Showing posts with label மோசடி. Show all posts
Showing posts with label மோசடி. Show all posts

Wednesday, June 22, 2011

சாருநிவேதிதா சேட்டிங்க்கில் நடந்த சீட்டிங்க் - கில்மா ,ஜொள்மா நடந்தது என்ன? காமெடி கும்மி

 

1. சாரு நிவேதிதா கதையை மலையாளத்துல எடுக்கப்போறாங்களாமே? ஏன்?

ஆமா.. தமிழ்ல எடுத்தா சென்சார்ல விட மாட்டாங்களே?

------------------------

2. என் லட்சியமே ஒரு எழுத்தாளரா ஆகனும்கறதுதான்...

இலக்கியத்துல அவ்ளவ் ஆர்வமா?


ச்சே.. ச்சே.. சேட்டிங்க்ல எனக்கு ரொம்ப ஆர்வம்..

------------------------

3. நீ பாதி நான் பாதி படம் எடுத்த இயக்குநர் வஸந்தை ஏன் எல்லாரும் இப்போ கண்டிக்கறாங்க?

நிவேதா-ன்னு ஒரு பாட்டு ஃபுல்லா ஒரே வார்த்தையை போட்டு எழுதுனாரு இல்லையா? அது சாரு நிவேதிதாவைக்குறிக்குதுன்னு இப்போ ஸ்ட்ரைக் பண்றாங்களாம்.. அந்த பாட்டை எடுக்க சொல்லி..

-----------------------------

4.அந்த எழுத்தாளர் பெயர் கின்னஸ்ல வந்திருக்காமே?

ஆமா, ஒரே நாள்ல 240 ஃபிகர்களோட  சேட்டிங்க் பண்ணாராம்.. அதுவும் ஒரே டைம்ல.. 
-------------------------------

5. ஊர்த்திருவிழா, நெட் திருவிழா - என்ன வித்தியாசம்?

ஊர்த்திருவிழான்னா தேரு இழுத்து சந்தில நிறுத்துவாங்க..தேரு நிலை சேர்ந்துடும். நெட் திருவிழான்னா சாருவை வம்புக்கு இழுத்து தராசுல நிறுத்துவாங்க.. சாரு நிலை குலைஞ்சுடுவாரு.


------------------------------------------------


6. நக்கீரன் கோபால் ஏன் குஷியா இருக்காரு?

வீரப்பன் மேட்டருக்குப்பிறகு அவருக்கு கிடைச்ச செம தீனி.. சர்க்குலேஷன் எங்கேயோ போகப்போகுதாம்.. 

------------------------

7. அவர் ஃபேமஸ் எழுத்தாளர்னு எப்படி சொல்றே?ஏகப்பட்ட நாவல்ஸ் எழுதி இருக்காரா?



ம்ஹூம்,ஏகப்பட்ட ஃபிகர்களோட சேட்டிங்க் பண்ணி  சீட்டிங்க் பண்ணி  இருக்காராம்..

-----------------------------------------

8.வணக்கம் சார்.. நான் உங்களோட ரசிகை.. 

போதும்மா... இனிமே நாம 2 பேரும் சும்மா சைகைலயே பேசிக்குவோம்.. எவனாவது ரெக்கார்டு பண்ணிடப்போறான்..

---------------------------------

9. சார்.. உங்க எழுத்தை எங்களால மறக்கவே முடியாதுங்க.. 

ரொம்ப தாங்க்ஸ்ங்க.. எந்த புக்ல பார்த்தீங்க?

ம், ஃபேஸ்புக்ல பார்த்தோம்..

------------------------------------

10. ஒரு பொண்ணுக்கு  ஆறுதலா 4 வார்த்தை பேசுனது தப்பாய்யா?

ஆனா பேசுனதெல்லாம் கெட்ட வார்த்தையா இருக்கே?

------------------------------

Not enough arm strength to keep her face off the ground!




11. ரைட்டர் சார்.. உங்க டி சர்ட்ல 18 + அப்டின்னு பிரிண்ட் பண்ணி இருக்கே ஏன்?

வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவேண்டிய எழுத்துக்கு சொந்தக்காரன்னு அர்த்தம்.. 

---------------------------------

12. பெண் எழுத்துங்கற தலைப்புல கட்டுரை எழுதச்சொன்னது தப்பா போச்சு.. 

ஏன்? 

பெண் கழுத்து அப்டிங்கற தலைப்புல வேணா எழுதறேன்கறாரே?

-----------------------------
13. அவர் ஒரு ரசனை கெட்ட எழுத்தாளர்னு எப்படி சொல்றே..?

தொடர் கதை அத்தியாயத்துக்கு கீழே தொடரும்னு போடறதுக்குப்பதிலா தொட்டு விட தொட்டு விட தொடரும்னு போட்டிருக்காரே..?

---------------------------------

14. ஃபைனான்சியர்,ரைட்டர் என்ன வித்தியாசம்..?


அவரு ஆண்,பெண் பாகுபாடில்லாம எல்லாரையும் சீட்டு போட வெச்சு சீட்டிங்க் பண்ணுவாரு,,. இவரு பொண்ணுங்களை மட்டும் சேட்டிங்க் பண்ணி சீட்டிங்க் பண்ணிடுவாரு..

---------------------------


15. ராஜேஷ் குமார்- சாரு நிவேதிதா என்ன வித்தியாசம்?

 அவரு அதிகமான க்ரைம்  நாவல் எழுதி சாதனை புரிஞ்சாரு.. இவரு அதிகமான க்ரைம் வேலை செஞ்சு சர்ச்சைல சிக்குனாரு,.. 


-------------------------

























டிஸ்கி -  முதல் படம் சாரு பலரிடம் கண்டனம் பெற்றதையும், இரண்டாம் படம் இனி பெண்கள் சாருவை கேவலமாகப்பார்ப்பார்கள் எனவும்,மூன்றாம் படம் சாருவிடம் பெண்கள் சேட் பண்ணினால் ஓப்பனிங்க்ல ஜாலியா இருந்தாலும் ஃபினிஷிங்க்ல ஸ்லிப் ஆகிடுவாங்க என்பதையும் குறிக்கிறது..  இப்படிக்கு கவிதை,ஜோக் என எது எழுதினாலும் அதுக்கு விளக்கவுரை எழுதி நேரத்தை வீணடிக்கும்  வீணாப்போன பதிவர் ஹி ஹி

Thursday, March 03, 2011

ஈரோடு டாஸ்மாக் கடைகளில் நடக்கும் ஊழல்கள் + வேரோடு களையப்படவேண்டிய மோசடிகள்


http://dilipnaidu.files.wordpress.com/2010/09/tasmac-semester-1-ovbe-1.jpg 
தன்னைப்பற்றியும், தன் குடும்பத்தைப்பற்றியும் எப்போதும் சிந்திக்காமல் இப்பொழுதும், அப்பொழுதும்,எப்பொழுதும்,முப்பொழுதும் தமிழக மக்களின் நலனைப்பற்றியே சிந்திக்கும் முத்தமிழ் வித்தவர் சாரி வித்தகர் டாக்டர் கலைஞர்  மது விலக்கு சாத்தியம் இல்லை என தனது நிரந்தரக்கூட்டாளியும்,பச்சோந்தி போல் மாறும் அரசியல்வாதிகளுக்கு நடுவே மாறாத குணமும்,தனது கட்சியில் தனது குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் இருந்தாலோ. வாரிசுகளுக்கு பதவி கொடுக்கபட்டாலோ நடு வீதியில் என்னை செருப்பால் அடியுங்கள் என டயலாக் பேசி வன்னியர்களின் ஓட்டைக்கவர்ந்தவருமாகிய 2011-ன் சிறந்த தியாகி டாக்டர் ராம்தாஸ் அவர்களிடம் கூறியபோது நான் கூட அதை உண்மை என்றும் வேறு வழி இல்லை போல என்றும் நம்பி இருந்தேன்.

ஈரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் எனது நண்பன் டாஸ்மாக் ஊழியனாகப்பணி புரிந்து வருகிறான்.டிகிரி முடித்தவன்.ரொம்ப நாளுக்குப்பிறகு நேற்று அவனை சந்தித்தேன்.

வாப்பா.. எப்படி போயிட்டிருக்கு வேலை.. எல்லாம்?

ம் ,ம் ,நல்லா போயிட்டிருக்கு.

எவ்வளவு சம்பளம்?

பிடித்தம் போக ரூ 3000 வருது..

ரொம்ப கம்மியா இருக்கே.. எப்படி குடும்பத்தை சமாளிக்கறே,...

சம்பளம் கம்மியா இருந்தா என்ன? கிம்பளம் கிடைக்கும் அல்ல?

ஆமா... நீ என்ன ஆ ராசாவா?டெண்ட்டர்ல கையெழுத்தைப்போட உனக்கு தேடி வந்து மொய் வைக்க...?

ஆஃப் குவாட்டர் சிஸ்டம் இருக்க பயம் ஏன்?

புரியலையே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_q4lWGcoI_l8GCrU0aPt0hs1lU68-L1M3HpzjIp99l0lhjoBkV2m04gsagqL1nykCrxcL8RwkrPNL51WswL6AWADrS5Mq8aTkW8sr69jqmTutp5xhCRBo2FSSjkg3BFkJDqSGcgNiE2M/s400/8.jpg
தம்பி...மானிட்டர்,ஷிவா,கோல்கொண்டா,மெக் டவல்,ஓல்டுமங்க் உட்பட கிட்டத்தட்ட 45 வெரைட்டி ஐட்டம் இருக்கு.ஒவ்வொரு ஐட்டம் ஃபுல் பாட்டில்ல சீல் உடைச்சு ஒரு ஆஃப் குவாட்டரை எடுத்து ஒரு குவாட்டர் பாட்டில்ல ஊத்திக்க வேண்டியது.அப்புறம் அந்த ஃபுல் பாட்டில்ல புனல் வெச்சு தண்ணி ஊத்திட வேண்டியது.பழையபடி சீல் ஒட்டிட வேண்டியது.அவ்வளவுதான் ,மேட்டர் ஓவர்.....

அடேங்கப்பா.. குடிக்கற ஆளுங்களுக்கு தண்ணீர் கலந்திருக்கற விஷயம் தெரியாதா?

ரெகுலரா குடிக்கறவங்களுக்கு நாக்கு மரத்துடும். இது எப்படின்னா ஒரு மைசூர்பாக்கை நீ வாரம் ஒரு தடவை சாப்பிட்டா ஸ்வீட்டா இருக்கும்.தொடர்ந்து கேப் விடாம சாப்பிட்டு பாரு,நாக்கு மரத்துடும், நாக்கின் சுவை அரும்பு மொட்டூக்கள் உணர்வு சக்தியை இழந்திடும்.

சரி.. அதையும் மீறி நம்ம ராம்சாமி அண்ணன் மாதிரி மதி நுட்பமும், துல்லியமான டேஸ்ட் கண்டு பிடிப்புத்திறனும் உள்ளவங்க வந்து கண்டு பிடிச்சுட்டா என்ன பண்ணுவே..?

அந்த மாதிரி ஆளுங்களுக்கு நல்ல சரக்கா(!!!) குடுப்பேன்.

சரி.. இதுல உனக்கு என்ன வந்துடப்போவுது..?ஒரு 500 ரூபா..?

தம்பி.. நீ இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..கிட்டத்தட்ட ரூ 3000 டூ ரூ 3500 தேறும்.

http://photo.outlookindia.com/images/gallery/20100804/wine_shop_chennai_20100816.jpg
கலைஞர் நல்லாட்சி நடத்தறார்னு சொல்லி இருந்தாக்கூட அப்படி அதிர்ச்சி அடைஞ்சிருக்கமாட்டேன்..எனக்கு தலை சுத்துச்சு...அப்போ இவனோட மாத வருமானம் மாவட்டக்கலெக்ட்டர் வாங்கற சம்பளத்தை விட டபுள் மடங்கு ஆச்சே...

சரி.. நீ எப்படி கால்குலேட் பண்ணி பணம் எடுப்பே..?குழப்பம் வராது.?

ஹா ஹா .. அப்பப்ப எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவேன்.. உதாரணமா ஒரு ஆஃப் குவாட்டர் தண்ணி கலந்தது விற்கறேன்னா அதுக்குண்டான அமவுண்ட் ரூ 30 அல்லது ரூ 25  எடுத்து பாக்கெட்;ல போட்டுக்குவேன்.டியூட்டி முடிஞ்சு போறப்ப அந்த சில்லரைகளை(!!) எல்லாம் கல்லாவுல போட்டுட்டு 500 ரூபா நோட்டா எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவேன்..

சரி.. உனக்கு வருத்தம்னு ஒண்ணு ஏற்படவே ஏற்படாதா?

ம்.. 31 நாளும் நாமளே டியூட்டி பார்க்கனும்னு நினைப்பேன். ஆனா ஆள் மாத்தி விட்டுடுவாங்க.. 15 நாள் தான்.

அட.. பாவி.. அதை நான் கேட்கலை.. இப்படி எல்லாம் அடிக்கறமே... மனசாட்சி உன்னைக்கேள்வி கேட்காதா?


அடப்போடா.. இவனே.. நாட்ல எவன் யோக்கியனா இருக்கான்?ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள்  அப்பாவி டி வி எஸ் 50 காரன் சிக்குனா ரூ 300 தேத்திடறாரு.கவர்மெண்ட் ஊழியர்கள் எல்லாரும் அவங்கவங்கவேலைல எந்த அளவு சுருட்ட முடியுமோ அதை சுருட்டீட்டுதான் இருக்காங்க.. நான் மட்டும் யோக்கியமா நடக்க நான் என்ன இளிச்சவயனா?
http://m3chennai.com/wp-content/uploads/2010/11/Lekha-Washington-hot-2.jpg
அவனை விட்டு நான் ஆஃபீஸ் போனேன்.. மேலும் சில டாஸ்மாக் கடைகளுக்கு ஃபோன் போட்டு விசாரித்தேன்.சிலர் ஒத்துக்கொள்ளவில்லை.. சிலர் யாருங்க நீங்க என கேட்டார்கள்.

நான் அனைவரிடமும் எனது நண்பனின் தங்கைக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கு. மாப்பிள்ளை டாஸ்மாக் ஊழியன். சம்பளம் கம்மியா இருக்கேன்னு நாங்க யோசிச்சப்ப மாப்பிள்ளை சம்பளம் கம்மியா இருந்தா என்ன? சைடு வருமானம் வருதுன்னு ஒரு பெரிய தொகையை சொல்றாரு.. இது உண்மையா? என கேட்டபோது சிலர் மென்று முழுங்குனாங்க.சிலர் என்னை வம்புல மாட்டி விடாதீங்க என்றார்கள். சிலர் ஆமாங்க ஓரளவு வருமானம் இதுல இருக்கு என ஒத்துக்கொண்டார்கள்.

ஒரு கடை நிலை ஊழியனுக்கே டாஸ்மாக் கடையில் வேலை கிடைச்சா இவ்வளவு சம்பாதிக்க முடியும்னா அந்த கடையை நடத்தற கவர்மெண்ட்டுக்கு லீகலா. இல்லீகலா எவ்வளவு வருமானம் கிடைக்கும்.?

பொதுவா ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க ஏதாவது சாக்கு சொல்லி லீவ் கேட்பாங்க.. ஆனா இந்த டாஸ்மாக் வேலைல இருக்கறவங்க மட்டும் லீவே எடுக்கமாட்டாங்களாம்.எடுத்தா ரூ 3000 அல்லது ரூ 4000 வருமானம் போச்ச
Delete
டிஸ்கி 1 - எனவே குடி மக்கள் பீர், ஒயின் மட்டும் குடித்து உங்கள் உடம்பை மட்டும் கெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.அல்லது அடிச்சா ஒரு ஃபுல் குவாட்டர் இல்லைன்னா இன்னைக்கு நோ மேட்டர் என கொள்கை ரீதியான முடிவுக்கு வரவும்.

டிஸ்கி 2 - சரக்கு அடிக்கற பழக்கம் இல்லாத உனக்கு எதுக்கு இந்த சரக்கு பற்றிய ஆராய்ச்சி என கேட்பவர்களுக்கு ... நமக்கு ஊழல் பண்ணிக்கூடத்தான் பழக்கம் இல்ல ,ஆனா ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஆராய்ச்சி பண்றதில்லையா? அதைப்பற்றி பேசறது இல்லையா?

டிஸ்கி 3 - கட்சிகள் தங்கள் கொள்கைல இருந்து மாறி கூட்டணி அமைத்துக்கொண்டாலும் அட்ரா சக்க இணைய தளம் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து சமூக விழிப்புணர்வுப்பதிவில் கூட வ குவாட்டர் கட்டிங்க் பட நடிகை ஸ்டில் போட்டு ஆற்றிய மக்கள் தொண்டை மெச்சிக்கொள்கிறது # கலைஞர் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கறமாதிரி.. ஹி ஹி

டிஸ்கி 4 -Blogger Thirumalai Kandasami said...குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி. http://tasmac.tn.gov.in ,,இங்கு விலை பட்டியல்(புட்டியல்) ,சரக்கு நிலவரம் அனைத்தும் கிடைக்கும். TASAMC அரசு வருமானம் Just a simple calculation of Tamilnadu Government - TASMAC sale per day,based on following URL. http://new.vikatan.com/news.php?nid=467 Daily Beer usage - 73,800 case So total Beer Bottles - 73800 * 12 - 885600 Approx cost ,70 Rs per bottle - 885600 * 70 - 6,19,92,000 Beer sales (per day)- 6 Crore and 19 Lakhs and 92 Thousands - 20 % of Whole sale So Approx Total sales(per day) - 30,99,60,000 Approx total - 31 Crores per day !!! Total sales in USD per day - 6866002.2148 $

Friday, December 10, 2010

ஈரோடு தனியார் வங்கியில் நடக்கும் செக்ஸ் மோசடிகள்

http://blog.beliefnet.com/faithfunnies/imgs/bank_trust.gif
நீங்க காரோ,பைக்கோ பிரைவேட் பேங்க்ல லோன்ல வாங்கி இருக்கீங்களா?
அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ நீங்க அவசியம் படிக்க வேண்டிய
விஷயம் இது.

10 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஆன்லைன் வசதி வராத போது
லோன் வாங்கும்போது முன் தேதி இட்ட காசோலைகள் வாங்குவார்கள்.
PDC (POST DATED CHEQUES) என ஆங்கிலத்தில் சொல்வார்கள்,தவணைத்
தேதியைப்பொறுத்து  மாதாமாதம்
1ந்தேதியோ அல்லது 10ந்தேதியோ பேங்க்கில் பணம் கட்ட வேண்டும்.
நாம் கொடுக்கும் செக் பேங்க்குக்கு 2ந்தேதியோ அல்லது 11ந்தேதியோ
கலெக்‌ஷனுக்கு வரும்.

ஆனால் இப்போது ஆன்லைன் வசதி வந்த பிறகு நிலைமையே தலைகீழ்.
1ந்தேதி உங்களுக்கு தவணைத்தேதி என்றால் அதற்கு முந்தின நாளே
பேங்க்குக்கு செக் அனுப்பப்பட்டு விடுகிறது.1ந்தேதி காலை 9.30
மணிக்கு உங்கள் அக்கவுண்ட் ஓப்பன் பண்னி பேலன்ஸ் பார்க்கும்போது
உங்கள் அக்கவுண்ட்டில் பணம் இருக்க வேண்டும்.நீங்கள் சாவகாசமாக
காலை 10 மணிக்கோ 12 மணிக்கோ பேங்க் வந்து பணம் கட்டினால்
ஏற்கனவே செக் ரிட்டர்ன் ஆகி இருக்கும்.

செக் ரிட்டர்ன் சார்ஜ் ரூ 500 வசூலிக்கப்படும்.இது நீங்கள் லோன்
வாங்கிய பேங்க்கில்,அக்கவுண்ட் வைத்த பேங்க்கில் ரூ 200 பெனால்டி
 வசூலிக்கப்படும்.

இப்போது நடந்த சம்பவத்தை சொல்கிறேன்.எனது நண்பர் ஒருவர்
ஈரோடு செஞ்சுரியன் பேங்க்கில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி
36 செக் லீவ்ஸ்ஸை கொடுத்து மாருதி கார் லோனில் வாங்கினார்.
சோழமண்டலம் டி பி எஸ் பேங்க்கில் லோன் வாங்கினார்.

மாதாமாதம் 1ந்தேதி அவருக்கு டியூ டேட்.அவருக்கு எந்த மார்க்கட்டிங்க்
எக்ஸ்சிகியூட்டிவ்வும் ஒரு நாள் முன்பாக பணம் கட்ட வேண்டும் என
சொல்ல வில்லை.செக் 1ந்தேதி காலையே ரிட்டர்ன் ஆகி விட்டது.
இவர் காலை 10 மணிக்கு பணம் கட்டி விட்டார்.ஆனா நோ யூஸ்.

சோழமண்டலம் டி பி எஸ் பேங்க்கில் 1270 பேர் ஈரோடு பிராஞ்ச்சில்
 மட்டும் லோன் வாங்கி இருக்கிறார்கள்.
இது போக ஐ சி ஐ சி ஐ பேங்க்,ஹெச் டி எஃப் சி பேங்க்,சுந்தரம் ஃபைனான்ஸ்,ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ்,மஹேந்திரா &மஹேந்திரா ஃபைனான்ஸ்,இந்தஸ் இந்த் பேங்க்,அசோக் லைலேண்ட் ஃபைனான்ஸ் உட்பட ஈரோட்டில் மட்டும் 17 தனியார் வங்கிகள் உள்ளன.ஒவ்வொரு வங்கியிலும் சராசரியாக 1000 அக்கவுண்ட் என கணக்கு வைத்தாலும் 17000 அக்கவுண்ட் ஆச்சு. செக் ரிட்டர்ன் சார்ஜ் மட்டும் மொத்தம் ரூ எட்டரை லட்சம் வருகிறது.
பொதுமக்கள் பணம் வீணாக பறிக்கப்படுகிறது,


நேஷனலைஸ்டு பேங்க்கில் ரூ 80ம், சில வங்கிகளில் ரூ 180ம் பிடித்தம் செய்யப்படுகிறது.ஆனால் மற்ற பிரைவேட் பேங்க்கில் ரூ 500 சார்ஜ் போடப்படுகிறது.மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள்.


நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்


1.நம் கணக்கில் பணம் இருந்தால் மட்டும் செக் குடுக்க வேண்டும்.அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் ரூ 1000 மட்டும் வைத்துக்கொண்டு பின் தேதி இட்ட காசோலையாக ரூ.50,000 ,ரூ.75,000 என தருவது தவறு.

2.பிரைவேட் பேங்க்கில் லோன் வாங்கும்போது மாதாமாதம் பணமாக கட்டி விடுகிறேன்.செக் தர மாட்டேன் என கறாராக கூறி விடவும்.

3. அப்போதைக்கு மார்க்கெட்டிங்க் எக்ஸ்சிகியூட்டிவ்ஸ் அவர்களுக்கு கிடைக்கப்போகும இன்செண்ட்டிவ்வுக்காக ஏதாவது கதை அளந்து விடுவார்கள்,நம்ப வேண்டாம்,அவர்கள் வாய் மொழியாக என்ன வாக்கு கொடுத்தாலும் அதை பேங்க் லெட்டர் பேடில மேனேஜர் சைன் பண்ணி ரிட்டர்ன் ஃபார்மில் கேட்கவும்.

4.தவணைத்தொகையை மாதாமாதம் நீங்களே பேங்க்கில் நேரடியாக போய்க்கட்டவும்.கலெக்‌ஷன் எக்சிகியூட்டிவ் வீட்டுக்கு வந்தார் ,கொடுத்தேன் என சொல்ல வேண்டாம்,பின்னால் என் ஓ சி (NO OBJECTION CERTIFICATE) வாங்கும்போது கலெக்‌ஷன் சார்ஜ் என ஒரு விசிட்டுக்கு ரூ 100 வசூலிப்பார்கள்.நியாயம் கேட்டால் எல்ல கண்டிஷனுக்கும் நீங்கள் ஒத்துக்கொண்டுதான் அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணி இருக்கிறீர்கள் என்பார்கள்.

5.லோன் வாங்கும்போது செக்யூரிட்டி செக் லீவ்ஸ் என பிளாங்க்காக 4 செக் லீவ்ஸ் வாங்கி வைப்பார்கள்,நீங்கள் டியூ சரியாக கட்டத்தவறினால் அந்த் பிளாங்க் செக்கில் ரூ 2 லட்சம் ரூ 3 லட்சம் என ஃபில் பண்ணி கலெக்‌ஷன் போட்டு அது ரிட்டர்ன் ஆனதும் செக் ரிட்டர்ன் கேசில் சிக்க வைப்பார்கள்.

6.தவணைத்தேதி அரசாங்க விடுமுறையாக இருந்தால் அதற்கு முந்தின நாளே பேங்க்கில் பணம் கட்டி விடவும்.

7.இத்தனை பிரச்சனை எதற்கு என நினைப்பவர்களும் ,கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற சொல்வடைக்கு ஏற்ப மானம் மரியாதை உள்ளவர்கள் லோன் வாங்கவும் வேண்டாம்,லோல் படவும் வேண்டாம்,நம்மிடம் என்ன இருக்குதோ அதற்குள் வாழ்க்கையை ஓட்டவும்.

டிஸ்கி 1- டைட்டிலில் உள்ள செக்ஸ் மோசடி என்பது CHEQUES மோசடி என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டது,SEX  மோசடி என எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்க

டிஸ்கி 2- தனியார் வங்கிகளைப்பற்றி எல்லாம் தெரிந்த மாதிரி பேசறியே,கம்பெனியின் ரூல்ஸ் & ரெகுலேஷன் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று மிரட்ட நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை ,நானும் ஒரு தனியார் வங்கி ஊழியனே..



டிஸ்கி 3 - என்னை மிரட்ட ஆஃபீஸ் வருபவர்கள் கொஞ்சம் டீசண்ட்டாக டிரஸ் பண்ணி வரவும்.வருபவர்கள் பெரும்பாலும் லுங்கி அணிந்து வருவதால் எனக்கு ஆஃபீசில் அவ்ர்களுடன் உரையாட கூச்சமாக இருக்கிறது.