Tuesday, December 06, 2011

வெட்டிப்பயல் எழுதிய குட்டி குட்டி ஜோக்ஸ்


1.எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான்! - நமிதா # எனக்குப்பிடிச்ச சிறந்த முதல்வர் நான் தான் - கலைஞர்


----------------------------------------

2 .டியர் டேமேஜர், நீங்க ஃபிகர்ங்க கிட்டே கடலை போடறப்ப நாங்க கண்டுக்கறோமா? ஆனா நாங்க அந்த புனிதப்பணியை செய்யறப்ப உங்களுக்கு ஏன் பொறுக்கறதில்லை?



------------------------------------------

3 கோவை , திருப்பூர் மக்கள் கிணறு, போரிங்க் பைப் போன்ற நிலத்தடி நீரை பருகுவதை தவிர்க்கவும்.என்புருக்கிநோய் அபாயம், சுகாதாரத்துறை எச்சரிக்கை

------------------------------------

4 நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த தஞ்சை பிச்சைக்காரர் # நில மோசடி வழக்குல இவரையும் கைது பண்ணிடாதீங்கய்யா பாவம்

-----------------------------------

5  சீதையாக நடித்த ராமராஜ்யம் படம் ப்ளாப் ,  நயன்தாரா அப்செட் # நல்ல வேளை, ஹிட் ஆகி இருந்தா கண்ணகியா ஒரு படத்துல நடிக்க இருந்தாங்களாம்

-------------------------------------


6 கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவேன்: கனிமொழி நம்பிக்கை # அய்யய்யோ, அப்போ அரசியலை விட்டே விலகப்போறீங்களா? மேடம்

-----------------------------------




7. மேனேஜர் சார்! உங்களுக்கு ஒரே ஒரு சம்சாரம் தானா?

ஆமா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை

-------------------------------------


8. நம் காதல் விழாவின் முதல் பந்தியில் உன் மொத்த அன்பையும் பரிமாறி விட்டாயே!எதிர் காலத்திற்கு இருப்பு இருக்குமா?

-----------------------------------------

9. ஒரு நல்ல படைப்பை உருவாக்குவது மிக எளிது,அந்த படைப்பை நம் பெற்றோர்களிடமும் காட்டி பெருமைப்படத்தக்கதாய் இருந்தால் போதும்



---------------------------------------

10. ஒரு நகைச்சுவை எழுதுவது என்பது மிக எளிது.. யார் மனதையும் புண் படுத்தாமல் கவர வைப்பதே அரிதானது ,அழகானது

--------------------------------




11. உன்னை மறக்க நினைப்பதை மறந்துவிடுகிறேன் அடிக்கடி..


அப்டியா? உருப்பட்ட மாதிரிதான் - பாட புத்தகம்

------------------------------------------

12. உலகத்துலயே மிக அசுத்தமான சூழலில் பராமரிக்கப்படும் பிரபல கோயில் ஸ்தலம் சபரி மலை தான் # ஐயப்பா சாமியா? ஐயோ அப்பா சாமியா?
----------------------------------

13. 24 மணிநேரமும் மக்களுக்காக யோசிக்கிற ஒரே தலைவர் கலைஞர் - குஷ்பூ # ஆமா, மேடம் , பல மக்களைப்பெற்ற மகராசர் ஆச்சே?

------------------------------------

14. ஆள்மாறாட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் 300 கேள்விகள்! # கடைசிக் கேள்வி! , XQS மீ! நீங்க கல்யாணசுந்தரம்தானே?!

--------------------------------------------

15. சமையல் கலையின் வெற்றி என்பது நாக்கின் துணை இல்லாமல் நாசியின் மூலம் வாசம் நுகர்ந்தே ருசியின் தரத்தை உணர்வதே

--------------------------------------




16.அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தி.மு.க. முடிவு # மானம் மிகு தமிழ் இனத்தலைவர்க்கு நன்றி!அப்புறம் தலைவரே, பொண்ணுக்கு ஜாமீன் கிடைச்சுடுச்சு போல?

---------------------------------

17 தவறான பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண்கள் தயவு செய்து மனசாட்சியுடன் செயல்பட்டு மனைவியுடன் கூடுகையில் காண்டம் உபயோகிக்கவும் # எய்ட்ஸ் தினம்

-------------------------------------

18. ஈரோடு மேயர் மல்லிகா அடியாட்களுடன் காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து அராஜகம்! # NKKP ராஜா, விடாதீங்க, போட்டி ரவுடிய வளர விடாதீங்க

-------------------------------------
19 தமிழ்நாடே ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் இப்போதைய நிலை என்ன ஆச்சு?-கேப்டன் # மப்புல ஓவரா உளறாதீங்கண்ணே, நீங்கதானே போடச்சொன்னிங்க?

----------------------------------------

20 மலையாள படங்களில் நடிப்பது ஈஸி : கனிகா! # ஹி ஹி எஸ் மேடம்,காஸ்ட்யூம் டிசைனருக்குக்கூட வேலை இல்லை

----------------------------------------------

funny pose dog-yoga
Dog In A Lotus Pose Meditating

21 தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசவில்லை -நடிகர் கார்த்தி #ஆமாமா, நானும் கேட்டேன், ரொம்ப கேவலமா எல்லாம் பேசலை, லேசாதான் தாக்குனாரு

------------------------------------

22  டிச.2 முதல் வித்யாபாலனின் கவர்ச்சி விருந்து!! த டர்ட்டி பிக்சர் #என்னய்யா டைட்டில் இது? பியூட்டி பிக்சர்னு வெச்சு அழகியலை கூட்ட வேணாம்?

---------------------------------------

23 முல்லைப் பெரியாறு பிரச்னையில் மக்கள் அமைதி காக்க வேண்டும்-கலைஞர் # ஆமா, நாங்க எல்லாரும் ஊமையா இருக்கோம், நீங்க ஆமையா புகுந்து கெடுங்க

------------------------------------------

24 கலைஞரும், ஜெயலலிதாவும் என் இரு கண்கள் - நமீதா. # அப்போ மொத வேலையா ஆபரேஷன் பண்ணி நொள்ள கண்ணை மாற்றி  நல்ல கண்ணா வைங்க 

-----------------------------------------

25. தீமைக்கும் நன்மை செய் - போராளி பட பஞ்ச்  # அதனாலதான் நாங்க கலைஞரையும், ஜெவையும் மாற்றி மாற்றி சி எம் ஆக்கறோம்?

--------------------------------------

டிஸ்கி - படங்கள் ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள்

Monday, December 05, 2011

புரட்சிப்பதிவருடன் ஒரு நேர் காணல் - காமெடி கும்மி கலாட்டா

சார்.. இங்கே புரட்சிப்பதிவர் எங்கே குடி இருக்கார்? நான் அவரை பார்க்கனும்... 

அதோ நேரா போனா ஒரு காஃபி கஃபே வரும் பாருங்க.. அந்த கடைக்கு எதிர்ல தான் குடி இருக்கார்..

சபாஷ், பலே ,காபி பேஸ்ட்டுக்கு எதிரானவர்ங்கறதால காஃபி ஷாப்க்கு எதிர்லயே குடி இருக்கார் போல..

அக்கா, வணக்கம்க்கா ..அண்ணன் இருக்காருங்களா?

அவர் தூங்கிட்டு இருக்காருப்பா.. 

என்னது? தூங்கறாரா? அவர் ஒரு விழிப்புணர்வுப்பதிவர் ஆச்சே? எதுக்கு தூங்கறாரு?எழுப்புங்க.. 

தம்பி.. மதியாதார் தலை வாசல் மிதியாதேன்னு பழமொழி தெரியுமில்ல.. என் வீட்டுக்கு எதுக்கு வந்தே?

அண்ணே, அக்காவை கேட்டுப்பாருங்க.. நான் வாசப்படியை மிதிக்கலை, தாண்டித்தான் வந்தேன்.. 

சரி சொல்லு இன்னா மேட்டரு?

நீங்க தான்னே சொல்லனும்.. உங்க பிளாக்ல உங்க ஃபோட்டோ பார்த்தேன், சூப்பரா இருக்குண்ணே.. அது உங்க 25 வயசுல எடுத்ததுங்களா?

ச்சே, ச்சே  அது என் சொந்த முகம் கிடையாது.. கூகுள் ல போய் காபி பண்ணி என் பிளாக்ல பேஸ்ட் பண்ணிக்கிட்டேன்.

அடடா.. என்னண்ணே.. ஓப்பனிங்க்லயே டக் அவுட் ஆகி சொதப்பறீங்க? நீங்கதான் காபி பேஸ்ட்க்கு எதிரானவர் ஆச்சே.. சொந்த முகத்தையும், உங்க ஃபோன் நெம்பர் , அட்ரஸ் எல்லாம் போடலாமே? அதானே வீரனுக்கு அழகு? இப்போ பாருங்க நான் ஒரு டம்மி பீசு.. நானே என் ஃபோட்டோ , ஃபோன் நெம்பர் எல்லாம் தில்லா போட்டிருக்கேன், நீங்க ஏண்ணே பம்பறீங்க? ஆமா, இதானே உங்க டைரி.. என்னமோ எழுதி இருக்கே?

அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன்  முதற்றே உலகு-

இது திருக்குறள் ஆச்சே.. ஆல்ரெடி திருவள்ளுவர் எழுதிட்டாரே, நீங்க ஏன் மறுபடி அதை எழுதினீங்க?

லூஸ் ,மாதிரி பேசாதேப்பா.. நம்ம முன்னோர்கள் எழுதுன நல்ல விஷயங்கள் எல்லாருக்கும் போய்ச்சேர வேண்டாமா?

என்னண்ணே, உங்களுக்கு ஒரு நியாயம்  ஊருக்கு ஒரு நியாயம்.. வேடந்தாங்கல் கருணையும், கவிதை வீதி சவுந்தரையும் திட்டி  8 போஸ்ட் போட்டிருக்கீங்களே? அது ஏன்?

ஹி ஹி எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல் தான்.. ஈசியா ஹிட்ஸ் வாங்கறாங்க..மற்ற பதிவர்கள் எல்லாம் நல்ல போஸ்ட் எழுதியும் ஹிட் ஆக மாட்டேங்குது.. 

சரி... இதென்ன நோட்டு?

அதுவா? எங்க மேரேஜ்க்கு சொந்தக்காரங்க மொய் வெச்சாங்க இல்லையா அந்த நோட்டு, யார் யார் எவ்வளவு மொய் வெச்சாங்க?ன்னு கணக்கு.. நான் அவங்க வீட்ல விசேஷம் நடக்கறப்ப பதில் மொய் வைக்கனும் இல்லையா? அதுக்குதான்..

ஓஹோ.. இதே ஃபார்முலாவை அவங்க ஃபாலோ பண்ணுனா மட்டும் ஏன் திட்டறீங்க? பிளாக் உலகம் ல 10 பேர் பிளாக் போய் நாம கமெண்ட் போட்டாத்தான் அவங்க நம்ம பிளாக் வருவாங்க.. நாம ஓட்டு போட்டாத்தான் அவங்க ஓட்டு போடுவாங்க.. இதுல என்ன தப்பு கண்டு பிடிச்சீங்க?

அதில்லை, 1689 பேர் பிளாக் உலகத்துல இருக்காங்க, ஆனா இந்த 3 பேர் மட்டும் டாப் 20 ல வந்துடறாங்க, அதான் வயிற்றெரிச்சலா இருக்கு.. அதுவும் காபி பேஸ்ட் போஸ்ட்டா இருக்கு.. 

சரி, காபி பேஸ்ட் சரியா தப்பா?ங்கற விவாதம் அப்புறம் வெச்சுக்கலாம், உண்மைத்தமிழன் அண்ணன் கூட ஜூனியர் விகடன் போஸ்ட்டை ரெகுலரா போடறார்..  ஆரூர் மூனா செந்தில் கூட ஒரு போஸ்ட் சொந்த போஸ்ட், ஒரு போஸ்ட் காபி பேஸ்ட் போடறார்.. அவங்களை எல்லாம் எதுவுமே சொல்லாம ஏன் குறிப்பிட்ட இந்த 3 பேரை மட்டும் குறி வைக்கறீங்க?

நீ லூஸாப்பா.. அவங்க 2 பேரையும் பார்க்கவே பயமா இருக்கு.. எனக்கு பயந்த சுபாவம் வேற.. ஆனா கருண், சவுந்தர் எல்லாம் புள்ளப்பூச்சிங்க.. பயந்துக்குவாங்க.. அதான்

சரி.. நீங்க இதுவரை எத்தனை  போஸ்ட் போட்டிருக்கீங்க?

23

அதுல மக்கள்க்கு யூஸ் ஆகற மாதிரி போஸ்ட் எத்தனை?

ஹி ஹி  எல்லாமே அடுத்தவனை குறை சொல்லி போட்ட போஸ்ட் தான் 

சரி, என் போஸ்ட் இதுவரை எத்தனை தெரியுமா? 912.. அதுல ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன், அவள் விகடன்  காபி பேஸ்ட் பதிவு மொத்தம் 230.. மீதி எல்லாமே சொந்தப்பதிவுதான் ஜோக்ஸ், சினிமா விமர்சனம் , கட்டுரைன்னு போகுது..இதுல உங்களுக்கென்ன கஷ்டம்? சொல்லுங்க?

அதாவது ஒருத்தனே நெம்பர் ஒன்னா வர்றது எனக்குப்பிடிக்கலை... எல்லாருக்கும் வாய்ப்பு வேணும்.. 

அண்ணே, ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வரனும்னா முதல்ல ஓடி வர்றவனை விட வேகமா ஓடனும்.. அதை விட்டுட்டு அவன் காலை வாரக்கூடாது.. எங்களுக்கும் குடும்பம் இருக்கு, ஆஃபீஸ் வேலை இருக்கு.. எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு பிளாக் வேலையையும் பண்றோம்.. சும்மா திடீர்னு யாரும் ஜெயிக்க முடியாது.. இதுலயும் உழைப்பு இருக்கு.. 2010 ஜூலை 17 ல பிளாக் உலகத்துக்கு வந்தேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு எழுதிட்டு இருக்கேன்.. அடுத்தவங்க வம்பு தும்புக்கு போறதில்லை.. நீங்க ஏண்ணே இப்படி இருக்கீங்க? ஏதாவது மன வியாதியா? டாக்டரை போய் பாருங்கண்ணே?

ஆங்க்.. ஒரு குறை கண்டு பிடிச்சுட்டேன்,,.. டைட்டில் ஏன் கிளாமரா வைக்கறே?இதுக்கு பதில் சொல்லு.. 

அண்ணே.. ஒரு சினிமாக்கு டைட்டில் எப்படி முக்கியமோ.. போஸ்டர் டிசைன் எப்படி முக்கியமோ அதே மாதிரி ஒரு பதிவுக்கு டைட்டில் ரொம்ப முக்கியம், மக்களை சுண்டி இழுக்கற மாதிரி டைட்டில் வைக்கனும்.. இது எல்லாம் பேசிக் லெசன்.. அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமாண்ணே. கருண், கவிதை வீதி சவுந்தர் 2 பேரும் ஆவரேஜ் பிளாக் ஹிட்ஸ் 1000 டூ 2000 தான், நீங்க அவங்களை தாக்கி போஸ்ட் போட்ட அன்னைக்கெல்லாம் 3000 ஹிட்ஸ் ஆகிடுச்சாம்.. 

அய்யய்யோ.. எனக்கு வயிறு எரியுதே.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் அவங்களை தாக்கியே இருக்க மாட்டேனே..

இன்னும் சொல்றேன் கேளுங்க . ஒரு பிரபல பதிவர் தன்னோட பஸ்ல என் போஸ்ட் லிங்க் குடுத்து எவ்வளவு மோசமா விமர்சனம் எழுதி இருக்கான் பாருங்க.. அப்டினு கமெண்ட் போட்டாரு.. உடனே அதுல அப்படி என்ன இருக்குன்னு பார்க்க அவரோட ஃபாலோயர்ஸ் 2000 பேரும் வந்து என் ஹிட்ஸ்ஸை ஏத்துனாங்க.. ரொம்ப நன்றிண்ணே அப்டின்னு நான் கமெண்ட் போட்டேன் , உடனே உங்களை மாதிரியே அவரும் பதறி அந்த லிங்க்கை அவர் பஸ்ல இருந்து தூக்கிட்டார்..

என் நல்ல எண்ணத்தை புரிஞ்சுக்காம பேசாதே.. நல்ல நல்ல பதிவுகள் அடையாளம் காணப்படாமலேயே இருக்கு.. உன்னை மாதிரி குப்பை ஆளுங்கதான் திரும்ப திரும்ப சூடான இடுகைல வர்றீங்க.. அதை தடுக்கனும்..

ரைட்டு.. அதுக்கு ஒரு ஐடியா இருக்கு.. உங்களூக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு.. நீங்க நல்ல இடுகைகளை மக்களூக்கு அடையாளம் காட்டுங்க.. எதெல்லாம் நல்ல இடுகையோ அதுக்கு லிங்க் கொடுத்து வலைச்சரம் மாதிரி செயல்படுங்க, 4 பேருக்கு நல்லது நடக்கும், அவங்களூக்கும் ஹிட்ஸ் கிடைக்கும்..

சாரி , அது என் வேலை  இல்லை.. எனக்கு யாரையாவது ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கனும்.. இப்போ உன் பிளாக்ல சினிமா விமர்சனம் போடறப்ப எதுக்கு கூகுள்ல போய் நடிகைங்க ஃபோட்டோவை போடறே?


அண்ணே, இதுக்காக நான் சென்னையோ, மும்பையோ  போயா ஃபோட்டோ எடுக்க முடியும்.. கூகுள்ல தான் எடுக்க முடியும்..


சரி.. எல்லாரும் வாரம் 5 போஸ்ட்  போடறாங்க, நீ மட்டும் ஏன் டெயிலி 2 போஸ்ட் போடறே? உன்னால பல தரமான பதிவர்கள் வெறுத்துப்போய் பிளாக் எழுதறதையே விட்டுட்டாங்க..

அண்ணே.. லூஸ் மாதிரி பேசாதீங்க.. ராமநாராயணன் மாசம் ஒரு  படம் எடுத்து ரிலீஸ் பண்றதால ஷங்கரோ, மணி ரத்னமோ சினி ஃபீல்டை விட்டு போய்ட்டாங்களா? அவங்கவங்களுக்கு உள்ள மரியாதை அப்படியே தான் இருக்கும்.. டெயிலி 2 போஸ்ட் போடறதால ஒருத்தன் நல்ல பதிவர்னு பேர் வாங்கிட முடியாது.. குறிஞ்சி மலர் போல் அரிதாக பதிவு போடுவதால் ஒரு நல்ல பதிவரை யாரும் குறை சொல்லவும் முடியாது

ஓஹோ, இத்தனை வியாக்கியானம் பேசறியே.. அப்புறம் ஏன் தமிழ்மணம் ரேங்கிங்க் வேணும்னு அலையறே.. அதை விட்டுட்டு நீ பாட்டுக்கு இருந்தா எனக்கு வயிறு எரியாதுல்ல?


அண்ணே.. ஸ்கூல்ல படிக்கறப்பதான் ஒழுங்கா ரேங்க் எடுக்க முடியல.. இங்கயாவது எடுக்கலாம்னுதான் , இதெல்லாம் ஒரு ஜாலிதான்.. இதுனால யாருக்கும் 10 பைசா லாபம் இல்ல.. அப்படி ஏதாவது வருமானம் இருந்தாலாவது உங்க குய்யோ முறையோ அரற்றலுக்கு ஒரு  காரணம் சொல்லலாம்..

சரி.. என் பிளாக்ல ஒரு எதிர் பதிவு போடறேன்.. அங்கே சந்திக்கலாம்..

பெண்களும், பொசஸிவ்னெசும் ( ஜோக்ஸ்)

1.அளவுக்கு மீறி அணுவளவும் கூடப் பேசினால் பெண்களுக்குப் பிடிப்பதில்லையாமே?

அப்டி இல்ல.. அனு கூட பேசினா பிடிக்காது, பொசசிவ்னெஸ்

-------------------------------

2. அளவுக்கு மீறிப் பேசினால் பெண்களுக்குப் பிடிப்பதில்லையாமே?

சொல்றதை மட்டும் கேட்டுக்கனும், எதிர்ப்பேச்சு பேசாம இருந்தா பிடிக்கும்

-------------------------------------

3. கீச்சுகளை கோர்ப்பதற்கான தளம் எதுவென சொல்லமுடியுமா? ஏன்?

இன்னும் என்ன கோர்த்து விடப்போறீங்க? அவ்வ்வ்

------------------------------------

4.வர்மக்கலையைப்பற்றி ஒரு லூசுப்பையன் பார்வைல கதை சொல்லி இருக்கீங்களே? என்ன டைட்டில்?



பேக்கு வர்மம்

--------------------------------------------

5. ஹர்பஜன்சிங்க் - சித்தி ராதிகா என்ன ஒற்றுமை?

அவர் சரத்பவார்க்கு அறை விட்டவரு, இவர் சரத் குமார்க்கு ... ஹி ஹி

--------------------------------

6. படத்தோட ஹீரோவை ஏன் பாட்டெழுத சொல்றீங்க? 

இல்லைன்னா அவர் ஹீரோயின் கூட கடலை போட்டுட்டு இருக்காரே?

-----------------------------------

7. உங்க படத்தை ஏன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்றீங்க?  

சனி, ஞாயிறு 2 நாள் லீவ் வருதே, அந்த அளவாவது ஓடட்டும்னுதான்

-----------------------------------

8. என் சம்சாரம் கிழிச்ச கோட்டை  நான் தாண்டவே மாட்டேன்..

ஏன்?


  தாண்டினா அப்புறம் அவ ருத்ர தாண்டவம் ஆடிடுவா

-----------------------------------------

9. ஸ்வீட்ஸ்டால்காரர் சினிமா பைத்தியமாம்.. 

அதுக்காக அமலா பால் கோவா செண்ட்டர்னு கடைக்கு பேர் வைக்கனுமா?

--------------------------------------

10. கோவிலில் எப்போது ஃபிகர்  உள்ளே நுழைந்ததோ அப்போவே  என் பக்தி  வெளியே போய்விட்டது

----------------------------------

11. ஒரு திருமணம்  உங்க லைஃபையே மாத்திடும்.. ரெண்டு திருமணம்  உங்க ஒயிஃபையே மாத்திடும்

-----------------------------------

12. இளவரசர் ஏன் சிங்கத்தை கட்டிப்பிடிச்சு போஸ் தர்றார்?

அரியணை ஆசை வந்ததை சிம்பாலிக்காக  அரியை ( சிங்கத்தை) அணைச்சு காட்றார்..

------------------------------------------------

13. பிரியாணில சரக்கு வாசம் அடிக்குதே?

டியர், நீ தானே கொஞ்சம் பட்டையை போடச்சொன்னே?

----------------------------------


14. பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் சரித்திர வெற்றி பெறும்கறாரே? அது  கொடி காத்த திருப்பூர்க்குமரன் வரலாறா?


--------------------------------------


15. கரண்ட் இருக்கும்போதே நெட்டில் பிட்டுப்படம் பார்த்துக்கொள் # நாங்களும் எதிர் ட்வீட் போடுமோமில்லை

---------------------------------

16. ஒன் சைடு லவ் தெரியும், அதென்ன ஒன் சைடு சைட்டு?  ஹி ஹி மாப்ளைக்கு ஒரு கண் தான் தெரியும் # டோரிக்கண்ணாயிரம்

------------------------------


17. மூணாறில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் கடைசியாக கேட்ட பாடல் - ஒய் திஸ் கொலை வெறி கொலைவெறி டி?

---------------------------------


18. மாஸ் ஹீரோ , மாஸ்க் ஹீரோ என்ன வித்தியாசம்? 

மாஸ் ஹீரோன்னா செட்டப்பை மட்டும் மாத்துவாரு, மாஸ்க் ஹீரோன்னா கெட்டப்பை மாத்துவாரு

---------------------------------------


19. கூட்டுக்குடித்தன தம்பதிகள் கூடலுக்கான அழைப்பிற்கு சங்கேத வார்த்தைகளை பரிமாறிக்கொள்வதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள் # அவதானிப்பு

---------------------------------

20. நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா #  என் மனசை திறந்தா பலரும் காம்ப்ரமைஸ்க்கு வர வேண்டி இருக்கும் - சோனா 

--------------------------------

21.எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான்! - நமிதா # எனக்குப்பிடிச்ச சிறந்த முதல்வர் நான் தான் - கலைஞர்


----------------------------------------

22. சென்னை வருகிறார் கனிமொழி: பலமான வரவேற்பு காத்திருக்கிறது # சென்னை வரும் வெண்ணையே!195 நாட்கள் ஜெயிலில் களி தின்னியே! ஊழல் அன்னையே!

---------------------------------------

23. பார் இருட்டா இருந்தா அது சாதா டாஸ்மாக், பிரைட்டா  ஒரு டியூப்லைட் எரிஞ்சா அது எலைட் ஒயின் ஷாப் ?

--------------------------------

24. கேரளாவுக்கு புத்தி கூறும்படி பிரதமருக்கு ஜெ வேண்டுகோள்  # அவருக்கே புத்திமதி சொல்ல ஆயிரம் பேர் Qல, அவர் எங்கே அடுத்தவங்களுக்கு சொல்ல?

---------------------------------

25. வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டால் நம் உடம்புக்கு நல்லது, வாழை இலையையே சாப்பிட்டால் வாழை விவசாயிக்கு நல்லது # கோக்குமாக்குதத்ஸ்

-----------------------------------

26. இப்பலாம் ஏன் படங்கள் வியாழக்கிழமை ரிலீஸ் பண்றாங்க?

வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனா 3 நாள் தான் ஓடுது, வியாழன் ரிலீஸ் செஞ்சா 4 நாள் ஓடுமே? அதான்

-------------------------------------

27. அங்காடித்தெரு அஞ்சலியின் நிஜ பெயர் பாலா திரிபுர சுந்தரி # பொது நலன் கருதி வெளியிடுவோர் ஜி கே கோவிந்தசாமி

-------------------------------------

28. பெண்கள் வாகனம் ஓட்டினால் கன்னித்தன்மை இழந்துவிடுவார்கள்- சவூதி அரேபியா மத சபை # புருஷன் பேரு மயில்வாகனமா இருக்கும்யா லூசே!

-----------------------------------------

29. ஒரு நல்ல படைப்பை உருவாக்குவது மிக எளிது,அந்த படைப்பை நம் பெற்றோர்களிடமும் காட்டி பெருமைப்படத்தக்கதாய் இருந்தால் போதும்



---------------------------------------

30. ஒரு நகைச்சுவை எழுதுவது என்பது மிக எளிது.. யார் மனதையும் புண் படுத்தாமல் கவர வைப்பதே அரிதானது ,அழகானது

--------------------------------

31. உன்னை மறக்க நினைப்பதை மறந்துவிடுகிறேன் அடிக்கடி..


அப்டியா? உருப்பட்ட மாதிரிதான் - பாட புத்தகம்

------------------------------------------


32. யார் எந்த கருத்தை சொன்னாலும் அதை அப்படியே ஏத்துக்கிட்டா அவன் சுய புத்தி இல்லாதவன், எதையும் ஏத்துக்கலைன்னா அவன் சொல்புத்தி இல்லாதவன்

----------------------------------

33. 24 மணிநேரமும் மக்களுக்காக யோசிக்கிற ஒரே தலைவர் கலைஞர் - குஷ்பூ # ஆமா, மேடம் , பல மக்களைப்பெற்ற மகராசர் ஆச்சே?

------------------------------------

34. ஆள்மாறாட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் 300 கேள்விகள்! # கடைசிக் கேள்வி! , XQS மீ! நீங்க கல்யாணசுந்தரம்தானே?! ( ப .பி)

--------------------------------------------

35. சமையல் கலையின் வெற்றி என்பது நாக்கின் துணை இல்லாமல் நாசியின் மூலம் வாசம் நுகர்ந்தே ருசியின் தரத்தை உணர்வதே

--------------------------------------


Sunday, December 04, 2011

ஆ . ராசா குறுந்தகடு ( ஜோக்ஸ் )


1. ஏய் மிஸ்டர் , நடிகையோட பிறந்த நாளை கொண்டாடறியே வெக்கமா இல்ல? 

மேடம்.. நடிகையை கொண்டாடுனாத்தான் தப்பு!!! # சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்

---------------------------------

2. கணவனின் கறுப்புப்பக்கங்களை மனைவியால் ஜீரணித்துக்கொள்ளும் அளவு , மனைவியின் கறுப்புப்பக்கங்களை கணவனால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை

------------------------------------

3. என் மனைவியை அக்கா என அழைக்கும் பக்கத்து வீட்டு ஃபிகரே.. மகிழ்ச்சி.. நிற்க.. என்னையும் ஏன் அண்ணா என அழைத்து குழப்புகிறாய்?  # மச்சினியே

------------------------------------

4. கூகுள் பஸ் ஏன் க்ளோஸ் பண்றாங்க? 

பஸ் பயணம் பலருக்கு ஒத்துக்கறதில்லையாம், வாமிட் ஃபீலிங்க், அதனால கூகுள் ரயில் விடப்போறாங்களாம்

--------------------------------

5. கலைஞரின் ஆட்சிக்காலத்தில் கலைமாமணி பட்டம் வாங்கிய சிகாமணிகள் அனைவரும் போயஸ்-க்கு வந்து அதை ரிட்டர்ன் செய்யவும் - ஜெ அதிரடி அறிவிப்பு

----------------------------------



6. வெந்நீர்க்குளியல், காதல் இரண்டும் ஒன்று தான்.. இதமாக இருந்தாலும் சோம்பேறித்தனத்தை தருகிறது

-----------------------------------

7.பெண் குழந்தைகளே பெரியவர்கள் ஆனபின்  தன் பெற்றோரை கடைசி காலம்  வரை காக்கிறார்கள், கவனிக்கிறார்கள்

-------------------------------

8. ஒரு பெண்ணிடம் எத்தனை நகைகள் உள்ளன என்பதை  ஏதாவது திருமண விசேஷத்தின்போது அறியலாம்

---------------------------------

9. TRக்கும் STRக்கும் உள்ள வித்தியாசம்? 

டி ஆர் தாடி வெச்சிருப்பார்.. எஸ் டி ஆர்  அப்பப்ப ஒரு லேடியை வெச்சிருப்பார்

------------------------------------

10. ஆண்கள் சொல்ல வருவதை காது குடுத்துக்கேட்பதில்லை பெண்கள், அவர்கள் காதை கொடுப்பது கணவன்  கம்மல் வாங்கித்தரும்போதுதான்

-----------------------------------



11. உங்க பையனுக்கு சொம்புன்னு பேர் வெச்சிருக்கீங்களே? ஏன்?  

சிம்புன்னு பேர் வெச்சா மட்டும் நம்ம பேச்சை கேட்டு உருப்படவா போறான், விடுங்க

-------------------------------------

12. கணவன் துணி துவைத்து காயப்போடுகிறான், மனைவி கணவனை துவைக்கிறாள், சில சமயம் கணவனை காயப்போடுகிறாள்

---------------------------
13. அழகு இல்லாதவர்கள் அழகு நிலையம் போகிறார்கள். # ஆண் = இயற்கை அழகு

---------------------------

14. உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியது ஊறுகாய், அதை கண்டு பிடித்தது கண்டிப்பாக ஒரு பெண்ணாகத்தான் இருக்கும்.

----------------------------

15. ஜெ- நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை என்னாலே கூட மாத்த முடியாது.

.ஜட்ஜ் - மேடம், நீங்க இன்னுமா நடிகையா ?பஞ்ச் டயலாக் பேச? சி எம்!!

-----------------------------------


16. ஆண்கள் அழகு நிலையம் செல்வது முடியை திருத்த மட்டுமே ( பெரும்பாலும்)பெண்கள் அழகு நிலையம் செல்வது பர்ஸை வீக்காக்கி ஆணை வருத்த மட்டுமே

---------------------------------------

17. குழந்தைகளை நேசிப்பவர்கள், குழந்தைகள் மீது அதீத பாசம் வைப்பவர்கள் என மனிதர்களை இரு பிரிவாக பிரிக்கலாம்

----------------------------------------

18. அன்புள்ளம் இல்லாத ஆண்கள் என உலகில் யாரும் இல்லை, அன்பை வெளிப்படுத்தத்தெரியாத ஆண்கள் வேண்டுமானால் இருக்கலாம்

-------------------------------

19. திருட்டு டிவிடிக்கு ஒரு உத்தமமான தமிழ்பேரு வையுங்கப்பா..

ராசா குறுந்தகடு

-----------------------------------

20. பெண்ணைக்கண்டதும் அவளைக்கவர ஏதாவது செய்ய முற்படுவதே ஆணின் பெரிய பலஹீனம்

----------------------------------------------


Saturday, December 03, 2011

ரஜினி-யின் அண்ணாமலை ரீ மேக் ( ஜோக்ஸ்)

Kunming Lake, Beijing, China
Photo: Reflections of trees on lake
1,ஹீரோயின் டெயிலி ஆஃபீஸ்க்கு பஸ்ல தான் போறா..

ஓஹோ.. பெரிய பட்ஜெட் படம் போல.. 

---------------------------------------------

2. கணக்கு டீச்சர் பயங்கர அரசியல் அறிவு உள்ளவர்னு எப்படி சொல்றே?

50 கோடி  ஊழல் பண்ணுனதுக்கு 5 வருஷம்,  ஜெயில் தண்டனைன்னா 1 3/4 லட்சம் கோடி  ஊழல் பண்ணுனதுக்கு எத்தனை வருஷம்தண்டனை?ன்னு கேட்கறாரே?

-----------------------------------------

3. இன்னைக்கு நியூஸ் கேட்காம விட்டுட்டேன்.. 

அதனால என்ன?

என்னென்ன பொருள் இன்னைக்கு விலை ஏறுச்சுன்னு தெரியலையே?


----------------------------------------------

4. டைரக்டர் சார்... உங்க படத்துல நம்ப முடியாத சீன் இருக்கே?

எப்டி?

பெரிய தொழில் அதிபரா  இருக்கற ஹீரோ ஒரே பாட்டுல கஷ்டப்பட்டு உழைச்சு பால்காரரா மாறிடறாரே? (டைட்டில் ஜோக்)

-------------------------------------------------

5.  பால் விலையை ஏத்துனதுக்கு கட்சிக்காரங்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கறாங்க?

கட்சியோட வளர்ச்சிக்கு பால் ஊத்திட்டாங்கன்னுதான்

----------------------------------------

Molly Strohl string photography fashion

6. ஜட்ஜ் - குற்றத்தை ஒத்துக்கறியா?

கைதி - ஒத்துக்கிட்டா ரிலீஸ் பண்றதா வாக்கு குடுங்க, ஒத்துக்கறேன்

--------------------------------------------

7.  உங்க மேல சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையே 7 கிலோ தேறும் போல?

கருணை அடிப்படையில் அந்த சுமையை குறைக்கனும் யுவர் ஆனர், பாதி பக்கங்களை கிழிச்சிடவா?

----------------------------------------------

8.  தலைவரே.. மக்கள் சாகும் வரை உண்ணா விரதம் இருக்காங்களாம்.. 

அடடா.. 

நீங்க சாகும் வரை....

----------------------------------------

9.  வக்கீல் தனது குறுக்கு விசாரணையை துவங்கலாம்.. 

பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க.. ஏன் குறுக்கு வழியை ஆதரிக்கறீங்க?நேர்மையா விசாரிக்க சொல்லுங்க.. 

------------------------------------------

10.  என் தலை முடி எவ்ளவ் நீளம்னு பார்க்கனுமா? ( ஷாம்பூ விளம்பரம்)

தேவை இல்லை.. சாப்பிடறப்பவே ரெண்டு மூணு முடி வந்துடுச்சு

-----------------------------------------


Molly Strohl string photography fashion

11.  நீங்க கருத்தொருமித்த தம்பதியரா?

ஆமா, 2 பேருமே ஒற்றுமையா டைவரஸ்க்கு  அப்ளை பண்ணி இருக்கோம்..

----------------------------------------

12.  மேனேஜர் எங்கே?

அவர் அவுட் ஆஃப் ஸ்டேஷன்.. 

 அடடா.. அவர் என்ன லூஸா? ரயில்வே ஸ்டேசனுக்கு உள்ளே தானே ரயில் எல்லாம் வரும்?

---------------------------------------------

13. எனக்கு கவிதை எழுத தெரியாது..ரொம்ப லோக்கலா எழுதுவேன்..


அடடா.. அப்புறம் ஏன் சார் பாட்டெழுத ஃபாரீன் போறீங்க?

-------------------------------------------

14. எத்தனை புது ஹீரோக்கள் வந்தாலும்  நான் யாரையும் பார்த்து மிரண்டதே இல்லை.. 



ஓ.. உங்க சம்சாரத்தை கண்டாக்கூடவா?


---------------------------------------------------

15. உன் மனைவிக்கு கோபம் வந்தா உடனே நீ சமாதானப்படுத்திடுவியா? ஏன்?

இல்லைன்னா அவ என்னை படுத்தி எடுத்துடுவா

---------------------------------------------------------