Showing posts with label லட்சுமி மேனன். Show all posts
Showing posts with label லட்சுமி மேனன். Show all posts

Saturday, November 07, 2015

வாட்ஸ்ஆப்-பில் 'வேதாளம்' காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி

'வேதாளம்' படத்தில் அஜித் | கோப்பு படம்
'வேதாளம்' படத்தில் அஜித் | கோப்பு படம்
வாட்ஸ்ஆப் மூலமாக 'வேதாளம்' படத்தின் காட்சிகள் வெளியாகி வருவதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், கபீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். நவம்பர் 10ம் தேதி தீபாவளி தினத்தன்று இப்படம் வெளியாக இருக்கிறது.
இறுதிகட்டப் பணிகள் அனைத்து முடிந்து நேற்றிரவு (நவம்பர் 5) மாலை இயக்குநர் சிவா, அஜித் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பிரத்யேக காட்சியைப் பார்த்தார்கள். அதனைத் தொடர்ந்து அஜித்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 6) காலை முதலே அஜித்தின் முதல் காட்சி என 4 விநாடிகள், 'ஆலுமா டோலுமா' பாடல் காட்சிகள் என 8 விநாடிகள் ஆகிய இரண்டு வீடியோக்கள் வாட்ஸ்-அப் மூலமாக வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோக்களை திரையரங்குகளில் படம் ஒடும் போது எடுத்திருக்கிறார்கள்.
படம் வெளியாக இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், வெளியாகி இருக்கும் இந்த வீடியோக்களால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

-தஹிந்து

Tuesday, March 31, 2015

கொம்பன்' பிரச்சினை க்ளியர்டு - ஏப்ரல் 1 ல் முன் கூட்டியே ரிலீஸ்

'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' பத்திரிகையாளர் சந்திப்பு | படம்: எல்.சீனிவாசன்
'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் 'கொம்பன்' படத்தை இன்று பார்த்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன், கொம்பன் பட இயக்குநர் முத்தையா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தாணு : '' 'கிழக்குச் சீமையிலே' படம் மாதிரி காவியமான படம் 'கொம்பன்'. இந்தப் படத்தில் எந்த சாதிய மோதலும் இல்லை. எந்த சூழலிலும் யாரையும் இழிவுபடுத்தவேண்டும் என்று எந்தக் காட்சியும், வசனமும் இல்லை. ஆனா, ஏன் இப்படிப்பட்ட இன்னலில் சிக்கி இருக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை.'' என்று தாணு பேசினார்.
சரத்குமார்: ''படம் சென்சார் ஆனபிறகு தனிநபரோ, அமைப்போ தடை செய்வதற்கு உரிமை இருந்தால் சென்சார் என்பது எதற்காக இருக்கிறது.
மத்திய அரசின் தணிக்கைக் குழு மூலம் படம் சென்சார் ஆன பிறகு அந்தப் படத்தைப் பற்றி முடிவு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இனிவரும் காலங்களில் தனிநபரோ, அமைப்போ படத்துக்கு எதிராக இதுபோன்று ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.
மாமனார், மருமகன், அம்மா, மனைவி என்று பாசமுள்ள சிறந்த கதையைப் படமாக சொல்லியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. சாதிப் பிரச்சினையோ, சாதிக் கலவரமோ, தூண்டுகின்ற சம்பவமோ, வசனங்களோ இல்லை.
எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்கள், சிறப்பாக கணிக்கக்கூடியவர்கள் தான் தணிக்கைத் துறையில் இருக்கிறார்கள்.



பொறுப்பில்லாதவர்கள் திரைப்படங்களை எடுப்பது மாதிரியான சூழலை உருவாக்குவது தவறு என்பது எங்களின் ஒருமித்த கருத்து.'' என்று சரத்குமார் பேசினார்.
விக்கிரமன்: '' 'கொம்பன்' படத்தில் ஹீரோ எந்த சாதி என்பதைக் கூட படத்தில் சொல்லவில்லை. இரு சாதியினருக்கான மோதல் என்கிற பிரச்சினை கிடையவே கிடையாது. இந்தப் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தவறாகத் தெரிகிறது.
இதில் சாதி மோதலைத் தூண்டுவதைப் போல இருக்கிறது என்று படம் பார்த்துவிட்டு யாராவது சொன்னால் நான் திரையுலகத்தை விட்டே போய்விடுகிறேன்.'' என்று விக்கிரமன் பேசினார்.
ஞானவேல்ராஜா: '' மார்ச் 27ம் தேதி 'கொம்பன்' ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டபோது எந்த போராட்டமும், வழக்கும் இல்லை. ஆனால், 'கொம்பன்' படத்தின் வேலைகள் முடியாததால் ஏப்ரல் 2ல் ரிலீஸ் என்று திட்டமிட்டோம்.2ம் தேதி ரிலீஸ் என்றதும் அத்தனைப் பிரச்சினைகளும் பூதாகரம் ஆனது. ஏப்ரல் 10ம் தேதி படம் ரிலீஸ் என்றால் இந்தப் பிரச்சினையே எனக்கு இல்லை'' என்றார்.
பத்திரிகையாளார் சந்திப்பின்போது ஞானவேல்ராஜா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்கலங்கினார்.
ஏப்ரல் 2 அன்று வெளியாக இருந்த 'கொம்பன்' திரைப்படம் ஏப்ரல் 1 (புதன்கிழமை) அன்று ரிலீஸ் ஆகிறது.


'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியான காட்சியமைப்போ, வசனங்களோ இல்லை என்று மறுத்திருக்கிறார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''ஏப்ரல் 1 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கொம்பன்' திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.
இதில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
யூகத்தின் அடிப்படையில் 'கொம்பன்' திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
'கொம்பன்' திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்'' என ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
'கொம்பன்' திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. ஏப்ரல் 2ல் 'கொம்பன்' திரைப்படம் வெளியாகிறது.

  • எந்த படத்தை எதிர்த்து வழக்கு போட்டா பிரபலமாக முடியுமோ அந்த படாத எதிர்த்து தான் எல்லாம் பண்ணுவாங்க.. ஒரு புது நடிகருட படமா இருந்திருந்த இத பத்தி பேசவே மாட்டாங்க !.... தட்டிய கேட்க 1000 ஜாதி பிரச்சனை நம்ம நாட்டுல இருக்கு , அதெல்லாம் விட்டுபுட்டு சினிமா படத்து மேல எங்க வழக்கு போடுறீங்க !...
    Points
    335
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Reegan Reegan Lecturer at lecturer in college 
      இனி வரும் காலங்களில் படத்தை தணிக்கை குழுவிடம் காண்பிபதற்கு முன்பு மாநிலத்தில் உள்ள எல்லா சாதி கட்சி மதம் சார்ந்த கட்சிகளிடம் காண்பிக்க வேன்டும் என சொல்லி போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி . ஒரு தணிக்கை குழுவினால் சான்றிதழ் வழங்கிய படத்தினை எதிர்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . எல்லாவற்றையும் விட சிறந்த ஒரு விசயம் என்னவென்றால் ஒரு படத்தை பொழுது போக்கு நிகழ்வாக பார்க்கும் பொழுது எந்த பிரச்சினையும் வர வாய்ப்பு இல்லை .
      about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Durairaj  
        திரைப்பட தணிக்கை துறையிலே இதற்கு ஆட்சேபனை எழுந்துள்ளது என்று கேள்வி. மறு தணிக்கை செய்யப்பட்டதே ஏதோ ஒரு காரணத்திற்குத்தானே. திரைப்பட துறையில் ஒரு குறிபிட்ட ஜாதியை பெருமைபடுத்தி படம் எடுப்பது இன்று நேற்றா நடக்கிறது.
        Points
        1315
        about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Parthi  
          கமல் சண்டியர் என பெயர் வைத்த உடனே வரிந்து கட்டி கொண்டு வந்த கிருஷ்ணசாமி சில மாதங்களுக்கு முன் சண்டியர் என படம் வந்த போது மட்டும் தூங்கி கொண்டு இருந்தாரா ...ஏன் பிரபலங்களின் படங்களை எதிர்த்தால் மட்டும் தான் கிருஷ்ணசாமி என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை காட்டவா
          Points
          2315
          about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
          • மாரிச்சாமி  
            பாரதி தம்பி திரு.க. கிருஷ்ணாசாமி எதிர்ப்பது ஜாதி ஏற்ற தாழ்வுகளை மட்டுமே தவிர வேருன்றும் இல்லை.....ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டும் உயர்த்தி பேசுவது சரி அல்ல.......
            about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Chandra_USA  
            ஜாதி வேறுபாடு தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. அதை சினிமாவில் கட்டினால் தவறா?
            Points
            14240
            about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
            • DuraiRaj  
              நீங்கள் சொல்வது சரிதான். சமிபத்தில் தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினாரால் 60 கொலைகள் நடந்துள்ளது. அந்த ஜாதியின் தவறை சுட்டிக்காட்டி யாராவது படம் எடுப்பார்களா?
              about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Navneeth  
              நல்லது . தேவையில்லாத விமர்சனங்கள் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு இது எல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை போலும் ...முதலில் சண்டியர்.பின்பு விஸ்வரூபம்.அடுத்து கொம்பன் ..உழைப்பின் கஷ்டம் நம் அரசியல் வாதிகளுக்கு தெரியாது அல்லவா அதான் போலும்..அ
            நன்றி - த இந்து

            Monday, March 09, 2015

            கொம்பன் - பருத்தி வீரன் பாகம் 2 ? - வசூல் இளவல் கார்த்தி பேட்டி

            'பருத்தி வீரன்' பாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது 'கொம்பன்' பாத்திரம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி தெரிவித்தார்.
            முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கொம்பன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
            இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று காலை நடைபெற்றது. அச்சந்திப்பில் கார்த்தி பேசியது:
            "'மெட்ராஸ்' படத்திற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. அது மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. கிராமம் சார்ந்த படங்களை தவிர்த்துக் கொண்டே வந்தேன். 'பருத்தி வீரன்' மாதிரியே இருக்கிறது என்று சொல்லுவார்கள் என பயந்தேன்.
            இயக்குநர் முத்தையா என்னிடம் 'கொம்பன்' கதையைக் கூறினார். மாமனாருக்கும் மருமகனுக்கு இடையே நடக்கும் கதை. கல்யாணத்திற்கு முன்பு நடக்கும் விஷயங்களை நாம் நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் விஷயங்களை வைத்து ஒரு கதை என்று சொல்லும் போது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
            ராஜ்கிரண், கோவை சரளா, லட்சுமி மேனன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என ஒன்று கூடும் போது படத்திற்கு வேறு ஒரு கலர் கிடைத்திருக்கிறது. மறுபடியும் மதுரையா என்று கேட்டேன், இல்லை ராமநாதபுரத்தில் இருக்கும் பழக்க வழக்கங்கள் வேறு என்று இயக்குநர் கூறினார்.
            இப்படத்தில் தண்ணியடிக்காத ஒரு பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 'கொம்பன்' என்ற பாத்திரம் 'பருத்தி வீரன்'-ல் இருந்து வேறு மாதிரி இருந்தது. அதற்குள் ஒரு ஆழமான எமோஷன் இருந்தது. ராஜ்கிரண் சார் கூட நடித்தது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.
            இப்படத்தில் இறுதி காட்சியில் தான், நான் ராஜ்கிரணை 'மாமா' என்று அழைப்பேன். அக்காட்சியை நான் டப்பிங்கில் பார்க்கும் போது, ராஜ்கிரண் சார் நடிப்பில் அற்புதமாக பண்ணியிருக்கிறார். வில்லன், சண்டை என கமர்ஷியல் விஷயங்கள் அனைத்துமே கிராமத்துக்குள்ளயே இருக்கும்.
            ஒவ்வொரு காட்சியும் நடித்து முடித்தவுடன், இயக்குநரிடம் 'பருத்தி வீரன்' சாயல் தெரிந்ததா என்று கேட்டு கேட்டு நடித்திருக்கிறேன். 'பருத்தி வீரன்' படத்தில் வீட்டுக்குள்ளேயே இல்லாத ஒரு பாத்திரம், 'கொம்பன்' படம் அப்படியே அதற்கு எதிர்மறையாக இருக்கும்." என்று தெரிவித்தார் கார்த்தி


            நன்றி  - த இந்து

            Wednesday, January 21, 2015

            லட்சுமிமேனனுக்கு இப்போதான் 15 வயசு ஆகுதா? -லட்சுமிமேனன் பேட்டி

            ‘நீங்கள் விளிக்கிண்ட நம்பர் அட்டெண்ட் செய்யில்லா. பரிட்செக்கு பிஸியாகி. சொற்ப நேரம் கழிச்சு கால் செய்யு’ - லட்சுமி மேனனுக்கு போன் செய்தால் இப்படி ஒரு குரல் கேட்கிறது.
            திரும்பவும் அழைத்தால் ‘நான்தான் அப்படி சொன்னேன். நம்பிட்டீங்களா!’ என்று குதூகலச் சிரிப்போடு கேட்கிறார். பள்ளிக்கூடம், டியூஷன் என்று பரபரப்பாக இருக்கும் லட்சுமி மேனனை அலைபேசியில் பிடித்தோம்.
            லட்சுமி மேனனை சிம்பிள் ஏஞ்சல்னு எல்லோரும் கொண்டாடுறாங்களே. இது எப்படி சாத்தியமாச்சு?
            ‘கும்கி’ படம்தான் காரணம். பிரபு சாலமன் சார் அறிமுகம் எனக்கு பெரிய அடையாளம். ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப் புலி’, ‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’ன்னு தொடர்ந்து பல படங்கள்ல நடிச்சேன். அடுத்து ‘கொம்பன்’ ரிலீஸ் ஆகப் போகுது. நல்ல படங்கள் பண்ணா மக்கள் என்றைக்கும் ஏத்துப்பாங்க. இப்பகூட நல்ல படங்கள்ல நான் இருக்கணும்னு ஆர்வமா இருக்கேன். லைஃப்ல இப்படி ஒரு படம் பண்ணணும்னு எல்லாருக்கும் ஒரு ஏக்கம் இருக்கும். அந்த ஏக்கத்தை நான் நடிக்குற ஒவ்வொரு படமும் போக்கிடுது..
            எந்த ஹீரோயின் மாதிரி நடிக்கப் பிடிக்கும்?
            எனக்கு வித்யாபாலனை ரொம்பப் பிடிக்கும். எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கணும்னு நடிகைகள் வித்தியாசமா நடிக்க ஆசைப்படுவாங்க. ஆனா, வித்யாபாலன் கொஞ்சமும் அலட்டிக்காம ‘டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ன்னு தனியா தெரிஞ்சாங்க. ‘பாபிஜாசூஸ்’ படத்துக்காக பல கெட்டப்புல அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிரட்டுனாங்க.
            லட்சுமி மேனன் விரும்புவது குடும்பப் பாங்கா, கவர்ச்சிகரமா?
            மாடர்ன் காஸ்டியூம்ஸ் எனக்கு செட்டாகாது. மாடர்ன் டிரஸ் இருக்குற போட்டோக் களை ஃபேஸ்புக்ல போட்டாக்கூட, ‘இது உங்களுக்கு நல்லா இல்லை. சேலை, தாவணி யிலதான் சூப்பரா இருக்கீங்க. அதை மாத்தாதீங்க.. ப்ளீஸ்’னு சொல்லும்போது எப்படி மீற முடியும்? இப்போதைக்கு ஹோம்லிதான்!
            பாடகியாகணும்னீங்க.. அந்த ஆசை ஒருவழியா நிறைவேறிடுச்சா?
            இமான் இசையில ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துல பாடினதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அதுல கஷ்டப்படாம, ரொம்ப சுலபமா பாடினதுக்குக் காரணம் என் அம்மாவும், பாட்டியும்தான். இப்போ பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்துல ஒரு பாடல் பாடியிருக்கேன்.
            தமிழில் படங்கள் குறைந்ததற்கு என்ன காரணம்?
            தமிழில் இப்போதும் அதிக வாய்ப்புகள் வருது. நான்தான் குறைத்துக்கொண்டேன். நிறைய படம் ஒப்புக்கிட்டா படிப்பு தடைபடும். பிளஸ் 2 முடிச்சப்புறம் நிறைய படத்துல நடிப்பேன்.
            மலையாளத்துல திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படத்துக்கு நல்ல வரவேற்பா?
            ஓரளவு ஓடியது. மலையாளத்தில் நடிக்கணும்கிற தனி ஆசையெல்லாம் கிடையாது. எங்கு படம் கிடைக்குதோ, அங்கு நடிக்கணும்.. அவ்ளோதான். தமிழ்ல தொடர்ந்து படம் கிடைக்கிறதால, இங்கு தொடர்ச்சியா நடிக்கிறேன். சினிமாவேகூட நான் மிகவும் நேசித்த, தவமிருந்து கிடைத்த விஷயம் கிடையாது. அதுவா கிடைச்சுது.. நடிக்கிறேன். அதேநேரம், கிடைச்ச வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்குவேன். என் கதாபாத்திரத்துக்குத் தேவையான உழைப்பு, அர்ப்பணிப்பை முழுசா தருவேன்.
            சினிமாவுக்கு வந்துட்டதுல நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றீங்களா?
            ஆமாப்பா. சீனியர், ஜூனியர்னு என்னை சுத்தி எப்பவும் நண்பர்கள் அதிகம் இருப்பாங்க. நெனைச்ச டைம்ல கட் அடிச்சுட்டு சுத்துவோம். எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம். ஆனா, இப்ப எங்கே சுத்தவும் நேரம் இல்ல. நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றேன்.
            ஆண் நண்பர்கள் அதிகம்னா, காதல் தொல்லை களும் இருக்குமே?
            நோ நோ! உண்மையைச் சொல்லணும்னா இதுவரை யாருமே என்கிட்ட நேர்ல காதலைச் சொன்னதில்ல. சின்ன வயசுல நான் அவ்ளோ அழகா இல்லையோ என்னவோ. என்னைவிட அழகான பொண்ணுங்க நெறைய பேர் இருந்திருக்கலாம். அதனால, என்கிட்ட லவ்வை சொல்லாம விட்டிருக்கலாம். ஆனா, எனக்கு காதல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுக்காக காதலிக்கணும்னு இல்லை. இப்போதைக்கு எனக்கு காதலிக்க நேரம் இல்லை.
            உங்ககூட நடிச்ச ஹீரோக்கள் பத்தி..
            சசிகுமார் சார் எது நடந்தாலும் அலட்டிக்கமாட்டார். விக்ரம் பிரபு நல்ல நண்பர். ரெண்டு பேரும் ஒரே படத்துல அறிமுகமானதால, பயம் இல்லாம பேசிப்போம். விமல் இருக்குற இடம் எப்பவும் கலகலன்னு இருக்கும். நேரம் போறதே தெரியாது. ஆனா, கிளாப் அடிச்சு ஷாட் ரெடியானா சீரியஸ் ஆகிடுவார். சித்தார்த்தின் மிகத் தீவிரமான ரசிகை நான். ‘பாய்ஸ்’ படம் ரிலீஸானப்ப நான் மூணாங்கிளாஸ் படிக்குறேன். சித்தார்த்தை நேர்ல பார்ப்பேன்னு நெனச்சுக்கூட பார்த்ததில்ல.
            அவர்கூட நடிச்சது அதிசயமா, ஆச்சரியமா இருக்கு. ‘கும்கியில நல்லா பண்ணீங்க’ன்னு சித்தார்த் வாழ்த்து சொன்னப்ப, வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. விஷால் சீனியரா இருந்தாலும் அன்பா பழகுவார். கவுதம் கார்த்திக் என் வயசுக்காரர் என்பதால் ரொம்ப க்ளோஸ். ஒவ்வொரு சீன்லயும் பட்டயக் கிளப்புறார். கார்த்தி இயல்பா பழகுறார். ‘இந்த வயசுல இவ்ளோ மெச்சூரிட்டியா இருக்கே. உன் நடிப்பு யதார்த்தமா இருக்கு’ன்னு சொல்றார்.
            அலைபேசியில் கலகலவென்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார் லட்சுமி மேனன். 



            நன்றி - த இந்து


            வாசகர் கருத்து


            ram  
            இதெல்லாம் இந்திய கலாச்சாரத்துக்கு எதிரான கிடையாதா. கதைகலத்துக்கும் நடிகரின்/ நடிகையின் வயசுக்கும் ஒரு சந்பந்தம் வேண்டாமா . ஒரு மைனர் பொன்னை ஒரு மேஜர் பொன்னாக நடிக்க வைப்பது , இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது இல்லையா , ஒரு மேஜர் பொன்னை மைனர் பொன்னாக நடிக்க வைக்கலாம், இது தவறு. நான் சிகப்பு மனிதன் படம் எடுத்த இயக்குனரை எதிர்த்து கேசு போடமாடிர்களா ?
            about 7 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
               
            Santhosh   என்னம்மா இப்பிடி பண்றீங்கலேமா ..

            Saturday, April 12, 2014

            என்னோட பெஸ்ட் 'நான் சிகப்பு மனிதன்' : விஷால் பேட்டி

            நான் சிகப்பு மனிதன்' படத்தில் தனது ஹீரோயிசத்தை காட்டாமல், எதார்த்தமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் நடிகர் விஷால். தனது நடிப்பிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில் இருந்தவரிடம் தொலைபேசியில் உரையாடியதில் இருந்து.. 



            'நான் சிகப்பு மனிதன்' படத்தில் நடித்த அனுபவம் ?

             
            'நான் சிகப்பு மனிதன்' படத்தை பொருத்தவரையில், நிறைய பேர் இயக்குநர் திருவுடன் ஏன் படம் பண்றீங்க என்று கேட்டார்கள். ஆனால் எனக்கு இந்த கதை பிடித்திருந்தது, கதாபாத்திரம் பிடித்திருந்தது, மற்ற படங்கள் மாதிரியே என்னோட பெஸ்ட்டை நான் கொடுத்திருக்கேன், 


            இப்படத்தில் உள்ள நார்கோலெப்சி (Narcolepsy) அப்படிங்கிற விஷயம் புதுசா இருந்தது. இப்படத்தில் நான் வொர்க் பண்ணியதை நினைக்கையில் மகிழ்ச்சி என்பதை விட பெருமையாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். இதை இன்றல்ல இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து கேட்டால் கூட சொல்லுவேன். 


            வெளிநாடுகளில் 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு நல்ல விமர்சனம் வந்திருக்கு, இப்போ எப்படி ஃபில் பண்றீங்க ?

             
            மிகவும் நல்ல விஷயம் தான். இந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்திருக்கிறது பார்க்குறப்போ பெரிய நம்பிக்கை தருது, நிறைய வித்தியாசமான முயற்சிகள் பண்ணணும்னு புதிய உற்சாகம் கிடைக்கிறது. 


            படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏதேனும் குழப்பம் இருந்ததா?

             
            குழப்பம் ஏதும் இல்லை. சென்சார் தரப்பினர் மிகவும் நியாயமாக நடந்து கொண்டார்கள். படத்துடைய கதை திடமாக அமைந்ததால் அவர்கள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள், நாங்களும் மனநிறைவுடன் பெற்றுக்கொண்டோம். சென்சார் துறையினர் மிகவும் பொறுப்புடன் செயல்படுகின்றர். 


            இயக்குநர் திருவுடன் மூன்று படம் பண்ணீருக்கீங்க, அடுத்தும் அவருடன் படம் பண்ணுவீங்களா ?

             
            அவருடன் மூன்று இல்லை, ஐந்து, ஆறு இன்னும் எத்தனை படம் வேண்டுமானாலும் பண்ணலாம். 


            இந்தி படங்களிள் ரிலீஸ் ஆகும் தேதியை படப்பிடிப்பிற்கு முன்பே அறிவிக்கிறார்கள், அதை தமிழ் சினிமாவில் நீங்களும் பின்பற்றிருக்கும் காரணம் என்ன ? இது தொடருமா?

             
            நிச்சயமா தொடரும், ’பாண்டிய நாடு’ படத்திலும் சரி , ’நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் சரி ரிலீஸாகும் தேதியை படம் ஆரம்பிக்கும் முன்பே தெரிவித்திருந்தோம். அதன் படியே நடத்தியும் காட்டியிருக்கிறோம். 


            இதன் காரணம் என்னவென்றால், ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பே வெளியாகும் தேதியை அறிவித்தால், மக்களுக்கும் அந்த படத்தில் வேலை பார்க்கும் கலைஞர்களுக்கும் ஒரு தெளிவு பிறக்கும். அதுவே படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும். 


            ’பூஜை’ படத்தின் படப்பிடிப்பு எப்போ தொடங்குது? எப்போ ரீலிஸ் ?

             
            ’பூஜை’ படத்தின் போட்டோ ஷூட் முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஷூட் ஆரம்பிக்கிறது. தீபாவளிக்கு ரீலிஸ் ஆகும். 


            த இந்து -நன்றி

            Thursday, May 16, 2013

            டென் த் படிக்கும்போதே ( சினிமாவில்) இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி? - கும் கி லட்சுமி மேனன் பேட்டி

             
            கதை கேட்காத ஹீரோயினின் கதை! 
            க.ராஜீவ் காந்தி, படங்கள்: கே.ராஜசேகரன்
            தாவணி, பாந்தமான பட்டுப் புடைவை, சாந்தமான சுடிதார் என 'ஹோம்லி ஏஞ்சல்’ என்று நாம் நினைத்திருக்க, சட்டென மாடர்ன் ஊஞ்சல் ஏறிவிட்டார் லட்சுமி மேனன். டாப்ஸ், ஜீன்ஸ் என்று பட்டையைக் கிளப்புகிறார் 'கும்கி’ அழகி!


            ''இப்போ பாவாடை-தாவணியைப் பொண்ணுங்களுக்கே பிடிக்க மாட்டேங்குது. விஷால், கௌதம் கார்த்திக்னு பேச்சிலர் ஹீரோக்களுடன் வேற நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இப்போ மாடர்னா... டிரெண்டியா இருக்கிறதுதானே சரி!'' என்று சிரிக்கும் லட்சுமியை, 'மஞ்சப்பை’ ஷூட்டிங்கில் பார்த்தேன்.  


             



            ''பத்தாவது எக்ஸாம் நல்லபடியா முடிஞ்சுதா?''


            ''எக்ஸாம் நல்லாதான் எழுதியிருக்கேன். ஆனாலும் ரிசல்ட்டை நினைச்சா, பக்பக்னு இருக்கு. நிறைய நாள் நான் ஸ்கூல் பக்கம் போகவே இல்லை. அதனால் கடைசி நேரத்தில் கஷ்டப்பட்டுப் படிச்சேன். நான் டென்த் பாஸ் பண்ணணும்னு எனக்காக வேண்டிக்கங்க ப்ளீஸ். பாஸ் பண்ணா, ப்ளஸ் ஒன் படிப்பேன். ஆனா, நிச்சயம் தமிழ் சினிமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இது என் படிப்பு மேல் பிராமிஸ்!''




            ''ஹீரோயின்களில் லட்சுமி மேனன்தான் கேரக்டர்களைக் கச்சிதமா செலெக்ட் பண்றாங்கன்னு ஒரு பேர் இருக்கே... அவ்வளவு சினிமா தெரியுமா?''


            ''அப்படி எல்லாம் இல்லைங்க. உண்மையைச் சொல்லணும்னா 'கும்கி’, 'சுந்தரபாண்டியன்’ படங்களுக்கு நான் கதை கேக்கவே இல்லை. ஆனா, படங்கள் ஹிட் ஆகவும் அதையே ஒரு சென்ட்டிமென்ட்டா வெச்சுக்கிட்டேன். இப்போ எந்தப் படத்துக்கும் நான் கதை கேக்குறதே இல்லை!''  


            ''சினிமா என்ன கத்துக் கொடுத்துச்சு?''


            ''டெடிகேஷன்! சினிமாவோ வேற எந்த வேலையோ நமக்குக் கொடுத்த பொறுப்பை சின்சியரா முடிச்சுக் கொடுக்கணும். அதுக்கு நல்ல உதாரணம் சசிகுமார் சார். 'சுந்தரபாண்டியன்’ல அவருக்கு செம ஜாலி கேரக்டர். 


            அதனால ஷாட் இல்லா தப்பவும் கேலி, கிண்டல் பண்ணிட்டு ஜாலியா இருந்தார். 'குட்டிப்புலி’ படத்துல அவருக்கு ரொம்ப சீரியஸ் ரோல். பொண்ணுங்ககிட்ட பேசக்கூடத் தயங்குற கேரக்டர். அதனால ஸ்பாட்லயும் அப்படியே உர்ருனு முறைச்சுக்கிட்டே இருப்பாரு. சின்ன 'ஹாய்... ஹலோ’கூடச் சொல்ல மாட்டார். அந்த டெடிகேஷன்தான் நான் சினிமாவில் கத்துக்கிட்டது!''

             



            ''சூர்யாவை ரொம்பப் பிடிக்கும்னு சொல்லியிருக்கீங்க?''


            ''ஆமா! சூர்யாவைப் பிடிக்காத கேர்ள்ஸ் யாராவது இருப்பாங்களா? சின்ன வயசுல இருந்தே அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கூட நடிக்கணும்னு ஆசை. அஜித் கூட நடிக்க சான்ஸ் கிடைச்சா, எனக்குச் சம்பளமே வேண்டாம்!''  


            ''சூர்யா பிடிக்கும்னு சொல்றீங்க... அதே சமயம் தமிழ்ப் பையனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னும் சொல்றீங்க... என்னங்க லாஜிக்?''


            ''ஆமாங்க... நான் ஒரு மலையாளி. நான் எப்படி ஒரு தமிழ்ப் பையனைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்? ரெண்டு கல்ச்சருக்கும் வித்தியாசங்கள் இருக்கும்ல. தமிழ்ப் பசங்க என்னைக் காதலிக்கட்டும். ஆனா, நான் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் பண்ணிப் பேன். அதில் நான் உறுதியா இருக்கேன்!''

            நன்றி - விகடன்