Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Wednesday, July 04, 2012

கலைஞர் -குஷ்பூ இணைந்து வழங்கும் சிறை நிரப்பும் போராட்டம் - காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk5xTG8IHZcOOoKMIQKsKayp3YL5BOgumoUeVzruTtYiCI3hbp6TWiVeA0_gnFYHys7bEW6nB12aJUf__IiYkXp_srecbaHKdi7fZCY5Owf-75SsIZFmMJDf3R3jXSV1s7RGf7qAYd6ko/s400/DN_01-02-09_E1_05-06%2520CNI.jpg 

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைதாகி சிறைக்கு வரும் திமுகவினருக்கு பி கிளாஸ் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நல்ல சாப்பாடு அவர்களுக்குக் கிடைக்கும். சுடச் சுட உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு தரப்படும். அதாவது அவர்களுக்கு பி கிளாஸ் சாப்பாடு தரப்படுமாம்.

பி கிளாஸாக இருந்தாலும் சாப்பாடு சூப்பராக இருக்குமாம். காலையில் சுடச் சுட உப்புமா, வெண் பொங்கல், கஞ்சி ஆகியவை தரப்படும். இதை ஒரு நாளைக்கு ஒரு ஐட்டம் என மாற்றி மாற்றித் தருவார்களாம்.

மத்தியான சாப்பாடாக சாம்பார், காய்கறி கூட்டு, ரசம், மோர் ஆகியவை கிடைக்கும். அப்பளம் தரப்பட மாட்டாது.

இரவுக்கு சாப்பாடும், சாம்பாரும் மட்டும்தானாம். அதேசமயம், சர்க்கரை வியாதி உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் 2 சப்பாத்தி தருவார்களாம்.

ஞாயிற்றுக்கிழமை கோழிக்கறியைப் போட்டு அசத்துவார்களாம்.

'ஏ' கிளாஸ் சாப்பாடு வேண்டுமென்றால்...

சிலர் ஏ கிளாஸ் சாப்பாடு வேண்டும் என்று விரும்பினால் அதற்கு கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்றால், அவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு கோழிக்கறி குழம்பு கொடுப்பார்கள். மாலையில் கூடுதலாக சுண்டல், டீ ஆகியவை தருவார்கள். சப்பாத்தியும் விசேஷமாக கிடைக்கும்.


தூங்க போர்வையும், பாயும்

இரவில் தூங்கும்போது ஒவ்வொருவருக்கும் போர்வையும், படுக்க பாயும் தருவார்களாம்.

மொத்தத்தில் எந்தவித குறையும் இல்லாமல் திமுகவினர் தங்களது காவல் நாட்களை சிறையில் கழிக்க முடியும்.


http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TCR0RuOg02I/AAAAAAAAD_o/i2o9rR9CbrA/s1600/semmoli3.JPG


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

திமுக சார்பில் சென்னை மாநகரில் 22 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் பகுதியில், நடிகை குஷ்பு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குஷ்பு தவிர தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த முறை திமுக பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது குஷ்புவிடம் திமுகவினர் சிலர் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டதால் இந்த முறை குஷ்புவுக்கு பாதுகாப்பாக திமுகவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிமுக அரசை எதிர்த்துக் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பஸ்கள், வேன்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

தாம்பரத்தில் டி.ஆர்.பாலு கைது

இதேபோல தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியில் கே.என்.நேரு கைது

திருச்சியில் மொத்தம் 8 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.


http://moonramkonam.com/wp-content/uploads/2011/05/karunanidhi-rest-cartoon.jpg


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


காலை 10 மணிக்குப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் காலை 8 மணியிலிருந்தே தொண்டர்கள் திரளத் தொடங்கி விட்டனர். காலை 10 மணியளவில் கனிமொழி சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து அதிமுக அரசைக் கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.


இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதாக போலீஸார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கனிமொழி உள்ளிட்டோர் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.


கனிமொழி இன்று சிறையில் அடைக்கப்பட்டால், அவர் சிறை செல்வது இது 2வது முறையாக இருக்கும். இதற்கு முன்பு அவர் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


இன்று காலை கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும் வந்திருந்தார். அவர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் கனிமொழியை வழியனுப்பி வைப்பதற்காக அவர் வந்திருந்தார். பஸ்சில் ஏறிய கனிமொழியை பத்திரமாக இருந்து கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ராசாத்தி அம்மாள்.


தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு கைதாகியுள்ளார். அவர் சென்னையில் உள்ள தனது தொகுதியான கொளத்தூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை 8 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொளத்தூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே திரண்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் திமுகவினர் மயமாக காணப்பட்டது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjhAJ0jhTdeGBtlZseiGFOKIelH4FG1Eu6q3QcuAepn4w-UkxKZjP8mqWUfAYPv7Yh9Z2HtXpuYSWXCxtYAOH9zYVKj6Eyx5QZLKQIZqS8AnvDa28ofaqXsy46sLqic-5LyoK_wSMu0DU/s1600/kuspoo-95.jpg


காலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின் போராட்ட இடத்திற்கு வந்தார்.அவருக்கு சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் அவர் ஓய்வில் இருந்து வந்தார். இருப்பினும் தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல்,இன்றைய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.


காலை 10 மணியளவில் போராட்டக் களத்திற்கு வந்த அவர் தானாகவே போலீஸ் வாகனத்தில் ஏறிக் கைதானார். அவரைத் தொடர்ந்து ஏராளமான தொண்டர்களும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டனர். இதேபோல போராட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.


முன்னதாக ஸ்டாலின் பங்கேற்பதை கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியின்போது,

மிகுந்த எழுச்சியோடு இந்த போராட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, அரசுக்கும் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆங்காங்கு மாவட்ட கழக செயலாளர்கள் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள்.


கனிமொழி போராட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. எந்த இடத்திலே கலந்துகொள்வார் என்று இன்னமும் தெரியவில்லை. காலையில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் (சைதாப்பேட்டையில் பங்கேற்பதாக பின்னர் அறிவிப்பு வெளியானது).


அவர் சற்று உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். இருந்தாலும் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் (கொளத்தூரில் பங்கேற்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது).


போராட்டத்தில் பங்கேற்று கைதானாலும் கூட எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க நிச்சயமாக அனுமதி உண்டு. எனவே அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார் கருணாநிதி.


http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg


 மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்பட மொத்தம் 5 இடங்களில் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி பங்கேற்கவில்லை.


மதுரை நகர்ப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மட்டும் போராட்டம் திட்டமிடப்பட்டது. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் மொத்தம் 4 இடங்களில் போராட்டம் நடந்தது.


இந்த ஐந்து போராட்டங்களிலும் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. வாடிப்பட்டியில்நடந்த போராட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக போராட்டத்திற்கு நகர செயலாளர் கோ.தளபதி தலைமை தாங்கினார்.


இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி போராட்டத்திற்கு வராதது திமுகவினர் மத்தியி்ல பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg


1. சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஏன் வர்லை?


 போங்க தலைவரே! சின்ன வயசுல ஃபில் இன் த பிலாங்க்ஸ் ( FILL IN THE BLANKS)-கோடிட்ட இடத்தை நிரப்புக -இந்தக்கேள்வியையே நாங்க நிரப்பாம எஸ் ஆன ஆளுங்க,, நீங்க ஜெயிலை நிரப்பக்கூப்பிட்டா எப்படி?

-----------------------------------------



2. பதவி வேணும்னா ஜெயிலுக்கு போகனும்..

தலைவரே! ஆல்ரெடி பதவி வேணும்கறதுக்காக கட்சிக்குள்ளேயே போட்டிக்கு இருந்த 2 பேரை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனவன் தான் நான்.. இந்த தகுதி ஓக்கேவா?
----------------------------------------


3.மன்னர் ரொம்ப விபரமான ஆள்.. அப்டினு எப்படி சொல்றே?

கஜானாவை நிரப்பும்போது மட்டும் சத்தம் இல்லாம கமுக்கமா நிரப்பிக்கறாரு.. இப்போ சிறை நிரப்பும் போது மட்டும் நம்மளை கூப்பிடறாரு. 



------------------------------------


4. தலைவரே! ஜெயிலுக்குப்போய்ட்டு வந்தா நீங்க பதவி கொடுப்பீங்க ஓக்கே? எங்களுக்கு பொண்ணு எவன் கொடுப்பான்? # பிரம்மச்சாரியின் கேள்வி


----------------------------


5. மணல் லோடு லாரி லாரியா போகுதே, எதுக்கு?

சிறையை சீக்கிரம் நிரப்பத்தான்.. எதிர்பார்த்த அளவு கூட்டம் வர்லையாம்./. 



-----------------------


6. ஜெயிலுக்குள்ளே போய் மறுபடி எதுக்கு போராட்டம் பண்றாங்க?


சிறை நிரப்பும் போராட்டத்துல கலந்துக்கிட்டவங்களுக்கு  சோறே போடலையாம்.. செம பசி.. இப்போ வயிறு நிரப்பும் போராட்டம்..



--------------------------------


7. குடும்பத்துடன்  அவசியம் வந்துடுங்கன்னு சொல்லிட்டு போறாரே, மேரேஜ் இன்விடேஷனா?

 ம்ஹூம், சிறை நிரப்பும் போராட்டம்.. 



-----------------------------------


8.  தலைவரே! இன்னைக்கு ஜெயிலுக்குள்ளே  ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சு.. 


 என்ன ஆச்சு?


ஜெயிலர் வேணும்னே சாவியை தொலைச்சுட்டு  லாங்க் லீவ்ல போய்ட்டாராம்.


------------------------------


9. ஓ! தமிழர்களே!தமிழர்களே!அம்மையார் என்னை ஜெயிலில் தூக்கிப்போட்டாலும் நான் பெயிலில் வந்து விடுவேன், அங்கே தங்கி விட மாட்டேன்



--------------------------

10. குஷ்பூவின் இடுப்பைக்கிள்ளலாம், சைக்கிள் கேப்பில் கிடா வெட்டலாம் என யாரும் எதிர்பார்த்து வந்தால் ஏமாந்தே போவார்கள், தனி செல்லாம் 



-----------------------

 நன்றி - தட்ஸ் தமிழ்

Sunday, May 20, 2012

நல்ல தங்காள் ஆட்சி - நல்லவை 10 , அல்லவை 10 - விகடன் கட்டுரை

ரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா!


 நல்லவை  10


தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.


சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.



இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.



மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.



ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.


தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.


தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.



வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.



கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.





தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.


அல்லவை  10


சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.



மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.



தமிழ்நாட்டின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.



கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.



ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.



அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.



சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.


சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.



முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.


Wednesday, May 09, 2012

ஜூவி சர்வே - ஜெவின் ஓர் ஆண்டு கால ஆட்சி எப்படி? - ஊஊஊஊ

ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா? பெயிலா?

கடந்த சட்டசபைத் தேர்தலில் சுனாமி​யாக எழுந்த மக்களின் எதிர்ப்பு அலை, கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்​படுத்தியது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்... அமோகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டார் ஜெயலலிதா. மே 16-ம் தேதியோடு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்ய இருக்கிறார், ஜெய​லலிதா. இந்த ஒரு வருடத்தில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.


ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தாரா ஜெயலலிதா? அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டதா? இந்த ஒருவருட ஆட்சியின் மீது மக்களின் மதிப்பீடு என்ன? என்று கேள்விகள் எழவே, கருத்துக் கணிப்பு நடத்த முடிவு எடுத்தோம். ஓர் ஆட்சி தன்னுடைய சிந்தனை​களை ஓரளவாவது அமல்படுத்த இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்றாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய பாதையில் இவரது ஆட்சி செல்கிறதா என்பதே இந்தக் கருத்துக் கணிப்பின் நோக்கம்.


ஜெயலலிதாவின் ஆட்சி முறை, முதல்வராக அவரது செயல்பாடு, அமைச்சர்களின் பங்கேற்பு, மின்வெட்டு, கட்டண உயர்வுகள், சட்டம் - ஒழுங்கு, இலவசத் திட்டங்கள், சசிகலா விவகாரம் என்று 18 கேள்விகளை சர்வேயில் முன்வைத்தோம். விகடன் படை  களம் இறங்கியது.

கிராமம், நகரம், மாநகரம் என  எல்லாம் புகுந்து புறப்பட்டு மக்களைச் சந்தித்து வந்தது ஜூ.வி. டீம். ஏப்ரல் 26 தொடங்கி மே 2-ம் தேதி வரை எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் 3,659 பேரிடம் வினாக்களைக் கொடுத்து விடைகளை வாங்கினோம். இதில் பெண்கள் எண்ணிக்கை மட்டும் 1,445.


சர்வே எடுக்கச் சென்ற ஜூ.வி. டீமுக்கு நிறையவே புதுமையான அனுபவங்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கேட்டது, 'ஏங்க... இந்த கரன்ட் பிரச்னை எப்போங்க தீரும்?’


'எங்களுக்கு வேற எதுவுமே வேணாம். கரன்ட் மட்டும் கொடுத்தாப் போதுங்க...’ என்று, மக்கள் கெஞ்சு​கிறார்கள்.


 மின்சாரத்தை அடுத்து, பால், பஸ் மற்றும் மின்கட்டண உயர்வை மிகவும் கடுமையாகச் சாடினார்கள். காரசாரமான விமர்சனங்களை ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் வைத்தார்கள். ஒரு வருடத்துக்கு முன், சிம்மாசனத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மக்கள், இப்போது ஜெயலலிதா மீது அதிக ஆத்திரத்தில் இருப்பதை உணர முடிந்தது.  'இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப் எல்லாம் எங்களுக்கு இன்னும் கிடைக்கலை. எப்போ கொடுப்பாங்க?’ என்று ஒரு சிலரே கேட்டார்​கள். மற்ற அனைவருக்கும் மின்சாரம்தான் முதல் முக்கியத் தேவையாக இருக்கிறது.


ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி என்ற கேள்விக்கு, 'சுமார்’ என்று பதில் சொன்னவர்களே அதிகம். மின்வெட்டுப் பிரச்னையைப் பொறுத்த வரை, 'மோசம்’ என்று சொன்னவர்கள் 47.31 சதவிகிதம் பேர். 'தி.மு.க. ஆட்சியைவிட மோசம்’ என்று சொன்னவர்கள் 37.66 சதவிகிதம். மின்வெட்டுப் பிரச்னைக்கு மட்டும் 84.97 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் 'மின்’ வெப்பத்தில் இருக்கிறார்கள். மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசின் செயல்பாடு எப்படி? என்கிற கேள்விக்கு 'அரசு உரிய அக்கறை காட்டவில்லை’ என்பதே அதிக மக்களின் கருத்து.



புதிய சட்டசபை, அண்ணா நூலகத்தை ஜெய​லலிதா முடக்கியது தொடர்பான கேள்விகளுக்கு, 'தவறு’ என்று அதிகபட்சமாக 50.23 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். பால், பஸ், மின் கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கு 'படிப்படியாக உயர்த்தி இருக்கலாம்’ என்று கருத்து சொன்னவர்கள்தான் அதிகம்.



ஜெயலலிதா ஆட்சிக்கு சாதகமாக ஒரே விஷயம்... நில அபகரிப்புப் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான். தி.மு.க பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட அபகரிப்புப் புகார்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் 'நியாயமானது’ என்று வரவேற்கிறது தமிழகம். ஜெயலலிதா கொண்டுவந்த இலவசங்கள் ஏனோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் போன்ற இலவசத் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, 'மக்கள் வரிப் பணம்தான் வீண் ஆகிறது’ என்று 63.41 சதவிகிதம் பேர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.


இப்படி சர்வே முடிவுகள் நிறையவே ஆச்சர்யங்​களையும் அதிர்ச்சிகளையும் உண்டாக்கி இருக்​கிறது.
(ஜெயலிதாவின் செயல்பாடுகள், சட்டமன்ற நடவடிக்கைகள், சசிகலாவோடு ஜெயலலிதாவுக்கு இருந்த உரசல், அ.தி.மு.க. ஆட்சியின் டாப் 3 பிரச்னை​கள், ஜெயலலிதாவுக்கு மக்கள் போட்ட மார்க் போன்ற சர்வே முடிவுகள் அடுத்த இதழில்...)


ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி பொதுமக்கள் சொன்ன கருத்துகளில் சில இங்கே...


சூர்யகலா, ஆரணி: ''ஒரு பெண்ணை முதல்வர் ஆக்கினால் எங்களைப் போன்ற சாதாரண மக்களின் குறை​களைத் தீர்ப்பாங்கன்னு​தான் ஓட்டுப் போட்டோம். ஆனா, அந்தம்மா ஒரேடியா கரன்ட் கட், பால் விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வுன்னு எல்லாத்தையும் ஏத்திக்கிட்டே போறாங்க. நினைக்கவே வேதனையா இருக்குங்க.''


செந்தில்குமார், சேலம்: ''நிர்வாகச் சீர்திருத்தத்துக்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்காங்க. அது  பாராட்டுக்​குரிய விஷயம். ஆனா, மக்களை நேரடியாகப் பாதிக்கும் பால், கரன்ட், பஸ் கட்டணங்களை ஒரேய​டியாக உயர்த்தினது, மன்னிக்க முடியாத கொடுமைங்க!''



சீனிவாசன், வேலூர்: ''பாலில் இருந்து எல்லா விலைவாசியும் அநியாயத்துக்கு ஏறிப்போச்சு தம்பி. நாங்க ரொம்பக் கஷ்டப்​படுறோம். உண்மையைச் சொல்லணும்னா, ஏன்டா ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டோம்னு வருத்தமா இருக்கு. எல்லாம் எங்க தலையெழுத்து!''


வேல்குமார், காரைக்கால்: ''மாற்றம் வேண்டும்னு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப் போட்டதற்கு, இவ்வளவு கடுமையான ஏமாற்றத்​தைத் தந்திருக்க வேண்டாம். மக்களுக்கு எது தேவை... எது தேவை இல்லை? எது நல்லது.. எது பாதிப்பு? என்று யோசித்து திட்டங்கள் தீட்டி இருக்க வேண்டும். நரேந்திர மோடி மாதிரி வர வேண்டும் என்று ஆசைப்படலாம். எப்படி ஆவது என்று திட்ட​மிட வேண்டும். இப்படிப் போட்டு மக்களைக் கஷ்டப்​படுத்தக் கூடாது.''



நந்தகுமார், கும்பகோணம்: ''தனிப்பட்ட விருப்பு, வெறுப்புல இவங்க கவனம் செலுத்துறதுதான் அதிகமா இருக்குது. தேர்தல் அறிக்கையில் நிறையத் தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிச்​சாங்க. அதெல்லாம் என்ன ஆச்சுன்னே தெரியலை''



லெட்சுமணன், தூத்துக்குடி: ''கடந்த ஆட்சியில் நடந்த ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் ஜெயலலிதாவின் ஆட்சியில் இல்லை என்பது ஆறுதல். சசிகலாவை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்கிட்டதும், ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கை சுத்தமாப் போயிடுச்சு.''


சாந்தி, மதுரை: 'நடு ராத்திரியில கரன்ட் கட் ஆகுதுங்க. தூக்கமே இல்லை. குழந்தைகளை வச்சுக்கிட்டு ரொம்பவும் கஷ்டமா இருக்கு. இதை எல்லாம் நினைக்கும்போது, தி.மு.க. ஆட்சி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுது. எதிர்க் ​கட்சியா விஜயகாந்த் என்ன பண்ணிட்டு இருக்காருன்னே தெரியலை...''



முருகவேல், ஆண்டிபட்டி: ''கடந்த தி.மு.க ஆட்சியை அகற்ற என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அந்தக் குறைகளை மட்டும் உடனடியாக ஜெயலலிதா சரிசெய்திருந்தாலே நல்ல ஆட்சி என்று பெயர் எடுத்திருக்கலாம். அது எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. இலவசங்கள் கொடுத்துவிட்டாலே மக்கள் அமைதியாகி விடுவார்கள் என்று அவர் தப்புக் கணக்கு போட்டு​விட்டார்.''



ரஞ்சித்குமார், திருச்சி: ''மின்சாரமே இல்லாமல் மிக்ஸி, கிரைண்டர், ஃபேனை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு சொல்​லுங்க. இது எதுவும் இல்லாமல்கூட இருந்துடுவேங்க.. ஆனா கரன்ட்டை மட்டுமாவது கொடுக்கச் சொல்லுங்க. மத்த விஷயத்​தைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்.''



கார்த்திக்,ஆற்காடு: ''ஒரு வருஷத்துல அ.தி.மு.க ஆட்சி ரொம்பப் பாடாய்ப்படுத்தி விட்டது. நிம்மதியா இருக்க முடியலை. குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கவே ஆளைக் காணோம். அது எப்ப​டிங்க சசிகலா விஷயத்துல ஜெயலலிதா அவ்வளவு சூப்பரா நாடகம் போடுறாங்க...''



காமராஜ், தர்மபுரி: ''இடைத்தேர்தலில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்னையிலும் ஜெயலலிதா அரசு காட்டி இருந்தால், தமிழகம் சுபிட்சமா மாறியிருக்கும். 'கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்’னு எங்க ஊருப் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அப்படித்தான் இருக்கு இந்தம்மாவோட ஆட்சி.''



சதீஷ்குமார், சென்னை: ''தேர்தல் அறிக்கையில் சொன்ன விஷயங்களை ஓரளவுக்கு நிறைவேற்றி இருக்கிறார்கள். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதும், ஜெயலலிதா மீது எல்லோருக்குமே நம்பிக்கை வந்தது. ஆனால், மீண்டும் அவரை தன்னோடு சேர்த்துக்கொண்டதும், அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது.''



வின்சென்ட் செல்வா, சென்னை: ''நில அபகரிப்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. பஸ் கட்டண உயர்வைத் தவிர்த்து இருக்கலாம். சாதாரண மக்களைத்தான் அந்த விஷயம் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதை ஏன் ஜெயலலிதா உணராமல் போனார்?''
பாகம் 2 
மக்கள் போட்ட மார்க்!

ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்து ஒரு வருடம் முடிந்ததை அடுத்து, 'ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா ஃபெயிலா? அதிர வைக்கும் ரிசல்ட்!’ என்று, கடந்த ஜூ.வி. இதழில் மெகா சர்வே வெளியிட்டோம். ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து மக்களின் மதிப்பீடு என்ன என்பதை அறிவதற்காக, 18 கேள்விகளை உள்ளடக்கிய சர்வே நடத்தினோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகரம், கிராமம் எனப் புகுந்து 3,659 நபர்களைச் சந்தித்தது ஜூ.வி. டீம். இதில் பெண்கள் மட்டும் 1,445 பேர்.   


அதில் 10 கேள்விகள் கடந்த இதழில் வெளியான நிலையில், அடுத்த 8 கேள்விகள் இந்த இதழில்... 'முதல்வராக ஜெயலலிதாவின் செயல்பாடுகள்?’ என்ற கேள்விக்கு, 'ஜெயலலிதா மாறவில்லை’ என்பதைத்தான் அதிகம் பேர் 'டிக்’ அடித்தனர். 'முந்தைய முதல்வர் கருணாநிதியின் செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது ஜெயலலிதாவின் செயல்பாடு...’ என்ற அடுத்த கேள்விக்கு, 'பெரிய வித்தியாசம் இல்லை’ என்றவர்கள் அதிகம்.


சசிகலாவுடன் ஏற்பட்ட பிரிவு, மீண்டும் உறவு காட்சிகளையும் சர்வேயில் கேள்விகளாகச் கேட்டு இருந்தோம். 'சசிகலாவுடனான உரசல்... பிறகு, மீண்டும் இணைந்தது?’ தொடர்பான கேள்விக்கு, 'அவர்களின் தனிப்பட்ட விஷயம்’ என்று சொன்னவர்கள் 41.46 சதவிகிதம். 'சுயநலத்தால் அரங்கேறிய நாடகம்’ என்று சொன்னவர்கள் 40.67 சதவிகிதம். இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் வெறும் 0.79 சதவிகிதம்தான்.


'சசிகலா குடும்பத்தினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்​தியது...?’ என்ற கேள்விக்கு, 'ஜெயலலிதாவுக்குத் தெரியும்’ என்று அதிகம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.


'சசிகலா நீக்கம், சேர்ப்பு விவகாரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் இமேஜ்?’ என்ற கேள்விக்கு 'பாதிப்பு எதுவும் இல்லை’ என்கிறார்கள்.  'சசிகலாவை விட்டு ஜெய லலிதா எப்போதும் பிரிய மாட்டார்’, 'சசிகலா விவகாரத்தில் ஜெயலலிதா எடுக்கும் நடவடிக்கைகள் எப்போதுமே நாடகமாகத்​தான் இருக்கும்’ -


  சர்வே எடுக்கச் சென்ற இடங்களில் எல்லாம், மக்கள் மிகத் தெளிவாகக் இப்படிக் கருத்துச் சொன்னார்கள். ஓர் ஆண்டு ஆட்சியில் நடந்த முக்கிய விஷயங்களை எல்லாம் பட்டியல் போட்டு இதில் எது உங்களை அதிகம் பாதித்தது என்ற கேள்விக்கு அதிகபட்சமாக மின்வெட்டுப் பிரச்னையைக் குறிப்பிடுகிறார்கள்.


'ஜெயலலிதாவின் ஓர் ஆண்டு ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?’ என்ற, மிக முக்கியமான கேள்விக்கு, 'ஜஸ்ட் பாஸ்’ என்று சொன்னவர்கள்தான் அதிகம்.  


ஜெயலலிதாவின் ஆட்சி, அவருடைய செயல்பாடு​கள், மின்வெட்டுப் பிரச்னை, பஸ், பால், மின் கட்டண உயர்வு, புதிய தலைமைச் செயலகத்தை முடக்கியது என்று அரசுக்கு எதிராக கடுமையான கருத்தை சர்வேயில் வெளிப்படுத்திய மக்கள், ஜெயலலி​தாவுக்கு ஜஸ்ட் பாஸ் என்று போட்டிருப்பது ஏன்? சர்வே ஃபாரங்களை நீட்டியதும் எல்லாவற்றுக்கும் தயங்காமல் நம் முன்பே டிக் அடித்தவர்கள், 'ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?’ என்ற கேள்விக்கு, நீண்ட யோசனைக்குப் பிறகே பலரும் மதிப்பெண் போட்டார்கள்.


ஒரு சிலரின் கருத்துக்கள் இங்கே....


கண்ணன், சேலம்: ''கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிர​மிப்புன்னு தி.மு.க. ஆட்சியில் அனுபவிச்ச கொடுமைகளுக்கு அளவே இல்லை. இப்போது சட்டம் ஒழுங்கு சரியா இருக்கு. கட்டப்பஞ்சாயத்தும் நில ஆக்கிரமிப்பும் இல்லை. மக்கள் பயம் இல்லாம நிம்மதியா இருக்காங்க. இதுவே நல்ல விஷயம்தானே!''


குமார், கரூர்: ''சமச்சீர்க் கல்வி விவகாரத்தில் ஜெயலலிதா செய்த குளறுபடிகளை மறக்கவே முடியாது. மாணவர்கள் அனுபவிச்ச கொடுமை​யும் அதிகம். பஸ் கட்டணத்தை நினைச்சாலே, அடிவயிறு பத்திக்கிட்டு எரியுது. இதே மாதிரி ஆட்சி செஞ்சா, ஜெயலலிதா அடுத்த எலெக்ஷன்ல டெபாசிட் வாங்க முடியாது.''



ஆறுமுகம், திருவண்ணாமலை: ''தி.மு.க. ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தா, இந்த அரசு ஏதோ பரவாயில்லைன்னு சொல்லும் அளவுக்கு இருக்கு. நடுராத்திரியில கரன்ட் கட் ஆகி, தூங்க முடியாம வீதியில வந்து உட்காரும் நேரத்தில்தான், ஜெயலலிதா மீது கோபம் கோபமா வருது.''



ஜெயஸ்ரீ, திருச்சி:  ''தி.மு.க. ஆட்சியில் என்னென்ன குளறுபடிகள் செய்திருக்​கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே முதல்வருக்கு ஒரு வருஷம் போதாது. அதை எல்லாம் சரிசெய்த பிறகுதானே, மக்கள் நலனில் அக்கறை காட்ட முடியும்? அடுத்த முறை ஆட்சிக்கு வருவதற்குள் நிச்சயம் அனைத்தையும் முதல்வர் சரிசெய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. விலைவாசி உயர்வு என்பது காலத்தின் கட்டாயம்.''


தீபக், வேலூர்: ''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராப் பக்கம் ஓடிவிட்டதாகச் சொன்னார். இப்போது நடக்கும் கொலைகளையும் கொள்ளைகளையும் பார்த்தால், வெளி மாநிலங்​களில் இருக்கும் ஒட்டுமொத்த ரவுடிக் கும்பலும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதைப் போல இருக்கிறது. ஒண்ணும் சரியில்லீங்க...''



சொக்கலிங்கம், மதுரை: ''காவல் நிலையங்களில் அரசியல் தலையீடு இல்லை என்பது, நான் கண்கூடாகப் பார்த்த உண்மை. தமிழ், தமிழ் என்று சொன்னவர்கள் எல்லாம் செய்யாத விஷயங்களை, ஜெயலலிதா ஆக்கப்பூர்வமாகச் செய்து முடித்திருக்​கிறார். மின் வெட்டுப் பிரச்னை உள்ளிட்ட கஷ்டங்களையும் சொல்லி ஆகணும். வேப்பம்பூ பச்சடி போல இனிப்பும் கசப்பும் கலந்த ஆட்சி இது.''


சரவணன், காரைக்குடி:  ''எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஏமாற்றம்தான் அதிகம். நிலஅபகரிப்பு வழக்குகளில் அதிரடிக் கைதுகள் நடந்ததைப் பார்க்கும்போது, நியாயமான நடவடிக்கை என்று நினைத்தோம்.. ஆனால், உள்ளே போனவர்கள் எல்லாம் அதே வேகத்தில் திரும்பி வந்ததைப் பார்த்தால், அரசின் நடவடிக்கை மீதே சந்தேகம்தான் வருகிறது.''



கண்பத் மோகன், சென்னை: ''சட்டம் ஒழுங்கு பிரமாதமா இருக்கிறதுன்னு முதல்வர் சொல்றாங்க. ஆனால், பட்டப் பகலில் கோடம்பாக்கம் ஏரியாவுல பொண்ணுங்க கழுத்தில் இருந்து சங்கிலியை அறுத்துட்டுப் போறாங்க. இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது? முதல்வர் கையில் இருக்கும் காவல்துறை என்னதான் செய்யுதுன்னே புரியலை?''


 மக்கள் கருத்து  இன் ஜூ வி ஆன் லைன்


1.Sulaiman - Saudia2 Hours ago

 
சும்மா சொல்லக்கூடாது, கடைசியில் பிட் அடிக்க வைத்து பாஸ் மார்க் போட்டு தப்பித்துக்கொண்டீர். சந்தோஷமான விசியமே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் கூட்டம் 5% அளவுக்கு குறைந்து இருப்பது தான். உங்க சர்வே எதிர்கட்சிக்கு வேணுமாலும் சந்தோஷத்தை கொடுக்கலாம், ஆனால் அந்த அம்மாவுக்கு ஒரு இம்மி அளவுக்கும் மன மாற்றத்தை ஏற்படுத்தாது.
 வேணுமானல் ஒரு எதிர்மறையான விளவை ஏற்படுத்தி உம்முடைய அலுவலகத்தில் ரைடு நடக்கலாம். ஆட்சியாளர்கள் விமர்சனங்களை எதிர்க்கொண்டு தன்னை திருத்திக் கொள்ளவேண்டும் என்ற லாஜிக் இந்த அம்மாவிடம் எதிர்பார்க முடியாது. வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்டாச்சு மக்களே இன்னும் ஒரு நாலுவருசத்திற்க்கு இப்படி புலம்பி தீர்கவேண்டியதுதான்.ஒரே ஒரு சின்ன நப்பாசை, அந்த பெங்களூரு தீர்ப்பு சீக்கிரம் வராதா தலைவா!!
2. Appan.
 
திமுக ஆட்சியிள் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. இப்படி நாடு இருந்தால் முன்னேற்றம் இருக்கும். ஆனால் என்ன திமுக அதிகாரத்தை எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் துஸ்பிரயோகம் செய்து விட்டார்கள். இதனால் முன்னெற்றம் இல்லாமல் பகல் கொள்ளையை திமுக செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஜெஜெ ஆட்சியில் அதிகாரம் ஜெஜெவிடமே உள்ளது. இதனால் எந்த முன்னேற்றமும், புதிய புராஜுட்டுகளும்வராது. இப்படி அதிகாரம் குவிக்கப்பட்டால் முடிவு துய்ரமே. சரிதிரத்தில் இப்படி அதிகாரம் குவிக்கப்பட்டு ஆட்சிசெய்தவர்கள் சமூகத்தில் மறக்க முடியாத வடுவை ஏர்படுத்தி உள்ளார்கள். இந்திரா காந்தி இப்படித்தான் செயள் பட்டார். இந்திய சரித்திரத்தில் ஒரு இருண்ட காலம் எமெர்ஜென்சி. அதோடு இந்திரா காலத்தில் இந்தியா மிகவும் பின் தங்கிய நாடாகிவிட்டது. தமிழகம் முன்னேற ஆயிரம் ஆயிரம் ஜெஜெக்கள் தேவை. ஒரு ஜெஜெவால் ஒன்னும் செய்ய முடியாடு. செங்கோடையன், பன்னீர்செல்வம் .. போன்றவர்கலால் காலிள்தான் விழமுடியும். நாட்டிர்க்கு என்ன வேண்டும் என்று சுயமாக சிந்தித்து செயல் பட முடியாது. 
சென்னை மேயர் சைதை துறை சென்னையஒ ஒரு உலகத்தரமான நகரம் ஆக்குவார் என எதிர்பார்த்தார்கள். கடைசியில் என்ன அயிற்று. திமுக சுபிரமணியெனே பரவாக இல்லை என்றாகிவிட்டது. ஐ.ஏ.எஸை உருவாக்கும் சைதை துறை ஏன் திறம்பட செயள்படமுடியவில்லை ?. ஏனென்றால் ஜேஜெ முதலிள் அந்தா ஆள் காலில் விழுவாரா என்று பார்ப்பார். காலிள்விழவிலை என்றால் ஒதுக்கப்படுவார். கலிள் விழும் அடிமை என்ன செய்ய முடியும் ? அவனையே காப்பாற்ற முடியவில்லை பின் நாட்டை பற்றி அவன் எப்படி நினைப்பான்.

3.Sulaiman - Saudia

 
சசிகலா சேர்ப்பு- அவர்கள் தனிபட்ட விசியம்?? - அடப்பாவிங்களா, நாங்க என்ன சர்வேயில் பெட்ரூம் மேட்டரா கேட்டோம்? 

நூற்றுக்கு நூறு போட்ட அந்த 195 பேரின் விலாசம் கொடுங்க பாஸ்.. காலில் விழுந்து கும்பிடனும்...!! 
4.Sriram
போன ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் மக்கள் எந்த அளவுக்கு மனம் மாறி நல்லவர்களாக ஆகி இருக்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுத்து பிரசுரித்தால் நல்லது! மக்கள் கொஞ்சமாவது மாறினால்தானே அரசு மாறும்!
5.dsad
பஸ் கட்டணத்தை நினைச்சாலே, அடிவயிறு பத்திக்கிட்டு எரியுது. ... உங்களுக்கு சம்பளம் மட்டும் வருடா வருடம் கூட்டணும் ஆனா சேவைகளுக்கு அதிகமா விலை குடுக்க மாட்டிங்க.


DIsKI -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
 
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
 
"/>a>

Wednesday, March 14, 2012

ஜெ-வின் ஆஸ்தான முன்னாள் ஜோதிடர் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்களில் ஒருவராக இருந்தவர் என்று சொல்லப்பட்டவர் வெற்றிவேல்.

 சி.பி - ஆஹா VETRIVAEL கூட்டுத்தொகை 9 வருது.. அம்மாவோட செண்ட்டிமெண்ட்டே  செண்ட்டிமெண்ட் அவ்வ்வ்வ்

 இவர் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே ராவணன் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறது. இதுகுறித்து, 20.2.2008 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'கோடிகளுக்காக என்னைக் கடத்தினார்கள்! உயிர் பயத்தில் ஜெ. ஜோதிடர்!’ என்ற தலைப்பில் செய்தி வந்தது. அந்தப் புகார் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளார் வெற்றிவேல்.


 ''எனது புகார் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று தனது வழக்கறிஞர் குமாரதேவனுடன் கடந்த 12-ம் தேதி வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் வெற்றிவேல் மனு கொடுத்துள்ளார்.


வெற்றிவேலை சந்தித்துப் பேசியதில்


 ''எனக்கு சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி. 98-ம் வருஷம் பெரியம்மாகிட்ட (ஜெயலலிதா) அறிமுகம் ஆனேன். பெரியம்மா அப்போது வழக்கு விவகாரங்களுக்காக அலைஞ்சுட்டு இருந்த நேரம். நான் அவரோட அரசியல் எதிர்காலம், வழக்குகளின் நிலை சம்பந்தமாகத் தெளிவா கணிச்சுச் சொன்னேன். அதனால, அவங்களோட நம்பிக்கைக்கு உரிய ஆஸ்தான ஜோதிடர்களில் நான் முன்னணியில் இருந்தேன்.

சி.பி - அண்ணே, சாரி ஃபார் த குறுக்கீடு , அமைதிப்படை அமாவாசை மாதிரி ஒரு கேள்வி, யார் யாருக்கோ ஜாதகம் கணிச்ச நீங்க உங்க ஜாதகத்துல போலீஸ் கேஸ் வரும், சின்னம்மாவை பகைச்சுக்குவோம் அதெல்லாம் கணீக்கலையா? அப்படி இல்லைன்னா நீங்க என்ன ஜோசியர்? ஹி ஹி 




 பெரியம்மா, சின்னம்மா (சசிகலா) மற்றும் அவரோட குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் நான்தான் ஜோதிடம் பார்த்தேன். 2004-ம் வருஷம், சின்னம்மா என்கிட்ட, 'பெரியம்மாவுக்கு அடுத்து அ.தி.மு.க-வில் முதல்வர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கு?’னு கணிச்சுத் தரச் சொன்னாங்க. அதுக்காக அவங்க குடும்பத்துல இருக்கிற அத்தனை பேர் ஜாதகமும் கொடுத்தாங்க.
அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்த நான், 'உங்க குடும்பத்துல ஒருத்தருக்குக்கூட கட்சியில் பொதுச்செயலாளர் ஆகும் யோகமோ, தமிழகத்தின் முதல்வர் ஆகும் யோகமோ கிடையாது. இது மாற்ற முடியாத உண்மை’னு கணிச்சு சொன்னேன்.


 சி.பி - உடனே பெரியம்மா டென்சன் ஆகி “ முதல்ல எதுக்காக அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்தீங்க, என் கிட்டே அதுக்கு அனுமதி வாங்குனீங்களா?ன்னு கேட்கலை?” ஹி ஹி

 இந்த விஷயத்தை நான் பெரியம்மாகிட்டேயும் அப்படி​யே சொல்லிட்டேன். இதுதான் கார்டனுக்கும் எனக்கும் விரிசல் விழக் காரணமான சம்பவம். அன்றுமுதல், சின்னம்மா என்னை எதிரியா நினைச்சிட்டார். உண்மையைச் சொல்லப்போனால், சின்னம்மாவை என் அம்மா மாதிரி நினைச்சு இருந்தேன்.


சி.பி - அண்ணே, எகெயின்  ஒரு ஸ்மால் டவுட்டு, சின்னம்மாவை  உங்கம்மா மாதிரி நினைச்சா உங்கம்மாவை என்னவா நினைச்சீங்க? ஜெ அம்மாவை என்னவா நினைச்சீங்க?  உபயம் - வெற்றிக்கொடு கட்டு ஆர் பார்த்திபன் - வடிவேல் காமெடி


 எங்க அம்மா இறந்தப்​பகூட நான் அழுதது இல்லை. ஆனா, சின்னம்மா கஷ்டப்பட்டப்ப எல்லாம் அழுதேன். கிராமத்துல செம்மறி ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த என்னை கார்டனுக்குக் கூட்டிவந்து பெரிய ஆள் ஆக்கினதே சின்னம்மாதான். ஆனா, அவங்களே எனக்கு எதிரியா மாறிட்டாங்க.

சி.பி - நாடு ஏன் நாசமாப்போய்ட்டிருக்குன்னு இப்போ தெரியுது. செம்மறி ஆடு மேய்ச்சுட்டு இருந்தவங்க எல்லாம் அரசியல் ஆலோசகரா ஆனா நாடு எப்படிய்யா உருப்படும்?படிச்சவன் வேலை இல்லாம அலைஞ்சுட்டு இருக்கான்

அப்ப இருந்து என்னை விரட்ட ஆரம்பிச்சவங்க... இப்ப வரைக்கும் விடாம விரட்டிக்கிட்டு இருக்காங்க. உண்மையில் நான் சாதாரண ஆளுங்க. கார்டன்ல ஜோதிடத்தைத் தாண்டி எதையும் எப்பவும் பேசியது இல்லை. அரசியல்னா என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. நான் சொன்ன ஜோதிடக் கணிப்புகளை வைச்சு, சின்னம்மாவும் ராவணனும் என்னை அவங்களுக்குப் போட்டியா, எதிரியா நினைச்சுப் பழிவாங்க ஆரம்பிச்சிட்டாங்க.

சி.பி - நீங்க ஒரு தப்பு பண்ணீட்டிங்க, சசிகலாட்ட எதுவும் சொல்லாம ஆமாம் சாமி போட்டு நைசா ஜெ கிட்டே அவங்களை பற்றி போட்டுக்குடுத்திருக்கனும்.. 

2007-ம் வருஷம் ராவணன் என்கிட்ட என் சொத்து விவரங்களை கேட்டு, ஈரோட்டில் இருந்து கோவைக்கு கார்லயும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்துலயும் கடத்​திட்டுப் போனார்.

 சி.பி - ஆமா, ஈரோட்ல உங்களுக்கு என்ன வேலை? பர்சனல் மேட்டர்ஸா? ஹி ஹி

அங்கே தகாத வார்த் தைகளில் பேசி வெற்றுப் பேப்பர் களிலும் பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கினார். அதுதொடர்பா தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்து, பிறகு அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே அளவுக்கு அதிகமான செல்வாக்குடன் இருந்தார் ராவணன். அதனால், அந்த வழக்கில் ஒரு துரும்பைக்கூட போலீஸார் கிள்ளிப் போடலை.



கடந்த தி.மு.க. ஆட்சியில் ராவணன் எனக்குக் கொடுத்த துன்பங்களுக்கு அளவே இல்லை. 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி என் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளுக்காக வீட்டில் ஹோமம் வளர்த்துட்டு இருந்தேன். அப்போது ராவணனுக்கு நெருக்கமான வருமானவரித்துறை அதிகாரியை வைச்சு என் வீட்டில் ரெய்டு நடத்தினார். அதே வருஷம் திருப்பூர் செங்கப்பள்ளியில் ஒரு சொத்தை வாங்க, 1 கோடியே 1 லட்சம் ரூபாய் முன் பணத்தை செங்கப்பள்ளி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த ராவணனின் நண்பர் சண்முகத்திடம் கொடுத்து, அவரது மனைவி ஈஸ்வரி பெயரில் ஒப்பந்தம் போட்டேன்.


ராவணன்கூட பிரச்னை ஏற்பட்ட பிறகு, அந்த இடத்தை அவங்க தரலை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டா, 'ராவணன்கிட்ட போய் வாங்கிக்​கோ’னு மிரட்டுறாங்க. இதுசம்பந்தமா, கடந்த தி.மு.க. ஆட்சியில் முக்கியமான நான்கு அமைச்சர்களை நேரில் சந்தித்து உதவி செய்யும்​படி கேட்டேன். ஆனா, அமைச்சர்கிட்ட போன ரெண்டு மணி நேரத்துல எனக்கு போன் வரும். 'அமைச்சர்கிட்ட போனா உன் பணம் கிடைச் சிடுமா? டேய், நீ எங்க போனாலும் என்னை ஒண்ணும் செய்ய முடி யாது’னு ராவணனும் அவரோட ஆட்களும் மிரட்டுவாங்க.


சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் எனக்கு இடம் இருந்துச்சு. 2009-ம் வருஷம் அந்த இடத்தை வைச்சு, ஒரு தேசிய வங்கியில் 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தக் கடனைக் கட்ட முடியாம வட்டியோடு சேர்த்து 65 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. ஆனா, எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்​காமல் சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சொத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி ஏலம் விட்டுருச்சு. இது எப்படி சாத்தியம்?


 சி.பி - ஆடு மேய்ச்சிட்டு இருந்தவருக்கு எப்படி இந்த மாதிரி கோடிக்கணக்குல சொத்து வந்துச்சு.. ஜாதகம் பார்க்க அம்புட்டு வருமா? நல்ல நேரம் சதீஷ்.. நோட் பண்ணப்பா..


 முதல் தவறு எனக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம்விட்டது. அடுத்தது, மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஒரு கோடிக்கு விற்று வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியது. எனக்குத் தகவல் தெரிவிச்சதுக்கு ஆதாரம், அந்த சொத்தை யாருக்கு வித்தாங்க? அந்த ஏலத்தில் யார் எல்லாம் கலந்துக்கிட்டாங்க?ன்னு பல கேள்விகளைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு போட்டேன். இப்ப வரை சரியான தகவல் கொடுக்கலை. இதன் பின்னணியிலும் ராவணன்தான் இருக்கார்.


சி.பி - அடடா.. ஒரு வங்கிக்கு நஷ்டம்னு சொன்னதும் அண்ணன் கண்ணு கலங்குதே.. நாட்டுப்பற்று!!!

இதுமாதிரி ஒண்ணு, ரெண்டு இல்லை. இப்படி சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு என் பணம், சொத்துகளை ராவணன் மோசடி செய்து இருக்கார். 2007-ம் ஆண்டு என்னைக் கடத்திட்டுப் போன சம்பவத்துக்குப் பிறகு ராவணனுக்குப் பயந்து, டெல்லிக்குப் போய் செட்டில் ஆகிட்டேன். அங்கேயும் ராவணன் என்னை விடலை. டெல்லியில் ஒரு அ.தி.மு.க. வக்கீல் என் மீது பொய்ப் புகார் கொடுத்து, ஒரு உதவி கமிஷனர்கிட்டேயே, 'சார், இது தமிழ்நாடு டெபுடி சி.எம். ராவணனின் ஆர்டர். உடனே அரெஸ்ட் பண்ணுங்க’னு டார்ச்சர் பண்ணினார். நான் அந்த போலீஸ் அதிகாரிகிட்ட, 'தமிழ்நாட்டுல டெபுடி சி.எம்-னு போஸ்ட்டிங்கே இல்லை’ன்னு ஆதாரபூர்வமாப் புரிய வைச்சுத்தான் தப்பிச்சேன்.
இப்ப ராவணன் மீது படிப்படியா நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னாலதான், சென்னை வந்து இருக்கேன். ஜோதிடர்களைக் கடவுளின் தூதர்கள்னு சொல்லுவாங்க. நான் கடவுள்கிட்ட கேட்டு, அங்க இருந்து எனக்கு என்ன தகவல் கிடைச்சதோ, அதைத்தான் ஜோதிடக் கணிப்புகளாகச் சொல்லிட்டு இருக்கேன்.

 சி.பி - அப்படியே கடவுளுக்கு ஒரு ஐ எஸ் டி கால் போட்டு உங்களுக்கு ஒரு விடிவு காலம் எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்கோ..

 2011-ம் வருஷத்துக்குப் பிறகு ராவணன் அரசியல்ல இருக்க மாட்டார். அவரோட அழிவுகாலம் தொடங்கிடும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்சிக்காரங்க, என் நண்பர்கள், ராவணன் நண்பர்கள்னு சுமார் 100 பேர்கிட்ட சொல்லி இருக்கேன்.


 சி.பி - ஓஹோ, அந்த 100 பேர்ட்டயும் ஃபீஸ் வாங்கியாச்சா?

இப்பவும் சொல்றேன். ராவணனுக்கு அழிவு நிச்சயம். இத்தனை நாள் அவர் மீது கொடுக்கப் பட்ட புகார்களைவிட, ஆணித்தரமான ஆதாரங்கள் கொண்ட புகார்கள் நிறைய என்கிட்ட இருக்கு. ஒவ்வொரு புகாரா போலீஸில் கொடுத்து, ராவணன் அழியறதை என் கண்ணால பார்க்கப்போறேன். இது என் ஆசை எல்லாம் கிடையாது. இதுதான் ராவணனின் ஜாதகம்!'' - ஆவேசமாக முடிக்கிறார் ஜோதிடர் வெற்றிவேல்!


சி.பி - அட போங்கண்ணே, இப்படித்தான் குணச்சித்திர நடிகை சோனா கூட சொன்னாங்க. என் கிட்டே வீடியோ ஆதாரம் இருக்கு, எஸ் பி பி சரணை கூண்டில் ஏத்துவேன், சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பேன்னு சபதம் போட்டாங்க.. ஆனா அப்புறம் டகார்னு பல்டி அடிச்சு இப்போ சரண் ஹீரோவா நடிக்க சோனா கவுரவ கதாநாயகியா  “ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்” அப்படின்னு ஒரு படம் நடிக்கராங்களாம்.. அவ்வ்வ்வ்
வெற்றிவேல் பணம் கொடுத்ததாகக் கூறும் செங்கப்பள்ளியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சண்முகத்திடம் பேசினோம். ''வெற்றிவேலிடம் சொத்தை விற்க முன் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அதன் பிறகு சொத்தைக் கிரையம் செய்ய பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்குப் பிறகு, அவர் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கித் தொகைக்காக இந்த நிலத்தையும் பணத்தையும் வழக்கில் சேர்த்து விட்டார்கள். ராவணன் என் நண்பர் இல்லை. அவரை நான் பார்த்ததுகூட கிடையாது...'' என்றார்.


 சி.பி - பார்க்காமயே நட்பா? விட்டா எனக்கு ராமர், ராவணன், ராமாயணம் எதுவுமே தெரியாது, கேள்விப்பட்டதே இல்லைன்னு சொல்லிடுவார் போல..
ராவணன் மீதான பிடி இறுகுவதற்கு வெற்றிவேல் புகார் கூடுதல் வலையாக மாறிக்கொண்டு இருக்கிறது!

Thursday, February 02, 2012

கேப்டன் ஆவேச பேச்சு யூடியூப் வீடியோ.,சன் நியூஸ் பேட்டி -. காமெடி கலாட்டா



1. அசந்து போகுமளவு அறிவிப்புகள் வெளியிடுவேன் - ஜெ # அசந்தா அடிக்கறது உங்க பாலிசி, அசராம (சரக்கு) அடிக்கறது எங்க பாலிஸி - கேப்டன்


-------------------------------------

2. மேடம்,எதுக்காக எங்க கேப்டனை வெளீல அனுபுனீங்க?

சட்டசபைல மப்புல எங்க கட்சி ஆளுங்களை ”ஓட்டிட்டு” இருந்தார், டிரங்க்கன் டிரைவிங்க்னு ரிஜக்டட்

-------------------------------------

3. சட்ட சபைல கை நீட்டி பேசுனது தப்பு இல்லையா?

கேப்டன் - கை நீட்டி லஞ்சம் வாங்கறதுதான் தப்பு

-------------------------------------

4. உங்களுடன் கூட்டணி வைத்தற்காக நான் வெட்கப்படுகிறேன் -ஜெ # ஓக்கே மேடம், அதை ஏன் இவ்ளவ் கோபமா சொல்றீங்க? சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க- கேப்டன்

---------------------------------

5. ஜெ - என்னை எதிர்க்க திராணி இருக்கா?

கேப்டன் - லூசாம்மா நீங்க? அது இருந்தா தனியா நின்னிருக்க மாட்டேனா?

----------------------------------

6. டியர்,உன்னுடன் காதல் கூட்டணி வெச்சதுக்காக நான் வெட்கப்படறேன்...

ஏன்? ம்க்கும், ஒரு கிஸ் கூட தர்லை.. வேஸ்ட்

--------------------------------

7. காதலி - உங்க கிட்டே திராணி இருக்கா?

காதலன் - இல்ல, வாரா வாரம் வாங்கற ராணி தான் இருக்கு

-------------------------------

8. ஜெ-எனக்கு முன்னால இது வரை கை நீட்டி யாரும் பேசுனதே இல்ல. 

கேப்டன் -அதுக்கு பதிலாத்தான் நாக்கை  மடக்கி உள்ளே வெச்சுக்கிட்டேனே மேடம்?

-------------------------------------

9.ஜெ- கேப்டன் கிட்டே வேற ஏதாவது கல்யாண மண்டபம் இருக்கா? இடிக்கனும்.. 

ஓ பி எஸ் - பிரேமலதா தான் இருக்காங்க, நைஸா இடிச்சுட்டு வரவா?

----------------------------

10. ஜெ-என் கட்சிக்காரங்களை திருப்திப்படுத்தத்தான் நான் உங்களோட கூட்டணி வெச்சேன்  

கேப்டன் - கலைஞரை கடுப்பேத்தனும்கறதுக்காகத்தான் நான் அப்டி. கூட்டணி வெச்சேன்

--------------------------------

http://moonramkonam.com/wp-content/uploads/2011/12/vijaykanth-manmohansingh-mullaiperiyar-dam.jpg

11. ஒரு CM முன்னால நாக்கை கடிச்சுக்கிட்டே பேசுனது முறையா?

கேப்டன் -வழக்கமா நான் ஊறுகாய்  கடிச்சுக்கிட்டுதான் பேசுவேன், ஆனா சட்டசபை என்பதால்.

----------------------------------

12. நிருபர் -சட்டசபைல கலக்கிட்டீங்க..

கேப்டன் - ச்சே, ச்சே வீட்லயே கலக்கி அடிச்சுட்டுதான் சட்டசபை போனேன்

---------------------------------

13. ஜெ- கேப்டன் பேசுன அருவெறுப்பான பேச்சுக்களை நான் பார்த்துட்டு தான் இருந்தேன் 

கேப்டன் - தீயனவற்றை பாராதே,கேளாதேன்னு பெரியவங்க சொன்னாங்களே?

----------------------------------

14. ஜெ- இனி கேப்டனுக்கு இறங்கு முகம் தான்


கேப்டன் - நல்ல வேளை குரங்கு முகம்னு சொல்லலை ஹி ஹி

----------------------------------

15. ஜெ- சங்கரன் கோயில்ல தனியா நிக்கறேன், உங்களால முடியுமா? 

கேப்டன் - அதெப்பிடி? நானும்வந்து அங்கே நின்னா ஜோடி ஆகிடுவோமே?தனியா நிக்கறது எப்டி?

----------------------------

http://3konam.files.wordpress.com/2011/03/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands1.jpg?w=683&h=504

16. கேப்டன், எதுக்காக தல அஜித்தை பார்க்க வந்திருக்கீங்க?

நான் நடந்து கொண்ட விதம் சரி இல்லைன்னு ஜெ சொன்னாங்க , தல கிட்டே டிரெயினிங்க் எடுக்க

------------------------------

17. ஜெ -புள்ளி விவரம் சரியாய் தெரிஞ்சிட்டு தான் பேசணும்.

கேப்டன்: தமிழ் நாட்டில் மொத்தம் 2 கரும்புள்ளிகள் 1. கலைஞர் 2 ஜெ

---------------------------

18.ஜெ - கேப்டனைக்கூட மறுக்கா கவனிச்சுக்கலாம், என்னை சர்வாதிகாரின்னு சொன்ன ஸ்டாலினை முதல்ல உள்ளே தள்ளனும்

கமிஷனர் - மிட் நைட் 12 மணி OK?

---------------------------------

வெட்கப்பட்ட ஜெ, கோபப்பட்ட கேப்டன், பாவப்பட்ட மக்கள் - காமெடி கும்மி



 கேப்டன் மேல் ரொம்ப நாளாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒரு எதிர்க்கட்சி போல் அவர் நடக்கவில்லை, பம்முகிறார் என்பதே.. 6 மாசம் போகட்டும், அதுவரை பொறுமை என சால்ஜாப் சொல்லி வந்தார்.. நேற்றோடு அந்த விரதம் முடிந்தது போல..


சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இடையே, நேற்று அனல் பறக்கும் வாக்குவாதம் நடந்தது. அ.தி.மு.க., உறுப்பினரை, கையை நீட்டி ஆவேசமாக விஜயகாந்த் பேசிய விதத்தை கண்டதும், ""எதிர்க்கட்சித் தலைவர், அருவருக்கத்தக்க வகையில், கீழ்த்தரமாக நடந்து கொண்டார். இவர்களுடன் சேர்ந்து, தேர்தலை சந்தித்ததற்காக வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது,'' என, முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.


சி.பி - 80 வயசான கவர்னரையே தப்பா பேசுனவர்தானே இவரு.. இவ்ளவ் ரோஷம் இருக்கறவரு ஏன் கூட்டணி வைக்கனும்? தில் இருந்தா சட்டசபையை கலைச்சிட்டு தனியா நின்னு ஜெயிச்சுட்டு அப்புறமா வீராப்பு பேச வேண்டியதுதானே?


சட்டசபையில் நடந்த விவாதம்:

சந்திரகுமார் - தே.மு.தி.க: மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்களிடம் கருத்து கேட்கும் விதத்தை பார்க்கும் போது, ஏதோ சம்பிரதாயத்திற்கு நடப்பது போல் தெரிகிறது. மின் கட்டண உயர்வு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், பெயருக்குத் தான் கருத்து கேட்பு கூட்டம் நடப்பதாகவும் வெளியில் பேசிக் கொள்கின்றனர். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், மின் கட்டணத்தை நீங்கள் உயர்த்தப் போவதாக தகவல்கள் வருகின்றன.


சி.பி - பஸ் கட்டண உயர்வு வந்தப்பவே  மின் கட்டண உயர்வும் முடிவாகிடுச்சே..

முதல்வர் ஜெயலலிதா: அடிப்படை விவரம் இல்லாமல் உறுப்பினர் பேசுகிறார். மின் கட்டணத்தை நிர்ணயிப்பது அரசு கிடையாது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான், மின் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அதனடிப்படையில் புதிய மின் கட்டணத்தை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயிக்கும். ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தான், எல்லாமே நடக்கின்றன. தான் தோன்றித்தனமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கவில்லை. இதையெல்லாம் தெரியாமல் பேசுவது, உறுப்பினரின் அறியாமையைத் தான் காட்டுகிறது.

சி.பி  - அதானே,  தான் தோன்றித்தனமாக நாட்ல ஒருத்தர் மட்டும் தான் பேசனும், எல்லாரும் பேச ஆரம்பிச்சா அம்மாவுக்கு கோபம் வராதா?

பதில் சவால்: பால் விலை உயர்வு மற்றும் பஸ் கட்டணம் உயர்வு குறித்து, ஏற்கனவே பலமுறை விளக்கி விட்டோம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக உயர்த்த வேண்டியது தானே என்று சவால் விடும் வகையில் உறுப்பினர் பேசுகிறார். வேறு வழியில்லாமல் தான், இந்த கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று வருத்தப்பட்டு, நானே மக்களிடம் "டிவி' மூலமாக விளக்கினேன்.


சி.பி -ஏன்   வேற வழி இல்லை? பெரிய பெரிய தொழில் அதிபர்ங்க கிட்டே வரி போடலாம்.. சினிமா, சிகரெட், டாஸ்மாக் சரக்கு டபுள் மடங்கு ஏத்தலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு நடுத்தர மக்கள்ட்ட பிச்சை எடுக்கறீங்களே, வெட்கமா இல்ல?

திராணியிருக்கிறதா? இருப்பினும், உறுப்பினர் சவால் விட்டு பேசுகிறார். அவருக்கு, நான் பதில் சவால் விடுக்கிறேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்கள் கட்சிக்கு திராணியிருந்தால், தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்திய பின் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் முடியுமா என்பதை யோசித்துவிட்டுப் பேசுங்கள்.

சி.பி - சட்ட சபைல போய் மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி ஏதாவது செய்வாங்க, பேசுவாங்கனு பார்த்தா இவங்க எல்லாம் அஞ்சாங்கிளாஸ் பசங்க மாதிரி  அடிச்சுக்கறாங்களே? 

விஜயகாந்த்: 2006ல் இருந்து, 2011 வரை பல இடைத்தேர்தல்கள் வந்தன. அந்த இடைத்தேர்தல்களில், ஒரு தேர்தலில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. இன்றைக்கு வந்து, நான் சங்கரன்கோவிலில் ஜெயிப்பேன், ஜெயிப்பேன் என்று சவால் விடுவது எப்படி என்று எங்களுக்குத் தெரியும். அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் அவர்கள் (தி.மு.க.,) எப்படி ஜெயித்தனர் என்பது, அவர்களுக்குத் தெரியும். இப்போது, நீங்கள் எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள் என்பதும் தெரியும். (இவ்வாறு விஜயகாந்த் பேசியதும், அமைச்சர்கள், அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து, கூச்சல் போட்டனர். பதிலுக்கு, தே.மு.தி.க., உறுப்பினர்களும் எழுந்து நின்று சத்தம் போட்டனர். இதனால், சபை ஒரே அமளியாக காணப்பட்டது. தே.மு.தி.க., உறுப்பினர்கள், சபையின் முன்பகுதிக்கு வந்து, அ.தி.மு.க., உறுப்பினர்களை பார்த்து ஆவேசத்துடன் பேசினர்.)


சி.பி - இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்பது வரலாறு கண்ட உண்மை.. இதை எல்லாம் ஒரு மேட்டரா ஜெ சொல்லக்கூடாது.. 





முதல்வர்: தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, எதிர்க்கட்சித் தலைவர், தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்.

சி.பி - ஜெயிக்கப்போறது நீங்களா? அவரா? என்பது தெரில, ஆனா தோக்கப்போறது அப்பாவி ஜனங்க தான்.. நீங்க ஏதாவது நல்லது பண்ணுவீங்கங்கற நம்பிக்கைல  அவங்க பாவம் வரிசைல நின்னு ஓட்டு போடறாங்க..

விஜயகாந்த்: நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கேட்டதற்கு மட்டும் தான் பதில். சங்கரன்கோவிலை பற்றி பேசும் நீங்கள், பென்னாகரத்தில் ஏன் தோற்றீர்கள்; அதில், நாங்கள் தான் இரண்டாவது இடம். பென்னாகரத்தில் டெபாசிட் காலியானது ஏன்? மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது ஏற்கனவே குறை கூறிய நீங்கள், இப்போது அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?

சி.பி - சும்மாவே கேப்டன் ஆடுவாரு, இன்னைக்கு சரக்கு வேற அடிச்சுட்டு போய்ட்டார் போல.. அவ்வ்வ் 

சபையில் கொந்தளிப்பு: விஜயகாந்த்தின், இந்த தொடர் கேள்விகளால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இரு தரப்பினரும், மாறி, மாறி ஆவேசமாக பேச, சபை ஒரே கூச்சல், குழப்பமாக காணப்பட்டது. அப்போது, அ.தி. மு.க., உறுப்பினர் ஒருவர், விஜயகாந்த்தை பார்த்து சைகை செய்து ஏதோ பேச, விஜயகாந்த் கடும் ஆவேசத்துடன், பதிலுக்கு கையை நீட்டி கடுமையாக பேச, சபையில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டது.

சி.பி - கேப்டன் பிரபாகரன் படத்துல கோர்ட் சீன் தான் ஞாபகம் வருது.. நேத்து ஹாட் டாபிக் கேப்டன் தான், சமூக வலை தளங்களான ட்விட்டர்ல, ஃபேஸ் புக்ல கேப்டன் திடீர் ஹீரோ ஆகிட்டாரு.. 

கூண்டோடு வெளியேற்றம்: இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும், சபையில் இருந்து வெளியேற்ற, சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே, சபைக் காவலர்கள் நுழைந்து, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றினர். வெளியேறும் போது, தே.மு. தி.க., உறுப்பினர்கள், ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் போட்டபடி சென்றனர். அதன்பின், அமைச்சர் விஸ்வநாதன் கூறும்போது, ""சட்டசபை மரபுக்கு மாறாக, சினிமா பாணியில் எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்டார். தரக்குறைவான முறையில், அவரது செயல்கள் இருந்தன. அவர் மீது, சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


சி.பி - என்னய்யா பேச்சு இது.. தமிழ் நாட்டின் சி எம் ஒரு சினிமா நடிகை ( முன்னாள்) எதிர்க்கட்சித்தலைவர் ஒரு சினிமா ஹீரோ.. பின்னே எந்த மாதிரி சபை நடவடிக்கைகள் இருக்கும்? சுதந்திரப்போராட்ட தியாகிகளா சட்ட சபைல இருக்காங்க?  

உரிமை மீறல் குழுவுக்கு...: அதன்பின், சபாநாயகர் கூறும்போது, ""எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சி உறுப்பினர்களும், சபைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், பிற வகைகளிலும் தரக்குறைவாக நடந்து கொண்டனர். எனவே, சபை விதி 226ன் கீழ், இந்த பிரச்னையை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புகிறேன்'' என்றார். மார்க்சிஸ்ட் சட்டசபை தலைவர் சவுந்தர்ராஜன் பேசும் போது, ""சபையில் இதுபோன்ற விவாதம் பல முறை நடந்திருக்கிறது. ஒவ்வொன்றையும், உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவது சரியாக இருக்காது'' என்றார். அதற்கு, ""அவர்கள் (தே.மு. தி.க.,) நடந்து கொண்ட விதத்தை அனுமதிக்க முடியாது. தெருச்சண்டை போல் சண்டை போட்டனர்'' என, சபாநாயகர் கூறினார்.

சி.பி - சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்ட்டி சாரி  ஆண்டி கதையா அவங்க பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாங்க.. தூண்டி விட்டது ஜெ தான்..

இதன்பின் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இன்று, எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதம், அவர் பேசிய அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான பேச்சுக்கள் இவற்றையெல்லாம், இங்கேயே அமர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்; அனைவரும் பார்த்தனர். தே.மு.தி.க.,வினருக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றால், அவர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால், அதைத் தவிர்த்து, குறைந்தபட்ச நடவடிக்கையாக, இந்த பிரச்னையை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக, சபாநாயகர் கூறியிருக்கிறார். சபாநாயகர் தன் முடிவை அறிவித்தபின், வேறு எந்த உறுப்பினரும், அதைப்பற்றி கேள்வி கேட்க விதிகளில் இடம் இல்லை. தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. 


சி.பி - எம் ஜி ஆர் கூட இதே மாதிரி சொன்னார்..  ”தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வர்?”னு, அதை ஜெ கொஞ்சம் நினைச்சுப்பார்க்கனும்?

இந்த நேரத்தில், ஒன்றை சொல்கிறேன். கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளின் காரணமாக, நிர்வாக சீர்கேட்டின் காரணமாக, எங்கும் மலிந்திருந்த ஊழலின் காரணமாக, மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பினர். அ.தி.மு.க.,விற்கு, கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், இதே முடிவைத் தான் நாங்கள் பெற்றிருப்போம்.


சி.பி - அவ்வளவு நம்பிக்கை இருக்கா? உங்க கணக்கு தப்பு.. சோவின் ஆலோசனையின் பேரில் வேற வழி இல்லாம தான் நீங்க கூட்டணிக்கு ஒத்துக்கிட்டீங்க..  காரியம் ஆகற வரை காலை பிடி, காரியம் ஆன பிறகு கழுத்தைப்பிடிங்கற கதையா நீங்க இப்போ அவங்களை உதாசீனப்படுத்தறீங்க.. 


அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்துவது என, மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதன்படி தான், கடந்த தேர்தலில் முடிவுகள் அமைந்தன. தே.மு.தி.க.,வின் அதிஷ்டம், எங்களுடன் கூட்டணி சேர்ந்தனர். அவர்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனால் தான், இத்தனை உறுப்பினர்கள், அக்கட்சிக்கு கிடைத்திருக்கின்றனர். இந்த கூட்டணியில், எனக்கு சிறிதும் விருப்பமில்லை என்பதை இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். 


சி.பி - அவ்வளவு நல்லவரா இருந்தா இதே ஸ்டேட்மெண்ட்டை தேர்தல் பிரச்சாரத்தின்போதே சொல்லி இருக்கலாமே?  இது ஒரு விருப்பம் இல்லாத கூட்டணீன்னு?

என் கட்சியினரை திருப்தி செய்வதற்குத் தான், இந்தக் கூட்டணிக்கு நான் சம்மதித்தேன். இந்தக் கூட்டணி அமையாவிட்டாலும், அ.தி.மு.க.,விற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. தே.மு. தி.க.,விற்கு கொடுத்த இடங்களிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும். நிதர்சனமான இந்த உண்மையை, இந்நேரத்தில் அவர்களுக்கும் புரிய வைக்கிறேன்; அனைவருக்கும் புரிய வைக்கிறேன். அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., சேர்ந்ததால் தான், அவர்களுக்கு அதிகமான உறுப்பினர்கள் கிடைத்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தும் கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தும், தகுதியும் கிடைத்தது. அ.தி.மு.க., வுடன் கூட்டணி சேராவிட்டால், கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட, தே.மு.தி.க.,விற்கு கிடைத்திருக்காது என்பது தான் உண்மை. தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட புரியாமல், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது, இவர்களுடன் கூட்டணி சேர்ந்து அ.தி. மு.க., தேர்தலைச் சந்தித்ததே என்று நினைக்கும் போது நான் வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். எதிர்க்கட்சித் தலைவரும், அவருடைய கட்சி உறுப்பினர்களும் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது, ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு வர வேண்டிய ஏற்றம்; வரக்கூடிய ஏற்றம் எங்களால் அவர்களுக்கு வந்து முடிந்து விட்டது. இனிமேல், அவர்களுக்கு இறங்கு முகம் தான். அதை சரித்திரம் சொல்லும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


சி.பி - சரித்திரம் சொல்லுதோ இல்லையோ உங்களூக்கு இனி தரித்திரம்தான்

"அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்... எங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்,'' என, விஜயகாந்த் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.


சி.பி - ஆஹா , கேப்டன் தத்துவமா பொழிய ஆரம்பிச்சுட்டாரெ? 


சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் காரசாரமான விவாதத்திற்கு பின் வெளியேற்றப்பட்ட எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி: ஊர்கூடி தேர் இழுத்தது போல் நாங்கள் ஒன்று சேர்ந்ததால்தான் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது என, எங்கள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் சட்டசபையில் தெரிவித்தபோது, "எங்களால் தான் நீங்கள் ஜெயித்தீர்கள்' என, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் தெரிவித்தனர். "சங்கரன் கோவில் தொகுதியில் தனித்து போட்டியிடுவீர்களா?' என்று முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்தார். இதற்கு நான் பதிலளிக்க முயன்றபோது, எதிர்கட்சித் தலைவரான என்னை பேச அனுமதிக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் விரல் நீட்டி மிரட்டுகிறார். அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? 


 சி.பி - அவங்க விரல் நீட்டி மிரட்னாங்கன்னா நீங்களூம் அப்படி செஞ்சா அவங்களுக்கும், உங்களூக்கும் என்ன வித்தியாசம்? நல்ல தலைவர் என்பவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், தன் தொண்டர்களை மட்டுப்படுத்தவும் தெரிஞ்சிருக்கனும்..

அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்... எங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆட்சியை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை கொண்டுவந்த பிறகு, சங்கரன் கோவில் தேர்தலை நடத்திக் காட்டட்டும். அப்ப சவாலை சந்திப்போம். யாருக்கு திராணி இருக்குன்னு அன்னைக்கு பார்ப்போம்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேடு செய்ய முடியும். அதன் மூலம்தான் தி.மு.க., ஜெயித்தது என முன்பு சொன்னார்கள். இப்போது அதே இயந்திரத்தைத்தான் இவர்களும் பயன்படுத்துகின்றனர். அப்போது தவறு செய்திருந்தால், இப்போது செய்ய முடியாதா? கடந்த ஐந்து வருடத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க., ஜெயித்திருக்கிறதா? பென்னாகரத்தில் டெபாசிட் பறிபோனது. பர்கூரில் தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் தானே முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.

சி.பி - அவரும் தோற்றவர்தான்.. நீங்களும் தோற்றவர் தான்.. இனிமே ஜெயிக்கப்போறது யார்?னு காலம் தான் தீர்மானிக்கும்.. 

 மக்கள் கருத்து 

1. வசந்தி - ராஜன் மக்களின் எண்ணங்களை அருமையாக பிரதிபலித்துள்ளார். ஆளும் வர்க்கம் இது போன்று இணைய தளங்களை பார்த்து அவ்வப்போது மக்களின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடியோ காட்சிகளை பார்க்கும் போது, விஜய காந்தின் முகபாவனைகளை சரியில்லை. இருந்தாலும், ஆளுங்கட்சி விலை வாசி பற்றி பேசும்போது ஏன் மிரட்டி அதை பேச விடாமல் தடுக்க வேண்டும்?

தகுதி பற்றி பேசும் அம்மா எந்த ஒரு தகுதியும் இல்லாத ஒருவரை நிதி அமைச்சர் ஆக்கி உள்ளாரே, அது சரியா? ஜெய்லலிதா திருந்தவில்லை என்றால் கோர்ட் திருந்த வைக்கும் (சமச்சீர் கல்வி, சாலைப்பணியாளர் வேலை, தலைமைச்செயலக கட்டிடம்...), இல்லை மக்கள் 2014 ல் திருந்த வைப்பார்கள். கடவுள் அதற்கு முன் பெங்களூர் கோர்ட் வழியாக திருந்த வைக்கலாம்

2.  மகிழ்நன் -தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

விஜயகாந்தை குறித்து...ஜெயா...மம்மி..

சரிங்க மம்மி,,,

நீங்க என்ன தகுதியில பதவிக்கு வந்தீங்க...மக்களுக்கு தொண்டு செய்தா? மத்தவங்களை பேசும்போது கவனமா பேசுங்க...சுயவிளக்கம் கொடுப்பது போலவே இருக்கு

3. யுவா - ரெண்டு பேரும் எப்படின்னு அவங்கவங்களுக்கு தெரியும். மக்களுக்கும் நல்லாவே தெரியும். எதைத் தின்றால் பித்தம் தெளியும்னு இருந்த நிலையில் இவங்களை ஜெயிக்க வைத்ததன் பலன் தான் இது. ஆமாம்பா, ஒரு ச.ம.உ. நாட்டுநடப்பு பத்திக் கேள்வி கேட்டால் என்ன எகத்தாளமா பதில் சொல்றது? கேட்ட கேள்விக்குச் சரியான பதில் மட்டும் அளித்துவிட்டு விட வேண்டியது தானே? அப்புறம் என்ன அப்பென்டிக்ஸ் மாதிரி தகுதி பத்தி கருத்து? என்னவோ இவுகளுக்கு ரொம்பத் தகுதி இருக்கிற மாதிரி. நீங்க எப்படி அரசியலரங்கில் நுழைந்தீர்கள் என்று நல்லாவே தெரியும்.


3 முறை முதல்வர் ஆனதும் எந்தத் தகுதியின் அடிப்படை? முதல்ல உங்க கட்சி ச.ம.உ. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது என்ன தகுதி பார்க்கறீங்க? கேட்டா சசி மேல பழியைப் போட்டுட்டு உத்தமி வேஷம் கட்டுவீங்க? அப்படி சசி தான் எல்லாத்துக்கும் காரணம்னா, முந்தா நாள் தான் தெரிஞ்சதா? உங்க நாடகம் எல்லாம் நல்லாவே நடத்துங்க. முடிவு நெருங்குகிறது. ஆக மொத்தம் மக்கள் நாசமாகிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடாவது (மாநில (அ) மக்கள் வளர்ச்சிக்கு) கொண்டு வந்திருக்கிறீர்களா இந்த 9 மாத காலத்தில்? கேட்டா கடந்த ஆட்சியின் ஊழலால் அரசு நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறதுன்னு சத்தாய்ப்பீங்க? எப்படி ஒரு 5 வருஷம் ஆகுமா அதைச் சரிப்படுத்த? இதுல இந்த சசி, "கரன்"களின் பிரச்சினை வேறு. அதைச் சீர்படுத்துவதுதானே இப்போது தலையாய கடமை உங்களுக்கு? 96-ஆம் வருஷம் நீங்க போட்ட ரூட்ல தானே இப்போ "கரன்"களும் கன்டெய்னரில் பணத்தையும், பத்திரங்களையும் ஏற்றி அனுப்பிக்கிட்டு இருக்காங்க?


4. சந்த்ரு -விஜயகாந்தை விட மோசமாக பேசியுள்ளர் ஜெயா. அடுத்தவரை மதிக்கும் பண்பு இவரிடம் எப்போதும் இருந்ததில்லை.


5. அகிலன் -"தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம்," என்று விஜயகாந்தை ஆவேசமாக சாடினார். இதையெல்லம் சொல்ல்வதர்கு தகுதி உள்ளத என யோசித்து பேசியிருக்கலாமே எதிர் கட்சி என்றாலெதி கேள்வி கேட்கதான செய்வாங்க அது எதிர் கட்சி வரிசையில் உக்காந்திருந்தாதானே தெரியும் கொட நாட்டில போய் கொட்டிகிட்டா எப்டிப்ப தெரியும் மக்களே இவர்களை சட்ட பேரவயில் சட்டம் பேசத்தானே அனுப்பினோம்
சண்ட போடவா அனுப்பினோம் யார் வந்தாலும் இதை மட்டும்தான் உருப்படியா செய்றாங்க சட்ட மன்ற உறுப்பினர்களே நீங்கள் ஒன்றை மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்களின் வெற்றிக்கு காரணம் நீங்கள் இருவருமே அல்லடா ஆளுங்கட்சி காரர்களே நான்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வெற்றிக்கும் காரணம் தி மு க தானே தவிர உங்களின் மகதன சேவையை கண்டு யாரும் வாகாளிக்க வில்லை தி மு க வின் மேல் உள்ள வெறுப்பால் மற்று கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றே உங்களுக்கு வாக்களித்தார்கள் தயவு செய்து நீங்கள் மார்தட்டி கொள்ளாதீர்கள் மக்கள் உங்களை முட்டாள்கள் என்று நினைத்துவிடுவார்கள் தோழர் சந்திர மோகனுக்கு ஏன் நன்றி அவர் சரியாக தானே கேட்டிருக்கிறார் எப்பா மாமன்ற உறுப்பினர்களே கேள்ளவி கேட்ட பதில் சொல்ல கத்துகிட்டு சட்டபேரவைக்கு வாங்க தோழர்களே நீங்க வெட்க படாதீங்க உங்களுக்கேள்ளலாம் வாக்களித்தொமே என்று நாங்கள் வெட்க படுகிறோம்