Showing posts with label KUSHPOO. Show all posts
Showing posts with label KUSHPOO. Show all posts

Thursday, March 15, 2012

தி முக , அதிமுக எது எனக்கு அதிக யூஸ்? குஷ்பூ அதிரடி பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0IiRw1YZiqYYyHlLBSBDJBUAuPeNZGYk5IdMi_Xv5rSoOGZg8disNJHgwCTQnQsWyRylLt0noatIfqifQNEP9_kfRqu2KCmcKIvKRXzkBNLAW5lstyk1_YCJUkY8RbmDBTHo-u6O9N7k/s400/kushboo2.jpg 

1. ''ஒரு பக்கம் உங்கள் ரோல் மாடல் ஜெயலலிதா... இன்னொரு பக்கம் உங்கள் திரையுலக நண்பர் விஜயகாந்த்... இவர்களை எதிர்த்து அரசியல் செய்வது உங்க ளுக்குக் கஷ்டமாக இல்லையா?'' 

சி.பி - இது நல்ல கேள்வி .. ஆனா நான் நிருபரா இருந்தா இன்னா கேட்டிருப்பேன்னா ஒரு பக்கம் ஆத்ம நண்பர் பிரபு, இன்னொரு பக்கம் குடும்ப நண்பர் கார்த்திக், உங்க பக்கம் தாராள மனப்பான்மை கொண்ட சுந்தர் சி இவங்க எல்லார் கிட்டேயும் நல்ல பேர் எடுக்கறீங்களே, எப்படி?
 
 ''சரவணன்... ஜெயலலிதா என் ரோல் மாடல்னு நான் எப்ப சொன்னேன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். 'என் ரோல் மாடல் இவங்கதான்’னு இது வரை நான் யாரையுமே சொன்னது இல்லை.


சி.பி - ஹலோ மேடம் மேடம், ஜெயா டி வி ல ஜாக் பாட் நிகழ்ச்சில நீங்க முதன் முதலா  அப்பாய்ண்ட் ஆனப்ப குமுதம் வார இதழ்ல ஒரு பேட்டி குடுத்தீங்க.. அதுல முதல் கேள்வியே ஜெ பற்றி என்ன நினைக்கறீங்கன்னு தான், அப்போ நீங்க ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் அபாரம்னு அள்ளி விட்டீங்க, நினைவில்லையா? செலக்டிவ் அம்னீஷியா அம்மா கிட்டே இருந்து உங்க கிட்டேயும் தொத்திக்கிச்சா?

 ஒரு பெண் என்ற வகையில் ஜெயலலிதாம்மாவை எனக் குப் பிடிக்கும். ஆனா, அவங்க தலைமை யிலான ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு சிரமப்படுறாங்கனு பார்க்கும்போது, வருத்தமா இருக்கு. 

சி.பி - ஆமாமா, நீங்க சொல்றதும்  கரெக்ட் தான், வீட்டை நிர்வாகம் செய்யும்போது பெண்கள் காட்டும் கெடுபிடி,நிர்வாகசீர் எல்லாமே நாட்டை நிர்வாகம் பண்ணும்போது காணாமப்போயிடுது.. யார் பேச்சையும் கேட்காம சித்தன் போக்கு சிவன் போக்கு , நாம நினைச்சதுதான் சரின்னு ஒரு எதேச்சாதிகாரம் வந்துடுது..


மே 13-ம் தேதி காலை 10 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வந்துட்டு இருக்கும்போதே, 'தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்காங்கனு அடுத்த அஞ்சு வருஷத்தில் தெரிஞ்சுக்குவாங்க’னு சொல்லியிருந்தேன். ஆனா, இப்ப 10 மாசத் திலேயே நாம செஞ்சது தப்புனு மக்கள் புரிஞ்சுட்டு இருப்பாங்க.


சி.பி - இந்த தமிழக மக்கள் எப்பவும் இப்படித்தாங்க ஒரே தப்பை 5 வருஷத்துக்கு ஒரு டைம் மாத்தி மாத்தி  பண்ணுவாங்க.. அதாவது முதல்ல தி முக , அடுத்து அதிமுக அப்படி மாத்தி மாத்தி குத்தி  நம்பி ஏமாந்துடறாங்க.. அவங்களுக்கு வேற சாய்ஸ் இல்லையே பாவம்.. 


விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, கமிட்டி உறுப்பினராக இருந்திருக்கேன். ஆனால்,அவரோட அரசியல் செயல்பாடுகள்பற்றி இது வரை நான் விமர்சித்தது இல்லை. அவருடைய அரசியலைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்!''


சி.பி - வெரிகுட் மேடம். பக்குவமான பதில்.. கேப்டன் எதிர்க்கட்சி என்பதால் தரக்குறைவா பேசாம அடக்கி வாசிக்கறீங்க.. ஐ திங்க் இது கட்சி மேலிட உத்தரவாக்கூட இருக்கலாம்.. கேப்டனை ஓவரா தாக்க வேண்டாம்.. அவர் கூட கூட்டணி வைக்க வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்.. அப்டினு.. 


http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/kushboo-sundar-latest-photos-gallery-images-07.jpg


2. ''உண்மையைச் சொல்லுங்கள்... உங்களுக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா?'' 


சி.பி -இதென்ன கேள்வி அண்னாமலை, பாண்டியன்ல நடிக்கறப்ப சினிமா எக்ஸ் பிரஸ் இதழ்ல எனக்குப்பிடித்த ஒரே நடிகர் அது ரஜினிதான்னு தீபாவளி மலர்ல பேட்டி குடுத்தாங்க.. சிங்கார வேலன் ஷூட்டிங்க் டைம்ல  இதயம் பேசுகிறது இதழ்ல என் கனவு கமல் கூட  நடிக்கனும்கறதுதான் அப்படின்னு பிட்டை போட்டாங்க.. நாக்கில்லாத நரம்பு மாத்தி மாத்தி பேசும்.. தப்பில்லை./. சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்

''யோசிக்கவே வேண்டாம்.... கமல்ஹாசன்தான். ஏன்னா, 'ரஜினி சார் என் ஃப்ரெண்ட்’னு சொல்ல முடியாது. ஆனா, கமல் சாரை என் ஃப்ரெண்ட்னு சொல்ல முடியும். ரஜினி சார் ரொம்ப தூரத்தில் இருக்கார். 'ஆ’னு அண்ணாந்து ஆச்சர்யமா பார்க்கிற உச்சியில இருக்கார்.

 கமல் சார் ஒரு ஃப்ரெண்டா இருக்கார். எப்ப வேணும்னாலும் அவருக்கு போன் பண்ணிப் பேசலாம். என் குடும்ப விழாக்கள்ல கமல் - கௌதமி கலந்துப்பாங்க. அவங்க வீட்டு நிகழ்ச்சிகளில் நானும் கலந்துப்பேன். என் குழந்தைகளும் அவங்க குழந்தைகளும் ரொம்ப க்ளோஸ். இப்படி நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸா இருப்பதால், கமல் சாரை அதிகமாப் பிடிக்கும்.


சமீபத்தில், அவரோட 'விஸ்வரூபம்’ படப்பிடிப்புக்காக பிரபல கதக் டான்ஸர் பண்டிட் பிர்ஜு மகராஜ் சென்னைக்கு வந்திருந்தார். எனக்கு கதக் தெரியும். அதுவும் பிர்ஜு மகராஜை எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு கமல் சாருக்குத் தெரியும். 'பிர்ஜு இங்கே இருக்கார். வந்து பார்க்குறியா?’னு அவரே போன் பண்ணி எனக்குத் தகவல் சொன்னார். உடனே, நான் ஓடிப்போய் லொகேஷன்ல அவரைப் பார்த்துப் பேசிட்டு வந்தேன். எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுனு எனக்குத் தெரிஞ்சதைவிட கமல் சாருக்கு அதிகமாத் தெரியும்!''


சி.பி - என்னது? உங்களுக்கு கதக் தெரியுமா? அப்போ உங்க இயற்பெயரான நக்கத் இனி நக்கதக்?


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6b9x4V25INdS5AuZ4foBEe8zIyhF-TJHpA3I37OZ3hgXLfoZmYTfAl_ZR6nleA92GADT0NdI65ySVqFbUVLlQEKcqiH-2DSdwQOnWwOGexdJSKTStUIKvAPwBE7RCVKFxaa86jDV4xME/s1600/Actress-Kushboo-Hot-Photos-0k034.bmp

3. '' 'வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ என்ற கோஷத்தை முன்வைத்துத் தொடங்கப்பட்டது தி.மு.க. அதில் நீங்கள் எப்படி..?'' 


சி.பி - அது போன  மாசம், நான் சொல்றது இந்த மாசம்.. வடக்கு ஆல்ரெடி வீழ்ந்துடுச்சு... தெற்கு தேஞ்சுட்டு இருக்கு


''முதல்ல நான் வடக்கில் இருந்து வந்தவள்ங்கிற எண்ணத்தை உங்க மனசுல இருந்து அழிச்சிடுங்க  இந்த 41 வயசுல நான் மும்பையில் வாழ்ந்தது 16 வருஷம். சென்னையில் வாழ்ந்தது 25 வருஷம். கடைசி வரை இங்கேதான் இருக்கப்போறேன். அப்போ நான் தமிழ்ப் பெண்மணிதானே!


சி.பி - என்னது? உங்க வயசு 41? இப்படி உண்மையை சொல்லலாமா?

 என் பாஸ்போர்ட்டில், பிறந்த இடம் எது என்ற கேள்விக்கு மட்டும்தான் மும்பைனு இருக்கும். மத்தபடி மும்பையில் சொந்தம்னு சொல்லிக்க எனக்கு யாருமே இல்லை. நான் சம்பாதிச்சது எல்லாத்தையுமே இங்கே தான் முதலீடு பண்ணியிருக்கேன். 'குஷ்பு மும்பையில் ஒரு வீடு வாங்கிப் போட்டு இருக்கா, இடம் வாங்கிப் போட்டுஇருக்கா’னு யாரையாவது சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். என் சம்பாத்தியம், செலவு எல்லாமே தமிழ்நாட்டில் மட்டுமே!''


சி.பி - அதெப்பிடிங்க சொல்ல முடியும்? நீங்க நக்கத்ங்கற பேர்ல வீடு வாங்கி இருந்தா குஷ்பூ வாங்குனார்னு சொல்ல முடியாதே?


4. '' 'ச்சே... நாம் ஹீரோயினாக உச்சத்தில் இருந்தபோது இவர் நடிக்க வரவில்லையே’ என்று இப்போதைய ஹீரோக்களில் யாரைப் பார்த்தால் உங்களுக்குத் தோன்றும்?'' 

சி.பி - இந்த மாதிரி பர்சனல் கேள்விகளை எல்லாம் பப்ளிக்கா கேட்டா எப்படி?

'' 'பருத்தி வீரன்’ கார்த்தியைப் பார்க்கும்போது, லைட்டா அப்படித் தோணுச்சு. அந்த கார்த்திக்குக்கு அப்புறம் அதே துறுதுறு குறுகுறு பெர்சனாலிட்டியை இந்தக் கார்த்தி கிட்ட பார்க்கிறேன். கார்த்தியை நான் 'பையா’னுதான் கூப்பிடுவேன். 'சிறுத்தை’ பார்த்துட்டு 'ரொம்ப நல்லா பண்ணியிருக்க பையா. அந்த ராக்கெட் ராஜாவுக்கு நான் ரசிகையாகிட்டேன்’னு கார்த்திகிட்ட சொன்னேன்.


ஆனா, 'ஒரு படம் முழுக்க இவருக்கு ஹீரோயினா நடிக்கலையே’னு நான் வருத்தப்படுற ஒரே ஹீரோ அரவிந்த்சாமி. இந்த வருத்தம் அவருக்கும் தெரியும். அவர்கிட்ட ஒரு ரசிகையா ஆட்டோகிராஃப் வாங்கநான் பட்டபாடு இருக்கேன்... அவர்கிட்ட ஆட்டோ கிராஃப் கேக்குறப்பலாம் நான் ஏதோ கிண்டல் பண்றதா நினைச்சு, போட்டுத் தரவே மாட்டார். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா நானும் விடாமத் துரத்திட்டே இருந்தேன். அப்போ அவர் பிரியதர்ஷன் படத்தில் நடிச்சிட்டு இருந்தார்.


 அந்தப் படத்தின் காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி கூட ஒருநாள் ஸ்பாட்டுக்குப் போயிட்டேன். 'அரவிந்த், உன்னோட மிகப் பெரிய ரசிகை வந்திருக்காங்க. அவங்க ஒரு ஆட்டோ கிராஃப் கேக்குறாங்க. போட்டுக் கொடுத்துருங்க’னு சொல்லி அரவிந்தை வெளியே அழைச்சிட்டு வந்தார் அனு. என்னைப் பார்த்த அரவிந்த், 'ஐயோ குஷ்... நீயா?’னு சிரிச்சுட்டார். 'ரெண்டு வருஷமாத் தொரத் திட்டு இருக்காங்களாமே... போட்டுக் கொடுப்பா’னு அனு ரெகமண்ட் பண்ண பிறகுதான், ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார் அரவிந்த்!''


சி.பி - நல்ல வேளை, அவரோட இப்போதைய தோற்றத்தை நீங்க பார்க்கலையே, ஒரு காலத்துல அர்விந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேணும்னு சொன்ன ஃபிகருங்க எல்லாம் இப்போ அவரையே கிண்டல் பண்றாங்க.. ஆண்களூக்கு வழுக்கை ஒரு சாபம்.. பெண்களுக்கு வழுக்கை இல்லாதது ஒரு வரம்.. ( 0.12 % பெண்களுக்கு வழுக்கை வருவது உண்டு)
 http://s4.hubimg.com/u/1127503_f520.jpg

5.''குஷ்பு இட்லி, குஷ்புவுக்குக் கோயில் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

சி.பி - கொஞ்சம் என்ன நிறையவே மிதப்பா இருக்கும்.. மார்க்கெட் இருந்த கால கட்டத்துல இந்த மாதிரி சென்சேஷனல் மேட்டர் எல்லாம் சம்பளம் கூட்டிக்கேட்க உதவியா  இருக்கும்


''பெருமையா இருக்கு. அதே சமயம், இந்த அளவுக்கு அன்பு, நம்பிக்கைவெச்சுப் பாசம் செலுத்துறாங்களே... அதை அவங் களுக்கு நாம எப்படித் திரும்பச் செலுத்தப் போறோம்னு யோசிக்கும்போது கொஞ்சம் பயமாவும் இருக்கு!''


சி.பி - ஒண்ணும் வேண்டாம் மேடம், கடலூர் ஏரியாவுல ஒரு கிராமத்தை தத்து எடுத்து உங்களால் ஆன உதவி செய்ங்க போதும்


6. ''முதலமைச்சர் ஆகும் ஆசை இருக் கிறதா? அப்படியானால், தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களை எல்லாம் தருவீர்கள்?'' 

சி.பி - இந்த கேள்வி எல்லாம்  தி மு க வட்டாரத்துல பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும், அங்கேயே இன்னும் வாரிசு பிரச்சனை முடியலை.. அதுக்குள்ள இவங்களூமா?

''அப்படி எல்லாம் பகல் கனவு காணும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது கட்சிக்காக நிறைய உழைக்கணும். என் உழைப்பு, அனுபவத்துக்கு ஏற்ற வளர்ச்சி இருந்தால் அதுவே போதும் எனக்கு!''


சி.பி - உங்கள் அபரிதமான  வளர்ச்சி தமிழ் நாட்டின் மட்டற்ற  மகிழ்ச்சி ஹி ஹி 



7. ''வெயிட் போட்டுட்டே போறீங்க... உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கலையா அல்லது முடியவில்லையா?'' 

சி.பி - ரேஷன் கடை ஊழியரா ஒரு கேரக்டர்ல நடிங்க.. தன்னால உடல் எடை குறையும்

 ''சான்ஸே இல்லை... நான் வெயிட் போட்டிருக்கேனா இல்லையானு என் வீட்டுக்காரர்கிட்டதான் கேட்பேன். அஞ்சு வருஷமா ஒரே வெயிட்லதான் இருக்கேன். இதுவே பெரிய சாதனை!''

 சி.பி -உடம்பு வெயிட் வந்தா குறைச்சிடலாம்.. ஆனா ஹெட் வெயிட் தான் வரக்கூடாது.. 


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxVDBUiCI499zXBvj0URMoxpj68nq52DSITAtm8GsUFkAtl5XcgK7Yc9gNOS_AGoaGKx4BvyI4w3zim26wrQkmgW5YtA2nyVudBc33xkRqk33rtn-8Ar3Ej-Bu7GjX92C58-R5wNI10oio/s1600/661543_f520.jpg


8. ''சினிமாவில் ஹீரோயின் கேரக்டர் கள் குறைந்தபோது, உங்களை ஜெயா டி.வி. 'ஜாக்பாட்’ நிகழ்ச்சிதான் லைம் லைட்டில் வைத்திருந்தது. நீங்கள் 'கற்பு’ பிரச்னையில் சிக்கித் தவித்தபோது தி.மு.க. அரசு உங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளவில்லை. அப்புறமும் ஏன் அ.தி.மு.க-வுக்குச் செல்லாமல் தி.மு.க-வில் சேர்ந்தீர்கள்? இது நன்றி மறந்த செயல் ஆகாதா?'' 


சி.பி - அதெல்லாம் ஒண்ணும் இல்லை, உண்மை என்னான்னா  அதி முக-ல சேர்ந்தா குஷ்பூக்கு வளர்ச்சி இல்லை.. ஏன்னா ஒரு நடிகை கட்சில சேர்ந்து செல்வாக்கு அடைஞ்சா எந்த மாதிரி டாமினேஷன் இருக்கும்னு ஒரு முன்னாள் நடிகையான ஜெவுக்கு நல்லாவே தெரியும்.. அதனால அங்கே போக வாய்ப்பு இல்லை.. தி முக வுக்கு ஒரு கிளாமர் சினிமா ஸ்டார் ஆதரவு தேவைப்பட்டுது.. கவர்ச்சிக்கு குஷ்பூ, காமெடிக்கு வடிவேல்னு யூச் பண்ணிக்கிட்ட்டாங்க.. 

''2000-ல் எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. 2001-ல் ஜாக்பாட் பண்ண ஆரம்பிச்சேன். அதனால், வளர்ச்சி கம்மியானதும்தான் ஜாக்பாட் பண்ண வந்தேன்னு சொல்றதை ஏத்துக்க மாட்டேன். ஆனால், 'ஜாக்பாட்’ என்னை லைம் லைட்டில் வெச்சிருந்தது என்பது மறக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. அது அருமையான நிகழ்ச்சி. 

அதே சமயம், நான் தொழில்ரீதியாகத்தான் ஜெயா டி.வி-யுடன் இணைந்திருந்தேனே தவிர, அ.தி.மு.க-வின் தொண்டராக நான் ஜெயா டி.வி-யில் வேலை பார்க்கலை.


அதேபோல், அந்த என் அஞ்சு வருஷப் போராட்ட காலத்தில் அரசியல் கட்சிகளில் சேர எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தன. எந்தக் கட்சியிலும் அப்போதே நான் சேர்ந்து இருக்கலாம். அப்படிச் செஞ்சிருந் தால், 'குஷ்பு அந்தக் கட்சியோட உதவி யாலதான் இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வந்தாங்க’னு சொல்லியிருப் பாங்க. ஆனா, அந்தப் பிரச்னை என் தனிப் பட்ட போராட்டம். தனி மனுஷியா யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் போராடித்தான் அதில் ஜெயிச்சேன். ஆனால், பொது வாழ்க்கைக்கு வரணும்னு எப்போ முடிவு பண்ணேனோ... அப்பவே தி.மு.க-வில்தான் சேரணும்கிறதில் உறுதியா இருந்தேன்!''



''தி.மு.க-வில் நீங்கள் ஸ்டாலின் கோஷ்டியா... அழகிரி கோஷ்டியா?'' 


''பிரபுதேவா - நயன்தாரா இருவரும் உங்களுக்கு நிச்சயம் நெருக்கமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்த நீங்கள் முயற்சிக்கலாமே?''   
\
''இப்போதும் கற்பு குறித்த உங்கள் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?'' 


- நிறைய பேசலாம்...

 தொடரும்

http://i497.photobucket.com/albums/rr336/hotpicszone4/Kushboo%20Came%20in%20Tight%20TShirt/engarasinallarasiaudio_039.jpga


டிஸ்கி  - இதன் முதல் பாகம் -   http://www.adrasaka.com/2012/03/blog-post_8166.html

Tuesday, March 13, 2012

கும்தலக்கடி கும்மாவா? குஷ்பூன்னா சும்மாவா? கல(ழ)கத்துக்கே அம்மாவா? காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0uLC40ruDMNWZk6t8BCg_28tggMjW8aV4FDsCZRqL15O2flhZmzwDY7xPEYYMWznxg_JvilpIB10pLIBKNAitnhKWB-h9Zu96dKyjQczLvvNZv_ZYdhFWFQ5pXb7nUYodlEiWAbK3kTY/s640/actress_kushboo_Hot_photos+(1).jpg 

குஷ்பூ பற்றி அறிமுகம் எதுக்கு? இருந்தாலும் ஃபார்மாலிட்டின்னு 1 இருக்கே.. வருஷம் 16 , தர்மத்தின் தலைவன் வந்தப்ப எல்லாம் யாரும் அவர் இவ்ளவ் ஹிட் அடிப்பார்னு எதிர்பார்க்கலை.. சின்னத்தம்பி படம் வந்து ஒரு தூக்கு தூக்குச்சு ... இந்தியா டுடே பத்திரிக்கைல கற்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்து சொல்லி அகில உலக ஃபேமஸ் ஆனார்.. ஷூட்டிங்க் ஸ்பாட்ல அம்மன் சிலை முன் கால் மேல் கால் போட்டு உக்காந்து பெண்ணியவாதி அலட்சியவாதி பெயர் எடுத்தார்.. ஜெயா டி வி யில் பிரம்மாண்டமான யு நெக் ஜாக்கெட் கலாச்சார புரட்சியை தோற்றுவித்தவர்.. அவரோட ஜாக்கெட் டிசைனை பார்க்க பெண்களும், 70 எம் எம் முதுகை பார்க்க ஆண்களும் போட்டி போட்டு பார்க்க நிகழ்ச்சி செம ஹிட்.. அவரது பிரம்மாஸ்திரம் தி முக வில் இணைந்து கலைஞர், ஸ்டாலின், அழகிரி என மூவரிடமும் நல்ல பெயர் எடுத்தது.. இனி ஆண்ட்டியின் கேள்வி பதில்கள்



1. கார்த்திக் முதல் ராஜ்கிரண் வரை உங்களுடன் நடித்த ஹீரோக்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்? மழுப்பல் இல்லாமல் நச்சென்று பதில் சொல்லுங்கள். நீங்கள்தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆயிற்றே?'' 


சி.பி - இந்தாளுக்கு ஓவர் குசும்புய்யா.. கேள்விலயே  கார்த்திக் தான் முதல்ல அப்டிங்கற அர்த்தம் வர்ற மாதிரி கேட்டிருக்காரே? பிரபுவுக்கு கோபம் வராது?
 
''கார்த்திக்தான் எப்பவும் என் ஃபேவரைட். நான் 'வருஷம் 16’ பண்றதுக்கு முன்னாடி இருந்தே, அவரை எனக்குப் பிடிக்கும். 'மௌன ராகம்’, 'அக்னி நட்சத்திரம்’ படங்கள் பார்த்த பிறகு எனக்கு கார்த்திக் பைத்தியமே பிடிச்சிடுச்சு.

சி.பி - ஓஹோ அப்போத்தான் பாடுன பாட்டா? நீயும் மெண்ட்டல், நானும் மெண்ட்டல்.. நினைச்சுப்பார்த்தா எல்லாம் மெண்ட்டல்..

 ஒரு நடிகன்னா துறுதுறுனு இப்படித்தான் இருக்கணும். அவர் நடிப்பை, ஸ்டைலை சும்மா வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது எல்லாத்தையும் மீறி அவர் என் குடும்ப நண்பர். 


சி.பி - ஹா ஹா இதுதாங்க செம காமெடி.. குடும்ப நண்பரா? அதாவது குடும்பத்தோட நீங்க இருந்தாக்கூட வந்து ஜாலியா பேசிட்டு இருப்பாரா? ரைட் ரைட்?

அவர் உங்க எல்லாருக்கும்தான் கார்த்திக். ஆனா, எங்களுக்கு அவர் 'முரளி’. என் பசங்களுக்கு அவர் 'முரளிப்பா’... 'பெரியப்பா’. இன்னும் சொல்லணும்னா, அவரோட போட்டோ மட்டும்தான் என் வீட்ல இருக்கும். வேற எந்த ஹீரோ போட்டோவும் இருக்காது. என் கணவரோட அண்ணன் என்ற ஸ்தானத்தில் அவரை வெச்சிருக்கேன் நான்!''

http://www.extramirchi.com/gallery/albums/south/marriage/Prabhu_daughter_Aishwarya_wedding/normal_Prabhu_daughter_Aishwarya_wedding_(7).jpg

சி.பி - அதாவது மச்சினர்.. கொழுந்தனார் ஹி ஹி ரைட்டு.. கேட்கவே கிளு கிளுப்பா இருக்கு.. ஆமா கார்த்திக்  உங்க குழந்தைகளுக்கு பெரியப்பா முறைன்னா பிரபு பெரியப்பாண்ணன் முறையா? ஹி ஹி 

2. ''நீங்கள் சொன்னால் சரியாக இருக் கும்... தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?'' 


சி.பி - தமிழ் நாட்டின் ஒரே ஊழல்வாதி கலைஞர் தான்.. தமிழ்நாட்டுக்கு ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிதான்

''கண்டிப்பா அடுத்த சூப்பர் ஸ்டார் யாருமே இல்லை. எப்பவும் அவர்தான்... அவர் மட்டுமேதான் சூப்பர் ஸ்டார்!

ரஜினி சார் சினிமாவுக்கு வந்தப்ப, 'இவர்தான் சூப்பர் ஸ்டாரா வருவார்’னு யாரும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டாங்க. ஏன்... அவரே நினைச்சிருக்க மாட்டார். ரஜினி சாரே சினிமாவில் வளர்ந்த பிறகு,  அப்ப யாராவது, 'இவர் சிவாஜி சார் இடத்தைப் பிடிப்பாரா? எம்.ஜி.ஆர். இடத்தைப் பிடிப்பாரா?’னு கேள்வி கேட்டு இருப்பாங்க. ஆனா, அவங்க இடத்தையா ரஜினி சார் பிடிச்சிருக்கார்? இங்கே யாரும் யாரோட இடத்தையும் பிடிக்க முடியாது. இன்னும் 20 வருஷத்துக்குப் பிறகு, 'அஜீத், விஜய், சூர்யா இடத்தை யார் பிடிப்பாங்க?’னு கேட்கலாம். இது ஓர் ஓட்டம். ஒவ்வொருத்தர் நடிப்பு, உழைப்பைப் பொறுத்து அவரவருக்கான இடம் நிர்ணயிக்கப்படும். அவ்வளவுதான்!''


3. ''உங்களை இயக்கியதில் உங்களைக் கவர்ந்தவர் யார்? யாருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?'' 

சி.பி - ராஸ்கல்.. என்னாய்யா கேள்வி இது டபுள் மீனிங்க்ல ? 

 ''நான் எப்பவும் மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர்னு மூணு பேரின் ஃபேன். இவங்களோட படங்களை முடிஞ்சா முதல் நாள் முதல் ஷோவே பார்த்துடுவேன். ஆனா, என்னை இயக்கிய இயக்குநர்களில் எனக்குப் பிடித்தவர் பி.வாசு சார். அவர் என்னை வெச்சு கிட்டத்தட்ட 15 படங்களை இயக்கியிருக்கார். இப்போதைய இயக்குநர் களில் நான் நடிக்க விரும்புவது கௌதம் மேனன், வசந்தபாலன்னு பெரிய லிஸ்ட்டே இருக்கே!''


சி.பி - என்னது? வாசு அண்ணன் உங்களை வெச்சு 15 பண்ணிட்டாரா? அடங்கொன்னியா.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJEbQEyRa-BfuBjJ8_EgNQD-gTnsODVV6_2oGlG2MTIXIMrQXlqDV7FmC0N5oufGSGL79L6fNFL859X61_maATKuT4hUwbf5Pgu2CfX7zzrhYnGaI0PvK4UdpFPZD_V-uBLCGqyq_yUt8/s1600/kushoob%252Bsunder%252Bhot%252Bactress.jpg

4.'' 'சின்ன குஷ்பு’ என்று யாருக்காவது பட்டம் கொடுக்கச் சொன்னால், இப்போதைய கதாநாயகிகளில் யாருக்குக் கொடுப்பீர்கள்?'' 


சி.பி - ஆமா, இப்போ ரொம்ப குண்டாகிட்டதால இவங்க பெரிய குஷ்பூ,, ஒரு காலத்துல பாலாம்பிகா அப்டினு ஒரு நடிகை , சிவரஞ்சனி-அவங்க தான் சின்ன குஷ்பூவா இருந்தாங்க.. என் கண்ணோட்டத்துல கொழுக் மொழுக் அழகி ஹன்சிகா மோத்வானி சின்ன குஷ்பூஅப்டினு சொல்லலாம்.. 

''யாருக்கும் கிடையாது! அவங்க ஏன் சின்ன குஷ்புவா, சின்ன சிம்ரனா, சின்ன ஜோதிகாவா இருக்கணும்? அவங்க அவங்களாவே இருக்கட்டுமே. என்னை யாரும் சின்ன நதியா, சின்ன ராதான்னு கூப்பிடலையே. குஷ்புவாக மட்டும் பார்த்ததுதானே எனக்கு ப்ளஸ். அந்த ப்ளஸ் அவங்களுக்கும் கிடைக்கட்டுமே!'

'
5.''பொதுவாக, ரஜினியைப் புகழ்ந்து பாடும் பாடல்கள்தான் ஹிட் ஆகும். ஆனால், ரஜினியே உங்களைப் பற்றிப் பாடுவதுபோல அமைந்த 'கூடையில் என்ன பூ... குஷ்பு’ பாடலுக்கு அவருடன் ஆடும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?'' 

சி.பி - ஹா ஹா தமிழன்கள் பைத்தியக்காரனுங்க, இந்த போதையை வெச்சே 10 வருஷம் காலம் தள்ளிடலாம்னு நினைச்சிருப்பாங்க.. 

 '' 'அண்ணாமலை’ படத்துல அந்தப் பாட்டு இருக்கிற விஷயமே எனக்குத் தெரியாது. ஒரு காமெடி சண்டைக் காட்சி எடுத்துட்டு இருந்தப்ப, 'உன் பேர்ல படத்துல ஒரு பாட்டு இருக்கு... தெரியுமா குஷ்?’னு ரஜினி சார் கேட்டார். நான் நம்பலை. ஆனா, ஒலிப்பதிவாகி வந்த பாட்டை நாகராவில் கேட்டுட்டு, 'சார், இது பயங்கர காமெடியா இருக்கு. இந்தப் பாட்டை யார் கேப்பாங்க?’னு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஆனா, அவரோ, 'டெஃபனிட்டா இந்தப் பாட்டு ஹிட்டாகும் குஷ்’னு சொன்னாரு. 


அந்தப் பாட்டை ஷூட் பண்ணும்போதுகூட லொகேஷன்ல நான் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தேன். ஆனா, தியேட்டர்ல பார்த்தப்பதான் அந்தப் பாட்டோட ரீச் புரிஞ்சது. 21 வருஷத்துக்கு அப்புறமும் அந்தப் பாட்டை டி.வி-யில் பார்க்கும்போது, ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த விஷயங்கள், சிங்கப்பூர் ஷோ போனபோது நானும் ரஜினி சாரும் அந்தப் பாட்டுக்கு சேர்ந்து டான்ஸ் பண்ணினதுனு நிறைய விஷயங்கள் ஞாபகத் துக்கு வரும். ஆனாலும், எனக்கு அந்தப் படத்தில் பிடிச்ச பாட்டு, 'அண்ணாமலை அண்ணாமலை ஆசைப்பட்டேன் அண்ணாமலை’தான்!

அப்புறம் அந்தப் படம் பத்தி இன்னொரு ரகசியம் சொல்லவா? ஆக்ச்சுவலா 'அண்ணாமலை’ படம் ஷூட்டிங் ஆரம்பிச்சப்ப, படத்திலும் என் கேரக்டர் பேர் குஷ்புதான். நடிக்கும்போது ரஜினி சார் ஒவ்வொரு முறை, 'குஷ்பு... குஷ்பு...’னு கூப்பிடும்போது என்னையும் அறியாமல் சிரிச்சிடுவேன். அதனால, கிட்டத்தட்ட பாதிப் படம் ஷூட்டிங் முடிஞ்ச பிறகு என் கேரக்டர் பேரை 'சுப்பு’னு மாத்திட்டாங்க. இப்பவும் படம் பார்க்கும்போது நல்லாக் கவனிச்சா, படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ரஜினி சார் உட்பட எல்லாரும் என்னைக் கூப்பிடும்போது 'குஷ்பு... குஷ்பு’னுதான் உதடு அசையும்!''

 சி.பி - குஷ்பூ 3 எழுத்து , தி மு க 3 எழுத்து..  ஆனா கலைஞர், ஸ்டாலின், அழகிரி எல்லாம் 4 எழுத்து எதுவும் செட் ஆகலையே.. ஆனா பிரபு 3 எழுத்து ஹி ஹி 

http://tamilcinemanews.hosuronline.com/pictures/kushboo_Chepel_God.jpg

6. ''உங்களைக் கவர்ந்த திராவிட இயக்க முன்னோடி யார்?'' 


''அதிலென்ன சந்தேகம்... தலைவர் கலைஞர்தான்! நான் 25 வருஷமா தமிழ்நாட்டில் இருக்கேன். இத்தனை வருஷத்துல நான் பார்த்த வரை பயம் இல்லாமல், தைரியமாகக் கருத்து சொல்லக்கூடியவர். ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர்ங்கிற ஈகோ, கர்வம் அவர்கிட்ட கிடையாது. பிறந்த நாள், திருமண நாள்னு நான் கட்சியில் சேர்வதற்கு முன்னாடியே ஆசீர்வாதம் வாங்க அனுமதி கேட்டா, 'உடனே வரச் சொல்லுங்க’னு என்னை வரவேற்றவர்.


 சி.பி - ஹி ஹி ஹி ஹி ஹி

 அதுக்குக் காரணம், சினிமா மேல் அவருக்கு இருந்த பிரியம். எனக்குத் தெரிஞ்சு அவரை மாதிரி படிச்சவர், படிக்கிறவர் யாரும் கிடையாது. வெற்றி, தோல்வினு எவ்வளவோ விஷயங்களைப் பார்த்தவர். எனக்கு மட்டும் இல்லை... வாழ்க்கையில் முன்னேற நினைக்கிற யாருக்குமே அவர்தான் முன்னோடியா இருக்கணும்!''


7. ''உங்களுடன் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?'' 

சி.பி - கையில காசு வாயில தோசை.. எந்த கேரக்டரா இருந்தா என்ன? 


 ''அவங்க தாத்தாவா நடிச்சா, நான் பாட்டியா நடிக்கத் தயார். 'வீரம் விளைஞ்ச மண்ணு’ படத்துல நான் விஜயகாந்த்துக்கு அம்மாவா நடிச்சேன். ஆனா, படத்துல அப்பா விஜயகாந்த்துக்கு நான் ஜோடி. இடைவேளைக்கு அப்புறம் மகன் விஜயகாந்த்துக்கு அம்மாவாகிடுவேன். ஆனா, அந்த அம்மா-மகன் காம்பினேஷன் சீன் ஒரே ஒரு இடத் தில்தான் வரும். இந்த மாதிரிக் கதைகள்னா ஓ.கே. ஆனா, அதுக்கு வாய்ப்பு இல்லைனு தான் எனக்குத் தோணுது!''


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/01/kushboo-joins-dmk-party_008.jpg

8. ''நீங்கள் 'குஷ்பு இட்லி’ சாப்பிட்டு இருக்கிறீர்களா?'' 


''ஓ... சாப்பிட்டு இருக்கேனே! மதுரைனு நினைக்கிறேன். அங்கே ஷூட்டிங்கில் இருக்கும்போது கொடுத்த இட்லி வழக் கத்தைவிட வெள்ளையா, புஸ்புஸ்னு ரொம்பவே சாஃப்ட்டா இருந்துச்சு. 'இட்லி புதுசா இருக்கே... என்ன ஸ்பெஷல்?’னு கேட்டேன். 'இதுதான் குஷ்பு இட்லி’ன்னாங்க. அடப்பாவிங்களானு சொல்லிச் சிரிச்சுட்டே சாப்பிட்டேன்!''  


சி.பி - அது ஒண்ணுமில்லை மேடம்.. வெந்தயம் நல்லா ஊறவெச்சு சோடா மாவு சேர்த்து போட்டு ஆட்டுனா அது குஷ்பூ இட்லி.. இப்போ அதையே ஹன்சிகா இட்லின்னு சொல்றாங்க 


9. ''கலைஞரிடம் பிடிக்காதது, ஜெயலலிதாவிடம் பிடிச்சது என்ன?'' 


 சி.பி - கட்சில இன்னும் பெரிய பொறுப்பு தர்லை, அது கலைஞர்ட்ட பிடிக்கலை
, ஜெயா  டி வி ல ஜாக் பாட் மூலம் டி ஆர் பி ரேட்டிங்க் ஏத்திக்கொடுத்தும் ஜெ என்னை கண்டுக்கலை.. பாம்பின் கால் பாம்பறியும்கற மாதிரி ஒரு நடிகையை கட்சில சேர்த்தா எத்தனை ஆபத்துன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு.. ஏன்னா அதிமுகவுக்கு ஒரு நடிகையால தானே ஆப்பு வந்துச்சு? 


''தலைவரிடம் பிடிக்காதது... யாரையும் ரொம்ப சீக்கிரம் நம்பிடுவார். அழுதுட்டே ஒரு விஷயத்தைச் சொன்னால், உடனே மனம் இரங்கிடுவார். அவரோட இயல்பு அது. ரொம்ப இளகிய மனம் உள்ளவர்.  

 சி.பி - இலங்கைல லட்சக்கணக்கான தமிழன் அழுதப்ப இரங்காதவர், இறங்கி வராதவர் பதவிக்காக டெல்லி வரை செல்பவர்..  இளகிய மனம் உள்ளவரா? அவ்வ்வ்வ்


ஜெயலலிதாவிடம் பிடிச்சது இப்போதைக்கு எதுவுமே கிடையாது. அவங்களிடம் எனக்கு முன்னாடி பிடிச்சது தைரியம். இப்ப அது அகம்பாவமா மாறியிருக்கு. இருந்தாலும் ஒரு பெண்ணாக, அவங்களை நான் மதிக்கிறேன்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDsrfurZtfmGYwg34W0VcChK4Q0w6ZNiGn3O33d96S3IdrPArZgU7JYYOSNK2f-xfnDVr-bTSd1mhkiOu_KKPuq-7_LpnYRI2eJdI5Rxh84HV-Ngxt37UVDxUcyRTV07RB-X1Ivprs8CT-/s400/actress_kushboo_0003.jpg

10. ''2016 தமிழகப் பொதுத் தேர்தலில் குஷ்பு எந்தத் தொகுதியில் போட்டியிடுவார்?'' 

சி.பி - திருச்சில தான் போட்டி இடனும்.. ஏன்னா அங்கே தான் தீவிர பக்தர்கள் இருக்காங்க.. குஷ்பூக்கு கோயில் கட்டுன இடமும் அதுதானே?



 ''2016 தேர்தலில் நான் போட்டியிடுவேனான்னு இப்பவே யோசிப்பது முட்டாள்தனம். கட்சியில் இப்பதான் நான் சேர்ந்திருக்கேன். என்னைவிட மூத்தவர்கள், முன்னோடிகள் கட்சியில் எத்தனையோ பேர் இருக்காங்க. இப்போதைக்கு நான் கட்சியின் அடிப்படைத் தொண்டர். அவ்வளவுதான். தேர்தல் போட்டி, பிரசாரம் எல்லாத்தையும் தலைவர்தான் முடிவு செய்வார். இப்பவே இதுபத்தி யோசிக்காம நம்ம வேலை எதுவோ அதை மட்டும் செஞ்சுட்டுப் போயிட்டே இருப்போம்!''

சி.பி - வாய் அப்படி சொன்னாலும் மனசு என்ன சொல்லுதோ?


http://www.cinesouth.com/images/kushboo-23.jpg