Sunday, July 18, 2010

Saturday, July 17, 2010

விஞ்ஞான சிறுகதைகள்

விஞ்ஞான சிறுகதைகள்..குட்டி குட்டியாய் எழுதி இருக்கும் இவை நான் கல்கி வார இதழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதியவை..படிக்க சிரமமாய் இருப்பின் க்ளிக் செய்து படிக்கவும்..

தேவலீலை - சினிமா விமர்சனம் 18+

http://www.thedipaar.com/pictures/resize_20100716105450.jpg 
சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிங்க எல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க.முதல் பாவம் புகழ் அபிலாஷா நடித்த கானகசுந்தரிக்குப்பிறகு ரிலீஸ் ஆகி இருக்கும் அஜால் குஜால் படம் தான் இந்த தேவலீலை,கதை இல்லாத படம்தான்,ஆனா சீனுக்காக! பார்த்துத்தொலைக்க வேண்டி இருக்கு.

. கதையோட ஒன்லைனை கேட்டா அசந்துடுவீங்க,குருவிடம் போர்க்கலைகளை கற்கும் வில்லங்க சீடன் குருவையே கொல்கிறான்.இறக்கும்போது ஒரு தேவ ரகசியத்தை சொல்லிவிட்டு இறக்கிறார் குரு.அதாகப்பட்டது கிழக்கு,மேற்கு,வடக்கு என 3 திசைகளிலும் 3 ஃபிகர்கள் உண்டு.குறிப்பிட்ட 3 பேரையும் வெர்ஜினிட்டி மைனஸ் செய்தால்(அதாங்க கன்னி கழித்தல்)உலகையே வெல்லும் சக்தி கிடைக்குமாம்.அதற்குத்துணையாக ஒரு சீடனையும் கூட்டிகொள் என்கிறார் குரு.சிஷ்ய வில்லன் 3 பேரை அடைந்தானா ,மேட்டரை முடித்தானா என்பதை வெண் திரையில்(நீலத்திரை)காண்க.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/07/MG_4978.jpg
இந்த மாதிரி டப்பா படத்துக்கு எதெல்லாம் தேவை இல்லை?

1.காஸ்ட்டியூம் டிசைனர்(உடையே இல்லாத படத்திற்கு எதற்கு உடை அலங்கார நிபுணர்)

2.பாடல்கள்,அவுட்டோர் செலவு

3.திரைக்கதை (திரைல சதை தெரிஞ்சா போதாதா?)

நல்ல கலரான பொண்ணுங்க 4 பேரை ரூ 10000 சம்பளத்துக்கு பேசி(கட்டிட வேலைக்கு சித்தாளு மாதிரி)கூட்டிட்டு வந்து அவங்களை அருவிலயோ பாத்ரூம்லயோ அரை மணி நேரம் குளிக்க விடுவது,



ஏய்,ம்ம்,ஆஆ என பேக்கிரவுண்ட் ம்யூசிக் சேர்த்த வேண்டியது ,அட்டகாசமான போஸ்டர் ரெடி பண்ண வேண்டியது, சீன் படம் ரெடி.

படத்தோட டோட்டல் பட்ஜெட்டே 2 லட்சம்தான் இருக்கும்.வசூல் அள்ளிக்குதே.

இதுல என்ன காமெடின்னா இந்தப்படம் ஒரு பீரியட் ஃபிலிம்.400 வருடங்களூக்கு முன்பு நடக்கும் கதை.பாத்திரங்கள் அனைத்தும் செந்தமிழில் பேசி கொல்கிறார்கள்.


A
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdaqqiuStg6aRAHelIxWar73vxNyNgCaYi0zVq9qeK9ra67cj6w4lnEnaQ6doMkE0lrNWGAfR-1-SwzdPPqp7OWLQo_a4C9QtR_mvRiTAJNYA7SfeN5qMI-zP8mRK_LML86omrKm69t6Q/s640/devale+(17).jpg
படத்தின் ஆண்ட்டி ஹீரோ சுத்த விவரம் கெட்டவனாக இருக்கிறான்.(ர்).நினைத்த நேரத்தில் நினைத்த வடிவம் எடுக்கும் மந்திர சக்தி உள்ள அவன் பெண்களை அடைய அவ்ர்கள் காதலனாகவோ,கணவனாகவோ உரு மாறி 5 நிமிஷம் கட்டிப்பிடிக்கிறான்,ஆஹா சீன் கன்ஃபர்ம் என்று துள்ளும்போது ஒரிஜினல் உருவத்துக்கு மாறி தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறான்.இன்னும் 10 நிமிஷம் அப்படியே அதே தோற்றத்தில் இருந்தால் மேட்டர் ஓவர்.


அடுத்த காமெடி ஒரு முனிவர் காட்டில் தவம் செய்கிறார்,அவருக்கு 75 வயசு இருக்கும்,அவர் மனைவிக்கு 17 வயசாம்.என்ன கொடுமை சார் இது?காமெடிக்குள் காமெடி 17 வயசு என் முனிவர் சொல்லும் பார்ட்டிக்கு 36 வயசு இருக்கும்.


4 ஃபிகர்களில் ஒன்றே ஒன்று தான் தேறுகிறது.இளவரசியாக வருபவர்.அஞ்சரைக்குள்ள வண்டி அஞ்சலா மாதிரி பார்ட்டி செம கலரு.மத்ததெல்லாம் 10 பைசாவுக்கு தேறாது.படு திராபை.


4 லேடீஸுக்கும் அருவிக்குளியல் உண்டு.400 வருடங்களுக்கு முன்பே சோப் கண்டுபிடித்து விட்டார்களா என்ன?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjhyzINQng5BgHVAOXY9VVzUBGEP6egnQp4Ze6d1-9fcJLPxmZRvoZ_0ERPKmWOjM2yRRgeGmOrgbubFftJ_8vryG3ybbcqON24b9m3xIhgpOYYgsNjgQ1aCyZ5WgpDyBLMQsV2Vr3WQk/s640/devale+(8).jpg
குரு கூறிய கண்டிசனை சொல்ல மறந்துட்டனே.வில்ல சிஷ்யன் 3 ஃபிகரயும் அவர்கள் சம்மதம் இல்லாமல் தொடக்கூடாது(,சம்மதம் சொன்னாலே காத தூரம் ஓடிக்கொள்ளும்படிதான் அதுங்களும் இருக்கு)


அநேகமாக ஹீரோதான் ப்ரொடியூசராக இருக்கும்.அவர் சவுர்யத்துக்கு வர்றாரு ,போறாரு,பொண்ணுங்களோட குஜாலா இருக்காரு.

இவ்வளவு கேனத்தனமான டைரக்‌ஷனை என் 100 வருஷ(?!) சர்வீஸ்லயே பார்த்ததே இல்லை.ஒளிப்பதிவு மகாமட்டம்.(இந்த மாதிரி படத்துக்கு அதானே முக்கியம்)பிரபாகரன் எனில் நிறைய பேர் காதல் அரங்கம் எனும் வேலுபிரபாகரனின் காதல் கதை கொடுத்த நாத்திகவாதி பிரபாகரன் என்று நினைத்து விட்டனர்.யாரும் ஏமாறி விட வேணாம்.அவர் வேறு ,இவர் வேறு(அப்பாடி,என்னே ஒருசமூக அக்கறை)



படம் பார்த்து வெளியே வ்ந்தவர்கள் திட்டிக்கொண்டே போனார்கள்.ரொம்ப எதிர்பார்த்து வந்திருப்பார்களோ?


சரி விடுங்க அடுத்த படத்துல பார்த்துக்கலாம்(சீட்டாட்டத்துல பணம் இழந்தவன் அடுத்த ஆட்டத்துல விட்டதை பிடிச்சுடுவேன்னு சொல்றதில்லையா?அது மாதிரி,நம்பிக்கைதாங்க வாழ்க்கை.(மெஸேஜ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_iWRoFd1qITvZ9F4V7F4aPbpjNlaxuaHcF7a3ZCMGvmf5l7VHUT5o1n4f6e_l0BVnQcH7-DbdjRuwtvEQ6OnPtcuGmtlm4I-iBSteq8y4qfLZq2TeYIH7opLpjxDfL2CLPKN41W0IrrM/s1600/Deva_Leelai173.jpgA

--

Friday, July 16, 2010

விருந்தாளி- சினிமா விமர்சனம்


களவாணி மாதிரி லோ பட்ஜெட் படங்கள் ஹிட் ஆகும்போது நமக்கு நம்பிக்கை பிறக்கும்.ஸ்டார் வேல்யூ ,பேனர் வேல்யூ இல்லாத படங்களை ஊக்குவிக்கலாம் என நம்பிக்கை பிறக்கும்.துளிர்விடும் நம்பிக்கையை சுழற்றி அடிக்க வந்திருக்கும் படம்.

புதுமுக ஹீரோ ஈஸ்வர்,லோக்கல் ஃபைனான்ஸியர்,புதுமுக ஹீரோயின் (அவள் பெயர் தமிழரசி 2ம் ஹீரோயின்) போஸ்ட்மாஸ்டர் பொண்ணு,வில்லன் லோக்கல் போலீஸ்ஸ்டேஷன் எஸ்,ஐ.இவர்களை சுற்றி நடக்கும் கதை.

விருமாண்டி மாதிரி மீசை ,கர்லாக்கட்டை மாதிரி எக்ஸஸைஸ் பாடி வைத்துக்கொண்டு வரும் புதுமுகம் ஈஸ்வர் நெளிவதும்,குழைவதும் எடுபடவில்லை.முரட்டு மாமா,வில்லன் கேரக்டருக்கு பொருத்தமான முகம்.அதுவும் ஒட்டு மீசை என்பதால் அந்தக்குறை தனித்து தெரிகிறது.



புதுமுகம் .கேரளத்துக்கப்பக்கிழங்கு.இவர் முகச்சாயலில் அறுவடைநாள் பல்லவி மாதிரியும்,மேனி மினுமினுப்பில் தென்றலே என்னைத்தொடு ஜெயஸ்ரீ போலவும் வலம் வருகிறார்.வெட்கப்படும் காட்சிகள்,காதலால் சிணுங்கும் காட்சிகள் கொள்ளை அழகு.ஆனால் படம் முழுக்க அவர் வரும் 86 சீன்களிலும்
  முதலிரவுக்குபோகிற முத்தாம்மா மாதிரி மல்லிகைப்பூவை 10 முழம் வைத்துக்கொண்டே வர வேணுமா?



பாடல் காட்சிகளில் கெட்டப் மாற்றுகிறேன் பேர்வழி என்று அவர் ஹேர்ஸ்டைலை குதறி விட்டார்கள்.பல காட்சிகளில் ஃபேஸ் எக்ஸ்பிர
ஸன்ஸ் அவருக்கு வரவே இல்லை,கிராமத்தில் இருக்கும் போஸ்ட்மாஸ்டர் பொண்ணு இப்படியா ஆடம்பரமாக கால் கிலோ பவுடர்,அரை கிலோ ஃபேர் அண்ட் லவ்லியுடன் அலைவார்கள்?

 
வில்லனாக வரும் இன்ஸ்பெக்டர் இதுவரை நடித்த படங்கள் 18.அனைத்திலும் இன்ஸ்பெக்டர் ரோலே.வாழ்க கோடம்பாக்கம்.குறை சொல்ல முடியாத நடிப்பு,



படத்தின் ஒரே ஆறுதல் காமெடி கவுண்டமணி ஜெராக்ஸ் சிங்கம் புலி.படத்தின் வசனகர்த்தாவும் அவரே.அவர் வரும் காட்சிகளில் மட்டும் வசனம் தூள்.



காதல் கதைகளில் நம் மனம் லயிக்க இருவருக்கும் இடையே ஆன காதல் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கவேண்டும்,பாடிகெமிஸ்ட்ரி ஒத்துப்போக வேண்டும்,காதல் எதனால்,எப்போ வந்தது என்பதை சுவராஸ்யமாக சொல்லப்படவேண்டும்.மேற்கூறிய எதையும் டைரக்டர் வாட்டர்மேன் கவலைப்படவே இல்லை.



 
பாடல்கள் பத்திரிக்கையாளர் முருகன் மந்திரம்.ஹீரோயினின் அறிமுகப்பாடலில் நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கை எப்படி உயர்ந்தது என கவிதையாய் சொல்கிறார்.டைட்டிலில் வரும் கடிதமே கடிதமே அச்சு அசல் இளையராஜாதான் பாடி இருக்கிறாரோ என எண்ணும் வண்ணம் பிரமாதப்படுத்தி இருக்கிறார் S.sகுமரன்.பூ படத்தில் சூசூமாரி என பட்டி தொட்டி எல்லாம் கலக்கியவர்,களவாணியில் பிண்ணனி இசையில் கவனிக்கப்பட்டவர் 3வது படம் சற்று ஏமாற்றமே.பட


த்தில் யாராவது முக்கியமான வசனம் பேசும்போது பின்னணி இசை வந்து குறுக்கிட்டு புரிய விடாமல் செய்கிறது,தேவையான இடத்தில் மட்டும் பின்னணி இசை இருந்தால் போதாதா?அமைதியும் ஒரு இசைதானே.


 
வில்லியாக வருபவர் சதா தம் அடித்துக்கொண்டே வருவது ஓவர்,கிளைக்கதையாக வரும் லவ் ஜோடியின் காதல் படத்துடன் ஒட்டவில்லை.கிளைமாக்ஸ் தெளீவாக சொல்லப்படவில்லை.




 
திடீர் என ஹீரோயின் தூக்கில் தொங்குகிறார்.அவர் மிரட்டப்பட்டாரா,வில்லன் கொலை செய்தானா,ஹீரோ வில்லனை பழி வாங்கினானா எதுவும் தெரியவில்லை.எடிட்டிங் ஃபால்ட்டோ?



 
படத்தின் பிளஸ் 1.ஹீரோயின் 2 பாடல்கள் 3சிங்கம்புலி காமெடி
படத்தின் மைனஸ் திரைக்கதை,பின்னணி இசை, தெளீவில்லாத க்ளைமாக்ஸ்.



 
தியேட்டருக்கு யாராவது தப்பித்தவறி வந்தால் அவர்தான் புரொடியூஸருக்கு விருந்தா
ளி