Friday, July 23, 2010

SALT - சினிமா விமர்சனம்

சால்ட்-அ”சால்ட்”டா ஒரு அதிரடி-ஹாலிவுட் திரை விமர்சனம்-  சால்ட்-உலகின் சிறந்த உதட்டழகி என்று பெயரெடுத்த SIN பட புகழ் ஏஞ்ஜலினாஜூலி நடித்த சுத்த சைவப்படம்.அவ்ர் நடித்த படங்களிலேயே லோகட்,லோஹிப் என ஒரு சின்ன சீன் கூட
இல்லாமல் நடித்த படமும் இதுதான்.



உயிரே படத்தின் ஹீரோயின் ம்ணீஷாகொய்ராலாவின் கேரக்டர்மாதிரிதான் ஏஞ்ஜலினாஜூலி யின் கேரக்டரும்.அமெரிக்காவில் வேலை செய்யும் ரஷ்ய உளவாளி.காதல் கணவனை பிணைக்கைதியாக்கி ,மிரட்டி அமெரிக்க அதிபரை கொல்லப்பணிக்கப்படுகிறாள்.ஒரு கட்டத்தில் கணவனை அவர்கள் கொன்று விட அவள் எடுக்கும் முடிவுதான் படம்.

படத்தின் ஓப்பனிங் சீனே பரபரப்பாக குருதிப்புனல் கமல்-நாசர் சந்திப்பு மாதிரி தொடங்குகிறது.தீவிரவாதி-சால்ட் விசாரணைக்காட்சிகள் செம டெம்ப்போவை ஏற்றுகிறது.விசாரனை  செய்யப்படும் குற்றவாளி சால்ட்டின் மேல் பழி சுமத்த திடீர் என அந்த ஆஃபீசே அவருக்கு எதிராக மாறுவது நல்ல டர்னிங்க் பாய்ண்ட்.அப்போ ஓட ஆரம்பிக்கும் ஜூலி படம் பூரா வெற்றிவிழா கமல் மாதிரி ஓடிக்கொண்டே இருக்கிறார்.

தப்பிக்கு ம் ஒரு சீனில் கண்காணிப்புக்கேமராவை செயலிழக்க வைக்க அவர் தன் உள்ளாடையை அகற்றி செய்யும் சாகசம் ரொம்ப நாசூக்கு+நளினம்.
என்ன தான் அவர் சாகசங்கள் செய்தாலும் சிரிப்பழகி சினேகாவை எப்படி நம்மால் வைஜயந்தி ஐ.பி.எஸ் ஆக பார்ப்பது சிரமமாக இருக்குமோ அப்படி ,மனசு கேட்காமல்தான் இருக்கு.

சேசிங் காட்சிகள் உயிரோட்டமாக இருந்தாலும் ஏஞ்ஜலினாஜூலியிடம் துடிப்போ,துள்ளலோ இல்லை.வயது மேக்கப்பை மீறி முதிர்ச்சியை காட்டுகிறது.நடு ரோட்டில் அவர் 50 போலீஸ்களூக்கு  டேக்கா கொடுக்கும் காட்சிகள் நம்பும்படி இல்லை.ஒரு ஜாக்கிசானோ,ஒரு ஜீன் ஹிலாடு வேண்டம்மோ செய்யவேண்டிய ஆக்‌ஷன் காட்சிகளை இவர்  சர்வசாதாரணமாக செய்வது குருவி தலையில் பனைமரத்தையே வைத்தது போல் ஓவெர் லோடு. மாடியில் தொங்கிக்கொண்டே ஒரு வீட்டு ஜன்னலை அவர் தட்டி சைகையால் ஜன்னல் கதவை திறக்கும்படி சொல்ல அந்தக்குழந்தை அவருக்கு டாட்டா காட்டுவது புன்ன்கையை வரவைக்கிறது.


ரயிலிலிருந்து தப்பிக்கும் சீன் செம விறு விறு ப்பு.கைவிலங்குடன் காரில் இருந்து தப்பிப்பது காதில் பூகூடையை வைப்பது போல் உள்ளது.
பிரசிடெண்ட்டை டார்கெட் வைத்து அவர் துரத்துவதும்,போலீஸ் காவலை மீறி கச்சிதமாக அவர் வேலையை முடிப்பது வரை பரபர ஆக்‌ஷன் காட்சிகள்.
ஆண் வேடத்தில் வரும் சீன் அருமை.அவ்ர் மாஸ்க்கை கழட்டும்போதுதான் நமக்கே அடையாளம் தெரிகிறது.”நான் சொல்றபடி நீங்க செய்யலைனா நீங்க பார்க்கற கடைசி ஆள் நானாகத்தான் இருக்கும்” என்று ஜூலி வசனம் பேசும்போது உயிரே படத்தில் மறக்கமுடியாத வசனமான “பார்த்துக்கோ நீ பாஅர்க்கற கடைசி சூர்யோதயம் இதுவாத்தான் இருக்கும்” ஞாபகம் வருகிறது.
க்ளைமாக்சில் நிராயுதபாணியாக ஜூலி,காயம் பட்டு போலீஸின் பார்வையில் நல்லவனாக காட்சி அளிக்கும் வில்லன்.என்ன நடக்கபோகிறதோ என எதிர்பார்க்கும்போது ஒரு ஜம்ப் பண்ணி கை விலங்கு சங்கிலியால் வில்லனின் கழுத்தை இறுக்கி அந்தரங்கத்தில் தொங்கும்போது தியேட்டரே அதிர்கிறது கை தட்டலால். நடப்புக்காட்சி வரும்போதே அதனோடே பயணிக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கவிதை,பிண்ணனி இசை ஒரு ஆக்‌ஷன் படத்திற்கு எவ்வ்ளவு முக்கியம் என உணர்ந்து டைரக்டர் பணீ ஆற்றி இருக்கிறார்.

படத்தில் கம்யூனிச வசனங்கள்,தீவிரவாதம்,நாட்டின் உளவாளிகள் பற்றிய சர்ச்சைக்குரிய வசனங்கள் உண்டு என்பதால் த்மிழில் பார்ப்பது சாலச்சிறந்தது.
காமெடி மருந்துக்கு கூட இல்லை.மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் கேரக்டர்கள் ஓடிக்கொண்டு இருக்கும்போது காதல் ,காமெடி எல்லாம் வைத்தால் படத்தின் டெம்ப்போ குறைந்து விடும் என டைரெக்டர்
நினைத்திருக்கலாம்.மிகச்சரியான முடிவு


பிரமாதமான ஆக்‌ஷன் படம் எனக்கொண்டாட முடியாவிட்டாலும் பார்க்க போரடிக்காத ஆக்‌ஷன் படம் என சொல்லலாம்..

8 comments:

Jackiesekar said...

பார்த்துடுவோம்...

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே முதல் கமெண்ட்டிற்கும்,வருகைக்கும் நன்றி.

மகேஷ் : ரசிகன் said...

பார்க்கனும்னு இருந்த படம்.

சி.பி.செந்தில்குமார் said...

பாருங்க ரமேஷ்

மகேஷ் : ரசிகன் said...

:) ரமேஷ்?

சி.பி.செந்தில்குமார் said...

ஓ,ஸாரி,பெயர் மாறு தோற்றப்பிழை,மகேஷ்

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

படம் நல்லாருக்குன்னு சொன்னாக!,.

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி அண்ணே வருகைக்கும்,கருத்துக்கும்