Thursday, April 07, 2011

ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி

1.  ''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் அரசியல் கருத்து என்ன?'' 

''எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, ஜெயலலிதாவைவிட மிகச் சரியாக அறிந்துவைத்திருப்பவர்!''

அது கரெக்ட்டுங்க.. ஆனா 41 வேட்பாளரையும் மகாராஜா ஆக்கனும்னு பார்க்கறாரு.. வலிக்குதுங்க.. அவ் அவ்வ்வ்வ்வ் ....



2. '' 'ஒருநாள் முதல்வர்’ வாய்ப்பு உங்களிடம் வந்தால்..?'' 

 ''வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கு அளிக்காதவர்களின் ரேஷன் அட்டைகளையும் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்யும்படி உடனே ஆணை பிறப்பிப்பேன். சட்டம் அதற்கு இடம் தராது என்கிறீர்களா? நான் முதல்வராகும் வாய்ப்பும் வராதே!''

நடக்கும் என்பார் நடக்காது.. நடக்காது என்பார் நடந்து விடும் .

.
3. ''அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?'' 

''பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்துவைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!''

நடப்பது மன்னராட்சியா? மன்னரோட வாரிசு  மக்கள் ஆட்சியா?


'4. 'என்னதான் கருணாநிதி மீது ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும்... சமத்துவபுரம், அருந்ததியர்க்கு உள் இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, திருநங்கையர் நல வாரியம் என்று ஒதுக்கப்பட்டோருக்கு உரிய திட்டங்கள் அவர் ஆட்சியில்தானே நிறைவேறின? இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்பது உண்மைதானே?''


'' 'என்னதான் ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்பு மது அருந்தினாலும், சிகரெட் புகைத்தாலும், வெற்றிலை போட்டுத் துப்பினாலும், இடையிடையே கொஞ்சம் பாடம் நடத்துகிறாரே, அது போதாதா?’ என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.

ஆசு இரியர்தான் ஆசிரியர். குற்றம் களைபவராக இருப்பதுதான் ஆசிரியரின் முதல் லட்சணம். ஊழலின் நிழல் படாத, மக்கள் நலன் சார்ந்த, செப்புக் காசும் கொள்ளை அடிக்காத நேரிய நல்லாட்சியை வழங்குவதுதான் அரசியல்வாதிக்கு உரிய அடிப்படை இலக்கணம்.

இட ஒதுக்கீடு, நல வாரியம் எல்லாம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் ஜால வித்தைகள். வித்தை காட்டுவதில் கலைஞர் வித்தகர். வாக்கு சேகரிக்க எவை எல்லாம் பயன்படுமோ, அவற்றை ஜெயலலிதாவும் செய்வார். அவர் உயர் சாதி மனோபாவம் உள்ளவர் என்பதுதான் உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டு. அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதில் சாதி பார்ப்பதே இல்லை!''

தி மு க , அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... தி மு க கமுக்கமா ,விஞ்ஞானபூர்வமா அடிப்பாங்க.. அதிமுக வுக்கு அந்த வல்லமை பற்றாது.. டாம் டூம்னு அடிச்சு ஈஸியா மாட்டிக்குவாங்க.. 

5. ''டி.வி, கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு... அடுத்து?'' 


''வீட்டுக்கு ஒரு கட்டில்... பக்கத்தில் ஒரு தொட்டில்!''

முதன் முதலாக  முதன் முதலாக  இலவசமாக இலவசமாகத்தான்... 

ஏமாளி...தமிழா...


6. ''வைகோ...?'' 

''நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்புள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி!''

வகை தொகை இல்லாமல் வகையாக ஏமாற்றப்பட்ட புலி... 

7. ''இத்தனை இடர்கள், முரண்பாடுகள், அநீதிகள், ஊழல்கள் இருந்தும் இந்த நாட்டை எது கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறது? மக்கள் ஏன் எழுச்சிகொண்டு போராடவில்லை?'' 

''மதங்களால் பிரிந்து, சாதிகளால் சரிந்து, ஆள்பவரின் ஊழல் முறைகேடுகளால் சிதைந்து, மேலான வாழ்வியல் விழுமியங்களை மெள்ள இழந்து வரும் இந்தியா, இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்படுவதற்கு, நம் முன்னோர்கள் அமைத்துவைத்த ஆன்மிக அடித்தளம்தான் முக்கியக் காரணம்.

உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் இயல்பாக எழுச்சிகொள்வது இல்லை. சமூக லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் சுயநலமற்ற அறிவுஜீவிகளின் நெருப்பு எழுத்துக்களும், கந்தக வார்த்தை களும்தான் சாதாரண மக்களைச் சரித்திரம் படைக்கச் செய்யும்.

மேல்தட்டு வர்க்கம், யார் எப்படிப் போனாலும் தன்னலனைக் காப்பதில் தனிக் கவனம் காட்டும். அடித்தட்டு வர்க்கம் வயிற்றுப் பசியாற வழி தேடுவதிலேயே அன்றாடம் அலைக்கழிப்புக்கு ஆளாகும். ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினரால்தான் எந்த இடத்திலும் புரட்சிக்குப் பூபாளம் வாசிக்கப் படும்.

ஆனால், இந்த மண்ணின் துர்பாக்கியம்... நடுத்தர வர்க்கம் 'மானாடுவதிலும் மயிலாடுவதிலும்’ மயங்கிக்கிடக்கிறது. அறிவுஜீவிகள் என்று பெயர் பெற்றவர்களோ, அதிகார பீடத்தில் யார் அமர்ந்தாலும் சலுகைகளுக்காக அன்றாடம் சாமரம் வீசுவதை வாழ்க்கை நெறியாக வகுத்துக்கொண்டனர். பின், மக்களிடம் எப்படி வரும் போராட்டத்துக்கான எழுச்சி?

செகண்ட்ஷோ சினிமா பார்க்கறது உலகிலேயே தமிழன் தான் அதிகமாம்.. அதனால விழிப்புணர்வு கம்மி.. பாவம் லேட் நைட்ல படுக்கறான்.. 


8.''இன்றுள்ள அரசியல் நாகரிகம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால், நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந் தலைவர் காமராஜரை, 'குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்... இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!''

அரசியல் நாகரீகம் பற்றி பேசுவதே அநாகரீகம் ஆகி விட்டதே இப்போது?


9. ''ரசிகன், தொண்டன் இருவரில் யார் அப்பாவி?'' 

''தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப்படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!''

ஏமாந்த சோனகிரிக்கும்,லைஃப் டைம் அன்வேலிட் சிம்கார்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

 

 
'10. சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?'' 


''கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை’, 'அன்பே வா’, 'ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 'மதராசபட்டினம்’. இந்தியில் 'குஜாரிஷ்’. கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படைப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!''

இந்தப்படத்தை இன்னுமா தமிழ்ல ரீமேக் பண்ணாம இருக்காங்க.. ஜெயம் ரவி, விஜய் எல்லாம் எங்கேப்பா போனீங்க?



11. ''மௌன விரதம், உண்ணாவிரதம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது உண்டா... ஏன்?'' 

''வாரத்தில் ஒரு வேளை உண்ணுவது இல்லை. செவ்வாய் அன்று நாள் முழுவதும் வாய் திறந்து யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வேளை உண்ண மறந்தால், ஆரோக்யம் வளரும். ஒருநாள் முழுவதும் பேச மறுத்தால், ஆன்ம ஞானம் மலரும்!''

இந்த அரசியல்வாதிகள் விடாம பேசிட்டே இருக்காங்களே.. அவங்களை எலக்‌ஷன் முடியற வரை மவுன விரதம் இருக்க வைக்கனும்.. 

12. ''சுயமரியாதை என்றால் என்ன?'' 

''தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வை யில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்... சுயமரியாதை!''

எத்தன குடும்பத்துக்கு..?


13. ''திராவிடக் கட்சிகளின் சாதனைதான் என்ன?'' 

'' 'பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை. போட்டுப் பழகிய பை!’ - ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் சொன்னது. நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டது!''

 தமிழனை ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை வெறுக்க வைத்து அவனை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்தது..

14. ''வரும் காலங்களில் 'நேர்மையான தேர்தல்’ சாத்தியமா?'' 

''தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் சட்டபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டால், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டால், ஆள்பவருக்கு ஏற்றபடி ஆடாமல் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் சமுதாயப் பொறுப்பு உணர்வுடன் செயற்பட்டால் 'நேர்மையான தேர்தல்’ நிச்சயம் சாத்தியம்!''

ஒவ்வொரு தொகுதிக்கும் வெவ்வேறு விதமான ஓட்டு ரேட் என்பதை மாற்றி ஃபிக்சடாக தமிழ்நாடு முழுவதும் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயிப்பதே நேர்மையான தேர்தல்.. 


'15. 'தனது தேர்தல் அறிக்கை மூலம் இப்போதே 'தி.மு.க. தேவலாம்’ என்று சொல்லவைத்துவிட்டதே அ.தி.மு.க?'' 

''ஆளும் கட்சி பதவியில் இருந்து இறங்காமல் பார்த்துக்கொள்ள ஆயிரம் இலவச வாக்குறுதிகள் வழங்குவது நியாயம் என்றால், எதிர்க் கட்சி அந்தப் பதவியில் ஏறி அமர்வதற்கு இன்னும் ஓராயிரம் அள்ளிவிடுவது எப்படி அநியாயமாகும்? நியாயத் தராசை நேராக நிறுத்துங்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் நாற்காலிப் போட்டியில் காட்டும் நாட்டம் தம் மக்கள் வாழ்வுக்காக; தமிழர்தம் வாழ்வுக்காக என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்!''

தமிழக அரசியல் ஒரு நாடக மேடை.. அதில் கலைஞர், ஜெ இருவரும் சிறந்த நடிகர்கள்.. 

கேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீரோ VS ஜீரோ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8b2VJCrdTlj6Ch-kjjAFn8KcWaEfX3-kE7cuE5MYispYxoisWTXfaX4PMalPqPNLUvBSbisuDZO8E5uosWydjdmJb6ty78GzAPi9pd51pFYRJ7D9WiFFmcCv83Uxq6-PrU8YhxU2n9-3z/s320/vijayakanth_god.jpg 

1. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: புதுக்கோட்டை மாவட்ட மக்கள், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இருந்தும் இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை, ஐந்தாண்டு கால கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. கந்தர்வக்கோட்டை அருகே, விவசாயிகளின் விளைநிலங்களை பாழாக்கி வரும் எரிசாராய தொழிற்சாலை மூடப்படும்.

என்னங்க இது? ஓப்பனிங்கலயே சொதப்பறீங்க?வந்ததுமே மூடு விழாவா?ஏதாவது பாஸிட்டிவ்வா சொல்லுங்க... நாங்க ஆட்சிக்கு வந்தா தீய சக்தி கருணாநிதியை உள்ளே உட்கார வைப்போம்னு.. அதானே உங்க வழக்கமான ஸ்டைலு..?


-----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தி, நகரில் உள்ள அரசு அலுவலகங்களின் சுவர்களில், 2,000 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஓஹோ.. ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தான் அப்படின்னு சூசகமா சொல்றீங்களா?அதெல்லாம் முடியாது.. விலைவாசி எல்லாம் ஏறிக்கிடக்கு.. அட்லீஸ்ட் ரூ 10,000 ஆவது வேணும்..,அதனால 10000 சுவரொட்டிகள் ஒட்ட சொல்லுங்க.. 


-------------------------------------------------
http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/anjali.jpg
3. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: இன்றைய சூழ்நிலையில் தனித்து போட்டியிட்டு எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. புதிய நீதிக்கட்சி இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது. எங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்த கட்சி அறிவிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.

ஏ சி சண்முகமா? ஓ சி சண்முகமா?ஏய்யா இப்படி ஈரோட்டு பேரை கெடுக்கறீங்க..?ஜாதிக்கட்சிகளை ஒழிக்கனும், ஜாதிக்கட்சித்தலைவர்களை ஓட ஓட விரட்டனும்.. அப்பத்தான்யா நாடு உருப்படும்..


--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ1rqaJe6TSlJdhg-Mma3-BEiU_Xa3zky8wgwz-wgg3vCilePeHrCs8T5AxA4z_ns9Ax0QUmCU31mJTgmFjq1npme0Aemf2oJmBr1PwLCCa16h_dSSeE_7AezX1qtclHWRTIJifoxxRk0/s400/DN_13-11-08_E1_01-04%2520CNI.jpg
4. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
என் நண்பர் விஜயகாந்த், போயஸ் கார்டனுக்கு செல்லும் போது, கேப்டனாக இருந்தார். வெளியே வரும் போது, சிப்பாயாக வந்தார். தேர்தல் முடிவுக்கு பின், சிப்பந்தியாக மாறி விடுவார். இந்த தேர்தலில், வைகோ நல்ல முடிவு எடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த முடிவு தான் விஜயகாந்துக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் கிடைக்கும்.


ஏய்யா என்ன ஒரு ஏத்தம்.. வை கோ எடுத்தது நல்ல முடிவா? அவருக்கு வேற வழி இல்லை.. அதனால அப்படி விட்டேத்தியா பதில் சொன்னாரு.. நீங்க வேணா பாருங்க.. கேப்டன் கூட காங்கிரஸ் கூட்டணி வைக்கும் காலம் வரும்..அதே போல் கேப்டன் சி எம் ஆகாம விட மாட்டார்.. ஏன்னா தமிழனோட தலை எழுத்தே சினிமாக்காரங்க பின்னால போய் வலியனா மகுடத்தை எடுத்து தர்றதுதான்....

----------------------------------------
5. பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு: வாக்காளர்கள் மனசாட்சிப்படி, ஓட்டளிக்க வேண்டும். ஓட்டு, விற்பனைக்கு அல்ல. தமிழகத்தை மோசமான நிலைக்கு தள்ளியது தி.மு.க., அரசு. இந்த அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது

 ஏய்யா.. என்ன அநியாயம்..? இந்த அரசியல்வாதிகள் மட்டும் மனசாட்சியை
அடகு வைப்பாங்களாம்.. ஊழல் பண்ணுவாங்களாம்.. நாங்க மட்டும் பணம் வாங்காம ஓட்டு போடனுமாம்.. எங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சீங்களா?

--------------------------------

6. பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி பேச்சு: காங்கிரசின் ஊழல் ஆட்சியால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஊழலில் காங்கிரஸ் புதிய சாதனை படைத்திருக்கிறது.

ஓஹோ .. இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. ? பி ஜே பிக்கும் ஒரு சான்ஸ் வேணுமா? ஊழல் பண்ண..?

--------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdUih_nGQbVWx8Bt1gB26l5rZfztIcHM34JWesn2mNRR87xtEr52zw6TGxMpy9TOpYY6FU-I9F4DzocjcDU6DBsby-UoPh8rtBB7x20yhuFx-TCPGkEaNt6JDO7B0s95vEGPY-d3t5TrY/s1600/thuglak_cartoon1.jpg
7. தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு:தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் கடுமையான விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அமல்படுத்தி வருகிறது. அதற்கு காரணம், முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள் தான்.

பொதுவா போலீஸை விட திருடன் தான் புத்திசாலியா இருப்பான்.. நீங்க என்ன தான் புதுசு புதுசா விதி முறை கொண்டு வந்தாலும் அதை எப்படி மீறலாம்னு தான் ஐடியா பண்ணுவாங்க..

-----------------------------------------------
  http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/Tamil-Actress-Anjali-Stills.jpg
8. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: பா.ம.க., ராமதாஸ் ஆறு மாதங்களுக்கு முன் தி.மு.க., ஆட்சிக்கு, "ஜீரோ' மார்க் போட்டார். இப்போது, அக்கட்சி தான், "ஹீரோ' என்று பேசுகிறார். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களுக்கு என்ன செய்வர்?

நீங்க கூடத்தான் 6 வாரங்களுக்கு முன்னாடி தி முக , அதி முக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படின்னீங்க..இப்போ அம்மா கூட கூட்டணி வைக்கலையா?நீங்க 2 பேரும் சேர்ந்து மட்டும் என்னத்த கிழிக்கப்போறீங்க?

----------------------------------
9. தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா பேட்டி: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, கடந்த 25ம் தேதி வரை, 45 ஆயிரத்து 984 புகார்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. ஆனால், தேர்தல் கமிஷன், 49 ஆயிரம் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்களை மட்டுமல்லாமல், தேர்தல் கமிஷனே முன் வந்து பல புகார்களை பதிவு செய்து நேர்மையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


வந்த புகாரே 50,000னா வராத புகாரும், வர முடியாத அளவு தடுக்கப்பட்ட புகாரும் எவ்வளவு இருக்கும்.?பேசாம தமிழ்நாட்டை பூம்புகார் மாதிரி புகார் நாடு என மாற்றிடலாம்....

Wednesday, April 06, 2011

தி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் கருத்துக்கணிப்பு முடிவு - காமெடி கும்மி

ழக்கம்போலவே பரபரப்பான தேர்தல் கணிப்​பை வெளியிட்டு
http://athikalai.files.wordpress.com/2010/12/kalaiger-paradu.jpg
இருக்கிறது, சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வகம்!  ஆறு மாதங்களுக்கு முன்பு, இவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் கட்சிக்குப் பாதகமான முடிவுகள் வந்ததாகவும், 'அதை வெளியிடக் கூடாது’ என ஆளும் தரப்பால் மிரட்டப்பட்டதாகவும் தகவல் பரவியது!


இவ்வளவுதானா? ஒண்ணும் பிரச்சனை இல்ல.. ஆளும் கட்சியே ஜெயிக்கும்னு மேட்டர் போட்டுட்டு கீழே சின்னதா இவை யாவும் கற்பனையே... அப்படின்னு போட்டிருக்கலாம்.. 


ஆனால், மக்கள் ஆய்வகத்தின் சார்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதக் கடைசியில் நடத்தப்பட்ட கள ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார், மக்கள் ஆய்வக இயக்குநர் பேராசிரியர் ராஜநாயகம்.


''எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க. அணிக்கு 48.6 சதவிகிதமும் தி.மு.க. அணிக்கு 41.7 சதவிகிதமும் வாக்குகள் கிடைக்கும். பெரும்பான்மை இடங்களை அ.தி.மு.க. அணி கைப்பற்றும் என 51.1 சதவிகிதத்தினரும், தி.மு.க. அணிதான் கைப்பற்றும் என 36.7 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.


அய்யய்யோ... அம்மா ஓவரா ஆட ஆரம்பிச்சுடுவாங்களே.. 

மாவட்டம், தொகுதி அளவிலான நிலைமைகளை வைத்துக் கணக்கிட்டால், 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் அ.தி.மு.க-வுக்கு சாதகமாக 105 தொகுதிகளும், தி.மு.க அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும் இருக்கின்றன. 59 தொகுதிகளில் இரு தரப்புக்கும் கடும் போட்டி நிலவுகிறது'' என்கிறது, இந்த ஆய்வு முடிவு.

டஃப் ஃபைட் 59ல ஆளுக்கு பாதின்னு கணக்கு போட்டாக்கூட அம்மா வந்துடுவாங்க போல இருக்கே.. அய்யய்யோ...


''இப்போதைய கணிப்பு முடிவு, அ.தி.மு.க அணிக்குச் சாதகமாக இருக்கிறது என்றாலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் தேர்தல் வியூகத்தின் மூலம் தி.மு.க.வு-க்கு சாதகமாக முடிவுகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது...'' என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

 தேர்தல் வியூகம்னா ஓட்டுக்கு ரூ 5000 தர்றதா பேசிக்கறாங்களே.. அதானே..?


''தேர்தல் அறிக்கை, சுமுகமான தொகுதிப் பங்கீடு, சரியான வேட்பாளர் தேர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, டி.வி., பத்திரிகை விளம்பரம், தெரு முனைக் கூட்டம் - பொதுக் கூட்டம், தலைவர்களின் பிரசாரம் போன்ற வியூகங்களில் தி.மு.க அணி மக்களை ஈர்த்திருக்கிறது.

 எனக்கென்னவோ இலவசம், ஓட்டுக்கு பணம் இந்த 2 மேட்டர் தான் அய்யா முன்னிலை வகிக்க ஒரு (இரு) காரணமா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு.




உட்கட்சிப் பூசல்கள் இல்லாதது, போஸ்டர், பேனர் விளம்பரம், வாக்காளருடன் நேரடிச் சந்திப்பு ஆகியவற்றில் அ.தி.மு.க அணி முன்னிலையில் இருக்கிறது.

இன்று ( 6.4.2011) கோவைல அம்மா+ கேப்டன் இணைந்த கைகள் போல போஸ் குடுத்து பிரச்சாரம் நடக்கப்போகுதாம்.. அங்கே என்னென்னெ காமெடி நடக்கப்போகுதோ..?


வியூகம் வகுத்துச் செயல்படுவதில் தி.மு.க-வின் எழுச்சியும் வீச்சும் இப்போதைய கணிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும்!'' என்கிறார்கள்.

கள்ள ஓட்டு போடறது, பண பட்டுவாடா பண்றது இதுல எல்லாம் கழகத்தோட  வியூகம் பிரமாதமா இருக்குமே..?


ம.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால் ஏற்படும் தாக்கம் பற்றிக் கேட்டபோது, ''இந்தப் புறக்கணிப்பால் அ.தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பு'' என 25.4 சதவிகிதத்தினரும் ''ம.தி.மு.க-வுக்குதான் பாதிப்பு'' என 7.4 சதவிகிதம் பேரும் ''தி.மு.க. அணிக்கு பாதிப்பு'' என 3.8 சதவிகிதம் பேரும் ''யாருக்கும் பாதிப்பு இல்லை!'' என 53.6 சதவிகிதத்தினரும் கருத்துக் கூறியுள்ளனர். ''கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் ம.தி.மு.க எடுக்கப்போகும் நிலைப்பாடும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்பதும் இந்தக் கள ஆய்வின் முக்கிய முடிவுகளில் ஒன்று!

 வை கோ வின் தேர்தல் புறக்கணிப்பு நிச்சயம் அம்மாவுக்குத்தான் பாதிப்பு.. தி மு க வுக்கு 1% கூட பாதிப்பு இல்லை.. வை கோவுக்கான 4% ஓட்டுல 2 % ஓட்டு தி மு க வுக்கு விழ  வாய்ப்பு இருக்கு.. ஆனா 0.0001% கூட அம்மாவுக்கு விழ வாய்ப்பில்லை...


ஆய்வு முடிவை வெளியிட்ட பேராசிரியர் ராஜ​நாயகத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


1. ''ஊழல் விவகாரம் பற்றிய கேள்விகளே இந்த ஆய்வில் இல்லையே?''

''மக்கள் எதைப் பிரச்னையாகக் கருதுகிறார்கள் என்பதுதான் எங்கள் ஆய்வின் அணுகுமுறை அடிப்படை. நாங்கள் சந்தித்த மக்கள், ஊழலையும் ஒரு பிரச்னையாகச் சொன்னார்கள். அரசுத் துறைகளின் ஊழல், முதல்வர் குடும்பத்தின் சொத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எல்லாம் பொதுவாகப் பேசுகிறார்கள். ஆனால், இதை வைத்துத் தேர்தலைத் தீர்மானிப்பதாக அவர்கள் சொல்லவில்லை.''

மக்கள் மனம் விசித்திரமானது.. கடைசி நேரத்தில் அது திடுக் முடிவுகளை எடுக்கக்கூடும்... 

2. ''தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?''

''எல்லா இடங்களிலும் சுவர், சுவரொட்டி விளம்பரங்​களை மிகவும் குறைவாகவே பார்க்கமுடிந்தது. இதனால், பெரிய கட்சியின் வேட்பாளர் பெயர்கூட மக்களிடம் அறிமுகம் ஆகவில்லை. பொதுக் கூட்டம் நடத்தும்போதுதான், பெயர்களையே மக்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களைப்பற்றி எந்தப் பகுதியிலும் யாருக்கும் தெரியவில்லை. தேர்தல் ஆணையத்​தின் கெடுபிடியால், பெரும்பாலான இடங்கள் இறுக்கமாக இருக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை 'ஜனநாயக விரோதம்’ என்று கணிசமானவர்கள் கருத்துக் கூறினார்கள்.


கடந்த  ஒன்பது நாட்களில், 11 இடங்களில் தேர்தல் ஆணையத்தினர் எங்களின் வாகனங்களையும் சோதனை இட்டனர். நாங்கள் அதை கேமராவில் பதிவுசெய்ய... 'நம்பளையே படம் பிடிக்கிறாங்க!’ என்று கிண்டல் செய்தார்கள். நேர்மாறாக, ஒரே ஒரு அதிகாரி, 'ஏன் சோதனை செய்கிறோம்?’ என எங்களுக்கு ஒரு பேட்டியே கொடுத்தார்!''


விட்டா கழகத்தினர் அவங்களுக்கு பொட்டியே குடுத்திருப்பாங்க.. 

3. ''எத்தனை தொகுதிகளுக்குப் போய் வந்தீர்கள்... பரவலான நிலவரம் என்ன?''

''39 மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 117 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குச் சென்றோம். பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. அணிக்கு சாதகமான நிலைதான்.

இதில், தெற்கு மாவட்டம், மேற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேறுபாடு இல்லை!


அதே சமயம், தி.மு.க-வின் தேர்தல் வியூகங்கள் அ.தி.மு.க. அணியைவிட அதிக அளவிலான மக்களிடம் சென்ற​டைந்து இருக்கிறது. இவர்களின் 'ரீச்’சை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவு அமையலாம்!''

 இப்படி எல்லாம் குழப்பக்கூடாது... அம்மாவா? அய்யாவா? வெட்டு ஒண்ணு .. மஞ்சள் துண்டு ரெண்டு... என பதில் வேணும்..  



டோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

http://inyourhonour1989.files.wordpress.com/2011/03/ong-bak-3.jpg
A

புரூஸ்லீ,ஜாக்கிசான்,ஜெட்லீ வரிசையில் தானும் வந்துடனும்னு டோனி ஜோவுக்கு ரொம்பவே ஆசை...அப்புறம் ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா உடனே ரசிகர்கள் சலிக்கும் வரை பாகம் 2 பாகம் 3 அப்படின்னு கொலையா கொன்னெடுக்க எல்லா நாட்டு தயாரிப்பாளர்களும் ரெடியா இருக்காங்க... அந்த வகைல  வந்த லேட்டஸ்ட் படம் தான் இது.. 

படத்தோட கதை என்ன?ராஜா காலத்து கதை..மன்னரின் உயிரை பதவிக்கு ஆசைப்பட்டு தளபதி விஷம் வைத்துக்கொன்று மந்திர வாதியின் உதவியுடன் அரியணை ஏறுகிறான். ,..பின் அந்த தளபதியை கொன்று  மந்திரவாதி மன்னர் ஆகிறான்.. கடைசில அந்த மந்திரவாதியை ஆரம்பத்துல கொலை செய்யப்பாட்டாரே ஒரிஜினல் மன்னர் அவரோட ரியல் வாரிசு கொன்று பழி தீர்க்கிறார்...ஸ்.. ஸ். அப்பா.. முடில ... 


அமரர் சாண்டில்யன் கதையை தெலுங்குல சிரஞ்சீவியை வெச்சு எடுத்தா எப்படி இருக்கும்? அதே மாதிரி தான் இருக்கு.. படத்துல திரைக்கதை சரி இல்லை... 


http://www.doblu.com/wp-content/uploads/2011/02/ong3bak4952.jpg

திரைக்கதையில் உள்ள லாஜிக் ஓட்டைகள்

1. தளபதி மன்னருக்கு விஷம் கலந்த பானத்தை தரும்போது உடனே மன்னர் அதைக்குடிக்கிறார்.. அது எப்படி? அந்த காலத்தில் எல்லாம் மன்னர் உணவோ, மதுவோ அருந்தும் முன் ஒரு டெஸ்ட் ஈட்டர்  (TEST EATER) உண்டே.. சமைத்தவரோ,பரிமாறுபவரோ சாப்பிட்ட பின்னால் தான் மன்னர் சாப்பிடுவார்..

2. மன்னரை கொன்றவுடன் தளபதி மன்னரின் வாரிசாக உள்ள இளவரசரை போட்டுத்தள்ளாமல் சித்திரவதை செய்து சிறையில் அடைத்திருக்காரே.. ஏன்? அவரையும் ஈஸியா போட்டிருக்கலாமே.. ( அப்புறம் எப்படி ஹீரோ பழி வாங்கறது?)

3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?

4. விஜயகாந்த வேட்பாளரை அடிக்கற மாதிரி 100 மடங்கு கடுமையா அடிச்சும் இளவரசர் உயிரோட இருப்பது எப்படி?

5. காலம் காலமா வில்லனை ஹீரோதான் கொல்வாரு.. இதுல எதுக்கு சம்பந்தமே இல்லாம இன்னொரு வில்லன் வந்து பழைய வில்லனை கொல்லனும்?

6.மந்திரவாதி எதுக்காக மன்னர்ட்ட பதவி கேட்கனும்? இது எப்படி இருக்குன்னா ஜெ வலியனா போய் தனக்கு கீழே இருக்கற கூட்டணிக்கட்சிகளிடம் என்னை சி எம் ஆக்குங்கன்னு கேட்கற மாதிரி இருக்கு... 
7. பட்டத்து யானையை மன்னராக மாறிய தளபதி சித்திர வதை செய்வதா படத்துக்கு சம்பந்தம் இல்லாம ஒரு சீன் வருது.. ( அந்த ஒரு சீன் மட்டுமா?)
பிடிக்கலைன்னா போட்டுத்தள்ளவேண்டியதுதானே.. எதுக்கு அவங்களை,அவைகளை சித்திரவதை பண்றேன்கற போர்வைல ஆடியன்சை சித்திர வதை பண்ணனும்?


8.. அட்டு ஃபிகரைக்கூட விடாம பிட்டுப்படத்துல நடிக்க வைக்கிற இந்த கால கட்டத்துல லட்டு மாதிரி ஹீரோயின் கிடைச்சும் அவங்களை யூஸ் பண்ணிக்கலையே ஏன்? ( படத்துல.. )

9. ஹீரோயினை வில்லன் கொலை பண்ற மாதிரி காண்பிச்சு திடீர்னு அதெல்லாம் கற்பனைகள்னு பல்டி அடிச்சு திரைக்கதைல குழப்பம் பண்ணி இருக்கீங்களே .. அது எதுக்கு....?





http://www.lovehkfilm.com/panasia/aj6293/ong_bak_3.jpg 

தலைவலி ஏற்படுத்தும் படத்தில் கூட தட்டுப்பட்ட தலை சிறந்த வசனங்கள்

1.  இந்தப்பதவி உனக்கு எப்படி வந்ததுன்னு எனக்குத்தெரியாதா?நம்பிக்கைத்துரோகத்தின் நாயகனே நீ தானே...? ( வை கோ அம்மாவைப்பார்த்து சொல்ற மாதிரியே இருக்கு..)


2. பஞ்ச பூதங்களையும் அடக்கறது ரொம்ப சுலபம் தான்.. அதுக்கு தேவை தியானம் + விடா முயற்சி

3.  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு... மன்னனை நீ வஞ்சகமா கொலை செஞ்சது தப்பில்ல்லை.. ஆனா நான் உன்னை நேருக்கு நேர் போரிட்டுக்கொல்வது தப்பா..?



டோனிஜோவுக்கு ஒரே ஒரு அட்வைஸ்.. சண்டைக்காட்சிகள் வடிவமைப்பு மட்டும் நீங்க செய்ங்க.. மற்றபடி டைரக்‌ஷன் எல்லாம் வேணாம்.. எடுபடலை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்... 

ஈரோடு ராயல் தியேட்டர்ல இந்தப்படத்தை  பார்த்தேன்..

ஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூறு வழக்கு வருமா? அதிமுக பர பரப்பு...

டந்த சனிக்கிழமை சென்னையில் மையம்கொண்டது ஸ்டாலின் புயல்!
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/a-fathima-300x225.jpg
தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின், பெருங்குடி, ஒக்கியம், துரைப்​பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், காட்டாங்கொளத்தூர், தாம்பரம், பல்லாவரம் என்று புற நகர்ப் பகுதிகளில் புகுந்து புறப்பட்டார்! 

ஏன்? நகரப்பக்கங்கள் எல்லாம் நரகம் பக்கம் என்பதாலா?
ஐ.டி. பார்க் நிறைந்த ராஜீவ் காந்தி சாலையில் இரண்டு கிலோ மீட்​டருக்கு ஒரு ஷாமியானா பந்தல் போட்டு,  ஸ்டாலினின் வருகையை எதிர்​பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர் உடன்பிறப்புகள். நேரம் ஆக ஆக... மகளிர் சுய உதவிக் குழுவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி இரு புறமும் நெட்டிக்கொண்டு திரள... கடும் டிராஃபிக் ஜாம்!

ஏன்.. குஷ்பூ வர்றாங்கன்னு நினைச்சுட்டாங்களா?

இதனால் பெருங்குடியை நோக்கி வந்த ஸ்டாலினின் காரும் அதில் சிக்கிக்கொள்ள... ''தளபதி கார் டிராஃபிக்ல மாட்டிக்கிச்சு. ரோட்டுல போற வண்டிகளுக்கு வழிவிட்டு நில்லுங்க. நமக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்!'' என்று ஓர் உடன்பிறப்பு மைக்கில் கெஞ்ச... அதை ஏற்றுக்கொண்டு ஒருவாறாகக் கூட்டம் கட்டுக்குள் வந்தது.

மடமை, வன்னியம், சில்லறைத்தட்டுப்பாடு..... 

இதற்கிடையே, எம்.ஜி.ஆர். வேஷம் போட்ட ஒருவர், பிரசார வாகனத்தில் கம்பீரமாக எழுந்து நின்றபடி மெயின் ரோட்டுக்குள் நுழைந்துவிட்டார். வேறு எங்கோ பிரசாரம் போகக் கிளம்பிய அவர், இங்கே ஸ்டாலின் வருவது தெரியாமல் வந்து மாட்ட... அவரது வாகனம் திரும்பிய இடம் எல்லாம் தி.மு.க தொண்டர்கள் மொய்க்க... ஒரு கணம் ஆடிப்போனவர், உடனே தலைக்கு மேல் கைகளைக் கூப்பியபடி, கூட்டத்தின் இரு புறமும் பார்த்துக் கும்பிடு போட... வழிவிட்டனர் உடன்பிறப்புகள். ரத்தத்தின் ரத்தம் எஸ்கேப் ஆனது!



அடுத்த சில நிமிடங்களில் ஸ்டாலின் வந்து சேர, தாரை தப்பட்டைகள்... இடைவிடாத வாண வேடிக்கைகள்... என ஏரியா அமளிதுமளி ஆனது. வரவேற்பைப் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், தனது பேச்சை ஆரம்பித்தார். அதிகம் வறுபட்டது, விஜயகாந்த். அதன் பிறகுதான் ஜெயலலிதாவுக்குக் கச்சேரி.

அது ஏன்னா ஒரு முறை வெச்சுக்கறாங்க. கலைஞர் அம்மாவை எதிர்ப்பார்.. ஸ்டாலின் கேப்டனை எதிர்ப்பார்.. 

.
''கேப்டன்னு சொல்லிக்கிட்டு வில்லன் ஒருத்தர் வாக்குக் கேட்டு வருவார். அவரை நம்பாதீங்க. சினிமாவுலகூட வில்லன் என்பவர், அடிக்கிற மாதிரி சும்மாதான் ஆக்ஷன் பண்ணுவார். ஆனா இந்த வில்லன், தன் கூட இருக்குற ஆளுங்களை உண்மையாவே அடிக்கிறார். இந்தக் கொடுமை எங்காவது நடக்குமா? இனிமே அந்த வில்லன்கூட போற வேட்பாளர்கள் எல்லாரும் மறக்காம ஹெல்மெட் மாட்டிக்கிட்டுப் போங்க. அப்பத்தான் தலையில அடிபடாமத் தப்பிக்க முடியும்!'' என்று ஸ்டாலின் பேச... கூட்டத்தில் விசில் பட்டையைக் கிளப்பியது.

ஆமா கவசம் இல்லாட்டி திவசம் தான்/.... 


தொடர்ந்து, தி.மு.க-வின் சாதனை​களைப் பட்டியலிட்ட ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நலத் திட்டங்கள் குறித்தும் முழுமையாகப் பேசினார். ''தலைவர் கலைஞர் 58 வயதைக் கடந்த முதியவர் களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதாகக் கூறியுள்ளார். இனி முதியவர்கள் ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊருக்குத் தங்கள் பேரன் - பேத்திகளையோ, கட்டிக்கொடுத்த மகளையோ பார்க்கப் போக வேண்டும் என்றால், பணம் செலவழிக்காமல் இலவசமாகவே போகலாம். நாங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் கஷ்டம் எங்களுக்குத் தெரியும்!'' என்று ஃபேமிலி டச் கொடுத்து அப்ளாஸ் அள்ளினார்!


நான் உங்கள் வீட்டுப்பிள்ளை.. இது நாடறிந்த உண்மை.. நான் செல்லுகின்ற பாதை.. ஆ ராசா காட்டும் பாதை... 

அடுத்து சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே பேச்சு...  ஜெயலலிதாவை வெளுத்து வாங்கினார் ஸ்டாலின்.

''இந்த இடத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த திரளான பெண்கள் கூடி இருக்கிறீர்கள். 1989-ல் தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது கொண்டுவந்த அருமையான திட்டம்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம். 

இந்த எலக்‌ஷன்ல மகளிர் சுய உதவிக்குழு மூலமாத்தான் பணம் பாஸ் ஆகுதாமே..?


அப்போது திருமணமாகும் பெண்களுக்கு 5,000 வழங்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்திருக்க வேண்டும்? 10,000 கொடுத்திருக்க வேண்டாமா?

 அதெப்பிடிங்க முடியும்? உங்களை விட ரெண்டு மடங்கு ஊழல் பண்ணனுமே அதுக்கு..? ஆனா உங்க அளவு அம்மாவால ஊழல் பண்ண முடியலையாம்..


ஆனால், அந்த புண்ணியவதி ஜெயலலிதா என்ன செய்தார் தெரியுமா? 'எனக்கே கல்யாணம் ஆகலை. இதுல உங்களுக்குக் கல்யாணம் ஆனா எனக்கென்ன, ஆகலைன்னா எனக்கென்ன?’ என்று நினைத்து அந்த திட்டத்தையே நிறுத்திவிட்டார். இதுதான் அவரது ஆட்சியின் லட்சணம்'' என்று வெளுத்துக் கட்டினார்!

 ஆஹா.. நாகரீகமாகப்பேச வேண்டும்னு அப்பா சொன்னார்.. மகன் அதை நிறைவேற்றினார்.. நல்ல குடும்பம்..