Showing posts with label FILM REVIEW. Show all posts
Showing posts with label FILM REVIEW. Show all posts

Friday, July 19, 2013

மரியான் - சினிமா விமர்சனம்



ஹீரோ   சரக்கு  அடிக்கும்  நல்ல (!?) மீனவர். இவர் அதே ஊரில் மீனவரொருவரின் மகளை லவ்வறார். அவருக்கு   ஊருக்குள்ளே கடன். சொந்த அம்மா அப்பா கடன்  வாங்குனாக்கூட தமிழன் அதைப்பத்திகவலைப்பட  மாட்டான். ஆனா காதலிக்கு கடன்னா? துடிச்சுடுவான். 


 வில்லன்  கொடுத்த  பணத்தை  கரெக்ட் பண்ண ஹீரோயினை   மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறான் . ( மேரேஜ் பண்ணிட்டா அவன் என்ன வில்லன் ? ) ஆனா  ஹீரோ விடலை .  2 வருஷ காண்ட்ராக்ட்ல   ஃபாரீன் போறார்.  திரும்பி வரும்போது   2 ஜி யை  அடிச்ச ஆ ராசாகுரூப்பை  விட பயங்கர கொள்ளைக்காரங்க கிட்டே  மாட்டிக்கறார். அப்புறம் என்ன ஆச்சு? இதுதான் மரியான் .


சும்மா சொல்லக்கூடாது , கமல் , விக்ரம்க்குப்பிறகு நடிப்புக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும்  ஹீரோக்கள் லிஸ்ட்ல்  தனுஷ்  சர்வசாதாரணமா  சைன்  பண்ணிட்டார் .  பிரமாதமான நடிப்பு . ஆங்காங்கே  கமல் ( நாயகன் ) ரஜினி ( தளபதி )  சாயல்  இருந்தாலும் சந்தேகமே இல்லாம தனுஷ்க்கு இது ஒரு மைல் கல் படம் தான் . வெல்டன் சார் 




ஹீரோயின் பூ பட நாயகி பார்வதி . தமிழ் சினிமா   உலகம் வெட்கப்படும் அளவுக்கு பிரமாதமான நடிப்பு   இவருடையது.  திறமையை மட்டும் காட்டிட்டு இருந்தா தமிழன் ஒத்துக்க மாட்டான்னு பூ படம் கத்துக்குடுத்த பாடத்தை மறக்காம   ஒளிப்பதிவாளர்  உதவியுடன்    தாவணி  இல்லாம வெறும் ஜாக்கெட் மட்டும் போட்டு   லோ ஆங்கிள் ஷாட்ஸ் மட்டும் 45இடங்கள் ல  வர்ற மாதிரி செம காட்டு காட்டி இருக்கார் .  முழு நிலா மாதிரி முகம் இருக்கும் பார்வதி   பிறை நிலாக்கள்  தெரிய ஓடி வரும் காட்சிகள் காம்ப்ளான்


கவிதாயினி குட்டி ரேவதி  படத்துக்கு  சீனியர்  அசோசியேட் டைரக்டர்  ஜாப் . டைட்டில் ல அவர் பேரைப்பார்த்ததும்  பெண்ணிய காட்சிகள் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா  ஹீரோ   ஹீரோயினை  தேவையே இல்லாம இடுப்புல ஓங்கி உதைக்கும்  பழம் பஞ்சாங்க காட்சி தான் வருது . காம்ப்ரமைஸ்? 


முக்கியமான ஆள் ஏ ஆர் ரஹ்மான் . 2 பாட்டு சூப்பர் ஹிட்டு .  பி ஜி எம் ல உழைப்பு பத்தாது ( இளையராஜா  மாதிரி ஃபேமஸ் ஆகனும்னா  பி ஜி எம் ல சைன் பண்ணனும்-இது எல்லா இசை அமைப்பாளருக்கும் பொருந்தும் ) படம்  பாலைவனத்துல பயணம் செய்யும்போது    பின்னணி இசைல கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கார். ஒளிப்பதிவு பக்கா,. கடல் அடியில்  காமரா வெச்சு எடுக்கப்பட்ட காட்சிகள் அழகு . 


இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்



1.  ஏ ஆர் ரஹ்மானை புக் பண்ணி படத்துக்கு சர்வதேச மார்க்கெட்டை பிடிச்சது . ராஞ்சனா ஹிந்தில ஹிட் ஆன பின் சாமார்த்தியமா   இப்போ ரிலீஸ் பண்ணியது . 



2.   போஸ்டர்  டிசைன்ல  நல்ல லவ் ஸ்டோரி மாதிரி பில்டப் கொடுத்தது .  பார்வதியை   முழுக்க முழுக்க  கிளாமராவும் , கேரக்டர்வைஸும் நல்லாஆஆ யூஸ் பண்ணிக்கிட்டது



3. பின் பாதியில்   படம் ரொம்ப ட்ரை ( dry )  தெரிந்தும் தைரியமாய்    படத்தை   ரியலிஸ்ட்டிக்காய் எடுத்தது


4.   பாலை வனத்தில்  ஹீரோ புல் சாப்பிடும் காட்சி . 2 புலிகளிடம் மாட்டிக்கொள்ளும் லைஃப் ஆஃப் பை உல்டா காட்சி  . தியேட்டரில்; செம ரெஸ்பான்ஸ் 


5.  நமீபியா  , சூடான் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியது


 இயக்குநரிடம் சில கேள்விகள்  



1. மீனவரா வரும் ஹீரோ படகில் கடல் ல போறார். இன்னொரு படகு அருகில் வந்ததும் கிட்டே போய் தீப்பெட்டி வாங்கிட்டா மேட்டர் ஓவர் . அவர்   உடனே  கடல்ல  டைவ் அடிச்சு    நீந்தி அந்த படகு கிட்டே போய் தீப்பெட்டி வாங்கி வாய்க்குள்ளே அடக்கிட்டு   கடப்பாறை நீச்சல் அடிச்சு இந்த படகு வந்து ஏறுவது தான் ஹீரோயிசமா? செம காமெடி பாஸ். சிரி சிரினு சிரிக்கறாங்க .. படு கேவலமான ஹீரோயிச மேக்கிங்க்



2. வில்லன்  ஹீரோ கிட்டே ஃபோனை கொடுத்து கம்பெனில பேசி பணம்கேளு அப்டிங்கறார் . ஹீரோ டக்னுஹீரோயினுக்கு  ஃபோனைப்போட்டு  கடலை போட்டுட்டு இருக்கார் கட்டதுரை மாதிரி.  வில்லன் பே -னு பார்த்துட்டு இருக்கான் . பெண் குரல் எதிர் முனைல இருந்து கேட்காம போகுமா?  ( மொழி தான் புரியாது ,  பாவனை கூட தெரியாதா? )  அதைவிடக்காமெடி வில்லன் அவன் வீட்டு ஃபோனைஎதுக்கு  டமால்னு உடைக்கனும்? 


3. பணயக்கைதியா   3 பேரை  பிடிச்சு வெச்சவங்க  எதுக்கு  ஹீரோ வைக்  கொல்லாம    இன்னொரு ஆளை டக்னு கொல்றாங்க ? ஆளுங்க இருக்கற வரை அவங்களுக்கு லாபம் தானே?  ( அதிக பணயத்தொகை கேட்கலாம்)


4. இடைவேளைக்குப்பின்   அந்த நீக்ரோ பசங்க ஏன் லூசுங்கமாதிரிவானத்துல  துப்பாக்கியால  சுட்டுட்டே இருக்காங்க ? விலை வாசி எப்படி ஏறிக்கிடக்கு>? கொஞ்சம்   கூட பொறுப்பே   இல்லாம வேஸ்ட் பண்ணுவாங்களா?


5. ஹீரோ ஹீரோயினை லவ் பண்றார். ஆனா அதை வெளிக்காட்டிக்கலை . ஹீரோயின்  ஹீரோவைப்பார்க்க வரும்போது   ஹீரோவோட நண்பர் செத்திருக்கார் . ஹீரோயின்   வானு கூப்ட்டது ஒரு குத்தமாய்யா? வில்லனை விட கேவலமா   ஹீரோ தான்  உயிராய்  காதலிக்கும் காதலியை இடுப்புலஓங்கி  உதைக்கிறார்  . படு கேவலமான   ஆணாதிக்ககாட்சி மட்டுமல்ல . லாஜிக் மீறல் . பொண்டாட்டியை புருஷன் அடிப்பான் . ஆனா  காதலியை   காதலன்  அப்டி உதைக்க மாட்டான் 


6.   படத்தின்    திரைக்கதைக்கு தேவையே இல்லாமல்   ஹீரோ எதுக்கு தண்ணி அடிச்சுட்டே , தம் அடிச்சுட்டே  இருக்காரு ?  இதுதான் சாக்குன்னு தயாரிப்பாளர் செலவுல  சரக்கா?




7. பாலை வனத்துல பசி உள்ள   இரு புலிகளுக்கு நடுவில்   ஒரு ஆள் மாட்டினா   முதல்ல புலி ஆளை அடிச்சு கொன்னுடும். அதுக்குப்பின் தான்   அந்த 2 புலிகளும் தங்களுக்குள்ளே அடிச்சுக்கும் . ஆனா ஹீரோ வை புலிங்க கண்டுக்காம   அதுங்க 2ம் முறைச்சுக்கிட்டு  இருக்கு



8.  வில்லன்   ஹீரோயின்  கோயிலுக்குப்போய்  இருக்கும்போது ஹீரோயின்  செருப்பை தடவிப்பார்க்கறான் . அட பரதேசி . நீ லட்சக்கணக்குல ஹீரோயின் அப்பாவுக்கு கடன் கொடுத்திருக்கே . ரவுடி . டைரக்ட்டா  ஹீரோயினையே   பலவந்தமா தடவலாமே? கேவலம் அவ செருப்பை தடவி ஆம்பளைங்களையே அவமானப்படுத்திட்டியே?  மனசுக்குள்ளே   ராவணன் -னு நினைப்பா? 


9. வில்லன் ஹீரோயின்  செப்பலை காலால தடவிட்டு இருக்கும்போது 1 கிமீ தூரத்துல இருக்கும்   ஹீரோவுக்கு வில்லன் தன் காதலியோட செப்பலைத்தான் தடவறான்னு எப்படித்தெரியுது? பைனாகுலர் வெச்சிப்பார்த்தாரா?


10.  கதைப்படி   ஹீரோ  உள்ளூரில் இருந்து வெளியூரில் வந்து வேலைக்காக அல்லது  வேலையில்  சேர்ந்து  என்ன  கஷ்டம் எல்லாம் அனுபவிக்கறார் என்பதை  டீடெய்லாக சொல்லனும் . அப்போத்தான் பரிதாபம் வரும் .  ஆனா   அந்த எப்பிசோடே இல்லை படத்துல . திரைக்கதையின் பெரிய பலவீனம் அதுதான்


11 . ஹீரோவின் அம்மா , ஹீரோயின் பேசும்  மாமியார் மருமக சண்டை வ்சனங்கள்  மண் வாசனை காந்தி மதி  டூ ரேவதி , சின்னக்கவுண்டர்   மனோரமா டூ சுகன்யா வசனங்களின் அப்பட்டக்காப்பி . # ஏம்மா தேவிப்ரியா நோட்  இட்


12.   அப்புக்குட்டி , இமான்  இருவரும்  வீணடிக்கப்பட்டிருப்பது ஏனோ?


13. வில்லன் எப்பவும் பாலை வனத்திலேயேஇருப்பவன் . ஹீரோ  கடல் வாசி . ஆனா ஹீரோ வில்லனை சர்வசாதாரணமா  அடிச்சு ஜெயிப்பது எப்படி ?


14. ஹீரோ  சுறா மீன் ,திமிங்கிலம் வகையறா மீன்களை பிடிப்பதில் கில்லாடி . அப்படி வாரம் 2 மீன் பிடிச்சா செம காசு வருமே? எதுக்கு பிஸ்கோத்த்து 2 லட்சம் ரூபாய்க்காக அடிமையா சூடான் போகனும்?


15.  ஏ ஆர் ஆர் வழக்கமா வம்பு தும்புக்கு போகாதவர் , ஆனா பாடல் வரிகளில்   என்ன ஆச்சுராசா உனக்கு?  நான் தான் கடல் ராசா என இளைய ராஜாவை வம்புக்கு இழுக்கும் வரிகள் எதுக்கு?


மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஆம்பளையோட வீராப்பெல்லாம் பொம்பளை மூச்சுக்காத்து படற வரைக்கும் தான்.பட்டுட்டா அவன் கோலிசோடா தான்



2. யாரையாவது பிடிச்சிருந்தா ஒண்ணா குத்தகைக்கு எடுக்கனும்.இல்ல கொள்முதல் பண்ணிடனும். பம்மிட்டு இருக்கப்படாது



3. கடலும் பொண்ணும் ஒண்ணு.எத்தனை தடவை பார்த்தாலும் புதுசுதாம்லே


4.  ஹீரோயின் - உன் கண்ணுல என்னை நான் பார்த்துட்டேன்யா.மறைக்காத # நீ தாம்மா மறைக்காம ஓப்பனா இருக்கே.அவர் சர்ட் போட்டிருக்காரு



5. யோவ்.என்னை பிடிக்காதுன்னே.ஆனா என்னையவே பார்த்துட்டு இருந்தே? உன் கூட இருந்தவளையும் தான் பார்த்தேன்.அதுக்கு ?


6. தீக்குச்சி தீப்பெட்டிலயே இருந்தா எப்டி பத்திக்கிம்? உரசனும்.போ.அவனை உரசு # அடேங்கப்பா கண்டுபிடிப்பு அடேய் -))



7. ஹீரோ பஞ்ச் - மரியான் பிடிக்காத வேலையை செய்ய மாட்டான்.பிடிச்ச வேலையை செய்யாம விடமாட்டான் # தியேட்டரை விட்டு வெளியே போக விடமாட்டான் ( ஹீரோ ஃபிரண்ட் பேசும் வசனம்)


8. எங்காளுக்குப்போட்டியா ஷாருக்கான் ரா ஒன் எடுத்தாரு.ஊத்திக்கிச்சுல்ல? # மாப் ளை சப்போர்ட்டிங் டூ மாமா


9.   எல்லாரும்  நம்மை  மாதிரி மனுஷங்க  தானே?   புது ஊர்னாலும்  பழகிடும்


10 மரியான்னா   சாவே இல்லாதவன்னு அர்த்தம்  # சாகடிக்கப்போறான்னு அர்த்தம் இல்லையா? ஹி ஹி


11. சாதனை பண்றவனுக்கு பொம்பளை வாசனை பட்டுகிட்டே இருக்கணும்




படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ் 


1. ஏ ஆர் ஆர் க்கு பாடலில் வரும் ஹம்மிங்னா செம கொண்டாட்டம் போல


2. அய்யய்யோ.தனுஷ்க்கு பார்வதி வலியனாப்போய் லிப் கிஸ் தருது.தடுக்க முடியல :-(


3. ஆஹா.தனுஷ் கமல் மாதிரி ரஜினி மாதிரி எல்லாம் ட்ரை பண்றாரே


4. இடைவேளை விட்டாச்சு.ஆனா வெளில விடமாட்டாங்களாம் # மாட்டிக்கிட்டாங்க ஜனங்க.இது வரை படம் சுமாரு தான் குமாரு


5.  பம்பாய் பி ஜி எம் மை மரியான் ல எ ஆர் ஆர் சுட்டுட்டாரு.தேவிப்ரியாவுக்கு போன் போடேய்





ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  40

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் =  3  / 5


சி பி கமெண்ட் - - ஹீரோ ஹீரோயினுக்கு விருது நிச்சயம்.ஸெம ஆக்டிங் - ஆனா படம் அட்டர் பிளாப் - தனுஷ்  ரசிகர்கள் பார்க்கலாம் . பார்வதியை மேலோட்டமா ரசிக்க நினைப்பவர்கள் பார்க்கலாம் . மற்றவர்கள் டி வி யில் போட்டபின் பார்க்க. ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 



Saturday, July 13, 2013

காதலே என்னை காதலி -சினிமாவிமர்சனம்

 

பஞ்சத்துக்குப் பிறந்த  பஞ்சப் பரதேசிங்க  2 பேரு  ஒரு 65 மார்க்ஃபிகரை யாருமே இல்லாத ஒரு அத்துவானக்காட்டில் துரத்தறாங்க. ( டேய், அதான் 3 பேரு இருக்காங்களே, அப்புறம் எப்படி யாருமே இல்லாத காடு ? ) . அட, ஓப்பனிங்க்லயே செம கிளுகிளுப்பா இருக்கேன்னு நிமிர்ந்து உக்கார்ந்தா அவனுங்க 2 பேரும் அந்த ஃபிகர் ஹேண்ட் பேக்கை பிடுங்கிப்பார்த்து அதுல காசு ஏதும் இல்லைன்னு அப்படியே அவளைதள்ளி விட்டுட்டுப்போய்டறானுங்க . அடேங்கப்பா , உத்தமவில்லன் கமல் இல்லை. இவனுங்க தான்.


ஹீரோ அங்கே வர்றார்.ஹீரோயினை தூக்கி ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு போய்டறார்.அகத்தியன் ன்  காதல்கவிதை ரேஞ்சுக்கு 2 பேரும் ஓவரா ஃபீல் பண்ணி லவ்வறாங்க.

இதுல என்ன பிரச்சனைன்னா ஹீரோயின் ஃபாரீன்ஃபிகரு. தம் அடிக்குது , சரக்கு அடிக்குது . இன்னும் என்ன  என்ன எல்லாம் அடிக்குதோ? 




ஹீரோ ஒரு   உலக மகா உத்தமன். எந்த கெட்ட பழக்கமும்  இல்லாதவர், எம் ஜி ஆர் , ராமராஜன்  வரிசைல 


இப்போ தான்  திரைக்கதைல செம ட்விஸ்ட். ஹீரோவோட அப்பா இவங்க மேரேஜ்க்கு  ஒத்துக்கலை. மேரேஜ்க்குத்தானே  ஒத்துக்கலை? நாம லவ்விட்டு  இருப்போம்னு  2  பேரும்  தெருத்தெருவா  ரோடுரோடா  ஹோட்டல் ஹோட்டலா சுத்தறாங்க.. கொடுமை என்னான்னா  எந்த வித சுவராஸ்யமான  சம்பவங்களோ,திருப்பங்களோ இல்லாம சும்மா சுத்திட்டு மட்டும் இருக்காங்க


இப்போ 6 ரீல் முடியுது.இடைவேளை ட்விஸ்ட் வேணுமே?ஹீரோயின் பெட்ரோல் கேன் எடுத்து  தன் மேல  ஊத்திக்கிட்டு   ஹீரோ அப்பாவை   மிரட்ட பத்த வெச்சுக்கறார். டொட்டடொய்ங்க். இடைவேளை



இடைவேளை முடிஞ்சு பதட்டத்தோட வந்து பார்த்தா யாருக்கும்  எதுவும் ஆகலை.ஹீரோவோட அப்பா  ஹீரோயினை கேவலமா  திட்டிடறாரு . கட்சிமாறுன   எம் எல் ஏக்களை கேப்டன் திட்டுன  மாதிரி . ஹீரோ  செம  காண்ட் ஆகி  தேவதாஸ் மாதிரி தண்ணி  அடிக்க ஆரம்பிச்சுடறாரு. 5 ரீல் இப்ப்டியே ரோடுரோடா  மப்புல  கிடக்காரு . காசு  கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே வந்த பாவத்துக்கு   இதை எல்லாம் பார்த்து  தொலைக்க வேண்டி இருக்கு.


 திடீர்னு  ஹீரோ அப்பா மனசு மாறிமேரேஜ்க்கு  ஓக்கே  சொல்லிடறாரு. ஹீரோ  ஹீரோயின்  2 பேரும்  செம சந்தோஷம்  ஆகி காரில்  வரும்போது  ஹீரோ கிஸ்  கொடுக்கறார். டிரைவிங்க்  பண்ணிட்டு  இருந்த ஹீரோயின் விபத்துல மாட்டி ஆள் அவுட். புன்னகை  மன்னன் ரேஞ்சுக்கு திங்க்கிங்க் .


இதுக்குப்பிறகு  என்னாஆகுது  என்பது  கேவலமான சஸ்பென்ஸ்

 



அடங்கப்பாசாமி டைரக்டரு  .. முடியலப்பா 


ஹீரோ சந்தோஷ்தான்  தயாரிப்பாளர் போல . தாடி  , பரட்டைத்தலை, துவைக்காத  பேண்ட் , அயர்ன் பண்ணாத கேவலமான சட்டை, அக்மார்க்  தமிழ் சினிமா ஹீரோ  மாதிரியே...



ஹீரோயின் அனாரா  நிஜமாவே ஃபாரீன்ஃபிகர்  போல.  இலியானாவுக்கு ஒரு தங்கச்சி  இருந்து அதுக்கு  10 நாள் டைபாய்டு காய்ச்சல்  வந்து படுத்தா எப்படி இருக்கும்? அப்டி இருக்கு.எந்த மாடல் சுடிதார் போட்டாலும்  துப்பட்டாவே  தேவைப்படாத  ஒல்லி தேகம். ஆனா அவர் இடை இருக்கே இடை .எல்லா தமிழ் ஹீரோயின்களும்  பார்த்து பொறாமைப்படும் உள்ளடங்கிய  ஏழையின் பசி வயிறு மாதிரி அபாரம் .


இவர் காதல் வந்து  தடுமாறும் காட்சிகள்,தமிழ்  கற்கும்  காட்சிகள்  எல்லாம் படு செயற்கை. அதேபோல் வேண்டுமென்றே  வலிய  திணிக்கப்பட்ட   ஹீரோயினின்  தம் அடிக்கும்  தண்ணிஅடிக்கும் காட்சி எடுபடவில்லை.

 ஆனா ஒருவிஷயம்.கிளாமர் காட்டுவதில்  அம்மணி அபாரம் . ஐ லைக் இட்.


படத்துல  பாராட்டவோ , திட்டவோ  வேற யாருமில்லை





இயக்குநர் பாராட்டுப்பெறுமிடங்கள்


1.படம்  முழுக்க  லண்டனில் படமாக்கப்பட்டது என விளம்பரம்  போட்ட போஸ்டர்  ஊர் எங்கும்  ஒட்டியது. ஏதோ   லவ்  க்ரைம்  த்ரில்லர்  ரேஞ்சுக்கு பில்டப்   குடுத்தது.


2.ஹீரோயினுக்கு அழகழகான  டிரஸ் வாங்கிக்குடுத்து  உலாவவிட்டது. கேமராமேனை   நல்லாகவனிச்சு  ஹீரோயினை  சரியான ஆங்கிள்ல கேமரா  ஷாட் வெச்சது


3. ஒளிப்பதிவு  லண்டன்  நகரை அழகாக படம்  பிடித்தது





இயக்குநரிடம் சில கேள்விகள்



1.ஹீரோ  வோட  ஷூ  அழுக்காகி   இருக்கு  ஒருசீன்ல. ஹீரோவோட அப்பா  நிழல்கள் ரவி   தன்   கர்ச்சீப்பால அதை துடைக்கறார் .அடுத்தஷாட்லயே ஹீரோ சாப்பிட  வரும்போது  எனக்கு  சுத்தம் தான்  முக்கியம், போய்வாஷ் பண்ணிட்டு வான்னு  விரட்டறார். ஏனிந்தமுரண்?  



2. டேய்.. நீங்க  எங்கடா  இங்கே? என  ஹீரோ  தன் 4 நண்பர்களிடம்  கேட்பதும்  அவர்கள்  வழிவதும் செம  போர்.  இந்தலட்சணத்துல  3   டைம்  இதே மாதிரி   காட்சிவருவது


3.மனோரமா   மயில்சாமி  சரக்கு அடிக்கும்  காட்சி உவ்வே. மரியாதைக்குரிய  ஆச்சியை  நைட்டியுடன்  காட்டி  சரக்கு அடிக்கவைத்து  இப்படிஅவமானப்படுத்தி இருக்க வேணாம்


4. ஹீரோ ஒரு   சீன்ல   ஹீரோயின் கிட்டே”நீ ஏன் கம்மலே போடறதில்லை? போட்டா   நல்லாருக்கும் அப்டிம்பாரு. ஆனா ஹீரோயின்  4  டைம்காதுல ஸ்டெட்டோடவருது ( நாங்க   ஹீரோயின்  காதை  மட்டும் தான்  கவனிச்சோம்)


5. ஹீரோயின்   சரக்கு அடிச்சுட்டு ஹீரோ மேல  வாமிட் எடுப்பதும்  , ஹீரோ சரக்கு அடிச்சுட்டு  ரோட்டில்  வாமிட்  எடுப்பதும்  உவ்வே. காமிராஆங்கிள்ல யாவது கவுரமா  காட்டி  இருக்கலாம்


6. சார் , படத்துல திரைக்கதை  அப்டினு ஒரு அம்சமேஇல்லையே? நீங்க ஒரு ஃபாரீன்ஃபிகரை  உஷார் பண்ணிட்டு  போறதை   ஒரு படமா  எடுக்கனுமா?





 மனம் கவர்ந்த வசனங்கள்



1.வெள்ளைக்காரப்பொண்ணா  இருந்தாலும்  மனசு ரொம்பப்பெருசு


 ஆமா,கொழுக் மொழுக்னு அழகா


 டேய்...... 




2. விண்ட்டருக்கு போர்த்திட்டு   இருந்தவங்க   எல்லாம் சம்மருக்கு   கழட்டி வெச்சிருப்பாங்க



3. டாடி , 15வயசுல இருந்து  25வயசு வரை  தான் பசங்க ஜாலியா சுத்தும் வயசு. ஃப்ரீயா விடுங்க ( அதைஏன் 34வயசான ஹீரோ சொல்றரு, ? ) 



4. அடடா , அவ மிஸ் ஆகிட்டாளே,போய்ட்டாளே 


 மிஸ் ஆகாம  இருந்தா மிசஸ் ஆக்கி  இருக்கலாம்னு  பார்த்தியா? 



5  ஹீரோ பஞ்ச்  - நான்  சரக்கு அடிக்க  மாட்டேன். ஏன்னா நான் தமிழன்  ( அடங்கப்பா சாமி , காது வலிக்குது) 



6.  ஆஃபீஸ்  இருக்குன்னு  சொன்னீங்க,இப்படி  சின்னதா உள்ளடங்கி இருக்கு? 

 சீக்ரெட் ஆஃபீஸ் ஹிஹி 



7.  குற்ற வாளி முத   டைம்   தப்பு  பண்ணும்போதுதான்    பயப்படுவான் , அப்புறம் அவன்  தைரியமா   தப்பு   பண்ணுவான்


8  குடிச்சுட்டு போனா   தூக்கம் தூக்கமா   வருது 


 பின்னே ? வருமானமாவரும் ? 







 ஆனந்த  வி கடன்   எதிர்பார்ப்பு மார்க் - 32


குமுதம்  ரேங்க் - ம்ஹூம்  தேறாது



 ரேட்டிங்க்  -      1  /  5


சி.பி கமெண்ட் -   ஃபாரீன் ஃபிகரை சைட் அடிக்க நினைக்கும் ஆட்கள் மட்டும் போலாம் . மத்தவங்க   எஃப்  டிவி பார்க்கவும்  . இந்த  குப்பையை   சிதம்பரம்  வடுகநாதன் தியேட்டர்ல பார்த்தேன்

Wednesday, May 01, 2013

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்



நாட்டைக்காப்பாத்த வேண்டிய பெரிய பெரிய தலைவர்களுக்கே இப்பவெல்லாம் கொள்கை இருக்கறதில்லை. ஆனா கிட்நாப் பண்றதை மெயின் ஜாப்பா வெச்சிருக்கற ஆள்க்குக்கூட 5 கொள்கை இருக்கு .அப்பேர்ப்பட்ட கொள்கை வீரரான ஹீரோ  2 கோடிக்கு ஆசைப்பட்டு ஒரு அரசியல் கட்சித்தலைவர் பையனை கடத்தும் பிராஜக்ட்க்கு ஓக்கே சொல்றான். 

அந்தத்தலைவர் காமராஜர் மாதிரி நல்லவர் . அவருக்குப்பொறந்த பையன் அண்ணன் அழகிரி மாதிரி ஹி ஹி . நெம்பர் ஒன் ஃபிராடு .சொந்த அம்மா , அப்பாவையே ஏமாத்தும் ஆள் . அவனே டபுள் கேமும் ஆடறான். இவங்களைப்பிடிக்க  ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் . இந்த ஒரு தீம் போதாதா? நாளைய இயக்குநர் நிகழ்ச்சில 8 நிமிஷத்துல கலக்கினவருக்கு ரெண்டே கால் மணி நேரம் கலக்க சான்ஸ் , அடிச்சார்யா ஜாக்பாட் ப்ரைஸ் , வெல்டன் சார். ( புதுக்கோட்டை தான் அண்ணன் சொந்த ஊரு ) 


விஜய் சேதுபதி இந்தக்கதைக்கு நாயகன் . அவ்ளவ் தான்  மத்தபடி திரைக்கதையும் சம்பவங்களும் தான் ஹீரோ . ஹீரோ அண்ட் கோ பண்ற லூட்டிகள் முன் பாதி வரை கலகலக்க வைக்குது . பின் பாதியில் போலீஸ் ஆஃபீசரின் ஆக்‌ஷன் மேளா.. லோ பட்ஜெட்டில் 2013 ஆம் ஆண்டின் முக்கிய வெற்றிப்படம் 


எம் எஸ் பாஸ்கர் தான் அந்த நேர்மையான அரசியல்வாதி , கம்பீரமான தோற்றம். நடிப்பு கனக்ச்சிதம். இவரை எந்த அளவுக்கு இயக்குநர் யூஸ் பண்ணி இருக்கார்னு பார்த்து இதுவரை அவரை மிஸ் யூஸ் செய்த இயக்குநர்கள் வெட்கப்படும் அளவு பிரமாதமாக கையாண்டிருக்கிறார்கள் .


கலைஞர் டி வி யின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களில் நடித்த 6 பேருக்கு இதில் வாய்ப்பு . அனைவரும் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.


குறிப்பாக இந்த போலீஸ் ஆஃபீசர் கேரகட்ர் படம் பூரா ஒரு வசனம் கூட பேசாமல் அனைவரையும் பேச வைத்த கேரக்டர் அவரது இறுக்கமான முக அமைப்பு , நடிப்பு கலக்கல்

 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1.  ஓப்பனிங்க் ஷாட்டில் நேரத்திலேயே எழுந்து குளிச்சு ரெடி ஆகும் ஆள் பின் சாவதானமாக அமர்ந்து சரக்கடிப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடி கலக்கல் வசனங்களூம்



2. டாஸ்மாக்கில் கலாட்டா சண்டை போடும் இடமும் அதை யூஸ் பண்ணி ஒரு பாட்டு சீனும் களை கட்டுது தியேட்டர் 


3. கிட்நாப் செய்யப்பட்ட பொண்ணு  ஃபோனில் அவர் அப்பாவுக்கு அழுதுட்டே தைரியம் சொல்லும் காட்சியும் , அவளுக்கே அவ அப்பா பணத்தில் டிப்ஸ் தரும் காட்சியும் 


4. ஹீரோ மாட்டிக்கொள்ளாமல் கிட்நாப் செய்வது எப்படி என க்ளாஸ் எடுக்கும் காட்சியும் , கலக்கலான வசனங்களூம் 


5. பேங்க் மேனேஜரை மிரட்டி ஹீரோ பேங்க்கில் அசால்ட்டாக போய் பணம் வாங்கும் காட்சி 


6. ஹீரோவின் ஃபிரண்டாக வருபவர்  எல்லா தகிடு தித்த வேலையும் செஞ்சுட்டு ஒரு டீ சொல்லுப்பா என சர்வ சாதாரணமாக சொல்லும் தெனாவெட்டுக்காட்சி 


7. போலீஸ் ஆஃபீசர் பிரம்மாவாக வருபவர் கேரக்டர், நடிப்பு கன கச்சிதம் 


8. படத்துக்கு பாடல்களே தேவை இல்லை என்றாலும் 2 பாட்டு கேட்கும் விதமாக இருக்கு 



9 , கனகச்சிதமான எடிட்டிங்க் , நேர்த்தியான நெறியாள்கை

இயக்குநரிடம் சில கேள்விகள் 




1.  எம் எஸ் பாஸ்கர் அந்த பேக்கில் இருக்கும் பணத்தை எப்படி செக் பண்ணாமல் எடுத்து வர்றார்? 2 கோடி ரூபாய்ப்பணம் வெயிட்டும் , 4 தினத்தந்தி நியூஸ் பேப்பர் எடையும் ஒண்ணா? டவுட் வராதா? 


2. ஹீரோ அண்ட் கோ போகும் காரில் , பண பேக்கில் ஜி பி எஸ் வசதி உள்ள அதாவது அவங்க எங்கே போனாலும் கண்டு பிடிக்கும் தொழில் நுட்பம் செட் பண்ணி இருக்கு போலீஸ் , அப்புறம் ஏன் பறக்கா வெட்டி மாதிரி பின்னாலயே ஃபாலோ பண்ணனும்?  கேப் விட்டே பொறுமையா போலாமே? டவுட் வராது 


3. தியேட்டரில் ஆரவாரமான கைத்தட்டல்களை அள்ளிய  அந்த ரோபோ ஹெலிகாப்டர் சீன் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் . அவ்ளவ் சிறிய பொம்மை அவ்ளவ் வெயிட்டை தாங்குமா?  இன்னும் பெரிய ஹெலியாக காட்டி இருக்கலாம் 


4. போலீஸ் ஆஃபீசர் அந்த ஆபத்தான கன்னை ஏன் பின்னால சொருகி மாட்டிக்கனும்?  என்னதான் காமெடிக்குன்னாலும் அப்டியா ஒரு போலீஸ் ஆஃபீசர் கேனத்தனமா நடந்துக்குவார்?


5. அந்த போலீஸ் ஆஃபீசர் நரசிம்மராவ் மாதிரி ஒரு உம்மனாமுஞ்சி ஓக்கே , அவர் பேசவே இல்லை  ஒரு சீன் கூட . ஆனா அவரை சுத்தி இருக்கும் ஆட்கள் எப்படி அவர் சொல்ல வருவதை அல்லது மனசில் நினைப்பதை புரிஞ்சிக்கறாங்க? இத்தனைக்கும் அவர் இப்போதான் ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கார்.




6. ஹீரோ கூட முன் பாதியில் ஒரு லேடி கேரக்டர் எதுக்கு சம்பந்தம் இல்லாம ? குடைக்குள் மழை  சஸ்பென்ஸ் கேரக்டர் மாதிரி . அதை ரியல் கேரகடராகவே காமிச்சிருக்கலாமெ?   இந்தத்திரைக்கதைக்கு என்ன வகையில் அது யூஸ்?


7.ஹீரோ சேதுபதிக்கு ஏன் ஓல்டு கெட்டப்? இன்னும் டீசண்ட்டாவே காட்டி இருக்கலாமே?


8. மினிஸ்டர் நேர்மையானவர்னு தெரிஞ்சும் , அவர் கிட்டே பைசா கிடையாதுன்னு அறிஞ்சும் அவர் பையன் என்ன பிளான்ல 2 கோடி கேட்கறார்?


9. சொந்தக்கட்சி நிதில இருந்து 2 கோடி தர்ற அளவு ராதாரவிக்கு என்ன நிர்ப்பந்தம்? எம் எஸ் பாஸ்கர்  மனைவி தனிக்கட்சி ஆரம்பிப்பாரா என சப்பைக்கட்டுக்கட்டும் வச்னம் தேவை இல்லாதது


10 என்ன தான்  பாஸ்கரின் மகன் ஏமாற்றுப்பேர்வழியாக இருந்தாலும் சொந்த அம்மா சாப்பிடும்போது “ என்னம்மா? நான் கிட்நாப் செய்யப்பட்டப்போ கவலை இல்லாம சாப்ட்டுட்டு இருக்கே? “ என கேட்கும் அளவு கொடூரமான கேரக்டரா?  உறுத்தலான காட்சி அமைப்பு


11. இடைவேளை வரை கல கலப்பாக போகும் திரைக்கதை பின் பாதியில் ஆக்‌ஷனுக்குத்தாவிய  பின் கொஞ்சம் வேகம் குறைவு தான். எடிட்டிங்கில் இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம் . க்ளைமாக்ஸ் இழுவை ஆனாலும் ரசிக்க வைப்பது பிளஸ்


12. ஒவ்வொரு கடத்தலிலும் சர்வசாதாரணமாக 10 லட்சம் , 20 லட்சம் அடிப்பவர்கள் 2 கோடி பிராஜக்ட்க்கு சீன் படமே பார்க்காதவன் முதல் பாவம் படத்தில் அபிலாஷாவைப்பார்த்தது போல் வாயைப்பிளப்பது எப்படி?


13. போலீஸ் ஆஃபீசர் சிகரெட் நெருப்புக்காக அப்டி இறங்கிப்போவாரா? ( ஆனா அந்த சீன் கலக்கல் காமெடி ) 





 மனம் கவர்ந்த வசனங்கள் 


1. மூணே நாள் ஷூட்டிங்.முழுப்படமும் முடிக்கறோம்.டைட்டில் ஹனிமூன்.எப்பூடி?



2.  என்ன தலைவா? பிச்சை எடுக்கப்போகலை ? வாட் ? பிரச்சாரத்துக்குப்போகலையா?னு கேட்டேன்


3. நான் உயிரோட இருக்கும்போதே என் பையனுக்கு பதவியா ? இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். கண்டிச்சுக்கோ.எனக்கென்ன போச்சு


4. இத்தனை நாளா உங்கப்பாவை எப்டி ஏமாத்திட்டிருந்தியோ அதே மாதிரி இனி மக்களை ஏமாத்தறே.அதுதான் அரசியல்


5. அடடே.என்னமாத்தலையாட்றான்? அமைச்சர் ஆக இதை விட என்ன தகுதி வேணும்?


6. போலீஸ் - கிட்நாப் பணத்தை எங்கே எப்போ கொண்டு வரனும்? நாளை சன்டே.நாங்க லீவ்.மன்டே ஓக்கே



7. அரசியல்ல நேர்மையா இருக்கனும்னா புள்ளை குட்டிங்க எல்லாம் இருக்கக்கூடாது போல



8. டெய்லி 18 டீ குடிக்கிறான் .இவனைக்கடத்த பிளான் எதுவும் போடத்தேவை இல்லை.ஒரு டீக்கடை போட்டா போதும



9. பிராடுத்தனம் பன்றது ஈஸி இல்ல.அதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்த்தனமும் ,புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் வேணும


10. நீங்க நியூஸ் பேப்பரே படிக்க மாட்டீங்ளா? ஏன்? டெய்லி டேட்டை மட்டும் மாத்தி வித்துட்டு இருக்காங்க.நான் ஏன் அதைப்படிக்கனும் ?

 

11. சார்.நீங்க எங்கே என்ன ஜாப் ? காலை ல 8 மணிக்கு அலாரம் வெச்சு சரக்கு அடிக்கிற என்னைப்பார்த்து இப்டி 1 ?


12. என்ன பண்ணப்போறோம்னு எந்தத்திட்டமும் இல்லாம சென்னை வந்தவன்தான் ஜெயிச்சிருக்கான்


13. நயன் தாராவுக்கு சிலை வெச்சியாமே? எவ்ளவ் செலவு ஆச்சு?


 ஹி ஹி  1 1/2 லட்சம்


 அடப்பாவி , இதுக்கு நீ ஏதாவது தொழில் பண்ணி இருக்கலாம்



14. எதுக்காக சென்னை வந்தே? எனி ப்ளேன்?

 இல்லை , தெரில



15. சார் , டைம் ப்ளீஸ்

 சில்லறை இல்லப்பா



 என்னைப்பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியா தெரியுது?

எனக்கு எப்டித்தெரியும் ?



16.  உங்க தீம் எனக்குப்பிடிச்சிருக்கு


நயன் தாரவுக்கு கோயில் கட்ற மூஞ்சிக்கு எல்லாம் என் தீம் பிடிக்கும்



17. இவ்ளவ் போலீஸ்.. சைரன் அடிச்சுட்டு வர மாட்டீங்க்ளா? இப்டி திடு திப்னு வந்தா எப்டி?



18.  டேய் மணி 9 50 ஆகிடுச்சு


 எதுக்கு பதற்றம்?

 நைட் 10 ஆனா டாஸ்மாக் சாத்திடுவான்


19. நான் பண்றதெல்லாம் பேப்பர்ல வராது .மொக்கையாப்பண்ணினாத்தான் பேப்பர்ல வரும் , எப்படி எல்லாம் தப்பு பண்ணி மாட்டிக்க கூடாதுன்னு  ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன்


20.  என் காசுல தானே குடிச்சே? என் காசுல தான் சாப்பிடனும்

 



21.  நான் கத்தலை , தயவு செஞ்சு அந்த கர்ச்சீப்பை வாய்ல இருந்து எடுங்க நாறுது



22.  ஸாரி , வெளியாளுங்களுக்கு நாங்க ஒர்க் பண்றதில்லை , எங்களுக்கு மட்டும் தான் ஃபிராடு வேலை



23.  நீங்க பண்றது தப்புத்தான் ஆனா அதுல ஒரு நேர்மை இருக்கு . அவங்க பண்றது சரிதான் ஆனா  அதுல ஒரு தப்பு இருக்கு


24.  என்ன? அந்தக்கார் நம்ம பின்னாலயே வந்துட்டு இருக்கு?


 நாம தான் அது பின்னால போய்ட்டு இருக்கோம்



25.  கேப்டன் படத்துல வர்ற விசாரணை மாதிரி இருக்கு?
 






சி பி கமெண்ட் - சூது கவ்வும் - முன் பாதி கலாட்டா காமெடி.பின்பாதி ஆக்ஷன் - விறுவிறுப்பான திரைக்கதை - கமல் ன் மும்பை X பிரஸ் கதையைத்தான் தூசு தட்டி புதுத்திரைக்கதை.காமெடி ,விறுவிறுப்புடன் எடுத்திருக்காங்க . காமெடி ,  கம் ஆக்‌ஷன் பட விரும்பிகள் பார்க்கலாம் . ஏ சென்ண்டரில் நிச்சய வெற்றி


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -44


 குமுதம் ரேங்க் - நன்று


 ரேட்டிங்க் - 3.5 / 5


டிஸ்கி - ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டியை வர்ணிக்கவில்லையே என யாரும் தீக்குளிக்க வேண்டாம், அந்த அளவு பாப்பா ஒர்த் இல்லை . விட்ட குறை தொட்ட குறை எல்லாம் 3 பேர் 3 காதல் -ல்  ஹி ஹி

 மேலே உள்ள கிளாமர் ஸ்டில்கள் சும்மானாச்சுக்கி, படம் பார்த்துட்டு வந்து எங்கே அந்த சீன் அப்டினு சண்டை எல்லாம் போடக்கூடாது 


diski -

எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்


Sanchita Shetty

Friday, April 05, 2013

சேட்டை - சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு பத்திரிக்கைல பணி ஆற்றுபவர். அவருக்கு எங்கிருந்தோ ஒரு கோடீஸ்வரக்காதலி வலியனா வந்து மாட்டுது. ( நமக்கு டொக்கு ஃபிகர் கூட மாட்றதில்லை) அந்த உத்தமக்காதலி அடிக்கடி ஹீரோவைத்தள்ளிட்டுப்போய் “ கண்ணா லட்டு தின்ன ஆசையா?ன்னு பூடகமா கேட்குது ( இதை விட ஓப்பனா யாரும் கேட்கவே முடியாது ) ஹீரோ கேரக்டர் கேனக்கிறுக்கு கேரக்டர் போல . அதெல்லாம் முடியாதுங்கறார். இது ஒரு டிராக்ல ஓடுது.

ஹீரோவை அதே லைன்ல அதாவது பிரஸ் ரிப்போர்ட்டர் ஃபிகர் தானா ஒன் சைடா லவ் பண்ணுது . அவரோட 2 சைடும் நல்லா இருந்தும் ஹீரோ கண்டுக்கலை. அவ்ளவ் உத்தமனா? அடேங்கப்பா . கேரக்டரை மெயிண்ட்டெயின் பண்றாங்களாம். எம் ஜி ஆர் கூட இவ்ளவ் கண்ணியம் காத்ததில்லை , அப்பப்ப ஹீரோயினைத்தடவிட்டு கடைசில தங்கச்சி மறந்துடும்பாரு  .

மேலே சொன்ன 2 லவ்வும் அப்பப்ப ஊறுகாய் மாதிரி , மெயின் கதை என்னான்னா ஒரு கடத்தல் கும்பல் வைரக்கற்கள் கொண்ட ஒரு பொம்மையைக்கை மாத்துது, அது தவறுதலா ஹீரோயின் கிட்டே மாட்டி ஹீரோ கிட்டே போய் அவரோட 2 நண்பர்கள் கிட்டே போய் ... என்ன தலை சுத்துதா? திரைக்கதையும் அப்டித்தான்... 






ஆர்யா தான் ஹீரோ. நிஜ வாழ்வில் நயன் தாராவும் த்ரிஷாவும் இவருக்காக அடிச்சுக்கிட்டதா காத்து வாக்கில் ஒரு செய்தி உண்டு . கதைல அதை அப்டியே நாசூக்கா சொல்லி இருக்காங்க.. புக் பண்ணூம்போதே இது ஒரு மொக்கைக்காமெடி ஃபிலிம் , ஆல்ரெடி ஹிந்தில ஹிட் ஆன  படத்தின் ரீ மேக் தான், நீங்க சும்மா வந்துட்டுப்போனா போதும்னு சொல்லி இருப்பாங்க போல , மனுஷர் அதிகமா அலட்டிக்கலை . வந்தவரை ஓக்கே 



ஹீரோயின் நெம்பர் ஒன் ஹன்சிகா .கொழுக் மொழுக் கன்னம் ( கன்னம் மட்டுமா ... ) ஹீரோவுக்கே படத்துல வேலை இல்லாதப்போ இவருக்கு மட்டும் என்ன கவர்மெண்ட் ஜாப்பா இருக்கப்போகுது , ஒரு டூயட் , 3 கட்டிப்பிடி சீன் அவ்ளவ் தான் .இவர் அப்பப்ப குஷ்பூ மாதிரி மேனரிசம் காட்டுவது , சிரிப்பது  எல்லாம் ஓவர் , ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சுந்தர் சி வந்து டொக் டொக் -னு கதவை தட்டப்போறார் , கபர்தார் 


 ஹீரோயின் நெம்பர் 2 அஞ்சலி , இவர் கழுத்துக்குக்கீழே நமிதாவுக்கு சவால் விடும் அளவு வளர்ச்சி அடைவது கூடத்தேவலை, கழுத்துக்கு மேலே குறிப்பா கன்னங்கள் 2 ம் கேப்டன் கன்னத்துக்கே சவால் விடும்படி பீர் சாப்பிட்டு வீங்கிப்போய் கிடக்கு , பார்க்க சகிக்கலை . அஞ்சலி ரசிகர்கள் மன்னிக்க 


ஹன்சிகா , அஞ்சலி 2 பேர்ல யார் அதிக திறமையைக்காட்டி இருக்காங்கன்னு பார்த்தா சந்தேகமே இல்லாம ஹன்சிகாதான் . குறிப்பா அவர் பீச் ல குளிச்சுட்டு கும்மாளம் இடும்போது  ஆஹா! பிரமாதமா திறமை காட்டி இருக்கார். இதுக்கு ஏதாவது அவார்டு உண்டா ? தெரில 



 சந்தானம் படத்தின் முதுகெலும்பு . இவரோட பிளஸ் பாயிண்ட்டே அப்பப்ப டைமிங்கா கவுண்ட்டர் டயலாக் அடிப்பதுதான். அவரையும் வயித்தால போற பேஷண்ட் ஆக்கி வடிவேல் ரேஞ்சுக்கு இறக்கி விட்டுட்டா எப்டி? இயக்குநர் அங்கே தான் சந்தானத்தின் கேரக்டரைசேஷன் ல சறுக்கிட்டார்,. அதையும் மீறி சந்தானம் 6 இடத்துல கவுண்ட்டர் டயலாக் அடிச்சு  அது போக 19 மொக்கை ஜோக்ஸ் வழங்கி இருக்கார். 



பிரேம் ஜி.. சப்போர்ட்டிங்க் காமெடி . சொல்றேனேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க , இவர் வரும் காட்சிகள் மகா எரிச்சல் . அவருக்கு தனி டூயட் வேற , க்ளோசப் ல அவர் வாயை ஏன் அப்டி காட்றாங்கன்னு தெரியல.. அவர் ஆளும் தலையும் .. முடியல (நடிகர்  செந்தில் கேரக்டர் மாதிரி ட்ரை பண்றாரோ? )

 நாசர் தான் வில்லன் . அங்கங்கே கிச்சு கிச்சு 


இசை தமன் . 2 பாட்டு தேறுது , பின்னணி இசை சுமார் . ஒளிப்பதிவும் சராசரி 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இந்தப்படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் வாங்குனது. சென்சாரே அப்டி கொடுத்தாக்கூட இவங்க ஏ தான் வேணும்னு கேட்டு வாங்கி இருக்கனும், அப்டி இருக்கு பல காட்சிகள்



2. ஹன்சிகா , அஞ்சலி என 2 முன்னணி ஹீரோயின்சை புக் பண்ணி  முடிஞ்சவரை அவங்க திறமையை வெளிக்கொணர பாடுபட்டது 



3. சி செண்ட்டர் ரசிகர்களை சிரிக்க வைக்கும் மொக்கைக்காமெடி டயலாக்ஸ் 


4. ஹீரோயின் ஹன்சிகா குட்டைப்பாவாடை அல்லது மிடி மாதிரி ஏதோ ஒரு கர்ச்சீப்பை அணிந்து வரும் காட்சிகளில் எல்லாம் கேமராமேன் கவுரவம் பார்க்காமல் தரையோடு தரையாக படுத்து ஜூம் செய்தது , குறிப்பா அந்த பீச் காட்சி.. 





இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோயின் கோடீஸ்வரி. அவர் ம் என சொன்னா 100 கோடி கூட கிடைக்கும், ஆனா லூஸ் வில்லன் அவளைக்கடத்தி வெச்சுட்டு கேவலம்  1 3/4 கோடிக்காக வைரத்தை பேசிட்டு இருக்காரு . 


2. ஹீரோ ஹீரோயினை தடவறாரு , கிஸ் பண்றாரு மேட்டர் தவிர எல்லாமே பண்றாரு, ஆனா “ எனக்கு இவ செட் ஆக மாட்டா. சரி வராது என டயலாக் பேசி லவ்வையே கேவலப்படுத்தறாரு


3. ஆர்யா , அஞ்சலி 2 பேரும் வரும்போது சம்பந்தமே இல்லாம ஹன்சிகா முன்னால  “ ஆமா , நான் அவளை கிஸ் பண்ணேன்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்காரே? ஆர்யா, உங்களைக்கேட்டாங்களா முருகேசா? 


4. எம் ஜி ஆர் , சிவாஜி காலத்துல ஆள் மாறாட்ட,ம் நடந்தது ,  வைரம் ஆள் மாறி டெலிவரின்னு சொன்னா அதுல ஒரு நியாயம் இருந்துச்சு , டெக்னாலஜி வளர்ந்த இந்தக்காலத்துல யார் கிட்டே வைரம் தரனும்னு ஒரு ஃபோட்டோக்கூடவா இருக்காது . கன்ஃபர்மேஷன் ஃபோன்ல பண்ணிக்க மாட்டாங்களா? 



5. ஆர்யா , ஹன்சிகா கூட கில்மா பண்ண பிள்ளையார் சுழி போடும்போது ( பிள்ளையார் மன்னிக்க ) அஞ்சலி கிட்டே இருந்து ஃபோன். அவர் சக ஊழியை மட்டுமே , அர்ஜெண்ட் மேட்டர் வா அப்டினு சொன்னதும் இவர் ஏன் கிளம்பனும்? 5 நிமிஷம் தானே ஆகும் ,மேட்டரை முடிச்சுட்டு போய் இருக்கலாம். அந்த சீன்ல ஹன்சிகா சீறுவார்னு பார்த்தா கண்டுக்கவே இல்லை 


6. எதுக்கு அவசரமா வரச்சொன்னேன்னு கேட்டதுக்கு அஞ்சலி கூலா ஜஸ்ட் சரக்கு அடிக்க  அப்டிங்கறார். முடியல 


7. காதலி தன்னை விட வசதின்னு த்தெரிஞ்சு தானே ஹீரோ லவ்வறாரு . சரி வராதுன்னு சொல்றவர் ஹீரோயின் கொடுத்த காரை மட்டும் ஒனத்தியா வாங்கிக்கிட்டது எப்டி? 


8. நெம்பர் டூ போறது யதார்த்தம் தான், எல்லாரும் டெயிலி போறதுதான் , அதுக்காக காமெடிங்கற பேர்ல இப்டி இறங்கி வரனுமா? நாளைக்கே சரி வேணாம், அடுத்த வாரமே இந்தப்படத்தை டி வி ல போடறப்போ சாப்டுட்டே யாராவது படம் பார்த்தா குமட்டாதா? 



9. சந்தானம் கேரக்டர் நாய் நக்ஸ் ( நக்கி ) அப்டினு வெச்சது நாய் நக்ஸ் நக்கீரன் என்ற வலைப்பூ ஓனர் மனசுல வெச்சுத்தான். டைட்டில் கர்டுல அவருக்கு நன்றியே போடலையே? பத்திரிக்கைப்பேட்டில மட்டும் அதை ஒத்துக்கிட்டவர் டைட்டில்ல் ஏன் அங்கீகாரம் தர்லை ?


10. இந்தப்படத்தின் பின்னணி இசை பல இடங்களில் நாடக் எஃபக்ட் . 


11. எக்சாம் ஹால் ல ஃபோன் பேசலாமா? 






மனம் கவர்ந்த வசனங்கள்

1. மல்லிகா அபார்ட்மென்ட்ல பிராத்தல் நடக்குது சார்.


நாடு எங்கேய்யா போய்ட்டு இருக்கு? 


அங்கே தான் போய்ட்டு இருக்கு



2. வீட்டுக்குள்ளே குப்பைத்தொட்டி வெச்சுப்பார்த்திருக்கேன், ஆனா  ஒரு வீடே குப்பைத்தொட்டி ஆகி இப்போதான் பார்க்கறேன் 



3. பாதாளச்சாக்கடைக்கு கதவு , ஜன்னல் வெச்சது மாதிரி ஒரு வீடு ./


4. ட்ரிங்க் ட்ரிங்க் 


 என்ன சத்தம் அது? 


 10 நிமிஷத்துக்கு முன்னே நீ காலிங்க் பெல் அடிச்சியே , அதுதான் , கொஞ்சம் லேட் பிக்கப் , ஹி ஹி 



5. வெங்கட் எனும் பேரை வெங்க்கின்னு கூப்பிடறதில்லை? அது மாதிரி நாய் நக்ஸ்ங்கற பேரை சுருக்கி நக்கி ஆக்கிட்டேன், எப்டி? 



6. டியர் , உங்களுக்காக புது சர்ட் வாங்கி வெச்சிருக்கேன் 


 எப்டியும் கழட்டத்தானே போறோம்? எதுக்கு இது? ( சுத்தம் ) 


7. டேய் , கிசு கிசு எழுதுற எனக்கே கூச்சமா இருக்கு, என்னடா பண்றே அவளை ?


8.  டேய் , உன் ஆளுக்கு தங்கச்சி இருக்கான்னு கேட்டு சொல்லுடா, கரெக்ட் பண்ணிடலாம் 


 ஒரிஜினல் இருக்கும்போது ஜெராக்ஸ்க்கு ஏன் ஆசைப்படறே? அவளையே எடுத்துக்கோ ( உலகத்துல எந்த உண்மைக்காதலனும் இப்டி உளற மாட்டான் )  


 என்னமோ காபித்தூள் எடுத்துக்கோங்கற மாதிரி அசால்ட்டா சொல்றானே? 



9. ஹாய் , மரத்தடி மாலாவா? 


 ஆமா, அன்னைக்கு ஷூட் எடுத்தீங்களே? வரவே  இல்லை?

 தொப்புளைக்காட்டி போஸ் குடுனு சொன்னேன்


 ஏண்டா , சமையல் குறிப்புக்கு எதுக்கு தொப்புளைக்காட்டனும்?

 இப்பவெல்லாம் யார்டா புக் படிக்கறாங்க ? சும்மா பார்க்கறதுக்குத்தானே? ( டைம் பாஸ் விகடனை நக்கலிங்க்? )


10.  ஒண்ணும் இல்லை, இங்க்லீஷ் பேப்பர் கிலோ 8 ரூபாய்க்கு விக்குதுங்கற திமிர்ல பேசறாங்க


11.  என்ன தமிழ் பேசறா? அவளை எல்லாம் தமிழ் கற்பழிப்பு வழக்குல உள்ளே போடனும் 



12. மாமி, என்னாதிது? வாழைப்பழத்தை ஆபரேஷன்  பண்ணிட்டு இருக்கேள்? ( டபுள் மீனிங்க் ) 



13.  தம்பி! என்ன பண்றேள்?

 சாப்டுண்டு இருக்கேன்

 அதான், சாப்பாட்டுக்கு என்ன பண்றேள்னு கேட்டேன்



14.  பக் வீட் ஆண்ட்டி - அவர் என்ன செஞ்சாலும் சூப்பரா இருக்கும் சேட்டா சேட்டாதான் 


இப்டியே போனா அங்கிளுக்கு டாட்டாதான் 




15. ஒட்டுத்துணில தெச்ச தலகாணி மாதிரி  உனக்கு ஒரு உடம்பு .அப்டி இருந்தும் ஜிம் பாடி மாதிரி எதுக்கு பில்டப்?



16.  மனோ பாலா - பரதம் கறது ஒரு கலை. அவங்க என்னதான் குச்சி வெச்சுக்குத்துனாலும் நீங்க நாட்டியத்துல கவனமா இருக்கனும் ( டபுள் மீனிங்க் )


17.  உன் கிட்டே 2 முக்கியமான விஷயம் பேசனும் 

 நானும் காலைல இருந்து  2 விஷயமாத்தான் போய்ட்டு இருக்கேன் 



18.  ஒரு பட்டாம்பூச்சியை ஒரு கரப்பான் பூச்சி  எப்டி கட்டிப்பிடிக்குது பாருங்க 


19.  டேய் , உனக்குக்கிடைச்சா எனக்கு கிடைச்ச மாதிரி டா


 என்னாது ?

சந்தோஷம் தான் . காதலின்னு பயந்துட்டியா?


20. முக்கியமான ஒரு வேலையை பாதிலயே விட்டுட்டு வந்திருக்கேன் ஹி ஹி 



21. ஒர்க்கிங்க் டைம்ல நான் தண்ணி அடிக்கறதில்லைங்க 


இப்போ நாம ஒர்க் பண்றோம்னு யார் சொன்னது? ரிலாக்ஸ் மேன் 



22.  நாசர் அடியாளிடம் - ஏண்டா , கல்யாண வீட்டுக்கா வந்திருக்கோம்? உக்காந்து சாப்டுட்டு இருக்கே? 



23.  என்னங்க ? போஸ்ட்ல என்ன? 


 முருகர் விபூதி தபால் ல வந்திருக்கு 


 அதை எடுத்துட்டு  ஏன் பாத்ரூம் போறீங்க ?

 குளிச்சுட்டு பூசிக்கத்தான் 


 நீங்க தான் ஆல்ரெடி குளிச்சுட்டீங்க்ளே? 


 சோப் போட மறந்துட்டேன் 


24.  லவ்ங்கறது கனவு மாதிரி, மேரேஜ்ங்கறது அலாரம் மாதிரி, அலாரம் அடிச்சதும்  கனவை கலைச்சிடனும்


25. என்னதான் டேஸ்ட்டா இருந்தாலும் பபிள்கம்மை ஒரு கட்டத்துல துப்பித்தான் ஆகனும், அது மாதிரி தான் பழைய லவ்வும் 



26. மனசுக்குப்பிடிச்சவங்க கிட்டே லவ்வைப்பிரப்போஸ் பண்றதை  விடப்பெரிய வேலை இந்த உலகத்துல எதுவும்  இல்லை # சேட்டை


27. இதை ஏன் என் கிட்டே முன்னாலயே சொல்லலை?

 நீங்க கேட்கவே இல்லையே?



28.  அது ஏன் சார் உங்க மண்டையை டேபிள் ஃபேன் மாதிரி ஸ்லோவா திருப்பறீங்க? 



29/ இவர் யாரு? பார்க்க பயங்கரமா இருக்காரே? 


 மூஞ்சி கழுவின பிறகு பாருங்க. இன்னும் பயங்கரமா இருப்பான் 


30. நீ நல்ல வழி ல   செலவு பண்ணு , இல்லை நாகர் கோயில் வழில செலவு பண்ணு  அதைப்பத்தி எனக்குக்கவலை இல்லை 


31. தப்பு பண்றவங்க எல்லாம் நம்ம பேப்பரைப்பார்த்து பயப்படனும்


 அப்போ நாம தான் முதல்ல பயப்படனும் 



32. மேரேஜ்க்கு முன்னால இதெல்லாம் தப்பு , நம்ம தமிழ்க்கலாச்சாரம் ஒத்துக்காது 


 ஹன்சிகா - இச் .. இப்போ?

 ஐ டோண்ட் நோ தமிழ் யா 



33.  நான் என்ன பிராண்ட் ஜட்டி போடனும்கறதைக்கூட உங்கப்பா தான் முடிவு பண்ணுவாரா? 



34. இந்த மாதிரி சோகக்கதைக்கு எல்லாம் நான் மயங்க மாட்டேன்

 சரி வேற ஒரு காமெடிக்கதை இருக்கு, சொல்லவா? 



35. முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி , உங்க வீட்ல நெம்பர் டூ போய்ட்டேன் சாரி 


 36 ஓடி வந்த வேகத்துக்கு களைப்பாற 2 பேரும் ஜூஸ் குடிக்கறிங்க போல ஓ இதான் முத்தமா? 


37 . திடீர்னு கண்ணாடில உன் ஃபேஸ்க்குப்பதிலா வேற ஒரு ஃபேஸ் இருந்தா உனக்கு எப்டி இருக்கும் ? 

 அடடே, அழகா இருக்கே அப்டினு 





எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40 



 குமுதம் ரேங்க் - ஓக்கே 



 ரேட்டிங்க் 2 / 5 


சி பி கமெண்ட் - ரொம்ப மொக்கை கிடையாது. டைம் பாஸ் ஆகும். எவனாவது இளிச்சவாயன் ஓ சி ல கூட்டிட்டுப்போனா பார்க்கலாம், சொந்தக்காசை செலவு பண்ணிப்போற அளவு படம் ஒர்த் இல்லை .


 

Thursday, March 28, 2013

மாந்திரீகன் - சினிமா விமர்சனம்

                                             
                                                 காலை 10.30 க்கு படம் னு அவசர அவசர மா போனா... அங்க 10.40 ஆகியும் ஆப்ரேட்டர் வரல... எத்தன மணிக்கு படம் னு விசாரிச்சா... தம்பி இது வரைக்கும் அஞ்சு பேர் தா இருக்காங்க.. 10.50 வரைக்கும் பாத்துட்டு 10 பேர் வந்தா தான் படம் னு சொன்னாங்க. எப்டியோ..காலேஜ் லீவு ங்கறதால.. பக்கத்து காலேஜ் பசங்க ஒரு அஞ்சு பேர் அப்டி இப்டி னு ஒரு 15 பேர் வந்துட்டாங்க. உடனே தியேட்டர் ல குஷி ஆகி ஒரு வழியா படம் போட்டாங்க.


                                                    2012 ல ரிலீஸ் ஆன ஜெயராம் நடிச்ச மலையாளப் பட டப்பிங் னு ரீல் போட்டதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது.சரி படத்தோட கதைக்கு வருவோம்... பொண்ணுங்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ தன் துணையை தேர்ந்தெடுக்கற உரிமை அந்த ஊர் ஜமீன் குடும்பத்துக்கு இல்ல..பெரியவங்களா பாத்து வைக்குற ஒரு பேயையோ இல்ல வில்லனையோ தான் கட்டிக்கிட்டு மாறடிக்கனும். அந்த ஊர் ஜமீன் பையனுக்கும் அதே ஊர் சாதாரண குடும்பத்த சேர்ந்த பொண்ணுக்கும் லவ் ஆகிடுது.



 எப்படியும் நம்மள சேர விடமாட்டங்கன்னு ஓடிப் போக முடிவு பண்றாங்க (உண்மையான காதலாம்......)  இது அந்த பையனோட மூணு அண்ணன்களுக்குத் தெரிஞ்சு அந்த பொண்ணு குடும்பத்த வெட்டி கொன்னுட்டு, பொண்ண .. அதாவது தாமிரபரணி படித்தில் நடித்த பானுவ.. உயிரோட கொளுத்தறாங்க... செத்தா ஒன்னா சாவோம் னு அந்த பையனும் பானுவோட சேர்ந்து ஒண்ணா எரிஞ்சு போயிடறான்.அதுல பானுவோட ஆவி மட்டும் துர் ஆத்மாவா வெறியோட பழி வாங்க அலையுது. கடைசில அது பழி வாங்குச்சா இல்லையா? ஆடியன்ஸ் இந்த படத்துக்கு வந்து எப்பிடி பலி ஆனாங்க என்பதை எந்த அளவுக்கு மொக்கையா சொல்ல முடியுமோ அந்த அளவு மொக்கயா சொல்லி இருக்கற படம் தான்  மாந்திரீகன்.

                                                       நமக்கு நல்லா தெரிஞ்ச  ஜெயராம் தான் பட ஹீரோ.தன் அப்பா மாந்திரீகன் என்பதால் அவர் அடக்கிய பேய்யை உங்களால்தான்  அடக்க முடியும் என மந்திரம் தந்திரம் தெரியாத ஜெயராமை பேயை அடக்க கூட்டி வந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகளை முழுமையாக ரசிக்க முடியாவிட்டாலும் ஜெயராம் காட்டும் எக்ஸ்பிரசன்கள் அற்புதம். அவர் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் மொக்கையைத்தான் தாங்க முடியவில்லை.



முதன் முறையாக பேயைப் பார்த்து பயப்படும் போதும், தன் காதலிக்காக மனமுருகுவதும் அவர் நடிப்பு அருமை. முகத்தில் ஆங்காங்கே தென்படும் அப்பவித்தனம் அவரது ப்ளஸ்.

                                      அடுத்து பாரட்டப்படவேண்டியவர்கள் ஹீரோயின்கள்  தாமிரபரணி பானு மற்றும் பூனம் பஜ்வா (கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு போன்ற தமிழ் படங்களில் நடித்தவர்).பேயாக வரும் பானு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் ஏனோ வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. முகம் நிறைய பவுடரும் மைய்யும் பூசீட்டா அதுக்கு பேர் பேயாம் (அப்படி பாத்தா ஊர்ல இருக்கற பாதி பொண்ணுங்க பேய்தான்....) . ப்ளாஷ் பேக்கில் வந்த வரை அவரது நடிப்பு ஓக்கே... பேயாக வரும்போது முகத்தை வடிவேலு போல் வாய், மூஞ்சியை கண்ட படி கோணித்து.... பயம் காட்டுவதற்கு பதில் சிரிப்பு காட்டுகிறார்.

                                             

                                                   பானு,  ஜெயராமின் காதலியான பூனம் பஜ்வா வின் உள்ளே புகுந்த பின் பூனம் பஜ்வா காட்டும் முக பாவனைகள் மிக அருமை. ஏன் முக பாவனைகளே தேவை இல்லை... அவரது கண்களே போதும்.. குட் .. நல்ல முயற்சி..அவரது அப்பாவித்தனம் கலந்த எக்ஸ்பிரஸன்கள் படத்திற்கு வலிமை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ரியாஸ்கான் வந்த வரை ஓக்கே.. மற்ற கதாப்பாத்திரங்கள் ஏதும் மனதில் ஒட்டவில்லை.


 


மண்ணை கவ்விய ... ச் சீ... மனம் கவர்ந்த வசனங்கள்:

1. பேய் கிட்ட இருந்து என்னய காப்பாத்திக்கதான் நான் உங்க கிட்ட            வந்தேன்

    அதுக்கு ஏண்டா பேய் மாதிரி கத்தற?


2. ஏய்... மாந்திரீகா..... என்ன பாத்து ஏண்டா ஒடற? உன் சக்தி அவ்ளோதானா?
      
       நா உன்ன பாத்து ஓடல... உன்ன இந்த இடத்துக்கு ப்ளான் பண்ணி வர வெச்சேன்...

3. பேய் பேசும் கேவலமான ப்ஞ்ச் : 
           
               நாங்க யாரையும் கொல்ல மாட்டோம்....ஆனா வெறி வந்தா ஒருத்தர கூட உயிரோட விடமாட்டோம்... (இங்க ஆல்ரெடி எல்லார்க்கும் வெறி வந்துருச்சு)

4.ஆஆஆஆ..........ஊஊ........ஏஏஏய்ய்.... விட்ரு.... உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.(பானு 6 முறை)

5.உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.ஆஆஆஆ..........ஊஊ....... ஏஏஏய்ய்.... விட்ரு.... வேண்டாம்.... ஏஏஈஇ (பூனம் பஜ்வா 5 முறை)


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் :

1. இரண்ட ஹீரோயின்களை புக் பண்ணியது... அதிலும் தாமிரபரணி தாம்பூலம் பானு மற்றும் பூக்காடு  பூனம் பஜ்வாவை புக் செய்தது.

2. ஹீரோவாக ஜெயராமை புக் பண்ணியது.( சம்பளம் தர்லைன்னாலும் கண்டுக்க மாட்டாராம் )

3. பேய் படமாக இருந்தாலும் படத்திற்கு U சான்றிதழ் பெற்று மகளிர் அணியை கவர செய்த யுக்தி .

4. ஆரம்பத்தில் வரும் கொலையை காட்சிப்படுத்தி எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

5.தமிழ் படம் போன்றும், ஹைபட்ஜெட் படம் போன்ற போஸ்டர் டிசைன்.

6. பானுவின் ப்ளாஷ்பேக் காட்சியை 3 நிமிடத்தில் முடித்தது. 

7. மந்திரம் தெரியாத ஜெயராம் பேய் ஓட்டுவதாக சமாளிக்கும் காட்சிகள்.


8.முதல் கொலை கண்ணாடி முன் பேய் கழுத்தை அறுக்கும் போது வில்லனும் தன் கழுத்தை அறுத்துக்கொள்ளும் காட்சி மிரர்ஸ் படத்தில் இருந்து சுடப்பட்டாலும்... அது வெளியில் தெரியாதவாறு சமாளித்தது.

இயக்குநரிடம் சில கேள்விகள்:

1. பல மந்திரங்கள் தெரிந்தவர்களே அடக்க முடியாத துர்மாத்வாவை ஒன்றும் தெரியாத ஜெயராம் பிஸ்கட் சாப்பிடுவ்து போல அடக்குகிறார்.

2. படத்தில் மூன்று வில்லன்கள்... அதாவது அண்ணண்கள்.... இருவர் முதல் காட்சியிலேயே காலி.. மூன்றாமவரையும் அப்பொழுதே போட்டிருந்தால் படம் அப்பவே முடிஞ்சிருக்குமே....

3. வில்லனைத் தவிர படம் பூரா யாரையாவது ஆவி பானு கொன்று கொண்டே இருக்கிறார்.  இதுல லாஜிக் வசனம் “எனக்கு கிடைக்காத காதல் வாழ்க்கை யாருக்கும் கிடைக்க கூடாது” னு.... படு கேவலமா இருக்கு

4.ஜெய்ராம் தன் காதலுக்காக தன் உயிரை பணயம் வைக்கிறார்... ஓக்கே.. அதுக்காக 50 நொடில எல்லா ஓலைச்சுவடியயும் படிச்சு கத்துகிட்டு அடக்கறதுலாம் ஓவர். ( எந்திரன் ரஜினிக்கே 2 நிமிஷம் ஆகும் )

5.க்ளைமேக்ஸ்தான் செம காமெடி.. ஹீரொ ஆத்மாவோட பறந்து பறந்து சண்ட போடுறார்... அத கத்தியால குத்தி இரத்தம் வர வைக்கறார்... ஆத்மாவ தொட முடியுமா? அதுக்கு உருவம் இருக்கா?

6. இசை , ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு  சுமார் ரகம். கிராப்பிக்ஸ் மகா மட்டம்.

படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் ஆச்சு... இவ்ளோ நாள் ஓடுனதே பெரிய ஆச்சர்யம்.. அத நான் பொய் பாத்தது அத விட ஆச்சர்யம்... வெள்ளிக்கிழமை வரை ஓடுமாம்... ஏன்னா சென்னையில் ஒரு நாள் ரிலீஸ் அங்கதான் ஆகுதாம்... பெருந்துறை முருகன் தியேட்டரில் படம் பார்த்தேன்

 




டிஸ்கி - மேலே உள்ள விமர்சனத்தை உங்களுக்கு வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக் .  எடிட்டிங்க் , டைரக்சன் மேற்பார்வை மட்டும் நான் - சி பி. அட்ரா சக்க தி மு க கட்சி மாதிரி , குடும்ப உறுப்பினர்கள் யார் வேணும்னாலும்  ஆக்ரமிப்பாங்க , தமிழர்கள் அதை சகிச்சிக்கனும் ஹி ஹி , மார்ச் மாச ஒர்க் லோடு , நல்ல படங்களுக்குப்போகவே நேரம் இல்லை , குப்பைப்படத்துக்கு எங்கே போக ?


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 36 ( டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம் )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்



ரேட்டிங்க் - 2 /5

 


Friday, March 08, 2013

ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்

 

எல்லா தமிழ் சினிமாக்களையும் கலாய்க்கும் எஸ் வி சேகரின் சினிமா சினிமா , ஷக்தி சிதம்பரத்தின் மகாநடிகன் , சி எஸ் அமுதனின் தமிழ்ப்படம் பாணியில் இன்னொரு படம் . முதல் பாதி ஹாலிவுட் படமான ஹேங்க் ஓவர் , பின் பாதியில் இன்று போய் நாளை வா  & கண்ணா லட்டு தின்ன ஆசையா?  அக்மார்க் உல்டா என கலந்து கட்டி மொக்கை போட்டிருக்கிறார்கள் .. உஷ் அப்பா முடியல


நண்பர்கள் 3 பேரு , திருப்தி இல்லாத மேரேஜ் லைஃப்ல இருந்து விடுபட  ஐடியா பண்றாங்க . இவங்க 3 பேருக்கும்  ஏன் மனைவி செட் ஆகலை அப்டினு தனித்தனி டிராக்ல சின்ன சின்ன கதை .அது முடிஞ்சதும் டான்ஸ் பார்ட்டில ஒரு ஃபிகரை பார்க்கறாங்க. அதுதான் ஹீரோயின் . அதை கரெக்ட் பண்ண 3 பேரும் படாத பாடு படறாங்க. யார் செட் பண்ணாங்க என்பதுதான் கதை . இதுல ஒரு ட்விஸ்ட் வேற இருக்கு க்ளைமாக்ஸ் ல . தில் இருக்கறவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க.. இந்த  கூத்துல பெரிய கூத்து என்னன்னா 2 வது பாகம் வேற வருதாம் .


ஹீரோ வினய்  என்பதே டைட்டில் ல தான் தெரியுது . எப்படி இருந்த ஆளு இப்படி ஆகிட்டாரே?  அய்யோ பாவம் , சத்யன் , பிரேம் ஜிக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட இவருக்கு இல்லை . இவர் அஜித்தை , ரஜினியை , விஜய் யை கலாய்ப்பதெல்லாம் ஓவர் . யார் யார் என்ன செஞ்சா நல்லாருக்கும்னு தெரிய வேணாமா?  ( அவர் கலாய்ச்ச ஆர்டர் படி பேர் போட்டிருக்கேன், இதுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க )


ஓப்பனிங்க் ஷாட்டில் ஒரு பாடலுக்கு வரும் பவர் ஸ்டார்க்கு அமோக வரவேற்பு , ஆனா பெருசா ஏதும் கவரலை . பவர் ஸ்டார் உஷார். இப்படி சில்க் ஸ்மிதா மாதிரி ஆடிட்டு இருந்தா உங்க பவர் போயிடும் . 




படத்துலயே எல்லார் மனமும் கவர்ந்தவர் சத்யன் தான். நல்ல காமெடி சென்ஸ். டயலாக் டெலிவரி , நடிப்பு எல்லாம் பக்கா 


பிரேம் ஜியை க்ளோசப் ல அடிக்கடி காட்டுவது ஏன்? அவர் வாய் என்ன சிம்ரனின் இடுப்பா? கேமராவைக்கொண்டு போய் கொண்டுபோய் அவர் வாய் கிட்டேயே வைக்கறாங்க >. முடியல 


 ஹீரோயின் லட்சுமி ராய். டைட்டில் ல அழகு தேவதைனு போடறாங்க. என்ன நிர்ப்பந்தமோ .. பில்லா நயன் தாரா கெட்டப்பில் க்ளைமாக்ஸ் சில் நல்லா பண்ணி இருக்கார் , ஜாக்கிங்க் போற சீன்ல நல்லா திறமையை காட்டி இருக்கார்.. (  ஜாக்கிங்க் போறதுல என்ன திறமை?னு கேட்கும் சின்னப்பசங்க எல்லாம் ஜவ் மிட்டாய் சாப்பிடவும் ). நீச்சல் டிரஸ் ல  10 நிமிஷம் வர்றார் , அதோட அவர் போர்ஷன் ஓவர் . 


 வினய்க்கு மனைவியாக வரும் அந்த குண்டு பொண்ணு ஆர்த்தி மாதிரி ஒரு ரவுண்ட் வர சான்ஸ் இருக்கு , அவரே 19 ரவுண்ட் நம்மை விட குண்டா தான் இருக்கார் . 


 கவுரத்தோற்றத்தில் (!!!!!!!!!) டான்ஸ் பார்ட்டி புகழ் சோனா . 1ம் சொல்றதுக்கில்லை.. அப்புறம் மந்த்ராஆஆ




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர் டிசைனில் , விளம்பரங்களில் பவர் ஸ்டாரை போட்டு மார்க்கெட் பண்ணினது , அவர் ஒரு பாட்டுக்குத்தான் வர்றார் என்பது தெரியாத வண்ணம் பார்த்துக்கிட்டது 



2.  படத்தின் ஹீரோயின் லட்சுமிராய்  படம் போட்டு 97 வது நிமிடம் தான்  அதாவது இடைவேளை முடிஞ்சு 6 நிமிஷம் கழிச்சுத்தான் எண்ட்ரியே ஆகறார் என்பது தெரியாத படி ஃபுல் அண்ட் ஃபுல் அவர் தான் எல்லாம் என்பது மாதிரி பிரமோட் பண்ணது 



3. ஹீரோ வினய் என்பதே தெரியாத படி இருட்டடிப்பு பண்ணி பிரேம் ஜி , சத்யன் இவங்களை பூஸ்ட் அப் பண்ணது 



4.  பிரேம் ஜி - சோனா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளில் கடலோரக்கவிதைகளை நையாண்டி செஞ்ச விதம்  ( அடி ஆத்தாடி ) 


5. சத்யன் தன் ஜோடியுடன் பாடும் உயிரின் உயிரே ( காக்க காக்க) பாடல் காட்சி


6, மனைவியைப்பிரிந்த வாலிபர்கள் சங்கம்  ஆரம்பிச்சு பாடும் கானாப்பாட்டான  வா மச்சி வா குத்தாட்டப்பாட்டு ஆக்கியது ( பாடல் இல் இருந்த கிக் படமக்கத்தில் இல்லை ) 


7 . மனோபாலாவின் சம்சாரத்தை  வேறொரு நபர்  கிஸ்  அடிப்பதும் , அதை மன்னிக்கும் மனோபாலாவை ஒபாமா சந்திக்க விரும்பும் காமெடி டிராக்கும் ஆஹா! 


இயக்குநரிடம் சில கேள்விகள்



1. கலாய்த்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரே பார்த்தாலோ படிச்சாலோ அவங்களே ரசிக்கும் அளவு இருக்கனும். எல்லை மீறினால் ரொம்ப த்தப்பு . ரஜினி, கமல் , அஜித் , விஜய் 4 பேரையும் கலாய்ச்சு இருக்கீங்க , இதுல அவங்களோ, அவங்க ரசிகர்களோ பார்த்தா கடுப்பாகும்படி தான் காட்சிகள் இருக்கு .



2. ஹீரோ பேரு டேவிட் பில்லா , அவர் தடுமாறி கீழே விழும் காட்சியில் “ நீ நெம்பர் ஒன் நெம்பர் ஒன் அப்டினு சொன்னே, இப்போ கீழே விழுந்து கிடக்கே  “ இந்த டயலாக் எதுக்கு? அஜித் ஒரு நாளும் தன்னை நெம்பர் ஒன் அப்டினு சொன்னதே இல்லையே?  தனிப்பட்ட முறைல உங்களுக்கு ஏதாவது அஜித் கூடப்பகையா? 


3. சத்யன் ஒரு காட்சியில் துப்பாக்கி விஜய் ஸ்டைலில்  “ ஐ ஆம் வெயிட்டிங்க் “ அப்டின்னதும் ஃபிகர் “ போடா லூசு “ அப்டிங்குது. இது ரொம்ப ஓவர் 


4. யார் அவன் கோச்சடையான்? மண்டை மேல கொண்டை வெச்சுக்கிட்டு  என்ற டயலாக்கும் அத்து மீறலே , தியேட்டர்ல யாரும் சிரிக்கவே இல்லை பாஸ் 


5 . லொள்ளு சபா உட்பட எல்லாரும் பிரிச்சு மேஞ்ச நாயகன் வேலு நாயக்கர் கேரக்டர் உல்டா செம போர்..


6. மகளிர் தினம் அன்னைக்கு படம் ரிலீஸ் பண்ணிட்டு படம் பூரா பெண்களை மட்டம் தட்டிட்டே இருக்கீங்க.. டயலாக்ஸ் எல்லாம் நேரடி டபுள் மீனிங்க் ..  ஏஏஏ சர்ட்டிஃபிகேட் குடுத்ததில் தப்பே இல்லை 



7, கே எஸ் ரவிக்குமார் போலீசாக செய்யும் அலப்பறை செம மொக்கை 



8. க்ளைமேக்ஸ் வந்ததும் டகால்னு 3 பேரும் திருந்துவது எப்படி? 


9. படத்தின் கடைசி அரைமணி நேரம் சத்திய சோதனை , மகா இழுவை 

10 . ஒவ்வொரு தமிழ் சினிமாவையும் கலாய்க்கும்போது நல்லாவே தெரியுது என்ன படத்தை ஓட்டறீங்கனு, போதாததுக்கு அந்தந்தப்பட ஃபேமஸ் பி ஜி எம் மை வேற ஓட விடறீங்க , போதாததுக்கு படத்தோட டைட்டிலையும் கேரக்டரே சொல்லனுமா? படு செயற்கை  



மனம் கவர்ந்த வசனங்கள்


1. நாம 10 ரூபா கடனா கேட்டா தராத பசங்க பொண்ணுங்க கேட்டா மட்டும் 1000 ரூபா அயர்ன் பண்ணித்தருவானுங்க



2. நான் தல யையே பார்த்தவ.என் கிட்டேயே மங்காத்தாவா ? 


- நான் தல ,தளபதி 2 பேரையும் பார்த்தவ 




3. எல்லாரும் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வெச்சவனைத்தான்  லவ் பண்ணுவாங்கன்னா என்னை மாதிரி சிங்கிள் பேக் எல்லாம் எங்கே போக ? 



4.  ஏய், டூ வட் ஐ ஸே.. 

 என்னது? வாட்டர்  சப்ளை வேணுமா?



5. ட்ரெட் மில்லுல என்னை இப்படி நடக்க விட்டதுக்கு ரோட்ல என்னை விட்டிருந்தா இந்நேரம் நான் கோயம்பத்தூருக்கே போய் இருப்பேன் 


6. ஹாய் மிஸ்.. என்ன இவங்க கை கொடுக்க மாட்டாங்களா?

 அவங்க கொஞ்சம் ஆர்த்தோடக்ஸ்

 ஆடு மேய்க்கறாங்களா? 


 அய்யோ, யாரையும் டச் பண்றது பிடிக்காதுன்னு அர்த்தம் 


 குட் ஹேபிட், ஆனா பேடு மேனர்ஸ் 



7.  இவ என் ஃபிரண்ட் சவுந்தர்யா 


 ரஜினியை கேட்டதா சொல்லுங்க 



8.  நாம 2 பேரும் பாம்பே ஓடிப்போலாம் 


 அங்கே வேணாம் , குஜராத் போலாம்// 


 இல்லை , பாம்பே படத்துல தான் அர்விந்த் சாமி மணீஷா கூட ஓடிப்போய் ரெட்டை குழந்தை பெத்துக்கிட்ட்டாரு  , அதே செண்ட்டிமெண்ட் ல நாமும் ட்ரை 



9.  தண்ணி குடு 

 இல்லை 


 இப்போதான் ஒரு 30 லிட்டர் கேனை உருட்டிட்டுப்போனே? ( அது ஒரு குஜிலி)



10.  டேய், இது எத்தனை நாளா நடக்குது? 


 இப்போத்தான் அரை மணி நேரமா 





11.  நான் உயிரோடு இருக்கும் வரை தப்பு பண்ண விட மாட்டேன் 


 ஓ, எப்போ சாவீங்க ?


12.  எதுல வேணாலும் விளையாடுங்க, ஆனா என் லவ் ல மட்டும் விளையாடாதிங்க


 அப்போ உன் லவ்வர் கூட விளையாடலாமா?  ( எந்த ஃபிரண்ட்ஸ் ஆவது இப்படி கேட்பாங்களா? )


13.  இந்த நாய்க்கு பூஜை, அர்ச்சனை செய்யனுமா? சரி நட்சத்திரம் என்ன?

 மிருக சீசரம் , கவுரவ கோத்திரம் 

 கூட இருந்து பிரசவம் பார்த்த மாதிரியே சொல்றானே



14.  என்ன பேசறீங்க? 

 தமிழ் தான் 


15.  ஏய்.. புரிஞ்சுக்க 


 முதல்ல புரியற மாதிரி பேசு


16.  புலி பசிச்சாலும் புரோட்டா தின்னாது 


17.  முழு புரோட்டாவா இருந்த நம்ம வாழ்வு மேரேஜ் ஆனதுல இருந்து கொத்து புரோட்டாவா ஆகிடுச்சு 


18.  நான் அஞ்சாவது படிக்கும்போது அஞ்சலை டீச்சரை லவ் பண்ணேன், பத்தாவது படிக்கும்போது பத்மா டீச்சரை , பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பரிமளா டீச்சரை லவ் பண்ணேன் 




19.  அடடா, என்ன அழகு அழகு , உக்கார வெச்சு ஒரு மாசம் வேடிக்கை பார்க்கலாம் போல 


20 . எங்கே அவளைக்காணோம்? மைதா மாவு மாதிரி இருந்தாளே, தண்ணீருல கரைஞ்சுட்டாளா?





21.  மிஸ் , 17 சி பஸ் எங்கே நிக்கும்? 

 சாலி கிராமம் போய்க்கேட்டா சொல்வாங்க, இது பெங்களூர் 



22. அய்யோ , மேடம், ரொம்ப ஏறி ஏறி இறங்காதீங்க  ( அவுட் ஆகிடப்போகுது ) சென்சார் கட் வசனம் மியூட் ( டபுள் மீனிங்க் _)




23./ ஓமக்குச்சி கூட என்னைப்பார்க்க வர மாட்டான், ஒபாமா எதுக்கு வர்றாரு?


24.  அந்தக்கொரில்லா நீ எது சொன்னாலும் கேட்குமா? முட்டி போடுமா? 


 குட்டியே போடும்  ( அதாவது வாரிசு ) 



25. உன் மாமியார்  கராத்தாவுல பிளாக் பெல்ட்னு சொல்லவே இல்லை?


இதை பிரஸ் மீட் வெச்சா சொல்லிட்டு இருக்க முடியும்?


26. குத்துங்க எஜமான் குத்துங்க, இந்த மாமியார்களே இப்டித்தான்





எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி. பி கமெண்ட் - எல்லாரும் பார்க்க முடியாது . பி , சி செண்ட்டர் ஆண் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தவங்க ஓரளவு ரசிக்கலாம் , டி வி ல பார்க்க ஏற்ற படம் . தியேட்டருக்குப்போனா 9 ல குரு  ஏழரை சனி - ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 

 ரேட்டிங்க் -   2.25  / 5