Friday, April 24, 2020

சினிமா -சிச்சுவேசன் சீன் போட்டி - பிகேபி + சுபா - எனது பங்களிப்பு

பவுனு பவுனுதான் மூலம் கே பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக , திரைக்கதை ஆலோசகராக, வசன பங்களிப்பையும் ஆற்றிய பிகேபி  எனும் பட்டுக்கோட்டை பிரபாகர் பிறகு  ஏ வெங்கடேஷ் இயக்கிய மகாப்ரபு , ஏய் படங்களுக்கு வசனம் எழுதினார் ,லேட்டஸ்ட்டாக கே வி ஆனந்த் இயக்கிய காப்பான் பட வசனகர்த்தாவும் அவரே


மாலைமதியில் பொன் ஜிதா எனும் வைரஸ் ரிலேட்டட் த்ரில்லர் நாவலை 1990களிலேயே எழுதிய சுபா பிறகு கேவி ஆனந்த் உடன் கோ , அயன் உள்பட பல படங்களில் வசனகர்த்தாவாக பணி ஆற்றினார்


பிகேபி சார் அவரது தளத்தில் அறிவித்த போட்டி


இன்றைக்கு சினிமா பார்க்கிற அத்தனை பேருக்கும் நல்ல ரசனையும் கற்பனை வளமும் ஒரு துடிப்பும்,
ஆர்வமும் இருக்கிறது.
"இந்த சீனுக்குப் பதிலா இப்படி சீன் வெச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்'' என்று பலரும் கமெண்ட் செய்கிறீர்கள்.
ஒரு கற்பனையான சூழல் சொல்கிறேன்.
அசத்தலாக அதற்கு ஒரு சீன் எழுதுங்கள் பார்க்கலாம்.
சூழல் இது:
மிகவும் அரசியல் செல்வாக்குள்ள, இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவர்தான் வில்லன்.
அவருக்கு குடும்பம் இல்லை. தனியாள்.
அவருக்கு ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.
ஹீரோவுக்கும் அவருக்கும் அறிமுகம் இல்லை. ஹீரோ அவரை மட்டும் தனியாக ஒரு பொது இடத்திற்கு வரவழைக்க வேண்டும்.
என்ன ஐடியா செய்து வரவழைப்பான்?
நிபந்தனைகள்:
1. வேறு படங்களில் வந்த காட்சியை எழுதக் கூடாது.
2. காட்சி விளக்கம் மட்டும் போதும்.
3. வசனம் தேவையில்லை.
4. பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள்!
5. நாளை( 21ம் தேதி ) மாலை 7 மணி வரை மட்டும்.
சிறந்த 10 சீன்களை தேர்வு செய்யப் போவது
என் இனிய நண்பர்களும் தமிழ் சினிமாவில்
தனித் தடம் பதித்து பயணம் செய்யும் சிறந்த திரைக்கதையாசிரியர்களுமான..
சுபா!

நான் எழுதிய 10  சிச்சுவேஷன்கள் இங்கே தந்திருக்கிறேன். இவற்றில் ஒன்று தேர்வாகி இருக்கு. அது எது என  நெம்பர் குறிப்பிட்டு கமெண்ட் ல சொல்லுங்க , யார் சரியா யூகிக்கறாங்கனு பார்ப்போம்

======================

1  குடும்பம் இல்லாத தனி ஆள் என்றால் லேடீஸ் விஷயத்தில் அப்டி இப்டி இருந்திருப்பான், எனவே ஹீரோ வில்லனுக்கு ஃபோன் பண்ணி நீயும் ஒரு லேடியும் இருக்கற கில்மா க்ளிப்பிங் கிடைச்சிருக்கு, இதை ரிலீஸ் பண்ணாம இருக்கனும்னா நாம ஒரு டீல் பேசனும், நேர்ல தான் பேசனும், ஆதாரமா அந்த சீனை வாட்சப் எல்லாம் அனுப்ப முடியாது, டேஞ்சர், யாராவது ஹேக் பண்ணிட்டா உனக்கு தான் அபாயம்,எனவே நான் சொல்ற இடத்துக்கு வா என அழைக்கலாம்

====================

2 வில்லன் பெரிய கோடீஸ்வரன்களில் ஒருவன் என்பதால் அவரைப்போலவே சக கோடீஸ்வரன் பெயரையோ , அரசியல் எதிரி பெயரையோ சொல்லி இவனால உனக்கு ஆபத்து , உன் ஃபேக்டரிகள்ல எல்லாம் ஒரே டைம்ல மாஸ் ரெய்டு நடத்த பிளான் பண்ணி இருக்காங்க . இதைப்பற்றி ஃபோன்ல பேசறதை விட நேர்ல பேசறதுதான் உனக்கு சேஃப்டி . யாரையும் நம்பாம தனியா வா. எப்பவும் கூடவே இருக்கறவனால தான் ஆபத்து வரும் , மலையூர் மம்பட்டியான்ல இருந்து ஜெ வரை எல்லாருக்கும் அழிவு கூட இருந்தவங்களாலதான்/, அதனால தனியா வா நான் சொல்ற இடத்துக்கு என அழைக்கலாம்


================

3 வில்லனோட அப்பாவுக்கு என்ன வயசு இருக்குமோ அந்த வயசுல வில்லன் ஃபோட்டோவை மார்ஃபிங் பண்ணி வில்லனோட அப்பா இவருதான். இவரைப்பற்றிய ரகசியங்கள் தெரிஞ்சுக்க நினைச்சா நான் சொல்ற இடத்துக்கு வா, நீ நினைக்கற மாதிரி நீ அநாதை இல்லை, உனக்கு குடும்பம் இருக்கு , உன் அப்பா உன்னை விட 10 ,மடங்கு வசதியானவரு , இப்போ ஃபாரீன்ல இருக்காருனு பொய் சொல்லி வர வழைக்கலாம்

================

4 வில்லனோட ஃபேமிலி டாக்டர் யார்?னு கண்டுபிடிச்சு அவரைப்பார்த்து ஏதோ வகைல சம்மதிக்க வெச்சு வில்லனோட உடம்புல கொரோனா வைரஸ் மாதிரி எதுனா வைரஸ் கிருமியை ஊடுருவச்செய்யனும்.,பாதிப்பு தெரிஞ்சதும் வில்லன் முதல்ல ஃபேமிலி டாக்டரிடம்தான் வருவான். ஏற்கனவே ஹீரோ சொல்லிக்குடுத்தபடி வில்லனோட ஃபேமிலி டாக்டர் ஒரு குறீப்பிட்ட பொது இடத்தை சொல்லி இங்கே போய் இவரைப்பாருங்க, இவராலதான் இந்த வைரஸ்க்கு ரெமிடி தர முடியும், இவர் ஒரு சயிண்ட்டிஸ்ட்னு சொல்லலாம் ( ஃபேமிலி டாக்டரை சம்மதிக்க வைக்க டாக்டரோட மனைவி , மகள் யாரையாவது கடத்தி வெச்சுக்கலாம்)

======================


5 வில்லனுக்கு குடும்பம் தானே இல்லை? எப்படியும் சின்ன வீடு அல்லது சின்ன பங்களா இருக்கும், முதலில் ஹீரோ வில்லனை ஃபாலோ பண்ணி வில்லனோட சின்ன வீட்டைக்கண்டுபிடிக்கனும். . அந்தப்பொண்ணு கிட்டே தான் ஒரு புரொடியூசர் என பொய் சொல்லி சினிமாவில் நடிக்க ஆசை இருக்கா?னு கேட்கனும். எந்தப்பெண்ணுக்குதான் சினி ஃபீல்டில் ஜெயிக்க ஆசை இருக்காது?ஓக்கே சொன்னதும் ஃபோட்டோ ஷூட் எடுக்கறேன்னு அவரை வெச்சு வேறு ஒரு ஆளுடன் நெருக்கமான காட்சிகளை எடுக்கனும். படம் ரிலீஸ் ஆகும் வரை மேட்டரை வெளில யாருக்கும் லீக் பண்ண வேணாம் என சொல்லி விட்டு வில்லனின் வாட்சப்க்கு இந்த ஃபோட்டோக்களை அனுப்பி உன் ஆளுக்கும் , இவனுக்கும் கனெக்சன் இருக்கு, மேலாதிக்க விபரங்களுக்கு இன்ன இடத்துக்கு இன்ன டைம்ல வா, நேரில் பேசுவோம்னு சொல்லலாம்

=========================

6 வில்லனோட கிச்சன் ரூம் இன் சார்ஜ் யார்?னு கண்டுபிடிச்சு அவன் மூலமா வில்லன் சாப்பிடற டெய்லி ரொட்டீன் ஃபுட் டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்ணனும் . அவன் கிட்டே இது சர்ப்பரைசான ரிப்போர்ட்டிங். வார இதழில் கோடீஸ்வரரின் உணவுப்பழக்கவழக்கங்கள்னு ஒரு ஆர்ட்டிக்கிள் வரப்போகுது, அதுக்காக .. ஆனா நீ மேட்டரை ஓப்பன் பண்ணக்கூடாது , சஸ்பென்சா வெச்சுக்கோனு சொல்லி அவனுக்கு லஞ்சமா பொன்னோ , பொருளோ, பொண்னோ தந்து கரெக்ட் பண்ணி வெச்சுடனும், பின் வில்லனுக்கு ஃபோன் பண்ணி “ நீ என்ன என்ன கிழமைல என்ன என்ன சாப்பிடறே? அந்த லிஸ்ட் இதுதான், சரியா? செக் பண்ணிக்கோ. உன் எதிரிகள் உனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்துட்டு இருக்காங்க. யாரையும் நம்பாதே. நான் சொல்ற இடத்துக்கு தனியா வா. மிச்ச விபரத்தை அங்கே வெச்சுப்பேசுவோம்னு சொல்லலாம்

================

7 பொதுவா பணக்காரங்க கிட்டே ஒரு பழக்கம் இருக்கும், எதை செய்ய வேணாம்கறமோ அதைதான் செய்வாங்க. இந்த ஈகோ வை ஹீரோ யூஸ் பண்றாரு, அதாவது பப்ளிக் பிளேஸ் ல வில்லனை மீட் பண்ணனும், வா அப்டினா வர மாட்டான். அதனால வில்லனுக்கு ஃபோன் பண்ணி உனக்கு ஆபத்து இருக்கு. ஒரு மாசத்துக்கு எங்கேயும் வெளில வராதே அப்டினு ஃபோன் பண்ணி சொல்லனும். எப்படியும் அதைக்கேட்காம வில்லன் தன் ஃபேக்டரிக்கு போய்ட்டு இருப்பான். அப்பப்ப ஃபோன் பண்ணி ஏன் நான் சொல்லியும் கேட்காம ஃபேக்டரிக்கு வந்திருக்கே? இங்கே வந்திருக்கே.. அப்டினு வில்லனோட ஒவ்வொரு விசிட்க்கும் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து அவனை டார்ச்சர் பண்ணனும், பின் சரி இங்கே எல்லாம் வந்தது சரி . ஆனா பபளிக் பிளேஸ் பார்க் , பீச் இந்த மாதிரி இடத்துக்கு மட்டும் போய்டாதே அப்டிங்கனும் . நீ என்ன சொல்றது? எந்த செக்யூரிட்டியும் இல்லாம தனியா இன்னைக்கு பீச்க்கு வாக்கிங் போறேன், பார்க்கறியா?னு வில்லனே சவால் விட்டு ஹீரோ கிட்டே மாட்டிக்குவான்


=============

8 வில்லன் அரசியல் செல்வாக்கு மிக்க கோடீஸ்வரன் எனில் அவனுக்குப்போட்டியாக தொழிலில் டாப் 3 எதிரிகள் அல்லது சம பலம் மிக்கவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் தனித்தனியாக ஹீரோ போய் சந்தித்து இந்த மாதிரி உங்கள் எதிரியும் நெ 1 கோடீஸ்வரனுமான வில்லனை தனியே வர வைக்க உங்க உதவி தேவைப்படுது. நீங்க ஒரு இடத்துல கூடி என் கிட்டே சிறைப்பட்டது போல ஒரு வீடியோ க்ளிப் எடுத்துக்க உதவி செஞ்சா போதும் , சுத்தி பாதுகாப்புக்கு உங்க ஆட்களை வெச்சுக்குங்க. நான் அந்த வீடியோவை அனுப்பி வில்லனை பொது இடத்துக்கு வரச்சொல்லிக்கறேன் என கன்வின்ஸ் செய்து 3 போட்டியாளர்களை ஒரே இடத்தில்; வரவைத்து பணயக்கைதிகள் போல் அடைத்து வைத்து வீடியோ எடுத்து மெயின் வில்லனுக்கு அனுப்பி உன் தொழில் எதிரிகள் இப்போ என் வசம். அவங்க உனக்கு வேணும்னா நான் சொல்ற இடத்துக்கு தனிமையில் வா .தனியா வர பயமா இருந்தா உன் செக்யூரிட்டியை கூட்டிக்க என அவன் ஈகோவை தூண்டினால் ரோஷப்பட்டு தனியே வந்துடுவான்

===================

9 ஹீரோ ஒரு ஹேக்கரின் உதவி கொண்டு வில்லனின் அடியாட்கள் , செக்யூரிட்டிஸ் , மேனேஜர் , வாட்ச்மேன் என அனைவருக்கும் ஒரு மெசேஜ் வில்லனின் நெம்பரில் இருந்து அனுப்பனும். நாளை ஒரு பிரச்சனை , யாரும் அவங்கவங்க வீட்டை விட்டு வெளில வர வேண்டாம், எந்த ஃபோன் காலையும் அட்டெண்ட் பண்ண வேணாம், என்ன விபரம்னு நாளை சொல்றேன். , இந்த மெசேஜை அனுப்பும் முன் வில்லனின் பங்களாவில் உள்ள அனைத்து லேண்ட் லைன் இணைப்புகளையும் கட் பண்ணனும். பிறகு அடுத்த நாள் வில்லனுக்கு ஃபோன் செய்து “ இன்னைக்கு உன் ஆளுங்க யாரும் வேலைக்கு வந்திருக்க மாட்டாங்களே? உனக்கு எதிரா சதி நடக்குது. மேலும் விபரம் அறிய நீ அக்கவுண்ட் வெச்சிருக்கற இன்ன பேங்க் குக்கு உடனே வா... என பேசனும்.போலீஸ் கிட்டே யோ, தனியார் டிடெக்டிவ் கிட்டேயோ உதவி கேட்காதே, இது உனக்குதான் ஆபத்து , பிளாக் மணி மேட்டர் என சொல்லனும்

======================


10 வில்லன் ஒரு ரஜினி ரசிகன் என்பதைத்தெரிந்து கொண்ட ஹீரோ வில்லனுக்கு ஃபோன் பண்ணி “ உனக்கு என்னதான் வசதி , செல்வாக்கு இருந்தாலும்  எங்களை மாதிரி சாமான்யன்கள் போல்  தனியா எந்த பாதுகாப்பும் இல்லாம வெளில வர முடியுமா? எப்பவும் கூட்டத்தோட தான் வர்றே, போறே, பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும் , போகும்னு தலைவரே சொல்லி இருக்காரு அப்டினு உசுப்பேத்தறான்.பிறகு சரி டெய்லி வேணாம், ஒரே ஒரு நாள் உன்னால உன் இஷ்டத்துக்க்கு  தனியா சுத்த முடியுமா? பார்க், பீச்னு அப்டினு சவால் விடறான், முதல்வன் படத்துல ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் சாதாரணன் ஆக சுத்திப்பார்  அப்டிங்கறான். ஒரு கோடீஸ்வரனால இதெல்லாம் சாத்தியமா?னு வில்லன் கேட்டா “ ஏன்? பிச்சைக்காரன் படத்துல ஹீரோ தன் சொத்துக்களை எல்லாம் துறந்து பிச்சைக்காரனா வாழலையா?னு ஹீரோ மடக்கறான். வில்லன் அந்த சவாலை ஏத்துக்கறான். ஒரு நாள் பூரா தனியாவே செக்யூரிட்டி இல்லாம பொது இடங்களுக்கு வர்றான்

================