிடுச்சி வாத்தியாரே!” நாராயணன்

இன்னும் ஒரு நாள் இந்த தியேட்டரில் பார்ப்பது.. அப்புறம் எதிர் தியேட்டரில்

மாற்றிக்கொள்வது என்று தீர்மானித்தான்.

நாராயணன் பார்த்த இரண்டாவது படம் டிராகுலா பற்றியது. படம் முழுவதும் நீல

நிறத்தில் இருந்தது.

நீள நகங்களை வைத்துக்கொண்டு ராத்திரி 12 மணிக்கு கல்லறையிலிருந்து புறப்பட்ட

டிராகுலா அந்த அழகான பெண்ணின் ரத்தத்தை உறிஞ்சுவதற்குக் கிளம்பியபோது நாராயணன்

சிலிர்த்துக் கொண்டான். ஆகா, இதோ! ரத்தம் உறிஞ்சுவதற்கு முன்பு, இதோ ஒரு

கற்பழிப்பு, சிறந்த கற்பழிப்பு, அப்படியே அவள் கவுனைக் கீறிக் குதறிக்

கிழித்து, உள்ளுடைகளையும் உதறிப்போட்டு, மெதுவாக அங்கம் அங்கமாக அந்த நகங்களால்

வருடி, அப்புறம்தான் கழுத்திலிருந்து ரத்தம் எடுக்கப் போகிறது என்று

எதிர்பார்த்து ஏறக்குறைய நாற்காலியில் சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டான்.

அந்தப் பாழாப்போன பெண், டிராகுலா அருகில் வந்ததும் தன் கழுத்தில் சங்கிலியில்

தொங்கும் சிலுவையைக் காண்பித்துவிட -வந்தவன் வந்த காரியத்தைப் பூர்த்தி

செய்யாமல், ஏன் ஆரம்பிக்கக்கூட இல்லாமல், பயந்து ஓடிப்போய் விடுகிறான். சட்!

என்ன கதை இது! நிச்சயம் இந்த தியேட்டரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்

சினிமாப்படங்கள் அத்தனையும் அடாஸ் என்று தீர்மானித்து வெளியே வர,

கிருஷ்ணப்பாவைச் சந்திக்கப் பயந்து, வேகமாக பஸ்ஸ்டாண்டை நோக்கி ஓட, கிருஷ்ணப்பா

பிடித்துவிட்டான்.






“என்னாப் படம் வாத்தியாரே! டாப்பு! அப்பன் தன் பொண்ன காணாம்னுட்டு தேடிக்கிட்டு

போறான். அவ, எங்க அகப்படறாத் தெரியுமா? செக்ஸ் படங்கள் எடுக்கறவங்ககிட்ட

நடிச்சிட்டு இருக்கா! எல்லாத்தையும் காட்டிடறான்! கொட்டகையிலே சப்தமே இல்லை..

பின் டிராப் சைலன்ஸ்.”





“கிருஷ்ணா, நாளைக்கு டிக்கட் மாத்திக்கிடலாம். நீ என் தியேட்டர்லேயும் நான் உன்

தியேட்டர்லேயும் பாக்கிறேன்!”

“நாளைக்கு மட்டும் கேட்காதே வாத்தியாரே! நாளைக்கு என்ன படம் தெரியுமா? லவ்

மெஷின், பிரஞ்சுப் படம். நான் போயே யாகணும்!”

“பிளாக்கில கிடைக்குமா?”

“பார்க்கிறேன்! துட்டு ஜாஸ்தியாகும். ஏன் உன் படம் என்ன ஆச்சு.”

“சே, பேசாதே! மரம் செடி கொடியைக் காட்டியே எல்லா ரீலையும் ஓட்டறான். நீ

எப்படியாவது எனக்கு பிளாக்கில ஒரு டிக்கட் வாங்கிடு. என்ன விலையா இருந்தாலும்

பரவாயில்லை!”





85 ரூபாய்க்கு ஒரு டிக்கட் மிகுந்த சிரமத்துடன் கிடைத்ததாக வாங்கி வந்தான்.

கிருஷ்ணா, “உன் டிக்கட்டைக் கொடு” என்றான்.

“இதை வித்து பார்க்க முடியுமான்னு சோதிச்சுட்டு அப்புறம் வர்றேன். நீ தியேட்டர்

போயிரு” என்றான்.

“படத்தின் பெயர் லவ் மெஷின் இல்லையாமே.”

“ஏதோ ஒரு மெஷின். கிராக்கிங் மெஷினோ என்னவோ! ஆனா படு ஹாட்! கியாரண்டி மால்.”

நாராயணன் பார்த்த அந்த மெஷின் படம் செக்கஸ்லோவேகியா படம். நிஜமாகவே ஒரு புராதன

சினிமா எந்திரத்தைப் பற்றியது. நடிகர்கள் ‘கப்ராஸ், கப்ராஸ்’ என்று வேற்று

மொழியில் பேசிக்கொண்டிருக்க, படத்தின் அடியில் ஆங்கில எழுத்துக்கள் நடுங்கின.

எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த நாராயணனின் இங்கிலீஷ் அவ்வளவு வேகமாகப்

படிக்க வரவில்லை.





இரண்டு வார்த்தை படிப்பதற்குள் படக் படக் என்று மாறியது. படத்தில் மிக அழகான

இரண்டு பெண்கள் இருந்தார்கள். இரண்டு பேரும் ஏராளமாக கவுன் அணிந்து வந்தார்கள்.

கதாநாயகன் அண்ணனா, அப்பனா, காதலனா, என்று தீர்மானிக்க முடியவில்லை. கவுன்

போட்டிருந்த பெண்கள் சாஸ்திரத்துக்கூட அந்த கவுன்களைக் கழற்றவில்லை. இண்டர்வெல்

வரை ஒரு பட்டன்? ம்ஹூம்! படுக்கையில் அவர்கள் படுத்ததுமே காமிரா நகர்ந்துபோய்

தெரு, மண், மட்டை என்ற புறக்காட்சிகளில் வியாபித்தது. ஒரே ஒரு இடத்தில்

சினிமாவுக்குள் சினிமாவாக பாரிஸ் நகரத்தின் எஃபில் டவர்முன் ஒரு பெண் தன்

பாவாடையைக் கழற்றுவதாக ஒரு காட்சி வந்தது. அதாவது வரப் பார்த்தது. அதற்குள்

காமிரா அவசரமாக அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் முகபாவங்களைக்

காட்டத் தலைப்பட்டது. வெளியே வந்தான். கிருஷ்ணப்பா நின்றுகொண்டிருந்தான்.

“என்ன? பார்த்தியா? படம் எப்படி?”



“நீ பாக்கலை?”



”நான் என் டிக்கட்டை விற்கலாம்னு போனேன்! யோசிச்சேன். இன்னிக்கு இங்கதான்

பார்க்கலாமேன்னு உன் டிக்கட்ல உள்ளே நுழைஞ்சேன். கிடக்கட்டும் உன் படம்

எப்படி?”




“நாசமாய்ப் போச்சு. ஒரு எழவும் இல்லை. படம் முழுக்க குதிரை வண்டி கட்டிகிட்டு

ஒரு ஆள் பயாஸ்கோப் வைச்சுக்கிட்டு ஊர் ஊராப் போறான்!”

நாராயணன் கிருஷ்ணப்பாவை சற்று தயக்கத்துடன் கேட்டான்.

“உன் படம் எப்படி?”

“செமைப்படம் வாத்தியாரே.”

நாராயணன் மவுனமானான்.




“வேஸ்ட் ஆறதேன்னு உட்கார்ந்தேன். படுகிளாஸ். ஒரு முத்தம் கொடுக்கிறான் பாரு,

அப்படியே அவளைச் சாப்பிடறான். ஆரஞ்சுப்பழம் உரிக்கிற மாதிரி உடுப்புகளை

ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா உருவி…”




“கிருஷ்ணா அப்புறம் பேசலாம். எனக்கு அர்ஜண்டா வேலை இருக்குது! வர்றேன்” என்று

விரைந்தான் நாராயணன். அவனுக்கு அழுகை வந்தது. கிருஷ்ணப்பா போன்ற எப்போதும்

அதிர்ஷ்டக்காரர்களிடம் ஆத்திரம் வந்தது. “நாளைக்கு எங்கே படம் பார்க்கிறே

சொல்லு…” என்று தூரத்தில் கிருஷ்ணப்பா கேட்டான். நாராயணன் பதில் சொல்லாமல்

நடந்தான்.




ரப்பர் டயர்வைத்த வண்டியில் பெட்ரமாக்ஸ் அமைத்து எண்ணெய் கொதிக்க

மிளகாய் பஜ்ஜி தத்தளிக்க பலபேர் தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கண்ணாடிப்பெட்டிக்குள் பொம்மை நங்கைகளின் அத்தனை சேலைகளையும் உருவித்

தீர்க்கவேண்டும் போல ஆத்திரம் வந்தது. மெல்ல நடந்தான். இருட்டு ரேடியோக்

கடையைக் கடந்தான். ‘டாக் ஆஃப் தி டவுன்’ என்கிற ரெஸ்டாரண்ட் வாசலில் ஒரு

கூர்க்கா நிற்க, ஒன்றிரண்டு பேர் அங்கே விளம்பரத்துக்காக வைத்திருந்த

போட்டோக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று இரண்டு காட்சிகள்,

லிஸ்ஸி, லவினா, மோனிக்கா, டிம்பிள்.. நான்கு அபூர்வ பெண்களின் நடனங்கள்.

மேற்படி நங்கைகள் இடுப்பில் மார்பில் சில சென்டி மீட்டர்களை மறைத்துச்

சிரித்துக் கொண்டிருந்தார்கள்.






அந்த வாசல் இருட்டாக இருந்தது. வெற்றிலை பாக்குப் போட்டு ‘பதக்’ என்று

துப்பிவிட்டு ஒருத்தன் உள்ளே செல்ல, கதவு திறக்கப்பட்டபோது பெரிசாக சங்கீதம்

கேட்டு அடங்கியது.




உள்ளே செல்ல எத்தனை ரூபாய் ஆகும் என்று யாரைக் கேட்பது என்று தயங்கினான். அந்த

கூர்க்காவைப் பார்த்த மாதிரி இருந்தது. வீட்டில் வந்து அம்மாவிடம் சொல்லி

விடுவானோ? நடந்தான்.




சற்று தூரம் சென்றதும்தான் தன்னை ஒருவன் பின்தொடர்வதை உணர்ந்தான். முதலில் அவன்

பேசுவது புரியவில்லை. பின்பு தெரிந்தது. “ஆந்திரா, டமில்நாடு, குஜராத், மலையாளி

கேர்ள்ஸ் சார்! பக்கத்திலேதான் லாட்ஜ். நடந்தே போயிறலாம்.”

நாராயணன் நின்று சுற்றுமுற்றும் பார்த்து “எவ்வளவு” என்றான்.

அவன் சொன்ன தொகை நாராயணனிடமிருந்தது.

”பிராமின்ஸ் வேணும்னா பிராமின்ஸ், கிறிஸ்டியன்ஸ், முஸ்லீம்? வாங்க சார்!”

நாராயணன் யோசித்தான்.






“நிஜம் ஸார் நிஜம்; நிஜமான பெண்கள்!”




நாராயணன் “வேண்டாம்ப்பா” என்று விருட்டென்று நடந்து சென்றான்.



நன்றி - அமரர் சுஜாதா, உயிர் மெய், சிறுகதைகள்

Monday, July 30, 2012

ரூ 10,000 முதல் பரிசு பெற்ற கல்கி போட்டிக்கதை -போன்சாய் நிழல்கள்! -செம்பை முருகானந்தம்-

முதல் பரிசுக் கதை



போன்சாய் நிழல்கள்!



செம்பை முருகானந்தம்



ஒம் பேரு என்ன?"

கோபாலகிருஷ்ணன்."


அம்மா, அப்பா பேரு?"


அம்மா பேரு வாணி.அப்பா பேரு கோவிந்தன்."


ஒன்னப்பத்தி, ஒங்குடும்பத்தப் பத்தி சொல்லேன்."


எங்க வீட்டுக்கு நான் ஒரே பையந்தான். அம்மா, அப்பா, நாங்க மூணு பேருந்தான். எங்க வீடு புதுக்கோட்ட கீழ ரெண்டாம் வீதியில இருக்கு. அதுவொரு லையன் வீடு. அதுலதான் வாடகைக்குக் குடியிருக்கோம். இருவது வருசமாய் அங்கதாங் குடியிருக்குறதா எங்கப்பா சொல்வாரு. அம்மா ஹவுஸ் ஒய்ஃப்தான். அப்பா சின்ன அச்சகம் வெச்சுருக்கார். அது ரொம்பப் பழசு. பழய காலத்து அச்சுக்கோர்த்து ஓட்டுற மிஷினு."



சரி, ஒங்கூடப் பொறந்தவுங்க?"



கூடப் பொறந்தவுங்க யாருமில்ல."



அண்ணந்தம்பி, அக்கா தங்கையின்னு யாருமில்லயே, அது ஒனக்கு கவலையா இல்லையா? ஒன்னப் பாதிக்கலயா?"



பாதிச்சது. ஆனா நாங்க லையன் வீட்டுலதானே இருக்கோம். எல்லார் வீட்டுலயும் பசங்க இருக்குறதால என்னயப் பெருசாய் ஒண்ணும் பாதிக்கல."



ஓகே. ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்,செகண்ட் ஸ்டாண்டர்டெல்லாம் எங்க படிச்ச?"



எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் ஸ்கூல்லதான் ஃபிப்த் வரைக்கும் படிச்சேன். அப்புறம், எங்கப்பா பணங்கட்ட முடியலைன்னுட்டாரு. ஏன்னா எங்கப்பா வச்சுருக்குற அச்சகத்துக்கு அவ்வளவா வேல வராது. இந்தக் கல்யாண சீசன்ல இன்விடேஷன் ஆர்டர் வரும். ஸ்கூல் சீசன்ல காம்போசிசன், பிராக்ரஸ் கார்டு, டைம்டேபிள் கார்டு ஆர்டர் வரும். அப்புறம் அப்பப்போ வேற ஏதாவது சின்னச் சின்ன வேலைக வரும். இதெல்லாங்கூட எங்கப்பாவோட ஒர்க் ஃபெர்பெக்ஷனுக்காகவும் சொன்னா சொன்ன நேரத்துல குடுக்குற சின்சியாரிட்டிக்குத்தான் தேடிவந்து குடுப்பாங்க."



குட். நீ எப்படிப் படிப்ப?"



நல்லா படிப்பேன்."



நல்லான்னா?"



நீங்க கேக்குறது எனக்குப் புரியல."


மனப்பாடம் பண்ணுவியா, இல்ல புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவியா?"


புரிஞ்சுக்க மட்டுந்தான் ட்ரை பண்ணுவேன்."



ட்ரை பண்ணுவியா? புரிஞ்சுக்குவியா?"


கண்டிப்பா புரிஞ்சுக்குவேன்."


வெரிகுட். அப்ப, நீ ஒன்னோட எக்ஸாம்ஸ்ஸெல்லாம் புரிஞ்சுதான் எழுதுவியா? நோட்ஸ் ஃபாலோ பண்ணுவியா?"



உறுதியா நோட்ஸ் ஃபாலோ பண்ண மாட்டேன். புரிஞ்சுதான் எழுதுவேன். குறிப்பா எய்த்துல இருந்து தமிழுக்குக் கூட நோட்ஸே பயன்படுத்துறதில்ல. மத்த சப்ஜெக்ட்டுக்குப் பாத்துப்பேன். ஆனா, என்னோட ஓன் சென்டன்சுலதான் எழுதுவேன்."





வெரிகுட். அதென்ன குறிப்பா எய்த்துலருந்து."





ஆமா. எங்கப்பா அந்தக் காலத்து எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சவரு. ஆனா நெறைய புத்தகங்களைப் படிப்பாரு. திருக்குறள், கம்பன், பாரதி, பாரதிதாசன், ஷெல்லி, கீட்ஸ், காரல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், டால்ஸ்டாய், காந்தி, அம்பேத்கர், நேரு, பெரியார், ஜீவா, அகிலன், கல்கி, ஜெயகாந்தன்னு இப்ப கரண்டுல எழுதுற ரைட்டர்ஸ் வரைக்கும் படிச்சுக்கிட்டே இருப்பாரு. நான் எய்த்துப் படிக்கிறப்பவே மக்ஸிம்கார்க்கியோட ‘தாய்’ நாவல் படிச்சுட்டேன். செகண்ட், த்தேர்டு படிக்கிறப்ப இருந்தே எனக்கு எங்கப்பா கதை, கவிதைன்னு நெறைய்ய சொல்லிக்கிட்டே இருப்பாரு.



மொதநா அவரு சொன்ன கதைய அடுத்தநா என்னையச் சொல்லச் சொல்வாரு. கத கண்டன்ட் மாறாது. காட்சியும் மாறாது. ஆனா கதக்குள்ள எஞ்சொந்த வார்த்தப் புகுந்துடும். அதாவது, ‘பாரதியார் வீட்டுல சமைக்க அரிசி இல்லாமப் பட்டினியா இருந்தாங்களாம். அப்போ வீட்டு முத்தத்துல பசியோட கத்திக்கிட்டிருந்த சிட்டுக்குருவிகளப் பார்த்துட்டு வீட்டுக்குள்ள போயி, இருந்த கொஞ்சங் குருணையையும் எடுத்துக்கிட்டு வந்து போட்டுட்டு சிட்டுக்குருவிக திங்கிறதப் பார்த்துச் சந்தோஷப்பட்டாராம்’ பார். அடுத்தநா இதே கதைய என்னையச் ‘சொல்லுடா’ம்பாரு.





ஒரு நாள் பாரதியாருக்கு ரொம்பப் பசியாம். வீட்டுல சமைக்கவே இல்லயாம். ஏன்னா அரிசியே இல்லயே என்ன பண்றது. அப்ப பாத்து அவரு வீட்டு முத்தத்துல நெறய சிட்டுக்குருவிக பசியோட கத்திக்கிட்டே அங்கிட்டும் இங்கிட்டும் பறந்துச்சாம். பாரதியாரு நேராய் வீட்டுக்குள்ள போயி கொஞ்சூண்டு இருந்த குருணையையும் எடுத்துக்கிட்டு வந்து போட்டாராம். அவ்ளதான் எல்லா சிட்டுக்குருவியும் கீச்சு மூச்சு, கீச்சு மூச்சுன்னு சந்தோஷமாய் சத்தம் போட்டுக்கிட்டே தின்னுச்சாம். இத பாத்த பாரதியாரு சந்தோஷந்தாங்காம ஆனந்தமாய் பாடுனாராம்"ன்னு சொன்னேன்.

எங்கப்பா ‘டேய்! என்னடா கோபால கிருஷ்ணா... என்னென்னமோ ஒஞ்சொந்த சரடயெல்லாம் உள்ளவிட்டுக் கலக்குற. பரவாயில்ல. நாஞ்சொன்னதவிட நீ சொல்றதுதான் தத்ரூவமாய் இருக்கு’ அப்புடின்னு எங் கன்னத்துல முத்தங்குடுத்து, முதுகுல ‘சபாஷ், சபாஷ்’ன்னு தட்டிக் குடுத்தாரு. இப்புடிதான் எஞ்சொந்த வார்த்த இல்லாம யாரோடதையும் அப்புடியே காப்பியடிக்கிற புத்தி காணாமப் போச்சு."



ஓ! இதச் சொல்றப்போ இவ்ளோ சந்தோஷமாய் சொல்ற."



ஆமா...அதான் உண்மை. அப்புடிதான் நடந்துச்சு. அது மட்டுமில்ல."



ம்... அப்புறம்!?"



நான் எய்த் படிக்கிறப்போ ஜி.பி.எம்.ன்னு எங்க தமிழ்சாரு. அவரு, ஒருநா சொன்னாரு, ‘டேய் மனப்பாடம் பண்ணுறதுக்கும் புரிஞ்சுக்கிறதுக்கும் பெரிய வேறுபாடுயில்ல. நீங்க புரிஞ்சுக்கிட்டிங்கன்னாலே அது மனப்பாடமாகிருச்சுன்னு அர்த்தம். ஆனா நீங்க மனப்பாடம் பண்ணினாலும் அது புரிஞ்சுகிட்டதாய் அர்த்தமில்ல. அதே மாதிரி புரிஞ்சுக்கிட்டா ஒங்க வார்த்தையில எப்புடி வேணாலும் எழுதலாம். மனப்பாடம் பண்ணினா ஒரு வார்த்த மறந்தாலும் பிரேக் டௌனான வண்டி மாதிரி அம்புட்டு தான்’னாரு.



எனக்கு அந்த வயசுல லேசா பொறிதட்டுன மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம் வளர வளர அதோட மகத்துவம் புரிஞ்சது. அதுனாலதான் டென்த்துல தமிழ்ல நான் தொண்ணூத்தெட்டு மார்க்கு."



வ்வாவ்... ஃபென்டாஸ்டிக். ஒம் மொகமெல்லாம் எவ்வளவு மலர்ச்சியா, சந்தோஷமாய் இருக்கு தெரியுமா?"



இருக்கும். இருக்கும். இதெல்லாம் நெனக்கிறப்போ எனக்கு அவ்ளோ சந்தோஷமாய் இருக்கு."



சரி... நீ ஸ்போர்ட்சுல எப்புடி?"



அய்யோ என்னவிட்டா ட்வென்டி ஃபோரவர்சும் வௌயாடுவேன். கொள்ளப் பிரியம் வெளையாட்டுன்னா."



என்ன வௌயாட்டு ஒனக்கு ரொம்பப் புடிக்கும்."



ஃபுட்பால், கிரிக்கெட், அத்தலெட்டிக் குல டிஸ்டிக் ரன்னிங் பிளேயர் நான்."



குட்... கோபாலகிருஷ்ணா. இது தவிர."



இலக்கிய மன்றப் போட்டி எல்லாத்லேயும் பார்ட்டிசிபேட் பண்ணுவேன். பெரும்பாலும் முதல் பரிசுதான் வாங்குவேன்."



அடடே! குதூகலப்புயல்லக் கூத்தாடிக் கிட்டுருந்த..."

ஸ்யோர்"



ஓகே ஓகே... வீட்ல ஒன்ன ரொம்பக் கண்ட்ரோல் பண்றது யாரு?"



இதுல என்ன சந்தேகம், எங்கம்மாதான். வெளையாட விடாது. நான் எங்க போனாலும் பின்னாடியே வரும். ‘ஒரு புள்ள. ஒனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்ன பண்ணுறது’ன்னு சொல்லிச் சொல்லியே கொல்லும். ‘படி, படி’ன்னு உசுர எடுக்கும்.



எங்கப்பா என்ன படின்னு சொன்னதே கெடையாது. அன்னிக்கி ஸ்கூல்ல என்ன நடந்துச்சுன்னு கேப்பாரு. எல்லாமே அதுக்குள்ள இன்குலூடட். அப்புறம் ஒவ்வொரு நாளும் எங்கம்மா எங்கப்பாகிட்ட அவ்ளோ கம்ப்ளெயிண்ட் பண்ணும். அவரு எங்கிட்ட எதுவுமே கேக்க மாட்டாரு. அதே மாதிரி என்ன சேட்ட செஞ்சாலும் அடிக்கவே மாட்டாரு. அடிச்சதே இல்லை.



ஆனால், எல்லாத்துக்கும் ஒட்டுமொத்தமாய் என்னிக்காவது ஒரு நாளு நைட்டு சாப்புட்ட பிறகு ஒக்கார வெச்சுக் கத சொல்லுவாரு. அந்தக் கதையோட க்ளைமாக்ஸ் வரவரத்தான் நாஞ்செஞ்சத் தப்புகளுக்குத்தான் இந்தக் கதங்கிறது எனக்கே புரியும். அவமானமாய் இருக்கும். மனசெல்லாம் வலிக்கும். இனியொருமுறை அப்புடி ஒரு தப்ப வாழ்க்கையில செய்யக்கூடாதுன்னு தோணும்."



ஓ... கிரேட் யுவர் ஃபாதர்."



ஆமா அவரு எனக்கு அப்பா மட்டுமில்ல. ஹி இஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட், அண்ட் மை வெல்விஷர்."



சரி, கோபாலகிருஷ்ணா, டென்த்ல எவ்ளோ மார்க்கு வாங்கின?"



நானூத்தித் தொண்ணூத்திரெண்டு."



பப்ளிக் எக்ஸாமும் ஒண்ணோட ஓன் சென்டன்ஸ்சுலதான் எழுதினியா?"



நிச்சயமா. கொஸ்டின் பேப்பர்லே சொல்லியிருப்பாங்களே. உன் சொந்த நடையில் எழுதுன்னு."



சரி, அந்த ரிசல்ட் வந்தப்ப எப்புடி இருந்துச்சு?"



ரொம்ப சந்தோஷமாய் இருந்துச்சு. எங்க நகராட்சி ஸ்கூல்ல பெரிய ரெக்கார்ட் ஃபிரேக்குன்னு சொன்னாங்க. ஏன்னா ஸ்டேட் செகண்ட் நான். எங்க ஹெட்மாஸ்டரு, எல்லா சாருங்களும் எங்க வீட்டுக்கு வந்து, என்னய காருல வச்சு ஸ்கூலுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. டி.வி.,பேப்பர் காரங்கன்னு ஒரே அமர்க்களம். எங்கம்மா சந்தோஷத்துல அழுதுகிட்டே இருந்துச்சு. எங்கப்பாவுக்கு ஆனந்தந் தாங்கல.



நா ஆரம்பத்துல படிச்ச பி.வி.எஸ். ஸ்கூல்லருந்து ஆரம்பிச்சு புதுக்கோட்டயில இருக்குற அத்தன பெரிய ஸ்கூல்ல இருந்தும் எங்கப்பாவுக்குக் கால் பண்ணுனாங்க.



திருச்சியில இருக்குற எல்லாப் பெரிய ஸ்கூல்லயிருந்துங் கால் பண்ணுனாங்க. ‘எங்க ஸ்கூல்ல சேருங்க, எங்க ஸ்கூல்ல சேருங்க, எந்தக் கட்டணமும் வேணாம். ஹாஸ்டல் ஃப்ரீ. எல்லாமே நாங்க பாத்துக்குறோம்’ன்னு."



சரி."



எங்கப்பா, ‘அதெல்லாம் வேணாம். புதுக்கோட்ட கவர்ன்மெண்ட் ஸ்கூல்லயே படிக்கட்டும். இப்ப மார்க் வாங்கலையா? அதே நேரம் புள்ளயும் நம்ம கூடவே இருப்பான்’னாரு. எங்கம்மா கேக்கவே இல்ல.



எங்க சொந்தக்காரங்க, சுத்துப்பட்டுல உள்ளவுங்க எல்லாரும் எங்க அப்பாகிட்ட சொன்னா கேக்க மாட்டாருன்னு எங்க அம்மாகிட்ட நல்ல ஸ்க்ரூ போட்டுவிட்டாங்க. எங்க அம்மாவும் எங்க அப்பாகிட்ட, ‘இங்க பாருங்க, அதெல்லாம் சரிப்படாது. டென்த்து மாதிரி கெடையாது ப்ளஸ்டூ. அதுதான் இவனோட வாழ்க்கையே. இவன் டாக்டராகவோ, இன்ஜீனியராகவோ வரணுமின்னா திருச்சி ஸ்கூல்லதான் சேத்தாகணும். அந்த ஸ்கூல்லயெல்லாம் நம்மாலப் பணங்கட்டி காலடி கூட வக்க முடியுமா? நம்ம புள்ள மார்க்குக்கு ஏதோ இலவசமாய் சீட்டுத் தர்றாங்க?’ அப்புடி இப்புடின்னு எங்கப்பாவப் படாதபாடுபடுத்தி சம்மதிக்க வெச்சுட்டாங்க.




ஆனா எனக்குத்தான் எங்க அம்மா, அப்பாவை விட்டுப் பிரியணுமான்னு கவலையாய் இருந்துச்சு. ஏன்னா, ஒரு நாளைக்கி ஒரு வேளையாவது எங்கம்மா ஊட்டி விட்டாதான் எனக்குச் சாப்பிட்ட மாதிரி இருக்கும். அதே மாதிரி எங்கப்பா கையில தல வச்சு, எங்கம்மா கால் மேல கால் போட்டு, தெனமும் யாரோட வாழ்க்க வரலாறாவது எங்கப்பா எனக்குக் கதையா சொன்னாதான் எனக்குத் தூக்கமே வரும். எப்புடி இவுகளப் பிரிஞ்சு இருப்பேன்னு அழுதுட்டேன். அப்புறம், ஒருவழியாய் திருச்சி எம்.ஆர்.பி.எஸ். ஸ்கூல்ல சேத்து விட்டாங்க."





எப்டி இருந்துச்சு எம்.ஆர்.பி.எஸ்."



ம்.. அங்க... அங்கதான் என் லட்சியம், எங்கனவு, என் அறிவு, எந்திறம, எம் விளையாட்டு எல்லாம், எல்லாம் எல்லாமே செதஞ்சு, கொழஞ்சு போனது."



கோபாலகிருஷ்ணா அழுகையாய் வருதா.. ம்... ஏன் அழுகையை அடக்குற. அழு. நல்லா அழு. மொதல்ல எப்புடி டென்த்தப் பத்திப் பேசறப்போ சந்தோஷமாய் பேசுனியோ அதே மாதிரி இப்ப சோகமாய் இருக்கு, அழுகையா வருதுன்னா நல்லா அழு. ஒம் மனசுல என்னென்னவெல்லாம் இருக்கோ எல்லாத்தையும் வெளியில சொல்லிடு. ம். ம்... சொல்லு."



முதல் நாளு ப்ளஸ் ஒன் ஸ்டூடெண்ட்ஸ்க் கெல்லாம் ஒரு மீட்டிங் போட்டாங்க. வித் பேரண்ட்ஸுக்கும். அப்ப பிரின்ஸ்பாலு, பேசுறப்போ, ‘நீங்க எல்லா ஸ்டூடண்ட்ஸும் கவனமாய் கேளுங்க, நீங்கயெல்லாம் வெளியில எப்புடி படிச்சுட்டு வந்திருந்தாலுஞ் சரி. இங்க எம்.ஆர்.பி.எஸ்.க்குன்னு சில மெத்தடாலஜி வச்சுருக்கோம். அதத்தான் நீங்க ஃபோலா பண்ணணும். பேரன்ட்ஸும் கோ-ஆப்ரேட் பண்ணுங்க. ஒங்க பசங்களுக்குஞ் சொல்லுங்க’ன்னார். அப்பவே எனக்கு எதையோ இழந்த மாதிரி மனசு கவலையாய் இருந்துச்சு.



அடுத்தநா ஸ்கூலுக்குப் போனா, தமிழ் உள்பட ஒவ்வொரு டீச்சரும் வந்து, இங்க எல்லா சப்ஜெக்டுக்கும் நோட்ஸ்தான் ஃபாலோ பண்ணுவோம். அதத்தான் நீங்க படிக்கணும்ன்னாங்க. க்ளாஸ்ல பேருக்கு நடத்துவாங்க. புரியலைன்னு ஏதாவது டௌட் கேட்டா ‘இப்ப என்ன புரிஞ்சு வானத்த வில்லா வளக்கப் போறியா. நோட்ஸ் இருக்குள்ள அதப் படி... மனப்பாடம் பண்ணு. அது போதும்’பாங்க. மேத்ஸ்ல டௌட் கேட்டாக் கூட ‘இதெல்லாஞ் சொல்லிப் புரியவக்க முடியாது. ஒருமுறைக்கு நாலு முறையாய் கணக்கப் போட்டுப் பாரு. அப்பதான் வரும்’பாங்க. எனக்கு ஏதோ தனித்தீவுல தனியா மாட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு.




ஒவ்வொரு டெஸ்டுலயும், ஒவ்வொரு எக்ஸாம்லயும் பேப்பரை எடுத்து வச்சுக்கிட்டு கிளாஸ்லயே அவ்ளோ பேருக்கு முன்னாடி கேவலமாகத் திட்டுவாங்க. ‘கோபாலகிருஷணா நோட்ஸ்ல என்ன இருக்கு; நீ என்ன எழுதியிருக்க’ம்பாங்க. ‘அதே கருத்தத்தானே நானும் எழுதியிருக்கேன்’ அப்புடின்னா அவ்ளோதான். ‘ஒம் மேதாவித் தனத்தையெல்லாம் மூட்ட கட்டிட்டு, நோட்ஸ்ல என்ன இருக்கோ அத வார்த்த பிசகாம வாக்கியம் மாறாம எழுது. ஒஞ்சொந்த நடை, நொந்த நடையெல்லாம் இங்க யாருங்கேக்கல’ம்பாங்க.

எந்தக் காரணங்களுக்காக நகராட்சி ஸ்கூல்ல எல்லா டீச்சரும் என்னைப் பாராட்டினாங்களோ, அதே காரணங்களுக்காக இங்க நான் அவமானப்படுத்தப்பட்டேன். இப்புடிதான் ப்ளஸ்ஒன் கழிஞ்சது. அப்பவே முடிவுக்கு வந்துட்டேன். எங்கம்மா கனவு, எங்கப்பா நம்பிக்க எதையும் என்னால காப்பாத்த முடியாதுன்னு.



இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாய் ப்ளஸ்டூ. லெவன்த் ஹாப்பேர்லி முடிஞ்சதுமே ப்ளஸ்டூ சிலபஸ் படிக்கச் சொல்லிட்டாங்க. புரியாத ஒண்ணு மொட்டையா மனப்பாடம் பண்ணி எழுதுறது எனக்குச் சாத்தியப்படவே இல்ல. புரிஞ்ச விஷயங்கள எனக்குப் புரிஞ்ச மாதிரி எழுதுறது டீச்சர்ஸுக்கு புடிக்கவே இல்ல.



இதவிடப் பெரிய கொடும, எம் பேப்பர எடுத்துக்கிட்டு வந்து, ‘நோட்ஸ்ல உள்ள மாதிரி எதுவுமே இல்லயே. ஒனக்கு மனப்பாடமே வராதா? ம்... நீ எப்புடி டென்த்துல நானூத்தி தொண்ணூத்திரெண்டு மார்க்கு வாங்கின; உண்மையிலேயே படிச்சுத்தான் எடுத்தியா’ம்பாங்க.



எ(ன்) அறிவையும், தெறமையையும் தீவச்சுக் கொளுத்துன மாதிரி இருக்கும் அந்த வார்த்த. எது என் திறமையின்னு, அறிவுன்னு பெருமையாப் பேசப்பட்டதோ, அதையே காரணமாக் காட்டி என்ன அவமானப்படுத்துவாங்க.



எ(ன்) அப்பாவோட மடியில படுத்து அழணும் போல இருக்கும். பேரண்ட்ஸ பார்க்கவோ, பேசவோ விடமாட்டாங்க. எ(ன்) ரெண்டு வருஷப் பொறந்த நாளு, நானே என் நினைவு நாள அனுஷ்டிக்கிற மாதிரி போனுச்சு. எங்கம்மா அப்பாவ வாழ்த்துச் சொல்லக் கூட அனுமதிக்கல. ரெண்டு வருஷமாய் எங்காலு கூட கிரவுண்டுல படல. சாப்புட, தூங்க முடியாம நரக வேதனையை அனுபவிச்சேன்.



எப்பப் பார்த்தாலும் ‘படி, படி, மனப்பாடம் பண்ணு. ஒப்பி, டெஸ்ட் எழுது’ன்னு டார்ச்சர் பண்ணுவாங்க. லஞ்ச் அவர்ஸ்ல கூட ‘பத்து நிமிஷத்துல சாப்புட்டுப் படி, படி’ன்னு வாங்க. நைட் ஸ்டடி பதினோரு மணி வரைக்கும். காலையில மூன்றரை மணிக்கே எழுப்பி விட்டுருவாங்க. சில நேரம் மாத்ரயெல்லாம் குடுப்பாங்க. கேட்டா ‘விட்டமின் டேப்லட்ஸ், ஹெல்த்துக்கு’ம்பாங்க. மாத்ரய சாப்புடலன்ன விடமாட்டாங்க. எனக்கு ஒவ்வொரு நாளும் வேதனையும் விரக்தியுந்தான் அதிகமாயிக்கிட்டே இருந்துச்சு.





ப்ளஸ்டூ பப்ளிக் எக்ஸாம் தேதி அறிவிச்சுட்டாங்க. எனக்கு மனசெல்லாங் கவல மூண்டுக்கிச்சு. நான் ஸ்டேட் லெவல்ல இல்ல, டிஸ்டிரிக்ட் லெவல்ல கூட மார்க் வாங்க முடியாதுன்னு எனக்குத் திண்ணமா தெரிஞ்சது. எங்கப்பா, அம்மா, எம் பழய நகராட்சி ஸ்கூலு எ(ன்) டீச்சர்ஸ் எப்புடி அவுங்க மொகத்துலயெல்லாம் முழிப்பேன்? நெனக்க நெனக்க இதயமே வெடிக்கிற மாதிரி இருக்கும். அழுது, அழுது ஓய்வேன்.



எக்ஸாம்ஸ் ஆரம்பிச்சது. எப்புடியோ, என்னத்தையோ எழுதி எக்ஸாம் முடிச்சுட்டேன். வீட்டுக்கு வந்தேன். எங்கப்பா எப்புடி எழுதினேனு கூடக் கேக்கல. ஏன்னா அவருக்குக் குற்றஉணர்ச்சி, யார் சொல்லியிருந்தாலுங் கேட்டுருக்கக் கூடாது. இருந்தும், தன்புள்ளய தானே கொண்டு போயி பலியிட்டுட்டோ மேங்கிற குற்ற உணர்ச்சி. எங்கம்மாதான் ‘எப்புடி எழுதுன, எப்புடி எழுதுன’ன்னு கேட்டுக்கிட்டே இருக்கும். என்ன பதில் சொல்றது.



எம் உடம்பு பாதியாய்ப் போச்சு. மனசுல கொஞ்சமும் தைரியமில்லாம ஆகிட்டேன். எம் பழைய சுறுசுறுப்பு, வௌயாட்டு, வெகுளி, ஆனந்தம், புத்தகங்கள மேஞ்சு திரியுற அறிவுத் தேடல், எல்லாம் எல்லாமே எங்கிட்ட இருந்து காணாமப் போச்சு.



வீட்ட விட்டு வெளியிலேயே போறதில்ல. ரூமுக்குள்ளேயே கெடந்தேன். எங்கம்மா என்ன நெனச்சோ என்னப் பார்த்துப் பார்த்து அழும். நானே உணர்ந்தேன். எனக்கு நானே பேசிக்கிற மாதிரி இருக்கும். என்னய எங்கம்மாவோ, வேற யாராவதோ பார்த்தா ஒடனே சரியா இருக்குற மாதிரி முயற்சி பண்ணுவேன். ஆனா, எனக்கு நானே எதை எதையோ பேசிக்குவேன். இதுவரைக்குந்தான் எனக்கு ஞாபகமிருக்கு."



இன்னும் என்ன இருந்தாலும் சொல்லு. அழுதுகிட்டே இருந்தா..."



எங்கம்மாவ தோச பெரட்டியால அடிச்சேன். எங்கப்பா எனக்கு சோறு ஊட்ட வருவாரு. அவர கன்னத்துல நெறைய தடவ அறைஞ்சேன். அங்க வீட்டுக்குள்ளயே ஒன்பாத், டூபாத்தெல்லாம் போனேன்."



நல்லாவே அழுதுட்ட. இப்ப ஒம்மனசுல வேறெதுவும் இல்லயே. எல்லாத்தையும் சொல்லிட்டியா..."



ம்... சொல்லிட்டேன்."



இப்ப ஒம் மனசு ரொம்ப இயல்பாய் இருக்கு. சரி, ப்ளஸ்டூ ரிசல்ட் வந்துருச்சா?"



தெரியல."


வந்தா எவ்ளோ மார்க்கு வாங்குவ?"


தொளாயிரத்தி அம்பதுக்குள்ள."


ரிசல்ட் வந்துருச்சு. தொள்ளாயிரத்தி எம்பது வாங்கி இருக்க. இது போதுமா?"


நோ... இது எம்மார்க்கு இல்ல. இது என் அறிவின் அடையாளமில்ல. என்ன என் இயல்புல விட்டுருந்தா ஆயிரத்தி நூத்தி எம்பதாவது வாங்கி இருப்பேன்."



ஓ.கே. யு டோண்ட் வொர்ரி. விதைச்சுருந்தா முளைச்சுருப்பா: திணிச்சுட்டாங்க. அதாம் பிரச்னை ஆகிடுச்சு. நோ ப்ராப்ளம். நா ஒனக்கொரு வாய்ப்புத் தர்றேன். நீ திரும்பவும் ப்ரைவேட்டா ப்ளஸ்டூ எழுத. ஓ(ம்) அறிவுல, ஓ(ம்) ஸ்டையில்ல எழுது. ஒன்னோட மார்க்கே நீ வாங்கலாம். சரியா."



ஒரு வருசம் வீணாகுமே."

பரவாயில்ல. ஒரு வருசந்தானே. பட் ஒன்னோட வாழ்க்க ஒனக்குக் கெடச்சுருமே."



எஸ்... எஸ் எழுதுறேன்."



இப்ப சந்தோஷமா இருக்குறியா."



நிச்சயமா."



நீ விரும்புற மார்க் ஒனக்கு வந்துருச்சு. அடுத்து என்ன படிக்க விரும்புற?"



டாக்டருக்கு."



டாக்டர்ன்னா."



ஒரு சைக்யார்டிஸ்டா வரணும்."



ஓகே... ஓகே... ஓகே..."



ஏன் இப்புடி சத்தம் போட்டுச் சிரிக்கறீங்க. நான் வரமாட்டேனா?"


யார் சொன்னது. நீ என்னைவிட சிறந்த சைக்யார்டிஸ்டா வருவ. வரணும். என் இதய பூர்வமான வாழ்த்துக்கள் கோபாலகிருஷ்ணா."



நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி

Sunday, July 29, 2012

சரோஜா - வா மு கோமு - சிறுகதை

சரோஜா


சரோஜா தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். கால்களுக்குப் போடப்பட்டிருந்த தலையணையைக் காலாலேயே மேலுக்கு இழுத்துத் தூக்கி தன் நெஞ்சில் புதைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டாள். தலையணையை சாமிநாதன் என்றெண்ணி உயரத் தூக்கி முத்தம் கொடுத்து சிரித்துக் கொண்டாள். 'உடுங்க என்னெ சின்னக் கவுணுச்சி உடுங்க' என்று இவளின் காதுக்குள் சாமிநாதன் கூறுவது போலவே இருந்தது. 'உன்னை உடவே மாட்டேன்டா... ஒரு விசுக்காத்தான்டா இந்த சரோஜா ஏமாந்து போவா. எப்பத்திக்கிம் ஏமாந்துட்டே இருப்பாளாடா! உன்னையெ உடவே மாட்டேன்டா இந்த வாட்டி' என்று முனகிய சரோஜா தலையணையைக் கட்டிக் கொண்டே படுக்கையில் உருண்டாள்.



சரோஜா மூங்கில்பாளையத்தில் வடக்குத் தோட்டத்து ராமசாமிக் கவுண்டரின் பெண். பத்தாவது வரை விசயமங்கலம் அரசாங்கப் பள்ளியில் படித்தவள். பரீட்சை எழுதிய கையோடு விடுமுறையில் அம்மாயி வீட்டுக்கு திங்களூர் வந்தவளுக்கு உள்ளூருக்குள் சலூன் கடை வைத்திருந்த கோபாலன் மீது காதல் வந்தது. சலூன் கடை கோபாலன் நீளமான முடி வைத்திருந்தான். டிவியெஸ் ஸ்டார் சிட்டி பைக் வைத்திருந்தான். கார்கோஸ் பாண்ட் அணிந்திருந்தான். அஜித் மாதிரி சிவப்பாய் இருந்தான். இவளைக் கண்டதும் கண்ணைச் சிமிட்டினான். இவளுக்குள் அந்த செடி வேர் விட்டது. இவள் அம்மாயியையும், அப்பிச்சியையும் இராக் காலங்களில் அத்தாப் பெரிய வீட்டில் ஏமாற்றுவது எளிதாய் இருந்தது.



கோபாலன் சரோஜா மீது பித்தாய்த்திரிந்தான். அவனைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு எல்லாப் பெண்களைப் போலவே பேசிக் கொண்டிருந்தாள்.



“இதெதுக்கு கோபாலு தாவாங் கட்டைக்கிக் கீழாறதுக்கிளியூண்டு மசுரு வளத்துறே? அதையெ நீயி நாளைக்கு செரைச்சு எடுத்துடு கோபாலு. அசிங்கமா இருக்கு. இருக்கட்டும் அதான் ஸ்டைலுன்னு சொன்னீன்னா உன்னைக் கடிச்சு வச்சுடுவேன்.”



“நீ கடிச்சு வைப்பேன்னு சொன்னப்புறம் நான் எதுக்கு அதை எடுக்கப் போறேன். நீ கடிச்சா எனக்கு வலிக்கவே வலிக்காது.”
“வலிக்காது... வலிக்காது... சரி, அதை நீ எடுப்பியா எடுக்கமாட்டியா?”



“எடுத்துடறேன் சரோ... உனக்குப் பிடிக்காதது என்கிட்ட எதுக்கு?” என்றவன் அப்படியே சரோஜாவை நிலத்தில் சாய்த்தான்.



“என்னைக் கட்டிக்குவீல்ல? என்னை ஏமாத்தமாட்டீல்ல? காலம் பூராவும் என்னெ உன் கண்ணுக்குள்ள வெச்சுக் காப்பாத்துவியா? உன்னோட சலூன் கடை அம்மாவாசைக்கு லீவுதானே? நாளைக்கு கோபி கூட்டிட்டுப் போறியா? பச்சை மலைக்குப் போகலாம். சாமி கும்பிடலாம். அப் படியே புதுப்படம் ஒன்னு பார்க்கலாம். என்ன பேச்சையே காணோம்? கூட்டிட்டுப் போகமாட்டியா?” என்றாள்.



“நீ எங்கே கூப்பிட்டாலும் வருவேன் சரோ... கொஞ்சம் நேரம் உன் லொட லொட வாயை லொட லொடக்காம இரேன் சரோ...” என்றவன் சரோஜாவின் இதழ்களைக் கவ்வினான். சரோஜா அப்புறம் எதுவும் பேசவில்லை. கண்கள் இருட்டு வானம் பார்த்து செருகிக் கொண்டன. சரோஜா அவன் முதுகைத் தன் கைகளால் தடவிக் கொடுக்கத் துவங்கினாள்.



அடுத்த நாள் இருவரும் பேசி வைத்தது மாதிரி பச்சைமலைக்குச் சென்றார்கள். கோபாலன் மஞ்சள் கயிற்றைக் கட்டினான். சரோஜா மிரண்டாள். இப்ப என்ன அவசரம் என்றாள். என் தங்கம் என் கூடவே எப்பவும் இருக்கோணும் என்றான். இல்லை என்றால் சாவதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்று அழுதான். அழுபவனை எப்படித் தேற்றுவது என்று சரோஜாவிற்குத் தெரியாமல் அவனுக்கே பச்சை மலை உச்சியில் கழுத்தை நீட்டினாள். பச்சைமலையில் வீற்றிருந்த முருகன் தெற்குப் பார்த்தபடி முகத்தைத் திருப்பி ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டான். அது மூங்கில்பாளையத்தைப் பார்த்துத்தானாய் இருக்க வேண்டும்.



அப்பிச்சிக்கும், அம்மாயிக்கும் சாகவேண்டிய காலத்தில் பேத்தி பிரச்சினையைக் கொண்டு வந்து விட்டாள். நீயெல்லாம் சாதிக்காரியாடி? என்று அம்மாயி கத்திக் கொண்டே பெரிய வீட்டைச் சுற்றியது. ராமசாமி கவுண்டரை அப்பிச்சி போனில் கூப்பிட்டது! ராமசாமிக் கவுண்டருக்கு சேதியைக் கேட்டதிலிருந்து காலும் கையும் ஓடவில்லை. கெழக்குத் தோட்டத் தான் முத்துச்சாமி கவுண்டருக்குப் பதைபதைத்து போன் அடித்தார். முத்துச்சாமி கவுண்டரும் ராமசாமி கவுண்டரும் சொந்த அண்ணன் தம்பிகள்தான். இருவருமே ஆறேழு வருடங்களுக்கு முன்பாக உள்ளூர் தேர்தலின் போது சண்டை போட்டுக்கொண்டு கட்டுமாரு கட்டிக்கொண்டு மூங்கில்பாளைய வீதியில் உருண்டவர்கள்தான். எதிர்முனையில் யாரு? என்ற தம்பி குரல் கேட்டதும் இவர் முசுக்கென அழ ஆரம்பித்துவிட்டார். அழுகை சப்தம் வைத்தே அண்ணன்தான் என்பதை உணர்ந்த முத்துச்சாமி கவுண்டர் அழட்டும் என சித்த நேரம் விட்டார்.


“என்றா பார்த்துட்டே இருக்கேன்... பொட்டப்புள்ள கணக்கா... கூகூன்னு அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தமுன்னு வேண்டாம். என்னாச்சுன்னு சொன்னாத்தான தெரியும் எழவு? சரி இல்லீன்னா போனை வெய்யி நீயி... உம்பொட ஊட்டுக்கே வாரேன். ஆளுதான் தடிமாடு கணக்கா இருக்கியேயொழிய ஒரு எழவும் தெரியாதுடா உனக்கு! போனை வெய்யிடா... நானே வர்றேன்” என்று முத்துச்சாமி கவுண்டர் கூறவும் துண்டால் கண்ணீரைத் துடைத்துவிட்டு போனை வைத்தார்.



முத்துச்சாமி கவுண்டரும் அண்ணனுக்கு என்ன பிரச்சினையோ என்று உடனேயே அம்பாஸிடரை எடுத்துக்கொண்டு அண்ணன் வீடு வந்துவிட்டார். அண்ணி வாசல் படியில் தலையில் கைவைத்து அழுது கொண்டு இருந்தது. தென்னை மரத்தில் சங்கிலியில் கட்டப்பட்டிருந்த நாய் இவரையும் இவரது காரையும் அடையாளம் கண்டு கொண்டு எழுந்து வாலை ஆட்டிக் கொண்டே ‘கூ’ என முனகியது. அண்ணன் வீட்டினுள் சோபாவில் அமர்ந்திருந்ததைக் கண்டதும், 'என்னடா ஆச்சு?' என்று கேட்டுக் கொண்டே அருகில் கிடந்த நாற்காலியில் சென்று அமர்ந்தார். ராமசாமிக் கவுண்டர் விஷயத்தை நிதானமாய்க் கூறினார்.



“இப்ப அவிங்க ரெண்டுபேரும் எங்க இருக்காங்களாமா?”


“திங்களூர்ல ஊட்டுலதான்.”


“இங்க உட்கார்ந்துட்டு என்ன வேலை... அங்க போயி பார்த்துக்கலாம். போயி தாலிய அத்து வீசி எறிஞ்சுட்டு நம்ம புள்ளையக் கூட்டிட்டு வந்தரலாம். ஆமா அந்தப்பயல் என்ன நம்ம சாதியா? நம்ம சாதியின்னா ஆரு எவரன்ன விசாரிச்சுத்தான் எதையும் பண்டோனும்.”



“என்ன சாதியோ என்ன கருமமோ.. பரிச்செ லீவுல இங்கயே ஏன் அவளும் ஊட்டச் சுத்தீட்டே கெடக்காட்டீன்னுதான் போறேன் போறேன்னு ஒத்தக் கால்ல நின்னவளைத் தாட்டி உட்டேன். இப்போ ஒரே மாசத்துக்குள்ள தலையில கல்லைப் போடாத கொறையா பண்டி வெச்சுட்டா அவளை அங்கயே கொன்னு பெதச்சுப் போட்டு நாம வந்துடலாம்டா!”



“சரி சுந்தரன் எங்கெ? காலேஜ் போயிட்டானா? இருந்தா அவனையும் கார்ல ஏத்தீட்டுப் போயிடலாம்... கொல்றது புடிக்கிறது எல்லாம் போயி அங்க பார்த்துக்கலாம்.”



“காலேஜுக்கு எங்க போனான்... அதான் காலேஜும் லீவாப் போச்சே... ஊர் சுத்த காத்தால போனவன் இன்னங் காணம். சரி, உம்பட சட்டைல பட்டனைச் செரியாப் போடு. மேல ஒன்னு கீழ ஒன்னு போட்டுட்டு வந்துருக்கே. உம்பட அண்ணிக்காரிய கூட்டிட்டுப் போலாமா. ஒப்பாரி வெச்சாள்னா திங்களூர் முழுசுக்குமே கேட்டுத் தொலைக்குமே!”



“வேண்டாம். அது இங்கயே இருக்கட்டும். காதும் காதும் வெச்சமானிக்கே விசயத்தை அங்கயே முடிச்சுப் போட்டு நாம வந்துரோணும் பாத்துக்க. மூங்கில் பாளையத்துக்குள்ளார பரவீடுச்சுன்னா உலவத்துக்கே தெரிஞ்சு போனமாதிரி ஆவிப் போயிரும். நாளைக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டே இருக்கும். பொட்டப்புள்ள சமாச்சாரம். நாளைக்கி ஒரு கல்யாணங்காச்சி பண்ட முடியாமப் போயிரும். நட போலாம்” என்று பட்டனைச் சரியாய்ப் போட்டுக் கொண்ட முத்துச் சாமி கவுண்டர் வெளி வாசலுக்கு வந்து அண்ணி அருகே நின்றார்.



“சும்மா எழவு உழுந்தட்ட மாதிரி வாசப்படியில உக்காந்துட்டு அழுதுட்டே இருக்கப்புடாது ஆமா பாத்துக்க. கூலிக்கார மாதாரிக பார்த்துட்டாங்கன்னா காதும் காதும் வெச்சு திருகிப் பேசிப் போடுவானுக. போய் உள்ளார உட்கார்ந்துட்டு அழு போ. நாங்க போய் கூட்டிட்டு சுருக்கா வந்து சேர்ந்துடறோம்.” முத்துசாமி கவுண்டர் காரைப் பார்த்தபடிதான் அண்ணியிடம் பேசிக் கொண்டிருந்தார். நேருக்கு எப்போதுமே முகம் பார்த்து அண்ணியிடம் பேசமாட்டார். சொன்னதுதாங்கோடு என்று எழுந்தவள், 'புக்கிட்டியூண்டு இருந்துட்டு அந்த சண்டாளி எந்த எடுபட்ட காசியோட தாலிய வாங்கீட்டு நிக்கறாள்னே தெரியிலியே. அவளெ அவத்திக்கே கொன்னு பொதச்சுப் போட்டு ரெண்டு பேரும் ஊடு வந்து சேருங்க. எமசாந்து வாங்குனது பேரு கொண்டாருது பாரு ஊட்டுக்கும் அப்பன் ஆத்தாளுக்கும்' என்று முனகிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தது.




“தங்கம், செல்லம், கன்னுக்குட்டின்னு கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தினா தங்கக் குட்டி இந்த வேலைதான் செஞ்சுட்டு நிக்கும். கோழி ஒன்னெ புடிச்சு அடிச்சு சாறு காச்சி வெய்யிடி.. எட்றா வண்டியெ” என்று ராமசாமி கவுண்டரும் கார் கதவை நீக்கி உட்கார்ந்து கொள்ள முத்துச்சாமி கவுண்டர் கோபமாகவே ஆக்ஸிலேட்டரை மிதித்து இழுத்தார்.



கார் விசயமங்கலம் மேக்கூரைத் தாண்டியதும் வடக்கே வேகம் பிடித்தது. திங்களூர் பனிரெண்டு கிலோ மீட்டர்தான். முத்துச்சாமிக் கவுண்டர் தன் அண்ணியினுடைய தாய் வீட்டில் காரைக் கொண்டு வந்து நிறுத்தும்வரை அண்ணனிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ராமசாமி கவுண்டருக்குள்ளும் தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது. அண்ணனுக்கு ஒன்று என்கிறபோது முத்துச்சாமி கவுண்டருக்குத் தன் பெண்ணே தப்புக்காரியம் செய்துவிட்ட துடிப்புதான் இருந்தது. இத்தனை வருடப் பகையை இந்தக் குட்டிக் கழுதை தீர்த்து வைத்துவிட்டது.



பெரிய வீடு அமைதியாக இருந்தது! காரை நிறுத்தி இறங்கியவர் திடுதிடுவென வீட்டுக்குள் ஓடினார். நடு ஹாலில் புதுமணத் தம்பதிகள் டி.வி. பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார்கள். விரைந்து வீட்டினுள் வருபவரைக் கண்ட சரோஜா, “சித்தப்பா” என்று எழுந்தாள். போன சுடிக்கு அவள் கன்னத்தில் ஒரு அப்பட்டம் போட்டார் முத்துச்சாமி கவுண்டர். “ஐயோ” என்று திருகி சரோஜா விழுந்ததும் பொடணி மயிரோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு கோபாலனை நாலு மிதி வைத்து “யார்ரா நாயி நீயி?” என்றார். அதற்குள் ராமசாமிக் கவுண்டர் ஓடி வந்ததும் கீழே கிடந்த மகளைத் தூக்கி நிறுத்தி சாத்துச் சாத்தென சாத்தினார். “அடக் கொன்னு கின்னு போடாதீங்டா” என்று பெருசு ஓடிவந்து இருவரையும் தள்ளிவிட்டது. முத்துச்சாமி கவுண்டர் ஒதுங்கி நின்று கோபாலனின் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி வைத்தார். அவன் அருகில் இருந்த தூணில் மோதி சரிந்து சாய்ந்து கையெடுத்துக் கும்பிட்டான். பின்னர் சோபாவில் கைகளை விரித்து சாய்ந்துகொண்டார்.



“இவன் யாராமா? கேட்டீங்ளா?” என்று பெரியவரைப் பார்த்துக் கேட்டார்.



“அவனாருன்னா? மூஞ்சீலயே எழுதி ஒட்டியிருக்குது தெரியிலியா? உள்ளூர் அப்புக்குட்டி நாசுவனோட பேரன். பெரிய புள்ளைய காஞ்சிக் கோயிலுக்குக் கட்டிக் குடுத்தான். அவளோட பையன்தான்.”



“ஏன்டா நீ நாசுவனாடா? எப்பட்றா இப்புடியெல்லாம் தைரியமா பண்றீங்க? எந்திரி மொதல்ல நீ.. போடா... அடிச்சுக் கொன்னே போடுவேன். போயி வாசல்ல நில்லு போ... எந்தர்றா மேல. கொன்னு கொண்டி வாய்க்கால்ல எறிஞ்சுட்டுப் போயிடுவேன்” என்று இவர் சப்தம் போடவும் தடுமாறி எழுந்த கோபாலன் வீட்டை விட்டு வெளியே சென்று வாசல்படி இறங்கி வாசலில் நின்றான்.



“கையைக் கட்டீட்டு நில்றா. அக்கட்ட இக்கட்ட நவுந்தீன்னா வந்து ஒரே ஒதைதான். இடுப்பு எலும்பு கத்திரிச்சுப் போவும் பார்த்துக்க. ஏம் பெருசு, உனக்கு அறிவு இருக்குதா இல்லையா? அப்புக்குட்டி பேரன்னு உனக்குத் தெரிஞ்சிருக்குது. நடு ஊட்டுல கொண்டாந்து உக்காத்தி வெச்சுட்டு இருந்திருக்கே. உனக்கொரு சாவு வரமாட்டீங்குது பாரு” என்று கோபத்தைப் பெருசிடம் திருப்பினார்.



“யாரு என்னன்னு கேட்டதுக்கு இன்னாருங்கன்னு சொன்னான். அதுக்குள்ளார கெழவி முந்தீட்டு வெளியே போடான்னுதான் சொன்னா. அதுக்குக் கெழவிய சரோசாப்புள்ள, 'போடி பெரிய இவ வந்துட்டா. எம்பட ஊட்டுக்காரனை வெளியே போவச் சொல்றா பாரு'ன்னு கத்தங்காட்டி அவ இந்தக் கருமம் எக்கேடோ கெட்டு ஒழியட்டும்னு ஒதுங்கீட்டா. அம்மாயியையே தூக்கி எறிஞ்சு பேசுறவகிட்ட என்னத்த பேசுறதுன்னுதான் அப்பனுக்கு போனைப் போட்டேன்” என்றவர் லொக்கு லொக்கென இருமிக் கொண்டே எதிர்த்த சோபாலில் உட்கார்ந்தார்.



“என்ன ஒரு ஏத்தமிருந்தா அவன் நடு ஊட்டுல உட்கார்ந்து டி.வி. பார்த்துட்டு இருப்பான்? ஏன்டி சரோஜா.. ஏன்டி காரியத்தைச் செஞ்சு போட்டு திருட்டு முழி முழிச்சுட்டு இருக்கே? சொல்லுடி”



“சித்தப்பா...”

“சித்தப்பன்தா நானு சொல்லுடி... என்ன பண்ணப் போறே?”

“நானு அவருகூட அவுங்க ஊட்டுக்கே போறேன் சித்தப்பா.”

“அவுங்க ஊட்டுக்கே போறியா? போயி?”

“போயி பொழைச்சுக்கறேன்.”

“டேய் ராமசாமி... அப்புடியே அவ கழுத்தைப் புடிச்சு நசுக்கி திருகிக் கொல்றா. நாயமயிரு பேசுதுபாரு புள்ளை.”

“சித்தப்பன் சொல்றதைக் கேட்டுத் தொலைடி சனியனே. எனக்குன்னு வந்து வாய்ச்சே பாரு. திடும் திடும்னு ஊட்டுக்குள்ளார நி நடக்குறப்பவே தெரியும்டி. இப்புடி எல்லாம் பண்டுவீன்னு. நான் உன்னியக் கொல்லமாட்டேன். ஆனா சித்தப்பன் சொல் பேச்சு கேக்கலீன்னா கழுத்தை திருவிக் கொன்னு போடுவான்” என்றார் ராமசாமி கவுண்டர். கூகூவென சரோஜா அழ ஆரம்பித்தாள். முத்துச்சாமி கவுண்டர் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரனை போனில் கூப்பிட்டார். விஷயத்தைச் சொல்லி வரச்சொன்னார்.

“சரோஜா... இப்போ இங்கெ திங்களூர் போலீஸ் வந்துடுவாங்க. அவனைக் கொண்டி கோயமுத்தூர் ஜெயில்ல போட்டுருவாங்க. உனக்கு வயசு பதினெட்டுகூட ஆவலை. அதனால உன்னைய எந்த ஊர் ஜெயில்ல போடுவாங்கன்னு தெரியல” என்றவரை அழுதபடியே பார்த்தவள் பயத்தில் மிரண்டாள். இப்படி எல்லாம் கூடவா செய்வார்கள்? போலீஸ், ஜெயில் என்கிறார்களே! அம்மா இவர்களோடு ஏன் வரலை? அம்மா வந்திருந்தால் அழுதாவது கோபாலனை மூங்கில் பாளையம் கூட்டிப் போயிருக்கலாம். அப்பனும் கூட ஆனது ஆயிப் போச்சு என்று விட்டுவிடும். இந்த சித்தப்பன் மலை முழுங்கி மகாதேவனாச்சே! சண்டை கட்டிக் கொண்டவர்கள் எப்போது ஒட்டுக்காகச் சேர்ந்தார்கள்!

“ஐயோ சித்தப்பா... போலீசு, ஜெயிலு எல்லாம் வேண்டாம் சித்தப்பா.”

“வேண்டாம்னாலும் உனக்கு வயசு பதினெட்டு ஆகலியே.”

“பதினெட்டு ஆவாட்டிப் போயிச்சாட்டாது. நானு கோபாலு ஊட்டுக்கே போயிடற«ன் சித்தப்பா. எனக்கு அவனைத்தான் புடிச்சிருக்குது.”

“நாயிப் பொச்சுல தேன் ராட்டு தொங்குதுன்னு போய் வழிச்சு எடுத்து நக்கிக்க முடியுமா? போயி ஜெயில்ல உட்கார்ந்துட்டு களி தின்னுட்டு எத்தனை வருசம் உள்ளார போடறானோ கெடந்துட்டு வா.”

“ஏன்டா முத்துச்சாமி, போலீசை வரச்சொல்லிட்டியா?” என்றார் ராமசாமிக் கவுண்டர்.

“நீ மொதல்ல அவ கழுத்துல கெடக்குற கவுத்தை அத்து வீசு.”

“ஐயோ, கவுத்தை அத்து வீசிடா தீங்கப்பா” என்றாள் சரோஜா. அவள் இரண்டு கைகளையும் கழுத்தில் வைத்துக் கொண்டாள், எங்கே சித்தப்பன் பேச்சைக் கேட்டு அப்பன் அத்து வீசிவிடுமோ என்று.

“சரி, உடு அண்ணா. போலீஸ்காரங்க தொட்டதுக்கெல்லாம் ஜெயில்ல போட்டு மிதிப்பாங்கள்ல அப்ப தானா தெரிஞ்சுக்குவா” என்றவர் வெளியே வாசலைப் பார்த்தார். கோபாலன் வாசலில் குத்த வைத்து தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். அதே நேரம் வாசலுக்கு இரண்டு மூன்று பைக்குகள் வந்து ஓய்ந்தன. வண்டியை நிறுத்திவிட்டு வந்த பஞ்சாயத்துத் தலைவரை வரவேற்க வெளிவாசலுக்குக் கும்பிடு போட்டபடி முத்துச்சாமி கவுண்டர் வந்தார்.

“வாங்க மாப்ளே.” பதிலுக்கு அவரும் கும்பிடு போட்டுவிட்டு வாசலில் குத்த வைத்திருந்தவனைப் பார்த்து 'இவனா?' என்றார்.
பின்னாலேயே வந்த அப்புக்குட்டி கோபத்தில் சென்று கோபாலன் முதுகில் நான்கு குத்துக்கள் வைத்தான்.

“சாமி வந்திருக்காப்ல. எருமெ கணக்கா உட்கார்ந்துட்டு இருக்கியாடா. சோத்தத் திங்கறியா? பிய்யத் திங்கறியாடா? எந்தர்றா மேல” என்று அப்புக்குட்டி கத்தியதும்தான் கோபாலன் எழுந்து தலைவருக்கு வணக்கம் போட்டான். தலைவர் அவனைக் கண்டுகொள்ளாமல் கூடவே வந்திருந்தவர்களை கிட்டே அழைத்தார். அவர்களும் 'என்னுங் தலைவரே!' என்று வந்தார்கள்.

“உள்ளார போயி நாலு சேர்க இருந்தா எடுத்துட்டு வாங்க. இப்புடி தென்னை மரத்துக்கிட்டயே உட்கார்ந்துக்குவோம்” என்றதும் அவர்கள் உள்ளே சென்றார்கள்.

“மாப்ளெ, போலீசோடதான் வருவீங்கன்னு பார்த்தேன்” என்றார் முத்துச்சாமி கவுண்டர்.

“இதுக்கெதுக்கு போலீசு? சொல்லிப் பார்ப்போம். பையன் இனி என்ன சுடியில இருக்கான்னு பார்ப்போம். முடியலீன்னா பார்ப்போம்.” ராமசாமிக் கவுண்டரும் சரோஜாவோடு வெளியே வந்தார். 'வணக்கம் மாப்ளே!' என்றொரு கும்பிடு வைத்தார்.

“புள்ளை எந்த ஊர் பள்ளிக் கோடத்துல படிச்சுட்டு இருந்தது மாமா?”

“விசயமங்கலத்துலதான் மாப்ள, பத்தாவது பரிட்சை எழுதிட்டு லீவுல வந்தா இங்கெ.”

“இந்த வயசிலேயே இதுகளுக்கெல்லாம் என்ன தெரியும்னு தாலியக் கட்டிக்குதுகன்னே தெரியல. போன வாரம் இதே ஊர்ல ஒரு ஜோடி ஓடிப் போயிடுச்சு. இன்னமும் எங்கே இருக்காங்கன்னே தெரியல. காலம் எங்கே போவுதுன்னே தெரியில. வெசாலக்கிழமை சந்தையன்னிக்குப் பார்த்தா துக்கிளியூன்டு துக்கிளியூண்டு புள்ளைக இடுப்புல கொழந்தைய வச்சுக்கிட்டு ஜாமான் வாங்கிட்டுப் போவுதுக. சுத்திலும் பனியன் கம்பெனிக வந்துட்டுது. இந்த ஊர்க்காரங்க யாரு... வெளியூர்ல இருந்து வந்தவுங்க யாருன்னு ஒன்னும் எனக்கே தெரிய மாட்டீங்குது. அட, இப்பிடியே சேர்களைப் போடுங்கப்பா... அதான் வெயிலும் இல்லையே!” என்றவர் சேரில் அமர்ந்து கொள்ள, ராமசாமி கவுண்டரும், முத்துச்சாமி கவுண்டரும் சேர்களில் உட்கார்ந்தனர்.

“சரி மாமா. என்ன பண்ணலாம்ங்கறீங்க? உங்களுக்குத் தெரியாததையா இனி நான் பண்ணப்போறேன். புள்ளை என்ன சொல்லுது? அப்புக்குட்டி டேய்... இவுனுக்கு காது வேற கேக்காது. கத்திக் கத்தி சைகை வேற செய்யோணும். இங்க இழுத்தாந்து நிறுத்துடா உன் பேரனை” என்றதும் “சாமீ” என்றவன் கோபாலனைத் தள்ளிக் கொண்டு வந்து தலைவர் முன் நிப்பாட்டினான்.

“சாமி பொடணீல இவன் முடி வளர்த்தீட்டு புட்டுர்பைக்குல சுத்தீட்டு இருக்கப்பவே இப்புடி எதாச்சிம் பெருசா வில்லங்கத்தைக் கொண்டாந்துடுவான்னு நெனச்சுட்டே இருந்தனுங்க சாமி. இப்படி ஒரு காரியத்தை செஞ்சு போட்டானுங்ளே. நீங்க இவனை என்ன பண்டுனாலும் நானு ஒன்னுஞ் சொல்லலீங்க. இப்புடி ஒரு தப்பை எனக்கு முன்னாடி இருந்து எம்பட காலம் வரைக்கிம் செஞ்சதே இல்லீங்ஸெகா. பேசுறானான்னு பாருங்க சாமி ஒரு வார்த்தை.”

“அவனெல்லாம் பேசமாட்டான் அப்புக்குட்டி. ஜெயிலுக்குள்ளார போயி போலீஸ்காரங்ககிட்ட மிதி தின்னாத்தான் தெரியும்.”

“சாமி என்ன சொல்றீங்க? ஜெயிலுக்கா?”

“பின்ன, பத்தாவது படிக்கிற புள்ளைக்குத் தாலிய கட்டி கெடுத்து வச்சிருக்கான். இது அவுனுக்கே தெரியுமே! ஏண்டா எத்தனாவது வரைக்கும்டா நீ படிச்சிருக்கே? சொல்றா?”

“நானு டுவல்த் வரைக்கும் படிச்சிருக்கேனுங்க.”

“தாலி கட்டச் சொன்னது அவளாடா? இல்ல நீயே அதப்பண்டலாம், இதப் பண்டலாம்னு சொல்லித் தாலி கட்டினியா?”

“நான்தானுங்க கட்டறேன்னேன். சரோஜா சரின்னுடுச்சு.”

“எங்கடா கூட்டிட்டுப் போனே?”

“பச்சைமலைக்குத்தானுங்க.”

“யாரு? என்ன ஜாதின்னு தெரிஞ்சுதான் கட்டுனியா?”

“அதெல்லாம் தெரியாதுங்க. புள்ளைதான் என்கிட்ட லவ்யூன்னு மொதல்ல சொல்லுச்சுங்க. நல்ல புள்ளைன்னு கட்டிக்கிட்டனுங்க.”

“சரி சரி... நல்ல புள்ளைன்னு கட்டிக்கிட்டே. கைவசம் தொழிலும் இருக்குது காப்பாத்திடுவேன்னு வெச்சுக்க. நேரா திங்களூர் வழுவுக்குள்ளார போயி எவளையாச்சிம் லவ்யூன்னு சொல்லித் தாலி கட்டி குடும்பம் பண்டலாம்ல? இந்த ஏரியாவுக்கு வர்ற போதே எந்த ஏரியா இதுன்னு தெரியாமயா வந்திருப்பே? ஒழுங்கு மரியாதையா இந்த ஊரை உட்டு ஓடியே போயிடறேன்னு சொல்லிட்டீன்னா நீ தப்பிச்சே. இல்ல தகராறு பண்றதுன்னா இதபாரு... இப்பவே எஸ்.ஐயைக் கூப்பிடறேன். சொல்லு, உன்கிட்டவெல்லாம் வளவளன்னு பேசிட்டு இருக்கறதுக்கு இப்ப நேரமில்லை எனக்கு.”

“நானே நாளைக்கிக் காத்தால இவனெ இவங்காயா ஊருக்கே காஞ்சிக் கோயிலுக்கே தாட்டி உட்டிடறேனுங் சாமி” என்றான் அப்புக்குட்டி.

“நீ தாட்டி உட்டுருவே, அவன் போகணுமில்லே.”

“சொல்றா டேய் கோவாலா. சாமி கிட்ட சொல்றா. இல்லின்னா உன்னையக் கொன்னே கொண்டு போயி வீசிட்டுப் போயிடுவாங்டா” என்றான் அப்புக்குட்டி.

“சேரிங் நானு காத்தாலைக்கி ஊருக்கே போயிர்றனுங்க.”

“போயிட்டீன்னா ஒரேமுட்டா போயிடு. மறுபடியும் இந்தப் புள்ளைகிட்டே பேசணும், புடிக்கோணும்னு நெனச்சுட்டு சுத்துற வேலை எல்லாம் வச்சுக்கிட்டா உன்னைய என்ன பண்ணலாம்?”

“சாமி அவன் அந்தப் புள்ளை இருக்கிற பக்கம் தலை வச்சுக்கூடப் படுக்க மாட்டானுங்க.”

“நீ குறுக்க குறுக்க விலா ஓட்டாதடா அப்புக்குட்டி. அதை அந்தப் பையனே சொல்லட்டும். என்றா சொல்லு?”

“ஆமாங்க.”

“என்னடா மொட்டையா லோமாங்கொங்றே?”

“எங்கப்பிச்சி சொன்னாப்ல தானுங்க. நானு எங்கீம் போயி அந்தப் புள்ளைக்கித் துன்பங் குடுக்கமாட்டனுங்க.”

“டேய், நீயெல்லாம் ஒரு ஆளாடா? உன்னிய நம்பி எம்பட கழுத்தை நீட்டினேம் பாரு நானு. எம்பட கல்யாணம் நாசுவன் குசுவாவே போவட்டும்” என்ற சரோஜா கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை உருவி எடுத்து கோபாலன் முகத்தில் விட்டெறிந்தாள்.

“அப்போ நானு புறப்படறனுங்க மாமா. டேய் அப்புக்குட்டி, சொன்னது சொன்னாப்புல நடந்துக்கோணும். மறுபடி பிரச்சினை எதாச்சிம் வந்துச்சுன்னா என்னைய மனுசனாவே நீ பாக்கமாட்டே ஆமா..” என்று எழுந்த தலைவர் வணக்கம் போட்டுவிட்டுக் கிளம்பிப் போனார். அவர் சென்றதும் இவர்கள் முன் “சாமி” என்று கும்பிடு வைத்தான் அப்புக்குட்டி. சரோஜா கோபாலனிடம் சென்று காறி அவன் முகத்தில் துப்பிவிட்டுப் போய் காரில் உட்கார்ந்தாள். அப்புக்குட்டி கோபாலனை இழுத்துக்கொண்டு போனான். இந்த விஷயம் அப்படியே திங்களூரோடேயே முடிந்து போய்விட்டது. சரோஜாவும் இந்த விஷயத்தை திங்களூரோடே விட்டும்விட்டாள். பத்தாவதில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாள். முன்னூற்றி தொன்னூறு மார்க். மேற்கொண்டு பெருந்துறைக்குப் படிக்க அனுப்புவார்கள் என்றுதான் எதிர்பார்த்தாள். அப்படியான பேச்சே வீட்டில் கிளம்பவில்லை. அந்த விஷயத்துக்குப் பிறகு அதிகமாய் அம்மாவோடோ, அப்பாவோடோ இவள் பேசிக் கொள்வதுமில்லை. எந்த நேரமும் டி.வி.தான். சித்தப்பா வீட்டில் பாதி நேரமும் இவள் வீட்டில் பாதி நேரமுமாய்ப் பொழுதை ஓட்டினாள். அண்ணன் கந்தசாமியிடம் மட்டுமே பேசுவாள். மாத நாவல்களை ஈரோட்டிலிருந்து வாங்கி வரச் சொல்வாள். திங்களூர் விஷயம் நடந்து முடிந்துகூட ஏழெட்டு மாதமாகிவிட்டது. அப் போதுதான் இவளுக்குள் இரண்டாம் முறையாக காதல் இவள் வயிற்றினுள் மீண்டும் வேர்விட்டது.

சாமிநாதன்

உள்ளூர்க்காரன்தான். அடிக்கடி இவள் பள்ளிக்குப் போகையில் பார்வையில் தட்டுப்பட்டவன்தான். இவனது அப்பன் சுப்பன் இருபது வருடங்களாக இவர்கள் பண்ணையத்தில் இருப்பவன்தான். வீட்டின் பின்புறம் மாமரத்தின் அடியில்கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கொண்டிருந்த சாமிநாதனை, தொட்டியில் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வரப்போனவள் பார்த்து அதிசயித்து நின்றாள். இவ்ளோ சிவப்பாய் அழகாய் அதுவும் நம் தோட்டத்தில்? கேள்வியில் நின்றவள் குடத்தில் தண்ணீரை நிரப்பி விட்டு எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டவள் காலை உதறினாள். நிலத்தில் நங்கென ஊன்றினாள். சலசலவென கொலுசு சத்தம் கேட்கவே சாமிநாதன் கிணற்றுப்புறமாய் முகத்தைத் திருப்பினான். சின்னக் கவுணுச்சி! மளாரென எழுந்து நின்றவன்,

“தேனுங் கவுணுச்சி” என்றான்.

“நீ எங்கெ எங்க தோட்டத்துல இருக்கே?” என்றாள்.

“உங்க தோட்டத்துக்கு வரப்புடா துங்றீங்ளா சின்னக்கவுணுச்சி?”

“நான் எதுக்கு வரவேண்டாம்ங்றேன். உங்கொப்பனைப் பார்க்க வந்தியா?”

“உங்க டிரேக்டரை ஒரு மாசத்திக்கி ஓட்டறதுக்கு வந்திருக்கணுங்க. இன்னா வரைக்கிம் குப்பை எடுத்து டிரேக்டர்ல கொட்டிக் கொண்டி வடகோட்டுக் காட்டுல கொட்டிட்டு வந்தனுங்க. சரீன்னு ஊடு போயி ஒரு வாய் கரைச்சுக் குடிச்சுப் போட்டு வந்து சித்தெ படுத்திருந்தனுங்க.”

“நீயி எத்தனாப்பு வரைக்கிம் படிச்சே?”

“பத்தாவது வரைக்கிந்தானுங்க.”

“குப்பை அள்றதுக்கு வந்திருக்கே?”

“தறிக்குத் தானுங்க போயிட்டு இருந்தேன். எங்கப்பன்தான் முந்தா நேத்து பெரிய கவுண்டரு பாக் கோணும் உன்னையென்னு சொல்றார்டான்னு சொன்னாப்ல. சரீ என்னன்னு கேட்டுப் போட்டுப் போவலாம்னு வந்ததீம் டிரேக்டர் சாவிய எடுத்துக் கையில குடுத் துட்டாப்ல. குடோனு ஓனருக்கு போனைப் பண்டி பையன் ஒரு மாசத்திக்கி வரமாட்டான். தோட்டத்துல வேலை இருக்குதுன்னு சொல்லிட்டாப்ல.”

“உனக்கு டிராக்டர் ஓட்டத் தெரியுமா?”

“அதென்ன கம்ப சூத்திரமுங்ளா சின்னக்கவுணுச்சி. அப்புறம் மேல படிக்கப் போவலீங்ளா நீங்கெ?”

“படிச்சு அஞ்சாறு ஆச்சு” என்று சரோஜா சொல்லியபோது சாமிநாதன் போன் அலறியது. 'தோழியா? என் காதலியா? யாரடி என் கண்ணே?'

“அட எடுத்துப் பேசு. நான் நின்னா என்ன?” என்று சரோஜா சொல்லிய பிறகே எடுத்து ஆன் செய்து 'ஹலோ' என்றான்.

“தோண்டா? சொல்றா! சாயந்தரம் ஆறு மணிக்கு விசயமங்கலம் பஸ் ஸ்டாப்கிட்ட வர்றேன். இப்பவா? வேலைக்காட்டுல இருக்கன்டா. செரி வெய்யி” என்றவன் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

“செல் எல்லாம் வச்சிருக்கியா நீயி.. நெம்பரைச் சொல்லு” என்றாள். இவன் நெம்பர் சொன்னான். அவள் மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். பின்னதான் சாமிநாதனுக்கு ஏன்டா நெம்பரை சின்னக்கவுணுச்சிக்கு சொன்னோம் என்றாகிவிட்டது.

கட்டிக்கொண்டிருந்த தலையணையை அருகே வைத்துவிட்டு செல்போனைக் கையில் எடுத்தாள். மணி பார்த்தாள். பத்து முப்பது ஆகியிருந்தது. எஸ் வரிசையில் சென்று சாமி என்ற பெயரில் நின்று சாமிநாதனுக்கு ரிங் விட்டாள். 'தோழியா? என் காதலியா? யாரடி என் கண்ணே...' பாடல் பாடியது. எதிர்முனையில் சாமிநாதன் எடுத்ததுமே இச் இச் இச்சென முத்தம் வைத்தாள்.

“சாமி சாப்டுட்டியா?”

“சாமி சாப்டுட்டியா?”

'டேய் கொரங்கா! தின்னு தொலச்சுட்டியாடா? ஏன்டா பேச மாட்டீங்றே? என்னடா கோவம் என் மேல?'

"ஏனுங்... சின்னக்கவுணுச்ச இப்புடி?"

"கூப்பிடாதடா இனிமேல் என்னை அப்புடி. எத்தனவாட்டிடா நான் சொல்றது உனக்கு? சின்னக் கவுணுச்சியாம் சின்னக்கவுணுச்சி. எனக்கென்ன கொம்பாடா மொழைச்சிருக்குது! கூப்புடுடா சரோஜா குட்டின்னு!"

"ஐய்யோ சின்னக்கவுணுச்சி ஏனுங்கோ நீங்க இப்புடி? நானு எப்புடீங்கோ போயி உங்க பேரைச் சொல்லிக் கூப்பிடுவேன்?"

"பின்னெ நீ கூப்பிடாமெ ரோட்டுல போறவனா என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுவான். இங்க பாரு சாமிநாதா, நான் உன்மேல ஆசைப்பட்டுட்டேன். நீ பண்ண வேண்டிதெல்லாம் என்னெய லவ் பண்றது ஒன்னுதான். உனக்குப் பலதடவை சொல்லிட்டேன்."

"ஐய்யோ கவுணுச்சி. உங்களுக்கு நான் சொல்றது ஏனுங்கொ புரியமாட்டீங்குது? நானும் எங்கப்பனும் உங்க காட்டுல வேலை செய்யுற கூலி ஆளுகங்க சின்னகவுணுச்சி.

“ஏன்டா நானு பொம்பளைப்புள்ளை மனசுல இருக்குறத உன்கிட்ட சொல்றேன். நீ ஏன்டா ஒதுங்கி ஓடப்பாக்குறே?"

"கட்டி வெச்சுத் தோலை உரிச்சுப் போடுவாங்க பெரிய கவுண்டரும் பெரிய கவுணுச்சியும். சீப்புடிச்சு செத்துப் போயிருவேன் நானு."

"அடிச்சு வச்சுருவாங்கன்னுதான் இத்தினி நாளா பயந்துட்டுப் பேசாமல் இருந்தியாடா நீயி. அப்ப உனக்கும் என்மேல ஆசை இருக்குதுல்ல?"

"ஆசை இருக்காமப் போயிருமுங்ளா கவுணுச்சி. ரோட்டுல எத்தனை புள்ளைங்க போறாங்க. அழகா இருக்குற புள்ளைய ஆசையாப்பாக்குறதுதான்."

"நான் அழகா இல்லையா? அதைச் சொல்றா!"

"நீங்க கொள்ளைத்த அழகுதானுங்க."

"சரி, அன்னைக்கி தட்டுப்போர்கிட்ட மாட்டுக்குத் தட்டு எடுத்துட்டுப் போயி போடறதுக்கு நீ வந்தீல்ல. ஒரு முத்தம் குடுடான்னு கேட்டேன்ல. ஏன் மாட்டேனுட்டு போனே? கட்டி வெச்சு தோலை உரிச்சுப் போடுவாங்கன்னு பயந்துட்டுதானே?"

"கவுணுச்சி தூக்கம் வரலீங்ளா உங்களுக்கு? மணி பதினொன்னு ஆயிப்போச்சுங்க. தூங்குங்க நீங்க."

"எங்கடா தூக்கம் வருது எனக்கு? எந்த நேரமும் உன் நினைப்புதான். இப்போக்கூட நீயின்னு நினைச்சுட்டு தலைகாணிக்கு முத்தம் குடுத்துட்டு படுத்துட்டு இருந்தேன். நீ என்னடா பண்ணிட்டு படுத்திட்டு இருந்தே?"

"நானு ஒன்னும் பண்டுலீங்க கவுணுச்சி. தூக்கம் கண்ணை சொழட்டீட்டு வந்துச்சு. கூப்புட்டுப் போட்டீங்க. சுட்சு ஆப் பண்ணிட்டு வெச்சாத்தான் சத்தம் போடறீங்ளே!"

"நாளைக்கு மத்தியானம் என்னைக் கட்டிப்புடிச்சு உதட்டு மேல முத்தம் குடுக்குறியா?"

"நானெல்லாம் மாட்டேனுங்க"

"ஏன்டா மாட்டேங்றே? என் மேல உனக்கு ஆசை இல்லியா? இல்ல பயமா இருக்குதா?"

"ஒன்னுமில்லீங்க. என்னெயெ ஆளை விடுங்க."

"உன்னையெ நான் உடவே மாட்டேன்டா. சரி, மாமா என்ன பண்டுது?"

"மாமாவா? ஆருங்க?"

"ம். உங்கொப்பன் சுப்பன் என்ன பண்றான்?"

"அது ஒடம்பு வலின்னு மாத்திரை போட்டுட்டு எட்டு மணிக்கே படுத்து தூங்கீட்டுது."

"இப்புடி நீ என்மேல பிரியமே இல்லாமப் பேசறீல்ல. இருடா பார்த்துக்கறேன்."

"ஏனுங்க கவுணுச்சி பிரியமில்ல அது இதுன்னு பேசறீங்க. நீங்க நல்லா இருக்கோணுமுன்னுதான நான் நினைக்கிறேன். நாங்க எல்லாம் ஊசைன்னு நானே உங்ககிட்ட எப்புடிச் சொல்வேன்?" என்று சாமிநாதன் பேசிய பிறகுதான் சரோஜாவுக்கு மெதுவாய் புரிபட்டது எல்லாமே. இதற்கும் வழி பண்ணலாம் என்றே யோசித்தவள் மறுபடியும் சாமிநாதனிடம் ஆரம்பித்தாள்.

"சரி, எங்க தோட்டத்துல உன்னையெ வேலைக்கு சேர்த்தி உட்டது யாரு?"

"பெரிய கவுண்டருதானுங்க... கூப்புட்டு சாவி குடுத்தாரு."

"சரி, உன்னைய திடீர்னு அவரு கூப்பிட்டு சாவி எப்படி குடுப்பாரு?"

"அதெல்லாம் தெரியலீங்க. எங்கப்பன் சொல்லுச்சு வந்தேன்."

"நான்தான் எங்கப்பாகிட்ட சாமிநாதனைத் தோட்ட வேலைக்குக் கூப்பிடச் சொன்னேன்."

"ஐயோ!"

"என்ன லொய்யோ? எங்கம்மா கிட்ட நான் நம்ம விசயத்தைச் சொல்லி ஒரு வாரமாச்சு தெரியுமா?"

"ஐயோ! பெரிய கவுணுச்சிக்கும் தெரியுமா? மரத்துல என்னைத் தலைகீழுதா கட்டி வெச்சு கொல்லப்போறங்க."

"அப்புடி எல்லாம் ஒன்னும் நடக்காது. என் கண்ணுக்கு முன்னாடி உன்னைய அப்புடி செஞ்சுடுவாங்ளா? செய்ய உட்டுடுவனா நானு? எங்கம்மாகிட்ட நான் சொல்லிட்டேன். சாமிநாதன்தான் என்னோட ஊட்டுக்காரன்னு. நீ என்னைக் கட்டிக்கறேன்னு எங்கம்மாகிட்ட கேட்டுட்டா போதும் தெரியுமா!Ó என்று சரோஜா சொன்னதும்தான் சாமி நாதனுக்கே குழப்பமாகிவிட்டது.

"என்னடா, இத்தனை சொல்லிட்டேன். இன்னும் உனக்கு என்மேல நம்பிக்கை வரலீல்ல? போடா. உன்னைப் போயி நான் ஆசைப்பட்டு விரும்பினேன் பாரு. போன்லயாச்சும் ஒரே ஒரு முத்தம் குடேன்டா"

"ஐயோ சின்னக்கவுணுச்சி, நீங்க அதைம் இதைம் பேசிப் பேசியே என்னைய கமுத்திப் போடுவீங்ளாட்ட இருக்குதுங்க."

"அதைம் இதைம் என்னத்தைடா நான் பேசிட்டேன். உன்மேல ஆசைப்பட்டுட்டேன்னுதான இத்தனை நாளா படிச்சுப் படிச்சு சொல்லிட்டே இருக்கேன்.
நான் சாவுறேன். நான் செத்த பொறகாவது ஐய்யோ ஐய்யோன்னு அடிச்சுக்குவீல்ல" என்றவள் போனை கட் செய்தாள்.

சாமிநாதனுக்கு திடீரென இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்து விட்டது. சாவுறேன்னு சின்னக் கவுணுச்சி சொல்லிடுச்சே! ஐயோ, எக்குத்தப்பா எதாச்சிம் பண்ணிக்கிடுச்சுன்னா? ஐய்யய்யோ! நினைக்கவே பயங்கரமா இருக்கே! சாமிநாதன் திருப்பி சரோஜாவைக் கூப்பிட்டான். ரிங் ஆனது. ஹப்பாடா! சரோஜா கவுணுச்சி போனை எடுத்ததும் பேசி தப்பான முடிவுக்கெல்லாம் போகவேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் சரோஜா போனை எடுக்கவேயில்லை. மறுபடி மறுபடி அடித்தான். ஆனால் சரோஜா சிரித்தபடியே எடுக்காமலேயே இருந்தாள். எத்தனை முறைதான் அடிப்பான் பார்ப்போம் என்றே ஏழு எட்டுமுறை எடுக்காமலேயே விட்டு சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு நிம்மதியாய்ப் படுத்தாள்.

ராமசாமி கவுண்டரின் அப்பன் ராமு கவுண்டர் புகைப்படம் வீட்டின் பூஜை அறையில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. ராமு கவுண்டர் இறந்து பத்து வருடங்களாகிவிட்டது. ராமசாமிகவுண்டரின் அம்மா டொக் டொக்கெனத் தடியை ஊன்றிக் கொண்டே குனிந்தவாக்கில் பொக்கை வாயைமென்றுகொண்டே 'அதை எடுத்தாடா... அதை எடுத்தாடா' என்றே சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தது.

ராமு கவுண்டரின் புகைப்படத்திற்கு மாலையைப் போட்டவர் மூன்று படப்பு இலைகளையும் நோட்டம் விட்டார். வடை, ஆப்பிள், ஆரஞ்சு, முறுக்கு, திராட்சை, சாப்பாடு, குடல் வறுவல், கோழி வறுவல் என்று படப்பு இலை நிரம்பியிருந்தது.

“போன சுடிக்கு வாடான்னு சாமிநாதனை டிவிஎஸ் குடுத்து தாட்டி உட்டேன். போயி கால்மணி நேரம் இருக்கும். இன்னம் காணமே!” என்று தன்னப்போல் பேசிக் கொண்டு வீட்டின் வெளிவாசலுக்கு வந்தார் ராமசாமி கவுண்டர். கிழவி தடியை ஊன்றிக்கொண்டே பின்னால் வந்தது!

“ஆரைடா பாத்துட்டு இருக்கே? தேங்காய ஒடச்சு ஊதுபத்தி காட்டினீன்னா போதும்ல! முத்துச்சாமி ஊட்டுக்கும் நான் போவோணும்டா! அவன் இந்த நேரத்துக்குக் கும்புட்டே முடிச்சிருப்பான். மணி ரெண்டுக்கும் மேல ஆயிப் போச்சாட்ட!” என்று பேசிக்கொண்டே வீட்டினுள் போய்விட்டது.
சாமிநாதன் டிவிஎஸ்ஸில் வீட்டின் முன் வந்து நின்றான்.

“ஏன்டா இவ்ளோ நேரம். எடுத்துக்குடு, நேரமாயிட்டு இருக்குது.”

“காத்து ரெண்டு வீல்லயும் ரொம்ப கம்மியா இருந்துதுங்ளா, சைக்கிள் கடைக்காரர்கிட்ட உட்டு ரெண்டு வீலுக்கும் காத்துப் புடிச் சுட்டு வந்தனுங்க” என்றவன் கவரில் இருந்த முழுப்பாட்டிலை உருவி எடுத்து நீட்டினான்.

“ஊரு வரைக்கும் போன ஒடனே வந்துடறனுங்க.”

“அட ஆச்சு எல்லாம். சாப்புட்டு போட்டே போயிர்லாம் இரு” என்றவர் வீட்டினுள் பாட்டிலோடு சென்றார். பூஜை அறைக்குள் நுழைந்தவர் பாட்டில் மூடியைத் திருகி நடுவில் இருந்த இலையின் சோற்றில் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்தார். ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு என பிய்த்து சோற்றில் பிசைந்து பெரிய தட்டத்தில் வைத்தார். தேங்காயை உடைத்து வைத்து சூடம் காட்டினார். 'எல்லாரும் கும்பிடுங்க' என்றவர் திருநீறு எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு தட்டை எடுத்துக்கொண்டு வீட்டின் மாடிப்படி ஏறினார். காகங்கள் தென்னை மரங்களில் இருந்து வீட்டின் மொட்டை மாடிக்குப் பறந்தன. தட்டுப்போர் மீது நின்று மாரன் எடுத்துத் தரும் தட்டுக்களை வரிசையாய் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த சுப்பன் ஒரு மணி நேரமாகவே பசி பசி என்று சொல்லிக்கொண்டிருந்தான். பறந்துபோகும் காகங்களைப் பார்த்தவன் “சாமி கும்புட்டுப் போட்டாங்ளாட்ட” என்றான்.

“இந்த வருசம் ரொம்ப லேட்டுப் பண்ணிப் போட்டாரு கவுண்டரு” என்றான் மாரன்.

“சிறுகொடலை பெருங்கொடலு தின்னுட்டு இருக்குது மாரா! இனி அவரு நம்பளை சாப்புடக் கூப்பிட வருவாரு. நானு இறங்கிடறேன்” என்ற சுப்பன் சாத்தியிருந்த ஏணியில் கீழே இறங்கினான். இருவரும் கிணற்றுத் தொட்டிக்குச் சென்று முகம், கை, கால் கழுவிக் கொண்டிருந்தபோதே கவுண்டரின் சப்தம் வீட்டின் பின்புறத்தில் இருந்து கேட்டது!

“டேய் சுப்பா! அவனையும் கூட்டிட்டு வாடா! மணி வேற மூனுக்கும் மேல ஆயிப்போச்சாட்ட”
இவர்கள் வீட்டின் பின்புறம் சென்றபோது திண்ணை மீது சுடு சாப்பாட்டுடன் இலை விரித்திருந்தது! இருவரும் படலில் செருகி வைத்திருந்த இவர்களது டம்ளர்களை எடுத்துக்கொண்டு போய் பாட்டிலோடு நின்றிருந்த கவுண்டர் முன் நீட்டினார்கள். சுப்பன் சாப்பிட்டு முடித்துவிட்டு வீடு வந்தபோது சாமிநாதன் திட்டிலில் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

“டேய், சாமி... சாமி எந்திரீடா” என்று சாமிநாதனைத் தட்டி எழுப்பினான் சுப்பன். 'என்னப்பா' என்றான் தூக்கக் கலக்கத்தில்.

“கவுண்டரு உன்னைய சாப்பாட்டுக்கு தாட்டி உடச் சொன்னாருடா. போயி ஒரு வாய் தின்னுபோட்டு வந்துரு. சரக்கு ஊத்துவாரு. வேண்டாம்னு சொல்லப்புடாது” என்றான்.

“சரீப்பா, இன்னம் சித்த நேரம் போகட்டும். பசி போட்டு என்னைக் கொன்னு எடுத்துச்சா. கொஞ்சம் ரசம் ஊத்தி இப்பத்தான் தின்னு போட்டு படுத்தேன். அஞ்சு மணிக்காட்டப் போய்க்கறேன்” என்று இவன் சொன்னதும் சுப்பன் ஒன்றும் சொல்லாமல் கட்டிலின் கீழ் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு விறவுதறிக்க வெளிவந்தான். அந்த நேரம் சாமிநாதனின் செல்போன் அலறியது. பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தவன் சரோஜா நெம்பர் என்று தெரிந்ததும், தூக் கருமம் என்று எடுக்காமலேயே புரண்டு படுத்தான். ரிங் வந்து கொண்டேயிருந்தது, இவன் ஐந்து மணிக்கு எழுந்து கவுண்டர் வீடு புறப்படும் வரை!

“தேஞ் சாமிநாதா இத்தனெ நேரம்? சாலியா எங்காச்சிம் போயிருந்தியா? ஊட்டுல எல்லாரும் சாப்டாச்சு! கவுண்டர் கூட சாப்புட்டு போட்டு பெருந்துறை வரைக்கும் சோலின்னுட்டு போயிட்டாப்ல” என்று பேசிக்கொண்டே திண்ணையில் இலை விரித்து சாப்பாடு போட்டது பெரிய கவுண்டிச்சி. சரோஜா தாவணி பாவாடையோடு வீட்டின் பின் திண்ணைக்கு வருவதும் போவதுமாக இருந்தாள். அவள்தான் சரக்கு பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து,
“குடிப்பீல்ல.. டம்ளரை நீட்டு” என்றாள். இவன் மறுப்பேதும் சொல்லாமல் டம்ளரை நீட்டினான். சரோஜா சரக்கு ஊற்றினாள். டம்ளர் நிரம்பியதும் நிறுத்தி,
"குடி. இன்னம் ஊத்துறேன். இன்னிக்கு எங்கம்மாகிட்ட நீ கேட்டுரு என்ன!" என்றாள். இவன் மடமடவென குடித்துவிட்டு மறுபடியும் நீட்டினான். சரோஜா மறுபடியும் இவன் டம்ளரை நிரப்பி விட்டு வீட்டுக்குள் போய்விட்டாள். சாமிநாதன் இலையின் முன் அமர்ந்து வறுவலை எடுத்து மோந்து பார்த்துவிட்டு டம்ளரைக் காலி செய்துவிட்டு வறுவல் மென்றான்.

“வேணுங்கறதைக் கேட்டு வாங்கித் தின்னு.” -பெரிய கவுண்டிச்சி இவன் அருகிலேயே நின்று கொண்டது.

“வறுவல் நல்லா இருக்குதா? உங் கொப்பனும் நல்லா இருக்குதுன்னு நாலு தடக்கா வாங்கித் தின்னான்” என்றது. சாமிநாதனுக்குக் கொஞ்சமாய் கிறுகிறுப்பு தட்டியது. சாப்பாடு கிடுகிடுவென வயிற்றுக்குள் இறங்கியது. சரோஜா கதவுக்கு அருகிலேயே நின்று இவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

“வேணுங்கறதை கேட்டு வாங்கித்தின்னு. வேணுங்கறதைக் கேளு.” பெரிய கவுண்டிச்சியின் சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது இவனுக்கு.

“ஊட்டுக்குள்ள தலைக்கறி வடைச்சட்டில இருக்கும். போயி எடுத்துட்டு வாடி சரோஜா. சாமிநாதன் திங்கட்டும்” என்றது.

சரோஜா வடைச்சட்டியோடு வந்தாள். இவன் கையை உயர்த்தி போதுங் சின்னக் கவுணுச்சி என்றான். Òபோதுங் பெரிய கவுணுச்சிÓ என்றான்.

“வேணுங்கறதைக் கேளு சாமிநாதா! வேணுங்றதைக் கேளு.”

பெரிய கவுண்டிச்சி குரல் கேட்க, இவன் சாப்பிடுவதை நிறுத்தி பெரிய கவுண்டிச்சி முகம் பார்த்தான்.

“சின்ன கவுணுச்சியெ எனக்குக் கட்டி வெச்சுட்டீங்கன்னா நானு மகராசனா பொழைச்சுக்குவேனுங்க” என்றான்.

“அடச் சக்கிலி நாயே! இவுனுக்கு வந்த ஏத்தத்தைப் பாரு” என்ற பெரிய கவுணுச்சி இலை முன் அமர்ந்திருந்தவனின் நெஞ்சில் எட்டி ஒரு மிதி வைத்தாள். சாமிநாதன் திண்ணையிலிருந்து அப்படியே வாசலில் தொப்பென விழுந்தான். பின் மண்டை ஏதோ வாசல் கல்லில் பொட்டென அடித்தது மாதிரி இருந்தது. சரோஜா கதவு வழியாக வீட்டினுள் ஓடுவது தெரிந்தது! வாசலில் கிடந்தவன் நிதானித்துக் கை ஊன்றி எழுந்து உட்கார்ந்தபோது கழுத்தில் ரத்தம் வடிவதைக் கண்ட பெரிய கவுண்டிச்சியும் போட்டது போட்டபடி எழுந்து வீட்டுக்குள் ஓடிப் போயிற்று. இவன் தடுமாறி எழுந்து அப்படியே வீடு நோக்கி நடந்தான்.

அடுத்த நாள் காலையில் பதினொரு மணிவாக்கில்தான் சாமிநாதன் கட்டிலில் இருந்து எழுந்தான். பின் மண்டை பயங்கரமாய் வலித்தது. செல்போன் அலறியது. சரோஜாதான். நேற்று அதன்பிறகு சரோஜாவிற்கு என்ன ஆச்சோ? செல்லை எடுத்தான்.

“சொல்லுங்கொ சின்ன கவுணுச்சி” என்றான்.

“சின்ன கவுணுச்சி இல்லடா. நான்தான்” என்றார் ராமசாமி கவுண்டர்.

“தேனுங் கவுண்டரே!”

“உங்கொப்பனைக் கேட்டேன். அவன் கட்டல்லயே கெடக்கறான்னு சொன்னான். நேத்து என்னதான் பண்டுனே நீயி? கவுண்டிச்சி சரோசாவைப் போட்டு சாத்தீட்டேகெடக்கறா. எட்டி ஒதச்சு தள்ளிட்டாளாமா கவுண்டிச்சி. இங்க நானு தோட்டத்துக்குப் போற கேட்டுக்கிட்டத்தான் நின்னுட்டு இருக்கேன். ஊட்டுக்குள்ள ஒரே ரச்சை. உன்னைய என்ன ஏதுன்னு கேட்டாத்தான் தெரியுமின்னு முத்துச்சாமி கவுண்டனும் சொன்னான். இங்க தான் நிக்கிறோம். சித்த வந்துட்டுப் போயிரு” என்றார்.

“இதென்னுங்... இப்பவே வாரேன்” என்றவன் எழுந்து செருப்பைத் தொட்டுக்கொண்டு கிளம்பினான். கிழக்கே இறங்கி வடக்கே நடந்தான். தூரத்தே கவுண்டர் தோட்ட கம்பி கேட் அருகே இரண்டு கவுண்டர்களும் நின்று கொண்டிருப்பது இவனுக்குத் தெரிந்தது. லுங்கியைக் கால்வரை இறக்கி விட்டுக்கொண்டு அவர்களிடம் வந்தான்.

“த்தென்றா.. மூஞ்சிகூட கழுவாம வந்துட்டியா?” முத்துச்சாமி கவுண்டர்தான் இவனைப் பார்த்ததும் ஆரம்பித்தார்.

“கூப்பிட்டீங்க. அப்பத்தான் எந்திரிச்சேன். சரின்னு போட்டு வந்துட்டனுங்க.”

“தென்றா அது, கழுத்துப் புறத்துல ரத்தமாட்ட காஞ்சு இருக்கு?”

“என்ன நடந்துச்சுன்னே தெரியலீங்க!”

“மப்பு அத்தனை ஏறிப்போச்சா நேத்து.”

“கவுணுச்சி டம்ளர்ல ஊத்தி உட்டாங்க... ரெண்டு டம்ளர்தான் குடிச்சனுங்க!”

“சின்ன கவுணுச்சிய பொண்ணு கேட்டியாமா நேத்து பெரிய கவுணுச்சிகிட்ட!” என்றார் முத்துச்சாமி கவுண்டர்.

“சின்னகவுணுச்சி தொந்தரவுதானுங்க எனக்கு இந்த இருவது இருவத்தஞ்சி நாளா! என்னெய லவ்வு பண்ணுதுங்ளாமா! சாமத்துல தூங்க உடாம போனுப்பண்டி போனுப்பண்டி.. தேங் கேக்கறீங்க!”

“என்கிட்ட சொல்லீருக்கோணு முல்லடா நீ மொதல்லயே!”

“நீங்கதான் என்னை சின்ன கவுணுச்சி சொல்லித்தான் வேலைக்கே தோட்டத்துக்கு சேத்துக்கிட்டீங்ளாமே!”

“அப்புடி வேற சொன்னாளா!”

“ஆமாங்க கவுண்டரே! பெரிய கவுணுச்சிக்கும் தெரியும். நீ ஏன்டா என்னை லவ்வு பண்ணமாட்டீங்றேன்னு ஒரே தொந்தரவுங்க. நேத்து கூட பெரிய கவுணுச்சிக்கிட்ட கேளு கேளுன்னு சொல்லுச்சுங்க.”

“தண்ணி மப்புல கேட்டே போட்டே! அப்புடித்தான?”

“நானு என்ன கேட்டேன் என்ன பேசுனன்னே தெரியலீங்க கவுண்டரே! சின்ன கவுணுச்சின்னு எத்தனையோ வாட்டி சொல்லீட்டணுங்க. கேக்கவே மாட்டீனுட்டுதுங்க.”

“டேய் ராமசாமி, இவன்மேல தப்பு ஒன்னுமில்ல. எல்லாம் அவகிட்டத்தான் வேலைத்தனம் பூராவும் இருக்குது. சரி சாமிநாதா, நீ வேணா நாளைல இருந்து தறிக்குடோனுக்கே போயிக்கோ. கணக்கு இருந்தா உங்கொப்பன் கையில குடுத்துடறோம். நீ போ” என்று முத்துச்சாமி கவுண்டர் இவனைப் போகச் சொல்ல, இவனும் திரும்பி வீட்டுக்கு நடந்தான்.

அன்று மாலையே ராமசாமி கவுண்டர் வீடு இழவு விழுந்த வீடானது! தகவல் தெரிந்த ஒரம்பறைசனம் காரிலும், பைக்கிலும் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தது! வழுவுச் சின்னான்தான் தன் அப்பனோடு தப்பட்டை காய்ச்சி அடித்துக் கொண்டிருந்தான். வீட்டின் உள்புறம் பெண்களின் அழுகை ஒலி கேட்டுக் கொண்டேயிருந்தது! மாதாரிகள் வேலி ஓரமாக கூட்டமாய் நின்றிருந்தார்கள். சரோஜாவின் பிணத்தை எரிப்பார்களா, புதைப்பார்களா? தெரியவில்லையே! என்று பேசிக் கொண்டிருந்தார்கள். “தீயி எரிய எரிய அப்புடியே ஓட்டம் புடிச்சுட்டு ஓடியாந்துச்சாமா. இது வழியா நேரா ஓடி வழுவுக்குள்ளார முட்டி ஓடி சாமிநாதன் ஊட்டு முன்னாடி போயி உழுந்து உருண்டு செத்துப் போச்சாமா சின்னகவுணுச்சி. பிதுறு கெட்டு என்ன பண்றம்னு தெரியாமத்தான ஓடியிருக்கும். அட ஓடின கவுணுச்சி நேரா தண்ணித் தொட்டிக்குள்ளார ஓடியாந்து உழுந்திருக்கலாமே!” மாதாரிச்சிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

ராமசாமி கவுண்டரும், முத்துச்சாமி கவுண்டரும் பங்காளிகளோடு வீட்டு வாயிலில் கைநீட்டிக் கொண்டிருந்தார்கள். சாமிநாதன் மாரனின் பின்னால் நின்று கொண்டே வரும்சனங்களைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். சின்ன கவுணுச்சி தானே சீமெண்ணெய் ஊற்றிப் பத்தவைத்துக் கொண்டதா. இல்லை கவுண்டரே சின்ன கவுணுச்சி மீது சீமெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து சாவுடி என்று விட்டாரா? ஒன்றும் புரியாமல் அதே யோசனையில் நின்று கொண்டிருந்தான்....


நன்றி: உயிர்மை மாத இதழ்

 வா மு கோமு