Showing posts with label CM. Show all posts
Showing posts with label CM. Show all posts

Wednesday, January 02, 2013

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் - ஜெ அதிரடி அறிவுப்புகள்

டில்லியில் மருத்துவ மாணவி மீதான பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என, நாடு முழுவதும் குரல் எழுந்து வருகிறது.



இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பாய வழி செய்யப்படும் என்பது உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



தலைநகர் டில்லியில், கடந்த மாதம், மருத்துவ மாணவி ஒருவர், பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். மருத்துவ சிகிச்சை பலனின்றி, மாணவி இறந்ததையடுத்து, பாலியல் வன்முறைக்கெதிராக, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன."இத்தகைய குற்றங்களை புரிவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தும், போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. 



இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் ஓங்கியுள்ளது. பல மாநில முதல்வர்களும், இக்கருத்தை ஆமோதித்து, ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீதான அரசு நடவடிக்கை குறித்த, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நடவடிக்கை


இதன்படி, பாலியல் வன்முறை வழக்குகள், கொடுங்குற்றங்களாக கருதப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் புலன் விசாரணை செய்வர்; டி.எஸ்.பி.,க்கள் நேரடியாக மேற்பார்வையில் ஈடுபடுவர். முடிந்தவரை, இவ்வழக்குகளை, பெண் இன்ஸ்பெக்டர்கள், இல்லாவிட்டால், பெண் எஸ்.ஐ.,க்கள் விசாரிப்பர்.மேலும், மாவட்ட எஸ்.பி., சரக டி.ஐ.ஜி.,க்கள், வழக்கு முடியும் வரை, ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது, நிலுவையில் இருக்கும் அனைத்து, பாலியல் வன்முறை வழக்குகளையும், மண்டல ஐ.ஜி.,க்கள் ஆய்வு செய்து, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,க்கு, 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவும், 



இவ்வழக்குகளை விரைவாக முடிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட திருத்தம்

இது போன்ற குற்றங்கள் மூலம், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வழி செய்யும் வகையில், குண்டர்தடுப்புச் சட்டத்தை திருத்தவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க, மாவட்டம் தோறும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படுவதுடன், அந்த கோர்ட்களில், அரசு பெண் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இது தவிர, 30 நாட்கள் காவல், ஜாமின், பிணையில் விடப்படுவதை தடை செய்தல், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வது, அதிகபட்சமாக, மரணதண்டனை அளிப்பது ஆகியவை குறித்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசை வலியுறுத்தப் போவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை, பாதிக்கப்பட்டவர்களை, கண்ணியத்துடன் நடத்துவது குறித்தும் போலீசாருக்கு பயிற்சியளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும், பெண்களுக்கு, மருத்துவ செலவிற்கான மொத்த செலவையும், அரசே ஏற்பதுடன், மறுவாழ்விற்கான உதவிகளும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் உதவி மையங்கள் செயல்படுவதைப் போல்,  



ஆங்காங்கே தனித்தனியாக இயங்கும் பெண்கள் உதவி தொலைபேசி சேவைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பொதுக்கட்டடங்கள் அனைத்திலும், கண்காணிப்பு கேமராக்கள், நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் வணிக மையங்கள்,பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில், பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நடமாட்டத்தை, "மப்டி' போலீசார் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஏற்கனவே தண்டனை, ஆண்மை நீக்கம் உள்ளிட்டவை குறித்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஒரு படி மேலே போய், "பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக, தமிழகம் மாற வேண்டும் என்பதற்காக, இத்தகைய குற்றங்களுக்கு, மரணதண்டனை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு தெடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கூறும்போது, ""ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்க நடவடிக்க எடுக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறேன். பாலியல் குற்றங்களை தடுக்க, ஆபாச சினிமாக்களுக்குமுற்றுப்புள்ளிவைக்க வேண்டும்,'' என்றார்.


 கேரளா செய்தி 


திருவனந்தபுரம்: கேரளாவில், பஸ்களில் பெண்கள் இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.கேரளாவில் ஓடும், அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், மொத்த இருக்கைகளில், 25 சதவீத இருக்கைகள், மகளிர், உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால், பல பஸ்களில், கூட்ட நெரிசல் நேரத்தில், பெண்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், ஆண்கள் பயணிக்கின்றனர். அவர்களை எழுந்திருக்கும்படி, பஸ் கண்டக்டர்களும் கேட்டுக் கொள்வதில்லை.



இதுகுறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், மோட்டார் வாகன சட்டம், 1988 பிரிவு, 111ல் திருத்தம் செய்ய, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பஸ்களிலும் பெண்கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்து பயணித்தால், அவர்களிடம், 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.இதுதொடர்பான, சட்ட திருத்த மசோதா, கேரள சட்டசபையில், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.



நன்றி - தினமலர்




Tuesday, December 25, 2012

டெல்லி சி எம் VS போலீஸ் டிபார்ட்மெண்ட் மோதல் , தலைநகரில் பர பரப்பு

டெல்லி சம்பவம்: முதல்வர் ஷீலா தீட்சித் - போலீஸ் இடையே மோதல்!
Posted Date : 16:03 (25/12/2012)Last updated : 16:06 (25/12/2012)
புதுடெல்லி: டெல்லியில் பலாத்காரத்திற்குள்ளான மாணவியிடம், மாஜிஸ்திரேட் வாக்கு மூலம் பெற்றது குறித்த விவகாரத்தில் முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும்,  காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் டெல்லி துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட் உஷா  சதுர்தேவி,அண்மையில் வாக்கு மூலம் பெற்றார்.

அதனை தாம் விடியோவில் பதிவு செய்தபோது, டெல்லி காவல்துறையை சேர்ந்த 3  அதிகாரிகள் அதனை தடுத்ததாகவும்,தாங்கள் தயாரித்து வைத்துள்ள கேள்வி-பதில்  அடங்கிய கேள்வித்தாளை கொடுத்து அதனை வாக்கு மூலமாக பெறுமாறு  வற்புறுத்தியதாகவும், அதனை ஏற்க தாம் மறுத்தபோது, போலீஸ் அதிகாரிகள் தம்மை  மிரட்டி தவறாக நடந்துகொண்ட்தாகவும் மாஜிஸ்திரேட் உஷா சதுர்தேவி புகார்  கூறியிருந்தார். 
இது மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்  இது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார்  ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


ஏற்கனவே மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் வெடித்தபோது,டெல்லி காவல்துறை  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இச்சம்பவத்திற்கு தாம்  பொறுப்பேற்க முடியாது என்று தீட்சித் கூறியிருந்தார்.


டெல்லி காவல்துறையை மற்ற மாநிலங்களில் உள்ளதுபோன்று,மாநில அரசு பொறுப்பின்  கீழ் ஒப்படைக்க வேண்டும் என்று ஷீலா தீட்சித் நீண்ட காலமாகவே மத்திய அரசை  வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் மாஜிஸ்திரேட்டை தடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சருக்கு ஷீலா  தீட்சித் எழுதிய கடிதத்தை ஊடகத்திற்கு கசியவிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள  டெல்லி காவல்துறை, இதுகுறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட  வேண்டும் என கோரியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த காவல்துறை செய்தி  தொடர்பாளர் ராஜன் பஹத், மாஜிஸ்திரேட்டை  போலீஸ் அதிகாரிகள்  மிரட்டவோ,தடுக்கவோ இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் காவல்துறைக்கும், முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும் இடையே  ஏற்பட்டுள்ள இந்த மோதல் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


thanx - vikatan

Thursday, December 20, 2012

குஜராத்தில் மோடி கலக்கினார் , தமிழ் நாட்டில் ஜெ கலங்க வைத்தார்

http://lalitkumar.in/blog/wp-content/uploads/2011/09/narendra_modi.jpgகுஜராத்தில் பா.ஜ. முன்னிலை; 3 வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறார் மோடி
Posted Date : 07:33 (20/12/2012)Last updated : 12:33 (20/12/2012)
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இமச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளதால், ஆளும் பா.ஜனதா  ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

குஜராத் முன்னணி நிலவரம் 


பா.ஜ. க  - 115 ( 5 வெற்றி + 110 முன்னிலை)

காங்கிரஸ்  - 62 ( 3 வெற்றி + 59 முன்னிலை )

மற்றவை - 6    ( 3  வெற்றி + 3 முன்னிலை )


குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை பெற்றுள்ளது.


இதன் மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.


மோடி வெற்றி 


மேலும் மணி நகர் தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடிகு 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


இமாச்சல் முன்னணி நிலவரம்:


காங்கிரஸ்   - 39  ( 13  வெற்றி +  26 முன்னிலை )

பா.ஜ.க.  - 24      (  7 வெற்றி + 17 முன்னிலை )

மற்றவை -  6   ( 1 வெற்றி + 5 முன்னிலை )




இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அக்க்ட்சி ஆட்சியை பிடிக்கிறது.  ஆளும் பா.ஜ. க பின்னடைவை சந்தித்துள்ளது.


முடிவு குறித்து பேசிய முதல்வர் பி.கே. துமல், மக்களின் முடிவை வரவேற்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அதை நாங்களும் வரவேற்கிறோம்' என்று தெரிவித்தார்.
சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில்,அக்கட்சி பா.ஜனதாவிடமிருந்து  ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிரேம்குமார் துமல் தலைமையில் பா.ஜனதா ஆட்சியின்  பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி சட்ட்சபை  தேர்தல் நடந்தது.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் சராசரியாக 74.6 சதவீத வாக்குகள் பதிவாகி  இருந்தது.இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில்  பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்ற போதிலும்,பின்னர் பா.ஜ.க.  வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை  பெற்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 35 தொகுதிகளில்  வெற்றி பெற வேண்டும்.பகல் 12  மணி அளவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி  அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலத்துடன் முன்னிலை பெற்றது.68 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 13 வெற்றி பெற்றும், 26 தொகுதிகளில்  முன்னிலை பெற்றும் காணப்பட்டது.இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி  அமைக்கிறது.

பா.ஜனதா 7 இடங்களில் வெற்றி பெற்றும், 17 இடங்களில் முன்னிலை பெற்றும்,  மற்ற கட்சிகள் 1 இடத்தில் வெற்றி பெற்றும், 5 இடங்களில் முன்னிலை பெற்றும்  காணப்பட்டன.


திடீர் சாலை மறியலுக்கு தடை; குண்டர் சட்டத்திலும் திருத்தம்! 
Posted Date : 07:42 (20/12/2012)Last updated : 07:42 (20/12/2012)
சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்றும், 30 நாளுக்கு முன்பே அனுமதி பெறாமல் நடத்தப்படும் சாலை மறியல் தடை செய்யப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  

சென்னையில் 3 நாள் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை நேற்று முடித்து வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா,இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் பேசுகையில்,"குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.குற்றங்களைச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதேனும் ஒரு குற்றச் செயலை முதல் முறையாகச் செய்தாலே அவர்கள் குண்டர் சட்டத்ததின் கீழ் கைது செய்யப்படுவர்.

மேலும், சைபர் குற்றங்களைப் புரிவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.குண்டர் சட்டங்களுக்கான ஆவணங்களை தயாரிப்பதற்கென வழங்கப்படும் தொகையும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

சாலை மறியலுக்கு 30 நாளுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.அப்படி பெறாமல் நடத்தப்படும் மறியல் தடை செய்யப்படும்" என்றார்.


புதிய திட்டங்கள் 
மேலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் வெளியிட்டார்.

டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ரூ.20 கோடியில் 4 ஆயிரம் இடங்களில் நிலத்தடி நீர் செறிவு துளைகள் அமைக்கப்படும். மேலும், முத்துப்பேட்டை சூழலியல் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும்.

இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவோருக்கு அதன் பராமரிப்புகள் குறித்து இப்போது ஒரு நாள் மட்டுமே பயிற்சி  அளிக்கப்படுகிறது. இனி, மூன்று நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். கரூர் அரசு மருத்துவமனையானது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், ராமநாதபுரம் மாவட்டத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.

உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநல மருத்துவமனையும் ஏற்படுத்தப்படும்.

பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியாக நெடுஞ்சாலைகள் கோட்டம் உருவாக்கப்படும். கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவு பிரிவுகளை உள்ளடக்கிய பூங்காக்களை அமைப்பதற்கு கடன் மற்றும் மானிய உதவிகள் வழங்கப்படும். குளங்களை ஆழப்படுத்தும் பணிகள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு மீட்டர் வரை மேற்கொள்ளப்பட்டன.

அவற்றை மேலும் ஆழப்படுத்தும் பணிகள் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தருமபுரி மாவட்ட கிரிமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய இடங்களில் இருபாலர் கல்லூரிகள் தொடங்கப்படும். அங்கு சூரிய மின்சக்தி பூங்காவும், மிகப்பெரிய மின் உற்பத்தித் திட்டமும், மீன்களைப் பதப்படுத்தும் பூங்காக்களும் அமைக்கப்படும்.

தருமபுரிக்கு கூடுதல் கவனம்: இனக் கலவரங்களால் பாதிக்கப்படும் தருமபுரி மாவட்டத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் நக்சல் பாதிப்புகள் அதிகமுள்ள 32 கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ரூ.7 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் மாதமொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்: திட்டங்கள் செயல்படுத்துவதைக் கண்காணிக்க மாதத்துக்கு ஒருமுறையாவது மூத்த அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டம் இப்போது ஏறத்தாழ நடைபெறுவதே இல்லை என்ற நிலை உள்ளது. இதை மாற்றி ஒவ்வொரு மாதமும் துறைத் தலைவர்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் நடத்த வேண்டும்.

அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்ஃபரன்ஸ் வசதி

தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்பரன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும்.

விடியோ கான்பரன்ஸ் வசதியை புதிதாக 60 இடங்களில் ஏற்படுத்துவதோடு, ஏற்கெனவே 11 இடங்களில் உள்ள அமைப்புகளும் புதுப்பிக்கப்படும்.

புழல் சிறையில் ரூ.3 கோடியில் சூரிய மின்சக்தி அமைப்பு அமைக்கப்படும். அதேபோல், புழல், வேலூர், கடலூர், சேலம் ஆகிய மத்திய சிறைகளில் ரூ.25 லட்சத்தில் பைகளை சோதனையிடும் ஸ்கேனர்கள் பொருத்தப்படும் என்றார்.
நன்றி - விகடன் 


மக்கள் கருத்து 

1. உடன்பிறப்பே, ஒரு மதவாத கட்சி குஜராத்தில் ஐந்தாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதில் எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி .... திரு. மோடி என் நெடுங்கால நண்பர் ... அவர் தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்றது கேட்டு இதயம் இனிக்கிறது ... கண்கள் பனிக்கிறது .... இப்படி நடக்கபோவதை நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக செயற்குழு கூட்டத்திலேயே கணித்து கூறினேன் ... நேற்று இரவே நான் நண்பர் மோடியிடம் தொலைபேசியில் என் வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துவிட்டேன் .... அவரும் நன்றி தெரிவித்தார் ... எங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டோம் .... மோடியின் அப்பாவும் நானும் "காந்தியின் உப்பு சத்தியாக்ரகம்" தண்டியில் நடந்தபோது சந்தித்து அளவலாவியதை நினைவு கூர்ந்தார் .
.. வழியில் ஒரு உடுப்பி ஓட்டலில் 2 இட்லி 1 மசால் வடை நான் மோடியின் அப்பாவுக்கு கடனாக வாங்கி கொடுத்ததையும் அதை ஒரு இத்தாலிய வெள்ளை காகம் பறித்து சென்றதையும் அன்னாருக்கு நான் நினைவுபடுத்தினேன் ... இன்னும் சொல்லப்போனால் 2014 தேர்தலில் அவர் தான் பிஜேபியின் பிரதமர் வேட்ப்பாளராக நிற்க வேண்டும் என்ற என் அவாவை அவரிடம் தெரிவித்தேன் ..... அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் .... மேற்படி சம்பவங்கள் மோடி என் நீண்ட நாள் நண்பர் என்ற முறையில் நடைபெற்றனவே அன்றி நாம் ஒரு போதும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க அல்ல என்பதை தம்பிக்கு இக்கடிதம் மூலம் நான் தெரிவித்து கொள்கிறேன். -
எஸ். மணி - ஸ்ரீபெரும்புதூர் ,இந்தியா
2.  முதலில் கீழ் கண்ட புள்ளிவிவரங்களை காணுங்கள், பிறகு குஜராத்தில் மோடியின் வெற்றி எப்படிபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். (1) எல்லா அரசுக்கும் உரிய ANTI -INCUMBENT எதிர்ப்பு வாக்குகளை மீறி மூன்றாவது முறையாக மோடி வெற்றி கோடி நாட்டியது. தொடர்ந்து மூன்று முறையும் 1995 இல் இருந்து பிஜேபி ஆட்சிசெய்து வருவதும் சாதாரண விஷயம் இல்லை. ஜோதி பாசு தான் இதற்கு முன் தொடர்ந்து ஜெயித்து வந்தார். அதனை பாராட்டியே ஆகா வேண்டும் (2) இது நம்ம ரத்த காட்டேரிக்கு. தேர்தல் நிலவரங்களை கவனிக்கும் போது (குறிப்பாக TIMES NOW TV LIVE COVERAGE ) பெரு வாரியான முஸ்லிம்கள் மோடிக்கு (பிஜேபி) வாக்களித்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக குடியிருக்கும் இடங்களிலும் கோத்ரா கலவரம் நடந்த இடத்திலும் பிஜேபி வென்றுள்ளது. மேலும் காங்கிரசின் ஆதிவாசிகள் வாக்குகளை இந்த முறை மோடி சுரண்டிவிட்டார். 
இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால் முஸ்லிம்களும் ஆதிவாசிகளும் வளர்ச்சிக்கு வோட்டளித்து மதவெறி, சாதிவெறிக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்கள். (3) 2007 தேர்தலை விட இந்த தேர்தலில் பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் 1.5% அதிகம். காங்கிரசுக்கும் பிஜேபிகும் வித்யாசம் 13%. பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் மட்டும் 50% மேல். இது ஒரு மிக பெரிய வெற்றி. ஏனென்றால் கேசு பாய் படேலும் பிஜேபி யின் வாக்குகளை சற்று ருசித்தார். (4) காங்கிரஸ் தன்னுடைய புராதன ஸ்ட்ராங் ஹோல்டான மத்திய குஜராத்தை தற்போது பிஜேபி இடம் இழந்துள்ளது. 
ஆனந்த ரீஜனில் சங்கர் சிங் வகேலா போட்டி இடுவதால் சற்று அந்த ரீஜனில் தலை தூக்கியுள்ளது. (5) பிஜேபி தன்னுடைய ஸ்ட்ராங் ஹோல்டான நகரங்களை மீண்டும் தக்க வைத்துள்ளது. தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு குஜராத் வரையிலான எல்லா நகரங்களையும் அது தக்க வைத்துள்ளது. எண்ணிக்கையில் காங்கிரஸ் சற்று முன்னேறினாலும் உண்மையில் இது வெற்றி இல்லை. 
3.பல மாநில முதல்வர்கள் செய்ய முடியாத சாதனையை மோடி அவர்கள் செய்துள்ளார். மூன்றாவது முறை அவர் வெற்றி பெறுவது இந்தியாவில் முதல் முறை நடக்கும் நிகழ்வு அல்ல. ஆனால்,அவரது வெற்றியை குறைத்து மதிப்பிடும் முயற்சியை இப்போதே பல ஊடகங்கள் துவங்கி விட்டன. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு என்ற அளவில் வெற்றி பெறுகிறார். 
ஆனாலும், அவர் தோல்வி அடைந்தது போலவே இப்போது பேசக் கிளம்பி விட்டனர். மத்திய அரசு தனக்குத் தேவையான குறைந்த பட்சப் பெரும்பான்மை இல்லாமல், சில பல கட்சிகளை வெளிநடப்பு செய்ய வைத்து, மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள். அப்படிப்பட்ட மத்திய அரசின் அல்லக்கை ஊடகங்கள் பா.ஜ.க.வின் வெற்றியை தோல்வியாக சித்தரிக்க முயல்வது கண்டிக்கத் தக்கது. வெற்றி எப்போதும் வெற்றிதான். அதில் மோடிக்கு மட்டும் தனி அளவுகோலா? ஹிமாச்சலில் பா.ஜ.க. தோல்வி வருத்தம் அளிக்கிறது. அங்கு, முதல்வராக வர இருப்பவர் மீது பல ஊழல் புகார்கள். நிலக்கரி ஊழலில் அவர் பெயர் அடிபடுகிறது. ஆகவே, முதல்வராக வர தகுதியானவர். 
4. இது Brand அம்பாசிடர் " மோடி " என்ற பெயருக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி... இங்கே மோடி தான் வெற்றி பெற வேண்டும்.. அதுதான் நடந்திருக்கிறது.. நன்றி... ஆனால் பிஜேபி க்கு எந்தவித லாபமும் தனிப்பட்ட முறையில் இல்லை ( மோடியின் லாபம் BJP இன் லாபம் குஜராத்தில் மட்டுமே ), BJP யின் செல்வாக்கு எந்த விதத்திலும் உயரவில்லை என்பதும் ஹிமாச்சல் முடிவுகளில் இருந்து தெரிகிறது, காங்கிரஸ் ஜெயிப்பது நல்லதில்லை என்பது எனது எண்ணம். அதே சமயத்தில்... 
பிரதமர் வேட்பாளராக மோடியை " Project " செய்தால் ஓரளவுக்கு பயன்தரலாம்... ஆனால் பெருமளவு பயன்தருமா என்று தெரியவில்லை.. எனினும்.. இப்போதே.. இந்த வெற்றியின் சூடோடு சூடாக.. இவரை அறிவித்தால் ஓரளவுக்கு... வாக்குகளை கவரமுடியும்..காங்கின் இலவச மாய வலையிலிருந்து ஓரளவுக்காவது மீட்க முடியும். இல்லை என்றால் பழைய குடுடி கதவை திறடி என்ற கதையாக.. மாநில கட்சிகளின் கலவையாக.. காங்கிரஸ் கட்சியே மீண்டும் அரியணை ஏறும்.. தம்பி ராகுல் தலைமையில்... அன்னை சோனியாவின் ஆசியோடும். அன்னம் ப சி இன் ஆலோசனையோடும்... ஆட்சியில் அமர்ந்து.. நாடு உருப்படாமல் போகும். 
5. இந்த இரு மாநிலங்களின் தேர்தல் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகிறது, மக்கள் 2ஜி ஊழலை திமுகவின் ஊழலாக பார்க்கிறார்கள். அதனால் தான் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் தோல்வியும் ஹிமாசப் பிரதேச மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகளும் அதிக சீட்டும் கொடுத்துள்ளனர். இத்தனை ஊழலுக்கு மத்தியிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு கூடுகிறது என்றால் அது ஆச்சரியமான விசயமே வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த நிலை தொடரும் என்றே நினைக்கிறேன்..
. தமிழகத்தை பொருத்த வரையில் திமுக காங்கிரஸ் தேமுதிக கூட்டனி மிக வலுவான கூட்டனி. அதிமுக கூட்டனி இல்லாமல் தனித்து நின்றால் நிச்சயம் தோல்வி வரும். அதனால் அதிமுக பிஜேபியோடு கூட்டனி வைத்து தேர்தலில் நின்றால் அது வலுவான கூட்டனியாக இருக்கும். பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் தமிழக மக்கள் தேசிய கட்சிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், மாநில கட்சிகளுக்கு அல்ல. தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி எனக்கு பிடித்துள்ளது, சென்ற ஆட்சியை விட நிச்சயம் அம்மாவின் ஆட்சி நன்றாகவே உள்ளது.... 
இரண்டு விசயம் தான் உறுத்தலாக உள்ளது. விடுதலை புலி ஆதரவாளர்களின் செயல்பாடுகளை தடுக்காமல் இருப்பது மற்றும் கூடங்குளம் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது. திரு. நரேந்திர மோடி அவர்களின் சிறந்த ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது, என் மனமார்ந்த வாழ்த்துகள்... 
6. குஜராத் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் அந்த மாநிலத்தேர்தலை காங்கிரஸ் பிஜேபி கட்சிகளுக்கிடையேயான தேர்தலாகவோ அல்லது குஜராத் மக்களுக்கு நன்மை அதிகமாக யார் செய்வது என்றோ அணுகவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் அதிகம் மோடி என்ற தனி மனிதரைத்தூற்ற முடியும் என்று பட்டி மன்றம் தான் நடத்தியது. இதற்கு ராகுல் காந்தி சிறப்பு தலைவராக சொக்கவைக்கும் சோனியாவால் நிர்ணயிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளின்படி பிஜேபிக்கு வெற்றியா அல்லது திரு. நரேந்திர மோடிக்கு வெற்றியா என்பதைவிட சோனியா மற்றும் ராகுல் கம்பெனிக்கு வெட்கக்கேடான தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 
 தேர்தல் நேரத்தில் மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு அறிவிப்பு, (ஓட்டுக்காக) பணம் நேரடியாக வங்கியில் டெபாசிட் ஆகியவை எதுவும் எடுபடவில்லை. யாருய்யா அங்கே, நான் தினமலரு அன்வர் பாய் கூட போன்ல பேசிகிட்டு இருக்கும்போது குறுக்கால, நரேந்திர மோடி எனது ஐம்பதாண்டு கால நண்பர் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமே இல்லை, என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வாருதுன்னு கோபாலபுரத்துலேந்து பேசறது.? 
நன்றி - விகடன் , தினமலர்


Gujarat voted for development and Narendra Modi's leadership: Nitin Gadkari



New DelhiBJP president Nitin Gadkari today thanked the people of Gujarat for voting the party back to power.

He said it was a vote for "development and Mr Modi's leadership."

"The Congress tried to play the communal card but failed. Gujarat will continue to flourish under the leadership of Narendra Modi. I thank the people who have voted for BJP again. I also congratulate the party workers," the BJP president said

"People have voted for the BJP for the fifth time and Narendra bhai's leadership for a 3rd time," he added.

Narendra Modi will be Chief Minister of Gujarat for a third straight term. Projections based on leads at 01.30 pm show Mr Modi likely to end the day at 123 seats, six  more than last time and enough to make his party state that his "vibrant Gujarat" plank worked despite the Congress' best effort to discredit him.
 
 
THANX - NDTV

Monday, December 17, 2012

டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் வில்லித்தனமான பேச்சு

புதுடில்லி:""ஐந்து உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும்; அவர்களின், அரிசி, பருப்பு போன்ற, உணவு தேவைகள் நிறைவேறி விடும்,'' என, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியுள்ளார். இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சோனியா தலைமை:
டில்லியில், நேற்று முன்தினம், "அன்னஸ்ரீ யோஜனா' என்ற, உணவு பாதுகாப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த அந்த விழாவில், டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியதாவது:அன்னஸ்ரீ யோஜனா, அருமையான திட்டம். இதில், மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான மானியம், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். "ஆதார்' அடையாள அட்டை மூலம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில், 600 ரூபாய் நேரடியாக சென்று சேர்ந்து விடும்.இந்தப் பணத்தை கொண்டு, மிக அழகாக குடும்பம் நடத்த முடியும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, இந்த தொகை போதுமானது. "ஆதார்' அடையாள அட்டை வைத்துள்ள, குடும்ப உறுப்பினர்களில், மிக மூத்த வயதுடையவரின் கணக்கில், இந்தத் தொகை வரவு வைக்கப்படும்.இவ்வாறு, ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.

இதற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 



அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, ""நூறு ஆண்டுகளுக்கு முன் வேண்டுமானால், இந்த தொகை போதுமானதாக இருக்கலாம். இப்போது, நிச்சயம் போதாது. இது போன்று பேசுவதன் மூலம், ஏழை மக்களை, காங்., அவமரியாதை செய்கிறது,'' என்றார்.

26 ரூபாய்போதும்:
"பணக்காரர்கள் நிறைந்த காங்., கட்சியில், ஏழைகளுக்கு இடமில்லை' என, பொதுவாக கூறப்படுவது உண்டு. காங்., தலைமையிலான, மத்திய அரசின், திட்டக் கமிஷனின், துணை தலைவராக இருக்கும், மாண்டேக் சிங் அலுவாலியா, "தனிநபர் உயிர் வாழ, நாள் ஒன்றுக்கு, நகரங்களில், 32 ரூபாயும், கிராமங் களில், 26 ரூபாயும் போதும்' என, தெரிவித்திருந்தார்.அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது; காங்., பொது செயலர், ராகுல் கூட, மாண்டேக் சிங்குக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித்தும், ஏழை மக்களின் துயரம் பற்றி தெரியாமல், குடும்பத்தை நடத்த, 600 ரூபாய் இருந்தால் போதும் என, தெரிவித்துள்ளது, "ஏழைகள் மீது அந்த கட்சிக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது' என்கிறார், டில்லி அரசியல் பார்வையாளர் ஒருவர்.

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும் என, திருவாய் மலர்ந்துள்ள ஷீலா தீட்ஷித், மாத சம்பளமாக, ஒரு லட்சம் வரை பெறுகிறார். அவரின் மகனும், கிழக்கு டில்லி தொகுதி, காங்., எம்.பி.,யு மான, சந்தீப் தீட்ஷித், அதே அளவுக்கு பெறுகிறார்.

செழிப்பான குடும்பம்:பஞ்சாபின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஷீலாவின், மறைந்த கணவர், உமாசங்கர் தீட்ஷித், உத்தர பிரதேசத்தின், செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர்.ஷீலா, சிறு வயது முதல், மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும் இருந்தவர் என்பதால், அவருக்கு சாமானிய மக்களின் துயரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என, எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


thanx - dinamalar




மக்கள் கருத்து 



1. இங்கே கருத்து சொல்லி இருக்கும் திரு ரமேஷ் மற்றும் சாடிக் அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த அரசாங்கம் என்ன மானியமாக மாதம் 6000 ரூபாயா குடுக்குது. அத வச்சுக்கிட்டு மக்கள் உழைக்காம சோம்பேறி ஆக போறாங்க, 600 ஓவாய வச்சிக்கிட்டு இன்னைக்கு ஒரு தனி மனிதனால கூட வாழ முடியாதுன்னு சாமானியனுக்கும் தெரியும். மானியம் என்பது என்ன? கஷ்ட படுரவங்களுக்கு அவங்க கஷ்டத்த குறைக்க குறைஞ்ச விலைல பொருள குடுக்குறதுதான் மானியம். அதும் கிட்டத்தட்ட 70 கோடிக்கும் மேல வாழற நம்ம இந்தியால இது தேவை, ஏழை மக்களை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம மானியத்த ஒழிக்கணும்னு சொல்றிங்களே நீங்க எல்லாம் மனசார முடியாதவங்களுக்கு ஒரு உதவி கூட செய்ய மாட்டிங்கனு நல்ல தெரியுது 






2. பிஜேபியோடு சேர்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதே பிழைப்பாகி விட்டது சிலருக்கு. ஷீலா என்ன தவறாக சொல்லி விட்டார், ஆதார் அட்டை மூலம் மாதம் அறுநூறு கிடைத்தால் ஒரு குடும்பத்துக்கு போதுமானது என்றால், படுத்துக் கொண்டு சாப்பிடுவதற்காக சொல்லவில்லை. மறைமுக மானியமாக கிடைத்து கொண்டிருக்கும் இப்பணத்துடன் குடும்ப வருமானமும் சேர்ந்தால் சுலபமாக குடும்பம் நடத்த முடியும் என்பதே அவர் பேச்சின் சாராம்சம். நம்மை பொறுத்த வரை இந்த மான்யங்களையே நிறுத்தி விட்டு விலைவாசியை குறைப்பதற்கும் வேலையில்லா திண்டாத்தை போக்குவதற்கும் பயன் படுத்தினால் நல்லது என்பதே சரியானதாக இருக்கும். 




3. Sekar
 Sekaran ஐய்யய்யோ...இந்த தொகை மிக மிக அதிகம்..அறுநூறு ரூபாயா..அடேங்கப்பா..இவ்ளோ தொகை வைத்துகொண்டு மக்கள் என்ன செய்வார்கள்? சுவிஸ் வங்கியில் கணக்கை ஆரம்பித்துவிடுவார்கள். சொன்னால் கேளுங்கள்..தயவு செய்து இவ்ளோ தொகையை கொடுக்காதீர்கள்..சேர்த்து வைக்க வங்கி இருக்காது..எல்லா செலவும் போக மீதி கூட ஐநூற்றி தொண்ணூறு ரூபாய் மீதமிருக்கும். அப்படியே உடனே சுவிஸ் வங்கிக்கு அனுப்பிவிட வேண்டியதுதான். ஷீலா அவர்கள் என்செய்வார்கள்..? அவர்கள் வாழுகின்ற விதம் அப்படி..ஏழைகள் என்றால் என்ன என்று கேட்பார்கள்..அல்லது வயிற்றில் ஈரத்துணியை போட்டு கொண்டு வாழ்ந்தால்..இதே அதிகம்தான். கோபுரங்களில் வாழ்பவர்கள்..குடிசைகள் பற்றி தெரிய நியாயமில்லை..ஒரு லட்சத்தை தினசரி வாடகையாக கொடுத்து வாழும் வசதி படைத்த மத்திய அமைச்சர்கள் உள்ள நாடு அல்லவா இது..இன்னமும் பேசுவார்கள்..இது போதும் பிரச்சாரத்திற்கு..காங்கிரஸ் காணாமல் போக இது போதும்.. 





4. இலக்கு எட்ட முடியாத அளவுக்கு உயரத்தில் வைத்துக்கொண்டால்தான் நமக்கு முயற்சி என்பது இருக்கும். அரசியல்வாதிகள் இப்படி கீழ்த்தரமான இலக்குகள் வைத்துக்கொள்வதால்தான் நாடு முன்னுக்கே வராமல் இருக்கிறது. அறுநூறு ரூபாயில் ஒருவர் மட்டுமே வாழ்க்கை நடத்துவது கடினம். மனிதனின் அடிப்படை தேவைகள் என்பது உணவு, உடை இருப்பிடம் என்ற மூன்றும்தான். அதில் உணவுக்கு மட்டுமே ரூபாய் ஆறுநூறு போதாது. ஆறு நூறு ரூபாய்க்கு நாளுக்கு மூன்று வேளை சாப்பாடு (ரொட்டி) யார் கொடுக்கிறார்கள்? ஒரு ஆளின் தினக்கூலியே முன்னூறு ரூபாய்க்கும் அதிகம். மாதம் இரண்டு நாள் வேலை செய்துவிட்டு மற்ற நாட்கள் எல்லாம் சோம்பேறிகளாக இருந்தால் போதுமா? டெல்லி முதலமைச்சர் என்ன சொல்லவருகிறார்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மாறினால்தான் நாடு முன்னுக்கு வரும். ஒரு ஆளின் மாத வருவாய் மூன்று ஆயிரம் என்ற இலக்கு இருக்கவேண்டும் என்பது என் கருத்து. அப்போதுதான் அரசியல்வாதிகளும் வேலை செய்வார்கள். மக்களும் உழைப்பார்கள். மக்களுக்கு இந்த அளவு வருவாய் வரவில்லை என்றால், அப்படிப்பட்டவர்களுக்கு அரசே ஊதியம் தரவேண்டும் அல்லது எதாவது ஒரு நிரந்தரமற்ற வேலையாவது தந்து ஊதியத்திற்கு வழி செய்யவேண்டும். இதை செய்யாதவரை நாடு முன்னேறியதாக சொல்லிக்கொள்வதில் அர்த்தமே இல்லை. ..





5. 1965 லே நானும் என் கணவரும் 400ரூவா சம்பளத்துலே குடுமபம் நடத்த என்ன பாடு பட்டோம்னு தெரியுமா? அப்போ காய்கள் அவ்ளோமலிவு , பால் 35காசுதான் லிட்டர்க்கு. ஒரு லிட்டர் பால் வாங்கினா போரும் அரிசி நல்லரகம் 38காசு மலிவுரகம் 26காசு , 1கிலொ பருப்பும் 20காசு 30காசுதான் பிறகு கொஞ்சம்கொஞ்சமா ஏறி 2 /3 ரூவாயாச்சு. வீட்டுவாடகை 45ரூவா மின் பில் 14 டு 20 ரூவா ஆகும் பத்துகாசுக்கு முள்ளங்கிவாங்கினாலபூம்பிஞ்ச்ஜாக இருக்கும் ஒரு முள்ளங்கி வாங்கி கொஞ்சம் சாம்பர்லே போடு மீதிய பொரியலும் செஞ்சுருவேன் பொரியலும் செஞ்சுருவேன் இதே டெல்லிலே தான் இருந்தேன் என் கணவர் 1000/ ரூவா சம்பளம் வாங்கும் போது 1980ம் ஆண்டு வரை வீட்லே டிவி வாங்கலேஒரு ற்றான்சிச்ட்டர் தான் உண்டு . muunupillaikal படிச்சாகணும் அப்போ எல்லாம் பள்ளி சம்பலம்கூட கம்மிதான் தமிழ் பள்ளிலேதான் படிச்சாங்க 8ம் வகுப்புவரை பீஸ் 3ரூவாதான் டியூஷன் எல்லாம் போகலே தாமே தான் படிச்சாங்க டீசர்கலும் நல்ல கத்துகொடுத்தாங்க பிள்ளைகளும் சின்சியரா படிச்சாங்க , 9ம் வகுப்பிலேந்து 10ரூவாதான் பீஸ் .+1 +2 க்கு எடுக்கும் க்ரூப் பொருது 15 டு 20 ரூவாய்தான் , இப்போ வாரம் 10 000 / வாங்கினாலும் போராதுன்ர நிலை , ஏழைகளும் தம் பிள்ளைகள் நல்ல பெரிய பல்லிலே ஆங்கிலவழி லே படிக்கவைக்க ஆசைபடுராக, இப்போதும் பல பெத்தவங்க தாம் தான் கஷ்டம் படறோம் தம் பிள்ளைக நல்லா வாழனும்னு உளைக்கிராக அரசு சொல்லுது 2000/போரும்னு ஷீலா திக்ஷித்துக்கு வரும் சம்பளம் எவ்ளோ ஒரு சாமானியனுக்கு வரும் சம்பளம் எவ்ளோ , இந்தம்மா சூக்க ரொட்டியும் தாலும் தின்னுட்டு போகமுடியும் வயசாச்சு இன்று செத்தால் நாளை சங்கு , வளரும் பிள்ளைக நிலை என்ன என்று தெரிஞ்சுதான் பேசுராகளா , யாருகண்டது இதுகளெல்லாம் ஒருவேளைக்கே 200 ரூவா சிலவு செய்வாக ,

Thursday, September 01, 2011

ஜெவின் 100 நாள் ஆட்சி - பிளஸ்ஸும், மைனஸூம் விகடன் கட்டுரை

ஜெ. அரசு மார்க்! 48/100



நூறாவது நாளைக் கடந்த அ.தி.மு.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஐஸ் மழை பொழிந்தனர். அதில் திளைத்தெழுந்த ஜெயலலிதா, ''இந்தப் பாராட்டுகளைக் கேட்கிறபோது எனக்கு மகிழ்ச்சி என்பதைவிட, என்றுமே என் வாழ்க்கையில் தோன்றாத ஓர் அச்ச உணர்வு இப்போது தோன்றி உள்ளது. இந்தப் பாராட்டு தொடர்ந்து நீடிக்க வேண்டுமே என்ற அச்ச உணர்வுதான் அது!'' என்று சொன்னது, அவரது மனதில் ஏற்பட்டுள்ள மாறுதல் என்றால், வரவேற்போம். ''மாற்றத்தைக் கொண்டுவந்த தமிழக மக்களுக்கு ஏற்றத்தைத் தருகின்ற அரசு!'' என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முழுமையான காரியங்கள் 100 நாளில் முடிந்திருக்க முடியாதுதான். ஆனால், அதற்கான முன்னோட்டமாவது ஒழுங்காக இருக்கிறதா?

 அள்ளிக் கொடுத்த அம்மா!
'வருந்தாதே ஏழை மனமே
வருங்காலம் நல்ல காலம்
மனம்போல இன்பம் நேரும்
திருநாளும் வந்து சேரும்!’
- இது சட்டசபையில் நின்றபடி பொதுமக்களுக்காக ஜெயலலிதா பாடிய பாட்டு. அப்படிப்பட்ட ஏழை மக்களுக்கான இலவசத் திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளிவிட்டார். அவை அனைத்தையும் இந்த ஆண்டுக்கான கவர்னர் உரையில் சேர்த்துவிட்டது நம்பிக்கையான செய்தி. கருணாநிதி கொடுத்த ஒரு ரூபாய் அரிசிக்கான விலையில் அந்த ஒரு ரூபாயையும் கழித்தது மட்டும் அல்ல, 'அதற்கு விலை இல்லா அரிசி’ என்று புதுப் பெயர் சூட்டியது நல்ல விஷயம்.

இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், கறவை மாடுகள், ஆடுகள், மடிக் கணினிகள், தாலிக்கு 4 கிராம் தங்கம்... எனச் சொன்னது எல்லாவற்றையும் செப்டம்பர் 15-க்குள் காப்பாற்ற வேண்டும். பெண் ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்புக் கொடுத்ததற்குப் பெரும் வரவேற்பு. அரசு கேபிள் திட்டத்தைக் கொண்டுவந்து மாதம் 50 ரூபாய்க்குள் எல்லா சேனல்களையும் ஜெயலலிதா திறந்துவிட்டால், அவரை ஜெயிப்பதே இனி சிக்கல் ஆகிவிடும்!


சறுக்கிவிட்ட சமச்சீர்க் கல்வி!
ருணாநிதி, தனிப்பட்ட மனிதர்களைப் பகைத்துக்கொள்வார். ஜெயலலிதா, கூட்டம் கூட்டமாகப் பகைப்பார். முந்தைய ஆட்சியில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் என்றால், இந்த ஆட்சியில் கோடிக்கணக்கான மாணவ - மாணவிகள்! ஜூன் 4-ம் தேதி பள்ளிக்கூடம் போய் பாடங்களைப் படித்திருக்க வேண்டிய பிள்ளைகளை அப்படியே தடுத்து நிறுத்தி, ஆகஸ்ட் 12-ம் தேதி வரைக்கும் மூலையில் முடக்கிவைக்கும் காரியமாக, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை ரத்து செய்த வர், கடைசியில் 'தீர்ப்பு என்ன வந்தாலும் நான் ஏற்பேன்’ என்று இறங்கி வரும் நிலை. 'கருணாநிதி கொண்டுவந்ததை ஒழிக்கிறேன்’ என்ற ஒரே நோக்கம்தான் தெரிந்தது. போகட்டும்!

கல்வித் துறையில் பெரும் மாறுதலைச் செய்வதற்கான சில முயற்சிகளை ஜெயலலிதா தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பது முதல் உள்கட்டமைப்பு வசதிகள் வரை அவர் சொன்னது மாதிரி கவனம் செலுத்தினால், சமச்சீர்க் கல்விச் சறுக்கலைச் சரிசெய்யலாம்!

பதவிகள் பந்தாட்டம்!

'அதிகாரிகளையும் அமைச்சர்களையும் மாற்றுவது ஒரு முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை. மறுப்பதற்கு இல்லை. ஆனால், ஓர் அதிகாரிக்கோ, அமைச்சருக்கோ, குறிப்பிட்ட கால அவகாசம்கூடத் தரப்படாத நிலையில், அவரது தகுதியைத் தராசில்வைத்து நிறுத்து, தடாலடியாகத் தூக்கி எறிவது சரியா’ என்று ஒரு தரப்பும், 'தவறு செய்துவிட்டார் என்று தெரிந்தும் ஒருவரை அந்தத் துறையின் அமைச்சராக வைத்திருப்பது சரியா’ என்று இன்னொரு தரப்பும் விவாதிக்கும் நிலை நீடிக்கிறது.

கருணாநிதி காலத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரனை சிறைத் துறைக்குத் தூக்கி அடித்துவிட்டு, மறுநாளே அவரை உளவுத் துறை பொறுப்புக்கு நியமித்ததும்; மின் வாரியத் தலைவராக ஸ்வரண் சிங்கை உருட்டி உருட்டி விளையா டியதும், உள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அடுத்த வாரமே ஷீலா ராணி சுங்கத்தைத் தூக்கி 'பொம்மை’ பார்க்க அனுப்பிவைத்ததும்... அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இருந்த குழப்பத்தையே காட்டுகிறது. இசக்கி சுப்பையா தவறான மனிதர் என்று அமைச்சரான சில வாரங் களில்தான் தெரியும் என்றால், அமைச்சர் ஆக்கப்படுவதற்கு முன்பு சொக்கத் தங்கமாக இருந்தாரா? அல்லது அவ்வாறு முதல்வர் நம்பவைக்கப்பட்டாரா?


யாரோ பரிந்துரை செய்வதால் நம்புவதும், யாரோ குறை சொல்வதால் நிராகரிப்பதும் தொடர்வதால்தான் இந்தக் குழப்பங்கள்!

   ஈழத் தமிழனுக்குக் கண்ணீர்!

து கருணாநிதியைக் குப்புறத் தள்ளியதோ, அதைத் தனக்குச் சாதகமானதாக ஆக்கிக்கொண்டார் ஜெயலலிதா. தமிழக சட்டமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்னையை மையமாகவைத்து, ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் தமிழகத்தில் மட்டும் அல்ல... உலகத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களையும் மனம் குளிரவைத்தது. மத்திய காங்கிரஸ் அரசு அதிர்ச்சி அடைந்தது. பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர், முதல்வரைச் சந்திக்க ஓடி வந்தார்.

'போர்க் குற்றவாளி யாரோ... அவரைத் தண்டிக்க வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசாங்கம் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தைப் பார்த்து, இலங்கைத் தூதர் பதறினார். கொழும்பில் இருந்தபடி கோத்தபய ராஜபக்ஷே, ஜெயலலிதாவைச் சீண்டினார். அதற்கும் மறு நாளே சட்டமன்றத்தில் அறிக்கை படித்து அதிர்ச்சியைக் கிளப்பினார் ஜெ. 'இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டிக்க வேண்டும்’ என்பதும் அவரது கோரிக்கை. அதோடு, அமைதியாகிவிடாமல், தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு தலா 1,000 ரூபாயை உதவித்தொகையாக அறிவித்தது, அந்த மக்களது உள்ளத்தில் பால் வார்த்தது. மொத்தத்தில், ஈழத் தமிழர் பிரச்னையை உதாசீனப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்தவராக ஜெயலலிதா தன்னைக் காட்டிக்கொண்டார்.

அவரை அமைதியாக்க வேண்டும் என்பதற்காகத்தான், பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனையை காங்கிரஸ் அரசு விரைவுபடுத்தியதாக தமிழ் உணர்வாளர்கள் சந்தேகப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை!


கருணாநிதியை மறந்துவிடுங்கள்!

'பூனையைவிட புலி வலிமையானது என்பதை எலிகள் ஏற்றுக்கொள்வது இல்லை’ என்பார்கள். தனக்குத் தெரிந்தவன் தானே அதிக பலசாலி. அப்படித்தான் ஜெயலலிதாவை கருணாநிதி பிம்பம் ஆட்டிப் படைக்கிறது. கருணாநிதி செய்ததற்கு எல்லாம் எதிர்ப்பதமாகச் செய்வது என்பது ஒரு நல்ல தலைவருக்கு அழகு அல்ல.

சமச்சீர்க் கல்வியை அறிமுகப்படுத்தினாரா... அதை ரத்து செய். புதிய தலைமைச் செயலகம் கட்டினாரா... அதற்குள் நுழைய மாட்டேன். தமிழ்ப் புத்தாண்டு சித்திரை என்பதை தை மாதம் ஆக்கினாரா... பஞ்சாங்கப்படி அது தவறு என்பது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமா... நான் அதை வேறு மாதிரி ஆக்குகிறேன்.

கலைஞர் வீடு கட்டும் திட்டமா... அதன் விதிமு¬றையை மாற்றி வேறு வீடு கட்டும் திட்டம். செம்மொழி உயர் ஆய்வு நிறுவனமா... அது எதற்கு? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியா... இனி டி.வி. தர மாட்டேன். இப்படி ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்தால், 'வந்தது கருணாநிதியின் தீர்ப்புகளைத் திருத்துவதற்கு மட்டும்தானா?’ என்று பொதுமக்கள் நினைக்க மாட்டார்களா?


கருணாநிதி செய்ததில் பல்வேறு தவறுகள் உண்டு. அதில் கொள்ள வேண்டியதைக் கொண்டு... தள்ள வேண்டியதைத் தள்ளியவர் ஜெயலலிதா என்ற பெயரை வாங்க இனியாவது ஜெயலலிதா முயற்சிப்பாரா!


துணிச்சலான கைதுகள்!


போலீஸ், வருவாய்த் துறை, பத்திரப் பதிவு மூன்றையும் கையில்வைத்துக் கொண்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏராளமான நிலப் பறிப்புகள் நடந்ததாக அப்போதே தகவல்கள் பரவின. சிலர் மட்டுமே வெளியில் வந்து புகார்கள் சொன்னார்கள். மற்றவர்கள் வெளியில் வரப் பயந்தார்கள். பலம் பொருந்தியவர்கள் சம்பந்தப்பட்டு இருந்ததால்தான், அந்த பயம். ஆட்சி மாறியதும் அவர்கள் புகார்கள் கொடுக்கப் புறப்பட்டு வந்தார்கள். இதுவரை தமிழகம் முழுவதும் 8,947 புகார்கள் வந்துள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதில் 462 புகார்கள் மட்டுமே வழக்குகளாகப் பதிவாகி உள்ளன. 419 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். 415 கோடியே 48 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு, நிலத் தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுஉள்ளது. பறிகொடுத்த நிலத்தை மீண்டும் பெற்றுக்கொண்டதும் ஆனந்தக்கண்ணீர் விட்டுக் கொண்டாடியவர்கள் முகங் களைப் பார்த்தபோதுதான், அரங்கேற்றப் பட்ட மோசடியின் கொடூரம் தெரிகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் உறுதிமொழி எடுத்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் மதுரையின் அடாவடிப் பேர்வழிகள் வரை தி.மு.க-வின் நிழலில் பதுங்கிச் செய்த காரியங்களை வழக்கு மன்றத்தில் நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. பொதுமக்களுக்கு இந்தக் கைதுகள், இந்த ஆட்சி மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளன!


எதிர்காலத் திட்டம் என்ன?


ந்த ஓர் ஆட்சியாக இருந்தாலும், அது எந்த நோக்கத்தில் செயல்படப்போகிறது என்பதே மிக முக்கியமானது. மக்கள் நலத் திட்டங்கள் அனைத்து ஆட்சிக்கும் அடிப்படையானவை. ஒருத்தர் யானை கொடுத்தால்... இன்னொருத்தர் குதிரை கொடுக்கலாம்.

ஆனால், கொள்கை சார்ந்த விஷயங்களில், எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களில் ஒரு மாநில முதலமைச்சர் தன்னுடைய சிந்தனையைச் செலுத்தியாக வேண்டும். 'தமிழகத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு 2025 தொலைநோக்குப் பார்வைத் திட்டம் தயாரிக்கப்போகிறோம்’ என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எதை நோக்கிய திட்டம், என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய சிக்கலாக இருந்த மின் வெட்டைத் தீர்ப்பதற்கான திட்டமிடுதலும் இல்லை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் அவசர முயற்சியும் இல்லை!


ஊழல் பற்றிய மௌனம்!

ன்று ஊழலுக்கு எதிரான யுத்தம் இந்தியா முழுவதும் நடக்கிறது. வளர்ச்சித் திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் போவதற்கும், ஒரு மாநிலத்தின் நிர்வாகம் செல் அரித்துக்கிடப்பதற்கும் ஊழல் மட்டுமே முக்கியக் காரணம். அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஜெயலலிதா இறங்கவே இல்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீதான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்தில் நடக்கிறது.

அதை சட்டரீதியாக எதிர்கொள்வதில் இருந்து ஜெயலலிதா இதனைத் தொடங்க வேண்டும். கர்நாடக எடியூரப்பாவும் ஆந்திர ஜெகன்மோகன் ரெட்டியும் துடிப்பதைப் பார்த்தால், இனி ஊழல் அரசியல்வாதிகள் தப்பிப்பது சிரம திசையாகத்தான் இருக்கும். எனவே, லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் தொடங்கி, ஊழல், முறைகேடுகளைக் குறைப்பதற்கான காரியங் களைத் தொடங்கியாக வேண்டும். அதுவே கடந்த காலக் கசப்புகள் கற்றுக் கொடுத்த பாடமாக இருக்கும்!


சட்டசபையில் ஜேஜே!


ட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பது வெறும் ஜனநாயகக் கடமை மட்டும் அல்ல. தன்னளவில் ஆர்வமும் இருந்தால் மட்டுமே உத்வேகமாகச் செயலாற்ற முடியும். கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஒரு நாள்கூட வரத் தவற மாட்டார். அதைவிட முக்கியமாக கடைசி வரைக்கும் இருப்பார். ஜெயலலிதாவும் இம்முறை இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்.

எல்லா நாட்களும் சபையில் இருக்கிறார். அனைத்து மானியக் கோரிக்கை விவாதங்களையும் கவனிக்கிறார். யார் எந்தக் குற்றச்சாட்டுகள் சொன்னாலும் குறித்துக்கொள்கிறார். உடனடியாக எழுந்து பதில் சொல்கிறார். அமைச்சர்களுக்கு அறிவுரை சொல்கிறார். ஏன், அவைத் தலைவருக்கே திருத்தம் கொடுக்கிறார். உடல் உபாதைகளையும் தாண்டி, ஜெயலலிதா இப்படி நடந்துகொள்வது உண்மையில் மெச்சத் தக்கது!


நடமாடும் நிழல் மனிதர்கள்!


ந்த ஐந்து பேர் பெயர்களை இந்த இடத்தில் சொல்லப்போவது இல்லை! கோட்டையில், போயஸ் கார்டனில், குறிப்பாக முதல்வரிடத்தில் செல்வாக்குப் படைத்தவர்களாகவும் 'நாங்கள் சொல்வதைத்தான் முதல்வர் கேட்பார், இங்கே நாங்கள் வைத்ததுதான் சட்டம்’ என்றும் அந்த மனிதர்கள்... அதிகாரிகளிடம், அமைச்சர்களிடம் நடந்துகொள்கிறார்கள். இது அதிகார மட்டத்தில் வலம் வரும் அனைவருக்கும் பச்சையாகத் தெரிந்த சமாசாரம். இது முதல்வருக்குத் தெரியாமல் இருக்காது. தெரியாது என்றால், அது அதைவிட அதிர்ச்சிக்குரியது.

உண்மையில் அவர்கள் தகுதியானவர்கள், திறமையானவர்கள் என்றால், அரசு அங்கீகாரம் பெற்ற பொறுப்புகளில் அமரவைத்து அவர்களைச் செயல்பட வைக்கலாமே தவிர, 'சூப்பர் சுப்ரீம்’களாக அவர்களை அங்கீகரிப்பது இந்த ஆட்சிக்கு ஆபத்து!

'நாங்கள் எதைச் செய்தாலும் உள்ளச் சுத்தியுடன் செய்கிறோம். மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் கிஞ்சித்தும் இல்லை’ என்று ஜெயலலிதா சொல்வது உண்மையானால், இந்த நிழல் மனிதர்களின் நடமாட்டம் உடனடியாகக் கட்டுப்படுத் தப்பட வேண்டும்!

thanx - vikatan


டிஸ்கி -

மங்காத்தா - மீடியம் ஹிட்டா? மெகா ஹிட்டா? - சினிமா விமர்சனம்