Sunday, February 08, 2026

சிறுகதை - உதவி ஆசிரியர் - சிபி செந்தில் குமார் @ கல்கி




பிரபல வார இதழ்  மகிழ்ச்சி  யின் ஆசிரியர்   ராஜா தன் உதவியாளர்களுடனான  மீட்டிங்கை முடித்து தன் டேபிளுக்கு திரும்பினார். அந்த வாரத்தின் ஃபைனல் எடிட்டிங் ஒர்க் பெண்டிங் இருக்கிறது. இன்று இரவுக்குள் அதை க்ளியர் செய்ய வேண்டும். ரிசப்ஷனுக்கு ஃபோன் அடித்து “ யாரையும் அனுமதிக்க  வேண்டாம்” என ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டு தன் வேலைகளில் மூழ்கினார். பொதுவாக ஒரு கம்பெனியிலோ, ஆஃபீசிலோ ஒர்க் பண்றவங்களுக்கு ஒவ்வொரு மாசக்கடைசியும் மன்த் எண்ட் பிரஷர் இருக்கும், ஆனால் வாரம் இருமுறை இதழ் இரண்டு, வார இதழ் 2 , மாத இதழ் 3 , மாதம் இருமுறை இதழ் 2  ஆக மொத்தம் 9 இதழ்களுக்கு  சீஃப் எடிட்டர் பணி என்பது சாதாரண வேலை இல்லை. தினசரி 4 காட்சிகள் என தியேட்டரில் போஸ்டர் ஒட்டுவது போல்  தினமும் டென்சனும் , ஒர்க் பிரசரும் உள்ள ஒரு வேலை .


4 மணி நேரம் கழித்து தன் வேலை எல்லாம் முடித்து விட்டு  ராஜா மணி பார்த்தார். நைட் 7 ஆகி விட்டது. ரிசப்ஷனுக்கு ஃபோன் அடித்தார் “ நான் கிளம்பப்போறேன். யாராவது விசிட்டர்ஸ் வந்தாங்களா?எனி இம்ப்பார்ட்டெண்ட் நியூஸ்?

 இல்லை சார். ஒரு வாசகர் மட்டும் உங்களைப்பார்க்கனும்னு வெய்ட் பண்றார். 4 மணி நேரமா அடமா உட்கார்ந்திருக்கார்.

 வாசகரா? ஏம்மா? இதுக்கெல்லாமா என்னை டிஸ்டர்ப் பண்ணுவீங்க? நீங்களே பேசி அவரை அனுப்பி இருக்கலாமே?

 இல்லை சார் , அவர் உங்களைத்தான் பார்க்கனும்னு பிடிவாதமா இருக்கார் என்ன விஷயம்?னு கேட்டா அதுவும் சொல்ல மாட்டேங்கறார். திருப்பித்திருப்பி ஒரு முக்கிய விஷயம், ஆனா எடிட்டர் கிட்டே தான் சொல்ல முடியும் , இதையேதான் திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கார்

சரி , பேர் என்னம்மா?

 சதீஷ்


அயன் புரம் சத்தியநாராயணன்,  வேலாயுதம்பாளையம் எம் சம்பத் , வண்ணை கணேசன், பள்ளிபாளையம் கே ரஞ்சனிப்பிரியன், என பத்திரிக்கைகளில் ரெகுலராக வாசகர் கடிதம் எழுதும் பிரபல வாசகர்கள் 10 பேரின் பட்டியலை மனசுக்குள் பட்டியல் இட்ட ராஜா “ சதீஷ் , புதுப்பேரா இருக்கே?  என்று யோசித்த வாறு “ சரி , வரச்சொல்”  என்றார்


உள்ளே வந்தவருக்கு கிட்டத்தட்ட 50+ வயசு இருக்கும், இதற்கு முன் பார்த்த மாதிரி நினைவு இல்லை

 வாங்க, உட்காருங்க 

 வணக்கம் சார் , என் பேரு சதீஷ், சித்தோடு சொந்த ஊரு , உங்க  பத்திரிக்கை மட்டுமல்ல , எல்லா பத்திரிக்கைகளும் தொடர்ந்து வாசிப்பவன்


 ஓஹோ, குட் . என்ன விஷயமா என்னைப்பார்க்க வந்தீங்க?

சார் , உங்க பத்திரிக்கைல ஒரு விளம்பரம் கொடுத்திருந்தீங்க . 25 வயதுக்குள் இருக்கும் துடிப்பான , இளமையான உதவி ஆசிரியர்கள் தேவை  அப்டினு....


 ஆமா, ஆனா உங்களுக்கு  25க்கு மேல இருக்குமே? ஒரு வேளை உங்க பையனுக்கு சிபாரிசு செய்ய வந்திருக்கீங்களோ?

 சாரி சார், நான் வந்த விஷயமே வேற . என் வேலைக்காகவோ , வேற யாரோட வேலைக்கு சிபாரிசுக்காகவோ நான் வரலை


பின்னே?


சார், மார்க்கெட்டிங் லைன்ல இருக்கறவங்களுக்கு ஆள் எடுக்கையில் தான் இளமையான ஆள் வேணும், மேரேஜ் ஆகாத ஆள் வேணும்னு விளம்பரம் பண்ணுவாங்க , ஏன்னா அப்போதான் துடிப்பா டெய்லி 200 கிமீ பயணம் செய்வான், அடிக்கடி லீவ் போட மாட்டான் . ஆனா நீங்க புதுசா ஆரம்பிக்க இருக்கும் நகைச்சுவை வார இதழ் முழுக்க முழுக்க ஜோக்ஸ்கள் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு இதழ்.அதுக்கு இளமையான ஆள் வேணும்னு ஏன் விளம்பரம் கொடுத்திருக்கீங்க?

 இது எல்லா ஆஃபீஸ்லயும் நடக்கறதுதான். துடிப்பான இளைஞர்கள் தான் தேவை. அவங்க கூட வேலை செய்தா தான் நாமும் புத்துணர்ச்சியா ஃபீல் பண்ண முடியும்  இந்த கால கட்ட வாசகர்களின் டேஸ்ட் , பல்ஸ் தெரிஞ்சவங்களா இருப்பாங்க


 சார். நீங்க சொல்ற பாய்ண்ட் கரெக்ட். அவங்க ஏதாவது கட்டுரையோ, அல்லது நடிக நடிகையின் பேட்டியோ  இயக்குநருடன் ஒரு கலந்துரையாடலோ பண்ற மாதிரி இருந்தா அது சரி, ஆனா வாசகர்கள் அனுப்பற ஜோக்சை தேர்ந்தெடுக்கும் வேலைக்கு தான் ஆள் எடுக்கறீங்க . அதுக்கு ஏன் இளைஞர்கள்?

 நீங்க மறுபடி மறுபடி ஒரே பாய்ண்ட்டைதான் சொல்லிட்டு இருக்கீங்க, ஏன் இளைஞர்களை தேர்ந்த்டுக்கக்கூடாது?அதுக்கு காரணம் சொல்லுங்க


 சார், இப்போ பத்திரிக்கைகள்ல வர்ற ஜோக்ஸ்  பெரும்பாலும் ஏற்கனவே வந்த ஜோக்ஸின் உல்டாவாகவோ , சினிமாப்படங்களில் வந்த காமெடி சீன்கள்ல இருந்து உருவுனதாகவோ  இருக்கு. சிலர் தான் சொந்த,மா யோசிச்சு ஜோக்ஸ் எழுதறாங்க. இப்போ ஜோக்சை செலக்சன் பண்ற டீம்ல இருக்கறவங்க  பலதரப்பட்ட புத்தகங்களை படிச்சவராகவும்  , சினிமாக்களை , பார்த்தவராகவும் இருக்கவேணாமா?


சரிதான், ஏன் 25 வயசு இளைஞர்கள்  புத்தக வாசிப்பு இல்லாதவங்களாத்தான்  இருப்பாங்கனு என்ன நிச்சயம்?இண்ட்டர்வ்யூல  ஃபில்டர் பண்ணுவோம் இல்ல?


 ஆமா சார் , ஃபிலடர் பண்ணுவீங்க.  1995 ல பிறந்த ஒருவன்  2020 ல் 25   வயசு ஆனவனா இருப்பான். அவன் 25 வருச படைப்புகள் தான்  படிச்சிருப்பான்.ஆனா ஜோக்ஸ் செலக்சன்க்கு அந்த தகுதி பத்தாது சார். காதலிக்க நேரமில்லை படம் முதல் தமிழ் சினிமாவின் பிரபல ஹிட் படங்களை காமெடி ஜர்னர் களை பார்த்தவனா  இருக்கனும், எஸ் வி  சேகர் , கிரேசி மோகன் , சோ ,  மவுலி நாடகங்களை படிச்சவராவோ , பார்த்தவராவோ  இருக்கனும்


 அவன் என்ன நாடகமா எழுதப்போறான்?

 சார், வாசகர்கள் எழுதி அனுப்பற ஜோக்ஸ்  சொந்தமா யோசிச்சு எழுதற படைப்பா ,? இல்ல அட்லீ ஒர்க் பண்ணப்பட்ட படைப்பா?னு எப்படி தெரியும்?அவனது படிப்பு பரந்து இருக்க வேண்டாமா? 1970களில் வந்த  பிரபல வார இதழ்களில் வந்த அனைத்து ஜோக்ஸ்களையும் படிச்சவனாவும் இருக்கனும். மதன் ஜோக்ஸ் , கோபுலு ஜோக்ஸ், கோவி கோவன் ஜோக்ஸ்  உட்பட அனைத்து   முன்னணி ஜோக்ஸ் எழுத்தாளர்களையும் அவன் வாசிச்சவனா இருக்கனும்

 நீங்க சொல்ற பாய்ண்ட்டை ஏத்துக்கிட்டாலும் அதை விட ஈசியான வழி ஒண்னு நாங்க வெச்சிருக்கோம்

 என்ன சார்?

 டாபிக்கல் ஜோக்ஸ் . கரண்ட் மேட்டரை வெச்சு எழுதப்படும் ஜோக்ஸ் .அதுல நீங்க சொல்ற மாதிரி காபி அடிக்க முடியாதுல்ல?


இல்லை சார் , இதை நான் ஆட்சேபிக்கிறேன். ஒரு நல்ல திறமையான எழுத்தாளன் சாமார்த்தியமா  பழைய ஜோக்ஸை டாபிக்கல் மேட்டரில் கனெக்ட் பண்ணி எழுத முடியும் 


 எப்படி?

 இப்போ டிவி ல ஸ்டெண்ட் அப் காமெடி மதுரை  முத்து , ஈரோடு மகேஷ் எல்லாம் பாருங்க அவங்க  கிட்டே சொந்த சரக்கு கிடையாது . பத்திரிக்கைகளில் வந்த துணுக்குகளின் தோரணம் தான். ஆனா சாமார்த்தியமா  அதை தொகுத்து கோர்வையா ஜனங்க  ரசிக்கற மாதிரி சொல்ற திறமை இருக்கு , மெம்மரி பவரும் இருக்கு 2 மணி நேரம் தொடர்ந்து  ஜோக்ஸ் சொல்லச்சொன்னாலும் சொல்வாங்க

 ஆமா

 அதே திறமை அந்த ஜோக்சை நிஜமாவே எழுதுன ஜோக் எழுத்தாளர்களாலேயே முடியாது.அவங்க அதிக பட்சம் 10 ஜோக்ஸ் ஞாபகம் வெச்சு சொல்லலாம், ஒரு நிஜமான படைப்பாளிக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் , புகழும் அவனுக்கு கிடைக்கறதில்லை , ஆனா சொந்த படைப்பு இல்லைன்னாலும் மெம்மரி பவரும், தொகுத்து வழங்கும் ஆற்றலும் உள்ளவங்க லைம் லைட்க்கு ஈசியா வந்துடறாங்க 


சரி , அதுக்கும் , இந்த இளைஞர்கள் மேட்டருக்கும் என்ன சம்பந்தம்?


சார், இப்போ இந்த ஸ்டேண்ட் அப் காமெடியன்கள் மாதிரி அடுத்தவங்க ஜோக்சை சாமார்த்தியமா  பட்டி டிங்கரிங் பண்ணி தன் சொந்த ஜோக்ஸ் மாதிரி எழுதி அனுப்பறவங்களை அடையாளம் தெரிஞ்சுக்கற தகுதியும் , திறமையும் வாய்ந்த ஒரு அனுபவசாலியை செல்க்சன் செக்சன் ல பணி அமர்த்தனும் சார். இதுதான் என் ஆசை


 சரி , நீங்க சொல்றதை ஒரு வாதத்துக்காக ஏத்துகிட்டாக்கூட அவ்ளோ வய்சான ஆளை  வெச்சு எப்படி வேலை வாங்கறது?

 என்ன சார்? இப்டி கேட்டுட்டீங்க? இந்தக்கால இளைஞர்கள் கிட்டே பொறுமையும் , ஒபீடியன்சும் சுத்தமா கிடையாது. டக் டக்னு 2 வருசங்களுக்கு ஒரு தடவை வேற கம்பெனிக்கு ஜம்ப் ஆகிடறாங்க , காரணம் ஒவ்வொரு ஜம்ப்க்கும் அவங்களுக்கு  30% செலரி ஹைக் கிடைக்குது .  ஹையர் ஆஃபீசர்ஸ் ஏதாவது சொல்லிட்டா டக்னு மூடு அவுட் ஆகி  ரிசைன் பண்றவங்க இளைஞர்கள் தான் 

ஆமா, அது ஒரு வேலீட் பாய்ண்ட்


 ஆனா வயசானவங்க அப்படி இல்லை சார். அவங்களுக்கு பொறுப்புணர்வு அதிகம், பொறுமையும் அதிகம் . கம்பெனியும் மாற மாட்டாங்க 

ஓக்கே, நீங்க சொன்ன மாதிரி அடுத்த வார இதழ்லயே விளம்பரம் தந்துடறேன். அனுபவம் மிக்க , பரந்த வாசிப்புத்திறன் மிக்க 60+ வயசு உள்ள உதவி ஆசிரியர் பணிக்கு ஆள் தேவைனு விளம்பரம் பண்றேன் சரியா? 

  ரொம்ப சந்தோஷம் சார்

 ஆனா ஒரு டவுட். இதை எல்லாம் நீங்க நேர்ல வந்து சொல்லறதால உங்களுக்கு என்ன லாபம்?

சார். நான் தீவிரமான வாசகன். பத்த்ரிக்கைல வர்ற பல படைப்புக்ள உல்டா ஜோக்சா இல்லாம புதுசா இருக்கனும்னு நினைக்கற சராசரி வாசகன். தான் நேசிக்கற காதலி தனக்கு இல்லைன்னாலும் நல்ல இடத்துல வாழ்க்கைப்பட்டு நல்லவிதமா வாழனும்னு ஒரு காதலன் ஆசைப்படற மாதிரி  நான் நேசிக்கும்   ஒரு பத்திரிக்கை அதுல வர்ற படைப்புகள் நல்ல விதமா வரனும், இதான் சார் என் ஆசை 

 வெரிகுட்/ தாங்க் யூ

 ஒகே சார் வர்றேன்



இந்த சம்பவம்  நடந்து  20 நாட்கள் கழித்து எடிட்டர் ராஜா  சொன்னபடி இண்ட்டர்வ்யூ கால் ஃபார் பண்ணி வந்த கேண்டிடேட்களில் 30 பேர்களை கேள்வி கேட்டு அனுபவமும், திறமையும் உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்தார்.
அவர் பெயர் பழனிச்சாமி. அவரை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே என ராஜா பல முறை முயன்றும், நினைவுபடுத்தவே முடியவில்லை. 

 ஆனால் கடைசி வரை அவரால் சேர்ந்திருப்பது  50 வயது சதீஷின் அப்பா 70 வயசு பழனிச்சாமி   என்பதை கண்டு பிடிக்காமலே போனது 


THANX  - KALKI 

0 comments: