Showing posts with label JEYALALITHA. Show all posts
Showing posts with label JEYALALITHA. Show all posts

Tuesday, December 20, 2011

சசிகலா மாட்டியது எப்படி? சென்னையை விட்டே துரத்த ஜெ முடிவெடுத்தது ஏன்?

http://i51.tinypic.com/33e7m7q.jpg

சசிகலா, அவரது கணவர் நடராஜன், இவர்களது குடும்பத்தினர் என, 14 பேரை அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன் மூலம், ஆட்சி மற்றும் கட்சியில் சசிகலா குடும்பம் போட்ட ஆட்டம் குளோசானது. ஜெயலலிதாவின் இந்நடவடிக்கையை, அ.தி.மு.க., தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். 


 சி.பி - கலைஞர் தான் பாவம் கதி கலங்கி இருக்காராம், ஜெ மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டே சசிகலா ஆதிக்கம் தான், அதுவும் உடைஞ்சுடுச்சேன்னு அய்யா கலக்கமாம்..
.

.

அரசு நிர்வாகத்திலும், கட்சி நிர்வாகத்திலும் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து தலையிட்டு வந்தனர். இதன் மூலம், அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வந்தனர். இதையடுத்தே, இந்த அதிரடி நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில், சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட, ஏ.பன்னீர்செல்வம், கடந்த வாரம், அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார்;

சி.பி - ராஜினாமா செஞ்சாரா? செய்ய வைக்கப்பட்டாரா?நம்மாளுங்க உயிரை விட்டாலும் பதவியை விட மாட்டானுங்களே? 


இதிலிருந்து பிரச்னைகள் வெளிப்படத் துவங்கின. பன்னீர்செல்வம், நடராஜனுக்கு மிகவும் நெருக்கமாவனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், சிறப்பு அலுவலராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.கோட்டையில், அதிகார மையமாக விளங்கிய இவர், அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்தல் என, அனைத்திலும் தலையிட்டு வந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், கோட்டையில் உள்ள இவரது அறைக்கு வந்து, இவரை சந்தித்து விட்டு செல்லும் நிலையில் இவர் இருந்தார்.


சி.பி - அதாவது வர்ற வருமானத்துல 10% எடுத்துக்கிட்டு மீதி 90% ட்டை மேலிடத்துக்கு குடுத்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது, அண்ணன் 90 %ட்டை ஆட்டையை போட்டுட்டு `10%ட்டை மட்டும் தள்ளி விட பார்த்திருப்பார்.. உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதை ஆகிடுச்சு

http://itsmeena.files.wordpress.com/2011/03/cartoon.gif

இத்தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைச்சாமி மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது போன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கையில், சசிகலா போயஸ் தோட்டத்தில் தங்குவதில்லை என்றும், இளவரசியின் வீட்டில் அவர் தங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியானது.இதனால், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகமாகி, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பரபரப்பாகப் பேசப்பட்டது. 

சி.பி - பரபரப்பா பேசப்படுதோ இல்லையோ, இப்படி நியூஸ் போட்டே பர பரப்பு பண்ணிடுவாங்க, நம்மாளுங்க 


அதன் எதிரொலியாக, சசிகலா, நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 14 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.முதல்வரின் நடவடிக்கை மூலம், இனி மன்னார்குடி கும்பலின் அட்டூழியம் முடிவுக்கு வந்ததாக, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

சி.பி - அதை காலம் தான் முடிவு செய்யும், எப்போ வேணாலும், எப்படி வேணாலும் ஜெ மனசு மாறிடும், அதுக்கு வரலாற்றில் சான்று இருக்கு.. 



கட்சியிலிருந்து, சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதை வரவேற்று, அ.தி.மு.க.,வினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அப்போது, அவர்களில் சிலர் கூறும் போது, "சசிகலா கும்பலை விரட்டியடித்து ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம், அவருக்கு ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

சி.பி - ஒரு சின்ன கரெக்‌ஷன்,  ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது என்பது தவறு, ஏற்பட்ட அவப்பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பதே சரி.. ஆல்ரெடி அம்மா பேரு சசிகலாவால கெட்டுப்போச்சே..

24 மணி நேரம் கெடு?சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் சென்னையிலிருந்து, 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ராவணன், மோகன் ஆகியோர் வீடுகளில் போலீசார் நடத்திய ரெய்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

சி.பி - சென்னைல இருந்து ஏன் வெளியேறனும்? மன்னர் காலத்துல நாடு கடத்தும் திட்டம் இருந்துச்சு, இப்போ மம்மி ரிட்டர்ன்?ஒரு வேளை ஜெ வே நாடகம் போட்டு இன்கம்டாக்ஸ் ரெயிடு, சொத்துகுவிப்பு வழக்குல இருந்து தப்பிக்க இப்படி ஒரு டிராமா போடராறோ என்னவோ?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3DWpkZa-2dRWUE4FZ-01LCEEPtJ0GGHtZmcfYz_jz4AUKaG4rl8SFWnfHby9ycqOCS2XyFXcTb05Re1OuBDrp7sBtZlGvNLf8nIjNQyrGtCW7982xg1QQSdrunhc0mHyKbLhXtD8lwZWw/s1600/jayalalitha-cartoon.jpg

கட்சியில் இருந்தாரா நடராஜன்? : ஜெயலலிதாவுக்கு, முதன் முதலில்மனைவி சசிகலாவை அறிமுகம் செய்த நடராஜன், பிற்காலத்தில் பின்புலத்தில்இருந்து சசிகலாவையும் கட்சியையும்இயக்க ஆரம்பித்தார்.இதனாலேயே 1992ல், நடராஜனுடன்கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என ஜெயலலிதா அறிவித்தார். 

 சி.பி - ஆமா, ஜெவைத்தவிர வேற யாரும் தொடர்பு வெச்சுக்கக்கூடாது ஹி ஹி

அப்போதே அவர் கட்சியில்உறுப்பினராக இருந்தாரா இல்லையா, எனகட்சியினருக்கே தெளிவாக தெரியவில்லை.1996ல் கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது, சசிகலாவையும் நடராஜனையும் கட்சியை நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். மூன்று மாதங்களில் சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டார். அப்போதும்நடராஜனின் நிலைமை தெரியவில்லை.பின், சசிகலாவுக்கு தலைமை செயற்குழுஉறுப்பினர் பதவி தரப்பட்டபோது கூட,நடராஜனுக்கு பதவி தரப்படவில்லை. இருப்பினும் அவர் கட்சியில், "நிழல்'மனிதராகவே வலம் வந்தார். 

 சி.பி - இதுல என்ன மர்மம் வேண்டிக்கிடக்கு? ஜெவுக்கு சசி பிடிக்கும், ஆனா நடராஜனை பிடிக்கலை, அவரை 100 % விரட்ட வழி இல்லை, அது சசிக்கு பிடிக்காது ஹி ஹி இதான் சிக்கலே..


சசிகலாவும்நடராஜனும் ரகசியமாக சந்தித்துக்கொள்வதாக அவ்வப்போது தகவல்கள் வந்தன.

சி.பி - அட விடுங்கப்பா பாவம் சொந்த சம்சாரத்தை சந்திச்சதை என்னவோ சீக்ரெட் ஏஜண்ட் ஜேம்ஸ்பாண்ட் வில்லியை ஹோட்டல்ல சந்திச்ச மாதிரி பில்டப் குடுக்கறீங்க?  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKaT9PRyh4FvmTbG_ndqT2xeo9P_1PIqy1_B6T3Nvy2t-HIO9JsYQIYpp-vgR8W9Ot01MxDjn274NVs5iOxOzhqfcpPIJ1lQil42UB5lk4lrTScXuFlPRdFMJ-bEgh_auFVURhnJdYA4nN/s1600/jayalalitha.jpg

கட்சிக்காரர்கள் பலரும் நடராஜனுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தனர். இந்நிலையில் சசிகலாவின் கூட்டத்துடன்சேர்த்து, நடராஜனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் வினோதம் என்னவென்றால், கட்சியில் இருக்கிறாரா இல்லையா என கட்சியினருக்கு தெரியாமலேயே,நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். 

சி.பி - தங்கமலை ரகசியம் கூட கண்டு பிடிச்சுடலாம், போயஸ் தோட்ட மர்மத்தை கண்டுபிடிக்கவே முடியாது.. 

டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், முதல்வரின் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டது. அந்த பைலை, வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதன் பின்னர் தான் சசிகலாவின் ஆதரவர்களாக வலம் வந்த அதிகாரிகள், ஒவ்வொருவராக, "கழற்றி' விடப்பட்டுகின்றனர்.


சி.பி - அதென்ன ஃபைல்? கடைசி வரை ரகசிய ஃபைலாவே இருந்துடுமோ?

"எம்.ஜி.ஆர்., கூட இந்தளவிற்கு தனி மெஜாரிட்டியில் ஜெயிக்கலைங்க... இந்தம்மாவிடம் (ஜெயலலிதா) பொதுமக்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க' என்ற பேச்சு, தமிழகத்தின் அடிமட்ட அரசியல் தொண்டனிடம் இருந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பேசப்பட்டது.

சி.பி - ஜெ ஜெயிச்சதே எம் ஜி ஆர் செல்வாக்க்குலதான் என்பதை யாரும் மறந்துடக்கூடாது.. விதை விதைச்சவர் எம் ஜி ஆர் , அறுவடை பண்றது ஜெ

முதல்வரின் நிழலாக பின் தொடரும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தில் நடப்பது எங்கள் ஆட்சி' என்ற தோரணையில் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தனர்.தற்போது நீக்கப்பட்ட, 14 பேரில் ராகவன் என்பவர், தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்தில், சி.எம்.டி.ஏ., பிரின்சிபல் செக்ரடரி தயானந்த கட்காரியை போனில் அழைத்து, "நாங்கள் சொல்லும் பைலில் கையெழுத்து போடா விட்டால் நடப்பதே வேறு' என மிரட்டியுள்ளார்.


சி.பி - மிரட்டியவர்கள் விரட்டப்பட்டுள்ளனர் ம் ம் குட்

அந்த நபர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை என, தலையிட்டு, கடைசியாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையிலும் தலையை நீட்டினார். "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் ஆசியுடன், கடந்த ஆட்சியில் சென்னையில் பணியாற்றி வந்த, "ஜிம் பாடி பில்டர்' ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கார்டன் அதிகார நபரை பிடித்தார்.அடுத்த சில நாட்களில் அந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, மேற்கு மண்டலத்தில் உள்ள வளமான மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இது போன்ற ஏகப்பட்ட தலையீடுகள், போலீஸ் துறையில் அரங்கேறின.

சி.பி - என்னைக்கேட்டா கவர்னர் தலையிட்டு ஜெ மேல கேஸ் போட வைக்கனும். ஒரு அரசாங்கமே தனி நபர் பிடில சிக்கிட்டு இருந்ததை வேடிக்கை பார்த்துட்டு நிர்வாகத்தை  பலவீனம் ஆக்குனதே ஒரு குற்றம் தான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXAqUa3AgLzKLSACm5ed3EBGF1_xn-WgHZDqyLlO8X-Bvu-MChJynz6XI1BwIaCwP22zkK928cwEPZkSry7jE8Z4RjORXw68spj4b-5aZ8wTPCjWD7k8M0ZYO8nK_s_jSyUF1xhZg7ycY/s640/82687605.preview.jpg

கார்டன் அதிகார மையத்தினரால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து ரகசிய, "பைல்' முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அந்த பைலை முதல்வரின் பார்வையில் படாமல் கார்டனில் உள்ள சிலர் மறைத்து விட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், ஒரு மாதத்திற்கும் மேலாக கார்டனில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, அந்த பைலை ஜெயலலிதா படித்துள்ளார்.அதில், சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் ஒவ்வொருவரை பற்றியும், வசூல் வேட்டை பற்றியும் விலாவாரியாக, "புட்டு புட்டு' வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கார்டன் அதிகார மையத்தினரால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் தகவல், நியாயமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் முதல்வரிடம் தயக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.


சி.பி - எல்லாம் ஜெவுக்கு தெரிஞ்சே தான் நடந்திருக்கும், பங்கு பிரிக்கும்போது சண்டை வந்திருக்கும்

அதன் பின் தான், முதல்வர் சாட்டையை சுழற்றினார். தலைமைச் செயலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, சிறப்பு திட்ட செயலரான பன்னீர்செல்வம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் தீவிர விசுவாசி. பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ்., ஆனதற்கு, நடராஜன் உதவியதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, திருமலைச்சாமி, கார்டனில் இருந்து விரட்டப்பட்டார்.இவர், கார்டன் அதிகார மையத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கார்டனில் நடக்கும் விஷயங்களை கேட்டு முகம் சிவந்த ஜெயலலிதா, திருமலைச்சாமியிடம் நேரடியாக விசாரித்த போது, பல தகவல்கள் முதல்வரை அதிர்ச்சியடை செய்தன.

 சி.பி - கூட இருந்த ஜெவுக்கே அதிர்ச்சின்னா மக்கள்க்கு எப்படி இருக்கும்? அதெல்லாம் என்னா மேட்டர்னு கண்டு பிடிச்சு வெளீல விடுங்கப்பா. 


திருமலைச்சாமியின் வாக்கு மூலத்தை, அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரித்து, நூறு சதவீதம் உறுதி செய்தார் ஜெயலலிதா. இனிமேலும் தாமதித்தால் எல்லாம் வீணாகிப் போய்விடும் என்ற எண்ணத்தில், கழக தலைமைக் செயற்குழு குழு உறுப்பினர் சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் உட்பட, 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், மற்ற பொறுப்புகளில் இருந்து ஜெயலலிதா விடுவித்து உத்தரவிட்டார்.

 சி.பி - எலக்‌ஷனுக்குப்பிறகு ஜெ எடுத்த பல வெட்டி அதிரடி அறிவிப்புகளூக்கிடையே , இருப்படியான உத்தரவு இது ஒண்ணுதான்.. அவர் இமேஜ் இதனால மக்கள் மத்தியில் உயரும் என்பதில் ஐயம் இல்லை.. கீப் இட் அப்.. 

கார்டன் அதிகார மையத்திற்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் பலர், செய்தித் துறையில் பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள், "எம்.என்., - எம்.ஆர்.,' வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்துள்ளனர். நேற்று, ஜெ., வின் அதிரடியால், செய்தித் துறையில் பணியாற்றி வந்த ஆதரவு அதிகாரிகள் சிலர், மொபைல் போனை, "ஆப்' செய்து விட்டு, "எஸ்கேப்' ஆகி விட்டனர். முதல்வரின், "ஹிட் லிஸ்டில்' உள்ளவர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

சி.பி - மேடம், யாரையும் விடாதீங்க, அவங்க வெச்சிருந்த  பணத்தை எல்லாம் கைப்பற்றிடுங்க.. ஆனா அந்த விபரம் எல்லாம் ரகசியமா நடக்கட்டும் ஹி ஹி 




சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சி.பி - ஜெ கோர்ட் விசாரணைக்காக பெங்களூர் போனப்பவே சசி குரூப் செமயா குஷில இருந்திருப்பாங்க.. ஆல்டெர்நேட் சி எம் ஆகலாம்னு பிளான் பண்ணி இருப்பாங்க.. 


சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.

 சி.பி - எவ்வளவு சுருட்டுனாரோ யாருக்குத்தெரியும்? எல்லாம் மக்கள் பணம் தான் அவ்வ்வ்

அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு

 சி.பி - எப்படியோ நல்லது நடந்தா சரிதான் 

http://deco-01.slide.com/r/1/0043/dl/TtO0gTpF0z_n99lbQr_Tbkp62gm8slz3/watermarksm

Thursday, November 17, 2011

பஸ், பால், மின் கட்டண உயர்வு - ஜெ அறிவிப்பு # காமெடி கடுப்பு கும்மி

  தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி வழங்காததால் தமிழகத்தின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அவலத்தினால் தமிழகம் பெரும் கடன் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்பதில் இருந்து மின் பற்றாக்குறை மாநிலமாக உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கே சேரும் என்றும் பரபரப்பாக பேசினார். இதனை சமாளிக்க பஸ், பால், மின் கட்டண விலையை உயர்த்திட முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார். 

இதன் படி கட்டண உயர்வு விவரம் வருமாறு: பஸ் கட்டணம் சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் படி சென்னையில் 2 முதல் 3 ரூபாய் வரையும், மாநிலத்தில் நகர்ப்புற பஸ்களில் கி.மீட்டருக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவும், வெளியூர் பஸ்களில் கி.மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ்சில் மற்றும் சொகுசு ‌பஸ்களில் கி.மீட்டருக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 52 பைசாவில் இருந்து 70 பைசாவா உயர்த்தி வசூலிக்கப்படும். நகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிக பட்சம் 13 லிருந்து 16 ஆகவும் இருக்கும். ஆவின் பால் லிட்டருக்கு 17. 75 லிருந்து 24 ஆக ( 6. 25 ) உயர்த்தப்படுகிறது. விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையும் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை ரூ. 18லிருந்து 20 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 26லிருந்து 28 ஆக உயர்கிறது.



1.ஜெ வின் சின்னம் இரட்டை இலை. அவர் ஆட்சியில் பொருட்கள் எல்லாம் இரட்டை விலை

---------------------------------------

2. மகாஜனங்களே, இன்று ஒரு நாள் மட்டும் விலை ஏற்றத்திற்கு எதிராக ட்வீட் போடுங்க, நம் குரல்கள் கோட்டையை எட்டட்டும் .opp

----------------------------------

3. பஸ் டிக்கெட் விலை ஏற்றத்தால் சசிகலாவின் கணவர் கணவர் மட்டும் அல்ல , நாம் அனைவருமே நடராஜன்கள் ஆகி விட வேண்டும் போல் இருக்கே?

-------------------------------------

4. கலைஞர் - விலையேற்றம் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.. மானம் உள்ள தமிழன் இது பற்றி பேசுவான் # அய்யோ தலைவரே,,அப்போ......

-----------------------------

5. எம் ஜி ஆர்-ன் ஆவி - ஹூம் சினிமால நல்லா ஆடுனாங்க, அரசியல்லயும் செம ஆட்டம் போடறாங்க.அண்ணா என்னை மன்னியுங்கள்

------------------------------------------

6. விலை ஏத்தனும்னு நினைச்சா டாஸ்மாக், சிகரெட், கஞ்சா, மட்டன், சிக்கன் இப்படி ஏத்துங்க மேடம்

------------------------------------

7. மேடம், எதுக்காக இப்படி தமிழர்களை பழி வாங்கறீங்க?

2006-ல என்னை பழி வாங்குனாங்களே? மறக்க முடியுமா? பழிக்குப்பழி

-------------------------------------------

8. டம் டம் மேடம், எதுக்காக எல்லா விலையையும் இப்படி உயர்த்துனீங்க?

தமிழர்கள் சிக்கனமா இருக்கனும்னு உணர்த்த

-----------------------------------------

9. நடிகைஅமலா பால் தனது சம்பளத்தை 32% உயர்த்தினார், மேலும் ஜெ வுக்கு நன்றி சொன்னார் @ இமேஜினேசன்

------------------------------------------

10. ஜெ திருப்பதி மாதிரி இறங்கி வர மாட்டாங்க.. விலையை ஏற்றி விட்டு மக்கள் வயிற்றில் அடிப்பாங்க

------------------------------------

11. அதிகார மமதையில் ஆடாதே..நம்பி வந்த  நடுத்தர மக்களை கை விடாதே

------------------------------

12. ஷாக் அடிக்குது சோனா......நீ துள்ளற வீணா.. ஹார்ட் துடிக்குது தானா.. நீ கோர்ட் பக்கம் போனா

-----------------------------

13. மேடம், சகுனமே சரி இல்லை.. பால் விலையை ஏத்தி நம்ம ஆட்சிக்கு பால் ஊத்திட்டீங்கனு நினைக்கறேன்

----------------------------------

14. எழவு வாசம் இலைவசம், இலவசம் விலை ஏற்றம்

-----------------------------------

15. டாக்டர் பட்டம் கொடுத்தாங்கங்கறதுக்காக இப்படி தமிழக மக்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுக்கனுமா? மேடம்?

---------------------------------------

16. வேலாயுதம் படத்துல விஜய் பால்காரரா நடிச்சப்பவே நினைச்சேன்யா.. இப்படி பால் விலை கன்னா பின்னான்னு ஏறும்னு

---------------------------------------

17. அன்பில்லாத அம்மா! இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியல.. இங்கே இருக்கும் தமிழனையாவது சாகடிக்காமல் காப்பாற்றவும்

-----------------------------------

18. அதிமுக - அடங்காமல் திமிருடன் முரண்டு பிடிக்கும் கழகம்????

--------------------------------

19. அமாவாசைன்னா  பைத்தியம் முத்தும், அம்மா உங்க ஆசைகளால எங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கே?

---------------------------------

20. ஆட்டமா? விலை ஏற்றமா? ஏத்தமா? உனக்கு இது ஏத்ததா? வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் இருக்குது, செக்‌ஷன் 365

----------------------------------

21.உடன் பிறப்பே!பிசாத்துப்பணம் 1 3/4 லட்சம் கோடிக்காக கழக ஆட்சியை இறக்கி வைத்தாய்.அரக்கியை ஆட்சி பீடத்தில் ஏற்றிவைத்தாய்!அனுபவி தமிழா அனுபவி

-----------------------------------------

22. போஸ்ட் கார்டு விலை50 பைசா தானே? அதை ஏன் ஒரு ரூபாய் ஆக்கிட்டீங்க?

பால் விலை ஏறுன மாதிரி தபால் விலையும் ஏறிடுச்சோ என்னவோ?

-------------------------------------------------

23. வணக்கம் ஜெயா செய்திகள்.. எந்தெந்த பொருள்கள் எல்லாம் விலை ஏறவில்லை என்பது பற்றி ஒரு பார்வை.....

----------------------------------------

24. கார்த்திகை 1 அன்னைக்கு விளக்கேத்தி வைப்பீங்கன்னு பார்த்தா இப்படி விலையை ஏத்தி வைச்சுட்டீங்களே?

--------------------------------------

25.அண்ணே.. டீ இன்னும் வர்லை.. 

டேய். நாயே பாலே இன்னும் வர்ல.. இனி வராது போல.. ஓ சி பேப்பரை படிக்காம எந்திரிச்சிப்போ நாயே

-----------------------------------------------
26. .சசிகலா- அக்கா அக்கா புரட்சி அக்கா. நம்ம ஆட்சி நல்ல ஆட்சி இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுக்கா, அதை சொன்னா வெக்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு

-----------------------------------------------

27. இன்னைக்கு செத்தா நாளைக்கு மட்டும் இல்ல.. எந்த நாளும் இனி பால் கிடைக்காது போல.

-----------------------------------------

Saturday, August 13, 2011

அழகிரியை ஏவி விட்டு திமுகவை பிளக்க பிளான் போடும் ஜெ ,கலைஞர் திகைப்பு!!!!

http://2.bp.blogspot.com/_a-5_Ktv6jB8/TSgffk6N-cI/AAAAAAAABjQ/1C900QxKI38/s1600/Azhagiri.jpg
ழுகார் சில கடிதங்களுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தார். முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு அட்ரஸ் பண்ணப்பட்ட கடிதங்கள்! அவரே சொல்ல ஆரம்பித்தார்...

சி.பி - பத்திரிக்கை நடத்தறவங்க  மினி போஸ்ட் ஆஃபீஸே நடத்தறாங்க போல.. எங்கே லெட்டர் போறதா இருந்தாலும் இவங்க பார்வைக்கு முதல்ல வந்துடுது.. 


 ''சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு உண்டாக்​குவதாகக் காரணம் சொல்லி, சென்னையைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்றை சீல் வைத்திருக்கிறது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். ஆனால், காரணம் அது மட்டுமே இல்லையாம்! 'தேர்த​லுக்கு முன்பு தேர்தல் நிதிக்காக அ.தி.மு.க. தரப்பில் இருந்து ஒரு முக்கிய நிர்வாகி, அந்த மருந்து கம்பெனி அதிபரை தொடர்பு கொண்டாராம். கேட்டதை விட குறைச்சலான தொகை கொடுத்ததோடு, ஏதோ கமென்ட் அடித்ததாகவும் சொல்கிறார்கள். 



சி.பி - இவ்வளவுதானே, ஒரு மன்னிப்பை கேட்டுட்டு மீதி அமவுண்ட்டை செட்டில் பண்ணிட்டா மேட்டர் ஓவர்..
மருந்து கம்பெனி அதிபரோ இப்போது கோட்டைக்கு நடையாய் நடப்பதோடு, தோழி குடும்பத்தின் மூலமும் முயற்சி செய்து பார்த்து விட்டாராம். அதிகார மையத்​திலோ, 'இது விஷயமா என்கிட்ட யாரும் பேசாதீங்க’ என கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி விட்டதாகக் கூறு​கிறார்கள்! என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக்கொண்டு இருக்​கிறார், மருந்து கம்பெனி அதிபர். நான் கொண்டு வந்​திருப்பது அந்த அதிபர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்​பிய கடித நகல்கள்​தான்!''


சி.பி - ஜெராக்ஸ் மிஷின் வேற வெச்சிருக்கீங்களா?
''காரணம் ரொம்ப சாதார​ணமாக இருக்கிறதே?''


''அப்படியா... இதையும் கேட்டுவிடும்... முதல்வர் சென்று தங்கக்கூடிய சிறுதாவூர் பங்களா இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கிறது இந்த கம்பெனி, போதுமா? சுற்றுச்​சூழல் மாசு எப்படி பாதிக்கும் என்று புரிகிறதா? மேலும், சில வருடங்களுக்கு முன்னால், அந்த குறிப்பிட்ட கம்பெனியின் பாய்லர் ஒன்று வெடித்து, ஒருவர் இறந்து போனார். அந்த சம்பவம்கூட புதிய ஆட்சியாளர்களின் மனதில் பச்சென்று பதிந்து இருக்கக்கூடும் என்றும் சிலர் சொல்கிறார்கள். 


கம்பெனி உரிமையாளர், ஆந்திரத் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவராம். அவர் மூலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்​தையும் தோல்வியில் முடிந்துவிட்டதாம்!'' என்ற கழுகார், அந்தக் கடிதங்களை சற்றே தள்ளிவைத்துவிட்டு, தி.மு.க. பக்கம் தாவினார்.


''தி.மு.க-வுக்குள் ஸ்டாலின், அழகிரி இருவருக்கும் நடக்கும் அதிகாரப் போட்டியை அதிகமாகவே ரசிக்க ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க. தரப்பு. இதில் குறுக்குச் சால் ஓட்டி ஏதாவது ஓர் அணிக்குத் தூபம் போடுவதற்கான வேலைகளைச் சில தூதர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு மதுரை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள், ஆர்வத்தை பெருக்கி வருகின்றன. 

 http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_77341425419.jpg
மதுரையில் அழகிரியின் தளபதிகளாக இருந்த பலரும் கைதாக... காந்தி அழகிரி பெயரில் பதிவான ஒரு நிலத்தின் விவகாரமும் வில்லங்கம் ஆகியுள்ளது. 'உங்களை வளைப்பதற்கு போலீஸ் தயாராக இருக்கிறது. அதற்கு ஆதாரமாக ஏராளமான வழக்குகள், வாக்குமூலங்கள் உள்ளன. இந்தச் சுழல் சர்ச்சைகளில் இருந்து போலீஸ் உங்களை விடுவிக்க வேண்டுமானால் எங்களுக்குக் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள். எப்படியானாலும் ஸ்டாலின்தான் தி.மு.க-வின் அடுத்த தலைவராக வரப் போகிறார். அதை எதிர்த்து இப்போதே கட்சிக்குள் புரட்சியைத் துவங்குங்கள். 

சி.பி - சகுனி வேலை செய்யறதுல தான் தமிழர்களுக்கு எம்புட்டு ஆர்வம்?
உங்கள் ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு, 'நாங்களே உண்மையான தி.மு.க.’ என்று கோஷம் கிளப்புங்கள்’ என்று ஐடியாவும் அனுப்பி வைத்திருக்கிறார்களாம் இந்த சில்மிஷ தூதர்கள். இப்படியரு ஆஃபர் எந்தளவுக்கு அழகிரியிடம் எடுபடுமோ..?''


சி.பி - அதெல்லாம் ஒண்ணும் எடுபடாது..  கலைஞரின் சாணக்கியத்தனம் இன்னும் யாருக்கும் புரிபடாதது..
 
''அதையும் விசாரித்திருப்பீரே..?''


''அழகிரிக்கு நெருக்கமான மதுரை ஆட்களிடம் விசாரித்தேன். 'நீங்கள் சொல்வது மாதிரி சிலர் எங்கள் காதுபட பேசி, தூதுவிட நினைப்பது உண்மைதான். ஆனால், அண்ணன் இந்த உடன்பாட்டுக்கு தயாராகவே மாட்டார். எங்களைப் பொறுத்த வரையில், அவர்தான் எப்படியும் அடுத்த தலைவர். அதில் எந்த மாற்றமும் இல்லை. 


சி.பி - எதுக்கு தலைவர்? மதுரைக்குத்தானே?

ஸ்டாலின் அந்த இடத்தில் வந்து உட்காருவது அதிகாரபூர்வமாக முடிவானால், நாங்களாகவே புரட்சி கீதம் இசைக்கத்தான் போகிறோம். 


சி.பி - எஸ் ஏ சந்திரசேகர் மாதிரியே பேசறாரே?  புரட்சி கீதம் , வறட்சி நாதம்னு..

மற்றபடி அ.தி.மு.க. ஆட்களை நம்பி நாங்கள் எதையும் செய்வதற்கில்லை. கட்சியில் சில விஷயங்கள் அழகிரிக்கு பிடிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், தலைவரை அந்தளவுக்கு நோகடிக்கும் காரியத்தை அண்ணன் செய்யமாட்டார்!’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். 


 சி.பி - என் கணிப்பு அண்ணன் அழகிரி கலைஞர் இருக்கறவரை கமுக்கமா இருந்துட்டு அவர் காலத்துக்குப்பின் தான் பிரச்சனை பண்ணுவார்னு,ஏன்னா இப்ப பிரச்சனை பண்ணுனா அவரை ஓரங்கட்டிடுவாங்க..



ஆனால் ஆளும் தரப்போ... 'அவரவர் வலி அவர்களுக்குத்தான் தெரியும். ஒருபுறம் சோதனை கொடுத்தபடியே, மறுபுறம் வரம் கொடுக்க தூது விடுவோம்' என்று தளராமல் சொல்லி வருகிறதாம்!''
''ஓ!''


''இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின் எல்லாச் சிறைகளுக்கும் விசிட் அடித்து கோஷ்டிகளைக் கடந்து ஆறுதல் கூறுவதைப் பார்க்க வேண்டி உள்ளது. அழகிரிகூட பாளை சிறைக்குச் சென்று மதுரை ஆட்களை மட்டும் பார்த்தார். ஆனால் ஸ்டாலின், எல்லாச் சிறைகளையும் வலம் வந்து​விட்டார். பாளை சிறையில் இருந்த திருவாரூர் பூண்டி கலைவாணனை ஸ்டாலின் சந்தித்தபோது, 'பொட்டு’ சுரேஷ§ம் ஸ்டாலினைப் பார்த்து வணக்கம் வைத்தாராம்.



'உங்க மேல இன்னிக்கும் ஒரு கேஸ் போட்டிருக்காங்க போல’ என்று பரிவாக ஒரு வார்த்தை சொல்லி வைத்தாராம் ஸ்டாலின். அப்படியே திருச்சி சிறைக்கு வந்தவர், அங்கு 'அட்டாக்’ பாண்டியை சந்தித்தார். இதெல்லாம் மதுரை தி.மு.க-வினர் கவனத்தை ஸ்டாலினை நோக்கித் திருப்பி உள்ளதாம். திருச்சி பிரமுகர் காஜாமலை விஜய்யும் அந்தச் சிறையில்தான் இருந்தார். 'நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. வழக்குகளை எல்லாம் சட்டப்படி சந்திப்போம். உங்கள் பின்னால் கட்சி இருக்குது!’ என்று ஸ்டாலின் சொல்ல... 'நீங்க வந்து பார்த்ததே போதும் அண்ணே... நாங்க எதுக்கும் கலங்க மாட்​டோம்!’ என்று சிறையில் இருந்தவர்கள் உருகி விட்டார்களாம்...''

 சி.பி - உருகுதே, மருகுதே ஒரே விசிட்டினாலே...

''ம்... தி.மு.க-வுக்கு இதுவும் ஒருவித 'மிசா' காலம்தான்!''


''ம்! முக்கியமாக நில மோசடி வழக்குகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைப் பார்த்து கருணாநிதிதான் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளாராம். 'இந்தக் கைதுகளுக்குத் தடை வாங்கும் வகையில் பேராசிரியர் அன்பழகனை வைத்து மொத்தமாக ஒரு வழக்குப் போடலாமே’ என்று யாரோ ஆலோசனை சொல்ல... அதில் அன்பழகனுக்கு உடன்பாடு இல்லையாம். அதனால், வழக்கறிஞர் அணித் தலைவர் ஆலந்தூர் பாரதியை வைத்து மனு ஒன்று ரெடி ஆகிறது!'' என்று சொன்ன கழுகார்,


''நடிகர் வடிவேலுவைச் சுற்றி வலை இறுகிக் கொண்டிருக்கிறது. உமது நிருபரை முடுக்கிவிடும்! '' என்று உத்தரவு போட்டுவிட்டு பறந்தார்.

 சி.பி - ஆமா, இவர் பெரிய சுதந்திரப்போராட்ட தியாகி, இவரை கைது பண்ணலைன்னா பெரிய பிரச்சனை உருவாகும்..!! அட போங்கப்பா, போய் பொழப்ப்பை பாருங்க..

மூன்று உயிர்கள் தப்புமா?


'ராஜீவ் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்’ என்ற தகவல் பரவியதை தொடர்ந்து தமிழின உணர்வாளர்கள் மத்தியில் ஒரே பதற்றம்.


''இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தும் நிலையை தமிழக கட்சிகள் உருவாக்கிய நேரத்தில், 'ஹெட்லைன்ஸ் டுடே’ சேனல், போரால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களை நேரடியாகச் சென்று, பேட்டி எடுத்து ஒளிபரப்பியதும், இலங்கை அரசின் போர்க் குற்றச்சாட்டு மேலும் வலுவாகி வருகிறது.

இலங்கைக்கு இந்திய அரசு உதவிய நிலையில், அகில இந்திய அளவிலான ஈழ மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டிய நிலைக்கு டெல்லி தள்ளப்பட்டது. இந்த நிலையில்தான், மூவரின் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!'' என்று தமிழின உணர்வாளர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். 

''ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட சி.பி.ஐ. புலனாய்வுக் குழு, இன்னும் விசாரணையை முடித்து அறிக்கையைத் தரவில்லை. உண்மைகளைக் கவனத்தில்கொள்ளாமல், கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்திருப்பதை எதிர்த்து சட்டரீதியாக நடவடிக்கையில் இறங்குவோம்!'' என்று பழ.நெடுமாறன் அறிவித்து இருக்கிறார்.


ராஜீவ் கொலை வழக்கில் மறுவிசாரணை வேண்டும் என வலுவாகப் பேசப்பட்டு வரும் நிலையில், மூவரின் உயிர் தப்புமா? என்பது பெரும் கேள்வியாக தொக்கி நிற்கிறது!


கர்நாடகாவில் ஒரு ஓ.பன்னீர் செல்வம்!


அப்பாடா... கர்நாடகாவில் நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் ஓய்ந்து விட்டது.

'1600 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா’ என லோக் ஆயுக்தா அறிக்கை வெளி யான பிறகும், நாற்காலியை விட்டு இறங்காமல் அடம் பிடித்த எடியூரப்பாவை குண்டுக் கட்டாக இறக்கி விட்டது பி.ஜே.பி. மேலிடம்.


ஆனாலும், எடியூரப் பாவின் கட்டளைப்படி அவரது விசுவாசியான சதானந்த கவுடா முதல்வர் ஆக்கப்பட்டு உள்ளார். கர்நாடகாவில் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதா யத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் முதல்வர் ஆக முடியாது என்பது எழுதப்படாத சட்டம். 

எடியூரப்பா லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். சதானந்த கவுடா ஒக்கலிகர். கர்நாடகத்தில் பெரும்பதவிக்கு வருபவர்கள் மடாதிபதிகளின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான மடாதிபதிகள் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. எனவே அவர்களின் பேராதரவைப் பெற்ற எடியூரப்பாவின் கைப்பாவையான சதானந்த கவுடாவை முதல்வர் ஆக்க ஒப்புதல் அளித்தனர். முதல்வர் பதவி ஏற்றவுடன் சதானந்த கவுடா, கீழே முதல் வரிசையில் 'உர்’ரென உட்கார்ந்து இருந்த எடியூரப்பாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். 


பத்திரிகையாளர்களிடம் பேசிய போதும் எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளினார். இதைப் பார்த்து, 'கர்நாடக ஓ.பன்னீர் செல்வம்’ என, சதானந்த கவுடாவைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் கமென்ட் அடித்தவுடன் குபீர் சிரிப்பு எழுந்தது.

சி.பி - ஜால்ராக்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் 

thanx - ju vi

Thursday, April 07, 2011

கேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீரோ VS ஜீரோ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8b2VJCrdTlj6Ch-kjjAFn8KcWaEfX3-kE7cuE5MYispYxoisWTXfaX4PMalPqPNLUvBSbisuDZO8E5uosWydjdmJb6ty78GzAPi9pd51pFYRJ7D9WiFFmcCv83Uxq6-PrU8YhxU2n9-3z/s320/vijayakanth_god.jpg 

1. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: புதுக்கோட்டை மாவட்ட மக்கள், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இருந்தும் இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை, ஐந்தாண்டு கால கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. கந்தர்வக்கோட்டை அருகே, விவசாயிகளின் விளைநிலங்களை பாழாக்கி வரும் எரிசாராய தொழிற்சாலை மூடப்படும்.

என்னங்க இது? ஓப்பனிங்கலயே சொதப்பறீங்க?வந்ததுமே மூடு விழாவா?ஏதாவது பாஸிட்டிவ்வா சொல்லுங்க... நாங்க ஆட்சிக்கு வந்தா தீய சக்தி கருணாநிதியை உள்ளே உட்கார வைப்போம்னு.. அதானே உங்க வழக்கமான ஸ்டைலு..?


-----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தி, நகரில் உள்ள அரசு அலுவலகங்களின் சுவர்களில், 2,000 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஓஹோ.. ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தான் அப்படின்னு சூசகமா சொல்றீங்களா?அதெல்லாம் முடியாது.. விலைவாசி எல்லாம் ஏறிக்கிடக்கு.. அட்லீஸ்ட் ரூ 10,000 ஆவது வேணும்..,அதனால 10000 சுவரொட்டிகள் ஒட்ட சொல்லுங்க.. 


-------------------------------------------------
http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/anjali.jpg
3. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: இன்றைய சூழ்நிலையில் தனித்து போட்டியிட்டு எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. புதிய நீதிக்கட்சி இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது. எங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்த கட்சி அறிவிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.

ஏ சி சண்முகமா? ஓ சி சண்முகமா?ஏய்யா இப்படி ஈரோட்டு பேரை கெடுக்கறீங்க..?ஜாதிக்கட்சிகளை ஒழிக்கனும், ஜாதிக்கட்சித்தலைவர்களை ஓட ஓட விரட்டனும்.. அப்பத்தான்யா நாடு உருப்படும்..


--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ1rqaJe6TSlJdhg-Mma3-BEiU_Xa3zky8wgwz-wgg3vCilePeHrCs8T5AxA4z_ns9Ax0QUmCU31mJTgmFjq1npme0Aemf2oJmBr1PwLCCa16h_dSSeE_7AezX1qtclHWRTIJifoxxRk0/s400/DN_13-11-08_E1_01-04%2520CNI.jpg
4. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
என் நண்பர் விஜயகாந்த், போயஸ் கார்டனுக்கு செல்லும் போது, கேப்டனாக இருந்தார். வெளியே வரும் போது, சிப்பாயாக வந்தார். தேர்தல் முடிவுக்கு பின், சிப்பந்தியாக மாறி விடுவார். இந்த தேர்தலில், வைகோ நல்ல முடிவு எடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த முடிவு தான் விஜயகாந்துக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் கிடைக்கும்.


ஏய்யா என்ன ஒரு ஏத்தம்.. வை கோ எடுத்தது நல்ல முடிவா? அவருக்கு வேற வழி இல்லை.. அதனால அப்படி விட்டேத்தியா பதில் சொன்னாரு.. நீங்க வேணா பாருங்க.. கேப்டன் கூட காங்கிரஸ் கூட்டணி வைக்கும் காலம் வரும்..அதே போல் கேப்டன் சி எம் ஆகாம விட மாட்டார்.. ஏன்னா தமிழனோட தலை எழுத்தே சினிமாக்காரங்க பின்னால போய் வலியனா மகுடத்தை எடுத்து தர்றதுதான்....

----------------------------------------
5. பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு: வாக்காளர்கள் மனசாட்சிப்படி, ஓட்டளிக்க வேண்டும். ஓட்டு, விற்பனைக்கு அல்ல. தமிழகத்தை மோசமான நிலைக்கு தள்ளியது தி.மு.க., அரசு. இந்த அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது

 ஏய்யா.. என்ன அநியாயம்..? இந்த அரசியல்வாதிகள் மட்டும் மனசாட்சியை
அடகு வைப்பாங்களாம்.. ஊழல் பண்ணுவாங்களாம்.. நாங்க மட்டும் பணம் வாங்காம ஓட்டு போடனுமாம்.. எங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சீங்களா?

--------------------------------

6. பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி பேச்சு: காங்கிரசின் ஊழல் ஆட்சியால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஊழலில் காங்கிரஸ் புதிய சாதனை படைத்திருக்கிறது.

ஓஹோ .. இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. ? பி ஜே பிக்கும் ஒரு சான்ஸ் வேணுமா? ஊழல் பண்ண..?

--------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdUih_nGQbVWx8Bt1gB26l5rZfztIcHM34JWesn2mNRR87xtEr52zw6TGxMpy9TOpYY6FU-I9F4DzocjcDU6DBsby-UoPh8rtBB7x20yhuFx-TCPGkEaNt6JDO7B0s95vEGPY-d3t5TrY/s1600/thuglak_cartoon1.jpg
7. தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு:தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் கடுமையான விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அமல்படுத்தி வருகிறது. அதற்கு காரணம், முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள் தான்.

பொதுவா போலீஸை விட திருடன் தான் புத்திசாலியா இருப்பான்.. நீங்க என்ன தான் புதுசு புதுசா விதி முறை கொண்டு வந்தாலும் அதை எப்படி மீறலாம்னு தான் ஐடியா பண்ணுவாங்க..

-----------------------------------------------
  http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/Tamil-Actress-Anjali-Stills.jpg
8. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: பா.ம.க., ராமதாஸ் ஆறு மாதங்களுக்கு முன் தி.மு.க., ஆட்சிக்கு, "ஜீரோ' மார்க் போட்டார். இப்போது, அக்கட்சி தான், "ஹீரோ' என்று பேசுகிறார். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களுக்கு என்ன செய்வர்?

நீங்க கூடத்தான் 6 வாரங்களுக்கு முன்னாடி தி முக , அதி முக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படின்னீங்க..இப்போ அம்மா கூட கூட்டணி வைக்கலையா?நீங்க 2 பேரும் சேர்ந்து மட்டும் என்னத்த கிழிக்கப்போறீங்க?

----------------------------------
9. தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா பேட்டி: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, கடந்த 25ம் தேதி வரை, 45 ஆயிரத்து 984 புகார்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. ஆனால், தேர்தல் கமிஷன், 49 ஆயிரம் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்களை மட்டுமல்லாமல், தேர்தல் கமிஷனே முன் வந்து பல புகார்களை பதிவு செய்து நேர்மையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


வந்த புகாரே 50,000னா வராத புகாரும், வர முடியாத அளவு தடுக்கப்பட்ட புகாரும் எவ்வளவு இருக்கும்.?பேசாம தமிழ்நாட்டை பூம்புகார் மாதிரி புகார் நாடு என மாற்றிடலாம்....

Friday, March 25, 2011

நடமாடும் வாக்குச்சாவடி... இந்த கைல துட்டு.. அந்த கைல ஓட்டு......

Hilarious political cartoon images

1. நடிகர் வடிவேலு: தி.மு.க.,வில் உறுப்பினராக நான் இல்லை. ஆனால், மக்களில் ஒருவராக, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை பிரசாரத்தின்போது எடுத்துச் சொல்வேன். திருவாரூரில், கருணாநிதி தலைமையில் நடைபெறும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் என் பிரசாரத்தை துவக்க உள்ளேன்.


அதெல்லாம் சரிதான்.. இங்கே ஒரு மானஸ்தன் அடுத்த தேர்தல்ல கேப்டன் எங்கே போட்டி இடுவாரோ அங்கே  சுயேச்சையா நின்னே அவரை மண்ணை கவ்வ வைப்பேன்னு பேசுனாரே... அவரைப்பார்த்தா சொல்லுங்க.... 


--------------------------------------------------



2. தேசிய பேரிடர் நிர்வாக ஆணைய அதிகாரிகள்: இந்தியாவில், 38 நகரங்கள், நிலநடுக்கம் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் கட்டப்படும் கட்டடங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. ஜப்பானுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.

அப்படி பூகம்பம் வந்தாவது திராவிடக்கட்சித்தலைவர்களை காவு வாங்கிட்டா நாளை வரும் புதிய சந்ததியினராவது ஆரோக்ய அரசியலை எதிர் கொள்றாங்களா? பார்ப்போம்..

-----------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5Hyc_n1ggzMnWfYeuQW_5nsDrporis1TJcV2EpF0-677UOtqLUHHfyQPHsydKs_Q1BeGeb7pbaz9MFd7yNogC5zOibFhS2b6tzKCkScCrKUMAYE8ZQQNiaMb1xSn4WISURgnz5G1LOyI/s400/DN_12-02-09_E1_04-03%2520CNI2.jpg

3. பத்திரிகைச் செய்தி: நாகை அடுத்த வேளாங்கண்ணி, தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் கிலி என்ற தம்பியப்பன் (40). பா.ம.க., நாகை ஒன்றிய (கிழக்கு) செயலர். இவரது வீட்டில், பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனையில், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பார்த்தீங்களா? பா  ம க கட்சிக்காரங்களுக்கு நாட்டுப்பற்றே இல்லைன்னு யாரும் இனி சொல்லிட முடியாது..நாட்டுத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு... அப்படின்னு சுதேசி அயிட்டங்களா போட்டுத்தாக்கறாங்களே....

------------------------------------------

4. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி: மைசூரில் இருந்து வந்த ஜெயலலிதா, ஸ்ரீரங்கத்தில் நிற்கிறார்; அவருக்கு எதிராக மண்ணின் மைந்தனை நிறுத்தி உள்ளேன். சசிகலாவின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., வந்துவிட்டது. ஜெயலலிதாவை, சசிகலா ஆட்டிப்படைக்கிறார்.

வீட்டுலதான் பொம்பள ராஜ்யம்னா நாட்டுலயும் ..........
-----------------------------------
http://i51.tinypic.com/nmk9r4.jpg
5. ம.தி.மு.க., பொதுச் செயலர்வைகோ பேட்டி:தமிழகத்தில் இனி தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக ம.தி.மு.க., அமையும். இந்த முறை, ம.தி.மு.க., தேர்தலில் போட்டியிடாமல், வெளியில் இருந்து கவனிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்தபடி, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

முடிவில் மாற்றம் இல்லை.. ஆனால் மனதில் ஏமாற்றம் உண்டு.. சரி விடுங்க.. அடுத்த எலக்‌ஷன்ல 15 சீட் யாராவது தந்துடுவாங்க... 

-----------------------------------------

6. தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: டாஸ்மாக் மூலம், பனை, தென்னையில் இருந்து இறக்கப்படும் கள் விற்க நடவடிக்கை எடுப்பது குறித்து, அ.தி.மு.க., தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவை எதிர்த்தும் பொது வேட்பாளரை களமிறக்குவோம்.

ஆமா.. அப்படியே இறக்கீட்டாலும்... அவருக்கு ஒரு குவாட்டர் வாங்கிக்குடுத்து பொது வேட்பாளரை மது வேட்பாளர் ஆக்கிட மாட்டாங்களா? எங்க கொட நாடு கோமளவல்லி..?
------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvwq9texoyipfA0xlJeYiHAPn8-9mzwOg8I2BrXaM0J8o-vEtRYkZbHLo-z1lsZB21JtYkqdfWfuAcogv2SF0UVWyx4ixkdxyCFX63Mm_AfbpZ1KmPitKsybrrnCnEk2b5k5k9-RyKqcU/s400/4.bmp
7. சிவசேன தலைவர் பால் தாக்கரே பேட்டி: இந்தியாவை சீரழிக்கும் இரண்டு விஷயங்கள், ஒன்று தேர்தல், மற்றொன்று ஜனநாயகம். ஊழலுக்கு அடித்தளமே தேர்தல் நடைமுறைகள் தான். எனவே, இவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டியது மிக அவசியம்.

ஆமாங்க... நடமாடும் வாக்குச்சாவடி வரனும்.. இந்த கைல காசு வாங்கிட்டு அந்த கைல ஓட்டு போடனும்.. ஒரு பய ஏமாத்த முடியாது 100 % ஓட்டு பதிவாகும்..

--------------------------------

8. இந்திய தேசிய லீக் மாநில தலைமை நிலைய செயலர் நாகூர் ராஜா பேட்டி:
அ.தி.மு.க., கூட்டணியில், 10 ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இரண்டு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டோம். ஒரு சீட்டாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், எங்களை அழைத்து பேசவில்லை. ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். அ.தி.மு.க.,வுக்கு எதிராக, 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம்.

அட போங்கப்பா.. ஆனானப்பட்ட வைகோவே அவமானப்பட்டு நிக்கறாரு.. வந்துட்டாங்க பெருசா.. இது டபுள் மீனிங்க் வேற.....

---------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYeJdbyCaihqNYxbf9O2Almbf4f-dljtyjKfqVjr1moTvzYpb3X52S8Btahsypfy4wHSkzectnzO4Gh_1ievPPztUPiN3X1vIq1_2uwNkjjRgEayc1ZePM3It3Ojg1n-UwcTFsQKrAiULO/s1600/tamilmakkakural_blogspot_man.jpg
9. சமத்துவ மக்கள் கட்சிநிறுவனர் சரத்குமார் பேட்டி: நாங்கள் கொள்கை அடிப்படையில் தான் அ.தி.மு.க.,வில் இணைந்திருக்கிறோம். ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து, தமிழகத்தை ஜெயலலிதா மீட்டெடுப்பார் என நம்புகிறோம்.

அது சரி.. உங்க கட்சிக்கு 3 சீட் குடுப்பவருடன் மட்டுமே கூட்டணி என்பது தானே உங்க கொள்கை? இதே எலக்‌ஷன்ல கலைஞர் 4 சீட் கொடுத்திருந்தா அவர் கால்ல விழுந்திருப்பீங்க.. பெரிய யோக்கியவான் மாதிரி நடிக்கறாங்கப்பா...


டிஸ்கி - இன்று 4 படங்கள் ரிலீஸ் ஆகுது. குள்ளநரிக்கூட்டம், சட்டப்படி குற்றம்,சாந்தி அப்புறம் நித்யா,அல்லி ராஜ்யம்... பார்ப்போம் எது முதல்ல மாட்டுதுன்னு.....

Wednesday, March 23, 2011

வீட்டுக்காவலில் வைக்கபட்ட ஜெயலலிதா.... அதிமுக அதிர்ச்சி


http://makkalavaitherdhal2009.files.wordpress.com/2009/03/subramaniam-swamy.jpg?w=257&h=300 

இன்றைக்கு வெளியான ஜூனியர் விகடனில் வந்த அம்மா பற்றிய நியூஸ் பதட்டத்தை கிளப்பியது.அ தி மு க மத்தியிலும் சரி சாதாரண அரசியல் ஆர்வலர்களும் சரி , இந்த செய்தியை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்தனர்...


 ஏனெனில் வெளியான இதழ் நம்பகத்தன்மை மிக்க விகடன் குரூப் நியூஸ்.. ஆனால் சொன்ன ஆள் அரசியல் காமெடியன் சு சுவாமி....அவரது பேட்டியும் எனது கமெண்ட்டும்.......


1. ''அ.தி.மு.க. வேட்பாளர் லிஸ்ட் முதலில் வெளியிட்டது எனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்லியதில் இருந்தே, கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்கிற பரிதாப நிலைமையைப் புரிந்துகொள்ளலாம்! இரண்டாவது லிஸ்ட் இப்போது வெளி வந்து இருக்கிறது. இதாவது அவருக்குத் தெரியுமா, என்பது போகப் போகத்தான் நமக்குத் தெரியும்.

இதென்னங்க பெரிய பிரமாதம், ஏப்ரல் 14 க்குப்பிறகு கேப்டனே யார்னு தெரியாதுன்னு சொல்லப்போறாங்க..அவர் வந்து என்னை சந்தித்ததே எனக்கு நினைவில் இல்லைன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் விடப்போறரா ?இல்லையா?ன்னு பாருங்க...
 http://thatstamil.oneindia.in/img/2008/12/sasikala-jayalalitha-250.jpg

2. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஜெயலலிதா பக்கம் வெற்றி என்கிற நிலை இருந்தது. இப்போது மாறி வருகிறது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட்டில் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது. 'மன்னார்குடி  கும்பல் பிடியில்... நவ துஷ்டக் கிரகங்களின் பிடியில்... ராகு கேது பிடியில் ஜெயலலிதா சிக்கிக்கொண்டு தவிக்கிறாரோ?' என்று சந்தேகப்படும் அளவுக்கு, அடுத்தடுத்த குழப்பங்களை செய்து வருகிறார்.

நவக்கிரகம்கறீங்க.. ஆனா எனக்கென்னவோ ஒரே ஒரு கிரகம் தான் அவரைப்பிடிச்சு ஆட்டுவிக்குதுன்னு நினைக்கறேன்..  அது சசிகலா ...அந்த கிரகம் இல்லைன்னா அம்மா செம ஃபார்ம்ல இருப்பாங்க.

3. மெஜாரிட்டியான ஸீட்டுகளைப் பிடித்து, காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணிவைக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் திட்டம். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான், முதலில் ராமதாஸைக் கூட்டணியைவிட்டு விரட்டினார். இப்போது வைகோவையும் அனுப்பிவிட்டார். விஜயகாந்த்தையும் அலைக்கழித்து விரட்டப் பார்த்தார். இப்படித் தப்பும் தவறுமாக ஜெயலலிதா அரசியலில் முடிவெடுப்பதாக வெளியில் பிரகடனப்படுத்தி, அவரது இமேஜை சீர் குலைக்கும்விதமாக செயல்படுகிறது அந்தக் கூட்டம்.

காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சா அம்மா இமேஜ் டேமேஜ்தான் ஆகும்.
ராம்தாஸ் புற்றுநோய் மாதிரி.. விரட்டுனதே நல்லது...கேப்டன் இப்போ அம்மா கூட இருக்கறது நல்லதுதான்..  

http://thatstamil.oneindia.in/images25/jaya-sasi-450.jpg

4. அ.தி.மு.க-வில் எந்தக் கட்சிகளை சேர்க்க வேண்டும்? யாரை கழட்டிவிட வேண்டும்? ஜெயலலிதா யாருடன் போனில் பேச வேண்டும்? யாரை நேரில் சந்திக்க வேண்டும்? இன்றைக்கு ஜெயலலிதா என்ன சேலை கட்ட வேண்டும்? என்பது உட்பட அனைத்து விஷயங்களையும் கன்ட்ரோல் பண்ணுவது சசிகலாதான்!'' 

 மகாபாரத்துக்கு ஒரு சகுனி, ராமாயனத்துக்கு ஒரு கூனி, போயஸ் தோட்டத்துக்கு ஒரு சசிகலா...


5. , ''சசிகலா சொல்வதைச் செய்யும் ரோபோ பொம்மைதான் ஜெயலலிதா. சுயமாக அவரால் எதையும் செய்ய முடியாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி இனி ஜெயலலிதா எங்கே பேசப்போகிறார்? பொறுப்பான எதிர்க்கட்சி என்கிற வகையில், முதலில் ஜெயலலிதா என்னுடன் ஆலோசனை செய்து இருக்கலாம். ஆனால், செய்தாரா? நானும்கூட, 'சசிகலா போயஸ் கார்டனில் இருக்கும் வரை பேசப் போவது இல்லை' என்று முடிவு எடுத்து இருக்கி​றேன். அதனால்தான், நானும் ஜெயலலிதாவுடன் தொடர்புகொள்ளவே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டது!'' 

 அம்மா ஒரு கண்ணாடி மாதிரி.. யார் வந்து மோதுனாலும் விரிசல் விழத்தான் செய்யும்...


6. ''வைகோ இருந்தால், தேர்தலுக்குப் பிறகு காங்கிர​ஸுடன் கூட்டணி சேர முடியாதே? அதனால்தான், கழட்டிவிட்டார். கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு, புதிய கூட்டணி ஏற்படப்போகிறது. எம்.எல்.ஏ-க்கள் மியூசிக்கல் சேர் விளையாட்டு, குதிரை பேரங்கள் நடக்கும். முடிவில், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... முதல்வர் பதவியில் அமர மாட்​டார்கள். அமரப்போவது யார் என்கிறீர்களா? காங்​கிரஸ்! அதற்காகத்தான் சசிகலா மறைமுகமாக அரசியல்​ரீதியாக காய் நகர்த்துகிறார்!''

இதென்ன புதுக்கதை?காங்கிரஸ்க்கு டெபாசிட்டே கிடைக்காம கேவலப்படப்போகுது....
 http://img.dinamalar.com/data/uploads/WR_316760.jpeg

'7. 'சொன்னால் நம்ப மாட்டீர்கள். தமிழக அரசியலில் என்ன நடக்கப்போகிறது என்பது முடிவானதே லண்டனில்! கடந்த சில நாட்களாக டெல்லியை சேர்ந்த முக்கிய அரசியல் வி.வி.ஐ.பி. ஒருவர் லண்டனுக்கு ஆஸ்துமா சிகிச்சைக்காகப் போனார். அங்கே புலிகள் ஆதரவாளர் ஒருவரை அவருக்கு ஏற்கெனவே தெரியும். அந்தத் தொடர்பு மூலம், சென்னையில் உள்ள அ.தி.மு.க. பிரமுகரை அணுகி, தேர்தலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் எதிர்கால அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டது. அதைத்தான் நான் சொல்கிறேன்!'' 

 பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றாரே...



8. ''ஜெயலலிதாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து டெல்லி அரசியலுக்கு அனுப்பிவிடுவார்கள். இங்கே சசிகலாவின் திரை மறைவு அரசியல் தொடரும். அதன் மூலம் வரும் பலாபலன்களை நிர்வகிப்பார். அவரது டம்மிகள் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். மிடாஸ் மதுபான உற்பத்தி கம்பெனியானது சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படுவது. அந்த நிறுவனத்துக்கு கடந்த ஐந்து வருட தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்தது என்று கேட்டால், மயக்கமே போட்டுவிடுவீர்கள். அந்த அளவுக்கு தி.மு.க-வுடன் தொழில் முறைத் தொடர்புகள் உண்டு. இவை எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா... தெரியாதா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், நடந்தது உண்மை. இதைப்போலவே, தேர்தலுக்குப் பிறகும் நான் சொன்னது நிச்சயமாக நடக்கும்!''


விட்டா சசிகலா ,கலைஞர் கூட்டு சதின்னு சொல்லிடுவீங்க போல....

Wednesday, March 09, 2011

புரட்சித்தலைவியின் அரசியல் வாழ்வை புரட்டிப்போட்ட கடிதம்,அதி மு க அதிர்ச்சி

http://www.envazhi.com/wp-content/uploads/2010/10/jaya-ajith-vijay.jpeg 
சில நாட்களுக்கு முன் தமிழருவி மணியன் அவர்கள் விகடனில் கலைஞருக்கு ஒரு கடிதம் போட்டு கலக்கினார். இப்போது அவரது அடுத்த தாக்குதல் புரட்சித்தலைவிக்கு...

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்! - தமிழருவி மணியன்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.


உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்!

தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.

 http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/jayalalitha.jpg
எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!


உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.


எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.
 http://new.vikatan.com/news/images/addd.jpg

காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள். 

1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள். நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.


யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை. வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். 

மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.


அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. 
 http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg?w=480&h=654
தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.


முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். 

நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது.

சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’ என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.

 http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpg
ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.


ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள்.

உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக 'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.

 http://img.dinamalar.com/data/uploads/WR_216592.jpeg
சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். 

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்? 

வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!


ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன? 

உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIyq4cteTn4NIN9nUInRVN-CD7_7D3sbiLBlOr08VVxJzRUtX1uKYnJoFiJ2HfPsWnQEdn7GkPFYzfLEIlw5VqVp63MwJL-ihuGu_d5cRs1PfGJ7McdEtAJqS0OXSeiiPPHDnXHzaoHcj6/s1600/Jayalilatha+cartoon.jpg

உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.
உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம்.

ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு.

'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?


அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்;

அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!


திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHX-8Y3fQjW5tABhp-1DdE5HgEXlG4_D7B0zz_MulsTOAwU1ADa5kduYK0MPU_JVTx0Q4fQGK2rE8PQjCcUuozMgioJvDARffzwnVYCIuZlqDXAHRREXcmXg37eVkh-NpRGX6X8OU_kEW3/s1600/tamilmakkalkural_blogspot_meenavar_prachani.jpg
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல் நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை. 'தத்துவஞானிகள் ஆளவேண்டும்.

அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர் வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள் இப்போதேனும் உணர்ந்தீர்களா?


போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம். 

உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!


சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டி நடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். 

அதற்கான சூழல் இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவை சந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். 

டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்க முடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும்.

சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரை ஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.


உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசுபிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!
இப்படிக்கு,
நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்,
தமிழருவி மணியன்