Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

Thursday, April 18, 2019

எட்டி எட்டிப் பார்த்தவளுக்கு, எட்டு பணியாரம்; முட்டு தேய சுட்டவளுக்கு மூணு பணியாரம்கற கதையா

1  நாக்கு ருசிக்காகவோ,பொண்டாட்டி மேல இருக்கற கோபத்திலோ,அல்லது சம்சாரம் சமைக்கலைன்னோ,அல்லது ஒரு பிரெஸ்டீஜூக்காகவோ,ஒரு மாறுதலுக்காகவோ ஒவ்வொரு முறை நீங்கள் ஹோட்டலில் சாப்பிடும்போதும் உடல் ஆரோக்யத்தை விலை"கொடுத்து கெடுத்துக்கொள்கிறீர்கள்



================




2 என்னது?நாம அனுப்பற வாட்சப் மெசேஜை அரசாங்கம் நோட் பண்ணுதா?நல்ல வேளை சொன்னீங்க




==============




3 LIEயோலா காலேஜ்




==============




4 எட்டி எட்டிப் பார்த்தவளுக்கு, எட்டு பணியாரம்; முட்டு தேய சுட்டவளுக்கு மூணு பணியாரம்கற கதையா டெய்லி வாண்ட்டடா பொண்ணுங்க பதிவில் குட்மார்னிங் , பதிவு அருமை தோழினு கமெண்ட் போட்டே ஃபேஸ்புக்ல ஆண்ட்டிகளை கரெக்ட் பண்ணிடறான் நெட் தமிழன்




===========



5 ட்விட்டரில் சிறந்த கீச்சாளர்களை பின்தொடர ஒரு அமைப்பு ஏற்படுத்தி அதுல நல்ல ட்வீட்டர்சை அறிமுகப்படுத்த சொல்றாங்க.இதுல நம்ம பேரை நாமளே சொல்ல கூச்சமா இருக்கும்.அதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு.பேசி வெச்சுக்கிட்டு ஒருத்தரை இன்ட்ரோ பண்ணனும்.அவரு நம்மை இன்ட்ரோ பண்ணுவாரு.திமுக + காங் கூட்டணி மாதிரி...



=============




6  இலக்கியவாதிகள் ,மெத்தப்படித்த மேதாவிகள,கருத்துக்கணிப்பு ஸ்பெஷலிஸ்ட்கள்் இவங்க"கிட்ட இருக்கும் பெரிய"பலகீனமே தான் மட்டும் தான் புத்திசாலி,மத்தவங்க எல்லாம் மாங்கா மடையனுங்க என நினைப்பதுதான்,இவங்க தேர்தல் முடிவுக்குப்பின் கமுக்கமா வெளிலயே வரமாட்டாங்க



=============




7 வார இதழ்கள் கவனத்துக்கு, வலை பாயும் ட்வீட்களில் 90% திமுக கட்சிக்காரர்களின் கூடாரமா இருக்கு சமீப காலமா.ஜனங்க ஈசியா கண்டு பிடிச்சிடுவாங்க.நாம நடுநிலைமைனு காட்டீக்கனும்னா வருசத்துக்கு ஒரு தடவையாவது கட்சி சாரா பொது வாசகர்கள் படைப்புகளை பிரசுரிக்கவும்




============




8 தமிழனா இருந்தா "ஷேர்" பண்ணு னு சொல்வாங்க,நம்பி காசை விட்ராதீங்க,ரிஸ்க்தமிழனா இருந்தாலும் சரி எந்த மாநிலத்தாரா இருந்தாலும்"சரி மியூச்சுவல் பண்ட் பண்ணுங்க.பாதுகாப்பு.




==============




9 தன் மனைவியைக்கொலை செய்து வழக்கில் இருந்து தப்பித்த சசிதரூர் கேரளா வில் அடிபட்டதால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகக்காரணம் அவர் செய்த பாவம் என சிலர் பதிவு போடறாங்க,எனக்கென்னவோ அனுதாப வாக்கு வாங்க ஸ்டண்ட் என தோன்றுகிறது



================


10 பெரும்பாலான தொகுதிகளில் வாக்குஇயந்திரத்தில்் நெ 1 திருடன்"கட்சி சின்னம் மேலே 1 வது"இடத்துல இருக்காமே?நிஜமா?


==============


11 எந்த வீட்டில் யாருடைய சம்சாரம் கோபப்பட்டாலும் ,வீசி எறியப்பட்ட ரிமோட்டைத்தேடி சரி செய்து வைப்பது அப்பாவிப்புருசனாத்தான் இருக்கும்


================


12 கமலோட மநீமை க்கு கிடைக்கககூடிய வாக்குகள் ADMK வுதா?DMKவுதா?னு நிறைய பேர் குழம்பறாங்க,2 கட்சில எந்தக்கட்சி அவரை அதிகம் எதிர்க்குதுனு பாருங்க,அவங்க"கட்சி வாக்குகள்தான் பிரியப்போகுது



==============


13 சமூகவலைத்தளங்களில் பேக் ஐடிகளிடமும் ,சினிமா ஹீரோக்கள் படத்தை டிபியா வைத்திருப்பவர்களிடத்திலும் இளம்பெண்கள் ் ஏமாறுவது தொடர்கதை ஆகிவிட்டது,இனிமேலாவது பெண்கள் சொந்த டி பி வைத்திருக்கறவர்களிடம் மட்டுமே ஏமாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்


==============


14 ஆசி வழங்கும்போது வழங்குபவர் அமர்ந்திருந்தால் எழுந்து நின்று ஆசீர்வதிப்பதே தமிழர் மரபு.இன்று டி எல் லில் சில அரசியல் தலைவர்கள் ஆசி வாங்கும் படங்கள் கண்டேன்.ஆசி வழங்குபவர் அசால்ட்டா உட்கார்ந்திருக்கிறார்


==============

15 அதிகம் பேசாமல் ,அமைதியான சுபாவமுள்ள பெண்ணாக இருந்தாலும் எப்ப பாரு நொறுக்குத்தீனியை வாய் மென்று கொண்டே இருந்தால் அவர் வாயாடி என்றே அழைக்கப்படுவர்


=================

16 குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டக்கூடாது னு நினைச்சா தண்ணி இருக்கற ஏரி,ஆறு,குளம்,கிணறு ,வாய்க்கா ,ஓடை ல குப்புற விழனும் (நீச்சல் தெரிஞ்சிருக்கனும்)


=============


17 அஸ்கா சர்க்கரை (சீனி,வெள்ளை சர்க்கரை) மிக மிக கெடுதல்.கெமிக்கலஸ் கலந்தது.அரசே தடை செய்யனும், செய்யல.ஜனங்க விழிப்புணர்வுடன் இருக்கனும்.
இனிப்புக்கு மாற்றாக பனை தயாரிப்பான இயற்கை பரிசு பனங்கற்கண்டு நாட்டு"சர்க்கரை ,(மெரூன்"கலர் சுகர் )
கொப்பத்து"வெல்லம
கருப்பட்டி ் நல்லது


===================

18 வெய்யிலின் கடுமை காரணமாக நீர் கிடைக்காமல் நீர்நீலைகளில் (புது இடம்) தண்ணீர் குடிக்கும் முன் பறவைகள் ,விலங்குகள் ஏதாவது அந்த தண்ணீரைக்குடிக்கின்றனவா?னு பாத்துட்டு குடிக்கவும்.


=================

19 மண் பானையில் சமைக்கப்பட்ட சுண்டைக்காய் குழம்புதான் குழம்புகளிலேயே மிகுந்த சுவை.சுண்டக்கா ஊறுகாயா,வத்தலா சாப்பிடும்போது கசக்கும்,ஆனா குழம்புல அவ்ளோ கசக்காது.கிட்டத்தட்ட சுண்டல் குழம்பு பார்முலா


==============

20 கிராமங்களில் பசும்பால் வாங்குவோர் கவனிக்க,அதிகாலை 3 மணிக்கு கறக்கப்படும் பால் தண்ணீர் மிக்ஸ் பண்ணி உங்க கைக்கு 6 மணிக்கு கிடைக்கும்.அதையே வாங்குங்க.மதியம் 2 மணிக்கு கறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு கிடைக்கும் பாலில் அந்த அளவுக்கு இல்லையாம்.


==============






இப்போ நடக்கறது நாடாளுமன்றத்தேர்தலா? சட்டமன்றத்தேர்தலா?

 1 எங்கள் கட்சியின் சின்னமான, 'டார்ச்லைட்' வெளியே தெரியக்கூடாது என, மறைக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.   -கமல்  # லைட்டா எடுத்துக்குங்க, இதெல்லாம் ஒரு பிரச்சனையா?


--------------

2  பூரண மது விலக்கு கொண்டு வந்தால், மாபியாக்கள், கள்ள மார்க்கெட், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள் உருவாவர். மது விலக்கு சாத்தியமில்லாதது  - கமல்ஹாசன்: @

= இவருக்கு குஜராத்ல பூரண மதுவிலக்கு இருப்பது தெரியாது போல, அங்கே எப்படி சமாளிக்கறாங்கனு கேட்டு தெரிஞ்சுக்கலாமே? 

=================

3   : தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையே, ஊழல்வாதிகள், ஜெ., மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிப்பது தான்  -ஸ்டாலின்  # ஊழல்வாதிகளை தண்டிப்பீங்களா? அப்போ உங்க கட்சி ஆளுங்க  மனம் புண்படாதா?


=================


4  : கருணாநிதியை மானசீக குருவாக ஏற்றவன் நான். தி.மு.க.,வில் உறுப்பினராகவில்லையே தவிர, எவ்வித நிபந்தனையும் இன்றி, அக்கட்சியுடன் பழகி வருகிறேன்  - திருமாவளவன்  # 2016 ல மானசீக குரு விஜயகாந்த்தா?2019 ல கலைஞர், அப்போ 2021 ல யாரு?


=================

5   . ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், விலைவாசி தொடர்ந்து உயர்கிறது. லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆறு கோடி பேர் வேலை இழந்துள்ளனர் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  # ஜிஎஸ்டி பற்றி முதன்முதலா திட்டம் போட்டதே காங்கிரஸ்தானே? மாமியார் உடைச்சா மண்குடம், மருமக உடைச்சா பொன்குடம்?


================


6  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், காங்., ஆட்சியில், 163 ரூபாயாக இருந்த ஊதியம், 229 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. -பொன்.ராதா  # பெட்ரோல் டீசல் விலை உயர்வு மாதிரியா?


==========


பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை,  ரஜினிகாந்த் உட்பட, அனைவரும் வரவேற்றுள்ளனர்.-அமைச்சர் சீனிவாசன் # இதுதான் சாக்குன்னு ரஜினியின் ஆதரவு பெற்ற கட்சினு பிரச்சாரத்த ஆரம்பிச்சிடுவாரோ?


=================

: நாட்டுக்குள் ஊடுருவியவர்களை களையெடுக்க, பா.ஜ., விரும்புகிறது-  அமித் ஷா # அப்டியே லோன் வாங்கிட்டு நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்ல ஊடுருவறங்களையும் தடுங்க

==============


9  பாகிஸ்தானில் இருந்து, ஒரு துப்பாக்கி தோட்டா சுடப்பட்டால், இங்கிருந்து, வெடிகுண்டுகள் வழியாக பதிலடி தரப்படும்-அமித் ஷா  # ஆளீல்லாத இடத்துல குண்டு போட்டுட்டு வந்துடுவாங்களா?


===============


10  மோடி ஆட்சியில், பல துறைகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது-முத்தரசன் # இப்போ நீங்க பேசிட்டு இருக்கறதே பேச்சுரிமை பறிக்கப்படலை என்பதற்கு சாட்சி தானே?




==================

11     தெலுங்கானா மாநிலத்தில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அத்துமீறி நுழைந்து, புகைப்படம் எடுத்த, ஆளும் கட்சி பிரமுகர், கைது  # செல்பி மோகம் உயிரைப்பறிக்குது, ஜெயிலுக்கும் அனுப்புது


==============


12  ராகுலை புத்தராக பார்க்கிறேன் - காங்., தலைவர் அழகிரி  # அப்போ திடீர்னு எல்லாத்தையும் துறந்துட்டு போய்டுவாரா? அப்போ அவர் பிர்தமர் ஆனாலும் பிரயோஜனம் இல்லையே?


============


13  தேர்தலில், மக்கள் தான் எஜமானர்களாகவும், நீதிபதிகளாகவும் செயல்படுகின்றனர்-ஓபிஎஸ்  # அதனால தேர்தல் வரும்போது மட்டும் ஜனங்களுக்கு பயந்து நடக்க வேண்டியதா இருக்கு?


==============


14   ''நாங்கள் எதற்கு பணம் பட்டுவாடா செய்யப் போகிறோம். நானே அப்பிராணியாக இருக்கிறேன்,'' - கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு  #  ஒரு அமைச்சரே அப்பிராணியா இருக்கலாமா? உஷரா இருக்க வேணாம்?


==================


15   'எந்த காலத்திலும், ஸ்டாலின் முதல்வராக வரப் போவதில்லை,''- சரத்குமார்  # ராகு(ல்) காலம் வந்தாலுமா?

===============




16 

ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது: ஓ.பி.எஸ்., # இப்போ நடக்கறது நாடாளுமன்றத்தேர்தலா? சட்டமன்றத்தேர்தலா? ஆளாளுக்கு இதையே சொல்றீங்க?


=============


17   இரட்டை இலை, துரோகிகள் கையில் உள்ளது,'' - அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன்   #  சின்னத்தைப்பற்றி எங்களூக்கு கவலை இல்லைன்னீங்களே?


===============


18  நான் நடித்த, கரகாட்டக்காரன் படத்தில், 'காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை, இப்ப யார் வைச்சிருக்காக...' என்று கேட்பது போல, அ.தி.மு.க., இப்போது பன்னீர் செல்வத்திடமா அல்லது பழனிசாமியிடமா அல்லது மோடியிடமா என, தெரியவில்லை.-

நடிகர் செந்தில் # போன தேர்தல்ல வடிவேலுக்கு மார்க்கெட் போன மாதிரி இந்தத்தேர்தல்ல செந்திலுக்கா?


=============


19 மற்ற கட்சிகளின் கூட்டங்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டன. 'ஆனால், மக்கள் நீதி மையத்திற்கென யாரையும் அழைக்காமல் தொண்டர்கள் தானாக வருகின்றனர்.-கமல் # நேரில் பேசறதைப்பார்த்தாலாவது உங்க பேச்சு புரியுமா?னு பார்க்கவா இருக்குமோ?


=================


20  பிரதமர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய பின், அதில் இருந்த கறுப்பு நிற பெட்டி, இன்னோவா கார் ஒன்றில் ஏற்றப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்த வேண்டு-காங்., செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா, # கறுப்புப்பெட்டி என்பதால் கறுப்புப்பணம் இருக்கும்னு நினைக்கறாரோ?


=================


Wednesday, January 06, 2016

மாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அட்டர்ஃபிளாப்பா?த ஹிந்து அலசல்

பெற்றோரின் விருப்பத்துக்காக விருப்பமில்லாத திருமண உறவில் சிக்கிக்கொள்கிறார் மனோஜா (வாமிகா). இவரது கணவன் பிரபு (பாலகிருஷ்ணா) கூச்ச சுபாவம் கொண்டவர். நாகரிகம், நாசூக்கு அறி யாதவர். ஆனால் தன் மனைவி மீது உயிராக இருக்கிறார். மனோஜாவோ பிரபுவை வெறுத்து ஒதுக்குகிறார். இவர் களது திருமணம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் முறிந்துபோகிறது. பிரிந் தவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.


கீதாஞ்சலி செல்வராகவனின் இயக் கத்தில் வந்திருக்கும் இப்படம், அம்மா வும் மகளும் பேசிக்கொள்வதை இயல் பாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்கு கிறது. பிறகு, திருமண முறிவின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிடிக்காத திருமண உறவினுள் போலி யான இல்லறத்தை சிருஷ்டிக்க முற் படுவதில் உருவாகும் முரண்பாடு களும், மெல்ல முகிழ்க்கும் காதல் அத் தியாயமும் தமிழ் சினிமா பலமுறை கண்ட கதை. ஏற்கெனவே கையாண்ட கதையை மீண்டும் கையாளும்போது அதில் இருக்கவேண்டிய புதுமையோ, புதிய பார்வையோகூட சொல் லிக்கொள்ளும் அளவில் இல்லை.



பாத்திர வார்ப்புகள், வசனங்களில் கதாசிரியர் செல்வராகவன் வித்தியாசம் காட்டியிருந்தாலும் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் பெரிய வித் தியாசம் இல்லை. நாயகனை நிராகரிக் கும் நாயகி ஆதிக்க உணர்வுடன் நடந்துகொள்வதை வேண்டுமானால் வித்தியாசம் என்று சொல்லலாம்.


நாயகியின் மனம் இளகும்போது ஏற்படும் எதிர்பாராத சம்பவத்துக் கான பின்புலம் நன்கு கட்டமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த சம்பவம் சித்தரிக்கப்பட்ட விதம் அபத்தம். கதையின் போக்கை திசைமாற்றக்கூடிய இக்காட்சியை ஏற்றுக்கொள்ளும் வித மாகச் சித்தரித்திருந்தால் கதையின் போக்குக்கு அது வலு சேர்த்திருக்கும். கிளைமாக்ஸ் திருப்பமும் வழக்க மான சினிமாத்தனம். போதாக் குறைக்கு, நாயகன், நாயகி இருவரும் தங்கள் தரப்பை நியாயப்படுத்த தலா ஆளுக்கொரு காட்சியில் நீளமாக வச னம் பேசி கொடுமைப்படுத்துகிறார்கள்.


தன் ஆண் நண்பர்களுடன் மனோஜா வுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நவநாகரிகப் போக்கு கொண்டவராக இருந்தும் சுயமரியாதையும் சுய கட்டுப்பாடும் கொண்டவராக இருக்கும் மனோஜாவின் ஆளுமை ஆகியவை நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், திருமணத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் அவர் அவதிப்படுவது, தன் மனைவிக்கு ஏற்ப நடந்துகொள்ளத் தெரியாத பிரபுவின் அவஸ்தைகள் இருவரையும் இணைத்துவைக்க நண்பர்கள் செய்யும் முயற்சி ஆகியவற்றை சித்தரித்த விதம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.



புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாவுக்காகத் திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண், திருமண உறவுக் குள் தான் மோசமாக நடந்துகொண்டால் அதுவும் அம்மாவை பாதிக்கும் என்பதை யோசிக்க மாட்டாளா? பிடிக்கவே பிடிக்காத திருமணத்தில் எதற்காக 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்? ஒரு தவறும் செய்யாத கணவனை தான் வதைப்பது பற்றிய உணர்வே அந்த பெண்ணுக்கு ஏற்படாதா?



டேட்டிங் என்ற சாக்கில் பெண் களைக் காம நுகர்வுக்குப் பயன் படுத்திக்கொள்ளும் நண்பனை அதற் காகவே பிரிகிறார் நாயகி. பின்னாளில் அதே நண்பனோடு டேட்டிங் செல்ல ஒப்புக்கொள்ளும்போது நாயகியின் கதாபாத்திரம் சரிகிறது. யாருமே ஊடுருவ முடியாத இரும்புக் கோட்டை போலத் தன்னை ஆக்கிக்கொண்டுள்ள ஒரு பெண் மனம் மாறும் காட்சியில் எந்த அளவுக்கு வலு இருக்க வேண்டும்? படத்தில் அந்த இடம் சப்பென்று இருக்கிறது.



நகர்ப்புற இளைஞர்களிடம் ஊறி யிருக்கும் டேட்டிங் கலாச்சாரத்தை இயல்பாகச் சித்தரிக்கிறார் இயக்குநர். ஆனால் மாநகர இளைஞர்களும் யுவதிகளும் டிஸ்கொத்தே, மது, டேட்டிங் தவிர வேறு சிந்தனைகளே இல்லாதவர்கள் போன்ற சித்தரிப்பு உறுத்துகிறது.


பொருந்தாத திருமணத்தின் தொடக்க நாட்களைச் சித்தரிக்கும் சில காட்சிகள் இயல்பாக உள்ளன. காட்சிகளைக் கையாளும் விதத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் நேர்த்தியாக வெளிப் படுகிறார். செல்வராகவனின் வசனங்கள் இயல்பாக உள்ளன. மனோஜாவின் நண்பன், பிரபுவுக்கு ஆலோசனை வழங்கும் காட்சி இதற்கு உதாரணம்.



படமாக்கப்பட்ட விதம், உரையாடல் கள் ஆகியவற்றில் இருக்கும் நேர்த்தி, சம்பவங்களைக் கோத்த விதத்தில் இல்லை. பெரும்பாலான காட்சிகள் ஊகிக்கக்கூடியவையாக, பார்த்து சலித்தவையாக இருக்கின்றன. ஒவ் வொரு காட்சியையும் மிக நிதான மாக நகரவிடும் படத்தொகுப்பு திரைக்கதையை மந்தமாக்குகிறது.


வாமிகா, ராமகிருஷ்ணா இருவரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெறும் அளவுக்கு ராமகிருஷ்ணா தன் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார். உறுதியான ஆளுமையை வெளிப் படுத்துவதில் வாமிகாவின் கண்கள், முக பாவனைகள் நன்கு ஒத்துழைக்கின்றன. மனோஜாவின் அம்மாவாக வரும் கல்யாணி, பிரபுவின் அப்பாவாக வரும் அழகம் பெருமாள் ஆகியோரும் பொருத்தமான தேர்வுகள்.


அறிமுக இசையமைப்பாளர் அம்ரித் தின் இசையும், தரின் ஒளிப்பதிவும் கதையுடன் இணைந்து பயணிக்கின்றன. பாடல்கள் நினைவில் தங்கவில்லை என்றாலும் பின்னணி இசை பல இடங்களில் வசீகரிக்கிறது.


ஏற்கெனவே எடுத்தாளப்பட்ட கதையை புது தலைமுறை கதா பாத்திரங்களுடன் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஆனால் காட்சியின் அதிர்ச் சிக்காக, கதாபாத்திரங்களின் அடிப்படை குணாதிசயங்களில் செயற்கையான சிதைவுகளை திணித்திருப்பது கதையின் அஸ்திவாரத்தை வலுவிழக்கச் செய்கிறது. காட்சிகளின் இயல்புத் தன்மையும் சீராக இல்லை.


கலாபூர்வமான சில படங்கள் மெதுவாக நகரலாம். அதற்காக, மெதுவாக நகரும் படமெல்லாம் கலாபூர்வமான படமாகிவிடாது.

நன்றி - த இந்து

Wednesday, December 30, 2015

பூலோகம்-திரை விமர்சனம்:

குத்துச்சண்டையில் யாரையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல் கொண்ட உக்கிரமான வீரனால் வணிகச் சூழலின் சூழ்ச்சிகளை எதிர்த்து வெல்ல முடிகிறதா என்பதே ‘பூலோகம்’.


வட சென்னையில் ஒரு காலத்தில் இடியாப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்று பல குத்துச்சண்டை குழுக்கள் இருந்தன. அத்தகைய இரண்டு ‘பரம்பரை’களுக்குள் இருக்கும் ஜென்மப் பகையின் தற்கால அத்தியாயம்தான் படத்தின் கரு.



எதிர் பரம்பரை வீரரிடம் தோற்ற அவமானத்தால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிறார் ஜெயம் ரவியின் அப்பா. அந்த பரம்பரையின் இன்றைய வாரிசை வென்று பழிதீர்க்கத் துடிக்கிறார் ரவி. அதற்காக வெறித்தனமாகப் பயிற்சி செய்கிறார். எதிராளி ஆறுமுகமும் (ராஜேஷ்) இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முடிவோடு தயாராகிறார்.


பகைமையின் இந்த வெறியைப் பணமாக மாற்ற விளையாட்டு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் பிரகாஷ் ராஜ் திட்டமிடுகிறார். அவர் நடத்தும் பெரிய அளவிலான போட்டியில், ரவியின் அடி தாங்காமல் கோமாவில் படுத்துவிடுகிறார் ராஜேஷ். இதனால், ரவிக்கு வெறி மறைந்து குற்ற உணர்வு தலைதூக்குகிறது. குத்துச்சண்டையே வேண்டாம் என ஒதுங்கி சாமியார்போல வாழ்கிறார்.


ரவியின் குத்துச்சண்டை வெறியை வைத்து பல திட்டங்கள் போட்டிருந்த பிரகாஷ் ராஜ், அவரை மீண்டும் சண்டையில் இறக்க முடிவு செய்கிறார். பிரகாஷ் ராஜின் சதி வலையில் விழும் ரவி, அவரது சதிகளை புரிந்துகொண்டு, அதே விளையாட்டில் அவரை தோற்கடிக்க முடிவுசெய்கிறார். தன்னைவிட பல மடங்கு பலம் பொருந்திய அமெரிக்க குத்துச்சண்டை வீரரோடு இதற்காக மோதவேண்டி இருக்கிறது. அந்த போட்டியையும் பிரகாஷ் ராஜின் வியூகங்களையும் ரவி எப்படி எதிர்கொள்கிறார் என்பது ‘பூலோகம்’ கதை.


குத்துச்சண்டையின் ஆக்ரோஷத்தையும் வட சென்னையின் பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாக பதிவுசெய்துள்ளார் இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன். சண்டைக்குத் தயாராகும் காட்சிகள், சண்டைக்கு முன்பு அம்மன் கோயிலில் ரவி மேற்கொள்ளும் சடங்கு, சாவின்போது பாடப்படும் கானா பாடல் காட்சி, சாமியாராக வாழும் ரவியை மீண்டும் சண்டையில் இறக்குவது ஆகியவை நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான நாயக அடையாளங்கள் அதிகம் இல்லாமல் ஆத்திரமும் வேகமும் கொண்ட சராசரி மனிதராக ரவியைச் சித்தரித்துள்ளது பாராட்டுக்குரியது. எதையும் பணமாக்கத் துடிக்கும் வணிக மோசடியையும் ஊடகங்களின் விரும்பத்தகாத போக்கையும் கதையில் பொருத்தியிருக்கிறார்.



சண்டைகளைக் காட்சிப்படுத்திய விதம் ஆர்வ மூட்டக்கூடியதாக இருக்கிறது. மிகவும் அபாயகரமான ஜார்ஜோடு நடக்கும் குத்துச்சண்டையைவிட, போட்டிக்கான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் காட்சியில் ரவி - பிரகாஷ் ராஜ் இடையே நடக்கும் சொல் யுத்தம் விறுவிறுப்பு.



எல்லாம் சரிதான், சிக்கலான வணிக மோசடிகளை ரவி எப்படித் தெரிந்துகொண்டார் என்பது சொல்லப்படவே இல்லை. ஒப்பந்தம் போடும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்குப் பிறகு ரவி பேசும் அரசியல் ஆகியவை வசனகர்த்தா எஸ்.பி.ஜனநாதனின் குரலாகவே ஒலிக்கிறது.



அமெரிக்க குத்துச்சண்டை வீரரை பெண் வேடத்தில் அலையவிடுவது, ரவியின் திருமணத்துக்கு அவர் வந்து சவால் விடுவது போன்ற காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. அமெரிக்க குத்துச்சண்டை வீரரை அழைத்துவந்து மோதவிடுவது, வெவ்வேறு எடைப் பிரிவில் இருப்பவர்கள் பரஸ்பரம் மோதுவது போன்ற காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.


பழிவாங்கும் வெறியோடு கூடிய குத்துச்சண்டை வீரரின் கதாபாத்திரத்தை நன்றாகவே கையாண்டிருக்கிறார் ஜெயம் ரவி. அவரது உடல்மொழி, முகபாவனைகள் பாத்திரத்தின் தேவைக்கேற்ப உள்ளன. வசன உச்சரிப்பில் அவர் இன்னும் மெனக்கெட வேண்டும். படம் முழுவதும் வரும் த்ரிஷாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த வேலையும் இல்லை. எல்லோரையும் தனது வணிக விளையாட்டின் பகடைக்காய்களாக மாற்றும் வில்லன் வேடத்தில் பிரகாஷ் ராஜ் கச்சிதம். பயிற்சியாளர்களாக வரும் பொன்வண்ணன், ஷண்முகராஜா மனதில் நிற்கிறார்கள்


. நாதன் ஜோன்ஸின் தோற்றம் பிரமிக்கவைத்தாலும், நடிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.


தன் சீடர் இயக்கியுள்ள படத்துக்கு எஸ்.பி.ஜன நாதன் வசனம் எழுதியிருக்கிறார். வழக்கம்போல, படத்துக்கு அது பெரிய பலம். வசனங்களில் தெறிக்கும் அரசியல், கூர்மையும் காரமும் கொண்டுள்ளது. படத்தின் முதல் பாதியில் படத் தொகுப்பு நேர்த்தியாக இல்லை. நம்பகத்தன்மை விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் வணிக அரசியலைப் பேசும் நேர்த்தியான பொழுதுபோக்குப் படமாக அமைந்திருக்கும்.


the hindu

Thursday, October 10, 2013

இந்தியா முழுக்க மோடி அலை வீசுகிறதா? - பொது மக்கள் கருத்து , தமிழ் அருவி மணியன் பேட்டி


தமிழகத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக, தே.மு.தி.க., பா.ஜ., ம.தி.மு.க., இணைந்த "மாற்று அணியை' உருவாக்க முயற்சி செய்து வருகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். காமராஜர் காலத்தில் மாணவர் காங்கிரசில் சேர்ந்து, காமராஜரால் "தமிழருவி' என்று அழைக்கப்பட்டவர். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி, லஞ்சம், ஊழலுக்கு எதிராக உரத்தக்குரல் எழுப்புவர். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசியவர், இப்போது இந்த ஆட்சியை விமர்சனம் செய்பவர். தமிழகத்தில் பா.ஜ., அல்லாத பிறக்கட்சியினர், மோடி பிரதமராக வருவது குறித்து கருத்து ஏதும் வெளிப்படையாக வெளியிடாத நிலையில், புதுக்கூட்டணி உருவாகி, மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புபவர்.


தினமலர் நாளிதழுக்கு இவர் அளித்த சிறப்பு பேட்டி...

"பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல; காங்கிரஸ் வரக்கூடாது என்பதற்காக தான் மாற்று அணிக்கு முயற்சிக்கிறேன்' என்று கூறியுள்ளீர்களே...



இடதுசாரிகள், மாநிலக்கட்சிகள் இணைந்து வலிமை மிக்க 3 வது அணி அமைத்து, ஆட்சிச்சூழல் அமையும் என்றால் ஆதரவு தருவேன். அப்படி ஒரு ஆட்சியில், தமிழக முதல்வர் ஜெ., பிரதமரானால், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதரிப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எது எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். ஊழலால் நாட்டையே கொள்ளையடிக்கும், இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரசிடமிருந்து நாடு விடுபட வேண்டும். அதற்கு மாற்று, மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி அரசு அமைய வேண்டும்.


மோடி பிரதமராவது காலத்தின் கட்டாயமா?

காலம், மக்கள் மூலம் காரியம் நடத்தும். வாக்காளர்கள் விதியை எழுதுவார்கள். மோடி மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு, நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அந்த இளைஞர் கூட்டம் மாற்றத்தை விரும்புகிறது. அவர்கள் ஊழலுக்கு, ஜாதி, மதத்திற்கு எதிரானவர்கள். மதங்களை வைத்து, மதசார்பின்மை என்று கூறி அரசியல் நடத்துபவர்கள் யார் என்று இளைஞர்களுக்கு 


தெரியும். அவர்கள் மோடியைத் தான் தேர்வு செய்வார்கள், ஏனென்றால் மோடி ஊழலற்ற மனிதர். மோடி மூலம் மாற்றம் நிகழவேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

நாட்டிற்கு கோயில்களை விட கழிப்பறைகள் தான் அவசியம் என்கிறாரே மோடி...

இதற்காகவே நான் மோடியை கூடுதலாக ஆதரிப்பேன். இந்த தெளிவுக்காகவே அவருக்கு அதிக மதிப்பெண் தரலாம். ஆன்மிகம் என்பது கோயிலில் சுவாமி கும்பிடுவது மட்டும் அல்ல; சக மனிதர்கள் நலம் தான் ஆன்மிகம் என மோடி உணர்ந்திருக்கிறார்.

நல்ல பேச்சாளர், சிந்தனையாளரான நீங்கள் மோடியின் மேடைப்பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மக்களின் நாடி, நரம்பை மின்னல் போல் தாக்கும் சக்தி மேடை பேச்சுக்கு உண்டு. அந்த சக்தி மோடிக்கு இருக்கிறது. அவருடைய மேடைப் பேச்சில் லட்சியம், தெளிவு இருக்கிறது. பிரதமர் வேட்பாளர் என்பதால், தேசிய அரசியலைத்தான் பேசுகிறார். ஒரு இந்துவாக அடையாளம் காட்டி பேசவில்லை. மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டி பேசுகிறார். திருச்சியில்,மோடிக்கு இவ்வளவுக்கூட்டம் எப்படி வந்தது? அவரது பேச்சை கேட்கத்தானே! ஹிட்லர், ஒபாமா, கருணாநிதி பேச்சால் வென்றவர்கள் தானே.

உங்கள் பார்வையில் மோடி அலை வீசுகிறதா?

நிச்சயமாக, இந்தியா முழுக்க வீசுகிறது. கூட்டணி சரவர அமையாமல், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஓரிடம் கூட கிடைக்காமல் இருந்தாலும், மோடி பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. நான் முயற்சிப்பது போல கூட்டணி அமைந்தால், 15 முதல் 20 இடங்கள் வரை, இந்த மாற்று அணிக்கு கிடைக்கும். அ.தி.மு.க.,விற்கு 20 இடங்கள் வரை கிடைக்கும். காங்.,-தி.மு.க., கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைப்பதே அபூர்வம். நாற்பது தொகுதிகளிலும் மூன்றாம் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

இன்று பிரதமர் பதவியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கேலி, கிண்டல் செய்கிறார்கள். மோடி பிரதமரானால், வெளிநாட்டில் இந்திய கவுரவம் காக்கப்படுமா?

"ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்படாத பிரதமரை யாரும் கிண்டல் செய்ய முடியாது. குறைந்த எம்.பி..க்களுடன் கவுரவமாக ஆட்சி  
செய்தார் சந்திரசேகர். மன்மோகன் சிங்கை இயக்குபவர் சோனியா. இதுவரை எந்த பிரதமரும், சாவி கொடுத்த பொம்மையாக இருக்கவில்லை. மோடி பிரதமரானால், நாட்டின் கவுரவம் 100 மடங்கு உயரும். இப்போது போல்,"ரிமோட்' மூலம் மோடி இயங்கமாட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., அவரை இயக்கும் என்று பிரசாரம் செய்யப்படுகிறதே...

"ரிமோட்' கன்ட்ரோலில் இயங்கினால் மரியாதை இழப்பார். மோடி அப்படி இருக்க மாட்டார். குஜராத் ஆட்சி, இதற்கு சாட்சி. பாபர் மசூதி பிரச்னையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக அவர் செயல்பட மாட்டார்.

கூட்டணிக்கு முயற்சிக்கும் நீங்கள் மோடியை சந்தித்தீர்களா?
அவர் பிரதமர் வேட்பாளர். உடனடியாக சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோவிடம் பேசிஉள்ளேன்.

மோடி- பிரதமர், மாற்று அணி என்பது குறித்து விஜயகாந்தின் கருத்து என்ன?
மோடிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ விஜயகாந்த் என்னிடம் ஏதும் சொல்லவில்லை. ஆனால் மாற்று அணியில், தே.மு.தி.க.,விற்கு அதிக இடம் ஒதுக்கப்படும். இதுவே நீங்கள் அ.தி.மு.க.,-தி.மு.க., கூட்டணியில் சென்றால் குறைந்த இடங்கள் தான் ஒதுக்குவார்கள் என்று அவரிடம் கூறியுள்ளேன். 2016 ல் முதல்வர் கனவில் உள்ள நீங்கள், அந்த கூட்டணியில் குறைந்த இடங்களில் போட்டியிடுவது சாத்தியமா என்றும் கேட்டேன்.

இதே கூட்டணி முயற்சி, சட்டசபை தேர்தலிலும் தொடருமா?

அதை இப்போது சொல்ல முடியாது. விஜயகாந்த், முதல்வராக விரும்பலாம். வைகோ ஆக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என்றாலும் அ.தி.மு.க.,-தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தான் அடுத்து தமிழகத்தில் அமையும்.

சமீபகாலமாக, வைகோவை முன்னிலைப்படுத்தி நீங்கள் பேசி வருவது ஏன்?

தமிழக அரசியல் தலைவர்களை, 40 ஆண்டுகளாக பார்த்து கழித்துக்கொண்டு வந்தேன். மிஞ்சியது வைகோ. அவரின் தனிமனித வாழ்க்கை தூய்மையானது. பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரானவர். பதவியை விரும்பாதவருக்கு பதவியை தரலாமே. லோக்சபா தேர்தலில், அவரது தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்வோம்.இவ்வாறு பேட்டியளித்தார். 


மக்கள் கருத்து 



1 தமிழருவி மணியனின் ஒரே நோக்கம் தமிழ் நாட்டில் மீண்டும் திமுக தலை தூக்காமல் இருக்க வேண்டும் என்பதே. ஆகவே பிஜேபி, தேமிதிக்க, மதிமுக இணைந்த கூட்டணியை உருவாக்குவதன் மூலம் விஜயகாந்த் திமுகவுடன் சேர்வதை தடுத்து விடலாம். பிஜேபி- தேமுதிக- மதிமுக கூட்டணி சுமார் 20% வாக்க்குகளை பெரும். நாகர்கோயில் தொகுதியில் மட்டுமே பிஜேபி வெற்றி பெரும். தேமுதிக மதிமுக பூஜ்யம்தான். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற ஒரே காரணத்துக்காக திமுக படுதோல்வியை அடையும். காங்கிரஸ் புதுசெர்ரி தொகுதியில் மட்டுமே வெற்றி பெரும். திமுக காங்கிரஸ் மற்றும் மற்ற சிறிய கட்சி கூட்டணி சுமார் 32% சத வாகுகளை பெரும். ஆகவே மும்முனை போட்டி என்று வந்தால் அண்ணா திமுக கூட்டணி தமிழ்நாட்டில் சுமார் 44% வோட்டுகளை பெற்று 38 எம்பி தொகுதிகளை கைப்பற்றும். 



2 வரும் தேர்தலில் மக்கள் திரும்பவும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு அளித்தால், எந்த ஆண்டவனாலும் இந்தியாவை காப்பாத்த முடியாது......மணியன் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு அபாக்கிய சூழ்நிலை வரக் கூடாது என்று பாடுபடுகிறார்... 




3 பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவுடன் மணியன் மீது எவ்வளவு கண்டனங்கள், பாய்ச்சல்கள். அப்பப்பா. இதுகாறும் பொது வாழ்வில் நேர்மையாளராக இருந்துள்ளார், ஊர் சொத்தை கொள்ளை அடிக்கவில்லை. ஆனால், அது எல்லாம் மறந்து விட்டது. பா.ஜ.க.வை தொட்டவுடன் அவர் பாவியாகி விட்டார். ஊரை அடித்து உலையில் போட்டு, பா.ஜ.க.வை திட்டியிருந்தால் மணியன் நல்லவர். அப்படிதானே. இப்போது புரிகிறது. தவறு அரசியல்வாதிகளிடம் இல்லை. மக்களிடம்தான் இருக்கு....



வேண்டாம் வேண்டாம்னு கத்தியும் வலிய வலிய போயி பேசி பாகிஸ்தான் நம்மை கிராமத்து பெண் போல் அழுகிறார்கள் என்று அசிங்க படுத்தியும்,, அப்படி சொல்லவே இல்லை என்று கயிறு திரித்தார்கள். அப்படி சொன்னதை, பாகிஸ்தான் மெடிஆகலும் பத்திரிகைகளும் ஆதாரத்துடன் போட்டுவிட அதெல்லாம் சும்மனாச்சுக்கு என்றார்கள். எல்லாம் மத சார்பின்மை படுத்தும் பாடு. இதில் கவுரவம் பாக்கணுமாம். மண்ணு மோகன் வெச்சிருக்கார். கேளுங்க. ஒரு ரூபாய்க்கு மூணு கிலோ கவுரவம். 


 5 எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். இலங்கை தமிழர்கள் விசயத்தில் மட்டும் ஏன் அப்படி யோசிக்க மாட்டேன் என்கிறீர்கள். 


6  காந்தி , காமராஜ் ஆகியோரின் கொள்கைக்கு எதிரான ஆர் எஸ் எஸ் சின் செல்ல பிள்ளை மோடியை இவர் ஆதரிப்பது , படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.... மன்மோகன் சிங் ஆட்சியால் 1990 க்கு பிறகு இந்தியாவின் மதிப்பு ஆயிரம் மடங்கு வுயர்ந்துள்ளது என்பதை இவர் காந்தி கண்ணாடி போட்டு பார்த்தல் தான் தெரியும்.... இருட்டில் எரியும் மின்விளக்கு கண் கூசுகிறது என்று கூலிங் கிளாஸ் போடுபவருக்கு அது தெரியாது.... ஊழல் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பொது அதுவும் அப்படித்தான் ..


.. நேற்று ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை , மூன்றில் ஒரு குழந்தை குஜராத்தில் எடை குறைவான பிள்ளை , குறைந்த அளவு உணவு கூட இல்லாத குழந்தை என்று வந்துள்ளது , அதை மோடி அமைச்சரும் ஒத்து கொண்டுள்ளார்....மற்றொன்று குஜராத் பாகிஸ்தான் எல்லையில் மாநில அரசின் கண்காணிப்பு திருப்தி கரமாக இல்லை என்று....கக்கூஸ் கட்டுவேன் என்று சொல்லும் மோடி அதை உபயோக்கிக்க முதலில் உணவு வேண்டும் என்று எண்ண தோன்றவில்லை ... அதை காங்கிரஸ் உணவு பாது காப்பு சட்டம் மூலம் அளிக்க விளைகிறது.... காந்தி யின் பெயரில் அரசியலில் கள்ள கணக்கு போட வேண்டாம்.... 


7 1990 க்குப் பிறகு இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதென்னவோ உண்மை மாதிரி தெரிந்தாலும் அது ஒரு மாயைத் தோற்றம்தான். இந்தியாவில் இருந்த அனைத்து விவசாய நிலங்களையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை. இப்படியே போனால் சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். சுயசார்பு நிலையிலிருந்த இந்தியாவை வெளி நாட்டிடம் கையேந்த வைத்ததைத் தவிர மன்மோகன் அரசு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. சும்மா வெறுமனே குஜராத்தில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து பெரிதாக்காமல் மற்ற மாநிலங்களின் முன்னேற்றத்தில் மத்திய அரசு அக்கறை காட்டினால் நல்லது. ஊழல், ஊழலைத் தவிர வேறொன்றுமில்லை என்கிற நிலையில் இருக்கிற மத்திய அரசு....



நன்றி = தினமலர்