Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Monday, November 25, 2013

gori tere pyar mein - சினிமா விமர்சனம் (மாற்றான் தோட்டத்து சேட்டு மல்லிகை )

கோரி தேரே பியார் மே - நீங்கள் அறிந்த சினிமா -சினிமா பித்தன்

01. கண்டெடுத்தான் காடு, மண்ணைத் தின்னும் குழந்தைகள், உழைப்பைத் தவிர வேறெதும் அறியாத ஏழை வெள்ளந்தி குடிமக்கள்... ஏமாறுகிறோம் என்று அறியாமல் நாளும் தேயும் இக்குடியினரின் வாழ்வாதாரத்தை மாற்றியமைக்கும் வாத்தி 'வேலுத் தம்பி'. பெல் பாட்டம் பேன்ட்டுடன் விமலும், 'டீ'யுடன் மனசையும் சேர்த்து ஆற்றும் இனியாவும் கண்முன் தோன்றுவார்களே!



02. நாசாவில் வேலை பார்த்து, தன்னை வளர்த்த காவேரி அம்மாவை பார்க்க கிராமத்திற்கு வரும் பேரன். கிராமத்தில் உள்ள வேறுபாடுகள் மனிதர்களின் அறியாமையை உணர்ந்து தன் தேவையை அறிந்து, அமெரிக்க வேலையை விடுகிறான்.



03. வெளிநாடு சென்று பெரிய 'குக்'காக வேண்டும் என நினைக்கும் இளைஞன் தன் தாத்தாவின் தாக்கத்தால், உணவின் தேவையை உணர்ந்து, அவர் ஹோட்டலையை எடுத்து நடத்துவது.


மேற்கண்டவை முறையே வாகை சூட வா (தமிழ்), ஸ்வதேஷ் (இந்தி), உஸ்தாத் ஹோட்டல் (மலையாளம்) என ஏறத்தாழ ஒரே கதைக்களத்தில் அமைந்த படங்கள்தான். இப்படங்களின் பெரிய பலம் என்னவென்றால் இவை பார்வையாளர்களை ஆட்கொள்ளும் தன்மை கொண்டவை. Captivating Cinema என்று இதைக் கூறலாம்.



படத்தின் மையக் கதாபாத்திரம் ரசிகனில் ஒருவனாகக் கூட இருக்கலாம். சுகவாசியாக, தனக்காக மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைக்கும் நாயகன் மெல்ல மெல்ல தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தால், சம்பவங்களால் ஆட்கொள்ளப்பட்டு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதுதான் இப்படங்களின் ஆணிவேர். படம் பார்க்கையில் ரசிகர்களாகிய நம்மை போல் கதாநாயகன் தோன்றுவான், அவனுள் நிகழும் மாற்றங்கள் நம்முள்ளும் வரக்கூடியவையாகத்தான் திகழும். இதுவே இக்கதை வடிவம் அமைக்கப்பட்ட சிறப்பு எனவும் கூறலாம்.



புனித் மல்ஹோத்ரா இயக்கத்தில் இவ்வாரம் வெளிவந்துள்ள இந்தி திரைப்படம் 'கோரி தேரே பியார் மே(ன்)' |Gori Tere Pyaar Mein| கூட இதே அடிநாதத்தில்தான் அமைந்துள்ளது. ஆனால், முன்பு கூறிய எவ்விதத் தாக்கத்தையும் இது ஏற்படுத்தவில்லை. அவரின் முந்தைய மூன்று படங்களின் சாயலில் அமைந்த கதைதான் என்றாலும், பேனாவின் தேவையை கேள்விக்குறியாக்கும் திரைக்கதை, கடந்து போகும் படங்களின் வலையில் இதை விழ வைத்துள்ளது.




இந்த இடத்துல ஹீரோயின் மேல லவ் வரும், இப்போ இரண்டு பேரும் ஓடி வந்து கட்டிப் புடிப்பாங்க பாரு, நீ வேணும்னா பாரு கடைசியில இதுதான் கிளைமாக்ஸா இருக்கும். இப்படி சில படங்களில் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, ட்ராலி பார்வர்ட், கட் உட்பட அனைத்தையும் பார்வையாளனால் வரையறைக்க முடிகிறது. கட்டுக்கோப்பற்ற திரைக்கதையும், புளித்துப் போன க்ளீஷே காட்சிகளும் இதற்கு காரணங்களாக அமைகின்றன.




இப்படத்தைப் பொருத்தவரை, படம் பார்த்து கதை சொல்ல வேண்டும் என்று இல்லை, ட்ரைலரைப் பார்த்தே மொத்த கதையையும் சொல்லிவிடலாம். பாலிவுட் சினிமாவின் பாரம்பரிய மசாலா காதல் கதை, பணக்கார ஆர்கிடெக்ட் நாயகன், சமூக சேவகி நாயகி. வழக்கம்போல் சமூகத்தில் இது தவறு, அது தவறு என்று கூறுவதும், மினிஸ்டர்களை மீட்டிங்கில் கலாய்ப்பதுமாக 'கரீனா கபூர்' பஞ்ச் வசனங்கள் பேசுகிறார். அதைப் பார்த்து ஜொள்ளு விடும் நாயகன் இம்ரான் கான் லவ்வாகி காதலில் விழுகிறார். புதுசா எதாவது நடக்கும் என்ற நமது நம்பிக்கை பாதாளத்தில் விழுகிறது.



காதல் மோதலாகி பிரேக் அப் ஆகிறது, கிராம மக்களுக்கென சேவை செய்ய கரீனா கிராமத்திற்கு செல்கிறார். 'நீ தானே என் பொன் வசந்தம்' எனக்கூறி நம்ம ஹீரோவும் அங்கே செல்கிறார். கிராமத்தில் பாலம் தேவைப்படும் சூழல் எழ, இம்ரான் தன் காதலுக்கு பாலம் அமைத்துக் கொள்கிறார். இவர்களின் காதலுக்கு கிராம மக்களை பொம்மையாக்கி கடைசியில் ஹீரோ, ஹீரோயின் கெட்டி மேளம் கொட்டுவதுதான் நீங்கள் அறிந்த க்ளைமாக்ஸ்.





இந்தப் படத்தில் ஒரு நல்ல விஷயம், இது நம் முழு கவனத்தை பரிசாகக் கேட்கவில்லை, படத்தை எவ்விடத்திலிருந்து பார்த்தாலும் நம்மால் கதையை புரிந்துகொள்ள முடியும். துணிக்கு இஸ்திரி போடும்போது, சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சாப்பிடும்பொழுது, இப்படி போர் அடித்தால் நேரத்தை கடப்பதற்கென சில படங்கள் அமைந்திருக்கும் இப்படம் அப்பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பட்டியலில் முந்துகிறது என்றும் சொல்லலாம்.



சில நல்ல காட்சிகள், சில சுமார் காட்சிகள், சில மொக்கை காட்சிகள், சில ஃபில்லர் காட்சிகள், உளறிக் கொட்டி கிளறி மூடும் க்ளைமாக்ஸ் இப்படி வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே இப்படம் விளங்குகிறது. (விளங்கிடும்!). சினிமா என்பது வெறும் காட்சியின் தொகுப்பல்ல; கதைக்கு வடிவும் அளிக்கும் யுக்தி என்பதை உணர்ந்தோர், இப்படத்தில் சலிப்படைவர்.


அழகான ஹீரோ - ஹீரோயின், கலர்ஃபுல் லொகேஷன், நான்கு பஞ்சாபி தேசீ பீட்டுக்களுடன் பார்ட்டி பாடல்கள், சின்ன சின்ன காமெடி. வருத்திக்கொள்ளாத கதைக்களம். பக்கெட் பாப்கார்ன் காலியாகும் வரை படம் பார்க்க வேண்டும் என விழைவோர், இப்படத்தை தாராளமாக நாடலாம்.


இம்ரான் கானை தமிழனாகக் காட்டியும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' ஷாருக்கானை போல் தமிழ்க்கொலை செய்து பேசாமல் இருந்தது மனதிற்கு ஆறுதல்.



ஆறுதலுக்காகப் படம் போவேன் என்றால், உங்கள் இஷ்டம்... எனக்கென்ன கஷ்டம்!


thanx - the tamil hindu

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan


Tuesday, October 01, 2013

THE CONJURING (2013) -சினிமா விமர்சனம்

The Conjuring (2013) Poster 
தழுவாத கைகள் படத்துல  “ஒரு குடும்பத்தை  உருவாக்கச்சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித்தந்தார் எங்கப்பா”ன்னு ஒரு சூப்பர் ஹிட் பாட்டு வரும் ,அந்த பாட்டுக்குத்தக்கபடி ஹீரோவுக்கு 5  குழந்தைங்க , ஒரே ஒரு சம்சாரம் .இந்த  குடும்பம்  ஒரு   பெரிய வீட்டுக்கு புதுசா  குடி வர்றாங்க . இந்த இடத்துல தான் நாம ஒண்ணை நல்லா  கவனிக்கனும் , பெரும்பாலான பேய்ப்படத்துல  புதுசா   குடி போற வீட்ல தான் பிரச்சனையே வரும் .


புது  வீட்டுக்கு குடி போனதும்  குழந்தைங்க  எல்லாம்  ஹைடு அண்ட்  சீக் அதாவது கண்ணா மூச்சி விளையாட்டு  விளையாடுதுங்க . தம்பதிகள்  என்னமோ அப்போதான் மேரேஜ் ஆன மாதிரி  கில்மாவுக்கு பிட் போடறாங்க . புது வீட்ல அதுதான்  முதல் இரவாம் , அடேய் ;-)) 

எல்லாரும்  வீட்டுக்குள்ளே  இருக்கும்போது அவங்க  வீட்டு நாய் மட்டும் உள்ளே வர்லை . இதுக்கு என்ன காரணம்னா அந்தக்காலத்துல  இருந்தே  கிராமங்களில் நிலவி வரும் நம்பிக்கை என்னான்னா  நமக்கு நம்ம கண்ணுக்குத்தெரியாத  தீய சக்திகள்  உருவம்  நாய்  , பூனை மாதிரி   விலங்குகளுக்குத்தெரியும் , இயற்கைச்சீற்றங்கள் கூட மாடு , அணில் ( உண்மையான அணில் ) மாதிரி விலங்குகளுக்கு  முன் கூட்டியே உணர முடியுமாம் .



நாய் உள்ளே வர்லைன்னதுமே பார்ட்டி  உஷார் ஆகி இருக்கனும் . ஆனா  கூடவே சம்சாரம்  இருக்கறதால  ஹீரோவுக்கு   அது பத்தி ஏதும்  தோணலை , ஏன்னா  எப்பவும் ஆம்ப்ளைங்க தன் பக்கத்துல  சம்சாரம்  இருந்தா மூளைக்கு வேலை தர மாட்டாங்க 


வீட்டுக்குள்ளே ஒரு பாதாள அறை  இருக்கு . அதுல  ஏதோ மர்மம்  இருக்குன்னு  நினைக்கறாங்க . அப்போ  ஒரு பொம்மையை குழந்தை கண்டெடுக்குது , அது கிட்டே பேசுது . பார்த்த அம்மா வுக்கு திகில் . 

 இது வேலைக்கு ஆகாதுன்னு  பேய்களை விரட்டும் ஒரு தம்பதியை அழைச்சுட்டு வர்றாங்க . அந்த  ஜோடில  லேடிக்கு ஒரு உள்ளுணர்வு உண்டு . பின்னால நடப்பதை முன்னாலயே சம்பவமா பார்க்கும் சக்தி  ( அழகிய  தமிழ் மகன் ல இளைய தளபதிக்கு இருக்குமே ) அதன்  மூலமா   அவருக்கு  இந்த வீட்டில்  தீய சக்திகள் இருக்குன்னும் , சப்போஸ்  இவங்க  வீட்டை விட்டு வெளியேறுனாலும் அதுங்க இவங்களை விடாதுன்னும்   தெரிஞ்சுக்கறாங்க  .



இவங்க  எப்படி பேயை  விரட்னாங்க ?  அந்த பேய்களுக்கான ஃபிளாஸ் பேக் என்ன?  என்பதை வெண் திரையில் காண்க 


சும்மா  சொல்லக்கூடாது . கத்தியின்றி , ரத்தம் இன்றி  ஒரு நல்ல பேய்ப்படம் தான்  இது  . ( க்ளைமாக்ஸ் ல ஒரே ஒரு சீன்ல  ரத்தம் ) தியெட்டர்ல  ஆளாளுக்கு   சவுண்ட்  கொடுத்துட்டே  படம் பார்த்தது  செமயான அனுபவம் . ஏன்னா அமைதியா படம் பார்த்தா   டக்னு பயந்துக்குவோம்.. ஏஎய்  ஆய் ஊய்னு கத்திட்டே படம் பார்த்தா  கொஞ்சம்  தெம்பா  இருக்கும் 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. தகவல் தொடர்பு சாதனங்கள்  இருக்கே , ஏன் இந்த மாதிரி செய்யலாமே? அப்படி செஞ்சிருக்கலாமே ? அப்டினு ஆளாளுக்கு லாஜிக்  கொஸ்டின் கேட்கக்கூடாதுன்னு  கதை நடக்கும் கால கட்டம் 1971 என ஆரம்பத்திலேயே டைட்டிலில் போட்டு விட்ட புத்திசாலித்தனம் . 
2.  லொக்கேஷன்  செலக்‌ஷன்  பிரமாதம் . தனிமையான  கிராமம் , தனி  வீடு ( பங்களா ) , பக்கத்த்ல ஒரு ஆறு  , அதுல  கரை  ஓரம்  ஒரு மரம்  அந்த மரத்தில்   ஒரு உருவம் தூக்கில்  தொங்கும் காட்சி அந்த போஸ்டர் டிசைன் அட்டகாசம் .


3  அந்த  குழந்தைங்க  நடிப்பு  பிரமாதம் , எல்லாமே கண்ணுக்கு அழகு செல்லங்கள் . இதுல ஒரு தொழில் ரகசியம் என்னான்னா  இந்த மாதிரி கதைல  குழந்தைங்க கேரக்டர்  இருந்தா  குடும்ப ஆடியன்சை தியேட்டருக்கு இழுத்துட்டு வர்ரது  ஈசி 


4. இது  ஃபாரீனில் நடந்த உண்மைச்சம்பவம் என்பதால்  திரைக்கதையில்  ஒரு  நம்பகத்த்ன்மை  இயல்பாகவே அமைஞ்சிடுச்சு   படமாக்கம் , எடிட்டிங்க் , ஒளிப்பதிவு  என  டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாமே  எபவ் ஆவரேஜ் 



5  ஜேம்ஸ் வான்  இயக்கிய   இன்சீடியஸ் , எக்சார்சிசம் , போல்டர் கோஸ்ட் படங்களின் கலவையான உல்டா தான்  என்பது  எளிதில்  தெரிஒயாத வண்ணம்  காட்சிகளை வேகமாக நகர்த்தியது படத்துக்கு பலம் 


6  ஒரு பேய்ப்படத்துக்கு  பின்னணி இசை எவ்வளவு  முக்கியம்  என்பதை உணர்ந்து  தேவையான இடத்தில் அமைதி  , அலறல்  , திடீர் சத்தம் என பார்த்து பார்த்து படம் ஆக்கிய விதம் 





 இயக்குநரிடம்  சில கேள்விகள்



1.   பொதுவா  பேய் குழந்தைங்க கிட்டே தன் வீரத்தைக்காட்டாது  இந்தப்படத்துல வர்ற  பேய்  ஒரு கையாலாகாத பேய் போல  , குழந்தைங்க  கிட்டேப்போய் தன் வீரத்தைக்காட்டுது ஆசாராம் பாபு மாதிரி  ஆள் போல 


2  என்ன தான்  லோ  பட்ஜெட்  படமா  இருந்தாலும்  படத்தில் வரும்  2 ஹீரோயின்களை   குறைந்த பட்சம்  சுமார்  ஃபிகர்களாகத்தேர்வு செய்ய வேணாமா? 2  ஃபிகர்களும் அட்டு  ஃபிகர்களே ! 


3  பேய்  வரும்பொது  கெட்ட வாடை வரும்னு  அந்த லேடி சொல்லுதே ,. ஏன்? பேய்  குளிக்காதா?  செண்ட் போடாதா? அட்லீஸ்ட் மல்லிகைப்பூ கூட வைக்காதா? 


4  பொதுவா பேய்ங்க மேக்கப் போடாது , ஆனா இதுல வர்ற பேய்  ஃபேரன் லவ்லி அரைக்கிலோவை எடுத்து முகத்துல சுண்ணாம்பு மாதிரி தடவிட்டு வருதே ஏன் ? 


5  அந்த பேய்  ஓட்டும் லேடி   ஏதோ  ஒரு க்ண்ணாடியில் அதை சுத்த விட்டு பார்க்கும்போது கண்ணாடியில்  தெரியும் பேய்  திரும்பிப்பார்த்தா   தெரிய்றதில்லை .கண்ணாடி பின்னாடி நிக்கும் பேய் ஏன் அப்டி எஸ் ஆகுது ? 


6  பேரா நார்மல் இன்வெஸ்டிகேட்டர்ஸா வரும் அந்த தம்பதிகள் ல புருஷன் டம்மி மாதிரி  இருக்கான் , பொண்டாட்டி தான் மெயினா எல்லா வேலையும் செய்யுது ஃபாரீன்லயும் புருஷங்க டம்மிதானா? 


7. அந்த  பொம்மையை வெச்சு பயமுறுத்த நினைத்த காட்சிகள் எடுபடலை




மனம்  கவர்ந்த வசனங்கள்


1.தனக்கு ஏதாவது ஆகிடுமோங்கற பயம் தான் மனிதனை ஆட்டுவிக்குது #



2 மனைவி - நீங்க இப்போ டயர்டா இருக்கீங்களா? 



க்ணவன் - எவன் சொன்னான்? இதுக்கெல்லாம் யாராவது டயர்ட் ஆவாங்களா?


சி பி கமெண்ட் - எல்லாரும் ஃபேமிலியோட  பார்க்கும் தரத்தில் படம் இருக்கு . எப்போ போனாலும்  நைட்  ஷோ போங்க . பகல் ல போனா அடிக்கடி கேட் நீக்கி  வெளிச்சம் உள்ளே வந்து கடுப்பேத்துவாங்க 

 ரேட்டிங்க் - 3.25 / 5 


டிஸ்கி - புதுக்கோட்டை விஜய் தியேட்டரில் ட்விட்டர் நண்பர் உடன் THE CONJURING ஸெகண்ட் ஷோ @ 10 pm (28 9 13 )

 தியேட்டரைப்பத்தி சொல்லியே ஆகனும் , டிக்கெட் ரேட் 100 ரூபாய்க்கு ஒர்த்தான் , தியேட்டர் மெயிண்ட்டெனன்ஸ் அருமை . ஏ சி படம் பூரா போட்டாங்க. ஈரோட்ல எல்லாம் பிச்சைக்காரத்தனமா படம் போட்ட 20 நிமிஷத்துல ஆஃப் பண்ணிடுவாங்க , அப்புறம் படம் விடும் நேரத்துக்கு 10  நிமிஷம்  முன்னால ஏ சி ஆன் பண்ணுவாங்க . அந்த மாதிரி பித்தலாட்டம் ஏதும் புதுக்கோட்டைல இல்லை . செகண்ட் ஷோ என்றாலும்  பலர்  ஃபேமிலியோட  வந்தது ஆச்சரியம் . அவங்க கத்துன கத்தல்கள்   படத்தை  விட சுவராஸ்யம் . இந்த மாதிரி  திகில் , பேய்ப்படங்களை  தியேட்டர்ல தான்  பார்க்கனும் 


Saturday, July 20, 2013

WHITE HOUSE DOWN -சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு முன்னாள் மிலிட்ரி மேன் . அவருக்கு ஒரு  பொண்ணு. அவர் கிட்டே கோவிச்சுக்கிட்டு  மூஞ்சியை இழுத்துட்டு இருக்கு . அவளை தாஜா பண்ண அமெரிக்க அதிபர் இருக்கும் வெள்ளை மாளிகையை சுத்திக்காட்ட  கூட்டிட்டு வர்றார்.. அப்போதான் வில்லன் க்ரூப் மாளிகையை அட்டாக் பண்ண  திடீர்னு ரவுண்ட் அப் பண்ணிடறாங்க .

அமெரிக்க அதிபர்னா சும்மாவா? ஏகப்பட்ட செக்யூரிட்டி இருக்குமே? ஆனா பாருங்க எல்லா ஊர்லயும் கூடவே இருந்து குழி பறிக்கும் ஒரு நாஞ்சில் சம்பத் இருப்பாங்க போல . ஒரு எட்டப்பன். அவன் தான் அதிபரின் பாதுகாப்புப்படைத்தலைவன் .அவனுக்கு ஒருஃபிளாஸ்பேக் கோபம் இருக்கு 


 அதாவது அவனோட பையன் மிலிட்ரில இருந்தப்ப ஒரு பிரச்சனையால அவனை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அதுக்கு பழிவாங்க அதிபரைபோட்டுத்தள்ள பிளான். 


மாளிகைல  டமால்னு ஒரு பாம் போட்டுடறாங்க . ஒரே களேபரம் .  இந்த  பரபரப்பான சூழல்ல ஹீரோவும் , அவர் மகளும்   வெவ்வேற இடத்துலமாட்டிக்கறாங்க 



 புலிக்குப்பிறந்ததுகுட்டிப்புலியாத்தானேஇருக்கும்? ( நன்றி - எம் சசிக்குமார் ) அந்த பாப்பா தன் கிட்டே இருக்கும் கேமரா மொபைல்ல  தீவிரவாதிங்க பேசிட்டு இருப்பதை  வீடியோ எடுத்து டக்னு  மீடியாவுல பரப்பிடுது 


 அதை வில்லன் குரூப்  பார்த்து செமகாண்ட் ஆகிடறாங்க /. அப்பவே அவளை போட்டுத்தள்ளிட்டா மேட்டர் ஓவர், ஆனா படம் சீக்கிரமாமுடிஞ்சுடும் . அதனால அவளை பணயக்கைதியா பிடிச்சு வெச்சுக்கிட்டு     அலப்பறை பண்றாரு வில்லன் . 


ஹீரோ அமெரிக்க  அதிபரை எப்படி காப்பாத்தறார்? என்பதே மிச்ச மீதி பர பர திரைக்கதை 


 ஒண்ணும் இல்ல , கேப்டன் விஜய்காந்த் நடிச்ச ஏவி எம்மின் மாநகரக்காவல், OLYMPUS HAS FALLEN இந்த 2 படங்களோட உல்டா தான்  படம் . ஆனாலும் பார்க்கலாம் . விறுவிறுப்பா இருக்கு 


ஹீரோ ஆல்ரெடி வெள்ளை மாளிகையில் பணிஆற்றியவர்தான்  என்பதைக்காட்டஒரு ஃபிளாஸ் பேக் வெச்சிருக்கலாம்


ஹீரோ ஜான் கேல் . இவர் கமல் , சரத்குமார், அர்ஜூன் மாதிரி டபக் டபக்னு சட்டையை கழட்டிடறார். அதுல என்ன தொழில் ரகசியம்னா எக்சசைஸ் பாடி மெயிண்ட்டெயின் பண்றவங்க தங்கள் உடல் அழகை காட்ட , ரசிகைகளை மயக்க , தக்க வெச்சுக்க அடிக்கடி சட்டையை கழட்டிடுவாங்க ( நல்ல வேளை )


 ஆள் அம்சமாஇருக்கார். மகளிடம் சமாதானம் பேசுவது , அதிபரிடம் மரியாதையா நடப்பது, வில்லனிடம் எகத்தாளமா பேசுவது   என கேப் கிடைக்குமிடம் எல்லாம் கிதார் வாசிக்கறார் (   கிடா வெட்றார்னுதான் சொல்லனும், ஆனா நான் சைவம் ஆச்சே? ) 


அவரோட மகளா வரும் பொண்ணுசெம சுட்டி . அப்பாவிடம் வாதம் பண்ணும்போதும்  , வீடியோ எடுக்கும்போதும் ரசிக்கவைக்கிறாள் 

 ஜான் கேல் கதாபாத்திரத்தில் சார்மிங் டாட்ரூம், அவனுடைய மகள் எமிலியாக ஜோகிங்கும், அமெரிக்க அதிபராக ஜாமி ஃபாக்ஸýம் நடித்துள்ளனர். 


அதிபரா வரும்   .  ஜாமி வசனங்களில் நக்கல் ஆங்காங்கே காப்பாற்றிவிடுது


"தி இன்டிபெண்டன்ஸ் டே', "டே ஆஃப்டர் டுமாரோ', "காட்ஸில்லா', "பேட்ரியாட்' போன்ற படங்களின் இயக்குநர்  ரோலண்ட் எமெரிக் தான் இந்தப்பட இயக்குநர் .


இப்படத்திற்காக வெள்ளை மாளிகையை செயற்கையான உருவாக்கினார் ஆர்ட் டைரக்டர் கிரிக்எம். பெர்ருஸிலி. சண்டை காட்சிகளை வடிவமைத்திருப்பவர் ஜான் ஸ்டோன்ஹம் ஜூனியர். ஒளிப்பதிவு ஜேஃபாரஸ்டர்




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  



1. படம் ஆரம்பிச்சு 10 நிமிஷத்துல டேக் ஆஃப் ஆகுது , அதுக்குப்பின்  ஒன்ற்ரை மணி நேரம் போர் அடிக்காம திரைக்கதை சுவராஸ்யமான சம்பவங்களால் விறுவிறுப்பா அமைச்சது
2.  அப்பா  மகள் செண்ட்டிமெண்ட்   ஓவரா ஃபீல் பண்ணவைக்காம  நாசூக்கா போற போக்குல சொன்னது 


3. படம் ஃபுல்லா ஒரே பில்டிங்க்ல நடந்தாலும் சலிப்பு ஏற்படா வண்ணம் கேமராவை வித வித லொக்கேஷன்ல   வெச்சது 


4.   ஹீரோ  வில்லன் ஆக்‌ஷன் காட்சிகள் , சேசிங்க் சீன்கள் பர பரப்பு 






 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வில்லன்  குரூப் செக்யூரிட்டிகள் இருக்கும் ரூம் கதவை தட்டறாங்க . பிரச்சனையான அந்தசூழல்ல  சாவித்துவாரம் வழியா யார் வந்திருக்காங்க?ன்னு பார்க்காம யாராவதுகதவைத்திறப்பாங்களா? 
2. ஹீரோ தன் மக செல்லுக்கு  ஃபோன் பண்ணும்போது செல் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அவர்  ஏன் மகளுக்கு அபாயத்தை   எஸ் எம் எஸ் பண்ணலை? அதே போல் மகள்கூட அப்பாவுக்கு தன் நிலை என்ன:? என்பதை எஸ் எம் எஸ்  பண்ணலாமே? பேசுனாத்தான் சத்தம் காட்டிக்குடுத்துடும் , எஸ் எம் எஸ் பண்ணா என்ன? சைலண்ட் மோடுல  வெச்சு பண்ணலாமே? 



3. அதிபரின் அத்தனை செக்யூரிட்டிஆட்களும்  அதிபருக்கு எதிராகத்திரும்ப  ஹீரோ ஒரே ஒரு ஆளா தனியா நின்னு எல்லாரையும் சமாளிக்கறது காதில் பூக்கூடை 



 மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஒரு நல்ல அப்பாவா நடந்துக்க முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன். எல்லா ஆண்களும் இப்படித்தான் சொல்றாங்க, ஆனா செயல்ல காட்றது இல்லை 



2. பொம்பளைங்க சீக்கிரமா முடிவு எடுக்கறதை உங்க வாழ்க்கைல எப்பவாவது பார்த்திருக்கீங்களா?


3.  எங்கப்பா ரொம்ப டேலண்ட்டான ஆள்


இதைச்சொல்ல என் கிட்டே லஞ்சம் வாங்கிக்கிட்டா 


4. மிஸ்டர் பிரசிடெண்ட் , எப்படி இருக்கீங்க? 

 இன்னும் உயிரோட தான் இருக்கேன் 


5. சின்ன வயசுல பொண்ணுங்க  தன் அப்பா மேல அபரிதமான அன்பு வெச்சிருப்பாங்க, நாளாக நாளாக அது குறைஞ்சுடும்

 




சி பி கமெண்ட்  -  படம் போர் அடிக்காம போகுது . பார்க்கலாம் ,. ஆக்‌ஷன் பட விரும்பிகள்  எல்லாரும் பார்க்கலாம், பெண்களும் பார்க்கும் விதத்தில் மிக கண்ணியமான படமாக்கம் 


ரேட்டிங்க்  -    3.5  /5 

ஈரோடு வி எஸ் பி  ல படம் பார்த்தேன்

Thursday, July 18, 2013

LOOTERA - சினிமா விமர்சனம்

 
 
 தினமலர் விமர்சனம்

சிறுகதை மன்னன் ஓ ஹென்றியின் ‘கடைசி இலை’ சிறுகதையை தழுவிய காதல்காவியம். ஐம்பொன் சிலையை களவாட வந்தவனிடம், அழகுப்பெண் ஒருத்தி காதலில் வீழ்வதும், கடைசியில்... பட்ட மரத்தின், ஒற்றை இலையாக அவள் தனியே தவிப்பதும்தான் கதை.

பாஜ்பாய் (ஆரிப் ஜாகாரியா) பலே கடத்தல்காரன். அவனுடைய குறி எல்லாம் பழங்கால சிலைகள். ஜமீன்தார் சவுமித்ர ராய் சவுத்ரியின் (பருன் சந்தா) குலக்கோயில் சிலையை திருட அனுப்பப்படுகிறான் வருண் ஸ்ரீவத்சவ் (ரன்வீர் சிங்). மூச்சுத்திணறல் நோயால் அவதிப்படும் ஜமீன்தாரின் ஒரே மகள் சவுதாமினி பக்கி ராய் சவுத்ரி (சோனாக்ஷி சின்கா), வருணால் காப்பாற்றப்படுகிறாள். காதல் அங்கே பற்றிக் கொள்கிறது.
 
 
 வருண் தன் குறிக்கோளில் ஜெயிக்கிறான். அந்த நேரத்தில் ஜமீன்தாரின் சொத்து அரசு வசமாகிறது. துயரம் தாளாமல் கடவுளோடு ஐக்கியமாகிறார் ஜமீன்தார். ‘தன் காதலை களவுக்குப் பயன்படுத்திக் கொண்டானே தன் காதலன்’ என்கிற சோகத்தோடு... எல்லாம் அற்றுப்போய், ஒற்றை இலையாக, உயிரைப் பற்றிக்கொண்டிருக்கும் பக்கி ராயின் வாழ்வில், மீண்டும் வசந்தம் வீசியதா? என்பது, இன்னும் கொஞ்ச காலத்துக்கு மறக்க முடியாத ‘ஸ்வீட்’ க்ளைமாக்ஸ்.
 
 


ஐம்பதுகளின் ரம்மியத்தை, அழகு குலையாமல் டிஜிட்டலில் எடுத்து, தங்கத் தட்டில் பரிமாறி இருக்கிறார் இயக்குனர் விக்கிரமாதித்யா மோட்வானே. வட இந்தியாவின் ஆங்கிலேய கால சூழலை, அச்சு பிசகாமல் அள்ளி வந்திருக்கிறது மகேந்திர ஷெட்டியின் கேமரா! சென்ற நூற்றாண்டை நினைவில் கொண்டுவரும், இனிமையான பாடல்களை தந்திருக்கிறது அமித் திரிவேதியின் இசை. ரன்வீர் சிங்கும், சோனாக்ஷி சின்ஹாவும் பாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். இன்றைய திரைச் சூழலுக்கு 142 நிமிடங்கள் என்பது கொஞ்சம் நீளம்தான்! ஆனால்... நல்ல ஓவியமோ, சிற்பமோ, நாள் கணக்கு வைத்தா உருவாக்கப்படுகிறது?

மொத்தத்தில் ‘லூட்டேரா’ - உயிர் பருகும் காதல்

ரசிகன் குரல்: ஏன் பங்காளி... 60 வருஷத்துக்கு முன்னாடி லவ்வர்ஸ் கிஸ் பண்ணிக்க மாட்டாங்களோ?
 
 
 
 
  • நடிகர் : ரன்வீர் சிங்
  • நடிகை : சோனாக்ஷி சின்ஹா
  • இயக்குனர் :விக்கிரமாதித்யா மோத்வானே
 
 
A
 
 
 
 
 
 

Sunday, July 07, 2013

துள்ளி விளையாடு - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்


‘பிரியமுடன்’, ‘ஜித்தன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கும் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க வெளிவந்திருக்கும் படம்தான் ‘துள்ளி விளையாடு’.


கதைப்படி, அறிமுகநாயகர் யுவராஜுக்கு பெரிய தொழில் அதிபர் ஆகவேண்டும், அவரது நண்பர்களான ‘பரோட்டா’ சூரிக்கு பிரபல அரசியல்வாதி ஆகவேண்டும். சென்ட்ராயனுக்கு பெரும் நடிகர் ஆக வேண்டும் என்பது தான் லட்சியம், ஆசை, கனவு, குறிக்கோள் இப்படி எல்லாம்! ஆனால் வெட்டி ஆபிஸர்களான மூவராலும் அவர்கள் நினைத்ததை எல்லாம் எப்படி அடையமுடியும்?! முடியவில்லை...


 ஆனால் அதற்கும் குறுக்கு வழியில் ஒரு யோகம், ஒரு நல்ல நேரம் வருகிறது! அதாகப்பட்டது, லோக்கல் அரசியல்பிரபலம் ஜெயப்பிரகாஷ், தேர்தலில் ஜெயிப்பதற்காக தன் வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் 20 கோடியை தன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ‌ரெய்டு ‌வரஇருப்பது தெரிந்ததும், ஒரு வாடகை காரை எடுத்து அதில் மொத்த பணத்தையும் பதுக்கி, அதற்கு நம் அறிமுக நாயகர் யுவராஜை டிரைவராக்கி ஊர் ஊராக சுற்ற விடுகிறார். 




அதை மோப்பம் பிடிக்கும் காமெடி வில்லன் பிரகாஷ்ராஜ் கோஷ்டி, ஹீரோ யுவராஜை இரண்டு தட்டு தட்டி விட்டு யாருடைய பணம் எனத் தெரியாமலே ஜெபியின் பணத்தை கொள்ளை அடிக்கிறது. அந்தப் பணத்தை ஜெயப்பிரகாஷுக்கே தேர்தல் நிதியாக கொடுக்க முனையும்போது அது ஜெபியின் பணம் எனத் தெரியவருவதுடன் ஜெபி காரில் கொடுத்துவிட்டது 20 கோடி தன் ஆட்கள் கொள்ளை அடித்தது வெறும் 2 கோடி என்பதும் மீது 18 கோடியை ஆக்டிங் டிரைவர் யுவராஜ் அடித்து போய்விட்டதும் பிரகாஷ்ராஜுக்கு தெரிய வருகிறது! 



இதை ஜெபி எனும் ஜெயப்பிரகாஜ் நம்ப மறுக்கிறார். பிரகாஷ்ராஜ் அன்ட் கோவினர் யுவராஜை தேடிகின்றனர். யுவராஜ் தன் நண்பர்கள் சூரி, சென்ட்ரயனுடன் ராஜஸ்தானுக்கு எஸ்கேப் ஆகிறார். அங்கு கதாநாயகி தீப்தியை சந்திக்கும் யுவராஜ். காதலில் விழுகிறார். யுவராஜ் அண்ட் கோவினரின் லவ்வும் லட்சியமும் நிறைவேறியதா?! பிரகாஷ்ராஜ் - ஜெ.பி.கோஷ்டியிடம் சிக்கி பியூஸ் போனார்களா?!  என்பது ‘துள்ளி விளையாடு’ படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை!

யுவராஜ் கிராமத்தானாக ஓ.கே., கேடி, கில்லாடியாக இன்னும் நிறைய படிக்கணும் பாஸ்! அறிமுக நாயகி தீப்தி - திருப்தி என்றாலும் படம் முழுக்க இல்லாததும், அவர் பண்ணும் பம்மாத்து லவ்வும் குறை!


‘பரோட்டா’ சூரி, ‘பொல்லாதவன்’ சென்ட்ராயன், ஜெயப்பிரகாஷ் என ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தும் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் காமெடி வில்லன் பிரகாஷ்ராஜ். எந்த சூழலிலும் அவர் இந்திப் பாடல்களை ரசிக்கும் விதமும், ப்ளாஷ் பேக் காதலில் லயிக்கும் விதமும் செம காமெடி!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, எஸ்.கே. பூபதியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்திலும் இருந்திருந்ததென்றால் "துள்ளி விளையாடு" துவண்டு விழுந்திருக்காது!

ஆக மொத்தத்தில் ‘துள்ளி விளையாடு’ வித்தியாசமான கதையில் "துள்ளி விளையாடி" விபரீதமான வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகளில் "துவண்டு விழுந்திருக்கிறது!"


  • நடிகர் : யுவராஜ்
  • நடிகை : தீப்தி
  • இயக்குனர் :வின்சென்ட் செல்வா
 a

thanx - dinamalar

Wednesday, July 03, 2013

ENEMMY - சினிமா விமர்சனம்

 

தலையைச் சுற்றி மூக்கை தொடும் கதை. புரிந்து கொள்வதற்குள் ‘போதும் ‌போதும்’ என்றாகி விடுகிறது. நேர்கோட்டில் சொல்லப்பட்டிருந்தால், ஒரு மணி நேரத்தை தாண்டியிருக்காது இந்த 140 நிமிட படம்.

ஆர்.ஜி.என்கிற ராம் கோவர்தன் (அக்ஷய் கபூர்) ஒரு கட்சித் தலைவர். கட்சியின் பணம் ஐநூறு கோடியை, மும்பைக்கு கொண்டுவரும் பொறுப்பு முக்தரிடம் (ஜாகிர் உசேன்) ஒப்படைக்கப்படுகிறது. வழியில்... நான்கு முகமூடி கில்லாடிகள் அதை களவாடி விடுகிறார்கள். களவாடியது, போட்டி தாதா கும்பல் என சந்தேகப்படுகிறான் முக்தர்.



 வெடிக்கிறது இரு தரப்பிற்கும் துப்பாக்கி சண்டை. ‘கேங் வார்’ என சொல்லப்படும் படுகொலைகளை தடுக்க ஏவப்படுகிறார்கள் ‘யூனிட் 9’ காவல் அதிகாரிகள். ஏக்லவ்யா கர்மார்கர் (சுனில் ஷெட்டி), நசீம் ஷேக் (கே கே மேனன்), எரிக் கொலாக்கோ (ஜானி லீவர்), மாதவ் சின்கா (மகாக்‌ஷே சக்ரவர்த்தி) என்னும் அந்த நான்கு பேரும், அதிரடியாக நுழைந்து ரவுடிகளை பந்தாடி, முக்தரை கைதுசெய்து சிறையில் அடைக்கிறார்கள். 



பணம் போன இடம் தெரியாமல், சிபிஐ அதிகாரி யுகந்தர் ஷர்மாவை (மிதுன் சக்ரவர்த்தி), கோவர்தன் வரவழைக்கிறார். தடயங்களை வைத்து, ‘யூனிட் 9’ஐ நெருங்குகிறார் யுகந்தர். விரிகிறது க்ளைமாக்ஸ். வலிக்கிறது நம் மனது!

கே.கே.மேனன், ‘உதயம்’ படத்தில் அசத்திய அதே போலீஸ் வேடம். பின்னுகிறார்! சுனில் ஷெட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிரடி அவதாரம் எடுத்திருக்கிறார். மகாக்ஷேவுக்கு, நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பாராட்டுக்கள். மிதுன் சக்ரவர்த்தி, புத்திசாலி போலீசாகக் காட்டிக்கொள்ள முயற்சிகள் எடுத்திருக்கிறார். பாவம்... முயற்சி எதுவும் பலிக்கவில்லை!

‘இன்றைய சினிமா ரசிகர்கள் புத்திசாலிகள்’ என்பதை நினைவில் கொண்டு, இயக்குனர் அஷு டிரிக்கா அடுத்த படம் இயக்கினால் நல்லது!


ரசிகன் குரல்: முமைத்கான் ‘டான்ஸ்’ மட்டும் இல்லாம இருந்திருந்தா, செத்திருப்பேன் மச்சான்!

மொத்தத்தில்  சொதப்பல்

  • நடிகர் : மிதுன் சக்ரவர்த்தி, சுனில் ஷெட்டி
  • நடிகை : ..ப்ரியங்கா உபேந்திரா
  • இயக்குனர் :அஷு டிரிக்கா



நன்றி - தினமலர்

Wednesday, June 05, 2013

iddarammayilatho - சினிமா விமர்சனம் ( தினமலர்)



தினமலர் விமர்சனம்


தெலுங்கில் போக்கிரி, பிஸினஸ்மேன் படங்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனும், தேசமுத்ரு படத்திற்குப் பிறகு இணைந்துள்ள படம் தான் "இத்தரம்மாயிலதோ". 

கனிம ஊழலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அபேஸ் செய்யப்பட்ட அடிநாதத்துடன் கதை துவங்குகிறது. சென்ட்ரல் மினிஸ்டரின் மகள் அகான்ஷாவான காத்ரின் தெரஸா சைக்காலஜியில் முதுகலை படிப்பதற்காக ஐரோப்பா செல்கிறார்.  ஐரோப்பாவில் தங்கச் செல்லும் வீட்டில் அமலாபாலின் டைரி இவர் கையில் கிடைக்கிறது. 
டைரியை படிக்கும் காத்ரின், அமலாபாலுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையே இருக்கும் காதலை படித்து தெரிந்து கொள்கிறார்.  டைரியில் வைக்கப்பட்டுள்ள போட்டோவை வைத்து சன்ஜு ரெட்டியாகிய அல்லு அர்ஜுனை அடையாளம் காண்கிறார். அல்லு அர்ஜுனுக்கு அமலாபாலுடன் திருமணம் நிச்சயமான செய்தி வரை டைரியில் எழுதப்பட்டிருந்தது.. இதன் பிறகு இவ்விருவருக்கும் திருமணம் ஆனதா ?? ஆகவில்லையா ?? என்ற கேள்விக்கு விடையறிய அல்லு அர்ஜுனை நாடுகிறார். 


பறவைகளை தன் வீடியோ கேமராவில் அமலாபால் பதிவு செய்ய, வில்லன் செய்த ஒரு கொலையும் எதேச்சையாக அதில் பதிவாகிறது. இதனால் வில்லன்களால் அமலா பால் கொல்லப்படுகிறார். நிச்சயம் செய்யப்பட்டுள்ள காத்ரின், அல்லு அர்ஜுனின் சோகக் கதையை கேட்டு அனுதாபம் கொண்டு பின்பு காதலிலும் விழுகிறார். இறுதியில் இறந்ததாக எண்ணப்பட்ட அமலாபால் உயிருடன் வர க்ளைமாக்ஸில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள்.

கலர் கலராக காஸ்ட்யூம்கள், மாசு கிளப்பும் கார்கள், நீண்ட தாடியும் நீள முடியும் வைத்த வில்லன்கள் என்ற மாஸ் படத்திற்கு அமைத்திருந்த டெம்பிளேட்டிலிருந்து விலகி, மிக ஸ்டைலிஷாக அமைக்கப்பட்டிருந்த விதம் முதல் ஹைலைட். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணியும் பாடல்களும் இனிமையான பதிவு, குறிப்பாக வெஸ்டர்னும் கர்நாடக சங்கீதமும் சேர்ந்த சங்கராபரணம் பாடல்.
 ‘ஒன் ஒன் பாடலிலும், டாப் லேச்சு போயாலி பாடலிலும் அல்லு அர்ஜுனின் நடனம் டாப் டக்கர். இன்டர்வல் பிளாக்கிற்கு முன் வருகின்ற சண்டைக் காட்சி இந்தியன் சினிமாவில் படமாக்கப்பட்ட மிகச்சிறந்த சண்டைக்காட்சிகளில் ஒன்று எனக் கூறினால் அது மிகையல்ல. ‘ பிடில் பிரம்மாவாக ‘ பிரம்மானந்தம் காமெடியில் அசத்துகிறார். 

அல்லு அர்ஜுனின் அசத்தலான நடனமும் கண்ணாலேயே கொலை செய்ய கணக்குபோடும் வன்ம விழிகளும் இவரது கதாபாத்திரத்திற்கான தோரணையை சேர்க்கிறது. இவருடன் ஆடும் போது அமலா பால் சாதாரணமாகத் தான் தெரிகிறார். ஒன்றுக்கு இரண்டாக காத்ரின் அமலாபால் என இரு நாயகிகள். அமலாபாலை விட காத்ரின் தான் மனதில் பதிகிறார் நடிப்பிலல்ல கிளாமரில்.


மாடர்ன் உலகத்தில் ஸ்கைப் காலிலே நிச்சயதார்த்தம் செய்து கொள்வது, கிட்டாரை பெண்ணின் உடலாக வர்ணிக்கும் காட்சிகளில் பூரி ஜகன்நாத் ரசிக்க வைக்கிறார். இன்டர்வல் வரை காதல் காமெடி என அழகாக பயணம் செய்யும் படம், இடைவேளைக்குப் பிறகு வழக்கமான பழிவாங்கும் பாதையில் வியக்கத் தக்க அம்சங்கள் ஏதுமின்றி , நாம் எதிர்பார்த்தவாறே பயணிப்பது ஸ்வாரஸ்யத்தைக் குறைத்து, கடைசியில் இதுவும் வழக்கமானதெலுங்கு படம்தான் என்று தோன்ற வைத்துள்ளது.


மொத்தத்தில், "இத்தரம்மாயிலதோ" பழைய காலத்து பழிவாங்கும் கதை தான், வழக்கமான தெலுங்கு சினிமாதான். ஆனால் அதை ஸ்டைல் அம்சங்களுடன் வழங்கியுள்ள   விதம் தான் புதுமை.    
நன்றி - தினமலர்
 a





Thursday, May 30, 2013

dandupalya - சினிமா விமர்சனம் 36 +

 

எச்சரிக்கை - இதய பலஹீனம் உள்ளவர்கள்  , கர்ப்பமா - இருக்கும் பெண்கள் , இல்லாத பெண்கள் , 20 வயதுக்கு உட்பட்டவர்கள் , மனோ பலம் இல்லாதவர்கள் , குழப்பமான மன நிலையில் உள்ளவர்கள் , தனிமையில் வாழ்பவர்கள் , வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் , சமூகத்தின் மீது கோபம் உள்ளவர்கள் , நிலையான மனமோ, சொந்தமாக முடிவு எடுக்கும் திறனோ இல்லாதவர்கள் , மாணவ ,மாணவிகள்   யாரும் இந்தப்படத்தைப்பார்க்கவோ , பட விமர்சனத்தைப்படிக்கவோ வேண்டாம் என பொது நலன் கருதி  கேட்டுக்கொள்கிறேன்.

 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு  எந்த அளவுக்கு வல்கரா படம் பண்ண முடியுமோ அந்த அளவு வன்முறையைத்தூண்டும் வகையில் வக்ரமாக படம் எடுத்திருக்காங்க . 



கன்னடத்தில் இது ஆல்ரெடி தண்டுபாள்யா என்ற பெயரில் ரிலிஸ் ஆகி பெரும் சர்ச்சையைக்கிளப்பிய படம் 



பியூட்டி பெண்களூர் என வர்ணிக்கப்படும் பெங்களூரில் தண்டுபாளையம்னு ஒரு  ஊரு. அப்பகுதியில் 91 கற்பழிப்புகள், 106 கொலைகள், 203 கொள்ளைகள் நடந்துள்ளன. இவ்வளவு அக்கிரமங்களை செய்தவர்களை போலீஸார் எப்படி அடக்கினார்கள் என்பதே இந்தப்படத்தின் கதை.

 



பூஜாகாந்தி கன்னடத்தில் மேலாடை இல்லாமல் நடித்த படம் என்ற விளம்பரத்தோடு  தமிழில் ‘கரிமேடு’ என்ற பெயரில் டப்பிங்  படமா ரிலீஸ் ஆகி இருக்கு


பல தரப்பட்ட வயசு உள்ள 8 ஆம்பளைங்க , ஒரு கொடூர லேடி இவங்க முதல்ல ஏரியாவை நோட்டம் போடறாங்க. வீட்ல தனியா லேடீஸ் இருந்தா அந்த வீட்ல போய் முதல்ல இந்த கொடூர லேடி “ குடிக்க தண்ணி குடுங்க” அப்டினு கேட்கும். அவங்க உள்ளே போன கேப் ல கூட்டாளிங்க உள்ளே  வந்து  கொள்ளை அடிச்சுட்டு , அந்த பொண்ணை கொலை பண்ணிட்டு, அதுக்குப்பிறகு  ரேப் பண்ணிட்டு ( ஆர்டர் மாறி இருக்கேன்னு குழப்பம் வேணாம். அப்படித்தான் பண்றாங்க )  எஸ் ஆகிடறாங்க .


 இப்படிப்பட்ட கொடூரமான கும்பலை போலீஸ் எப்படி பிடிக்குது  என்பதே மிச்ச மீதி கொடூரக்கதை .


படத்தின் ஹீரோ , ஹீரோயின் , வில்லி எல்லாமே  பூஜாகாந்தி தான் செம நடிப்பு . அவர் தம் அடிக்கும் ஸ்டைலும் , அசால்டா கொலையை நேரில் கிட்டக்கா பார்ப்பதும் முதுகுத்தண்டு சில்லிட வைக்கும் நடிப்பு .

தலை பூரா விரிச்சு போட்டு  முகத்தில் கொடூரமும் , கண்களில் அசால்ட்த்தனமும் காட்டி நடித்த அந்த மெயின் வில்லன் நடிப்பு  செம. மற்ற கேடிகளின்  சவத்தனமான முகமே பொதுமானதாக இருக்கிறது .. பின்னணி இசை ஒரே இரைச்சல். திகில் ஊட்ட வேண்டிய இடங்களில் மட்டும் அதிரடி இசை கொடுத்தால் போதாதா? என நினைக்க வைக்கிறது

 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஓப்பனிங்க் சீனிலேயே நேரடியாக கதைக்கு வந்து விட்ட  லாவகம்.நகரங்களில் வாழும் மக்கள் , தனியாக வசிக்கும் பெண்கள் எப்படி அலர்ட்டா இருக்கனும்? என கற்றுக்கொடுக்கும் பாங்கில்  அமைக்கப்பட்ட திரைக்கதை



2. தற்கொலை செய்யப்பட்டதாக நம்ப வைக்கும் ஒரு கணவனின் நாடகத்தை அம்பலப்படுத்தும் இன்ஸ்பெக்டரின் லாவகம் சபாஷ் .  தூக்கு போட்டு தற்கொலை செஞ்சா கை விரல்கள்  விரைப்பா இருக்கும் , இப்படி மூடிய வாக்கில் இருக்காது , கயிற்றின் முடிச்சு  பின்னங்கழுத்தில் தான் இருக்கும் , இப்படி சைடில் இருக்காது என அவர் விவரிக்கும் இடம்  ( ஆல்ரெடி ராஜேஸ் குமார் நாவல்களில் வந்திருந்தாலும் ) சபாஷ் போட வைக்குது



3. பாத்திரத்தேர்வு பாராட்டும் விதமாய் இருக்கு. ஒவ்வொரு ஆளும் நிஜக்கேடியோ என எண்ண வைக்கிறது 





 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சாதா பொது ஜனத்துக்கே எச்சரிக்கை உணர்வும் , ஆபத்து காலத்தில் தற்காக்கும் உணர்வும் இருக்கும், ஒரு போலீஸ் ஆஃபீசர் பைக்கில் போறார். அவருக்கு முன் 20 மீட்டர் தொலைவில் 4 ரவுடிகள் வழி மறிக்க நிக்கறாங்க . அவர் கிட்டே ஒரு தற்காப்பு உணர்வே வர்லையே . அவர் இடுப்புல ரிவால்வர் இருக்கு. அதை எடுக்கலை, பைக்கை வேகமா ஓட்டி எஸ் ஆகி இருக்கலாம். அதைச்செய்யலை. அட்லீஸ்ட் சடன் பிரேக்காவது போட்டிருக்கலாம்.  எதுவுமே செய்யாம அவங்க வந்து அட்டாக் பண்ணும் வரை பார்த்துட்டே இருக்காரே? அந்த போலீஸ் ஆஃபீசர் மன்மோகன் சிங்க் உறவுக்காரரா? 


2. ஒரு ஆளை முடிக்கனும்னா ஃபோட்டோ தரனும் , அல்லது ஸ்பாட்ல ஆளை காட்டனும். 2ம் இல்லாம  இன்ன இடத்துக்கு இந்த டைம்க்கு வர்றவனைப்போட்டுத்தள்ளு என்பது ஏத்துக்கவே முடியலை யே.. 



3. பொதுவா நாய்க்கு மோப்பசகதி அதிகம் .  வீட்டில் காவலுக்கு இருக்கும் வேட்டை நாய்க்கு டீக்கடை பன்னுக்குள்  மயக்க மருந்து வைத்து ரவுடி தர்றான். நாய் எப்படி அதை முகர்ந்து பார்க்காம அதை சாப்பிடுது?



4. ஒவ்வொரு தாக்குதலிலும் பெண்கள் மயக்க நிலைக்கு போயிடறாங்க . எதுக்காக தேவை இல்லாம கொலை பண்றாங்க? என்பதற்கு விளக்கம் இல்லை .எதிர்ப்பு வந்தாலோ, கோர்ட்டில் சாட்சி சொல்லிடுவாங்க என்ற பயம் இருந்தாலோதான் கொலை செய்வாங்க 


5. போலீஸ்க்கு மேட்டர்  தெரிஞ்சாச்சு, கூட்டாளி ஒருத்தனை பிடிச்சுட்டாங்க என்றதும் அலர்ட் ஆகி ஊரை விட்டு எஸ் ஆகாமல் அங்கேயே யாராவது டேரா அடிப்பாங்களா? 

 


6. கொலை செய்யப்படும் காட்சிகள் , ரேப் சீன்கள் நாசூக்காக , குறிப்பால் உணர்த்தும் விதமாய் எடுத்தால் போதாதா? இவ்வளவு கர்ண கொடூரமாய் இருக்கனுமா?  எப்படி சென்சார்ல அனுமதிச்சாங்க? 



7. திரைக்கதை தெளிவாக கொலை, கொள்ளைச்சம்பவத்தைச்சுற்றி போய்ட்டிருக்கும்போது அந்த தம்பதிகள் கதையில் மட்டும் எதுக்கு தேவை இல்லாத டூயட், செண்ட்டிமெண்ட் காட்சிகள் ? 



8.  மிகப்பெரிய கொலை சம்பவம் ஊர்ல நடந்திட்டிருக்கு. போலீஸ் இரவு நேர ரொந்துக்கு ஏற்பாடு செய்யலையா? 


9. இன்ஸ்பெக்டர் கொலையாளீகளை எதேச்சையாக அன் டைமில் பார்த்து அவங்களிடமே “ ஜாக்கிரதையா இருங்க “ என எச்சரித்து அனுப்புவது செம லாஜிக் சறுக்கல். ஆளுங்க எல்லாம் பக்கா கேடிங்க மாதிரி இருக்காங்க . விசாரணை பண்ண மாட்டாரா? 



10. கோயில் சிலையை கொள்ளை அடிப்பவங்க லோக்கல் சேட்டு க்டைல அடமானம் வைக்க மாட்டாங்க , தங்கத்தை உருக்கி விப்பாங்க, அல்லது வெளியூர்ல தான் விப்பாங்க , அவன் அசால்ட்டா பகல் ல பேரம் பேசுவதும் , இன்ஸ்பெக்டர் அந்த நேரத்தில் அங்கே வருவதும் படு செயற்கை 






மனம் கவர்ந்த வசனங்கள்


1.          என்னடா? ஆஃபீஸ்ல இருந்து சீக்கிரமா வந்துட்டே?

நான் வேணா போய்ட்டு அப்புறமா வர்ட்டா?


2.          டியர், வயிறு வலிக்குது , டாக்டர்ட்ட போய் உடம்பை காட்டனும்

என் கிட்டேயே காட்டு



3.          ஏம்ப்பா, வெறும் 5,000 ரூபா, 10,000 ரூபா கூலிக்காக கொலையே பண்ணுவீங்களா?


கொலைக்குப்பிறகு  அவங்க போட்டிருக்கும் நகை , வீட்டில்  இருக்கும் பணம் எல்லாம் எங்களுக்கு  எக்ஸ்ட்ரா போனஸ் மாதிரி 


 


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் – 39 ( இது கன்னட டப்பிங்க் என்பதால் விமர்சனம் போட மாட்டாங்க )


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் – ஓக்கே 


சி.பி கமெண்ட் - விமர்சனத்தின் முதல் பத்தியை படிக்கவும் 


ரேட்டிங்க் - 2.5 /5 


சொந்த ஊரான சென்னிமலையில் அண்னமார் தியேட்டரில் படம் பார்த்தேன் 



 

Monday, May 27, 2013

வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம்

 

பத்து ரூபாய்க்கு பஞ்சு மிட்டாய் வாங்கித்தர்றதுக்குக்கூட த்தகுதியே இல்லாத டொக்கு ஃபிகரை  ஹீரோ உருகி உருகி காதலிக்கறாரு. அந்த டொக்கு ஃபிகரும் இவரை லவ்வுது. 2 பேரும் ஊரைச்சுத்தறாங்க . மேரேஜ்னு பேச்சு வரும்போது அந்த டொக்கு ஃபிகரு ஹீரோவைக்கழட்டி விட்டுட்டு பெரிய இடத்துல செட்டில் ஆகிடுது. 



ஹீரோ சரக்கு அடிச்சு புண் பட்ட மனதை ஆத்திட்டு இருக்காரு. அப்போ ஒரு வீணாப்போனவன்  வீணாப்போன ஐடியா தர்றான். உன்னை எப்படி ஒருத்தி லவ் பண்ணறதா நடிச்சு ஏமாத்தினாளோ அதே மாதிரி நீயும் ஒருத்தியை லவ் பண்ணி ஏமாத்திடு. தானிக்கு தீனி .சரி ஆகிடும்கறான்.

 அந்த கேவலமான ஐடியாவை  ஹீரோ ஃபாலோ பண்ணி இன்னொரு 50 மார்க் சுமார் ஃபிகரை லவ்வறாரு. அதுவும் உருகி உருகி லவ்வுது.என்ன நடந்தது? அப்டிங்கறதுதான் க்ளைமாக்ஸ் . 


இந்த  மோசமான கதையை எவ்வளவு முடியுமோ அந்த அளவு சொதப்பி எடுத்திருக்காரு இயக்குநர் தபு சங்கர் . 



 


15 வருஷங்களுக்கு முன்னால காலேஜ் பொண்ணுங்க வட்டாரத்துல தபு சங்கர் கவிதைகள் செம ஃபேமஸ். அவர் கவிதையை வெச்சே லவ் பண்ணுன ஆளுங்க பலர் உண்டு. ஒரு பிரபல வார இதழில் அவர் எழுதிய தொடர் கவிதைக்கு வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்?  என டைட்டில் வெச்சு செம ஹிட் ஆச்சு. சேர்த்து வெச்ச எல்லா நல்ல பேரையும் அண்ணன் ஒரே படத்துல  இழந்துட்டாரு, அய்யோ பாவம் .(நேரடித்தமிழ்ப்படம் அல்ல. மலையாள டப்பிங்க் படமாம்)


பிடிச்சிருக்கு பட ஹீரோ அசோக் தான் இதில் ஹீரோ. காதல் , கோபம் , சோகம் என எல்லா காட்சிகளுக்கும்  பெரிதாக ஏதும் அலட்டிக்கொள்ளவில்லை. திரைக்கதைக்கு இயக்குநரே அலட்டாத போது நாம ஏன் சிரமப்பட்டு நடிக்கனும்னு நினைச்சிருக்கலாம்.  பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் . 


சும்மா 10 நிமிஷம் வந்துட்டுப்போகும் ஏமாற்று காதலியாக  தர்ஷணா. சொல்லிக்கற அளவுக்கோ , ஜொள்ளிக்கும் அளவுக்கோ அங்கே ஒண்ணும் இல்லை . சுத்தமா தேறாது 


மெயின் ஹீரோயினாக வரும்  கிருத்திகா  சின்ன சின்ன முக பாவனைகளில் பாஸ் மார்க்கைத்தாண்டி விடுகிறார்.  படம் எப்படியும் தேறாது என்பதை இயக்குநரும் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் ஹீரோயினுக்கு லோ கட் காட்சிகள் ,மழையில் நனையும் காட்சிகள் , ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சிகள் வைக்கத்தவறவில்லை. ஆனாலும் ஒரு காட்சி கூட மனதைக்கவரவில்லை 


கஞ்சா கருப்பு , மயில் சாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெடி வறட்சியையே காட்டுகிறது 



 

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. படத்தின் டைட்டில் கவித்துவமாக இருப்பதும் , அது ஆல்ரெடி மக்கள் மனதை கவர்ந்திருப்பதும் 



2. இது மலையாள டப்பிங்க் என்பது தெரியாத வண்ணம் போஸ்டர் டிசைன் வடிவமைத்தது 


3. தரை டிக்கெட்  தரை டிக்கெட் குத்தாட்டப்பாட்டு இசை இமான் பெயரைக்காப்பாற்றுகிறது . செம ஹிட் சாங்க் . ஆனால் விழலுக்கு இறைத்த நீர் தான் 


4. காதலுக்கு ட்யூஷன் எடுக்கும் தபு சங்கர் டச் வசனங்கள்


 



இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. உண்மையான காதல் கொண்ட ஒருவன் தன் காதலி துரோகம் செய்தாலும் அவள் நினைவாகவும் , அவள் நல விரும்பியாகவும் தான் இருப்பான். சம்பந்தம் இல்லாம வேற ஒரு பொண்ணை லவ் பண்ணி ஏமாத்த நினைக்க அவன் ஒண்ணும் சைக்கோ இல்லையே?



2. படத்துக்கு முக்கிய சீனாக ஹீரோயின் முகத்தை ஹீரோ ஓவியமாக வரைவதும் நிலா ஓவியத்தில் ஹீரோயின் முகம் இருப்பதும் தான். ஒரு நல்ல ஓவியரை வைத்து அந்த காட்சியை மெருகேற்றி இருக்கக்கூடாதா? கிராஃபிக்ஸ் சொதப்பல் 


3. ஹீரோவின் ஃபிளாஸ் பேக் கதையை அப்படியே காட்சியாக காட்டினால் போதாதா? எதுக்கு பின்னணியில்  செய்தி வாசிக்கற மாதிரி காட்சியை படிச்சு காட்ட ஒரு ஆள்? 



4. க்ளைமாக்ஸில் இன்ஸ்பெக்டர் ஹீரோவைக்கொலை செய்ய நினைச்சா ஈசியா கொன்னிருக்கலாம். சும்மா 2 தட்டு தட்டிட்டு அப்டியே விட்டுடறாரு. ஹீரோ உயிர் பிழைச்சதும் அய்யய்யோ என அடிச்சுக்கறாரே? இவர் போலீஸ் சர்வீஸ்ல ஒரு ஆளை எப்படி அடிச்சா சாவான்?னு தெரியாதா? ஆள் இருக்கானா?  போய்ட்டானா? என செக் பண்ணக்கூட சோம்பேறித்தனமா? 


5. கஞ்சா கருப்பு தனி காமெடி டிராக் படு திராபை . அவர் கத்தி கத்திப்பேசுவது சிரிப்பை வர வைப்பதற்குப்பதில் எரிச்சலைத்தான் வர வைக்குது.காமெடி டிராக்கையும் தபு சங்கரே எழுதி இருப்பது இன்னொரு கொடுமை 


 


6. கதை , திரைக்கதை , வசனம் - தபு சங்கர். அப்படி இருக்கும்போது அனைவரும் அறிந்த  அவர் எழுதிய ஒரு கவிதையை ஹீரோயின் படிப்பதும் அட , இந்த வரி தபு சங்கர் எழுதியது என காட்சி வைப்பதும் கலைஞர் பாணி தம்பட்ட காட்சி 


7. காட்சிகள் ஒவ்வொன்றும் நாடகம் பார்ப்பது போல இருக்கு.  எடிட்டிங்க் மகா மோசம் . பின்னணி இசைக்கு இமான் கொஞ்சம் கூட மெனக்கெடவே இல்லை 


8. லவ்வர் பாயாக வரும் ஹீரோ க்ளைமாக்ஸில் கேப்டன் ரேஞ்சுக்கு லெக் ஃபைட் போடுவதும், பேக் கிக் ,பறந்து பறந்து தாக்குவதும் செம காமெடி 



9. டைட்டிலில் இருக்கும் காதல் நயம்,  கவித்துவம் படத்தில் , திரைக்கதையில் ஒரு காட்சியில் கூட இல்லை


10. காதலியை லாரி விபத்தில் இருந்து காப்பாற்றி தான் அடிபடும் காதலனின் முயற்சி படு டிராமாடிக் சீன். படமாக்கப்பட்ட விதமும் மோசம் 




 மனம் கவர்ந்த வசனங்கள்





1.காதல் அமைவதெல்லாம் காதல் கொடுத்த வரம்



2. எனக்குன்னு தனி ஆசை ஏதும் இல்லை.உன் ஆசைகளை நிறைவேற்றுவதே என் ஆசை


3. ஆண் அளவோட தண்ணி அடிக்க 1000 காரணம் இருக்கும்.ஆனா அளவில்லாம தண்ணி அடிக்க 2 காரணம் தான் 1 பொண்டாட்டி டார்ச்சர் 2 லவ் பெய்லியர்



4. ஒரு பொண்ணுக்கு மேரேஜ் ஆனா 2 குடிகாரர்கள் உருவாகிறார்கள். 1 பழைய காதலன் 2 புது புருஷன் 



5.  காதல்ல விளையாடலாம், ஆனா கல்யாணத்துல? ஏன்னா அது சீரியஸ் மேட்டர் 




6.  தப்பு பண்ணினவளுக்கே இவ்ளவ் நல்ல லைஃப் வரும்போது   நல்லவனுக்கு  ஏன் நல்ல லைஃப்   வரக்கூடாது? 



7.  என் சைஸ் என்ன? சொல்லு பார்ப்போம்?


 தெரியாதே?

 தன் காதலியின் உடல் அளவை கண்ணாலயே அளந்து விடுபவன் தான் உண்மையான காதலன் 




8.  ஆமா , நான் பொறுக்கி தான். லட்சக்கணக்கான பொண்ணுங்க இங்கே இருக்கும்போது உன்னை மட்டும் பொறுக்கி எடுத்து லவ் பண்ணினனே? நான் பொறுக்கிதான் . 


9. உலகத்தையே மறந்து கிடப்பது ரொம்ப சுலபம், ஆனா காதலிச்ச பொண்ணை மறப்பதுதான் உலகத்துலயே ரொம்ப கஷ்டமான விஷயம் 



10.  மனோபாலாவைக்காட்டி - இந்த ஆளை அடிச்சா ரத்தம் வருமா? சத்தமே வராது 


 



11.  நான் 5 பேரை லவ் பண்றேன்


 நவீன பாஞ்சாலியா? 


 அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ,தங்கை 


12. ஆஹா, அவளை மடக்கறதுக்கு அவளே ஐடியா தர்றாளே? 



13.  அடியாளுங்க வெச்சு அடிக்கற அளவுக்கா நான் பெரிய  ஆள் ஆகிட்டேன்? 


14. பசங்களை அறையற பொண்ணுங்கதான் அவனை லவ்  பண்ணுவாங்க. இன்னைக்கு அறைவாங்க, நாளைக்கு லவ்வுவாங்க 

 என்னமோ இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்  அப்டிங்கற மாதிரி பேசறியே? 



15. என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு அப்புறமாத்தானே கிஸ் பண்ணி இருக்கனும் ? எதுக்கு முன்னாடியே கிஸ் பண்ணினே? 



16.  சிட்டில இருக்கும் பொண்ணுங்கள்ல இருந்து சின்னாளப்பட்டில இருக்கும் பொண்ணுங்க வரை காதல்னா வெட்கம் வரும்


17/  எச்சில் தான் காதல் உலகில் ஃபெவிகால். காதலை அது ஒட்ட வைக்கும்   


18,.  டியர், நீ தான் எனக்கு பெட் அனிமல் 


19.  கடவுள் உதட்டைப்படைச்சதுக்கு ஒரே காரணம் - முத்தம்



20. எத்தனை நாள் ஆனாலும் கெட்டே போகாத பால் இன்பத்துப்பால் 


 


21.  இப்போதானே குட் நைட் சொன்னே? மறுபடியும் ஏன் சொல்றே?  லவ்வர்ஸ்னா ஒரு நாளுக்கு 3 டைமாவது குட் நைட் சொல்லனும்


22.  இதுக்குள்ளே தான் என் காதலே இருக்கு 


 காதலை சமைச்சு கொண்டு வந்துட்டியா? 


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 33


குமுதம் ரேங்க் - மோசம் 


 ரேட்டிங்க் -     1  / 5 



 சி பி கமெண்ட் - கடந்த 25 வருடங்களில் வந்த  டாப் டென் மோசமான படங்கள் லிஸ்ட் எடுத்தால் இதுக்கு முதல் இடம் கிடைக்கலாம். டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க மக்களே. முடியல