Saturday, August 14, 2010

ஹாலிவுட் சினிமா விமர்சனம்-THE EXPENDABLES 18+

நம்ம கோடம்பாக்கத்துல ரஜினி,கமல்,அஜித்,விஜய்,சூர்யா,விக்ரம் இவங்க எல்லாம் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்?(தியேட்டர்ல எப்படியோ தியேட்டருக்கு வெளியே ரசிகர்களுக்குள்ள ஒரே அடி தடியா இருக்கும்) இங்கே சாத்தியமோ ,இல்லையோ ஹாலிவுட்டில் சாத்தியமாகி இருக்கிறது.
படத்தோட மக்கள் தொடர்பும் ,போஸ்ட்டர் டிசைனும் ரொம்ப மோசம்.ஏதோ டப்பிங்க் பட போஸ்டர்  மாதிரி..

படத்தின் இயக்குனரும் ,நாயகனும் ஃபர்ஸ்ட் பிளட்,ராம்போ புகழ் சில்வர்ஸ்டர் ஸ்டாலின் .விளம்பரத்தைப்பார்த்து ஏதோ ஆபாவாணனின் இணைந்த கைகள் மாதிரி பிரம்மாண்டப்படம் என நினைத்தால் அது சுயம்வரம் மாதிரி ஒரு அடாசு படம்.

ஆரம்பக்காட்சியில் சில வசனங்களை ரசிக்க முடிகிறது.

காலிங்பெல் சத்தம் கேட்டு “யாரது?” என ஒரு ஃபிகர் கேட்க, நம்மாளு நீ தூங்கறப்பக்கூட உன்னை ரசிக்க ஒருத்தன் வருவானே அவன்தான் என ஜொள் விட நாமும் ஏதோ சுவராஸ்யமான படத்துக்கு தான் வந்திருக்கோம் போல என நம்பி நிமிர்ந்து உட்கார்ந்தால்...?

நீ என்ன பண்றே?என்ன வேலைல இருக்கே?ஏதாவது சொல்றியா?

என்ன வேலை செய்யறேன்கறது முக்கியம் இல்ல,எப்படி உன்கிட்ட நடந்துக்கறேன்கறதுதான் முக்கியம்.

இப்படி நடக்கும் ஊடல் காட்சிகள் ரசனையான கவிதைகள்.
தமிழில் பார்த்தால் பல காட்சிகள் வினோதமாக தெரிகிறது.

இது நம்ம ஆளுதான்

அப்படியா,இன்னா பேரு கண்ணு?

த ட்ரான்ஸ்போட்டர் ஹீரோவை கெஸ்ட் கேரக்டர் எனக்கூறி கூட்டி வந்து நொங்கு எடுத்து விட்டார்கள்.அவரது தலையை கவுண்டமணி செந்திலை நக்கல் அடிப்பது போல் சர்வசாதரணமாக கிண்டலடிக்கிறார்கள்.

உன் தலையை பார்த்தா பானையை கவுத்து வெச்ச மாதிரி இருக்கு.

ஒரு புராஜக்ட்டை செய்ய அழைத்து வரப்படும் 3 திறமைசாலிகளுக்கிடையே நடைபெறும் உரையாடல்கள்

இந்த வேலையை கத்துக்குட்டிங்கதான் செய்வாங்க,என்னை விட்டுடுங்க என அர்னால்டு ஸ்வார்செனேகர் சொல்ல  உடனே இதை செஞ்சா எவ்வளவு பணம் தருவீங்க? என ஜெட்லீ கேட்க கத்துக்குட்டிங்கறதை நிரூபிச்ட்டான் என நையாண்டி செய்ய ஒரே ரகளை தான்.
படத்தின் ஹீரோ சில்வர்ஸ்டர்ஸ்டோலன் மும்பை எக்ஸ்பிரஸ் கமல் மாதிரி கெடப்பில் வருகிறார்.எடுபடவில்லை.படம்,அவர் நடிப்பு எதுவும்.ஒரு அபத்தமான காட்சி.

எதிரியின் பாசறைக்குள் நுழைந்த ஹீரோ &கோ விமானத்தில் பறந்தபடியே ஃபயர் சர்வீஸ் மாதிரி பெட்ரோலை பைப் மூலம் எதிரியின் இடத்தில் தெளிக்கின்றனர்,பின் ஷூட் பண்ணி வெடிக்க வைக்கிறாங்க.அப்போ இவங்க பயணம் பண்ற விமானமும்தானே தீப்பிடிக்கும்?பி எஸ் ஸி பிசிக்ஸ் சில் அரியர் வெச்சவன் கூட இதை சொல்லிடுவானே.சூப்பர் ஹிட் படங்கள் குடுத்த  இவருக்குத்தெரியாமல் போன மாயம் என்ன?

படத்தின் முக்கிய சொதப்பல் ஹீரோயின்.குதிரை மாதிரி நீள் முகம்.காமரா எந்த கோணத்தில் அவரை காண்பித்தாலும் ரசிக்க முடியவில்லை.படத்தோட கதையே ஆபத்துல மாட்டி இருக்கற காதலியை காதலன் நண்பர்களோட வந்து காப்பாத்தறதுதான் அப்படிங்கறப்போ நல்ல ஃபிகரா போட்டிருக்க வேணாமா?
இடைவேளைக்குப்பிறகு யார் யாரை  சுடறாங்க, யார் தப்பிச்சாங்க ஒண்ணும் புரியல.கிராஃபிக்ஸ் காட்சிகள் ஜூராசிக்பார்க் மாதிரி இருக்கும்னு பார்த்தா நம்ம ராமநாராயணனின் ஆடிவெள்ளியை விட மோசமாக இருக்கு.

க்ளைமாக்சில் ஜெட்லீ பேசும் டயலாக் நல்லாருக்கு.நான் ரொம்ப உயரனும்னு நினைச்சேன்.ஆனா சண்டை போடறப்பக்கூட எம்பி எம்பிதான் சண்டை போட வேண்டி இருக்கு.ஆண்டவன் என்னை குள்ளமாவே படச்சிட்டான்.
சரி ,படத்தைத்தான் கெடுத்துக்குட்டிச்சுவர் பண்ணிட்டோம்,ஏதாவது கண்ணுக்கு குளுமையா சீனாவது வெப்போம்கற பேசிக் நாலெட்ஜ் கூட டரக்டருக்கு இல்ல.நாம் என்ன செய்வது?ஸ்டில்களில் பார்க்கும் அளவு கூட திரையில் இல்லை.
இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா பெரிய ஹீரோ படம்னாலும் ரிசல்ட் கேட்டுட்டுதான் போகனும்.

8 comments:

Unknown said...

//இடைவேளைக்குப்பிறகு யார் யாரை சுடறாங்க, யார் தப்பிச்சாங்க ஒண்ணும் புரியல.கிராஃபிக்ஸ் காட்சிகள் ஜூராசிக்பார்க் மாதிரி இருக்கும்னு பார்த்தா நம்ம ராமநாராயணனின் ஆடிவெள்ளியை விட மோசமாக இருக்கு.//

அவ்வளவோ மோசமா ..?

Anonymous said...

ஹீரோ எல்லாம் ரொம்ப வயசானவங்க போல ஹீரோயின் லட்டு மாதிரி இருக்கு.விமர்சனம் நன்றாக தொகுத்து இருக்கீங்க

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க செந்தில் அண்ணே,உட்கார முடியல

சி.பி.செந்தில்குமார் said...

வாப்பா சதிஷ்,கடை விரித்தேன் கொள்வாரில்லை,பதிவு இட்டேன் படிப்பார் இல்லை

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தலைவா, நீங்க சாந்தனு நடித்த ஆயிரம் விளக்கு படத்தி எப்படி விமர்சனம் செய்யப் போறிங்களோன்னு இப்பவே எனக்கு பயம் வந்துடுச்சு. உங்களை கெஞ்சிக் கேட்டுக்கறேன்... உங்க வாயால அந்தப் படத்தை உயர்வா கருத்து சொன்னா அது பலிக்கும். இப்போதைய சினிமா செண்டிமெண்ட் சி.பி. பரவா இல்லையில்லைன்னு சொல்லிட்டா அந்தப் படம் வெள்ளிவிழா படம் தான்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான கருத்து ஒன்னை இப்பவே மூன் வைக்கிறேன். எந்திரன் படம் வந்ததும் எல்லோரும் படம் பாக்காமலே ஆஹா ஓஹு என்று விமர்சம் எழுத இப்பவே ரெடிப் பண்ணி வச்சுட்டாங்க என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி. நடுநிலையோட விமர்சம் எழுதப் போவது நீங்கள் தான் என்பது என் ஆணித்தரமான கருத்து. நண்பா... நீ எழுதப் போகும் விமர்சனம் தான் உண்மையாக இருக்க வேண்டும். அதற்கு இப்போதே தயாராகு. நாம் யார் என்பதை இந்த பதியுலத்துக்கு காட்டுவோம்!
--

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க பூ,சித்து பிளஸ் 2 வை விட்டுட்டீங்களே?குறை சொல்வது என் நோக்கமல்ல,நிறை இருந்தால் சொல்லப்பட வேண்டும்,குறை இருந்தால் களையப்பட வேண்டும் என நினைப்பவன் நான் ,வருகைக்கு நன்றி.15 8 10 உங்களுக்கு யோக தினம்.வாரமலர்ல,வசந்தத்துலனு கலக்கறீங்களே,வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

நல்ல பார்வை சீபி...