Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Thursday, December 20, 2012

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://timesofindia.indiatimes.com/photo/14210217.cms 

விகடன் மேடை - வைரமுத்து

மீரா முகம்மது, தோப்புத்துறை.


''தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?''


''உங்கள் கேள்வி என் மனதுக்குள் சின்னதொரு தீக்குச்சி கிழித்தது; சிந்திக்கவைத்தது. நல்ல பதிலுக்குக் கொஞ்சம் உழைக்க வேண்டி இருந்தது.
நானறிந்த புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டு மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம் மற்றும் சொச்சம். இந்த 7 கோடிக்குச் சற்றொப்ப மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகளில் வரவு விகடன் மேடை - வைரமுத்து

செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இந்திய மதிப்பில் எவ்வளவு என்று ஆராய்ந்தேன்.
6.8 கோடி மக்கள்தொகை கொண்ட இத்தாலி அரசு ஆண்டுக்கு 60 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது.


6.53 கோடி மக்கள்தொகை கொண்ட பிரான்ஸ் 83 லட்சத்து 64 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

6.2 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டன் 64 லட்சத்து 73 ஆயிரம் கோடி செலவிடுகிறது.


6.18 கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி 86 லட்சத்து 53 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

ஆனால், 7.2 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுக்கு அதிகபட்சமாக 98 ஆயிரத்து 213.85 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.


அவையெல்லாம் நாடுகள், நம்முடையது மாநிலம் என்றபோதிலும் மக்கள்தொகையில் சற்றொப்ப நிகர் என்பதனால், இந்த ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.


எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு சென்று சேர்கிறது என்பதும் கருதத்தக்கது. இன்னும் நாம் பாதைகளை முழுக்கக் கட்டமைக்க வேண்டும்; பயணம் நெடுந்தூரம்!''


சி.வந்தனா, குமுளி.


''அண்மையில் நீங்கள் படித்ததில் அதிரச் செய்தது?''


''அது ஒரு துணுக்கு.

ஒரு குடும்பமே தற்கொலைக்குத் தயாரா கிறது. வாழ்வில்தான் தோற்றுப்போனோம். தற்கொலையிலும் தோற்றுவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் தந்தை, சாவுக்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்.


தூக்கில் தொங்கலாம்; ஒருவேளை கயிறு அறுந்துவிட்டால்..? விஷம் அருந்தலாம்; ஒருவேளை அது கலப்படமாயிருந்தால்..? கிணற்றில் குதிக் கலாம்; ஒருவேளை நீர்மட்டம் குறைவாயிருந் தால்..? தீயிட்டுக்கொள்ளலாம்; பாதியில் அணைந்துபோனால்..?


தகப்பன் குழம்பிக்கொண்டிருக்கும்போது, கடைசிக் குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது:

''அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது, பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா?''


உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி அது!''


எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.


''சென்னை வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத சம்பவங்கள்?''


''நான் காதலித்த மனிதர்களின் கடைசித் தருணங்கள்.


ஒரு குழந்தை நிலாவைப் பார்த்துக் கை நீட்டுவதுபோல, என் பள்ளி நாட்களில் இருந்து யாரையெல்லாம் பார்க்கத் துடித்துப் பரவசப் பட்டேனோ, அந்த மகா கலைஞர்களின் இறுதி அஞ்சலியை இறுதி வரை இருந்து செலுத்திய நிகழ்வுகள்தாம் மறக்க முடியாத சம்பவங்கள்.


கண்ணம்மாப் பேட்டை.


எரிமேடையில் கிடத்தப்பட்ட உடல் எருக் களால் மூடப்படுகிறது. கொள்ளியிட்ட பிறகு, எல்லோரும் போய்விட்டார்கள். தங்க உடல் தின்னத் தாவுகிறது தீ. நானும் நண்பன் அறிவுமதியும் மட்டும் இடுகாட்டில் எஞ்சி நிற்கிறோம். நான் ஓடிப்போய் சிதையில் விழுந்து எருவைத் தள்ளி மீண்டும் முகம் பார்க்க முனைகிறேன். கை பிடித்து இழுத்த நண்பனோடு எரியும் வரை இருந்து கண்ணீரோடு விடைபெறுகிறேன். அது என் காதல் கவிஞன் கண்ணதாசனுக்கு நான் செலுத்திய அஞ்சலி.


மெரினா கடற்கரை.


தங்கத்தைப் பூட்டிக்கொண்டு குழிக்குள் இறங்கு கிறது சந்தனப் பேழை. அரசியல், கலை உலக மனிதர் கள் சுற்றி நிற்கிறார்கள். ஓரத்தில் கவலை கட்டிய கண்களோடு நின்ற என்னை, 'வைரமுத்து வா; நீயும் மண்ணுத் தள்ளு’ என்று கை நீட்டி அழைக்கிறார் அந்நாள் அமைச்சர் க.ராசாராம். குனிந்து புறங்கையில் மணல் தள்ளுகிறேன். சந்தனப் பேழை மேல் சரசரவென்று சரிகிறது மணல். நினைத்துக்கூடப் பார்க்கவில்லை எம்.ஜி.ஆருக்கு நான் மண் தள்ளுவேனென்று.


பெசன்ட் நகர் மயானம்.


மின் மயான மேடையருகே பிரபு - சத்யராஜ் - நான் மூவர் மட்டும். பட்டு வேட்டியில் சுற்றப்பட்டிருக்கிறது புவியாண்ட கலைஞனின் பூத உடல். விசைப்பலகையில் தூக்கிவைக்கிறோம். கடைசியாக முகம் பார்த்துக் கண் மூடிக்கொள்கிறோம். செத்தும் சாகாத ஒரு ஜீவசரித்திரத்தை அடுப்புக்குள் விசிறியடிக்கிறது விசைப்பலகை. நடிகர் திலகம் சிவாஜியின் கடைசிக் கணங்களில் கனத்த மனத்தோடு நான்.


அந்த மூன்று மகா கலைஞர்களுக்கும் பிள்ளைக்கடன் செய்தது எனக்கு வரமா? வலியா?


நினைக்கும்போது எல்லாம் வலித்து வலித்து அடங்குகிறது இற்றுப்போன இருதயம்!''


ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.


''இலக்கியத்தில் நகைச்சுவை உண்டா?''


''உண்டு. ஒன்று சொல்கிறேன்.


சங்க இலக்கியத்துக்கு எழுத்தெண்ணி உரையெழுதியவர் அவ்வை துரைசாமிப் பிள்ளை. 'உரைவேந்தர்’ என்று ஓங்கு புகழ் பெற்றவர். ஒரே இடத்தில் உட் கார்ந்து எழுதி எழுதி அவருக்கு மூல நோய் கண்டுவிட்டது. அந்தத் துயரத்தை அவர் மைந்தர் அவ்வை நடராசன் எனக்கு நயமாகச் சொன்னார்:


'என்ன பண்றது கவிஞர்? 'உரை’ எழுதியே எங்க அப்பாவுக்கு 'மூலம்’ வந்துட்டது’.


நினைக்கும்போது எல்லாம் என்னைக் குலுக்கும் நகைச்சுவை இது!''


கி.ராமகிருஷ்ணன், சென்னை-24 


''உண்மையில் யார் உயர்ந்த மனிதன்?''


''ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள்.

சமூக மனிதன்; குடும்ப மனிதன்; தனி மனிதன்.

இதில் சமூக மனிதன் என்பவன் மகா நடிகன்; நடித்து வெல்பவன்.

குடும்ப மனிதன் என்பவன் பாதி நடிகன்; நடித்துத் தோற்கிறவன்.

தனி மனிதன் என்பவன்தான் மெய்ம் மனிதன். ஒப்பனை இல்லாமல் அவன் அவனாகவே இருப்பவன்.

மூன்று பேருக்கும் மதிப்பெண் இட்டுப் பார்க்க வேண்டும். சமூக மனிதனையும் குடும்ப மனிதனையும்விட ஒரு மதிப்பெண் அதிகம் பெறுகிற தனி மனிதன் எவனோ அவனே உயர்ந்த மனிதன்!''


ரஜினி முருகன், வேலூர்.



''உங்களை மன்றாடிக் கேட்கிறேன்... 'கோச்சடையான்’ பாடல்களில் சில வரிகளாவது சொல்லுங்களேன்?''


''உங்கள் கேள்வியை ரஜினியின் செவி களுக்குக் கொண்டுசென்று அவர் சம்மதத்தோடு வெளியிடுகிறேன்.


ஊடகத்தில் வெளியிடப்படும் 'கோச்சடை யானின்’ முதல் பாடல் இதுதான்.
சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார் தளபதி இளைய ரஜினி. அழுது பாடுகிறாள் அவர் காதலியான இளவரசி தீபிகா படுகோனே. சரித்திரக் கதை ஆதலால், சங்கத் தமிழில் நடக்கிறது பாட்டு:



தீபிகா:  செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய்...
இதயம்                                                       
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே
 நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து 
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
 இதயம் 
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
 சிறுகோட்டுப் பெரும்பழம்   
தூங்கி யாங்கு 
என் உயிரோ சிறிதே 
காதலோ பெரிதே



 ரஜினி: பூப்பது மறந்தன கொடிகள் 
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று 
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
 வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?
அப்பப்பா!



இசையோடு கேட்கையில் உயிர் உருகி ஓடுகிறது தரையில்!''



ச.அ.அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை.


''திரையுலகில் நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?''



''தேடிக்கொண்டேயிருக்கிறேன் - 'சின்ன சின்ன’ ஆசை பாடிய மின்மினியை!
சூரியனைப் பனிக்கட்டியாக்கிய பாட்டுக்காரி; இந்தியாவைச் சுழற்றியடித்த பாட்டுக்குச் சொந்தக்காரி.


என்ன ஆனார்? எங்கிருக்கிறார்? இதுவரைக் கும் தகவல் இல்லை.


'அன்புள்ள மின்மினி!


உன் தங்கக் குரலால்தான் என் தமிழ் கேட்டது உலகம். உனக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. என் இனிய அன்பளிப்பாக என் சேமிப்பில் இருந்து ஒரு லட்ச ரூபாய் உனக்கு ஒதுக்கிவைத்திருக்கிறேன். குடும்பத்தோடு வந்து பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப்படுத்து சகோதரி!''


நிறைவு செய்கிறேன்;

நன்றி.






டிஸ்கி -1.இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டிhttp://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html


2. நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html3. 

3. என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

4 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி  


http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html

 


Wednesday, December 19, 2012

ரீ ரெக்கார்டிங்கில் பட வெற்றியை கணிக்க முடியுமா? - இசை ஞானி பேட்டி @ குமுதம்

இளையராஜாவின் பதில்:ஒரு படத்துக்குக் Re-recording செய்யும்போதே, அந்தப் படத்தின் வெற்றி/தோல்வியை உங்களால் கணிக்க முடியுமா?

♫ ஒரு கதை தேறும்-தேறாது என்பது ஒருவர் வந்து கதை சொல்லும்போதே தெரிந்துவிடும். Just imagine.. நான் தொள்ளாயிரத்து சொச்சம் படம் பண்ணியிருக்கிறேன் என்பது பெரிய விஷயமில்லை. அதற்குப்பின் எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

நீங்கள் ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு, “ச்ச.. படமா எடுத்திருக்கிறான்?” என்று எண்ணி, அதைப் பார்க்கமுடியாமல் பாதியில் எழுந்து போன படங்கள் எத்தனை இருக்கும்? அதுபோன்ற படங்களையும் நான் நான்குமுறை பார்த்தாகவேண்டும். முதல்முறை எனக்கு முழுவதும் போட்டுக்காட்டுவார்கள். அதன்பின்னர் Music Compose பண்ணுவதற்காக Theater’ல் வந்து ஒவ்வொரு ரீலாக பார்க்கவேண்டும். அதன்பின்னர் Music எழுதிமுடித்து, அத்துடன் Conduct செய்து காட்டும்போது ஒருமுறை பார்க்கவேண்டும். Take’ன் போது எத்தனை Takes ஆகும் என்று தெரியாது. அத்தனை முறை மறுபடி மறுபடி பார்க்கவேண்டும். 



ஆக, நீங்கள் ஒருமுறை பார்த்து ”பிடிக்கவில்லை” என்று கூறும் படத்...தை நான் இத்தனை முறை பார்த்தாகவேண்டும். அப்போதும்கூட, ‘இந்தப் படம் இப்படி இருக்கிறதே.. இதற்கு எப்படி Music போடுவது?’ என்று எனக்குத் தோன்றாது. மாறாக, ‘இந்தப் படத்தை எப்படிப் பிழைக்கவைப்பது?’ நம் இசை இதற்கு எப்படி உதவியாக இருக்கும்?” என்றே தோன்றும். இல்லையென்றால், நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களை நீங்கள் பார்த்தேயிருக்கமாட்டீர்கள்.

பாடல்கள் நன்றாக இருந்தும் படம் ஓடவில்லை என்பது ரொம்ப Normal’ஆன விஷயம்தானே? பாடல்களுக்காக படம் என்று சொன்னால், ‘தென்றல் வந்து தீண்டும்போது’ என்ற பாடலுக்காகவே அந்தப் படத்தை நீங்கள் ஓட்டியிருக்கவேண்டும். அது உங்கள் தவறுதானே தவிர என் தவறு அல்ல. பாடலுக்காக அந்தப் படத்தில் இருந்த தவறை எல்லாம் நீங்கள் மன்னித்திருக்கலாம் அல்லவா? ‘காதல் ஓவியம்’ படத்தின் ஒவ்வொரு பாடலுக்காகவும் அந்தப் படம் Silver Jubilee’ஐ தாண்டியிருக்கலாம்.

ஆக, படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், தவறு என்னிடத்திலில்லை. பாடல்கள் நன்றாயிருக்கிறது என்று இன்றைக்கும் சொல்கிறீர்களா இல்லையா?”







#ilayaraja இளையராஜா - பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் கூட்டணியில் உருவான பாடல்களை விட இளையராஜா - பாலுமகேந்திரா கூட்டணி உருவாக்கிய பாடல்கள் மனத்திற்கு இதமாக இருக்கிறதே.. என்ன காரணம்?

- கருப்பையா பாலகிருஷ்ணன், மதுரை.

நான் என்ன கட்சி வைத்துக் கொண்டா இருக்கிறேன்? கூட்டணி சேர! யாருடனும் நான் இல்லை! இவர்கள் வருகிறார்கள்! போகிறார்கள்! - எல்லாப் பாடல்களும் அவர்களின் கதைக்காக நானாகிய நானே உருவாக்கியதுதான்!


இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (26.12.2012)  ,


நன்றி -

பகிர்வு நன்றி: திரு. ஜெகதீஷ் ஜெயராமன்., புது மாப்ளை பறவை,இளையராஜா ஃபேன்ஸ்

Thursday, December 13, 2012

நீதானே என் பொன்வசந்தம்


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmCJ11rLaPQLmxdUVDVOPwJsZf66pw3hVzsriU8om_UjwH3qMJcxRH5xsyt5fTXWd1ik-Pp7yWcsVKUvgxiT19NLlDYdqCnljM9pxjB-n09V7Ukfg-ccN7g1CjlwtaDvkfO6PvPM8GTdm-/s1600/Neethane-En-Ponvasantham-jeeva-samantha-gaiutham-menon.jpg


"இது காதலின் பொன்வசந்தம்!"

கி.கார்த்திகேயன்





1. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி 


'' 'நீதானே என் பொன்வசந்தம்’ ஷூட்டிங் முடிஞ் சிருச்சு... 'கதை கேட்டப்போ இவ்ளோ ஃபீல் பண்ணலை பிரதர். இப்போ யோசிச்சா என் வாழ்க்கையின் காதல் எபிசோடுல மறுபடியும் வாழ்ந்துட்டு வந்த ஃபீலிங்’னு சொன்னார் ஜீவா. எடிட்டிங் டேபிள்ல ஆண்டனி பார்த்துட்டு, 'ஜி... பழசுலாம் ஞாபகம் வருது... நாளைக்கு எடிட் வெச்சுக்கலாமா?’னு மெல்ட் ஆகிட்டார்.


 எடிட்டிங்ல பார்க்கும்போது எனக்கும் சட்டுனு பிளாங்க் ஆகிடுது. லவ் இஸ் ஃப்யூட்டிஃபுல்!' - காதலும் காதல் நிமித்தமுமாகப் பேசத் தொடங்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். கோடம்பாக்கத்தின் 'லவ் ஸ்பெஷல்’ இயக்குநர். 'அலைபாயுதே’, இளையராஜா, கமல், அகிரா குரோ சோவா, அஜித், சசிகுமார், ஆர்யா, சமந்தா என்றெல் லாம் நீண்ட உரையாடலில் தனது வாழ்வின் ரியல் காதல்பற்றிப் பேச்சு வந்தபோது ஒரு சஸ்பென்ஸ் வைத்தார் கௌதம். அது இறுதியில்...


 ''முதல் பார்வையிலேயே காதல், பிரிந்த காதலியைத் தேடிச் செல்லும் காதலன், தனக்குத்தானே குழம்பும் காதலி... இதெல்லாம் 'ழிணிறி’-யிலும் (நீதானே என் பொன்வசந்தம்) இருக்கும் தானே?'



''சந்தேகமே வேண்டாம். என் காதல் படங்களின் ஸ்ட்ரக்சர்ல பெருசா எந்த மாற்றமும் இருக்காது. ஆனா, மொமன்ட்ஸ்தான் விஷயம். சின்னச் சின்ன தருணங் களில்தான் காதல் ஒளிஞ்சிருக்கும். அந்தத் தருணங்களில்தான் நான் லைஃப் சேர்க்கிறேன். 'விடிவி’-ல த்ரிஷா ரொம்பக் குழம்புவாங்க. ஆனா, இதுல சமந்தா கேரக்டர் அப்படி இல்லை. ரொம்ப போல்டு. ரொம்ப க்ளியர். சும்மா லவ்வர் பின்னாடி வால் பிடிச்சுட்டே போறவ இல்லை.


 'சிந்து பைரவி’ சுஹாசினி, 'புதுமைப் பெண்’ ரேவதியோட ஒப்பிடாதீங்க. ஆனா, காதலிகளில் சமந்தா கேரக்டர், ஒரு புதுமைப் பெண். சாய்ந்து சாய்ந்து சமந்தா பார்க்கிறதே தனி அழகு... ஜீவா கண்ல எப்பவும் காதல் நதி ஓடிட்டே இருக்கும். க்ளைமாக்ஸ்ல சமந்தா கேரக்டர் எடுக்கும் முடிவு, அத்தனை வருஷப் பிரிவுக்கு அப்புறம் ஜீவாவும் சமந்தாவும் பேசிக்கிற விஷயங்கள்... சும்மா காலி ஆயிடுவீங்க!''



''உங்களுக்குப் பிடிச்ச உலக லவ் கிளாஸிக் படங்கள் என்னென்ன?''



''இதுக்கு நேரடியா 'எந்தெந்தப் படத்துல இருந்து சீன் பிடிக்கிறீங்க?’னு கேட்ர லாமே. உலக சினிமாக்களாப் பார்த்து கதை, சீன்லாம் உருவிப் படம் எடுக்கிறேன்னு என்னைப்பத்தி வெளியே ஒரு பேச்சு இருக்குன்னு எனக்கும் தெரியும். ஆனா, நல்லாக் கவனிச்சீங்கன்னா புரியும், 'அலைபாயுதே’ படத்துல வரும் 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாட்டுதான் என் காதல் படங்களின் இன்ஸ்பி ரேஷன்.



ரெண்டு பேருக்குள் காதல், சின்ன மோதல், பிரிவு, தேடிப் போறான் லவ்வர். ஹேப்பி அல்லது சோகமான எண்ட். காதல்ல அவ்ளோதான் என் டிராவல் இருக்கும். மணி சார் படங்களைவிடவா நமக்கு வேற காதல்படங்கள் வேணும்? 'மௌன ராகம்’ படத்தின் கார்த்திக் போர்ஷன், 'இதயத்தைத் திருடாதே’, 'அலைபாயுதே’, ராஜ்கபூர் நடிச்ச 'ஆவாரா’... இதெல்லாம்தான் எனக்குப் பிடிச்ச லவ் கிளாஸிக்ஸ்.



 மத்தபடி உலக சினிமாக்கள் பார்க்கிற பழக்கமே எனக்கு இல்லை. அகிரா குரோசோவாவின் ட்ரீட்மென்ட்பத்தி தெரியும். ஆனா, அவரோட 'ரோஷமான்’ உட்பட ஒரு படத்தைக்கூடப் பார்த்தது இல்லை. நான் உணர்ந்ததை, அனுபவிச்சதை வெவ்வேறு சம்பவங்கள் மூலமா சினிமா பண்றேன். 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாட்டு எனக்குள் உண்டாக்கின எமோஷனுக்கு இன்னும் தாராளமா பதினஞ்சு படங்கள் எடுப்பேன்!''



''உங்க இயக்கத்தில் நடிக்காத ஹீரோக்கள் பத்தி கமென்ட்ஸ் சொல்லுங்க?''



''அஜித்... அவருக்கு இருக்கிற மாஸ்... சான்ஸே இல்லை. அவருக்குக் கிடைக்கிற ஓப்பனிங் என்னைப் பிரமிப்படையவைக்கும். இத்தனைக்கும் அவரோட ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏத்த ஒரு படம்கூட அவருக்குக் கிடைக்கலை. 'உதயம்’ல நாகார்ஜுனா சைக்கிள் செயினைப் பிச்சு இழுக்கிற மாதிரியோ, 'பாட்ஷா’ல தங்கச்சி மேல கைவெச்சதும் ரஜினி தண்ணி பம்ப்பை உடைச்சு அடிக்கிற மாதிரியோ ஒரு பவர்ஃபுல் சீன்கூட அஜித்துக்கு இன்னும் சிக்கலை.



விஜய்னா டான்ஸ்தான். ஒவ்வொரு பாட்டிலும் ஏதோ ஒரு ஸ்டெப்ல இழுத்துப் பிடிச்சுடுறார். அவரைவெச்சு முழுக்க முழுக்க ஒரு டான்ஸ் ஃபிலிமே பண்ணலாம். 'பாஸ்’ படத்துல ஆர்யா காமெடி பண்ணியிருந்தது ரொம்பப் பிடிச் சிருந்தது. ஹீரோயின்கள்ல அஞ்சலி அசரடிக்கிறாங்க!''




''அஜித், விஜய் பத்தி இவ்ளோ நல்ல ஒப்பீனியன் சொல்றீங்க... ஆனா, 'துப்பறியும் ஆனந்த்’ல அஜித், 'யோஹன்’ல விஜய்... உங்ககூட சேர்ந்து பண்ண வேண்டிய புராஜெக்ட்ல இருந்து ரெண்டு பேரும் விலகிட்டாங்களே... ஏன்?''



'' 'துப்பறியும் ஆனந்த்’ 1920-கள்ல நடக்கும் கதை. அதுக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளுக்கே கிட்டத்தட்ட ஒரு வருஷம் தேவைப்படும். இப்போ அதுக்கான நேரம் இல்லை. அதனால அஜித்துடன் படம் பண்ண முடியலை. சூர்யாவை வெச்சுப் பண்ணலாம்னு 2013 மார்ச்ல இருந்து அவர்கிட்ட டேட்ஸ் வாங்கி அட்வான்ஸும் கொடுத்துட்டேன்.



 ஆனா, 'துப்பறியும் ஆனந்த்’ ஸ்க்ரிப்ட் இல்லை. ஆக்ஷனும் காதலும் கலந்த ஒரு ஸ்க்ரிப்ட் அவருக்காகப் பண்ணிட்டு இருக் கேன். 'யோஹன்’ முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். 'எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, ரொம்ப இங்கிலீஷ் டைப் படமா இருக்கு. இன்னும் நம்ம ஸ்டைல் சேர்த்து கொஞ்சம் தமிழாப் பண்ணலாம்’னு சொன்னார் விஜய். அதனால அந்தப் படம் பண்ண முடியலை. இப்போ அதே ஸ்க்ரிப்ட்ல மகேஷ்பாபுவை வெச்சு தெலுங்கு, தமிழ், இந்தினு மூணு மொழி யிலும் 'யோஹன்’ பண்றேன். இதைத் தவிர அஜித், விஜய்கூட படம் பண்ணாததுக்கு வேற எந்தக் காரணமும் இல்லை!''



''நீங்கள் இயக்க விரும்பும் ஹீரோ?''



''எனி டே, கமல்ஹாசன். மறுபடியும் மறுபடியும் எத்தனை தடவை வேணும்னாலும் அவர்கூடப் படம் பண்ணுவேன். அப்புறம் ரஜினி சார். அவரோட ஸ்டைல், என்னோட மேக்கிங்ல ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப ஆசை. ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார்னு சீனியர் இயக்குநர்களை விட்டு அடுத்த செட் இயக்குநர்களுக்குப் படம் பண்ணலாம்னு அவர் வந்தா, முதல் சாய்ஸ் நானா இருக்கணும்னு ஆசைப்படுறேன்!''




''உங்களுக்கு அப்புறம் வந்த இயக்குநர்களில் யார்லாம் உங்களை இம்ப்ரெஸ் பண்ணியிருக்காங்க?''



''வெற்றி மாறன். ஆனா, எனக்கு 'ஆடுகளம்’ படத்தைவிட 'பொல்லாதவன்’தான் ரொம்பப் பிடிச்சது. வட சென்னை, பைக்னு படத்துல இருக்கிற சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பிரமாதமா பிரசென்ட் பண்ணியிருந்தார். 'சுப்ரமணியபுரம்’ சசிகுமார் ரொம்பப் பிடிச்சது. எந்த இயக்குநரும் முதல் படத்திலேயே அவ்வளவு ஷாக் கொடுக்கலை.



 ஆனா, இப்போ சசிகுமார் நடிக்கப்போயிட்டாரேனு வருத்தமா இருக்கு. ரொம்ப அழகா, ரசனையாக் கவர்ந்தார் 'எங்கே யும் எப்போதும்’ சரவணன். அவ்வளவு சீன், அவ்வளவு டீடெய்ல்ஸ் இருந்தும் தெளிவான படமா இருந்தது. ரொம்ப ராவா இருந்த 'ஆரண்ய காண்டம்’ நல்ல க்ரிப்பா இருந்தது. ஆனா, தியாகராஜன் குமாரராஜா அடுத்து படம் எதுவும் பண்ணலையா?''



''அஜித் நடிச்ச 'மங்காத்தா’வும் ஹிட். மாஸ் ஹீரோ இல்லாத 'எங்கேயும் எப்போதும்’ படமும் ஹிட். சினிமா, ஹீரோக்கள் கையிலா... இயக்குநர்கள் கையிலா?''



''எந்தப் படமா இருந்தாலும் 'கன்டென்ட்’தான் கிங். 'மங்காத்தா’ல அஜித்தான் ராஜா. 'எங்கேயும் எப்போதும்’ல திரைக்கதைதான் ராஜா. கன்டென்ட் இல்லாம என்ன ஷோ பண்ணாலும், வேலைக்கு ஆகாது!''



''ஒவ்வொரு படத்திலும் உங்கள் ரியல் காதலைத்தான் வேறவேற வெர்ஷன்ல சொல்றீங்க... அந்தக் காதலைப் பத்திக் கொஞ்சம் பேசலாமே?''



''ம்ம்ம்... இப்போ பேசினா பிரச்னை ஆகிருமே! 'விடிவி’ க்ளைமாக்ஸ்ல 'என் நம்பர் எப்படிக் கிடைச்சது?’னு த்ரிஷா கேட்கிறப்போ, 'என் அடுத்த படத்தில் சொல்றேன்’னு சிம்பு சொல்வார். அப்படி இந்தக் கேள்விக்கான பதிலையும் அடுத்த பேட்டியில சொல்லட்டுமா?''




நன்றி - விகடன்




2. ஹீரோயின் சமந்தா ஓபன்டாக் பேட்டி

கௌதம்மேனன்... க்யூட் கிரியேட்டர்!

அரவிந்தன்

சான்ஸே இல்ல... செம க்யூட்டாகிவிட்ட சமந்தாவின் முன்பு, ‘நீதானே என் பொன்வசந்தம்என்று முழந்தாழிட்டு ப்ரஃபோஸ் பண்ணத் தோன்றுகிறது. அவ்ளோ அழகு. நமது கேள்விகளுக்கு சமந்தாவைவிட அவரது கண்களே அதிகம் பதில் சொல்கின்றன!


நீதானே என் பொன்வசந்தம்?


நான் நடிச்ச படங்களிலே ப்ரிலியன்ட் படம்னா அதுநீதானே என் பொன் வசந்தம்தான். யதார்த்தமான காதலும், கதையும் கைகோத்திருக்கிற படம் இது. ‘விண்ணைத்தாண்டி வருவாயாஜெஸ்ஸி கேரக்டர் இளைஞர் மத்தியில் எனக்கு க்ரேஸ்ஃபுல் இடத்தைப் பெற்றுத் தந்தது எனில், ‘நீதானே என் பொன்வசந்தம்அதை இன்னும் ஸ்ட்ரங்காகச் செய்யும். எனக்கு தமிழில் முதல் இரண்டு படங்கள் சரியா போகலை. அதையும் தாண்டி ரீ-என்ட்ரிக்கு எனக்குநீதானே என் பொன்வசந்தம்கைகொடுக்கும்!"


என்ன கதை?


ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில நாலு ஸ்டேஜ்ல நடக்கிற முக்கியமான ஹைலைட்ஸ்தான் கதை. படம் வரட்டும். பார்க்கறவங்க ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பாங்க! கௌதம்மேனனை சந்தோஷமாய் சபிக்கப் போறாங்க."
ஜீவா?

யூத் ஹீரோக்களில் பளிச்சுன்னு முன்னேற்றம் காட்டுபவர் ஜீவா. எந்தப் பாத்திரங்களில் இருந்தாலும் அதன் வடிவத்துக்கு மாறிடும் தண்ணீர் போல ஜீவா பாத்திரத்துக்கு ஏற்ப தம்மைத் தகவமைச்சுக்கிறார். கௌதம்மேனன் படங்களில் ஹீரோ - ஹீரோயின் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி அள்ளிக்கத் தோணும். அதுநீதானே என் பொன்வசந்தம்படத்திலும் உண்டு. வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் ஜீவாவோடு நடிக்கத் தயார்!"
இளையராஜா மியூஸிக்?



நான் அவரோட ரசிகையாவே மாறிட்டேன். ஒவ்வொரு ட்யூனும் ஹாட் வார்மிங். யூத்களின் ஆழ்மனசைத் தொடுகிற ட்யூன். ‘சற்றுமுன்பாடல் தூக்கத்துல எனக்குள்ள சுத்திக்கிட்டே இருக்கு. எண்பதுகளில் இளையராஜா சாங்ஸைக் கேட்பதுபோல இருக்கு. பாடல்கள் ஷூட் பண்ணும்போது ஸ்க்ரிப்ட்டோடு என்னை அறியாமல் ஜெல் ஆயிட்டேன்! ரொம்ப நாளைக்குப் பிறகு படத்துல பக்கவா ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு வந்திருக்கு!"


முன்பைவிட க்யூட் ஆயிட்டீங்களே?

காரணம், கௌதம்மேனன். இவர், கேரக்டருக்கு ஏத்த மாதிரி நடிகர்களை மோல்ட் பண்ண மாட்டார். ஆர்ட்டிஸ்ட்டுக்குள்ள இருக்கிற பர்ஸனாலிட்டியை உண்மையா வெளியே கொண்டு வர்றதுக்கு முயற்சி பண்ணுவார். என் விஷயத்துலயும் அதுதான் நடந்தது. அதான் உங்கள் கண்களுக்கு நான் முன்பைவிட க்யூட்டா தெரியறேன்! கௌதம்மேனன் ஒரு க்யூட் கிரியேட்டர். அவர் செதுக்கும் கேரக்டரும் அவருக்குள்ள இருக்கற ரைட்டரும் அவர் உருவாக்கும் கேரக்டர்மேல ஒருவித ஈடுபாட்டை உண்டு பண்ணிவிடும். ‘நீங்க க்யூட் ஆயிட்டீங்கன்னு என்னைப் பார்த்து நீங்க சொன்னதுகூட கௌதம்மேனன் செய்த மேஜிக்தான்!"



கௌதம்மேனன் புகழ் அதிகமாகப் பாடறீங்களா?
பாஸ்... இது ரொம்ப கம்மி. கௌதம்மேனனுக்கு நான் வெச்சுருக்கற பேர் யூத் என்சைக்ளோபீடியா. யூத்களின் லாங்வேஜ்லேர்ந்து அவங்களோட லேட்டஸ்ட் ஸ்டைல் வரைக்கும் அத்தனை அப்டேட்டா இருப்பார். எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஸ்பாட்ல கௌதம்மேனன் ஸ்கிரிப்ட்டை இம்ப்ரூவ் பண்ணும்போது ஒரு மேஜிக் பாக்கறது போல ஜிவ்வுன்னு இருக்கும் தெரியுமா? இவரோட படங்கள்ல நடிக்கும் போது நடிக்கறது போலவே இருக்காது. வாழறதுபோல இருக்கும். அதான் கௌதம் மேனன் ஸ்பெஷல்!"


சமர்த்தாகப் பேசுகிறார் சமந்தா!


 நன்றி - கல்கி  




நீதானே என் பொன்வசந்தம்


இசை: இளையராஜா  பாடல்கள்: நா.முத்துக்குமார்


வெளியீடு: சோனி மியூஸிக் விலை; 99



ளையராஜா - கௌதம் வாசுதேவ் மேனன் - நா.முத்துக்குமார்... பிரமாண்ட எதிர்பார்ப்புக் கிளப்பியிருக்கும்  ஆல்பம். 'வழக்கமான தொனி இருக்கக் கூடாது... இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர வேண்டும்.’ இந்த இரண்டு நிர்பந்தங்களையும் கவனமாகக் கடந்திருக்கிறார்  இளையராஜா.



'சாய்ந்து சாய்ந்து...’ பாடல்... மிக ரசனையான கம்போசிஷன். கிடாரின் முதல் மீட்டலிலேயே இரவின் ரம்மியத்துக்கு நம்மைக் கடத்தும் இசை, 'என் தந்தை, தோழன் ஒன்றான ஆணை நான் கண்டுகொண்டேன்...’ ரம்யாவின் குரலில் காதல் வருடல். 80-களின் 'ராஜா’ சாயலோடு மனதை வருடிச் செல்கிறது 'காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்...’ பாடல். அட... காதல் குறித்த வன்உணர்வுகளைக் காதலி குமுறுகிறாள் 'முதல் முறை...’ பாடலில். சுனிதி சௌஹான் குரலில் கோபம், ஆதங்கம், வெறுப்பு அனைத்து உணர்வுகளும் காதல் கலந்து எட்டிப் பார்க்கிறது.



'வானம் மெள்ளக் கீழிறங்கி வந்தாடுதே...’ பாடலில் இளையராஜா, பெலா சென்டே குரல்களில் குதூகல உற்சாகம். இரு வித்தியாச டோன்களில் ஏகத்துக்கும் எனர்ஜி ஏற்றுகிறது 'புடிக்கல மாமு...’ பாடல்.



முதல் நொடியிலேயே பிடித்துவிடுகிறது 'என்னோடு வா வா...’ பாடல். ஆல்பத்தின் மெஸ்மரைஸிங் மெலடி. இடையிடையே ஹைபிட்ச் உற்சாகம்கொள்ளும் இசை, பிறகு மென்மையாகக் காது மடல் வருடுகிறது. 'காதலுக்கு இலக்கணமே... தன்னால் வரும் சின்னச் சின்ன தலைக்கனமே!’ குறும்பு வரிகளில் மெலடிக்கு அழகு சேர்க்கிறார் நா.முத்துக்குமார்.



மிகக் குறைந்த அளவு வாத்தியங் களைக்கொண்ட பாடல். ஆனால், அந்தத் தொனியே இல்லாமல் ராக் பேண்ட் பாடல்போல அதிரடிக்கிறது 'பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா...’ பாடல். 'சற்று முன்பு’ பாடலில் 'ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத்தானடா... தூங்கிப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா?’ என ரம்யாவின் குரலில் ஒரு காதலியின் துயரம்... அவ்வளவு அழுத்தம்.



இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கான ராஜா ஆல்பம்.


Rate this article 

 நன்றி - சினிமா விகடன் 




3. ஹீரோயின் சம்ந்தா பேட்டி  

மிழ், தெலுங்கில் 'மோஸ்ட் வான்டட் நடிகை’... சருமப் பாதிப்பு, வெயிலில் முகம் காட்டக் கூடாது, மணிரத் னத்தின் 'கடல்,’ ஷங்கரின் 'ஐ’ படங்களில் இருந்து காரணம் சொல்லாமல் விலகினார்... என இந்த அழகுப் பெண்ணைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள். ஆனால், சந்தித்தால் செம சமத்தாகப் பேசுகிறார் சமந்தா!
 




சமந்தாவுக்கு என்ன ஆச்சு?'' 

 
''ஹைய்யோ, பெருசா எதுவும் இல்லை. இம்யூனிட்டி (நோய் எதிர்ப்புச் சக்தி) குறைஞ்சிடுச்சு. ரெண்டு மாசம் பெட் ரெஸ்ட். கொஞ்சம் முகம் டல் ஆகிருச்சு. அதான் 'கடல்’, 'ஐ’ படங்களில் நடிக்க முடியாமப்போச்சு. மிஸ் பண்ணிட்டோம்னு மனசுக்குள்ள ஃபீலிங்ஸ்தான். ஆனா, இப்போ அதுக்கெல்லாம் சேர்த்துவெச்சு, தமிழ், தெலுங்குனு நாலு மாசத்துல நாலு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப்போகுது. தமிழ்ல அடுத்து லிங்குசாமி டைரக்ஷன்ல சூர்யாவுடன் நடிக்கிறேன். நிச்சயம் என் கேரியர் சூப்பரா இருக்கும்!''


'' 'நீதானே என் பொன்வசந்தம்’ டிரெய்லர் க்யூட். ஆனா, 'வி.டி.வி.’ ஜெஸ்ஸியை 'என்.இ.பி.’ நித்யா பீட் பண்ண முடியுமா?'' 



''நிச்சயமா! ஜெஸ்ஸியை விட நித்யாவுக்கு பெரிய கேன்வாஸ் கொடுத்திருக்கார் கௌதம் சார். சொல்லப்போனா, 'வி.டி.வி’-யைவிட 'என்.இ.பி.’ உங்க மனசுக்கு இன்னும் நெருக்கமா இருக்கும். படத்தின் ஏதோ ஒரு அஞ்சு நிமிஷம் உங்க வாழ்க்கையில நடந்திருக்கும். எனக்கும் என் மேக்கப் அசிஸ்டென்ட், காஸ்ட்யூமர்னு என் கூட இருந்தவங்களுக்கும் அந்த ஃபீல் கிடைச்சது!''



''இப்படி ஒரு முழு ரொமான்டிக் சப்ஜெக்ட்ல ஜீவா நடிக்கிறது புதுசு. அவரை நீங்க ஈஸியா ஓவர்டேக் பண்ணியிருப்பீங்களே?'' 



''அட போங்க பாஸ்... ஜீவா கூட ரொமான்ஸ் படம் பண்றது கஷ்டம். எமோஷன், சென்டிமென்ட் சீனுக்கு முன்னாடி நான் மூணு நாலு மணி நேரம் பயங்கரமா ஹோம் வொர்க் பண்ணிட்டு கேமரா முன்னாடி நிப்பேன். ஆனா, டைரக்டர் ஆக்ஷன் சொல்றதுக்குள்ள சின்னதாக் கண்ணடிச்சு மொத்த மூடையும் மாத்தி சிரிக்கவெச்சிடுவார் ஜீவா. அதே நேரம், அவர் மட்டும் நல்ல பிள்ளையா கண்ணு முழுக்கக் காதலோட பார்த்துட்டு நிப்பாரு. ஸ்வீட் ராஸ்கல். அவர்கூட காமெடிப் படம் பண்றதுன்னா புகுந்து விளையாடலாம்!''




''சமந்தாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரு?'' 



''காஜல் அகர்வால். 'பிருந்தாவனம்’ தெலுங்குப் படத்தில் சேர்ந்து நடிச்சப்போ, ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். அவ எனக்கு காஜ். நான் அவளுக்கு சாம். ரெண்டு பேரும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சா, நேரம் போறதே தெரியாது. ஆனா, அப்போ சினிமா பத்திப் பேசவே மாட்டோம்!''


''சமந்தா செய்கிற நல்ல விஷயம்?'' 



''எதுக்கும் ஃபீல் பண்ணாம நம்மால முடிஞ்சதைப் பண்ணணும்னு நினைப்பேன். 'பிரதியுஷா’னு ஒரு ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சிருக்கேன். ஹீமோபிலியா, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட அறுநூறு குழந்தைகளைக் கவனிச்சுக்கிறேன்.''


''சமந்தாவுக்குப் பிடிச்ச நடிகை?'' 


''அப்ப கஜோல். இப்ப அஞ்சலி. எனக்கு கஜோல் மாதிரி இருக்கணும்னு ஆசை. செமத்தியா நடிச்சாங்க. சரியான டைமிங்ல சினிமாவை விட்டுட்டு குடும்பத்துல செட்டில் ஆனாங்க. அந்த சிம்ப்ளிசிட்டி... சிம்ப்ளி சூப்பர். 'தமிழ் எம்.ஏ’, 'அங்காடித் தெரு’, 'எங்கேயும் எப்போதும்’ படங்கள்ல அஞ்சலியை ரொம்பப் பிடிச்சது. ரொம்ப ஷார்ப். ரொம்ப திறமையான நடிகை. அஞ்சலியோட ரசிகை நான்!''



''சமந்தாவின் நேர்மைக்கு ஒரு சின்ன டெஸ்ட்... உங்களுக்குக் காதல் பூத்த தருணம் எது?'' 



''உண்மையைச் சொல்லியே ஆகணுமா? ம்ம்... எட்டாவது படிக்கிறப்போ ரெண்டு, மூணு பேர் மேல லவ் வந்துச்சு. பப்பி லவ். அப்புறம்... ஹலோ... நான் ஒரு பொண்ணுங்க... எல்லாத்தையும் உங்ககிட்ட ஓப்பனா சொல்ல முடியுமா? கௌம்புங்க... கௌம்புங்க!''

நன்றி - விகடன்

என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

விகடன் மேடை

வாசகர் கேள்விகள்... கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள்!
படம்: ரவிவர்மன்
ஜி.தியாகு, திருத்துறைப்பூண்டி.


''எம்.ஜி.ஆரோடு உங்களுக்கு நெருக்கம் இருந்ததா?'' 



''1984 ஒரு 'முகூர்த்த’ மாதத்தின் அதிகாலை 4.30 மணி.


பாரதிராஜாவின் புதுமனை புகுவிழா.


கட்டிய பட்டு வேட்டியோடு கட்டிய பசுமாட்டை அவர் வீட்டுக்குள் இழுத்துச்செல்லும் போது, பாதுகாப்பு வாகனங்களால் பரபரப்பானது தெரு.
யாரும் எதிர்பார்க்கவில்லை.


தன் துணைவியார் வி.என்.ஜானகியோடு வெள்ளைத் தங்கமாய் வீட்டுக்குள் நுழைகிறார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.


பதற்றத்தில் புது வீடு படபடக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், வேலைக்காரர்கள் தவிர யாரும் இல்லை வீட்டில்.


கூடத்தில் முதலமைச்சரை அமர்த்திவிட்டு, பசுமாட்டை இழுத்துக்கொண்டு பால் கொண்டுவர ஓடுகிறார்கள் பாரதிராஜா தம்பதி. என் காதுக்குள் சொல்லிவிட்டுப் போகிறார் பாரதிராஜா:


'எம்.ஜி.ஆருக்குக் கம்பெனி கொடுங்கள்.’

அப்போது எம்.ஜி.ஆருக்கு என்னை யாரென்றே தெரியாது. என் பெயர் வைரமுத்து என்று சொல்லிக்கொள்ளவும் தயக்கமெனக்கு. சோபாவில் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன்; ஜானகி அம்மையார் தனி நாற்காலியில்.


என் காதலுக்குரிய கதாநாயகனை அன்றுதான் அணுக்கத்தில் பார்க்கிறேன்.
இந்த ரோஜா விரல்களா வாள் சுழற்றியவை? மந்திரி குமாரியின் வீரமோகனை - குலேபகாவலியின் தாசனை - மகாதேவியின் வல்லபனை - மதுரை வீரனின் வீரனை - சக்கரவர்த்தித் திருமகளின் உதய சூரியனை - நாடோடி மன்னனின் வீராங்கனை, மார்த்தாண்டனை - ஆயிரத்தில் ஒருவனின் மணிமாறனை அவருக்குள் தேடித் தேடி ரசித்ததில் ஏழு நிமிடங்கள் கழிந்துபோயின.


என்னோடு அவரும் பேசவில்லை;


அவரோடு நானும் பேசவில்லை. அதற்குள் பால் வந்துவிட்டது; எழுந்துகொண்டேன்.

பிறகு, சில விருது மேடைகளிலும், ஒரு படத் தொடக்க விழாவிலும், ஒரு படக் காட்சியிலும் அவரைச் சந்தித்தேன்.

இவ்வளவுதான் எம்.ஜி.ஆருக்கும் எனக்குமான அணுக்கம்!''


பா.செல்வி, கள்ளக்குறிச்சி.


 ''அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?'' 


''எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக்கொடுங்கள்; அப்படியே நெஞ்சில் ஒட்டும்.


ஒன்று: வானம் - ஒன்று.
இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.


மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.


நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வீசுவது தென்றல், கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல், மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-தமிழன் காற்றுக்கு வைத்த பெயர் நான்கு.


ஐந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.


ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-சுவைகள் ஆறு.


ஏழு: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப் பண்கள் ஏழு.


எட்டு: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள் எட்டு.


ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, முன்னொன்று, பின்னொன்று-உடலின் வாசல்கள் ஒன்பது.


இப்படி எண்களுக்குப் பக்கத்தில் எண்ணங்களைப் பொருத்தித் தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள் தமிழாசிரியப் பெருமக்களே!''


பாரதி செழியன், சென்னை.


''கோபத்தைக் குறைக்க என்ன வழி?'' 


''சக மனிதன் செய்யும் தவறுதான் நமக்குக் கோபத்தை மூட்டுகிறது. தவறுகளை நகைச்சுவையாக் கிக்கொள்வதைப் போல் கோபத்தைக் குறைக்க நல்ல வழி இல்லை.


வேலைக்காரரை அழைத்து, 'தபால் தலையை ஒட்டிக்கொண்டு வா’ என்றார் ராஜாஜி. பிரிட்டிஷ் மன்னர் தலையிட்ட தபால் தலையைத் தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்தார் வேலைக்காரர்.


நீங்களும் நானுமென்றால் கோபத்தைக் கொட்டி இருப்போம்.


ராஜாஜி சொன்னார்:


'பரவாயில்லையே! நாங்களெல்லாம் செய்ய முடியாத காரியத்த நீ செஞ்சுட்டியே, பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே.’


ராஜாஜியால் அது முடிந்தது; கேள்வி கேட்ட உங்களால் கூட முடியும்; பதில் சொன்ன என்னால் அது முடியுமா தெரியவில்லை!''


தாமரைக்கண்ணன், திருப்பூர்.


 ''இந்தியாவின் பொருளாதாரம்பற்றிச் சொல்லுங்களேன்?'' 


''ஒரு துறையில் ஒருவன் சற்றே புகழோடிருந்தால் அவனுக்கு எல்லாம் தெரியும் என்ற மூடநம்பிக்கையின் முட்டைக்குள் நீங்கள் வசிக்கிறீர்கள். பொருளாதாரம்பற்றிப் பேசும் அறிவுடையவன் அல்லன் நான். என்ன தான் இந்தியாவின் நிதியமைச்சர் என் நண்பராக இருந்தாலும், அவரிடம் இதுபற்றி நான் அறிய முயன்றதில்லை. ஆனாலும், பொருளாதாரத்தில் இந்தியா வளர்கிறதா தேய்கிறதா என்று அறிந்துகொள்ளும் அளவுகோல் ஒன்றை அறிவேன்.



எந்த நாடு தன் வங்கியில் வைக்கும் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தருகிறதோ... அந்த நாடு பொருளாதாரத்தில் சரிந்திருக்கிறது என்று பொருள்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் வைப்பு நிதிக்கு இப்போது தந்து வரும் வட்டி விகிதம் 8.5 விழுக்காடு. மூத்த குடிமக்கள் வைப்புத்தொகைக்கு 9 விழுக்காடு.


ஆனால், ஜப்பானில் வைப்புத் தொகைக்கு வட்டி கிடையாது. மாறாக, உங்கள் பணத்தைப் பாதுகாத்துவைப்பதற்காக உங்க ளிடமே வைப்பு நிதிக்குக் காப்புத்தொகை வசூலிக்கும் ஜப்பானிய வங்கி.


இந்தியாவில் 8.5 விழுக்காடு வட்டி கொடுத்து வாங்கப்படும் வைப்பு நிதி, 10 முதல் 13 விழுக்காடு வட்டிக்குத் தொழிற் கடனாக வழங்கப்படுகிறது. அந்த வட்டிப் பணம் உற்பத்திப் பொருளின் தலையில் விழுகிறது. உற்பத்திப்பொருள் வாடிக்கையாளன் தலையில் விழுகிறது. எனவே, பழைய பொருளுக்குப் புதிய விலைகளைத் தந்துகொண்டேயிருக்கின்றான் - பாவம் இடுப்பொடிந்த ஏழை இந்தியன்.


இப்படித்தான் பணம் வீங்குகிறது; அதை ஒவ்வோர் இந்தியத் தலையும் தாங்குகிறது!''


ம.இராஜ்குமார், வில்லூர்.


 ''உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பேர் தாக்குகிறார்களே... நீங்கள் திருப்பியடிக்க வேண்டாமா?'' 


''தேவையில்லை.

நீங்கள் ரசிக்க முடியாத ஓர் உண்மையைச் சொல்லுகிறேன்.


நீங்களும் நானும் சமூக மனிதர்கள் பலரும் நித்தம் நித்தம் கொஞ்ச நேரம் பைத்தியக்காரர்களாய் மாறியே தீருகிறோம்.


பெருங்கோபம் - பெருஞ்சிரிப்பு - காமம் - கர்வம் - போதை - புகழ் என்ற உணர்வுகளுக்கு ஆட்படும்போதெல்லாம் பைத்தியத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட்டே தீருகிறோம்.


தொட்டுவிட்ட உச்சத்தை விட்டுவிட்டு இருந்த இடத்திற்கே திரும்ப வந்தால், அது இயல்புநிலை. அங்கேயே நின்றுவிட்டால், அது திரிபுநிலை. இதை சைகோசிஸ் [Psychosis] என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.


கர்வத்தின் உச்சத்தைத் தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிரக் குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது; குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட, சிகிச்சை தருவதே சிறந்தது!''




இரா.கரியப்பா, சூலூர்


''சிலையாவதுதான் ஒரு மனிதனின் உச்சகட்டப் புகழா?'' 



''அப்படிச் சொல்ல முடியாது. மனிதர்களைப் போலவே சிலைகளுக்கும் ஆயுள் உண்டு. அரசு - அரசியல் - சாதி - மதம் -  நிறுவனம் ஆகியவற்றால் பராமரிக்கப்படும் சிலைகள், அந்த ஐந்தும் விழுகிறபோது தாமும் விழுந்துவிடுகின்றன.



சாலைகளில் நிற்கின்ற சிலைகளின் ஆயுள், சாலையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவால் திறந்துவைக்கப்பட்டுச் சாலைகளின் சந்திப்பில் நின்ற கலைவாணர் சிலை, மேம்பாலம் கட்டும்போது இடம் பெயர்க்கப்பட்டு ஓரச்சாலையில் ஒதுங்கிவிட்டது.


சென்னையின் தென் வாசலில் கம்பீரமாக நின்ற ஜவஹர்லால் நேருவின் சிலை கத்திப்பாரா மேம்பாலத்திற்குப் பிறகு, உயரம் குறைந்து ஒடுங்கிவிட்டது.


மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு பெயர்கள் மறக்கப்பட்ட பல சிலைகள் வெறும் பொம்மைகளாகிவிடுகின்றன.


உருவம்தான் புகழின் உச்சம் என்பது ஒரு கற்பனை. உருவ வழிபாட்டிற்கே இடம் தராத இஸ்லாத்தில், நபிகள் நாயகத்தின் பெருமை இன்னும் குறையவே இல்லையே.


எனவே, மனிதர்கள் நிலைபெறுவது உருவங்களால் அல்ல - செயல்களால் மற்றும் சித்தாந்தங்களால்!''


தரும.சரவணன். தஞ்சாவூர்.


''இங்கிதம் என்றால் என்ன?'' 


''நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார். தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார். அதை எப்படி உணர்த்துவது? 'அம்மா! உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்றேன். பதறிப்போய்க் காலணிகளைக் கழற்றிவிட்டு வந்தார்.


புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம்!''



- இன்னும் பேசுவோம்... 



பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்
part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html