Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Monday, January 26, 2015

அனேகன்' படத்திற்கு சிக்கல்-'சலவைக்காரனுக்கு பொண்டாட்டி மேல ஆசை.. அவன் பொண்டாட்டிக்கு கழுதை மேல ஆசை' வசனம்

'அனேகன்' படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்கிவிட்டு, படக்குழு மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அறிவிப்பு.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 13ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் 23 இடத்தில் கட் பண்ணச் சொல்லி, 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்திற்கு தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சே.சர்க்கரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

"ஜாதி, மதம், இனம் பாராமல் பிறப்பு முதல் இறப்பு வரை குடும்பத்தில் உள்ள அனைவரின் துணிகளையும், எங்களின் தொழிலாளர்கள் வெளுத்து கொடுக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் எங்களை குடும்ப உறுப்பினர்களாகவே ஏற்று மதிப்பு அளிக்கிறார்கள்.

மறைந்த எம்.ஆர்.ராதா எங்களை உயர்வாக சித்திரித்து நடித்துள்ளார். திருக்குறிப்பு தொண்டர் வேடத்தில் சிவாஜிகணேசன் நடித்தார். அதற்குபின் வந்த நடிகர்கள் பெரும்பாலும் நகைச்சுவையாக, எங்கள் மனம் புண்படாதவாறு எங்களை காண்பித்தனர். 

ஆனால், கே.வி.ஆனந்த் இயக்க, தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'அனேகன்' படத்தில் 'சலவைக்காரனுக்கு பொண்டாட்டி மேல ஆசை.. அவன் பொண்டாட்டிக்கு கழுதை மேல ஆசை' என்று தரம் தாழ்ந்த வசனம் இடம் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வசனத்தை எங்கள் தாய்மார்கள் மீது போட காரணம் என்ன?

இந்த படம் வந்தால் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த பலரும் பாதிக்கப்படுவார்கள். அண்ணாதுரை முதல்வராக இருந்த போது, அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் எங்களை தரம் தாழ்த்தி பேசினார். எங்கள் முன்னோர்கள் போராட்டம் நடத்தியபோது அந்த அமைச்சரே நேரில் வந்து வருத்தம் தெரிவித்தார்.

'அனேகன்' வசனம் குறித்த புகார் மனுவை திரைப்பட தணிக்கை அதிகாரிக்கு அனுப்பியுள்ளோம். எனவே, தாய்மார்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ள 'அனேகன்' வசனம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். 'அனேகன்' இயக்குநர் கே.வி.ஆனந்த் தொலைபேசி மற்றும் பத்திரிக்கை மூலமாக சலவைத் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் திரைப்படம் வெளியாகும் முன்பு 25 லட்சம் சலவைத் தொழிலாளர்கள் சார்பாக போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்
  • mahruf  
    படத்தின் தலைப்புக்களும் மோசம் தரம் கெட்ட வசனங்களும் மோசம் கேட்டால் கரூத்துச்சுதந்திரம் 23இடத்தவல் கட் செயாத போர்டு இதை ரசிசிஇருபாஙாகளோ இழங்களே //////// அடிக்கனும்.
    about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
  • Ramesh subramanian  
    சமீப காலமாக பப்ளிசிட்டிக்காக தரம் தாழ்ந்து இது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள்.தங்கள் திறமை மீது நம்பிக்கை அற்றவர்கள்.
    Points
    180
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • LINGESH  
    சலவைத் தொழிலாளர்களின் எதிர்ப்பும் கோரிக்கையும் நியாயமானது.
    Points
    4930
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • kumar  
    ithu megauvm thavarana vasanam, they should remove.
    about 10 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • எழிலன்  
    அந்த வசனத்தை நீக்க வேண்டும்
    about 11 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • முருகன் தில்லைநாயகம்  
    கொஞ்சம் யோசித்து பார்த்தால் இது அசிங்கமான வசனமாகவே தெரிகிறது. நீக்கி விடுங்களேன்

Saturday, January 24, 2015

ஷமிதாப் - தனுஷ் , அக்சரா, அமிதாப் மூவரில் யார் டாப் ? - இயக்குநர் பால்கி பேட்டி

அமிதாப் பச்சனின் 69 -வது பிறந்தநாள். நேரில் வாழ்த்துச் சொல்லப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவருக்குப் பிடித்தமான ஏதோ ஒன்றை அவர் மனைவியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதை வாங்கிப் பரிசளிப்பது வழக்கம். அந்தமுறை ஜெயா பச்சனும் வெளிநாட்டில் இருந்தார்.
அமிதாப் பூக்களை மிகவும் நேசிப்பார். ஆனால் அந்த நேரம் அதை வாங்குவது கடினமான சூழலாக இருந்தது. விலை உயர்ந்த ஒயின் வாங்கலாம் என்று யோசனை எழுந்தது. அவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. நான் இருந்த இடத்தில் இருந்து அவரைச் சென்று அடைய எப்படியும் இரண்டு மணி நேரப் பயணம் தேவைப்பட்டது.
காரில் யோசித்துக்கொண்டே புறப்பட்டேன். அவரை வாழ்த்தும்போது காரில் அமர்ந்து யோசித்த அந்த ஐடியாவைக் கூறினேன். அதுதான் ‘ஷமிதாப்’. நான் அன்று அவருக்குக் கொடுத்த பிறந்தநாள் பரிசும் இந்தக் கதைதான்’ - முகத்தில் வெளிச்சம் பரவப் பேச ஆரம்பித்தார் பால்கி.

 

‘பா’ படத்துக்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவெளி?
படம் மட்டும் இயக்கினால் போதும் என்றால் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் இயக்கிக்கொண்டே போகலாம். நல்ல படம், அதுவே வித்தியாசமான படம் என்ற பார்வையோடு சினிமாவை அணுகும்போது அதற்காகச் சில காலம் தேவைப்படுகிறது.
அமிதாப், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் இவர்களைக் கடந்து நீங்கள் யோசிப்பதே இல்லையே ஏன்?
இவர்களைவிடச் சிறந்தவர்கள் யார் இருக்கிறார்கள் காட்டுங்கள். நான் அவர்களுடன் இணைந்து படம் பண்ணத் தயாராக இருக்கிறேன்.
தனுஷ் வாய் பேசாதவர், அவருக்குப் பின்னணிக் குரல் கொடுப்பவர் அமிதாப் பச்சன் என்றும், ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே உருவாகும் தொழில் போட்டிதான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறதே?
இல்லை. நானே கதையைச் சொல்லிவிட்டால் பிறகு படத்தில் என்ன இருக்கப்போகிறது. இரண்டு நபர்களுக்கிடையே உள்ள ஈகோதான் திரைக்கதை. மற்றொருவரது உதவி இல்லாமல் தனி நபராக யாரும் எந்த ஒரு வெற்றியையும் அடைய முடியாது என்கிற கருவை அடிப்படையாக வைத்துக் கதை நகரும்.
இது மூன்று ஹீரோக்கள் படம். அமிதாப், தனுஷ், அக்ஷரா இவர்கள்தான் அந்த மூன்று ஹீரோக்கள். 

 
‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அக்ஷரா ஹாசனுக்கு என்ன கதாபாத்திரம்?
அக்ஷராவைத் திரைப்பட நிகழ்ச்சியொன்றில் முதன்முதலாகப் பார்த்தேன். இந்தக் கதையை எழுதும்போதே அவரை நினைத்துதான் எழுதி முடித்தேன். ஒரு பக்கம் கமல், மற்றொரு பக்கம் சரிகா, இரண்டு திரை மேதைகளின் மகள். அவரது நடிப்பு பற்றி வேறு என்ன சொல்ல?
இந்தக் கதைக்குள் எப்படி தனுஷை இழுத்தீர்கள்?
தனுஷ் மாதிரி நடிகர் கிடைத்தது நம் அதிர்ஷ்டம்தான். பாலிவுட்டில் ரன்வீர் மாதிரி இங்கே தனுஷ். அவரது பங்களிப்பு படத்துக்குப் பெரிய பலம். படத்தில் ஒருவர் பெரிய வயதில் பெரிய ஆள், இன்னொருவர் சிறிய வயதில் பெரிய ஆள். அந்த இருவரும்தான் அமிதாப்பும் -தனுஷும்.
‘பிகே’ மாதிரியான பாலிவுட் சினிமாக்கள் கவனிக்க வைக்கிறதே?
நூறு கோடியில் படம் எடுத்து அதில் 300, 400 கோடிகள் வரை சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிடும் இயக்குநர் நான் அல்ல. எந்த ஒரு காரணத்துக்காகவும் தயாரிப்பாளர் நஷ்டம் அடையக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன். சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை எடுத்துக் கொடுப்பதும் ஓர் இயக்குநரின் முக்கியமான பணி இல்லையா? இதுதான் என் பாணி. 
 

இளையராஜாவை இலகுவாக அணுகித் தொடர் வெற்றி கண்டு வருகிறீர்களே?
மரியாதையையும், தொழிலையும் எப்போதும் ஒன்றாக ஆக்கிவிடக் கூடாது. எனக்கு இப்படித்தான் வேண்டும் என்று அவரிடம் சண்டை போடுவேன். அவரும் சண்டை பிடிப்பார். எனக்கும், அவருக்கும் படத்தில் தேவையான விஷயங்களைப் பரிமாறிக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். எப்போதும் அவரது பாடல்களைப் போலவே, இந்தப் படத்தில் அவரது பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. அவர்தான் ராஜா.
தமிழிலும் படத்தைக் கொண்டு வந்திருக்கலாமே?
எனக்கு ஒரு படத்தை மொழிமாற்றம் செய்வது பிடிக்காது. நல்ல கதை தோன்றினால் நேரடியாகத் தமிழிலேயே ஒரு படத்தை இயக்கிவிட்டுப் போகலாம் என்று நினைப்பவன், நான். அடுத்துகூட அப்படி நடக்கலாம். 

இயக்குநர் பால்கி



 நன்றி - த இந்து

Friday, October 11, 2013

நய்யாண்டி- சினிமா விமர்சனம்

 

ஒரு  ஊர்ல  ஒரு  குடும்பம் , அந்த குடும்பத்துல 3 பசங்க , முறையே   40,38 ,25  வயசுல   3 பசங்க . 3 பேருக்கும்  மேரேஜே ஆகலை .3 வது பையன் தான் நம்ம ஹீரோ . அவர் ஊர்த்திருவிழாவுல  ஒரு பொண்ணைப்பார்த்து தமிழ் சினிமா வழக்கப்படி பார்த்ததும் காதல் ல விழுந்துடறாரு. ஆரம்பத்துல  பிகு பண்ணினாலும் பின் ஓக்கே சொல்லிடுது, அண்ணன்க 2 பேருக்கும்  மேரேஜ் ஆகாம எப்படி தம்பிக்கு மேரேஜ் ஆகும், ? அதனால தாலியை (மட்டும் )கட்டி தன்  வீட்டுக்கே  கூட்டிட்டுப்போய் கணக்குபிள்ளையா சேர்த்து  விட்டுடறாரு  ஹீரோ . 

காஞ்ச மாடுங்க 2 வீட்ல  இருக்கே  அதுங்க 2 ம்  தம்பி மனைவின்னு தெரியாம காதல் , ஜொள்ளுன்னு அலையுதுங்க. அவங்க கிட்டே மாட்டி யும் , மாட்டாமயும்  ஹீரோயின் எப்படி அவஸ்தைப்படறார்? என்பதை காமெடி(ன்னு நினைச்சு)ப்படமாக்கி இருக்காங்க . உஷ் அப்பா  முடியல .


மேலப்பரம்பில் யான்  வீடு என்ற ஜெயராம் - ஷோபனா நடிச்ச மலையாளப்படத்தை  உல்டா பண்ணி ஆல்ரெடி  ஆர் பாண்டிய ராஜன் சத்தமே இல்லாம தாய்க்குலமே தாய்க்குலமே என ஒரு டப்பாப்படம்  கொடுத்தாரு , பின்  கிட்டத்தட்ட இதே சாயலில் தென் காசிப்பட்டணம் வந்தது . இப்போ  இது . டைட்டில் ல யே அண்ணன் சற்குணம் சரண்டர் ஆகிடறார். இது ஒரு ரீ மேக் ஸ்டோரின்னு .. இருந்தாலும்  களவாணி , வாகை சூடவா போன்ற பிரமாதமான படம்  கொடுத்தவர்ட்ட இப்படி ஒரு லோ கிளாஸ் படத்தை எதிர்பார்க்கலை . யூ  டூ சார் ? 



தனுஷ்  தான்  ஹீரோ .  கமலுக்கு இணையான  நடிகர் என்று இணையத்திலே பாராட்டுப்பெறும்  ஹீரோ .  தன் அண்ணன் செல்வராகவன் படங்களில் மட்டும் பட்டாசுக்கிளப்பும்  இவர் ஆடுகளம்  தேசிய விருது  வாங்கிய பின் செலக்டிவ்வாக படங்களை ஒத்துக்கொள்பவர் ஏனோ  இம்முறை சறுக்கி விட்டார் . இவர் நடிப்புக்கு ஸ்கோப் எங்குமே இல்லை, படம்  நெடுக நாயகியைச்சுற்றியே  கதை  நகர்கிறது.

 நஸ்ரியா தான் நாயகி . துறு துறு நடிப்பு , அழகிய முகம்  என மனதைக்கொள்ளை  கொள்ளும்  பர்சனாலிட்டி . இவரிடம் ஒரு வியக்கத்தக்க  குணம்  பானுமதி ,நதியா , ரேவதி , சுஹாசினி வரிசையில்   தன் உடல் அழகு வெளிப்படுவதை விரும்பாத அபூர்வ நடிகை . ஒரு சீனில்  கூட  கண்ணியக்குறைவாக ஆடை  விலகவில்லை, பெரும்பாலான காட்சிகளில் முழுக்க  மூடிய சுடிதார் , சேலை கட்டிய காட்சிகள் 6 லும்  இழுத்துப்போர்த்திய பாங்கு அபாரம் .   ஆனால் நெருக்கமாக நடிக்கிறார் , என்ன கொள்கையோ? 


சிங்கம்புலி , புரோட்டா சூரி , ஸ்ரீ மன் , சத்யன்  என காமெடிப்பட்டாளங்கள் உண்டு .மனதில் பெரிதாக ஒட்டவில்லை 




 

 மேலே உள்ளது கிராஃபிக்ஸ் லோ ஹிப்

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  அய்யய்யோ  போச்சு என நஸ்ரியாவை அலற விட்டு பப்ளிசிட்டி செய்தது . இது 10 பைசா  செலவில்லாமல் கிட்டத்தட்ட  கோடி ரூபாய் செலவு செய்தால் என்ன விளம்பரம் கிடைக்குமோ அதைப்பெற்றது , வெரி குட்  ஐடியா 


2  இது  குடும்பப்படம் , காமெடிப்படம் என்றெல்லாம் தனுஷ் , நஸ்ரியாவை நம்ப வைத்து   ஒரு லோ கிளாஸ் மலையாள  கில்மாப்படத்தில் நடிக்க வைத்தது 


3  சர்ச்சைக்குள்ளான  “இனிக்க இனிக்க “ ரொமாண்டில் பாட்டு செம  கிக் . இதில் துளி  கூட  சீன் இல்லை , ஆனால் செம கிக் உண்டு . நெருக்கமான காட்சிகள் , உரசல்கள்  ஆஹா! 


4 , ஸ்ரீ மன் - சத்யன்  இருவரின் காம்பினேஷன் காமெடி காட்சிகள் 


5  அந்த  ராப் சாங்க் மாதிரி வரும் “குமரிப்பொண்ணுங்க பார்த்தா” செம  டான்ஸ். ஆர்ட் டைரக்‌ஷனும் , நடன இயக்குநரும்  செம உழைப்பு , சபாஷ் 




இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  வீட்டில் ஆல்ரெடி மேரேஜ் ஆகாத அண்ணன்கள் இருக்காங்கன்னு தெரியாதா? கன்னிப்பொண்ணை எந்த தைரியத்துல  கூட்டிட்டு வர்றாரு ? மேரேஜ் ஆன ஆனால் கணவனைப்பிரிந்த பெண் என்றாவது  பொய்  சொல்லி இருக்கலாமே? 


2  வில்லன் ஆட்டோ டிரைவரிடம் வாய்ச்சண்டை போடும்போது  நஸ்ரியா  ஏன் எட்டிப்பார்க்கிறார்? தலையை மறைச்சு  அமர்ந்தவர் அப்படியே  இருப்பதுதானே? 


3  ஸ்ரீ மன், அம்மா , நஸ்ரியா மூவரும்  கோயில் போறாங்க . ஆனா   ரிட்டர்ன் வரும்போது  அம்மாவை ஆட்டோவில் காணோம் . ஸ்ரீமன் , நஸ்ரியா மட்டும் பக்கம் பக்கமா இருப்பாங்க . அடுத்த ஷாட்டில் நடுவில் அம்மா எப்படி வந்தார் ? கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க் ? 


4  என்ன தான் காமெடி என்றாலும்  சிங்கம்புலி வாயில் உள்ள தங்கப்பல்லை சூரி  பிடுங்கி ஓடுவது எல்லாம் உவ்வே ரக காமெடி . இதில் ஒரு பல் டாக்டரிடம் விவாதித்தேன். தங்கப்பல் , வெள்ளிப்பல் கட்டுபவர்கள்  நிலையாக வாயில்  இருப்பது போல் தான் கட்டுவார்களாம். சாதா பல் தான் தினமும் இரவு  கழட்டி  வெளியே எடுத்து வைத்து காலையில்  மீண்டும் எடுத்துப்பொருத்துவது போல்  இருக்குமாம் . அப்படி  இருக்கும்போது தங்கப்பல்லை அவ்வளவு  எளிதாக என்னமோ பாக்கெட்டில்  இருந்து பேனாவை அடிப்பது போல் எடுப்பது எப்படி ? 

மேலே உள்ளது  ஒரிஜினல்

5  புரோட்டா  சூரி பேசும் வசனங்களில்  ஒரு சீனில்  கூட சிரிப்பே வரவில்லை . சிச்சுவேஷன் காமெடி  ஸ்ரீமன் , சத்யன் காமெடியில் தான் . ஆனால் தம்பி மனைவி என தெரியாமல் அண்ணன்கள் ஆசைப்படும் கலாச்சாரத்தை மீறிய சிச்சுவேஷன் என்பதால் அதையும் ரசிக்க முடியவில்லை. இந்தப்படத்தை எப்படி  குடும்பத்தோடு மக்கள் உக்காந்து பார்ப்பாங்கன்னு நினைச்சீங்க ? இது போன்ற  உறவுகளைச்சீரழிக்கும் , கூட்டுக்குடும்பத்தை கேலி செய்யும் படங்களுக்குத்தடை விதிக்க வேண்டும் 


6 நஸ்ரியா  தன் கணவர் தனுஷிடம் அடிக்கடி “ நம்ம 2  பேருக்கும் இடையே  எதுவும் கூடாதுன்னு அன்னைக்கே சொன்னேனே?”ன்னு சொல்லுது . அதுக்கு என்ன காரணம்னு சொல்லவே  இல்லை 


7 ஸ்ரீமன்க்கு  பார்த்த பொண்ணை சில காலம் கழித்து அவர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு ஃபோன் பண்ண பொண்ணோட  போட்டோ பின்னால பார்க்கறார் , ஃபோன்  நெம்பர்  இருக்கு , பண்ணுனா பொண்ணே எடுக்குது . பொண்ணோட நெம்பரை   டைரக்டா எப்பவும்  புரோக்கர்ங்க தர மாட்டாங்க .அதே போல் மேரேஜ் ஆகிடுச்சு என சொல்லும்  அந்தப்பெண் குழந்தையுடன் இருக்கு . இப்போ இருப்பது புருஷன் வீடு . ஃபோட்டோவில்  இருப்பது பழைய  அம்மா வீட்டு ஃபோன்  நெம்பர் .

8  நஸ்ரியா கழுத்தில்  தாலி  இருப்பது ஆண்கள் கண்ணுக்கு வேணா தெரியாம  இருக்கலாம் , ஹீரோவோட அம்மா கண்ணுக்குக்கூடவா  தெரியல 






மனம் கவர்ந்த வசனங்கள்


1. பொண்ணுங்களுக்கு எப்பவும் " வீரம்" தான் பிடிக்கும்



நாங்க எல்லாம் கரண்ட் கம்பிலயே கபடி விளையாடுவோம் # புரோட்டா சூரி மரண மொக்கை பஞ்ச்



3   நாம போய் பொண்ணுங்க முன்னால நிக்கறதை விட நம்மைப்பத்தின நியூஸ் தான் முதல்ல போய் நிக்கனும் # தனுஷ் பஞ்ச்



  ஏன்  ஓல்டு லேடி , எங்க தாத்தா  வீரியம் மேட்டர் உனக்கு எப்படித்தெரியும் ?  அப்பவே  வில்லங்கமா விளையாடி  இருக்கே? 


5  புறா  உனக்கு  , பொண்ணு எனக்கு 


6  நீ என்ன பிளான் பண்னாலும்  என்னை மாட்டி விடாம பிளான் பண்ண மாட்டே  போல 


7  , மணி  இருக்கு , 


அடிக்குமா? 


8   என்ன பண்றே? 


 கணக்கு பண்றேன் 


 அதை என் கிட்டே கேளு 


 உனக்குத்தான் கணக்கு வராதே ? \



9  பொண்ணுக்கு மை வெச்சா கரெக்ட் ஆகிடும்னு மலையாள ஜோசியர் சொன்னார் , ஆனா கர்ப்பம் ஆகிடும்னு சொல்லலையே?




படம் பார்க்கும்போது போட்ட லைவ் கமெண்ட்ஸ் ட்வீட்ஸ் 


1. நய்யாண்டி அப்டேட் - படத்தில் முதல் 40 நிமிடங்கள் இளைய தளபதி விஜய் போலவே தனுஷ் கிளப்பிட்டாராம் .சூப்பர் இல்ல?



2 நய்யாண்டி = வாகை சூட வா ய்ப்பே இல்லை # பாரீன் ட்வீட்டர் அப்டேட் ரிசல்ட் படி


3 தனுஷ் ன் அட்டர் பிளாப் லேட்டஸ்ட் தர வரிசை .3 ,மயக்கம் என்ன ,மரியான் ,நய்யாண்டி




=================


4 நச்ரியா - சார்.இவ்ளவ் மார்க்கெட்டிங் பண்ணியும் படம் ஊத்திக்கிச்சாமே?


 சற்குணம் - டிராமாவை அவசரப்பட்டு முடிச்சிருக்கக்கூடாதோ? 


===================

5 சுள்ளான் க்குப்பின் இதில் தான்யா தனுஷ் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்காரு.ஓப்பனிங் சீன்ல 6 மீட்டர் விட்டம் உள்ள வட்டக்கிணத்தையே தாண்டிட்டாரு


=================


6 படத்தோட ரிசல்ட்டை தனுஷே சொல்றாரு - அரோகரா


===================


7 சார்.நஸ்ரியா சார்.ஸ்லோமோஷன் ல ஓடி வருது சார்


===================


8 ஏம்மா என்னமோ கற்புக்கரசி மாதிரி பேசுனே? முத கனவுப்பாட்டிலயே இந்தத்தடவு தடவறாரு.கம்முன்னே இருக்கே?


=================



தனுஷ் கமல் மாதிரியே ஆக்டிங்.அடேங்கப்பா.அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி மாஸ்க் போட்டு நடிப்பு.செம செம


=======================

10  பின்னால நிக்குற பாட்டு கான்செப்ட் விஜய் ன் ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு எதுக்கு உனக்கு இத்தனை லொள்ளு பாட்டின் உல்டா




===============

11 தென்னக புரூஸ்லீ இப்போ ஜெட்லீ ஆகி மரத்துக்கு மரம் தாவறார்.அமேசிங் பர்பார்மென்ஸ்


====================


12 நய்யாண்டிக்கு முதல்ல வெச்ச டைட்டில் சொட்ட வாழக்குட்டி .ஆனா வெச்சிருக்க வேண்டிய டைட்டில் வனரோஜா


================


13 அபாரமான குடும்பக்கதை.தம்பியோட சம்சாரம்னு தெரியாம 2 அண்ணண் க்ளும் அதுக்கு ரூட்டு விடறாங்க # நய்யாண்டி இடைவேளை


===============

14  சார்.டைட்டிலுக்கு விளக்கம் சொல்லுங்க.



அவார்டு பட டைரக்டர் ,ஹீரோ னு நம்பி வந்து ஏமாந்து போகப்போறாங்களே ஆடியன்ஸ்.ஸெம நையாண்டி இல்ல? 


===============

15  நஸ்ரியா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி.நஸ்ரியா ரொம்ப "சின்ன"ப்பொண்ணு ..இப்போ தான் +2 முடிச்சுதாம் ;-)# க்ளூ


=============

16 உலகப்புகழ் பெற்ற, சர்ச்சைக்கு ஆளான்  இனிக்க இனிக்க பாடல் ஓடுது.இமைக்காம பார்க்கனும்


---------------


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-38


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =   2  / 5


சி பி கமெண்ட்  -நய்யாண்டி - சி செண்ட்டர் ஆடியன்ஸ்களுக்கான லோ கிளாஸ் (சீன் இல்லாத)கில்மா காமெடிப்படம் - விகடன் மார்க் -38 , ரேட்டிங்க் - 2 / 5

டிஸ்கி -

வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

 

டிஸ்கி-நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம் http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன்னும்  இருக்கு , அது  தனிப்பதிவாக நாளை வரும்

Sunday, October 06, 2013

அடிக்கடி நைட் கிளப் ல என்ன வேலை? - த்ரிஷா பர பரப்பு பேட்டி @ த தமிழ் ஹிந்து

நடிகை த்ரிஷா - படம்: ஜி.வெங்கட்ராம் 

அட 'லேசா லேசா' த்ரிஷாவா இது.? இன்னும் அப்படியே ஸ்லிம் ப்யூட்டியாகவே ஜொலிக்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் ரசிகர்களை தனது சிரிப்பால் கிறங்கடித்தவரோடு நடந்த ஒரு ஜில்லான சந்திப்பு. 



என்ன பதில் சொன்னா எங்க பிரச்சினை வந்திருமோ என்று யோசிக்கும் நடிகைகள் மத்தியில், எந்தவொரு கேள்விக்கும் யோசிக்காமல் வந்து விழுகின்றன வார்த்தைகள். ஜாலியாக தொடங்கிய பேட்டி கொஞ்சம் கோபமாக முடிந்தது. 


இப்போ தான் ‘லேசா லேசா’ வந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள 10 வருஷமாயிடுச்சு.. ஹீரோயினா 10 வருஷம்.. என்ன நினைக்கிறீங்க?

 
10 வருஷம்.. ம்ம்ம்ம்... என்னாலயும் தான் நம்ப முடியல. திரும்பி பாத்தா 'லேசா லேசா' படத்துல இப்பத்தான் நடிச்ச மாதிரியிருக்கு. ரொம்ப பெருமையா இருக்கு. 10 வருஷமா முன்னணி ஹீரோயினா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். அவ்வளத்தையும் தாண்டி வந்திருக்கேன்.


அதுக்காக நான் எதோ சாதிச்சுட்டேன்னு நினைக்கல. இப்பவும் முதல் படம் மாதிரித்தான் படங்களை ஒத்துக்கிறேன். 



அதிமாக கமர்ஷியல் படங்களிலேயே நடிக்கிறீங்களே.. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் எப்போது பார்க்கலாம்?

 
கமர்ஷியல் படங்கள்ல அதிகமாக நடிச்சேன்னு நீங்க சொல்றது உண்மைத்தான். 'அபியும் நானும்' படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் தானே. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படமும் கமர்ஷியல் படம் தான். ஆனால் கதை ஜெஸ்ஸியான என்னை சுத்தியே தான் நடக்கும். 


இப்போ 10 வருஷமாயிடுச்சு இல்லயா, இனிமேல் எனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிக்கலாம்னு இருக்கேன். 'ரம்'னு ஒரு படம்.. படம் வெளிவந்துச்சுன்னா அதுக்கப்பறம் இந்த மாதிரி கேள்விக்கு இடமே இருக்காது நினைக்கேன். 




’த்ரிஷாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம்’, ‘ த்ரிஷாவுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு’ இப்படி அப்பப்ப கிசுகிசு வந்துகிட்டே தான் இருக்கு.. இப்படி நியூஸ் வரும்போது அதை எப்படி எடுத்துக்கறீங்க..?


 
(சிரித்துக் கொண்டே) பார்ப்பேன்.. படிப்பேன்.. திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்களா.. அப்படினு கூலாயிடுவேன். இப்பவா எழுதுறாங்க.. 10 வருஷமா எழுதிக்கிட்டே தான் இருக்காங்க. ஆனா அதுக்காக சோகமாக இருந்தா என்னோட படங்கள்ல அது தெரிய ஆரம்பிச்சுடும். அதனால ஜஸ்ட் படிச்சுட்டு போயிட்டே இருப்பேன். என்ன.. எங்கம்மா தான் ரொம்ப பயப்படுவாங்க. எனக்கு இதெல்லாம் பழகிடுச்சி. 


கல்யாணத்துக்கப்பறம் நடிக்கறது பத்தி உங்கள் எண்ணம்..?

 
இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ளயா.? கல்யாணத்துக்கப்பறம் நடிக்கிறதப் பத்தி யோசிக்கல. நல்ல ரோல் கிடைச்சா நடிக்கிற எண்ணத்துல தான் இருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்னு இப்ப சொல்ல முடியாது இல்லயா.. பாக்கலாம். 


புதுசுபுதுசா ஹீரோயின்ஸ் நிறைய பேர் தடதடன்னு வந்துகிட்டே இருக்காங்க.. இப்போ உங்களுக்கு competition பலமா?

 
கண்டிப்பா போட்டி தான். ஆனா ஆரோக்கியமான போட்டி. நிறையப் பேர் வர்றப்போ தான் நம்ம இடத்த தக்க வைச்சுக்கணும்னு பயம் இருக்கும். அதனால புதுசா ஏதவாது முயற்சி பண்ணலாம்னு யோசிப்போம். வித்தியாசமான கேரக்டர்ல நடிக்கணும்னு தோணும். எனக்கு போட்டி எப்போதுமே பிடிக்கும். 





தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகளிலும் நடிச்சுட்டீங்க.. சினிமால உங்க பெஸ்ட் பிரெண்ட் யார்? ஏன்?


 
எனக்கு பிரெண்ட்ஸ் லிஸ்ட் ரொம்ம்ம்ப பெரிசு. ஒருத்தரப் பத்தி மட்டும் சொன்னா.. இன்னொருத்தர் மனசு கஷ்டப்படும். எனக்கு எல்லாருமே பெஸ்ட் பிரெண்ட்ஸ் தான். TRISHA ALWAYS LOVES HER FRIENDS. 



PETA - மீது இவ்வளவு அக்கரை.. ட்விட்டரில் கூட மிருகங்கள் நலத்துக்கு தான் முக்கியத்துவம்.. உங்கள் பிரபலத்தை நல்ல காரியத்துக்காக பயன்படுத்தறீங்க... எப்படி வந்தது இந்த எண்ணம்?


 
நான் சர்ச் பார்க் ஸ்கூல்ல படிக்கிறப்பவே எனக்கு நாய்க்குட்டிகள் மேல கொள்ளைப் ப்ரியம். ரோட்ல நாய் ஏதாவது அடிப்பட்டு கிடந்துச்சுன்னா உடனே தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடுவேன். அப்போ எங்க வீட்டுல ஒண்ணும் சொல்லல. அதனால அப்படியே பழகிடுச்சு. சர்ச் பார்க் ஸ்கூல்ல ஒரு Orphanage இருக்கும். அங்க போய் டைம் ஸ்பெண்ட் பண்றது எனக்கு பிடிக்கும். 



நம்மளால ஏதாவது நல்லது நடக்குதுன்னா அதுக்காக நம்மோட பிரபலத்தை பயன்படுத்துறது தப்பில்லயே. பிரபலமா இருக்கறது ஒரு பலம்.. அந்த பலத்தை பிரயோஜனமா பயன்படுத்தறேன். 



கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களோடும் ஜோடி சேர்ந்தாச்சு.. இன்னும் தனுஷ் பாக்கி இருக்கு.. எப்போ ’தனுஷ்-த்ரிஷா’ நடிக்கும்னு போஸ்டர் பாக்கலாம்?


 
யார் சொன்னா எனக்கு தனுஷ் கூட நடிக்க வாய்ப்பு வரலனு. 'ஆடுகளம்' நான் நடிச்சிருக்க வேண்டிய படம் தான். அவங்க கால்ஷீட் கேட்டப்ப நான் 'கட்டா மிட்டா' இந்தி படத்துக்காக மொத்தமா தேதிகள் ஒதுக்கி கொடுத்ததுனால நடிக்க முடியல. என்னோட முக்கியமான நண்பர்கள் ஒருத்தர் தனுஷ். நல்ல கதை வந்தா, த்ரிஷா உடனே ரெடி. 





தமிழ் சினிமாவின் டிரெண்டை கவனிக்கறீங்களா..? காமெடிப் படங்கள் கலெக்‌ஷனை அள்ளுது.. சமீபத்தில் நீங்க ரசிச்ச படம் எது?

 
உண்மைய சொல்லவா.. எனக்கு படம் பாக்கவே டைமில்லை. கடைசியாக கமல் சார் தீவிர ரசிகைங்கறதுனால 'விஸ்வரூபம்' பாத்தேன். அதனால இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல. 


இப்போ என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க? என்னென்ன படங்கள் நடிக்க ஒத்துக்கிட்டு இருக்கீங்க?


 
'பூலோகம்', 'என்றென்றும் புன்னகை' படங்கள் முடிச்சுட்டேன். ரெண்டுமே பிரமாதமா வந்திருக்கு. அப்புறம் தெலுங்குல எம்.எஸ்.ராஜு சார் டைரக்‌ஷன்ல 'RUM (Rambha Urvasi Menaka)' அப்படிங்கற படத்துல நடிக்கிறேன். அந்தப்படம் வந்தா த்ரிஷா ரேஞ்சே வேற. 


தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்ல சக்கை போடு போடறாங்க.. எப்போ 100 கோடி கலெக்‌ஷன் படத்துல த்ரிஷாவை பாக்கறது?

 
பாலிவுட்ல நடிக்கணும்னா மும்பைக்கு வீட்டை மாத்தணும், அங்க PRO வைச்சு வேலைகள் புதுசா தொடங்கணும். எனக்கு இப்போ இருக்கற இடமே போதுமானதா நினைக்கிறேன். அதுமட்டுமல்லாம, பிறந்து, வளர்ந்து, படிச்சு, நடிக்க ஆரம்பிச்சது எல்லாமே சென்னைல தான். நான் எப்படி மும்பைக்கு போவேன் சொல்லுங்க. யாராலயும் இந்த படம் 100 கோடி கலெக்ட் பண்ணும்னு மொதல்லயே கண்டுபிடிக்க முடியாது. நான் நடிக்கற படம் 100 கோடி கலெக்ட் பண்ணனும்னு எல்லாரையும் மாதிரி எனக்கும் ஆசை இருக்கு


.
ராணா - த்ரிஷா காதல் செய்திகள் திரும்பவும் வலம் வர ஆரம்பிச்சுடுச்சே?


 
இந்த கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி சொல்லியே போர் அடிச்சுடுச்சு போங்க. சின்ன வயசுலேந்தே நாங்க ரெண்டு பேருமே ப்ரெண்ட்ஸ். இப்பவும் ப்ரெண்ட்ஸ் தான். 



சமீபத்தில நீங்க பார்ல இருக்குற மாதிரி படங்கள் போட்டு செய்திகள் நிறைய..


 
( கேள்வியை முடிக்கும் முன்பே ) அவங்களுக்கு தினமும் ஏதாவது புதுசா புதுசா செய்தி போடணும். ரூம்ல உட்காந்து யோசிச்சு ரூமர்களை கிரியேட் பண்ணி அதை பரப்புற வேலையை பாக்காம, ஏதாவது உருப்படியா செய்ய சொல்லுங்க. நடிகர்கள், நடிகைகள் எல்லாரும் ரொம்ப பிஸியாதான் இருப்பாங்க. ஆனா சட்டப்படி கேஸ் ஃபைல் பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதுங்கிறதா மனசுல வச்சுக்கோங்க. இது தான் பொய்யான தகவல்களை பரப்புறவங்களுக்கு என்னோட வார்னிங் மெசேஜ். 


நன்றி - த ஹிந்து தமிழ் 


Sunday, July 21, 2013

60 வது பிலிம்பேர் விருதுகள்

60வது பிலிம்பேர் விருதுகள் - தனுஷ், சமந்தாவுக்கு இரண்டு விருதுகள்! சிறந்த படம் - வழக்கு எண்

Dhanush-Samantha gets Two awards in 60th Filmfare award
தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. தமிழில் சிறந்த படமாக தேசிய விருது பெற்ற ‘‘வழக்கு எண் 18/9‘‘ படம் பெற்றது.

60வது தென்னிந்திய திரைப்பட விருதுகளின் முழு விபரம்...

சிறந்த படம்

தமிழ் - வழக்கு எண் 18/9
தெலுங்கு - ஈகா
மலையாளம் - ஆயளும் நஞ்சனம் தம்மீழ்
கன்னடம் - கிராந்தி‌வீரா சங்கோலி ரயாணா

சிறந்த நடிகர்

தமிழ் - தனுஷ் (3)
தெலுங்கு - பவன் கல்யாண் (கபார் சிங்)
மலையாளம் - பகத் பாசில் (22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - தர்ஷன் (கிராந்தி‌வீரா சங்கோலி ரயாணா)

சிறந்த நடிகை

தமிழ் - சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சமந்தா (ஈகா)
மலையாளம் - ரீமா கல்லிங்கல் ((22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - பிரியாமணி (சாருலதா)

சிறந்த டைரக்டர்

தமிழ் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
தெலுங்கு - ராஜமெளலி (ஈகா)
மலையாளம் - லால் ஜோஸ் (ஆயளும் நஞ்சனம் தம்மீழ்)
கன்னடம் - விஜயஒரசாத் (சித்திலிங்கு)

சிறந்த துணை நடிகர்

தமிழ் - தம்பிராமையா (கும்கி)
தெலுங்கு - சுதீப் (ஈகா)
மலையாளம் - பிஜூ மேனன் (ஆர்டினரி)
கன்னடம் - அதுல் குல்கர்னி (எதிகாரிகி)

சிறந்த துணை நடிகை

தமிழ் - சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)
தெலுங்கு - அமலா அக்கினி (லைப் இஸ் ப்யூட்டிபுல்)
மலையாளம் - கவுதம் நாயர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - சுமன் ரங்கநாதன் (சித்திலிங்கு)

சிறந்த இசை

தமிழ் - டி.இமான் (கும்கி)
தெலுங்கு - தேவிஸ்ரீ பிரசாத் (கபார் சிங்)
மலையாளம் - வித்யாசாகர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - வி.ஹரிகிருஷ்ணா (டிராமா)

சிறந்த பின்னணி பாடகர்

தமிழ் - தனுஷ் (3, கொலவெறிடி...)
தெலுங்கு - வேதபள்ளி ஸ்ரீனிவாஸ் (கபார் சிங்)
மலையாளம் - விஜய் ‌யேசுதாஸ் (ஸ்பிரிட்)
கன்னடம் - அவிநாஸ் செப்ரி (சித்திலிங்கு)

சிறந்த பின்னணி பாடகி

தமிழ் - என்.எஸ்.கே.ரம்யா (சற்று முன்பு பார்த்து... நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சுஜித்ரா (பிஸினஸ்மேன்)
மலையாளம் - ஸ்வேதா (அரிகி)
கன்னடம் - இந்து நாகராஜ் (கோவிந்தயான்மகி)

சிறந்த புதுமுக விருதுகள்

நடிகர்

உதயநிதி ஸ்டாலின் - (ஒரு கல் ஒரு கண்ணாடி, தமிழ்)

தல்குர் சல்மான் - (செகண்ட் ஷோ, மலையாளம்)

நடிகை

லட்சுமி மேனன் - (சுந்தரபாண்டியன், தமிழ்)

ஸ்வேதா ஸ்ரீவட்சா - (சைபர் யுக‌தால் நவ யுகா, கன்னடம்)

வாழ்நாள் சாதனையாளர் விருது : வாணி ஜெயராம் மற்றும் பாபு

விழாவில் ஸ்ருதிஹாசன், நாவ்யா நாயர் உள்ளிட்ட பல நடிகைகளின் நடனங்களும் இடம்பெற்றன.
 
 
thanx -dinamalar

Friday, July 19, 2013

மரியான் - சினிமா விமர்சனம்



ஹீரோ   சரக்கு  அடிக்கும்  நல்ல (!?) மீனவர். இவர் அதே ஊரில் மீனவரொருவரின் மகளை லவ்வறார். அவருக்கு   ஊருக்குள்ளே கடன். சொந்த அம்மா அப்பா கடன்  வாங்குனாக்கூட தமிழன் அதைப்பத்திகவலைப்பட  மாட்டான். ஆனா காதலிக்கு கடன்னா? துடிச்சுடுவான். 


 வில்லன்  கொடுத்த  பணத்தை  கரெக்ட் பண்ண ஹீரோயினை   மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறான் . ( மேரேஜ் பண்ணிட்டா அவன் என்ன வில்லன் ? ) ஆனா  ஹீரோ விடலை .  2 வருஷ காண்ட்ராக்ட்ல   ஃபாரீன் போறார்.  திரும்பி வரும்போது   2 ஜி யை  அடிச்ச ஆ ராசாகுரூப்பை  விட பயங்கர கொள்ளைக்காரங்க கிட்டே  மாட்டிக்கறார். அப்புறம் என்ன ஆச்சு? இதுதான் மரியான் .


சும்மா சொல்லக்கூடாது , கமல் , விக்ரம்க்குப்பிறகு நடிப்புக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும்  ஹீரோக்கள் லிஸ்ட்ல்  தனுஷ்  சர்வசாதாரணமா  சைன்  பண்ணிட்டார் .  பிரமாதமான நடிப்பு . ஆங்காங்கே  கமல் ( நாயகன் ) ரஜினி ( தளபதி )  சாயல்  இருந்தாலும் சந்தேகமே இல்லாம தனுஷ்க்கு இது ஒரு மைல் கல் படம் தான் . வெல்டன் சார் 




ஹீரோயின் பூ பட நாயகி பார்வதி . தமிழ் சினிமா   உலகம் வெட்கப்படும் அளவுக்கு பிரமாதமான நடிப்பு   இவருடையது.  திறமையை மட்டும் காட்டிட்டு இருந்தா தமிழன் ஒத்துக்க மாட்டான்னு பூ படம் கத்துக்குடுத்த பாடத்தை மறக்காம   ஒளிப்பதிவாளர்  உதவியுடன்    தாவணி  இல்லாம வெறும் ஜாக்கெட் மட்டும் போட்டு   லோ ஆங்கிள் ஷாட்ஸ் மட்டும் 45இடங்கள் ல  வர்ற மாதிரி செம காட்டு காட்டி இருக்கார் .  முழு நிலா மாதிரி முகம் இருக்கும் பார்வதி   பிறை நிலாக்கள்  தெரிய ஓடி வரும் காட்சிகள் காம்ப்ளான்


கவிதாயினி குட்டி ரேவதி  படத்துக்கு  சீனியர்  அசோசியேட் டைரக்டர்  ஜாப் . டைட்டில் ல அவர் பேரைப்பார்த்ததும்  பெண்ணிய காட்சிகள் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா  ஹீரோ   ஹீரோயினை  தேவையே இல்லாம இடுப்புல ஓங்கி உதைக்கும்  பழம் பஞ்சாங்க காட்சி தான் வருது . காம்ப்ரமைஸ்? 


முக்கியமான ஆள் ஏ ஆர் ரஹ்மான் . 2 பாட்டு சூப்பர் ஹிட்டு .  பி ஜி எம் ல உழைப்பு பத்தாது ( இளையராஜா  மாதிரி ஃபேமஸ் ஆகனும்னா  பி ஜி எம் ல சைன் பண்ணனும்-இது எல்லா இசை அமைப்பாளருக்கும் பொருந்தும் ) படம்  பாலைவனத்துல பயணம் செய்யும்போது    பின்னணி இசைல கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கார். ஒளிப்பதிவு பக்கா,. கடல் அடியில்  காமரா வெச்சு எடுக்கப்பட்ட காட்சிகள் அழகு . 


இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்



1.  ஏ ஆர் ரஹ்மானை புக் பண்ணி படத்துக்கு சர்வதேச மார்க்கெட்டை பிடிச்சது . ராஞ்சனா ஹிந்தில ஹிட் ஆன பின் சாமார்த்தியமா   இப்போ ரிலீஸ் பண்ணியது . 



2.   போஸ்டர்  டிசைன்ல  நல்ல லவ் ஸ்டோரி மாதிரி பில்டப் கொடுத்தது .  பார்வதியை   முழுக்க முழுக்க  கிளாமராவும் , கேரக்டர்வைஸும் நல்லாஆஆ யூஸ் பண்ணிக்கிட்டது



3. பின் பாதியில்   படம் ரொம்ப ட்ரை ( dry )  தெரிந்தும் தைரியமாய்    படத்தை   ரியலிஸ்ட்டிக்காய் எடுத்தது


4.   பாலை வனத்தில்  ஹீரோ புல் சாப்பிடும் காட்சி . 2 புலிகளிடம் மாட்டிக்கொள்ளும் லைஃப் ஆஃப் பை உல்டா காட்சி  . தியேட்டரில்; செம ரெஸ்பான்ஸ் 


5.  நமீபியா  , சூடான் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியது


 இயக்குநரிடம் சில கேள்விகள்  



1. மீனவரா வரும் ஹீரோ படகில் கடல் ல போறார். இன்னொரு படகு அருகில் வந்ததும் கிட்டே போய் தீப்பெட்டி வாங்கிட்டா மேட்டர் ஓவர் . அவர்   உடனே  கடல்ல  டைவ் அடிச்சு    நீந்தி அந்த படகு கிட்டே போய் தீப்பெட்டி வாங்கி வாய்க்குள்ளே அடக்கிட்டு   கடப்பாறை நீச்சல் அடிச்சு இந்த படகு வந்து ஏறுவது தான் ஹீரோயிசமா? செம காமெடி பாஸ். சிரி சிரினு சிரிக்கறாங்க .. படு கேவலமான ஹீரோயிச மேக்கிங்க்



2. வில்லன்  ஹீரோ கிட்டே ஃபோனை கொடுத்து கம்பெனில பேசி பணம்கேளு அப்டிங்கறார் . ஹீரோ டக்னுஹீரோயினுக்கு  ஃபோனைப்போட்டு  கடலை போட்டுட்டு இருக்கார் கட்டதுரை மாதிரி.  வில்லன் பே -னு பார்த்துட்டு இருக்கான் . பெண் குரல் எதிர் முனைல இருந்து கேட்காம போகுமா?  ( மொழி தான் புரியாது ,  பாவனை கூட தெரியாதா? )  அதைவிடக்காமெடி வில்லன் அவன் வீட்டு ஃபோனைஎதுக்கு  டமால்னு உடைக்கனும்? 


3. பணயக்கைதியா   3 பேரை  பிடிச்சு வெச்சவங்க  எதுக்கு  ஹீரோ வைக்  கொல்லாம    இன்னொரு ஆளை டக்னு கொல்றாங்க ? ஆளுங்க இருக்கற வரை அவங்களுக்கு லாபம் தானே?  ( அதிக பணயத்தொகை கேட்கலாம்)


4. இடைவேளைக்குப்பின்   அந்த நீக்ரோ பசங்க ஏன் லூசுங்கமாதிரிவானத்துல  துப்பாக்கியால  சுட்டுட்டே இருக்காங்க ? விலை வாசி எப்படி ஏறிக்கிடக்கு>? கொஞ்சம்   கூட பொறுப்பே   இல்லாம வேஸ்ட் பண்ணுவாங்களா?


5. ஹீரோ ஹீரோயினை லவ் பண்றார். ஆனா அதை வெளிக்காட்டிக்கலை . ஹீரோயின்  ஹீரோவைப்பார்க்க வரும்போது   ஹீரோவோட நண்பர் செத்திருக்கார் . ஹீரோயின்   வானு கூப்ட்டது ஒரு குத்தமாய்யா? வில்லனை விட கேவலமா   ஹீரோ தான்  உயிராய்  காதலிக்கும் காதலியை இடுப்புலஓங்கி  உதைக்கிறார்  . படு கேவலமான   ஆணாதிக்ககாட்சி மட்டுமல்ல . லாஜிக் மீறல் . பொண்டாட்டியை புருஷன் அடிப்பான் . ஆனா  காதலியை   காதலன்  அப்டி உதைக்க மாட்டான் 


6.   படத்தின்    திரைக்கதைக்கு தேவையே இல்லாமல்   ஹீரோ எதுக்கு தண்ணி அடிச்சுட்டே , தம் அடிச்சுட்டே  இருக்காரு ?  இதுதான் சாக்குன்னு தயாரிப்பாளர் செலவுல  சரக்கா?




7. பாலை வனத்துல பசி உள்ள   இரு புலிகளுக்கு நடுவில்   ஒரு ஆள் மாட்டினா   முதல்ல புலி ஆளை அடிச்சு கொன்னுடும். அதுக்குப்பின் தான்   அந்த 2 புலிகளும் தங்களுக்குள்ளே அடிச்சுக்கும் . ஆனா ஹீரோ வை புலிங்க கண்டுக்காம   அதுங்க 2ம் முறைச்சுக்கிட்டு  இருக்கு



8.  வில்லன்   ஹீரோயின்  கோயிலுக்குப்போய்  இருக்கும்போது ஹீரோயின்  செருப்பை தடவிப்பார்க்கறான் . அட பரதேசி . நீ லட்சக்கணக்குல ஹீரோயின் அப்பாவுக்கு கடன் கொடுத்திருக்கே . ரவுடி . டைரக்ட்டா  ஹீரோயினையே   பலவந்தமா தடவலாமே? கேவலம் அவ செருப்பை தடவி ஆம்பளைங்களையே அவமானப்படுத்திட்டியே?  மனசுக்குள்ளே   ராவணன் -னு நினைப்பா? 


9. வில்லன் ஹீரோயின்  செப்பலை காலால தடவிட்டு இருக்கும்போது 1 கிமீ தூரத்துல இருக்கும்   ஹீரோவுக்கு வில்லன் தன் காதலியோட செப்பலைத்தான் தடவறான்னு எப்படித்தெரியுது? பைனாகுலர் வெச்சிப்பார்த்தாரா?


10.  கதைப்படி   ஹீரோ  உள்ளூரில் இருந்து வெளியூரில் வந்து வேலைக்காக அல்லது  வேலையில்  சேர்ந்து  என்ன  கஷ்டம் எல்லாம் அனுபவிக்கறார் என்பதை  டீடெய்லாக சொல்லனும் . அப்போத்தான் பரிதாபம் வரும் .  ஆனா   அந்த எப்பிசோடே இல்லை படத்துல . திரைக்கதையின் பெரிய பலவீனம் அதுதான்


11 . ஹீரோவின் அம்மா , ஹீரோயின் பேசும்  மாமியார் மருமக சண்டை வ்சனங்கள்  மண் வாசனை காந்தி மதி  டூ ரேவதி , சின்னக்கவுண்டர்   மனோரமா டூ சுகன்யா வசனங்களின் அப்பட்டக்காப்பி . # ஏம்மா தேவிப்ரியா நோட்  இட்


12.   அப்புக்குட்டி , இமான்  இருவரும்  வீணடிக்கப்பட்டிருப்பது ஏனோ?


13. வில்லன் எப்பவும் பாலை வனத்திலேயேஇருப்பவன் . ஹீரோ  கடல் வாசி . ஆனா ஹீரோ வில்லனை சர்வசாதாரணமா  அடிச்சு ஜெயிப்பது எப்படி ?


14. ஹீரோ  சுறா மீன் ,திமிங்கிலம் வகையறா மீன்களை பிடிப்பதில் கில்லாடி . அப்படி வாரம் 2 மீன் பிடிச்சா செம காசு வருமே? எதுக்கு பிஸ்கோத்த்து 2 லட்சம் ரூபாய்க்காக அடிமையா சூடான் போகனும்?


15.  ஏ ஆர் ஆர் வழக்கமா வம்பு தும்புக்கு போகாதவர் , ஆனா பாடல் வரிகளில்   என்ன ஆச்சுராசா உனக்கு?  நான் தான் கடல் ராசா என இளைய ராஜாவை வம்புக்கு இழுக்கும் வரிகள் எதுக்கு?


மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஆம்பளையோட வீராப்பெல்லாம் பொம்பளை மூச்சுக்காத்து படற வரைக்கும் தான்.பட்டுட்டா அவன் கோலிசோடா தான்



2. யாரையாவது பிடிச்சிருந்தா ஒண்ணா குத்தகைக்கு எடுக்கனும்.இல்ல கொள்முதல் பண்ணிடனும். பம்மிட்டு இருக்கப்படாது



3. கடலும் பொண்ணும் ஒண்ணு.எத்தனை தடவை பார்த்தாலும் புதுசுதாம்லே


4.  ஹீரோயின் - உன் கண்ணுல என்னை நான் பார்த்துட்டேன்யா.மறைக்காத # நீ தாம்மா மறைக்காம ஓப்பனா இருக்கே.அவர் சர்ட் போட்டிருக்காரு



5. யோவ்.என்னை பிடிக்காதுன்னே.ஆனா என்னையவே பார்த்துட்டு இருந்தே? உன் கூட இருந்தவளையும் தான் பார்த்தேன்.அதுக்கு ?


6. தீக்குச்சி தீப்பெட்டிலயே இருந்தா எப்டி பத்திக்கிம்? உரசனும்.போ.அவனை உரசு # அடேங்கப்பா கண்டுபிடிப்பு அடேய் -))



7. ஹீரோ பஞ்ச் - மரியான் பிடிக்காத வேலையை செய்ய மாட்டான்.பிடிச்ச வேலையை செய்யாம விடமாட்டான் # தியேட்டரை விட்டு வெளியே போக விடமாட்டான் ( ஹீரோ ஃபிரண்ட் பேசும் வசனம்)


8. எங்காளுக்குப்போட்டியா ஷாருக்கான் ரா ஒன் எடுத்தாரு.ஊத்திக்கிச்சுல்ல? # மாப் ளை சப்போர்ட்டிங் டூ மாமா


9.   எல்லாரும்  நம்மை  மாதிரி மனுஷங்க  தானே?   புது ஊர்னாலும்  பழகிடும்


10 மரியான்னா   சாவே இல்லாதவன்னு அர்த்தம்  # சாகடிக்கப்போறான்னு அர்த்தம் இல்லையா? ஹி ஹி


11. சாதனை பண்றவனுக்கு பொம்பளை வாசனை பட்டுகிட்டே இருக்கணும்




படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ் 


1. ஏ ஆர் ஆர் க்கு பாடலில் வரும் ஹம்மிங்னா செம கொண்டாட்டம் போல


2. அய்யய்யோ.தனுஷ்க்கு பார்வதி வலியனாப்போய் லிப் கிஸ் தருது.தடுக்க முடியல :-(


3. ஆஹா.தனுஷ் கமல் மாதிரி ரஜினி மாதிரி எல்லாம் ட்ரை பண்றாரே


4. இடைவேளை விட்டாச்சு.ஆனா வெளில விடமாட்டாங்களாம் # மாட்டிக்கிட்டாங்க ஜனங்க.இது வரை படம் சுமாரு தான் குமாரு


5.  பம்பாய் பி ஜி எம் மை மரியான் ல எ ஆர் ஆர் சுட்டுட்டாரு.தேவிப்ரியாவுக்கு போன் போடேய்





ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  40

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் =  3  / 5


சி பி கமெண்ட் - - ஹீரோ ஹீரோயினுக்கு விருது நிச்சயம்.ஸெம ஆக்டிங் - ஆனா படம் அட்டர் பிளாப் - தனுஷ்  ரசிகர்கள் பார்க்கலாம் . பார்வதியை மேலோட்டமா ரசிக்க நினைப்பவர்கள் பார்க்கலாம் . மற்றவர்கள் டி வி யில் போட்டபின் பார்க்க. ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்