Showing posts with label VISWAROOBAM. Show all posts
Showing posts with label VISWAROOBAM. Show all posts

Thursday, January 24, 2013

தடை விதித்த தமிழக அரசுக்கு கமல் பதிலடி , மக்கள் அதிரடி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI0kqHH07KNXWBmTPq3EKdn-XBPrHQ5IrPCgKk9tTwgxxN1IBcIIW-NI-Bum4RzIh73pvUzSIJaZmiNQbSGX4bxD-y56MIPmlV-oF-zP_Eat_JyNu_5JOxn9K0T67KgC3Kwme17KLIiyY/s1600/Viswaroopam+Latest+Wallpapers+Cinema65.com+(4).jpgவிஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை! 
Posted Date : 21:37 (23/01/2013)Last updated : 21:43 (23/01/2013)
சென்னை: கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' படத்தை வெளியிட, தமிழக அரசு 15 நாட்களுக்குத் தடை விதித்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனால், வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்த விஸ்வரூபம் ரிலீஸ் ஆவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த திங்கட்க்கிழமை விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டினார் கமல்.

அதையடுத்து, அந்தப் படத்தில் தங்கள் மதத்தினரை மிக மோசமாக சித்தரித்தரித்திருப்பதாக இஸ்லாமிய அமைப்பினர் குற்றம்சாட்டினர்.  இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி காட்சிகளை வைத்திருப்பதால் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரினர்.

இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் அளித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை - கோட்டையில் உள்துறை செயலாளர் ராஜகோபாலை 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்தது. அப்போது முஸ்லிம்களை காயப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

இந்த நிலையில், விஸ்வரூபம் படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, டி.டி.எச். ரிலீஸ் பிரச்னை காரணமாக, விஸ்வரூபம் வெளியிடுவது தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

விஷ்வரூபம் தடையா?- தமிழக அரசு க்கு கமல் பதில் அறிக்கை

நன்றி - கமல்ஹாசன்,http://ideas.harry2g.com/2013/01/blog-post.html



விஸ்வரூபம் படத்தை திரையிட எழுந்த எதிர்ப்புக்களை எல்லாம் கடந்து படம் வெளிவர இறுக்கும் நேரத்தில் தமிழக அரசு இந்தப்படத்திற்கு இஸ்லாமிய மக்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கமல் இது சம்பந்தமாக விடுத்துள்ள அறிக்கையின் மொழிபெயர்ப்பு..


எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் குரல் கொடுத்துள்ளேன்.
 
 
மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.
 
 
சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள முஸ்லீமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார்.
 
 
அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நான் சட்டத்தையும், எதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
 
 
இந்தப் படத்தில் தவறுகள் இருந்திருந்தால் தணிக்கைக் குழுவுக்கு படம் போன பொது அங்கு வைத்தே தடை செய்திருக்கலாமே ஏன் இறுதி வரை பொறுத்திருந்து தமிழ் நாட்டு அரசும் இஸ்லாமியக்குழுக்களும் இந்த தடையைக் கொண்டு வந்துள்ளன என்பதே தற்போதைய சூடான கேள்வி.
 
நன்றி - http://www.myoor.com/kamal-release-his-thoughts-about-viswaroopam-banning/
 
 
 மக்கள் கருத்து 
1. இந்த படத்தை மிக பெரிய அளவில் வெற்றி பெற வைத்து எதிர்ப்பவர்களுக்கும், தடை செய்தவர்களுக்கும் உண்மையை உணர்த்த அனைத்து மக்களும், ரசிகர்களும் துணை புரிய வேண்டும்.

இதன் மூலம் கமலுக்கு நமது பக்க பலத்தை காட்ட வேண்டும், மற்றவர்கள் போல இவர் ஷாப்பிங் சென்டரையோ, சொத்துக்களையோ வாங்கி குவிக்கவில்லை. சம்பாரித்த அனைத்தையும் சினிமாவிற்கே செலவழித்து தமிழ் சினிமா வளர உதவி செய்கின்றார், இவரை தமிழன் கை விட்டால் புரட்சி கவிஞர் பாராதியாரை வாழும் பொழுது கை விட்ட தமிழகம் போல ஆகி விடும், ஆம் இவரிடம் இப்பொழுது எந்த சொத்துக்களும் இல்லை ஆழ்வார் பேட்டை வீடும் கடனில்
2. என்னமோ முஸ்லிம்களில் தீவிரவாதிகளே இல்லாதது போலவும், அனைத்து உலக முஸ்லிம்களுக்கு இவர்களே பாதுகாவலர்கள் போலவும் நடந்துகொள்கிறார்கள்....தாலிபான் எல்லாம்.... மும்பை குன்டு வச்சு இப்ப பாகிஸ்தானுல இருக்கிர ...??!!! எல்லாம் எப்ப ஹின்டுவா மாரினாங்க...?????? 
3. இப்படி சினிமாவை சினிமாவாக பார்க்காமல், மத ரீதியாக எல்லோரும் பார்த்தால் என்னாவது? முஸ்லிம் கோபபடாமல் ஒரு படமாக பாருங்கள். இல்லாவிட்டால் இந்த படத்தை முஸ்லிம்கள் யாரும் பார்க்காதீர்கள். உங்களுக்காக நாங்களும் ஏன் பார்க்காம இருக்கணும்?..........
4. என்னமோ முஸ்லிம்களில் தீவிரவாதிகளே இல்லாதது போலவும், அனைத்து உலக முஸ்லிம்களுக்கு இவர்களே பாதுகாவலர்கள் போலவும் நடந்துகொள்கிறார்கள். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக வைத்து உலகத்தில் உள்ள மொழிகளில் எல்லாம் படம் வருகிறது, அதை தடுக்க முடியுமா? அமிர் போன்ற இயக்குனர்கள், சீமான் போன்ற இயக்குனர்கள், இந்துக்களை மட்டமாக சித்தரித்து படம் மட்டும் எடுக்கலாம். ஆர்யா,கான் நடிகர்கள் அவர்களுடைய படங்களில் இந்துக்களை ஏதாவது ஒரு வகையில் புன்படுத்தி படமே எடுப்பதில்லையா? அரசு தடை செய்ததுக்கு காரணம் அவர்களுடைய ஓட்டு. முஸ்லிம்கள் மாதிரி இந்துக்களும் ஒன்றாக ஒரே கட்சிக்கு ஒட்டு போட்டா இந்த அரசியல் கட்சிகள் என்ன செய்ய முடியும். நாடு உருப்படனும்னா எல்லோருக்கும் ஒரே சட்டம் இருக்கனும். இந்துக்களின் ஒற்றுமையின்மையை இவர்கள் சிருபான்மை இனத்தவர்கள் என்ற பெயரில் நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்
5. இப்படித்தான் டான் பிரௌன் எழுதிய டாவின்சி கோட் படம் வெளியிட தமிழகம் தடை விதித்தது. அந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது. இது வெறும் கண்துடைப்பு மட்டுமே. உயர்நீதிமன்றம் இந்த தடையையும் நீக்கும். 
6. விஸ்வருபம் படத்துக்கு காசு கொடுக்காம விளம்பரம் கிடைத்துவிட்டது .துப்பாக்கி படம் வெற்றி பெற்றதற்கு தாங்களும் ஒரு காரணம்.நீங்கள் என்ன தான் கூவினாலும் அங்கே ஒன்றும் நடக்கபோவதில்லை.சினிமாவையும் நிஜத்தையும் பிரித்து பார்க்க தெரியாத நீங்கெல்லாம்.....
7. கமல் படத்துக்கு செலவில்லாமல் விளம்பரம் கிடைத்தது. கமல் தன்னை நடிப்புக்கு அர்ப்பணித்தவர். அதனால் இந்த விளம்பரத்தில் குட தவறில்லை

முஸ்லிம் நண்பர்களே .... உங்கள திவிரவாதியா காட்டின தப்பு. ஆனா உங்க ஆளுங்க பண்ணுற திவிரவாதத்தை மட்டும் எதிர்க்க மாட்டீங்க. நல்ல இருக்குபா நியாயம். கமல் சொல்ற மாதிரி முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதின்னு சொல்லலை, தீவிரவாதி முஸ்லிம்மா இல்லாம இருந்தா நல்ல இருக்கும் தான் சொல்றேன்....



நன்றி - விகடன் 
இது சம்பந்தமா நான் போட்ட ட்வீட்ஸ் 
1. குற்றப்பத்திரிக்கை படத்தை ரிலீஸ் பண்ண ஆர் கே செல்வமணி படாத பாடுபட்டாரு.அடுத்து கமலின் விஸ்வரூபம் # சோதனை மேல் சோதனை 
2. எந்த அளவு படம் தள்ளிப்போகுதோ அந்த அளவு எதிர்பார்ப்பு எகிறும்.படத்துக்கு ஓப்பனிங் பிரம்மாண்டமா இருக்கும் # சியர் அப் கமல் 
3. இந்த அளவு தடை மேல் தடங்கல் வர அப்படி என்னதான் படத்தில் இருக்கும் என எண்ண வைத்ததே கமலின் வெற்றி! 
4. சகலகலாவல்லவன் மாதிரி மசலாப்படத்தை எடுத்து காசு பார்க்க நினைக்காமல் தமிழனின் ரசனையை முன்னேற்ற உழைத்த கமலுக்கு தமிழகம் தரும் பரிசு தடை 
5. சார்.கமலுக்கு நீங்க ஏன் சப்போர்ட் பண்ணலை ? 
 ரஜினி - என் படத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்தா மட்டும்தான் வாய்ஸ் தருவேன் 
6. தமிழ் சினிமாவில் மிகப்பெரும் போராட்டத்தை ,எதிர்ப்பை சம்பாதித்த படங்கள் 1 உலகம் சுற்றும் வாலிபன் 2 குற்றப்பத்திரிக்கை 3 சண்டியர் 4 ,விஸ்வரூபம் 
7. சிலர் டேம் 999 படத்தடையை உதாரணம் காட்டுகிறார்கள்.அது முற்றிலும் வேறு மாதிரியான பிரச்சனை 
8. இந்தப்படத்துல முஸ்லீம் கேரக்டரே கிடையாது.எதுக்கு தடை ? ஹீரோயின் ஒரு சீன் ல "எனக்கு பாய் பிரண்ட்ஸ் நிறைய பேர் "னு சொல்றா 
9. உங்க படத்துல வில்லன் கேரக்டர் வேற்றுக்கிரகவாசின்னு காட்டின சாமார்த்தியம் பிரமாதம்.ஆனா அவர் என்ன மதம்? ஜாதி?னு தெளிவாக்குறிப்பிட்டாதான்் ரிலீஸ் பண்ண விடுவோம்
10. முழுக்க முழுக்க இந்துக்களை மட்டுமே காட்டி இருக்கீங்க.சமத்துவ சமுதாயம் உருவாக ஒரு படத்துல எல்லா மத ,சாதிப்பிரிவுகளும் சரி சமமா வரனும் 
11. ஹீரோயின் ஜிலேபி ஜீரா சாப்பிடும் சீனை ஏன் கட் பண்றீங்க? அது நா"ஜிரா" முஸ்லீம் பேரை அவமானப்படுத்துவது போல் இருக்கே? 
12. சாதிக்க்கப்பிறந்தவன் டைட்டில் ஏன் தடை பண்ணிட்டாங்க ?
 சாதிக் ஒரு முஸ்லீம் பேராச்சே? 
 
13. RT : ஒரு படத்துக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு உரிமைஇல்லை #டாவின்சி கோட் பட விவகாரத்தில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு
14. RT : உங்களுக்கு சண்டை கமல் கூட தான்,உங்க சண்டையில ஸ்ருதி மேல ஒரு சின்ன கீறல் கூட விழுந்தாலும் நான் மனுசனா இருக்க மாட்டேன்.

14 வது ட்வீட் மட்டும்
Boopathy Murugesh இவர் ஃபேஸ் புக்கிலும் இருக்கு

Saturday, January 12, 2013

கமலை மிரட்டிய 13 பேர்! - குற்றம் நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

Vishwaroopam-On-Location-Stills-06072012921592e.jpg (940×627)
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 



'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் ​போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷன​ரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னை​களுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல்



. அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செய​லாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம்  முதலில் தியேட்டரில் ரிலீஸ். அதன்பிறகுதான் டி.டி.ஹெச். ஒளி​​பரப்பு'' என்று தீர்மானமாக அறி வித்தார்.


மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள். குறைந்த விலைக்குக் கொடுங்கள் என்று பேரம் பேசாதீர்கள். என் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறேன். இனி அவர்கள் அமைதியாக

இருப்பது என் கையில் இல்லை. என் எதி ராளி​களின் நடவடிக்கையில் இருக்கிறது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த 13 பேரின் பட்டியல் என்னிடம் இருக் கிறது. அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்'' என்று பதிலடி கொடுத்தார்.



என்ன நடந்தது? கோடம்பாக்கம் வட் டாரத்தில் விசாரித்தோம்.


''வெளியூர் தியேட்டர்காரர்கள் பலருக்கும் பொங்கல் தினத்தில் 'விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய ஆசை. அவர்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் படத்தை வாங்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். சென்னை சாந்தி தியேட்டரில் படத்தைத் திரையிடக் கூடாது என்றும் மிரட்டல் வந்​திருக்கிறது. சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால்,


 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுக்கட்டும். நாங்க படத்தை ரிலீஸ் செய்வோம்’னு கோபமாகச் சொல்லிட்டார். மிரட்டப்பட்ட தியேட்டர் அதிபர்கள் பலரும் கமலிடம் புலம்பி இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த கமல், மிரட்டிய 13 பேருக்கும் நோட்டீஸ் 



அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார். 'தனிப்பட்ட தியேட்டர் அதிபர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அத்துமீறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.




இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள். ஆனால் கமல் அவர்களிடம் எந்த பதிலும் சொல்ல​வில்லையாம். அதன்பிறகே, 'விஸ்​வரூபம் 25-ம் தேதி 500 தியேட்டரில் ரிலீஸ்’ என்று கமல் அறிவித்தார்'' என்கிறார்கள்.


கமலுடன் பேச்சுவார்த்தையில் கலந்து​கொண்ட தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் பேசினோம். ''தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பாலும், சில விநியோகஸ்தர்களாலும் ஆரம்பத்தில் குழப்பங்கள் உண்டாகின. இப்போது எல்லாப் பிரச்னைகளும் சுமுகமாக முடிந்து இருக்கிறது. 25-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்று இரவு டி.டி.ஹெச்-சிலும் ஒளிபரப்பும் திட்டத்தில் கமல் இருக்கிறார். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 'தசாவதாரம்’ வசூலை 'விஸ்வரூபம்’ முறியடிக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை'' என்று உறுதியாகச் சொன்னார்.


பார்க்கலாம்!

எம்.குணா

படங்கள்: ஆ.முத்துகுமார்  


newviswa-14.jpg (630×420)

readerls views


1.மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள்.. சரியா சொன்னிங்க. அதே மாதிரி தியேட்டர்காரங்களுக்கும் தங்களோட அங்காடில என்ன பொருள விற்பனை செய்ய வேண்டும் கூடாது என்று முடிவு பண்ண உரிமை இருக்கு. தியேட்டர்காரங்க ஒரு சங்கமா செயல்பட்டு முடிவு எடுக்கராங்க அவங்கள்ள சிலர பிரிச்சு தன் வழிக்கு கொண்டு வரும் போது எதிர்ப்பு வரது சகஜம்தான்.



 டிடிஎச்ல படத்த போட்டா பல தியேட்டர்களுக்கு பெரும் பாதிப்பு வரும் என்பது உண்மைதான். அதுவும் இல்லாமல் கமலுக்கு தியேட்டர் ரிலீஸுக்கு 80 கோடி பணம் வேணுமாம் (தமிழுக்கு மட்டும்) அவருக்கு 80 கோடி தரணும்னா டிக்கட் கலக்ஷன் 250 கோடி வரணும். 250 கோடில 35% சதம் வரிக்கு போயிடும் மிச்சம் இருக்கும் 160 கோடில 50% சதம் தியேட்டர்காரங்க ஷேர் மிச்சம் இருப்பதுதான் படத்த வாங்கினவங்க (வினியோகிஸ்தர்) ஷேர்.



 ஆனானபட்ட ஷாருக்கான் படங்களே அகில இந்தியா கலக்ஷன் 120 கோடிய தாண்டரதில்லை. 250 கோடி டிக்கட் கலக்ஷன்னா ஒரு டிக்கட் விலை 100 ருபான்னு போட்டாகூட 2.50 கோடி பேரு இந்த படத்த பார்க்கணும் அதவது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் இப்படி உள்ல 5 சிட்டி மக்கள் எல்லாரும் ஒருத்தர் விடாம 100 ருபா குடுத்து இந்த படத்த பார்க்கணும். நடக்கர காரியமா?




2. ஒரு தொழிலில் லாப நட்டம் சகஜம். லாபம் வரும் என்று நம்புபவர் அதில் இறங்கட்டும்.மற்றவர்கள் விலகி கொள்ளட்டும் எதற்க்காக ஒரு ரசிகனுக்கு டிடிஎச்ல படம் பார்க்கும் வாயப்பை தடுக்க வேண்டும்?




3. ஆக கமலுக்கு நல்ல விளம்பரம். ரஜினி வேற மாதிரி விளம்பரம் - இவர தடாலடியாக அரசியல்வாதிகளை நாடாமல் விளம்பரம். ஆனால் இவரது அப்ரோச் பிடித்திருக்கிறது. (இவர் படங்களும், அவற்றில் இவர் எல்லா பிரேமிலும் வர முயற்சிக்கும் சுயநலமும் வெறுப்பேற்றினாலும்).






4. 'நடிகர்களும் பிஸினஸ்மேன்கள் தான்'...என்று கமல் ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறியிருந்தார். எப்போது கலைஞன் வியாபாரியாக முடிவு செய்து விட்டானோ அப்போது வியாபார உலகின் தந்திரங்களை வென்றால் தான் நிலைக்க முடியும்.அந்த நோக்கில் பார்க்கும் போது நல்ல கலைஞனாய்

மட்டுமல்ல திறமையான வியாபாரியாகவும் கமல் தோன்றுகின்றார்.
மிக தரமான, நல்ல பொருளை விற்கும் வியாபாரியிடம் தான் இத்தகைய
உறுதியையும்,போராடும் குணத்தையும் பார்க்க முடியும்.'விஸ்வரூபம்' அந்த விதத்தில் நிறைய எதிர்பார்ப்பினை கொடுத்திருக்கிறது....
வாழ்த்துக்கள் கமல்...!!!





5. ஆக மொத்தம் தமிழகம் இப்போ மஃபியாகைகளில் உள்ளது. எது செய்தாளும் அவர்களுக்கு மாமூல் வர வேண்டும். என்ன நாம் மக்களாட்சி நடகிர நாட்டில் உள்ளோமா?. சந்தேகம் தான்.




6. சீக்கிரம்... படம் நீங்க ரீலிஸ் பண்றதுக்கு முன்னாடி திருட்டு விசிடியில் ரிலிசாகப்போகு




7. இவருக்கு எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்....இது ஒன்றே போதும் இவருக்கு ஆப்பு வைக்க... ( உதாரணம்... கழ்டப்பட்டு இளையராஜா போட்ட டுயன இவரு பாடி கெடுக்கிற மாதிரி...)




8. தொழில் நுட்பத்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல் ஹாசன் முன்னோடி. புதுமைகள் புகுத்தும் போது எதிர்ப்புகள் இருக்கவே செய்யும். அனால், கமலுக்கு, தமிழ் ரசிகர்களின் பேராதரவு எப்போது உண்டு!


9. இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள்.


கோழைகள், வேறு யாரோ (அரசியல்?) பின்னனியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


கமலின் முடிவும், எதிர்த்து நின்ற சவாலுக்கும் பாராட்டுக்கள். 


படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்



thanx - ju vi 



Vishwaroopam-Reservation-Starts-Tomorrow-Poster.jpg (538×667)a




அன்புக்குக் கட்டுப்பட்டு விஸ்வரூபம் 25 ல் திரையரங்கில் வெளியீடு: கமல்ஹாசன்



விஸ்வரூபம் படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


திரையரங்க உரிமையாளர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 



டி.டி.எச். நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் எந்தத் தேதியில் வெளியிடுவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.



a





Thursday, January 10, 2013

உலக நாயகன் கமல்ஹாசனிடம் சில கேள்விகள்

http://www.indicine.com/images/gallery/bollywood/movies/vishwaroop/68871-vishwaroop4-large.jpg 

 கலைஞானி கமலின் திரை வாழ்க்கையை 2 பகுதிகளா பிரிக்கலாம். மணிரத்னத்துடன் இணைந்து  பணி ஆற்றிய நாயகன் ப்டத்துக்கு முன்பும் பின்பும் என . ஏன்னா நாயகன் படத்துக்குப்பிறகு கம்லின் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு . ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தனும், கெட்டப் சேஞ்ச் பண்ணனும்  , ஹேர் ஸ்டைல் , மேனரிசம் , டிரஸ்ஸிங்க் சென்ஸ் உட்பட வெரைட்டி காண்பிக்கனும் என்ற  தணியாத தாகம் கொண்டவர்  ஆனார். 

சத்யா படத்துல  ஆக்‌ஷன் காட்சிகளில் புது ஆக்ரோஷம் . ஃபைட் சீனில் டிஷ்யூம் டிஷ்யூம் சவுண்ட் இல்லாம புதுசா ட்ரை பண்ணாங்க , பேசும் படம் இந்திய சினிமாவில் யாரும் செய்யாத பரிசோதனை முயற்சி . வசனமே இல்லாம ஆனா பிரமாதமான நகைச்சுவை படம். ஆளவந்தான் ல  ஜிம் பாடி கொண்டுவந்தது , மகாநதில  முழுக்க முழுக்க ஜெயில்வாழ்க்கையின் அவலத்தை சொன்னது ( எந்த ஒரு தமிழ்ப்படத்திலும் ஜெயில் காட்சிகள் இவ்வளவு விஸ்தீரத்தோடு இல்லை )


மைக்கேல் மதனகாமராஜன்ல 4 வேடங்கள்ல அவர் செஞ்ச மாதிரி இதுவரை தமிழ்ல யாரும் செய்ய்லை. செம காமெடி படம். .அபூர்வ சகோதரர்கள்ல அவர்  குட்டி அப்புவா நடிச்ச ரகசியத்துக்கான விடை இதுவரை யாருக்கும் தெரியலை .

குருதிப்புனல் , மகாநதி ல அவரோட திரைக்கதை அறிவு பிரமாதமா பேசப்பட்டது . மிஸஸ் டவுட் ஃப்யரோட உல்டாவா இருந்தாலும் அவ்வை சண்முகி தமிழுக்கு புதிய முயற்சி ( பிரசாந்த் ஆணழகன் ல ஒரு முயற்சி பண்ணி இருக்கார் ) .

நிற்க . இவை எல்லாம் எதுக்கு? ஒரே கமல் புராணமா இருக்குன்னு யோசிக்கறீங்களா? நான் இப்போ கேட்கும் கேள்விகளை வெச்சு நீ ரஜினி ரசிகனா?  கமல்னா உனக்கு ஆகாதா? என நீங்க நினைச்சுடக்கூடாதே, அதுக்குதான் இந்த முன்னுரை , தமிழ் சினிமாவில்  கமல் ஒரு சகாப்தம் என்பதில் ஐயம் இல்லை .

 அன்பே சிவம் படத்தில்  சுனாமியை பற்றி சொன்னபோது நம்ம ஆட்களுக்கு சுனாமியின் தீவிரம் பற்றி தெரியலை . 10 வருடங்களுக்கு முன் கூட்டியே சிந்திப்பவர் தான் அவர். ஆனா இப்போ விஸ்வரூபம் பட பிரச்சனைல ஆழம் தெரியாம காலை விட்டுட்டார். அவரிடம் ஒரு சாதாரண பொது ஜனமா என்னோட கேள்விகள் .


சரித்திர நாயகன் கமலிடம் சாமான்யனின் கேள்விகள்



1. படத்தோட பட்ஜெட் எகிறிடுச்சு , 95 கோடி ஆகிடுச்சு என்கிறீங்க  அதனால தியேட்டர்காரங்க கம்மி ரேட்டுக்கு கேட்கறாங்க , கட்டுபடி ஆகலை , அதனலாதான் டி டி ஹெச் ரிலீஸ் திட்டம்னு சொல்றீங்க ஓக்கே . ஒரு வீடு கட்டனும்னா  ப்ளூ பிரிண்ட் போட்ட பின் முதல் வேலையா பட்ஜெட் போடுவோம் . இஞ்சினியர் சொல்லும் எஸ்டிமேட்டை விட நம்ம கிட்டே  டபுள் மடங்கு பணம் இருக்கனும்.  ஏன்னா அவர் 10 லட்சம் சொன்னார்னா 17 லட்சம் ஆகிடும். லோன்  சோர்ஸ் எல்லாம் நாம ரெடி பண்ணிக்கனும்
 உங்க மார்க்கெட் வேல்யூ எவ்ளவ்? என்ன ரேட்டுக்கு போகும்? என்ற கால்குலேஷன் இவ்வளவு வருட திரை உலக வாழ்வில் தெரியாம போயிடுமா? ஏன் அகலக்கால் வைச்சீங்க?சன் டி வி , சன் பிக்சர்ஸ் இப்படி காம்பினேஷன் போட்டிருக்கலாமே? 


2. உங்க டி டி ஹெச் திட்டம் விளம்பரங்கள் நம்பி பலர் பணம் கட்டி இருக்காங்க. எல்லாரும் உங்க முகத்துக்காகத்தான் பணம் கட்டி இருக்காங்க , இப்போ வந்து திடீர்னு அறிவிச்ச தேதில மாற்றம் , டி டி ஹெச் பணம் திரும்ப வருமா? என்பது டவுட் என்றால் எப்படி?

>>>>டி.டி.ஹெச். காசு திருப்பித் தரப்படுமா எனும் சட்ட விபரங்கள் எனக்குத் தெரியாது.


பணம் வசூல் பண்ணும்போது “ கடைசி நிமிடத்தில் வெளியிடுவதில் மாற்றம் நிகழ்ந்தால் பணம் வாபஸ் இல்லை , அல்லது அது பற்றி அந்தந்த நிறுவனங்கள்தான் முடிவெடுக்கும், எனக்கும் அதற்கும் எந்த சமப்ந்தமும் இல்லை “ என முன் கூட்டியே அறிவித்தீர்களா? 


3. இப்போ ஈரோட்டில் 6 தியேட்டர்கள் விஸ்வரூபம் புக் பண்ணி இருக்காங்க. உங்க டீலிங்க் என்ன? அட்வான்ஸ் வேண்டாம். DTH ரிலீஸ் என்பதால் ரிஸ்க் அதிகம் , அதனால் வர்ற லாபத்துல அதாவது வசூல் பணத்துல  60 %  எனக்கு 40 % உனக்கு அப்டினு அக்ரீமெண்ட் போட்டீங்க. உங்களை நம்பி கொங்கு மண்டலத்துல  உங்க படத்தை  புக் பண்ண தியேட்டர்ங்க கடைசி டைம் அறிவிப்பால் இப்போ எந்தப்படத்தை புக் பண்ணுவாங்க ? 

>>>> என்னுடைய செளகரியத்துக்காக மட்டுமே ரிலீஸை தள்ளி வைக்கிறேன் 


உங்க தனி நபர் சவுகர்யத்துக்காக எத்தனை பேர்க்கு அசவுகர்யம்னு பார்த்தீங்களா? வியாபார உலகில் இது சகஜம், ஆனா உங்க நம்பக்த்தன்மை குறைஞ்சுடுச்சே? இப்போ ஒரு கோர்ட் தடையோ , வேற எதிர்பாராத சிக்கலோ வந்து படம் ரிலீஸ் பண்ண முடியலைன்னா ஓக்கே , ஆனா உங்க தனிப்பட்ட முடிவால  ரிலீஸ் ஆகலைன்னா அதுக்கு நீங்க தானே தார்மீகப்பொறுப்பு ? 



4.  >>>> என்னுடைய படத்தின் தேதியை அறிவிக்க என்னைத் தவிர வேறு யாருக்கும் தகுதியோ அருகதையோ இல்லை


இந்த ஸ்டேட்மெண்ட் ஓவரா  தோணலை? அப்புறம்  ஏன் ஜனவரி 11ன்னு அறிவிச்சீங்க ?  சில பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போகிறது  அப்டினு சொல்லி இருக்கலாமே? 


5.  டி டிஹெச்சில் படம் வந்தால் அதை காப்பி பண்ண முடியாது , அப்படி ஒரு தொழில் நுட்பத்துல வெளியிடுவோம் அப்டினு ஆணித்தரமா முதல்ல சொன்ன நீங்க கேபிள் ஆபரேட்டர்கள் “இல்லை , நாங்க காப்பி பண்ணுவோம் அப்டினு சவால் விட்டதும் பல்டி அடிச்சீங்க 


>>>>பாலில் தண்ணி கலப்பதே தப்பு தான். அதே போல தான் டி.டி.ஹெச்.சில் ரிகார்ட் செய்யக்கூடாது என்று சொல்லி செய்தால் அது தப்பு தான் 



6. யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை , நீங்க பதிலே சொல்ல முடியாத , சமாளிச்சு மழுப்ப முடியாத ஒரு கேள்வி

மக்கள் ரூ 1000 பணம் கட்டியதுக்கு முக்கியக்காரணம் என்ன?  தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகும்  முன்பே நாம படம் பார்க்கலாம் என்ற ஆர்வம் தானே? அப்படித்தானே முதல்ல மார்க்கெடிங்க் பண்ணுனீங்க>?  இப்போ வசூல் பண்ணிட்டு  படம் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் டி டி ஹெச்சில் ரிலீஸ் அப்டின்னா எப்படி?  இது மோசடி ஆகாதா?

 நீங்க நேர்மையானவர் எனில் என்ன பண்ணனும் ?  வாங்குன பணத்தை எல்லாம் எல்லாருக்கும் ரிட்டர்ன் பண்ணிட்டு புதுசா அறிவிக்கனும் .  அப்போ யார் புக் பண்றாங்களோ  அவங்களுக்கு படம் காட்டுனா ஓக்கே 




 7. ஒரு விஷயத்தை ஓப்பனா சொல்லப்போனா நீங்க எதிர்பார்த்த அளவு டி டி ஹெச் புக்கிங்க் இல்லை. உங்க டார்கெட் மினிமம் 50 கோடி இதுல பார்த்துடலாம்னு இருந்தீங்க.. தமிழன் சிக்கனவாதி . மேக்சிமம் ரூ 200க்குள் முடிக்க வேண்டிய செலவில் ஏன் வீணாக ரூ 1000 கொடுக்கனும் அப்டினு நினைச்சு அதிகம் பேர் புக் பண்ணலை . அப்படி புக் பண்ணி இருந்தா நீங்க தியேட்டர்காரங்களை சட்டையே பண்ணி இருந்திருக்க மாட்டீங்க , இதான் உண்மை. உண்மை என்னைக்கும் கசக்கும். ஆனா மீட்டிங்க் முடிஞ்சு வந்து





>>>>அவங்க கெஞ்சினாங்க. நான் முடிவு செஞ்சிருக்கேன். வித்தியாசத்தைப் புரிஞ்சுக்குங்க’ 

 அப்டினு சொன்னீங்க... இது சரியா? அவங்க ஏன் உங்க கிட்டே கெஞ்சனும்? உங்களுக்குதான் தேவை இருக்கு.

 உண்மையிலேயே நீங்க இந்த விஷயத்துல ஜெயிச்சிருந்தா  இந்த 2 ல ஏதாவது ஒண்ணை நடத்தி காட்டி இருக்கனும்

1. சொன்ன தேதில சொன்ன தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்றது 

2. வாக்குத்தந்த படி , சவால் விட்ட படி டி டி ஹெச் ஒளிபரப்பை தியேட்டர் ரிலீஸ்க்கு முந்தின நாள் ஒளிபரப்புவது 


 இந்த 2 லயும் உங்களால நிகழ்த்திக்காட்ட முடியலைன்னா அப்போ அது தோல்விதானே?  


8. >>> டி.டி.ஹெச். ரிலீஸூக்கு எக்கச்சக்க enquiry வந்தது. நேரக் குறைவு! 

 இது அப்பட்டமான பொய். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் எங்க ஊர் சென்னிமலைல  மொத்தமே 12 பேர் தான் புக் பண்ணி இருக்காங்க . ஈரோட்டில்  எனக்குத்தெரிஞ்சு  40 பேர் புக் பண்ணி இருக்காங்க.. எப்போ போனாலும் ஆஃபீஸ் காத்து வாங்கிட்டு இருக்கு.. 




9. >>>>திரைத்துறையிலிருந்து இல்லீகல் பிரஷர்கள் வந்தன.அதுக்குத்தான் போலீஸ்ல புகார் குடுத்தாச்சே?

>>>>>>13 பேருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். யார் என்று இப்போது சொல்ல மாட்டேன். 

உங்களுக்கு 3000 பேர் லீகல் நோட்டீஸ் அனுப்பப்போறாங்க , ஏன்னா நீங்க டி டி ஹெச் மேட்டர்ல சீட்டிங்க் பண்ணிட்டீங்க 







10. >>>>>>>புதியது என்றால் அது லேட்டாக வரக்கூடாது..

 ஆமா, உங்க படம் லேட்டாத்தானே வருது?


11. >>>>>>>>பிற்காலத்தில் மொபைல் ஃபோனில் கூட தமிழ் திரைப்படங்கள் காண ஆசைப்படலாம்

>>> நடிகர் சங்கத்திலிருந்து இது வரை ஆதரவு இல்லை. விரைவில் வரும் என்று நம்புகிறேன்

>>>>>படத்தின் வியாபார சங்கதிகளை பத்திரிகைகளுடன் விவாதிக்க முடியாது


>>>ஒரு பத்திரிகைக்காரர் நான் முடிவு செய்வதற்கு முன்பே அவர் முடிவு செய்திருக்கிறார். உங்கள் தலையங்கத்தை நான் முடிவு செய்ய முடியாது



>>>>என்னுடைய வழி தனி வழி இல்லை.. அது புது வழி.. நாளையே அது பொது வழியாகவும் ஆகலாம்



மேலே நீங்க சொன்னவைகளுடன் ஒத்துப்போகிறேன்



Saturday, December 08, 2012

விஸ்வரூபம் - கமல் சந்திக்க இருக்கும் பிரச்சனைகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1G1lpHhhMZi_ZqgG8AolU8YEiziJ-XnF-BrJeqrImL-eRq8JuYeUky7FKc9PjI8qT367I3-LPariQ-4_iZdDpSG5kX028NUQUTBkp4f_znLKX1RPFGoysriu1Zz3jDsZ2YG54QLKzrIQ/s1600/Viswaroopam_latest_wallpapers+%25282%2529.jpgலகத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக, 'விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக சின்னத் திரையில் வெளியிடுவதன் மூலம், சினிமாத் துறையில் அதிரடிப் புரட்சி செய்யப்போகிறார் கமல்ஹாசன்.



'விஸ்வரூபம்’ படம் ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்​களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு முதல் நாளே அதாவது, 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சின்னத் திரையில் 'விஸ்வரூபம்’ படத்தை வெளியிடுகிறார் கமல்ஹாசன். இதற்காக, டாடா ஸ்கை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்த 'விஸ்வ​ரூபம்’ படத்தை மொத்தமாக டாடாவிடம் விற்கவில்லை.


 திரையிடப்போகும் ஒரு ஷோவுக்கு ஒரு கனெக்ஷனுக்கு 1,000 ரூபாய் வீதம் கணக்கு வைத்து பணத்தை வசூலிப்பார்களாம். வசூலாகும் தொகையில் சதவிகித அடிப்படையில் கமலும் டாடாவும் பிரித்துக்கொள்வார்கள். கமலின் இந்த வித்தியாசமான வெளியீட்டு முயற்சிக்கு, தமிழ் திரைப்படத் துறையில் ஆதரவும் எதிர்ப்பும் என கலவையாக ரியாக்ஷன்கள். 



கடந்த 5-ம் தேதி மாலை ஃபிலிம் சேம்பரில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டார் கமல்ஹாசன். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா, பெப்சி அமைப்பின் தலைவர் அமீர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில்தான் 'விஸ்வரூபம்’ குறித்து, தயாரிப்பாளராக தான் எடுத்து இருக்கும் புதிய முயற்சியைத் தெரிவித்தார்.




''கமல் பாணியை எல்லோரும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டில் தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். தனிப்பட்ட முறையில் கமல் பொருளாதார ரீதியாக தன்னைக் காத்துக்கொள்வார். கமல் பக்கத்தில் இருந்து பார்த்தால், அவரது நியாயம் புரிகிறது. டி.வி-யில் திரையிடுவதால் திருட்டு வி.சி.டி. வெளிவர வாய்ப்பு இருக்குமே என்று கமலிடமே கேட்டேன். திருட்டு வி.சி.டி. எடுக்க முடியாத தொழில்நுட்பத்தில் 'விஸ்வரூபம்’ படத்தைத் தயாரித்து இருப்பதாக என்னிடம் சொன்னார்'' என்று ஆதங்கப்பட்டார் ஒரு திரையுலக வி.ஐ.பி. 



தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் இதுபற்றி பேசினோம். ''தமிழ் சினிமா​வில் நடிப்பு, படைப்பில் மட்டும் இல்லை; வியாபாரத்திலும் புதுமையைப் புகுத்துகிறார் கமல். 'விஸ்வரூபம்’ படத்தை 90 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்து இருக்கிறார். செலவு செய்த பணத்தை எப்படியாவது எடுத்தாக வேண்டும். 



அதனால், 'விஸ்வரூபம்’ படத்தை யாரிடமும் விற்கவே இல்லை. அவரே நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார். பணம் கொடுத்து வாங்கினால்தானே விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டம் அடைவார்கள். இதுவரை எத்தனையோ ரிஸ்க்கான படங்களைத் தயாரித்து நடித்து இருக்கிறார் கமல். அந்தப் படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நயா பைசா பாக்கி வைக்காமல் செட்டில் செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன்தான். இப்போது நிறைய நடிகர்கள் தயாரிப்​பாளரிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையே திருப்பித் தராமல் டிமிக்கி கொடுப்பதை கண் கூடாகப் பார்க்கிறேன்.



எப்போதுமே ஒரு நடிகன் நல்ல வியாபாரியாக இருக்க முடியாது. ஆனால், கமல் நல்ல நடிகன், பெஸ்ட் பிசினஸ்மேன். இது யாராலும் தடுக்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி. இன்று கமல் செய்யாவிட்டால், நாளை வேறொருவர் செய்வார். அப்போது என்ன செய்வார்கள்? கமல் முன்னோடியாக இருக்கிறார். கமலின் இந்த துணிச்சலான முயற்சி எதிர்காலத்தில் தயாரிப்பாளர்கள் மத்தியில் புது மாற்றத்தை உருவாக்கும்.


கூட்டத்துக்கு வந்த கமலை, சின்ன பட்ஜெட் படம் எடுத்தவர்கள் எல்லாம் சேர்ந்து எங்களுடைய படத்தையும் அதுமாதிரி விற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஒரு டாக்டர் நோய்க்கான மருந்தை சீட்டில் எழுதித்தான் தர முடியும். அவரே மருந்து வாங்கித்தர முடியாது!'' என்று கமல் கருத்தை ஆதரித்தார்.



கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கேட்டோம். ''கமல் தன்னோட சொந்தப் பணம் 90 கோடி ரூபாயை முதலாகப் போட்டு 'விஸ்வருபம்’ படத்தை எடுத்து இருக்கிறார். அந்தப் படத்தை எந்த முறையில் விற்க வேண்டும் என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு மட்டும்தான் உண்டு. 


தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோர் மினிமம் கியாரன்டி கேட்டு எங்களிடம் படம் கொடுக்கிறார்கள். அதனால் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லி மாளாது. கமல் 'விஸ்வரூபம்’ படத்துக்கு மினிமம் கேரன்டி கேட்கவே இல்லை. ஒரே ஒருநாள் பிரிமியர் ஷோ போடுவதால், எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தியேட்டர்களில் 'விஸ்வரூபம்’ படத்தைத் திரையிட சந்தோஷமாகக் காத்துக்கொண்டு இருக்கிறோம்'' என்றார்.   



அடுத்து கமல் பாணியில் 'அலெக்ஸ் பாண்டியன்’ படத்தை வெளியிட இப்போதே பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டதாம்!


நன்றி - ஜூ வி 

 http://middaytimes.com/wp-content/uploads/2012/06/kamal-hassan-viswaroopam-photos00-640x960.jpg


சென்னை: ரசிகர்களின் அன்புதான் என் ஆணிவேர், அச்சாணி, பலம். இந்த பலம் இருக்கும்வரை நான் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வேன், என்றார் கமல்ஹாஸன்.



கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று ஒரே நாளில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் நடந்தது.



இதற்காக கமல்ஹாசனும், படக்குழுவினரும் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் முதலில் மதுரைக்கு சென்றார்கள். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மைதானத்தில் காலை 10-30 மணிக்கு விழா நடந்தது.பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, அவருடைய நற்பணி மன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பத்ரிநாத் பெற்றுக்கொண்டார்.



மதுரை விழா முடிந்ததும் கமல்ஹாசனும், படக்குழுவினரும் ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்றார்கள். மாலை 3 மணிக்கு கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை-அறிவியல் கல்லூரி மைதானத்தில், பாடல் வெளியீட்டு விழா நடந்தது.பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, அவருடைய ரசிகைகள் இரண்டு பேர் பெற்றுக் கொண்டார்கள்.


கோவை விழாவை முடித்துக்கொண்டு கமல்ஹாசனும், படக்குழுவினரும் அதே ஹெலிகாப்டரில் சென்னைக்கு வந்தார்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இரவு 8 மணிக்கு விழா தொடங்கியது.
கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய மூவரும் மேடையில் தோன்றினார்கள். மைதானம் முழுவதும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.




கமல் பேசுகையில், "இது பொங்கலா, தீபாவளியா என்று தெரியவில்லை. இங்கே வந்திருக்கும் என் மூத்த சகோதரர்-அண்ணன் இளையராஜாவுக்கு நன்றி. என்மீதான் அன்பு மட்டுமே அவரை இங்கே வரவைத்திருக்கிறது. இந்தப் பெருமையைத் தந்த அவருக்கு நன்றி. நீங்கள் (ரசிகர்கள்) சந்தோஷப்படுகிற மாதிரி ‘விஸ்வரூபம்' படத்தை எடுத்து இருக்கிறேன்.




ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சந்தோஷம். எவ்வளவு கரகோஷம் எழுந்தாலும், இன்னும் வேண்டும் வேண்டும் என்ற பேராசை ஏற்படும். அதற்கான அருகதை இருக்கிறதா? என்று கூட யோசிப்பதில்லை.
மதுரையிலும், கோவையிலும் நடந்த விழாக்களில், அங்குள்ள சகோதரர்கள் தூள் கிளப்பி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி. எல்லோரும் என் மீது காட்டும் அன்பை பார்க்கும்போது, இவர்களுக்காக இன்னும் என்ன செய்ய வேண்டும்? என்ற ஆர்வமும், பயமும் வருகிறது.



என்னை குழந்தையாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள். வளர்ந்தபின் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் என் மீது அளவு கடந்த அன்பு செலுத்துகிறார்கள். அந்த அன்புதான் என் ஆணிவேர்-அச்சாணி என நினைக்கிறேன். நான் கழன்றுவிடாத சக்கரமாக சுழன்று கொண்டிருக்கிறேன்,'' என்றார்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL7a_UzKoKBUj43j4EKqdeIK0Z-pnX3NoCkydSi-PV9G7NjkgNvz93EdG9uaUz3GPfPiGTiD1RdANPoI2z8iwsNtBJbxYBsNoty0bfuj3hVsWGo8ypD7O6fqsZdOTNmm7EplHedjyYE9c/s1600/viswaroopam+movie+stills+%25284%2529.jpg



சென்னை: புதுமைப் பித்தர்களாக நினைத்துக் கொண்டு படம் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டும் சினிமாக்காரர்கள், நிஜமாகவே ஒரு புதுமையான விஷயத்தை செயலுக்குக் கொண்டு வந்தால் மட்டும் ஏற்க மனம் வருவதில்லை.



சினிமாக்காரர்களிடம் போய் உங்களது தலையாய பிரச்சினை என்ன என்று கேட்டால் ஒரே குரலில் ஒட்டுமொத்தமாக அவர்கள் கூக்குரலிடாத குறையாக சொல்வது திருட்டு விசிடி மற்றும் டிவிடி பிரச்சினையைத்தான். சரி இதை ஒழிக்க என்ன நடவடிக்கை என்று அவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்டால், அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.




ஆனால் உண்மையில் திருட்டு விசிடி-டிவிடியை ஒழிப்பது என்பது சினிமாக்கார்ரகளின் கையில்தான் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்ள முயல்வதில்லை அல்லது முன்வருவதில்லை.



திருட்டு டிவிடியைத் தடுக்க ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும், டிவி சேனல்களிலும் வெளியிட வேண்டும், டிவிடி, இன்டெர்நெட் ஒளிபரப்பு உரிமை தர வேண்டும் என்பது கமல்ஹாசன் நீண்ட நாட்களாகச் சொல்லி வரும் விஷயம். இதை இதுவரை திரையுலகைச் சேர்ந்த யாருமே ஆமோதித்ததும் இல்லை, கருத்துச் சொன்னதும் இல்லை. அதை விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் அரசையே அண்டி வருவதை ஒரு பாலிசியாகவே வைத்துள்ளனர்.




தியேட்டருக்கு படம் வரும் அதேசமயத்தில் டிவி சேனல்களுக்கும் ரைட்ஸ் கொடுத்து ஒரே நேரத்தில் வெளியிடுவது, டிவிடி, இன்டர்நெட் உரிமைகளையும் ஹோல்சேலாக கொடுத்து விடுவது என்பது நிச்சயம் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம்தான். இதனால் தயாரிப்பாளர்களுக்கு உரிய தொகை கிடைத்து விடும் என்பதோடு அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக படத்தைப் பார்க்கும் வாய்ப்பும் அமைவதால், திருட்டு விசிடி, டிவிடிகளுக்கு வேலையில்லாமல் போகும் என்பதும் உள்ளடங்கியுள்ளது.



புதிய விஷயம் எப்போதுமே ஆரம்ப கட்ட சிக்கல்களையும், சிரமத்தையும் கொடுக்கத்தான் செய்யும். ஆனால் அதுவே ஒரு வெற்றியைப் பெற்று விட்டால் அதைக் கொண்டாடத் தொடங்கி விடலாம். கமல்ஹாசன் கிட்டத்தட்ட தனது மிகப் பெரிய படத்தையே அடகு வைத்து, பெரும் ரிஸ்க் எடுத்து களத்தில் இறக்கத் தயாராக இருக்கும்போது அதை வேடிக்கை பார்க்கக் கூட இவர்கள் தயாராக இல்லை என்பது போலவே எண்ணத் தோன்றுகிறது.




நிச்சயம் கமல்ஹாசனைத் தவிர வேறு யாருக்குமே இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் வராது என்பது ஒருபுறம் இருக்க அவர் செய்யப் போகும் முயற்சி எப்படி இருக்கும் என்பதைக் கூட உட்கார்ந்து கவனிக்க தைரியம் இல்லை என்பதை ஆச்சரியம்தான்.




இதே கமல்ஹாசன்தான் டிவியால் சினிமாவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றார். அது உண்மையாகவும் உள்ளது. டிவி வந்ததால் சினிமாக்காரர்களுக்குத்தான் நிறைய லாபம் கிடைத்துள்ளது. அபரிமிதமான விளம்பரங்களையும், 'பில்டப்'களையும் செய்ய இன்று டிவியை விட்டால் வேறு மீடியாவே இல்லை. மேலும் ஓடாத குப்பைப் படங்களையும் கூட உச்சாணிக்குக் கொண்டு போய் விளம்பரம் செய்து ஓட வைக்க இன்று டிவிதான் சினிமாக்காரர்களுக்குப் பெருமளவில் உதவுகிறது.


கமல்ஹாசன் செய்யப் போகும் முயற்சியை சற்று விட்டுத்தான் பார்ப்போமே... துணிச்சலா சப்போர்ட் பண்ணுங்க சினி்மாக்காரர்களே... அது சரி 'இன்டர்நெட்' என்பதையே 'இன்டர்காம்' என்று சொல்லும் தயாரிப்பாளர்கள் பலரும் இருக்கும்போது கமல்ஹாசனை ஏற்க எப்படி இவர்களுக்கு மனம் வரும்...!


சென்னையில் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாஸனிடம் கேள்வி என்ற பெயரில் அபத்தமாகக் கேட்டு, அசடு வழிந்தார் நடிகர் ஜெயராம்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெரிய பொறுப்பை அவரிடம்தான் கொடுத்திருந்தார் கமல்.


அவரோ, கமலைப் புகழ்கிறேன் என்ற பெயரில், விழாவுக்கு வந்தவர்களை நெளிய வைத்துக் கொண்டிருந்தார்.


கமல் பேசி முடித்ததும். அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். அது கமலையே நெளிய வைப்பதாக இருந்தது.


‘‘நீங்கள் ஹாலிவுட்டுக்கு போகப்போகிறீர்கள். அங்கு யாருக்கு முத்தம் கொடுப்பீர்கள்? ஜூலியா ராபர்ட்ஸுக்கா, ஏஞ்சலினா ஜோலிக்கா அல்லது வேறு யாருக்கு?'' என்று கேட்டார்.



அதற்கு கமல்ஹாசன், ‘‘அதற்காகவா ஹாலிவுட் போகிறேன்? இங்கிருந்து அங்கபோறது எச்சில் பண்றதுக்காகவா...? முடிந்தால், நல்ல நடிப்பை காட்டலாம் என நினைக்கிறேன்," என்றார் சிரித்தபடி.



 http://2.bp.blogspot.com/-7SjpCsZIExA/T9IDMw2UmrI/AAAAAAAAAJ8/pTnLj7czCSk/s1600/334034-viswaroopam.jpg


 நன்றி -தட்ஸ் தமிழ்


கமல் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது.


ஆனால் தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் பார்ப்பது சிரமம் என்பதால், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிடிஎச் மூலம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.


இது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், தன் படத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் உரிமை தனக்கே உள்ளது என்று கூறியுள்ள கமல், டிடிஎச் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.


முதல் கட்டமாக முன்னணி டிடிஎச் சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் ஸ்டார் குழுமத்துக்கு இந்தப் படத்தை ரூ 50 கோடிக்கு விற்றுள்ளதாகத் தெரிகிறது.
தியேட்டருக்கு வருவதற்கு 8 மணி நேரம் முன்பே டிடிஎச்சில் விஸ்வரூபத்தைப் பார்த்துவிடலாம். பின்னர் தியேட்டர்களில் பார்க்கலாம்.
 
 
சென்னை: டி.டி.எச். மூலம் ‘விஸ்வரூபம்' படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்பும் புதிய முயற்சியை கமல்ஹாசன் கைவிட வேண்டும். இந்த முடிவை மேற்கொள்ளும் எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டெலிவிஷனில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்.


இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.



அதில், "கமல்ஹாசன் தன் ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் திரையிடுவது பற்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. இதுபற்றி மதுரையில் இருந்த கமல்ஹாசனுடன், ‘டெலி கான்பரன்சிங்' மூலம் பல சந்தேகங்கள் கேட்டார்கள்.



அப்போது அவர் கொடுத்த விளக்கங்கள் வருமாறு:



'விஸ்வரூபம் படம் டி.டி.எச். முறையில், ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும். அப்படி திரையிடும்போது, திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒருநாள் முன்பு இரவு 9 மணிக்கு மேல் திரையிடப்படும். ஒரு டி.டி.எச். கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ.1,000 வசூல் செய்யப்படும். இது, படத்துக்கு டிரைலர் போல் இருக்கும். இதை பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள்' என்று கூறினார்.



வேண்டுகோள்



என்றாலும், ஒரு டி.டி.எச். கருவிக்கு ஒரு குடும்பம்தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது. ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளில் படத்தை காண்பித்து விட்டால், நாடு முழுவதும் பல கோடி பேர் படம் பார்த்து விடுவார்கள்.



எனவே கமல்ஹானை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து, இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம். அப்படி அவர் கைவிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசித்து முடிவு எடுப்போம்.


திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வை காண வேண்டும். எங்களை காப்பாற்ற வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.




ஒத்துழைப்பு கிடையாது


இதற்கிடையே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.


கூட்டத்தில், ‘‘திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக டி.டி.எச்.சில் கொடுக்கப்பட்ட எந்த படமாக இருந்தாலும், நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த தகவலை சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஆகிய இருவரும் தெரிவித்தார்கள்.